Jump to content

நெஞ்சம் மறப்பதில்லை


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

தமிழ் சினிமாவில் சில வருடங்களுக்கு முன்பு பேய்ப் படங்கள் ஆட்டிப் படைத்தன. பலரும் பல விதமான பேய்ப் படங்களைக் கொடுத்தார்கள். அவற்றில் சில படங்கள் பேய் ஓட்டம் ஓடின. சில படங்கள் வந்த சுவடு கூட தெரியாமல் ஓடிப் போயின. அந்த காலகட்டத்தில் இந்த நெஞ்சம் மறப்பதில்லை படம் வந்திருந்தால் நிச்சயம் பேயோட்டம் ஓடியிருக்கும் என்பதில் சந்தேகமில்லை.

வழக்கமான பழி வாங்கும் பேய்க் கதை தான். ஆனால், இது செல்வராகவன் கொடுத்துள்ள பேய்க் கதை என்பதில் தான் வித்தியாசம் இருக்கிறது. திரைக்கதையிலும், கதாபாத்திரங்களின் வடிவமைப்பிலும் தன்னுடைய தடத்தை அழுத்தமாகப் பதித்திருக்கிறார் செல்வராகவன்.

கம்பெனி ஓனரான எஸ்ஜே சூர்யா, மனைவி நந்திதா ஸ்வேதா, குட்டி மகன், நான்கு வேலைக்காரர்களுடன் காட்டுக்கு நடுவில் இருக்கும் பங்களாவில் வசிக்கிறார். அந்த குட்டி மகனைப் பார்த்துக் கொள்ளும் வேலையில் சேருகிறார் ரெஜினா கசன்ட்ரா. தான் வளர்ந்த ஆசிரமத்திற்கும், சர்ச்சுக்கும் நன்றாக உதவி செய்யலாம் என்ற ஆசையில் அங்கு செல்கிறார் ரெஜினா. கொஞ்சம் சைக்கோத்தனமாக இருக்கும் சூர்யாவிற்கு ரெஜினா மீது ஆசை. மனைவி ஊரில் இல்லாத சமயத்தில் ரெஜினாவைக் பாலியல் பலாத்காரம் செய்து, கொலையும் செய்துவிடுகிறார். அவரோடு அந்த வேலைக்காரர்களும் பாலியல் பலாத்காரம் செய்கிறார்கள். பேயாக வரும் ரெஜினா அவர்களை எப்படி பழி வாங்குகிறார் என்பதுதான் மீதிக் கதை.

செல்வராகவன் எந்தக் கதையைச் சொன்னாலும் நேரடியாக புரியும்படி சொல்ல மாட்டார். நாமாக யோசித்து யோசித்து புரிந்து கொள்ளும்படி சுற்றி வளைத்துக் கதை சொல்வார். அது இந்தப் படத்திலும் இருக்கிறது. ஆனாலும், திரைக்கதையையும், கதாபாத்திரங்களின் உருவாக்கத்திலும் அவரது பாணி மாறுபட்டு இருக்கும். அவைதான் இந்தப் படத்தையும் ரசிக்க வைக்கிறது.

ராமசாமி என்று சொன்னால் பிடிக்காது, அதனால் ராம்சே. அந்த ராம்சே கதாபாத்திரத்திற்கு யாரை ரெபரன்ஸ் ஆக வைத்து உருவாக்கினார் என செல்வராகவனிடம் கேட்க வேண்டும். இப்படியெல்லாம் கூட மனிதர்கள் இருப்பார்களா என யோசிக்க வைக்கிறார். செல்வராகவன் யோசித்த அந்த ராம்சே கதாபாத்திரத்தை அவரைவிடவும் எஸ்ஜே சூர்யா நன்றாக உள்வாங்கிவிட்டார் போலிருக்கிறது, நடித்துத் தள்ளிவிட்டார். அவருடைய உடல்மொழி, வசனம் பேசும் தோரணை, நேரத்திற்கேற்ற பார்வை என மிரட்டியிருக்கிறார் சூர்யா.

ரெஜினா கசன்ட்ரா, நந்திதா ஸ்வேதா இருவரும் இதற்கு முன் சில பல தமிழ்ப் படங்களில் நடித்திருக்கிறார்கள். அந்தப் படங்களில் எல்லாம் அவர்களுடைய நடிப்பை வெளிப்படுத்தக் கூடிய கதாபாத்திரம் பெரும்பாலான படங்களில் அமையவில்லை. அவர்களுக்கு மறக்க முடியாத ஒரு படமாக இந்தப் படம் நிச்சயம் அமையும்.

வீட்டு வேலைக்குச் செல்லும் ஒரு சாதாரணப் பெண்ணாக ரெஜினா. அவர் முகத்தில் காட்டும் உணர்வுகளை அதற்கு முன்பாகவே முந்திக் கொண்டு காட்டுகிறது அவருடைய பெரிய விழிகள். பேயாக மாறிய பின் அவருக்கான ஸ்கோப் குறைந்துவிட்டது. இருந்தாலும் அதற்கு முன்பு வரை ஒவ்வொரு காட்சியிலும் ஸ்கோர் செய்துவிடுவதால் அந்தக் குறை தெரியவில்லை. எஸ்ஜே சூர்யாவின் மனைவியாக நந்திதா ஸ்வேதா. ஒரு பணக்கார வீட்டுப் பெண் எப்படியெல்லாம் நடந்து கொள்வாரா அப்படியே நடந்து கொள்கிறார்.

செல்வராகவன் படம் என்பதால் யுவன் இப்படி இசையமைக்கிறாரா அல்லது யுவனுக்காகவே காட்சிகளை அமைக்கிறாரா செல்வராகவன் எனச் சொல்லும் அளவிற்கு சில பல காட்சிகள் அமைந்துள்ளன. படம் முழுவதுமே யுவன்ஷங்கர் ராஜாவின் பின்னணி இசை அந்தக் காட்சிகளை இன்னும் அழுத்தமாய் தூக்கி நிறுத்துகிறது. அரவிந்த் கிருஷ்ணாவின் ஒளிப்பதிவில் பல குளோசப் காட்சிகள். ஒரு வீட்டிற்குள் அதிகம் நகரும் கதையில் கேமரா கோணங்களால் இன்னும் உயிரூட்டியிருக்கிறார்.

இடைவேளை வரை இருக்கும் ஒரு சுவாரசியம் அதன்பின் கொஞ்சம் குறைவது நிஜம்தான். ரெஜினா பேயான பின் தன்னைக் கொன்றவர்களைப் பழி வாங்குவதில் செல்வராகவனிடமிருந்து மேலும் வித்தியாசத்தை எதிர்பார்த்தால் அவரும் வழக்கமான பழி வாங்கலாகவே யோசித்திருக்கிறார். அதை மட்டும் மாற்றி யோசித்திருந்தால் நெஞ்சத்தில் இன்னும் ஆழமாக இடம் பிடித்திருக்கலாம்.

https://cinema.dinamalar.com/movie-review/3004/Nenjam Marappathillai/

 

Link to comment
Share on other sites

இந்த ஆண்டில் முதல் 3 மாதங்களில் நான் பார்த்த அபத்தமான மற்றும் ஆபத்தான படம். பாலியல் வல்லுறவு, கூட்டு வல்லுறவு படுகொலை என்பதையெல்லாம் இந்தளவுக்கு மலினப்படுத்தி எவராலும் எடுக்க முடியாது.

உண்மையிலேயே உலகில் பேய்கள் என்ற ஒன்று இருந்தால், எல்லாம் கூடிப் பேசி செல்வராகவனை ஒரு வழி பண்ணியிருக்கும் இப்படியான ஒரு சமூக பிரக்ஞை அற்ற படம் எடுத்ததுக்கு.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 5/4/2021 at 15:46, நிழலி said:

இந்த ஆண்டில் முதல் 3 மாதங்களில் நான் பார்த்த அபத்தமான மற்றும் ஆபத்தான படம். பாலியல் வல்லுறவு, கூட்டு வல்லுறவு படுகொலை என்பதையெல்லாம் இந்தளவுக்கு மலினப்படுத்தி எவராலும் எடுக்க முடியாது.

உண்மையிலேயே உலகில் பேய்கள் என்ற ஒன்று இருந்தால், எல்லாம் கூடிப் பேசி செல்வராகவனை ஒரு வழி பண்ணியிருக்கும் இப்படியான ஒரு சமூக பிரக்ஞை அற்ற படம் எடுத்ததுக்கு.

விமர்சனத்திற்கு நன்றி,  இந்த படத்தை பாதி கூட பார்க்காமல் நிறுத்தி விட்டொம். 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Popular Now

  • Topics

  • Posts

    • பதில் 9 புள்ளிகளில் வழங்கப்பட்டுள்ளது.
    • என்றுமே உண்மையாக இருந்தால் இந்த உலகில் வாழ்வது மிக சிரமம்.
    • நாளைய தினம் முதல் நாட்டில் எரிபொருள் தட்டுப்பாடு ஏற்படக் கூடிய அபாயம் உள்ளதாக  எரிபொருள் விநியோகஸ்தர்கள்  சங்கம் தெரிவித்துள்ளது.    எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கு விதிக்கப்பட்டுள்ள வற் வரி காரணமாக இந்த நிலைமை ஏற்படக்கூடிய ஆபத்து உள்ளது என்று  அந்த சங்கத்தின் பொதுச் செயலாளர் கபில நாவுதுன்ன(Kapila Navuthunna) தெரிவித்துள்ளார். இதன்படி, எரிபொருள் நிரப்பு நிலையங்களின்  வற் தவணைகள் நாளை முதல் செலுத்தப்பட வேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டார். நாளை முதல் செலுத்த வேண்டிய வற் வரி இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், எரிபொருள் நிலையங்கள் கடும் நெருக்கடி நிலைக்குள்ளாகியுள்ளது. எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கு விதிக்கப்பட்டுள்ள வற் வரி என்பது உரிமையாளருக்கு கிடைக்க கூடிய சிறிய தொகையில் செலுத்த வேண்டிய வற் வரியாகும். அதற்குரிய வற் தவணைகள் நாளை முதல் செலுத்தப்பட வேண்டும்.   அவ்வாறு செலுத்தப்படாது விட்டால் எரிபொருள் நிலையங்களின் அடுத்தக்கப்பட்ட பயணங்கள் மேற்கொள்ள முடியாத நிலைமை ஏற்படும். கடந்த 3 மாதங்களாக இந்த பிரச்சினையை தீர்க்க கோரிக்கை விடுத்தோம். எனினும் கலந்துரையாடல் மேற்கொள்வதற்கேனும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை. 20ஆம் திகதிக்கு பின்னர் எரிபொருள் நிலையங்களில் கடும் நெருக்கடியை சந்திக்கும்.     இந்த VAT வரியால் சிறிய நிரப்பு நிலையங்கள் கூட 10 லட்சத்திற்கும் அதிக VAT வரி செலுத்த நேரிடும் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.   https://tamilwin.com/article/fuel-shortage-in-the-country-1713508148?itm_source=article
    • தனிப்பட்ட செல்வாக்கு? அதே போல் கன்யாகுமரியில் பொன் ராதா வுக்கும் வாய்பிருப்பதாக தெரிகிறது.    
    • எங்களுடைய கட்சியின் பலம் பலவீனங்களை நாங்கள் சொல்லிக் கொண்டே இருப்பதில் அர்த்தமில்லை என்று தமிழரசுக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன்(S.Shritharan) தெரிவித்தார். இது தொடர்பில் அவர் மேலும் குறிப்பிடுகையில், தற்போது தமிழரசுக் கட்சிக்குள்ளே பல இடைவெளிகள் அதிகரித்திருக்கின்றன என்பது உண்மைதான். திகதியை மறுத்த சுமந்திரன் அடுத்தடுத்த கலந்துரையாடல்கள் ஜனவரி மாதம் 10ஆம் திகதி நாங்கள் கட்சியின் உயர்மட்டக் குழு கூட்டம் ஒன்றினை கொழும்பில் உள்ள சம்பந்தன்(R.Sampanthan) ஐயாவின் வீட்டிலே நடத்தியிருந்தோம்.                                சில முரண்பாடான நிலைகள் தொடர்பில் இதன்போது கலுந்துரையாடப்பட்டது. இதனையடுத்து தமிழரசுக் கட்சியின் தலைமைப் பதவிக்கு போட்டியிட்ட நான் உள்ளிட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரன்(M.A.Sumanthiran) மற்றும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் யோகேஷ்வரன் உள்ளிட்டோர் மறுதினம்(11 ஜனவரி) என்னுடைய நாடாளுமன்ற உறுப்பினருக்கான இடத்தில் கலந்துரையாடியிருந்தோம். அதன் பின்னர் மத்திய செயற்குழு கூட்டம் தொடர்பில் நான் ஒரு திகதி கூறியிருந்தேன். சுமந்திரன் அதனை மறுத்து மற்றுமொரு திகதி குறிப்பிட்டார். எனினும் மத்திய செயற்குழு கூட்டம் நிறுத்தப்பட்டது. மாவை சேனாதிராஜா தான் நிறுத்தவில்லை என்று தெரிவித்ததுடன், மருத்துவர் சத்தியலிங்கம் பேசும் நிலையிலேயே இல்லை. இதற்கிடையில் பல நகர்வுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. எங்களுக்கு எதிராக பல நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டன. எங்களுக்கான நியாயம் கிடைக்க வேண்டும் என்பதில் நாங்கள் உறுதியாக இருக்கின்றோம் என தெரிவித்தார்.    https://tamilwin.com/article/ilangai-tamil-arasuk-katchi-current-issues-1713545072
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.