Jump to content

பெங்களூர் சம்பவம் - சமூக வலைத்தள பயன்பாட்டின் மறுபக்கம்.


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

பெங்களூர் சம்பவம் - சமூக வலைத்தள பயன்பாட்டின் மறுபக்கம்.

hitesha chandranee, zomato executive, kamraj, bangalore zomato incident

சமூக வலைத்தளங்களில் என்ன விடயங்களை பகிர்கின்றோம் என்பதில் கவனமா இருக்காவிடில், முதலுக்கே மோசமாகிவிடும் என்பதற்கு இது ஒரு உதாரணம்.

ஹிதேசா என்பவர், வட இந்திய பெண். ஒரு மாடல் அழகியான இவர், பெங்களூரில் வசிக்கிறார். இன்ஸ்டாகிராம் மூலம், மேக்கப் சம்பந்தமான விடயங்களை சொல்லி, யாவாரம் செய்பவர். ஒரு 12,000 பேர் வாடிக்கையாக தொடர்பவர்கள்.

இவர் அண்மையில் ஒரு நிறுவனத்தில் உணவு ஆர்டர் செய்தார்.

அதனை கொண்டு வந்தவர் சோமாட்டோ எனும் நிறுவனத்தின், ஊழியர் காமராஜ், ஒரு தமிழர். உணவை கொண்டு வருவதில் தாமதமாகி விட்டது.

என்ன நடந்ததோ தெரியவில்லை, உணவு கொண்டு வந்தவர் தன்னை தாக்கியதால், மூக்கில் ரத்தம் ஓடுகிறது. எனது தொழிலும் இனி செய்ய முடியுமோ தெரியவில்லை. என்று வீடியோ போட்டு, அதனை சமூக வலைதளத்தில் போட்டு, பெங்களூர் போலீசாருக்கும், சோமாட்டோ நிறுவனத்துக்கும் அதனை அனுப்பி விட்டார்.

காமராஜ் கைதானார். சோமாட்டோ நிறுவனம், அவரை வேலையில் இருந்து தூக்கி விட்டது.

அந்த வீடியோவில், கம்பெனி பாலிசி படி, தாமதமானால், இலவசமாக கொடுக்க வேண்டும் அல்லது ஓர்டரை ரத்து பண்ணி திருப்பி அனுப்ப வேண்டும். நான், இலவசமாக கேட்டேன், அவர் மறுத்து என்னை தாக்கினார் என்று தான் புகார்.

2 கோடி 50 லட்ச்சம் பேர் அவரது வீடியோவை பார்த்து இருந்தார்கள். அய்யோ, இப்படியும் செய்வார்களா என்று எல்லோரும், வெள்ளையான அந்த மாடல் அழகிக்காக உச்சு கொட்டினார்கள்.

பம்பாய், டெல்லி என, சில பிரபலங்கள், 'கொஞ்சம் இருங்கள்', ஒரு வசதியான பெண்ணாக தெரியும் இவர் எதுக்காக அந்த உணவை இலவசமாக பெற முயன்றார் என்று சொல்ல, விவகாரம் சூடு பிடித்தது. இவரில் உண்மை இருப்பதாக தெரியவில்லையே என்று சமூக வலைத்தளத்தில் பதிவுகள் போட, சரிதானே என்று பலர் சொல்ல தொடங்கினார்கள்.

இரண்டு நாளில், காமராஜ் வீடியோவில் வந்தார். தான் 6,000 டெலிவெரிகள் செய்துள்ளதாகவும், இதுவரை எந்த முறைப்பாடுகளும் இல்லை எனவும், அந்த பெண் இலவசமாக கேட்டு மூர்க்கமாக அடம் பிடித்தார் என்றும், தாமதமான காரணம், தனது தவறு என்றும், அதனை கொம்பனி ஏற்காது என்பதால், தனது சம்பளத்தில் கழிக்கப்படும் என்பதால், அதனை கான்சல் செய்யுமாறும், அதன் மூலம், தனது சம்பளம் கழிக்கப்படாது என்று தான் கெஞ்சிய போது, தன்னை செருப்பால் தாக்கியதாகவும், அதனை தடுத்த போது, அந்த பெண்ணின் கையில் இருந்த மோதிரம், அவரது மூக்கினை தாக்கியது என்றும், அவர் மேலும் கோபத்தில் கத்தியால், தான் அங்கிருந்து இருந்து சென்றதாகவும், ஓட வில்லை என்றும், தனது வயதான தாயினை இந்த சம்பளத்தில் பராமரித்து வந்ததாகவும், இப்போது வேலையே போய் விட்டது, போலீஸ் வழக்கு வேறு என்று அழுதார்.

நிலைமை தலைகீழாக போவதை கண்ட அம்மணி, வீடியோவை நீக்கி விட்டார். ஆனால் too late.

அவர் சொலவ்து சரிதான், அவருக்கு வேலை மீண்டும் கொடு என்று பதிவுகள் வர,  கன்னட அமைப்புகள் காமராஜுக்கு ஆதரவாக குரல் கொடுக்க அவ்வளவுதான். இப்போது பெண் மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

உள்ளதும் போச்சடா, நொள்ளை கண்ணா கதையாக, பிரபலமாகி, யாவாரத்தை பெரிசா செய்யலாம் எண்டு வீடியோ போட்டால், கடையே மூடும் அளவுக்கு போய் விட்டது அம்மணி கதை.

இலவசமாக உணவை பெற, கேவலமாக நடந்து கொண்டார் என்று அவல பெயருடன், நினைத்தது ஒன்று, நடந்தது ஒன்று என்று கவலையுடன், தான் யாரை தனது ரோல் மாடலாக நினைத்து இருந்தாரோ, அவரே தன்னை குறித்து மோசமாக பதிவு செய்துள்ளார் என்று அம்மணி கவலை தெரிவித்து உள்ளார்.

முதலில் ரத்தத்தினை பார்த்து அனுதாபம் கொண்டவர்கள், பின்னர் எதுக்கு சண்டை பிடித்தார் என்று பார்த்தால், ஓசி சாப்பாட்டுக்கு என்றவுடனே, கண்ணியம் கருத்தில் எடுக்கப்படும் என்பதை மறந்து விட்டார். 

இதுதான் சமூக வலை உலகில் கவனமாக இருக்க வேண்டிய விடயம்.

** காமராசு வேலை செய்கிறார். ஆனாலும், தீடீர் அதிஸ்ட்டமாக, பண உதவிகளும் வருகின்றன.

 

  

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இந்த செய்தி மூலம் எது என்று நாட்டாமை வந்து கத்தியுடன் நிற்பார் செய்திவந்த ஏதவது ஒரு தளத்தை போட்டு விடுங்க நாதமுனி .

இந்த தமிழர்க்கு இரங்கி கன்னட அமைப்புக்கள்  குரல்கொடுக்கவில்லை இயல்பாகவே வட இந்திய வெறுப்பு காமராஜருக்கு நியாயம் கிடைத்து இருக்கு இதுவே தாராவி அல்லது டெல்லி என்றால் கதைவேறு .

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 minutes ago, பெருமாள் said:

இந்த செய்தி மூலம் எது என்று நாட்டாமை வந்து கத்தியுடன் நிற்பார் செய்திவந்த ஏதவது ஒரு தளத்தை போட்டு விடுங்க நாதமுனி .

இந்த தமிழர்க்கு இரங்கி கன்னட அமைப்புக்கள்  குரல்கொடுக்கவில்லை இயல்பாகவே வட இந்திய வெறுப்பு காமராஜருக்கு நியாயம் கிடைத்து இருக்கு இதுவே தாராவி அல்லது டெல்லி என்றால் கதைவேறு .

மொழி பெயர்ப்புகளுக்கும், சுஜ ஆக்கங்களுக்கும், நான் இணைப்பு கொடுப்பதில்லை. இவை மிக முக்கியமான செய்திகள். பிபிசி யில் கூட வந்து விட்டது. இதுக்கு மூலம் கேட்டு, நீக்கினால், நல்லது. இனிமேல் மினக்கெட்டு,மொழி பெயர்ப்பு செய்ய தேவையே இருக்காது, அல்லவா.  😁 👍

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
9 minutes ago, Nathamuni said:

மொழி பெயர்ப்புகளுக்கும், சுஜ ஆக்கங்களுக்கும், நான் இணைப்பு கொடுப்பதில்லை. இவை மிக முக்கியமான செய்திகள். பிபிசி யில் கூட வந்து விட்டது. இதுக்கு மூலம் கேட்டு, நீக்கினால், நல்லது. இனிமேல் மினக்கெட்டு,மொழி பெயர்ப்பு செய்ய தேவையே இருக்காது, அல்லவா.  😁 👍

எல்லாம் மனித மனம் .

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஹிதேசா.... சாப்பாடு வரப்  பிந்தியால், காசு கொடுக்க மாட்டேன்  என்று அடம்பிடித்து... 
பசியுடனும், மூக்கில் இரத்தம் வர சமூக வலைத்தளத்தில் பதிந்து...
மூக்கு... உடை பட்டுப் போய் நிற்கிறார்.

பொறுமையாக கடைப்பிடிக்க வேண்டிய விடயத்தை....
உலகம் முழுக்க அறியச் செய்ய வெளிக்கிட்டதால்...
ஹிதேசாவுக்கு,  நடந்தது ஒரு படிப்பினை. 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, தமிழ் சிறி said:

ஹிதேசா.... சாப்பாடு வரப்  பிந்தியால், காசு கொடுக்க மாட்டேன்  என்று அடம்பிடித்து... 
பசியுடனும், மூக்கில் இரத்தம் வர சமூக வலைத்தளத்தில் பதிந்து...
மூக்கு... உடை பட்டுப் போய் நிற்கிறார்.

பொறுமையாக கடைப்பிடிக்க வேண்டிய விடயத்தை....
உலகம் முழுக்க அறியச் செய்ய வெளிக்கிட்டதால்...
ஹிதேசாவுக்கு,  நடந்தது ஒரு படிப்பினை. 

காசு கொடுக்காவிடில், திருப்பி கொண்டு போய் விடு என்று சொல்லி இருக்கலாம். இலவசமாக தா என்று சொல்ல, அவர் மறுக்க, அடித்து, பறித்து வைத்துக்கொண்டு வீடியோ போட்டிருக்கிறார்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஹிதேஷா, எங்கே என்றே தெரியவில்லை, தலைமறைவு. 

போலீசார், அவர் சென்ற வைத்தியசாலையிடம் அறிக்கை கோர, அவர்களோ, அவரது காயம், கை குத்தினால் வந்தது என்பதை உறுதிப்படுத்தாதலால், காமராஜ் மீதான புகார், மேல் கொண்டு விசாரணை நடாத்த முகாந்திரம் இல்லை என்று சொல்லி விட்டனர்.

அதேவேளை, காமராஜின் புகார் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், அதன் பேரில் ஆளை தேடினால், தலைமறைவு.

அம்மையார் வேகமாக வந்து, காமராஜிடம் மன்னிப்பு கோரி, புகாரை வாபஸ் வாங்க வைத்தால், தப்பலாம்.

இல்லாவிடில், பார்ப்பன அக்கிரகார களி தான். (அதுதான், சசிகலா புகழ் சிறை)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கோபி சுதாகர் வெற லெவல் தோழர் ..😂

https://m.youtube.com/watch?v=iFNXobuK2hM 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நானும் சில காணொளிகளைப் பார்த்தேன்.

காமராஜ் மிகவும் பரிதாபமாக தெரிந்தார்.

உங்கள் வர்ணனை அருமை.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.