Jump to content

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

யாழுடன் எனது கோபம் தணிந்து வர சில காலம் எடுத்து விட்டது
மீண்டும் வந்திருக்கின்றேன்

மோகன் அண்ணா உங்களுக்கு நான் எப்போதும் சிறு துரும்பாக இருந்து உதவி செய்வதாகக் கூறிய வார்த்தைகள் தான் பல நாட்கள் எனது நினைவுகளில் வந்து சென்றது

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கோபத்தை ஒரு நாளும் வேலி தாண்ட விடக் கூடாது வாத்தியார்...!

களத்தில் கண்டது மிகவும் மகிழ்ச்சி.....! நல் வரவு....!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
6 minutes ago, புங்கையூரன் said:

கோபத்தை ஒரு நாளும் வேலி தாண்ட விடக் கூடாது வாத்தியார்...!

களத்தில் கண்டது மிகவும் மகிழ்ச்சி.....! நல் வரவு....!

நன்றி அண்ணா
என்னவோ தெரியவில்லை
அண்ணன் தம்பியுடன்  வீட்டில்  சண்டை செய்த மாதிரி இருந்தது 

அது எத்தனை நாட்கள்   தான் தாங்கும்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
13 minutes ago, வாத்தியார் said:

நன்றி அண்ணா
என்னவோ தெரியவில்லை
அண்ணன் தம்பியுடன்  வீட்டில்  சண்டை செய்த மாதிரி இருந்தது 

அது எத்தனை நாட்கள்   தான் தாங்கும

எழுதலாமா..விடலாமா..யோசிச்சேன்.🤔👋

மீள் வருகைக்கு மிக்க நன்றி அண்ணா👋. அண்ணா , தம்பி சண்டை போட்டால் மாதக் கணக்கில், வருசக் கணக்கில் முகத்தை தூங்க போட்டுட்டா திரிய வேண்டும்.. அப்புறம் இதுக்கும் கோவிச்சுக் கொண்டு ஓடக் கூடா..🤭பிளீஸ்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, வாத்தியார் said:

யாழுடன் எனது கோபம் தணிந்து வர சில காலம் எடுத்து விட்டது
மீண்டும் வந்திருக்கின்றேன்

நானும்.  யோசித்தேன். வாத்தியைக்காணவில்லையென்று.. வணக்கம் வாருங்கள் 

யாழுடன் நன்றாகக்கோபப்படலாம்.  ஆனால். யாழ்கள உறுப்பினர்களுடன். கோபப்படவேண்டாம்..😍

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

  ப்ரெசென்ட்  சார் ....உள்ளேன் ஐயா 😀

வாத்தியாருக்கே கோபமா   ?  பிள்ளைகள் என்றால் அப்படித்தான் ....கட்டிப்பிடிப்பினம்
 அடி படுவினம் ...பொறுமையாக  கையாளுங்கோ ?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் வாத்தியார்.
நீண்ட நாட்களின் பின்பு கண்டது சந்தோசம்.

ஆடுகளத்தில் உங்களுக்காக இரண்டு களம் காத்திருக்கிறது.
1) ஐபிஎல்
2)தமிழ்நாடுத் தேர்தல்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வாத்தியாரை மீண்டும் கண்டதில் மகிழ்ச்சி. :)

வாத்தியாருக்கு அப்பிடி என்ன கோவம் வந்தது என்பதை அறிய ஆவலாக உள்ளோம். :grin:
நான்கு நாள் லீவு என்ற படியால், பொழுது போக கஸ்ரமாக இருக்கு. 😜
அதனை விரிவாக எழுதுங்கள்.  அதனை நாம்... அக்கு வேறு, ஆணி வேறாக அலசி ஆராய,
பொழுது போய் விடும். 🤣

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் வாத்தியார்....... உங்களின் வரவு நல்வரவாகுக......!   💐

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
11 hours ago, யாயினி said:

எழுதலாமா..விடலாமா..யோசிச்சேன்.🤔👋

மீள் வருகைக்கு மிக்க நன்றி அண்ணா👋. அண்ணா , தம்பி சண்டை போட்டால் மாதக் கணக்கில், வருசக் கணக்கில் முகத்தை தூங்க போட்டுட்டா திரிய வேண்டும்.. அப்புறம் இதுக்கும் கோவிச்சுக் கொண்டு ஓடக் கூடா..🤭பிளீஸ்.

தப்புத்தான்
திருந்திட்டேன்😄

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
11 hours ago, Kandiah57 said:

நானும்.  யோசித்தேன். வாத்தியைக்காணவில்லையென்று.. வணக்கம் வாருங்கள் 

யாழுடன் நன்றாகக்கோபப்படலாம்.  ஆனால். யாழ்கள உறுப்பினர்களுடன். கோபப்படவேண்டாம்..😍

கள உறவுகள்  யாருடனும் எனக்கு கோபம் இல்லை அண்ணா
நீங்கள் என்னைத் தேடியதில் மகிழ்ச்சி  

11 hours ago, நிலாமதி said:

  ப்ரெசென்ட்  சார் ....உள்ளேன் ஐயா 😀

வாத்தியாருக்கே கோபமா   ?  பிள்ளைகள் என்றால் அப்படித்தான் ....கட்டிப்பிடிப்பினம்
 அடி படுவினம் ...பொறுமையாக  கையாளுங்கோ ?

பொறுத்தார் பூமியை ஆள்வார்கள்
என்று சொல்ல வாறீங்கள்
நன்றி அக்கா

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வாங்கோ வாத்தியார்😀

அப்படியே இந்த கிரிக்கெட் போட்டியிலும் deadline முடிய முன்னர் கலந்து சிறப்பித்தால் யாழ் களத்துக்கும் பெருமை சேரும்😁

சில வயசுப் பையன்களுடனும், வயசாளிகளுடனும் லூட்டி அடிக்கலாம்😜

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் வாத்தியார்.

3 hours ago, கிருபன் said:

வாங்கோ வாத்தியார்😀

அப்படியே இந்த கிரிக்கெட் போட்டியிலும் deadline முடிய முன்னர் கலந்து சிறப்பித்தால் யாழ் களத்துக்கும் பெருமை சேரும்😁

சில வயசுப் பையன்களுடனும், வயசாளிகளுடனும் லூட்டி அடிக்கலாம்😜

 

ஆள் சரியான காரியகாரன். 😁

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
5 minutes ago, சுவைப்பிரியன் said:

வாங்கோ வாத்தி.😄

ஆ...ஆ..🤭😆 மாணவர்களின் பழக்க, வழக்கங்கள்...0000.👋

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 4/4/2021 at 05:01, ஈழப்பிரியன் said:

வணக்கம் வாத்தியார்.
நீண்ட நாட்களின் பின்பு கண்டது சந்தோசம்.

ஆடுகளத்தில் உங்களுக்காக இரண்டு களம் காத்திருக்கிறது.
1) ஐபிஎல்
2)தமிழ்நாடுத் தேர்தல்.

இந்தப்போட்டியில் பங்கு கொள்ள எனக்கு அனுமதி இல்லையாம்

மற்றும்படி  பரிந்துரைத்தமைக்கு நன்றி அண்ணா

Link to comment
Share on other sites

12 minutes ago, வாத்தியார் said:

இந்தப்போட்டியில் பங்கு கொள்ள எனக்கு அனுமதி இல்லையாம்

மற்றும்படி  பரிந்துரைத்தமைக்கு நன்றி அண்ணா

நீண்ட நாட்கள் பதிவிடாமையால் தானியங்கி உங்களை கருத்துக்கள பார்வையாளர் பிரிவுக்கு மாற்றி இருந்தது. கருத்துக்கள உறவுகள் பிரிவுக்கு தற்போது மாற்றியுள்ளேன். இனி சரியாக இருக்கும்.

முயன்று பார்த்து விட்டு அறியத் தாருங்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 minutes ago, நிழலி said:

நீண்ட நாட்கள் பதிவிடாமையால் தானியங்கி உங்களை கருத்துக்கள பார்வையாளர் பிரிவுக்கு மாற்றி இருந்தது. கருத்துக்கள உறவுகள் பிரிவுக்கு தற்போது மாற்றியுள்ளேன். இனி சரியாக இருக்கும்.

முயன்று பார்த்து விட்டு அறியத் தாருங்கள்.

நன்றி நிழலி  இது எனது  தவறு

(Poll closed on திங்கள் 05 ஏப்ரல் 2021 at 16:47)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, வாத்தியார் said:

நன்றி நிழலி  இது எனது  தவறு

(Poll closed on திங்கள் 05 ஏப்ரல் 2021 at 16:47)

இன்னொன்று நுணாவினால் தயாரிக்கப்பட்டுள்ளது.
அதன் இறுதிநாள் வைகாசி 2.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 4/4/2021 at 14:52, குமாரசாமி said:

ஆள் சரியான காரியகாரன்

நான் பாறை பிளந்து பயிர் வைத்து பயன் விளைப்பான் தேசத்தான் அல்லவா😜

ஈழப்பிரியன் ஐயாவும், சுவைப்பிரியரும் என்னைக் கூவிக்கூவி விற்க வைத்துவிட்டார்கள்..

spacer.png

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
5 minutes ago, கிருபன் said:

நான் பாறை பிளந்து பயிர் வைத்து பயன் விளைப்பான் தேசத்தான் அல்லவா😜

ஈழப்பிரியன் ஐயாவும், சுவைப்பிரியரும் என்னைக் கூவிக்கூவி விற்க வைத்துவிட்டார்கள்..

போட்டியை சிறப்பிக்க வாத்தியாரிடமும் கேட்டுள்ளேன்.

வேறு சிலரிடமும் தனிமடல் மூலம் கேட்டுள்ளேன்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 4/4/2021 at 08:28, தமிழ் சிறி said:

வாத்தியாரை மீண்டும் கண்டதில் மகிழ்ச்சி. :)

வாத்தியாருக்கு அப்பிடி என்ன கோவம் வந்தது என்பதை அறிய ஆவலாக உள்ளோம். :grin:
நான்கு நாள் லீவு என்ற படியால், பொழுது போக கஸ்ரமாக இருக்கு. 😜
அதனை விரிவாக எழுதுங்கள்.  அதனை நாம்... அக்கு வேறு, ஆணி வேறாக அலசி ஆராய,
பொழுது போய் விடும். 🤣

சரி சரி நடந்தது நடந்ததாகவே இருக்கட்டும்
இனி அதைவெறை கதையாக எழுதுவதா😄

லீவு முடிந்து வீட்டதே அடுத்த லீவுக்கு பாப்பம்  🤣

On 4/4/2021 at 09:34, suvy said:

வணக்கம் வாத்தியார்....... உங்களின் வரவு நல்வரவாகுக......!   💐

வணக்கம் சுவியர் நீங்கள் நலமா?

On 4/4/2021 at 12:48, கிருபன் said:

வாங்கோ வாத்தியார்😀

அப்படியே இந்த கிரிக்கெட் போட்டியிலும் deadline முடிய முன்னர் கலந்து சிறப்பித்தால் யாழ் களத்துக்கும் பெருமை சேரும்😁

சில வயசுப் பையன்களுடனும், வயசாளிகளுடனும் லூட்டி அடிக்கலாம்😜

 

வணக்கம் கிருபர் உந்த ipl இல் எனக்குப் பெரிதாக ஒன்றும் தெரியாது  இருந்தாலும் குருடன் போல் வருவேன்

On 4/4/2021 at 15:52, குமாரசாமி said:

வணக்கம் வாத்தியார்.

ஆள் சரியான காரியகாரன். 😁

வணக்கம் குசா அண்ணை 😁

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 4/4/2021 at 16:55, சுவைப்பிரியன் said:

வாங்கோ வாத்தி.

வணக்கம் சுவைப்பிரியன் 😄

4 hours ago, நிழலி said:

நீண்ட நாட்கள் பதிவிடாமையால் தானியங்கி உங்களை கருத்துக்கள பார்வையாளர் பிரிவுக்கு மாற்றி இருந்தது. கருத்துக்கள உறவுகள் பிரிவுக்கு தற்போது மாற்றியுள்ளேன். இனி சரியாக இருக்கும்.

முயன்று பார்த்து விட்டு அறியத் தாருங்கள்.

நன்றி நிழலி

4 hours ago, ஈழப்பிரியன் said:

இன்னொன்று நுணாவினால் தயாரிக்கப்பட்டுள்ளது.
அதன் இறுதிநாள் வைகாசி 2.

 

3 hours ago, ஈழப்பிரியன் said:

போட்டியை சிறப்பிக்க வாத்தியாரிடமும் கேட்டுள்ளேன்.

வேறு சிலரிடமும் தனிமடல் மூலம் கேட்டுள்ளேன்.

நன்றி ஐயா கட்டாயம் கலந்துகொள்கின்றேன்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் வருக..👌 தங்கள் மேலான கருத்துக்களை தருக..👍

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
9 hours ago, வாத்தியார் said:

வணக்கம் கிருபர் உந்த ipl இல் எனக்குப் பெரிதாக ஒன்றும் தெரியாது  இருந்தாலும் குருடன் போல் வருவேன்

நன்றி வாத்தியார்😀

 

 

 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Popular Now

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.