Jump to content

எதிர்வரும் திங்கட்கிழமை தமிழ் தேசிய துக்க தினமாக பிரகடனப்படுத்தப்பட்டுள்ளதாக வடக்கு கிழக்கு சிவில் சமூக அமைப்புகள் அறிவிப்பு


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

எதிர்வரும் திங்கட்கிழமை தமிழ் தேசிய துக்க தினமாக பிரகடனப்படுத்தப்பட்டுள்ளதாக வடக்கு கிழக்கு சிவில் சமூக அமைப்புகள் அறிவிப்பு

மன்னார் மறைமாவட்டத்தின் ஓய்வுநிலை ஆயர் இராயப்பு ஜோசப் ஆண்டகை இயற்கை எய்திய செய்தியானது தமிழர் தேசத்தினை ஆழாத்துயரில் ஆழ்த்தியுள்ளது. ஆயரின் இழப்பானது தமிழர் தேசத்திற்கு அளவிடமுடியாத ஒரு பேரிழப்பாகும்.2009ஆம் ஆண்டு யுத்தம் மௌனிக்கபட்ட பின்னர் தமிழர் தேசம் திக்கற்றவர்களாக நின்ற நேரத்தில் அவர்களுக்கு நம்பிக்கை ஒளியாக விளங்கியவர்.இந்நிலையில் இராயப்பு யோசப் ஆண்டகை தமிழ் தேசியத்திற்கு ஆற்றிய சேவைகளுக்கு மதிப்பளிக்கும் விதமாக எதிர்வரும் திங்கட்கிழமை தமிழ் தேசிய துக்க தினமாக பிரகடனப்படுத்தப்பட்டுள்ளதாக வடக்கு கிழக்கு சிவில் சமூக அமைப்புகள் அறிவித்துள்ளன.

ஆண்டகையின் மறைவையொட்டி அவரால் தமிழ் தேசியத்திற்கு ஆற்றிய சேவைகளுக்கு மதிப்பளிக்கும் விதமாக இன்று முதல் இறுதி வணக்க நிகழ்வு வரை வடக்கு கிழக்கு இணைந்த தமிழர் தேசம் எங்கும் துக்க தினங்களாக அனுஷ்டடிக்கப்படும். அத்துடன், எதிர்வரும் திங்கட்கிழமை தமிழ் தேசிய துக்க தினமாகவும் பிரகடனபடுத்தப்படுத்துகின்றோம்.இதேவேளை, அதே நாளில் தமிழகம் மற்றும் புலம்பெயர் தேசம் எங்கும் வாழும் தமிழ் மக்களும் கறுப்புப்பட்டி அணிந்து தங்கள் துக்கத்தை வெளிப்படுத்துமாறு சிவில் சமூக அமைப்புக்கள் அழைப்பு விடுத்துள்ளன.

இதன்படி, பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரை மக்கள் பேரெழுச்சி இயக்கம், வட-கிழக்கு சிவில் சமூக சம்மேளனம், வடக்கு கிழக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளின் சங்கம், அரசியல் கைதிகளை விடுதலை செய்வதற்கான தேசிய அமைப்பு, பல்சமயங்களின் ஒன்றியம்-மட்டக்களப்பு, முதியோர் சம்மேளனம்-மட்டக்களப்பு, வெண்மயில் அமைப்பு-மட்டக்களப்பு, அமெரிக்கன் மிஷன்-மட்டக்களப்பு, சடோ லங்கா நிறுவனம்-மட்டக்களப்பு, அரச சாரா தொண்டு நிறுவனங்களின் இணையம், தமிழர் நலன் காப்பகம்-மட்டக்களப்பு, சிவகுரு ஆதீனம்-யாழ்ப்பாணம், தமிழ் உணர்வாளர்கள் அமைப்பு-மட்டக்களப்பு, புழுதி சமூக உரிமைக்கான அமைப்பு-திருகோணமலை, குரல் அற்றவர்களின் குரல் அமைப்பு, உலக தமிழர் மாணவர் ஒன்றியம், இராவண சேனை-திருகோணமலை, வடக்கு கிழக்கு பொது அமைப்புகள் மற்றும் சம்மேளனங்கள் இந்த அழைப்பை விடுத்துள்ளன.(15)

 

http://www.samakalam.com/எதிர்வரும்-திங்கட்கிழம-6/

 

 

தமிழ் தேசிய துக்க தினத்திற்கு யாழ் பல்கலை ஆதரவு!

 

ஓய்வு பெற்ற மன்னார் மறைமாவட்ட ஆயர் மேதகு இராயப்பு ஜோசப் மறைவையோட்டி எதிர்வரும் திங்கட்கிழமையை (5) தமிழ் தேசிய துக்க தினமாக அனுஷ்டிக்க யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் ஆதரவு வழங்கியுள்ளது. FB_IMG_1617436659028.jpgIMG_20210403_132959.jpg

 

https://newuthayan.com/தமிழ்-தேசிய-துக்க-தினத்த/

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

திங்கட்கிழமை துக்க தினமாக அனுஷ்டிக்க யாழ். பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் அழைப்பு

 
D-4-696x348.jpg
 7 Views

மறைந்த முன்னாள் மன்னார் மறைமாவட்ட ஆயர் இராயப்பு யோசேப்பு அவர்களின் இறுதி அஞ்சலி நாளான திங்கட்கிழமை துக்க தினமாக அனுஷ்டிக்க யாழ் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் அழைப்பு விடுத்துள்ளது.

இது தொடர்பாக அவர்கள் விடுத்துள்ள அறிக்கை

1185ac4e-4a6e-4b5a-84d4-e67e19da517d-233

f30b36ef-b010-44be-9441-9befe64ec52e-225

(யாழ்.தர்மினி)

 

https://www.ilakku.org/?p=46335

Link to comment
Share on other sites

றிஷாட் பதியுதீன் மக்களிடம் அவசர கோரிக்கை

றிஷாட் பதியுதீன் மக்களிடம் அவசர கோரிக்கை

 

மன்னார் மறைமாவட்ட ஓய்வு நிலை ஆயர் கலாநிதி இராயப்பு ஜோசப் ஆண்டகையின் பூதவுடல் மக்களின் அஞ்சலிக்காக மன்னார் ஆர் இல்லத்தின் சிற்றாலயத்தில் வைக்கப்பட்டுள்ள நிலையில் இன்றைய தினம் சனிக்கிழமை ஆயிரக்கணக்கான மக்கள் மற்றும் அரசியல் பிரமுகர்கள் சென்று அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

நேற்று (2) யாழ்ப்பாணத்தில் இருந்து பேரணியாக மன்னார் ஆயர் இல்லத்திற்கு எடுத்து வரப்பட்டது.

ஓய்வு நிலை ஆயரின் பூதவுடலுக்கு நேற்று மாலை 2.45 மணி முதல் மக்கள் சென்று இறுதி அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

இந்த நிலையில் இன்றைய தினம் (3) பல ஆயிரக்கணக்கான மக்கள் இன மதம் இன்றி ஆயருக்கு கண்ணீர் மல்க அஞ்சலி செலுத்தி வருகினிற்னர்.

மேலும் முன்னாள் அமைச்சரும்,பாராளுமன்ற உறுப்பினருமான றிஷாட் பதியுதீன்,முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன், உள்ளுராட்சி மன்றங்களின் தவிசாளர்கள்,உறுப்பினர்கள் என அரசியல் பிரமுகர்களும் சென்று அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

மேலும் ஆயரின் உடலுக்கு அரசியல் பிரமுகர்கள் ,அரச அதிகாரிகள் அருட்தந்தையர்கள் , அருட்சகோதரிகள் உற்பட மன்னார் மாவட்டத்தில் உள்ள பொது மக்களும் இணைந்து அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

நாளை மாலை 3 மணியளவில் ஆயிரின் பூதவுடல் மன்னார் ஆர் இல்லத்தில் இருந்து பவனியாக மன்னார் புனித செபஸ்தியார் பேராலயத்திற்கு எடுத்துச் செல்லப்படும்.

அங்கு ஞாயிற்றுக்கிழமை மாலை தொடக்கம் திங்கட்கிழமை மதியம் 2 மணி வரை பேராலயத்தில் அஞ்சலிக்காக வைக்கப்படும். அதனைத் தொடர்ந்து திங்கட்கிழமை மாலை 3 மணி அளவில் பேராலயத்தில் இறுதி திருப்பலி ஒப்புக்கொடுக்கப்படும். இலங்கையின் அனைத்து ஆயர்களும் இணைந்து கூட்டுத் திருப்பலியை ஒப்புக் கொடுப்பார்கள்.

அதனைத் தொடர்ந்து பூதலுடல் பேராலயத்தில் அடக்கம் செய்யப்பட உள்ளது.

இதே வேளை முன்னாள் அமைச்சரும்,பாராளுமன்ற உறுப்பினருமான றிஷாட் பதியுதீன் மக்களிடம் கோரிக்கை ஒன்றை முன் வைத்துள்ளார்.

எதிர் வரும் திங்கட்கிழமை அன்று மன்னார் மறை மாவட்டத்தின் ஓய்வு நிலை ஆயரின் இறுதி நல்லடக்கம் இடம் பெற உள்ளது.

அன்றைய தினத்தை மாவட்டத்தில் உள்ள மக்கள் மரியாதையின் நிமித்தம் தமிழ் முஸ்ஸீம் மக்கள் அனைவரும் ஒன்று பட்டு எதிர் வரும் திங்கட்கிழமையை (5) துக்க தினமாக அனுஸ்ரிக்க வேண்டும்.

மன்னார் மாவட்டத்தில் உள்ள வர்த்தக நிலையங்களை மூடி எமது துயரத்தை வெளிப்படுத்த வேண்டும்.

எனவே முஸ்ஸீம் சமூகமும் தமது வர்த்தக நிலையங்களை மூடி தமது பூரண ஒத்துழைப்பை வழங்க வேண்டும்.என்ற கோரிக்கையை முன் வைத்தார்.
 

-மன்னார் நிருபர் லெம்பட்-

http://tamil.adaderana.lk/news.php?nid=142217

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.