Jump to content

தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் பற்றி இலங்கைத் தமிழர்களின் எதிர்பார்ப்பு என்ன?


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
  • ரஞ்சன் அருண்பிரசாத்
  • பிபிசி தமிழுக்காக

இன்னும் சில நாள்களில் தமிழ்நாட்டின் சட்டமன்றத் தேர்தல் நடக்கவுள்ள நிலையில் இலங்கைத் தமிழர்கள் இந்தத் தேர்தல் குறித்து என்ன கருதுகிறார்கள் என்று ஆராய்ந்தது பிபிசி தமிழ்.

இலங்கை தமிழர் தொடர்பிலான பிரச்னை இதுவரை தமிழ்நாட்டில் மட்டும் செல்வாக்கு செலுத்திவந்த நிலையில் அது தற்போது இந்தியாவின் வட பகுதி வரை ஆக்கிரமித்துள்ளதாக இலங்கையின் அரசியல் விமர்சகரான கலாநிதி ஜனகன் விநாயகமூர்த்தி தெரிவிக்கிறார்.

பிபிசி தமிழுக்கு வழங்கிய பிரத்தியேக செவ்வியிலேயே அவர் இதனைக் குறிப்பிட்டார்.

'இன்று இந்தியப் பிரதமர், இலங்கைக்கு வருவது, தனக்கு பெருமை என சொல்வதை விட, இலங்கையில் யாழ்ப்பாணத்துக்கு வருவது பெருமை என்று சொல்லியிருப்பது இந்த மாற்றத்தைக் காட்டுவதாக அவர் குறிப்பிட்டார்.

ஜனகன் விநாயகமூர்த்தி
 
படக்குறிப்பு,

ஜனகன் விநாயகமூர்த்தி

இலங்கை தொடர்பிலான பிரச்சினைகளை, தமிழக முன்னாள் தலைவர்கள், தேர்தல் காலப் பகுதியில் அடுக்கு மொழிகளில் பேசுவது வழக்கமாக வைத்திருந்ததாகவும் அவர் கூறுகின்றார்.

அதேபோன்று, இன்றைய தலைவர்களாக இருக்கக்கூடிய எடப்பாடி பழனிசாமி மற்றும் ஸ்டாலின் போன்றவர்களும் ஈழத் தமிழர் பிரச்சினைகளை, தேர்தல் மேடைகளில் பேசி வருவதாக அவர் தெரிவிக்கிறார்.

தமிழகத்தில் அகதிகளாக இருக்கக்கூடிய ஈழத் தமிழர்களுக்கு இரட்டை குடியுரிமையை பெற்றுக்கொடுப்பது, இந்த முறை தமிழக தேர்தல் களத்தில் முக்கிய கருப் பொருளாக மாறியுள்ளது எனவும் அவர் குறிப்பிடுகின்றார்.

தமிழக சட்டமன்றத் தேர்தல் குறித்த இலங்கை தமிழர்களின் பார்வை

பட மூலாதாரம்,GETTY IMAGES

இந்தியா, இலங்கையில் தங்களுடைய நல்லிணக்கத்தை கொண்டு வர வேண்டும் என்றால், வடக்கு, கிழக்கு மற்றும் மலையக பகுதிகளில் வாழ்கின்ற தமிழ் மக்களுக்கு தங்களுடைய ஆதரவு இருக்கு என்பதை ஆணித்தனமாக சொல்ல வேண்டிய தேவைப்பாடு புவியியல் ரீதியாகவும், பூகோள ரீதியாகவும் தற்போது ஏற்பட்டுள்ளதாக அவர் கூறுகின்றார்.

தமிழகத்தில் இருந்த திராவிட கட்சிகள் மாத்திரமன்றி, இன்று போட்டியிடுகின்ற மக்கள் நீதி மய்யம் கூட, ஈழத் தமிழர் பிரச்சினையில் அதிக அக்கறை கொடுக்க வேண்டிய சூழ்நிலைக்கு மாற்றப்பட்டிருக்கின்றது என அவர் கூறுகின்றார்.

இலங்கை தமிழ் ஊடகவியலாளரின் பார்வை

தமிழக சட்டமன்றத் தேர்தல் தொடர்பில் இலங்கையின் மூத்த ஊடகவியலாளரும், தமிழன் பத்திரிகையின் பிரதம ஆசிரியருமான ஆர்.சிவராஜாவிடம் பிபிசி தமிழ் வினவியது.

இலங்கை தமிழர் பிரச்சினை தொடர்பில் கடந்த 10 வருட காலமாக தமிழகத்திலிருந்து பெரிதாக குரல் எழுப்பப்படவில்லை என மூத்த ஊடகவியலாளர் ஆர்.சிவராஜா தெரிவிக்கிறார்.

ஆர்.சிவராஜா
 
படக்குறிப்பு,

ஆர்.சிவராஜா

இவ்வாறான நிலையில், இந்த முறை சட்டமன்றத் தேர்தலில் மாற்றமொன்று ஏற்பட்டு, அதனூடாக இலங்கை தமிழர் பிரச்சினையில் புதியதொரு மாற்றம் ஏற்படலாம் என அவர் கூறுகிறார்.

இலங்கை தமிழர் பிரச்சினையில் தி.மு.க கடந்த காலங்களில் சட்ட சபையில் தீர்மானங்களை நிறைவேற்றியிருந்ததாக கூறும் அவர், எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அ.தி.மு.க அவ்வாறான திட்டகாத்திரமான தீர்மானங்களை எடுத்ததாக தெரியவில்லை என குறிப்பிடுகிறார்.

இலங்கை பிரச்சினையில் தற்போது ஜெனீவாவில் இலங்கைக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளதாகவும் அவர் கூறுகின்றார்.

இவ்வாறான நிலையில், தி.மு.க ஆட்சிக்கு வந்தால், ஜெனீவா தீர்மானத்தை நிறைவேற்றுவதற்காக ஸ்டாலின் கடுமையான நெருக்கடிகளை கொடுப்பார் என மூத்த ஊடகவியலாளர் ஆர்.சிவராஜா தெரிவிக்கிறார்.

அதேபோன்று, மீனவப் பிரச்சினையிலும் மத்திய அரசு, இலங்கையுடன் நட்புறவு அடிப்படையில் தீர்வுகளை எடுத்து வருவதாக அவர் கூறுகின்றார்.

இந்த பின்னணியில், மீனவப் பிரச்சினையிலும், ஸ்டாலினின் அழுத்தம் மிக கடுமையாக இருக்கும் என அவர் குறிப்பிடுகிறார்.

அதேபோல, இலங்கை தமிழர் பிரச்சினையில் அரசியல் தீர்வு வர வேண்டும் என்பதை ஸ்டாலின் வலியுறுத்துவார் என அவர் தெரிவிக்கிறார்.

இலங்கை தமிழர் பிரச்சினை குறித்து, ஜெயலலிதா மற்றும் கருணாநிதி ஆகியோர் தொடர்ச்சியாக ஏதோ வகையில் மத்திய அரசாங்கத்திற்கு அழுத்தங்களை கொடுத்த வண்ணமே இருந்ததாக கூறும் அவர், தற்போதைய தலைவர்கள் அவ்வாறான அழுத்தங்களை பிரயோகிக்கவில்லை என குறிப்பிடுகிறார்.

ஜெயலலிதா மற்றும் கருணாநிதி ஆகியோர் போன்று, இலங்கை தமிழர் தொடர்பில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பெரிய அளவிலான நெருக்குதல்களை கொடுக்கவில்லை என அவர் கூறுகின்றார்.

எனினும், ஸ்டாலின் இலங்கை தமிழர் பிரச்சினையில் சற்று முன்னோக்கிய நகர்வுகளை மேற்கொண்டு வருவதாகவும் மூத்த ஊடகவியலாளர் ஆர்.சிவராஜா தெரிவிக்கிறார்.

இலங்கை தமிழர்களின் பார்வை

பிரேம்
 
படக்குறிப்பு,

பிரேம்

தமிழக சட்ட மன்றத் தேர்தல் தொடர்பில் இலங்கை வாழ் தமிழ் மக்களின் கருத்துக்களையும் கேட்டோம்.

தற்போது இலங்கை தொடர்பில் பேசுபவர்கள், ஆட்சிக்கு வந்ததன் பின்னர், உறுதி மொழிகளை நிறைவேற்றுவார்களா என்ற கேள்வியை மனதில் எழுகின்றது என கொழும்பு - வெள்ளவத்தை பகுதியைச் சேர்ந்த பிரேம் தெரிவிக்கிறார்.

எங்களுடைய கைகளை நாங்களே நம்பி இருக்க வேண்டிய நிலைமையே காணப்படுகிறது எனவும் அவர் கூறுகின்றார்.

தனக்கு அரசியல்வாதிகளின் கருத்துக்கள் மீது நம்பிக்கை கிடையாது எனவும் அவர் குறிப்பிடுகிறார்.

இதேவேளை, மற்றுமொரு தமிழரும் இந்த விடயம் தொடர்பில் கருத்து தெரிவித்தார்.

புஷ்பநாதன்
 
படக்குறிப்பு,

புஷ்பநாதன்

இலங்கை தமிழர் பிரச்சினைக்கு இலங்கை அரசியல்வாதிகளினாலேயே தீர்வை பெற்றுக்கொடுக்க முடியவில்லை என்ற நிலையில், இந்திய அரசியல்வாதிகளினால் அதனை எவ்வாறு தீர்க்க முடியும் என அவர் கேட்கிறார்.

ஜெயலலிதா, கருணாநிதி கூறிய விடயங்களையே, இன்று வரை கூறி வருவதாகவும், ஆனால் தீர்வுகள் இதுவரை கிடைக்கவில்லை எனவும் மலையகத்தைச் சேர்ந்த புஷ்பநாதன் தெரிவிக்கிறார்.

சதிஷ்
 
படக்குறிப்பு,

சதிஷ்

தேர்தல் காலப் பகுதியிலாவது, இலங்கை தமிழர் பிரச்சினை குறித்து பேசுவது வரவேற்கத்தக்கது என கிளிநொச்சியைச் சேர்ந்த சதிஷ் தெரிவிக்கிறார்.

இந்தியாவில் வழங்கப்படும் வாக்குறுதிகள் இலங்கையில் தாக்கத்தை செலுத்தாது என்ற போதிலும், இந்திய அரசியலில் மாத்திரமே அது தாக்கத்தை செலுத்தி வருவதாகவும் கூறுகிறார்.

தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் பற்றி இலங்கைத் தமிழர்களின் எதிர்பார்ப்பு என்ன? - BBC News தமிழ்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எங்கட சனம் கெட்டிக்காறர்கள் தான்

ஒருத்தரும் சீமான் பெயரை உச்சரிக்க கூட இல்லை

ஊரில இருக்கின்ற ஒருத்தரும் சீமானை கணக்கெடுப்பதும் இல்லை. படிச்ச சனம் படிச்ச சனம் தான்.

முதல் வெடி வெடிக்க முன் ஊரை விட்டு கிளம்பியவர்களும்
அப்படி கிளம்பியும் ஊரில காணியை வைச்சு கொண்டு அதன் பெறுமதி கூடிக் குறைவதை பார்த்து வியர்த்து கொட்டுகின்றவர்களும்
தனித் தமிழ் என்றதற்காக சீமான ஒரு பக்கத்தால ஆதரிச்சுக் கொண்டு
**********

அப்ப நான் வரட்டே

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, வைரவன் said:

எங்கட சனம் கெட்டிக்காறர்கள் தான்

ஒருத்தரும் சீமான் பெயரை உச்சரிக்க கூட இல்லை

ஊரில இருக்கின்ற ஒருத்தரும் சீமானை கணக்கெடுப்பதும் இல்லை. படிச்ச சனம் படிச்ச சனம் தான்.

முதல் வெடி வெடிக்க முன் ஊரை விட்டு கிளம்பியவர்களும்
அப்படி கிளம்பியும் ஊரில காணியை வைச்சு கொண்டு அதன் பெறுமதி கூடிக் குறைவதை பார்த்து வியர்த்து கொட்டுகின்றவர்களும்
தனித் தமிழ் என்றதற்காக சீமான ஒரு பக்கத்தால ஆதரிச்சுக் கொண்டு
தெலுங்கு மலையாள சஞ்சிகைகளை லண்டனில பாரிசில விற்கின்றவர்களும் தான் அவர தூக்கிப் பிடிக்கினம் பாருங்கோ

அப்ப நான் வரட்டே

உங்கள் அறிவோ, அறிவு.... இதை எங்களுக்கு போதனை செய்யவே கிளம்பி வந்தனியள்?

பிரபாகரன் மற்றும் சீமான் பெயரை யாராவதும் ஊரிலை உச்சரித்தால், நாலாம் மாடி தான் எண்டு தெரியுமா? இது தெரியாமல்.... என்னத்தை எழுதுறியளோ?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
52 minutes ago, Nathamuni said:

உங்கள் அறிவோ, அறிவு.... இதை எங்களுக்கு போதனை செய்யவே கிளம்பி வந்தனியள்?

பிரபாகரன் மற்றும் சீமான் பெயரை யாராவதும் ஊரிலை உச்சரித்தால், நாலாம் மாடி தான் எண்டு தெரியுமா? இது தெரியாமல்.... என்னத்தை எழுதுறியளோ?

ஊரில இருந்து தலைவரின் படத்தில் இருந்து போராளிகளின் வீரவணக்கம் வரைக்கும் முக நூலில் போடும் நூற்றுக்கு மேற்பட்டவர்கள் உள்ளனர் தெரியுமா?

ஜெரா தம்பி, காவலூர் அகிலன், தீபச்செல்வன், பிரின்ஸ் காசினாதர், சுப்பிரமணிய பிரபா போன்ற ஆட்களின் பெயர்களை எப்பவாவது கேள்விப்பட்டிருக்கியலோ

தலைவரின் படத்தை போட்டதால பேசு புக்கு முடக்கப்பட்ட பலர் அங்குதான் அண்ணை உள்ளனர்.

இடைக்கிடை ஊர்ச் செய்திகளையும் பாருங்கோ.

இலவசக் கல்வியில் பயின்ற பாசம் மட்டும் இருந்துட்டால் போதாது பாருங்கோ ஊர்ச் செய்திகளையும் பார்க்க வேண்டும்.

யதார்த்தம் என்னவென்றால் ஊரில ஒருவரும் சீமானை கணக்கெடுப்பதில்லை என்பது தான். முதல் வெடிக்கு முன் ஓடி வந்தவர்கள் தான் காவிக் கொண்டு திரிகினம்.

இந்த உண்மை சகக்கும் தான் பிரோ.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
10 minutes ago, வைரவன் said:

ஊரில இருந்து தலைவரின் படத்தில் இருந்து போராளிகளின் வீரவணக்கம் வரைக்கும் முக நூலில் போடும் நூற்றுக்கு மேற்பட்டவர்கள் உள்ளனர் தெரியுமா?

ஜெரா தம்பி, காவலூர் அகிலன், தீபச்செல்வன், பிரின்ஸ் காசினாதர், சுப்பிரமணிய பிரபா போன்ற ஆட்களின் பெயர்களை எப்பவாவது கேள்விப்பட்டிருக்கியலோ

தலைவரின் படத்தை போட்டதால பேசு புக்கு முடக்கப்பட்ட பலர் அங்குதான் அண்ணை உள்ளனர்.

இடைக்கிடை ஊர்ச் செய்திகளையும் பாருங்கோ.

இலவசக் கல்வியில் பயின்ற பாசம் மட்டும் இருந்துட்டால் போதாது பாருங்கோ ஊர்ச் செய்திகளையும் பார்க்க வேண்டும்.

யதார்த்தம் என்னவென்றால் ஊரில ஒருவரும் சீமானை கணக்கெடுப்பதில்லை என்பது தான். முதல் வெடிக்கு முன் ஓடி வந்தவர்கள் தான் காவிக் கொண்டு திரிகினம்.

இந்த உண்மை சகக்கும் தான் பிரோ.

தகவலை சரியாக பதியுங்கள். சும்மா பத்தி, பத்தியாக பதிந்து பிரயோசனம் இல்லை.

பிரபாகரன் குறித்து பதிந்த 30 பேர் கைதாகி உள்ளனர். இது குறித்து சாணக்கியன் பாராளுமன்றிலேயே பேசி உள்ளார். 

போனவாரம் யாழ்ப்பாணத்தில், புலிகள் குறித்த பதிவுகளால் இருவர் கைது.

http://www.dailymirror.lk/breaking_news/Two-arrested-in-Jaffna-for-operating-website-promoting-LTTE/108-208840

நீங்கள் எத்திணையாவது வெடிக்கு கிளம்பினீர்கள்?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 minutes ago, Nathamuni said:

தகவலை சரியாக பதியுங்கள். சும்மா பத்தி, பத்தியாக பதிந்து பிரயோசனம் இல்லை.

பிரபாகரன் குறித்து பதிந்த 30 பேர் கைதாகி உள்ளனர். இது குறித்து சாணக்கியன் பாராளுமன்றிலேயே பேசி உள்ளார். 

போனவாரம் யாழ்ப்பாணத்தில், புலிகள் குறித்த பதிவுகளால் மூவர் கைது.

http://www.dailymirror.lk/breaking_news/Two-arrested-in-Jaffna-for-operating-website-promoting-LTTE/108-208840

நீங்கள் எத்திணையாவது வெடிக்கு கிளம்பினீர்கள்?

ஆக

தலைவரை குறித்து அங்கு இன்னும் எழுதுகின்றார்கள் தானே?
புலிகளை பற்றி எழுதுகின்றனர் தானே
நீங்கள் சொன்ன மாதிரி எழுதாமல் இல்லையே

நான் முதல் வெடிக்கும்
இரண்டாம் வெடிக்கும்
இடையில் கிளம்பினனான்

ஆனால் கிளம்பி வந்து
தமிழக சீமான்களுக்கு
காவடி தூக்கவில்லை

அது சரி

ஆகக் குறைஞ்சது தலைவர் என்று கூட அவரை குறிப்பிட மாட்டீர்களா?
வெறுமனே அவர் பெயரை தான் குறிப்பிடுவீர்களா?
அந்தளவுக்கு அவர் மரியாதைக்குரியவர் இல்லையா?


சீமான் தான் உங்கள் தலைவர் ஆச்சே

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
8 minutes ago, வைரவன் said:

ஆக

தலைவரை குறித்து அங்கு இன்னும் எழுதுகின்றார்கள் தானே?
புலிகளை பற்றி எழுதுகின்றனர் தானே
நீங்கள் சொன்ன மாதிரி எழுதாமல் இல்லையே

நான் முதல் வெடிக்கும்
இரண்டாம் வெடிக்கும்
இடையில் கிளம்பினனான்

ஆனால் கிளம்பி வந்து
தமிழக சீமான்களுக்கு
காவடி தூக்கவில்லை

அது சரி

ஆகக் குறைஞ்சது தலைவர் என்று கூட அவரை குறிப்பிட மாட்டீர்களா?
வெறுமனே அவர் பெயரை தான் குறிப்பிடுவீர்களா?
அந்தளவுக்கு அவர் மரியாதைக்குரியவர் இல்லையா?


சீமான் தான் உங்கள் தலைவர் ஆச்சே

 

முகநூல் பதிவுகள், கைதுகளை தொடர்ந்து, பதிவது நின்று போனது. பதித்தவர்கள் நீக்கினாலும், போலீஸ் கண்காணிப்பில் உள்ளனர்.

நீங்கள் வேறு, பேரை எழுதி, காட்டி கொடுக்கிறீர்களே. வேண்டுமென்றே செய்கிறீர்களா?

இலங்கை அரசின் அழுத்தம் காரணமாக, தமிழகத்தில், பிரபாகரன் போட்டோ பயன்படுத்தும் youtube, முகப்புத்தக கணக்குகள் முடக்கப்படுகின்றன. யாழ்ப்பாணத்தில் நிலைமை எப்படி இருக்கும்.

இங்கிருந்து, நான், யாழ்ப்பாணம் போயிருந்த போது ஒரு முகப்புத்தக கணக்கு திறந்தேன். அது இலங்கை கணக்கா, வெளிநாட்டு கணக்கா என்று சொல்லுங்கள் பார்ப்போம். அதில் பிரபாகரன் படம் போடடால், இருக்கும், இலங்கை போலீஸ் என்னை போய் தேடி பிடிக்கேலுமே?

ஓமோம்... சீமான் தான் .... உங்கடை, டக்கியா அல்லது டைரக்ட்டா  கோத்தவா? 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, Nathamuni said:

முகநூல் பதிவுகள், கைதுகளை தொடர்ந்து, பதிவது நின்று போனது. பதித்தவர்கள் நீக்கினாலும், போலீஸ் கண்காணிப்பில் உள்ளனர்.

நீங்கள் வேறு, பேரை எழுதி, காட்டி கொடுக்கிறீர்களே. வேண்டுமென்றே செய்கிறீர்களா?

இலங்கை அரசின் அழுத்தம் காரணமாக, தமிழகத்தில், பிரபாகரன் போட்டோ பயன்படுத்தும் youtube, முகப்புத்தக கணக்குகள் முடக்கப்படுகின்றன. யாழ்ப்பாணத்தில் நிலைமை எப்படி இருக்கும்.

இங்கிருந்து, நான், யாழ்ப்பாணம் போயிருந்த போது ஒரு முகப்புத்தக கணக்கு திறந்தேன். அது இலங்கை கணக்கா, வெளிநாட்டு கணக்கா என்று சொல்லுங்கள் பார்ப்போம். அதில் பிரபாகரன் படம் போடடால், இருக்கும், இலங்கை போலீஸ் என்னை போய் தேடி பிடிக்கேலுமே?

ஓமோம்... உங்கடை, டக்கியா அல்லது டைரக்ட்டா  கோத்தவா? 

பிளாக்கில் பழைய பதிவை தேடிப்பிடித்து விசாரிக்க வந்தவர்கள் போனை வேண்டி வாட்ஸ் அப் குழுமங்களை  பார்க்க இங்குள்ள நபர்களின் பதிவுகளை பார்த்து பயந்து போய்  நண்பர் வாட்சப் என்ற ஒன்றே வேண்டாம் என்று வெறுத்து போய் உள்ளார் .

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
6 minutes ago, Nathamuni said:

முகநூல் பதிவுகள், கைதுகளை தொடர்ந்து, பதிவது நின்று போனது. பதித்தவர்கள் நீக்கினாலும், போலீஸ் கண்காணிப்பில் உள்ளனர்.

நீங்கள் வேறு, பேரை எழுதி, காட்டி கொடுக்கிறீர்களே. வேண்டுமென்றே செய்கிறீர்களா?

ஓமோம்... சீமான் தான் .... உங்கடை, டக்கியா அல்லது டைரக்ட்டா  கோத்தவா? 

கருத்து எழுத வேறு வழி இல்லாட்டி
இருக்கும் ஒரே குறுக்கு வழி
காட்டிக் கொடுக்கின்றீரோ என்று கேட்பது
டக்கியோ கோத்தாவோ டைரக்டர் என்பது

நான் குறிப்பிட்ட அனைவரும் இன்றும்
இந்த வினாடியும் முக நூலில் உயிர்ப்புடன்
உள்ளவர்கள்
உங்களை மாதிரி என்னை மாதிரி முகம் காட்டாமல்
இருப்பவர்கள் அல்ல
அதிலும் ஒருவர் 3 வரிசம் பூசாவில் இருந்தவர்

சீமான் தான் தலைவர் என்று
ஒத்துக் கொண்டதுக்கு
நன்றிங்கோ

ஆனாலும் தேசிய தலைவரை
வெறுமனே பெயரை சொல்லி
குறிப்பிடுவது சரி இல்லை.
அவரது தியாகங்களுக்கான
நேர்மையும் இல்லை,

 

2 hours ago, வைரவன் said:

தனித் தமிழ் என்றதற்காக சீமான ஒரு பக்கத்தால ஆதரிச்சுக் கொண்டு
**********

அப்ப நான் வரட்டே

நான் எழுதியதை நீக்கிய நிழலி
என்னை கோத்தா ஆளோ என்று கேட்டதை
நீக்க மாட்டார்

நாதம் அவர்ட செல்லம்
என்று தெரியும்

ஆனாலும் நீக்க வேண்டாம்

கருத்துக்கு பஞ்சம் வந்தால்
துரோகி என்று முத்திரை குத்த
முனைவது
கருத்தாளனுக்கு வெற்றி தான்

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, வைரவன் said:

கருத்து எழுத வேறு வழி இல்லாட்டி
இருக்கும் ஒரே குறுக்கு வழி
காட்டிக் கொடுக்கின்றீரோ என்று கேட்பது
டக்கியோ கோத்தாவோ டைரக்டர் என்பது

நான் குறிப்பிட்ட அனைவரும் இன்றும்
இந்த வினாடியும் முக நூலில் உயிர்ப்புடன்
உள்ளவர்கள்
உங்களை மாதிரி என்னை மாதிரி முகம் காட்டாமல்
இருப்பவர்கள் அல்ல
அதிலும் ஒருவர் 3 வரிசம் பூசாவில் இருந்தவர்

சீமான் தான் தலைவர் என்று
ஒத்துக் கொண்டதுக்கு
நன்றிங்கோ

ஆனாலும் தேசிய தலைவரை
வெறுமனே பெயரை சொல்லி
குறிப்பிடுவது சரி இல்லை.
அவரது தியாகங்களுக்கான
நேர்மையும் இல்லை,

 

வந்த வேகத்திலை, கத்தி வெட்டு வாங்கிப் போட்டீர்கள், பார்த்து எழுதுங்கோ.

எனது தலைவன் சீமான் தானே என்று நீங்கள் சொல்லலாம். திருப்பி உங்கள் தலை, டக்கியா அல்லது, நேரடியாக கோத்தாவே என்று கேட்டால் கோபம் வருகுது.

உங்களுக்கு எண்டால் ரத்தம், அடுத்தவனுக்கு தக்காளி சாறு..... அப்படித்தானே.  🙄

உங்க கண பேர், தீடீர் தேசிய தலைவர் ஆதரவு வேசம் போட்டுக்கொண்டு வருகினம்.😁

நீங்கள் அப்படி இல்லை எண்டு எனக்கு தெரியுமே.

முதலில், சூசை எதுக்கு, கடைசியில் சீமானுக்கு கோரிக்கை விடுத்து ஒரு ஒலிப்பதிவு விடுத்தார், தலைவர் சொல்லாமலேயே, தனது இஷ்டத்துக்கு, சீமானுக்கு கோரிக்கை விடுத்து இருப்பார் என்று எனக்கு ஒருக்கா விளக்கப்படுத்த ஏலுமா?

சூசை சொன்னதை கேட்பதா, வைரவன் சொல்வதை கேட்பதா... சொல்லுங்கோ, வைரவா, சொல்லுங்கோ.

அல்லது, சூசை, வாய்ஸ் டப்பிங்... எண்டாவது சொல்லுங்கோ.... நம்புறேன்

அந்த கோரிக்கை, ஏன், வைகோவுக்கோ, கலைனருக்கோ, ஜெயலலிதாவுக்கோ, திருமவளவனுக்கோ போகவில்லை என்று விளக்கப்படுத்துங்கள், பார்ப்போமே.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, Nathamuni said:

முதலில், சூசை எதுக்கு, கடைசியில் சீமானுக்கு கோரிக்கை விடுத்து ஒரு ஒலிப்பதிவு விடுத்தார், தலைவர் சொல்லாமலேயே, தனது இஷ்டத்துக்கு, சீமானுக்கு கோரிக்கை விடுத்து இருப்பார் என்று எனக்கு ஒருக்கா விளக்கப்படுத்த ஏலுமா?

 

சூசை அண்ணையின் ஒலிப்பதிவு முழுமையாக வெளியிடப்படாமல் இருந்ததாக ஒரு கதை வந்தது. உண்மையா?

 

 

Link to comment
Share on other sites

1 hour ago, Nathamuni said:

வந்த வேகத்திலை, கத்தி வெட்டு வாங்கிப் போட்டீர்கள், பார்த்து எழுதுங்கோ.

எனது தலைவன் சீமான் தானே என்று நீங்கள் சொல்லலாம். திருப்பி உங்கள் தலை, டக்கியா அல்லது, நேரடியாக கோத்தாவே என்று கேட்டால் கோபம் வருகுது.

உங்களுக்கு எண்டால் ரத்தம், அடுத்தவனுக்கு தக்காளி சாறு..... அப்படித்தானே.  🙄

உங்க கண பேர், தீடீர் தேசிய தலைவர் ஆதரவு வேசம் போட்டுக்கொண்டு வருகினம்.😁

நீங்கள் அப்படி இல்லை எண்டு எனக்கு தெரியுமே.

முதலில், சூசை எதுக்கு, கடைசியில் சீமானுக்கு கோரிக்கை விடுத்து ஒரு ஒலிப்பதிவு விடுத்தார், தலைவர் சொல்லாமலேயே, தனது இஷ்டத்துக்கு, சீமானுக்கு கோரிக்கை விடுத்து இருப்பார் என்று எனக்கு ஒருக்கா விளக்கப்படுத்த ஏலுமா?

சூசை சொன்னதை கேட்பதா, வைரவன் சொல்வதை கேட்பதா... சொல்லுங்கோ, வைரவா, சொல்லுங்கோ.

அல்லது, சூசை, வாய்ஸ் டப்பிங்... எண்டாவது சொல்லுங்கோ.... நம்புறேன்

அந்த கோரிக்கை, ஏன், வைகோவுக்கோ, கலைனருக்கோ, ஜெயலலிதாவுக்கோ, திருமவளவனுக்கோ போகவில்லை என்று விளக்கப்படுத்துங்கள், பார்ப்போமே.

நீங்கள் என் என்னை பைரவன் என்று அழைக்கிறீர்கள் என்பது இப்பதான் விளங்குது. நான் அவர் அல்ல.

Btw, கே.பி(பத்மநாதன்) ஐ  கூட இயக்கம் கடைசி நேரத்தில் சர்வதேச தலைவராக நியமித்திருந்தனர்.
அதற்காக இயக்கம் கை காட்டி விட்டு சென்றவர்கள் எல்லாம் தேவதூதர்களா?. அவர்கள் பாதை மாரமாட்டார்களா?

9 minutes ago, nunavilan said:

 

https://www.tamilnet.com/art.html?catid=13&artid=28224

உங்களுடைய தர்க்கத்தின்  படி K P இப்பவும்  இயக்கத்தின் சர்வதேச தலைவர்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சூசை அண்ணை 25, 000 பேர் காயப்பட்டதாகவும் இறந்துகொண்டிருப்பதாகவும் சொல்லியிருந்தார். அது எல்லாம் முக்கியமில்லை. ஆனால் போகிற போக்கில் வைகோ, நெடுமாறன், சீமான் என்று அவர்களுடன் தொடர்பில் இருந்தவர்களின் பெயரின் சீன்மானின் பெயரும் இருந்ததை அப்படியே தூக்கி தங்கள் பரப்புரைக்கு பாவித்துக்கொண்டிருக்கின்றார்கள். இதில் முக்கியமான ஒன்று என்னவென்றால் சூசை அண்ணை குறிப்பிட்ட வைகோ துரோகி, பத்மநாதன் துரோகி.. ஆனால் சீன்மான் அடுத்த தேசியத் தலைவர்!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, zuma said:

நீங்கள் என் என்னை பைரவன் என்று அழைக்கிறீர்கள் என்பது இப்பதான் விளங்குது. நான் அவர் அல்ல.

உங்களை, பைரவா என்று அழைத்தேன் என்று நினைத்துக் கொண்டு இருந்தீர்களா? என்னத்தை சொல்ல? தொப்பி அளவா இருந்தோன்ன, தூக்கி தலையில போடுறதே? 😁 🤦‍♂️

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, கிருபன் said:

சூசை அண்ணை 25, 000 பேர் காயப்பட்டதாகவும் இறந்துகொண்டிருப்பதாகவும் சொல்லியிருந்தார். அது எல்லாம் முக்கியமில்லை. ஆனால் போகிற போக்கில் வைகோ, நெடுமாறன், சீமான் என்று அவர்களுடன் தொடர்பில் இருந்தவர்களின் பெயரின் சீன்மானின் பெயரும் இருந்ததை அப்படியே தூக்கி தங்கள் பரப்புரைக்கு பாவித்துக்கொண்டிருக்கின்றார்கள். இதில் முக்கியமான ஒன்று என்னவென்றால் சூசை அண்ணை குறிப்பிட்ட வைகோ துரோகி, பத்மநாதன் துரோகி.. ஆனால் சீன்மான் அடுத்த தேசியத் தலைவர்!

பத்மநாதன் குறித்த உங்கள் புரிதல் என்ன? அவர் துரோகி என்று தலைவர் கடைசி வரை அறிந்திருக்கவில்லை என்று தெரியுமா? வெறும் கப்பலை அனுப்பி, கூடவே தகவலையும் கசிய வைத்து, அதனை தாக்க வைத்து, ஆயுதங்களுடன் மூழ்கிவிட்டது என்று சொன்னதும், கோத்தாவுடன் டீலை போட்டு, கொழும்புக்கு விமானம் ஏறமுன்னர், நடேசன் மகனை கோலாலம்பூரில் சந்தித்து, சாட்சியாக வைத்துக்கொண்டே நாடகம் போட்டது துரோகம் இல்லையா?

மலேசியாவினால், கைது செய்து அனுப்பப்பட்டு, ஒரு நாள் கூட சிறையில் இருக்காத பத்தர், உங்களுக்கு பத்தரை மாற்று தங்கம். அநியாயத்துக்கு அப்பாவியா இருக்கிறீர்களே, கிருபன் அய்யா.

ஒரு பெரும் அரசியல்வாதி வைக்கோ எங்கே, அப்போது பெரிதாக யாருக்கும் தெரியாத சீமான் எங்கே? வைக்கோவுக்கு சொல்லுங்கோ என்பது புரிகிறது. நெடுமாறனுக்கு சொல்லுங்கோ என்பதும் புரிகிறது. 

ஆனால் சீமானுக்கு சொல்லுங்கோ, சீமான் சாருக்கு சொல்லுங்கோ, தொடர்ந்து முன் எடுக்க சொல்லி. அவரை நம்பித்தான் விட்டுவிட்டு போறோம் என்று சொல்லுங்கோ என்று சொன்னதன் காரணம் என்ன? பத்திரிகைகளுக்கு கொடுக்கலாமா என்று கேட்க, கொடு என்கிறாரே, அப்படியானால், இயக்க தலைமை முடிவை வெளியே அறிவிப்பதில் தயக்கம் இல்லை என்பது தானே.

தொடர்ந்து முன் எடுக்க சொல்லிய கோரிக்கையில், இன்றளவும் உறுதியாக நிலைத்து இருப்பது யார்?

திருமுருகன் காந்தி என்ற ஒரு சந்தர்ப்பவாதியும் இருக்கிறாரே. இயக்கத்துக்கும், அவருக்கும் எவ்வித தொடர்பும் இல்லை. அவர் போட்ட சத்தத்தில், நம்பிய ஆட்கள் சுவிசுக்கு அழைத்து இருந்தார்கள். அப்படியே, சுபவியையும், திருமாவையும்..... எங்கே அவர்கள்?

கூட்டமாக, திமுக, காங்கிரசில் ஐக்கியம். அவர்களுக்கு உங்கள் ஆதரவு.... விளங்கும்!...

சீமானை இங்கே யாரும் தேசிய தலைவர் என்று தூக்கி கொண்டாடவில்லை. உங்களை தவிர.

சீமான், பிரபாகரனை தூக்கி வீசினால், நாமும் அவரை தூக்கி வீசுவோம். அவ்வளவு தான்.

தொடர்ந்து முன் எடுக்க சொல்லி - அப்படியானால் அங்கே முன்னதாக ஒரு புரிதல் இருந்திருக்கிறது, இல்லையா?

Link to comment
Share on other sites

மேலை நாடுகளின் சமூக பாதுகாப்பு நன்மைகளை (இன்றைக்கு தொழில் இல்லையேல் அல்லது இழப்பில், அரசு நாளை முதல் வங்கியில் நிதி வைப்பிலிடும்) முழுவதுமாக அனுபவித்துக் கொண்டு, எந்தவொரு சமூக பாதுகாப்புமற்ற நாட்டில் ஓரு ரூபாய் அரிசியை இலவசம் (freebies) என்று சொல்லக்கூடிய, ஒரு ஏழைத்தொழிலாளி பிள்ளையின் பசியை துச்சமென நினைக்கும் கயவர்களுக்கு,

தம் மாநில சுயாட்சி தொடர்ந்தும் பறிக்கும் சித்தாந்தத்திற்கு எதிராக, ராம ராஜ்ஜியம் எனும் பார்ப்பன ராஜ்ஜத்திற்கு எதிராக, சனாதனம் என்ற மனிதர்கள் சமனற்றவர்கள் என்ற கோட்பாட்டிக்கு எதிராக, மனுநீதியை நிலைநாட்டி, சமூக நீதியை சூறையாடும் சித்தாந்தத்திற்கு எதிராக, ஒடுக்கபட்ட சமூகத்தின் கல்வியை அபகரிக்கும் பொறிமுறைக்கு எதிராக... இன்னும் பலவற்றிக்கும் எதிராக.. தாம் நம்பும் ஒரு கட்சிக்கு வாக்களிக்கப் போகும்... 3 கோடிக்கும் மேலான தமிழர்களும் துரோகிகளே.....

Link to comment
Share on other sites

சில புலம்பெயர் விசில் அடிச்சான் குஞ்சுகளால், தமிழகத்தில் இருக்கும்  கொஞ்சம் நஞ்சம் ஆதரவையும் இழக்கப்போகிறேம். எமக்கு கட்சி பேதம் இன்றிய ஆதரவு தான் தேவை, அமெரிக்காவில் எந்த கட்சி ஆட்சிக்கு வந்தாலும் இஸ்ரேலை ஆதரிப்பது போல்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, zuma said:

சில புலம்பெயர் விசில் அடிச்சான் குஞ்சுகளால், தமிழகத்தில் இருக்கும்  கொஞ்சம் நஞ்சம் ஆதரவையும் இழக்கப்போகிறேம். எமக்கு கட்சி பேதம் இன்றிய ஆதரவு தான் தேவை, அமெரிக்காவில் எந்த கட்சி ஆட்சிக்கு வந்தாலும் இஸ்ரேலை ஆதரிப்பது போல்.

முதலில் உங்களுக்குள் இருக்கும் பேதத்தை நீக்கி சர்வசாதாரண பொது மகனாக உரையாட பழகுங்கள். 
 

Link to comment
Share on other sites

26 minutes ago, குமாரசாமி said:

முதலில் உங்களுக்குள் இருக்கும் பேதத்தை நீக்கி சர்வசாதாரண பொது மகனாக உரையாட பழகுங்கள். 
 

 

என் கருத்தில் என்ன குற்றம் கண்டீர்? சொற்குற்றமா? அல்லது பொருட்குற்றமா?🤣

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
16 minutes ago, zuma said:

 

என் கருத்தில் என்ன குற்றம் கண்டீர்? சொற்குற்றமா? அல்லது பொருட்குற்றமா?🤣

முதலில் யார் பக்கமும் சாராமல் பொது கருத்துக்களை எழுதுங்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
21 minutes ago, zuma said:

 

என் கருத்தில் என்ன குற்றம் கண்டீர்? சொற்குற்றமா? அல்லது பொருட்குற்றமா?🤣

உங்கள் கருத்துக்கள் நீக்கப்படுவதால், உதாரணம் காட்டிட முடியவில்லை. ஆகவே துணிந்து என்ன குற்றம் கண்டீர் என்று சொல்கிறீர்கள். 🤦‍♂️

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
11 hours ago, Nathamuni said:

பத்மநாதன் குறித்த உங்கள் புரிதல் என்ன?

கேபி பத்மநாதன் தலைவர் பிரபாகரனின் திருமணத்தில் தோழனாக இருந்தவர். புலிகள் இந்தியாவை உச்சி ஆயுதப் போராட்டத்தில் முன்னேற தனது உழைப்பை செலுத்தியவர்.

இப்போது இலங்கையில் சிறை செல்லாமல் பல அநாதரவான குழந்தைகள், முதியோரை பராமரிக்கும் இல்லங்களை நடாத்துபவர். 

spacer.png

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
11 hours ago, Nathamuni said:

அவர் துரோகி என்று தலைவர் கடைசி வரை அறிந்திருக்கவில்லை என்று தெரியுமா?

ஆமாம். ஆமாம். ஆமாம்.

தலைவர் போராட்டத்திற்கு ஆயுதக்கொள்வனவு செய்து தந்த கேபியை இறுதிவரை நம்பினார் என்று Daily Mirror ஆங்கில இணையத்தளத்தில் சிங்கள அறிவுஜீவி Umberto Eco எழுதியிருந்தார்!  அவர் காஸ்ரோவின் வீண்பேச்சைக் கேட்டு கேபியை 2000 ஆண்டளவில் ஒதுக்கத் தொடங்கியிருந்தார். தகடு வைப்பவர்களின் பேச்சைக் கேட்டு 2003 இல் கேபியை ஆயுதக் கொள்வனவு பொறுப்பில் இருந்து மாற்றியிருந்தார். ஆனால் தனது நண்பனை ஒருபோதும் சந்தேகிக்கவில்லை என்று சிங்கள அறிவுஜீவி Umberto Eco இன்னும் விளக்கமாக எழுதியிருந்தார்!

நாதம்ஸ், நீங்கள் யாழில் தமிழில் வரும் பெரும் கட்டுரைகள், பேட்டிகளைக் படிப்பதில்லை என்று தெரியும். குறைந்தபட்சம் சூடான திரிகளில் என்னவெல்லாம் அலசியிருப்பார்கள் என்றாவது பார்த்தால் மேலே மேற்கோள் காட்டியதை எழுதியிருக்கம்மாட்டீர்கள்😬

 

11 hours ago, Nathamuni said:

சீமான், பிரபாகரனை தூக்கி வீசினால், நாமும் அவரை தூக்கி வீசுவோம். அவ்வளவு தான்.

இல்லை! உங்களால் முடியாது.!!

உங்களது விசுவாசம் தலைவர் பிரபாகரன் மீது இல்லை என்பதை யாழ் களத்தில் நீங்கள் இதுவரை காலமும் வைத்த கருத்துக்களைத் தொகுத்துப் பார்த்தால் புரியும்.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • ஜனாதிபதித் தேர்தல் களம் தெற்கைவிட இம்முறை தமிழர் தாயகப் பிரதேசத்திலும் சூடுபிடிக்கத் தொடங்கியிருக்கின்றது. போரின் பின்னரான அனைத்து ஜனாதிபதித் தேர்தல்களிலும் தென்னிலங்கை வேட்பாளர்களை ஆதரித்த தமிழ் மக்கள் இம்முறை அத்தகைய நிலைப்பாட்டை எடுப்பதற்குத் தயங்குவதும், தமிழ்ப் பொது வேட்பாளரை நோக்கி தமிழர்கள் அணிதிரட்டப்படுவதாலும் ஜனாதிபதித் தேர்தல் விவகாரம் பேசுபொருளாகியிருக்கின்றது. ஜனாதிபதித் தேர்தலில் தமிழ்ப்பொது வேட்பாளர் களமிறக்கப்படுவது தென்னிலங்கை கட்சிகளைப்போன்று தமிழ்த்தேசியக் கட்சியைச் சேர்ந்த சிலருக்கும் கலக்கத்தை ஏற்படுத்தியிருக்கின்றது. அதே நேரம் இந்தப் பொதுவேட்பாளர் விவகாரத்தை குழப்பியடிப்பதற்கான சதி முயற்சியும் முன்னெடுக்கப்படுவதாக குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்படுகின்றன. தமிழ் மக்கள் கூட்டணியின் நாடாளுமன்ற உறுப்பினர் சி.வி.விக்னேஸ்வரனின் செயற்பாடுகள் தொடர்பில் பலத்த சந்தேகங்கள் எழுப்பப்படுகின்றன. கொள்கைத் தளம்பலான ஒருவர் இந்த விடயங்களை முன்னின்று செயற்படுத்துவதாகச் சொல்லிக்கொள்ளும் போது சந்தேகங்கள் எழுவது இயல்பானதே. பொதுவேட்பாளர் விவகாரத்தை ஆதரிப்பதாகக் காட்டிக்கொண்டு அதைக் குழப்பியடிப்பது தான் அவரது இலக்கா என்ற கேள்வியும் எழுகின்றது. ஏனெனில் அவரின் நடவடிக்கைகள் அப்படியானவையாகத்தான் அமைந்திருக்கின்றன. ஜனநாயக தமிழ்த் தேசியக் கூட்டணியே, ஜனாதிபதித் தேர்தலில் பொதுவேட்பாளரைக் களமிறக்கும் யோசனையை முன்வைத்தது. அது தொடர்பில் பல தரப்புகளையும் சந்தித்துக் கலந்துரையாடியிருந்தது. இதேகாலப் பகுதியில் விக்னேஸ்வரன், ‘ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க நாட்டுக்கு நல்லது செய்கிறார். அவரைத்தான் ஆதரிப்பேன்' என்று அறிக்கைவிட்டார். பின்னர் ரணில் ஏமாற்றிவிட்டார் என்று சொன்னார். திடீரென பொதுவேட்பாளர் விவகாரம் தொடர்பில் கூட்டத்தை ஒழுங்குபடுத்தினார். அது தொடர்பில் அறிக்கைகள் விடுத்தார். இந்த விவகாரத்தை முன்னெடுத்த தரப்புகளுடன் எந்தவொரு சந்திப்பையும் நடத்தாமல் தான்தோன்றித்தனமாக விக்னேஸ்வரன் விடயங்களைக் கையாள்கின்றார். இது தமிழ்ப்பொதுவேட்பாளர் விவகாரத்தை எதிர்க்கும் தரப்புகளுக்கு வாய்ப்பாக அமைந்திருக்கின்றது. ஜனாதிபதித் தேர்தலுக்கான வேட்புமனு கோரப்பட்ட பின்னர் தமிழ்ப்பொதுவேட்பாளர் யார் என்பதைப் பகிரங்கப்படுத்தலாம். விக்னேஸ்வரன் பொறுமை காக்கவேண்டும். இலங்கையிலுள்ள தமிழ்மொழி பேசும் அனைவரும் ஆதரிக்கக்கூடிய ஜனரஞ்சகமான தலைவர் ஒருவராக இருக்கவேண்டும். அப்படிப்பட்டண்டும். ஒருவரையே தமிழ்ப்பொதுவேட்பாளராக களமிறக்க வேண்டும். தமிழ்ப்பொதுவேட்பாளர் என்பது ஒரு அரசியல் தீர்மானம். எப்படி வட்டுக்கோட்டைத் தீர்மானம் காலம் கடந்தும் நிலைத்து நிற்கின்றதோ அதே போன்று தமிழ்ப்பொதுவேட்பாளர் விவகாரமும் அமையவேண்டும். நாடு முழுவதிலிருந்தும் ஆகக் குறைந்தது 15 லட்சம் வாக்குகளையாவது அவர் திரட்டிக்கொள்ளக் கூடியவராக இருக்கவேண்டும். முஸ்லிம் மற்றும் மலையக சமூகங்களின் அரசியல் தலைவர்கள் தென்னிலங்கை தரப்புகளுடன் ஒட்டிக் கொண்டிருந்து அமைச்சுப் பதவியை பெறுபவர்கள். அவர்கள் எந்தளவு தூரம் பொதுவேட்பாளர் விவகாரத்துடன் ஒத்துழைத்துச் செயற்படுவார்கள் என்பது கேள்விக்குறியானது. இவ்வாறான சூழலில் அனைத்துத் தரப்புகளுடனும் அவதானமாகவும் - நிதானமாகவும் கலந்துரையாடல் நடத்தவேண்டும். அதைவிடுத்து விக்னேஸ்வரன் போல, மின்னஞ்சலில் போதிய அவகாச மின்றி அழைப்பு அனுப்பிவிட்டு கலந்துரையாடல் நடத்த கூடாது. விக்னேஸ்வரன் தலைமை தாங்கிய எந்தவொரு விடயமும் நேர்சீராக நடைபெறவில்லை. மாகாண சபையாக இருக்கலாம் அல்லது தமிழ்மக்கள் பேரவை என்ற சிவில் அமைப்பாக இருக்கலாம் அல்லது அவரது கட்சியாக இருக்கலாம். எங்குமே அவர் ஒரே கொள்கையோடு இயங்காமையால் கடைசியில் அவையெல்லாமே குழப்பத்துக்குள் சிக்கி, செயற்றிறனை இழந்ததைக் கண்முன்னே பார்த்தோம். அப்படிப்பட்ட ஒருவர் தனது அவசரத்தனமான நடவடிக்கைகளால் தீர்க்கமான அரசியல் முடிவை குழப்பியடித்துவிடக்கூடாது என்பதே மக்களின் ஆதங்கம். (16. 04.2024-உதயன் பத்திரிகை)   https://newuthayan.com/article/அவசரத்தனங்களும்_குழப்பங்களும்...
    • இலங்கையில் தமிழர்களுக்கு மாத்திரமல்லாமல் முஸ்லிம்களுக்கும் தாய்மொழி தமிழ்தான். இதனாலேயே தமிழர்களையும் முஸ்லிம்களையும் ஒன்றிணைக்கும் முயற்சியில் தந்தை செல்வா ஈடுபட்டார். இதனால் 'தமிழ்பேசும் மக்கள்' என்ற சொல்லை தந்தை செல்வா பாவிக்கத்தொடங்கினார். இலங்கை சுதந்திரமடைந்த காலம் தொட்டு இரு தரப்பு அரசியல்வாதிகளும் தமிழ் முஸ்லிம் ஒற்றுமை பற்றிப் பேசி வருகின்றனர். தமிழ்த் தேசிய அரசியல்வாதிகளும் பல விட்டுக்கொடுப்புகளைச் செய்து தமிழ் முஸ்லிம் ஒற்றுமையை கட்டியெழுப்ப அன்றிலிருந்து இன்று வரை பாடுபட்டு வருகின்றனர். ஆனால் முஸ்லிம்களோ மொழிரீதியான பிணைப்பைக் கணக்கிலேயே எடுப்பதில்லை. அவர்கள் எப்போதுமே தம்மைத் தனியான இனமாக முன்னிறுத்துவதிலும், தமது நலன்களைப் பெற்றுக்கொள்வதிலுமே கண்ணும் கருத்துமாக இருக்கின்றனர். ஒரு சிறுபான்மை இனம் என்ற அடிப்படையில், முஸ்லிம்கள் தமது நலன்களை முன்னுரிமைப்படுத்திச் செயற்படுவதில் எவ்விதத் தவறுமில்லை என்று தமிழர்கள் கடந்துசென்றுவிடலாம். ஆனால், ஒரே மொழியைப்பேசிக்கொண்டு, சகோதர இனம் என்று சொல்லிக்கொண்டு, தமிழர்களை ஒடுக்கும் செயற்பாடுகளை முஸ்லிம்கள் மேற்கொள்வதைத்தான் ஜீரணிக்க முடியாமல் இருக்கின்றது. குறிப்பாக கிழக்கு மாகாணத்தில் கல் முனையில் முஸ்லிம்கள் தமிழர்களின் இருப்பை கேள்விக்குறியாக்கும் செயற்பாடுகளை காலாதிகாலமாக மேற்கொண்டு வருகின்றனர். இதனால் கல்முனைத் தமிழர்கள் சாட்சிக்காரனின் காலில் வீழ்வதை விட சண்டைக்காரனின் காலில் வீழ்வதே மேல் என்ற நிலைப்பாட்டுக்குத் தள்ளப்பட்டுள்ளனர். இலங்கைத்தீவை நிர்வகிப்பதற்கு 256 பிரதேச செயலர் பிரிவுகள் உருவாக்கப்பட்டுள்ளன. இந்த 256 பிரதேச செயலகங்களின் ஊடாக அந்தந்தப் பிரதேசத்துக்குரிய மக்கள் தமது தேவைகளை பூர்த்தி செய்து வருகின்றனர். இப்படிப்பட்டநிலையில், கல்முனைப் பிரதேச செயலர் பிரிவில் முஸ்லிம் பிரதேச செயலர்களே தொடர்ச்சியாக நியமிக்கப்பட்டு வந்தனர், வருகின்றனர். இவர்கள் முஸ்லிம்களுக்குச் சார்பாக நடந்து கொள்வதாக தமிழர்கள் தொடர்ச்சியாகக் குற்றஞ்சாட்டி வந்தனர். இதனால் கல்முனை பிரதேச செயலர் பிரிவு 1989 ஆம் ஆண்டு முஸ்லிம் பிரிவு, தமிழ்ப் பிரிவு என இரண்டாகப் பிரிக்கப்பட்டது. இவ்வாறு கல்முனைப் பிரதேச செயலர் பிரிவு இரண்டாகப் பிரிக்கப்பட்டபோது முஸ்லிம் பிரதேச செயலர் பிரிவு முழு அதிகாரத்துடன் செயற்படத் தொடங்கியது. தமிழ்ப் பிரிவுக்கு முழுமையான அதிகாரங்களை வழங்க விடாமல் முஸ்லிம் அரசியல்வாதிகள் ஆட்சியாளர்களுக்கு சிங்களவர்கள் அழுத்தம்கொடுத்தனர், இப்போதும் அதே அழுத்தத்தைக் கொடுத்து வருகின்றனர். கல்முனை தமிழ்ப் பிரிவு பிரதேச செயலகம் 'உதவி அரசாங்க அதிபர் பிரிவு' என்றே இன்றுவரை அழைக்கப்பட்டு வருகிறது. இதன்மூலம் அதன் அதிகாரங்கள் மட்டுப்படுத்தப்பட்டுள்ளமையை உள்ளார்ந்தமாக உணரலாம். தமிழ்ப் பிரிவுக்குரிய காணி, நிதி போன்ற விடயங்கள் முஸ்லிம் பிரிவின் கீழேயே உள்ளன. இலங்கை அரசியலில் பௌத்த பிக்குகள் தான் தீர்மானிக்கும் சக்தியாக விளங்குகின்றனர். அப்படியிருந்தும் ஞானசார தேரராலோ, சுமணரத்ன தேரராலோ கல்முனை தமிழ் பிரதேச செயலர் பிரிவை தரமுயர்த்த முடியவில்லை.சுமணரத்ன தேரர், ஞானசாரதேரர் ஆகியோரை விட முஸ்லிம் அரசியல்வாதிகளின் செல்வாக்கு கொழும்பு அரசியலில் கூடுதலான தாக்கம் செலுத்துகிறது என்பதே யதார்த்தம். கல்முனைப் பிரதேச செயலக தமிழ்ப் பிரிவை பூரண அதிகாரமுள்ள பிரதேச செயலகமாக தரமுயர்த்தக்கோரி கடந்த 35 வருடங்களாக கல்முனைத் தமிழர்கள் பல்வேறு சாத்வீகப் போராட்டங்களை முன்னெடுத்திருந்தனர். எனினும் இன்றுவரை கல்முனை தமிழர்களுக்கு நீதி கிட்டவில்லை. இந்த வருடமும் தமிழ்ப் புத்தாண்டை கல்முனைத் தமிழர்கள் கரிநாளாக அனுஷ்டித்தனர். இந்த நிமிடம் வரை கொட்டும் மழைக்கு மத்தியிலும் கல்முனைத் தமிழர்கள் தொடர் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இறுதியாக நடைபெற்ற மாகாணசபைத் தேர்தலிலும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கிழக்கு மாகாணத்தில் கூடுதலான ஆசனங்களைப் பெற்றிருந்தும், கிழக்கு மாகாண முதலமைச்சர் பதவியை முஸ்லிம் காங்கிரஸுக்கு தாரைவார்த்துக்கொடுத்தது. கிழக்கு மாகாண சபை கலைக்கப்பட்டதும் முதலமைச்சர் அஹமட் நஷீர் ‘வடக்கையும் கிழக்கையும் இணைப்பதற்கு தான் ஒருபோதும் அனுமதிக்கமாட்டேன்' என்று அறிக்கைவிட்டு, தமிழர்களின் அடிப்படைக்கோரிக்கையையே நிராகரித்தார் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பால் பதவிக்கு வந்த முதலமைச்சரான நஷீர் யுத்தம் நடைபெற்ற காலத்திலும் யுத்தம் முடிந்த பின்னரும் தமிழர்களுக்கு கிடைக்கவேண்டிய வேலை வாய்ப்புகள், உயர்கல்வி வசதிகள் போன்றவற்றை தமிழ்மொழியை பேசுகின்ற காரணத்தால் முஸ்லிம்கள் தட்டிப்பறித்து வருகின்றனர் என்றொரு குற்றச்சாட்டு பொதுவாக உண்டு. ஆனால், ஒரு பிரதேச செயலகத்தைக் கூட தரமுயர்த்த அனுமதிக்காமல், இன்னொரு சிறுபான்மையினரின் அடிப்படை உரிமைகளைக் கூடவா தட்டிப்பறிப்பார்கள்? தமிழ் அரசியல்வாதிகள் தீர்க்கமான ஒரு முடிவெடுக்கவேண்டிய தருணம் வந்து விட்டது. தமிழ் - முஸ்லிம் ஒற்றுமை என்றைக்கும் இருக்கத்தான் வேண்டும். ஆனால் அதைச் சொல்லிச் சொல்லியே முஸ்லிம்கள் எல் லாவற்றையும் பறித்தெடுக்க, நாம் மட்டும் இலவு காத்த கிளிகளாக ஏமாந்து கொண்டே இருக்கிறோம். இனியும் அவ்வாறான விட்டுக்கொடுப்புகளுக்கு இடமளிக்காமல், முதலில் தமிழர் நலன் அதன்பின்னரே தமிழ்-முஸ்லிம் ஒற்றுமை என்ற நிலைப்பாட்டுக்கு தமிழ்மக்களும், தமிழ் அரசியல்வாதிகளும் வரவேண்டும். அப்போதுதான் எஞ்சியவற்றையாவது இழக்காமல் காக்க முடியும். (17. 04.2024-உதயன் பத்திரிகை)   https://newuthayan.com/article/இனநலனா!_ஒற்றுமையா!!!
    • முடிவாய் ரணிலையும் விடுறதாக இல்லை , அவர் பணக்கார வீட்டு  பிள்ளை , சந்து பொந்தெல்லாம் போகாமலா  இருந்திருப்பார் . பழம் இருக்கிறவன் அதன் சுவையை ருசிக்கிறான் ....அம்புட்டுதான் 
    • என்ன இது எங்க போனாலும் கொழுவி இழுக்க பார்க்கிறிங்க.  சுமா வை பற்றி தெரியும் என்றால் ஏன் கோத்திரத்தை அப்படி என்று எடுக்கிறீர்கள்.  என்ன பொறுத்தவரை உயர்ந்த குலமா அப்படியா இல்லையா என்பதல்ல ஏன் ஆதங்கம். பொறுக்கித்தனம் செய்பவனை பொறுக்கி என்பதுபோல தான் இது.  தப்பான பழக்கங்களை செய்கின்ற ஆள் தப்பான குலம் அவ்வளவு தான். 
    • பிரிதலும் புனிதமானது : சிவபாலன் இளங்கோவன் மார்ச் 2024 - சிவபாலன் இளங்கோவன் · உளவியல்   சஞ்சய்குமாருக்கு அவனது அத்தைப்பெண்ணான மீராவுடன் சிறு வயதிலிருந்தே காதல். சிறுவயதென்றால் பத்தாவது, பதினொன்றாவது படிக்கும் வயதிலிருந்தே. மீரா சென்னையில் இருந்து சஞ்சயின் கிராமத்து வீட்டிற்கு வரும்போதெல்லாம் சஞ்சய் ஏகாந்த மனநிலையில் இருப்பான்.  மீராவின் அப்பா சென்னையில் வங்கி மேலாளராக இருக்கிறார். சஞ்சய்க்கு அத்தனை வசதியில்லை. மீராவிற்குச் சிறு வயதில் சஞ்சயைப் பார்க்கபோவது மகிழ்ச்சியானதாகவே இருந்தது. இருவரும் கல்லூரி செல்லும் வரை அது ஓர் இளம் பிராயத்துக் காதலாகவே தொடந்து வந்தது. மீரா கல்லூரிப் படிப்பிற்காக டெல்லி சென்றாள். அதன் பிறகு கொஞ்சம் கொஞ்சமாகச் சஞ்சயைத் தவிர்த்து வந்தாள். சஞ்சயால் இதை ஏற்றுக்கொள்ள முடியவில்லை. அடிக்கடி அவளிடம் சண்டை போட்டான். முதலில் பொறுமையாக விளக்கம் கொடுத்துக்கொண்டிருந்தவள் அதன் பிறகு அவன் ஏதாவது பேச ஆரம்பிக்கும்போதே தொடர்பைத் துண்டித்துவிடச் செய்தாள். அதன் பிறகு எத்தனை முறை அவன் கால் செய்தாலும் அழைப்பை ஏற்க மாட்டாள், இன்னொரு பொழுது அவன் அழைத்தால் எதுவும் நடந்த மாதிரியே காட்டிக்கொள்ளாமல் பட்டும் படாமல் பேசுவாள். இப்படியே மூன்று வருடங்கள் சென்றது. டெல்லியில் அவள் படிப்பை முடித்து வந்தபோது சஞ்சய் ஒரு சாதாரண கம்பெனியில் வேலைக்குச் சேர்ந்திருந்தான். அவள் வந்தவுடன் அவளிடம் திருமணம் செய்துகொள்ளலாம் எனப் பேசினான். அவள் அலட்சியமாகச் சிரித்தாள். “உனக்கு என்ன பைத்தியமா? எனக்கு 22 வயதுதான் ஆகுது, அதுக்குள்ள உன்ன கல்யாணம் பண்ணி குழந்தை பெத்துக்கணுமா?” எனக் கோபமாகக் கேட்டாள் “உனக்கு என்ன பிடிக்கல, என்கிட்ட இருந்து விலகிப் போகணும்னு நினைக்கிற, அதான் ஏதேதோ காரணம் சொல்ற” என அவனும் கோபப்பட்டான் அவள் அவனிடம் எந்த வாக்குவாதமும் செய்யவில்லை. “உன்கிட்டலாம் பேசிப் புரிய வைக்க முடியாது”  என எழுந்து சென்றாள். சஞ்சய் அவன் பெற்றோர்களைக் கட்டாயப்படுத்தி மீரா வீட்டில் பெண் கேட்க சொன்னான். மீரா அவர்களிடம் பக்குவமாகச் சொல்லி நிராகரித்தாள். “எங்க வீட்ல உன்ன கல்யாணம் பண்ண ஒத்துக்க மாட்டாங்க, முதல்ல எனக்கே இப்ப கல்யாணம் பண்ண இஷ்டம் இல்ல, நான் வெளி நாடு போய் மாஸ்டர்ஸ் படிக்கப் போறேன், எனக்கு நிறைய கனவுகள் இருக்கு” என்று அவனிடம் சொன்னாள் “யாரோ நல்ல வசதியான ஒருத்தன புடிச்சிட்ட அதான் என்ன கழட்டிவிடற” என அவளை நடுரோட்டில் எல்லார் முன்பாகவும் கத்தி அசிங்க அசிங்கமான வார்த்தைகளால் அவமானப்படுத்தி அனுப்பினான். மீரா அழுதுகொண்டே வீட்டிற்கு வந்தாள். ஆண்-பெண் உறவில் சேர்தலைப் போலவே பிரிதலையும் நாம் இயல்பானதாகக் கருத வேண்டும். சேர்தலைப் போலவே பிரிதலின் முடிவையும் மதிக்கும் பண்பை அந்தக் காதலின் நிமித்தமே வளர்த்துக்கொள்ள வேண்டும்.   ஓர் உறவில் இருந்து வெளியே போவதற்கான கதவு எப்போதும் திறந்தே இருக்கிறது என்னும் நிலையில் இருக்கும் உறவுகளே மிகவும் பக்குவப்பட்ட உறவுகளாக, பரஸ்பர அன்பை ஆத்மார்த்தமாகக் கொண்ட உறவாக இருக்கும் என்பது எனது எண்ணம். அத்தனை கதவுகளையும் பூட்டிவிட்டு எங்களது உறவு ஆத்மார்த்தமானது என்று சொல்வது நிச்சயம் அபத்தமானது. ஒரு காதல் ஏற்படுதற்கு இருவருக்கும் இருக்கும் பக்குவம், பொறுப்புகள், முதிர்ச்சி, அக மற்றும் புறச் சூழல்கள் எனப் பல்வேறு காரணங்கள் இருக்கும். இந்தக் காரணங்கள் எல்லாம் மாறக்கூடியவை. ஒருவருக்கு இருக்கும் பக்குவமும், முதிர்ச்சியும் அவரின் வயதைப் பொறுத்து மாறிக்கொண்டிருக்கும் அதே போலவே ஒருவரின் அக, புறச் சூழல்கள் தொடர்ச்சியாக மாறிக்கொண்டிருப்பவை. ஒரு காதல் தொடங்கிய தருணத்தில் இருந்த இந்தக் காரணிகள் எல்லாம் அதற்குப் பிறகு மெல்ல மெல்ல மாறிக்கொண்டிருப்பவை. காதலுக்கான காரணங்கள் நீர்த்துப்போகும்போது அங்குக் காதலும் முடிந்து போகிறது. அதை நீட்டிக்க வேண்டிய தேவை இல்லாமல் போய்விடுகிறது, அப்போது அங்குக் காதல் முடிவுக்கு வருகிறது, முடிவுக்கு வரும் காதலை ஏற்றுக்கொள்ளாமல் அதற்கான அத்தனை கதவுகளையும் அடைத்துக் கட்டாயப்படுத்தும்போது அதுவரை இருந்த காதலே கேள்விக்குறியாகிறது, பழகிய கணங்களின் மீது ஓர் ஒவ்வாமை ஏற்படுகிறது, அந்த மூர்க்கத்தனத்தைக் காதலையே மலினப்படுத்தும், சிறுமைப்படுத்தும் செயலாகவே பார்க்க முடியும். சஞ்சய்க்கும் மீராவிற்கும் இருந்தது ஓர் இளம் பிராயத்துக் காதல். சிறு வயதிலேயே துளிர் விட்ட காதல். ஒரு வகையிலான இனக்கவர்ச்சி. ஒருவர் மீதான மோகமே அந்தக் காதலுக்கு அடிப்படை. அந்த வயதில் எந்தப் பொறுப்புகளும் இல்லை, பக்குவமும் இல்லை, இலக்குகளும் இல்லை. ஒருவர் மீது ஒருவர் ஈர்ப்பாக இருப்பது மட்டுமே அந்தப் பருவத்தில் போதுமானது, அதுவும் எப்போதாவது சந்திக்கிற சில நாள்களில் மட்டும் அந்த ஈர்ப்பு இருந்தால் போதுமானது, அதுவே பரஸ்பரக் காதல் என அவர்கள் உணர்ந்து கொண்டார்கள். ஆனால் இருவரும் வளரும் போது இருவருக்கான தனிப்பட்ட அடையாளங்கள் ஆளுமைப் பண்புகள் உருவாகின்றன. எதிர்காலம் குறித்த கனவுகளும், லட்சியங்களும் உருவாகின்றன. இந்தச் சூழலில் காதலென்பது வெறும் ஈர்ப்பு மட்டுமே அல்ல, பரஸ்பரமாக ஒருவரை ஒருவர் புரிந்து கொள்வது, அவர்களின் ஆளுமைப் பண்புகளை ஏற்றுக்கொள்வது, அவர்களின் கனவுகளையும், லட்சியங்களையும் மதிப்பது. இதில் போதாமைகள் ஏற்படும்போது ஒருவர் மீதான ஒருவரின் காதல் தன்னை மறுபரிசீலனை செய்து கொள்கிறது. அந்த காதலை நீட்டிப்பதற்கான தேவைக் குறித்து கேள்வி எழுகிறது. ஒரு பிராயத்தில் ஒருவருடன் பழகிய காரணங்களுக்காகவே இந்த எதிர்பார்ப்புகளை எல்லாம் புறம் தள்ள முடியாது. மீராவின் லட்சியங்களும், கனவுகளும் சஞ்சயைப் பொறுத்த வரை தேவையில்லாதவை. மீராவிற்கு அவன் மட்டுமே பிரதானமாக இருக்க வேண்டும், மீதி அத்தனையையும் அவள் நிராகரிக்க வேண்டும் என எதிர்பார்க்கிறான். ஆனால், மீராவோ தனது விருப்பங்களுக்கும் கனவுகளுக்கும் அவன் துணை நிற்க வேண்டும், அவளின் இந்த முடிவுகளை அவன் மதிக்க வேண்டும் என நினைக்கிறாள். அப்படி அவன் இருக்கும்போதே அவனின் மீது காதலுடன் இருக்க முடியும் என அவள் உணர்கிறாள். அப்படி அவன் இல்லை மாறாக அவன் அவளை எப்போதும் கட்டுப்படுத்த நினைக்கிறான், அவன் சொல்வதற்கு மாறாக அவள் நடந்து கொள்ளக்கூடாது என நினைக்கிறான் என்பது அவளுக்கு ஏமாற்றமாக இருக்கிறது. ஏன் இந்தக் காதலைத் தொடர வேண்டும் என அவள் நினைப்பதற்கு அவனின் இந்தப் போதாமைகள் முக்கியமான காரணம். ஆனால், சஞ்சயை பொறுத்தவரை அவளின் இந்த எதிர்பார்ப்புகளைச் சிறுமைப் படுத்துகிறான். அவளுக்கு வேறு யார் கூடவோ பழக்கம் இருக்கிறது அதனாலே தன்னை நிராகரிக்கிறாள், அவளின் படிப்பிற்கும், வசதிக்கும் தன்னைத் தகுதியானவன் இல்லை என அவள் நினைகிறாள் என அவளை மலினப்படுத்துகிறான். ஒருபோதும் அவன் தனது நடவடிக்கைகள் குறித்து உணரவே இல்லை, அவளின் மீதே அத்தனை குற்றசாட்டுகளையும் சுமத்துகிறான். இது மீராவிற்கு மூச்சு முட்டவைக்கிறது, அதை அவனிடம் சொல்ல முற்படும்போது அவன் அவளைத் திருமணம் செய்து கொள்ளலாம் எனக் கட்டாயப்படுத்துகிறான். ஒரு போதும் அவன் மாறப்போவதேயில்லை என உணர்ந்து கொண்ட மீரா அவனிடம் இருந்து நிரந்தரமாகப் பிரிந்து விடும் முடிவை எடுக்கிறாள். அந்த முடிவைச் சஞ்சய் எப்படி எதிர்கொள்கிறான்? மிகவும் உணர்ச்சிவசப்பட்டு மூர்க்கமாக எதிர்கொள்கிறான். அவளின் அத்தனை வருடக் காதலைக் கொச்சைபடுத்துகிறான், அவளை மோசமாகச் சித்தரிக்கிறான் அவனது குற்றசாட்டுகளில் அவன் இத்தனை நாள்கள் அவள் மீது துளியும் காதல் கொண்டிருக்கவில்லை என்பதுதான் தெரிகிறது. இந்தப் பிரிவை எதிர்கொள்ள அவன் இன்னும் பக்குவப்பட வேண்டும். பக்குவமற்று, உணர்ச்சிவசப்பட்ட நிலையில் பிரிதலை அணுகும் போக்கு இரண்டு பாலினரிடையுமே இருக்கிறது. நவீன காதலில் பிரிதலை அணுகும் பக்குவம் கொஞ்சம் ஏற்பட்டிருக்கிறது என நினைக்கிறேன். ஆனால் சினிமாக்களும், ஊடகங்களும் காதலில் பெண்களை எதிர்மறையாகச் சித்தரிக்கும் போக்கு தொடர்ந்து கொண்டுதான் இருக்கிறது. இதன் பாதிப்பில் வளரும் இளைஞர்கள் பெண்களின் மீதான பொத்தாம்பொதுவான சில பொதுப்பார்வைகளுடன் இருக்கின்றனர் அதனால் பிரிதலை, பிரிவதற்கான முடிவைப் பெண்களுக்கான ஒன்றாகவே, பெண்களின் குணாதிசயம் என்றளவிலே புரிந்து கொள்கிறார்கள், இது பிரிதலுக்கான காரணங்களை முழுமையாக உணர்ந்து கொள்வதிலிருந்து அவர்களைத் தடுக்கிறது. ‘அந்தப் பெண் என்னை வேண்டாம் என்று சொன்னதற்கு நானும் ஒரு காரணம்’ என்பதை ஏற்றுக்கொள்வதிலிருந்து தப்பித்துக்கொள்ளலாம் என்பதால் பெண்களின் மீதான இந்தச் சித்தரிப்பைப் பெரும்பாலான ஆண்களும் மனமுவந்து ஏற்றுக்கொள்கிறார்கள். பிரிதலைப் பக்குவமாக ஏற்றுக்கொள்ளும் ஒருவரால்தான் அதற்கான காரணங்களை விருப்பு, வெறுப்புகளின்றி, முன்முடிவுகளின்றி ஏற்றுக்கொள்ளும் ஒருவரால்தான் அதுவரையிலான அந்தக் காதலில் உண்மையாக இருந்திருக்க முடியும். அப்படி இல்லாதவர்களால் அதுவரை இருந்த காதலே அர்த்தமற்றுப் போகிறது. எப்படிப் பிரிவது? “எனக்கு நல்லாவே தெரியுது, இந்த ரிலேஷன்சிப்னாலதான் நான் இவ்வளவு கஷ்டப்படுறேன், இதனால நான் நிறைய அவமானங்களைச் சந்திக்கிறேன், என்னைப் பற்றி நானே குற்றவுணர்ச்சி கொள்ற அளவுக்கு அவதிப்படறேன், இதுல இருந்து வெளிய போகணும்னு நினைக்கிறேன் ஆனால் போக முடியல, எப்படியாவது இதுல இருந்து நான் வெளிய போறதுக்கான வழிய சொல்லுங்க” தினமும் இப்படிப்பட்ட சிலரையாவது நான் எனது கிளினிக்கில் பார்த்து விடுகிறேன். எப்படிப் பிரிவது? என்பதுதான் அவர்களின் தவிப்பு. நீண்ட நாள் காதலன் தன்னை நிராகரிக்கிறான் என்பது தெளிவாகத் தெரிந்த பின்னரும் அவனை விட்டு நீங்க முடியாமல் இருப்பது, திருமணத்தைத் தாண்டிய ஓர் உறவு தவறு என்று தெரிந்த பின்னரும்கூட அதை விட்டு வெளியே போக முடியாமல் வருந்துவது, திருமணம் தரும் வலிகளில் இருந்து, வன்முறைகளில் இருந்து நிரந்தரமாகச் செல்ல முடிவு செய்து அதை ஏற்றுக்கொள்ள முடியாமல் தவிப்பது எனச் சேர்வது எப்படி என்று வருவோரைவிட, பிரிவது எப்படி என்னிடம் வருபவர்களின் எண்ணிக்கை சில நேரங்களில் அதிகமாகவே இருக்கிறது. அதுவும் நவீன காதல்களில் லிவிங்கில் இருக்கும் நிறைய இணையர்களில், தங்கள் உறவு முடிவுக்கு வருவதை ஏற்றுக்கொள்ள முடியாமல் தவிப்பவர்கள் ஏராளமானவர்கள். ஒரு பால் உறவிலும்கூடப் பிரிவை தாங்கிக்கொள்ள, ஏற்றுக்கொள்ளாமல் துயரத்தில் உழல்பவர்கள் நிறையப் பேர். இவர்கள் அனைவரின் பிரச்சினையும் ஒன்றே ஒன்று தான், பிரிவு தரும் வலியைத் தாங்க முடியாமல் இருப்பதே! ஓர் ஆத்மார்த்தமான உறவு என்பது எப்போதும் நம்மைப் பற்றியான நமது மதிப்பீட்டை உயர்வாகத்தான் கொண்டிருக்கும், எத்தனையோ முரண்பாடுகள் இருந்தாலும் ஒருவர் மீதான மதிப்பு என்பது மாறாமல் இருக்கும், பிறரின் முன்னிலையில் தனது இணையைப் பெருமிதமாகவே காட்டிக்கொள்ள விளைவார்கள். தனது இணை அவமானப்படுவதையோ அல்லது குற்றவுணர்ச்சி கொள்வதையோ ஒர் ஆத்மார்த்த காதலில் உள்ளவர்கள் நிச்சயம் விரும்ப மாட்டார்கள். ஓர் உறவின் விளைவாக நான் தாழ்வு மனப்பான்மை கொண்டாலோ, அவமானப்பட்டாலோ, குற்றவுணர்ச்சி கொண்டாலோ அந்த உறவு ஆத்மார்த்தமானதாக இல்லையென்று பொருள். அப்படிப்பட்ட உறவு இருவரையும் எப்போதும் காயப்படுத்திக்கொண்டேதான் இருக்கும், அப்படிப்பட்ட உறவை முடிவுக்குக் கொண்டு வருவதன் வழியாகவே அந்த உறவையும், அதில் உள்ளவர்களையும் காப்பாற்ற முடியும்.  அப்படிப்பட்ட உறவில் இருந்து பிரிய வேண்டும் என்ற முடிவு எடுக்கும்போது முதலில் அந்த முடிவில் உறுதியாக இருக்க வேண்டும். பிரிவதற்கான படிநிலைகள்: பிரிவதற்கான காரணங்களை உணர்வது பிரிவதற்கான முடிவைப் பரஸ்பரமாக எடுப்பது முடிவை ஏற்றுக்கொள்வது பிரிவின் வலியைக் கடந்து வருவது பிரிவில் இருந்து முழுமையாக வருவது பிரிய வேண்டும் என முடிவுசெய்துவிட்டால் அதற்கான காரணங்களை இருவரும் நிதானமாக, பரஸ்பரக் குற்றசாட்டுகள் இன்றி நிதானமாக உரையாட வேண்டும். ஏன் இதைத் தொடர வேண்டாம் என்பதை அத்தனை முதிர்ச்சியாக இருவரும் விவாதித்து முடிவெடுக்க வேண்டும். நிறைய நேரங்களில் பிரிய வேண்டும் என ஒருவர் மட்டுமே முடிவு செய்து விட்டு அதை இன்னொருவரிடம் தெரிவிக்காமல் அவரே புரிந்து கொள்ளட்டும் என அவரை அலட்சியம் செய்யும் போதுதான் நிறைய பிரச்சினைகள் வருகின்றன அது இந்தப் பிரிதலை இன்னும் சிக்கலாக்குகிறது. ஓர் உறவில் நாம் இருக்கும் போது அதை தொடர வேண்டாம் என நினைத்தால் அதற்கான காரணங்களைத் தெரிந்து கொள்ளக்கூடிய உரிமை இன்னொருவருக்கு இருக்கிறது, அதனால் அந்த முடிவைத் தெளிவாக இணையருக்கு தெரிவிக்கவேண்டிய கடமை அந்த முடிவை எடுத்தவருக்கு இருக்கிறது. அவர் அந்தக் காரணங்களை ஏற்றுக்கொள்கிறாரோ இல்லையோ அதைச் சொல்ல வேண்டியது ஒருவரின் பொறுப்பு. அதே போல நிறைய நேரங்களில், பிரியலாம் என்ற முடிவை எடுத்த பின்பும் அதை ஏற்றுக்கொள்வதில் இருக்கும் தயக்கம் அந்தப் பிரிவைச் சிக்கலாக்கும். பல்வேறு காரணங்களால் பிரிய வேண்டும் என்ற முடிவை எடுத்த பின், அதை இன்னொருவரிடம் தெளிவாகத் தெரிவித்த பிறகு அந்த முடிவை ஏற்றுக்கொள்ள வேண்டும். “இல்லை நான் இன்னும் முழுமையாகப் பிரியவில்லை, நாளைக்கேகூட அவர் திரும்ப என்னிடம் பேசுவதற்கு வாய்ப்பிருக்கிறது, அப்படிப் பேசினால் திரும்பவும் அத்தனையும் தொடரும்” எனச் சாத்தியமற்ற எதிர்பார்ப்புகளை மீண்டும் மீண்டும் கொண்டிருப்பதால் அந்தப் பிரிவைச் சார்ந்த துயரம் இன்னும் பலமடங்காகும். ஓர் இழப்பை, அது இழப்பென்று ஏற்றுக்கொண்டால் மட்டுமே அந்த இழப்பில் இருந்து நம்மால் வெளியே வர முடியும். இல்லை நான் இழக்கவில்லை என நமக்கு நாமே சமாதானம் செய்து கொண்டிருந்தால் அந்த இழப்பில் இருந்து வெளியே வரும் காலமும் அதிகமாகும், காயமும் அதிகமாகும். பிரிதல் என்பது நினைவுகளாலானது. ஒருவரை விட்டு ஒருவர் நீங்கும்போது அவரைச் சார்ந்த நினைவுகளும், அவருடன் இருந்த கணங்களின் நல்லுணர்வுகளும் ஒருவரை ஆழ்ந்த துயரத்தில் ஆழ்த்தும். அந்தத் துயரத்தை தவிர்க்க முடியாது. அந்தத் துயரமே அத்தனை காலக் காதலின் அடையாளம். அதை ஒருவர் கடந்துதான் வரவேண்டும். “என்னால அவளோட நினைவுகளை தாங்கிக்க முடியல,ரொம்ப கஷ்டமா இருக்கு, ஏதாவது மாத்திரை இருந்தா கொடுங்க, அவள மறக்கற மாதிரியான மாத்திரை” என நிறையப் பேர் கேட்பார்கள். ஒருவரை மறப்பதற்கான மாத்திரை என்பது உலகத்தில் இதுவரையிலும் கண்டுபிடிக்கவில்லை, அப்படி ஒரு மாத்திரை இருந்தால் உலகத்திலேயே அதிக விலையுள்ள மாத்திரை அதுவாகத்தான் இருக்கும். பிரிவு என்பது துயரமானதே. அந்தத் துயரத்தைக் கடந்து வருவதே ஒரு பிரிவின் உண்மையான சவால். கடந்து வர எவ்வளவு நாள் ஆகும் என்பது உங்கள் காதலை, உங்கள் முதிர்ச்சியை, பிரிவை ஏற்றுக்கொண்ட பக்குவத்தை அடிப்படையாக்க் கொண்டது. முழுமையாகப் பிரிவதுதான் பிரிவை இன்னும் இலகுவாக்கும். “நான் கொஞ்சமாக அவனிடம் இருந்து வெளியே வந்துவிடலாம் என இருக்கிறேன், திடீரென நான் பேசுவதை நிறுத்திக்கொண்டால் அவன் தாங்க மாட்டான், அதுவே நான் அவனிடம் இருந்து சிறிது சிறிதாக விலகினால் அவன் புரிந்துகொள்வான்” என்று ஒரு பெண் என்னிடம் சொன்னாள். நிறையப் பேருக்கும் பிரிதலையொட்டி இந்த நிலைப்பாடே இருக்கும். மதுவை எப்படிக் கொஞ்சம் கொஞ்சமாக விட முடியாதோ அதே போலவே ஒரு காதலையும் கொஞ்சம் கொஞ்சமாக விட முடியாது.  தொடர வேண்டாம் என முடிவு செய்து விட்டால் அதில் முழுமையாக இருந்தால் வெளியே வர முடியும். இடையிடையே பேசிக்கொண்டு, பார்த்துக்கொண்டு, ஒருவரை ஒருவர் கண்காணித்துக்கொண்டு இருந்தால் பிரிவு சிக்கலானதாக நிறையக் காயப்படுத்துவதாக, மனவுளைச்சல் கொடுக்கக்கூடியதாக இருக்கும். “நான் அவ கூட ரொம்ப இண்டிமேட்டா இருந்துட்டேன், செக்ஸ் கூட வச்சிகிட்டோம், ஆனால் இனி அப்படி இல்லாம வெறும் ஃபிரண்ட்ஸா மட்டும் இருக்கலாம்னு இருக்கேன்” என அந்த இளைஞன் சொன்ன போது. அப்படி இருப்பதற்கான வாய்ப்புகள் குறைவு எனச் சொன்னேன். ஓர் உறவு ஒரு கட்டத்தை அடைந்துவிட்டால் அதற்கு பிறகு அதன் முந்தைய நிலைக்குக் கொண்டு வந்து அதை நிறுத்துவது கடினம். தினமும் காலையில் இருந்து மது அருந்தும் ஒருவன் திடீரென ஒரு நாள் வந்து இனி நான் வாரத்திற்கு ஒருமுறை மட்டுமே மது அருந்துவேன் எனச் சொல்லும் போது அது எப்படிச் சாத்தியமில்லையோ அதே போலவே ஓர் உறவை அதன் முந்தைய நிலைகளுக்கு ஒருபோதும் எடுத்து வர முடியாது. பிரியவேண்டும் என முடிவெடுத்தால் அதில் உறுதியாகவும், முழுமையாகவும் இருந்தால் மட்டுமே பிரிய முடியும். ஓர் உன்னதமான உறவு என்பது எத்தனைக் காலம் அது நீடித்தது என்பதில் மட்டும் இல்லை, ஒருவேளை அது ஒரு முடிவுக்கு வந்தால் அந்தப் பிரிவின் முடிவை எத்தனை காதலுடன் அதை அணுகியது என்பதில்தான் இருக்கிறது. பிரிதலின் வழியாகவே நாம் அதிலிருந்த காதலை முழுமையாக உணர முடியும்.   https://uyirmmai.com/article/uyirmmai-magazine-march-2024-article-05/
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.