Jump to content

அப்புவிட அப்புவும், பேரனும்.!


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

large.0-02-0a-af8a7659afd3c85d3d89aef97cc8e7bb65d77a0e56c422d82f6d53586742f668_1c6da4fbb55557.jpg.e3574bbb081567c99eccdcd5d27f2275.jpg

அப்புவிட அப்புவும்,பேரனும்..!

*********************

கந்தையா அண்ணரும்

காசிம் நானாவும்

றம்பண்டா மல்லியும்

ஒரு குடும்பமாய்

திரிந்த காலம்

அப்போது ..

ஒருநாளும்

நான் கண்டதில்லை 

சண்டையை..

 

புத்த பெருமானுக்கும் 

நபிகள் நாயகத்துக்கும்

ஜேசு பிரானுக்கும் 

சித்தர் சிவனுக்கும்-மதம் 

பிடித்ததாய்..

அப்போது..

ஒருநாளும்

 நான் கண்டதில்லை 

சண்டையை..

 

கண்டியில பெரகராவும் 

திருக்கேதீச்சரத்தில 

சிவராத்திரியும்

கொச்சிக்கடையில

பாலன் பிறப்பும்

மட்டக்களபில 

நோன்புப் பெருநாளும்

அன்பாக நடந்ததே தவிர

அப்போது..

ஒருநாளும்

நான் கண்டதில்லை

சண்டையை..

 

ஒவ்வொரு இடத்தில 

ஒவ்வொரு ஆலயம் கட்டி

வளிபாட்டுத்தலமெல்லாம் 

அனைவரும்

வந்து வணங்கி வளிபட்டு

போனார்களே தவிர

அப்போது..

ஒருநாளும்

நான் கண்டதில்லை

சண்டையை..

 

தமிழ்..

வடக்கு கிழக்கென்றும்

சிங்களம்.. 

தெற்கு மேற்கென்றும்

ஒவ்வொரு பகுதியாக

பிரிந்து வாழ்ந்தாலும்

ஒற்றுமையைத் தவிர

அப்போது..

ஒருநாளும்

நான் கண்டதில்லை 

சண்டையை..

 

இப்படி எனக்கு-என்

அப்புவிட அப்பு 

கனவில வந்து

கதை சொல்லி போனார்.

 

அப்போது நினைத்தேன்

இப்போது நடப்பது

அரசியல் வாதிகளும்-சில

அரசடி வாதிகளும்

தாம் வாழ நினைத்து.

 

வல்லரசு சிலதோட

வறுமையை காட்டி

முக்குலத்தையும்

முட்டி மோதவிடும் 

முடிவால்தான்-இன்று

எங்களுக்குள்ளே

இத்தனை..

சண்டையோ?

 

எண்ணித் திகைத்து

இடையில.. 

எழுப்பி விட்டேன்.

“விடியவில்லை”

ஐயோ பக்கத்தில..

அழுகுரல்கள் கேட்கிறது.

 

அன்புடன் -பசுவூர்க்கோபி-

27.03.2021

Edited by பசுவூர்க்கோபி
  • Like 8
  • Thanks 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஏறத்தாள இரண்டாயிரம் ஆண்டுகளூக்கு முன்பே, கணியன் திருப்பூங்கனார் கூறியது,

யாதும் ஊரே....யாவரும் கேளிர்

எம்மைச் சுற்றி வட்டங்களை நாங்கள் போடவில்லை! மற்றவர்களே போட்டார்கள்!

உலகம் முழுவதும் விதைக்கப் பட்டிருக்கிறோம்! அறுவடை காலமும் அண்மித்து வருகின்றது!

ஏக்கம் சுமந்து வரும் கவிதை! நன்றி....!

 

Edited by புங்கையூரன்
கூகிள் தமிழ்
  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
15 hours ago, புங்கையூரன் said:

ஏறத்தாள இரண்டாயிரம் ஆண்டுகளூக்கு முன்பே, கணியன் திருப்பூங்கனார் கூறியது,

யாதும் ஊரே....யாவரும் கேளிர்

எம்மைச் சுற்றி வட்டங்களை நாங்கள் போடவில்லை! மற்றவர்களே போட்டார்கள்!

உலகம் முழுவதும் விதைக்கப் பட்டிருக்கிறோம்! அறுவடை காலமும் அண்மித்து வருகின்றது!

ஏக்கம் சுமந்து வரும் கவிதை! நன்றி....!

 

அருமையாக பதில் தந்தீர்கள். வாழ்த்துக்ளும் நன்றிகளும் அண்ணா

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தமிழ்..

வடக்கு கிழக்கென்றும்

சிங்களம்.. 

தெற்கு மேற்கென்றும்

ஒவ்வொரு பகுதியாக

பிரிந்து வாழ்ந்தாலும்

ஒற்றுமையைத் தவிர

அப்போது..

ஒருநாளும்

நான் கண்டதில்லை 

சண்டையை.....!

 

நிஜமான கருத்துக்கள் .......கோபி......!  👏

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மனிதர்கள் தோன்றிய காலத்தில் இருந்து சக மனிதர்களுடன் சண்டையிட்டு அழித்தும் அழிந்தும் வருகின்றார்கள். எனவே, சண்டையில்லா நிலை கனவில் மட்டும்தான் வரும்!

சிங்களவர்கள் மேலாதிக்க உணர்வுடன் வாழும்வரை இலங்கைத் தீவில் முறுகல்கள் இருந்துகொண்டுதான் இருக்கும்.

  • Like 1
Link to comment
Share on other sites

யதார்த்தத்தை சொல்லும் கவிதை... வலிசுமந்த வரிகள். பகிர்வுக்கு நன்றி 

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
22 hours ago, suvy said:

தமிழ்..

வடக்கு கிழக்கென்றும்

சிங்களம்.. 

தெற்கு மேற்கென்றும்

ஒவ்வொரு பகுதியாக

பிரிந்து வாழ்ந்தாலும்

ஒற்றுமையைத் தவிர

அப்போது..

ஒருநாளும்

நான் கண்டதில்லை 

சண்டையை.....!

 

நிஜமான கருத்துக்கள் .......கோபி......!  👏

நன்றிகள் சுவி அண்ணா

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
22 hours ago, கிருபன் said:

மனிதர்கள் தோன்றிய காலத்தில் இருந்து சக மனிதர்களுடன் சண்டையிட்டு அழித்தும் அழிந்தும் வருகின்றார்கள். எனவே, சண்டையில்லா நிலை கனவில் மட்டும்தான் வரும்!

சிங்களவர்கள் மேலாதிக்க உணர்வுடன் வாழும்வரை இலங்கைத் தீவில் முறுகல்கள் இருந்துகொண்டுதான் இருக்கும்.

உங்கள் கருத்துக்கு நன்றிகள் கிருபன் அண்ணா  

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 28/3/2021 at 23:00, nige said:

யதார்த்தத்தை சொல்லும் கவிதை... வலிசுமந்த வரிகள். பகிர்வுக்கு நன்றி 

ஊக்கம் உங்கள் வார்த்தைக்கு உளமார்ந்த நன்றிகள் 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நுரை போல
பொங்கி வரும்
அழகுத்தமிழ் சொற்களால்
கவிதை 
பொங்கி வருகிறது
உங்கள் இதயத்திலிருந்து....👍🏽

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அருமையாக கவிதை வடிவில் நிஐத்தை சொல்லியுள்ளீர்கள், பாராட்டுக்கள்

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 2/4/2021 at 14:34, குமாரசாமி said:

நுரை போல
பொங்கி வரும்
அழகுத்தமிழ் சொற்களால்
கவிதை 
பொங்கி வருகிறது
உங்கள் இதயத்திலிருந்து....👍🏽

உளமார்ந்த நன்றிகள் ஐயா

On 3/4/2021 at 13:14, உடையார் said:

அருமையாக கவிதை வடிவில் நிஐத்தை சொல்லியுள்ளீர்கள், பாராட்டுக்கள்

என்றும் எனது கவிதைக்கு ஊக்கம் தரும்  அன்புடையாருக்கு நன்றிகள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

. வேடிக்கை கலந்த கவிதைச் சொந்தக் காரனுக்கு என் பாராட்டுக்கள் 😀

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
27 minutes ago, நிலாமதி said:

. வேடிக்கை கலந்த கவிதைச் சொந்தக் காரனுக்கு என் பாராட்டுக்கள் 😀

நன்றி அக்கா

Link to comment
Share on other sites



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • Published By: DIGITAL DESK 3    16 APR, 2024 | 12:07 PM யாழ்ப்பாணத்தில் இருந்து புலம்பெயர்ந்து சுவிஸ் நாட்டில் வசிக்கும் பெண்ணை திருமணம் செய்வதாக கூறி சுமார் 50 இலட்ச ரூபாயை மோசடி செய்ததாக பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் மீது முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.  யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த பெண்ணொருவர் புலம்பெயர்ந்து சுவிஸ் நாட்டில் வசித்து வருகின்றார். அவருக்கு திருமணமாகி பிள்ளைகள் உள்ள நிலையில் சுவிஸ் நாட்டில் கணவனை பிரிந்து பிள்ளைகளுடன் வாழ்ந்து வருகின்றார்.  இந்நிலையில் கடந்த சில வருடங்களுக்கு முன்னர் குறித்த பெண் யாழ்ப்பாணம் வந்திருந்த போது, பெண்ணின் பூர்வீக சொத்துக்கள் தொடர்பில் ஏற்பட்ட முரண்பாடுகள் தொடர்பில் பொலிஸ் நிலையத்திற்கு முறைப்பாடு செய்ய சென்று இருந்தார்.  முறைப்பாடு செய்ய சென்ற நேரத்தில் பொலிஸ் நிலையத்தில் கடமையில் இருந்த தமிழ் பொலிஸ் பொலிஸ் உத்தியோகத்தருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது.  அந்த பழக்கம் பெண் வெளிநாடு சென்ற பின்னரும் தொடர்ந்து உள்ளது. ஒரு கட்டத்தில் அது காதலாக மலர்ந்துள்ளது. அதனை அடுத்து சுவிஸ் நாட்டு பெண், இங்குள்ள பொலிஸ் உத்தியோகஸ்தருக்கு பணம், நகை என்பவற்றுடன் அன்பளிப்பு பொருட்கள் என பலவற்றை வழங்கி வந்துள்ளார்.  ஒரு கட்டத்தில் பொலிஸ் பொலிஸ் உத்தியோகத்தரை சுவிஸ் நாட்டிற்கு எடுப்பதற்கான முயற்சிகளையும் அப்பெண் மேற்கொண்டுள்ளார். அதற்கு பொலிஸ் பொலிஸ் உத்தியோகத்தர் மறுப்பு தெரிவித்து, தான் நாட்டை விட்டு வர மாட்டேன் என கூறியுள்ளார்.  அதனால் அப்பெண் மீண்டும் யாழ்ப்பாணம் வந்து தன்னை திருமணம் செய்யுமாறு வற்புறுத்திய வேளை , அதற்கு அவர் உடன்படாத நிலையில், அது தொடர்பில் பொலிஸ் உயர் அதிகாரிகளிடம் முறையிட்டுள்ளார்.  அதனை அடுத்து, இப்பெண்ணிடம் இருந்து பெற்றுக்கொண்ட ஒரு தொகை நகை, பணம் என்பவற்றை மீள அளித்துள்ளார். மிகுதியை சிறு கால இடைவெளியில் மீள கையளிப்பதாக உறுதி அளித்துள்ளார்.  அதன் பிரகாரம் உரிய காலத்தில் மிகுதி பணம் நகையை மீள கையளிக்காததால், அப்பெண் குறித்த பொலிஸ் உத்தியோகத்தருக்கு எதிராக முறைப்பாடு செய்துள்ளார். https://www.virakesari.lk/article/181215
    • Published By: DIGITAL DESK 3 16 APR, 2024 | 11:19 AM   கொவிட் தொற்று பற்றிய உலக சுகாதார நிறுவனம் மற்றும் இலங்கை சுகாதார அமைச்சின் ஆலோசனைகள் தொடர்பாக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை பணிப்பாளர் த.சத்தியமூர்த்தி தெளிவுபடுத்தியுள்ளார். யாழ் மாவட்டத்தில் நீண்ட காலத்திற்கு பின்னர் கொவிட்தொற்று காரணமாக பெண் ஒருவர் உயிரிழந்துள்ளநிலையில், மக்கள் மத்தியில் தேவையற்ற சந்தேகங்களை தீர்க்கும்வகையில் குறித்த தகவலை தனது சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ளார். இதன்படி 2023 ஒக்டோபர் 10ம் திகதி முதல் கீழ்வரும் 7 விடயங்கள் சுகாதார அமைச்சினால் சுற்றறிக்கையொன்று வெளியிடப்பட்டு பின்பற்றப்படுகிறது. 1. கொவிட் தொற்று ஏற்பட்டவர்களுக்கு ஏனைய சுவாசத் தொற்று நோய்கள் ஏற்பட்டவர்களுக்கு வழங்கப்படுகின்ற அதே உரிய பாதுகாப்பும் பராமரிப்பும் வழங்கப்பட வேண்டும். பொருத்தமான சிகிச்சையும் வைத்தியசாலையில் வழங்கப்படும்.  (பொதுவாக சுவாச தொற்று வருத்தம் இன்னொருவருக்கு இலகுவாக பரவலாம். ஆகவே சுவாசத் தொற்று உடையவர்கள் உரிய அடிப்படை சுகாதார விதிமுறைகளை கடைப்பிடிக்க வேண்டும். அவ்வாறே தொற்று உடையவருக்கு அருகில் இருப்பவர்கள் மற்றும் பராமரிப்பவர்கள் உரிய சுகாதார பழக்கவழக்கங்களைப்  பேண வேண்டும்.) 2. எதாவது நோய் ஒன்றின் சிகிச்சைக்கு முன்னர் அல்லது சத்திர சிகிச்சை ஒன்றிற்கு முன்னர்  கொவிட் தொற்றும் இருக்கின்றதா என பரிசோதனைகள் செய்யப்படுவதில்லை. 3. கொவிட் தொற்று உடையவரிற்கு அருகில் இருந்தவர்களிற்கு அல்லது அவருக்கு அருகில் சென்று சிகிச்சை அளித்தவர்களுக்கு கோவிட் தொற்று இருக்கின்றதா என பரிசோதனைகள் மேற்கொள்ளப்படுவதில்லை. 4. இருமல் மற்றும் தடிமன் போன்ற சுவாசத் தொற்று ஏற்பட்டவர்கள் இன்னொருவருக்கு தொற்று ஏற்படாத வகையில் உரிய நடைமுறைகளைப் பின்பற்ற வேண்டும். குறிப்பாக அதிகளவில் ஒன்றுகூடும் இடங்களில் உரிய முறையில் நடந்து கொள்ள வேண்டும். 5. கொவிட் இறப்பு ஏற்படும் போது உரிய சுகாதார விதிகளைக் கடைப்பிடித்து வீடுகளில் இறுதிச் சடங்கை செய்யமுடியும். 6. சுகாதார அமைச்சின் தொற்று நோய் தடுப்பு பிரிவின் அறிவுறுத்தலின் அடிப்படையில் சமுதாயத்தில் கொவிட் தொற்று இருக்கின்றதா என பலருக்கு பரிசோதனைகள் செய்யப்படுவதில்லை. 7. தனியார் சிகிச்சை நிலையங்களும் இந்த நடைமுறைகளைக் கடைப்பிடிக்க வேண்டும். https://www.virakesari.lk/article/181205
    • இது யாழ்ப்பாணத்தில் இல்லை.  பூந்கரிக்குத் தெற்கே, பூநகரி மன்னார் வீதியில் ஜெயபுரத்திற்கு(சந்தி ) மேற்கே 7/8 Km ல் இருக்கிறது.    https://www.aloeus.com/devils-point-veravil/
    • தகவலுக்கு நன்றி  இந்த ஊர்  யாழ்பாணத்தில் எங்கே இருக்கின்றது என்பதே எனக்கு தெரியாது.தெரிந்தவர்கள் சொன்னதை வைத்தே சொன்னேன். முன்பு யாழ்கள உறவு தனிஒருவன் சொன்னவர் வீட்டு திட்டம் வந்த போதும் எதிர்ப்பு தெரிவித்து வீடும் கிடைக்காமல் போய்விட்டது.இங்கே உள்ளவர்கள் சென்றுவந்தவர்களும் அப்படியே  சொன்னவர்கள். இப்படியே தொழில்சாலை வேண்டாம் வீடு வேண்டாம் எதிர்த்து கொண்டிருந்தால் தமிழர்கள் வாழ்வதற்கு சிங்கள பிரதேசங்களுக்கு சென்று தான் குடியேறுவார்கள்.
    • நானும் அறிமுகமாகிக்கிறேன்..🙏 கி.பி.2009ல் ஈழம் செய்திகளின் தேடலின் போது யாழுக்கு வந்தேன். அதன்பின் யாழும், உறவுகளும் அன்பால் என்னை கட்டிப்போட்டுவிட்டனர்.😍 தில்லையில் பொறியியல் படித்த, மதுரையை அண்மித்த சிற்றூரை பிறப்பிடமாகக் கொண்ட மூத்த பொறியாளன். வெளிநாட்டில் வசிக்கிறேன். BTW, இந்த சீமந்து தொழிற்சாலையில் 'ப்ராசஸ்' எப்படி? பொலுசன் இல்லாத தொழிற் நுட்பம்தானே? 🙂
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.