Jump to content

தமிழ்நாட்டின் அடுத்த CM யார்? - The Imperfect Show சர்வே முடிவுகள்! TN Elections 2021


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

தமிழ்நாட்டின் அடுத்த CM யார்? - The Imperfect Show சர்வே முடிவுகள்! TN Elections 2021

r

சர்வே மூலம் நம் மனதில் எழுந்த பல கேள்விகளுக்கான விடைகளைத் துல்லியமாக உங்களுடன் சேர்ந்து கண்டிருக்கிறது The Imperfect Show டீம்!

2021 சட்டமன்றத் தேர்தல்... இருபெரும் அரசியல் தலைவர்களாக இருந்த கருணாநிதி, ஜெயலலிதா இல்லாமல் நடக்கப்போகும் முதல் சட்டமன்றத் தேர்தல். புதிதாக அரசியல் களம் காண்பவர்கள், சீட்டுக்கட்டைக் கலைத்துப்போட்டதைப்போல கூட்டணிக் கணக்கை மாற்றிப்போட்டிருக்கும் கட்சிகள், அரசியலில் வாழ்வா, சாவா என எதிர்காலத்தை மனதில் வைத்துச் செய்யப்படும் பலரின் பரப்புரைகள்... எனத் தமிழக மக்கள் வாழ்வில் பல்வேறுவிதமான எதிர்பார்ப்புகளையும் குழப்பங்களையும் விளைவித்துக்கொண்டிருக்கும் வித்தியாசமான தேர்தல் இது!

சுருக்கமாகச் சொன்னால் `தமிழக முதல்வர்' எனும் அந்த அரியணையில் அமரப்போகும் `பாகுபலி யார்?’, அதோடு மட்டுமல்லாமல் தமிழ்நாட்டின் தலையெழுத்தைத் தீர்மானிக்கப்போகும் கூட்டணி எது, இந்தத் தேர்தலில் கவனம் ஈர்த்த முழக்கம் எது, வெற்றியைத் தீர்மானிக்கும் அந்த சக்தி எது... இப்படி நம் எல்லோரின் மனதிலும் எழுந்த கேள்விகளுக்குத்தான் விடைகள் காண விழைந்திருக்கிறோம்.

The Imperfect Show
 
The Imperfect Show

இந்த சர்வேக்காகவே பிரத்யேக இணையதளத்தை உருவாக்கி, நம் மனதில் எழுந்த 10 கேள்விகளைக் கேட்டிருந்தோம். தமிழ்நாட்டில் வசிப்போர் முதல் வெளிநாடுவாழ் தமிழர்கள் வரை தங்கள் கைப்பேசி எண்களைப் பதிந்து, மொத்தமாக 27,725 பேர் பங்குகொண்டு `தேர்தல் திருவிழாவுக்கான ஸ்பெஷல் சர்வே'-யைச் சிறப்பித்து ஆச்சர்யத்தில் திளைக்கவைத்திருக்கிறார்கள்!

ஆம்... இந்த சர்வே மூலம் நம் மனதில் எழுந்த பல கேள்விகளுக்கான விடைகளைத் துல்லியமாக உங்களுடன் சேர்ந்து கண்டிருக்கிறது The Imperfect Show டீம்!

அதன் முடிவுகள் இங்கே…

``இந்தத் தேர்தலில் பெரிதும் கவனம் ஈர்த்த முழக்கம் எது?’’

என்ற கேள்விக்கு ’ஸ்டாலின்தான் வராரு…’ என 43.60 % மக்கள் வாக்களித்து முதல் இடத்துக்கு அந்த முழக்கத்தைக் கொண்டுவந்திருக்கிறார்கள். பெட்டிக்கடை முதல் யூடியூப் வீடியோ விளம்பரம் வரை கண்ணில்படும்படி ஷேர் செய்ததற்கு நல்ல பலன் கிடைத்திருக்கிறது. இரண்டாம் இடத்தைப் பிடிப்பது எடப்பாடி பழனிசாமியின் அதிரிபுதிரி விளம்பரமான `வெற்றி நடைபோடும் தமிழகமே…’ என்ற முழக்கம்தான்.

முழக்கம்
 
முழக்கம்

இதற்கு 30.73 சதவிகிதத்தினர் ஆதரவு தருகிறார்கள். மக்கள் நீதி மய்யத்தின் `சீரமைப்போம் தமிழகத்திற்கு’ 16.33 சதவிகிதமும், சீமானின் `புதியதோர் தேசம் செய்வோம்’ என்ற முழக்கம் கவனம் பெற்றதாக 9.32 % பேரும் சொல்கிறார்கள். எடப்பாடி பழனிசாமி, `வெற்றி நடைபோடும் தமிழகமே…’ எனப் பத்திரிகைகளில் முதல் பக்கம் விளம்பரம், டி.வி சேனல்களில் நொடிக்கு நொடி என டெலிகாஸ்ட் செய்யப்பட்டாலும் இரண்டாம் இடத்தைத்தான் மக்கள் கொடுத்திருக்கிறார்கள்.

``இந்தத் தேர்தலில் வெற்றியை நிர்ணயம் செய்யப்போகும் முக்கியமான விஷயமாக எதை நினைக்கிறீர்கள்?’’

 

என்ற கேள்விக்கு ‘கூட்டணி பலம்’தான் முதல் இடத்தைப் பிடித்திருக்கிறது. சுமார் பாதி விழுக்காடுகளுக்கு மேல், அதாவது 54.42 % மக்கள், கூட்டணி பலம்தான் தேர்தல் முடிவுகளை நிர்ணயம் செய்யப்போவதாக எண்ணுகிறார்கள்.

வெற்றியை நிர்ணயிக்கும் முக்கியமான விஷயம்
 
வெற்றியை நிர்ணயிக்கும் முக்கியமான விஷயம்

ஐடி விங் பிரசாரத்தை 25.31 % மக்கள் தேர்ந்தெடுத்து, இரண்டாம் இடத்தைக் கொடுத்திருக்கிறார்கள். இந்த சட்டமன்றத் தேர்தலில்தான் ஐடி விங் பிரசாரங்களின் தாக்கத்தை நம்மால் உணர முடிந்தது. `பண பலமும்' தேர்தலில் தாக்கத்தை ஏற்படுத்தும் என 20.25 % மக்கள் சொல்லியிருக்கிறார்கள்.

``நீங்கள் ஓட்டுப்போடுவது எதன் அடிப்படையில்?’’

என்ற கேள்விக்கு `வேட்பாளரை மனதில்வைத்தே...’ என்ற ஆப்ஷனை இரண்டாம்பட்சமாகத்தான் மக்கள் தேர்ந்தெடுத்திருக்கிறார்கள். இதற்கு வெறும் 35.43 சதவிகித ஆதரவுதான் கிடைத்திருக்கிறது. ஆனால், ‘கட்சியை மனதில்வைத்தே...’ என்ற ஆப்ஷனுக்கு 64.56 சதவிகிதம் டிக் அடித்து முதலிடத்துக்குக் கொண்டு வந்திருக்கிறார்கள்.

எதன் அடிப்படையில் ஓட்டு?
 
எதன் அடிப்படையில் ஓட்டு?

தொகுதிகளில் நிற்கும் வேட்பாளர்களைவிட `எந்தக் கட்சி நிற்கிறது, எந்தக் கட்சியின் கூட்டணிக் கட்சி நிற்கிறது.... அதுதான் எங்களுக்கு முக்கியம்’ என மக்கள் நினைக்கிறார்கள். அதுதான் இந்த எண்களில் பிரதிபலிக்கிறது.

``அதிமுக அரசின் கடந்த 5 ஆண்டுகள் செயல்பாடு எப்படி?’’

என்ற கேள்வியை நாம் சர்வேயில் கேட்கும்போது, ‘திருப்தியளிக்கிறது’ என்ற ஆப்ஷனை முதலிலும், ‘பரவாயில்லை’, ‘மோசம்’ என அடுத்தடுத்து வைத்திருந்தோம். ஆனால், அப்படியே திருப்பிப்போட்டவாறு முடிவுகள் கிடைத்திருக்கின்றன.

அதிமுக அரசின் செயல்பாடு
 
அதிமுக அரசின் செயல்பாடு

அ.தி.மு.க ஆட்சி `மோசம்' என 63.14 சதவிகித பேரும், `பரவாயில்லை' என்று 25.93 சதவிகிதத்தினரும், `திருப்தியளிக்கிறது' என வெறும் 10.92 % பேரும் மட்டுமே சொல்லியிருக்கிறார்கள். தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு, டாஸ்மாக் பிரச்னை, ஊழல் என அனைத்தையும் மக்கள் ஞாபகம் வைத்திருக்கிறார்கள் என்றே இந்த முடிவுகள் உணர்த்துகின்றன.


``இந்தத் தேர்தலில் காமெடியான கட்சியாக எதைப் பார்க்கிறீர்கள்?’
 

மக்கள் சில கட்சிகளைத் தொடர்ந்து கவனித்துவந்தாலும், அவற்றை காமெடியாகதான் அணுகுகிறார்கள் என்பதையே இந்தக் கேள்விக்கான தரவுகளில் நம்மால் உணர முடிகிறது. ``இந்தத் தேர்தலில் காமெடியான கட்சியாக எதைப் பார்க்கிறீர்கள்?’’ என்ற கேள்விக்கு முதலிடம் பிடித்திருப்பது தேமுதிக-தான். 29.46 சதவிகித மக்கள் தேமுதிக-வுக்கு ஆதரவாக வாக்களித்திருக்கிறார்கள். இதில், முதலிடம் பிடிப்பதற்குப் பெரிதும் பாடுபட்டது விஜய பிரபாகரனாகத்தான் இருப்பார். அடுத்ததுதான் சுதீஷ், பிரேமலதா வருவார்கள்.

காமெடி கட்சி
 
காமெடி கட்சி

என்ன நடக்கிறது என்றே கள நிலவரம் புரியாமல் பேசினால் மக்கள் கவனிப்பார்கள். ஆனால், அவர்கள் பொழுதுபோக்குக்காகத்தான் கவனிக்கிறார்கள் என்பதை இந்த முடிவுகளில் அறிய முடிகிறது. அடுத்து தேசியக் கட்சியான, மத்தியில் ஆளும் பா.ஜ.க-வையும் நம் மக்கள் காமெடி கட்சியாகத்தான் கருதுகிறார்கள். சுமார் 24.73 சதவிகித மக்கள் காமெடி கட்சி என்ற அடிப்படையில் பா.ஜ.க-வுக்கு ஆதரவு தந்திருக்கிறார்கள். (எல்.முருகன், ஹெச்.ராஜா, அண்ணாமலை... இதையெல்லாம் நோட் பண்ணுங்கப்பா... நோட் பண்ணுங்கப்பா...) அடுத்து அதிமுக 10.33 % பெற்று மூன்றாம் இடம் பிடித்திருக்கிறது. திமுக 9.03 சதவிகிதமும், நாம் தமிழருக்கு 8.80 %, மக்கள் நீதி மய்யத்துக்கு 5.86 %, பா.ம.க-வுக்கு 5.49 %, அமமுக-வுக்கு 3.45 %, இதர என்ற ஆப்ஷனை 2.77 சதவிகித மக்கள் தேர்ந்தெடுத்திருக்கிறார்கள்.

``அடுத்த முதல்வர் யார்?’’

எனக் கணிக்கிறீர்கள் என்ற கேள்விக்கு `ஸ்டாலின்' என 58.16 % வாக்களித்து அவரை முன்னிலையில் நிறுத்தியிருக்கிறார்கள். இரண்டாவது இடம் எடப்பாடி பழனிசாமிக்கு... அவருக்கு 16.33 % மட்டுமே கிடைத்திருக்கிறது. சீமான் மூன்றாம் இடத்தைப் பிடிக்கிறார். சீமான் முதல்வராக வருவார் என 12.37 % மக்கள் கருதுகிறார்கள்.

அடுத்த முதல்வர்
 
அடுத்த முதல்வர்

கமல்ஹாசனை 10.05 சதவிகிதம் பேரும், டி.டி.வி.தினகரனுக்கு 1.9 சதவிகிதம் பேரும் வாக்களித்திருக்கிறார்கள். இதர என்ற ஆப்ஷனை 1.12 % தேர்ந்தெடுத்திருக்கிறார்கள். ஆனால், சரிபாதி சதவிகிதத்தினர் ஸ்டாலின் எனச் சொல்வது ஆச்சர்ய ட்விஸ்ட்தான்.

``உங்கள் ஓட்டு யாருக்கு?'

 

என்ற கேள்விக்கு `திமுக கூட்டணிக்கே' என 48.49 % மக்கள் அடித்துச் சொல்லி, திமுக-வை முதலிடம் பிடிக்கவைத்திருக்கிறார்கள். அதிமுக கூட்டணிக்கு 24.23 % பேரும், நாம் தமிழருக்கு 11.41 % பேரும் என இரண்டாம் மற்றும் மூன்றாம் இடங்களை அவற்றுக்குத் தருகிறார்கள்.

உங்கள் ஓட்டு யாருக்கு
 
உங்கள் ஓட்டு யாருக்கு

நான்காவது இடம் கிடைத்திருப்பது மக்கள் நீதி மய்யக் கூட்டணிக்கு. சுமார் 10.70 சதவிகித மக்கள் ம.நீ.ம-வுக்கு வாக்களிப்பேன் என்கிறார்கள். அமமுக கூட்டணிக்கு வெறும் 2.5 சதவிகிதமும், இதர கட்சிகளுக்கு 2.49 % கிடைத்திருக்கிறது. இதிலும் அ.தி.மு.க-வை காட்டிலும் தி.மு.க சரிபாதி உயர்ந்திருக்கிறது.

``மூன்றாவது அணிக்கான ரேஸில் முந்தப் போவது யார்?’’

 

என்ற கேள்வி இந்தத் தேர்தலில் மிக முக்கியம். முதலிடத்துக்கு எப்படிப் போட்டி நடக்கிறதோ அதேபோல் மூன்றாம் இடத்துக்கான போட்டியையும் இந்தத் தேர்தலில் கூடுதலாகப் பார்க்க முடிகிறது. முதன்முதலாக சட்டமன்றத் தேர்தலில் களமிறங்கியிருக்கிறது மக்கள் நீதி மய்யம். இதற்கு முன் இரண்டு சட்டமன்றத் தேர்தல்களைச் சந்தித்து தனக்கென ஒரு வாக்குவங்கியை வைத்திருக்கிறது நாம் தமிழர் கட்சி.

மூன்றாவது அணி
 
மூன்றாவது அணி

`அதிமுக-வை மீட்பதே எங்கள் குறிக்கோள்' எனக் களம்காண்கிறது அமமுக. இவர்கள் மூவருக்குள் நடக்கும் மூன்றாவது அணிக்கான ரேஸில் முந்துவது மக்கள் நீதி மய்யம்தான். 43.87 சதவிகித மக்கள் `மய்யம்தான் மூன்றாவது இடத்தைப் பிடிக்கும்’ என்கிறார்கள். அதற்கு அடுத்த இடம் நாம் தமிழருக்கு... அந்தக் கட்சிக்கு 32.89 சதவிகிதமும், கடைசி இடம் அமமுக-வுக்கு.... இந்தக் கட்சிக்கு 23.23 சதவிகிதமும் கிடைத்திருக்கிறது. ஒவ்வொரு கட்சிக்கும் தலா 10 சதவிகிதம் வித்தியாசத்தை இதில் பார்க்க முடிகிறது.

`வாரிசு அரசியல்’

 

என்ற கேட்டகிரியில் எப்போதும் மக்கள் மனநிலையில் முந்துவது தி.மு.க-தான். அதேதான் இந்த முடிவுகளிலும் நமக்குத் தெரியவருகிறது. ``வாரிசு அரசியலில் நம்பர் 1 கட்சி எது?’’ என்ற கேள்விக்கு, `சந்தேகமே வேண்டாம் திமுக-தான்’ என 68.27 % மக்கள் அடித்துச் சொல்கிறார்கள். `தி.மு.க கட்சிக்கு வாக்களிப்பேன்’ என்று சொல்பவர்கள்கூட, `தி.மு.க வாரிசு அரசியலுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் என்பதை அறிந்தே வாக்களிக்கிறேன்’ என்று சொல்வது நகைமுரண்தான்.

வாரிசு அரசியல்
 
வாரிசு அரசியல்

இரண்டாம் இடம் கிடைத்திருப்பது பா.ம.க-வுக்கு... 12.67 %. `என் குடும்பத்திலிருந்து யாரும் அரசியலுக்கு வர மாட்டார்கள்' என்று ராமதாஸ் அடித்து சத்தியம் செய்யாத குறையாகச் சொன்னார். ஆனாலும் அன்புமணி தீவிர அரசியலில் இயங்குவதை வாரிசு அரசியலாகத்தான் மக்கள் பார்க்கிறார்கள் என்பதை யூகிக்க முடிகிறது. அதற்கு அடுத்த இடங்களைப் பெறுவது அ.தி.மு.க 10.95 %, காங்கிரஸ் 4.12 %, தேமுதிக 3.9 %.

எந்தெந்தக் கூட்டணி \ கட்சிகள் எத்தனை சீட்டுகள்

``இந்தத் தேர்தலில் மொத்தமுள்ள 234 தொகுதிகளில் உத்தேசமாக எந்தெந்தக் கூட்டணி \ கட்சிகள் எத்தனை சீட்டுகள் பெறும் எனக் கணிக்கிறீர்கள்?’’ என்ற கேள்விக்கு தி.மு.க-வே அதிக இடங்கள் வெல்லும் எனக் கருதுகிறார்கள்.

எத்தனை சீட்டுகள்
 
எத்தனை சீட்டுகள்

தி.மு.க 157 முதல் 172 வரையிலும், அ.தி.மு.க 59 முதல் 70 தொகுதிகள் வரையிலும் வெல்ல வாய்ப்பு இருப்பதாக கணிக்கிறார்கள். 1 முதல் 3 இடங்கள் வரை அ.ம.மு.க-வும், நாம் தமிழர் கட்சியும், மக்கள் நீதி மய்யமும் 1 முதல் 2 தொகுதிகள் வரையும் பெறுவார்கள் என்று கணக்கு போடுகிறார்கள் நம் சர்வேயில் கலந்துகொண்ட மக்கள். ஆக, இந்த 2021 சட்டமன்றத் தேர்தல் ரேஸில் முந்துவது தி.மு.க-வே என்று இந்த முடிவுகள் நமக்கு உணர்த்துகின்றன.

இந்த 10 கேள்விகளுக்கான சர்வே முடிவுகளைப் பார்க்கும்போது இரண்டாம் இடமே அ.தி.மு.க-வுக்குக் கிடைக்கிறது. இந்த சர்வேயில் ஆர்வத்தோடு சில வெளிநாடுவாழ் தமிழர்களும் பங்குபெற்றிருப்பதால், அவர்கள் நிஜமான தேர்தல் திருவிழாவில் பங்குகொண்டால் மட்டுமே மிகத்துல்லியமான கணிப்பு கிடைக்கும் என்பதையும் நினைவில்கொள்ளுங்கள் மக்களே... இது வெறும் எண்கள் மட்டுமல்ல, மக்களின் எண்ணங்கள்.

இந்த சர்வே குறித்த அலசி ஆராய்ந்து ஒரு ஸ்பெஷல் ஷோவாக The Imperfect Show டீம் விகடன் வெப் டி.வி-யில் வெளியிட்டிருக்கிறார்கள். அந்த வீடியோவையும் மறக்காமல் கீழே உள்ள லிங்க்கில் பாருங்கள். நன்றி!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அநேக இடங்களில் நாம் தமிழர் கட்சி 3வது இடத்தில் இருப்பது ஆச்சரியமான மாற்றம் 

சில வருடங்களுக்கு முன் கணக்கிலேயே எடுத்துக்கொள்ள படாத அமைப்பு இன்று முதலமைச்சர் தெரிவு வரை 3ம் இடத்துக்கு வந்திருப்பது அதன் தேவையையும் வளர்ச்சியையும் காட்டுகிறது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
22 minutes ago, பிழம்பு said:

அடுத்த முதல்வர் யார்?’’

எனக் கணிக்கிறீர்கள் என்ற கேள்விக்கு `ஸ்டாலின்' என 58.16 % வாக்களித்து அவரை முன்னிலையில் நிறுத்தியிருக்கிறார்கள். இரண்டாவது இடம் எடப்பாடி பழனிசாமிக்கு... அவருக்கு 16.33 % மட்டுமே கிடைத்திருக்கிறது. சீமான் மூன்றாம் இடத்தைப் பிடிக்கிறார். சீமான் முதல்வராக வருவார் என 12.37 % மக்கள் கருதுகிறார்கள்.

அடுத்த முதல்வர்

ஐயோ இந்த ஆமைக்கறி பயல் மூன்றாவதாய்  வந்திட்டானே !.........................................

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
9 minutes ago, பெருமாள் said:

ஐயோ இந்த ஆமைக்கறி பயல் மூன்றாவதாய்  வந்திட்டானே !.........................................

வையிரா, எங்கப்பா, இங்க பெருமாள் முந்தி விட்டாரே? 😁

***

விகடன், திமுக பினாமி பத்திரிகை. எதிர்பார்த்தது போலவே, கருத்து திணிப்பு நடந்துள்ளது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
28 minutes ago, விசுகு said:

அநேக இடங்களில் நாம் தமிழர் கட்சி 3வது இடத்தில் இருப்பது ஆச்சரியமான மாற்றம் 

சில வருடங்களுக்கு முன் கணக்கிலேயே எடுத்துக்கொள்ள படாத அமைப்பு இன்று முதலமைச்சர் தெரிவு வரை 3ம் இடத்துக்கு வந்திருப்பது அதன் தேவையையும் வளர்ச்சியையும் காட்டுகிறது.

க‌ட்சி பிள்ளைக‌ளின் க‌டின‌ உழைப்பு தான் அண்ணா ?

தேர்த‌ல் நேர‌ம் ம‌ட்டும் இல்லை தேர்த‌ல் முடிந்தாலும் க‌ட்சியை வ‌ள‌த்தெடுப‌தில் மும்ப‌ர‌மாய் வேலை செய்வார்க‌ள் ?

இனி ஆமைக் க‌றிய‌ விட்டு  ,  பொறாமையில் வேறு ஏதாவ‌து அவ‌தூர‌ கையில் எடுப்பின‌ம் 200ரூபாய் கொத்த‌டிமைக‌ள் 

இவ‌ர்க‌ளை எதிர் கொள்ள‌ நாமும் பெரும் ப‌டையை வைத்து இருக்கிறோம் ?

அண்டைக்கு தின‌க‌ர‌ன் ப‌த்திரிகை போலி செய்தியை ப‌ர‌ப்பின‌துக்கு என‌து த‌ம்பி அந்த‌ ஊட‌க‌த்துக்கு போன் போட்டு க‌தைச்சு அத‌ ம‌க்க‌ள் பார்க்கும் அள‌வுக்கு ஆதார‌த்தோடு வெளியிட்ட‌ நாங்க‌ள் ,

சீமான் விஜேப்பியுட‌ன் ர‌க‌சிய‌ ச‌ந்திப்பு என்ற‌ த‌லைப்பு ? க‌ட‌சியில் அந்த‌ புர‌ளிய‌ வெளியிட்ட‌ ப‌த்திரிகைக்கு தான் அவ‌ பெய‌ர்  😁😀

Link to comment
Share on other sites

38 minutes ago, விசுகு said:

அநேக இடங்களில் நாம் தமிழர் கட்சி 3வது இடத்தில் இருப்பது ஆச்சரியமான மாற்றம் 

சில வருடங்களுக்கு முன் கணக்கிலேயே எடுத்துக்கொள்ள படாத அமைப்பு இன்று முதலமைச்சர் தெரிவு வரை 3ம் இடத்துக்கு வந்திருப்பது அதன் தேவையையும் வளர்ச்சியையும் காட்டுகிறது.

விசுகு,

மூன்றாவதாக வந்த கட்சி என்று என்று கூற முடியாது. இதில் இப்படி ஒரு கணிதம் இருக்கின்றது. 

திமுக கூட்டணி எனச் சொல்லும் போது அதில் காங்கிரஸ், வைகோ, விடுதலைச் சிறுத்தைகள் மற்றும் இன்னும் சில சிறு கட்சிகள் உள்ளன. அவ்வாறே அதிமுக வில் பா.ஜ.க, பா.ம.க வும் இன்னும் சில கட்சிகளும் உள்ளன.கமலின் கட்சி யில் சரத்குமாரின் கட்சி (எனக்கு இன்னும் இவர்கள் இருவரின் கட்சிகளின் பெயர் சரியாக எழுத வராது) கூட்டணியில் உள்ளது. தினகரனின் கட்சியுடன் கொமடிக் கட்சி விசயகாந்தின் கட்சி உள்ளது. இவர்களது வேட்பாளர்கள் பெறும் வாக்குகளின் அடிப்படையில் தேர்தலின் பின் வரிசைப்படுத்தினால், நா.க.த மூன்றாம் இடத்தில் வருவதற்கு வாய்புகள் இல்லை. 

ஒவ்வொரு கூட்டணியையும் தனித் தனி கட்சிகளாக கருதினால் மூன்றாவதாக வர கமலின் கட்சிக்கும் நா.க.த. இற்கும் நோட்டாவுக்கும் இடையில் போட்டி இருக்கும்.

22 minutes ago, Nathamuni said:

 

விகடன், திமுக பினாமி பத்திரிகை. எதிர்பார்த்தது போலவே, கருத்து திணிப்பு நடந்துள்ளது.

உங்களுக்கு உவப்பான முடிவுகள் வராவிடின், உடனே கருத்து திணிப்பு என்று சொல்கின்றீர்கள். தேர்தல் முடிவுகளும் இவ்வாறு வந்தால், தேர்தல் மோசடி என்பீர்கள் என நினைக்கின்றேன்.😀

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, பெருமாள் said:

ஐயோ இந்த ஆமைக்கறி பயல் மூன்றாவதாய்  வந்திட்டானே !.........................................

இப்போதைக்கு குஷியாக இருக்கலாம். ஆனால் வாத்துமுட்டை கிடைக்கும்போதும் அதே குஷியோடு இருக்கவேண்டும்😂

spacer.png

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, நிழலி said:

உங்களுக்கு உவப்பான முடிவுகள் வராவிடின், உடனே கருத்து திணிப்பு என்று சொல்கின்றீர்கள். தேர்தல் முடிவுகளும் இவ்வாறு வந்தால், தேர்தல் மோசடி என்பீர்கள் என நினைக்கின்றேன்.😀

சீமான் வென்று முதல்வராவர் என்று நான் சொல்லவில்லை. ஆனால் இந்த கருத்து திணிப்புகளை நம்ம நான் தயாரில்லை.

அதனை நம்புவதும் அறிவுடைமையாகாது.

இந்த கருத்து திணிப்பு குறித்து மரிதாசும் வீடியோ போட்டிருக்கிறார். கிடைத்தால் போடுகிறேன்.

ஆனால், ஒன்றை உறுதியாக சொல்கிறேன். ஸ்டாலின் வெற்றி இலகுவானதல்ல. எடப்பாடி மீண்டும் முதல்வராகலாம். பிஜேபி அதற்கு உதவும்.

எடப்பாடி, நாலு ஆண்டுகள், முதல்வராக நிரூபித்து இருக்கிறார், ஸ்டாலின், பேச்சு, செயல் அனைத்திலும் சொதப்பிக்கொண்டு இருக்கிறார். தகப்பன், இருக்கும் போதே, பொறுப்பு கொடுக்கும் அளவுக்கு, தன்னை நிரூபிக்கவில்லை.

சட்டசபை தொடர்பான தேர்தல்களில், ஆர் கே நகர் முதல், நடந்த இடைத்தேர்தல்கள் அனைத்திலும் அரசினை அமைக்கும் முயல்வில் தோல்வி. (எடப்பாடி, தனக்கு தேவையான இடங்களை, குறி வைத்து அடித்து வென்றார்)

ஆகவே, ஸ்டாலின் வெல்லுவார் என்று நம்பி காசை எறிந்து பந்தயம் பிடியாதீர்கள்.

கிருபன் பதிந்த வாத்து முட்டை, இந்த பக்கமும் சரியாய் பொருந்தும். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
38 minutes ago, கிருபன் said:

இப்போதைக்கு குஷியாக இருக்கலாம். ஆனால் வாத்துமுட்டை கிடைக்கும்போதும் அதே குஷியோடு இருக்கவேண்டும்😂

spacer.png

கிருபன் யாராலுமே  இவர் இப்படி இந்த இடத்துக்கு வருவார் என்று சொல்லமுடியாது தோல்வி என்பது தெரிந்தே போட்டியிடுகிறார்கள் எனவே வாத்து முட்டை பற்றி கவலைப்படுவதில்லை .

ஆனால் யார் கண்டது அரவிந்த் கெஜ்ரிவால் இரு பெரும் மாபெரும் கட்சிகளை  பின் தள்ளி முன்னுக்கு வருவார் என்று .

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 minutes ago, Nathamuni said:

சீமான் வென்று முதல்வராவர் என்று நான் சொல்லவில்லை. ஆனால் இந்த கருத்து திணிப்புகளை நம்ம நான் தயாரில்லை.

அதனை நம்புவதும் அறிவுடைமையாகாது.

இந்த கருத்து திணிப்பு குறித்து மரிதாசும் வீடியோ போட்டிருக்கிறார். கிடைத்தால் போடுகிறேன்.

ஆனால், ஒன்றை உறுதியாக சொல்கிறேன். ஸ்டாலின் வெற்றி இலகுவானதல்ல. எடப்பாடி மீண்டும் முதல்வராகலாம். பிஜேபி அதற்கு உதவும்.

 

இப்ப‌டியான‌ க‌ருத்து க‌ணிப்புக‌ள் உல‌க‌கில் வாழும் அனைத்து த‌மிழ‌ர்க‌ளும் தாங்க‌ள் விரும்பும் அர‌சிய‌ல் வாதிக‌ளுக்கு போட‌லாம் நாதா ?

நாம் த‌மிழ‌ர் க‌ட்சிக்கு 8 இருந்து 10 ச‌த‌வீத‌ வாக்கு கிடைக்கும் ?

புதிய‌த‌லைமுறை தொலைக் காட்ச்சி 2016 ச‌ட்ட‌ ம‌ன்ற‌ தேர்த‌லின் போது நாம் த‌மிழ‌ர் க‌ட்சி முன்னுக்கு நிப்ப‌தா மாயை உருவாக்கினார்க‌ள் ?

ஆனால் 1புள்ளி வாக்கு தான் நாம் த‌மிழ‌ர் க‌ட்சிக்கு கிடைச்ச‌து ?

2021ச‌ட்ட‌ ம‌ன்ற‌ தேர்த‌லில் ப‌ல‌ த‌மிழ‌க‌ அர‌சிய‌ல் ஆய்வாள‌ர்க‌ள் சொல்லின‌ம் சீமானுக்கு தான் அதிக‌ இளைஞ‌ர்க‌ளின் ஆத‌ர‌வு இருக்கு என்று , இது முற்றிலும் உண்மை , 2019 பாராள‌ம‌ன்ற‌ தேர்த‌லில் 17ல‌ச்ச‌ ஓட்டு கிடைசது , 2021ம் ஆண்டு ச‌ட்ட‌ ம‌ன்ற‌ தேர்த‌லில் 35ல‌ச்ச‌ ஓட்டை எதிர் பார்க்க‌லாம் ?

கொரோனா கால‌த்தில் ம‌ட்டும் க‌ட்சியில் ஒரு ல‌ச்ச‌ம் பேர் இணைந்து இருக்கின‌ம் ?

ஊட‌க‌ ப‌ல‌ம் ப‌ண‌ ப‌ல‌ம் இல்லாம‌ தேர்த‌ல‌ ச‌ந்திக்கிற‌ ஒரே க‌ட்சி என்றால் அது நாம் த‌மிழ‌ர் க‌ட்சி தான் ?

இன்னும் ஒரு மாத‌ம் இருக்கு தானே ? 
ந‌ல்ல‌ முடிவு வ‌ரும் டோன் வெறி குருநாதா 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
18 minutes ago, Nathamuni said:

ஆனால், ஒன்றை உறுதியாக சொல்கிறேன். ஸ்டாலின் வெற்றி இலகுவானதல்ல. எடப்பாடி மீண்டும் முதல்வராகலாம். பிஜேபி அதற்கு உதவும்.

ஒருவேளை சுடாலின்  வென்றாலும் இதே  பிஜேபியுடன் கூட்டு வைப்பார்கள் அவர்களுக்கு பதவி முக்கியமே ஒழிய தமிழக மக்களின் அபிலாசைகள் அல்ல .

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
21 minutes ago, பெருமாள் said:

கிருபன் யாராலுமே  இவர் இப்படி இந்த இடத்துக்கு வருவார் என்று சொல்லமுடியாது தோல்வி என்பது தெரிந்தே போட்டியிடுகிறார்கள் எனவே வாத்து முட்டை பற்றி கவலைப்படுவதில்லை .

ஆனால் யார் கண்டது அரவிந்த் கெஜ்ரிவால் இரு பெரும் மாபெரும் கட்சிகளை  பின் தள்ளி முன்னுக்கு வருவார் என்று .

மே 2ம் திக‌தி ப‌ல‌ர் வாய் அடைத்து போவின‌ம் பெருமாள் அண்ணா ?

முட்டை கிடைத்தாலும்  அடுத்த‌ க‌ட்ட‌  ந‌க‌ர்வை இன்னும் வேக‌மாக‌ க‌ள‌ப் ப‌ணி செய்ய‌ பெரிதும் உத‌வும் ? 

ஓட்டு என்னிக்கையில் பாராள‌ம‌ன்ற‌ தேர்த‌லில் கிடைத்த‌ ஓட்டை விட‌ இன்னொரு ம‌ட‌ங்கு அதிக‌ரிக்கும் ? ஜ‌மீன் 35ல‌ச்ச‌ ஓட்டு நாம் த‌மிழ‌ர் க‌ட்சிக்கு கிடைக்கும் ? 

அண்ண‌ன் சீமானுக்கு அடுத்து
நாம் த‌மிழ‌ர் க‌ட்சியில் ம‌க்க‌ள் ம‌த்தியில் பெரிதும் தெரிய‌ ப‌ட்ட‌து வேட்பாள‌ர் என்றால் அது அக்கா காளிய‌ம்மாள் , த‌ம்பி  இசை ம‌திவாண‌ன் ,
அக்கா கீதால‌ச்சுமி , த‌ம்பி வினோத் ? இப்ப‌டி சொல்லிட்டு போக‌லாம் ?

முன்பை விட‌ இந்த‌ முறை தேர்த‌ல் ப‌ணிய‌ க‌ட்சி பிள்ளைக‌ள் சிற‌ப்பாய் செய்யின‌ம் 🙏
 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, நிழலி said:

விசுகு,

மூன்றாவதாக வந்த கட்சி என்று என்று கூற முடியாது. இதில் இப்படி ஒரு கணிதம் இருக்கின்றது. 

திமுக கூட்டணி எனச் சொல்லும் போது அதில் காங்கிரஸ், வைகோ, விடுதலைச் சிறுத்தைகள் மற்றும் இன்னும் சில சிறு கட்சிகள் உள்ளன. அவ்வாறே அதிமுக வில் பா.ஜ.க, பா.ம.க வும் இன்னும் சில கட்சிகளும் உள்ளன.கமலின் கட்சி யில் சரத்குமாரின் கட்சி (எனக்கு இன்னும் இவர்கள் இருவரின் கட்சிகளின் பெயர் சரியாக எழுத வராது) கூட்டணியில் உள்ளது. தினகரனின் கட்சியுடன் கொமடிக் கட்சி விசயகாந்தின் கட்சி உள்ளது. இவர்களது வேட்பாளர்கள் பெறும் வாக்குகளின் அடிப்படையில் தேர்தலின் பின் வரிசைப்படுத்தினால், நா.க.த மூன்றாம் இடத்தில் வருவதற்கு வாய்புகள் இல்லை. 

ஒவ்வொரு கூட்டணியையும் தனித் தனி கட்சிகளாக கருதினால் மூன்றாவதாக வர கமலின் கட்சிக்கும் நா.க.த. இற்கும் நோட்டாவுக்கும் இடையில் போட்டி இருக்கும்.

நீங்கள் சொல்வது புரியாததல்ல 

ஆனால் நீங்கள் கீழே குறிப்பிடப்பட்டுள்ளது போன்று அனைத்து கட்சிகளும் தனித்தனியாக நின்றாலும் நிலைமை அது தான்.

இது தனித்து நின்று நாம் தமிழர் கட்சி சாதித்ததன் பயன்.

இது அதிகரிக்கவே வாய்ப்பிருக்கிறது. 

ஏனெனில் கூட்டால் கட்சிகளுக்கு ஏற்பட்டிருக்கும் பலமிழத்தலும் சிதைவுகளும் நாம் தமிழர் கட்சியை மேலும் வலுப்படுத்தும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நாம் தமிழர் வாக்கு 10 வீதத்துக்கு மேல் போகும்.

கடந்த தேர்தலிலும் குறைத்து மதிப்பிட்டார்கள்.
பார்ப்போம்.

Link to comment
Share on other sites

நாம் தமிழர் கட்சி 2019 ஆண்டு பாராளுமன்ற தேர்தலில் 3.88% (1,645,222) வாக்குகளை பெற்றது. 
இம்முறை அதை விட மிகக்குவைவான வாக்குகளையே பெறும். 
 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, zuma said:

நாம் தமிழர் கட்சி 2019 ஆண்டு பாராளுமன்ற தேர்தலில் 3.88% (1,645,222) வாக்குகளை பெற்றது. 
இம்முறை அதை விட மிகக்குவைவான வாக்குகளையே பெறும். 
 

அதுக்கு முந்திய தேர்தல்களில் எவ்வளவு நாம் தமிழர் கட்சிக்கு எவ்வளவு  கிடைத்தது என்று விளக்கமா அடித்து விடுகிறது .......நாங்களும் நாதா வின் வீழ்ச்சியை பார்த்து பரவசம் அடையலாம் தானே 😀.

உங்களால் அது முடியாது சாதரணமாகவே திரிகளில் பின்வாங்கினால்  அந்த பக்கமே தலை வைத்து படுப்பதில்லை இதில் கடந்த தேர்தலில் கிடைத்த வாக்கை எழுதிவிட்டு இம்முறை குறைவான வாக்குகளை பெறும்  திமுகா என்று நான் எழுதினால் இங்கு கெத கழிப்பிணம் பலர்  எனக்கு .

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, பெருமாள் said:

அதுக்கு முந்திய தேர்தல்களில் எவ்வளவு நாம் தமிழர் கட்சிக்கு எவ்வளவு  கிடைத்தது என்று விளக்கமா அடித்து விடுகிறது .......நாங்களும் நாதா வின் வீழ்ச்சியை பார்த்து பரவசம் அடையலாம் தானே 😀.

உங்களால் அது முடியாது சாதரணமாகவே திரிகளில் பின்வாங்கினால்  அந்த பக்கமே தலை வைத்து படுப்பதில்லை இதில் கடந்த தேர்தலில் கிடைத்த வாக்கை எழுதிவிட்டு இம்முறை குறைவான வாக்குகளை பெறும்  திமுகா என்று நான் எழுதினால் இங்கு கெத கழிப்பிணம் பலர்  எனக்கு .

அது அவ‌ர் எம்மை வெறுப்பு ஏத்த‌ எழுதின‌து ?

தேர்த‌ல் முடிந்த‌தும் புது ஜ‌டியில் வ‌ந்து எழுதுவார் அல்ல‌து நாம் த‌மிழ‌ர் க‌ட்சியின் அசுர‌ வ‌ள‌ர்சியை பார்த்து என்ன‌ செய்வ‌து என்று தெரியாம‌ குழ‌ம்பி போய் நிப்பார் பெருமாள் அண்ணா ?

நான் மேல‌ வ‌டிவாய் விப‌ர‌மாய் எழுதி இருக்கிறேன் , என்ற‌ க‌ணிப்பை போல‌ தான் ஈழ‌ப்பிரிய‌ன் அண்ணாவும் கணித்து இருக்கிறார் , 

நாம் த‌மிழ‌ர் தேர்த‌ல் க‌ள‌ நில‌வ‌ர‌ம் நாம் ப‌ல‌ வ‌ழிக‌ளில் அறிகிறோம் ?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, zuma said:

நாம் தமிழர் கட்சி 2019 ஆண்டு பாராளுமன்ற தேர்தலில் 3.88% (1,645,222) வாக்குகளை பெற்றது. 
இம்முறை அதை விட மிகக்குவைவான வாக்குகளையே பெறும். 
 

இந்தா.... வந்துட்டாரய்யா, வந்துட்டாரு...

காணேல்ல, என்று பதறி போனோம்.

சரி, அந்த அலுவல் நல்ல படியா முடிஞ்சுதா? ஆ.... ஆ.. முடிச்சு இருக்கும். இல்லேன்னா.... எதுக்கு, இந்த பக்கம் வாறீங்கோ? 😁

குறைவா, வாக்கு பெறும் என்று, 'ஸ்டாலின் கணக்கு' தானே பார்த்தீங்க? 🤪

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, zuma said:

நாம் தமிழர் கட்சி 2019 ஆண்டு பாராளுமன்ற தேர்தலில் 3.88% (1,645,222) வாக்குகளை பெற்றது. 
இம்முறை அதை விட மிகக்குவைவான வாக்குகளையே பெறும். 
 

 

Link to comment
Share on other sites

நான் தமிழர் கட்சியின் வாக்கு சதவீதம் அதிகரிக்கும்  5-6 வீதமாக வரலாம் 
சில கணிப்பீடுகள் ஒரு அல்லது இரண்டு ஆசனங்களிற்கு வாய்ப்பு என சொல்கின்றது எனக்கு நம்பிக்கை இல்லை பார்க்கலாம் 
இந்த முறை திமுக தான் வரும் என அதும் 200  அளவான ஆசனங்களுடன் வர கூடுமென கணிப்பீடுகள் வர தொடங்கி உள்ளன சமூக வலைத்தளங்களில் திமுகவினரின் அலப்பறைகள் தாங்க முடியவில்லை 

Link to comment
Share on other sites

8 hours ago, zuma said:

நாம் தமிழர் கட்சி 2019 ஆண்டு பாராளுமன்ற தேர்தலில் 3.88% (1,645,222) வாக்குகளை பெற்றது. 
இம்முறை அதை விட மிகக்குவைவான வாக்குகளையே பெறும். 
 

ஆடு மாடு வளர்த்தல் அரசுப்பணியா?

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
Link to comment
Share on other sites

 

No photo description available.

மூலம் :
  1.  Bureau, ABP News (18 January 2021). "ABP-CVoter Election 2021 Opinion Poll LIVE: People In Bengal Satisfied With Mamata, TMC To Regain Power". ABP Live. Retrieved 18 January 2021.
  2. Bureau, ABP News (27 February 2021). "ABP-CVoter Election 2021 Opinion Poll LIVE: UPA Alliance Predicted To Shine In Tamil Nadu; Voters Mood Not In Favour Of BJP, MNM". ABP Live. Retrieved 18 January 2021.
  3.  "ABP CVoter Opinion Poll 2021". ABP Website.
  4. Puthiyathalaimurai News - APT Opinion Poll 2021". PuthiyathalaimuraiTV.
  5.  "Spick Media MCV Network Opinion Poll 2021". SpickMedia.
  6. "Tweet". Twitter.  Times Now.
  7.  "Tweet". Twitter. Democracy Times Network.

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அண்ண‌ன் சீமான் போட்டியிடும் தொகுதியில் வெற்றிக்கு அருகில் 

இன்னும் தேர்த‌ல் ப‌ணிய‌ வேக‌மாக‌ செய்தால் வெற்றி பெருவ‌து உறுதி 🙏

20210328-142647.png 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

உண்மையில் சீமான் அதிக வாக்குகளைப் பெற்றிருந்தாலும்2வது அல்லது 3 வது இடத்தில்தான் வைத்திருப்பார்கள். இது **** ஊடகங்களின் கருத்துத்திணிப்பு.பிரசாந் கிசோரின் திட்டங்களில் ஊடகங்களுக்கு பணம் கொடுத்து பொய்யான கருத்துத்திணிப்பை உசய்வதும் ஒரு அங்கமே. புதிய தலைமுறையில் திமுகவின் வெற்றிக்கு என்ன காரணம் என்ற கேள்வியே எங்கப்பன் குதிருக்குள் இல்லை என்ற மாதிரி அவர்களின் திட்டத்தை செளிச்சம் போட்டுக் காட்டியிருக்கிறது.சீமான் 3வது சக்தியாக நிச்சயம் வருவார்.தினகரனின் கட்சி வாக்குகளைப் பிரிக்காவிட்டால் அதிமுக வே வெற்றி பெறக்கூடிய ஷழரல் இருந்திருக்கும். பாமர மனிதனாக இருக்கும் எடப்பாடியின் ஆட்சியை  கறைகள் பெரிய அளவில் இல்லை. தினகரன் பிளவும் 10 ஆண்டுகளாக தொடர்ந்து ஆட.சியில் இருப்பதால் ஒரு மாற்றம் வேண்டும் என்று வாக்களிப்பதால் திமுகவுக்கு சார்பான நிலை வரலாம். ஆனால் பல இடங்களில் கடும் போட்டி இருக்கும்.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • கொதிக்கும் காய்ச்சலுடன், தாயின் முன்னிலையில் கண்ணீரை வென்ற ‘சஞ்சுமல் பாய்ஸ்’ வீரர் பட மூலாதாரம்,GETTY IMAGES கட்டுரை தகவல் எழுதியவர், க.போத்திராஜ் பதவி, பிபிசி தமிழுக்காக 29 மார்ச் 2024, 03:25 GMT புதுப்பிக்கப்பட்டது ஒரு மணி நேரத்துக்கு முன்னர் ஒவ்வொரு அணியிலும் ஒரு ரியல் ஹீரோ இருப்பார். அனைத்து நேரங்களிலும் அவர்களின் உதயம் இருக்காது, தேவைப்படும் நேரத்தில் அவர்களின் எழுச்சி அணியை வெற்றிக்கு அழைத்துச் செல்லும். அந்த வகையில் “சஞ்சுமெல் பாய்ஸ்” என்று அழைக்கப்படும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு நேற்றைய ஆட்டத்தில் ரியல் ஹீரோவாக ஒளிர்ந்தவர் ரியான் பராக் மட்டும்தான். ஜெய்ப்பூரில் நேற்று நடந்த ஐபிஎல் டி20 தொடரின் 9-வது லீக் ஆட்டத்தில் டெல்லி கேபிடல்ஸ் அணியை 12 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி 2ஆவது வெற்றி பெற்றது ராஜஸ்தான் ராயல்ஸ் அணி. முதலில் பேட் செய்த ராஜஸ்தான் ராயல்ஸ் 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 185 ரன்கள் சேர்த்தது. 186 ரன்கள் சேர்த்தால் வெற்றி எனும் இலக்குடன் களமிறங்கிய டெல்லி கேபிடல்ஸ் அணி 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 173 ரன்கள் சேர்த்து 12 ரன்களில் தோல்வி அடைந்தது. இந்த வெற்றியின் மூலம் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி சொந்த மைதானத்தில் இந்த சீசனில் தொடர்ந்து 2ஆவது வெற்றியைப் பெற்றுள்ளது. முதல் வெற்றி பெற்றவுடன் நிகர ரன்ரேட்டை ஒன்று என வைத்திருந்த ராஜஸ்தான், 2 வெற்றிகளில் 4 புள்ளிகள் பெற்றும் நிகர ரன்ரேட் 0.800 புள்ளியாகக் குறைந்துவிட்டது. டெல்லி கேபிடல்ஸ் அணி அடுத்தடுத்து இரு தோல்விகளைச் சந்தித்துள்ளது. இதனால் இன்னும் புள்ளிக்கணக்கைத் தொடங்க முடியாமல், நிகர ரன்ரேட்டும் மைனஸ் 528ஆக பின்தங்கியுள்ளது. இந்த ஆட்டத்தில் ரியல் ஹீரோவாக ஜொலித்தவர் ரியான் பராக் (45 பந்துகளில் 84 ரன்கள் 6சிக்ஸர்கள், 7பவுண்டரிகள்) மட்டும்தான். ஒரு கட்டத்தில் டெல்லி கேபிடல்ஸ் அணி 3 விக்கெட் இழப்புக்கு 36 ரன்கள் என்று இக்கட்டான நிலையில் தடுமாறியது. ஆனால், 4வது பேட்டராக களமிறங்கிய ரியான் பராஸ், அஸ்வினுடன் ஜோடி சேர்ந்து 54 ரன்கள் பார்ட்னர்ஷிப்பும், ஜூரெலுடன் சேர்ந்து 52 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து அணிக்கு கவுரமான ஸ்கோரை பெற்றுக் கொடுத்தார்.   பட மூலாதாரம்,GETTY IMAGES ஒரு கட்டத்துக்கு மேல் அதிரடி ஆட்டம்தான் ஸ்கோரை உயர்த்த கை கொடுக்கும் என்பதை அறிந்த ரியான் பராக் டெல்லி பந்துவீச்சாளர்களை வெளுக்கத் தொடங்கினார். ஒரு கட்டத்தில் 20 பந்துகளில் 16 ரன்கள் என்று மெதுவாக ஆடிய பராக் அதன்பின் பேட்டை சுழற்றத் தொடங்கினார். பராக் தான் சந்தித்த கடைசி 19 பந்துகளில் மட்டும் 58 ரன்களைச் சேர்த்தார். அதிலும் அதிவேகப்பந்துவீச்சாளர் நோர்க்கியா வீசிய கடைசி ஓவரில் மட்டும் 6 சிக்ஸர்கள், 3 பவுண்டரிகள் என 25 ரன்களை பராக் சேர்த்தார். ராஜஸ்தான் அணியை ஒற்றை பேட்டராக கட்டி இழுத்து பெரிய ஸ்கோருக்கு கொண்டு வந்த ரியான் பராக் ஆட்டநாயகனாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். கடந்த 3 சீசன்களிலும் ரியான் பராக் பெரிதாக ஸ்கோர் செய்யவில்லை. கடந்த சீசனில் 7 இன்னிங்ஸில் பராக் சேர்த்தது வெறும்78 ரன்கள்தான், 2022ம் ஆண்டு சீசனில் பராக் 14 இன்னிங்ஸ்களில் 148 ரன்கள் சேர்த்தார், 2021 சீசனில் 10 இன்னிங்ஸ்களில் 93 ரன்கள் என பராக் பேட்டிங் மோசமாகவே இருந்தது. இதனால் அணியில் இருந்தாலும் பல போட்டிகளில் ப்ளேயிங் லெவனில் இடம் பெறவில்லை. ஆனால், கடந்த ஆண்டில் உள்நாட்டுப் போட்டிகளில் ரியான் பாராக் தீவிரமான ஆட்டத்தால் கிடைத்த அனுபவம் ஆங்கர் ரோல் எடுத்து அணியை இக்கட்டான நிலையில் இருந்து மீ்ட்டுள்ளது. 2024 சீசன் தொடங்கியதில் இருந்தே பராக்கின் பேட்டிங்கில் முதிர்ச்சியும், பொறுப்புணர்வும் அதிகம் இருந்ததைக் காண முடிந்தது. முதல் ஆட்டத்திலும் கேப்டன் சஞ்சுவுடன் சேர்ந்து பராக் 93 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தது பெரிய ஸ்கோருக்கு கொண்டு சென்றது. அந்த ஆட்டத்திலும் பராக் 29 பந்துகளில் 43 ரன்கள் சேர்த்தார். இரு போட்டிகளிலும் தன்னுடைய ஆட்டத்தின் முதிர்ச்சியை, பொறுப்புணர்வை பராக் வெளிப்படுத்தியுள்ளார். அது மட்டுமல்லாமல் கடந்த 3 நாட்களாக ரியான் பராக்கிற்கு கடும் காய்ச்சல், உடல்வலி இருந்துள்ளது.ஆனால், மாத்திரைகளை மட்டும் உட்கொண்டு, அந்த உடல் களைப்போடு நேற்றைய ஆட்டத்தில் பராக் விளையாடினார் என ராஜஸ்தான் நிர்வாகம் தெரிவித்துள்ளது.   பட மூலாதாரம்,GETTY IMAGES தாயின் முன் சிறப்பாக ஆடியது மகிழ்ச்சி ஆட்டநாயகன் விருது வென்ற ரியான் பராக் பேசுகையில் “ என்னுடைய உணர்ச்சிப் பெருக்கு அடங்கிவிட்டது, என்னுடைய தாய் இந்த ஆட்டத்தை இங்கு வந்து நேரில் பார்த்தால் அவர் முன் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி இருக்கிறேன். என்னை இங்கு கொண்டுவருவதற்கு அவர் பல போராட்டங்களை சந்தித்துள்ளார். நான் சிறப்பாக ஆடுகிறேனோ இல்லையோ, என்னுடைய திறமை என்னவென்று எனக்குத் தெரியும், அதை ஒருபோதும் மாற்றியதில்லை. உள்நாட்டுப் போட்டிகளில் அதிகமான போட்டிகளில் பங்கேற்றேன், அதிகமான ரன்களும் குவித்தேன். டாப்-4 பேட்டராக வருபவர் ஆட்டத்தை கடைசிவரை எடுத்துச் செல்ல வேண்டும் அதை செய்திருக்கிறேன். முதல் ஆட்டத்தில் கேப்டன் சஞ்சுவுடன் சேர்ந்து நல்ல பார்ட்னர்ஷிப் அமைத்தேன். இன்று சஞ்சு செய்த பணியை நான் செய்தேன். நான் 3 நாட்களாக உடல்நிலை சரியில்லாமல் மருத்துவமனையில் இருந்தேன். இந்த ஆட்டத்துக்காக கடினமாக உழைத்துள்ளேன். என்னால் விளையாட முடியும் என மனதை தயார் செய்து பேட் செய்தேன்” எனத் தெரிவித்தார். ஆட்டத்தை திருப்பிய பந்துவீச்சாளர்கள் ஒரு கட்டத்தில் ஆட்டம் டெல்லி கேபிடல்ஸ் கையில்தான் இருந்தது. அதை அவர்களிடம் இருந்து பறித்தது ராஜஸ்தான் பந்துவீச்சாளர்கள்தான். கடைசி 5 ஓவர்களில் டெல்லி வெற்றிக்கு 60 ரன்கள் தேவைப்பட்டது. 16-வது ஓவரை வீசிய சஹல் 6 ரன்கள் மட்டுமே கொடுத்து அபிஷேக் போரெல் விக்கெட்டை கைப்பற்றினார். அஸ்வின் வீசிய 17-வது ஓவரில் டெல்லி பேட்டர் ஸ்டெப்ஸ் 2 சிக்ஸர்கள் உள்பட 19 ரன்கள் சேர்த்தால் ஆட்டம் பரபரப்பானது. ஆவேஷ் கான் 18-வது ஓவரை வீசியபோது, ஸ்டெப்ஸ் ஒரு பவுண்டரி உள்பட 9 ரன்களைச் சேர்த்து அணியை வெற்றி நோக்கி நகர்த்தினார். கடைசி இரு ஓவர்களில் டெல்லி வெற்றிக்கு 32 ரன்கள் தேவைப்பட்டது. சந்தீப் சர்மா வீசிய 19-வது ஓவரில் முதல் இருபந்துகளில் பவுண்டரி, சிக்ஸர் என ஸ்டெப்ஸ் பறக்கவிட்டதால் ஆட்டம் டெல்லி பக்கம் சென்றது.அந்த ஓவரில் டெல்லி 15 ரன்கள் சேர்த்தது. கடைசி ஓவரில் டெல்லி வெற்றி பெற 17 ரன்கள் தேவைப்பட்டது.   பட மூலாதாரம்,GETTY IMAGES டெத்ஓவர் ஸ்பெஷலிஸ்ட் கடந்த முதல் ஆட்டத்திலும் டெத் ஓவரில் கடைசி ஓவரை ஆவேஷ்கான் வீசி வெற்றி தேடித்தந்ததால் இந்த முறையும் கேப்டன் சஞ்சு, ஆவேஷ் கானை பயன்படுத்தினார். கடைசி ஓவரை ஆவேஷ்கான் மிக அற்புதமாக வீசினார். நல்ல ஃபார்மில் இருந்த ஸ்டெப்ஸை ஒரு பவுண்டரி, சிக்ஸர்கூட அடிக்கவிடாமல், 3 பந்துகளை அவுட்சைட் ஆஃப்ஸ்டெம்பிலும் வீசினார். 4வது பந்தை ஸ்லாட்டில் வீசியும் ஸ்டெப்ஸ் அடிக்கவில்லை. 5-வது பந்தை ஃபுல்டாசாகவும், கடைசிப்பந்தில் ஃபுல்டாசாக வீசி டெல்லி பேட்டர்களை கட்டிப்போட்டார் ஆவேஷ் கான். அதிரடியாக ஆடிய அஸ்வின் நெருக்கடியான கட்டத்தில் பேட்டிங் வரிசையில் தரம் உயர்த்தப்பட்டு நடுவரிசையில் அஸ்வின் நேற்று களமிறக்கப்பட்டார். ரியான் பராக்கிற்கு நல்ல ஒத்துழைப்பு அளித்து அஸ்வின் ஸ்ட்ரைக்கை மாற்றி, 54 ரன்கள் பார்ட்னர்ஷிப்பும் அமைத்துக் கொடுத்தார். ரியான் பராக் தன்னுடைய முதல்பாதி இன்னிங்ஸில் ரன் சேர்க்க திணறினார், ஆனால் அஸ்வின் அனாசயமாக 3 சிக்ஸர்களை வெளுத்தார். குறிப்பாக குல்தீப், நோர்க்கியா ஓவர்களில் அஸ்வின் 3 சிக்ஸர்களைப் பறக்கவிட்டார். அஸ்வின் அடித்த திடீர் சிக்ஸால்தான் ராஜஸ்தான் ரன்ரேட் 6 ரன்களைக் கடந்தது. அஸ்வின் தன்னுடைய பணியில் சிறிதும் குறைவி்ல்லாமல் சிறிய கேமியோ ஆடி 19 பந்துகளில் 29 ரன்கள் சேர்த்து பெவிலியன் சென்றார்.   பட மூலாதாரம்,GETTY IMAGES டெல்லிக்கு தொல்லையாகிய சஹல் ராஜஸ்தான் அணி தொடக்கத்திலேயே பர்கர், போல்ட் இருவருக்கும் 6 ஓவர்களை வீசச் செய்து பவர்ப்ளேயோடு முடித்துவிட்டது. இதனால் 14 ஓவர்கள்வரை நல்ல ஸ்கோர் செய்யலாம் என டெல்லி பேட்டர்கள் நினைத்திருக்கலாம். டேவிட் வார்னரும் களத்தில் இருந்தார். ஆனால், ஆவேஷ் கான் ஆஃப் சைடில் விலக்கி வீசி வார்னரை அடிக்கச் செய்து ஆட்டமிழக்கச் செய்தார். மிக அருமையாக பந்துவீசிய சஹல் இரு இடதுகை பேட்டர்களான கேப்டன் ரிஷப் பந்த், போரெல் இருவரையும் வெளியேற்றினார். 4 ஓவர்கள் வீசிய சஹல் 19 ரன்கள் கொடுத்து ஒரு விக்கெட்டை வீழ்த்தினார், இவரின் பந்துவீச்சில் ஒரு சிக்ஸர் மட்டுமே அடிக்க முடிந்தது, பவுண்டரி ஒன்றுகூட அடிக்கவில்லை. சஹல் 7 டாட் பந்துகளையும் வீசியதை கணக்கிட்டால் 2 ஓவர்களில்தான் சஹல் 19 ரன்களை வழங்கியுள்ளார். இரு முக்கியமான பேட்டர்களை சஹல் தனது பந்துவீச்சின் மூலம் வெளியேற்றியது டெல்லி அணிக்கு பெரிய பின்னடைவாக மாறியது. நடுங்கவைத்த பர்கர் ராஜஸ்தான் அணிக்கு இந்த சீசனில் கிடைத்த பெரிய பலம் டிரென்ட் போல்ட், ஆன்ட்ரூ பர்கர் ஆகிய இரு இடதுகை வேகப்பந்துவீச்சாளர்கள்தான். போல்ட் இந்த ஆட்டத்தில் விக்கெட் ஏதும் எடுக்காவிட்டாலும், பர்கர் இரு விக்கெட்டுகளை வீழ்த்தினார். அதிலும் ரிக்கி புயிக்கு பர்கர் வீசிய பவுன்ஸர் சற்று தவறியிருந்தால் ஹெல்மெட்டை பதம் பார்த்திருக்கும், ஆனால், கிளவ்வில் பட்டு சாம்சனிடம் கேட்சானது. அதேபோல நல்ல ஃபார்மில் இருந்த மார்ஷ்(23) விக்கெட்டையும் பர்கர் தனது அதிவேகப்பந்துவீச்சில் வீழ்த்தினார். தொடக்கத்திலேயே மார்ஷ், ரிக்கி புயி விக்கெட்டுகளை வீழ்த்தி டெல்லிக்கு பெரிய சேதாராத்தை பர்கர் ஏற்படுத்தினார். மணிக்கு சராசரியாக 148கி.மீ வேகத்தில் பந்துவீசும் பர்கர், பெரும்பாலான பந்துகளை துல்லியமாக, லைன் லென்த்தில் கட்டுக்கோப்பாக வீசுவது ராஜஸ்தான்அணிக்க பெரிய பலம்.   பட மூலாதாரம்,GETTY IMAGES வாய்ப்புகளை தவறவிட்ட டெல்லி அணி டெல்லி அணி பந்துவீச்சிலும்சரி, பேட்டிங்கிலும் சரி கிடைத்த வாய்ப்புகளை சரியாகப் பயன்படுத்தி இருந்தால் வெற்றி கிடைத்திருக்கும். பந்துவீச்சில் தொடக்கத்திலேயே ராஜஸ்தான் பேட்டர்கள் ஜெய்ஸ்வால்(5), பட்லர்(11), சாம்ஸன்(15) என 3 முக்கிய பேட்டர்களையும் முகேஷ் குமார், குல்தீப், கலீல் அகமது வீழ்த்திக் கொடுத்தனர். இந்த நெருக்கடியை தொடர்ந்து ஏற்படுத்தி தக்கவைத்திருந்தால், ராஜஸ்தான் அணி ஸ்கோர் 120 ரன்களை கடந்திருக்காது. 14 ஓவர்கள் வரை ராஜஸ்தான் அணி 100 ரன்களைக் கூட கடக்கவில்லை. ஆனால், கடைசி 5 ஓவர்களில் அதிலும் டெத் ஓவர்ளில் டெல்லி பந்துவீச்சு மோசமானதை, பராக் பயன்படுத்தி வெளுத்து வாங்கினார். கலீல் அகமது, அக்ஸர் படேல் தவிர எந்தப் பந்துவீச்சாளரும் வாய்ப்பைப் பயன்படுத்தவில்லை. அதேபோல பேட்டிங்கிலும், பவர்ப்ளேயில் 59 ரன்களும், 12 ஓவர்களில் 100 ரன்களை எட்டி டெல்லி அணி வெற்றி நோக்கி சீராக சென்றது. ஆனால், ஒரு கட்டத்தில் ரிஷப் பந்த், போரெல், வார்னர் ஆகியோர் 25 ரன்களுக்குள் அடுத்தடுத்து ஆட்டமிழந்தது டெல்லிக்கு பின்னடைவாக மாறியது. கடைசி 5 ஓவர்களில் 60 ரன்களை எட்டுவதற்கும் ஸ்டெப்ஸ் கடுமையாக முயன்று வெற்றிக்கு அருகே கொண்டு சென்றார். ஸ்டெப்ஸுடன் நல்ல பவர் ஹிட்டர் பேட்டர் இருந்தால் ஆட்டம் திசைமாறியிருக்கும். டெல்லி அணியில் வார்னர்(49), ஸ்டெப்ஸ்(44) தவிர எந்த பேட்டரும் பெரிதாக ஸ்கோர் செய்யவில்லை. https://www.bbc.com/tamil/articles/clm7pvlmprko
    • Published By: DIGITAL DESK 3   29 MAR, 2024 | 09:47 AM   உலகில் வாழும் கிறிஸ்தவர்கள் இன்று யேசுக்கிறிஸ்துவின் பாடுகள், மரணத்தை நினைவு கூர்ந்து புனித வெள்ளியை அனுஷ்டித்து வருகின்றனர். இயேசுவின் மறைவு புனித வெள்ளியாக இன்று அனுசரிக்கப்படுகிறது. அவர் உயிர்த்தெழுந்த நாள் 'ஈஸ்டர்' ஞாயிறாக அனுஷ்டிக்கப்படுகின்றது. யேசுக்கிறிஸ்து இறந்தது துக்க நிகழ்வு என்றாலும், அதனால் மனித குலத்திற்கு விளைந்த நன்மைகளை வைத்தே 'புனித வெள்ளி' என்றழைக்கின்றனர் கிறிஸ்தவர்கள். வரலாற்றில் முக்கிய நிகழ்வான இயேசு கிறிஸ்துவின் பாடுகள், மரணம், உயிர்ப்பை உலகளவில் கிறிஸ்தவர்கள் நினைவு கூர்ந்து வருகின்றனர். அந்தவகையில் இயேசு கிறிஸ்து உயிர்விட்ட நாளை இன்று உலகிலுள்ள அனைத்து கிறிஸ்தவர்களும் இன்று 'பெரிய வெள்ளி'யாக நினைவு கூருகின்றனர். பெரிய வெள்ளி, புனித வெள்ளி, Good Friday என்று சொல்லும் போதே இயே­சுவின் மர­ணம் தான் சர்வ உலக மக்களின் நினை­விலும் வரும். அந்த நாளுக்கு பெரி­ய­வர்கள் அல்­லது முன்­னோர்கள் சரி­யாக பெய­ரிட்­டுள்­ளனர். நல்ல வெள்ளி, புனித வெள்ளி, எல்லா வெள்­ளி­க­ளிலும் பெரிய வெள்ளி என்று மிகவும் பொருத்­த­மா­கவே பெய­ரிட்­டுள்­ளனர். ஆனால், அந்த பெயர்­களின் அடிப்­ப­டையில் அந்த நாள் அனுஷ்­டிக்­கப்­ப­டு­கின்­றதா என்று கேட்டால் இல்லை என்­றுதான் சொல்­ல­வேண்டும். ஒரு கெட்ட மனி­த­னு­டைய மர­ண­மா­யி­ருந்­தாலும் அதற்கு அனு­தா­பப்­ப­டு­கிற உல­கமே நாம் வாழும் இவ்­வு­லகம். ஒரு மனி­த­னுக்கும் தீங்கு நினை­யாமல் எல்லா மனித வாழ்­விலும் நன்மை செய்த தேவ­கு­மாரன் இயே­சுவின் மரண நாளுக்கு வைக்­க­வேண்­டிய பெயரை வைக்­காமல் அந்த நாளுக்கு நல்ல நாள் என்றும், புனித நாள் என்றும், பெரிய நாள் என்றும் ஏன் பெய­ரிட்­டார்கள்? ஆம் பிரி­ய­மா­ன­வர்­களே, இந்த நாள் உல­கத்­தி­லுள்ள எல்லா மனி­தர்­க­ளுக்கும் நல்ல நாள். ஏனென்றால், ஜீவ கால­மெல்லாம் மரண பயத்­தி­னாலே அடி­மைத்­த­னத்­திற்­குள்­ளா­ன­வர்கள் யாவ­ரையும் விடு­தலை பண்­ணும்­ப­டிக்கு தேவ­கு­மா­ரனாம் இயேசு சர்­வத்­தையும் படைத்­தவர், சர்­வத்­தையும் ஆளுகை செய்ய வேண்­டி­யவர். பிள்­ளைகள் மாமி­சத்­தையும் இரத்­தத்­தையும் உடை­ய­வர்­க­ளா­யி­ருக்க அவரும் நம்­மைப்போல் மாமி­சத்­தையும் இரத்­தத்­தையும் உடை­ய­வ­ராகி மர­ணத்தின் அதி­ப­தி­யா­கிய பிசா­சா­ன­வனை தம்­மு­டைய மர­ணத்­தினால் அழிக்கும் படிக்கும், நம்மை மரண பயத்­தி­லி­ருந்து விடு­விக்­கும்­ப­டிக்கும் மர­ணத்­துக்­கே­து­வான ஒன்றும் அவ­ரிடம் காணப்­ப­டாத போதும், மரணம் மனித வாழ்வில் பயத்­தையோ அடி­மைத்­த­னத்­தையோ கொடுக்­கக்­கூ­டாது என்று காண்­பிக்கும் படிக்கும் மர­ணத்தை ஏற்றுக் கொண்டார். பிரி­ய­மா­ன­வர்­களே, இந்த உலகில் வாழும் எல்லா மனி­த­னுக்கும் மரணம் என்­பது மாமி­சத்­துக்கும் இரத்­தத்­துக்­கும்தான். நம்­மு­டைய ஆவி, ஆத்­து­மா­வுக்­கல்ல. சரீ­ரத்தில் இரத்த ஓட்டம் நின்று சரீரம் செய­லற்றுப் போவ­துதான் மரணம். எனவே பரி­சுத்த வேதா­கமம், ‘ஆத்­து­மாவைக் கொல்ல வல்­ல­வர்­க­ளா­யி­ராமல், சரீ­ரத்தை மாத்­திரம் கொல்­லு­கி­ற­வர்­க­ளுக்கு நீங்கள் பயப்­பட வேண்டாம்; ஆத்­து­மா­வையும் சரீ­ரத்­தையும் நர­கத்­திலே அழிக்க வல்­ல­வ­ருக்கே பயப்­ப­டுங்கள்’ (மத் 10:28) என்று சொல்­கி­றது. மேலே சொல்­லப்­பட்­ட­து­போல மரண பயத்­தினால் பிசா­சா­னவன் யாவ­ரையும் அடி­மைப்­ப­டுத்­தி­யி­ருந்தான். நம் இயேசு சிலுவை மர­ணத்தை ஏற்றுக் கொண்டு உல­கி­லுள்ள எல்லா மனி­தர்­க­ளுக்கும் ‘இவ்­வு­லகில் மரணம் என்­பது வெறும் சரீ­ரத்­திற்கே சொந்­த­மா­னது’ என்ற உண்­மையை தெளி­வு ­ப­டுத்­தினார். எனவே உல­கத்­தி­லுள்ள எந்த மனு­ஷனும் மனு­ஷியும் இயே­சுவின் மர­ணத்தை ஏற்றுக் கொள்ளும் போது, மரண பயத்­திற்கு நீங்­க­லாகி பிசாசின் அடி­மைத்­த­னத்­திற்கு நீக்­க­லாக்­கப்­ப­டு­கி­றார்கள். ஆக­வேதான் அதை நல்ல வெள்ளி (Good Friday) என்று உலகம் அழைக்­கி­றது. அடுத்து புனித வெள்ளி என்று ஏன் சொல்­லு­கிறோம்? தேவன் மனி­தனை தம்­மைப்போல் வாழும்­ப­டி­யாயும், பரி­சுத்த சந்­த­தியை உரு­வாக்­கும்­ப­டி­யாயும் படைத்தார். ஆனால் முதல் மனிதன் ஆதாமின் கீழ்­ப­டி­யாமை, மீறு­த­லினால் உல­கத்தில் பாவம் வந்­தது. எல்லா மனி­தர்­க­ளையும் பாவம் ஆளுகை செய்­தது. ஒரு மனித வாழ்­விலும் புனிதம் (பரி­சுத்தம்) இல்லை. பாவம் கழு­வப்­ப­ட­வில்லை. ‘இரத்தம் சிந்­து­த­லினால் மாத்­தி­ரமே பாவப்­பி­ரா­யச்­சித்தம் உண்டு’ என்­பது உலகில் வாழும் அநே­க­மானோர் ஏற்றுக் கொள்ளும் ஒன்று. ஆகவே, தேவ­னு­டைய ஆதி விருப்­பத்­தின்­படி இயேசு சிலு­வையில் சிந்­திய இரத்தம் மாத்­தி­ரமே மனித வாழ்வின் பாவத்தை கழுவி பரி­சுத்­த­மாக்­கி­யது. இரண்டாம் ஆதாம் என்று அழைக்­கப்­படும் இயே­சுவின் கீழ்­ப­டிதல், தாழ்­மையின் மூலம் உலகில் கிரு­பையும், சத்­தி­யமும் வந்­தது. யார் இயேசு மூலம் வந்த கிரு­பையைக் கொண்டு சத்­தி­யத்தை பின்­பற்­று­கி­றார்­களோ அவர்கள் வாழ்வில் கீழ்­ப­டிவும், தாழ்­மையும் காணப்­படும். இயே­சுவின் கீழ்­ப­டிவும் தாழ்­மையும் முழு­மையாய் கல்­வாரி சிலு­வையில் காட்­டப்­ப­டு­கி­றது. இயேசு அங்கே சிந்­திய இரத்­தத்­தி­னால்தான் நாம் பரி­சுத்­த­மாக்­கப்­பட்டோம். ஆக­வேதான் புனித (பரி­சுத்த) வெள்ளி என்று அந்நாள் போற்­றப்­ப­டு­கி­றது. பிரி­ய­மா­ன­வர்­களே, எத்­த­னையோ வெள்­ளிக்­கி­ழ­மைகள் இருக்க இந்­நாளை மட்டும் ஏன் பெரிய வெள்ளி என்று சொல்­கிறோம்? இந்த நாள் மனித வாழ்வில் மரண பயத்தை நீக்கி, அடி­மைத்­தன நுகத்தை முறித்து, மனித வாழ்வில் சாப­மாக வந்த பாவத்தைக் கழுவி, ஆசிர்­வா­தத்தை உண்­டாக்கி, மனி­தனை சிந்­தனை செய்ய வைத்த நாள். இது துக்­கத்தின் நாளும் அல்ல, சந்­தோ­ஷத்தின் நாளும் அல்ல. இது அர்ப்­ப­ணிப்பின், தீர்­மா­னத்தின் நாள். இயே­சுவின் மர­ணத்தில் நம்மை பங்­குள்­ள­வர்­க­ளாக்கும் நாள். நம்­மு­டைய பாவ, சாப, தரித்­திர, மரண வல்­ல­மையை முறி­ய­டித்த நாள். நாம் நம் இயே­சுவின் மர­ணத்தை ஏற்று அதில் நாம் பங்­கு­டை­ய­வர்­க­ளா­கிறோம் என்­ப­துதான் நம் வாழ்வில் நாம் எடுத்த தீர்­மா­னங்­களில் மிகவும் பெறு­ம­தி­யான, விலை­ம­திக்க முடி­யாத தீர்­மானம். நம் வாழ்வில் நாம் எடுக்கும் வெற்றியான தீர்மானத்தின் நாள்தான் நம் வாழ்வின் பெரிய நாளாய் இருக்கும். ஆகவே, இந்த நாள் நல்ல, புனித, பெரிய நாளாய் என் வாழ்வில் அமைந்துள்ளது. உங்கள் வாழ்விலும் அமைய இயேசுவோடு கூட நீங்கள் சிலுவையில் அறையப்பட உங்களை ஒப்புக் கொடுக்கும் தீர்மானம்; உங்கள் பாவ, சாப, பலவீனங்களை சிலுவையில் அறைந்து இயேசுவின் தேவ, தூய பண்புகளை உங்கள் வாழ்வில் கொண்டு வரும். இந்நிலையில், இலங்கையைப் பொருத்தவரையில் மக்கள் பொருளாதார நெருக்கடியில் சிக்கித் தவித்து வருகின்ற நிலையில், கிறிஸ்தவர்கள் புனித வாரத்தை அனுஷ்டிக்கின்றனர். மக்கள் தற்போது எதிர்நோக்கியுள்ள இன்னல்களில் இருந்து விடுபட அனைவரும் பிரார்த்திப்போமாக ! சிலுவையைப் பெற்றுக் கொள்வோம்! ஜெயமாய் வாழ்வோம்! ஆமென்! பெரிய வெள்ளிக்கிழமையை முன்னிட்டு கொழும்பு-13 புதுச்செட்டித் தெரு புனித வியாகுல மாதா ஆலயத்தில் யேசுவின் பாடுகளை நினைவு கூர்ந்து சிலுவைப்பாதை இடம்பெற்றதை படங்களில் காணலாம். (படப்பிடிப்பு :- ஜே.சுஜீவகுமார்) https://www.virakesari.lk/article/179948
    • கணேசமூர்த்தியின் இந்த விபரீத முடிவுக்கு வைகோ தான் காரணம்..!  
    • ஓயாத நிழல் யுத்தங்கள்-5 வியட்நாம் கதை இரண்டாம் உலகப் போரின் பின்னர், இரு துருவங்களாகப் பிரிந்து நின்ற உலக நாடுகளில், இரு அணுவாயுத வல்லரசுகளின் நிழல் யுத்தம் பனிப்போராகத் தொடர்ந்தது. அந்தப் பனிப்போரின் மையம், அண்டார்டிக் கண்டம் தவிர்ந்த உலகின் எல்லாக் கண்டங்களிலும் இருந்தது. தென்கிழக்கு ஆசியாவில், உலக வல்லரசுகளின் பனிப்போரின் தீவிர வடிவமாகத் திகழ்ந்த வியட்நாம் போர் பற்றிப் பார்ப்போம். வியட்நாம் மக்களின் வரலாற்றுப் பெருமை பொதுவாகவே ஆசியக் கலாச்சாரங்களில் பெருமையுணர்வு (pride) ஒரு கலாச்சாரப் பண்பாகக் காணப்படுகிறது. வியட்நாமின் வரலாற்றிலும் கலாச்சாரத் தனித்துவம், தேசிய அடையாளம் என்பன காரணமாக ஆயிரம் ஆண்டுகளாக அதன் அயல் நாடுகளோடு போராடி வாழ வேண்டிய நிலை இருந்திருக்கிறது. பிரதானமாக, வடக்கேயிருந்த சீனாவின் செல்வாக்கிற்கு உட்படாமல் வியட்நாமியர்கள் தனித்துவம் பேணிக் கொண்டிருந்தனர். ஆனால், வியட்நாம் என்பது ஒரு தேசிய அடையாளமாக திரளாதவாறு, மத, பிரதேச வாதங்களும் அவர்களுக்குள் நிலவியது. கன்பூசியஸ் நம்பிக்கைகளைப் பின்பற்றிய வட வியட்நாமிற்கும், சிறு பான்மைக் கிறிஸ்தவர்களைக் கொண்ட தென் வியட்நாமிற்குமிடையே கலாச்சார வேறு பாடுகள் இருந்தன. இந்த இரு தரப்பில் இருந்தும் வேறு பட்ட மலைவாழ் வியட்நாமிய மக்கள் மூன்றாவது ஒரு தரப்பாக இருந்திருக்கின்றனர். 19 ஆம் நூற்றாண்டில், ஐரோப்பிய காலனித்துவம் இந்தோ சீனப் பகுதியில் கால் பதித்த போது, வியட்நாம், லாவோஸ், கம்போடியா ஆகிய பகுதிகள் பிரெஞ்சு ஆதிக்கத்தின் கீழ் வந்தன. காலனித்துவத்தை எதிர்ப்பதிலும் கூட, வியட்நாமின் வடக்கிற்கும், தெற்கிற்குமிடையே வேறுபாடு இருந்திருக்கிறது. எனினும், பிரெஞ்சு ஆதிக்கத்தை வியட்நாமியர் தொடர்ந்து எதிர்த்து வந்தனர். இரண்டாம் உலகப் போரின் போது, 1945 இல் ஜப்பான் பிரான்சிடமிருந்து இந்தோ சீனப் பிராந்தியத்தை பொறுப்பெடுத்த போது, பிரெஞ்சு ஆட்சியில் கூட நிகழாத வன்முறைகள் அந்தப் பிராந்திய மக்கள் மீது நிகழ்த்தப் பட்டன.   அதே ஆண்டின் ஆகஸ்டில், ஜப்பான் தோல்வியடைந்து சரணடைந்த போது, உள்ளூர் தேசியத் தலைமையாக இருந்த வியற் மின் (Viet Minh) என அழைக்கப் பட்ட கூட்டணியிடம் ஆட்சியை ஒப்படைத்து வெளியேறியது. இதெல்லாம் நடந்து கொண்டிருந்த காலப் பகுதியில், உலக கம்யூனிச இயக்கத்தினால் ஈர்க்கப் பட்டிருந்த ஹோ சி மின் நாடு திரும்பி வட வியற்நாமில் கம்யூனிச ஆட்சியை பிரகடனம் செய்கிறார். இந்தக் காலப் பகுதி, உலகம் இரு துருவங்களாகப் பிரிவதற்கான ஆரம்பப் புள்ளிகள் இடப் பட்ட ஒரு காலப் பகுதி. முடிந்து போன உலகப் போரில் பங்காளிகளாக இருந்த ஸ்ராலினின் சோவியத் ஒன்றியமும், மேற்கு நாடுகளும் உலக மேலாண்மைக்காகப் போட்டி போட ஆரம்பித்த காலம் இந்த 1940 கள் - சீனாவின் மாவோ இன்னும் அரங்கிற்கே வரவில்லை என்பதைக் கவனிக்க வேண்டும். மீண்டும் ஆக்கிரமித்த பிரான்ஸ் கம்யூனிச விரிவாக்கத்திற்கு ஹோ சி மின் ஆட்சி வழி வகுக்கலாமெனக் கருதிய பிரிட்டன், ஒரு படை நடவடிக்கை மூலம் தென் வியட்நாமைக் கைப்பற்றி, தென் வியட்நாமை மீளவும் பிரெஞ்சு காலனித்துவ வாதிகளிடம் கையளித்தது. ஒரு கட்டத்தில், வியட்நாமை பிரெஞ்சு ஆட்சியின் கீழ் இருக்கும் ஒரு சுதந்திர தேசமாக அங்கீகரிக்கும் ஒப்பந்தம் கூட பிரான்சுக்கும், வியற் மின் அமைப்பிற்குமிடையே கைச்சாத்தானது. ஆனால், இந்த ஒப்பந்தத்தின் ஆயுட்காலம் வெறும் 2 மாதம் தான். பிரெஞ்சுப் படைகள் வடக்கை நோக்கி முன்னேற, வியற் மின் பின்வாங்க பிரெஞ்சு வியட்நாம் போர் ஆரம்பித்தது. இந்தப் போரில், முழு வியட்நாமும் பிரெஞ்சு ஆதிக்கத்தை எதிர்க்கவில்லையென்பதையும் கவனிக்க வேண்டும். வியட்நாமின் அரச வாரிசாக இருந்த பாவோ டாய் (Bao Dai), பிரெஞ்சு ஆதிக்கத்தின் கீழ் ஒரு தனி தேசமாக வியட்நாம் தொடர்வதை இறுதி வரை ஆதரித்து வந்தார். தொடர்ந்த யுத்தம் 1954 இல் ஒரு சமாதான ஒப்பந்தத்துடன் முடிவுக்கு வந்த போது, லாவோஸ், கம்போடியா ஆகிய நாடுகள் பிரான்சிடமிருந்து சுதந்திரமடைந்தன. புதிதாக வியட்நாம் தலைவராக நியமிக்கப் பட்ட டியெம், தென் வியட்நாமைத் தனி நாடாகப் பிரகடனம் செய்ததோடு, வடக்கில் இருந்த வியற் மின் தரப்பிற்கும், தென் வியட்நாமிற்கும் போர் மீண்டும் மூண்டது. அமெரிக்காவின் வியட்நாம் பிரவேசம் அமெரிக்கா, உலகப் போரில் பாரிய ஆளணி, பொருளாதார இழப்பின் பின்னர் தன் படைகளை இந்தோ சீன அரங்கில் இருந்து வெகுவாகக் குறைத்துக் கொண்டு, ஐரோப்பிய அரங்கில் கவனம் செலுத்தத் தீர்மானித்திருந்தது (இதனால், 50 களில் வட கொரியா தென் கொரியா மீது தாக்குதல் தொடுத்த போது கூட உடனடியாக சுதாரிக்க இயலாமல் அமெரிக்கப் படைகளின் பசுபிக் தலைமை தடுமாறியது). அமெரிக்கா ஏற்கனவே பிரிட்டனின் காலனித்துவத்தில் இருந்து விடுபட்ட ஒரு நாடு என்ற வகையில், அந்தக் காலப் பகுதியில் ஒரு காலனித்துவ எதிர்ப்பு மனப் பாங்கைக் கொண்டிருந்தமையால், பிரெஞ்சு, பிரிட்டன் அணிகளின் வியட்நாம் மீதான தலையீட்டில் பங்கு கொள்ளாமல் விலகியிருந்தது. இத்தகைய காலனித்துவ எதிர்ப்பின் விளைவாக, உலகில் கம்யூனிச மேலாதிக்கம் உருவாகும் போது எதிர் நடவடிக்கையின்றி இருக்க வேண்டிய சங்கடமான நிலை அமெரிக்காவிற்கு. இப்படியொரு நிலை உருவாகும் என்பதை ஏற்கனவே உணர்ந்திருந்த அமெரிக்க வெளியுறவுத் துறையின் அதிகாரியான ஜோர்ஜ் கெனன், 1947 இலேயே Policy of Containment என்ற ஒரு வெளியுறவுக் கொள்கை ஆவணத்தை தயாரித்து வெளியிட்டிருந்தார். ட்ரூமன் கொள்கை (Truman Doctrine) என்றும் அழைக்கப் படும் இந்த ஆவணத்தின் அடி நாதம்: “உலகின் எந்தப் பகுதியிலும் மக்கள், பிரதேசங்கள் சுதந்திரம், ஜனநாயகம் என்பவற்றை நாடிப் போராடினால், அமெரிக்காவின் ஆதரவு அவர்களுக்குக் கிடைக்கும்” என்பதாக இருந்தது. மறைமுகமாக, "தனி மனித அடக்கு முறையை மையமாகக் கொண்ட கம்யூனிசம் பரவாமல் தடுக்க அமெரிக்கா உலகின் எந்த மூலையிலும் செயல்படும்" என்பதே ட்ரூமன் கொள்கை.   இந்த ட்ரூமன் கொள்கையின் முதல் பரீட்சார்த்தக் களமாக தென் வியட்நாம் இருந்தது எனலாம். 1956 இல், டியேம் தென் வியட்நாமை சுதந்திர நாடாக பிரகடனம் செய்த சில மாதங்களில், அமெரிக்காவின் இராணுவ ஆலோசனையும், பயிற்சியும் தென் வியட்நாமின் படைகளுக்கு வழங்க அமெரிக்கா ஏற்பாடுகளைச் செய்தது. தொடர்ந்து, 1961 இல், சோவியத் ஒன்றியத்திடமிருந்து கடும் சவால்களை எதிர் கொண்ட அமெரிக்க அதிபர் கெனடி, அமெரிக்காவின் விசேட படைகளை தென் வியட்நாமிற்கு அனுப்பி வைக்கிறார். விரைவாகவே, பகிரங்கமாக தென் வியட்நாமில் ஒரு அமெரிக்கப் படைத் தலைமயகப் பிரிவு வியட்நாமின் (US Military Assistance Command Vietnam- MACV) நடவடிக்கைகளுக்காகத் திறக்கப் படுகிறது. கெனடியின் கொலையைத் தொடர்ந்து அமெரிக்க அதிபரான லிண்டன் ஜோன்சன், நேரடியான அமெரிக்கப் படை நடவடிக்கைகளை வியட்நாமில் ஆரம்பிக்க அனுமதி அளித்தது 1965 பெப்ரவரியில். இந்த நடவடிக்கைக்கு அமெரிக்க காங்கிரஸ் அனுமதி அளித்திருந்தது குறிப்பிடத் தக்கது. Operation Rolling Thunder என்ற பெயருடன், வட வியட்நாம் மீது தொடர் குண்டு வீச்சு நடத்துவது தான் அமெரிக்காவின் முதல் நடவடிக்கை.  வடக்கும் தெற்கும் 1954 இன் ஜெனீவா ஒப்பந்தம், வியட்நாமை வடக்கு தெற்காக 17 பாகை அகலாங்குக் கோட்டின் படி இரு நாடுகளாகப் பிரித்து விட்டிருந்தது. 10 மாதங்களுக்குள் இரு பாதிகளிலும் இருக்கும் வியட்நாமிய மக்கள் தாங்கள் விரும்பும் பாதிக்கு நகர்ந்து விடுமாறும் கோரப் பட்டிருந்தது. வடக்கிலும் தெற்கிலும் இருந்து பழி வாங்கல்களுக்கு அஞ்சி மக்கள் குடிபெயர்ந்த போது குடும்பங்கள், உறவுகள் பிரிந்தன. ஹோ சி மின்னின் கம்யூனிச வழியை ஆதரித்த மக்கள், வடக்கு நோக்கி நகர்ந்தனர், இவர்களில் பலர் வியற் கொங் என அழைக்கப் பட்ட கம்யூனிச ஆயுதப் படையில் சேர்ந்தனர். தென் வியட்நாமில், கம்யூனிச வடக்கை ஆதரித்த பலர் தங்கவில்லையாயினும், நடு நிலையாக நிற்க முனைந்தவர்களே நிம்மதியாக வசிக்க இயலாத கெடு பிடிகளும், கைதுகளும் தொடர்ந்தன. இந்த நிலையில், வடக்கின் கம்யூனிச ஆயுதப் பிரிவான வியற் கொங், வியட்நாமின் அடர்ந்த காடுகளூடாக Ho Chi Minh trail எனப்படும் ஒரு இரகசிய வினியோக வழியை உருவாக்கி, தென் வியட்நாமை உள்ளிருந்தே ஆக்கிரமிக்கும் வழிகளைத் தேடியது.  இந்த இரகசிய காட்டுப் பாதை வட வியட்நாமில் இருந்து 500 கிலோமீற்றர்கள் வரை தெற்கு நோக்கி லாவோஸ் மற்றும் கம்போடியா நாடுகளினூடாக நகர்ந்து தென் வியட்நாமில் 3 - 4 இடங்களில் எல்லையூடாக ஊடறுத்து உட் புகும் வழியை வியற் கொங் போராளிகளுக்கு வழங்கியது. இந்த வினியோக வழியை முறியடிக்கும் இரகசிய யுத்தமொன்றை, அமெரிக்க விசேட படைகள் லாவோஸ் காடுகளில் வியட்நாம் ஆக்கிரமிக்கப் படும் முன்னர் இருந்தே முன்னெடுத்து வந்தன. சின்னாபின்னமான வியட்நாம் மக்கள் பனிப்போர் காலத்தில் அமெரிக்கா நடத்திய யுத்தங்களுள், மிக உயர்வான பொது மக்கள் அழிவை உருவாக்கியது வியட்நாம் போர் தான். 1965 முதல் 1975 வரையான வியட்நாம் யுத்தத்தில் கொல்லப் பட்ட மக்கள் தொகை 2 மில்லியன்கள்: வியட்நாமியர், கம்போடியர், லாவோஸ் நாட்டவர் இந்த 2 மில்லியன் பலிகளில் அடங்குகின்றனர். இதை விட 5.5 மில்லியன் பொது மக்கள் காயமடைந்தனர். வாழ்விடங்கள், பயிர்செய்கை நிலங்கள் அழிக்கப் பட்டன. இந்த 10 வருட யுத்தத்தில், அமெரிக்காவின் நேரடிப் பிரசன்னம் 1972 வரை நீடித்த அமெரிக்க வியட்நாம் யுத்தம். இந்தக் காலப் பகுதியில், அமெரிக்கப் படைகள் மட்டுமன்றி, பசுபிக்கில் அமெரிக்காவின் நேச அணியைச் சேர்ந்த தென் கொரியா, அவுஸ்திரேலியா, நியூசிலாந்து ஆகிய நாடுகளின் படைகளும் பெருமளவில் யுத்தத்தில் பங்கு பற்றின. இந்தப் படைகளும், அமெரிக்கப் படைகளுடன் சேர்ந்து வியட்நாம் மக்களுக்கெதிரான கொடூர வன்முறைகளை நிகழ்த்தினாலும், குறிப்பிடத் தக்க பாரிய வன்முறைகளை அமெரிக்கப் படைகளே செய்தன. இந்த வன்முறைகள் பற்றி ஏராளமான சாட்சியங்களும், அவற்றின் அடிப்படையிலான நூல்களும் வெளிவந்திருக்கின்றன. வியட்நாம் போரில், அமெரிக்கப் படைகள் பொது மக்களை நடத்திய விதத்திற்கு மிகச் சிறந்த உதாரணமான சம்பவம் மை லாய் (My Lai) படுகொலைச் சம்பவம். 1968 இல், ஒரு மார்ச் மாதம் காலையில் மை லாய் கிராமத்தில் நூற்றுக் கணக்கான வியட்நாமிய பொது மக்களைச் சுற்றி வளைத்த அமெரிக்கப் படைப்பிரிவின் அணியொன்று, மிகக் குறுகிய நேர விசாரிப்பின் பின்னர் அவர்களைச் சரமாரியாகச் சுட்டுக் கொன்றது. கொல்லப் பட்ட மக்கள் ஒரு 500 பேர் வரை இருப்பர், அனைவரும் நிராயுத பாணிகள், பெரும்பாலானோர் பெண்களும் குழந்தைகளுமாக இருந்தனர். இந்தப் படுகொலை பாரிய இரகசியமாக அல்லாமல், நூற்றுக் கணக்கான அமெரிக்கப் படையினரின் முன்னிலையில் நடந்தது. அந்த நடவடிக்கைப் பகுதியில், உலங்கு வானூர்தி விமானியாக சுற்றித் திரிந்த ஹியூ தொம்சன் என்ற ஒருவரைத் தவிர யாரும் இதைத் தடுக்க முயலவில்லை. தொம்சன், தன்னுடைய உலங்கு வானூர்தியை அமெரிக்கப் படைகளுக்கும் கொல்லப் படவிருந்த மக்கள் கூட்டத்திற்குமிடையில் தரையிறக்கி ஒரு சிறு தொகையான சிவிலியன்களைக் காப்பாற்றினார். காயமடைந்த சிலரை உலங்கு வானூர்தி மூலம் அகற்றிய பின்னர், மேலதிகாரிகளுக்கும் மை லாய் படுகொலை பற்றித் தெரிவித்தார் தொம்சன். மிகுந்த தயக்கத்துடன் விசாரித்த அமெரிக்க படைத்துறை, படு கொலை பற்றிச் சாட்சி சொன்னவர்களைத் தண்டனை கொடுத்து விலக்கி வைத்தது. படு கொலைக்குத் தலைமை தாங்கிய படை அதிகாரி வில்லியம் கலி, 3 வருடங்கள் கழித்து இராணுவ நீதி மன்றில் சிறைத் தண்டனை விதிக்கப் பட்டாலும், 3 நாட்கள் மட்டுமே சிறையில் கழித்த பின்னர் மேன்முறையீடு, பிணை என இன்று வரை சுதந்திரமாக உயிரோடிருக்கிறார். இந்தப் படுகொலையில் சரியாக நடந்து கொண்ட விமானி தொம்சனையும் இன்னும் இருவரையும் 1998 இல் - 30 ஆண்டுகள் கழித்து- அமெரிக்க இராணுவம் விருது கொடுத்துக் கௌரவித்தது. இத்தகைய சம்பவங்கள் மட்டுமன்றி, ஒட்டு மொத்தமாக வியட்நாம் மக்களை வகை தொகையின்றிக் கொன்ற நேபாம் குண்டுகள் (Napalm - இது ஒரு பெற்றோலியம் ஜெல்லினால் செய்யப் பட்ட குண்டு), ஏஜென்ற் ஒறேஞ் எனப்படும் இரசாயன ஆயுதத் தாக்குதல் என்பனவும் அமெரிக்காவின் கொலை ஆயுதங்களாக விளங்கின. 1972 இல், அமெரிக்காவில் உள்ளூரில் வியட்நாம் போருக்கெதிராக எழுந்த எதிர்ப்புகளால், அமெரிக்கா தன் தாக்குதல் படைகளை முற்றாக விலக்கிக் கொண்ட போது 58,000 அமெரிக்கப் படையினர் இறந்திருந்தனர். இதை விட இலட்சக் கணக்கான உயிர் தப்பிய அமெரிக்கப் படையினருக்கு, PTSD என்ற மனவடு நோய் காரணமாக, அவர்களால் சாதாரண வாழ்க்கைக்குத் திரும்ப இயலாத நிலை ஏற்பட்டது. வியட்நாம் போரின் முடிவு அமெரிக்காவின் படை விலகலுக்குப் பின்னர், படிப்படியாக அமெரிக்காவின் தென் வியட்நாமிற்கான நிதி, ஆயுதம், பயிற்சி என்பன குறைக்கப் பட்டன. 1975 ஏப்ரலில், வடக்கு வியட்நாமின் படைகள் மிக இலகுவாக தெற்கு வியட்நாமின் சாய்கன் நகரை நோக்கி நெருங்கி வந்த போது, அமெரிக்காவின் ஆதரவாளர்கள், அமெரிக்கப் பிரஜைகள் ஆகியோரை Operation Frequent Wind  என்ற நடவடிக்கை மூலம் அவசர அவசரமாக வெளியேற்றினார்கள். தெற்கு வியட்நாமை ஆக்கிரமித்த வடக்கு வியட்நாம், மேலும் முன்னேறி, கம்போடியாவையும் ஒரு கட்டத்தில் ஆக்கிரமித்து, இந்தோ சீனப் பிரதேசத்தை ஒரு தொடர் கொலைக் களமாக வைத்திருந்தது. இந்தப் பிரதேசங்களில் இருந்து கடல் வழியே தப்பியோடிய மக்கள் “படகு மக்கள்” என அழைக்கப் பட்டனர். இன்று றொஹிங்கியாக்களுக்கு நிகழும் அத்தனை அனியாயங்களும் அவர்களுக்கும் நிகழ்ந்தன. -          தொடரும்
    • தமிழ்நாட்டில் நடக்கும் அநிஞாயங்கள் பாலியல் வல்லுறவுகள் கூட்டு பாலியல் கொலை கொள்ளை என்று திராவிட கும்பல்களால் தினமும் செய்திகள் வருகின்றன. எவருமே அதைப்பற்றி அக்கறை கொள்வதில்லை. ஆனால் சீமானைப்பற்றி ஏதாவது நல்ல செய்தி வந்தால் உடனே கூட்டமாக சேர்ந்து தாக்குதல் நடக்குது. என்ன கூட்டமோ?
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.