Jump to content

சமகால அரசியல் தொடர்பான இளைஞர்களின் எதிர்பார்ப்பு எனும் பொனிப்பொருளில் இன்றையதினம் யாழ்ப்பாணத்தில் கேள்வி பதில் நிகழ்வு ஒன்று இடம்பெற்றது.


Recommended Posts

 

சமகால அரசியல் தொடர்பான இளைஞர்களின் எதிர்பார்ப்பு எனும் தொனிப்பொருளில் இன்றையதினம் யாழ்ப்பாணத்தில் கேள்வி பதில் நிகழ்வு ஒன்று இடம்பெற்றது. 

 

 

 

Link to comment
Share on other sites

On 22/3/2021 at 17:22, nunavilan said:

 

சமகால அரசியல் தொடர்பான இளைஞர்களின் எதிர்பார்ப்பு எனும் தொனிப்பொருளில் இன்றையதினம் யாழ்ப்பாணத்தில் கேள்வி பதில் நிகழ்வு ஒன்று இடம்பெற்றது. 

 

 

 

இணைப்புக்கு மிக்க நன்றி நுணா. மிக காத்திரமான அரசியல் நிகழ்வு. எமது இளையோரின் அரசியல் அறிவு வியக்க வைக்கிறது. கற்பனா வாத‍த்தில் இருந்து வெளியே வந்து நடைமுறை சாத்தியமான வகையில் அரசியல் தெளிவு இளையோரின் கேள்விகளில்  வெளிப்பபடுகிறது. 1980 களில் இவ்வாறான தெளிவாக சிந்திக்கும் இளையோர் இருந்திருந்தால் எமது நிலையில் பாரிய முன்னேற்றம் ஏற்பட்டிருக்கும். இருந்தாலும் பட்டறிவின் அடிப்படையில் இளையோர் அரசியல் தெளிவை பெற்றிருப்பது மகிழ்ச்சியளிக்கிறது. இதே போல அனைத்து  பல்வேறு தமிழ் தேசிய அரசியல் கட்சிகளுடனும் கலந்துரையாடல் மேற்கொள்ளப்பட்டு இவ்வாறாக சிந்தனை வளம் கொண்டு இளைஞர்கள் தமிழ் தேசிய அரசியலுக்குள் உள்வாங்கபடுவது எமது அரசியலுக்கு வலுச்சேர்க்கும். அத்துடன் இவ்வாறான கலந்துரையாடல் கேள்வி பதில்கள் அடிக்கடி நடத்தப்படல் வேண்டும்.  தமிழ் அரசியல் அறிவு சார் அரசிலாக எதிர்காலத்தில் மாற்றம் பெற  இவ்வாறான இளையோரின் வருகை அவசியம். 

பாராளுமன்ற உறுப்பினர்கள் திரு சுமந்திரன், திரு சாணக்கியன் ஆகியோர் வழங்கிய பதிலையும் இணைத்திருந்தால் இன்னும் சிறப்பாக இருந்திருக்கும்.  இளையோரின் கேள்விகளை எதிர் கொண்டு பதில் வழங்கிய கௌரவ பாராளுமன்ற உறுப்பினர்களும் பாராட்டுக்குரியவர்களே. 

Link to comment
Share on other sites

நன்றி துல்பன். நான் நினைத்தேன் பத்தோடு பதினொன்றாக இப்பதிவு போய் விடும் என்று.  

Link to comment
Share on other sites

துல்பனின் பதிலைப் பார்த்த பின் நான் அரைவாசி வரைக்கும் பார்த்து விட்டேன்.

உண்மையில் யாழ் இளைஞர்களின் கேள்விகளும் பார்வைகளும் ஆரோக்கியமாகவும் நம்பிக்கை அளிப்பதாகவும் உள்ளன.

பகிர்வுக்கு நன்றி நுணா. ருல்பனுக்கும் நன்றி

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

செருப்பால் அடித்தது மாதிரி இளைஞர்களின் கேள்வி.

நான் அரசியல்வாதியாக இருந்தால் மெதுவாக மேடையை விட்டு போயிருப்பேன்.

இணைப்புக்கு நன்றி நுணா.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நுணா அரசியல்வாதிகளின் பதில் எப்ப தான் வரும்?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இளையவர்கள் கேள்விகள் கேட்கிறார்கள் சுமத்திரனும் சாணக்யனும்  பதில் சொல்லும் ஒளிநாடா  உள்ளதா நுணாவிலான் ? இருந்தால் அதையும் இணைத்து விடுங்களேன் நன்றி .

எங்களின்  வலியும்  ரெத்த  சகதியும்  எங்களோடு போகட்டும் .

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 minutes ago, பெருமாள் said:

இளையவர்கள் கேள்விகள் கேட்கிறார்கள் சுமத்திரனும் சாணக்யனும்  பதில் சொல்லும் ஒளிநாடா  உள்ளதா நுணாவிலான் ? இருந்தால் அதையும் இணைத்து விடுங்களேன் நன்றி .

எங்களின்  வலியும்  ரெத்த  சகதியும்  எங்களோடு போகட்டும் .

அமைதி அமைதி தேடிக் கொண்டிருக்கிறார்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, ஈழப்பிரியன் said:

அமைதி அமைதி தேடிக் கொண்டிருக்கிறார்.

இதில் பேசியவர்  20000 பேர் சுமத்திரனை  நிராகரித்து உள்ளனர் எனும் போது  ஐயா சுமத்திரன்  முகத்தை வீடியோ காரர் காட்டவில்லை எனும் பெரும் குறை எனக்குண்டு 😁அந்த 30 ஆயிரமும்  நேர்மையான வழியில் வந்தா வென்றார் ?

Link to comment
Share on other sites

யாழ்  இளைஞர்களுக்கு பாராட்டுக்களும் வாழ்த்துக்களும், புலம்பெயர் இளைஞர்கள் போல்  வன்முறையை கையில் எடுக்காமல் கேக்க வேண்டிய கேள்விகளை சுமந்திரன், சாணக்கியன் முகத்துக்கு நேர் கேட்டதுக்கு. மேலும் இப்படடிப்பட்ட கந்துரையாடல்கள் மற்றைய அரசியல்வாதிகளுடனும் (பொன்னம்பலம்,  விக்கினேஸ்வரன்)நடத்தப்படவேண்டும்.
 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
38 minutes ago, பெருமாள் said:

இதில் பேசியவர்  20000 பேர் சுமத்திரனை  நிராகரித்து உள்ளனர் எனும் போது  ஐயா சுமத்திரன்  முகத்தை வீடியோ காரர் காட்டவில்லை எனும் பெரும் குறை எனக்குண்டு

எனக்கும் தான்.
ஆனாலும் கற்பனையில் காண வேண்டியது தான்.
இவைகளுக்கெல்லாம் எப்படி பதில் சொல்லி சமாளிக்கப் போகிறார்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, tulpen said:

1980 களில் இவ்வாறான தெளிவாக சிந்திக்கும் இளையோர் இருந்திருந்தால் எமது நிலையில் பாரிய முன்னேற்றம் ஏற்பட்டிருக்கும்.

அன்றைய அரசியல்/அடக்குமுறை கால கட்டத்தின் படி....... அன்றைய கால இளைஞர்களுக்கு அவர்கள் எடுத்த முடிவு சரியாகத்தான் இருந்தது.
இன்றைய அரசியல் நிலைகளும் மக்கள் மனப்பான்மையும் வேறுபட்டவை.உலக அரசியலும் மாறி விட்டது.

மாறாக தனியே தமிழினம் சார்ந்து இருக்கும் அரசியல்வாதிகளிடம் கேட்கும் கேள்வி அரங்கங்களை போல்  சிங்கள இனம் சார்ந்த அரசியல்வாதிகளையும் கேள்வி கேட்கும் அரங்கங்களையும்  ஏற்படுத்த வேண்டும்.
சிங்கள அரசியல்வாதிகளின் பின்னால் நிற்பதை பெருமையாக நினைக்கும் தமிழ் அரசியல் வாதிகளையும் கேள்விகேட்கும் அரங்குகளையும் ஏற்படுத்த வேண்டும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
10 minutes ago, குமாரசாமி said:

அன்றைய அரசியல்/அடக்குமுறை கால கட்டத்தின் படி....... அன்றைய கால இளைஞர்களுக்கு அவர்கள் எடுத்த முடிவு சரியாகத்தான் இருந்தது.
இன்றைய அரசியல் நிலைகளும் மக்கள் மனப்பான்மையும் வேறுபட்டவை.உலக அரசியலும் மாறி விட்டது.

மாறாக தனியே தமிழினம் சார்ந்து இருக்கும் அரசியல்வாதிகளிடம் கேட்கும் கேள்வி அரங்கங்களை போல்  சிங்கள இனம் சார்ந்த அரசியல்வாதிகளையும் கேள்வி கேட்கும் அரங்கங்களையும்  ஏற்படுத்த வேண்டும்.
சிங்கள அரசியல்வாதிகளின் பின்னால் நிற்பதை பெருமையாக நினைக்கும் தமிழ் அரசியல் வாதிகளையும் கேள்விகேட்கும் அரங்குகளையும் ஏற்படுத்த வேண்டும்.

திரிக்கு திரி புளித்த வாய்ப்பன் மாவை வைத்து இழுத்து கொண்டு இருப்பதுக்கெல்லாம் பதில் எழுதி 
நேரத்தை விரயம் செய்யலாகாது. அன்றைய இளைஞர்களின் அறிவும் அர்ப்பணிப்பும் இல்லையென்றால் 
ஒருவேளை இவர்கள் இப்போ சிங்களத்தில்தான் பேசிக்கொண்டு இருந்து இருப்பார்கள். 


கேள்விகளை கேட்பதால் என்ன பயன்?
எதையாவது நடைமுறை படுத்துகிறார்களா? என்பதுதான் முதல் கேள்வி 
சிங்கள அரசின் அடக்குமுறைகளுக்கு எதிராக எதையாவது செய்ய முடிகிறதா?
இப்போதைய உலகமயமாதல் எவ்வளவோ சாத்தியமான கதவுகளை திறந்து விட்டு இருக்கிறது 
அங்கெல்லாம் நாம் தட்டுகிறோமா? என்பதுதான் இரண்டாவது கேள்வி 
உள்ளூர் பொருளாதார விருத்தியில் ஏதாவது எதிர்கால சிந்தனையுடன் செயல்படுகிறார்களா?

30 வருட சிங்கள பேரினவாததின் பொருளாதார தடைக்குள் 
ஒரு பட்டினி சாவு நிகழ்ந்ததா? 

இன்று உணவுக்கு அல்லல்படும் மக்கள் படங்கள் முகநூலை அலங்கரித்து நிற்கிறதே 
உள்ளூரில் ஏதாவது மாற்றம் நிகழ்கிறதா? 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, Maruthankerny said:

திரிக்கு திரி புளித்த வாய்ப்பன் மாவை வைத்து இழுத்து கொண்டு இருப்பதுக்கெல்லாம் பதில் எழுதி 
நேரத்தை விரயம் செய்யலாகாது. அன்றைய இளைஞர்களின் அறிவும் அர்ப்பணிப்பும் இல்லையென்றால் 
ஒருவேளை இவர்கள் இப்போ சிங்களத்தில்தான் பேசிக்கொண்டு இருந்து இருப்பார்கள். 


கேள்விகளை கேட்பதால் என்ன பயன்?
எதையாவது நடைமுறை படுத்துகிறார்களா? என்பதுதான் முதல் கேள்வி 
சிங்கள அரசின் அடக்குமுறைகளுக்கு எதிராக எதையாவது செய்ய முடிகிறதா?
இப்போதைய உலகமயமாதல் எவ்வளவோ சாத்தியமான கதவுகளை திறந்து விட்டு இருக்கிறது 
அங்கெல்லாம் நாம் தட்டுகிறோமா? என்பதுதான் இரண்டாவது கேள்வி 
உள்ளூர் பொருளாதார விருத்தியில் ஏதாவது எதிர்கால சிந்தனையுடன் செயல்படுகிறார்களா?

30 வருட சிங்கள பேரினவாததின் பொருளாதார தடைக்குள் 
ஒரு பட்டினி சாவு நிகழ்ந்ததா? 

இன்று உணவுக்கு அல்லல்படும் மக்கள் படங்கள் முகநூலை அலங்கரித்து நிற்கிறதே 
உள்ளூரில் ஏதாவது மாற்றம் நிகழ்கிறதா? 

ஆமாம் ஆமாம்

தற்போதைய இளைஞர்களுக்கு மூளை வெளியே தெரிகிறது 

அந்தக்காலத்தில் எல்லோருக்கும் மூளை கருதிப் போயிருந்தது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 minutes ago, விசுகு said:

ஆமாம் ஆமாம்

தற்போதைய இளைஞர்களுக்கு மூளை வெளியே தெரிகிறது 

அந்தக்காலத்தில் எல்லோருக்கும் மூளை கருதிப் போயிருந்தது.


இவர்களிடம் இந்த கேள்விகள் வருவதுக்கு  அடித்தளம் என்ன?
இது கூட புரியாதவர்களுடன் பேசுவதில் நேரம் மட்டுமே வீண் 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
44 minutes ago, Maruthankerny said:


இவர்களிடம் இந்த கேள்விகள் வருவதுக்கு  அடித்தளம் என்ன?
இது கூட புரியாதவர்களுடன் பேசுவதில் நேரம் மட்டுமே வீண் 

அது வரலாற்றோடு நடந்தவர் பேசுவது

வானத்தில் இருந்து குதித்த குடும்பிகளுக்கு அது புரிய வாய்ப்பில்லை ராஜா

Link to comment
Share on other sites

18 hours ago, nunavilan said:

 

 

நன்றி நுணா. மிக சிறந்த கலந்துரையாடல். சிறப்பாக உள்ளது. 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஒரு சந்ததியை ஒட்டுமொத்தமாக மூடர்கள், சிந்தனையற்றவர்கள் என்று மிக எளிதாக ஒருவரால் சொல்லிவிட்டுச் செல்ல முடிகிறது. மிகவும் கண்டிக்கத்தக்க கருத்து.

அந்தக் காலத்தில் (70 களின் இறுதியிலிருந்து) தமிழர்கள் போராடுவதற்கான காரணங்களும், தேவைகளும் இன்று அதனைக் காட்டிலும் பன்மடங்காக விஸ்வரூபமெடுத்து நிற்கின்றன என்பது கருத்திட்டவரால் மிகச் சுலபமாக மறைக்கப்பட்டு, அதே சந்ததியை மீண்டும் தனது புலியெதிர்ப்பு விசத்தினை "அறிவற்ற சமூகம்" எனும் வெல்லத்தினால் தடவி வெளியே விற்க முயல்வதாகவே இந்தத் திரியில் அவரால் முன்னெடுக்கப்படும் வாதத்தினையும் நோக்குகிறேன்.

இவையெல்லாமே, புலிகள் போராடியிருக்காவிட்டால் தமிழருக்கான நீதியும், உரிமைகளும் தங்கத் தட்டில் வைத்துக் கொடுக்கப்பட்டிருக்கும், எல்லாவற்றினையும் போராடிக் கெடுத்துவிட்டார்கள் எனும் மனதின் அடிப்படை வஞ்சினத்திலிருந்து வருவதாக நான் எடுத்துக்கொள்கிறேன்.

உதாரணத்திற்கு இன்றுவரை தமிழர் தாயகத்தில் இடம்பெற்றுவரும் திட்டமிட்ட சிங்கள ஆக்கிரமிப்பிற்கு,  "சிங்களம் தானாகத் தந்திருக்கும்" என்று கூறுபவர்களின் பதிலென்ன? பாரம்பரிய தமிழரின் வாழ்வாதார மேய்ச்சல் நிலங்களாகட்டும், அவர்களின் சரித்திர வணக்கத்தலங்களாகட்டும் இன்று சிங்களத்தினால் தொல்லியல் அமைச்சினால் சிங்களமயமாக்கப்படுவதுபற்றி இவர்களின் கருத்தென்ன? இலங்கை என்பது பெளத்த சிங்கள நாடு என்று சிங்களப் பேரினவாதம் தற்போது நிரந்தரமாகவே நிறுவிவருவதற்கான இவர்களின் எதிர்வினையென்ன? எதுவுமேயில்லை. ஆனால், இவையெல்லாவற்றிற்கும் அடிப்படைக் காரணமே அறிவற்ற சமூகமும் அவர்களைக் கொண்டு போராடிய புலிகளும் தான் என்பது அவர்களின் வாதமாக எப்போதும் முன்வைக்கப்பட்டு வருகிறது.

இன்றைய தலைமுறை அரசியல் அறிவுபெறுவது அவசியம். ஆனால், அது சரணாகதியடையும் அரசியல் அல்ல, மாறாக மறுக்கப்பட்ட தமது உரிமைகளை, ஆக்கிரமிக்கப்பட்டு நிற்கும் தமது தாயகத்தை, இனக்கொலை செய்யப்பட்ட தமது இனத்தை இன்றிருக்கும் பத்தாம்பசலித்தனமான நூற்றாண்டுப் பழமைவாத "சாணக்கிய" அரசியலை தூக்கியெறிந்து புதிதாகப் படைக்கும் அரசியலைக் கொண்டு மீட்டெடுப்பதுதான். 

 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.