Jump to content

மனித குலத்தின் இனப் பெருக்கத்தை மாற்றியமைக்கும் நவீன சுற்றுச்சூழல்- அதிர்ச்சியளித்துள்ள ஆராய்ச்சி!


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

மனித குலத்தின் இனப் பெருக்கத்தை மாற்றியமைக்கும் நவீன சுற்றுச்சூழல்- அதிர்ச்சியளித்துள்ள ஆராய்ச்சி!

மனித குலத்தின் இனப் பெருக்கத்தை மாற்றியமைக்கும் நவீன சுற்றுச்சூழல்- அதிர்ச்சியளித்துள்ள ஆராய்ச்சி!

மனித குலத்தின் இனப் பெருக்கத்தை மாற்றியமைத்து அழிக்கும் செயற்பாட்டை சூழல் மாசுபாடு செய்துவருவதாக சுற்றுச்சூழல் விஞ்ஞானி, மருத்துவர் ஷன்னா ஸ்வான் கடும் எச்சரிக்கையை விடுத்துள்ளார்.

மனித இனப்பெருக்கம் எதிர்கொள்ளும் சவால்களை விவரிக்கும் ‘கவுண்ட் டவுன்’ என்ற தலைப்பிலான அவரது புத்தகத்தில் அவர் இந்த எச்சரிக்கையை விடுத்துள்ளார்.

இதன்படி, சூழல் மாசுபடுதல் மற்றும் பிளாஸ்டிக்குகளை உற்பத்திசெய்யப் பயன்படுத்தப்படும் பித்தலேட்டுகள் எனப்படும் இரசாயனங்கள், மனித ஆண்குறி சுருங்குதல், பிறப்புறுப்புகள் சிதைந்து போதல் மற்றும் மனித குழந்தைகள் தவறான பிறப்புறுப்புகளுடன் பிறக்கக் காரணமாகின்றன என அவர் ஆராய்ச்சியில் கண்டறிந்துள்ளார்.

ஹார்மோன் உற்பத்தி செய்யும் எண்டோகிரைன் அமைப்பைப் பாதிக்கும் பிளாஸ்டிக்குகளை உற்பத்தி செய்யும் போது பயன்படுத்தப்படும் வேதியியல், பித்தலேட்டுகளின் விளைவாக கருவுறுதல் விகிதத்தில் மனிதகுலம் ஒரு பெரும் நெருக்கடியை எதிர்கொள்கிறது என அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்த மாசுபாட்டின் விளைவாக, பிறக்கும் குழந்தைகள் சிறிய ஆண்குறியுடன் பிறக்கிறார்கள் எனவும் வைத்தியர் ஸ்வான் புத்தகத்தில் எழுதியுள்ளார்.

எலிகளில் காணப்பட்ட பித்தலேட் நோய்க்குறியை ஆராய்ச்சி செய்ததன் மூலம், கருக்கள் வேதிப்பொருளை வெளிப்படுத்தும்போது அவை சுருங்கிய பிறப்புறுப்புகளுடன் பிறக்க வாய்ப்புள்ளது என்பதைக் கண்டறிந்துள்ளதாக அவர் கூறியுள்ளார்.

பிளாஸ்டிக்கை மிகவும் நெகிழ்வானதாக மாற்றுவதில் பித்தலேட் என்ற வேதிப்பொருளுக்கு ஒரு தொழில்துறை பயன்பாடு உள்ள நிலையில், அது மனித வளர்ச்சிக்குத் தீங்கு விளைவிப்பதாக உள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

பித்தலேட்டுகள் ஈஸ்ட்ரோஜென் என்ற ஹார்மோனைப் பிரதிபலிக்கின்றன. இதனால் மனித உடலில் இயற்கையான ஹார்மோன்களின் உற்பத்தியை அவை சீர்குலைக்கின்றன என ஷன்னா ஸ்வான் குறிப்பிட்டுள்ளார்.

2017ஆம் ஆண்டில் வெளியிடப்பட்ட ஒரு ஆய்வில், 45 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஆரோக்கியமான ஆண்கள் சம்பந்தப்பட்ட 185 ஆய்வுகளை ஆராய்ந்த பின்னர், கடந்த நான்கு தசாப்தங்களில் மேற்கத்தேய நாடுகளில் ஆண்களிடையே விந்தணுக்களின் அளவு 50 வீதத்திற்கும் அதிகமாகக் குறைந்துள்ளது.

இந்நிலையில், கருவுறுதல் விகிதம் வேகமாகக் குறைந்து வருவதால் 2045 இற்குள் பெரும்பாலான ஆண்கள் விந்தணுக்களை உற்பத்தி செய்ய முடியாது என வைத்தியர் ஸ்வான் எச்சரிக்கையை விடுத்துள்ளார்.

https://athavannews.com/2021/1205586

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Popular Now

  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.