Jump to content

இந்திய கடலில் மீன் இருந்தால் ஏன் இலங்கை பகுதிக்குள் செல்கிறோம்’ – இராமேஸ்வரம் மீனவர் சங்க பிரதிநிதி கருத்து


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

இந்திய கடலில் மீன் இருந்தால் ஏன் இலங்கை பகுதிக்குள் செல்கிறோம்’ – இராமேஸ்வரம் மீனவர் சங்க பிரதிநிதி கருத்து

 
1-233-696x392.jpg
 24 Views

இந்திய பகுதியில் மீன் வளங்கள் மிகவும் குறைவு. இங்கு மீன் இல்லை என்றால் மீனவர்கள் என்ன செய்வார்கள்” என்று கேள்வி எழுப்புகிறார்  இராமேஸ்வரம் மீனவர் சங்க பிரதிநிதி ஜேசுராஜா.

மேலும் கச்சத்தீவு மற்றும் இலங்கை பகுதியில்தான் அதிக மீன்கள் கிடைக்கும் என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இந்திய மீனவர்கள் இலங்கை கடல் எல்லைக்குள் சென்று மீன் பிடி தொழிலில் ஈடுபடுவதால் அடிக்கடி அவர்கள் மீது இலங்கை கடற்படையால் தாக்குதல் நடத்தப்படுவதும் படகுடன் மீனவர்கள் கைது செய்யப்படுவதும் தொடர்ந்து வருகின்றது.

இந்நிலையில், தமது வாழ்வாதாரத்தை இழந்து வருவதாக தமிழகத்தின் இராமேஸ்வரத்தில் உள்ள மீனவர்கள் குற்றம் சுமத்துகின்றனர். அதே நேரம் இந்திய மீனவர்களின் அத்துமீறல் செயற்பாட்டினால் தமது வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதாக யாழ்ப்பாணம் மற்றும் முல்லைத்தீவு மீனவர்கள் குற்றம் சுமத்துகின்றனர்.

இந்த விவகாரம் தொடர்பாக பிபிசி செய்தி நிறுவனம் கண்ட நேர்காணலில், இராமேஸ்வரம் மீனவர் சங்க பிரதிநிதி ஜேசுராஜா, “இராமேஸ்வரத்தில் 750க்கும் மேற்பட்ட விசைப்படகுகள் மற்றும் 10,000க்கும் மேற்பட்ட நாட்டுப் படகுகள் வைத்து பல குடும்பங்கள் இந்த மீன்பிடி தொழிலைத்தான் நம்பியிருக்கிறார்கள்.

அப்படி இருக்கையில் இங்கிருந்து இருக்கும் மீன்பிடி எல்லை மிகவும் குறைவாக இருக்கிறது. எல்லை தாண்டுவதாக தமிழக மீனவர்களை இலங்கை இராணுவம் கைது செய்வது, சிறை வைப்பது, படகுகளை பறிமுதல் செய்வது, துப்பாக்கியால் சுடுவது போன்ற பிரச்னைகளால், மீன்பிடி தொழிலையே இங்கு பலரும் விட்டு செல்வதற்கான அபாய நிலை ஏற்பட்டுள்ளது” என்று அவர் தெரிவிக்கிறார்.

இருநாட்டு மீனவர்களும், அரசும் பேசி இதற்கு ஒரு நிரந்தர தீர்வு கொண்டுவராத பட்சத்தில், இன்னும் சில ஆண்டுகள் போனால், மீனுக்கு பெயர் போன இராமேஸ்வரத்தில் மீன்பிடி தொழிலே இருக்காது என்று  தெரிவித்துள்ளார்

 

https://www.ilakku.org/?p=45834

Link to comment
Share on other sites

சொந்த வீட்டில் பணம் இல்லாட்டி என்ன செய்வது? அடுத்த வீட்டில் திருடுவது!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இந்தியா - இலங்கை மீனவர் பிரச்னை: “பயமே எங்கள் வாழ்க்கையாகிவிட்டது” – செத்து பிழைக்கும் ராமேஸ்வரம் மீனவர்கள் #TamilNaduOnWheels

  • அபர்ணா ராமமூர்த்தி
  • பிபிசி தமிழ்
29 மார்ச் 2021, 05:46 GMT
புதுப்பிக்கப்பட்டது ஒரு மணி நேரத்துக்கு முன்னர்
ராமேஷ்வரம்

(தமிழ்நாட்டில் தேர்தல் களம் சூடுபிடித்துள்ள நிலையில், வெவ்வேறு துறையை சேர்ந்த நான்கு பெண் பைக்கர்கள் பிபிசி தமிழ் குழுவினரோடு சுமார் 1,300 கி.மீ., பயணித்து சாமானியர்களின் வாழ்வாதார பிரச்னைகளை பேசி, அந்த கதைகளை கேட்டு காணொளி வாயிலாக உங்களிடம் பகிர்ந்து கொள்கிறார்கள். அந்த வரிசையில், இந்தப் பயணம் குறித்து பிபிசி தமிழ் வெளியிடும் தொடர் கட்டுரைகளின் 4வது மற்றும் இறுதிப் பகுதி இது.)

இடம் - ராமேஸ்வரம், தமிழ்நாடு

ஒவ்வொரு நாளும் நீங்கள் பணிக்கு செல்லும்போது, நாம் மீண்டும் உயிருடன் திரும்பி வருவோமா என்ற அச்சம் இருந்தால் உங்கள் வாழ்க்கை எப்படி இருக்கும் என்று நினைத்து பாருங்கள்.

ராமேஸ்வர மீனவர்களின் அன்றாட நிலையே இதுதான்.

"வீட்டில் இருந்து கிளம்பும்போது ஒவ்வொரு முறையும், உயிருடன் திரும்பி வந்து விடுவோம், கவலைப்பட வேண்டாம் என்று சொல்லிவிட்டு கிளம்புவேன். ஆனால், நான் வீடு திரும்பும் வரை அது நிச்சயம் இல்லை. வீட்டிலும் அவர்கள் பயந்து கொண்டேதான் இருப்பார்கள். இப்படித்தான் என் வாழ்க்கை நகர்கிறது. பயம் எங்களுக்கு பழகிப் போய்விட்டது" என்கிறார் ராமேஸ்வரத்தை சேர்ந்த சபரி.

மீன்பிடிக்க செல்வது அவர்கள் தொழில். அவர்களின் வாழ்வாதாரம். ஆனால், அதனை சுமூகமாக செய்ய முடியாத நிலை.

"உயிரைக் கையில் பிடித்துக் கொண்டு தினம் தினம் செத்துப் பிழைப்பது எங்கள் வாழ்க்கையாகிவிட்டது" என்கிறார் அங்குள்ள மீனவர் ஒருவர்.

தமிழக மீனவர்கள் இலங்கை ராணுவத்தால் சிறை பிடிப்பு, மீனவர்களின் படகுகளை பிடித்த வைத்த இலங்கை என மீனவர்கள் பிரச்னை குறித்து நாம் பல ஆண்டுகளாக செய்திகளில் பார்த்து வருகிறோம்.

ஆனால், அவர்கள் படும் துன்பங்களை பொதுமக்களுக்கு தெளிவாக தெரியப்படுத்த பிபிசி தமிழ் குழு ராமேஸ்வரம் பயணித்தது. மீனவர்களுடன் படகில் பிபிசி குழுவும் கடலுக்குள் சென்றது.

"பயமே எங்கள் வாழ்க்கை"

"முன்பெல்லாம் காலை 6 மணிக்கு மீன் பிடிக்க சென்று, மறுநாள் காலை 6 கரை திரும்புவோம். ஆனால் இப்போது மாலை 3 மணிக்கு சென்றுவிட்டு மறுநாள் காலை 5-6 மணிக்கு திரும்புகிறோம். இலங்கை பிரச்னையால் இந்த நிலை" என்கிறார் நாம் பயணித்த படகை இயக்கிய சபரி.

காலை வேளையில் சென்றால் இலங்கை கடற்படை கண்ணில் மாட்டிவிடுவோமோ என்று அச்சமாக இருக்கும். மாலை அந்தப்பக்கம் அவ்வளவு ஆட்கள் இருக்க மாட்டார்கள். அதனால் 24 மணி நேர மீன்பிடிப்பை விடுத்து, இவ்வாறு செய்கிறோம் என்று அவர் தெரிவித்தார்.

பிபிசி குழு

"ஒரு வேளை இலங்கை கடற்படையிடம் மாட்டிக் கொண்டுவிட்டால், விரைவாக போட்டை திருப்பி இந்தியா பக்கம் வந்துவிட வேண்டும். இல்லையென்றால் உயிருக்கு உத்தரவாதம் இல்லை. அவர்கள் என்ன மனநிலையில் இருப்பார்கள் என்று சொல்ல முடியாது. சில நேரத்தில் சுட்டாலும் சுட்டுவிடுவார்கள்" என்று சபரி கூறும் போது அந்த மக்களின் அச்சத்தை நம்மால் உணர முடிகிறது.

பிபிசி குழு

" நாங்கள் இந்தியா பக்கத்தில் இருந்தும் இலங்கை கடற்படையினர் எங்களை பிடித்தாலும், நாங்கள் யாரும் பேசமுடியாது. அவர்கள் என்ன சொல்கிறார்களோ அதுதான். கையில் துப்பாக்கி வைத்திருப்பார்கள். அடித்தாலும் மிதித்தாலும் வாங்கித்தான் ஆக வேண்டும்" என்று அவர் கூறுகிறார்.

"குடும்பத்துடன் தற்கொலை செய்து கொள்வதைத் தவிற வேறு வழியில்லை"

சபரியை தொடர்ந்து அந்தப் படகில் பயணம் செய்த சுரேஷ் என்ற மீனவரை சந்தித்துப் பேசினோம். இலங்கை கடற்படையிடம் தனது படகை பறிகொடுத்த அவர், தற்போது தன் மொத்த வாழ்வாதாரத்தையும் இழந்து நிற்கிறார்.

சுரேஷ்

பட மூலாதாரம்,GETTY IMAGES

"கடந்த மே மாதம்தான் புது படகு எடுத்தேன். 45 லட்சம் ரூபாய் ஆனது. அதில் 15 லட்சம் ரூபாய், வெளியில்தான் வட்டிக்கு கடன் வாங்கினேன். டிசம்பர் மாதம் நான் இலங்கை கடல்பகுதியில் மீன் பிடித்ததாக கூறி என் படகை இலங்கை கடற்படை எடுத்துக் கொண்டது. இப்போது தொழில் செய்யப் படகும் இல்லை. கடன் கட்ட வழியும் இல்லை" என்கிறார் வேதனையுடன்.

சுமார் 39 நாட்கள் இலங்கை கட்டுப்பாட்டில் இருந்த சுரேஷும் அவரது மகனும் இந்தாண்டு ஜனவரி மாதம் விடுவிக்கப்பட்டனர்.

தங்களின் செல்ஃபோன், படகு, ஜிபிஎஸ் கருவியைகூட அவர்கள் திருப்பி கொடுக்கவில்லை என்று அவர்கள் கூறுகின்றனர்.

"பிற படகுகளில் மீன்பிடிக்க வேலைக்கு சென்றாலும், கடனை அடைக்கும் அளவுக்கு காசு இல்லை. அது சாப்பாட்டிற்கே சரியாக இருக்கிறது. கடன்காரர்கள் வீட்டுக்கு வந்து கடனை திரும்பித்தரும்படி மோசமாக பேசுகிறார்கள். இதனாலேயே இரவு நேரத்தில்கூட நாங்கள் வீட்டில் தூங்குவதில்லை. என் படகை திரும்பப் பெற மத்திய மாநில அரசுகள் உதவ வேண்டும். இல்லையென்றால் குடும்பத்துடன் தற்கொலை செய்து கொள்வதை தவிற வேறு வழியில்லை" என்கிறார் சுரேஷ்.

இதனால் மகனுடைய கல்லூரி படிப்புக்கு கட்டணம் செலுத்த முடியாமல் படிப்பை பாதியிலேயே நிறுத்திவிட்டார் சுரேஷ்.

தமிழக மீனவர்கள் எல்லை தாண்டி மீன்பிடிக்க செல்வது ஏன்?

பல ஆண்டுகளாக இந்த விவகாரம் தொடர்ந்து கொண்டே இருக்கிறது. கடலில் எல்லை எப்படி எல்லையை வரையறுப்பது என்று ஒரு பக்கம் வாதம் இருந்தாலும், சிலர் தெரிந்தே இலங்கை கடல் பக்கம் சென்று மீன் பிடிப்பதாக கூறப்படுகிறது.

இதுகுறித்து ராமேஸ்வரம் மீனவர் சங்க பிரதிநிதி ஜேசுராஜாவிடம் கேட்டோம்.

ஜேசுராஜா

"ராமேஸ்வரத்தில் இருந்து ஒரு சில கிலோ மீட்டர் தூரத்திலேயே இலங்கை கடல்பகுதி வந்துவிடும். மொத்தம் 12 நாட்டிக்கல் மைல் வரைதான் இந்திய எல்லை.

Instagram பதிவை கடந்து செல்ல, 1

Instagram பதிவின் முடிவு, 1

இந்திய பகுதியில் மீன் வளங்கள் மிகவும் குறைவு. கச்சத்தீவு மற்றும் இலங்கை பகுதியில்தான் அதிக மீன்கள் கிடைக்கும். இங்கு மீன் இல்லை என்றால் மீனவர்கள் என்ன செய்வார்கள்" என்று கேள்வி எழுப்புகிறார் ஜேசுராஜா.

ராமேஸ்வரத்தில் 750க்கும் மேற்பட்ட விசைப்படகுகள் மற்றும் 10,000க்கும் மேற்பட்ட நாட்டுப்படகுகள் வைத்து பல குடும்பங்கள் இந்த மீன்பிடி தொழிலைத்தான் நம்பியிருக்கிறார்கள்

"அப்படி இருக்கையில் இங்கிருந்து இருக்கும் மீன்பிடி எல்லை மிகவும் குறைவாக இருக்கிறது. எல்லை தாண்டுவதாக தமிழக மீனவர்களை இலங்கை ராணுவம் கைது செய்வது, சிறை வைப்பது, படகுகளை பறிமுதல் செய்வது, துப்பாக்கியால் சுடுவது போன்ற பிரச்னைகளால், மீன்பிடி தொழிலையே இங்கு பலரும் விட்டு செல்வதற்கான அபாய நிலை ஏற்பட்டுள்ளது" என்று அவர் தெரிவிக்கிறார்.

இருநாட்டு மீனவர்களும், அரசும் பேசி இதற்கு ஒரு நிரந்தர தீர்வு கொண்டுவராத பட்சத்தில், இன்னும் சில ஆண்டுகள் போனால், மீனுக்கு பெயர் போன ராமேஸ்வரத்தில் மீன்பிடி தொழிலே இருக்காது என்று ஜேசுராஜா கவலை தெரிவித்தார்.

டீசல் விலை உயர்வால் பாதிக்கப்பட்ட மீனவர்கள்

இவ்வளவு பிரச்னைகளுக்கு மத்தியில் நாங்கள் கடலுக்கு செல்கிறோம். ஆனால், டீசல் விலை உயர்வு எங்கள் மேல் விழுந்த இன்னொரு பெரிய இடி என்கிறார் எடிசன்.

எடிசன்

"நான் ராமேஸ்வரம் கடற்கரைக்கு வந்து 33 ஆண்டுகள் ஆகிறது. நான் இங்கு வரும்போது, டீசல் விலை லிட்டர் 3 ரூபாய் 36 காசுக்கு விற்றது. அப்போது, ஒரு கிலோ இறாலுடைய விலை 700 - 800 ரூபாய். ஆனால், இப்போது டீசல் விலை லிட்டர் 87 ரூபாய்க்கு விற்கிறது. இன்று இறால் ஒரு கிலோ 350 ரூபாய். எங்களுக்கு எப்படி கட்டுப்படி ஆகும்? அதிக வருமானம் வேண்டும். அப்போது தான் கட்டுப்படி ஆகும். எனவேதான் நாங்கள் இலங்கை பகுதிக்கு மீன் பிடிக்க செல்லும் சூழ்நிலைக்கு தள்ளப்படுகிறோம்.

உதாரணமாக இன்று இறால் விலை 1200-1300 ரூபாய்க்கு விற்குமானால் நாங்கள் இலங்கை பகுதிக்கு போக வேண்டிய சூழலே இருக்காது" என்கிறார் மீன் தொழில் செய்யும் எடிசன்

"எல்லை குறைவாக இருக்கிறது. இறந்தாலும் பரவாயில்லை, குடும்பம் நடத்தனும் என்ற எண்ணத்தில் மீனவர்கள் எல்லை தாண்டுகிறார்கள்" என்கிறார் எடிசன்.

நியாயமான விலை வேண்டும்

தக்காளிக்கு அரசு விலை நிர்ணயம் செய்கிறது. ஆனால் மீன்களுக்கு உரிய விலை இல்லை. கேக்கற காசுக்கு கொடுக்க வேண்டிய சூழல் நிலவுகிறது. அதனால்தான் அதிக மீன்கள் பிடிக்க வேண்டும் என்ற எண்ணத்தில் எல்லை தாண்டிப் போவதாக அங்குள்ள மீனவர்கள் சிலர் தெரிவிக்கின்றனர்.

டீசல் விலையை குறைத்து, எங்கள் மீன்களுக்கு உரிய விலையை அரசு நிர்ணயித்தால், இந்த பிரச்னை சற்று குறையும் என்பது அவர்கள் கருத்தாக இருக்கிறது.

டீசல் உயர்வு, மீன்களுக்கு உரிய விலை இல்லை, மீன்பிடி படகில் பயன்படுத்தப்படும் கருவிகளுக்கு ஜி.எஸ்.டி வரி போன்ற சுமைகளால் தங்கள் வாழ்கை சுமை அதிகரித்துள்ளதாக அவர்கள் தெரிவிக்கின்றனர்.

ராமேஸ்வரம் என்றால் ராமநாதசுவாமி கோயிலுக்கு அடுத்து மீன்பிடி தொழிலுக்கு பெயர் போன இடம். இந்த நிலை மாறி வரும் ஆண்டுகளில் மீன்பிடி தொழில் அழிந்து விடுமோ என்ற அச்சத்தை அவர்களிடம் காண முடிந்தது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தடை செய்யப்பட்ட இழுவை படகுகள் மூலம் மீன்பிடித்தால்  எப்படி மீன் வளம் பெருகும் ? பக்கத்து நாட்டு மீன் வளத்தை  கொள்ளையடிப்பது மாத்திரம் அல்ல அங்கும் மீன் பெருகும் கண்டமேடைகளை மொட்டையடிப்பதால் தற்போதே அங்கும் மீன் வளம் குறைந்துவிட்டது எல்லாம் அரசியல் ஆகிவிட்டது மீனவர்களை கைது  செய்வதை விட ரோலர்களை இழுவைப்படகுகளை பறிமுதல் செய்தால்தான் தீர்வு ஏனென்றால் முல்லைத்தீவு கடல் மட்டும் வரும் இவர்களால் கேரளவுக்கோ அல்லது ஆந்திர பிரதேச கடலிலோ மீன்  பிடிக்க முடியாது காரணம் இவர்களை அங்கு கண்டாலே அங்குள்ள மீனவ சங்கம் கடலிலே வைத்து கலைத்து  விடுவார்கள் அதிக மீனுக்கு ஆசைப்பட்டு உடனடி லாபத்துக்கு ஆசைப்பட்டு முதலாளிகள் திமுகா பினாமிகள் சேட்டு பாய்கள் தான் இவ்வளவு பிரச்சனையும் எழ காரணம் அப்பாவி தமிழ் மீனவர்களின் உயிரும் ஆபத்தும்  தேடி செல்கிறார்கள் இந்த விடயம் சிங்கள கடல்படைக்கும் தெரியும் தெரிந்தும் தமிழ்மீனவர்களின் வாழ்வில் விளையாடுவது அவர்களுக்கு பொழுது போக்கு .

Link to comment
Share on other sites

5 hours ago, நிழலி said:

சொந்த வீட்டில் பணம் இல்லாட்டி என்ன செய்வது? அடுத்த வீட்டில் திருடுவது!

 

2 hours ago, பெருமாள் said:

தடை செய்யப்பட்ட இழுவை படகுகள் மூலம் மீன்பிடித்தால்  எப்படி மீன் வளம் பெருகும் ? பக்கத்து நாட்டு மீன் வளத்தை  கொள்ளையடிப்பது மாத்திரம் அல்ல அங்கும் மீன் பெருகும் கண்டமேடைகளை மொட்டையடிப்பதால் தற்போதே அங்கும் மீன் வளம் குறைந்துவிட்டது எல்லாம் அரசியல் ஆகிவிட்டது மீனவர்களை கைது  செய்வதை விட ரோலர்களை இழுவைப்படகுகளை பறிமுதல் செய்தால்தான் தீர்வு ஏனென்றால் முல்லைத்தீவு கடல் மட்டும் வரும் இவர்களால் கேரளவுக்கோ அல்லது ஆந்திர பிரதேச கடலிலோ மீன்  பிடிக்க முடியாது காரணம் இவர்களை அங்கு கண்டாலே அங்குள்ள மீனவ சங்கம் கடலிலே வைத்து கலைத்து  விடுவார்கள் அதிக மீனுக்கு ஆசைப்பட்டு உடனடி லாபத்துக்கு ஆசைப்பட்டு முதலாளிகள் திமுகா பினாமிகள் சேட்டு பாய்கள் தான் இவ்வளவு பிரச்சனையும் எழ காரணம் அப்பாவி தமிழ் மீனவர்களின் உயிரும் ஆபத்தும்  தேடி செல்கிறார்கள் இந்த விடயம் சிங்கள கடல்படைக்கும் தெரியும் தெரிந்தும் தமிழ்மீனவர்களின் வாழ்வில் விளையாடுவது அவர்களுக்கு பொழுது போக்கு .

என்னவாக இருந்தாலும் தொப்புள்கொடி உறவுகள் அல்லவா? மீன்களை பகிர்ந்து வாழலாம் இல்லையா? உறவுகள் என்றுதானே எங்களிடம் வருகிறார்கள்? ஆந்திரா, கேரளா எல்லாம் தொப்புள்கொடியல்லவே? அண்ணன் சீமானிடம் தீர்வு கேட்போமா?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
19 minutes ago, கற்பகதரு said:

 

என்னவாக இருந்தாலும் தொப்புள்கொடி உறவுகள் அல்லவா? மீன்களை பகிர்ந்து வாழலாம் இல்லையா? உறவுகள் என்றுதானே எங்களிடம் வருகிறார்கள்? ஆந்திரா, கேரளா எல்லாம் தொப்புள்கொடியல்லவே? அண்ணன் சீமானிடம் தீர்வு கேட்போமா?

நான் இம்முறை தீர்வு  சீமானிடம் கேட்கமாட்டேன் சீமானை வென்ட இனவெறியர்  ஒருத்தர் இருக்கார் அவரிடம் கேட்கலாம் என்று இருக்கிறன். நீங்களும் வருகிரியலா ?

ஆஸ்கார் மேடையில் வைத்து இனவெறி ஆடியது பத்தாமல் அங்கு உள்ளூர் மேடைகளிலும் இனவெறி கொண்டு ஆடுகிறார் அவரிடம் தீர்வு கேட்க்கலாமா ?

Link to comment
Share on other sites

1 hour ago, பெருமாள் said:

நான் இம்முறை தீர்வு  சீமானிடம் கேட்கமாட்டேன் சீமானை வென்ட இனவெறியர்  ஒருத்தர் இருக்கார் அவரிடம் கேட்கலாம் என்று இருக்கிறன். நீங்களும் வருகிரியலா ?

ஆஸ்கார் மேடையில் வைத்து இனவெறி ஆடியது பத்தாமல் அங்கு உள்ளூர் மேடைகளிலும் இனவெறி கொண்டு ஆடுகிறார் அவரிடம் தீர்வு கேட்க்கலாமா ?

இவ்வளவு துணிச்சலாக இந்த களத்தில் சீமானை இனவெறியர் என்று எழுதியதற்கு பாராட்டுகள். ஆஸ்கார் மேடை சம்பவத்தை நான்   போதிய அளவு அறியவில்லை. பாடகர் ஒருவர் ஏதோ தமிழில் மட்டும் பாடுவேன் என்று எங்கோ படித்த நினைவு மட்டுமே.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, கற்பகதரு said:

இவ்வளவு துணிச்சலாக இந்த களத்தில் சீமானை இனவெறியர் என்று எழுதியதற்கு பாராட்டுகள். ஆஸ்கார் மேடை சம்பவத்தை நான்   போதிய அளவு அறியவில்லை. பாடகர் ஒருவர் ஏதோ தமிழில் மட்டும் பாடுவேன் என்று எங்கோ படித்த நினைவு மட்டுமே.

உங்களுக்கு விளங்கியது அவ்வளவுதான்!  சீமானை எதிர்ப்பவர்கள் சிந்தனை இவ்வளவு குறுகியது என்று என்னால் இன்றுதான் கண்டு கொண்டேன் அதிலும் பாருங்க ஆஸ்கார் சம்பவமே தெரியாதவர்கள் எல்லாம் சீமானுக்கு எதிராக கம்பு சுற்றுவது .

ரகுமான் தமிழில் கதைக்கனும்  என்கிறார் அப்படி பார்த்தால் ரகுமானையும் தமிழ் இனவெறியர் என்போம் ஏனெனில் தமிழ் தமிழ் என்று கதைத்தால் உடனே அவரை இனவெறியர் என்று துரோகி பட்டம் கொடுப்பது போல் கண்ணை மூடிக்கொண்டு இனவெறியர்  என்ற பட்டத்தை உடனே கொடுக்கிறோம் ஆதலால் இன்றில் இருந்து தமிழுக்காக கதைப்பவர்கள்  அனைவரும் இனவெறியர்  என்போம் என்று தமிழனுக்கு என்று ஒரு நாடு பிறக்குதோ அது மட்டும் இனவெறியர் கவுரவமாக அழைப்போம் நாடு அமைவது ஆயிரம் ஆண்டுகள் ஆனலும் அது மட்டும் அழைத்து கொண்டு இருப்போம் .

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, கற்பகதரு said:

இவ்வளவு துணிச்சலாக இந்த களத்தில் சீமானை இனவெறியர் என்று எழுதியதற்கு பாராட்டுகள். ஆஸ்கார் மேடை சம்பவத்தை நான்   போதிய அளவு அறியவில்லை. பாடகர் ஒருவர் ஏதோ தமிழில் மட்டும் பாடுவேன் என்று எங்கோ படித்த நினைவு மட்டுமே.

கற்பகதரு என்று ஏன் தங்களுக்கு பெயர் சூட்டினீர்கள்? அங்கே இன வெறி தெரியவில்லையா? :cool:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, கற்பகதரு said:

 ஆஸ்கார் மேடை சம்பவத்தை நான்   போதிய அளவு அறியவில்லை.

ஒஸ்காரில் தமிழ் பேசிய தமிழன் என்று சிலர் ஓவராக புகழ்ந்து சொன்னதால் நானும் சமீபத்தில் தான் இதை பற்றி அறிந்தேன். Slumdog Millionaire என்ற இந்தியாவில் எடுக்கபட்ட ஆங்கில படத்திற்கு தமிழ்நாட்டை சேர்ந்த ரகுமான் இசை அமைத்தார் இசைக்காக அவருக்கு ஒஸ்கார் பரிசு கிடைத்த விழாவில் அவர் ஆங்கிலத்தில்  பேசிவிட்டு ஒரே ஒரு வசனம் எல்லா புகழும் இறைவனுக்கே என்ற முஸ்லிம் மத வசனத்தை மட்டும் தமிழில் சொல்லியுள்ளார்.

4 hours ago, கற்பகதரு said:

பாடகர் ஒருவர் ஏதோ தமிழில் மட்டும் பாடுவேன் என்று எங்கோ படித்த நினைவு மட்டுமே.

அவர் தமிழ்பாட்டை விட ஹிந்தி பாடல்கள் தான் அதிகம் நிகழ்ச்சிகளில் பாடுவாராம்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 minutes ago, விளங்க நினைப்பவன் said:

ஒஸ்காரில் தமிழ் பேசிய தமிழன் என்று சிலர் ஓவராக புகழ்ந்து சொன்னதால் நானும் சமீபத்தில் தான் இதை பற்றி அறிந்தேன். Slumdog Millionaire என்ற இந்தியாவில் எடுக்கபட்ட ஆங்கில படத்திற்கு தமிழ்நாட்டை சேர்ந்த ரகுமான் இசை அமைத்தார் இசைக்காக அவருக்கு ஒஸ்கார் பரிசு கிடைத்த விழாவில் அவர் ஆங்கிலத்தில்  பேசிவிட்டு ஒரே ஒரு வசனம் எல்லா புகழும் இறைவனுக்கே என்ற முஸ்லிம் மத வசனத்தை மட்டும் தமிழில் சொல்லியுள்ளார்.

அவர் தமிழ்பாட்டை விட ஹிந்தி பாடல்கள் தான் அதிகம் நிகழ்ச்சிகளில் பாடுவாராம்

உங்களால் அதே மேடையில் ஹிந்தி  பேசும் தொகுப்பாளினியின் பேச்சை  நிற்பாட்ட முடியுமா ? தூக்கி சடைந்து விடுவார்கள் ரகுமான் ஏதோ  செய்கிறார் விட்டு விடுங்கள் .

Link to comment
Share on other sites

2 hours ago, குமாரசாமி said:

கற்பகதரு என்று ஏன் தங்களுக்கு பெயர் சூட்டினீர்கள்? அங்கே இன வெறி தெரியவில்லையா? :cool:

இது மொழி வெறி ஐயா, இனவெறியல்ல, போர்த்துகேய வம்சாவளியில் மதவாச்சியில்சிங்களவனாக ஏறி, யாழ்ப்பணத் தமிழில் மயங்கி தமிழனாக இறங்க  மொழி வெறி தானே காரணம்? எப்படி இனவெறியாகும்? 🙃

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
10 hours ago, கற்பகதரு said:

போர்த்துகேய வம்சாவளியில் மதவாச்சியில்சிங்களவனாக ஏறி, யாழ்ப்பணத் தமிழில் மயங்கி தமிழனாக இறங்க  

அப்படியா, யாரவன் அப்படி மாறியவன், அடியேன் எங்களுக்கு அறியதரலாம் அல்லவா

Link to comment
Share on other sites

11 hours ago, கற்பகதரு said:

இது மொழி வெறி ஐயா, இனவெறியல்ல, போர்த்துகேய வம்சாவளியில் மதவாச்சியில்சிங்களவனாக ஏறி, யாழ்ப்பணத் தமிழில் மயங்கி தமிழனாக இறங்க  மொழி வெறி தானே காரணம்? எப்படி இனவெறியாகும்? 🙃

 

1 hour ago, உடையார் said:

அப்படியா, யாரவன் அப்படி மாறியவன், அடியேன் எங்களுக்கு அறியதரலாம் அல்லவா

அடியேன் தான், என்ன, அடையாளமே தெரியவில்லையா? கருந்தோல் இல்லாத ஈழத்தமிழர் எல்லாம் போர்த்துகேயர் காலத்து போர்வீரர் வழிவந்தோர். டச்சுகாரர் வந்து அடித்து கலைக்க, எங்கள் முப்பாட்டிகளை அம்போ என்று விட்டுவிட்டு இந்த போர்வீரர்கள் ஓடிவிட்டார்கள். நாங்கள் எல்லாம் கருகாத ரோஸ்பாண் ஆகி விட்டோம். Roast Panனில் பிறந்து  ரோஸ்பாண் ஆகிவிட்டோம்.😁

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 29/3/2021 at 13:16, கற்பகதரு said:

 

என்னவாக இருந்தாலும் தொப்புள்கொடி உறவுகள் அல்லவா? மீன்களை பகிர்ந்து வாழலாம் இல்லையா? உறவுகள் என்றுதானே எங்களிடம் வருகிறார்கள்? ஆந்திரா, கேரளா எல்லாம் தொப்புள்கொடியல்லவே? அண்ணன் சீமானிடம் தீர்வு கேட்போமா?

சொந்த வீட்டிற்குள்ளேயே  கூட்டிக் கொடுக்கும் உங்கள் பொன்னான குணம் யாருக்கு வரும். 🤥

16 hours ago, கற்பகதரு said:

இது மொழி வெறி ஐயா, இனவெறியல்ல, போர்த்துகேய வம்சாவளியில் மதவாச்சியில்சிங்களவனாக ஏறி, யாழ்ப்பணத் தமிழில் மயங்கி தமிழனாக இறங்க  மொழி வெறி தானே காரணம்? எப்படி இனவெறியாகும்? 🙃

நீங்கள் EPDP அல்லது EPRLF வென எனக்கொரு சந்தேகம். உங்களின் எழுத்துக்களின் தரம் அப்படியே அவர்களை ஒத்திருக்கிறது. பெயரும் ஒத்துப் போகிறது. 

4 hours ago, கற்பகதரு said:

 

அடியேன் தான், என்ன, அடையாளமே தெரியவில்லையா? கருந்தோல் இல்லாத ஈழத்தமிழர் எல்லாம் போர்த்துகேயர் காலத்து போர்வீரர் வழிவந்தோர். டச்சுகாரர் வந்து அடித்து கலைக்க, எங்கள் முப்பாட்டிகளை அம்போ என்று விட்டுவிட்டு இந்த போர்வீரர்கள் ஓடிவிட்டார்கள். நாங்கள் எல்லாம் கருகாத ரோஸ்பாண் ஆகி விட்டோம். Roast Panனில் பிறந்து  ரோஸ்பாண் ஆகிவிட்டோம்.😁

சொந்த வீட்டிற்குள்ளேயே கூட்டியும் காட்டியும் கொடுப்பீர்கள் என்கிறீர்கள். 

Link to comment
Share on other sites

13 minutes ago, Kapithan said:

நீங்கள் EPDP அல்லது EPRLF வென எனக்கொரு சந்தேகம். உங்களின் எழுத்துக்களின் தரம் அப்படியே அவர்களை ஒத்திருக்கிறது. பெயரும் ஒத்துப் போகிறது. 


இன்னமும் சந்தேகமா? 😄

douglas-devananda.jpg

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • கனிய மணலில் இருந்து சிர்கோனியம் (Zirconium) எனப்படும் தனிமத்தை பிரித்தெடுக்கும் தொழில்நுட்பத்தை இலங்கை ஆய்வாளர்கள் குழுவொன்று கண்டறிந்துள்ளது. ரஜரட்ட பல்கலைக்கழகத்தின் ஆராய்ச்சியாளர்கள் இதற்கான ஆய்வை மேற்கொண்டிருந்தனர். பிரித்தெடுக்கப்பட்ட சிர்கோனியம் தீவிர வெப்பநிலையைத் தாங்கும் திறன் கொண்ட வலுவான தயாரிப்புகளை உருவாக்க பயன்படுத்தப்படுவதாக ரஜரட்ட பல்கலைக்கழகத்தின் உப வேந்தர் பேராசிரியர் சஞ்சீவனி கிங்கத்தர தெரிவித்துள்ளார். புல்மோட்டை தாது மணல் படிவுகளில் சிர்கோனியம் இருப்பதை அடையாளம் காண முடியும். கனிய மணலில் இருந்து சிர்கோனியத்தை பிரித்தெடுக்கும் முறைமைக்காக ரஜரட்ட பல்கலைக்கழகத்திற்கு காப்புரிமை கிடைக்கப்பெற்றுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். சிர்க்கோனியம் (Zirconium) என்பது Zr என்ற மூலக்கூற்று வாய்ப்பாடு கொண்ட ஒரு தனிமமகும். இதன் அணு எண் 40 ஆகும். இத்தனிமத்தின் அணு நிறை 91.22, அடர்த்தி 6490 கிகி /கமீ, உருகு நிலையும், கொதி நிலையும் முறையே 1852 பாகை செல்சியஸ் ,4371 பாகை செல்சியஸ் ஆகும். https://thinakkural.lk/article/297390
    • தமிழ்நாட்டு தொகுதிகளே 39 என்று சொன்னார்கள். சீமான் கட்சி 4 இடங்களில் வெற்றி பெற்றால் 35  இடங்களில் தானே  திமுக கூட்டணி வெற்றிபெற முடியும்
    • சின்னங்களை ஒதுக்குவதில் பாரபட்சமாகச் செயல்படுகிறதா தேர்தல் ஆணையம்? பட மூலாதாரம்,DURAI VAIKO/FACEBOOK கட்டுரை தகவல் எழுதியவர், நந்தினி வெள்ளைச்சாமி பதவி, பிபிசி தமிழ் 28 மார்ச் 2024, 02:34 GMT புதுப்பிக்கப்பட்டது 4 மணி நேரங்களுக்கு முன்னர் தமிழகத்தில் புதன்கிழமையுடன் வேட்புமனுத் தாக்கல் நிறைவடைந்துவிட்டது. மதிமுக, விடுதலைச் சிறுத்தைகள், நாம் தமிழர் என, அங்கீகரிக்கப்படாத அரசியல் கட்சிகளுக்கு முந்தைய தேர்தல்களில் ஒதுக்கப்பட்ட சின்னத்தை இந்த தேர்தலில் தேர்தல் ஆணையம் ஒதுக்கவில்லை. தேர்தல் ஆணையம் `ஒருதலைபட்சமாக` செயல்படுவதால்தான் நீதிமன்றம் வரை சென்றும் கேட்ட சின்னம் கிடைக்கவில்லை என அக்கட்சிகள் குற்றம்சாட்டுகின்றன. அதேவேளையில், பாஜக கூட்டணியில் உள்ள பாமக, தமிழ் மாநில காங்கிரஸ், அமமுக போன்ற அங்கீகரிக்கப்படாத கட்சிகளுக்கு அவர்கள் கேட்ட சின்னங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதற்கு பின்னால் 'பாஜகவின் தலையீடு' இருப்பதாகவும் எதிர்க்கட்சிகள் விமர்சித்துள்ளன. சீமானின் நாம் தமிழர் கட்சி ஆரம்பத்தில் இரட்டை மெழுகுவர்த்தி சின்னத்தில் போட்டியிட்டது. பின்னர், அக்கட்சிக்கு கரும்பு விவசாயி சின்னம் ஒதுக்கப்பட்டது. இந்த தேர்தலிலும் அதே சின்னத்தை தேர்தல் ஆணையத்தில் கோரியிருந்தது நாம் தமிழர் கட்சி. ஆனால், அந்த சின்னத்தை கர்நாடகாவை சேர்ந்த பாரதிய மக்கள் ஐக்கிய கட்சி என்ற கட்சிக்கு ஒதுக்கியதால், நாம் தமிழர் கட்சிக்கு அச்சின்னத்தை ஒதுக்கவில்லை என்கிறது தேர்தல் ஆணையம்.   பட மூலாதாரம்,THIRUMAVALAVAN FB படக்குறிப்பு, தொல். திருமாவளவன் நாம் தமிழர் கட்சி காலம் தாழ்த்தி விண்ணப்பித்ததால் அச்சின்னத்தைத் தர முடியவில்லை என்றும் தேர்தல் ஆணையம் கூறியது. உச்ச நீதிமன்றம் சென்றும் கரும்பு விவசாயி சின்னத்தை நாம் தமிழர் கட்சியால் பெற முடியவில்லை. அக்கட்சிக்கு ‘மைக்’ சின்னத்தை தேர்தல் ஆணையம் ஒதுக்கியது. இந்த முடிவுக்கு சீமான் தொடர்ச்சியாக எதிர்ப்பு தெரிவித்து வருகிறார். அதேபோன்று, இரு தொகுதிகளில் போட்டியிடும் விடுதலை சிறுத்தைகள் கட்சி, பானை சின்னம் கோரி தேர்தல் ஆணையத்தை அணுகியது. ஆனால், ’பானை’ சின்னம் கிடைக்காததால் டெல்லி உயர் நீதிமன்றத்தை நாடியது அக்கட்சி. ஆனால், ஒரு சதவீதத்திற்கும் குறைவாக வாக்கு சதவீதம் கொண்டிருப்பதாகவும் சில விதிமுறைகளை பின்பற்ற முடியவில்லை என்றும் கூறி, பானை சின்னத்தை ஒதுக்க தேர்தல் ஆணையம் புதன்கிழமை திட்டவட்டமாக மறுப்பு தெரிவித்திருக்கிறது. தமிழகம் உட்பட 6 மாநிலங்களில் 20 தொகுதிகளில் போட்டியிடுவதாக விசிக தெரிவித்த நிலையில், இந்த முடிவு வந்தது. முன்னதாக, தமிழகத்தில் விழுப்புரம், சிதம்பரம் என இரு தொகுதிகளிலும் பானை சின்னத்தை முன்வைத்து அக்கட்சி பிரசாரத்தை மேற்கொண்டு வந்தது. பானை சின்னத்தில் போட்டியிட வேண்டும் என்பதில் தொகுதிப் பங்கீட்டில் திமுகவிடம் உறுதியாக இருந்தது விசிக.   பட மூலாதாரம்,NAAM TAMILAR படக்குறிப்பு, சீமான் சட்டம் என்ன சொல்கிறது? அதேபோன்று, பம்பரம் சின்னத்தை ஒதுக்க தேர்தல் ஆணையத்திற்கு உத்தரவிட முடியாது எனக்கூறி மதிமுகவின் வழக்கையும் சென்னை உயர் நீதிமன்றம் புதன்கிழமை முடித்து வைக்கப்பட்டது. குறைந்தது இரு தொகுதியிலாவது போட்டியிட வேண்டும் என்ற நிபந்தனையை மதிமுக பூர்த்தி செய்யவில்லை என இந்த விவகாரத்தில் தேர்தல் ஆணையம் வாதாடியது. மக்களவை தேர்தலில் திமுக கூட்டணியில் மதிமுக திருச்சி தொகுதியில் மட்டும் போட்டியிடுகிறது. அத்தொகுதியில் அக்கட்சியின் முதன்மை பொதுச் செயலாளரும் மதிமுக பொதுச் செயலாளர் வைகோவின் மகனுமான துரை வைகோ போட்டியிடுகிறார். குறைந்தது இரு தொகுதிகளில் போட்டியிட்டால்தான் சின்னம் ஒதுக்கப்படும் என தேர்தல் ஆணையம் தன் வாதத்தை முன்வைத்தது. வேறு மாநிலத்தில் ஒரு தொகுதியில் போட்டியிட விருப்பம் உள்ளதாக மதிமுக சார்பில் தெரிவிக்கப்பட்டது. எனினும், வேட்புமனுத் தாக்கல் நிறைவடையும் நிலையில் அதற்கு சாத்தியமில்லை என்பதால் மதிமுக வாதம் ஏற்கப்படவில்லை. 1994-ம் ஆண்டு திமுகவிலிருந்து பிரிந்து மதிமுகவை தொடங்கினார் வைகோ. 1996 சட்டமன்ற தேர்தலில் முதன்முறையாக மதிமுக பம்பரம் சின்னத்தில் போட்டியிட்டது. அதன்பின் நடைபெற்ற தேர்தல்களிலும் பம்பரம் சின்னத்திலேயே போட்டியிட்டது.   2001 சட்டமன்ற தேர்தலில் தனித்துப் போட்டியிட்ட மதிமுகவால் ஒரு இடம் கூட பெற முடியவில்லை. பெரிய வாக்குவங்கியை அக்கட்சியால் பெற முடியாத நிலையில், 6 சதவீதத்திற்கும் குறைவான வாக்கு வங்கியை கொண்டுள்ளதாக கூறி, மதிமுகவின் மாநில அந்தஸ்தை ரத்து செய்தது தேர்தல் ஆணையம். எனினும், அடுத்தடுத்த தேர்தல்களில் தேர்தல் ஆணையத்தில் விண்ணப்பித்து பம்பரம் சின்னத்தைப் பெற்றுக்கொண்டது மதிமுக. ஆனால், இந்த தேர்தலில் மதிமுக ஒரு தொகுதியில் மட்டுமே போட்டியிடுவதால், பம்பரம் சின்னத்தை ஒதுக்க முடியாது என, புதன்கிழமை தேர்தல் ஆணையம் மறுத்துவிட்டது. இதுதொடர்பான வழக்கில், ஒரு மாநிலத்தில் குறைந்தபட்சம் இரு தொகுதிகளில் போட்டியிட்டால் மட்டுமே பம்பரம் சின்னம் ஒதுக்கப்படும் என தேர்தல் ஆணையம் சென்னை உயர் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது. இதையடுத்து, அந்த வழக்கு முடித்துவைக்கப்பட்டது. அச்சின்னத்தை ஒதுக்க தேர்தல் ஆணைய விதிமுறைகள் அனுமதிக்கவில்லை என, இந்திய தேர்தல் ஆணைய வழக்கறிஞர் நிரஞ்சன் ராஜகோபாலன் தெரிவித்துள்ளதாக, `தி இந்து` ஆங்கில செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தேர்தல் சின்னங்கள் 1968 ஆணை (ஒதுக்கீடு)-ன் படி, ஒரு கட்சி அங்கீகாரத்தை இழந்தவுடன் அதன் சின்னம் தானாகவே பொதுச் சின்னத்திற்கு மாறும் வகையிலான வழிமுறை இல்லை என தெரிவித்த அவர், தற்போது பம்பரம் சின்னம் பொது சின்னமாகவும் இல்லை, ஒதுக்கீட்டுச் சின்னமாகவும் இல்லை என்பதால், இக்கோரிக்கையை ஏற்க முடியாது என வாதாடினார். அச்சட்டத்தின் 17-வது பத்தியின்படி, ஒவ்வொரு சட்டமன்ற, நாடாளுமன்ற தேர்தல்களிலும் பொதுச் சின்னங்கள் குறித்த அறிவிப்பாணை வெளியிடப்படும். ஆனால், இந்த நாடாளுமன்ற தேர்தலுக்காக வெளியிடப்பட்ட அறிவிப்பாணையில் பம்பரம் சின்னம் இல்லை என அவர் கூறினார். ஆனால், அதேசமயம், அங்கீகாரத்தை இழந்த அரசியல் கட்சிகளுக்கு 10B பத்தியின்படி வழங்கப்பட்டுள்ள சலுகையை மதிமுக பயன்படுத்திக்கொள்ளவில்லை. அதாவது, குறைந்தது 2 தொகுதிகளில் போட்டியிட்டிருந்தால் பம்பரம் சின்னம் கிடைத்திருக்கும்.   பட மூலாதாரம்,FACEBOOK சின்னங்கள் எப்படி ஒதுக்கப்படும்? ஒரு மாநில கட்சி அங்கீகரிக்கப்படுவதற்கு தேர்தல் சின்னங்கள் ஆணையின்படி சில நிபந்தனைகளை பூர்த்தி செய்திருக்க வேண்டும். அதன்படி கடந்த சட்டமன்ற தேர்தலில் குறைந்தபட்சம் 6 சதவீத வாக்குகளையும் இரு சட்டமன்ற தொகுதிகளில் வெற்றியும் பெற்றிருக்க வேண்டும். அல்லது, கடந்த நாடாளுமன்ற தேர்தலில் குறைந்தது 6% வாக்குகளையும் ஒரு மக்களவை தொகுதியிலும் வெற்றி பெற்றிருக்க வேண்டும். இந்த நிபந்தனையை பூர்த்தி செய்யாத அரசியல் கட்சிகள் மாநில கட்சி என்ற அந்தஸ்தை இழக்கும். அதன் அங்கீகாரத்தை தேர்தல் ஆணையம் திரும்பப் பெற்றுக்கொள்ளும். அங்கீகரிக்கப்பட்ட கட்சிகளுக்கென சின்னங்கள் ஏற்கெனவே ஒதுக்கப்பட்டிருக்கும். ஆனால், சுயேட்சை வேட்பாளர்கள் மற்றும் அங்கீகரிக்கப்படாத அரசியல் கட்சிகளுக்கு தேர்தல் ஆணையம் பொது சின்னத்தை ஒதுக்கும். அக்கட்சிகள் தேர்தல் ஆணையத்திடம் உள்ள பொதுச் சின்னங்களிலிருந்து தங்களுக்கு விருப்பமான மூன்று சின்னங்களை தங்களின் விருப்பமாக கோர வேண்டும். தேர்தல் ஆணையத்தின் பொதுச் சின்ன பட்டியலில் இல்லாத எந்த சின்னமும் நிராகரிக்கப்படும். இதனிடையே, இந்தாண்டு ஜனவரி 4-ம் தேதி, பதிவு செய்யப்பட்ட, அங்கீகரிக்கப்படாத அரசியல் கட்சிகளுக்கு சின்னங்கள் ஒதுக்கீடு செய்வதில் சில புதிய விதிமுறைகளை தேர்தல் ஆணையம் அறிவித்தது. அதன்படி, சின்னம் கோரும் கட்சி கடந்த மூன்று ஆண்டுகளின் வரவு-செலவு கணக்கையும் கடந்த இரண்டு தேர்தல்களின் செலவு அறிக்கைகளையும் கட்சியின் அலுவலக பொறுப்பாளர் கையொப்பமிட்ட விண்ணப்பத்தையும் சமர்ப்பிக்க வேண்டும் என்று அறிவித்தது. ஜனவரி 11 முதலே இந்த விதிகள் செயல்பாட்டுக்கு வந்துவிட்டன. கேட்ட சின்னத்தைப் பெற்ற பாஜக கூட்டணி கட்சிகள் தமிழ்நாட்டைப் பொறுத்தவரை திமுக, அதிமுக உள்ளிட்ட மாநில கட்சிகளும் காங்கிரஸ், பாஜக, இந்தியக் கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், பகுஜன் சமாஜ், ஆம் ஆத்மி உள்ளிட்ட கட்சிகளும் அங்கீகாரம் பெற்றவையாக உள்ளன. பாமக, மதிமுக, நாம் தமிழர் கட்சி, அமமுக, விடுதலைச் சிறுத்தைகள், தமிழ் மாநில காங்கிரஸ், கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி, மக்கள் நீதி மய்யம் உள்ளிட்ட பல கட்சிகள் அங்கீகாரம் பெறாதவையாக உள்ளன. ஆனால், பாமக, அமமுக, தமிழ் மாநில காங்கிரஸ் ஆகிய கட்சிகளுக்கு அவை கடந்த தேர்தல்களில் போட்டியிட்ட சின்னங்களான முறையே மாம்பழம், குக்கர், சைக்கிள் சின்னங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன.   பட மூலாதாரம்,FACEBOOK படக்குறிப்பு, டிடிவி தினகரன் சந்தேகம் எழுப்பும் எதிர்க்கட்சிகள் இதனால், தேர்தல் ஆணையம் ஒருதலைபட்சமாக செயல்படுவதாக கூறுகிறார், விசிக துணைப் பொதுச் செயலாளர் வன்னி அரசு. "விடுதலைச் சிறுத்தைகளுக்கு நான்கு சட்டமன்ற உறுப்பினர்களும், இரண்டு எம்.பிக்களும் உள்ளனர். திருமாவளவன் பானை சின்னத்தில் தான் போட்டியிட்டு வெற்றி பெற்றார். சட்டமன்ற உறுப்பினர்களும் பானை சின்னத்தில் தான் போட்டியிட்டு வெற்றி பெற்றனர். முன்னுரிமை அடிப்படையில் பானை சின்னம் வழங்கியிருக்க வேண்டும். மற்ற மாநிலத்தில் ஒதுக்கப்பட்ட சைக்கிள் சின்னத்தைக் கூட மாற்றி தமாகாவுக்கு ஒதுக்கினர். பாஜகவின் பங்கு இல்லாமல் தேர்தல் ஆணையம் இதை முடிவு செய்யவில்லை. தன்னிச்சையான அமைப்பான தேர்தல் ஆணையம் பாஜகவின் கிளை அமைப்பாக செயல்படுகிறதோ என்ற ஐயம் இருக்கிறது" என்றார். தேர்தலுக்கு இன்னும் சில நாட்களே உள்ள நிலையில் புதிய சின்னத்தை மக்களிடம் கொண்டு சேர்ப்பது கடினமான பணியா என்ற கேள்விக்கு, "சமூக ஊடகங்கள் மூலம் கொண்டு செல்வோம். ஆனால், மற்றவர்களுக்குப் பின்னால் தான் நாங்கள் ஓட வேண்டியிருக்கும். இத்தகைய விதிமுறைகளையே மாற்ற வேண்டும். போட்டியிடும் களம் அனைவருக்கும் சமமானதாக இல்லை. அங்கீகரிக்கப்பட்ட கட்சிகளுக்கும் ஒவ்வொரு தேர்தலிலும் புதிய சின்னத்தையே தர வேண்டும். தேர்தல் ஆணையம் விதிகளை மாற்ற வேண்டும்" என்றார். இதனிடையே, ஜனவரி மாதம் கொண்டு வரப்பட்ட “புதிய விதிகளை கணக்கில் கொள்ளாமல், கர்நாடகாவை சேர்ந்த புதிய கட்சிக்கு கரும்பு விவசாயி சின்னத்தை தேர்தல் ஆணையம் வழங்கியிருப்பதாகவும்,” குற்றம்சாட்டுகிறது நாம் தமிழர் கட்சி. தேர்தல் ஆணையம் மீதான இத்தகைய விமர்சனங்கள் குறித்து, முன்னாள் தேர்தல் ஆணையர் டி.எஸ். கிருஷ்ணமூர்த்தி பிபிசியிடம் பேசுகையில், “சின்னங்களை ஒதுக்குவதற்கென வகுக்கப்பட்டுள்ள விதிமுறைகளை தேர்தல் ஆணையம் பின்பற்றும். `ஒருதலைபட்சமானது` என்பதற்கு சில ஆதாரங்கள் வேண்டும். எந்தவொரு முடிவும் எடுக்கப்படுவதற்கு முன்பும் காரணம் கூற வேண்டும். அந்த முடிவு, ஒருதலைபட்சமானதா, இல்லையா என்பதை கூற சில ஆதாரங்கள் வேண்டும்” என தெரிவித்தார்.   படக்குறிப்பு, மூத்த பத்திரிகையாளர் ப்ரியன் "சின்னம் முக்கியம் தான்" தேர்தல் ஆணைய முடிவுகளுக்குப் பின்னால் பாஜக இருப்பதாக கூறும் எதிர்க்கட்சிகளின் சந்தேகம் நியாயமானதே என்கிறார் மூத்த பத்திரிகையாளர் ப்ரியன். "குக்கர் சின்னத்தில் போட்டியிடாமல் கடந்த சட்டமன்ற தேர்தலில் பரிசுப்பெட்டி சின்னத்தில் போட்டியிட்டது அமமுக. ஆனால், இந்த தேர்தலில் குக்கர் சின்னம் கொடுத்துள்ளனர். தமாகா என்ற கட்சியே இல்லாமல் பல தேர்தல்கள் நடந்துவிட்டன. ஆனால் அந்த கட்சிக்கு சைக்கிள் சின்னம் கொடுக்கின்றனர். பாஜக கூட்டணியில் இருப்பதாலேயே அவர்களுக்கு இந்த லாபம் கிடைக்கிறது. ஏதாவது சங்கடத்தை திமுக கூட்டணிக் கட்சிகளுக்கு ஏற்படுத்துகின்றனர். புதிய சின்னத்தில் போட்டியிடுவது நிச்சயம் சங்கடம் தான். பாஜக கூட்டணி கட்சிகளுக்கும் ஆதரவாளர்களுக்கும் எந்த பிரச்னையும் வரவில்லை. அவர்களுக்கு எல்லாமே சுமூகமாக இருக்கிறது” என்றார். மேலும், இன்றும் தேர்தல்களில் சின்னம் வெற்றி-தோல்விகளை தீர்மானிப்பதில் முக்கிய கருவியாக இருப்பதாக அவர் கூறுகிறார். ”இரட்டை இலையா, உதயசூரியனா என்றுதான் இப்போதும் தேர்தல் நடக்கிறது. விழிப்புணர்வு இருந்தாலும் சின்னம் முக்கியமானதுதான். பிரபலமானவர்களால் தான் புதிய சின்னத்தை மக்களிடம் எடுத்துச் செல்ல முடியும். தமிழ் மாநில காங்கிரஸ் ஆரம்பித்தபோது ரஜினிகாந்த் இருந்ததால்தான் சைக்கிள் சின்னத்தை எடுத்துச் செல்ல முடிந்தது” என்றார் அவர். ”பாஜகவுக்கு பங்கு இல்லை” தேர்தல் ஆணையத்தின் முடிவுகளுக்குப் பின்னால் பாஜக இருப்பதாக எதிர்க்கட்சிகளின் விமர்சனங்கள் குறித்து, பாஜக மாநில துணைத்தலைவர் நாராயணன் திருப்பதி பிபிசியிடம் பேசுகையில், “சின்னங்களை ஒதுக்குவது தேர்தல் ஆணையத்தின் தனி அதிகாரம். அதற்கென விதிமுறைகள் இருக்கின்றன. கேட்ட சின்னம் கிடைக்காத கட்சிகள் அனைத்தும் அங்கீகாரம் இல்லாத கட்சிகள். இவை முன்கூட்டியே தங்களுக்கு வேண்டிய சின்னத்தைக் கேட்காமல் இருந்திருப்பார்கள். இதில் பாஜகவின் பங்கு எதுவும் இல்லை” என்றார். https://www.bbc.com/tamil/articles/c29w8kpg55zo
    • ரீலை ஓட்டுவதில் திறமை கொண்டவர்  உங்களுக்கு நினைவிருக்கோ  முன்பு நான் தான் கற்பகதரு Tulpen என்றவர்🤣
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.