Jump to content

சீனா அடக்கப்படுமுன் ஒடுங்கிப் போய்விடுமா? – வேல் தர்மா


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

சீனா அடக்கப்படுமுன் ஒடுங்கிப் போய்விடுமா? – வேல் தர்மா

 
AA_1-696x428.jpg
 85 Views

2021 மார்ச் மாதம் 25ஆம் திகதி அமெரிக்க அதிபர் ஜோ பைடன் நடத்திய தனது முதலாவது ஊடகவியலாளர் மாநாட்டில் மக்களாட்சி நாடுகள் தனியொருவராட்சி நாடுகளுக்கு எதிராக ஒன்றுபட வேண்டும் என அறைகூவல் விடுத்தார். தனியொருவராட்சியின் கீழ் உள்ள நாடுகள் உலகின் முன்னணி நாடுகளாக, செல்வந்தமிக்க நாடுகளாக, வலிமை மிக்க நாடுகளாக உருவெடுக்க முயல்கின்றன. நான் பதவியில் இருக்கும்வரை அதை நடக்க அனுமதிக்கமாட்டேன் என்று சூழுரைத்தார் பைடன். சீனாவின் பொருளாதார மேம்பாடு, தொழில்நுட்ப வளர்ச்சி, படைவலிமைப் பெருக்கம் ஆகியவை அடக்கப்பட வேண்டும்என அமெரிக்க கொள்கை வகுப்பாளர்கள் கருதுகின்றனர். கோவிட்-19 தொற்று நோய்க்குப் பின்னர் அமெரிக்காவினதும் சீனாவினதும் பிரதிநிதிகள் அமெரிகாவின் வடதுருவ மாகாணமான அலஸ்க்காவில் 2021 மார்ச் மாதம் 19ஆம், 20ஆம் திகதிகளில் நேரில் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினர். பேச்சுவார்த்தை இரு நாடுகளுக்குமிடையிலான வர்த்தகப் போரை தணிக்கும் நோக்கத்துடன் நடத்தப்பட்டது. பேச்சுவார்த்தை சுமுகமாக நடைபெறவில்லை. பேச்சுவார்த்தை முடிந்த பின்னர் ஒருவரை ஒருவர் வார்த்தைகளால் சாடிக் கொண்டனர்.

வர்த்தகப் போர்

சீனா அமெரிக்காவிற்கு அதிக அளவு ஏற்றுமதியை செய்து அமெரிக்கர்களின் வேலை வாய்ப்புக்களை பறிப்பதால் சீனாவில் இருந்து இறக்குமதி செய்யும் பொருட்கள் பலவற்றிற்கு விதிக்கப்படும் இறக்குமதி வரியை அமெரிக்கா அதிகரித்தது. அதற்கு போட்டியாக சீனாவும் அமெரிக்காவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்கள் மீது தனது வரியை அதிகரித்தது. இப்படி இரண்டு நாடுகள் போட்டி போட்டுக் கொண்டு இறக்குமதிகளை அதிகரிப்பதை வர்த்தகப் போர் என்பர். டொனால்ட் டிரம்ப் அமெரிக்க அதிபர் பதவியில் இருக்கும் போது சீனாவின் பொருளாதார மற்றும் தொழில்நுட்ப வளர்ச்சி அமெரிக்காவின் பாதுகாப்பிற்கும், உலக ஆதிக்கத்திற்கும் அச்சுறுத்தலாக அமையும் என முடிவு செய்யப்பட்டது. டிரம்பின் தேசியப் பாதுகாப்பு கேந்திரோபாய அறிக்கையில் சீனா அமெரிக்கா கட்டியெழுப்பிய அமெரிக்காவை சுற்றிய உலக ஒழுங்கை இல்லாமற் செய்து தனக்கு சாதகமான ஓர் உலக ஒழுங்கை கட்டி எழுப்ப முயல்கின்றது எனக் குறிப்பிடப்பட்டிருந்தது.

தொழில்நுட்பப் போர்

industryweek_28143_11__semiconductors_an

தொழில்நுட்பத்தின் இருதயமாக இருப்பவை குறைகடத்திகளாகும் (Semicondutors) இவற்றை Chips எனவும் அழைப்பர் குறை கடத்தி உற்பத்தியில் முன்னணியில் இருப்பவை அமெரிக்காவும் தைவானுமாகும். சீனாவின் தொழில்நுட்ப வளர்ச்சிக்கு தடை போட அமெரிக்காவும் தைவானும் சீனாவிற்கு ஏற்றுமதி செய்யப்படும் குறைகடத்திகள் மீது கட்டுப்பாடு விதித்துள்ளன. அத்துடன் இத் தொழில்நுட்பத்தில் அமெரிக்காவிற்கும் சீனாவிற்கும் இடையில் உள்ள இடைவெளியை அமெரிக்காவிற்கு சாதகமாக அதிகரிப்பதற்கு குறைகடத்தி உற்பத்தித் துறையின் மேம்பாட்டிற்கு அமெரிக்கா 3.4பில்லியன் நிதியை ஒதுக்கியது. ஏற்கனவே சீனா இத்துறையில் அமெரிக்காவிலும் பார்க்க பத்து ஆண்டுகள் பிந்தங்கியுள்ளது.

சீனாவின் படைத்துறையை அடக்குவது

1605662730128009.jpg

முதலில் சீனப் படைத்துறை உலகிலேயே அதிக அளவு எண்ணிக்கையுள்ள படையினரைக் கொண்டதாக உருவாக்கப்பட்டது. பின்னர் சீனா அமெரிக்காவின் பாரிய கடற்படையை எதிர் கொள்ள நீர்மூழ்கிக் கப்பல்களில் அதிக கவனம் செலுத்தி அதிக எண்ணிக்கையான நீர்மூழ்கிக் கப்பல்களைக் கொண்ட நாடாக உருவானது. பின்னர் உலகிலேயே எண்ணிக்கை அடிப்படையில் அதிக கடற்கலன்களை கொண்ட கடற்படை மேம்படுத்தப்பட்டது. இருந்தும் அமெரிக்கா தனது கடற்படை வலிமையை தொழில்நுட்ப அடிப்படையில் மேம்படுத்திக் கொண்டே போகின்றது. அமெரிக்காவிடம் பத்து விமானம் தாங்கிக் கப்பல்கள் உள்ளன. அவற்றில் ஐந்தாம் தலை முறைப் போர்விமானங்களும் உள்ளன. சீனாவின் இரண்டு விமானம் தாங்கிக் கப்பல்களும் தாக்கு திறன் அடிப்படையில் மிகவும் பிந்தங்கியவையே. ஒரு விமானம் தாங்கிக் கப்பலை பாதுகாக்கக்கூடிய நாசகாரிக் கப்பல்கள் சீனாவிடம் இல்லை. இதனால் சீனா தனது ஏவுகணை உற்பத்தியில் அதிக கவனம் செலுத்தி ஒலியிலும் பார்க்க இருபது மடங்கு வேகத்தில் பாயக் கூடிய ஹைப்பர்சோனிக் ஏவுகணைகளை உருவாக்கியது. இவற்றை அமெரிக்க ஏவுகணை எதிர்ப்பு முறைமைகளால் இடை மறித்து அழிக்க முடியாது என்ற நிலை உருவானது. இதனால் அமெரிக்க விமானம் தாங்கிக் கப்பல்கள் செல்லாகாசாகி விட்டன என்று படைத் துறை ஆய்வாளரகள் சிலர் கருத்து வெளியிட்டனர். சீனாவின் ஹைப்பர் சோனிக் ஏவுகணைகளை இலகுவாகவும் மலிவாகவும் இடைமறித்து அழிக்கும் லேசர் படைக்கலன்களை அமெரிக்கா உருவாக்கி விட்டது.

pic.jpg

சீனாவா அமெரிக்காவா வலிமையானது?

படைத்துறையில் சீனாவா அமெரிக்காவா வலிமையானது என்ற கேள்விக்கு தைவானின் நிலைதான் பதிலாக அமையும். சீனா எப்போது தைவானை தன்னுடன் இணைக்கின்றதோ அன்று சீனா அமெரிக்காவை மிஞ்சி விட்டது என்று சொல்லலாம். தைவானைக் கைப்பற்றுவது இரண்டு வகையில் சீனாவிற்கு நன்மையளிக்கும். ஒன்று தைவானின் தொழில்நுட்ப வளர்ச்சியை சீனா பெறலாம். இரண்டாவது பதினைந்து ஆழ்கடல் துறைமுகங்களைக் கொண்ட தைவானை சீனா கைப்பற்றினால் அதன் கடற்படை வலிமை மிகவும் அதிகமாகும். பசுபிக் பிராந்தியத்தில் சீனா அமெரிக்காவிற்கு அச்சுறுத்தல் கொடுக்கக்கூடிய நாடாக மாறும். சீனா அமெரிக்காவின் தொழில்நுட்பங்களை இணைய வெளியூடாக ஊடுருவி திருடி தனது போர்விமானங்களை உற்பத்தி செய்கின்றது என அமெரிக்காவில் இருந்து குற்றச்சாட்டுகள் எழுகின்றன. சீனா பல விமானங்களை உற்பத்தி செய்தாலும் விமான இயந்திர உற்பத்தியில் இன்னும் வளர்ச்சி அடையவில்லை. இயந்திர உற்பத்தி தொழில்நுட்பத்தை பிரதி பண்ணுவது (காப்பியடிப்பது) மிகவும் கடினமானது. அதனால் சீன விமானப்படை அமெரிக்க வான்படையிலும் பார்க்க வலிமை குறைந்ததே. சீனாவைச் சுற்றியுள்ள பிராந்தியத்தில் அமெரிக்க சீனப் போர் நடந்தால் முதலில் இரு நாடுகளும் பெரும் இழப்புக்களைச் சந்திக்கும். அதில் அமெரிக்க இழப்பு அதிகமாக இருக்கும். ஆனால் உலகின் பல்வேறு பகுதிகளில் இருந்து அமெரிக்கப் படையினர் சீனாவை நோக்கி நகர்த்தப்படும் போது சீனா பாரிய இழப்பைச் சந்திக்கும்.  அமெரிக்கா தோற்கடிக்கப்படுவது தமது பாதுகாப்பிற்கு அச்சுறுத்தல் என்பதால் ஜப்பான், தென் கொரியா, அவுஸ்திரேலியா இந்தியா, வியட்னாம் போன்ற நாடுகள் சீனாவிற்கு எதிராக போர் புரியும். அப்போது சீனா தோற்கடிக்கப்படும். அடுத்த பத்து ஆண்டுகளுக்கு இந்த நிலை இருக்கும். அதேவேளை அடுத்த பத்து ஆண்டுகளில் சீனாவிற்கு எதிரான ஒரு படைத்துறைக் கூட்டமைப்பு அமெரிக்கா, ஜப்பான், தென்கொரியா, வியட்னாம், அவுஸ்திரேலியா, இந்தியா, தாய்லாந்து, இந்தோனேசியா போன்ற நாடுகளைக் கொண்டு உருவாகும். அப்போது சீனா அடங்கிப் போக வேண்டிய நிலை ஏற்படும்.

சீனா ஒடுங்கியும் போகலாம்

41fp120313a763-60297697.jpg

சீனா கடைப்பிடித்த ஒரு குடும்பத்திற்கு ஒரு பிள்ளை என்ற கொள்கை அதன் மக்கள் தொகைக் கட்டமைப்பில் பாரிய தாக்கத்தை இப்போது ஏற்படுத்திக் கொண்டிருக்கின்றது. சீனாவின் மக்கள் தொகையில் வயோதிபர்களின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டும் இளையோரின் தொகை குறைந்து கொண்டும் செல்கின்றது. இது பாரிய பொருளாதாரத் தாக்கத்தை ஏற்படுத்தப் போகின்றது. அது மட்டுமல்ல படைத்துறையிலும் ஆளணிப் பற்றாக் குறை ஏற்படலாம். இதனால் சீனா தானாகவே ஒடுங்கலாம்.

 

https://www.ilakku.org/?p=46186

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • முதலிலேயே சொல்லிவிட்டார்தானே
    • நெடுக்காலபோவான், இவை நீங்களே எடுத்த படங்கள் என்று மட்டும் சொல்லிவிடாதீர்கள்.  கேடுகெட்ட சொறிலங்காவுக்குள் உங்களைப் போன்ற மானமுள்ள வீரப் புலம்பெயர்ந்த தமிழர் யாராவது கால் வைப்பார்களா ? நினைக்கவே கால் கூசுகிறது. 😂
    • 29 MAR, 2024 | 10:23 AM   காசாவிற்குள் தடையற்ற விதத்தில் உணவுப்பொருட்களையும் மருந்துப்பொருட்களையும் இஸ்ரேல் அனுமதிக்கவேண்டும் என சர்வதேச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. காசாவிற்குள் தடையற்ற விதத்தில் உணவுப்பொருட்களையும் மருந்துப்பொருட்களையும் இஸ்ரேல் அனுமதிக்கவேண்டும் என சர்வதேச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அவசரமாக தேவைப்படும் அத்தியாவசியபொருட்கள் மற்றும் மனிதாபிமான உதவிகளை காசாவிற்குள் அனுமதிப்பது தொடர்பில் இஸ்ரேல் உடனடியாக செயற்படவேண்டும் என சர்வதேச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. காசாவில் அடுத்த சில வாரங்களில் கடும் பட்டினி நிலைமை உருவாகலாம் என் எச்சரிக்கை வெளியாகியுள்ள நிலையில் சர்வதேசநீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது. காசா பட்டினி ஆபத்தினை எதிர்கொள்ளவில்லைமாறாக அந்த நிலைமை ஏற்கனவே உருவாகிவிட்டது என தெரிவித்துள்ள சர்வதேச நீதிமன்றம் மந்தபோசாக்கு போன்றவற்றினால் 27 சிறுவர்கள் உட்பட 31 பேர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டனர் என ஐநா நிபுணர்கள் தெரிவித்துள்ளதை சுட்டிக்காட்டியுள்ளது. மனிதாபிமான உதவிகள் வர்த்தக பொருட்கள் காசாவில் நுழைவதை இஸ்ரேல் கடுமையாக கட்டுப்படுத்தியமையும்   பொதுமக்கள் இடம்பெயர்வு மற்றும் உட்கட்டமைப்புகள் அழிக்கப்பட்டமை போன்ற காரணங்களாலேயே காசாவில் பட்டினி நிலை  உருவாகியுள்ளது என ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளர் தெரிவித்திருப்பதையும் சர்வதேச நீதிமன்றம்  சுட்டிக்காட்டியுள்ளது.   காசாவில் அடுத்த சில வாரங்களில் கடும் பட்டினி நிலைமை உருவாகலாம் என் எச்சரிக்கை வெளியாகியுள்ள நிலையில் சர்வதேசநீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது. காசா பட்டினி ஆபத்தினை எதிர்கொள்ளவில்லைமாறாக அந்த நிலைமை ஏற்கனவே உருவாகிவிட்டது என தெரிவித்துள்ள சர்வதேச நீதிமன்றம் மந்தபோசாக்கு போன்றவற்றினால் 27 சிறுவர்கள் உட்பட 31 பேர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டனர் என ஐநா நிபுணர்கள் தெரிவித்துள்ளதை சுட்டிக்காட்டியுள்ளது. மனிதாபிமான உதவிகள் வர்த்தக பொருட்கள் காசாவில் நுழைவதை இஸ்ரேல் கடுமையாக கட்டுப்படுத்தியமையும்   பொதுமக்கள் இடம்பெயர்வு மற்றும் உட்கட்டமைப்புகள் அழிக்கப்பட்டமை போன்ற காரணங்களாலேயே காசாவில் பட்டினி நிலை  உருவாகியுள்ளது என ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளர் தெரிவித்திருப்பதையும் சர்வதேச நீதிமன்றம்  சுட்டிக்காட்டியுள்ளது. https://www.virakesari.lk/article/179954
    • தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாக 2000 ரூபாவை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் - கிட்ணண் செல்வராஜ் Published By: VISHNU   29 MAR, 2024 | 01:56 AM 1700 ரூபா எனும் வசனத்தை ஒதுக்கி வைத்துவிட்டு தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாக 2000 ரூபாவை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென அகில இலங்கை தோட்டத் தொழிலாளர் சங்கத்தின் தலைவர் கிட்ணண் செல்வராஜ் தெரிவித்தார். சம்பள விவகாரம் தொடர்பில் பெருந்தோட்டத்  தொழிலாளர்களை தெளிவூட்டும் வகையில் இன்று வியாழக்கிழமை (28) ஹப்புத்தளை பிட்டரத்தமலையில் துண்டு பிரசுரங்கள் விநியோகிக்கப்பட்டன. அகில இலங்கை தோட்டத் தொழிலாளர் சங்கம் இதனை ஏற்பாடு செய்திருந்தது.  இதன்போதே அகில இலங்கைத் தோட்டத் தொழிலாளர் சங்கத்தின் தலைவர் கிட்ணன் செல்வராஜ் மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில், “சம்பள நிர்ணய சபைக்கு 2000 ரூபா அடிப்படை சம்பளத்தை வழங்குவதற்கு ஏதுவான பிரேரணை கொண்டுசெல்லப்பட வேண்டும். அவ்வாறு கொண்டு செல்லும் பொழுது அகில இலங்கை தோட்டத் தொழிலாளர் சங்கமாகிய நாங்கள் முழுமையான ஆதரவினை தருவோம். அதைவிடுத்து 1700 ரூபாவுக்குள் தோட்டத் தொழிலாளர்களின் சம்பளத்தை வரையறுக்கக் கூடாது. நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதிக்கு ஒரு நாளைக்கு 1700 ரூபாவை சம்பளமாக வழங்கினால் போதுமா? அதுப்போல அரசியல்வாதிகளுக்கு நாட்சம்பளமாக 1700 ரூபா வழங்கினால் போதுமா?  அதனால் 1700 ரூபா என்ற வசனத்தை ஒதுக்கி வைத்துவிட்டு, தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாக 2000 ரூபாவை வழங்குவதற்கு ஏதுவான நடவடிக்கைகளை அரசாங்கமும், அரசாங்கத்தோடு தூணாகவிருக்கும் மலையகத்தின் பினாமி அமைச்சரும் தொழிற்சங்கத் தலைவர்களும் உடனடியாக முன்னெடுக்க வேண்டும்.” என்று மேலும் தெரிவித்தார். https://www.virakesari.lk/article/179943
    • Published By: VISHNU   29 MAR, 2024 | 01:27 AM கிராமிய வீதிகள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சின் நிதி ஒதுக்கீட்டின் கீழ் கிளிநொச்சி பாரதிபுர செபஸ்ரியார் வீதியின் பாலம் புனரமைத்தலுக்கான அடிக்கல் நாட்டு விழா வியாழக்கிழமை (28) இடம்பெற்றிருந்தது. குறித்த நிகழ்வில்  கிராமிய வீதிகள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன், யாழ்ப்பாண மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதன், வன்னி பாராளுமன்ற உறுப்பினர் திலீபன், ஒப்பந்ததாரர்கள், பிரதேச செயலாளர்கள், கிராம மக்கள் மற்றும் வீதி அதிகார சபை உத்தியோகத்தர்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர். இந்நிகழ்வில் கிராமிய வீதிகள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் அவர்களினால் பாலம் புனரமைப்புக்கான திரைநீக்கம் செய்யப்பட்டு பின் பால புனரைப்புக்கான அடிக்கல்லும் நாட்டி வைத்தார்.குறித்த பாலமானது 15,329,888.18 நிதி பங்களிப்பில் 90நாட்கள் ஒப்பந்த அடிப்படையில் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. அத்துடன் கண்டாவளை பிரதேச செயலாளர் பிரிவுக்கு உட்பட்ட கல்மடு நகர் பகுதியில் அமைந்துள்ள மூலிகைப் பண்ணையின்  பிரதான வீதியினை புனரமைப்பதாகவும் அதற்குரிய நிதியினை பெற்றுத்தர நடவடிக்கை எடுக்கப்படுவதாகவும் தெரிவித்து அத்துடன் மேலும் தெரிவிக்கையில் பல சிறிய பாலங்கள் உடனடியாக புனரிப்பு செய்வதற்கான நடவடிக்கையினை  உடன் மேற்கொள்ளுமாறு சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு வேண்டுகோள் விடுத்ததுடன் இப்பகுதிகளில் உள்ள பலகிராமிய வீதிகளை புணரமைப்பு செய்வதற்குசம்பந்தப்பட்ட அமச்சுடன் கலந்துரையாடயிருப்பதாகவும் தெரிவித்தார். https://www.virakesari.lk/article/179939
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.