Jump to content

இந்தியாவில் ஒரே நாளில் 103,558 புதிய கொரோனா நோயாளர்கள் அடையாளம்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

இந்தியாவில் ஒரே நாளில் 103,558 புதிய கொரோனா நோயாளர்கள் அடையாளம்

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 103,558 புதிய கொரோனா நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதுடன், 478 உயிரிழப்புகளும் பதிவாகியுள்ளன.

Untitled-1.jpg

இது நாட்டின் மொத்த கொரோனா நோயாளர்களின் எண்ணிக்கையை 12,589,067 ஆகவும், இறப்பு எண்ணிக்கை 165,101 ஆகவும் உயர்த்தியுள்ளதாக இந்திய மத்திய சுகாதார மற்றும் குடும்ப நல அமைச்சகம் திங்கள்கிழமை காலை தெரிவித்துள்ளது.

இதனிடையே நேற்யை தினம் கொரோனா தொற்றுக்குள்ளான 52,847 பேர் பூரண குணமடைந்து வைத்தியசாலைகளிலிருந்து வெளியேற்றப்பட்டுள்ளனர்.

அதனால் குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 1,16,82,136 ஆக உள்ளதுடன், சிகிச்சை பெற்று வரும் நோயாளர்களின் எண்ணிக்கையும் 7,41,830 ஆக காணப்படுகிறது.

2020 பெப்ரவரி ஆரம்பத்திலிருந்து ஒரே நாளில் அதிகளவான கொரோனா நோயாளர்களின் நேற்றைய தினம் இவ்வாறு அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

30 மில்லியனுக்கும் மேற்பட்ட கொரோனா நோயாளர்களை கொண்ட அமெரிக்காவுக்கும் சுமார் 13 மில்லியன் கொரோனா நோயாளர்களை கொண்ட பிரேஸிலுக்கும் அடுத்தபடியாக இந்தியா உள்ளது.

 

https://www.virakesari.lk/article/103291

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

உச்சம் தொடும் கொரோனா: என்ன செய்யப் போகிறது இரண்டாவது அலை?

  • எம். மணிகண்டன்
  • பிபிசி தமிழ்

இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை ஒரே நாளில் சுமார் 25 சதவிகிதம் அதிகரித்திருக்கிறது. ஞாயிற்றுக்கிழமையன்று 1.03 லட்சம் பேருக்கு கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்ட நிலையில், திங்கள்கிழமை 1.26 லட்சம் பேருக்கு புதிதாக பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளதாக இந்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.

கொரோனா பாதிப்பு அதிகரித்து வருவதையடுத்து டெல்லியில் இரவு 10 மணி முதல் காலை 5 மணி வரை ஊடரங்கு அமல்படுத்தப்பட்டிருக்கிறது. இந்த நடவடிக்கை வரும் 30-ஆம் தேதி வரை அமலில் இருக்கும் என்று டெல்லி அரசு அறிவித்திருக்கிறது.

ஏற்கெனவே மகாராஷ்டிரா அரசு இரவு நேர கட்டுப்பாடுகளை அம்மாநிலத்தின் பல நகரங்களில் விதித்திருக்கிறது. ஐபிஎல் போட்டிகள் வரும் 9-ஆம் தேதி தொடங்க இருக்கும் நிலையில், மும்பை வான்கடே மைதானத்தின் பணியாற்றும் 3 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மும்பை இண்டியன்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் இடையிலான போட்டி வரும் 10-ஆம் தேதி இந்த மைதானத்தில் நடக்க இருக்கிறது.

நாடு முழுவதும் பாதிப்பு அதிகரித்து வருவதால் 18 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் தடுப்பூசி போடுவதற்கு அனுமதி வழங்க வேண்டும் என வலியுறுத்தி பிரதமர் மோதிக்கு இந்திய மருத்துவர் சங்கம் கடிதம் எழுதியுள்ளது.

உலகின் பல நாடுகள் கொரோனா தொற்றின் மூன்றாவது அலையின் தீவிரத்தை உணரத் தொடங்கியிருக்கும் நிலையில், இரண்டாவது அலையின் உச்சத்தை நோக்கி விரைந்து கொண்டிருப்பதையே புள்ளிவிவரங்கள் காட்டுவதாக நிபுணர்கள் கூறுகிறார்கள்.

முதல் அலையை விட இரண்டாவது அலை தீவிரமாக இருக்கும் என்பது நிச்சயம் என்றாலும், ஏற்கெனவே கற்றுக்கொண்டிருக்கும் படிப்பினைகளும், பயன்பாட்டுக்கு வந்திருக்கும் தடுப்பூசிகளும் நம்பிக்கை தருவதாக நிபுணர்கள் கூறுகிறார்கள். பிற நாடுகளிடம் இருந்தே கொரோனா வைரஸின் தாக்கத்தை இந்தியா புரிந்து கொள்ள வேண்டியிருக்கிறது என்கிறார் விஞ்ஞான் பிரசார் அமைப்பின் மூத்த அறிவியலாளர் டி.வி. வெங்கடேஸ்வரன்.

கொரோனா

பட மூலாதாரம்,GETTY IMAGES

ஐரோப்பாவில் இது மூன்றாவது அலையின் காலம். பிரான்ஸ் நாட்டில் மூன்றாவது பொது முடக்கம் அமல்படுத்தப்பட்டுள்ளது. பள்ளிகள் மூடப்பட்டுள்ளன. அத்தியாவசியப் பொருள்களை விற்பனை செய்யும் கடைகள் மட்டுமே திறந்திருக்கின்றன. இரவு நேரத்தில் வெளியே நடமாட அனுமதி இல்லை. மேற்கு நாடுகளில் கொரோனாவில் முதன்முதலாகப் பாதிக்கப்பட்ட இத்தாலியும் மூன்றாவது அலையால் பாதிக்கப்பட்டிருக்கிறது. ஸ்பெயினில் ஆறு பேருக்கு மேல் கூடுவதற்கு அனுமதியில்லை. நெதர்லாந்து, போர்ச்சுகல் என பல நாடுகளும் கட்டுப்பாடுகளை விதித்திருக்கின்றன. கொரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்டிருக்கும் அமெரிக்காவில் மூன்றாவது அலையின்போது ஒரே நாளில் 3 லட்சம் பேருக்கு பாதிப்பு கண்டறியப்பட்டது.

பொதுமுடக்கக் கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டிருப்பது, முன்னெச்சரிக்கை வழக்கங்கள் குறைந்திருப்பது போன்றவை கொரோனாவின் தாக்கம் அதிகரிப்பதற்கு அடிப்படையான காரணங்கள். இவை தவிர கொரோனா எதிர்ப்பு ஆற்றல் குறைந்திருப்பதும், வேற்றுருவத் தொற்று உருவாகியிருப்பதும் காரணங்களாக இருக்கலாமா என்பது குறித்து ஆய்வு நடைபெற்று வருவதாகவும் வெங்கடேஸ்வரன் கூறுகிறார்.

இந்தியாவைப் பொறுத்தவரை மகாராஷ்டிரா, பஞ்சாப், சத்தீஸ்கர் ஆகிய மாநிலங்களில் கொரோனா பாதிப்பு கவலைக்குரிய வகையில் அதிகரித்து வருவதாக அண்மையில் பிரதமர் நரேந்திர மோதி தலைமையிலான உயர்நிலைக் கூட்டத்தில் சுட்டிக்காட்டப்பட்டது.

இந்தியாவில் கொரோனா பாதிப்பின் முதல் அலை உச்சத்தைத் தொட்டது கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் 17-ஆம் தேதி. அன்று 97,894 பேருக்கு கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டது. அதன் பிறகு கொரோனா பாதிப்பு வேகம் படிப்படியாகக் குறையத் தொடங்கியது. பின்னர் மார்ச் மாதத்தில் மிக வேகமாக அதிகரிக்கத் தொடங்கியது.

"மகாராஷ்டிராவைப் பொறுத்தவரை இரட்டை உருமாற்றக் (Double Mutant) கொரோனா பரவுவதே பாதிப்பு அதிகரிக்கக் காரணம். பிரிட்டனில் உருமாறிய கொரோனா பஞ்சாபில் பரவுகிறது. இது குழந்தைகளுக்கும் பாதிப்பை ஏற்படுத்தி வருவது கவலைதரக்கூடியது" என்கிறார் வெங்கடேஸ்வரன். கொரோனா தொற்றுக்கு இரண்டாவது அலையே கடைசி அல்ல; உலகம் முழுவதும் கணக்கிட்டால் நான்காவது அலை பரவிக் கொண்டிருக்கிறது என்பதையும் அவர் சுட்டிக் காட்டுகிறார்.

உச்சம் தொடும் கொரோனா: என்ன செய்யப் போகிறது இரண்டாவது அலை? - BBC News தமிழ்

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.