Jump to content

ஐநா தீர்மானம் சம்மந்தமாக நாட்டின் ஜனாதிபதி சிறந்த முன்னெடுப்புகளை மேற்கொண்டிருக்கின்றார் - கருணா அம்மான்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

ஐநா தீர்மானம் சம்மந்தமாக நாட்டின் ஜனாதிபதி சிறந்த முன்னெடுப்புகளை மேற்கொண்டிருக்கின்றார் - கருணா அம்மான்

ஐநா தீர்மானம் நிறைவேற்றத்தினூடான சில தகவல்ளை அரசாங்கத்திற்கு தந்திருக்கின்றார்கள். இது சம்மந்தமாக நாட்டின் ஜனாதிபதி சிறந்த முன்னெடுப்புகளை மேற்கொண்டிருக்கின்றார். எனவே சிறந்த முறையில் இந்த மாற்றங்களை உருவாக்கி மீண்டும் இந்த ஐரோப்பிய நாடுகளுடனான உறவுகளைப் பேணுவதற்கான முயற்சிகளை மேற்கொள்வார் என தமிழர் ஐக்கிய சுதந்திர முன்னணியின் தலைவரும், முன்னாள் பிரதியமைச்சருமான விநாயகமூர்த்தி முரளிதரன் தெரிவித்தார்.

இன்றைய தினம் செங்கலடியில் இடம்பெற்ற தமிழர் ஐக்கிய சுதந்திர முன்னணியின் நிகழ்வொன்றில் கலந்து கொண்டதன் பின்னர் ஊடகவியாளர்களின் கேள்விகளுக்குப் பதிலளிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

யுத்தம் முடிவுற்ற தருவாயில் இருந்து ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவை தொடர்பான விடயங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. அந்தக் காலத்தில் கூட பாரிய நெருக்கடிகள் தரப்பட்டன. ஆனால், அப்போதைய ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் அதனைச் சிறந்த முறையில் கையாண்டு முறியடித்துவிட்டார். ஆனால், தற்போதைய சூழ்லில் இந்தத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டிருக்கின்றது. இந்தப் பிரச்சினை இரண்டு தரப்பும் இருந்து பேசித் தீர்க்க வேண்டிய ஒரு பிரச்சினை. ஏனெனில் இலங்கை என்பது உண்மையில் நாணயம் மிக்க தனித்துவமான நாடு. இந்து சமுத்தரப் பிராந்தியத்தில் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த நாடாகவும் இருக்கின்றது. அந்த வகையிலே இந்தத் தீர்மானம் நிறைவேற்றத்தினூடான சில தகவல்ளை அரசாங்கத்திற்கு அவர்கள் தந்திருக்கின்றார்கள். இது சம்மந்தமாக நாட்டின் ஜனாதிபதி மதிப்பிற்குரிய கோத்தபாய அவர்கள் சிறந்த முன்னெடுப்புகளை மேற்கொண்டிருக்கின்றார். குறைந்தது ஆறு மாதத்திற்குள் நிறைவேற்றும்படி இந்தத் தீர்மானத்தில் சுட்டிக் காட்டப்பட்டிருக்கின்றது. எனவே ஜனாதிபதி சிறந்த முறையில் இந்த மாற்றங்களை உருவாக்கி மீண்டும் இந்த ஐரோப்பிய நாடுகளுடனான உறவுகளை சிறந்த முறையில் பேணுவதற்கான முயற்சிகளை மேற்கொள்வார்கள் என்று நான் நினைக்கின்றேன்.

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் உண்மையில் சிறந்த விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டிருந்தது. இதற்காக பாராளுமன்றத்தில் கூட விசேட ஆணைக்குழுவொன்றும் அமைக்கப்பட்டு அதனூடாக இன்று அனைத்துத் தரப்பினரும் விசாரிக்கப்பட்டிருக்கின்றார்கள். எனவே அரசியல் இலாபங்களுக்காக விரோதமான கருத்துக்களை முன்வைப்பதை விட சிறந்த ஒரு அரச கட்டமைப்பு அந்த விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றது. அதனூடாக சிறந்த முடிவுகள் வரும் என நினைக்கின்றேன் என்று தெரிவித்தார்

 

https://www.meenagam.com/ஐநா-தீர்மானம்-சம்மந்தமாக/

 

Link to comment
Share on other sites

  • Replies 142
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

தமிழர் இனவரலாற்றில் இதுவரை கண்டிராத துரோகி. இந்தப் பிறப்பே இருந்திருக்கத் தேவையில்லை. இவனைப் பெற்ற தாய் கருத்தரிக்கமலேயே இறந்திருக்கலாம். இவனைப் பெற்று தமிழினத்திற்கே சாபக்கேட்டினை உருவாக்கித் தந்துவிட்டாள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 minutes ago, ரஞ்சித் said:

தமிழர் இனவரலாற்றில் இதுவரை கண்டிராத துரோகி. இந்தப் பிறப்பே இருந்திருக்கத் தேவையில்லை. இவனைப் பெற்ற தாய் கருத்தரிக்கமலேயே இறந்திருக்கலாம். இவனைப் பெற்று தமிழினத்திற்கே சாபக்கேட்டினை உருவாக்கித் தந்துவிட்டாள்.

இதுவும் வரலாறுதான்..

அம்மான் இல்லாவிட்டால் 1997/1998 இலும் போராட்டம் முடிந்திருக்கும்..

 

புலிகளின் எதிர்த்தாக்குதல்[தொகு]

அதுவரை தங்களது போராட்ட வரலாற்றில் மிகநீண்ட மறிப்புச்சமரைச் செய்திராத தமிழீழ விடுதலைப்புலிகள் ஜெயசிக்குறு நடவடிக்கையை எதிர்த்து நீண்டகால கடுமையான மறிப்புச்சமரைச் செய்தனர். விடுதலைப்புலிகள் தமது அனைத்து வளங்களையும் வன்னியில் ஒருங்கிணைத்து இம்முறியடிப்புச்சமரைச் செய்தனர். கிழக்கு மாகாணத்திலிருந்து அப்போதைய விடுதலைப்புலிகளின் தளபதியும் பின்னாளில் பிரிந்து சென்றவருமான கருணா அம்மானின்தலைமையில் நூற்றுக்கணக்கான போராளிகள் வன்னிக்கு வந்திருந்தனர். புலிகளின் எதிர்ப்புச்மருக்கான ஒருங்கிணைப்புத் தளபதியாக கேணல் கருணா அம்மான் செயற்பட்டார். நேரடிக் களமுனைத் தளபதிகளாக கேணல் தீபன், கேணல் ஜெயம் ஆகியோர் செயற்பட்டனர்.

https://ta.wikipedia.org/wiki/ஜெயசிக்குறு

 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
20 minutes ago, கிருபன் said:

இதுவும் வரலாறுதான்..

அம்மான் இல்லாவிட்டால் 1997/1998 இலும் போராட்டம் முடிந்திருக்கும்..

முடிந்திருக்கும் என்று எவ்வாறு எழுத முடிகிறது??

அனைத்து தளபதிகள் போராளிகளும் கிள்ளுக்கீரைகளா??

பைத்தியக்காரத்தனமான எழுத்துக்கள் எதுக்கும் உதவப்போவதில்லை

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
24 minutes ago, கிருபன் said:

இதுவும் வரலாறுதான்..

அம்மான் இல்லாவிட்டால் 1997/1998 இலும் போராட்டம் முடிந்திருக்கும்..

அது உங்கள் கருத்து. ஆனால் நான் அப்படி நினைக்கவில்லை. இந்திய ராணுவத்தின் ஆக்கிரமிப்பின்போதும் புலிகள் அழிந்துவிடுவார்கள் என்றுதான் ஆருடம் கூறப்பட்டது.

ஆனால் 2004 இல் கருணா தமிழினம் அதுவரை சந்தித்திராத துரோகத்தைச் செய்தபோது புலிகளின் முடிவும், தமிழரின் போராட்டத்தின் முடிவும் எழுதப்பட்டது. தான் அன்று செய்ததன் தாற்பரியம் அவனுக்கு புரியாது இருந்திருக்கலாம். ஆனால் அழிவு தெரிந்தபின்னரும் தொடர்ந்தும் தனது துரோகத்தினை முன்னெடுத்தான் பாருங்கள், அங்கேதான் அவனது துரோகத்தின் முழுத் தாக்கம் தெளிவாகியது.

Just now, விசுகு said:

முடிந்திருக்கும் என்று எவ்வாறு எழுத முடிகிறது??

அனைத்து தளபதிகள் போராளிகளும் கிள்ளுக்கீரைகளா??

பைத்தியக்காரத்தனமான எழுத்துக்கள் எதுக்கும் உதவப்போவதில்லை

அண்ணை, அவர் வழமைபோல குட்டையைக் குழப்புகிறார். கொளுத்திவிடப் பார்க்கிறார்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
5 minutes ago, விசுகு said:

முடிந்திருக்கும் என்று எவ்வாறு எழுத முடிகிறது??

அனைத்து தளபதிகள் போராளிகளும் கிள்ளுக்கீரைகளா??

பைத்தியக்காரத்தனமான எழுத்துக்கள் எதுக்கும் உதவப்போவதில்லை

பைத்தியக்காரமான எழுத்துக்கள் என்று வரலாற்றின் போக்கை தட்டிக் கழித்து அப்பால் போகமுடியாது. கருணா அம்மானின் ஒருங்கிணைப்பின் கீழ்தான் பல புகழ்பெற்ற தளபதிகள் இயங்கினர். 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
5 minutes ago, கிருபன் said:

பைத்தியக்காரமான எழுத்துக்கள் என்று வரலாற்றின் போக்கை தட்டிக் கழித்து அப்பால் போகமுடியாது. கருணா அம்மானின் ஒருங்கிணைப்பின் கீழ்தான் பல புகழ்பெற்ற தளபதிகள் இயங்கினர். 

 

நீங்கள் குறிப்பிடும் நபர் யாரின் கீழ் இருந்தார்?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 minutes ago, கிருபன் said:

பைத்தியக்காரமான எழுத்துக்கள் என்று வரலாற்றின் போக்கை தட்டிக் கழித்து அப்பால் போகமுடியாது. கருணா அம்மானின் ஒருங்கிணைப்பின் கீழ்தான் பல புகழ்பெற்ற தளபதிகள் இயங்கினர். 

 

முடிந்திருக்கலாம் என்பது வேறு

முடிந்திருக்கும் என்று எழுதுவது ஒருவரை மட்டுமே வரலாறாக்கி மற்றைய அனைத்தையும் கேவலப்படுத்துவது.

இந்த பைத்தியக்காரத்தனமானவர்களை கண்டும் காணாமல் போகமுடியாது. 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
6 minutes ago, MEERA said:

நீங்கள் குறிப்பிடும் நபர் யாரின் கீழ் இருந்தார்?

படைத்தளபதி கோத்தபாயவின் கீழ்😃

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, கிருபன் said:

படைத்தளபதி கோத்தபாயவின் கீழ்😃

87இல் கரும்புலி மில்லர் வெடிக்காது விட்டிருந்தால் 87இலும் முடிந்திருக்கும்,

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
7 minutes ago, விசுகு said:

முடிந்திருக்கலாம் என்பது வேறு

முடிந்திருக்கும் என்று எழுதுவது ஒருவரை மட்டுமே வரலாறாக்கி மற்றைய அனைத்தையும் கேவலப்படுத்துவது.

இந்த பைத்தியக்காரத்தனமானவர்களை கண்டும் காணாமல் போகமுடியாது. 

கருணா அம்மான் ஒரு தனி மனிதர் என்று சொல்லியதும், கருணா அம்மான் இல்லாத புலிகள் முடிந்ததும் கண்முன்னால் நிகழ்ந்ததுதானே. 

கருணா அம்மான் பிரிந்ததனால் அவர் புலிகளின் வெற்றிகளுக்கு பங்களித்ததை வரலாற்றில் இருந்து நீக்கவும் முடியாது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, கிருபன் said:

கருணா அம்மான் ஒரு தனி மனிதர் என்று சொல்லியதும், கருணா அம்மான் இல்லாத புலிகள் முடிந்ததும் கண்முன்னால் நிகழ்ந்ததுதானே. 

கருணா அம்மான் பிரிந்ததனால் அவர் புலிகளின் வெற்றிகளுக்கு பங்களித்ததை வரலாற்றில் இருந்து நீக்கவும் முடியாது.

கிழக்கிலிருந்து தழிமீழம் நோக்கி போராடுவேன் என்றவர் தப்பியோடியதும் வரலாறு 

Link to comment
Share on other sites

1 hour ago, ரஞ்சித் said:

தமிழர் இனவரலாற்றில் இதுவரை கண்டிராத துரோகி. இந்தப் பிறப்பே இருந்திருக்கத் தேவையில்லை. இவனைப் பெற்ற தாய் கருத்தரிக்கமலேயே இறந்திருக்கலாம். இவனைப் பெற்று தமிழினத்திற்கே சாபக்கேட்டினை உருவாக்கித் தந்துவிட்டாள்.

இவனை தேர்ந்தெடுத்து பயிற்சி கொடுத்து, தனது மெப்பாதுகாவலராக கூடவே வைத்திருந்து பின்னர் தென் தமிழீழத்துக்கே பொறுப்பாக்கி தமிழினத்திற்கே சாபக்கேட்டினை உருவாக்கித் தந்துவிட்டார் —- யாரவர்?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, கற்பகதரு said:

இவனை தேர்ந்தெடுத்து பயிற்சி கொடுத்து, தனது மெப்பாதுகாவலராக கூடவே வைத்திருந்து பின்னர் தென் தமிழீழத்துக்கே பொறுப்பாக்கி தமிழினத்திற்கே சாபக்கேட்டினை உருவாக்கித் தந்துவிட்டார் —- யாரவர்?

இதென்ன பல்தேர்வு வினாவா?? மதவாச்சியில் ஏறிய சிங்களவன் :99_muscle:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
5 minutes ago, கிருபன் said:

கருணா அம்மான் ஒரு தனி மனிதர் என்று சொல்லியதும், கருணா அம்மான் இல்லாத புலிகள் முடிந்ததும் கண்முன்னால் நிகழ்ந்ததுதானே. 

கருணா அம்மான் பிரிந்ததனால் அவர் புலிகளின் வெற்றிகளுக்கு பங்களித்ததை வரலாற்றில் இருந்து நீக்கவும் முடியாது.

புலிகள் என்பது ஒரு அமைப்பல்ல அழிந்து போக.

அது ஒரு குறியீடு.

தமிழர்களின் தாகம் இருக்கும் வரை தமிழர்கள் அடக்கப்படும்வரை அதுவும் இருக்கும்.

அந்த ........ யின் பெயரை நீங்கள் திரும்ப திரும்ப சிறீ கிருஷ்ணா லெவலுக்கு எழுதுவது எனக்கு புரிந்தது. எனவே தொடர்வதால் எதுவும் யாழில் எனக்கு ஏற்படுத்தி விட முடியாது

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
7 minutes ago, விசுகு said:

புலிகள் என்பது ஒரு அமைப்பல்ல அழிந்து போக.

அது ஒரு குறியீடு.

புலிகளை குறியீடாக்கி மொத்த வியாபாரம், சில்லறை வியாபாரம், பட்டம் கொடுக்கும் கழகங்கள் எல்லாம் இயங்கிக்கொண்டிருக்கின்றன என்பது உண்மைதான். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 minutes ago, கிருபன் said:

புலிகளை குறியீடாக்கி மொத்த வியாபாரம், சில்லறை வியாபாரம், பட்டம் கொடுக்கும் கழகங்கள் எல்லாம் இயங்கிக்கொண்டிருக்கின்றன என்பது உண்மைதான். 

கருத்தை 

தத்துவங்களை அதனூடாக எதிர் கொள்ள முடியாத ஓநாய்களின் கடைசி ஆயுதம் இது என்பதை அறிவோம். போய் வேறு எங்காவது சொறியுங்கள்.

டொட்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, விசுகு said:

கருத்தை 

தத்துவங்களை அதனூடாக எதிர் கொள்ள முடியாத ஓநாய்களின் கடைசி ஆயுதம் இது என்பதை அறிவோம். போய் வேறு எங்காவது சொறியுங்கள்.

டொட்.

தத்துவம் வேறயா?? ஹஹ்ஹா!!!

புலிகள் இல்லாத இடத்தில் ஓநாய்கள்தான் புலிவேஷம் போட்டுக்கொண்டு நாடகமாடுகின்றார்கள். 
 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, கிருபன் said:

இதுவும் வரலாறுதான்..

அம்மான் இல்லாவிட்டால் 1997/1998 இலும் போராட்டம் முடிந்திருக்கும்..

 

புலிகளின் எதிர்த்தாக்குதல்[தொகு]

அதுவரை தங்களது போராட்ட வரலாற்றில் மிகநீண்ட மறிப்புச்சமரைச் செய்திராத தமிழீழ விடுதலைப்புலிகள் ஜெயசிக்குறு நடவடிக்கையை எதிர்த்து நீண்டகால கடுமையான மறிப்புச்சமரைச் செய்தனர். விடுதலைப்புலிகள் தமது அனைத்து வளங்களையும் வன்னியில் ஒருங்கிணைத்து இம்முறியடிப்புச்சமரைச் செய்தனர். கிழக்கு மாகாணத்திலிருந்து அப்போதைய விடுதலைப்புலிகளின் தளபதியும் பின்னாளில் பிரிந்து சென்றவருமான கருணா அம்மானின்தலைமையில் நூற்றுக்கணக்கான போராளிகள் வன்னிக்கு வந்திருந்தனர். புலிகளின் எதிர்ப்புச்மருக்கான ஒருங்கிணைப்புத் தளபதியாக கேணல் கருணா அம்மான் செயற்பட்டார். நேரடிக் களமுனைத் தளபதிகளாக கேணல் தீபன், கேணல் ஜெயம் ஆகியோர் செயற்பட்டனர்.

https://ta.wikipedia.org/wiki/ஜெயசிக்குறு

 

 

 

பாம்புக்கு வாலும் மீனுக்குத் தலையும் ...🤥

1 hour ago, விசுகு said:

முடிந்திருக்கும் என்று எவ்வாறு எழுத முடிகிறது??

அனைத்து தளபதிகள் போராளிகளும் கிள்ளுக்கீரைகளா??

பைத்தியக்காரத்தனமான எழுத்துக்கள் எதுக்கும் உதவப்போவதில்லை

அவரை விடுங்கள் விசுகர். ஏன் அதை இங்கே இணைத்தேன் என்று அவருக்கே தெரிந்திராது. 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, கிருபன் said:

கருணா அம்மான் ஒரு தனி மனிதர் என்று சொல்லியதும், கருணா அம்மான் இல்லாத புலிகள் முடிந்ததும் கண்முன்னால் நிகழ்ந்ததுதானே. 

கருணா அம்மான் பிரிந்ததனால் அவர் புலிகளின் வெற்றிகளுக்கு பங்களித்ததை வரலாற்றில் இருந்து நீக்கவும் முடியாது.

 

கருணாதான் பிரபாகரனுக்கு போராட்டத்தைக் கற்றுக் கொடுத்தார் என்று கூறாதவரை கிருபனின் கடி ஜோக்குகளை சகிக்க வேண்டியதுதான்.

😂

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, கிருபன் said:

இதுவும் வரலாறுதான்..

அம்மான் இல்லாவிட்டால் 1997/1998 இலும் போராட்டம் முடிந்திருக்கும்..

வேறு வழி கண்டு ஓடிய விடிவெள்ளி இன்றுவரைக்கும் சிங்கள இனவாதத்திற்கு வக்காலத்து வாங்குகின்றாரே தவிர  இது வரைக்கும் தீர்வு காண முடியவில்லை. மாறாக சிங்கள இனவாத அடக்குமுறை கிழக்கில் அதிகரித்துக்கொண்டே வருகின்றது.

அதை விட பெரிய கதை தேர்தலில் போட்டியிட்ட தொகுதியிலேயே இவரால் வெற்றி பெற முடியவில்லை.

நம்பிக்கை துரோகிகளுக்கு வக்காலத்து வாங்குபவர்கள் எப்படியானவர்களாக இருப்பார்கள் என்று கொஞ்சம் சிந்தியுங்கள் மக்களே! 🤣

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
56 minutes ago, கற்பகதரு said:

இவனை தேர்ந்தெடுத்து பயிற்சி கொடுத்து, தனது மெப்பாதுகாவலராக கூடவே வைத்திருந்து பின்னர் தென் தமிழீழத்துக்கே பொறுப்பாக்கி தமிழினத்திற்கே சாபக்கேட்டினை உருவாக்கித் தந்துவிட்டார் —- யாரவர்?

typical கற்பகதரு.

தியாகத்தை அசிங்கப்படுத்தவும், துரோகத்தைக் கொண்டாடவும் வேறு யாரால் முடியும்.. 😂😂

வன்னியை விட்டு வெளியேற pass கிடைக்காத கோபத்தில் போராட்டத்திற்கு எதிராக விடம் கக்கும் அதே இழி பிறவிகளின் ஆத்திரம் பிரபாகரன் மீது திரும்புவது வழமை.. 😂😂

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
51 minutes ago, கிருபன் said:

புலிகளை குறியீடாக்கி மொத்த வியாபாரம், சில்லறை வியாபாரம், பட்டம் கொடுக்கும் கழகங்கள் எல்லாம் இயங்கிக்கொண்டிருக்கின்றன என்பது உண்மைதான். 

ஆதாரத்திற்கு அப்படியான நிறுவனங்கள்/ கழகங்களின் பெயர்களை சொல்லுங்கள். :grin:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
50 minutes ago, கிருபன் said:

புலிகளை குறியீடாக்கி மொத்த வியாபாரம், சில்லறை வியாபாரம், பட்டம் கொடுக்கும் கழகங்கள் எல்லாம் இயங்கிக்கொண்டிருக்கின்றன என்பது உண்மைதான். 

பங்குதாரராக முடியவில்லை என்கின்ற கோபமோ... 😂

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, Kapithan said:

பங்குதாரராக முடியவில்லை என்கின்ற கோபமோ... 😂

இந்த கேள்வி  என் மனதில் கன நாட்களாகவே இருந்தது. இப்போதும் கேட்பமா என நினைத்து விட்டு......ஏன் பொல்லாப்பு என இருந்து விட்டேன் 🤣

புலிகளால் நன்னடத்தை தண்டனை வாங்கியவர்கள் தான் இன்றுவரைக்கும் .....அவர்களின் கொள்கை விரோதிகளாக இருக்கின்றார்கள்........இது நான் அறிந்த/தெரிந்த வரையில்.....

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • யாழ்.பல்கலையின் பொன்விழாவை முன்னிட்டு ஆய்வு மாநாடு! adminApril 18, 2024 யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம் யாழ்ப்பாண வளாகம் எனும் பெயரில் இலங்கைப் பல்கலைக்கழகத்தின் ஒரு அங்கமாக ஆரம்பிக்கப்பட்டு இவ்வருடத்துடன் ஐம்பதாண்டைப் பூர்த்தி செய்து பொன்விழாக் காண்கின்றது. அதனை முன்னிட்டு முதலாவது சர்வதேச கல்வியியல் ஆய்வுமாநாட்டை யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் உயர்பட்டப்படிப்புக்கள் பீடமும் கலைப்பீடத்தைச் சேர்ந்த கல்வியியல் துறையும் இணைந்து ஒழுங்கமைத்துள்ளன. ‘நாளையை வலுப்படுத்தல் – கல்வியின் போக்குகளும் அவற்றை புரிந்துகொள்ளவும் உள்வாங்கவும் வடக்கு மாகாணத்தின் இயலுமைகள்’ எனும் கருப்பொருளில் இம்மாநாடு திட்டமிடப்பட்டுள்ளது. யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத் துணைவேந்தர் பேராசிரியர்.சி.சிறிசற்குணராசா தலைமையிலும் உயர்பட்டப்படிப்புக்கள் பீடப் பீடாதிபதி பேராசிரியர்.செ.கண்ணதாசன் மற்றும் கலைப் பீடாதிபதி பேராசிரியர்.சி.ரகுராம் ஆகியோரின் இணைத்தலைமையிலும் இவ் ஆய்வுமாநாடு அரங்கேறவுள்ளது. கல்வியியல் துறைத் தலைவர் கலாநிதி.ஆ.நித்திலவர்ணண் மாநாட்டின் இணைப்பாளராகச் செயற்படுகின்றார். வட மாகாண கல்வி அமைச்சின் செயலாளர் ம.பற்றிக் டிரஞ்சன் மற்றும் வட மாகாணக் கல்விப் பணிப்பாளர் தி.ஜோன் குயின்ரஸ் ஆகியோர் இந்நிகழ்வில் சிறப்பு விருந்தாளர்களாகக் கலந்துகொள்கின்றனர். எதிர்வரும் 20ம் திகதி சனிக்கிழமையும் 21ம் திகதி ஞாயிற்றுக்கிழமையும் காலை மற்றும் மாலை அமர்வுகள் எனத் திட்டமிடப்பட்டுள்ள இம்மாநாட்டின் காலை அமர்வுகள் கைலாசபதி கலையரங்கிலும் மாலை அமர்வுகள் உயர்பட்டப்படிப்புக்கள் பீடத்திலும் நடைபெறவுள்ளன. சனிக்கிழமை நடைபெறவுள்ள அங்குரார்ப்பண நிகழ்வில் திறவுகோல் உரையினை கொழும்புப் பல்கலைக்கழக கல்வியியல் பீட கல்வி உளவியல் இருக்கைப் பேராசிரியர் மஞ்சுளா விதாணபத்திரண நிகழ்த்தவுள்ளார். ‘வாண்மைத்துவ விருத்திக்கான ஆய்வு மைய புத்தாக்கங்கள்: வடக்கு இலங்கையின் ஆசிரியர் கல்விக்கான தந்திரோபாய அணுகுமுறை’ எனும் தலைப்பில் இவ் உரை நிகழவிருக்கின்றது. திறவுகோல் உரையினைத் தொடர்ந்து மாநாட்டின் கருப்பொருளை மையப்படுத்திய மையக்கருத்துரைகள் இடம்பெறவுள்ளன. இக்கருத்தரங்கிற்கு உயர்பட்டப்படிப்புக்கள் பீடப் பீடாதிபதி பேராசிரியர்.செ.கண்ணதாசன் தலைமைதாங்கவுள்ளார். ‘இலங்கையின் ஆரம்ப பிள்ளைப்பருவக் கல்வியை முறைமைப்படுத்தல் – சவால்களும் பிரச்சனைகளும்’ எனும் தலைப்பில் திறந்த பல்கலைக்கழக கல்வியியல் பீடப் பேராசிரியர்.தி.முகுந்தனும், ‘வட மாகாணக் கல்வியின் சமகால உள சமூக நிலைமைகள்’ எனும் தலைப்பில் உளமருத்துவ நிபுணர் சி.சிவதாசும், ‘இலங்கையின் பாடசாலைக் கலைத்திட்டத்தின் சவால்களும் புதிய போக்குகளும்’ எனும் தலைப்பில் திறந்த பல்கலைக்கழக கல்வியியல் பீடப் பேராசிரியர் எவ்.எம்.நவாஸ்தீனும், ‘சட்டத் தீர்மானங்களை அறிவிப்பதில் கல்வியியல் ஆய்வுகளின் தேவைகள்’ எனும் தலைப்பில் களுவாஞ்சிக்குடி நீதவான் நீதிமன்ற நீதிபதி ஜே.பி.ஏ.ரஞ்சித்குமாரும் உரையாற்றவுள்ளனர். ஞாயிற்றுக்கிழமை நடைபெறவுள்ள இரண்டாம் நாள் நிகழ்வுகளுக்கு யாழ்ப்பாணப் பல்கலைக்கழக கல்வியியல் துறைப் பேராசிரியர் ஜெயலக்சுமி இராசநாயகம் தலைமை தாங்கவுள்ளார். இந் நிகழ்வில் திறவுகோல் உரையை தஞ்சாவூர் தமிழ்ப் பல்கலைக்கழக கல்வியியல் மற்றும் மேலாண்மைத் துறைத் தலைவர் பேராசிரியர் கு.சின்னப்பன் ‘தமிழ் கற்பித்தலில் புதிய போக்குகள்’ எனும் தலைப்பில் நிகழ்த்தவுள்ளார். அதனைத் தொடர்ந்து ‘நாளையை வலுப்படுத்தல் – கல்வியின் போக்குகளும் அவற்றை புரிந்துகொள்ளவும் உள்வாங்கவும் வட மாகாணத்தின் இயலுமைகள்’ எனும் தலைப்பில் கலைப்பீடப் பீடாதிபதி பேராசிரியர் சி.ரகுராம் தலைமையில் திறந்த புலமைத்துவக் கலந்துரையாடல் இடம்பெறவுள்ளது. இக்கலந்துரையாடலில் ஓய்வுபெற்ற வலயக் கல்விப்பணிப்பாளரும் அதிபருமாகிய என்.தெய்வேந்திரராஜா, கல்வியியல் ஆய்வாளரும் அகவிழி மற்றும் ஆசிரியம் சஞ்சிகைகளின் ஆசிரியருமான தெ.மதுசூதனன், தேசிய கல்வி நிறுவன விரிவுரையாளர் ஐ.கைலாசபதி, கிளிநொச்சி விவேகானந்தா வித்தியாலய அதிபர் ஜெய மாணிக்கவாசகர், இலங்கை பரீட்சைகள் திணைக்களப் பணிப்பாளர் எம்.ஜீவராணி புனிதா, யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி அதிபர் இ.செந்தில்மாறன், யாழ்ப்பாணப் பல்கலைக்கழகக் கல்லூரியின் முன்னாள் பணிப்பாளரும் ஐக்கிய நாடுகள் அபிவிருத்தித் திட்டத்தின் திட்ட முகாமையாளருமாகிய ஜே. ஜூட் வோல்ற்றன் மற்றும் கிளிநொச்சி வடக்கு கல்வி வலய தொழில் வழிகாட்டல் அலுவலர் சு.வீரசுதாகரன் ஆகியோர் பங்குபற்றவுள்ளனர். பார்வையாளர்களின் வினாக்களுக்கும் விடையளிக்கும் நிகழ்வாகவும் இக் கலந்துரையாடல் திட்டமிடப்பட்டுள்ளது. ‘வடக்கு மாகாணப் பாடசாலைகளின் வெற்றிகளும் பின்னடைவுகளும்’, ‘பாடசாலைகளும் சமூகமும் – எங்கு நாம் நிற்கின்றோம் – முன்னோக்கிப் போவதற்கான வழிகள்’, ‘எதிர்பார்க்கப்படும் கற்றல் பேறுகளை அளவிடுதல்’, மற்றும் ‘கல்வியும் வேலைவாய்ப்பும் – சந்தர்ப்பங்களும் சவால்களும்’ எனும் தலைப்புக்களில் இக்கலந்துரையாடல் கட்டமைக்கப்பட்டுள்ளது. கலந்துரையாடலின் கருத்துச்செறிவுகளை மாநாடு நிறைவுபெற்ற பின்னர் கொள்கை ஆவணமாக வெளியிட ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இரண்டு நாள்களும் மாலை அமர்வுகள் பலாலி வீதியில் அமைந்துள்ள உயர்பட்டப்படிப்புக்கள் பீடத்தில் நடைபெறும். இரண்டு நாள் மாலை அமர்வுகளிலும் தலா நாற்பத்து நான்கு ஆய்வுக் கட்டுரைகள் பல்வேறு தலைப்புக்களிலும் சமர்ப்பிக்கப்படவுள்ளன. பல்கலைக்கழகங்களின் ஆய்வு மாணவர்கள், விரிவுரையாளர்கள், கல்வியியல் கல்லூரிகள் மற்றும் ஆசிரிய பயிற்சிக் கலாசாலை ஆசிரியக் கல்வியலாளர்கள், கல்வி நிர்வாகிகள், பாடசாலை அதிபர்கள் மற்றும் ஆசிரியர்கள் என பன்முகப்படுத்தப்பட்ட ஆய்வாளர்களினால் பல்வேறு தலைப்புக்களில் ஆய்வுக் கட்டுரைகள் முன்வைக்கப்படவுள்ளன   https://globaltamilnews.net/2024/201875/
    • போட்டியில் கலந்துகொண்ட @kalyani யும், @கந்தப்புவும் வெற்றிபெற வாழ்த்துக்கள். இன்னும் 15 மணித்தியாலங்களே இருப்பதனால், யாழ்களப் போட்டியில் விரைவில் கலந்துகொள்ளுங்கள்😀 இதுவரை போட்டியில் இணைந்தவர்கள்: @பையன்26 @முதல்வன் @suvy @ஏராளன் @நிலாமதி @Ahasthiyan @ஈழப்பிரியன் @kalyani @கந்தப்பு  
    • அமெரிக்கா ஏதோ ஒரு விதத்தில் பங்கு எடுக்கும், எடுக்க வேண்டிய நிலை, இஸ்ரேல் ஈரானுக்கு திருப்பி அடித்தால் . (மற்ற திரியில் சொன்னனது போல , இஸ்ரேல் க்கு தெரியும், அமெரிக்கா, மேற்கு பாதுகாப்புக்கு எப்போதும் வரும் என்று. அதை மேற்கும், மீண்டும், மீண்டும் சொல்லுகின்றன. இதுவே பங்கு எடுப்பது. அமெரிக்கா செய்வது, இஸ்ரேல் ஐ பாதுகாப்பத்தற்கு ஈரானின் ஏவுகணனைகளை தடுப்பது act of  war,)   ஈரானின் தூதரகம் மீதான இஸ்ரேல் இன் தாக்குதல் , மேற்கு, குறிப்பாக US க்கு தெரிந்து (அதன் மூலம் 5 கண்கள் உளவு நாடுகளுக்கு - 5 eyes intelligence community தெரிந்து), US ஆமோதித்து, அனுமதித்து  நடத்தப்பட்ட தாக்குதல். ஏனெனில், இஸ்ரேல் இப்படியானவற்றை அமெரிக்காவிடம் சொல்லாமல் செய்வதில்லை. மேலும், France க்கும்  உச அறிவித்து இருக்கும், ஏனெனில், சிரியா பிரான்ஸ் இன் காலனித்துவம்  கீழ் இருந்தது. மற்றது, பிரச்னை வந்தால் செக்யூரிட்டி கவுன்சில் இல் பிரான்ஸ் இந்த உதவி தேவை, ஆனால், இந்த காலனி என்பதே பிரதான  காரணம். இது செக்யூரிட்டி கவுன்சில் இல் எழுதப்படாத  விதி- காலனித்துவ அரசுகளே, முனைய காலணிகளின் இப்போதைய அரசுக்கள் சார்ந்த  விடயத்தில் முன்னுரிமை உள்ளது என்பது .  எனவே, மேற்கு ஆகக்குறைந்தது மறைமுக பங்குதாரர் (கனடா தூதரகத்தை காலி செய்தது அநேகமாக இந்த 5 eyes வழியாகத் தான் இருக்கும்) இஸ்ரேல் சொல்லியது தாக்குதலுக்கு மிகச் சிறிய நேரத்துக்கு முதல் என்று (வேண்டும் என்று) அமெரிக்கா கசிய விட்டு, சில செய்திகள் காவுகின்றன. அனால், தாக்குதலை இஸ்ரேல் 2 மாதமாக திட்டமிட்டது என்று பின் செய்து வந்தது.  கேக்கிறவன் கேணையனாக இருந்தால் ... என்ற அமெரிக்காவின் கதை. (அப்படி US  இடம் சொல்லாமல் இஸ்ரேல் செய்தது, Sinnai மீதான தாக்குதல், கைப்பற்றலும்  , ஆனால், அது பெரிய யுத்தத்தின் ஒரு பகுதி, Egypt முதல் தாக்கி இருந்தது). அமெரிக்காவுக்கு முதலே (ஏற்ற காலத்தில் ) தெரியும் என்றது, newyork times வெளியிட்டு உள்ள இன்னொரு செய்தியானா, அமெரிக்கா, இஸ்ரேல் அதிகாரிகள் ஈரானின் எதிர்பபை குறைத்து மதிப்பிட்டு விட்டார்கள் என்று அதிகாரிகள் அவர்களின் வாயால் சொன்னதாக என்ற செய்தியில்   இருந்து தெரிகிறது.   இதனால் தான் மேற்கு, ஈரானை தடுக்க முனைந்தது. முடியாமல் போக, அது தடுத்தது. un இன் பகுதி charter ஐ குழிதோண்டி புதைத்தன அமெரிக்காவும், அதன் வாலுகளும்.  இதை மேற்கு rule based என்று சொல்லும் என்று நினைக்கிறன்.  
    • மாவீரர்களுக்கு வீரவணக்கங்கள். . .
    • Published By: VISHNU   19 APR, 2024 | 02:01 AM (எம்.ஆர்.எம்.வசீம்) இலங்கைக்கு சொந்தமான கச்சதீவை பெற்றுக்கொள்ள இந்தியா சர்வதேச நீதிமன்றத்தை நாடுவதாக இந்திய பிரதமர் தெரிவித்திருக்கிறார். அவ்வாறானதொரு நிலை ஏற்பட்டால் அதற்கு முகம்கொடுப்பதற்கு நாங்களும் தயார். கச்சதீவு இலங்கைக்கு சொந்தமானது என்பதற்கு போதுமான ஆதாரங்கள் எம்மிடமிருக்கின்றன என இலங்கை மனித நேய கட்சியின் தலைவியும் பேராசிரியருமான சந்திமா விஜேகுணவர்த்தன தெரிவித்தார். இலங்கை மனிதநேய கட்சி தலைமையகத்தில் வியாழக்கிழமை (18) இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே இவ்வாறு தெரிவித்தார். இதுதொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில், இந்தியாவில் தேர்தல் சூடுபிடித்துள்ள நிலையில், தமிழ் நாட்டு மீனவர்களின் வாக்குகளை பெற்றுக்கொள்ளும் நோக்கில் அங்குள்ள அரசியல்வாதிகள் கச்சதீவு விவகாரத்தை கையில் எடுத்துக்கொண்டு பல்வேறு கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர். தேர்தல் காலம் வரும்போது இந்தியாவை பாெறுத்தவரை இது வழமையான விடயமாகும். இந்திய பிரதமரும் கச்சதீவு விடயமாக மிகவும் தீவிரமாக தேர்தல் மேடையில் உரையாற்றி இருக்கிறார். குறிப்பாக கச்சதீவு இந்தியாவுக்கு சொந்தமானது. அதனை இலங்கைக்கு வழங்கியது வரலாற்று தவறு. அதனால் கச்சதீவை இந்தியாவுக்கு மீண்டும் பெற்றுக்கொள்ள நடவடிக்கை எடுப்போம். முடியாவிட்டால் நெதர்லாந்தில் இருக்கும் சர்வதேச நீதிமன்றத்தை நாடுவோம் எனவும் இந்திய பிரதமர் தெரிவித்திருக்கிறார். 285 ஏக்கர் பரப்பளவைக்கொண்ட  கச்சதீவு இலங்கை,, இந்திய மீனவர்கள் கடற்றொழில் செய்வதற்கு அப்பால், இந்த பூமிக்குள் பல பெருமதிவாந்த வேறு விடயங்கள் இருக்கின்றன. அதனால்தான் இந்திய அரசியல்வாதிகள் கச்சதீவை எப்படியாவது தங்களுக்கு சொந்தமாக்கிக்கொள்ள முயற்சித்து வருகின்றனர். கச்சதீவு இலங்கைக்கு சொந்தமானது என்பதற்கு  தேவையான வரலாற்று ஆதாரங்கள் எம்மிடம் இருக்கின்றன.  அதனால் கச்சதீவை பெற்றுக்கொள்ள இந்தியா சர்வதேச நீதிமன்ற்ததை நாடுமாக இருந்தால், அதற்கு முகம்கொடுக்க நாங்களும் தயாராக வேண்டும். கச்சதீவு இலங்கைக்கு சொந்தமானது என்பதற்கான ஆதாரங்களை சர்வதேச நீதிமன்றத்துக்கு சமர்ப்பிக்க நடவடிக்கை எடுப்போம். கச்சதீவு விவகாரத்தால் இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இருந்துவரும் உறவில் பாதிப்பு ஏற்படக்கூடாது.இந்த விடயத்தில் இந்தியாவுடன் முரண்பட்டுக்கொள்ள நாங்கள் தயார் இல்லை. இந்தியா அயல் நாடாக இருந்துகொண்டு எமக்கு பாரிய உதவிகளை செய்துவருகிறது. குறிப்பாக கொவிட் காலத்தில் இந்திய அரசாங்கத்தின் உதவிகளை எங்களால் ஒருபோதும் மறந்துவிட முடியாது. அந்த நன்றி எப்போதும் எங்களிடம் இருக்கிறது. இருந்தாலும் கச்சதீவு விவகாரம் என்பது எமது உரிமை சார்ந்த விடயம். அதனை எங்களால் விட்டுக்கொடுக்க முடியாது. இந்திய அரசியல்வாதிகள் தங்களின் தேர்தல் பிரசாரத்திற்கே இந்த விடயத்தை கையில் எடுத்துக்கொள்கின்றனர். தேர்தல் முடிவடைந்த பின்னர் அந்த விடயத்தை மறந்துவிடுவார்கள் என்றார். https://www.virakesari.lk/article/181410
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.