Jump to content

சாகும்போது முட்டாளாகச் சாக எனக்கு விருப்பமில்லை - புரட்சி நாயகன் பகத் சிங்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

சாகும்போது முட்டாளாகச் சாக எனக்கு விருப்பமில்லை”- புரட்சி நாயகன் பகத் சிங்

 
1-173.jpg
 3 Views

“சாகும்போது முட்டாளாகச் சாக எனக்கு விருப்பமில்லை. எதையோ கற்றுக்கொண்டோம் என்ற திருப்தி இருக்க வேண்டும்” என்று கூறிய புத்தகப்பிரியர் புரட்சி நாயகன் பகத்சிங். தூக்கு மேடைக்குப் போவதற்கு முன் படிப்பதற்காக பத்து நிமிடம் தாருங்கள் என்று வேண்டியவரும் அவரே.

இந்த புரட்சியின் நாயகனை இந்திய வரலாறு மறப்பதற்கில்லை….

இந்தியாவின் விடுதலைப் போராட்டம் வெளிப்படையாகப் பார்க்கின்ற போது அது  அகிம்சை வழி ஏற்பட்டதென்பது உண்மை தான். ஆனால் வெள்ளையர்களுக்கு அச்சத்தை தந்தது அகிம்சை போராட்டத்தைக் கண்டு அல்ல, ஆயுதப் போராட்டத்தைக் கண்டு தான். அந்தளவிற்கு இந்தியாவின் பல பகுதிகளிலும் ஆங்காங்கே மக்கள் ஆயுதப் போராட்டத்தில் ஈடுபட்ட நிலைமை காணப்பட்டன. அதில் ஒரு புள்ளி தான் பகத்சிங்.

பகத்சிங் சுதந்திரப் போராட்ட வீரராக மிளிர்ந்தார் என்பது மட்டுமல்ல,  சோசலிசவாதியாகவும் திகழ்ந்தார்.

இந்தியாவின் விடுதலையை வேண்டி குடும்பமாக போராடியவர்களில் பகத்சிங்கின் குடும்பம் மிகவும் முக்கிய இடத்தைப் பிடிக்கின்றது. 1907ம் ஆண்டு செப்டம்பர் 27ம் திகதி பகத்சிங் பிறக்கும் போது அவரது தந்தை கஹன்சிங் வெள்ளையர்களின் சிறையில் அடைக்கப்பட்டிருந்தார்.

இந்திய விடுதலைக்கான போராட்டங்கள் பரவலாக எழுச்சி கொண்ட போது,மகாத்மா காந்தியின் அகிம்சை வழிப் போராட்டங்களில் ஒன்றான ஒத்துழையாமை இயக்கத்தில் இந்தியா முழுதும் பலர் பங்குபெற்றனர். அதில் 14 வயது சிறுவனாக இருந்த பகத்சிங்கும் இணைந்து கொண்டார்.

ஆனால் சௌரிசௌரா நிகழ்வுக்குப் பிறகு, அஹிம்சை வழியில் போராடினால் சுதந்திரம் கிடைக்காது என்ற முடிவுக்கு வந்தார் பகத்சிங்.

ஒடுக்கு முறையை வன்முறையால் தீர்க்க வேண்டும் என்ற நம்பிக்கை கொண்ட ஒரு அணியும் ஒடுக்கு முறைகளை அகிம்சையினால் எதிர்கொண்டு விடுதலை அடைய வேண்டும் என்று மற்றொரு அணியும் என இரு அணிகளின் சுதந்திர இந்தியாவிற்காக தோற்றம் பெற்றன.

இன்குலாப் ஜிந்தாபாத், ஏகாதிபத்தியம் ஒழிக': மாவீரன் 'பகத் சிங்'  விதைக்கப்பட்ட நாள்..! | Thi day : Bhagat Singh was convicted and hanged. |  Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil ...

இந்த இரு அணிகளும் ஒன்றுக்கொன்று ஒரு நாணயத்தின் இரு பக்கங்கள் போல் இந்திய சுதந்திர பாதையில் பயன்பட்டன என்பது தான் உண்மையே தவிர தனித்து ஒன்று மட்டும் செயற்பட்டது என்று கூறுவதற்கில்லை. மார்க்சீசிய, கம்யூனிசக் கொள்கைகளை தனக்குள் வரித்துக்கொண்ட பகத் சிங், 1926-ம் ஆண்டு தன் நண்பர்களாகிய ராஜ்குரு, சுக்தேவ் ஆகியோரோடு எழுச்சிப் பெற்று  புரட்சி நாயகராக உயர்ந்து நின்றார்.

1928, சைமன் கமிஷனில் சட்டவரையரைகள் கொண்டு வரப்பட்டபோது, அதனை எதிர்த்து நாடுமுழுவதும் காங்கிரஸ் தலைவர்கள் போராடிய போது பிரிட்டிஷ் காவல்துறையினரால் நடத்திய தாக்குதலில் காங்கிரஸ் மூத்த தலைவர் லாலா லஜபதிராய் உயிரிழந்தார்.

இந்த சம்பவத்தால் சாண்டர்ஸ் என்னும் ஆங்கிலேயரைச் சுட்டுக்கொன்றுவிட்டு பகத் சிங் தன் தோழர்களுடன் தலைமறைவானார். ஆனால் அதே வருடம், ஏப்ரல் 8-ம் திகதி தொழிலாளர்களுக்கு எதிராகப் பல சட்டத்திட்டங்களை அமல்படுத்தியது பிரிட்டிஷ் அரசாங்கம்.

இதற்கு எதிராக நாடாளுமன்றத்தில் தனது தோழர்களுடன் பகத் சிங்கும் குண்டு வீசி தனது எதிர்ப்பைத் தெரிவித்தார். இந்த குண்டு வீச்சு சம்பவத்தில் உயிர்ச்சேதம் எதுவும் எற்படவில்லை. காரணம், புரட்சி என்பது மக்களைக் கொல்வதிலோ, துன்புறுத்துவதிலோ இல்லை என்ற நிலைப்பாட்டை அவர்கள் கொண்டிருந்தனர்.

இந்தக் குண்டுவீச்சு நடந்து முடிந்தபிறகு, மூவரும் சரணடைந்தனர். சாண்டர்ஸை கொலை செய்ததற்கும் குண்டுவீச்சில் ஈடுபட்டதற்கும் 1931, மார்ச் 23ம் திகதி அன்று பகத்சிங், சுக்தேவ், ராஜகுரு ஆகிய மூவரையும் தூக்கிலிட்டது பிரிட்டிஷ் அரசு.

பகத்சிங்கும் அவரது தோழர்களும் மேற்கொண்டு வந்த பல்வேறு இயக்கங்கள் காரணமாக  மக்கள் மத்தியில் அவர்களது புகழ் காந்திக்கு இணையாக இருந்ததை வரலாறுகள் மூலம் காணலாம்.

மகாத்மா காந்தி தலைமையில் அகிம்சையும் சுபாஷ் சந்திரபோஸ் தலைமையில்  ஆயுதப்போராட்டமும் என இரு பெரும் சக்திகள் இந்தியாவின் சுதந்திரத்திற்காக வெள்ளையர்களை எதிர்த்து நின்றது.

வெள்ளைய ஆதிக்கத்தைப் பொறுத்தவரையில் சுபாஷ் சந்திரபோஸ் அதாவது புரட்சி எண்ணம் கொண்டவர்களினால் ஆரம்பிக்கப்பட்ட போராட்டம், பல பகுதிகளிலும் தீயாக மூண்டு எழுச்சி பெற்றது. இந்தப் போராட்டக்காரர்களை ஒருங்கிணைத்த சுபாஷ் சந்திரபோஸ், அவர்களை இந்திய தேசிய இராணுவமாக வழிநடத்தினார். இந்த ஆயுதப் போராட்டத்தில் பகத் சிங்கின் பெயரும் ஒரு குறியாகும்.

ஆனால் வெள்ளையர்களைப் பொறுத்த வரையில் அவர்கள் அகிம்சைப் போராட்டத்துக்கு இசைவாக நடந்து கொள்வதன் மூலமே ஆயுதப் போராட்டங்கள் தோன்றாமல் தடுக்கலாம் என்ற முடிவை கொண்டிருந்தனர்.

ஆயுதப் போராட்டத்தைக் கண்டு அஞ்சியே அகிம்சைப் போராட்டத்திற்கு சாதகமாக நடக்க வெள்ளையர்கள் முற்பட்டார்கள். எனவே ஆயுதப்போராட்டத்தின் எழுச்சியே அகிம்சைப் போராட்டத்தை வெள்ளையர்கள் ஆதரிக்கவும் ஒரு காரணம். இந்த வகையில் பகத்சிங் ஒரு முன்னுதாரணமாக இருந்தார் என்பதை வரலாற்று ரீதியாக மறைக்க முடியாது.

Remembering Bhagat Singh, Rajguru & Sukhdev on the day of their martyrdom:  Twitter pays tribute to the martyrs

இந்திய வரலாற்றில் அகிம்சைப் போராட்ட வீரர்களையும் ஆயுதப்போராட்ட வீரர்களையும் தேசிய தலைவர்களாக மதிப்பளித்து வருகின்றார்கள் மக்கள்.

இந்திய மக்களின் அரசியல் அகராதியில் தொடர்வண்டி பாதை போல ஒரு பகுதி  அகிம்சைப் போராட்ட வீரர்களை ஒரு நீளமாகவும் மற்றொரு பகுதி ஆயுதப் போராட்ட வீரர்களை இன்னொரு பகுதி நீளமாகவும் சமாந்தரமாக மதிப்பதைக் காணலாம்.

அகிம்சைப் போராட்டத்தில் மகாத்மா காந்தி மற்றும் மகா கவி பாரதி போன்றவர்களையும் ஆயுதப் போராட்டத்தில் சுபாஷ் சந்திரபோஸ் மற்றும் பகத் சிங் போன்றவர்களையும் காண முடியும். இந்த வகையில் இந்தியவின் சுதந்திரப் போராட்ட தேசியத் தலைவர்கள் என்ற அந்தஸ்து பகத்சிங்குக்கு உண்டு.

பகத் சிங்கை துாக்குக் கயிற்றில் தொங்க விட்டதன் மூலம் வெள்ளையர்கள் சாதித்தது எதுவும் இல்லை. மாறாக அவர்களின் தியாகங்கள் இந்தியாவிற்கு விடுதலை தேடிக்கொடுக்கும் அத்திவாரக்கற்களில் ஒன்றாகவே அமைந்தது.

 

 

https://www.ilakku.org/?p=45188

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மார்ச் 23, 2021- பகத்சிங்கின் 90ஆவது நினைவு நாள் பொருத்தப்பாடு…

 
1-179.jpg
 56 Views

தோழர் பகத்சிங் இதே நாளில் தொண்ணூறு ஆண்டுகளுக்கு முன் தனது இன்னுயிரை இழந்தார். அவர் என்ன காரணத்திற்காய் தனது உயிரை இழந்தாரோ அதே காரணம் அடிப்படையாய் இன்னமும் இருக்கிறது.

அவர் பிறந்து வளர்ந்து உயிரை இழந்த நிலப்பரப்பானது இன்று உலகே இந்தியாவை திரும்பி பார்க்க வைக்கும் விவசாயிகள் போராட்டத்தை கடந்த நூறு நாட்களுக்கும் மேலாய் முதன்மையாய் முன்னெடுத்து வருகிறது.

அக்காலத்தில் பகத்சிங் மேற்கொண்ட அரசியல் நிலைப்பாடுகளும் நடவடிக்கைகளும் அதற்கேற்ற வாழ்க்கையும் உயிர்த்தியாகமும் இன்றும் பொருத்தப்பாடாகவே இருக்கிறது.

அவர் ‘நான் ஏன் நாத்திகன் ஆனேன்?’ என்ற நூலை எழுதியதன் உள்ளடக்கமானது இந்துத்துவப் பாசிஸ்டுகளின் ஆட்சியை புரிந்துகொள்வதற்கு வழிவகுக்கும்.

இத்தகைய பாசிஸ்டுகள் பகத்சிங் தூக்கு கயிற்றில் உயிர்த்தியாகம் நிகழ்ந்த நான்கு ஆண்டுகளுக்கு முன் அமைப்பாய் தம்மை திரட்டிக் கொள்வதற்கு ‘ஆர்எஸ்எஸ்’ எனும் விஷக் கயிறை இந்தியா முழுவதும் சுருக்கு கயிறாய் விரவினர்.

ஆர்எஸ்எஸ் சுருக்கு கயிறுக்காரர்கள் தமது பாசிச அமைப்பை தொடங்கி  ஏகாதிபத்தியத்தையும் இந்தியப் பெருமுதலாளிகளையும் அன்றிலிருந்து தொடர்ந்து காப்பாற்றிவருகிறார்கள். இத்தகையோரிடம்தான் இந்தியாவின் அரசும்/அரசாங்கமும் சிக்கியிருக்கிறது.

பகத்சிங் தூக்கு மேடை ஏறுவதற்கு சற்று முன் வாசித்துக் கொண்டிருந்த ‘அரசும் புரட்சியும்’ எனும் நூல் அப்போது இதை நிரூபித்ததைப் போலவே இப்பொழுதும் நிரூபிக்கிறது.

பகத்சிங் தான் படைக்க விரும்பிய சமூகத்தின் தன்மையை தான் தொடங்கிய அமைப்பின் பெயரிலேயே ‘சோசலிசக் குடியரசு’ எனும் சொல்லாக்கங்களை சேர்த்தார். அப்பொழுது இந்திய துணைக் கண்டம் முழுவதுமே அரசியல் சுதந்திரமும் இல்லாமல் பிரிட்டிஷ் ஏகாதிபத்தியத்தின் முழு காலனியாய் இருந்தது.

பகத்சிங்கின் உயிர்த் தியாகம் உள்ளிட்டு இட்ட அடித்தளத்தில்தான் இன்றைய இந்திய நிலப்பரப்பானது ‘குடியரசு’ என்று முப்பதாண்டுகள் கழித்து பிரகடனப்படுத்தப்பட்டது.

பகத்சிங் கனவு கண்ட ‘சோசலிசக் குடியரசு’ இந்தியாவில் இன்னமும் படைக்கப்படாவிட்டாலும் 1950ல் பிரகடனப்படுத்தப்பட்ட  ‘குடியரசை’யும் காப்பாற்றுவதற்கு எளிதில் முடியாத நிலைமை வந்துவிட்டது.

பகத்சிங் காலத்திய சட்டமியற்றும் அவை தொழிலாளர்களுக்கு விரோதமாய் இயற்றியதற்கு எதிராகத்தான் அவர் குண்டுவீசி தூக்கு கயிற்றை முத்தமிட்டார்.

மேற்காண் அவையின் இயல்பான வாரிசான இன்றைய இந்திய நாடாளுமன்றம் காலனிய ஆட்சியில் தொழிலாளர்கள் போராடிப் பெற்ற உரிமைகளை பறிக்கும் சட்டங்களை இயற்றியிருக்கிறது.

இவ்வாறு பகத்சிங் காலத்திய சமூகத்தைப் போலவே அடிப்படையில் வேறுபடாத சமூகமே இன்றைய இந்தியா. இத்தகைய இன்றைய இந்தியாவில் இந்துத்துவப் பாசிசம் அரியணையில் அமர்ந்திருக்கிறது.

பகத்சிங்கின் உயிர்த்தியாகத்துக்கு காரணமான அவரது கொள்கையே இந்துத்துவப் பாசிசத்துக்கு இன்று சாவு மணி அடிக்கும் அளவுக்கு அவரது பொருத்தப்பாடு அமைகிறது.

தோழர் – பாஸ்கர்

 

https://www.ilakku.org/?p=45251

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Popular Now

  • Topics

  • Posts

    • 09.59 இற்குப் போடடியில் குதித்து விட்டேன்.வேலை முடிந்து வந்து அவசரமாகப் பதிந்த படியால் சில தவறுகளும் ஏற்பட்டிருக்கலாம்.
    • பொதுவாக கிராமப்புறங்களில் அதிக வாக்கு சதவுதமும் நகர்ப்புறங்களில் குறைந்த சதவீதமும் வாகக்குப்பதிவு இருக்கும். கிராம்புற அப்பாவிப் பொதுமக்கள் அரசியல்வாதிகள் சொல்லும் வாக்குறுதிகளை நம்பி வாக்குப் போடுவார்கள். அவர்களின் வாக்குச் சாவடிகள் அவர்களின்  வசிப்பிடங்களுக்கு அருகிலேயே இருக்கும். சென்னையில் இருப்பவர்கள் வாக்குச் செலுத்துவதை பெரிய அளவில் விரும்புவதில்லை. இந்த முறை வழமைக்கு மாறாக சென்னையில் வாக்கு சதவுpதம் அதிகரித்திருப்பது. மாற்றத்தை விரும்பி அவர்கள் கோபத்தில் வாக்களித்திருக்கிறார்கள் என்றுதான் சொல்ல வேண்டும். இது ஆளும்வர்க்கங்களுக்கு எதிரானதாகவே பார்க்க வேண்டும்.
    • எங்கை பள்ளிக்கூடம் போனால்த் தானே? 😎 சொல் புத்தியுமில்லை....கேள் புத்தியுமில்லை... 🤣 சும்மா வாள்...வாள் தான் 😂 இப்ப நீங்கள் சொல்லீட்டள் எல்லே..... 
    • ஏதோ தேர்தல் ஆணையம் நடுநிலையாகச் செயற்படுவது மாதிரி இருக்கிறது உங்கள் கருத்து. 1 வீதம் கூட இல்லாத வாசனுக்கு சைக்கிள் சின்னம் அதேபோல் தினகரனுக்கு குக்கர் சின்னம் ஒதுக்கப்பட்டுள்ளது. பாஜக கூட்டணியில் இருப்பதால் இந்தச் சலுகை. வைகோவுக்கு 1 தொகுதியில்  நிற்பதால் பம்பரச் சின்னம் ஒதுக்க மறுத்த தேர்தல் ஆணையம் கூறிய காரணம் குறைந்தது 2 தொகுதியில் நிற்க வேணும் என்று. அதே நேரம் 2 தொகுதியில் நின்ற விடுதலைச்சிறுத்தைகளுக்கு பானைச்சின்னததை ஒதுக்க மறுத்து பல கெடுபிடிகளின் பின்னரே அவர்களுக்கு அந்தச் சின்னம் வழங்கப்பட்டுள்ளது. சாதாரண பொதுமக்களை மறித்துச் சோதனையிடும் தேர்தல் பறக்கும்படை  பெரிய கட்சிகள் காசு கொடுக்கும் போது கண்டும் காணாமல் விடுவதுதான் தேர்தல் ஆணையத்தின் யோக்கியதை.
    • குமாரசாமி  அண்ணை…  தமிழ் நாட்டில், ஒரு வாக்கின் விலை தெரியுமா? 25,000 ரூபாய்க்கு மேலும் கொடுக்க சில அரசியல் கட்சிகள் தயாராக உள்ளது. பாராளுமன்ற தேர்தல், சட்டசபை தேர்தல், உள்ளூராட்சி தேர்தல், இடைத் தேர்தல் என்று மாறி மாறி வரும் போது…. அந்த ஓட்டு எவ்வளவு சம்பாதிக்கும் என்று கணக்குப் பார்த்தால் லட்சாதிபதி ஆகலாம். 😂
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.