Jump to content

பரிசாக வந்த காரை பயிற்சியாளருக்கு பரிசளித்த நடராஜன்.


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

 

நடராஜனா கொக்கா.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

May be an image of 1 person, standing and car

பரிசாக வந்த காரை தனது பயிற்சியாளருக்கு, பேரன்போடு பரிசளித்த தமிழக நடராஜன்! குவியும் வாழ்த்து

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மனிதாபிமானம்.........பாராட்டுக்கள் நடராசன்......!   👏

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சொல்ல வார்த்தை இல்லை.நன்றி மறவா வீரன்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நட்டு 5 ஆண்டுகள் தேசிய மற்றும் ஐபிஎல் போட்டிகளில் விளையாடினாலே அவருடைய பொருளாதார நிலை மேம்படும் அதே வேளை தமிழ்நாட்டின் கிராமப்புறம் சார்ந்த இளையோரை பயிற்சி கொடுத்து தூக்கிவிடுவார்.

இப்போதே தனது ஊர் இளையோர் இருவரை மாநில அளவிலான போட்டிகளில் தயார்படுத்தி பங்கெடுக்க வைத்துள்ளார்.

Link to comment
Share on other sites

  • 2 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்

இந்திய கிரிக்கெட் வாரிய ஒப்பந்த பட்டியலில் தமிழக வீரர் நடராஜன் இடம்பெறாதது ஏன்? மீண்டும் சேர வாய்ப்பு எப்படி..?

இந்திய கிரிக்கெட் வாரிய ஒப்பந்த  பட்டியலில் தமிழக வீரர் நடராஜன் இடம்பெறாதது ஏன்? மீண்டும் சேர வாய்ப்பு எப்படி..?

 

இந்திய அணியின் நம்பிக்கை நட்சத்திரமாக விளங்கும் நடராஜனுக்கு ஒப்பந்தம் வழங்காதது அவருடைய ரசிகர்களை ஆச்சர்யப்பட வைத்துள்ளது.
பதிவு: ஏப்ரல் 16,  2021 16:02 PM
மும்பை

இந்திய கிரிக்கெட் வாரியம் சார்பில் ஏ பிளஸ், ஏ, பி சி என்று 4 வகையாக கிரிக்கெட் வீரர்கள் தரம் பிரிக்கப்பட்டு ரூ.7 கோடி, ரூ.5 கோடி, ரூ.3 கோடி, ரூ.1 கோடி வீதம் ஆண்டுதோறும் ஊதியம் வழங்கப்படுகிறது. 2020-ம் ஆண்டு அக்டோபர் முதல் 2021-ம் ஆண்டு செப்டம்பர் வரையிலான வீரர்களின் புதிய ஒப்பந்த பட்டியலை இந்திய கிரிக்கெட் வாரியம் நேற்று வெளியிட்டது.

ஏ பிளஸ் பிரிவில் விராட் கோலி, ரோஹித் சர்மா, பும்ரா ஆகியோர் இடம்பெற்றுள்ளார்கள். இவர்களின் சம்பளம் தலா ரூ. 7 கோடி.

ரூ. 5 கோடிக்கான ‘ஏ’ பிரிவில் அஸ்வின், ரவீந்திர ஜடேஜா, புஜாரா, அஜிங்யா ரஹானே, ஷிகர் தவான், லோகேஷ் ராகுல், முகமது ஷமி, இஷாந்த் ஷர்மா, ரிஷாப் பண்ட், ஹர்திக் பாண்ட்யா, இடம் பெற்று உள்ளனர்.  டெஸ்ட் கிரிக்கெட்டை முன்னுரிமையாக வைத்திருக்க பி.சி.சி.ஐ விரும்புகிறது, எனவே இது கிரேடு ஏ ஒப்பந்தங்களை புஜாரா, அஜிங்யா ரஹானே, இஷாந்த் சர்மா மற்றும் அஸ்வின் போன்ற வீரர்களுக்கு வழங்கியுள்ளது. இந்த வீரர்கள் சமீபத்திய காலங்களில் குறுகிய வடிவங்களுக்கு தேர்வு செய்யப்படவில்லை மற்றும் டெஸ்ட் கிரிக்கெட்டை மட்டுமே விளையாடுகிறார்கள்.

ரூ. 3 கோடிக்கான ‘பி’ பிரிவில் விருத்திமான் சஹா, உமேஷ் யாதவ், புவனேஷ்வர்குமார், ஷர்துல் தாகூர், மயங்க் அகர்வால், ‘சி’ பிரிவில் குல்தீப் யாதவ், நவ்தீப் சைனி, தீபக் சாஹர், சுப்மான் கில், ஹனுமா விஹாரி, அக்‌ஷர் பட்டேல், ஸ்ரேயாஸ் அய்யர், வாஷிங்டன் சுந்தர், யுஸ்வேந்திர சாஹல், முகமது சிராஜ் ஆகியோர் இடம் பெற்றுள்ளனர்.

குறைந்த ஆட்டங்களில் விளையாடியுள்ள சைனி, தீபக் சஹார், சுப்மன் கில், சிராஜ் ஆகியோர் ஒப்பந்தப் பட்டியலில் இடம்பெற்றுள்ள நிலையில் தமிழக வீரர் நடராஜனுக்கு ஒப்பந்தப் பட்டியலில் இடம் கிடைக்கவில்லை. 

நடராஜன் இந்திய அணிக்காக 1 டெஸ்ட், 2 ஒருநாள், 4  20 ஓவர் போட்டிகளில் விளையாடியுள்ளார். இந்திய அணியின் நம்பிக்கை நட்சத்திரமாக விளங்கும் நடராஜனுக்கு ஒப்பந்தம் வழங்காதது அவருடைய ரசிகர்களை ஆச்சர்யப்பட வைத்துள்ளது. கடந்த வருட ஒப்பந்தப் பட்டியலில் இடம்பிடித்த மனிஷ் பாண்டே, கெதர் ஜாதவுக்கு ஆகியோருக்கு மீண்டும் ஒப்பந்தம் அளிக்கப்படவில்லை.

சுப்மன் கில், அக்‌ஷர் படேல், சிராஜ் ஆகியோர் புதிதாக ஒப்பந்தப் பட்டியலில் இடம்பெற்றுள்ளார்கள். சைனி 2 டெஸ்ட், 7 ஒருநாள், 10 டி20 ஆட்டங்களிலும் தீபக் சஹார் 3 ஒருநாள், 13 டி20 ஆட்டங்களிலும் ஷுப்மன் கில் 7 டெஸ்டுகள், 3 ஒருநாள் ஆட்டங்களிலும் சிராஜ் 5 டெஸ்டுகள், 1 ஒருநாள், 3   ஆட்டங்களிலும் விளையாடியுள்ளார்கள். 

சமீபத்தில் இந்திய அணியில் விளையாடிய சூர்யகுமார் யாதவ், இஷான் கிஷன், ராகுல் சஹார் ஆகியோரும் ஒப்பந்தப் பட்டியலில் இடம்பெறவில்லை.

இதில் காயத்தால் கடந்த ஆண்டு நிறைய போட்டிகளை தவற விட்ட வேகப்பந்து வீச்சாளர் புவனேஷ்வர்குமார் ஏ-ல் இருந்து தரம் இறக்கப்பட்டு பி பிரிவுக்கு மாற்றப்பட்டு உள்ளார். அதே சமயம் ஆல்-ரவுண்டர் ஹர்திக் பாண்ட்யா பி-ல் இருந்து ஏ பிரிவுக்கு முன்னேறியுள்ளார். சமீபத்திய மாதங்களில் டெஸ்ட் போட்டிகளில் அறிமுகமாகி பட்டைய கிளப்பிய சுப்மான் கில், அக்‌ஷர் பட்டேல், முகமது சிராஜ் ஆகியோருக்கு ஒப்பந்தத்தில் சி கிரேடு வழங்கப்பட்டு உள்ளது.

ஒரு வீரர் வருடாந்திர ஒப்பந்த பட்டியலில் இடம் பெற  ஒரு சீசனில்  குறைந்தபட்சம் மூன்று டெஸ்ட் அல்லது எட்டு ஒருநாள் போடிகள் அல்லது 10 இருபது ஓவர் போட்டிகளில் விளையாட  வேண்டும். மூன்று வடிவங்களையும் சீரான அடிப்படையில் விளையாடுபவர்களுக்கு கிரேடு ஏபிளஸ் ஒப்பந்தங்கள் வழங்கப்படுகின்றன.

ஆஸ்திரேலியாவில் அனைவரையும் கவர்ந்த தமிழக வீரர் நடராஜன், இந்த சீசனில் 1 டெஸ்ட், 2 ஒருநாள் போட்டி  மற்றும் 4இருபது ஓவர் போட்டிகளில் மட்டுமே விளையாடி உள்ளார். இதனால்  ஒப்பந்தங்கள் பட்டியலில் சேர வாரியம் நிர்ணயித்த அளவுகோல்களை பூர்த்தி செய்யத் தவறிவிட்டது.

கடந்த சீசனில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக ஒரே ஒரு டெஸ்டில் மட்டுமே விளையாடியதால் தொடக்க ஆட்டக்காரர் பிருத்வி ஷாவுக்கும் ஒப்பந்தம் கிடைக்கவில்லை.ஷுப்மன் கில் மூன்று டெஸ்ட் டவுன் அண்டரில் விளையாடியதால், அவர் ஆண்டு ஒப்பந்த பட்டியலில் சேர்க்கப்பட்டார்.

நடராஜன் இந்த ஆண்டு மேலும் இரண்டு டெஸ்ட் போட்டிகளில் அல்லது 2021 செப்டம்பர் மாதத்திற்கு முன்பு ஆறு ஒருநாள் போட்டி  அல்லது ஆறு  20 ஓவர்  போட்டிகளில் விளையாடினால் அவர் ஆண்டு ஒப்பந்த பட்டியலில் சேர்க்கப்படுவார். இருப்பினும், அவருக்கு முழுத் தொகையும் வழங்கப்படமாட்டாது.

சூர்யகுமார் யாதவ் மற்றும் கிருணல் பாண்ட்யா போன்ற வீரர்களும் இடம் கண்டுபிடிக்கவில்லை, ஆனால் அவர்கள் வாரியத்தால் நிர்ணயிக்கப்பட்ட விளையாட்டுகளின் எண்ணிக்கையை விளையாடினால் அவர்களும் ஒப்பந்தபட்டியலில் சேருவார்கள்.

 

https://www.dailythanthi.com/News/TopNews/2021/04/16160219/Why-did-Natarajan-miss-out-on-a-BCCI-annual-contract.vpf

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வாஷிங்டன் சுந்தர் குறைந்த போட்டிகளில் விளாயாடி உள்ளதாகவே நினைவு. 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • திமுகாவில் ஒரு  it குருப் இருக்கு அதன் முக்கிய வேலையே திமுகாவை பற்றி இல்லாத பொல்லாத  செய்தியை சொல்லி dmk எதிரானவர்களின் நட்பை அனுதாபத்தை பெற்று கொள்வது .
    • தமிழ்மக்கள் 60 வருசத்துக்கு மேலாக தூர நோக்கோடுதான் வாக்களித்துக்கொண்டிருக்கிறார்கள். இதில் கொடுமை என்னவென்றால் அந்த தூர நோக்கு தனது எல்லையை தொடவில்லை. தொடுவதற்கான அறிகுறியும் கண்ணுக்கெட்டிய தூரம் வரை தெரியவில்லை.
    • பாவம் சிரித்திரன் சுந்தர்.  கல்லறைக்குள் இருந்து நெளிவார் என நினைக்கிறேன். 
    • இதென்ன பிரமாதம்…. நான் ஒரு முடா குடியன் எண்டும்…லண்டனில் ஹரோ பகுதி பப் ஒன்றில் வெறியில் அரசியல் கதைக்கும் ஆள் நான் தான் என்று சத்தியம் செய்ததோடு… அந்த நபரோடு டெலிபோன் தொடர்பை ஏற்படுத்தி…அவரும் ஓம் நான் கோஷாந்தான் என சொல்லி…. இவரை ஒரு சில மாதம் ஓட்டு…ஓட்டு எண்டு ஓட்டி🤣. இன்னும் அந்த மனுசன் இவரை உசுபேத்தி கொண்டு இருக்கோ தெரியாது🤣.   கேட்டா எண்ட சாதகம் மோகனிடம் இருக்கு, நிழலிட்ட இருக்கு என்பார். அந்த தகவலை அவர்கள் தந்தாலும்…அதை வச்சு நான் என்ன செய்யலாம்? கலியாணம் பேசவோ🤣
    • 28 MAR, 2024 | 11:04 AM   நியூமோனியாவினால் பாதிக்கப்பட்டு உயிரிழந்த 59 வயதுடைய நபரொருவரின் சடலத்தில் மேற்கொள்ளப்பட்ட பிரேத பரிசோதனையின் போது அவரது நுரையீரலில் காணப்பட்ட பல் ஒன்று பலாங்கொடை ஆதார வைத்தியசாலையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. உயிரிழந்தவர் பல வருட காலமாக நியூமோனியா மற்றும் சிறுநீரக நோயினால் பாதிக்கப்பட்டிருந்ததாக வைத்தியர்கள் தெரிவித்தனர். பலாங்கொடை ஆதார வைத்தியசாலையின் சட்ட வைத்திய அதிகாரியினால் மேற்கொள்ளப்பட்ட பிரேத பரிசோதனையின்போதே இந்த பல் கண்டுபிடிக்கப்பட்டதாக பலாங்கொடை ஆதார வைத்தியசாலையின் திடீர் மரண விசாரணை அதிகாரி பத்மேந்திர விஜேதிலக தெரிவித்தார். பலாங்கொடை - பின்னவலை பிரதேசத்தை சேர்ந்த எஸ் . கருணாரத்ன என்பவரின் நுரையீரலில் இருந்தே இவ்வாறு பல் கண்டுப்பிடிகக்ப்பட்டுள்ளது. இவர் மதுபானத்துக்கு அடியானவர் என்பதுடன் நியூமோனியா நோயினால் பாதிக்கப்பட்டு உயிரிழந்துள்ளதாக வைத்தியர்கள் தெரிவித்தனர். சில வருடங்களுக்கு முன்னர் இவரது பல் ஒன்று உடைந்துள்ள நிலையில், அந்த பல் நுரையீரலில் சிக்கியிருக்கலாம் என வைத்தியர்கள் சந்தேகிக்கின்றனர். https://www.virakesari.lk/article/179883
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.