Jump to content

இலங்கை மக்களின் அன்றாட உணவுப் பொருட்களில் நச்சு இரசாயனங்களின் ஆதிக்கம்!


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

இலங்கை மக்களின் அன்றாட உணவுப் பொருட்களில் நச்சு இரசாயனங்களின் ஆதிக்கம்!

 
Toxic-food-that-kills-you-slowly-1-696x435.jpg


இலங்கை மக்கள் உணவுப் பொருட்களின் ஊடாக நச்சுப் பொருட்களை அதிகளவில் உள்ளெடுத்து வருவதாக அதிர்ச்சியூட்டும் தகவல் ஒன்றைத் தெரிவித்துள்ளார் அரசாங்க மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் தலைவர் மருத்துவ நிபுணர் அநுருத்த பாதெனிய. உலகில் உணவுகளின் மூலம் இரசாயன நச்சுப் பதார்த்தங்களை மிகக் கூடுதலான அளவில் உள்ளெடுப்பவர்கள் இலங்கை மக்கள்தான் என்ற மற்றொரு அச்சமூட்டும் தகவலையும் மருத்துவர் அநுருத்த பாதெனிய குறிப்பிட்டுள்ளார்.

பாரதூரமான இந்த அதிர்ச்சி தருகின்ற தகவலானது சாதாரண ஒரு நபரிடமிருந்து வந்திருந்தால் அதை எம்மால் புறக்கணித்து விட முடியும். ஆனால் அரசாங்க மருத்துவ அதிகாரிகள் சங்கத் தலைவரான விசேட மருத்துவ நிபுணரிடமிருந்து வந்துள்ள அத்தகவலை அலட்சியப்படுத்து விட முடியாதிருக்கின்றது. அது வெறும் தகவல் அல்ல, அது இலங்கை மக்களுக்கான ஒரு எச்சரிக்ைக! எமது மக்களின் எதிர்கால ஆரோக்கியத்தைத் தீர்மானிக்கப் போகின்ற ஒரு விடயம் அது.

நச்சுப் பொருட்களை உள்ளெடுப்பதனால் உடலில் எவ்வாறான பாதகமான விளைவுகள் ஏற்படுமென்பதை புதிதாகக் கூற வேண்டிய அவசியமில்லை. இது தொடர்பாக ஊடகங்களில் தொடர்ச்சியாக அறிவூட்டும் தகவல்கள் வெளிவந்து கொண்டேயிருக்கின்றன. மக்கள் மத்தியில் அதிகரித்து வருகின்ற சிறுநீரக பாதிப்பு, புற்றுநோய் போன்ற பாரதூரமான வியாதிகள் பலவற்றுக்கு நச்சு இரசாயனங்கள் பெரிதும் காரணமாக அமைவதாக மருத்துவ தகவல்களில் எச்சரிக்கப்பட்டு வருகின்றது.

நச்சு இரசாயனங்கள் மனிதருக்கு மாத்திரமன்றி, எம்மைச் சூழவுள்ள பிராணிகள் மற்றும் தாவரங்களுக்கும் பாதிப்புகளை ஏற்படுத்துகின்றன. தரைச்சூழல், நீர்ச்சூழல், வளிமண்டலம் ஆகிய அனைத்துக்குமே நச்சுப் பொருட்கள் பெரும் பாதிப்புகளை உண்டாக்குகின்றன. நச்சுப் பொருட்களின் பாவனையானது அதிகரித்துச் செல்வதனால் அதனால் உண்டாகின்ற பாதிப்புகளும் அதிகரித்துக் கொண்டே போகின்றன.

நாம் இன்று பயன்படுத்துகின்ற உணவுப் பொருட்கள் அனைத்திலுமே நச்சு இரசாயனப் பதார்த்தங்கள் இரண்டறக் கலந்து விட்டன. தானிய வகைகள், பழங்கள், காய்கறிகள், உபஉணவுப் பொருட்கள், மென்பானங்கள், பொதி செய்யப்பட்ட உணவுகள் என்றெல்லாம் எந்தவொரு உணவை எடுத்துக் கொண்டாலும், நஞ்சற்ற உணவைக் காண்பதே அரிதாகி விட்டது.

அனைத்துப் பயிர்களுக்கும் இடப்படுகின்ற பசளைகளில் நச்சு இரசாயனங்கள் கலந்திருக்கின்றன. பயிர்களுக்கு விசிறப்படுகின்ற பீடைநாசினிகள் அனைத்துமே கொடிய நச்சுப் பதார்த்தங்கள் ஆகும். உணவுப் பொருட்களை பழுதடையாமல் வைத்திருப்பதற்காக இரசாயனங்கள் பயன்படுத்தப்படுகின்றன. பழங்களைப் பழுக்க வைப்பதற்காக இரசாயனம் பயன்படுத்தப்படுகின்றது. இவையெல்லாம் போதாதென்று உணவுகளின் மணமூட்டிகள், சுவையூட்டிகள், நிறமூட்டிகள் போன்றவையெல்லாம் எமது உடலுக்கு பெரும் தீங்கை விளைவிக்கின்ற நச்சுப் பொருட்கள் ஆகும்.

எமது அன்றாட உணவுப் பொருட்களில் நச்சு இரசாயனத்தைத் தவிர்ப்பதென்பது இலகுவான காரியமல்ல. சுருங்கச் சொல்வதாயின் நச்சு இரசாயனங்களுக்கு நாம் பழகிப் போய் விட்டோமென்பதே உண்மை. இரசாயனப் பசளைகளுக்குப் பதிலாக இயற்கை சேதனப் பசளைகளைப் பயன்படுத்துவதற்கு விவசாயிகள் ஊக்குவிக்கப்படுகின்ற போதிலும் அத்திட்டம் குறிப்பிடத்தக்க அளவு வெற்றியளிப்பதாக இல்லை. இரசாயனப் பசளைகள் இல்லாது போனால் விளைச்சலே கிடையாதென்பதுதான் உண்மை நிலை.

நாம் நீண்ட காலமாக இழைத்து வருகின்ற தவறுகளே இதற்கான காரணங்களாகும். பல தசாப்த காலத்துக்கு முன்னரே எமது விவசாயிகள் இயற்கைப் பசளையைக் கைவிட்டு இரசாயனப் பசளைக்கு பழக்கப்பட்டு விட்டனர். சனத்தொகையின் அதிகரிப்புக்ேகற்ப உணவு உற்பத்தியின் அதிகரிப்பு அவசியம். எவ்வாறாயினும் கூடுதலான விளைச்சலை பெற்றுக் கொண்டால் போதுமென்பதே விவசாயிகளின் எண்ணமாக உள்ளது.

இதன் காரணமாக அளவுக்கு மீறிய உரப் பாவனை மற்றும் பீடைநாசினிகளின் பாவனையினால் எமது அன்றாட உணவுகளே விஷமாகிப் போயுள்ளது. கடைகளில் விற்கப்படுகின்ற எந்தவொரு பீடைநாசினியையோ அல்லது உரவகைகளையோ விவசாயிகள் தடையின்றி வாங்கிப் பயன்படுத்துகின்ற நிலைமை ஆரோக்கியமானதல்ல. அதேபோன்று உணவுப் பொருட்களைப் பதப்படுத்துவதற்கும் அவ்வாறுதான் தாராளமாக இரசாயனங்களைப் பயன்படுத்தி வருகின்றனர்.

நாம் அன்றாடம் உண்கின்ற அத்தனை உணவுகளுமே இன்று நஞ்சாகிப் போய் விட்டன. இவ்வாறான ஆபத்து தொடர்வதற்கு இனிமேலும் இடமளிக்க முடியாது. உணவில் நச்சுப் பதார்த்தங்கள் கலப்பதைத் தடுப்பதற்கான வழிவகைகளைக் காண்பதில் நாடு இனிமேல் கூடுதல் கவனம் செலுத்த வேண்டியது அவசியமாகின்றது

 

http://www.battinews.com/2021/04/blog-post_86.html

 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Popular Now

  • Topics

  • Posts

    • சினிமா காலத்தை வைத்து பார்த்தால் கருணாநிதியே ஆட்சி கதிரையில் அமர்ந்திருக்க முடுடியாது.நீங்கள் விரும்பினால்  படங்களுடன் பூரண விளக்கம் தரப்படும்  ஓகேயா? முதலில் கனிமொழியுடம் தொடங்கவா? ஆதாரம் கேட்டால் படங்கள் போட்டோக்கள் எக்ஸ்சற்றாக்கள் இணைக்கலாம். 😂
    • ஆழ்ந்த இரங்கல்கள். மேலே  ஏராளன் இணைத்த தினக்குரல் பத்திரிகையில் 1933 ஓகஸ்ட்இல் பிறந்த எதிர்வீரசிங்கம் வயது 89 என்று எழுதியிருக்கிறார்கள். 90 என்றுதானே வரவேண்டும்?. அவர் மத்திய கல்லூரியில் படிக்கும் போது இலங்கை சாதனையை முறியடிக்கும் போது ,  கொழும்பில் வெளிவந்த ஆங்கில பத்திரிகை ஒன்றில் இவரது பெயரை எதிர்வீரசிங்க என்று எழுதியிருந்தது. அப்பொழுது மத்திய கல்லூரியின் அதிபர் சிமித் அவர்கள் ‘எதிர்வீரசிங்க அல்ல நாகலிங்கம் எதிர்வீரசிங்கம்’  என்று எழுதிய கடிதம் அதே பத்திரிகையில் பிறகு வந்தது.  ஆசிய விளையாட்டுப்போட்டியில் தங்கப்பதக்கம் வென்றபின்பு யாழ் புகையிரத நிலையத்தில் இருந்து மத்திய கல்லூரிக்கு அழைத்து வரப்பட்டு ,எதிர்வீரசிங்க அவர்களுக்கு சிறந்த வரவேற்பு பாடசாலையில்வழங்கப்பட்டது.  -  மத்திய கல்லூரியின் பழைய மாணவரான எனது தகப்பனார் சொன்ன தகவல் இவரும் , இவரது சகோதரர்களும் படிக்கிற காலத்தில் மத்திய கல்லூரியில்துடுப்பாட்டத்தில் ஆரம்ப வேகப்பந்தாளராக விளங்கினார்கள் (Opening blower). 
    • அட்லீஸ்ட் விஜயலக்சுமிக்கு செய்தது போல் அநியாயம் செய்யாமல் தன்னை நம்பி வந்த பெண்ணை கண்ணியத்தோடு நடத்தினார் என நினைக்கிறேன்🤣. பதில் விளக்கம் போதும் என நினைக்கிறேன்🤣 ஐயகோ….இரு மாநில ஆளுனர்….ஆட்டுகுட்டி கதையை கேட்டு…
    • இல்லை அண்ணாவின் ஆட்சிகாலம் போல இருக்கும்.   
    • அவ‌ங்க‌ள் இட‌த்தில் நேர்மை ஊழ‌ல் இல்லாம‌ இருந்தால் ஏன் த‌மிழ‌ர்க‌ள் திராவிட‌த்தை வெறுக்க‌ போகின‌ம் 2ஜீ ஊழ‌லால் ஒரு இன‌ம் அழிவ‌தை வேடிக்கை பார்த்த‌வ‌ர்க‌ள் பெரியார் ஜாதியை ஒழித்தார் அது தான் குறிப்பிட்ட‌  ஜாதி ம‌க்க‌ள் வ‌சிக்கும் இட‌த்தில் ம‌னித‌க் க‌ழிவை த‌ண்ணீருக்கை க‌ல‌ந்த‌வை....................... சோடா க‌டையில் வேலை பார்த்து விட்டு ம‌ஞ்ச‌ல் வாக்கில் 4புத்த‌க‌த்தோட‌ வ‌ந்த‌வ‌ரின் குடும்ப‌த்துக்கு இத்த‌னை ல‌ச்ச‌ம் கோடி எங்கு இருந்து வ‌ந்த‌து ச‌த்திய‌மாய் கோடி காசுக்கு எத்த‌னை 0 என்று என‌க்கு தெரியாது ஆனால் நீட் தேர்வை ர‌த்து செய்ய‌ எங்க‌ளிட‌ம் ர‌க‌சிய‌ம் இருக்கு என்று சொல்லி ப‌ல‌ பிள்ளைக‌ள் நீட்டால் இற‌ந்து போனார்க‌ள் அத‌ற்க்கு பிற‌க்கு உத‌ய‌நிதியின் பெயர் கொல்லிநிதி கொல்லுநிதியின் ம‌க‌ன் இன்ப‌நிதிக்கு தெரியும் கோடி காசுக்கு எத்த‌னை 0 என்று....................திமுக்காவுக்கு ஓட்டு போட்ட‌ ம‌க்க‌ள் ம‌ழை வெள்ள‌த்தால் பாதிக்க‌ப் ப‌ட்ட‌ போது வீட்டுக்குள் இருந்து க‌டும் வேத‌னை ப‌ட்ட‌வை 4000ஆயிர‌ம் கோடி ஒதுக்கி ப‌ணி செய்தார்க‌ளா அல்ல‌து அதையும் ஊழ‌ல் செய்து மூடி ம‌றைத்தார்க‌ளா...........................ஆண்ட‌வா இனி வ‌ள‌ந்து வ‌ரும் பிள்ளைக‌ளுக்கு ந‌ல்ல‌ அறிவைக் கொடு அப்ப‌ தான் கால‌ம் க‌ட‌ந்து த‌மிழ் நாட்டில் ந‌ல் ஆட்சி ம‌ல‌ரும் நாடும் செல்ல‌ செழிப்பாய் இருக்கும் ம‌க்க‌ளும் குறைக‌ள் இல்லாம‌ எல்லா வ‌ச‌தியோடும் வாழுவின‌ம்...............................................  
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.