Jump to content

Recommended Posts

  • Replies 130
  • Created
  • Last Reply

Top Posters In This Topic

  • கருத்துக்கள உறவுகள்

முழங்கால்  சத்திர சிகிச்சை செய்தவர்களும் இந்த ஓட்ட பயிற்சியை செய்யலாமா?

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஐம்பதை தாண்டி வெற்றி நடையும் வேக நடையும் போடும் இணையவனுக்கு வாழ்த்துக்கள்.                                                                                                                                                                                                                           புலம்பெயர் நாடுகளில் ஐம்பதை தாண்டிய வாழ்க்கை சுவாரசியம் மிக்கது தான்.  குறிப்பாக பிள்ளைகளின் எதிர்கால வாழ்க்கை தொடர்பான,   ஊரைப் போலல்லாது அநேகமாக உறுதி செய்யப்பட்டிருக்கும் புலம் பெயர் சமூகக் கட்டமைப்பு ,  ஏன் தான் புலம் பெயர்ந்தோமோ என்ற இடைக்காலத்து எண்ணப்பாடுகளை மறையப்பண்ணி விடுகிறது.                                                                                                                                                       

நானும் ஒவ்வொரு நாளும் ஒரு மணித்தியாளமளவில் வேகநடைப்பயிற்சி சில வருடங்களாக செய்து வருகிறேன். உங்களுடைய மொடலை முயற்சி செய்யலாம் என்று தோன்றுகிறது.                                                     

பதிவிற்கு நன்றி ..........

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பல நாட்களின் பின் நல்லதொரு பதிவை வாசிந்த மகிழ்ச்சி, உங்கள் அனுபவ பகிர்வு பலரை மாற்றும்,

காலை மாலை நடைதான் இனி செல்ல குட்டியுடன் ஓடி பழக வேண்டும், அவளுக்கும் உடலுக்கு நல்லது

நன்றி உங்கள் பகிர்வுக்கு & வாழ்த்துக்கள்

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

என்னையா இதுகளை முன்னரே சொல்லியிருக்கக் கூடாதா?

பெருமையாக இருக்கிறது.பாராட்டுக்கள்.

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

6அடியில ஒரு கிடங்கு வெட்டி வச்சிட்டுத்தான் நான் தொடங்கவேனும் .

  • Haha 4
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
47 minutes ago, நந்தன் said:

6அடியில ஒரு கிடங்கு வெட்டி வச்சிட்டுத்தான் நான் தொடங்கவேனும் .

தம்பி இப்படி ஏதாவது ஆசையிருந்தால் ஊரில வெட்டி வையுங்க.

ஆசைப்பட்டு லண்டனில வெட்டி தெண்டம் கட்ட வேண்டாம்.

Link to comment
Share on other sites

4 hours ago, குமாரசாமி said:

முழங்கால்  சத்திர சிகிச்சை செய்தவர்களும் இந்த ஓட்ட பயிற்சியை செய்யலாமா?

வேண்டாம், சில ஆய்வுகளின் படி, அதிகம் ஓடுவதும் சிலருக்கு முழங்கால்  சத்திர சிகிச்சை செய்ய வேண்டிய தேவையை உருவாக்குகிறது. நாளுக்கு ஒரு மணித்தியாலம் வேக நடை போங்கள். சோறு, புட்டு, இடியப்பம், பாண் போன்ற அரிசி, மா, தானிய வகை உணவுகளை வாரத்துக்கு ஒருமுறை சிறிய அளவு என்று குறைத்து கொள்ளுங்கள். இரவு ஒரு பழம் மட்டும் சாப்பிட்டு தண்ணீர் குடியங்கள். காலையில் என்ன நிறை என்று நாளும் நெறுத்து பாருங்கள். ஒரு மாதத்துக்கு பிறகு நிறை குறைவதையும், உயர்இரத்த அழுத்தம் குறைவதையும் நன்கு தூங்க முடிவதையும் அவதானிப்பீர்கள். இந்த முறைகளில் இருந்து ஒரு வாரம் தவறினாலும் எல்லா பயனும் இழந்து போய் மீண்டும் நிறை கூடி, நோய்களும் வர தொடங்கும். 

Edited by கற்பகதரு
  • Like 3
  • Thanks 3
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஆஹா இணையவன் உங்களது இன்னொரு முகத்தைப் பார்க்கின்றேன்......சூப்பரான கட்டுரை.அநேகமானவர்களுக்கு மிகவும் பயனுள்ள கட்டுரை. மேலும் பல தகவல்களை தாருங்கள். நன்றி இணையவன்.......!   🌹

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

Usa Running GIF by RunnerSpace.com - Find & Share on GIPHY

London Marathon GIF by Virgin Money London Marathon - Find & Share on GIPHY

மரதன் ஓட்டத்தையும்...  அதன் பயிற்சியையும்... நான்  அறியாத, 
புதிய தகவல்களை,  திரட்டித் தந்தமைக்கு நன்றி இணையவன்.  👍

Edited by தமிழ் சிறி
  • Like 1
Link to comment
Share on other sites

9 hours ago, குமாரசாமி said:

முழங்கால்  சத்திர சிகிச்சை செய்தவர்களும் இந்த ஓட்ட பயிற்சியை செய்யலாமா?

எனக்குத் தெரிந்த ஒருவர் முழங்கால் சத்திர சிக்கிச்சைக்கு உள்ளாகி 3 வாரங்கள் மருத்துவ மனையிலும் பின்னர் 4 மாத ஓய்விலும் இருந்து குணமாகி இப்போது ஓடுகிறார். உங்களது மருத்துவர்தான் கூற முடியும் நீங்கள் ஓடுவது நல்லதா இல்லையா என்று. பொதுவாக வாரத்தில் 2 தடவை 1 மணிரேர ஓட்டம் கால்களைப் பாதிக்காது.

8 hours ago, சாமானியன் said:

ஐம்பதை தாண்டி வெற்றி நடையும் வேக நடையும் போடும் இணையவனுக்கு வாழ்த்துக்கள்.                                                                                                                                                                                                                           புலம்பெயர் நாடுகளில் ஐம்பதை தாண்டிய வாழ்க்கை சுவாரசியம் மிக்கது தான்.  குறிப்பாக பிள்ளைகளின் எதிர்கால வாழ்க்கை தொடர்பான,   ஊரைப் போலல்லாது அநேகமாக உறுதி செய்யப்பட்டிருக்கும் புலம் பெயர் சமூகக் கட்டமைப்பு ,  ஏன் தான் புலம் பெயர்ந்தோமோ என்ற இடைக்காலத்து எண்ணப்பாடுகளை மறையப்பண்ணி விடுகிறது.                                                                                                                                                       

நானும் ஒவ்வொரு நாளும் ஒரு மணித்தியாளமளவில் வேகநடைப்பயிற்சி சில வருடங்களாக செய்து வருகிறேன். உங்களுடைய மொடலை முயற்சி செய்யலாம் என்று தோன்றுகிறது.                                                     

பதிவிற்கு நன்றி ..........

நன்றி சாமானியன். என்னதான் பிரச்சனைகள் இருந்தாலும் ஓட்டப் பயிற்சி மன அழுத்தத்தைக் குறைக்கும். ஐரோப்பாவில் மட்டுமல்ல எமது நாட்டிலும் இதனை ஊக்குவிப்பது நல்லது. இங்கு உள்ளதை விட அங்குள்ளவர்களுக்குத்தான் நேரம் தாராளமாகக் கிடைக்கும்.

  • Thanks 1
Link to comment
Share on other sites

 

7 hours ago, ஈழப்பிரியன் said:

என்னையா இதுகளை முன்னரே சொல்லியிருக்கக் கூடாதா?

பெருமையாக இருக்கிறது.பாராட்டுக்கள்.

நன்றி ஈழப்பிரியன்.

முடிந்தால் நீங்களும் மெதுவாக முயன்று பாருங்கள்.

6 hours ago, நந்தன் said:

6அடியில ஒரு கிடங்கு வெட்டி வச்சிட்டுத்தான் நான் தொடங்கவேனும் .

பலர் இப்படித்தான் தங்களால் முடியாது என்றே முடிவு செய்து விடுகிறார்கள். உங்களால் வேகமாக நடக்க முடியுமானால் நிச்சயமாக ஓட முடியும். 

Link to comment
Share on other sites

5 hours ago, கற்பகதரு said:

வேண்டாம், சில ஆய்வுகளின் படி, அதிகம் ஓடுவதும் சிலருக்கு முழங்கால்  சத்திர சிகிச்சை செய்ய வேண்டிய தேவையை உருவாக்குகிறது. நாளுக்கு ஒரு மணித்தியாலம் வேக நடை போங்கள்.

அளவுக்கு மிஞ்சினால் எதுவும் நஞ்சாகும். ஓட்டமும் அப்படித்தான். அளவோடு செய்தால் நன்மைகளே உண்டு.

 

5 hours ago, கற்பகதரு said:

சோறு, புட்டு, இடியப்பம், பாண் போன்ற அரிசி, மா, தானிய வகை உணவுகளை வாரத்துக்கு ஒருமுறை சிறிய அளவு என்று குறைத்து கொள்ளுங்கள்.

எனக்குத் தெரிந்தவர்களுக்கு சொல்வதும் இதைத்தான்.  நீரிழிவு, கொலஸ்ரறோல் ஆகியவற்றிற்கு முக்கிய காரணி சோறு மாச் சாப்பாடுகள் தான். இந்த இரண்டு நோய்களும் வேறுபல நோய்களையும் ஊக்குவிக்கும்.  இவற்றைப் பாதியாகக் குறைத்தால் அரைவாசி நோய்கள் இல்லாமல் போய்விடும்.

  • Thanks 1
Link to comment
Share on other sites

1 hour ago, suvy said:

ஆஹா இணையவன் உங்களது இன்னொரு முகத்தைப் பார்க்கின்றேன்......சூப்பரான கட்டுரை.அநேகமானவர்களுக்கு மிகவும் பயனுள்ள கட்டுரை. மேலும் பல தகவல்களை தாருங்கள். நன்றி இணையவன்.......!   🌹

நன்றி சுவி அண்ணா. என்னைச் சுற்றி இருப்பவர்கள் பலருக்கும் நான் ஓடுவது தெரியாது. 

1 hour ago, தமிழ் சிறி said:

Usa Running GIF by RunnerSpace.com - Find & Share on GIPHY

London Marathon GIF by Virgin Money London Marathon - Find & Share on GIPHY

மரதன் ஓட்டத்தையும்...  அதன் பயிற்சியையும்... நான்  அறியாத, 
புதிய தகவல்களை,  திரட்டித் தந்தமைக்கு நன்றி இணையவன்.  👍

நன்றி தமிழ்சிறி. 

நேரம் ஒதுக்கி உங்கள் ஆரோக்கியத்திற்காகவும் மகிழ்ச்சிக்காகவும் மெதுவாக ஓடத் தொடங்குங்கள். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மிகவும் பயனுள்ள பதிவு👏👏👏

எனது நண்பர்கள் சிலரும் அரை மரதன், முழு மரதன் ஓடுகின்றவர்கள். ஆறடிக்கும் அதிக உயரமான ஆஸ்திரிய நண்பர் தனது 40 களில் 110 கிலோ எடையாக இருந்தபோது வைத்தியரின் ஆலோசனையின்படி ஓட ஆரம்பித்து சில வருடங்களில் வருடத்திற்கு 3 மரதன்கள் ஓடுவார். மழையில், குளிரில், பனியில் எல்லாம் ஓடிக்கொண்டேயிருப்பார்! கொரோனாவுக்கு முன்னர் சந்தித்தபோது 74 கிலோவுக்கு வந்திருந்தார்!

பல வருடங்களுக்கு முன்னர் கிரிக்கெட் விளையாடியபோது மொக்குத்தனமாக விழுந்து எனது வலது முழங்கால் சிரட்டையில் பிரச்சினை (stretched ligaments) இருப்பதால் ஓடுவதில் பிரச்சினை இருக்கு. நடப்பதில் பிரச்சினைகள் இல்லையென்பதால் சத்திரசிகிச்சை செய்ய விருப்பம் இல்லை. ஆகவே வேகநடைதான் எனது முக்கிய உடற்பயிற்சி😀

ஓட விருப்பம் உள்ளவர்கள் இங்கிலாந்து பொது உடல்நல துறையால் வெளியிடப்பட்ட Couch to 5k App ஐ பாவிக்கலாம். 

https://www.nhs.uk/live-well/exercise/couch-to-5k-week-by-week/

 

  • Like 2
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
31 minutes ago, இணையவன் said:

நன்றி தமிழ்சிறி. 

நேரம் ஒதுக்கி உங்கள் ஆரோக்கியத்திற்காகவும் மகிழ்ச்சிக்காகவும் மெதுவாக ஓடத் தொடங்குங்கள். 

May be an image of text that says 'தினமும் காலையில்.... நினைப்பது நடப்பது'

  • Like 2
  • Haha 6
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ரோட்டில் அல்லது தார் நிலத்தில் ஓடுவது நல்லதா? அல்லது புற்கள் உள்ள இடத்தில் ஓடுவது நல்லதா?

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
9 hours ago, நந்தன் said:

6அடியில ஒரு கிடங்கு வெட்டி வச்சிட்டுத்தான் நான் தொடங்கவேனும் .

ஆனாலும் உங்க மனதில் ஆசை  இருக்கு இல்லாவிட்டால் இந்த திரியை பின் தொடர விருப்ப பட்டு இருக்க மாட்டிர்கள் .சுவர் இல்லாவிட்டால் பிக்சர் இல்லையாம் .

  • Like 2
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நான் தொடர்ந்து மெதுவான நடைப்பயிற்சி செய்கிறேன் . நிற்கம் போது இடது ககாலில் பின் பக்கம் கடுமையாக வலிக்கிறது.இன்னும் ஓட்டத்தை ஆரம்பிக்க வில்லை. சிலநாட்களில் நடைப்பயற்சி முடியும் வேளைகளில் மிகமிக குறுகிய தூரம் ஓடுவேன். கால் வலி தானாக மறையுமா அல்லது வைத்தியரிடம் காட்ட வேண்டுமா? விறைப்புத் தன்மையுடன் கூடிய வலி.

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, தமிழ் சிறி said:

May be an image of text that says 'தினமும் காலையில்.... நினைப்பது நடப்பது'

இதுவரை சொன்னது......!

Throw Water GIFs | Tenor

இதுதான் தினசரி நடப்பது .......!   😂

  • Haha 4
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, புலவர் said:

நான் தொடர்ந்து மெதுவான நடைப்பயிற்சி செய்கிறேன் . நிற்கம் போது இடது ககாலில் பின் பக்கம் கடுமையாக வலிக்கிறது.இன்னும் ஓட்டத்தை ஆரம்பிக்க வில்லை. சிலநாட்களில் நடைப்பயற்சி முடியும் வேளைகளில் மிகமிக குறுகிய தூரம் ஓடுவேன். கால் வலி தானாக மறையுமா அல்லது வைத்தியரிடம் காட்ட வேண்டுமா? விறைப்புத் தன்மையுடன் கூடிய வலி.

இறுகி இருப்பது போன்ற உணர்வு என்றால் ஸ்ட்ரெட்சிங் காணாது என்று நினைக்கிறேன்

  • Like 3
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நான் நடக்கும் போது உங்களைபற்றி எண்ணுவதுண்டு. ஏனெனில் நான் ஒடுவோமா என்று இரண்டு தடவைகள் முயன்று மூச்சுவாங்கியதால் விட்டுவிட்டேன். நான் வைத்தியாரிடம் ஸ்ப்ரே கேட்டு வாங்கி அடித்துவிட்டு ஓவடிப் பார்ப்போமா என்று எண்ணியதுண்டு. நீ  சாதாரணமாகத் தானே இருக்கிறாய். தேவையில்லாமல் ஏன் ஸ்பிரே கேட்கிறாய் என்று மனிசன் திட்டியதில் அந்த எண்ணத்தைக் கைவிட்டுவிட்டேன். இந்தப் பதிவைப் பார்க்க ஓடிப் பார்க்கலாம் என்னும் ஆசை எழுகின்றது. ஆனாலும் உடற்கூறுகள் ஆண்களுக்கும் பெண்களுக்கும் ஒன்றல்லவே. பார்ப்போம்.

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
23 hours ago, குமாரசாமி said:

முழங்கால்  சத்திர சிகிச்சை செய்தவர்களும் இந்த ஓட்ட பயிற்சியை செய்யலாமா?

முழங்காலில் நோவுக்கு சத்திர சிகிச்சை பெற்றவர் நல்லது என்று  ஜிம்மில் elliptical பயிற்ச்சி பெற்றது எனக்கு தெரியும்.

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
18 hours ago, கற்பகதரு said:

வேண்டாம், சில ஆய்வுகளின் படி, அதிகம் ஓடுவதும் சிலருக்கு முழங்கால்  சத்திர சிகிச்சை செய்ய வேண்டிய தேவையை உருவாக்குகிறது. நாளுக்கு ஒரு மணித்தியாலம் வேக நடை போங்கள். சோறு, புட்டு, இடியப்பம், பாண் போன்ற அரிசி, மா, தானிய வகை உணவுகளை வாரத்துக்கு ஒருமுறை சிறிய அளவு என்று குறைத்து கொள்ளுங்கள். இரவு ஒரு பழம் மட்டும் சாப்பிட்டு தண்ணீர் குடியங்கள். காலையில் என்ன நிறை என்று நாளும் நெறுத்து பாருங்கள். ஒரு மாதத்துக்கு பிறகு நிறை குறைவதையும், உயர்இரத்த அழுத்தம் குறைவதையும் நன்கு தூங்க முடிவதையும் அவதானிப்பீர்கள். இந்த முறைகளில் இருந்து ஒரு வாரம் தவறினாலும் எல்லா பயனும் இழந்து போய் மீண்டும் நிறை கூடி, நோய்களும் வர தொடங்கும். 

தகவல்களுக்கு மிக்க நன்றி கற்பதரு! 
ஒரு சில  அனுபவங்கள் வைத்தியர்கள் தரும் மருந்து/மாத்திரைகளை விட உன்னதமானது.
நன்றி கற்பகதரு :)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, மெசொபொத்தேமியா சுமேரியர் said:

நான் நடக்கும் போது உங்களைபற்றி எண்ணுவதுண்டு. ஏனெனில் நான் ஒடுவோமா என்று இரண்டு தடவைகள் முயன்று மூச்சுவாங்கியதால் விட்டுவிட்டேன். நான் வைத்தியாரிடம் ஸ்ப்ரே கேட்டு வாங்கி அடித்துவிட்டு ஓவடிப் பார்ப்போமா என்று எண்ணியதுண்டு. நீ  சாதாரணமாகத் தானே இருக்கிறாய். தேவையில்லாமல் ஏன் ஸ்பிரே கேட்கிறாய் என்று மனிசன் திட்டியதில் அந்த எண்ணத்தைக் கைவிட்டுவிட்டேன். இந்தப் பதிவைப் பார்க்க ஓடிப் பார்க்கலாம் என்னும் ஆசை எழுகின்றது. ஆனாலும் உடற்கூறுகள் ஆண்களுக்கும் பெண்களுக்கும் ஒன்றல்லவே. பார்ப்போம்.

வேண்டாம் தாயே, நடையே போதும், கொரோணா அதிர்விலிருந்து இன்னும் லண்டன் மீளவில்லை

  • Haha 5
  • Sad 1
Link to comment
Share on other sites




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 3 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 31 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.