Jump to content

நவீன கைத்தொழில் ஒன்றின் பின்னடைவு


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

நவீன கைத்தொழில் ஒன்றின் பின்னடைவு

நவீன கைத்தொழில் ஒன்றின்  பின்னடைவு

   — வேதநாயகம் தபேந்திரன் — 

தென்னம் மட்டையை (பொச்சுமட்டையை) தூசாக்கி உரம் மண் கலந்து உருவாகும் பசளைப் பொதி வெளிநாடுகளுக்கு அனுப்பும் கைத்தொழில் ஆசிய நாடுகளில் அண்மையில் அறிமுகமாகிய ஒரு தொழிலாகும். 

இந்தப் பசளைப் பொதிப் பயிர்ச்செய்கையில் கிடைக்கும் பசளை, பூந்தோட்டம், பூச்சாடிகளுக்கு குளிர்தேசங்களில் பயன்படுத்தப்படுகிறது. 

எம்மவர்கள் அதிகமாக வாழும் புலம்பெயர் தேசங்களுக்கும் இங்கிருந்து ஏற்றுமதியாகிறது. 

வடக்கில் வேகமாக வளர்ந்து வந்த இந்த நவீன கைத்தொழில் வறண்டுபோகும் நிலையை அடைந்துவிட்டது. 

பொச்சுமட்டை என அழைக்கப்படும் தேங்காய் மட்டைகளை தும்பு ஆக்கி, தூசு ஆக்கி ஏற்றுமதிக் கம்பனிகளுக்கு விற்று இலாபமீட்டிய தொழில் இன்று இறங்குமுகத்தை அடைந்துள்ளது. 

எம்மவரின் தொலை நோக்கு இல்லாத பழக்கமே இதற்குக் காரணம். அதாவது ஒருவர் ஒரு தொழிலில் உழைத்து இலாபம் கண்டால் அதனைப் பார்த்துப்பலர் அந்தத் தொழிலைத் தொடங்குவார்கள். 

ஒரு தொழிலில் நிறையப் பேர் ஈடுபடும்போது உற்பத்திக்கான மூலப்பொருளைப் பெறுதல், தொழிலாளர்களைப் பெறுதல் உட்பட யாவுமே சவால் மிக்கதாக மாறிவிடும். 

அத்துடன் உற்பத்திப் பொருள்களைச் சந்தைப்படுத்த முடியாமல் அல்லது அடிமாட்டு விலைக்கு விற்று முயற்சியாளர்கள் பலர் நட்டப்படும் நிலை உருவாகும்.  

இந்தப் பின்னடைவைத் தடுப்பதற்கு உரிய விழிப்புணர்வு போதுமான வகையில் வழங்கப்படுவதில்லை. 

வடக்கின் அறிவு மையமாகிய யாழ்ப்பாணம் பல்கலைக்கழகம் தொழில் முயற்சியாளர்களுடன் இணைந்து அல்லது வழிப்படுத்தும் முகமாகச் செயற்படவில்லையென்ற குற்றச்சாட்டு நீண்ட காலமாகவே கூறப்பட்டுவருகிறது. 

தென்னை மட்டையை தூசாக்கித் தும்பாக்கி ஏற்றுமதி செய்யும் இந்தத் துறையில் ஏற்றுமதி அனுமதிப்பத்திரத்தைப் பெரும்பான்மை இனத்தைச் சேர்ந்தவர்களே வைத்திருக்கின்றனர். 

வடபகுதியில் இயங்கும் இந்தத் தொழிற்சாலைகளின் உற்பத்திகளைக் குருணாகல், புத்தளம் மாவட்டங்களுக்கே எடுத்துச் சென்று விற்றுக் காசாக்கி வருகின்றனர். 

உற்பத்திகளில் குறைபாடுகள் உள்ளதாகச் சுட்டிக் காட்டி கிலோ ஒன்றுக்கான விலையில் குறைவை ஏற்படுத்தி ஏற்றுமதியாளர்கள் தம்மைச் சுரண்டுவதாகத் தொழில் உரிமையாளர்கள் கவலை தெரிவிக்கின்றனர். 

வட பகுதியைச் சேர்ந்தவர்கள் ஏற்றுமதி அனுமதிப் பத்திரத்தைப் பெறுவதற்கு தடைகள் ஏதும் இருப்பதாகத் தெரியவில்லை. ஆனால் ஏற்றுமதி அனுமதிப்பத்திரத்தைப் பெறுவதற்கு யாருமே இதுவரை நாட்டம் காட்டவில்லை.  

கல்யாண மண்டபங்கள் ஏட்டிக்குப் போட்டியாக நூற்றுக் கணக்கில் அமைக்கப்பட்டுள்ளன, அமைக்கப்பட்டுவருகின்றன. 

இதற்குக் கோடி கோடியாகச் செலவழிக்கும் எம்மவர்கள் தென்னை மட்டைகளைப் பயன்படுத்தி பெறப்படும் உற்பத்திகளை வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்வதற்கான அனுமதிப்பத்திரம் பெறுவது குறித்தும் கவனம் செலுத்தவேண்டும்.  

தேங்காய் உரித்துத் தென்னை மட்டைகள் உருவாகும் வேகத்தைத் திடீரெனக் கூட்ட முடியாது.  

இயற்கையில் கிடைக்கும் விளைபொருளை அது கிடைக்கும் அளவில்தான் பெறமுடியும். 

ஆனால் இதன் உற்பத்தித் தொழிற்சாலைகள் உருவாகிய வேகம் அதிகமாக உள்ளன. அத்துடன் ஒரு நாளுக்கு 10 முதல் 15 ஆயிரம் தென்னை மட்டைகளை அரைக்கும்  இராட்சத இயந்திரங்களைக் கொள்வனவு செய்து வைத்துள்ளனர். 

இந்த இயந்திரங்களுக்குத் தீனி போடும் அளவுக்குத் தென்னை மட்டைகளை வாங்க முடியாமல் கஸ்டப்படுகின்றனர். 

C40B7F50-D1CC-4376-B192-4342A130686F.jpe

அதேவேளை தென்பகுதி தொழிலதிபர்கள் வடக்கில் முகவர்களை அமர்த்தி அவர்கள் மூலமான கொள்வனவுகளை மேற்கொள்ளும்போது ஒரு ரூபா விற்ற தென்னை மட்டைகள் 4 ரூபா வரையில் விலையேறி விட்டுள்ளன. 

இதனால் இத்துறையில் ஈடுபட்ட சிறிய நடுத்தரத் தொழில் முயற்சியாளர்கள் நட்டப்பட்டுத் தொழிலில் இருந்து விலகும் நிலையை அடைந்துள்ளனர். 

வடக்கில் தென்னை வளம் சிறப்பாக உள்ளது. தேங்காய் உரித்த பின்பாகத் தென்னம் மட்டைகளைப் பெற்று அவற்றை இயந்திரத்தில் அரைத்துப் பொதி செய்து விற்கும் தொழிலில் பல வருடங்களாக வெற்றிகரமாக ஈடுபட்டனர். 

தற்போது இத்தொழிலில் ஏராளம் பேர் இணைந்ததால் கழுத்தறுப்பு நிலையில் தொழில் வந்துவிட்டது. சராசரியாக ஒரு தென்னம் மட்டை 2 ரூபாவுக்கு விற்பனையாகினால் இத் தொழில் இலாபகரமாக நடக்கும்.  

ஆனால் இத் தொழிலில் நிறையப் பேர் ஈடுபட்டதனால் ஒரு மட்டை 4 ரூபா விலைக்கு உயர்ந்து விட்டது. 

அதே வேளை ஒரு நாளுக்குப் பல ஆயிரம் மட்டைகளை அரைக்கும்  இராட்சத இயந்திரங்களைத் தொழிலில் ஈடுபடுத்தி உள்ளனர். 

இந்த இயந்திரங்களின் ஆனைப்பசிக்குச் சோறு போடக் கூடியளவு தென்னம் மட்டைகளைக் கொள்வனவு செய்ய முடியவில்லை. 

CD490645-4E74-438F-B82D-D0259A113D0D.jpe

அதேவேளை புத்தளம், குருணாகல் மாவட்டங்களைச் சேர்ந்த தொழில் முயற்சியாளர்கள் இங்கு இந்த உற்பத்தி ஆலைகளை அமைத்துள்ளனர். அவர்கள் ஏற்றுமதி அனுமதிப் பத்திரத்தை வைத்துக்கொண்டு தொழிலில் ஈடுபடுவதனால் இலாபம் ஈட்ட முடிகிறது. 

ஆனால் வடக்கில் உள்ளோர்கள் தமது உற்பத்திகளைத் தென்பகுதி வியாபாரிகளுக்குக் கொடுக்கவேண்டிய கட்டாயத்தில் இருப்பதனால் அவர்களால் சிறந்த இலாபம் ஈட்ட முடியவில்லை. 

அத்துடன் வடக்கில் தொழிலாளர்களின் கூலி மட்டங்களும் உயர்வாக உள்ளன. இதனால் உற்பத்திச் செலவு அதிகரிக்க இலாப வீதம் குறைகின்றது. 

பாரம்பரிய தொழில்களைத் தாண்டி நவீன தொழில்களைத் தேடுவோரை வெற்றிகரமான முயற்சியாளராக மாற்றவேண்டியது எம் கைகளில்தான் உள்ளது. 

போரைக் காரணம் காட்டிய காலங்கள் போய்விட்டன. தாயகத்தின் வளங்களைப் பயன்படுத்தி செய்யக்கூடிய நவீன தொழில்களை ஊக்குவிக்க வேண்டியது எமது கைகளில்தான் உள்ளது. 
 

https://arangamnews.com/?p=4517

 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இது மட்டும் இல்லை இன்னும் பல தொழில்கள் இப்படித்தான்.கன்டிப்பாக மாத்தி யோசிக்க வேணும்.

Link to comment
Share on other sites

முக்கியமாக ஒருவர் ஒரு தொழிலை சிறப்பாக செய்தால், அதற்கான கேள்வி ஒரு அளவிற்குட்பட்டதாக இருப்பினும் கூட, அவரைப் பார்த்து விழுந்தடித்துக் கொண்டு பலர் இதே தொழிலை செய்ய முற்படும் கழுத்தறுக்கும் குணத்தை திருத்திக் கொள்ள இனியாவது கொஞ்சம் முயல வேண்டும்.

இதே குணம் இங்கு கனடாவிலும் காணலாம். ஒருவர் ஒரு தமிழ்/ இலங்கை உணவு விடுதியை ஒரு பகுதியில் முதலாவதாக திறக்கும் போது கொஞ்ச காலத்துக்கு அவர் நட்டம் இல்லாமல் நடத்துவார். பின்னர், அவரைப் பார்த்து நாலு ஐஞ்சு தமிழாட்கள், அவரின் கடைக்கு அருகிலேயே தாமும் உணவு விடுதியை திறந்து, தாமும் நட்டப்பட்டு முதலாவதாக திறந்தவரையும் நட்டப்படுத்தி கடைசியில் போட்ட முதலையும் திரும்ப பெற முடியாமல் திண்டாடுவர். இதற்குள் போட்டி என்று சொல்லி உணவுகளின் விலையை குறைத்து தரம் / சுவை குறைந்த உணவையும் விற்பர்.

இதுவே யூதர்கள் அல்லது குஜாராத்திகள் என்றால், தமக்குள் கதைத்து (இதற்காக பல சங்கங்கள். அமைப்புகள் உள்ளன அவர்களிடம்) ஒருவருக்கு ஒருவர் போட்டி இல்லாமல் தொழில் நடத்துவர். அத்துடன் ஒருவர் ஒரு புது பகுதியில் கடை திறந்தால், தம் சமூகத்துக்குள் அவரை பற்றி அறியத்தந்து இலவச விளம்பரம் செய்து அவரை முன்னேற்றுவர்.
 

Link to comment
Share on other sites

  • 1 month later...
  • கருத்துக்கள உறவுகள்
On 31/3/2021 at 23:33, நிழலி said:

முக்கியமாக ஒருவர் ஒரு தொழிலை சிறப்பாக செய்தால், அதற்கான கேள்வி ஒரு அளவிற்குட்பட்டதாக இருப்பினும் கூட, அவரைப் பார்த்து விழுந்தடித்துக் கொண்டு பலர் இதே தொழிலை செய்ய முற்படும் கழுத்தறுக்கும் குணத்தை திருத்திக் கொள்ள இனியாவது கொஞ்சம் முயல வேண்டும்.

இதே குணம் இங்கு கனடாவிலும் காணலாம். ஒருவர் ஒரு தமிழ்/ இலங்கை உணவு விடுதியை ஒரு பகுதியில் முதலாவதாக திறக்கும் போது கொஞ்ச காலத்துக்கு அவர் நட்டம் இல்லாமல் நடத்துவார். பின்னர், அவரைப் பார்த்து நாலு ஐஞ்சு தமிழாட்கள், அவரின் கடைக்கு அருகிலேயே தாமும் உணவு விடுதியை திறந்து, தாமும் நட்டப்பட்டு முதலாவதாக திறந்தவரையும் நட்டப்படுத்தி கடைசியில் போட்ட முதலையும் திரும்ப பெற முடியாமல் திண்டாடுவர். இதற்குள் போட்டி என்று சொல்லி உணவுகளின் விலையை குறைத்து தரம் / சுவை குறைந்த உணவையும் விற்பர்.

இதுவே யூதர்கள் அல்லது குஜாராத்திகள் என்றால், தமக்குள் கதைத்து (இதற்காக பல சங்கங்கள். அமைப்புகள் உள்ளன அவர்களிடம்) ஒருவருக்கு ஒருவர் போட்டி இல்லாமல் தொழில் நடத்துவர். அத்துடன் ஒருவர் ஒரு புது பகுதியில் கடை திறந்தால், தம் சமூகத்துக்குள் அவரை பற்றி அறியத்தந்து இலவச விளம்பரம் செய்து அவரை முன்னேற்றுவர்.
 

உங்களுடைய கருத்துடன் மேலதிகமாக சில கருத்துகள், உணவு விடுதிகளைப்பொறுத்தவரை உற்பத்தி செலவு (மூலப்பொருள்களின் செலவு விகிதம் 35% + வேலை செய்பவர்களின் சம்பள விகிதம் 25%) மொத்த வருமானத்தில் ( இலாபம் அல்ல) 60 சதவிகிதமாக இருந்தால் மிகவும், மூலப்பொருள்களின் செலவு விகிதம் 37% மேல் செல்வது நல்லதல்ல அதே போல் வேலை செய்பவர்களின் சம்பள விகிதம் 28% மேல் செல்வது நல்லதல்ல மூன்றாவதாக வாடகை 5% இவற்றை கருத்தில் கொள்வதுடன்
மேலதிகமாக விற்றல் என்ற உத்திகளை பயன்படுத்தலாம் உதாரணமாக பெரிய நிறுவனங்களின் உணவு விளம்பரத்தில் தமது உற்பத்தி செலவைவிட மலிவாக விற்பனை செய்ய விளம்பரம் செய்வார்கள், அதனை வாடிக்கையாளர்களை கவர உபயோகிப்பார்கள் அதனை வாங்க வருபவர்களிடம் அந்த பொருளுக்கு மேலதிகமாக விற்று விடுவார்கள், சின்ன மீனைப்போட்டு பெரிய மீனை பிடிப்பது போல, வர்த்தகத்தில் இதனை விற்பனை கூம்பகம் என்று கூறுவார்கள், உங்கள் நிறுவனங்கள் ஒரு போத்தில் போன்றது அதன் களுத்து எப்படி குறுகியுள்ளதோ அதேயளவுதான் வாடிக்கையாளர், விற்பனை உத்தி என்பது அதனுள் கூம்பக குழாயினூடாக ஒரு போத்தினுள் தண்ணீரை விடுவது போல.
ஜாக் மா சொல்வது போல சாத்தியமேயில்லை என்ற இடத்தில்தான் வாய்புகள் இருக்கும்
ராபர்ட் கியசாகே சொல்வது போல ஒரு தொழில் முனைவன் என்பவன் விமானத்திலிருந்து பாரசூட் இல்லாமல் குதித்து இடைப்பட்ட குறுகிய அவகாசத்திலே ஆகாயத்திலேயே தனக்கான பாரசூட்டை தயாரித்துக்கொள்பவன்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 31/3/2021 at 13:33, நிழலி said:

முக்கியமாக ஒருவர் ஒரு தொழிலை சிறப்பாக செய்தால், அதற்கான கேள்வி ஒரு அளவிற்குட்பட்டதாக இருப்பினும் கூட, அவரைப் பார்த்து விழுந்தடித்துக் கொண்டு பலர் இதே தொழிலை செய்ய முற்படும் கழுத்தறுக்கும் குணத்தை திருத்திக் கொள்ள இனியாவது கொஞ்சம் முயல வேண்டும்.

இதே குணம் இங்கு கனடாவிலும் காணலாம். ஒருவர் ஒரு தமிழ்/ இலங்கை உணவு விடுதியை ஒரு பகுதியில் முதலாவதாக திறக்கும் போது கொஞ்ச காலத்துக்கு அவர் நட்டம் இல்லாமல் நடத்துவார். பின்னர், அவரைப் பார்த்து நாலு ஐஞ்சு தமிழாட்கள், அவரின் கடைக்கு அருகிலேயே தாமும் உணவு விடுதியை திறந்து, தாமும் நட்டப்பட்டு முதலாவதாக திறந்தவரையும் நட்டப்படுத்தி கடைசியில் போட்ட முதலையும் திரும்ப பெற முடியாமல் திண்டாடுவர். இதற்குள் போட்டி என்று சொல்லி உணவுகளின் விலையை குறைத்து தரம் / சுவை குறைந்த உணவையும் விற்பர்.

இதுவே யூதர்கள் அல்லது குஜாராத்திகள் என்றால், தமக்குள் கதைத்து (இதற்காக பல சங்கங்கள். அமைப்புகள் உள்ளன அவர்களிடம்) ஒருவருக்கு ஒருவர் போட்டி இல்லாமல் தொழில் நடத்துவர். அத்துடன் ஒருவர் ஒரு புது பகுதியில் கடை திறந்தால், தம் சமூகத்துக்குள் அவரை பற்றி அறியத்தந்து இலவச விளம்பரம் செய்து அவரை முன்னேற்றுவர்.
 

யூதனோ குஜராத்தி யோ தங்கள் வியாபாரங்களை மற்றைய சமூக மக்களுக்கும் விரிவு படுத்துகிறார்கள் அதனால் அவர்கள் நட்டமடையும் வாய்ப்பு குறைவு நாங்கள் குண்டு சட்டிக்குள் குதிரை ஓட்ட வெளிக்கிட்டால் முகம் குப்புற விழுவது தவிர்க்க முடியாது. 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, பெருமாள் said:

யூதனோ குஜராத்தி யோ தங்கள் வியாபாரங்களை மற்றைய சமூக மக்களுக்கும் விரிவு படுத்துகிறார்கள் அதனால் அவர்கள் நட்டமடையும் வாய்ப்பு குறைவு நாங்கள் குண்டு சட்டிக்குள் குதிரை ஓட்ட வெளிக்கிட்டால் முகம் குப்புற விழுவது தவிர்க்க முடியாது. 

 

On 31/3/2021 at 13:33, நிழலி said:

முக்கியமாக ஒருவர் ஒரு தொழிலை சிறப்பாக செய்தால், அதற்கான கேள்வி ஒரு அளவிற்குட்பட்டதாக இருப்பினும் கூட, அவரைப் பார்த்து விழுந்தடித்துக் கொண்டு பலர் இதே தொழிலை செய்ய முற்படும் கழுத்தறுக்கும் குணத்தை திருத்திக் கொள்ள இனியாவது கொஞ்சம் முயல வேண்டும்.

இதே குணம் இங்கு கனடாவிலும் காணலாம். ஒருவர் ஒரு தமிழ்/ இலங்கை உணவு விடுதியை ஒரு பகுதியில் முதலாவதாக திறக்கும் போது கொஞ்ச காலத்துக்கு அவர் நட்டம் இல்லாமல் நடத்துவார். பின்னர், அவரைப் பார்த்து நாலு ஐஞ்சு தமிழாட்கள், அவரின் கடைக்கு அருகிலேயே தாமும் உணவு விடுதியை திறந்து, தாமும் நட்டப்பட்டு முதலாவதாக திறந்தவரையும் நட்டப்படுத்தி கடைசியில் போட்ட முதலையும் திரும்ப பெற முடியாமல் திண்டாடுவர். இதற்குள் போட்டி என்று சொல்லி உணவுகளின் விலையை குறைத்து தரம் / சுவை குறைந்த உணவையும் விற்பர்.

இதுவே யூதர்கள் அல்லது குஜாராத்திகள் என்றால், தமக்குள் கதைத்து (இதற்காக பல சங்கங்கள். அமைப்புகள் உள்ளன அவர்களிடம்) ஒருவருக்கு ஒருவர் போட்டி இல்லாமல் தொழில் நடத்துவர். அத்துடன் ஒருவர் ஒரு புது பகுதியில் கடை திறந்தால், தம் சமூகத்துக்குள் அவரை பற்றி அறியத்தந்து இலவச விளம்பரம் செய்து அவரை முன்னேற்றுவர்.
 

முன்னமும் சொல்லி இருக்கிறேன், எமது மக்களிடம் தொலைநோக்கும், அறிவார்ந்த சிந்தனைகளும் இல்லை.

ஊர்க்கல்வி அப்படி. ஆங்கில அறிவை வளர்க்கும் நோக்கமும் கிடையாது.

17ம் நூறாண்டில், அகதியாக பிரித்தானியாவுக்கு, பிரான்சில் இருந்து ஓடிவந்தார்கள் 120,000 யூதர்கள்.

ஆங்கிலத்தில் புலமை பெற்று, முன்னேறினார்கள், 19ம் நூறாண்டில் விக்டோரியா மகாராணி காலத்தில், பிரிட்டிஷ் பிரதமரானார் பெஞ்சமின் டிஸரேலி. முதல் யூத பிரிட்டிஷ் பிரதமர்.

அவரது, நினைவு இல்லத்தில், unlikely prime minister in Victorian time  என்று போட்டு இருக்கிறார்கள். கேட்டபோது, சொன்னார்கள், நீ பார்க்கும் இங்கிலாந்து வேறு, அன்றய இங்கிலாந்து வேறு. இன, நிற துவேசத்தினை கடந்து அன்று அவர் அடைந்த உயரம் பிரமிக்கத்தக்கது என்றார்கள்.

அவர்கள் வங்கியியலில் சரித்திரம் படைத்தனர். ரோத்சைல்டு வங்கியை அமைத்த (அவர்கள் வாரிசு, அண்மையில் இலங்கை சென்று வந்தார்) குடும்பம், தாங்கள் கட்டிய பெரிய மாளிகை ஒன்றுக்கு, கட்டிட பொருட்கள் கொண்டு சொல்ல தனி ரயில் பாதையே அமைத்தார்கள்.

History of the house – Waddesdon Manor

அந்த மாளிகை தங்களுக்கு ராசி இல்லை என்று, தானமாக, நேஷனல் டிரஸ்ட் அமைப்புக்கு கொடுத்து விட்டனர்.

aerial view of Waddesdon Manor near Aylesbury, a Rothschilds Mansion Stock  Photo - Alamy

எமது மக்கள், தகமை கற்றலுக்கு (skill learning ) முக்கியத்துவம் கொடுக்கவேண்டும். 

****

இவரது சிந்தனைக்கு காரணம் கனேடிய கல்வியாக இருக்கலாம்

https://yarl.com/forum3/topic/256764-sikaram-thodum-manitharkal-with-nanthan-nandhakumaran/?tab=comments#comment-1530326

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எனது கருத்து என்னவென்றால் 90% சிறிய வியாபாரங்கள் முதல் 2 வருடத்தில் தோல்வி அடைகிறது அடுத்த 5 வருடத்தில் 5% வியாபாரங்கள்தோல்வி அடைகிறது, என்று கூறப்படுகிறது அது ஒரு உலகலாவிய உண்மை, எம்ம்வர்களும் விதிவிலக்கல்ல அதற்குக்காரணம் வியாபாரம் தொடர்பான புரிதல் இல்லை என்பதாகும், ஆனாலும் முயற்சி செய்வதால் ஏற்படும் பண இழப்பு, மன உழைச்சல்,நேர விரயம் என்பவற்றிற்கு மேலாக பெறும் அனுபவ அறிவு எதிர்கால நடவடிக்கைகளுக்கு உதவும், அதனால் முயற்சி செய்பவர்களை குறை சொல்லாதீர்கள், மாறாக ஊக்கப்படுத்துங்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
6 minutes ago, vasee said:

எனது கருத்து என்னவென்றால் 90% சிறிய வியாபாரங்கள் முதல் 2 வருடத்தில் தோல்வி அடைகிறது அடுத்த 5 வருடத்தில் 5% வியாபாரங்கள்தோல்வி அடைகிறது, என்று கூறப்படுகிறது அது ஒரு உலகலாவிய உண்மை, எம்ம்வர்களும் விதிவிலக்கல்ல அதற்குக்காரணம் வியாபாரம் தொடர்பான புரிதல் இல்லை என்பதாகும், ஆனாலும் முயற்சி செய்வதால் ஏற்படும் பண இழப்பு, மன உழைச்சல்,நேர விரயம் என்பவற்றிற்கு மேலாக பெறும் அனுபவ அறிவு எதிர்கால நடவடிக்கைகளுக்கு உதவும், அதனால் முயற்சி செய்பவர்களை குறை சொல்லாதீர்கள், மாறாக ஊக்கப்படுத்துங்கள்.

முயற்சி புதுமையாக இருக்கவேண்டும். நானும் கடையை திறப்பேன் என்றல்ல.

நான் இருக்கும் பகுதியில் உண்மையில் நடந்தது. ஒருவர் ரெஸ்டூரண்ட் திறந்தார். நல்ல யாவாரம். கல்லாவில் மனைவி. அவர் சாப்பாடு தயாரிப்பில். 

பலர் வந்தார்கள். அதில் ஒருவருக்கு, சாப்பாடு பிடித்து விட்டது. மெதுவாக விசாரித்தார், யாரு உங்களது சமையல் காரர், வரச்சொல்லுங்கள் நன்றி சொல்லி பாராட்ட வேண்டும் என்றார்.

பெண்மணி தனது கணவர் என்று சொல்ல வேண்டிய தேவை இருக்கவில்லை ஆகவே, சமையல் காரரை கூப்பிட்டு விட, அவரும் தனது பெயரை சொல்லி, அறிமுகமானார்.

மறுமுறை வந்தார், சாப்பிட்டார், இம்முறை அவரது போன் இலக்கத்தினை வாங்கிப்போனார். கேட்டரிங் ஆர்டர் ஒன்று தர வேண்டும், அங்கே வந்து சமைத்து தர வேண்டும் என்று.

மறுநாளே அழைப்பு வந்தது. தான் ஒரு ரெஸ்டூரண்ட் நகரின் இன்னுமொரு பகுதியில் திறப்பதாகவும், இவரை வேலைக்கு வருமாறும், அதிக சம்பளம் தருவதாகவும் சொன்னார்.

தான் தான் உரிமையாளர் என்று சொன்ன அவர், இவர் அவருக்கு அறிவுரை சொன்னார். உங்களை நம்பி மட்டுமே தொடங்குங்கள், சமையல் காரர்களை நம்பி தொடங்கினால், அவர்கள் இப்படியே விலகினால், வியாபாரம் படுத்து விடும். அவர்கள் போனாலும், நீங்கள் சமைக்க கூடியதாக இருக்கவேண்டும்.

அவர், ரெஸ்டூரண்ட் தொடங்கும் ஐடியாவை விட்டு விட்டார். எந்த தொழிலாயினும், தெரிந்தே தொடங்க வேண்டும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, Nathamuni said:

முயற்சி புதுமையாக இருக்கவேண்டும். நானும் கடையை திறப்பேன் என்றல்ல.

நான் இருக்கும் பகுதியில் உண்மையில் நடந்தது. ஒருவர் ரெஸ்டூரண்ட் திறந்தார். நல்ல யாவாரம். கல்லாவில் மனைவி. அவர் சாப்பாடு தயாரிப்பில். 

பலர் வந்தார்கள். அதில் ஒருவருக்கு, சாப்பாடு பிடித்து விட்டது. மெதுவாக விசாரித்தார், யாரு உங்களது சமையல் காரர், வரச்சொல்லுங்கள் நன்றி சொல்லி பாராட்ட வேண்டும் என்றார்.

பெண்மணி தனது கணவர் என்று சொல்ல வேண்டிய தேவை இருக்கவில்லை ஆகவே, சமையல் காரரை கூப்பிட்டு விட, அவரும் தனது பெயரை சொல்லி, அறிமுகமானார்.

மறுமுறை வந்தார், சாப்பிட்டார், இம்முறை அவரது போன் இலக்கத்தினை வாங்கிப்போனார். கேட்டரிங் ஆர்டர் ஒன்று தர வேண்டும், அங்கே வந்து சமைத்து தர வேண்டும் என்று.

மறுநாளே அழைப்பு வந்தது. தான் ஒரு ரெஸ்டூரண்ட் நகரின் இன்னுமொரு பகுதியில் திறப்பதாகவும், இவரை வேலைக்கு வருமாறும், அதிக சம்பளம் தருவதாகவும் சொன்னார்.

தான் தான் உரிமையாளர் என்று சொன்ன அவர், இவர் அவருக்கு அறிவுரை சொன்னார். உங்களை நம்பி மட்டுமே தொடங்குங்கள், சமையல் காரர்களை நம்பி தொடங்கினால், அவர்கள் இப்படியே விலகினால், வியாபாரம் படுத்து விடும். அவர்கள் போனாலும், நீங்கள் சமைக்க கூடியதாக இருக்கவேண்டும்.

அவர், ரெஸ்டூரண்ட் தொடங்கும் ஐடியாவை விட்டு விட்டார். எந்த தொழிலாயினும், தெரிந்தே தொடங்க வேண்டும்.

ஈ மித் மீளாய்வு ஏன் அதிகளவான சிறிய வியாபாரங்கள் நட்டமடைகின்றன எனும் புத்தகம் இணையத்தில் இலவசமாக தரவிறக்கம் செய்து வாசிக்கலாம், எனக்கு எனது முன்னாள் முதலாளி அந்த புத்தகத்தைப்பரிசாகத்தந்திருந்தார் அப்புத்தகத்தில் தொழில் முனைவராக வருபவர்கள் நீங்கள் சொல்வது போல பெரும்பாலும் தொழில்சார் திறனாளிகள் அப்படியானவர்கள்தான் அதிகமாக தோல்விகளைத்தளுவார்கள்.
அனைத்து சம கால உணவங்கள் உணவு சமைக்கும் முறை விரிவாக பயிற்சியில் சேர்த்து கொள்வார்கள் அதனால் புதிய தொழிலாளர்களை பயிற்றுவிப்பது சிரமமல்ல.(உணவு பொருளில் பயன்படுத்தப்படும் மூலப்பொருதளின் அளவு விலை என்பது விற்பனை விலையுடன் ஒப்பீடு செய்யும் பி ஒ எஸ் ).


சில உணவங்களில் திங்கள் கிழமை வருமானம் அந்த நாளுக்குரிய நடைமுறை செலவைவிட குறைவாகவும், சில உணவகங்களில் திங்கள், செவ்வாய் கிழமை வரையும் சில உணவகங்களில் அது புதன் வரையும் நீழும், ஆனால் ஒட்டு மொத்த வார வருமானம் அதை ஈடுகட்டி விடும்,
அந்த குறிப்பிட்ட நாழில் செலவைக்குறைக்க எடுக்கப்படும்  (வேலை அளவைக்குறைத்தல்) நடவடிக்கைகள் எதிர்மறை விளைவுகளை உருவாக்கும், அதனால்தான் 2 வாங்கினால் 1 இலவசம் என வாடிக்கையாளர்களைக்கவர்ந்து, மேலதிகமாக விற்றல் போன்ற உத்திகளை கையாள்கிறார்கள்.

பலர் சொல்லக்கேள்விப்பட்டுளேன் போரும் வியாபாரமும் அடிப்படையில் ஒன்றே, இரண்டின் முடிவும் ஆரம்பிப்பதற்கு முன்பே தீர்மானிக்கப்பட்டுவிடும்.

 

தொழில்துறை திட்டமிடலில் ஆரம்பிக்கப்படாத தொழிலுக்கே 2 வருட நாளாந்த வரவு செலவு எதிர்வு கூறல் அறிக்கை ஆய்வுகளின் அடிப்படையில் தயாரிக்கவேண்டும் (முதலாந்தர ஆய்வு + இரண்டாந்தர ஆய்வு) 
திட்டமிடப்படாத நிகழ்வு பாதுகாப்பு பொறிமுறைகள் மற்றும் மாறும் சமூக முறைமைக்கு அமைவாக்கம் செய்தல் என பல விளைவுகளையும் திட்டமிடுகிறார்கள்.

வியாபாரத்தில் மீளாய்வு திட்டமிடல் என்பது 2 வருடங்கள் கால அளவைக்கொண்டது, அப்படி செய்யாவிட்டால் இலாபகரமான வியாபாரம் கூட தோற்று விடும் என்பார்கள்.


நாங்கள் வியாபாரம் செய்வது ஒரு நிறைபோட்டிச்சந்தை என்பதால், நாங்களும் அதற்கு ஏற்ப எங்களை உத்திகளை உருவாக்கிக்கொள்ளவேண்டும் 

நான் விதண்டாவாதம் செய்வது போல நானே உணர்கிறேன், உங்கள் எல்லோரினது கருத்தும் சரியானது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இந்தத் தலைப்பில்.... மிக அருமையான கருத்துக்களை பதிந்த.... 
நிழலி, வாசி, பெருமாள், நாதமுனி ஆகியோருக்கு பாராட்டுக்கள்.
வியாபாரம் ஆரம்பிக்க நினைப்பவர்கள்... கட்டாயம்  வாசிக்க வேண்டிய தலைப்பு இது.

 தலைப்பை ஆரம்பித்த... கிருபன் ஜீக்கு நன்றி.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
8 hours ago, vasee said:

ஈ மித் மீளாய்வு ஏன் அதிகளவான சிறிய வியாபாரங்கள் நட்டமடைகின்றன எனும் புத்தகம் இணையத்தில் இலவசமாக தரவிறக்கம் செய்து வாசிக்கலாம், எனக்கு எனது முன்னாள் முதலாளி அந்த புத்தகத்தைப்பரிசாகத்தந்திருந்தார் அப்புத்தகத்தில் தொழில் முனைவராக வருபவர்கள் நீங்கள் சொல்வது போல பெரும்பாலும் தொழில்சார் திறனாளிகள் அப்படியானவர்கள்தான் அதிகமாக தோல்விகளைத்தளுவார்கள்.
அனைத்து சம கால உணவங்கள் உணவு சமைக்கும் முறை விரிவாக பயிற்சியில் சேர்த்து கொள்வார்கள் அதனால் புதிய தொழிலாளர்களை பயிற்றுவிப்பது சிரமமல்ல.(உணவு பொருளில் பயன்படுத்தப்படும் மூலப்பொருதளின் அளவு விலை என்பது விற்பனை விலையுடன் ஒப்பீடு செய்யும் பி ஒ எஸ் ).


சில உணவங்களில் திங்கள் கிழமை வருமானம் அந்த நாளுக்குரிய நடைமுறை செலவைவிட குறைவாகவும், சில உணவகங்களில் திங்கள், செவ்வாய் கிழமை வரையும் சில உணவகங்களில் அது புதன் வரையும் நீழும், ஆனால் ஒட்டு மொத்த வார வருமானம் அதை ஈடுகட்டி விடும்,
அந்த குறிப்பிட்ட நாழில் செலவைக்குறைக்க எடுக்கப்படும்  (வேலை அளவைக்குறைத்தல்) நடவடிக்கைகள் எதிர்மறை விளைவுகளை உருவாக்கும், அதனால்தான் 2 வாங்கினால் 1 இலவசம் என வாடிக்கையாளர்களைக்கவர்ந்து, மேலதிகமாக விற்றல் போன்ற உத்திகளை கையாள்கிறார்கள்.

பலர் சொல்லக்கேள்விப்பட்டுளேன் போரும் வியாபாரமும் அடிப்படையில் ஒன்றே, இரண்டின் முடிவும் ஆரம்பிப்பதற்கு முன்பே தீர்மானிக்கப்பட்டுவிடும்.

 

தொழில்துறை திட்டமிடலில் ஆரம்பிக்கப்படாத தொழிலுக்கே 2 வருட நாளாந்த வரவு செலவு எதிர்வு கூறல் அறிக்கை ஆய்வுகளின் அடிப்படையில் தயாரிக்கவேண்டும் (முதலாந்தர ஆய்வு + இரண்டாந்தர ஆய்வு) 
திட்டமிடப்படாத நிகழ்வு பாதுகாப்பு பொறிமுறைகள் மற்றும் மாறும் சமூக முறைமைக்கு அமைவாக்கம் செய்தல் என பல விளைவுகளையும் திட்டமிடுகிறார்கள்.

வியாபாரத்தில் மீளாய்வு திட்டமிடல் என்பது 2 வருடங்கள் கால அளவைக்கொண்டது, அப்படி செய்யாவிட்டால் இலாபகரமான வியாபாரம் கூட தோற்று விடும் என்பார்கள்.


நாங்கள் வியாபாரம் செய்வது ஒரு நிறைபோட்டிச்சந்தை என்பதால், நாங்களும் அதற்கு ஏற்ப எங்களை உத்திகளை உருவாக்கிக்கொள்ளவேண்டும் 

நான் விதண்டாவாதம் செய்வது போல நானே உணர்கிறேன், உங்கள் எல்லோரினது கருத்தும் சரியானது.

அதன் ஆங்கில பெயரை தாருங்கள், தேடிப்பார்க்கிறோம். அல்லது ebook ஆக இருந்தால் பகிருங்கள். google drive போடலாம்.
 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
  • கருத்துக்கள உறவுகள்

கனடாவின் ஒண்டாரியோ மாநில பிரதமர், டக் போர்ட் வருமானம் 2019ம் ஆண்டில் 3மில்லியன் இருந்தது, 2021ல் 50மில்லியன் ஆக அதிகரித்து உள்ளது.

அவர் செய்த யாவாரம்: கொரோனா தொடர்பில், ஸ்டிக்கர் பிரிண்ட் செய்து அதனை ஒன்லைன் மூலம் வியாபாரம் செய்தார். 

பிரதமராக இருப்பதால், கனடாவின் சகல வியாபார நிறுவனங்களும் இதை வாங்கி ஓட்டி விடவேண்டும் என்பதையும், என்ன வகை ஸ்டிக்கர் தேவை என்பதை முதலே அறிந்து இருந்தாலும், காற்றுள்ள போதே தூற்றிக்கொள்ளவும் அவரது வியாபார மூளை தான் பின்னே உள்ளது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, Nathamuni said:

கனடாவின் ஒண்டாரியோ மாநில பிரதமர், டக் போர்ட் வருமானம் 2019ம் ஆண்டில் 3மில்லியன் இருந்தது, 2021ல் 50மில்லியன் ஆக அதிகரித்து உள்ளது.

அவர் செய்த யாவாரம்: கொரோனா தொடர்பில், ஸ்டிக்கர் பிரிண்ட் செய்து அதனை ஒன்லைன் மூலம் வியாபாரம் செய்தார். 

பிரதமராக இருப்பதால், கனடாவின் சகல வியாபார நிறுவனங்களும் இதை வாங்கி ஓட்டி விடவேண்டும் என்பதையும், என்ன வகை ஸ்டிக்கர் தேவை என்பதை முதலே அறிந்து இருந்தாலும், காற்றுள்ள போதே தூற்றிக்கொள்ளவும் அவரது வியாபார மூளை தான் பின்னே உள்ளது.

பலர் இது போல இணையத்தினூடாக பல வகையிலும் வருமானம் ஈட்டுகிறார்கள் 
1. சிபார்சு செய்தல் (நீங்கள் தெரிவு செய்யும் சந்தயைப்பொறுத்து வருமானம் பெறலாம் உ+ம் சில 50% வரை)
2.சந்தைப்படுத்தல் ( சீன வினியோகிப்பாளரிடமிருந்து அவரது பொருளை விள்ம்பரம் மூலம் வாடிக்கையாளரைப்பெற்று சீன வினியோகிப்பாளர் மூலம் வாடிக்கையாளருக்கு விற்றல் , இது முதலாவதை விடவருமானம் விகிதம் குறைவு)
3.சீன் உற்பத்தியாளர் மூலம் உடைகளில் வடிவங்களை அச்சிட்டு விற்றல் மற்றும் பொருதளைத்தாயாரித்து சொந்தமாக கடை இணையத்தளம் ஊடாகவும் அமேசன்,ஈபே மூலமாகவும் விற்றல்
4.பணச்சந்தை நாணய சந்தை ஊடாக வருமானம் ஈட்டல் 
மேலே குறிப்பிட்டவை நான் அறிந்தவை இவை தவிர வேறு மார்க்கங்களும் இருக்கலாம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 6/5/2021 at 16:39, Nathamuni said:

முயற்சி புதுமையாக இருக்கவேண்டும். நானும் கடையை திறப்பேன் என்றல்ல.

நான் இருக்கும் பகுதியில் உண்மையில் நடந்தது. ஒருவர் ரெஸ்டூரண்ட் திறந்தார். நல்ல யாவாரம். கல்லாவில் மனைவி. அவர் சாப்பாடு தயாரிப்பில். 

பலர் வந்தார்கள். அதில் ஒருவருக்கு, சாப்பாடு பிடித்து விட்டது. மெதுவாக விசாரித்தார், யாரு உங்களது சமையல் காரர், வரச்சொல்லுங்கள் நன்றி சொல்லி பாராட்ட வேண்டும் என்றார்.

பெண்மணி தனது கணவர் என்று சொல்ல வேண்டிய தேவை இருக்கவில்லை ஆகவே, சமையல் காரரை கூப்பிட்டு விட, அவரும் தனது பெயரை சொல்லி, அறிமுகமானார்.

மறுமுறை வந்தார், சாப்பிட்டார், இம்முறை அவரது போன் இலக்கத்தினை வாங்கிப்போனார். கேட்டரிங் ஆர்டர் ஒன்று தர வேண்டும், அங்கே வந்து சமைத்து தர வேண்டும் என்று.

மறுநாளே அழைப்பு வந்தது. தான் ஒரு ரெஸ்டூரண்ட் நகரின் இன்னுமொரு பகுதியில் திறப்பதாகவும், இவரை வேலைக்கு வருமாறும், அதிக சம்பளம் தருவதாகவும் சொன்னார்.

தான் தான் உரிமையாளர் என்று சொன்ன அவர், இவர் அவருக்கு அறிவுரை சொன்னார். உங்களை நம்பி மட்டுமே தொடங்குங்கள், சமையல் காரர்களை நம்பி தொடங்கினால், அவர்கள் இப்படியே விலகினால், வியாபாரம் படுத்து விடும். அவர்கள் போனாலும், நீங்கள் சமைக்க கூடியதாக இருக்கவேண்டும்.

அவர், ரெஸ்டூரண்ட் தொடங்கும் ஐடியாவை விட்டு விட்டார். எந்த தொழிலாயினும், தெரிந்தே தொடங்க வேண்டும்.

உண்மையில் என்னிடம் இப்படி ஒரு நல்ல வியாபார ஐடியா இருக்கிறது 
இப்போது எல்லா சூழலாலும் எனக்கு காலம் கனிந்தும் வந்து உள்ளது 

இந்த ஒரே ஒரு திண்டாடடம்தான் 
ஒரு நல்ல சமையல் காரரை முழுதாக நம்பியே ஆகவேண்டும் 
அவரை வெறும் சமையல் காரர் இல்லாது 25% -30% வரை 
பங்காளியாக சேர்ப்பது பற்றிக்கூட சிந்திக்கிறேன் 

ஆனால் சமையலில் அடிக்கடி மாறுதல் செய்ய கூடிய 
மனநிலை உள்ளவராகவும் இருக்கவேணும் 
 வியாபாரத்தை காலமாற்றத்துக்கு ஏற்றால் போல் 
மாற்ற கூடியவராகவும் வேண்டும்.

இது ரெஸ்டூரண்ட் அல்ல 
ஒரு வித்தியாசமான உணவு விநியோக ஐடியா 
சில வருடமாக வேலைசெய்துகொண்டு வருகிறேன் 

இதை நிவர்த்தி செய்ய உங்களிடம் ஏதாவது ஒரு ஐடியா இருந்தால் தாருங்கள் 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
34 minutes ago, Maruthankerny said:

உண்மையில் என்னிடம் இப்படி ஒரு நல்ல வியாபார ஐடியா இருக்கிறது 
இப்போது எல்லா சூழலாலும் எனக்கு காலம் கனிந்தும் வந்து உள்ளது 

இந்த ஒரே ஒரு திண்டாடடம்தான் 
ஒரு நல்ல சமையல் காரரை முழுதாக நம்பியே ஆகவேண்டும் 
அவரை வெறும் சமையல் காரர் இல்லாது 25% -30% வரை 
பங்காளியாக சேர்ப்பது பற்றிக்கூட சிந்திக்கிறேன் 

ஆனால் சமையலில் அடிக்கடி மாறுதல் செய்ய கூடிய 
மனநிலை உள்ளவராகவும் இருக்கவேணும் 
 வியாபாரத்தை காலமாற்றத்துக்கு ஏற்றால் போல் 
மாற்ற கூடியவராகவும் வேண்டும்.

இது ரெஸ்டூரண்ட் அல்ல 
ஒரு வித்தியாசமான உணவு விநியோக ஐடியா 
சில வருடமாக வேலைசெய்துகொண்டு வருகிறேன் 

இதை நிவர்த்தி செய்ய உங்களிடம் ஏதாவது ஒரு ஐடியா இருந்தால் தாருங்கள் 

இதெல்லாம், தனிமடல் போட்டு கதையுங்கோ. ஐடியா சொன்னாப்பிறகு, கிருபன் அய்யா கிளம்பிடுவார் யாவாரம் செய்ய...

ஆள், ஊர் உலகத்து இணையத்தளம் எல்லாம், விழுந்தெழுப்பி திரியுறார், ஐடியா ஏதும் கிடைக்குமா எண்டு. 😜

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, Nathamuni said:

இதெல்லாம், தனிமடல் போட்டு கதையுங்கோ. ஐடியா சொன்னாப்பிறகு, கிருபன் அய்யா கிளம்பிடுவார் யாவாரம் செய்ய...

ஆள், ஊர் உலகத்து இணையத்தளம் எல்லாம், விழுந்தெழுப்பி திரியுறார், ஐடியா ஏதும் கிடைக்குமா எண்டு. 😜

சாரி பாஸ்.. முதலாளித்துவத்திற்கு எதிர் என்பதால் நான் சில்லறை பார்க்க வியாபாரம் எல்லாம் பண்ணுவதில்லை.😎

அப்படியே போய் ஷோசல் காசு எடுக்க கியூவில நின்றால் போதும். வேண்டியது கிடைக்கும்😜

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, கிருபன் said:

சாரி பாஸ்.. முதலாளித்துவத்திற்கு எதிர் என்பதால் நான் சில்லறை பார்க்க வியாபாரம் எல்லாம் பண்ணுவதில்லை.😎

அப்படியே போய் ஷோசல் காசு எடுக்க கியூவில நின்றால் போதும். வேண்டியது கிடைக்கும்😜

சோசிலுக்கு கனகாலம் போகேல்லை போலை கிடக்குது.

இப்பெல்லாம் எஅசி இல்லை பாஸ்... சரியான கஷ்டம்.

மூண்டு பரம்பரை விசயந்தாய் விலாவாரியா கேக்கிறாங்களாம். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 31/3/2021 at 23:33, நிழலி said:

முக்கியமாக ஒருவர் ஒரு தொழிலை சிறப்பாக செய்தால், அதற்கான கேள்வி ஒரு அளவிற்குட்பட்டதாக இருப்பினும் கூட, அவரைப் பார்த்து விழுந்தடித்துக் கொண்டு பலர் இதே தொழிலை செய்ய முற்படும் கழுத்தறுக்கும் குணத்தை திருத்திக் கொள்ள இனியாவது கொஞ்சம் முயல வேண்டும்.

இதே குணம் இங்கு கனடாவிலும் காணலாம். ஒருவர் ஒரு தமிழ்/ இலங்கை உணவு விடுதியை ஒரு பகுதியில் முதலாவதாக திறக்கும் போது கொஞ்ச காலத்துக்கு அவர் நட்டம் இல்லாமல் நடத்துவார். பின்னர், அவரைப் பார்த்து நாலு ஐஞ்சு தமிழாட்கள், அவரின் கடைக்கு அருகிலேயே தாமும் உணவு விடுதியை திறந்து, தாமும் நட்டப்பட்டு முதலாவதாக திறந்தவரையும் நட்டப்படுத்தி கடைசியில் போட்ட முதலையும் திரும்ப பெற முடியாமல் திண்டாடுவர். இதற்குள் போட்டி என்று சொல்லி உணவுகளின் விலையை குறைத்து தரம் / சுவை குறைந்த உணவையும் விற்பர்.

இதுவே யூதர்கள் அல்லது குஜாராத்திகள் என்றால், தமக்குள் கதைத்து (இதற்காக பல சங்கங்கள். அமைப்புகள் உள்ளன அவர்களிடம்) ஒருவருக்கு ஒருவர் போட்டி இல்லாமல் தொழில் நடத்துவர். அத்துடன் ஒருவர் ஒரு புது பகுதியில் கடை திறந்தால், தம் சமூகத்துக்குள் அவரை பற்றி அறியத்தந்து இலவச விளம்பரம் செய்து அவரை முன்னேற்றுவர்.
 

புலம்பெயர்ந்து வாழும் அனேகமான முதலாவது generation சேர்ந்தவர்களின் மனநிலையானது safe side life அதாவது ஒரு நிரந்தர வருமானம், வீடு, பிள்ளைகளின் படிப்பு etc.. ஊரில் நிறையவே இழந்து வந்திருப்பதால் safe side life style அதிகம் விரும்புகிறார்கள். இதனால் அதிகளவு risk எடுத்து போவதை விரும்பாமல் இந்த மாதிரி கடைகள், உணவகங்கள் போன்றவற்றில் ஈடுபடுகிறார்களோ என நினைப்கதுண்டு. 

இதனால்தான், ஒரு franchise எடுத்து(உதாரனமாக Subway, Operto or Nando’s, Property Sales ) நகரத்தைவிட்டு சற்று ஒதுங்கி தொழிலை நடத்த தயங்குகிறார்கள். அத்துடன் ஆங்கில மொழியில் பேச்சுதிறன்,   மற்ற சமூகங்களுடன் இணைந்து செயற்பட இருக்கும் தயக்கம், போன்றவையும் இங்கே எங்களவர்கள் பலசரக்கு கடை அல்லது உணவகங்களை தவிர வேறு தெரிவுகளை நாடுவதில்லை என நினைக்கிறேன். 

இதுவே ஒரு Accountant or Dr என்றால் tax agents or medical centers .. வட்டத்தைவிட்டு வெளியே சிந்திப்பதில்லை.

நீங்கள் கூறியது போல வட இந்தியர்கள் துணிந்து வெளியிடங்களுக்கும் போவார்கள், தங்களுக்கிடையில் சங்கங்களை அமைத்து நடந்துகொள்வார்கள்..

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
12 minutes ago, பிரபா சிதம்பரநாதன் said:

புலம்பெயர்ந்து வாழும் அனேகமான முதலாவது generation சேர்ந்தவர்களின் மனநிலையானது safe side life அதாவது ஒரு நிரந்தர வருமானம், வீடு, பிள்ளைகளின் படிப்பு etc.. ஊரில் நிறையவே இழந்து வந்திருப்பதால் safe side life style அதிகம் விரும்புகிறார்கள். இதனால் அதிகளவு risk எடுத்து போவதை விரும்பாமல் இந்த மாதிரி கடைகள், உணவகங்கள் போன்றவற்றில் ஈடுபடுகிறார்களோ என நினைப்கதுண்டு. 

இதில் ஏதும் தவறிருக்கிறதா? 

தெரியாத இடம், அந்நிய மக்கள், எவரை நம்புவது, எஅவரை விடுவது என்கிற தயக்கம், வருமானம் ஒன்றில்லாவிட்டால் மீளவும் நாடு திரும்ப நேரிடலாம் என்கிற அச்சம் காரணமாக அவர்கள் சாதாரண, ஆனால் நிரந்தர ஊதியம் பெறுமொரு வேலையில் அமர்வதை எதிர்பார்ப்பது தவறில்லையே? 

அடுத்தது, பெரும்பாலான த்மிழர்கள் ஏனைய தமிழர்கள் வாழும் பகுதிகளில் வாழ விரும்புவதன் காரணம் அப்பகுதி பாதுகாப்பானது, தமது பிள்ளைகளை வளர்க்க உசிதமானது என்கிற காரணங்க்களாத் தான் என்பது எனது எண்ணம். இதுகூட தவறில்லையே? 

மேலும், திறமையினைக் காரணம் காட்டி இங்கே வருபவர்கள்தமது திறமைக்கு உகந்த வேலைகளைத் தேடுவதுதானே இயல்பு? அவர்களுக்கு கடைகளையோ, வேறு பிற நிறுவனங்களையோ நடத்தவேண்டிய தேவை இருக்கிறதா? 

17 minutes ago, பிரபா சிதம்பரநாதன் said:

இதனால்தான், ஒரு franchise எடுத்து(உதாரனமாக Subway, Operto or Nando’s, Property Sales ) நகரத்தைவிட்டு சற்று ஒதுங்கி தொழிலை நடத்த தயங்குகிறார்கள். அத்துடன் ஆங்கில மொழியில் பேச்சுதிறன்,   மற்ற சமூகங்களுடன் இணைந்து செயற்பட இருக்கும் தயக்கம், போன்றவையும் இங்கே எங்களவர்கள் பலசரக்கு கடை அல்லது உணவகங்களை தவிர வேறு தெரிவுகளை நாடுவதில்லை என நினைக்கிறேன். 

நகரத்தைவிட்டு வேறிடங்களுக்குப் போகத் தயங்குவதற்கான காரணம் தமது வியாபாரம் நட்டத்தில் சென்றுவிடும் என்கிற காரணமாக இருக்கலாம். அத்துடன், எவருமே தமது வருமானம் பாதிக்கப்படாதவகையில் ஒரு வியாபாரத்தை, உத்தரவாதத்துடன் நடத்தவே விரும்புவர். 

அடுத்தது ஆங்கில மொழியறிவு. இது சரியான தர்க்கமா என்று தெரியவில்லை. ஏனென்றால், பல சமூகங்களுடன் ஒப்பிடும்போது இலங்கைத் தமிழர்கள் ஆங்கில அறிவு மிகவும் அதிகமானது. பல புலம்பெயர் தேசங்களில் இலங்கைத் தமிழர்கள் அரச சேவைகளிலும், தனியார் நிறுவனங்களில் அதிகாரிகள் நிலையிலும் பணிபுரிகிறார்கள். இந்நாடுகளில் இலங்கைத் தமிழர்க்கென்று ஒரு தனி மதிபே இருக்கிறது. கடிண உழைப்பாளிகள், விசுவாசமானவர்கள், பழகுவதற்கு இனிமையானவர்கள் என்று இப்படிப் பல குணாதிசயங்கள். 

மற்றைய சமூகங்களுடன் நாம் இணைந்து பணிபுரிவதில்லை என்கிற விமர்சனத்தை நோக்கினால், மற்றைய சமூகங்கள் எம்மை உள்வாங்க முன்வருகின்றனவா? எம்மில் எத்தனை பேரை வேற்றுச் சமூகவாசிகள் சேர்ந்து செயற்பட அணுகியிருக்கிறார்கள்? 2009 இனக்கொலையைத் தடுக்க அயல் நாடான இந்தியர்கள் கூட முன்வரவில்லை, வீதியில் நின்று கேலிகளுடன் வேடிக்கைதான் பார்த்தார்கள். எமது சமூகம் தொடர்பான மிகவும் தவறான பார்வையினை இந்தியர்கள், குறிப்பாக வட இந்தியர்கள் கொண்டிருக்கிறார்கள். அவர்கள் எம்முடன் சேர்ந்து பயணிப்பதென்பது அபத்தமானது. 

புலம்பெயர் தேசத்தில் தமிழர்கள் பலசரக்குக் கடை, புடவை நிலையம், சாப்பாட்டுக்கடை ஆகியவற்றைத்தவிர வேறு எதனையும் நடத்துவதில்லை என்று சொல்லும் நாம் இலங்கையில் இருக்கும்போது இதைத்தாண்டி எந்தவகையான கைத்தொழில் முறைகளையோ, அல்லது வியாபார முனைப்புக்களையோ மேற்கொண்டோம் என்று சிந்திக்கின்றோமா? இல்லையே. அங்கும் இதைத்தானே செய்துவந்தோம். சிறு சிறு குடிசைக் கைத்தொழில்களைத்தவிர பரந்த வியாபார நோக்கில் தமிழினம் வடக்குக் கிழக்கில் செய்துவந்த கைத்தொழில் முயற்சிகளை பட்டியலிடுங்கள் பார்க்கலாம். 

37 minutes ago, பிரபா சிதம்பரநாதன் said:

இதுவே ஒரு Accountant or Dr என்றால் tax agents or medical centers .. வட்டத்தைவிட்டு வெளியே சிந்திப்பதில்லை.

நீங்கள் கூறியது போல வட இந்தியர்கள் துணிந்து வெளியிடங்களுக்கும் போவார்கள், தங்களுக்கிடையில் சங்கங்களை அமைத்து நடந்துகொள்வார்கள்..

ஒவ்வொரு சமூகத்திற்குள்ளும் சரியான , தவறான செயற்பாடுகள் இருக்கின்றன. இவை, அச்சமூகத்தின் பண்பாட்டு, கலாசார விழுமியங்களால் வழிநடத்தப்படுபவை. அச்சமூகத்தில் நாம் இருப்பதால் இவற்றினை எம்மால் விமர்சிக்க முடிகிறது. ஆனால், ஏனைய சமூகங்கள் முகம்கொடுக்கும் பிரச்சினைகள் பற்றி எமக்குத் தெரியாதபோதும் நாம் அச்சமூகக்களை தரமானவை என்று கருத முற்படுகிறோம். 

என்னைப்பொறுத்தவரை தமிழ்ச் சமூகம் மற்றைய சமூகங்களோடு ஒப்பிடும்போது தரத்தில் குறைந்ததோ அல்லது கூடியதோ இல்லையென்பதே எனது நிலைப்பாடு. அவரவர் தத்தமது வசதிக்கேற்பவும், தகமைக்கேற்பவும் தமது வாழ்வாதாரத்தினைத் தெரிவுசெய்வதை விமர்சிப்பது கடிணமானது.

முதலவாது தலைமுறை தமது வாழ்க்கையை ஸ்த்திரப்படுத்தலினை முக்கியமாகக் கொள்வதில் தவறில்லை. அடுத்த தலைமுறைகள் நிச்சயம் வேறு வழிகளிலும் தமது கவனத்தைத் திருப்பும் என்பது எதிர்பார்க்கக் கூடியதே. ஆகவே , முதலாவது தலைமுறை புலபெயர் தேசத்தில் அமைத்துக்கொண்ட வாழ்க்கைமுறையினை விமர்சிப்பதை விடுத்து இனிவரும் தலைமுறைகளை அவதானிப்பதே சிறந்தது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கருத்து அகற்றப்பட்டுள்ளது

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • பட மூலாதாரம்,GETTY IMAGES 3 மணி நேரங்களுக்கு முன்னர் பொதுவாகவே, ரத்த அழுத்தம் தீவிர உடல்நல பிரச்னையாக எடுத்துக்கொள்ளப்படுவதில்லை. ஆனால், இதனை முறையாக பரிசோதிக்காவிட்டால் பல இணை நோய்கள் ஏற்படும் என மருத்துவ உலகம் தொடர்ந்து எச்சரித்து வருகிறது. ஆனால், இந்திய மருத்துவ ஆய்வுக்கழகம் (ICMR) சமீபத்தில் இந்தியாவில் ரத்த அழுத்த பாதிப்பின் நிலைமை குறித்து வெளியிட்ட ஆய்வறிக்கையில், இந்தியர்கள் அதனை அவ்வளவு தீவிரமாக எடுத்துக்கொள்ளாததை வெளிச்சமிட்டுக் காட்டியுள்ளது. அந்த ஆய்வறிக்கை சர்வதேச பொது சுகாதார ஆய்விதழில் வெளியாகியிருந்தது. அதன்படி, இந்தியாவில் 18 முதல் 54 வயதுக்குட்பட்ட 30% இந்தியர்கள் ரத்த அழுத்தத்தைப் பரிசோதிப்பதில்லை என்ற தகவல் தெரியவந்துள்ளது. அதாவது, பத்தில் மூன்று பேர் அதை பரிசோதிப்பதில்லை. தென்னிந்திய மாநிலங்களில் அதிகபட்ச சராசரியாக 76% பேர் ரத்த அழுத்தத்தைப் பரிசோதிக்கின்றனர். வட இந்திய மாநிலங்களில் சராசரியாக 70% பேர் ரத்த அழுத்தத்தைப் பரிசோதிக்கின்றனர். ரத்த அழுத்தத்தை தொடர் இடைவெளியில் முறையாக கண்காணிக்காவிட்டால், இதய நோய்கள் உட்பட பல தீவிர நோய்கள் ஏற்பட்டு, இறப்புக்குக் கூட காரணமாகிவிடும் என்கின்றனர் மருத்துவர்கள். அதுவே, முறையாக கண்காணித்து வாழ்வியல் மாற்றங்களின் மூலம் அதனை கட்டுக்குள் வைத்தால் பிரச்னை இல்லை என்ற ஆறுதல் செய்தியையும் அவர்கள் கூறுகின்றனர்.   பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,ஐ.சி.எம்.ஆர். ஆய்வில் 30% இந்தியர்கள் ரத்த அழுத்தத்தைப் பரிசோதிப்பதில்லை என்ற தகவல் தெரியவந்துள்ளது. “முன்பு 50-60 வயதில்தான் ரத்த அழுத்தம் வரும். இப்போது சிறுவயதிலேயே வருகிறது. பிளஸ் 1, பிளஸ் 2 மாணவர்களுக்குக் கூட உயர் ரத்த அழுத்தம் வருகிறது. இதற்கு முக்கிய காரணம் உடல் பருமன். இளம் வயதினரிடையே மன அழுத்தம், தூக்கமின்மை, உப்பு, கொழுப்பு அதிகமாக இருக்கும் உணவுகளை எடுப்பது இதற்கு காரணமாக இருக்கிறது. நீரிழிவு நோயைவிட உயர் ரத்த அழுத்தம் அதிகமானவர்களை பாதிக்கிறது” என்கிறார், சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவக் கல்லூரி பேராசிரியரும் மருத்துவத் துறை தலைவருமான எஸ். சந்திரசேகர். மேலும், “பெரும்பாலானோர் இதற்கு மருத்துவ சிகிச்சையே எடுப்பது கிடையாது. ஒருமுறை பரிசோதித்துவிட்டு ‘நார்மலாக' இருக்கிறது என மருந்துகளை எடுக்க மாட்டார்கள். அப்படி இருக்கக்கூடாது. தொடர்ச்சியாக ரத்த அழுத்தத்தைப் பரிசோதிக்க வேண்டும். தொடர் பரிசோதனைகளில் ரத்த அழுத்தம் குறைந்தால்தான் மருந்துகளின் அளவை குறைக்க வேண்டும். உயர் ரத்த அழுத்தத்திற்கு தொடர்ந்து மாத்திரைகள் எடுக்க வேண்டும் என்பது விளிம்புநிலை மக்களுக்குத் தெரிவதில்லை. நடுத்தர மக்கள் மாத்திரைகள் எடுத்தாலும், தொடர்ந்து பரிசோதித்து கட்டுப்பாட்டுக்குள் இருக்கிறதா என்று பார்ப்பதில்லை” என்கிறார் அவர். ரத்த அழுத்தம் குறித்த பல்வேறு கேள்விகளுக்கு அவர் பதிலளித்தார்.   படக்குறிப்பு,சிறுவயதினருக்கும் உயர் ரத்த அழுத்தம் ஏற்படுவதாக கூறுகிறார் மருத்துவர் எஸ். சந்திரசேகர். ரத்த அழுத்தம் எந்த அளவை எட்டினால் உடனடியாக மருத்துவ ஆலோசனையை நாட வேண்டும்? ரத்த அழுத்தம் 120/80 mm/Hg என்பது நார்மல் அளவு. இதில் 120 என்பது சிஸ்டோல் அளவு, இதய அறைகள் சுருங்கும்போது மாறுபட்ட கட்டம். 80 என்பது டயஸ்டோல், அதாவது இதயத்தின் அறைகள் ரத்தத்தால் நிரப்பப்படும் போது இதய சுழற்சியின் தளர்வான கட்டமாகும். இந்த அளவு 140/90 வரை அதிகரித்தால் உடனடியாக மருத்துவரை நாட வேண்டும். உயர் ரத்த அழுத்தம் இருந்தால் என்ன வகையான உணவுகள், உடற்பயிற்சி செய்ய வேண்டும் என்பதை கேட்டுத் தெரிந்துகொள்ள வேண்டும். மருத்துவர்கள் பரிந்துரைக்கும் மருந்துகளை நிச்சயம் எடுத்துக்கொள்ள வேண்டும். அவர்கள் கூறாமல், மருந்துகளை நிறுத்தவோ, கூட்டவோ, குறைக்கவோ கூடாது. குறிப்பிட்ட இடைவெளியில் ரத்த அழுத்தத்தைப் பரிசோதிக்க வேண்டும். ரத்த அழுத்தத்தை வீட்டிலேயே பரிசோதிப்பது எப்படி? மருத்துவர்கள் முன்பெல்லாம் பாதரசத்துடன் கூடிய ஸ்பிக்மோமேனோ மீட்டர் எனப்படும் ரத்த அழுத்தமானியை பயன்படுத்தினார்கள். இப்போது மின்னணு ரத்த அழுத்தக் கருவி வந்துவிட்டது. ரூ.2,500-3,000-ல் நல்ல கருவிகளை வீட்டிலேயே வாங்கி வைத்துக்கொள்ளலாம். அந்த கருவியை கையில் எங்கு, எப்படி பொருத்த வேண்டும் என, செவிலியர் அல்லது மருத்துவத் துறையை சேர்ந்த ஒருவரிடம் நேரிலேயே சென்று செய்துபார்த்து தெரிந்துகொள்ள வேண்டும். ரத்த அழுத்தத்தைப் பரிசோதிப்பதற்கு 15-20 நிமிடங்களுக்கு முன் டீ, காபி அருந்தியிருக்கக் கூடாது. பொதுவாகவே மது, புகைப்பிடிப்பது நல்லதல்ல. குறிப்பாக, ரத்த அழுத்தத்தைப் பரிசோதிப்பதற்கு 20 நிமிடங்களுக்கு முன் நிச்சயம் அவற்றை செய்திருக்கக் கூடாது. ரிலாக்ஸாக இருக்க வேண்டும். பின்பக்கம் சாய்ந்துகொள்ளக்கூடிய நாற்காலியில், நிச்சயம் கால்களை தொங்கவிட்டுக்கொள்ள வேண்டும். கால்களை மடக்கி வைத்துக்கொண்டோ, கால்மேல் கால் போட்டுக்கொண்டோ அமர்ந்திருக்கக் கூடாது. ரத்த அழுத்தம் அதிகமாக இருந்தால் ஓரிரு முறை மீண்டும் பரிசோதித்துப் பார்க்க வேண்டும். வலது கை, இடது கை என மாற்றி பரிசோதித்து, அதன் சராசரியைக் கூட எடுத்துப் பார்க்கலாம்.   பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,ரத்த அழுத்தம் 120/80 mm/Hg என்பது நார்மல் அளவு. எந்த நேரத்தில் ரத்த அழுத்தத்தைப் பரிசோதிக்க வேண்டும் என்கிற கட்டாயம் இருக்கிறதா? ரத்த அழுத்தத்தை காலையில்தான் பரிசோதிக்க வேண்டும் என்பதில்லை. மதியம் அல்லது இரவிலும் பரிசோதிக்கலாம். உறங்குவதற்கு முன்பு கூட எடுக்கலாம். உறங்கும்போது ரத்த அழுத்தம் 15-20% குறையும். அந்த நேரத்தில் நம் உடல் சற்று ரிலாக்ஸாகும். ஆனால், இப்போது பெரும்பாலானோர் தூங்குவதற்கே இரண்டு-மூன்று மணியாகிவிடுகிறது. அதனால், அந்த சமயத்திலும் ரத்த அழுத்தம் தாழ்வு நிலைக்கு செல்லாமல் உயர்வாகவே இருக்கிறது. இதனை மருத்துவ மொழியில் இரவு நேர உயர் ரத்த அழுத்தம் (Nocturnal hypertension) என்கிறோம். அதனால்தான் பலருக்கும் காலையில் பக்கவாதம், மாரடைப்பு போன்றவை ஏற்படுகிறது. ரத்த அழுத்தம் என்பது 24 மணிநேரமும் கட்டுப்பாட்டுக்குள் இருக்க வேண்டும் என்பதே நிறைய பேருக்குத் தெரிவதில்லை. அதனால்தான் இளம் வயதிலேயே மாரடைப்பு, பக்கவாதம் போன்றவற்றை நாம் பார்க்கிறோம். மனச்சோர்வு, மன அழுத்தம் இருந்தாலும் ரத்த அழுத்தம் அதிகமாகும். வலிநிவாரண மாத்திரைகள் எடுப்பதுகூட சில சமயங்களில் உயர் ரத்த அழுத்தத்திற்கு காரணமாக உள்ளது. ரத்த அழுத்தத்தை தினசரி பரிசோதிக்க வேண்டுமா? தினசரி பரிசோதிக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை. ஏதாவது அறிகுறிகள், தொந்தரவு இருந்தால் பரிசோதித்துப் பார்க்க வேண்டும். உயர் ரத்த அழுத்தம் இருந்தால் என்னென்ன பாதிப்புகள் ஏற்படும்? உயர் ரத்த அழுத்தம் தொடர்ந்து இருந்தால் கண்பார்வை பாதிக்கப்படும். இதய சுவர்கள், ரத்தக்குழாய்கள் பாதிப்பு, சிறுநீரகம் செயலிழப்பு, மூளைக்கு செல்லும் ரத்தக் குழாய்கள் பாதித்து பக்கவாதம் ஏற்படலாம். காலுக்கு செல்லும் ரத்தக்குழாய்கள் பாதித்து பெரிஃபெரல் ஆர்ட்டரி நோய் எனப்படும் புற தமனி நோய் ஏற்படலாம். அனைத்து உறுப்புகளும் ரத்தக் குழாய்களும் பாதிக்கப்படலாம். ரத்த அழுத்தம் அதிகமாகும்போது இதய ரத்தக் குழாய்களின் சுற்றளவு குறைகிறது. இதய சுவர்கள் தடித்து வீங்கிவிடும். சுருங்கி விரிவது குறைந்துவிடும். எனவே, உயர் ரத்த அழுத்தம் நிறைய வழிகளில் இதயத்தைப் பாதிக்கும். இதய துடிப்புகள்கூட இதனால் அதிகமாகிவிடும். உயர் ரத்த அழுத்தத்திற்கான அறிகுறிகள் என்னென்ன? உயர் ரத்த அழுத்தம் இருப்பவர்களுக்கு அறிகுறியே இருக்காது. ‘எனக்குதான் அறிகுறியே இல்லையே, நான் எதற்கு மாத்திரை எடுக்க வேண்டும்’ என்றுதான் பலரும் கேட்பார்கள். நாளடைவில்தான் அறிகுறிகள் தோன்றும். பதற்றம், தலைவலி, தலைசுற்றல், உடல் சோர்வு, தூக்கமின்மை, சிறிய விஷயத்திற்கு பயம், கால்களில் வீக்கம் உள்ளிட்டவை ஏற்படும்.   பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,"உயர் ரத்த அழுத்தத்தால் கண் பார்வை பிரச்னை கூட ஏற்படலாம்" உயர் ரத்த அழுத்தம் ஏற்படாமல் எப்படி தடுக்கலாம்? உடல் எடையை ஒழுங்குக்குள் வைத்துக்கொள்ள வேண்டும். உணவில் உப்பு அதிகம் சேர்த்துக்கொள்ளக் கூடாது. உடற்பயிற்சி செய்ய வேண்டும். நடைபயிற்சி, ஜாக்கிங், நீச்சல், ஸ்ட்ரெச்சிங் போன்றவற்றை செய்யலாம். எடை பயிற்சி போன்றவற்றை மருத்துவ ஆலோசனையுடன் செய்யலாம். ‘மெடிட்டரேனியன் டயட்’ எனப்படும் அதிகளவில் காய்கறிகள், பழங்களுடன் சிறிது புரதம், அதைவிட குறைவாக கார்போஹைட்ரேட் எடுக்கலாம். உடல் எடை 10% குறைகிறது என்றாலே இரண்டு இலக்கத்தில் நிச்சயம் ரத்த அழுத்தம் குறையும். சரியான உடல் எடையில் இருப்பவர்களுக்கும் அப்படி குறையும் என்பதில்லை. நடைபயிற்சி எல்லோராலும் செய்ய முடியும். அதற்கு எந்த தடையும் இல்லை. மூட்டு வியாதி, மூட்டு வலி இருப்பவர்கள், கை, கால்களை நீட்டி மடக்கி பயிற்சி (Stretching) செய்யலாம். தோட்ட வேலை, வீட்டு வேலைகளையே உடற்பயிற்சியாக செய்யலாம். ஒரேமாதிரியான உடற்பயிற்சிகளையே தினமும் செய்யாமல் ஒவ்வொரு நாளும் வெவ்வேறு மாதிரியான உடற்பயிற்சிகளை செய்யலாம். ஒருவாரத்திற்கு 150 நிமிடங்கள் உடற்பயிற்சி செய்திருக்க வேண்டும். குறைந்தது 5 நாட்களாவது உடற்பயிற்சி செய்திருக்க வேண்டும். இதைத்தான் அமெரிக்க இதய சங்கம் கூறும் வழிமுறை. இவ்வளவு செய்தும் கட்டுப்பாட்டுக்குள் இல்லையென்றாலோ அல்லது இணை நோய்கள் இருந்தாலோ நிச்சயம் மருத்துவ ஆலோசனைகளை பெறுவது அவசியம். உயர் ரத்த அழுத்தத்திற்கு வாழ்நாள் முழுவதும் மாத்திரைகள் எடுக்க வேண்டுமா? இதனை முற்றிலும் குணப்படுத்த முடியுமா? பெரும்பாலானோருக்கு இதற்கு காலம் முழுவதும் மாத்திரை எடுக்க வேண்டும்தான். ஆனால், இதற்கான நிரந்தர தீர்வுக்கான ஆராய்ச்சிகள் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன. வாழ்வியல் முறைகளை மாற்றினாலே கட்டுப்பாட்டுக்குள் வரும் என்பது அறிவியல் பூர்வமான உண்மை.   பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,உப்பு குறைவாக உள்ள உணவுகளை எடுத்துக்கொள்ள வேண்டும் என மருத்துவர்கள் கூறுகின்றனர். குறை ரத்த அழுத்தம் என்பது என்ன? அதன் அறிகுறிகள் என்ன? குறை ரத்த அழுத்தம் என்பது நோய் கிடையாது. பெண்களுக்கு பொதுவாகவே 90/60 தான் ரத்த அழுத்தம் இருக்கும். அவர்களின் உடலமைப்புக்கு அப்படி இருக்கிறது. உயர் ரத்த அழுத்தம் இருப்பவர்கள் மாத்திரை எடுத்து நார்மலாகிவிட்டது என்றால் சிலருக்கு தலைசுற்றல் இருக்கும். உடல்சோர்வு இருக்கும். அதனால் அவர்களுக்கு குறை ரத்த அழுத்தம் ஏற்படும். அவர்கள் அதற்கு மாத்திரைகள் எடுக்கலாம். நீர்ச்சத்துக் குறைபாட்டாலும் இது வரலாம். என்ன சாப்பிடலாம்? உயர் ரத்த அழுத்தம் இருப்பவர்கள் என்னென்ன சாப்பிடலாம், எவற்றையெல்லாம் தவிர்க்க வேண்டும் என்பது குறித்து, சென்னையை சேர்ந்த உணவியல் நிபுணர் புவனேஸ்வரி கூறினார். “உப்பு அதிகமாக உள்ள உணவுகளை தவிர்க்க வேண்டும். தினசரி உப்பின் அளவை குறைக்க வேண்டும். சிப்ஸ், ஊறுகாய், உப்பு அதிகம் உள்ள நொறுக்குத் தீனிகளை தவிர்க்க வேண்டும். தினசரி எடுத்துக்கொள்வதில் பாதி அளவையே எடுக்க வேண்டும். உலக சுகாதார மையத்தின்படி தினசரி ஆறு கிராம் உப்பு போதும். இந்திய உணவுகளில் 10-12 கிராம் உப்பு இருக்கிறது. அதனால் அதில் பாதி எடுக்க வேண்டும். அசைவ உணவுகளில் கொழுப்பு அதிகம். மேலும், அசைவ உணவுகளில் அதிக உப்பு, எண்ணெய், மசாலா சேர்க்கிறோம். கொழுப்பு அதிகமான ஆட்டிறைச்சி உள்ளிட்டவற்றை தவிர்க்க வேண்டும். கொழுப்பு குறைவான கோழி இறைச்சி, மீன் உள்ளிட்டவற்றை சாப்பிடலாம். அவற்றையும் என்ன அளவு எடுக்க வேண்டும் என்றும் இருக்கிறது” என தெரிவித்தார். https://www.bbc.com/tamil/articles/c51nd7ekv99o
    • 15 APR, 2024 | 03:58 PM ஆர்.ராம் இலங்கை தமிழ் அரசு கட்சியின் மத்திய செயற்குழு கூட்டம் எதிர்வரும் 19ஆம் திகதி வவுனியாவில் நடைபெறவுள்ளது. இந்தக் கூட்டத்தில் கட்சி முகங்கொடுத்துள்ள வழக்குகள் தொடர்பிலும் ஜனாதிபதி தேர்தலில் தமிழ் கட்சிகளால் முன்மொழியப்பட்டுள்ள பொதுவேட்பாளர் விடயம் சம்பந்தமாகவும் ஆராயப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. குறிப்பாக, திருகோணமலை மாவட்ட நீதிமன்றத்தில் தொடுக்கப்பட்ட வழக்கு மீதான விசரணை எதிர்வரும் 25ஆம் திகதி நடைபெறவுள்ள நிலையில் அதற்கு முன்னதாக வழக்கு விடயங்களை கையாள்வது தொடர்பில் ஏகோபித்த நிலைப்பாட்டை எடுப்பதற்கு முனைவதாக கட்சியின் தலைவர் மாவை.சோ.சேனாதிராஜா தெரிவித்துள்ளார். இதேநேரம், கட்சியின் சிரேஷ்ட தலைவர் சம்பந்தன், பாராளுமன்ற உறுப்பினர்களான சுமந்திரன், சாணக்கியன் மற்றும் வட மாகாண சபையின் தவிசாளர் சி.வி.கே.சிவஞானம் ஆகியோர் இதுவரை தமிழ் பொதுவேட்பாளர் விடயம் தொடர்பில் எதிர்மறையாக கருத்து வெளியிட்டுள்ளனர். அதேநேரம், சிவஞானம் சிறீதரன் மற்றும் மட்டக்களப்பு மாவட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்கள் பொதுவேட்பாளர் விடயத்தினை சாதகமாக பரிசீலிக்க வேண்டும் என்ற நிலைப்பாட்டை வெளிப்படுத்தியுள்ளனர். எவ்வாறாயினும், கட்சியின் தலைவரோ செயலாளரோ இதுதொடர்பில் எவ்விதமான கருத்துக்களையும் வெளியிடவில்லை. இவ்வாறான பின்னணியிலேயே கட்சியின் மத்திய குழுக்கூட்டம் நடைபெறவுள்ளது. மேலும், எதிர்வரும் 19ஆம் திகதி வெள்ளிக்கிழமையன்று மட்டக்களப்பில் அன்னை பூபதியின் நினைவேந்தல் நிகழ்வுக்கான ஏற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதால் அம்மாவட்டத்தினைச் சேர்ந்த தமிழரசுக் கட்சியின் உறுப்பினர்கள் பங்கேற்பதில் சந்தேகமான நிலைமை ஏற்பட்டுள்ளது. https://www.virakesari.lk/article/181135
    • தனியாருடன் இணைந்த சேவையை வழங்க முடியாது : வட மாகாண போக்குவரத்து குழுமம் தெரிவிப்பு Published By: DIGITAL DESK 7    16 APR, 2024 | 10:14 AM யாழ்ப்பாணத்தில் புதிதாக ஆரம்பிக்கப்பட்டுள்ள நெடுந்தூர பயணிகள் பேருந்து தரிப்பிடத்தில் இருந்து தனியார் பேருந்துகளுடன் இணைந்த சேவையை வழங்க முடியாது என இலங்கை போக்குவரத்துச் சபையின் வடமாகாண குழுமத்தின் தலைவர் தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில், யாழ்ப்பாணத்தில் புதிதாக கட்டப்பட்ட நெடுந்தூர பயணிகள் பேருந்து நிலையத்தில் இருந்து வெளி மாவட்டங்களுக்கு செல்லும் இலங்கை போக்குவரத்துச் சபை பேருந்துகள் இணைந்த நேர அட்டவணையில் பயணிக்க முடியும் ஆனால் இணைந்த சேவையை குறித்த தரிப்பிடத்தில் இருந்து வழங்க முடியாது . நேற்றைய தினம் திங்கட்கிழமை வட மாகாண ஆளுநர் செயலகத்தில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா மற்றும் வட மாகாண ஆளுநர் ஆகியோர் இலங்கை போக்குவரத்துச் சபை மற்றும் தனியார் பேருந்து சங்கம் ஆகியவற்றுடன் புதிய பேருந்து தரிப்பிடத்தில் இணைந்த சேவையை வழங்குவது தொடர்பில் கலந்துரையாடப்பட்டது. குறித்த கலந்துரையாடலில் புதிய பேருந்து தரிப்பிடத்தில் இருவரும் இணைந்த சேவையை வழங்குவது தொடர்பில் வலியுறுத்தப்பட்ட நிலையில் தொழிற்சங்கங்கள் இணைந்த சேவைக்கு சம்மதிக்க மறுக்கின்றன. அதற்கான காரணங்களும் வலுவாக இருக்கிறது உதாரணமாக வவுனியா பேருந்து தரிப்பிடத்தில் பெரும்பாலான வெளி மாவட்டத்துக்கான சேவையை வழங்கும் இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பேருந்துகள் உள்ளே செல்லாது வெளியில் நின்றே பயணிகளை ஏற்றுகின்றன. இலங்கை போக்குவரத்துச் சபை சாரதிகள் நடத்துனர்கள் தனியார் பேருந்து சாரதி நடத்துனர்களால் தாக்கப்பட்ட சம்பவங்கள் பல தீர்க்கப்படாமல் நிலுவையில் உள்ள நிலையில் அவர்களுடன் இணைந்து சேவையில் ஈடுபடும் போது பல்வேறு நெருக்கடிகளை சந்திக்க கூடும் என தொழில் சங்கங்கள் எண்ணுகின்றன. யாழ்ப்பாணத்தில் உள்ள இலங்கை போக்குவரத்து சபைக்கான பேருந்து தரிப்பிடத்தில் இருந்து எமது பேருந்துகள் தனித்துவமான சேவைகளை வழங்கி வரும் நிலையில் அதனை நாம் குழப்புவதற்கு விரும்பவில்லை. வெளி மாவட்டங்களுக்குச் செல்லும் இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பேருந்துகள் தனியாருடன் இணைந்த நேர அட்டவணையில் பயணிப்பதற்கு எமது விருப்பத்தை தெரிவித்துக் கொள்வதோடு இணைந்த சேவையை புதிய பேருந்து தரிப்பிடத்தில் மேற்கொள்வதற்கு சங்கங்கள் விரும்பவில்லை என அவர் மேலும் தெரிவித்தார். https://www.virakesari.lk/article/181189
    • மகிழ்சசியான சுற்றுலா மனித வாழ்விற்கு இன்றியமையாதது. தொடருங்கள்.  கடற்கரையோரம் காலாற நடப்பதற்காக கால்களை தயார் செய்தார் என்று நான் நினைக்கிறேன். நீங்கள் எதை நினைத்தீர்கள். 
    • கடைசி இடத்தில் ஆர்சிபி; தவறு நடந்தது எங்கே? கேப்டன் கூறுவது என்ன? பட மூலாதாரம்,SPORTZPICS ஒரு மணி நேரத்துக்கு முன்னர் வீடியோ கேம்ஸிஸ் கிரிக்கெட் பார்த்த, விளையாடிய உணர்வு ஆர்சிபி, சன்ரைசர்ஸ் இடையிலான ஆட்டத்தின்போது ரசிகர்களுக்கு ஏற்பட்டிருக்கக்கூடும். 38 சிக்ஸர்கள், 43 பவுண்டரிகள், ஒரே போட்டியில் 549 ரன்கள், 4 பந்துவீச்சாளர்கள் 50 ரன்களுக்கு மேல் வாரி வழங்கிய சோகம், அதிகபட்ச ஸ்கோர் என நேற்றைய ஐபிஎல் டி20 ஆட்டத்தில் நிகழ்த்தப்பட்ட சாதனைகளை பட்டியலிடலாம். ஆட்டத்தைப் பார்க்க வந்த ரசிகர்களுக்கு கழுத்துவலி கூட வந்திருக்கலாம். ஏனென்றால், கிட்டத்தட்ட 40 ஓவர்களில் 9 ஓவர்களில் வெறும் சிக்ஸர், பவுண்டரிகளாகவே அடிக்கப்பட்டது. மிகச்சிறிய மைதானமான சின்னசாமி ஆடுகளத்தில் பந்துவீச்சாளர்கள் எப்படி வீசினாலும் பேட்டை நோக்கித்தான் வந்தது என்பதால் பேட்டர்கள் கருணையற்றவர்களாக மாறினர். யாருக்கு எப்படி பந்துவீசுவது எனத் தெரியாமல் ஆர்சிபி பந்துவீச்சாளர்களும், சன்ரைசர்ஸ் பந்துவீச்சாளர்களும் திணறி நின்றதைக் காண முடிந்தது.   பட மூலாதாரம்,GETTY IMAGES முதலில் பேட் செய்த சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி 20 ஓவர்களில் 3 விக்கெட் இழப்புக்கு 287 ரன்கள் குவித்தது. 288 ரன்கள் சேர்த்தால் வெற்றி எனும் இலக்குடன் களமிறங்கிய ஆர்சிபி 20 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 262 ரன்கள் சேர்த்து தோல்வி அடைந்தது. இந்த வெற்றியின் மூலம் சன்ரைசர்ஸ் அணி 6 போட்டிகளில் 4 வெற்றி, 2 தோல்வி என 8 புள்ளிகளுடன் 4வது இடத்துக்கு முன்னேறியது. நிகர ரன்ரேட்டிலும் பெரிய ஸ்கோர் அடித்தும் பெரிய முன்னேற்றமில்லாமல் 0.502 ஆக இருக்கிறது. டி20 போட்டிகளில் 250ரன்களுக்கு மேல் அதிகமுறை அடித்த அணி என்ற பெருமையை சன்ரைசர்ஸ் அணி நேற்று பெற்றது. ஆர்சிபி அணியைப் பொருத்தவரை இவ்வளவு பெரிய ஸ்கோரை அடித்தும் தோல்வி அடைந்த முதல் அணியாக மாறிவிட்டது. 7 போட்டிகளில் ஒரு வெற்றி, 6 தோல்விகள் என 2 புள்ளிகளுடன் ஆர்சிபி அணி கடைசி இடத்தில் நீடிக்கிறது.   பட மூலாதாரம்,GETTY IMAGES தொடக்கத்திலேயே அதிரடி காட்டிய ஹைதராபாத் வீரர்கள் சன்ரைசர்ஸ் அணிக்கு மிகப்பெரிய ஸ்கோரை அமைத்துக் கொடுத்தவர்களில் முக்கியமான பேட்டர் டிராவிஸ் ஹெட் 102 (41பந்துகள், 8சிக்ஸர், 9பவுண்டரி). ஏற்கெனவே ஆஸ்திரேலிய அணிக்கு டெஸ்ட் சாம்பியன்ஷிப், உலகக் கோப்பையை வென்றதில் முக்கிய பங்கு வகித்த ஹெட், நேற்றைய ஆட்டத்தில் முதல் சதத்தைப் பதிவு செய்து ஆட்டநாயகன் விருது வென்றார். 39 பந்துகளில் சதம் அடித்து, அதிவேக சதம் அடித்த 4வது பேட்டர் என்ற பெயரை ஹெட் பதிவு செய்தார். சன்ரைசர்ஸ் அணிக்காக அதிவேகமாக சதம் அடித்த முதல் பேட்டர் என்ற பெயரை ஹெட் பெற்றார். இதற்கு முன் வார்னர் 43 பந்துகளில் சதம் அடித்திருந்தார். மற்றொரு பேட்டர் ஹென்ரிச் கிளாசன் அசுரத்தனமான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். இந்த சீசன் முழுவதும் பந்துவீச்சாளர்களுக்கு சிம்மசொப்னமாக திகழ்ந்துவரும் கிளாசன் 31 பந்துகளில் 67 ரன்கள்(7சிக்ஸர், 2 பவுண்டரி) அடித்து ஆட்டமிழந்தார். இது தவிர மார்க்ரம் 32(17பந்துகள், 2சிக்ஸர்கள், 2 பவுண்டரிகள்), அப்துல் சமது37(10 பந்துகள் 3 சிக்ஸர்கள், 4பவுண்டரிகள்) என ரன்கள் சேர்த்து இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்தனர். இந்த 4 பேட்டர்கள் அடித்த ஸ்கோர்தான் மற்றவகையில் பெரிதாக எந்த பேட்டரும் ஸ்கோர் செய்யவில்லை.   பட மூலாதாரம்,SPORTZPICS சன்ரைசர்ஸ் கேப்டன் கூறியது என்ன? சன்ரைசர்ஸ் கேப்டன் கம்மின்ஸ் கூறுகையில் “ நானும் பேட்டராக இருந்திருக்கலாம் என நினைக்க வைக்கிறது. மும்பைக்கு எதிரான ஆட்டத்துக்குப் பிறகு இப்போது மீண்டும் பெரிய ஸ்கோர் அடித்துள்ளோம். போட்டி பேட்டர்கள் ராஜ்ஜியமாகமாறி வருகிறது. இந்த ஆடுகளத்தை படிக்க நானும் முயற்சித்தேன். எங்கள் ஆட்டம் மகிழ்ச்சியாக இருக்கிறது. 4 வெற்றிகள் பெற்றுள்ளோம். பேட்டர்களுக்கு முழுசுதந்திரம் அளித்துள்ளோம். அதனால்தான் பெரிய ஸ்கோர் வருகிறது” எனத் தெரிவித்தார் ஆர்சிபி கொடுத்த பதிலடி ஆர்சிபி அணியிலும் கேப்டன் டூப்பிளசிஸ் 28 பந்துகளில் 62 ரன்கள்(4சிக்ஸர், 7பவுண்டரி), விராட் கோலி 42 (2சிக்ஸர், 6பவுண்டரி), தினேஷ் கார்த்திக் 35 பந்துகளில் 85(7சிக்ஸர், 5 பவுண்டரி) என விளாசினர். இதில் ஆர்சி அணியில் நடுவரிசை பேட்டர்கள் ரஜத் பட்டிதார், வில் ஜேக்ஸ், சவுகான் ஆகிய மூவவரும் சொற்ப ரன்களில் ஆட்டமிழக்காமல் தங்களின் பங்களிப்பை வெளிப்படுத்தி இருந்தால், ஆர்சிபி அணி ஒருவேளை வென்றிருக்கலாம். சன்ரைசர்ஸ் அடித்த ஸ்கோருக்கு தாங்கள் எந்த விதத்திலும் சளைத்தவர்கள் இல்லை என்று ரீதியில்தான் கடைசி நேரத்தில் தினேஷ் கார்த்திக் ஆக்ரோஷமான பேட்டிங்கை வெளிப்படுத்தினார்.   பட மூலாதாரம்,GETTY IMAGES நிகழ்த்தப்பட்ட சாதனைகள் இந்த ஆட்டத்தில் சில சுவையான சம்பவங்கள் நடந்துள்ளன. ஐபிஎல் வரலாற்றிலேயே ஒரு அணி சேர்த்த அதிகபட்ச ஸ்கோரான 287 ரன்களை சன்ரைசர்ஸ் அணி பதிவு செய்தது. இதற்கு முன் மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிராக இந்த சீசனில் 277 ரன்கள் சேர்த்ததுதான் சாதனையாக இருந்தது, தன்னுடைய சாதனையை அந்த அணியை முறியடித்தது. ஆடவர் டி20 போட்டியில் சேர்க்கப்பட்ட அதிகபட்ச ஸ்கோர் இதுவாகும். ஓட்டுமொத்தமாக நேற்றைய ஆட்டத்தில் 549 ரன்கள் சேர்க்கப்பட்டு சாதனை படைக்கப்பட்டது. இதற்கு முன் ஹைதராபாத்தில் இந்த சீசனில் நடந்த மும்பை இந்தியன்ஸ், சன்ரைசர்ஸ் இடையிலான ஆட்டத்தில் ஒட்டுமொத்தமாக 523 ரன்கள் சேர்க்கப்பட்டதுதான் அதிகபட்சமாக இருந்தநிலையில் அந்த சாதனை முறியடிக்கப்பட்டது. ஆர்சிபி அணிக்கு எதிராக நேற்றைய ஆட்டத்தில் சன்ரைசர்ஸ் அணி 22 சிக்ஸர்களை விளாசி, ஒரு இன்னிங்ஸில் ஒரு அணிக்கு எதிராக அடிக்கப்பட்டஅதிகபட்ச சிக்ஸர்களைப் பதிவு செய்தது. இதற்கு முன் 2013-இல் புனே வாரியர்ஸ் அணிக்கு எதிராக ஆர்சிபி 21 சிக்ஸர்களை அடித்த நிலையில் அதை சன்ரைசர்ஸ் முறியடித்துவிட்டது. இந்த ஆட்டத்தில் இரு அணிகளும் சேர்ந்து 38 சிக்ஸர்களை விளாசின. டி20 போட்டியில் அதிக பட்சமாக 262 ரன்கள் சேர்த்தும் தோல்வி அடைந்த முதல் அணி என்ற பெயரை ஆர்சிபி பெற்றது. இதற்குமுன் 2023ம் ஆண்டில் செஞ்சூரியனில் தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக 258 ரன்களை மேற்கிந்தியத்தீவுகள் சேர்த்தும் தோல்வி அடைந்ததுதான் அதிகபட்ச ஸ்கோராக இருந்தது. ஆர்சிபி அணியில் பந்துவீச்சாளர்கள் டாப்ளி(68), யாஷ் தயார்(51), லாக்கி பெர்குஷன்(52), விஜயகுமார்(64) என 4 பந்துவீச்சாளர்கள் 50 ரன்களுக்கு மேல் வாரி வழங்கினர். ஒரு போட்டியில் 4 பந்துவீச்சாளர்கள் 50 ரன்களுக்கு மேல் விட்டுக்கொடுத்தது இதுதான் முதல்முறை. சன்ரைசர்ஸ் அணியில் நேற்று மட்டும் 4 பேட்டர்கள் ஒரு சதம் பார்ட்னர்ஷிப்பும் உள்பட, 50 ரன்களுக்கு மேல் பார்ட்னர்ஷிப் அமைத்தனர். ஐபிஎல் வரலாற்றில் இது 2வது முறையாக நடக்கிறது. இதற்கு முன் 2008-இல் ஆர்சிபிக்கு எதிராக கொல்கத்தா அணியின் 4 பேட்டர்கள் 50 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்திருந்தனர்.   பட மூலாதாரம்,SPORTZPICS ஆர்சிபி இதயத்தை உடைத்த ஹெட் ஆர்சிபி அணி நேற்றைய ஆட்டத்தில் முறையான சுழற்பந்துவீச்சாளர்கள் இல்லாமல் களமிறங்கியது. டிராவிஸ் ஹெட், அபிஷேக் சர்மா என இரு இடதுகை பேட்டர்கள் களத்துக்கு வந்ததும் பகுதிநேர சுழற்பந்துவீச்சாளரான ஜேக்ஸை பந்துவீசச் செய்து சோதிதித்துப் பார்த்தது. முதல் இரு ஓவர்கள் மட்டும் பொறுமை காத்த ஹெட், அபிஷேக் அடுத்தடுத்த ஓவர்களில் பவுண்டரி, சிக்ஸர்களாக அடிக்கத் தொடங்கினர். எந்தப் பந்துவீச்சாளர் பந்துவீசினாலும் ஹெட், அபிஷேக் பேட்டிலிருந்து பவுண்டரி, சிக்ஸர்களாக பறந்தன. ஆர்சிபிக்காக முதல்முறையாக களமிறங்கிய பெர்குஷன் 5-ஆவது ஓவரில் ஹெட் சிக்ஸர்களாக விளாசி 18 ரன்களையும், யாஷ் தயால் ஓவரில் பவுண்டரி, சிக்ஸர் என 20 ரன்களையும் சேர்த்தார். 20 பந்துகளில் ஹெட் அரைசதம் அடித்தார். பவர்ப்ளே ஓவரில் சன்ரைசர்ஸ் 76 ரன்கள் சேர்த்தது. பவர்ப்ளேயில் சன்சைர்ஸ் சேர்த்த 3வது அதிகபட்ச ரன்களாகும். இதற்குமுன் மும்பை அணிக்கு எதிராக 81 ரன்கள், சிஎஸ்கேவுக்கு எதிராக 77ரன்களும் சேர்த்திருந்தது. 7.1 ஓவர்களில் சன்ரைசர்ஸ் அணி 100 ரன்களை தொட்டது. அபிஷேக் சர்மா 34 ரன்களில் டாப்ளே பந்துவீச்சில் பெர்குஷனிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார். முதல் விக்கெட்டுக்கு ஹெட், அபிஷேக் 108 ரன்கள் என வலுவான அடித்தளம் அமைத்தனர். கிளாசன் சிக்ஸர் மழை 2-ஆவது விக்கெட்டுக்கு கிளாசன் களமிறங்கி ஹெட்டுடன் சேர்ந்தார். முதல் 5 பந்துகளில் 3 ரன்கள் சேர்த்து மெதுவாகத் தொடங்கிய கிளாசன், அதன்பின் வாண வேடிக்கை நிகழ்த்தினார். டி20 போட்டிகளில் ஆபத்தான பேட்டராக கருதப்படும் கிளாசன், ஆர்சிபி பந்துவீச்சாளர்களை நேற்று வதம் செய்தார். பெர்குஷன், யாஷ் தயால் ஓவரில் சிக்ஸர்களும், பவுண்டரிகளும் கிளாசன் பேட்டிலிருந்து பறந்தன. மறுபுறம் டிராவிஸ் ஹெட்டும் சிக்ஸர், பவுண்டரி மழை பொழிந்து, 39 பந்துகளில் தனது முதல் சதத்தைப் பதிவு செய்தார். டிராவிஸ் ஹெட் 102 ரன்கள் சேர்த்தநிலையில் பெர்குஷன் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். 2வது விக்கெட்டுக்கு இருவரும் 57 ரன்கள் சேர்த்துப் பிரிந்தனர். அதிரடியாக ஆடிய கிளாசன் 23 பந்துகளில் அரைசதம் அடித்தார். 14.1 ஓவர்களில் சன்ரைசர்ஸ் அணி 200 ரன்களைத் தொட்டது. கிளாசன் 67 ரன்கள் சேர்த்தநிலையில் பெர்குஷன் பந்துவீ்ச்சில் விக்கெட்டை பறிகொடுத்தார். இந்த கிளாசன், ஹெட் ஆகிய இரு பேட்டர்களும் ஆட்டமிழந்து சென்றபின் ஆர்சிபி பந்துவீச்சாளர்கள் நிம்மதி பெருமூச்சுவிட்டனர். கடைசி நேரத்தில் களமிறங்கிய அப்துல் சமது, மார்க்ரம் இருவரும் சூப்பர் கேமியோ ஆடி ஸ்கோரை உயர்த்தினர். கடைசி இரு ஓவர்களில் மட்டும் இருவரும் 46 ரன்களைக் குவித்தனர்.   பட மூலாதாரம்,GETTY IMAGES கடைசி வரை போராடியது பெருமை ஆர்சிபி கேப்டன் டூப்பிளசிஸ் கூறுகையில் “இது முறையான டி20 ஆடுகளம். இன்று சேர்த்த ரன்களை பார்த்தால் வேடிக்கையாக இருக்கிறது. அதுவே சாதனையாக மாறிவிட்டது. இந்த ஆடுகளத்தில் 270 ரன்கள்கூட சேஸிங் செய்யக்கூடியதுதான். இந்த ஆடுகளத்தில் பந்துவீச்சாளர்கள் பந்துவீசுவது கடினம். பாவம் பந்துவீச்சாளர்கள் பல நுணுக்கங்களை பயன்படுத்தி வீசியும் பயன் இல்லை. பேட்டர்கள் பக்கமே ஆட்டம் தொடர்ந்து போவது கடினம்தான். வித்தியாசமாக சந்திக்க வேண்டும். எங்கள் பேட்டிங்கில் சில தவறுகள் உள்ளன. அதை சரிசெய்வோம். பவர்ப்ளேக்குப்பின் நாங்கள் தவறுகளைத் திருத்த வேண்டியுள்ளது. ஆனால் கடைசிவரை எங்கள் வீரர்கள் போராடியது பெருமையாக இருந்தது. பந்துவீச்சைப் பொருத்தவரை பந்துவீச்சாளர்கள் எப்போதும் மனதை உற்சாக வைத்திருக்கவேண்டும்” எனத் தெரிவித்தார்.   பட மூலாதாரம்,GETTY IMAGES ஆர்சிபிக்கு நம்பிக்கை அளித்த தினேஷ் கார்த்திக் ஆர்சிபியும் பதிலடி கொடுக்க முயன்று, விக்கெட்டுகளை இழந்திருந்த தருணத்தில் தினேஷ் கார்த்திக் களமிறங்கி, அரங்கில் இருந்த ரசிகர்களுக்கு தனது பேட்டால் விருந்தளித்தார். லாம்ரோருடன் சேர்ந்து 59 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்த டிகே, சன்ரைசர்ஸ் பந்துவீச்சை துவம்சம் செய்தார். உனத்கட், மர்கண்டே வீசிய 13 மற்றும் 14வது ஓவர்களில் மட்டும் தினேஷ் கார்த்திக், லாம்ரோர் சேர்ந்து 46 ரன்கள் சேர்த்தனர். டிகே அடித்த ஷாட்களால் ரன்ரேட்டும் வேகமாக உயர்ந்தது, ரசிகர்களுக்கும் ஆர்சிபி வென்றுவிடும் என்ற நம்பிக்கை வந்தது. 23 பந்துகளில் டிகே அரைசதம் அடித்தார். லாம்ரோர் 19 ரன்னில் கம்மின்ஸ் பந்துவீச்சில் போல்டாகினார். அடுத்துவந்த ராவத்துடன் சேர்ந்து தினேஷ் கார்த்திக் வெளுத்துவாங்கினார். அனுஜ் ராவத்துடன் சேர்ந்து 7-வது விக்கெட்டுக்கு 63 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்த தினேஷ் கார்த்திக் 83 ரன்னில் நடராஜன் பந்துவீச்சில் விக்கெட்டை இழந்தார். தினேஷ் கார்த்திக் களத்தில் இருந்தவரை ஆர்சிபி ரசிகர்களுக்கு வெற்றி கிடைத்துவிடும் என்ற நம்பிக்கையோடு காத்திருந்தனர். ஆனால் அவர் வெளியேறியபின், ரசிகர்களும் கலையத் தொடங்கினர். தினேஷ் கார்த்திக் கடைசிவரை போராடியும், ஆர்சிபி 25 ரன்களில் தோற்றது. https://www.bbc.com/tamil/articles/cj5l2j16y69o
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.