Jump to content

மனித ரத்தம் கலந்து உருவாக்கப்பட்ட சாத்தான் ஷூ


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

மனித ரத்தம் கலந்து உருவாக்கப்பட்ட சாத்தான் ஷூ, நைக் நிறுவனம் எதிர்ப்பு

தோல், சிந்தெடிக், ரப்பர், ஃபோம், ஃபைபர், பருத்தி, பாலியஸ்டர், நைலான், பிளாஸ்டிக், மை என பல பொருட்களை ஷூ தயாரிப்பில் பயன்படுத்துவார்கள்.

ஆனால் அமெரிக்காவில் ஒரு நிறுவனம், நைக் நிறுவனத்தின் ஷூவில் ஒரு துளி மனித ரத்தத்தை சேர்த்து அதை சாத்தான் ஷூவாக மாற்றி விற்பனை செய்கிறது.

அந்த நிறுவனம் மீது, நைக் கம்பெனி நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்துள்ளது.

எம் எஸ் சி ஹெச் எஃப் என்கிற ப்ரூக்ளினைச் சேர்ந்த கலை பொருட்களை சேகரிக்கும் அமைப்பு, நைக் நிறுவனத்தின் ஏர் மேக்ஸ் 97 எஸ் ரக ஷூவில் சில மாற்றங்களை செய்து '666 ஜோடி ஷூ' என வெளியிட்டு இருக்கிறது.

அவ்வமைப்பு ரேப் பாடகர் லில் நாஸ் எக்ஸ் உடன் இணைந்து திங்கட்கிழமை வெளியிட்டுள்ள கருப்பு சிவப்பு நிற ஷூவில் தலைகீழான சிலுவைச் சின்னம், பென்டாகிராம் எனப்படும் நட்சத்திரக் குறி, லூக் 10:18 என்கிற சொல் போன்றவைகள் இடம் பெற்றுள்ளன.

இந்த ஷூவின் விலை 1,018 அமெரிக்க டாலர். இந்த ஷூ அறிமுகப்படுத்தப்பட்ட ஒரு நிமிடத்துக்குள் விற்றுத் தீர்ந்துவிட்டதாகக் கூறுகிறார்கள்.

இது பதிப்புரிமை மீறல் என நைக் நிறுவனம் கூறியுள்ளது.

கடந்த வெள்ளிக்கிழமை லில் நாஸ் எக்ஸ் பாடகரின் 'மான்டெரோ' (கால் மீ பை யுவர் நேம்) என்கிற பாடல் வெளியானது. அதில் சொர்கத்தில் இருந்து நரகத்துக்கு ஒரு கம்பத்தைப் பிடித்துக் கொண்டு வருவது போல ஒரு காட்சி இருக்கிறது.

அப்படி வரும் அந்தப் பாடகர், 666 ஜோடி ஷூக்களை அணிந்திருக்கிறார். இந்த ஷூக்கள் ஒவ்வொன்றிலும் நைக்கின் பிரத்யேகமான ஏர் பபிள் குஷன்களைக் கொண்ட பாதப் பகுதிகள் இருக்கின்றன. அதில் சிவப்பு நிற சாயமும், கலைப் பொருட்கள் சேகரிப்புக் குழு உறுப்பினர்கள் கொடுத்த ஒரு துளி உண்மையான மனித ரத்தமும் பயன்படுத்தப்பட்டு இருக்கிறது.

நைக் நிறுவனம் தொடுத்த வழக்கு

சாத்தான் ஷூ

பட மூலாதாரம்,MSCHF

அமெரிக்காவின் நியூ யார்க் கிழக்கு மாவட்ட நீதிமன்றத்தில், எம் எஸ் சி ஹெச் எஃப் அமைப்பின் ஷூக்களை விற்பதைத் தடுக்க வேண்டும் என்றும், தங்கள் நிறுவனத்தின் இலச்சினையைப் பயன்படுத்துவதைத் தடை செய்ய வேண்டும் எனவும் வழக்கு தொடுத்திருக்கிறது நைக் நிறுவனம். அதோடு, இந்த மாற்றி வடிவமைக்கப்பட்ட சாத்தான் ஷூக்களை தாங்கள் அங்கீகரிக்கவில்லை என்றும் கூறுகிறது நைக்.

"எம் எஸ் சி ஹெச் எஃப் மற்றும் அதன் சாத்தான் ஷூக்கள் தேவையில்லாத குழப்பத்தை ஏற்படுத்தும். நைக் மற்றும் எம் எஸ் சி ஹெச் எஃப் அமைப்பு இணைந்து செயல்படுவது போல ஒரு தவறான புரிதலை உண்டாக்கும்" எனவும் அவ்வழக்கில் கூறியுள்ளது நைக் நிறுவனம்.

"எம் எஸ் சி ஹெச் எஃப்-ன் சாத்தான் ஷூக்களை நைக் நிறுவனம் அங்கீகரித்திருக்கிறது என்கிற தவறான செய்தியால், ஏற்கனவே சந்தையில் குழப்பம் நிலவுகிறது. சாத்தான் ஷூக்கள் அறிமுகப்படுத்தப்பட்டதற்கு நைக் நிறுவனத்தைப் புறக்கணிக்க வேண்டும் எனவும் வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது" என நைக் தரப்பில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

Twitter பதிவை கடந்து செல்ல, 1

Twitter பதிவின் முடிவு, 1

இந்த விவகாரத்தை, தெற்கு டகோட்டாவின் ஆளுநர் கிறிஸ்டி நொய்ம் உட்பட அமெரிக்காவில் இருக்கும் சில பழமைவாதிகள், ட்விட்டரில் சாத்தான் ஷூக்களின் வடிவமைப்பு குறித்தும், பாடகர் லில் நாஸ் எக்ஸ், எம் எஸ் சி ஹெச் எஃப் குறித்தும் தங்கள் விமர்சனங்களைப் பதிவிட்டனர்.

பாடகர் லில் நாஸ் எக்ஸ் தன் மீதான விமரசனங்களுக்கு ட்விட்டரிலேயே பதிலளித்துள்ளார்.மனித ரத்தம் கலந்து உருவாக்கப்பட்ட சாத்தான் ஷூ, நைக் நிறுவனம் எதிர்ப்பு - BBC News தமிழ்

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • ஹிந்தி மொழிக்கு எதிராக‌ போராடி ஆட்சிய‌ பிடித்த‌ திராவிட‌ம் உத‌ய‌நிதியின் ம‌க‌ன் எந்த‌ நாட்டில் ப‌டித்து முடிந்து விட்டு த‌மிழ் நாடு வ‌ந்தார்..................ஏன் உற‌வே புல‌ம்பெய‌ர் நாட்டில் த‌ங்க‌ட‌ பிள்ளைக‌ள் ஆங்கில‌த்தில் க‌தைப்ப‌து பெருமை என்று நினைக்கும் ப‌ல‌ர் இருக்கின‌ம் யாழில் இனி ப‌ழைய‌ திரிக‌ளை தேடி பார்த்தா தெரொயும்...............நான் நினைக்கிறேன் சீமானின் ம‌க‌னுக்கு த‌மிழ் க‌தைக்க‌ தெரியும்.................இப்ப‌ இருக்கும் முத‌ல‌மைச்ச‌ர் ம‌ற்றும் அவ‌ரின் ம‌க‌ன் உத‌ய‌நிதி இவ‌ர்களுக்கு ஒழுங்காய் த‌மிழே வாசிக்க‌ தெரியாது.........ச‌ரி முத‌ல‌மைச்ச‌ர் ஜ‌யாவுக்கு வ‌ய‌தாகி விட்ட‌து ஏதோ த‌டுமாறுகிறார் வாசிக்கும் போது உத‌ய‌நிதி அவ‌ரின் அப்பாவை விட‌ த‌மிழின் ஒழுங்காய் வாசிக்க‌ முடிவ‌தில்லையே உற‌வே...............சீமானின் ம‌க‌ன் மேடை ஏறி த‌மிழில் பேசும் கால‌ம் வ‌ரும் அப்போது விவாதிப்போம் இதை ப‌ற்றி.............என‌து ந‌ண்ப‌ன் கூட‌ அவ‌னின் இர‌ண்டு ம‌க‌ன்க‌ளை காசு க‌ட்டி தான் ப‌டிப்ப‌க்கிறார்............அது சில‌ரின் பெற்றோர் எடுக்கும் முடிவு அதில் நாம் மூக்கை நுழைத்து அவ‌மான‌ ப‌டுவ‌திலும் பார்க்க‌ பேசாம‌ இருக்க‌லாம்............ஒரு முறை த‌மிழ் நாட்டை ஆளும் வாய்ப்பு சீமானுக்கு கிடைச்சா அவ‌ர் சொன்ன‌ எல்லாத்தையும் செய்ய‌ த‌வ‌றினால் விம‌ர்சிக்க‌லாம் ஒரு தொகுதியிலும் இதுவ‌ரை வெல்லாத‌ ஒருவ‌ரை வ‌சை பாடுவ‌து அழ‌க‌ல்ல‌ உற‌வே........................
    • உந்தாள் முந்தியும் ஒருக்கால் கம்பி எண்ணினதெல்லோ? 
    • “அந்த மக்களிடம் அற்ப விலைக்கு வாங்கி, புலம் பெயர் மக்களிடம் அறாவிலைக்கு விற்கும் கந்துவட்டி வகை வியாபாரிகளை” இதனை எந்த அடிப்படையில் கூறுகிறீர்கள்? உதாரணமாக ஓர் பொருளின் சிறீலங்கா v பிரித்தானிய விலையை கூறுங்கள். எனக்கு தெரிந்தவர்களிடம் அதனை விசாரித்து கூறுகிறேன்.  
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.