Jump to content

ஐ நா மனித உரிமை பேரவையில் நிறைவேற்றப்பட்ட இலங்கைக்கு எதிரான தீர்மானம் தொடர்பாக திரு. கஜேந்திரகுமார் பொன்னம்பலம் அவர்கள் இன்று (Mar 24) இலங்கை நாடாளுமன்றத்தில் ஆற்றிய உரை


Recommended Posts

 

ஐ நா மனித உரிமை பேரவையில் நிறைவேற்றப்பட்ட இலங்கைக்கு எதிரான தீர்மானம் தொடர்பாக திரு. கஜேந்திரகுமார் பொன்னம்பலம் அவர்கள் இன்று (Mar 24) இலங்கை நாடாளுமன்றத்தில் ஆற்றிய உரை.
தமிழாக்கம் :
ஒன்றரை மணிநேரத்திற்கு மேலாக இங்கு ஆற்றப்படும் உரைகளை அவதானித்து வருகிறேன். அநேகமாக எல்லா அரசாங்கத் தரப்பு உறுப்பினர்களும் தமதுரைகளில், இன்று இச்சபையில் திரு. எம். ஏ. சுமந்திரன் தெரிவித்த சில கருத்துகள் தொடர்பில் தமது கண்டனத்தைத் தெரிவித்தார்கள். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளாரான சுமந்திரன் தனதுரையில், ஐ.நா. மனிதவுரிமைச்சபையில் கொண்டுவரப்பட்ட தீர்மானத்திற்கு ஆதரவாக 22 நாடுகள் வாக்களித்தமையை பாராட்டியிருக்கிறார் அல்லது வரவேற்றிருக்கிறார். இங்கு உரையாற்றிய அரச தரப்பு நாடாளுமன்ற உறுப்பினர்கள் திரு. சுமந்திரனது கருத்தை பலமாக விமர்சித்ததுடன் அவரை ஒரு சிறிலங்காவின் துரோகியெனக் கூறுமளவிற்குச் சென்றுள்ளனர்.
நான் சுமந்திரனின் அபிமானியல்லாதபோதிலும், உண்மையில் நான் அவரை பலமாக விமர்சித்து வருபவனாக இருந்தாலும், அவரை சிறிலங்காவின் துரோகியென அழைப்பது எதுவித அர்த்தமுமற்ற செயல் என நமபுகிறேன்.
அரசதரப்பு உறுப்பினர்கள் அவர்களின் இருப்பினை நியாயப்படுத்துவற்காக இத் தீர்மானத்தை எந்தளவிற்கு விமர்சிக்கலாமோ அந்தளவிற்கு கீழிறங்கி விமர்சிப்பதானது அத்தீர்மானத்தின் உள்ளடக்கத்தையிட்டு அவர்களது வாதங்கள் மிகவும் பலவீனமானதாகவே அமைந்திருக்கின்றன.
நான் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியை பிரதிநிதித்துப்படுத்துகிற ஒரு நாடாளுமன்ற உறுப்பினர். நாங்கள் இத்தீர்மானம் தொடர்பில் நாம் கடுமையான விமர்சனங்களைக் கொண்டிருக்கிறோம். இது மிகவும் பலவீனமான தீர்மானம் என்றே நாம் கூறுகிறோம். இங்கு நடைபெற்றதாக நாங்கள் கூறும் மோசமான குற்றச்செயல்களையிட்டோ, இனப்படுகொலை தொடர்பிலோ எந்தவிதமான பொறுப்புக் கூறலையும் உறுதிப்படுத்தாத இத்தீர்மானத்தை தமிழ்த் தேசியக் கூட்டடபை்பு வரவேற்றிருக்கிறது.
எனது கருத்தை நியாயப்படுத்துவதற்காக அத்தீர்மானத்தின் செயற்படுத்தல் பந்தி (operative paragraph) 9 இல் குறிப்பிடப்டுள்ளவற்றைப் வாசிக்கிறேன். ‘சுயாதீனமாகவும் பக்சார்பற்ற முறையில் முழுமையான விசாரணைகளை நடத்தி, அவசியமேற்படின் குற்றமிழைத்தவர்களுக்கு தண்டனை வழங்குவதனை உறுதிப்படுத்துமாறு கோரியிருக்கிறது.’ மனிதவுரிமை மீறல் சம்பவங்கள், சர்வதேச மனிதாபினச் சட்டங்களை மீறும் செயல்களையும், நீண்டகாலமாக அடையாளப் படுத்தப்பட்டுவரும் குற்றச்செயல்களையும் (emblematic cases) சட்டத்தின்முன் கொண்டுவந்து விசாரித்து அவற்றுக்கு நீதி வழங்குமாறு அரசாங்கத்தை கேட்டுக்கொள்கிறது.
அவ்வாறிருக்கும்போது, இத்தீர்மானமானது இவ்வராசாங்கத்திற்கு எதிரானது என்று எவ்வாறு கூறமுடியும்? எங்கள் குற்றச்சாட்டானது, அரசாங்கமானது நடைபெற்ற மோதல்களில் ஒரு சாராராக குற்றஞ்சாட்டப்படும்போது விசாரணைகளை மேற்கொள்ளுமாறு அதனையே கோருவது இயற்கை நீதிக்கு ஒவ்வாததாக அமைகிறது.
2015 இல் நிறைவேற்றப்பட்ட 30-1 தீர்மானம்கூட உள்ளக
விசாரணையையே கோரியிருந்தது. ஆனால் பெயரளவிலாவது சர்வதேச நீதிபதிகள், சட்டத்தரணிகள், விசாரணையாளர்கள். வழக்குத் தொடுனர்கள் போன்றரையும் இவ்விசாரணைப் பொறிமுறையில் இணைத்துக் கொள்ளுமாறு கோரியிருந்தது. ஆனால், இப்போது கொண்டுவரப்பட்டுள்ள 46-1 என்ற தீர்மானமானத்தில் வெளித் தரப்புகளை இணைத்துக் கொள்ளுமாறு கோரவில்லை. விசாரணையை நடத்துமாறு தனித்து அரசாங்கத்தையே கோரியிருக்கிறது.
இந்த அரசாங்கம் பதவியேற்றவுடன், வெளிவிவகார அமைச்சர் ஐ.நா. மனிதவுரிமைச் சபைக்குச் சென்று, 30-1 தீர்மானத்திற்கு வழங்கிய கூட்டு அனுசரணையிலிருந்து விலகிக்கொள்வதாகவும், அதற்கு பதிலாக தாங்கள் உள்ளக விசாரணையை மேற்கொள்ளவிருப்பதாகவும் கூறியிருந்தார். அதனையே இத்தீர்மானத்திலும் கோரப்பட்டுள்ளது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மீதான எங்களுடைய குற்றச்சாட்டு இதுதான். மோதலில் ஒரு தரப்பான அரசாங்கத்தை விசாரிக்குமாறு கோரும் இயற்கை நீதிக்கு எதிரான தீர்மானத்தை ஆதரிப்பதன் மூலம் மோசமான இக்குற்றச்செயல்களால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு, அதாவது அவர்கள் பிரதிநிதித்துவப்படுத்தும் மக்களுக்குத் துரோகமிழைத்திருக்கிறது. அவ்வாறிருக்கையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நாட்டுக்குத் துரோகமிழைத்திருப்பதாக அரசாங்க கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் எவ்வாறு கூறமுடியும்?
இங்குள்ள உண்மை என்னவென்றால், அரசாங்கமானது சீன ஆதரவிலானது. அது சீனாவின் பக்கம் சாய்வதனைப் பயன்படுத்தி இந்தியாவும் மேற்குலகும் அதற்கு நெருக்குதலைக் கொடுக்க முனைகின்றன. அதன் பிரதிபலிப்புத்தான் இத்தீர்மானமே தவிர இத்தீர்மானத்தற்கும் நடைபெற்ற குற்றங்களுக்கான பொறுப்புக்கூறலுக்கும் ஒரு தொடர்பும் இல்லை. இதுவே நாங்கள் இத்தீர்மானம் பற்றி முன்வைக்கிற விமர்சனம்.
நீங்கள் உங்களது வெளிவிவகாரக் கொள்கைகளில் மாற்றத்தினைக் கொண்டுவரும்வரை இவ்வாறான அழுத்தங்களை எதிர்கொள்ள வேண்டியிருக்கும்.
துன்பகரமான உண்மை என்னவெனில் பாதிக்கப்பட்ட தரப்பினர், பெரும்பாலும் தமிழர்கள், இந்த புவிசார் அரசியல் மோதலில் சிக்குண்டுள்ளனர். பாதிக்கப்பட்டவர்கள் தொடர்ந்தும் பாதிக்கப்பட்டவர்களாக இருக்கிறார்கள் என்பதுதான் இங்குள்ள சோகம்.
 
 
Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • இதென்ன பிரமாதம்…. நான் ஒரு முடா குடியன் எண்டும்…லண்டனில் ஹரோ பகுதி பப் ஒன்றில் வெறியில் அரசியல் கதைக்கும் ஆள் நான் தான் என்று சத்தியம் செய்ததோடு… அந்த நபரோடு டெலிபோன் தொடர்பை ஏற்படுத்தி…அவரும் ஓம் நான் கோஷாந்தான் என சொல்லி…. இவரை ஒரு சில மாதம் ஓட்டு…ஓட்டு எண்டு ஓட்டி🤣. இன்னும் அந்த மனுசன் இவரை உசுபேத்தி கொண்டு இருக்கோ தெரியாது🤣.  
    • 28 MAR, 2024 | 11:04 AM   நியூமோனியாவினால் பாதிக்கப்பட்டு உயிரிழந்த 59 வயதுடைய நபரொருவரின் சடலத்தில் மேற்கொள்ளப்பட்ட பிரேத பரிசோதனையின் போது அவரது நுரையீரலில் காணப்பட்ட பல் ஒன்று பலாங்கொடை ஆதார வைத்தியசாலையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. உயிரிழந்தவர் பல வருட காலமாக நியூமோனியா மற்றும் சிறுநீரக நோயினால் பாதிக்கப்பட்டிருந்ததாக வைத்தியர்கள் தெரிவித்தனர். பலாங்கொடை ஆதார வைத்தியசாலையின் சட்ட வைத்திய அதிகாரியினால் மேற்கொள்ளப்பட்ட பிரேத பரிசோதனையின்போதே இந்த பல் கண்டுபிடிக்கப்பட்டதாக பலாங்கொடை ஆதார வைத்தியசாலையின் திடீர் மரண விசாரணை அதிகாரி பத்மேந்திர விஜேதிலக தெரிவித்தார். பலாங்கொடை - பின்னவலை பிரதேசத்தை சேர்ந்த எஸ் . கருணாரத்ன என்பவரின் நுரையீரலில் இருந்தே இவ்வாறு பல் கண்டுப்பிடிகக்ப்பட்டுள்ளது. இவர் மதுபானத்துக்கு அடியானவர் என்பதுடன் நியூமோனியா நோயினால் பாதிக்கப்பட்டு உயிரிழந்துள்ளதாக வைத்தியர்கள் தெரிவித்தனர். சில வருடங்களுக்கு முன்னர் இவரது பல் ஒன்று உடைந்துள்ள நிலையில், அந்த பல் நுரையீரலில் சிக்கியிருக்கலாம் என வைத்தியர்கள் சந்தேகிக்கின்றனர். https://www.virakesari.lk/article/179883
    • உற‌வே அவ‌ர் சொல்ல‌ வ‌ருவ‌து நாம் த‌மிழ‌ர் க‌ட்சி...........திமுக்கா ஆதிமுக்கா வீஜேப்பி இவ‌ர்க‌ளுக்கு அடுத்து 4வ‌து இட‌த்துக்கு தான் நாம் த‌மிழ‌ர் க‌ட்சி வ‌ரும் என்று எழுதி இருக்கிறார் சில‌ தொகுதிக‌ளில் மூன்றாவ‌து இட‌ம் நாம் த‌மிழ‌ர் க‌ட்சி வ‌ர‌லாம் இது அதான் க‌ந்த‌ப்பு அண்ணாவின் தேர்த‌ல் க‌ணிப்பு.................
    • Published By: SETHU    28 MAR, 2024 | 02:08 PM   சுவீடனில் புனித குர்ஆனை எரித்து சர்ச்சை ஏற்படுத்திய நபர், ஈராக்குக்கு நாடு கடத்தப்படவுள்ள நிலையில் நோர்வேயில் புகலிடம் கோருவதற்கு முயற்சிக்கிறார். ஈராக்கியரான சல்வான் மோமிகா எனும் இந்நபர், 2021 ஆம் ஆண்டில் சுவீடனில் வதிவிட உரிமை பெற்றவர்.  கடந்த பல வருடங்களில் அவர் பல தடவைகள் குர்ஆனை எரித்து சர்ச்சை ஏற்படுத்தினார்.  இச்சம்பவங்களுக்கு எதிராக பல நாடுகளில் ஆர்ப்பாட்டங்களும் வன்முறைகளும் இடம்பெற்றன.  கடந்த ஒக்டோபர் மாதம் அவரின் வதிவிட அனுமதி இரத்துச் செய்யப்பட்டது. வதிவிட அனுமதி கோரிக்கைக்கான விண்ணப்பத்தில் தவறான தகவல்களை அளித்திருந்தமை இதற்கு காரணம் என சுவீடன் அதிகாரிகள் தெரிவித்திருந்தனர்.  அவரை ஈராக்குக்கு நாடு கடத்த சுவீடன் நீதிமன்றம் அனுமதி அளித்தது. எனினும், ஈராக்கில் தனது உயிருக்கு ஆபத்துள்ளதாக மோமிகா தெரிவித்ததையடுத்து நாடு கடத்தல் தற்காலிகமாக ஒத்திவைக்கப்பட்டது. அவருக்கு வழங்கப்பட்டிருந்த புதிய தற்காலிக அனுமதிப்பத்திரம் எதிர்வரும் ஏப்ரல் 16 ஆம் திகதியுடன் காலவாதியாகிறது. இந்நிலையில், தான் நோர்வேயில் புகலிடம் கோரவுள்ளதாக சுவீடன் ஊடகமொன்றுக்கு அளித்த செவ்வியில் மோமிகா தெரிவித்துள்ளார். இது குறித்து நோர்வே அதிகாரிகள் கருத்து எதுவும் தெரிவிக்கவில்லை. https://www.virakesari.lk/article/179895
    • இருக்கலாம்.  இருக்க வேண்டும் என்பதே என் பிரார்தனையும் கூட🙏
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.