Jump to content

புலம்பெயர் விடுதலைப்புலி உறுப்பினர்களே இலங்கை மீது விசாரணை கோருகின்றனர்! பங்களாதேஷ் வெளிவிவகார அமைச்சர்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

வெளிநாடுகளுக்குப் புலம்பெயர்ந்த விடுதலைப்புலி உறுப்பினர்களே இலங்கை மீது சர்வதேச விசாரணையைக் கோருகின்றனர் என்று பங்களாதேஷ் வெளிவிவகார அமைச்சர் ஏ.கே.அப்துல் மொமென் தெரிவித்துள்ளார்.

இம்மாதம் 5 ஆம் திகதி ஆரம்பமாகவுள்ள ஜி - 8 மாநாடு தொடர்பில் இன்று நடைபெற்ற இணையவழி ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இதனைக் கூறியுள்ளார்.இதன்போது அவர் மேலும் தெரிவித்ததாவது,

போர் தொடர்பான சுய விசாரணைகளை இலங்கை மேற்கொண்டுள்ளது.இலங்கை மீதான ஐ.நா. தீர்மானத்துக்கு எதிராக பங்களாதேஷ் வாக்களித்தமைக்குப் பல நியாயப்படுத்தல்கள் உள்ளன.

அயல் நாடுகளுக்கு ஆதரவு வழங்குவதோடு, அரசியல் ரீதியான தீர்மானங்களுக்கு ஆதரவு வழங்காமல் இருக்கும் வெளியுறவுக் கொள்கையையே பங்களாதேஷ் பின்பற்றுகின்றது.

இலங்கையின் வடக்கு, கிழக்கு மாகாணங்களில் இந்து தமிழர்களுக்கு ஒரு சுயாதீன நிலத்துக்காகப் போராடிய, போர்க்குணம் மிக்க, பிரிவினைவாத குழுவே தமிழீழ விடுதலைப்புலிகள்.

விடுதலைப்புலிகள் பயிற்சிபெற்ற இராணுவம் மற்றும் கடற்படைகளைக் கொண்டிருந்தது.அவ்வாறாயின் அது ஒரு போராட்டக்குழு.

விடுதலைப்புலிகளின் அதிகமான உறுப்பினர்கள் வெளிநாடுகளுக்குப் புலம்பெயர்ந்துள்ளனர். இப்போது, இதுபோன்ற விசாரணைகளுக்கான கோரிக்கைகளையும் அவர்களே முன்வைத்து வருகின்றனர் என்றும் தெரிவித்துள்ளார்.

https://www.tamilwin.com/politics/01/272189?ref=home-feed

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

விடுதலைபுலிகள் தொடர்பில் பங்களாதேஷ் அமைச்சர் வெளியிட்ட சர்ச்சைக்குரிய கருத்திற்கு மனோ கணேசன் பதில்

புலம்பெயர்ந்த விடுதலைப்புலி உறுப்பினர்களே இலங்கை மீது சர்வதேச விசாரணையைக் கோருகின்றனர் என்று பங்களாதேஷ் வெளிவிவகார அமைச்சர் ஏ.கே.அப்துல் மொமென் கூறியிருந்த நிலையில் அதற்கு நாடாளுமன்ற உறுப்பினர் மனோ கணேசன் பதில் வழங்கியுள்ளார்.

இது குறித்து தனது பேஸ்புக் பக்கத்தில் விடுத்துள்ள பதிவில் தெரிவித்துள்ளதாவது,

“பங்களாதேஷ் வெளிவிவகார அமைச்சர் அப்துல் மொமென், ஐநா மனித உரிமை ஆணையகத்தில் இலங்கைக்கு ஆதரவான தமது நாடு எடுத்த நிலைப்பாட்டை நியாயப்படுத்தி இருக்கின்றார்.

அதற்கான உரிமை அவருக்கு உண்டு. வங்காள தேசம், நான் விரும்பி மதிக்கும் ஒரு தெற்காசிய நாடு.

வங்கதேசம் இன்று கொள்கைரீதியாக ஒரு மதசார்பற்ற நாடாக செயல்படுகிறது. பொருளாதார வளர்ச்சியில் முன்மாதிரி நாடாக முன்னேறுகிறது.

இங்கே விசித்திரம் என்னவென்றால், அமைச்சர் மொமென், இலங்கை தமிழர் பற்றி சொல்கின்ற சில விவரணங்கள்தான்.

சர்வதேச விசாரணையை வெளிநாட்டில் வாழும் புலிகள்தான் கோருவதாக கூறுகிறார். அடுத்தது, புலிகள் ஒரு “தமிழ் இந்து” நாட்டை உருவாக்க போராடியதாகவும் கூறுகிறார்.

“இந்து” நாட்டை உருவாக்க போராடி இருந்தால் இந்திய “இந்து'” கட்சியான, பாரதீய ஜனதா கட்சியின் ஆதரவை பெற்றிருப்பார்கள். அப்படி ஒன்றும்’ அன்றும் இல்லை. இன்றும் இல்லையே.

உண்மையில் புலிகள் இயக்கத்தின் மீது தமிழ் இந்து மத தலைவர்களை விட, தமிழ் கத்தோலிக்க மத தலைவர்களின் செல்வாக்கே அதிகம் இருந்தது.

குறிப்பாக போர்க்கால மனித உரிமை மீறல்கள் தொடர்பில், தமிழ் கத்தோலிக்க மத தலைவர்கள் உரத்து குரல் எழுப்பினர். அதற்கு உதாரணம் இன்று நம்மை பிரிந்து விட்ட ஆயர் இராயப்பு.

இதற்காக அவர் கத்தோலிக்க மெல்கம் ரஞ்சித் பேராயருடனேயே முரண்பாட்டார். ஆகவே இலங்கையில் தமிழர் போராட்டம் தொடர்பில் எப்போதும் போல் இன்னமும் இந்த “புரிதல் சிக்கல்” விடாமல் தொடருகிறது.

 

https://www.meenagam.com/விடுதலைபுலிகள்-தொடர்பில/

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.