Jump to content

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, மெசொபொத்தேமியா சுமேரியர் said:

எனக்கு ஒவ்வாமை ஒன்றும் இல்லை. வைத்தியர் NHS இன் படிவம் ஒன்று இருக்காம். அதை நிறப்பி அனுப்பும்படி கூறியுள்ளார். ஊசி போட்டவர்களுக்கு என்ன என்ன ஒவ்வாமைகள் ஏற்படுகின்றன என்று அறியவாம். என்னத்தைச்  சொல்லுறது.  இலங்கைக்குப் போகலாம் என்னும் ஆசையில்  போட்டோம். 

😂😂😂 ஆகா 🙋‍♂️

Link to comment
Share on other sites

  • Replies 69
  • Created
  • Last Reply

Top Posters In This Topic

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, மெசொபொத்தேமியா சுமேரியர் said:

எனக்கு ஒவ்வாமை ஒன்றும் இல்லை. வைத்தியர் NHS இன் படிவம் ஒன்று இருக்காம். அதை நிறப்பி அனுப்பும்படி கூறியுள்ளார். ஊசி போட்டவர்களுக்கு என்ன என்ன ஒவ்வாமைகள் ஏற்படுகின்றன என்று அறியவாம். என்னத்தைச்  சொல்லுறது.  இலங்கைக்குப் போகலாம் என்னும் ஆசையில்  போட்டோம். 

ஏன் வாற வருசமும் போகலாம் தானே?😷

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, மெசொபொத்தேமியா சுமேரியர் said:

எனக்குக் கோவிட் வந்தபோது ஏற்படாத விளைவுகளெல்லாம் இப்ப ஊசி போட்ட பின்னர் ஏற்படுகின்றது. சிலருக்கு அப்படித்தான் என்கின்றார் மருத்துவர்.

🤔

உங்களுக்கு கோவிட் வந்து எத்தனை மாதங்களுக்கு பின்பு தடுப்பூசி போடப்பட்டது?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எனக்க்கும் எனது குடும்பத்தாருக்கும் கோவிற்-19 Varient 2(?) வந்தது. பிள்ளைகள் எல்லோருக்கும் பிரச்சனை இல்லை. நானும் மனைவியும் பாதிக்கப்பட்டோம். மனைவி பிள்ளைகளைப்பார்க்க வேண்டும் என சொல்லிக் கொண்டு முதலில் எழும்பிவிட்டா (தாய்🙏). நான்  மோசமாகப் பாதிக்கப்பட்டேன்.

பாதிப்பின் அளவு கோவிற்றிலிருந்து மீண்டபின்னர்தான் புரிந்தது. ஒரு அடி கூட எடுத்து வைக்க முடியவில்லை.

இப்போது நான்காம் அலை தொடர்பாக கதைக்க ஆரம்பித்துவிட்டார்கள். (கோவிற் பரப்பப்பட்டதின் நோக்கத்தை இன்னமும் அடையவில்லை போல தோன்றுகிறது ?🙄)

இந்த நோய் எதிரிக்குக் கூட வரக் கூடாது. 

 

  • Like 2
  • Sad 2
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 9/5/2021 at 01:45, மெசொபொத்தேமியா சுமேரியர் said:

கவனமாக இருங்கள்

இலங்கையில் தொற்று அதிகமாகிவிட்டது இறப்பும் அதிகமாகிவிட்டது  பார்ப்போம் என்னதான் நடக்கிறது என

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 8/5/2021 at 22:40, MEERA said:

😂😂😂 ஆகா 🙋‍♂️

உதுக்கு என்ன சிரிப்பு வேண்டிக்கிடக்கு.🤔😃

On 8/5/2021 at 22:45, குமாரசாமி said:

ஏன் வாற வருசமும் போகலாம் தானே?😷

அங்க நிறைய வேலையள் இருக்கு.😀

On 8/5/2021 at 22:55, விளங்க நினைப்பவன் said:

🤔

உங்களுக்கு கோவிட் வந்து எத்தனை மாதங்களுக்கு பின்பு தடுப்பூசி போடப்பட்டது?

இரண்டு மாதங்களின் பின்னர் போட்டோம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

போயே போச்சே; போயிந்தே; இட்ஸ் கான்..!

எனது அனுபவங்களை எழுதலாம் என்றால் தனி திரி தொடங்க இயலவில்லை. 🤔

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
11 hours ago, ராசவன்னியன் said:

போயே போச்சே; போயிந்தே; இட்ஸ் கான்..!

எனது அனுபவங்களை எழுதலாம் என்றால் தனி திரி தொடங்க இயலவில்லை. 🤔

நிர்வாகத்திடம் கூறினால் அவர்கள் சரிசெய்வார்கள் தானே அண்ணா. கட்டாயம் உங்கள் அனுபவத்தை எழுதுங்கள் அண்ணா.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
9 hours ago, மெசொபொத்தேமியா சுமேரியர் said:

நிர்வாகத்திடம் கூறினால் அவர்கள் சரிசெய்வார்கள் தானே அண்ணா. கட்டாயம் உங்கள் அனுபவத்தை எழுதுங்கள் அண்ணா.

களத்திற்கு நாள் கழித்து வந்தால் அப்படித்தான், பரவாயில்லை, போகட்டும்... அம்மணி.

இரண்டாம் அலையால் பிப்ரவரி மாதத்தில் வந்த கொரானா தொற்றிலிருந்து முழுவதும் குணமாக 20 நாட்கள் தனிமைபடுத்திக்கொள்ள வேண்டியதாயிற்று.

வருத்தம், உடல் சோர்வினால் வலுவிழப்பு, பயம், உணவு, வீட்டிலிருந்து அலுவலக வேலைகள், வாழும் நாட்டின் கடுமையான கட்டுப்பாடுகள், சட்டங்கள் என ஆளை படுத்தி எடுத்துவிட்டுதான் சென்றது. 😜

இந்த சிரம காலத்தில்தான், சக மனிதர்களின் சில அரிய(?) குணங்களையும் அறிய முடிந்தது. 🤭

சமீபத்தில்தான் தடுப்பு ஊசி போட்டுக்கொண்டேன்..!  ErX-0R8W8AEO02t.jpg

  • Sad 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
7 minutes ago, ராசவன்னியன் said:

களத்திற்கு நாள் கழித்து வந்தால் அப்படித்தான், பரவாயில்லை, போகட்டும்... அம்மணி.

இரண்டாம் அலையால் பிப்ரவரி மாதத்தில் வந்த கொரானா தொற்றிலிருந்து முழுவதும் குணமாக 20 நாட்கள் தனிமைபடுத்திக்கொள்ள வேண்டியதாயிற்று.

வருத்தம், உடல் சோர்வினால் வலுவிழப்பு, பயம், உணவு, வீட்டிலிருந்து அலுவலக வேலைகள், வாழும் நாட்டின் கடுமையான கட்டுப்பாடுகள், சட்டங்கள் என ஆளை படுத்தி எடுத்துவிட்டுதான் சென்றது. 😜

இந்த சிரம காலத்தில்தான், சக மனிதர்களின் சில அரிய(?) குணங்களையும் அறிய முடிந்தது. 🤭

சமீபத்தில்தான் தடுப்பு ஊசி போட்டுக்கொண்டேன்..!  ErX-0R8W8AEO02t.jpg

கொரோனா தொற்று வந்து தனியே இருக்கும்போது உதவிக்கு ஒருவரும் இல்லாவிட்டால் மிகவும் அவதிப்படவேண்டும். ராசவன்னியர் கொரோனாவில் இருந்து மீண்டது சந்தோசம். உடம்பைப் பத்திரமாகப் பார்த்துக்கொள்ளுங்கள். 

நானும் இரண்டாவது அஸ்ற்றா ஸெனிக்கா தடுப்பூசியை நேற்று ஏற்றிக்கொண்டேன். 😃

இனி ஹொலிடே போக எப்ப விடுவார்கள் என்று பார்த்துக்கொண்டிகின்றேன்!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, ராசவன்னியன் said:

சமீபத்தில்தான் தடுப்பு ஊசி போட்டுக்கொண்டேன்..!

கொரானா வந்து மூன்று மாதங்களுக்கு பின்பு தடுப்பூசி போட்டுக்கொண்டீர்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, ராசவன்னியன் said:

களத்திற்கு நாள் கழித்து வந்தால் அப்படித்தான், பரவாயில்லை, போகட்டும்... அம்மணி.

இரண்டாம் அலையால் பிப்ரவரி மாதத்தில் வந்த கொரானா தொற்றிலிருந்து முழுவதும் குணமாக 20 நாட்கள் தனிமைபடுத்திக்கொள்ள வேண்டியதாயிற்று.

வருத்தம், உடல் சோர்வினால் வலுவிழப்பு, பயம், உணவு, வீட்டிலிருந்து அலுவலக வேலைகள், வாழும் நாட்டின் கடுமையான கட்டுப்பாடுகள், சட்டங்கள் என ஆளை படுத்தி எடுத்துவிட்டுதான் சென்றது. 😜

இந்த சிரம காலத்தில்தான், சக மனிதர்களின் சில அரிய(?) குணங்களையும் அறிய முடிந்தது. 🤭

சமீபத்தில்தான் தடுப்பு ஊசி போட்டுக்கொண்டேன்..!  ErX-0R8W8AEO02t.jpg

மீள் வருகைக்கு நன்றி ஐயா.👋

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, விளங்க நினைப்பவன் said:

கொரானா வந்து மூன்று மாதங்களுக்கு பின்பு தடுப்பூசி போட்டுக்கொண்டீர்கள்.

ஏற்கனவே கொரானா வந்து குணமானவர்கள், தடுப்பு ஊசி போட்டுக்கொள்ள சென்றபோது மருத்துவ மனைகளில் மூன்று மாதங்களுக்குப் பின் போட்டுக்கொண்டால் போதுமென முதலில் சொல்லப்பட்டது. பின்னர் அவ்விதி தளர்த்தப்பட்டு ஒரு மாதம் கழித்து போடலாம் என அனைவருக்கும் செலுத்தப்படுகிறது. ஆனால் முதல் டோஸ் (First shot) செலுத்த கடும் தட்டுப்பாடுகள் சில நாட்கள் முன்பு வரை இருந்தன.

நான் சினோபாம்(Sinopharm) தடுப்பு ஊசி போட்டுக்கொண்டேன்.

2 hours ago, யாயினி said:

மீள் வருகைக்கு நன்றி ஐயா.👋

வரவேற்பிற்கு மிக்க நன்றி.!

 

Edited by ராசவன்னியன்
  • Thanks 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இங்கே கொரானா வந்து மருத்துவ சோதனையில் உறுதியானால்(+ve), அன்னாரின் தேசிய அடையாள அட்டை எண் (EID) அரசுக்கு தெரிவிக்கப்பட்டுவிடும். முதலில் உடனே அவர்களை பிடித்து அள்ளிப்போட்டுக்கொண்டு தனி இடத்தில்(Quarantine center) வைத்து கவனித்தார்கள். இப்பொழுது கடும் அறிவுறுத்தல்கள் மட்டும் கைப்பேசி அழைப்பில் பரிசோதனை முடிவு(+ve) வந்த மூன்று நாட்களுக்குள் வரும்.

அரசாங்க கொரானா சோதனை மையங்களுக்கு அவசியம் செல்ல வேண்டும். அங்கு மீண்டும் பரிசோதித்துவிட்டு மணிகட்டில் ஒரு "ஸ்மார்ட் ஜி.பி.எஸ் வாட்ச்" ஒன்றை கட்டிவிடுவார்கள்.அந்த நொடி முதல் கொரானா பாதித்தவரின் இருப்பிட அசைவுகள் கட்டுப்பாட்டு அறைகளில் கண்காணிக்கப்படும். 15 நாட்களுக்குப்பின் மறுபடியும் கொரானா பரிசோதனை செய்து முடிவில், கொரானா இல்லையென்றால் (-ve) மட்டுமே அந்த வாட்ச் கையிலிருந்து நீக்கப்படும்.

watch.png?f=16x9&w=1200&$p$f$w=461840e

நான் 20 நாட்கள் கையில் வாட்ச் கட்டியிருந்தேன். வீட்டிலிருக்கும்போதும், குளிக்கும்போதும் அப்படியே நம் கையில் இருக்கும். அதை அவிழ்க்க, ஏற்கனவே கட்டிய சோதனை மையங்களால் மட்டுமே இயலும்.  மருத்துவரின் ஆலோசனைகளின் படி வீட்டிற்குள்ளேயே தனிமையில் உணவுண்டு நம்மை பாதுகாத்துக்கொள்ள வேண்டும். வீட்டை விட்டு வெளியே வரக்கூடாது.

எனக்கு சமையல் அவ்வளவாக தெரியாது..! 😟 எங்கும் வெளியே செல்ல இயலாத நிலை. தினமும் சாப்பிடும் ஓட்டல் அதிபருடன் கைப்பேசியில் நிலைமையை எடுத்துச்சொல்லி சாப்பாடு வரவழைத்து சமாளித்தேன்.

தொடர் இருமல், உடம்பில் நோவு, முதலில் லேசான காய்ச்சல்.. குளிசைகள்.. அலுவலக வேலைகள்.. அத்தோடு 20 நாட்கள் தனிமை சிறை..

மறக்க இயலாது..!

  • Like 1
  • Sad 3
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
46 minutes ago, ராசவன்னியன் said:

இங்கே கொரானா வந்து மருத்துவ சோதனையில் உறுதியானால்(+ve), அன்னாரின் தேசிய அடையாள அட்டை எண் (EID) அரசுக்கு தெரிவிக்கப்பட்டுவிடும். முதலில் உடனே அவர்களை பிடித்து அள்ளிப்போட்டுக்கொண்டு தனி இடத்தில்(Quarantine center) வைத்து கவனித்தார்கள். இப்பொழுது கடும் அறிவுறுத்தல்கள் மட்டும் கைப்பேசி அழைப்பில் பரிசோதனை முடிவு(+ve) வந்த மூன்று நாட்களுக்குள் வரும்.

அரசாங்க கொரானா சோதனை மையங்களுக்கு அவசியம் செல்ல வேண்டும். அங்கு மீண்டும் பரிசோதித்துவிட்டு மணிகட்டில் ஒரு "ஸ்மார்ட் ஜி.பி.எஸ் வாட்ச்" ஒன்றை கட்டிவிடுவார்கள்.அந்த நொடி முதல் கொரானா பாதித்தவரின் இருப்பிட அசைவுகள் கட்டுப்பாட்டு அறைகளில் கண்காணிக்கப்படும். 15 நாட்களுக்குப்பின் மறுபடியும் கொரானா பரிசோதனை செய்து முடிவில், கொரானா இல்லையென்றால் (-ve) மட்டுமே அந்த வாட்ச் கையிலிருந்து நீக்கப்படும்.

watch.png?f=16x9&w=1200&$p$f$w=461840e

நான் 20 நாட்கள் கையில் வாட்ச் கட்டியிருந்தேன். வீட்டிலிருக்கும்போதும், குளிக்கும்போதும் அப்படியே நம் கையில் இருக்கும். அதை அவிழ்க்க, ஏற்கனவே கட்டிய சோதனை மையங்களால் மட்டுமே இயலும்.  மருத்துவரின் ஆலோசனைகளின் படி வீட்டிற்குள்ளேயே தனிமையில் உணவுண்டு நம்மை பாதுகாத்துக்கொள்ள வேண்டும். வீட்டை விட்டு வெளியே வரக்கூடாது.

எனக்கு சமையல் அவ்வளவாக தெரியாது..! 😟 எங்கும் வெளியே செல்ல இயலாத நிலை. தினமும் சாப்பிடும் ஓட்டல் அதிபருடன் கைப்பேசியில் நிலைமையை எடுத்துச்சொல்லி சாப்பாடு வரவழைத்து சமாளித்தேன்.

தொடர் இருமல், உடம்பில் நோவு, முதலில் லேசான காய்ச்சல்.. குளிசைகள்.. அலுவலக வேலைகள்.. அத்தோடு 20 நாட்கள் தனிமை சிறை..

மறக்க இயலாது..!

மீண்டும் கண்டது மகிழ்ச்சி, வன்னியர்!
உங்கள் வலியைப் புரிந்து கொள்கின்றேன்! கவனமாக இருங்கள்..!

Link to comment
Share on other sites

2 hours ago, ராசவன்னியன் said:

இங்கே கொரானா வந்து மருத்துவ சோதனையில் உறுதியானால்(+ve), அன்னாரின் தேசிய அடையாள அட்டை எண் (EID) அரசுக்கு தெரிவிக்கப்பட்டுவிடும். முதலில் உடனே அவர்களை பிடித்து அள்ளிப்போட்டுக்கொண்டு தனி இடத்தில்(Quarantine center) வைத்து கவனித்தார்கள். இப்பொழுது கடும் அறிவுறுத்தல்கள் மட்டும் கைப்பேசி அழைப்பில் பரிசோதனை முடிவு(+ve) வந்த மூன்று நாட்களுக்குள் வரும்.

அரசாங்க கொரானா சோதனை மையங்களுக்கு அவசியம் செல்ல வேண்டும். அங்கு மீண்டும் பரிசோதித்துவிட்டு மணிகட்டில் ஒரு "ஸ்மார்ட் ஜி.பி.எஸ் வாட்ச்" ஒன்றை கட்டிவிடுவார்கள்.அந்த நொடி முதல் கொரானா பாதித்தவரின் இருப்பிட அசைவுகள் கட்டுப்பாட்டு அறைகளில் கண்காணிக்கப்படும். 15 நாட்களுக்குப்பின் மறுபடியும் கொரானா பரிசோதனை செய்து முடிவில், கொரானா இல்லையென்றால் (-ve) மட்டுமே அந்த வாட்ச் கையிலிருந்து நீக்கப்படும்.

watch.png?f=16x9&w=1200&$p$f$w=461840e

நான் 20 நாட்கள் கையில் வாட்ச் கட்டியிருந்தேன். வீட்டிலிருக்கும்போதும், குளிக்கும்போதும் அப்படியே நம் கையில் இருக்கும். அதை அவிழ்க்க, ஏற்கனவே கட்டிய சோதனை மையங்களால் மட்டுமே இயலும்.  மருத்துவரின் ஆலோசனைகளின் படி வீட்டிற்குள்ளேயே தனிமையில் உணவுண்டு நம்மை பாதுகாத்துக்கொள்ள வேண்டும். வீட்டை விட்டு வெளியே வரக்கூடாது.

எனக்கு சமையல் அவ்வளவாக தெரியாது..! 😟 எங்கும் வெளியே செல்ல இயலாத நிலை. தினமும் சாப்பிடும் ஓட்டல் அதிபருடன் கைப்பேசியில் நிலைமையை எடுத்துச்சொல்லி சாப்பாடு வரவழைத்து சமாளித்தேன்.

தொடர் இருமல், உடம்பில் நோவு, முதலில் லேசான காய்ச்சல்.. குளிசைகள்.. அலுவலக வேலைகள்.. அத்தோடு 20 நாட்கள் தனிமை சிறை..

மறக்க இயலாது..!

வணக்கம் ராசவன்னியன் அண்ணா. 

இங்க அபுதாபில நானும் எனது மனைவியும் சினோபார்ம் ஊசி தான் போட்டனாங்கள். ஒரு பக்க விளைவும் எங்களுக்கு இல்லை. பிள்ளைகளுக்கு 16 வயதுக்கு குறைவு எண்டபடியால் போடவில்லை.

நான் அபுதாபி governmentல வேலை செய்வதால் ஒவ்வொரு கிழமையும் PCR டெஸ்ட் பண்ணி -ve எண்டால் மட்டுமே ஆஃபீசுக்குள்ள போகமுடியும் (All entrance doors have been locked and need to be scan QR code at entrance doors  from ALHOSN app to open entrance doors).   +ve எண்டால் home Quarantine with tracking watch.

எங்களுக்கு எங்கட ஆபீஸ்ல ஒவ்வொரு  திங்கட்கிழமையும் free யாக PCR டெஸ்ட் பண்ணுவார்கள்.

இதுவரை எல்லாம் நல்லபடியாக போகுது. பாப்பம் எப்ப லைப் நார்மலுக்கு வரும் எண்டு.....

  • Like 1
  • Thanks 1
Link to comment
Share on other sites

  • 9 months later...
  • கருத்துக்கள உறவுகள்

இந்த கொரோனா அனுபவங்கள் இன்னும் தொடரலாம் என நினைக்கின்றேன்.

ஏனெண்டால் மூண்டு ஊசி போட்டவையும் கொரோனாவிலை சிக்கியிருக்கினமாம்..

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 minutes ago, குமாரசாமி said:

இந்த கொரோனா அனுபவங்கள் இன்னும் தொடரலாம் என நினைக்கின்றேன்.

ஏனெண்டால் மூண்டு ஊசி போட்டவையும் கொரோனாவிலை சிக்கியிருக்கினமாம்..

ஒரு ஊசியும் போடாதவன்…. கொரோனா வராமல், 
கொரோனாவுடன் குடும்பம் நடத்துகின்றான். 😁

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
12 minutes ago, தமிழ் சிறி said:

ஒரு ஊசியும் போடாதவன்…. கொரோனா வராமல், 
கொரோனாவுடன் குடும்பம் நடத்துகின்றான். 😁

இதிலை தெரியிற இரண்டு ஜேர்மன்காரரையும் எங்கையும் கண்டனீங்களே?
ரஷ்யன் உக்ரேனுக்கு அடிச்ச அடியிலை இவை இரண்டு பேரையும் ஜேர்மன் ரிவியள்ளை காணேல்லை.கொரோனாவை வைச்சு உருட்டினவையள்..🤣

Streit zwischen Wieler & Lauterbach: RKI-Papier kam wohl zu spät - Business  Insider

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 20/5/2021 at 06:09, Shanthan_S said:

வணக்கம் ராசவன்னியன் அண்ணா. 

இங்க அபுதாபில நானும் எனது மனைவியும் சினோபார்ம் ஊசி தான் போட்டனாங்கள். ஒரு பக்க விளைவும் எங்களுக்கு இல்லை. பிள்ளைகளுக்கு 16 வயதுக்கு குறைவு எண்டபடியால் போடவில்லை.

நான் அபுதாபி governmentல வேலை செய்வதால் ஒவ்வொரு கிழமையும் PCR டெஸ்ட் பண்ணி -ve எண்டால் மட்டுமே ஆஃபீசுக்குள்ள போகமுடியும் (All entrance doors have been locked and need to be scan QR code at entrance doors  from ALHOSN app to open entrance doors).   +ve எண்டால் home Quarantine with tracking watch.

எங்களுக்கு எங்கட ஆபீஸ்ல ஒவ்வொரு  திங்கட்கிழமையும் free யாக PCR டெஸ்ட் பண்ணுவார்கள்.

இதுவரை எல்லாம் நல்லபடியாக போகுது. பாப்பம் எப்ப லைப் நார்மலுக்கு வரும் எண்டு.....

நீங்கள் இன்னுமா கொரனோ வுடன் இருக்கிறியள்  நாங்க உக்கிரேன் ரஸ்யா சண்டைக்குள் பதுங்கு குழியில் இருக்கிறம் இங்கு லண்டனில் கொரனோ  சாதரண காய்ச்சல் ஐந்து நாளைக்கு இருந்தது இப்ப அதையும் காணோம் .

  • Haha 1
Link to comment
Share on other sites




×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.