Jump to content

நான் தமிழ் மக்களுக்கு எதிரானவன் அல்லன்; மாகாண சபை முறைமையையே எதிர்க்கிறேன் : அமைச்சர் சரத் வீரசேகர


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

நான் தமிழ் மக்களுக்கு எதிரானவன் அல்லன்; மாகாண சபை முறைமையையே எதிர்க்கிறேன் : அமைச்சர் சரத் வீரசேகர

(சி.எல்.சிசில்)

நான் தமிழ் மக்களுக்கு எதிரானவன் அல்லன். ஆனால், மாகாண சபை முறைமையை எதிர்க்கின்றேன் என பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் சரத் வீரசேகர தெரிவித்தார்.

யாழ்.,வடமராட்சி கிழக்கு, மருதங்கேணியில் புதிதாகஅமைக்கப்பட்ட பொலிஸ் நிலையத்தை நேற்று திறந்து வைத்த பின் ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கும்போதேஅவர் மேற்கண்டவாறு கூறினார்.

sarath-weeraselkara111-300x170.jpg
அவர் மேலும் தெரிவித்ததாவது:-
வடக்கில் இரண்டு பொலிஸ் நிலையங்களைத் திறப்பதற்காக நான் வந்துள்ளேன். மல்லாவி மற்றும் மருதங்கேணிப் பகுதிகளில் பொதுமக்களின் பிரச்சினைகளைத் தீர்க்கும் முகமாக இரண்டு பொலிஸ் நிலையங்களைத் திறந்து வைத்துள்ளேன்.

தற்போது நாடு பூராகவும் 494 பொலிஸ் லையங்கள் காணப்படுகின்றன. அதற்கு மேலதிகமாக இன்னும் 190 பொலிஸ் லையங்களைப் புதிதாக அமைக்கவுள்ளோம்.

அந்த வேலைத்திட்டத்தின் ஒரு பகுதியாகத்தான் வட பகுதியில் இரண்டு புதிய பொலிஸ் நிலையங்கள் இன்று (நேற்று) திறந்து வைக்கப்பட்டுள்ளன. அத்தோடு பொதுமக்கள் தூர இடங்களுக்குச் சென்று தமது பொலிஸ் சேவையைப் பெற்றுக் கொள்வதை நிறுத்த இதனைச் செய்துள்ளோம்.

நான் பொதுமக்களுடன் உரையாடும் போது பொதுமக்கள் இந்தப் பிரச்சினையை என்னிடம் கூறினார்கள். அதற்கு ஒரு தீர்வு பெற்றுக்கொடுக்கப்பட்டுள்ளது. வடமராட்சி கிழக்குப் பகுதியில் சட்டவிரோத மணல் கடத்தல் தொடர்பில் பல குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டுள்ளன.

ஆனால், இங்கே வேலையில்லாப் பிரச்சினைதான் இந்த மணல் கடத்தலுக்குக் காரணமாக இருக்கின்றது. எனவே, கல்வி கற்று வேலையில்லாமல் இருப்பவர்களுக்கும் மற்றும் கல்வியை இடையில் நிறுத்தி வேலையில்லாமல் இருப்பவர்களுக்கும் வேலைவாய்ப்பைப் பெற்றுக்கொடுப்பதன் மூலம் இந்தச் சட்டவிரோத மணல் கடத்தலைத் தடுத்து நிறுத்த முடியும். அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவுடன் இணைந்து இந்தப் பிரதேச இளைஞர், யுவதிகளுக்கு வேலைவாய்ப்பை வழங்குவதற்கு நான் யோசித்துள்ளேன்.

இளையோருக்கு வேலைவாய்ப்பை வழங்குவதன் மூலம் அவர்கள் சட்டவிரோதச் செயற்பாடுகளில் ஈடுபடுவதைத் தடுத்து நிறுத்த முடியும். எனினும், சட்டவிரோத மணல் கடத்தலில் ஈடுபடுவோருக்கு எதிராக நடவடிக்கை எடுக்குமாறு அறிவுறுத்தியுள்ளேன்.

புங்குடுதீவிலும் வெகு விரைவில் புதிதாக பொலிஸ் நிலையம் ஒன்று அமைக்கப்படவுள்ளது. இன்று (நேற்று) ஆரம்பித்திருக்கின்ற வேலைத்திட்டத்தின் ஒரு பகுதியாக அது அமைக்கப்படும்.
மாகாண சபை முறைக்கு சரத் வீரசேகர ஆகிய நான் எதிரானவன். அன்றும் எதிர்த்தேன்; இன்றும் எதிர்க்கின்றேன். நாளையும் இதே நிலைப்பாட்டையே கொண்டுள்ளேன்.

மாகாண சபை முறைமை இந்தியாவால் எமக்குப் பலவந்தமாகத் திணிக்கப்பட்ட ஒன்று. மாகாண சபை முறைமை என்பது ஒரு தேவையற்ற ஒரு விடயமாகும். ஒன்பது மாகாண சபைகள் காணப்படும்போது அவற்றுக்குத் தனியான நிர்வாகம் காணப்படும். மத்திய அரசு தனியாகச் செயற்பட வேண்டி வரும். ஆனால், மத்திய அரசு என்பது ஒன்றுதான். ஒன்பது மாகாண சபைகளுக்கும் தனியான நிர்வாகம் இருக்க முடியாது.

ஆனால், இந்த அரசு மாகாண சபை முறைமை வேண்டும் எனத் தீர்மானிக்குமானால் அந்தத் தீர்மானத்தை நான் எதிர்க்கப் போவதில்லை. வடக்கில் மாகாண சபை இல்லாது போய் மூன்று வருடங்கள் ஆகிவிட்டன. தற்போது அபிவிருத்தி தடைப்பட்டுள்ளது.

ஆனால் , கடந்த முறை வடக்கு மாகாண சபையில் ஆட்சியில் இருந்த முதலமைச்சர் விக்னேஸ்வரன், மத்திய அரசால் அபிவிருத்திக்கென ஒதுக்கப்பட்ட நிதியில் அரைவாசி நிதியைப் பயன்படுத்தாது திறைசேரிக்கு திருப்பி அனுப்பியுள்ளார். இந்த நிலைமைதான் இங்கே காணப்படுகின்றது.

ஆகவே, மாகாண சபை என்பது மக்களுக்குப் பிரயோசனமான ஒரு விடயமாக அமைய வேண்டும்.
எனினும், வடக்கு மக்கள் மாகாண சபையை விரும்புகின்றார்கள். அது அரசியல் காரணமாக இருக்கலாம். ஆனால், சரத் வீரசேகர ஆகிய நான் தனிப்பட்ட ரீதியில் மாகாண சபை முறைமைக்கு எதிரானவன்.

எனினும், அரசு மாகாண சபைத் தேர்தலை நடத்தத் தீர்மானித்தால் அரசின் தீர்மானத்துக்கு ஏற்றவாறு நான் செயற்படத் தயாராக உள்ளேன். நான் தமிழ் மக்களுக்கு எதிரானவன் அல்லன். அரசு மாகாண சபைத் தேர்தலை நடத்த விரும்பினால் அதை நடத்தலாம். ஆனால், தனிப்பட்ட ரீதியில் நான் மாகாண சபை முறைமைக்கு எதிரானவன் என்றார்.

 

https://thinakkural.lk/article/117046

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
13 hours ago, கிருபன் said:

நான் தமிழ் மக்களுக்கு எதிரானவன் அல்லன்.

மாகாண சபை முறையை தமிழரோடு தொடர்புபடுத்தி பேசுவதில் இருந்தே தெரிகிறது, தமிழரை பழிவாங்கவே மாகாண சபை முறையை எதிர்க்கிறீர்கள் என்பது.

 

13 hours ago, கிருபன் said:

அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவுடன் இணைந்து இந்தப் பிரதேச இளைஞர், யுவதிகளுக்கு வேலைவாய்ப்பை வழங்குவதற்கு நான் யோசித்துள்ளேன்.

நிறைய இலஞ்ம் வாங்க திட்டம் அதோடு வாக்கு வங்கியும் எகிறும். மணற்கொள்ளையின் ஆரம்ப கர்த்தாவே அவர்தானே என்பதை அமைச்சர் அறியாரோ?   

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.