Jump to content

சீமான் எனும் தமிழ் சாவர்க்கர் - ஆர். அபிலாஷ்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, ஈழப்பிரியன் said:

அண்ணாமலை.

இதனை தான் நிழலிக்கு சொல்ல விழைந்தேன். மட்டுறுத்தினர் பக்கசார்பாக இருக்கிறார் என்றவுடன், இவர் என்னவும் எழுதலாம் என்று நினைக்கிறார். அது தவறு.

Link to comment
Share on other sites

  • Replies 145
  • Created
  • Last Reply
2 hours ago, Nathamuni said:

எனக்கு அது எதுக்கு தல.... தேவையில்லை.

அவரது தமிழ் என்னை இணைக்கிறது.

இங்கே வந்து, அவர் கிறிஸ்தவர் என்று சொல்கிறீர்களானால், நீங்கள் ஒரு கேடு கெட்ட, இனவாதம் செய்கிறீர்கள். அவர் கிறிஸ்தவராக இல்லை என்பது எனது அவதானிப்பு. 

இருந்தால் என்ன தவறு.. கிறித்தவராக இருப்பது, தாழ்த்தப்பட்ட்து என்று சொல்ல வருகிறீர்களா? உங்கள் இனவாத சிந்தனையினை ஏற்றுக் கொண்டால், என்ன சாதி என்று நீங்கள் மீண்டும் வர எவ்வளவு நேரமாகும்.

இது, சாதிய, மத ரீதியான இழி சிந்தனை.  அதனை ஊரிலேயே விட்டு விடுங்கள். கனடாவுக்கு கடத்த வேண்டாமே.

நானும் பலருடன் விவாதிக்கிறேன். கிருபன் கூட இந்த எல்லையினை தொட்டதே இல்லை.

நீங்கள் மட்டும் ஏன்?

தல 
தங்கள் ஒரு விசித்திர மனிதன். சீமான் கிறிஸ்தவன் என்று நிறுவ சொல்லி ஒற்றை காலில் நின்ற நீங்கள். இப்ப நான் ஒரு மதவாதி, சாதிவாதி என்று குற்றம்சாட்டுகின்றீர். என்றுடைய கையப்பத்தை நீங்கள் கவனிக்கவில்லையா?. நான் திறந்த அநேக  திரியெல்லாம் சாதி, சமயத்துக்கு எதிரானவை. என்னுடைய தாயும், தந்தையும் வேறு வேறு ஆன சாதியையும் சமயத்தையும் சேர்ந்தவர்கள். சிறு வயதில் 
இருந்தே சாதி சமய வேற்றுமைக்கு  எதிராக குரல் கொடுப்பவன்.

சீமான் பிறப்பால் Sebastian Simon என்ற   கிறிஸ்தவன் என்பது உலகறிந்த ரகசியம். பின்னர் தன் பெயரை செந்தமிழன் சீமான் என்று மாற்றிக்கொண்டார், அவருடைய அண்ணனின் பெயர் James Peter ஆகும். அநேக சிங்கள இனவாதிகள் தங்கள்   கிறிஸ்தவ பெயரை மறைத்துக்கொண்டு தான் திரிகின்றார்கள்( Don Percy Mahinda Rajapaksa, Junius Richard Jayewardene, Solomon West Ridgeway Dias Bandaranaike)

2 hours ago, ஈழப்பிரியன் said:

அண்ணாமலை.

நீங்கள் இட்ட பெயரா? 🤣

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, zuma said:

தல 
தங்கள் ஒரு விசித்திர மனிதன். சீமான் கிறிஸ்தவன் என்று நிறுவ சொல்லி ஒற்றை காலில் 
நின்ற நீங்கள். இப்ப நான் ஒரு மதவாதி, சதிவாதி என்று குற்றம்சாட்டுகின்றீர். என்றுடைய கையப்பத்தை 
நீங்கள் கவனிக்கவில்லையா?. நான் திறந்த அநேக  திரியெல்லாம் சாதி, சமயத்துக்கு எதிரானவை. என்னுடைய தாயும், தந்தையும் வேறு வேறு ஆன சாதியையும் சமயத்தையும் சேர்ந்தவர்கள். சிறு வயதில் 
இருந்தே சாதி சமய வேற்றுமைக்கு  எதிராக குரல் கொடுப்பவன்.

சீமான் பிறப்பால் Sebastian Simon என்ற   கிறிஸ்தவன் என்பது உலகறிந்த ரகசியம். பின்னர் தன் பெயரை செந்தமிழன் சீமான் என்று மாற்றிக்கொண்டார், அவருடைய அண்ணனின் பெயர் James Peter ஆகும். அநேக சிங்கள இனவாதிகள் தங்கள்   கிறிஸ்தவ பெயரை மறைத்துக்கொண்டு தான் திரிகின்றார்கள்( Don Percy Mahinda Rajapaksa, Junius Richard Jayewardene, Solomon West Ridgeway Dias Bandaranaike)

எதை எதையோ பேசி இன்னும் சொதப்ப வேண்டாமே. நகர்வோம். 🤦‍♂️

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
19 minutes ago, zuma said:

தல 
தங்கள் ஒரு விசித்திர மனிதன். சீமான் கிறிஸ்தவன் என்று நிறுவ சொல்லி ஒற்றை காலில் நின்ற நீங்கள். இப்ப நான் ஒரு மதவாதி, சாதிவாதி என்று குற்றம்சாட்டுகின்றீர். என்றுடைய கையப்பத்தை நீங்கள் கவனிக்கவில்லையா?. நான் திறந்த அநேக  திரியெல்லாம் சாதி, சமயத்துக்கு எதிரானவை. என்னுடைய தாயும், தந்தையும் வேறு வேறு ஆன சாதியையும் சமயத்தையும் சேர்ந்தவர்கள். சிறு வயதில் 
இருந்தே சாதி சமய வேற்றுமைக்கு  எதிராக குரல் கொடுப்பவன்.

சீமான் பிறப்பால் Sebastian Simon என்ற   கிறிஸ்தவன் என்பது உலகறிந்த ரகசியம். பின்னர் தன் பெயரை செந்தமிழன் சீமான் என்று மாற்றிக்கொண்டார், அவருடைய அண்ணனின் பெயர் James Peter ஆகும். அநேக சிங்கள இனவாதிகள் தங்கள்   கிறிஸ்தவ பெயரை மறைத்துக்கொண்டு தான் திரிகின்றார்கள்( Don Percy Mahinda Rajapaksa, Junius Richard Jayewardene, Solomon West Ridgeway Dias Bandaranaike)

நீங்கள் இட்ட பெயரா? 🤣

நீங்கள்  மட்டும்தான் சூப்பர் அறிவுடன் சீமான் ஆதரவாளர்களுடன் கொள்ளு படுக்கிறியள்  மற்றவையல்  தங்கடை  அதிகாரத்தை பயன்படுத்தி மறைமுகமா கொள்ளுப்படுகினம் இதெல்லாம் மோகனுக்கு தெரியுமா தெரியலை .

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 5/4/2021 at 14:20, கிருபன் said:

 

348DAD88-A8BD-41FC-A691-3E77E90AA8D9.jpeg
 
D768A66F-7CFD-4627-8951-823F3C2614A1.jpeg
 

 

எனக்கு சீமானின் மேடை உடல் மொழி, பேச்சுத்திறன், அவருடைய சூழலியல், மாநில தன்னுரிமை குறித்த கருத்துக்கள் பிடிக்கும் என்பதை முதலிலேயே சொல்லி விடுகிறேன். திமுக எதிர்ப்பை அவர் கூவிக்கூவி விற்பதாலும் எனக்கு அவர் மீது கோபமில்லை. திமுக ஒழிப்பை அவர் தன் இலக்காகவும் வைக்கலாம். ஒரு கட்சியின் இலக்கு என்கிற விதத்தில் தப்பில்லை. ஆனால் இந்த மேற்பூச்சுகளை சுரண்டி எடுத்து விட்டால் சீமானிடம் ஒன்றுமில்லை என்பதே பிரச்சனை. இந்த புரட்சிகர கருத்துக்களும் சீமானுடைய சொந்த கருத்துக்கள் அல்ல என்பதே பிரச்சனை. அவர் கல்வி, வேலை வாய்ப்பு, மாநிலத்தின் பொருளாதார வளர்ச்சித் திட்டங்களுக்கு வைக்கும் மாற்றுகள் பற்றி பேசும் போது அவருடைய போதாமை, அவருக்குள் ஒளிந்திருக்கும் சமூக, பொருளாதார அறியாமை வெளிப்படுகிறது என்பதே பிரச்சனை. அதை விட ஆகப்பெரிய பிரச்சனை ஜனநாயக ஆட்சிமுறையில் அவருக்கு அடிப்படையிலேயே நம்பிக்கை இல்லை என்பது. இந்த சுவாரஸ்யமான வெறும் பேச்சால் அவர் இளந்தலைமுறையினரில் அரசியல் புரிதலோ சமூக வரலாற்று வாசிப்போ முதிர்ச்சியோ இல்லாதவர்களை ஈர்த்து வருகிறார், அவர் எதிர்காலத்தில் ஒரு கவனிக்கத்தக்க சக்தியாக வளர்ந்து விடலாம், (கமலைப் போன்றே) எதிர்காலத்தில் பாஜகவுக்கான கலாச்சார களத்தை அவர் தயாராக அமைத்திடலாம் என நினைக்கும் போது எனக்கு நிஜமாகவே கவலை ஏற்படுகிறது.

 

சீமானின் கல்விக் கொள்கைக்கு முதலில் வருகிறேன். அவர் அரும்பு, மொட்டு, மலர் என ஒரு திட்டத்தை வைக்கிறார். இது மேம்போக்காக கேட்க ஏதோ மனிதாபிமான சிந்தனை கொண்ட புரட்சித் திட்டம் எனத் தோன்றும். ஆனால் அவருடைய பேச்சுக் கவர்ச்சியில் இருந்து வெளிவந்து என்னதான் அவர் சொல்ல வருகிறார் என ஊன்றி கவனித்தால் இது எவ்வளவு அபத்தமான ஆபத்தான கல்விக் கொள்கை என புரியும்:

 ஐந்தாம் வயது முதல் ஒரு குழந்தை முறையான கல்வியை ஆரம்பித்தால் போதும் என்கிறார். சரி தான். அடுத்து தான் விவகாரமே துவங்குகிறது - ஆங்கிலம், தமிழ், வரலாறு, அறிவியல், கணிதம் போன்ற அடிப்படை பாடங்கள் எவையும் கட்டாயமாக கற்பிக்க தேவையில்லை, இவற்றில் தேர்வு எழுதவும் அவசியம் இல்லை என்கிறார். அதாவது இந்த பாடங்களை electivesஆக மாற்றலாம் என்கிறார். அதுவும் தேர்வில்லாத தேர்வுப்பாடங்கள். கேட்க நன்றாக இருக்கிறதல்லவா, ஆனால் இங்கே தான் சிக்கலே. ஒரு குழந்தைக்கு ஆங்கிலம் வேண்டாம் என்றால் தமிழ் மட்டுமே படிக்கலாம். கணிதம், அறிவியல் கூட தவிர்த்து விடலாம் என்பது சீமானின் கொள்கை. எனில் நாளை இந்த குழந்தைக்கு வாழ்க்கையின் அடிப்படைகள் எப்படி புரியும்? நியூட்டனின் மூன்றாவது விதி என்றால் பெயரளவில் கூட புரியாமல் போய் விடும். கேல்குலேட்டர் இல்லாமல் சின்ன பெருக்கல் போட தெரியாமல் போய் விடும். வரலாறு படிக்காத ஒரு குழந்தைகளிடம் நாம் அனைவரும் ஆரியர்கள் என சங்கிகள் சொன்னால் அதை மறுத்துப் பேசும் அறிவு கூட இராது. தமிழ் மொழியின் வளர்ச்சியில் மாற்று மொழியை தாய்மொழியாய் கொண்டவர்களின் பங்களிப்பு என்னவென்று தெரியாது. பொன்னியின் செல்வன் படித்தால் அதில் ஏன் ஆழ்வார்க்கடியான் நம்பி மதப்போர் புரிகிறான் எனப் புரியாது. ஆங்கிலத்தில் பேசவோ எழுதவோ தெரியாத ஒரு குழந்தைக்கு இந்த உலகின் அறிவுச்செல்வங்கள் எப்படி போய் சேரும்? இதை ஏன் சீமான் வலியுறுத்துகிறார் என்றால் தன்னை கேள்வி கேட்காத ஒரு மூடக் கூட்டத்தை அவர் உருவாக்க விரும்புகிறார் என்பதும், அவருக்கு போதுமான முறையான கல்வி கிடைக்காததன் போதாமை இருக்கிறது என்பதையுமே காரணங்களாக காண வேண்டி உள்ளது. ஏனென்றால் மண்டையில் மசாலா உள்ள எந்த கல்வியாளனுமே இந்த அரும்பு, மொட்டு பின்னாத்தல்களை ஏற்க மாட்டான்.

சீமான் அடுத்து சொல்வதைப் பாருங்கள்:

 சின்ன வயதிலேயே என்ன திறனை, ஆர்வத்தை ஒரு குழந்தை வெளிப்படுத்துகிறதோ அதில் மட்டுமே அக்குழந்தைக்கு பயிற்சி அளிக்க வேண்டும், வேறு விசயங்களில் அதை ஈடுபடுத்த அவசியமில்லை என்கிறார். இதற்கு அவர் உதாரண்மாக காட்டுவது சச்சினையும் ஏ.ஆர். ரஹ்மானையும். ரஹ்மான் அடிப்படை பள்ளிக்கல்வி பெற்றவர். நவீன காலத்தின் அனுகூலங்களை அனுபவித்து தன் இசையை விரிவுபடுத்தியவர். அவரும் சரி, சச்சினும் சரி விதிவிலக்குகள். ஒரு குழந்தை சின்ன வயதில் பாட்டில் ஆர்வம் காட்டுகிறது என்பதற்காக பாட்டு மட்டுமே பயின்றால் போதும் என வளர்ப்பது ஆபத்தானது - ஏனென்றால் ஒருவருடைய திறன் என்பது வெளிப்பட்டு, அதில் முழுமையான ஈடுபாடும் தோன்ற ஒரு குழந்தைக்கு பதின்வயதைத் தாண்ட வேண்டி வரலாம் என உளவியல் கூறுகிறது. எட்டு வயதில் இசையில் ஆர்வம் காட்டும் ஒரு குழந்தை பதிமூன்று வயதில் விமானப் பயணியாக விரும்பலாம். பதினாறு வயதில் நிர்வாகவியல் படிக்க விரும்பலாம். அப்போது என்ன செய்வீர்கள்? அதுவரை வேறெதையுமே படிக்காத அந்த குழந்தையின் நிலை என்னவாகும்? அம்போவென தெருவில் விட்டு விடுவீர்களா?

 

இதே பரிந்துரையைத் தான் பாஜகவின் புதிய கல்விக்கொள்கையும் வைக்கிறது - என்ன தேர்வுகளை சீமான் தவிர்க்கிறார், அதைத் தவிர அவருக்கும் சங்கிகளின் கல்விக் கொள்கைக்கும் வித்தியாசமில்லை. இதை அவர் குறிப்பிட்டு பெருமைப்பட்டு வேறு கொள்கிறார். கேவலமாக இல்லையா? மேலும் சங்கிகளின் குலக்கல்வி பரிந்துரையையும் சீமான் வேறுவடிவில் (தொழிற்கல்வி) முன்வைக்கிறார்.

 

அடுத்து சீமானின் வேலை வாய்ப்பு, வணிக, உற்பத்தி கொள்கைகளுக்கு வருவோம். இங்கு தான் அந்த பிரசித்தமான ஆடு, மாடு வளர்ப்பு கொள்கை வருகிறது. தமிழர்களின் பூர்வீக தொழில்களுக்கு நாம் மீள வேண்டும் என்கிறார். அது என்ன? கடலை மிட்டாய் செய்வதில் இருந்து பயிர்களை விளைவிப்பது வரை குறிப்பிட்டு இவற்றை செய்து வெளிநாட்டுக்கு உற்பத்தி செய்தால் நாம் பல மடங்கு வளர்ச்சியை பெறலாம் என்கிறார். இதற்கெல்லாம் சீமானுக்கு எந்த புள்ளிவிபர ஆதாரமும் இல்லை. தமிழ் நாட்டில் இருந்து பல லட்சம் கோடிகளுக்கு கடலை மிட்டாய், நீராகாரம், வேம்புக்குச்சி போன்றவற்றை உற்பத்தி செய்து ஏற்றுமதி செய்ய எந்த வெளிநாட்டு எம்.என்.சியும் இன்னும் அவரை அணுகியதாக தெரியவில்லை. அவர் பாட்டுக்கு அடித்து விடுகிறார். யாரும் அறிவுசார் வேலைகளுக்கு போக வேண்டியதில்லை, கார் தொழிற்சாலைகளை வெளியேற்றுவோம், இங்கு எந்த அயல் தொழில்களுக்கும் இடமில்லை, “அண்ணாமலை”, “சூரிய வம்சம்” பாணியில் பால்விற்றும், பேருந்து ஓட்டியும் நாம் பெரும்பணக்காரர்கள் ஆகி விடலாம் என்கிறார். எந்த பொருளாதார, சமூக அறிவும் இல்லாத ஒரு மாக்கானால் மட்டுமே இப்படியெல்லாம் தனக்கு நிபுணத்துவம் இல்லாத துறைகளை சீர்திருத்தம் செய்வதற்கான பரிந்துரைகளை தயக்கமின்றி சொல்ல முடியும். அதனால் தான் சொல்கிறேன் - சீமானுக்கு (நமது ஜியைப் போன்றே) சொந்த அறிவு இல்லை. ஏற்கனவே சொல்லப்பட்டதை கடன்பெற்று கண்ணை உருட்டி, மீசையை முறுக்கி, அங்கிங்கு திரும்பி போஸ் கொடுத்து, கையை நீட்டி முழக்கி நடித்துக் காட்டி பேசி கைதட்டு வாங்கத் தெரியும். அவருடைய சொந்த சரக்கை எடுத்து விடும் போது தான் இவர் ‘மிக ஆபத்தான ஒரு பேதை’ என நமக்குப் புரிகிறது. 

 

அடுத்து, அவருடைய ‘வடுகர்களை ஒழிப்போம்’ கொள்கைக்கு வருவோம் - தமிழகத்தில் உள்ள பிற்படுத்தப்பட்ட, மிக பிற்படுத்தபட்ட சாதிகளின் பட்டியல் இணையத்தில் கிடைக்கிறது. அதைத் திறந்து பாருங்கள். நம்மிடைய வாழும் பற்பல சாதி மக்களின் தாய்மொழி தமிழ் மட்டுமல்ல, அது தெலுங்காக, சௌராஷ்டிராவாக, கன்னடாவாக, உருதுவாக வேறு மொழிகளாக உள்ளது. இவர்கள் பல தலைமுறைகளாக இங்கு இருப்பவர்கள்.  இங்கே உழைத்து, வரி செலுத்தி, வாக்களித்து நமது மாநிலத்தின் வளர்ச்சிக்கு, கலாச்சார, அரசியல் எழுச்சிக்கு பங்களித்தவர்கள். இவர்களா வந்தேறிகள்? 

 

 சீமான் இயக்குநராக இருந்த போது அவர் தமிழர்களிடம் மட்டும் தான் பணியாற்றினாரா? அவருக்கு பெயர் பெற்றுத் தந்த “தம்பி” படத்தின் தயாரிப்பாளர் ஒரு கன்னடியர். “எவனோ ஒருவனை” தயாரித்தது வட இந்தியர். சீமானின் பட நாயகிகள் அனேகமாக வேற்று மொழிப் பெண்கள். வட இந்தியர்களை அடித்து துரத்தும் சீமானுக்கு சினிமா என்று வந்தால் மட்டும் அவர்களுடைய தயவு தேவைப்பட்டதா? கீர்த்தி ரெட்டி, சிவரஞ்சனி எல்லாரும் வடுகர்கள் அல்லவா? சினிமாவில் மட்டும் தனித்தமிழ் கொள்கை கிடையாதா? இல்லை, நீங்கள் வட இந்தியர்களை ஓட விடும் போது கோடம்பாக்கத்துக்கு மட்டும் விதிவிலக்கு அளிப்பீர்களா?

 

இவர்கள் அந்நியர்கள், எந்த அதிகாரத்துக்கும் வரக் கூடாது என சீமான் சொல்வதை நிறைவேற்றினால் தமிழ்நாட்டின் கதி என்னவாகும்? ஒன்று சீமானுக்கு இங்கு வாழும் பலதரப்பட்ட மக்களின் மொழிப்பின்னணி பற்றி, அவர்களுடைய தாய்மொழி குறித்த புள்ளிவிபரங்கள் தெரியாது. அல்லது அவர்கள் சிறுபிள்ளைத்தனமாக உளறுகிறார். ஆனால் ஒருவேளை சீமானைப் போன்றவர்களிடம் ஆட்சி போனால் பாஜக ‘இஸ்லாமிய வந்தேறிகளுக்கு’, ‘இந்து விரோதிகளுக்கு’ சி.ஏ.ஏ முகாம்களை அமைப்பது போல சீமான் மொழிசார்ந்த வந்தேறிகளின் அடிப்படை உரிமைகளை பறித்து, அவர்களுக்கு முகாம்கள் அமைத்து சிறைவைப்பார் என்பதில் எனக்கு சந்தேகமில்லை. பல பேச்சுகளில் அவர் இத்தகைய மக்களை சிங்களவருடன் ஒப்பிடுவதை கவனியுங்கள். சிங்களவர்கள் தமிழரை அழித்ததற்கு பழிவாங்குவோம் என்கிறார். எவ்வளவு ஆபத்தான பேச்சு இது.

“வடமாநில தொழிலாளர்கள் நான் ஆட்சிக்கு வந்தால் பெட்டியை தூக்கிக் கொண்ட ஓட வேண்டியது தான்” என்று சிரிக்கிறார். அவர்கள் என்ன தப்பு செய்தார்கள்? அவர்கள் குறைந்த கூலிக்கு நமது பொருளாதார வளர்ச்சிக்கு நல்கும் பங்களிப்பு முக்கியமில்லையா? உழைக்கும் வர்க்கத்தை ஏதோ கொள்ளைக்காரர்களைப் போன்றா வர்ணிப்பது? சரி நீங்கள் இவர்களை துரத்திய பின் இதையே வேறு மாநில அரசுகள் அங்கு பணி செய்யும் தமிழர்களுக்கு செய்தால் என்னவாகும்? தாராவியில் உள்ள தமிழர்களை சிவசேனா ஆட்கள் சட்டமியற்றி வெளியேற்றினால் அவர்கள் எங்கு போவார்கள்? அவர்களுக்கு நீங்களா வேலை கொடுப்பீர்கள்? அவர்களுக்கு நீங்களா இங்கு வீடு கட்டித் தருவீர்கள்? வெளிமாநிலங்களில் இருந்து துரத்தப்படும் தமிழ் மென்பொருளாளர்களுக்கு, மருத்துவர்கள், வியாபாரிகளுக்கு என்ன வேலை தருவீர்கள்? கருப்பெட்டி, கடலைமிட்டாய் உற்பத்தியா? பால் கறப்பதா? இல்லை நீங்களே பரிந்துரைப்பது போல டீக்கடை வைப்பதா? ஏஸியில் உட்கார்ந்து, வசதியாக வேலை செய்து லட்சங்களில் சம்பாதிக்கிறவர்கள் எதற்கு பால்கறந்து, சாணி அள்ளி, டீ அடித்து அதே பணத்தை ஈட்ட வேண்டும்? உங்கள் ஆட்சியில் உண்மையில் அப்படி ஒரு புலம்பெயர்வு நடந்தால் வேலை இழந்து இங்கு வரும் நிலை ஏற்பட்டால் ஒரு பெருங்கூட்டத்துக்கு உடனடி வேலையளிக்க நமக்கு எந்த கட்டமைப்பும் இல்லை, அவர்கள் கடைசியில் சோறின்றி சாலையில் கிடந்து இரப்பார்கள் என்பதே உண்மை.

 

 மேடைக்கு மேடை பாஜகவை, மோடியை சீமான் விமர்சித்தாலும் அவர் மோடியை போன்றே ஆபத்தான, மனதளவில் ஹிட்லருக்கு இணையான ஒருவர் என்பதில் எனக்கு இப்போது சந்தேகமில்லை. மோடி ஒரு கற்பிதமான ஆதி இந்து தேசத்தை கனவு காண வைத்தால், அந்த அடையாள பெருமிதம் மூலம் வடமாநில வாக்குகளை வென்றால், சீமானோ அதே மாதிரி ஒரு கற்பிதமான பழந்தமிழ் நிலச்சுவாந்தார் சமூகத்தை மீளமைக்க முயல்கிறார், அது ஒரு பரிசுத்தமான உயர்வான சமூக நிலை என கதை விடுகிறார், அப்படி கதைவிட்டு வாக்குகளை வெல்லலாம் என கனவு காண்கிறார். இருவருமே நடைமுறைக்கு பொருந்தாத விசித்திர திட்டங்களை முன்வைத்து அரசியல் பண்ணுகிறார்கள்; இத்திட்டங்களின் விளைவுகள் குறித்த தொலைநோக்கு பார்வை இல்லாமல் இருக்கிறார்கள். இருவருமே மாற்றுத்தரப்புடன் விவாதம் செய்கிற, எதிர்கருத்துக்களை பரிசீலிக்கிற ஜனநாயக மாண்பு இல்லாதவர்களாக இருப்பதுடன் தமது தொண்டர்களையும் அவ்வாறே பயிற்றுவிக்கிறார்கள். இருவருமே பேசிப் பேசியே ஆட்சியைப் பிடிப்பதில் ஆர்வம் கொண்டவர்கள். இருவருமே அறிவியல், வரலாற்றுப் புரிதல் சற்றும் இல்லாதவர்கள். இருவருமே, முக்கியமாக, தன்னை சதா முன்னிறுத்துகிற தன்விருப்ப மனநிலை கொண்ட சர்வாதிகாரிகள். ஒரு உதாரணம் தருகிறேன்:

 

ஒரு உரையில் சீமான் தன்னுடைய ஆட்சியில் நா.த.க செயல்படுத்தும் (தோன்றித்தனமான) முடிவுகளுக்கு எதிராக சிலர் நீதிமன்றம் போவார்கள் எனறு சொல்லி விட்டு “ஹா ஹா ஹா” என சிரிக்கிறார். அடுத்து அத்தகையோரை நாங்கள் ரோட்டில் வைத்து வெட்டுவோம் என்கிறார். அதாவது இவர்களை விமர்சிக்கும், கேள்வி கேட்கும், எதிர்த்து போராடும் யாரையும் படுகொலை செய்வார்களாம். இவருக்கு கைதட்டி ஆதரவு தரும் இளைஞர் கூட்டம் எவ்வளவு கொடூரமானவரக்ளாக இருக்க வேண்டும்? இப்போது ஆளும் அரசை விமர்சித்ததற்காக அந்த ஆளுங்கட்சியின் தொண்டர்கள் உங்கள் சகோதரனை, சகோதரியை, தாய், தந்தையை ரோட்டில் வைத்து வெட்டினால் இப்படி கைதட்டி மகிழ்வீர்களா?

 

ஒரு காலத்தில் சீமானுடன் நெருக்கமாக இருந்த அமீர் அண்மையில் ஒரு பேட்டியில் பாஜகவினர், ஆர்.எஸ்.எஸ்காரர்கள் நா.த.கட்சியில் ஊடுருவி உள்ளதாக குறிப்பிட்டதை, சீமானும் பொன்.ராதாகிருஷ்ணனும் மறைமுக புரிந்துணர்வுடன், நட்புடன் அரசியல் செய்து வருவதாக சொன்னதை இங்கு குறிப்பிட வேண்டும். எனில் ஏன் நா.த.கட்சி பாஜகவை எதிர்க்கிறது?

 

சீமான் கிடைத்த வாய்ப்பில் எல்லாம் மோடியை திட்டுவதும், ஒரு மனிதகுல விரோதி என அவரை வர்ணிப்பதும் ஒரு ஈடிபல் காம்பிளக்ஸ் என நினைக்கிறேன் - தந்தை உருவாக உள்ள மோடி மீது மகன் உருவான சீமானுக்கு உள்ள பொறாமையும், தந்தை உருவின் பிம்பத்தை மறுத்து அவரது அதிகாரத்தை தான் கைப்பற்ற வேண்டும் எனும் இச்சையே இங்கு வெளிப்படுகிறது. உள்மனத்தில் அவர் ஒரு ‘தமிழக மோடியாக’ உருவாகவே ஆசைப்படுகிறார். ஆனால் தந்தையின் இடத்தை அடைய விரும்பும் எந்த மகனையும் போல அதை ஒப்புக்கொள்ள விரும்பாமல் கசப்பாக வெளிப்படுத்துகிறார்.

 

சீமானுக்கெல்லாம் இவ்வளவு சீரியஸான பதிவு தேவையா என சிலர் கேட்கலாம் - நா.த.க ஒரு வளர்ந்து வரும் கட்சி, அது தன்னுடைய தொண்டர்களை விரிவுபடுத்தி வருகிறது, அடுத்த பத்தாண்டுகளில் இன்னும் வளரும் என்று புரிந்தே இதை எழுதுகிறேன். இதைப் போன்ற அபத்தமான கருத்துக்கள் அன்று எண்பது ஆண்டுகளுக்கு முன்பு இந்து மகாசபை, ஆர்.எஸ்.எஸ்ஸால் பேசப்பட்டு பொது சமூகத்தால் புறக்கணிக்கப்பட்டன அல்லவா! ஆனால் அவை இன்று வளர்ந்து பாஜகவின் சித்தாந்தமாகி நம்மை அடிமைப்படுத்தவில்லையா? சீமான் ஒரு தமிழ் சாவர்க்கர். அவரை நாம் இப்போதே அடையாளம் கண்டு கிள்ளி எறிய வேண்டும்!

 

பின்குறிப்பு: சீமான் குறித்து நான் இங்கு சொல்லி உள்ளவை தமிழ் தேசிய இயக்கம் மீதான என் விமர்சனம் அல்ல. தமிழ் தேசியம் மீது எனக்கு மரியாதையும் நம்பிக்கையும் உள்ளது. அதன் ஒரு சீரழிந்த பாசிச வடிவம் மட்டுமே சீமான் உளறிக் கொட்டுவது.

 

http://thiruttusavi.blogspot.com/2021/04/blog-post_36.html

 

 

எனக்கு உங்களின் பந்தியில் உடன்பாடு இல்லை சில விடயங்களை இந்த பந்தியின் ஊடாக நானும் தெளிவுற்று நீங்களும் தெளிவுபட நட்பு கலந்து பதில் அளிக்க விரும்புகிறேன்.

திரு சீமான் அவர்கள் திமுக ஒழிப்பே பிரதான நோக்காக கொண்டுள்ளதாக நீங்கள் குறிப்பிட்டுள்ளீர்கள் அது உண்மையே.

திரு சீமான் குறிப்பிடும் கல்வி, வேலைவாய்ப்பு ,மாநிலத்தின் பொருளாதார வளர்ச்சித் திட்டங்கள் என்ன, மாற்று அதற்கான விடைகள் உங்களுக்கு புரியவில்லை என்பதே இதற்குரிய விடை.

 

எனது பார்வையில் சீமானும், கட்சியும் மிகவும் ஒரு தூர நோக்கோடு பரந்து பட்ட பொருளாதார வரையறைகளை பயின்று அல்லது உள்வாங்கி நவீனத்துவ பொருளாதார சித்தாந்தங்கள் சமூக விழுமியங்கள் இதர மானிடவியல் தத்துவங்களை இலகு படுத்தி புகுத்த முனைகிறார்கள் என்பதே உண்மை. ஏனெனில் வளர்ச்சி அடைந்த அல்லது மேலைத்தேய நாடுகளில் மேற்குறிப்பிட்ட அம்சங்களை அவர்கள் ஆராய்ந்து அதனை தங்களது மாநிலத்தில் புகுத்தி கிடைக்கின்ற அரசியல் வெற்றி தங்களது நோக்கங்களை அடைய மிகவும் இலகுவாகவும் ஒரு முன்னுதாரணமாக இருக்கும் என நம்புகிறார்கள். அத்துடன் நவீன ஜனநாயக விழுமியங்களை பின்பற்ற துடிப்பது போல் தெரிகிறது.

 

சீமானின் கல்விக் கொள்கையை விமர்சிக்கும் பொழுது உங்களுடைய அறியாமையை அல்லது பரந்துபட்ட அறிவு இன்மையை உணர்கிறேன். மேலைத்தேய நாடுகளில் உதாரணமாக இங்கிலாந்தில் நான்கு வகையாக அவர்கள் தங்களது பாட போதனைகளை வகுத்திருக்கிறார்கள். வயது அடிப்படையில் அவர்கள் பாகுபடுத்தி அதாவது, (Key Stage) முக்கிய நிலை - 1,2,3 and 4.

 

 

Key Stage

Age of Children

Primary

1

5 – 7-அரும்பு

Primary

2

7- 11-மொட்டு

Secondary

3

11-14-மலர்-முதல் நிலை 1

Secondary

4

14 – 16-மலர்-முதல் நிலை-2

 

உங்களுக்கு சீமான் குறிப்பிடுவது இன்னும் சரியாக புரியவில்லை அல்லது ஒரு குதர்க்கமான வாதத்தை அல்லது ஒரு கருத்தை புகுவதற்காக நீங்கள் இதை மேலோட்டமாக குறிப்பிட்டு அதில் உள்ள ஆழமான விடயங்களை தவிர்த்து செல்கிறீர்கள்.

 

உங்களுக்கு, உதாரணத்துக்கு பிரித்தானியாவில் உள்ள கல்வி முறையினை சீராக அறிந்து கொள்வீர் ஆக இருப்பின் உங்களுக்கு சீமான் சொல்வது என்னவென்பது புரியும். நீங்களே உங்களது அறிவு எவ்வளவு என்பதனையும் உங்களது ஒப்பிட்டு அளவு எதில் தொடங்குகிறது என்பதை நீங்கள் குறிப்பிடாமல் சொல்வது நீங்கள் ஒரு பிற்போக்கு அல்லது ஒரு மூடத்தனமான நச்சு கலந்த ஒரு கருத்தை உருவாக்க எத்தனிக்கும் ஒரு பேர்வழி என்பது புலனாகின்றது.

 

சீமான் தனது கல்விக் கொள்கை, தனது தாய் மொழிக் கொள்கையும், அதன் வரலாறு சம்பந்தமான சமூக விஞ்ஞான கலந்து அறிவியலோடு மேலைத்தேய நாடுகளில் உள்ளதைப் போன்று வகைப்படுத்தி தனது மாநிலத்தில் புகுத்த முயல்கின்றார்.

 

உங்களுக்கு ரகுமானை, சச்சின் போன்றோரை - இரு நபர்களை மட்டும் உதாரணமாக காட்டுகிறீர்கள். சீமான் சொல்வது ஒவ்வொருவரும் ஏதோ ஒன்றில் தனித்துவம் வாய்ந்தவர்களாக இருப்பார்கள். அதை கண்டுகொள்வதே ஒரு ஆசிரியரின் வெற்றி இருக்கும். இப்படியான ஒரு ஒழுங்கான விதிமுறைகளை பிரித்தானியாவில் ஆரம்பம் முதல் கையாண்டு ஒரு பருவத்தில் அதாவது வயது 14 அவர்கள் என்ன திறனை வெளிப்படுத்தினார்கள் என்பதனை தங்கள் மாணவர்களுக்கு தெரியப்படுத்துவார்கள் . அதனைக்கொண்டு பெற்றோரும் மாணவர்களும் தங்களது நீண்ட ஆரம்ப பயணத்தின் பெறுபேறுகளின் அடிப்படையில் அவர்களது அடுத்த கட்டத்திற்கான பாடங்களை அவர்கள் தெரிவு செய்வார்கள். அது விளையாட்டாக இருக்கலாம் அல்லது ஒரு துறைசார்ந்த மேற்படி பார்க்கலாம் எதுவாகினும் அவர்களின் ஆரம்ப கட்ட வெளிப்படுத்துதல் தீர்மானிக்கின்றது. இதனையே சீமான் குறிப்பிடுகின்றார் நீங்கள் இந்தியாவை மற்றும் மற்றும் அயல் நாடுகளை உங்களது ஒப்புக்கு எடுத்துக் கொள்வீர்களானால் இதிலுள்ள முன்னேற்றங்கள் உங்களுக்கு புலப்பட போவதில்லை.

 

நீங்கள் சீமானின் வேலைவாய்ப்பு, வணிகம், உற்பத்தி, சந்தைப்படுத்தல் கொள்கைகள் குறிப்பிடும் போது உங்களது தெளிவில்லாத தன்மையினை காட்டுகிறீர்கள். இந்தியா ஒரு தன்னிறைவு அடைந்த நாடு அல்ல.

இன்னும் எத்தனையோ இலட்சம் பெயர்கள் உணவின்றி கொடுக்க யாரும் இல்லாமல் இருக்கின்றார்கள். ஒவ்வொரு தனிமனிதனும் தரமான ஒரு வாழ்வாதாரத்தை கொண்டிருக்கவில்லை. ஒரு சராசரி இந்தியன் உடைய வாழ்வாதாரத்தை ஒரு மேலத்தேய நாடு உள்ளவர் ஒருவருடன் ஒப்பிடுகையில், சீமானின் பொருளாதாரக் கொள்கை மிக மிக சிறப்பானது நிலம் சார்ந்த பொருளாதாரக் கொள்கைகள் வளர்ச்சி நுணுக்கங்கள் எப்பொழுதுமே அவர்களை தன்னிறைவான இடத்துக்கு கொண்டு செல்லும். சீமானின் பொருளாதாரக் கொள்கை மிக மிக சிறப்பானது. தயவுசெய்து Japan and Singaporeநாட்டினுடைய பொருளாதாரக் கொள்கையை ஆராய்ந்து பார்க்கவும்.தன்னுடைய மாநிலத்தில் உள்ள பொருட்களை எவ்வாறு வெளிநாடுகளில் சந்தை படுத்தலாம் என்பதனை மேலோட்டமாக திட்டமிடுகிறார். உங்களுக்கு உதாரணத்திற்கு கேரளாவில் உள்ள சில பொருட்கள் ஐரோப்பிய அரேபிய சந்தைகளில் இப்பொழுது பெருவாரியாக கிடைக்க தொடங்கி விட்டது. ஆனால் தமிழ்நாட்டில் இருந்து வருகின்ற பொருட்களோடு ஒப்பிடும் பொழுது அவர்கள் தங்களது திறனை மேம்படுத்துவது அவர்களுடைய பொருட்களின் தரத்திலும், வடிவமைப்பிலும் தெரியப்படுத்துங்கள். உங்களது கவனத்திற்கு பலாப்பழம் இப்பொழுது தாய்லாந்து மற்றும் கேரளத்து இறக்குமதிகள் ஐரோப்பியர்கள் மற்றும் அரேபியர்களை வெகுவாக வெகுவாக கவர்ந்துள்ளது.இருப்பினும் இன்னும் அதன் தேவை அதிகரித்து கொண்டே செல்கிறது.

 

உங்களுக்கு "வடுகர்கள் ஒழிப்போம்" என்பதன் அர்த்தம் இன்னும் புரியவில்லை என்பது மாதிரி; நீங்கள் பந்தியில் குறிப்பிடுகிறீர்கள். இந்த இடத்தில் நீங்கள் உண்மையான தமிழர்களின் வரலாறு அவர்களின் குலங்களின் தோற்றம் பற்றிய உண்மைகளை மறைக்கிறீர்கள் அல்லது கடந்து போக முற்படுகிறீர்கள். இந்த இடத்தில் உங்களுடைய ஒரு கபடமான சிந்தனையை நான் குறிப்பிட விரும்புகிறேன். உங்களுடைய எடுகோள் பந்தி பதிவாளர்கள் அல்லது வாசிப்பவர்கள் வரலாற்றில் சிந்தனையற்றவர்களாக இருப்பார்கள் என எண்ணுகிறீர்கள்.

 

சீமான் குறிப்பிடுவது வடுகர்கள் தமிழ் சமூகத்தினை மாற்றவும் அல்லது கட்டுப்படுத்தவோ கூடாது என்ற குரலில் தான் வருகிறது.தொழில் தேடுபவர்களை அல்லது இடம்பெயர்வு கொண்டவர்களையும் ஒருபொழுதும் சீமான் வெளியேற்ற போவதாக குறிப்பிட்டதாக நான் ஒரு பதிவையும் இதுவரையில் பார்த்ததில்லை. ஒவ்வொரு சமூகத்துடன் பொருளாதார உறவுகள் வைத்திருப்பது உலகமயமாதலின் ஒரு அங்கம். பொருளாதார நல்லதுக்காக அல்லது பாதுகாப்புக்காக இடம்பெயர்தல் வழமையானது. ஆனால் குடியேறியவர்கள் ஒரு சமூகம் அதன் வரலாற்றையும், ஒரு ஒருங்கிணைந்த நாட்டில் (இந்தியா) ஒரு வரையறை செய்யப்படாத சட்டங்கள் இருக்கின்ற பொழுது அதனை கட்டுப்படுத்துதல் மிக மிக சிரமமானதாக இருக்கும்.

 

நீங்கள் உணர்வுகளில் தனித்தமிழ் கிடையாதா என்கின்ற வாதத்தை வைக்கிறீர்கள் இதற்குரிய வரையறை இல்லை. உணர்ச்சிகளின் பால் நீங்கள் அனுபவிப்பதை உங்கள் மொழி கொண்டு கட்டுப்படுத்த முடியாது. அதாவது பாலியல் உணர்வு எல்லாருக்கும் பொதுவானது அது தெலுங்கு, தமிழ், கன்னடம் என்கின்ற பேதம் அற்றது. கலையும் ஒரு உணர்வு சார்ந்தது.இயல், இசை, நாடகம் மொழி கடந்து ரசனைக்குரிய வையே.ஆனால் ஒவ்வொரு மொழியும் தங்களுக்குரிய தனித்துவமான அடையாளங்களை பிரதிபலிக்கும்.

 

நீங்கள் அன்னியர்களை அதிகாரத்துக்கு வரக்கூடாது என்கின்ற சீமானின் அல்லது தமிழர்களின் வாதம் தவறானது என குறிப்பிடுகிறீர்கள். இது ஒரு மிக மிக கேவலமான சிந்தனை. ஒசாமா பின்லாடன் ஒரு அரேபியர் ஆனால் அவர் அமெரிக்கர்களையும் மற்றும் ஐரோப்பியர்களை கொன்றொழித்தார்.ஆனால் அவரை அமெரிக்க அரசு கொன்று அழித்தது.அமெரிக்க சிலவேளைகளில் அமெரிக்காவில் வாழ்கின்ற அரேபிய குடிகளுக்கு பெருமை சேர்க்கும் விதமாக ஒசாமா பின்லேடனை விட்டு இருக்கலாமே.

நீங்கள் வாழ்கின்ற இடங்களில் எவ்வாறு உங்களுடைய சமூக கடமைகளையும், சட்டதிட்டங்களையும், பண்பாட்டு விழுமியங்களையும் இன்னொருவருக்கு பாதிப்படையாமல் வந்த இடத்தில் அதனை மதித்து நடந்தால் சக இனத்தவருக்கும் அல்லது சக மனிதனுக்கு எந்த விதமான பிரச்சனைகளை உருவாக்குவது இல்லை. இதுவே யதார்த்தம். இங்கே குறைபாடு தமிழர்களுக்கு ஒரு நிலையான தனியான ஒரு ஆட்சி அமைப்பு இல்லை. உலகில் வாழ்கின்ற எல்லாத் தமிழர்களும் அந்தந்த நாடுகளின் சட்டங்களுக்கு உட்பட்டே வாழ்கிறார்கள். உதாரணத்திற்கு தமிழ்நாடு இந்தியாவின் சட்டங்களுக்கு உட்பட்டு இருக்கின்றது அதனால் தனித்துவமாக எதனையும் செய்ய முடியாது.

 

தமிழர்களுக்கு ஒரு நாடு இருந்தால் அவர்கள் அதனூடாக அதிகார, சட்டங்களை உபயோகிக்க முடியும். கடைசிவரை தங்களுக்கான எந்த உரிமையும் அற்ற சார்ந்து இருக்கின்ற நாடுகளை நம்பியே இருக்க வேண்டும்.இதனாலேயே நீங்கள் இது ஒரு அபத்தமான பேச்சு என்கிறீர்கள்.

 

சீமான் ஊழல் செய்தவர்கள் தண்டிக்கப்படுவார்கள் எனக் குறிப்பிடுகிறார். அரசு ஊழல் என்பது ஒரு நிறுவனப்படுத்தப்பட்ட மோசடி. அதனை வெளிப்படையான ஒரு விசாரணை மூலம் அடுத்து வருகின்ற அரசிகள் செய்வது வழமை. அந்த வகையில் கடந்தகால ஆட்சிகளில் நடந்த ஊழல்களை முறையாக ஆராய்ந்து விசாரணை செய்வது ஒரு வினைத்திறனான ஆட்சியாளர்கள் பண்பு. தமிழ்நாட்டைப் பொருத்தவரை கருணாநிதியின் அரசியல் வருகையோடு, ஒரு ஊழல் கலந்த ஆட்சி தொடர்கின்றது இதில் ஜெயலலிதா தண்டிக்கப்பட்ட குற்றவாளி ஆகிவிட்டார். அதேபோல் விடை காணாத சில ஊழல்கள் இன்னும் நிலுவையில் உள்ளன. அதற்குரிய பங்காளிகள் இன்னும் கட்சி சார்ந்து அரசியல் செய்து கொண்டே இருக்கிறார்கள். இதனடிப்படையிலேயே சீமானே கருத்துக்கள் இருக்கின்றன என்பதனை காணக்கூடியதாக இருக்கிறது.

 

சீமானுடைய சமய நம்பிக்கைகள் தமிழர் வரலாற்றோடு சேர்ந்து ஒரே நேரத்தில் பயணிக்கின்றது. தமிழர் தங்களுடைய சமய நம்பிக்கைகளை இடையில் வந்த ஆரிய சனாதன போதனைகளால் கைவிட்டுவிட்டார்கள். பிஜேபியின் இந்து கோட்பாடு பல்வேறு சமயங்களின் கோட்பாடுகளை ஒன்றாக இணைத்து இந்து கோட்பாடாக ஆங்கிலேயர்களால் உட்பட்ட இந்து என்கின்ற சிந்தனைக்குள் வருகின்றது.

ஆங்கிலேயரின் நிர்வாக இலகுவாக்க வழிமுறைகளில், தமிழனின் இயற்கை வழிபாடு விதிகள், இடுகைகள்,முதியோர் வழிபாடு ஹிந்து என்கின்ற மதத்திற்குள் சென்றுவிட்டது.

 

தமிழரின் வழிபாடு, தமிழர்களின் மொழி தோன்றி லோடு உருவாகின்றது என்கிறது ஆய்வுகள். உயிர்களின் தோற்றம் நவீன விஞ்ஞானம் சொல்கிறது நிச்சயமாக சீதோசன நிலையில் குமரி கண்டத்தில் தோன்றி இருக்கக்கூடும். அவர்கள் அது பற்றிய ஆய்வுகளை தொடங்குவதற்கு முனைகிறார்கள். ரம்பத்தில் அவர்கள் இந்தோனேசியாவை அண்டி குகைகளை, காடுகளை தங்களது ஆய்வுக்காக பயன்படுத்தினார்கள்.

 

ஆனால் இலங்கையில் கண்டுபிடிக்கப்பட்ட ஒரு மண்டையோடு வரலாற்று ஆய்வுகளில் ஒரு மாறுபட்ட கருத்தியலை உருவாக்கியது. ஆனால் இலங்கையில் கண்டுபிடிக்கப்பட்ட ஒரு மண்டையோடு வரலாற்று ஆய்வுகளில் ஒரு மாறுபட்ட கருத்தியலை உருவாக்கியது. அதாவது இதுவரை கிடைக்கப்பெற்ற மண்டை ஓடுகளில் மிக மிக பழமையானதும் பூரணமான மூளை கொள்ளளவும் கொண்டதாக இருந்ததாக குறிப்பிடுகிறார்.

 

சில்லு அதாவது சக்கரம் முதலில் உருவானது இலங்கையில் என்றும், மொழி தோன்றியது விடுபட்டு கிடக்கின்ற நாவலன் கிடப்பு அதாவது தமிழகம், இலங்கை மாலைதீவுகள் சார்ந்த கடல் எல்லையே. இப்பொழுது தமிழகத்தில் இலங்கையில் வாழ்கின்ற தமிழர்களுடைய பழக்கவழக்கங்களும் சம்பிரதாயங்களும் அவர்களுடைய சமயங்களை வழிபாட்டு முறைகளை பிரதிபலிப்பதாக ஆய்வாளர்கள், கல்வெட்டுகள், செப்பு தகடுகள் ,செவி வழி வந்த கதைகள், ஓலைச்சுவடிகள் புலப்படுத்துவதாக கருதுகிறார்கள்.

 

உதாரணத்திற்கு இலங்கையில் வாழ்கின்ற ஒரு குடியினர் இன்னும் தங்களது மாடுகளில் தங்களுடைய பட்டி குறியாக மாடுகளின் கால்களில் மிக மிக தொன்மையான கல்வெட்டுகளில் காணப்படுகின்ற ஒரு எழுத்தினை சுட்டு விடுகிறார்கள். அதேபோல் தமிழகத்திலும் இலங்கையிலும் வாழை இலை வாழை மரம் அவர்களுடைய பிரதான ஒரு அங்கமாக சடங்குகளில் காணப்படுகிறது. இதனை ஆய்வாளர்கள் மனித இனத்திற்கு மிக அருகில் உள்ள நிறமூர்த்த அடிப்படையில் வாழைமரம் 50 வீதம் ஒத்துப்போவதாக கூறுகிறார்கள். தாவர இனத்தில் வாழை மரமே மனித நிறமூர்த்தங்கள் உள்ள ஒரு தாவரம்.இதனாலேயே அவர்கள் தங்களது வழிபாட்டு இடத்திலும்,தமிழர் திருமண மண்டபங்கள் மற்றும் ஆட்கள் கூடுகின்ற இடங்களில் கட்டிவிட்ட வரவேற்பு செய்வதற்காக ஒதுக்குகிறார்கள் என குறிப்பிடுகிறார்கள்.அதாவது வாழை தங்களது ஒரு உறுப்பினராக உயிர் உள்ளவராக பிரதிபலிக்கிறார்கள். இதனாலேயே தமிழர்கள் மொழி பற்றிய தேடல்களும் அவர்களின் மத நம்பிக்கை ஒரு பழமை வாய்ந்த தேடல்கள் இருக்கிறது.

 

இங்கே ஆராய்ச்சியாளர்கள் தமிழர்களின் மூதாதையர்களை குறிப்பிடும்பொழுது அவர்களே உலகுக்கு முதல் தத்துவங்களை சிந்தனைகளை போதித்தார் என குறிப்பிடுகிறார்கள். அவர்களே பின்னாளில் கடவுளாக அல்லது தெய்வங்களாக உருவாக்கப்பட்டன. மனிதனின் கூர்ப்பு, மொழியறிவு, சிந்தனா சக்தி ஆரம்ப புள்ளி தமிழில் இருந்து தோன்றியதாக கருதுகிறார்கள். ஐயன், நாகன், இயக்க, ஏகன், முருகன், சேயோன் ஒரு சிந்தனையாளர்கள் என நம்புகிறார்கள். சட்டம் என்பது ஒரு இப்போது இருக்கின்ற சமய நெறிமுறைகள் கட்டுப்படுத்தியது என நம்புகிறார்கள்.

 

 

உங்கள் பந்தியில் குறிப்பிடுவது போல் வட இந்தியர்கள் உடைய சமய நம்பிக்கைகளை உள்வாங்குவது அல்ல.இவர்களது நோக்கம் மொழி மத விழுமியங்களை ஆராய்ந்து மறந்துபோன, விடுபட்டவை மீளக் கொண்டுவருதல். முதல் கட்டமாக முருக வழிபாட்டு அறிமுகம், தமிழில் பூசை அதாவது குடமுழுக்கு செய்தல் என்பன அடங்கும். நீங்கள் குறிப்பிடுவது போல் சீமான் என்பவன் ஒரு தனி மனிதன் அல்ல, பல மனிதர்களுடைய சேர்க்கை என தோன்றுகிறது. இதில் யார் வெற்றி அடைய போகின்றார்கள் என்பது காலம் பதில் சொல்லும். இதில் யார் வெற்றி அடைய போகின்றார்கள் என்பது காலம் பதில் சொல்லும். ஒன்று மட்டும் உறுதி தமிழர் நலன், தேசியம், ஒற்றுமை ஒரு புள்ளியை நோக்கி நகர்கிறது என்பது மட்டும் உண்மை.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
23 minutes ago, MullaiNilavan said:

திரு சீமான் அவர்கள் திமுக ஒழிப்பே பிரதான நோக்காக கொண்டுள்ளதாக நீங்கள் குறிப்பிட்டுள்ளீர்கள் அது உண்மையே.

வணக்கம் முல்லை நிலவன்
ஒரு நீண்ட விளக்கமான எல்லோருக்கும் புரியும்படியாக பதிந்துள்ளீர்கள்.
மிகவும் நன்றி.
யாழுடன் தொடர்ந்து இணைந்திருங்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நன்றி முல்லை நிலவன்

இதுக்கு பதில் வராது. காரணம் அது, பதிந்தவரின் சொந்த ஆக்கம் இல்லை.

சொந்தமாக, பதிய கூடிய திறமை இருப்பினும், ஏனோ, வெட்டி, ஒட்டும் வேலைகள் செய்வதும், தான் வாசித்தவை அபத்தமோ, இல்லையோ, அடுத்தவர்களும் வாசிக்கவேண்டும் என்னும் எண்ணம்.

தயவு செய்து, உங்கள் கருத்துக்களை சொந்தமாக, எழுதி பதியுங்கள். நாமும் ஆரோக்கியமாக விவாதிக்கலாம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
30 minutes ago, Nathamuni said:

 

இதுக்கு பதில் வராது. காரணம் அது, பதிந்தவரின் சொந்த ஆக்கம் இல்லை.

சொந்தமாக, பதிய கூடிய திறமை இருப்பினும், ஏனோ, வெட்டி, ஒட்டும் வேலைகள் செய்வதும், தான் வாசித்தவை அபத்தமோ, இல்லையோ, அடுத்தவர்களும் வாசிக்கவேண்டும் என்னும் எண்ணம்.

தயவு செய்து, உங்கள் கருத்துக்களை சொந்தமாக, எழுதி பதியுங்கள். நாமும் ஆரோக்கியமாக விவாதிக்கலாம்.

நாதம்ஸ், 

முல்லை நிலவன் எழுதியதை வாசித்தேன்.😀

சொந்தமாக எழுத வாசிப்புப் பயிற்சி முக்கியம். நான் அதைத்தான் செய்கின்றேன்😁

முல்லை நிலவன் சீமானின் கல்விக்கொள்கையை இங்கிலாந்து கல்விகொள்கைக்கு சமமானது என்ற ஒரு தோற்றப்பாட்டை நான்கு படிநிலைகளை மட்டும் வைத்து, ஆனால் உள்ளடக்கத்தைத் தவிர்த்து எழுதியது தமிழகத்தில் இங்கிலாந்து கல்விக்கொள்கை பற்றி தெரியாதவர்களுக்கு ஏற்புடையதாக இருக்கலாம். ஆனால் இங்கிலாந்தில் வசிக்கும் உங்களுக்கும் எனக்கும் இந்த ஒப்பீட்டில் உள்ள ஓட்டைகள் தெரியத்தானே வேண்டும்.

 

அபிலாஷ் சீமானின் கல்விக்கொள்கையைப் பற்றி முக்கியமாகச் சொன்னது. இதைப் பற்றி முல்லை நிலவன் ஒன்றும் சொல்லவில்லை.

Quote

ஆங்கிலம், தமிழ், வரலாறு, அறிவியல், கணிதம் போன்ற அடிப்படை பாடங்கள் எவையும் கட்டாயமாக கற்பிக்க தேவையில்லை, இவற்றில் தேர்வு எழுதவும் அவசியம் இல்லை என்கிறார். அதாவது இந்த பாடங்களை electivesஆக மாற்றலாம் என்கிறார். அதுவும் தேர்வில்லாத தேர்வுப்பாங்கள்.

இங்கிலாந்தில் Key Stage 1, 2 களில் எண்ணும், எழுத்தும்  (கணிதம், ஆங்கிலம்) மட்டுமல்ல, வரலாறு, கலை, விஞ்ஞானம் போன்ற எல்லாமே கற்பிக்கப்படவேண்டும். Year 6 (Key stage 2) இறுதியில் தேர்வும் ஆசிரியர்களால் நடாத்தப்படவேண்டும். அதேபோன்று secondary school இல்  கணிதம், ஆங்கிலம்,  விஞ்ஞானம் எல்லாமே கட்டாய பாடங்கள்.

அத்தோடு வாசிப்புப் பழக்கத்தை சிறு வயதில் இருந்தே பழக்கத்திற்குக் கொண்டுவருவதால், பொதுப் போக்குவரத்தில்கூட அநேகமானவர்கள் கையில் ஒரு புத்தகத்தையோ, அல்லது கிண்டில் போன்ற கருவிகளில் வாசிப்பதையோ பழக்கமாகக் கொண்டுள்ளார்கள்.

வாசிப்பதை கேலி செய்வதும் (யாழ் களத்திலும்தான்), வாசிப்பவர்களைப் பார்த்து “பொழப்பப் பாருங்க சார்” என்று அறிவுபூர்வமான அறிவுரை கொடுப்பதும் இப்போதே தமிழகத்தில் இருக்கின்றது. சீமான் இவற்றை மாற்றமுனையமாட்டார். மாற்றினால் சுயபுத்தி வந்துவிடுமே!

 

 வாழை பற்றி நான் எழுதுவதை விட நெடுக்ஸ் போன்றவர்கள் எழுதினால் நல்லது.

மனிதர்களுக்கு உள்ள ஜீன்களில் 50% வாழையில் உள்ளது உண்மைதான்! அது போல உலகில் உள்ள ஜீவராசிகள் அனைத்திலும் மனிதர்களிடம் உள்ள ஜீன்கள் அபரிதமாக உள்ளது. ஆனால்  வாழையை வைத்து போலி விஞ்ஞான ஆய்வு செய்பவர்கள் அதைவிட அதிகமாக மனிதர்களின் ஜீன்களைக் கொண்டுள்ள சுண்டெலியுடனோ அல்லது fruit fly உடனோ ஒப்பிட்டு பெருமை பேசுவதில்லை!!!

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இந்த முல்லை நிலவன் இப்படி அடித்து விட்டாரே ஐயோ  நான் இனி எப்படி சீமானை திட்டுவது எனக்கு தெரிந்தது எல்லாம் ஆமைக்கறி உடும்பு கறி ரோல்ஸ் தானே அதிகபட்சம் பொட்டரை   திட்டியது என்று சொல்லி அது பொய் நிரூபித்து விட்டார்கள் எனக்கு சீமானை திட்டனும், இல்லாட்டி கைகால் எல்லாம் நடுக்கம் வரும் நித்திரை வராதே கண்ணெல்லாம் இருண்டு விடுமே ஐயோ ஐயோ வேதக்காரன் என்று சொல்லியும் நம்புரான்கள் இல்லையே என்ன செய்யலாம் இனி ஓட்டை சிரட்டைக்குள் தண்ணியை நிரப்பி விட்டு குதிப்பது  நல்லது .

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
16 minutes ago, பெருமாள் said:

பொட்டரை   திட்டியது என்று சொல்லி அது பொய் நிரூபித்து விட்டார்கள்

எவர் மிமிக்ரி செய்ததாம்? 🤔

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
21 minutes ago, கிருபன் said:

வாசிப்பதை கேலி செய்வதும் (யாழ் களத்திலும்தான்), வாசிப்பவர்களைப் பார்த்து “பொழப்பப் பாருங்க சார்” என்று அறிவுபூர்வமான அறிவுரை கொடுப்பதும் இப்போதே தமிழகத்தில் இருக்கின்றது.

☹️

வாழையை வைத்து போலி விஞ்ஞான ஆய்வு செய்பவர்கள் அதைவிட அதிகமாக மனிதர்களின் ஜீன்களைக் கொண்டுள்ள சுண்டெலியுடனோ அல்லது fruit fly உடனோ ஒப்பிட்டு பெருமை பேசுவதில்லை!!!

 

மதவாதிகள் மதபிரசார கட்டுரைகளில் விஞ்ஞானத்தையும் கலக்கி கொடுப்பதை கவனித்து இருப்பீர்கள் அது மாதிரி தான் இவரின் கட்டுரையும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
24 minutes ago, கிருபன் said:

எவர் மிமிக்ரி செய்ததாம்? 🤔

 

தெரியலை ஈழத்தமிழன் ஜீவன் சீமானின் பாரிய காப்பரண் ஆக உள்ளவரை இப்படியான குசும்பு விளையாட்டு எல்லாம் ஊதி தள்ளி விடுவார்கள் .

ஜீவனின் காணொளிகள் மணித்தியாலத்துக்கு 1000 மேல் பார்வையாளர்கள் உள்ள ஒரு தளம் அங்கெல்லாம் போய்  சீமான் எதிர்ப்புவாதம் என்று தொடங்கினாலே காணும் நாக்கிலே அலகு குத்தி அனுப்புவார்கள் .

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இங்கு மற்றவர்களின் புகழ் பரப்புவது என் நோக்கமல்ல ஆனால் சிலவிடயங்களில் இங்கிருக்கும் நாம் எவ்வளவு பின்தங்கி உள்ளோம் என்பதை சுட்டி காட்ட வேண்டி உள்ளது .

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
28 minutes ago, பெருமாள் said:

ஜீவனின் காணொளிகள் மணித்தியாலத்துக்கு 1000 மேல் பார்வையாளர்கள் உள்ள ஒரு தளம் அங்கெல்லாம் போய்  சீமான் எதிர்ப்புவாதம் என்று தொடங்கினாலே காணும் நாக்கிலே அலகு குத்தி அனுப்புவார்கள்

இந்தக் கலாச்சாரம்தானே ஊக்குவிக்கப்பட்டு வளர்க்கப்படுகின்றது😬

கம்போடியாவில் க்மெர் ரூஜ்ஜின் பொல்பொட் அதிகாரத்தில் இருந்தபோது நகரத்து மக்கள் எல்லாம் கட்டாயமாக கிராமங்களுக்கு அனுப்பப்பட்டு விவசாயத்தொழிலில் ஈடுபடவைக்கப்பட்டார்கள்.  ஆனால் இது பெருத்த உணவுத் தட்டுப்பாட்டையும், பஞ்சத்தையும் உண்டாக்கி பல்லாயிரம், இலட்சம் பேரை மாண்டுபோக வைத்தது. சீமானின் பொருளாதாரக் கொள்கையும் இதன் சமாந்தரமாக உள்ளது!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
9 hours ago, MullaiNilavan said:

திரு சீமான் குறிப்பிடும் கல்வி, வேலைவாய்ப்பு ,மாநிலத்தின் பொருளாதார வளர்ச்சித் திட்டங்கள் என்ன, மாற்று அதற்கான விடைகள் உங்களுக்கு புரியவில்லை என்பதே இதற்குரிய விடை.

 

எனது பார்வையில் சீமானும், கட்சியும் மிகவும் ஒரு தூர நோக்கோடு பரந்து பட்ட பொருளாதார வரையறைகளை பயின்று அல்லது உள்வாங்கி நவீனத்துவ பொருளாதார சித்தாந்தங்கள் சமூக விழுமியங்கள் இதர மானிடவியல் தத்துவங்களை இலகு படுத்தி புகுத்த முனைகிறார்கள் என்பதே உண்மை. ஏனெனில் வளர்ச்சி அடைந்த அல்லது மேலைத்தேய நாடுகளில் மேற்குறிப்பிட்ட அம்சங்களை அவர்கள் ஆராய்ந்து அதனை தங்களது மாநிலத்தில் புகுத்தி கிடைக்கின்ற அரசியல் வெற்றி தங்களது நோக்கங்களை அடைய மிகவும் இலகுவாகவும் ஒரு முன்னுதாரணமாக இருக்கும் என நம்புகிறார்கள். அத்துடன் நவீன ஜனநாயக விழுமியங்களை பின்பற்ற துடிப்பது போல் தெரிகிறது.

முல்லை நிலவன்! அடிப்படை விளக்கம் இல்லாதவர்களுக்கும் உரிய முறையில் நல்ல விளக்கம் தந்துள்ளீர்கள்.
யாழோடு இணைந்திருங்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
6 minutes ago, கிருபன் said:

இந்தக் கலாச்சாரம்தானே ஊக்குவிக்கப்பட்டு வளர்க்கப்படுகின்றது😬

கம்போடியாவில் க்மெர் ரூஜ்ஜின் பொல்பொட் அதிகாரத்தில் இருந்தபோது நகரத்து மக்கள் எல்லாம் கட்டாயமாக கிராமங்களுக்கு அனுப்பப்பட்டு விவசாயத்தொழிலில் ஈடுபடவைக்கப்பட்டார்கள்.  ஆனால் இது பெருத்த உணவுத் தட்டுப்பாட்டையும், பஞ்சத்தையும் உண்டாக்கி பல்லாயிரம், இலட்சம் பேரை மாண்டுபோக வைத்தது. சீமானின் பொருளாதாரக் கொள்கையும் இதன் சமாந்தரமாக உள்ளது!

பொல்  பொட்டின்  கொள்கைகள் கிராமிய, விவசாய அடிப்படையில், மார்க்ஸிஸத்தையும், தேசீயத்தையும் கலந்து செய்யப்பட்ட புரட்சிகர அரசியல் கொள்கைகள்.விவசாய கம்யுனிஸத்தை பரிசோதனை செய்து பார்க்கிறேன் என்று சுமார் 20 லட்சம் கம்போடியர்கள் கொல்லப்பட்டார்கள். பலர் பசி பட்டினியாலும், வியாதிகளாலும் இறந்தார்கள். இவ்வளவும் பொல்  பொட்டின் ராணுவ ஆட்சியில் நடந்த ஒன்று தமிழ்நாட்டில் சென்றலுக்கு  எதிரா தும்மினாலே  ஆட்சி கேட்டு கேள்வியின்றி கலைக்கப்படும் .இதில் பொல்பொட்டின் கொள்கையையும் சீமானின் கொள்கையையும் நீங்கள் சமாந்தரப்படுத்துவது எனக்கு சிரிப்பை வரவழைக்குது .

நான் மற்றவர்கள் போல் சீமானின் பரப்புரைகளை நீங்கள்  பார்த்ததில் 100 ல் ஒரு விகிதம் கூட பார்த்ததில்லை .

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, விளங்க நினைப்பவன் said:

மதவாதிகள் மதபிரசார கட்டுரைகளில் விஞ்ஞானத்தையும் கலக்கி கொடுப்பதை கவனித்து இருப்பீர்கள் அது மாதிரி தான் இவரின் கட்டுரையும்.

சுவிஸ் போதகர் சற்குணராஜா பின்னால் எப்படி விசுவாசிகளாகப் பலர் போனார்கள் என்று அடிக்கடி யோசிப்பதுண்டு. 

13 minutes ago, பெருமாள் said:

நான் மற்றவர்கள் போல் சீமானின் பரப்புரைகளை நீங்கள்  பார்த்ததில் 100 ல் ஒரு விகிதம் கூட பார்த்ததில்லை

நானும் பலாப்பழ பொருளாதரத்தின் பலனை இன்னும் விளங்கவில்லை!!

 

9 hours ago, MullaiNilavan said:

பலாப்பழம் இப்பொழுது தாய்லாந்து மற்றும் கேரளத்து இறக்குமதிகள் ஐரோப்பியர்கள் மற்றும் அரேபியர்களை வெகுவாக வெகுவாக கவர்ந்துள்ளது.இருப்பினும் இன்னும் அதன் தேவை அதிகரித்து கொண்டே செல்கிறது.

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, கிருபன் said:

நாதம்ஸ், 

முல்லை நிலவன் எழுதியதை வாசித்தேன்.😀

சொந்தமாக எழுத வாசிப்புப் பயிற்சி முக்கியம். நான் அதைத்தான் செய்கின்றேன்😁

முல்லை நிலவன் சீமானின் கல்விக்கொள்கையை இங்கிலாந்து கல்விகொள்கைக்கு சமமானது என்ற ஒரு தோற்றப்பாட்டை நான்கு படிநிலைகளை மட்டும் வைத்து, ஆனால் உள்ளடக்கத்தைத் தவிர்த்து எழுதியது தமிழகத்தில் இங்கிலாந்து கல்விக்கொள்கை பற்றி தெரியாதவர்களுக்கு ஏற்புடையதாக இருக்கலாம். ஆனால் இங்கிலாந்தில் வசிக்கும் உங்களுக்கும் எனக்கும் இந்த ஒப்பீட்டில் உள்ள ஓட்டைகள் தெரியத்தானே வேண்டும்.

 

அபிலாஷ் சீமானின் கல்விக்கொள்கையைப் பற்றி முக்கியமாகச் சொன்னது. இதைப் பற்றி முல்லை நிலவன் ஒன்றும் சொல்லவில்லை.

இங்கிலாந்தில் Key Stage 1, 2 களில் எண்ணும், எழுத்தும்  (கணிதம், ஆங்கிலம்) மட்டுமல்ல, வரலாறு, கலை, விஞ்ஞானம் போன்ற எல்லாமே கற்பிக்கப்படவேண்டும். Year 6 (Key stage 2) இறுதியில் தேர்வும் ஆசிரியர்களால் நடாத்தப்படவேண்டும். அதேபோன்று secondary school இல்  கணிதம், ஆங்கிலம்,  விஞ்ஞானம் எல்லாமே கட்டாய பாடங்கள்.

அத்தோடு வாசிப்புப் பழக்கத்தை சிறு வயதில் இருந்தே பழக்கத்திற்குக் கொண்டுவருவதால், பொதுப் போக்குவரத்தில்கூட அநேகமானவர்கள் கையில் ஒரு புத்தகத்தையோ, அல்லது கிண்டில் போன்ற கருவிகளில் வாசிப்பதையோ பழக்கமாகக் கொண்டுள்ளார்கள்.

வாசிப்பதை கேலி செய்வதும் (யாழ் களத்திலும்தான்), வாசிப்பவர்களைப் பார்த்து “பொழப்பப் பாருங்க சார்” என்று அறிவுபூர்வமான அறிவுரை கொடுப்பதும் இப்போதே தமிழகத்தில் இருக்கின்றது. சீமான் இவற்றை மாற்றமுனையமாட்டார். மாற்றினால் சுயபுத்தி வந்துவிடுமே!

தமிழ்நாட்டில் தாய்மொழிக்கல்வியே கட்டாயம் இல்லை என்று சொல்கிறார்கள்! 
குடிப்பகங்களை மூடி தெருவுக்கு ஒரு படிப்பகம் கொண்டு வருவேன் என்று சொல்கிறாரே?!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
7 minutes ago, கிருபன் said:

நானும் பலாப்பழ பொருளாதரத்தின் பலனை இன்னும் விளங்கவில்லை!!

என்ன சொல்ல வருகிறீர்கள் என்று புரியவில்லை .

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
16 minutes ago, கிருபன் said:

 

நானும் பலாப்பழ பொருளாதரத்தின் பலனை இன்னும் விளங்கவில்லை!!

 

தமிழ்நாட்டில் பலாப்பழ தோட்ட்ங்களில் முக்கிய கொள்முதல் வியாபாரிகள் மலையாளிகள் கேரளாவில் நல்ல தண்ணீர் நிலம்கள்  இருந்தும் அவர்களுக்கு தேவையான அனைத்து காய்கறிகள் அரிசி முதல் கொண்டு பலவகை வரை தமிழ்நாட்டில் இருந்துதான் குறைந்த விலைக்கு  வாங்கி பொரித்தல்  வதக்கல் செய்து வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்து அதி கூடிய அந்நிய செலவாணியை மலையாளிகள் எடுத்து கொள்கிறார்கள் அதன் மூலம்  மலையாளிகள் செழிப்பாக உள்ளார்கள் ஆனால்  தமிழ்நாட்டில் விவசாயி ஏழையாகவே உள்ளார் அவரின் வாழ்வில் எந்த மாற்றமும் இல்லை .

இதே ஆவி வந்த கட்டுரை ,முக்கிய பாகம் மட்டும் இணைக்கிறேன் .

, முதல்வர்  பினராயி விஜயன் ஒப்புதலோடு மாநிலத்தின் பழமாக பலாப்பழம் அறிவிக்கப்படுகிறது. பலாப்பழம் அதிக சத்து நிறைந்த உணவு. கேரள மாநிலத்தில் உரம், பூச்சு மருந்து எதுவும் போடாமல் பலாப்பழம் விளைவிக்கப்படுகிறது. இயற்கை உணவான பலாப்பழத்தின் மூலம் கேரளத்துக்கு ஆண்டுக்கு 1500 கோடி ரூபாய்க்கு வணிகம் நடக்கிறது" என அவர் தெரிவித்தார். பூவாக கணிகொந்நை (கொன்றை மர வகையை சேர்ந்த மரத்தின் பூ) மாநில பூ என்று சொல்கிறார்கள் .

காயிலிருந்தி சிப்ஸ் தயாரித்து வெளிமாநிலங்களுக்கு விற்பனைக்கு அனுப்புகிறது கேரளம். பலாப்பழ பாயாசம், ரொட்டி, பலா காய் அவியல் என பலவகை உணவுகள் கேரளத்தில் தயாரிக்கப்பட்டு வருகிறது. பாலக்காடு, இடுக்கி உள்ளிட்ட மாவட்டங்களில் பலாப்பழம் அதிகமாக விளைகிறது. கன்னியாகுமரி மாவட்டத்திலிருந்து பலாப்பழங்களை மொத்தமாக வாங்கி சென்று திருவனந்தபுரம் மாவட்டத்தின் தேவை பூர்த்தி செய்யப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

https://www.vikatan.com/news/agriculture/119828-kerala-government-announced-the-jackfruit-as-a-state-fruit

இதில் கொன்றை பூ என்பது தமிழ்நாட்டில் அதிகளவில் விளையும் ஆவாரம்பூ நம்ம ஊரிழும் உண்டு நல்ல பருவ காலத்தில் குயில்கள் அந்த மரத்தில் விழுந்தால் விடிய விடிய கச்சேரி போட்டு நித்திரையை குழப்பும் .

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, கிருபன் said:

நாதம்ஸ், 

முல்லை நிலவன் எழுதியதை வாசித்தேன்.😀

சொந்தமாக எழுத வாசிப்புப் பயிற்சி முக்கியம். நான் அதைத்தான் செய்கின்றேன்😁

 

நீங்கள், இதுவரை வாசித்ததே, ஒரு பத்து வருசத்துக்கு எழுத போதும்.

IT யில் இருப்பவர்கள், லாஜிக்கார்கள். ஆகவே, எழுதுங்கள் லாஜிக் உடன், ஆதரிக்கிறோம்.

அடுத்தவர்களின் அலம்பறை களை விட்டுவிடுங்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
10 hours ago, கிருபன் said:

நாதம்ஸ், 

முல்லை நிலவன் எழுதியதை வாசித்தேன்.😀

சொந்தமாக எழுத வாசிப்புப் பயிற்சி முக்கியம். நான் அதைத்தான் செய்கின்றேன்😁

முல்லை நிலவன் சீமானின் கல்விக்கொள்கையை இங்கிலாந்து கல்விகொள்கைக்கு சமமானது என்ற ஒரு தோற்றப்பாட்டை நான்கு படிநிலைகளை மட்டும் வைத்து, ஆனால் உள்ளடக்கத்தைத் தவிர்த்து எழுதியது தமிழகத்தில் இங்கிலாந்து கல்விக்கொள்கை பற்றி தெரியாதவர்களுக்கு ஏற்புடையதாக இருக்கலாம். ஆனால் இங்கிலாந்தில் வசிக்கும் உங்களுக்கும் எனக்கும் இந்த ஒப்பீட்டில் உள்ள ஓட்டைகள் தெரியத்தானே வேண்டும்.

 

அபிலாஷ் சீமானின் கல்விக்கொள்கையைப் பற்றி முக்கியமாகச் சொன்னது. இதைப் பற்றி முல்லை நிலவன் ஒன்றும் சொல்லவில்லை.

இங்கிலாந்தில் Key Stage 1, 2 களில் எண்ணும், எழுத்தும்  (கணிதம், ஆங்கிலம்) மட்டுமல்ல, வரலாறு, கலை, விஞ்ஞானம் போன்ற எல்லாமே கற்பிக்கப்படவேண்டும். Year 6 (Key stage 2) இறுதியில் தேர்வும் ஆசிரியர்களால் நடாத்தப்படவேண்டும். அதேபோன்று secondary school இல்  கணிதம், ஆங்கிலம்,  விஞ்ஞானம் எல்லாமே கட்டாய பாடங்கள்.

அத்தோடு வாசிப்புப் பழக்கத்தை சிறு வயதில் இருந்தே பழக்கத்திற்குக் கொண்டுவருவதால், பொதுப் போக்குவரத்தில்கூட அநேகமானவர்கள் கையில் ஒரு புத்தகத்தையோ, அல்லது கிண்டில் போன்ற கருவிகளில் வாசிப்பதையோ பழக்கமாகக் கொண்டுள்ளார்கள்.

வாசிப்பதை கேலி செய்வதும் (யாழ் களத்திலும்தான்), வாசிப்பவர்களைப் பார்த்து “பொழப்பப் பாருங்க சார்” என்று அறிவுபூர்வமான அறிவுரை கொடுப்பதும் இப்போதே தமிழகத்தில் இருக்கின்றது. சீமான் இவற்றை மாற்றமுனையமாட்டார். மாற்றினால் சுயபுத்தி வந்துவிடுமே!

 

 வாழை பற்றி நான் எழுதுவதை விட நெடுக்ஸ் போன்றவர்கள் எழுதினால் நல்லது.

மனிதர்களுக்கு உள்ள ஜீன்களில் 50% வாழையில் உள்ளது உண்மைதான்! அது போல உலகில் உள்ள ஜீவராசிகள் அனைத்திலும் மனிதர்களிடம் உள்ள ஜீன்கள் அபரிதமாக உள்ளது. ஆனால்  வாழையை வைத்து போலி விஞ்ஞான ஆய்வு செய்பவர்கள் அதைவிட அதிகமாக மனிதர்களின் ஜீன்களைக் கொண்டுள்ள சுண்டெலியுடனோ அல்லது fruit fly உடனோ ஒப்பிட்டு பெருமை பேசுவதில்லை!!!

 

நான் நினைக்கின்றேன் சீமானின் கல்வி கொள்கைகள் இன்னும் ஆரம்ப நிலையில் உள்ளது. எனினும் தமிழரின் கல்வி கொள்கை நிச்சயமாக எண்ணும் எழுத்தும் என்பது கண்கூடு. ஆகவே நான் எனது சொந்த கருத்தை இதில் ஊத்த வில்லை.

ஆனால் சீமானின் கல்விக் கொள்கை உலகத்திலேயே தனது மாநில கல்வியே அதாவது தமிழ் மூலம் கல்வி முதலாவது இடத்தில் இருக்க வேண்டும் என்ற கனவோடு உழைக்கிறார்கள். ஆதலால் அதை நிறுவுவதற்கு நிச்சயமாக நீங்கள் சொன்ன அந்த மூன்று பிரதான பாட திட்டங்கள் இடம்பெறும் என நினைக்கிறேன். எனினும் எங்கள் இருவருக்கும் இதுவரை அவர்களின் இறுதி செய்யப்பட்ட பாடத்திட்டம் உரிமையோ அல்லது கல்வி முறைமையே தெரியவில்லை.
நான் நினைக்கின்றேன் இங்கிலாந்து கற்பித்தல் முறைமையானது  Independence study என்ற  ஒழுங்கு விதிகளின்  Secondary Stage பாடத்திட்டங்கள் அமைகின்றது.

அதனால் இந்த முறைமையில் வருகின்ற தவறுகள் இருவருக்கும் பொருந்தும் பெற்றோருக்கும் மாணவர்களுக்கு இடையே உள்ள முரண்களை தெளிவுபடுத்தும். பெற்றோர்கள் சிறந்த கண்காணிப்பின் பிள்ளைகளை கொண்டிருப்பீர்கள் ஆனால் சிறந்த பலனை அடைய முடியும் என்ற கோணத்தில் எனது சிந்தனைகள் இருக்கின்றது. நான் பட்ட அனுபவத்தின் அடிப்படையில் இதை கண்கூடாக பலதரப்பட்ட குடும்ப பின்னணிகளை ஆழமாக சிந்திக்கின்ற பொழுது அதனை தெளிவாக உணர்ந்தேன்.
நீங்களும் ஒரு தடவை அதை முழு பரிசோதனை செய்வீர்களானால் உங்களுக்கும் சில தவறுகள் புலப்பட கூடும். சிலவேளைகளில் நீங்களும் ஒரு கோணத்தில் ஒரு மேம்படுத்தக்கூடிய சில முறைகளை சொல்லக்கூடும். சிலவேளை எனது கண்ணோட்டம் தவறாகக் கூட இருக்கக்கூடும்.

Link to comment
Share on other sites

30 minutes ago, MullaiNilavan said:

நான் நினைக்கின்றேன் சீமானின் கல்வி கொள்கைகள் இன்னும் ஆரம்ப நிலையில் உள்ளது. எனினும் தமிழரின் கல்வி கொள்கை நிச்சயமாக எண்ணும் எழுத்தும் என்பது கண்கூடு. ஆகவே நான் எனது சொந்த கருத்தை இதில் ஊத்த வில்லை.

ஆனால் சீமானின் கல்விக் கொள்கை உலகத்திலேயே தனது மாநில கல்வியே அதாவது தமிழ் மூலம் கல்வி முதலாவது இடத்தில் இருக்க வேண்டும் என்ற கனவோடு உழைக்கிறார்கள். ஆதலால் அதை நிறுவுவதற்கு நிச்சயமாக நீங்கள் சொன்ன அந்த மூன்று பிரதான பாட திட்டங்கள் இடம்பெறும் என நினைக்கிறேன். எனினும் எங்கள் இருவருக்கும் இதுவரை அவர்களின் இறுதி செய்யப்பட்ட பாடத்திட்டம் உரிமையோ அல்லது கல்வி முறைமையே தெரியவில்லை.
நான் நினைக்கின்றேன் இங்கிலாந்து கற்பித்தல் முறைமையானது  Independence study என்ற  ஒழுங்கு விதிகளின்  Secondary Stage பாடத்திட்டங்கள் அமைகின்றது.

அதனால் இந்த முறைமையில் வருகின்ற தவறுகள் இருவருக்கும் பொருந்தும் பெற்றோருக்கும் மாணவர்களுக்கு இடையே உள்ள முரண்களை தெளிவுபடுத்தும். பெற்றோர்கள் சிறந்த கண்காணிப்பின் பிள்ளைகளை கொண்டிருப்பீர்கள் ஆனால் சிறந்த பலனை அடைய முடியும் என்ற கோணத்தில் எனது சிந்தனைகள் இருக்கின்றது. நான் பட்ட அனுபவத்தின் அடிப்படையில் இதை கண்கூடாக பலதரப்பட்ட குடும்ப பின்னணிகளை ஆழமாக சிந்திக்கின்ற பொழுது அதனை தெளிவாக உணர்ந்தேன்.
நீங்களும் ஒரு தடவை அதை முழு பரிசோதனை செய்வீர்களானால் உங்களுக்கும் சில தவறுகள் புலப்பட கூடும். சிலவேளைகளில் நீங்களும் ஒரு கோணத்தில் ஒரு மேம்படுத்தக்கூடிய சில முறைகளை சொல்லக்கூடும். சிலவேளை எனது கண்ணோட்டம் தவறாகக் கூட இருக்கக்கூடும்.

நீங்கள் எழுதும் மொழியும் பாங்கும் நன்றாகவும் ஆரோக்கியமான உரையாடலுக்குரியதாகவும் உள்ளது.

யாழுக்கு உங்கள் வரவு நல்வரவாகுக!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
9 hours ago, கிருபன் said:

இந்தக் கலாச்சாரம்தானே ஊக்குவிக்கப்பட்டு வளர்க்கப்படுகின்றது😬

கம்போடியாவில் க்மெர் ரூஜ்ஜின் பொல்பொட் அதிகாரத்தில் இருந்தபோது நகரத்து மக்கள் எல்லாம் கட்டாயமாக கிராமங்களுக்கு அனுப்பப்பட்டு விவசாயத்தொழிலில் ஈடுபடவைக்கப்பட்டார்கள்.  ஆனால் இது பெருத்த உணவுத் தட்டுப்பாட்டையும், பஞ்சத்தையும் உண்டாக்கி பல்லாயிரம், இலட்சம் பேரை மாண்டுபோக வைத்தது. சீமானின் பொருளாதாரக் கொள்கையும் இதன் சமாந்தரமாக உள்ளது!

எந்த இடத்தில் சமாந்தரமாக இருக்கிறது என்று விளக்க முடியுமா?
எங்கேனும் ஒரு அயோக்கியத்தனத்தை துணைக்கு இழுத்து பின்பு அதுக்கும் இதுக்கும் 
முடிச்சு போடும் சூட்ஷமம்  எமக்கு 14-15 வயதிலேயே பிடித்து மூளை கழுவ தொடங்கியபோதே 
விளங்க தொடங்கிய ஒன்று. சிங்கள இனவாதத்துக்கு எதிராக போராட போனவர்களை புலிகள்தான் உங்கள் எதிரிகள் என்ற தோற்றப்பாடை இப்படியான நிறுவல்கள் மூலம்தான் நிறுவ தொடங்குவார்கள்.

விவாசாயின் உழைப்பு இன்று எவ்வாறு சுரண்டப்படுகிறது?
திட்டமற்ற வெங்காய இறக்குமதி உள்ளூர் வெங்காய விவாசாயியை எவ்வாறு பாதிக்கிறது?
அவை அரச தொழிலாக ஆகும்போது எவ்வாறு தடுக்கப்படும்? 
ஓர் இயற்கை அனர்த்தம் விவாசாயத்தை அழித்தால்? ஒரு விவசாயி எவ்வாறு முகம் கொடுப்பது?

சீமான் எல்லோரும் விவசாயம் செய்யவேண்டும் என்று சொல்கிறாரா?
விவசாயிகளும் விவசாயமும் பாதுக்காக்க பட வேண்டும் என்று சொல்கிறாரா?  

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
8 hours ago, ஏராளன் said:

தமிழ்நாட்டில் தாய்மொழிக்கல்வியே கட்டாயம் இல்லை என்று சொல்கிறார்கள்! 
குடிப்பகங்களை மூடி தெருவுக்கு ஒரு படிப்பகம் கொண்டு வருவேன் என்று சொல்கிறாரே?!

இந்த இடத்தில் தான் தமிழர்களுடைய எதிர்காலம், அவர்களின் நிகழ்காலத்துக்கு தொகுப்புகள், கடந்து போன வரலாறுகள் சிதைந்து அழித்து ஒரு சுயநலமிக்க ஒரு சமூக கூட்டத்தை கட்டமைக்க முயல்கிறார்கள். எனது பார்வையில் ஆங்கிலேயர்கள் இந்தியாவை விட்டு வெளியேறியபோது கல்வியறிவு சராசரி 16.2 %– 21% தொடக்கம் இருந்தது. அதனைத்தொடர்ந்து அந்தந்த மாநில அரசுகள் அதாவது காமராஜர் ஆட்சிக்காலம் அரசு பள்ளிகள் அமைத்து கல்வி அறிவு முதன்மைப்படுத்தி முன்னிறுத்தி எடுத்துச் சென்றது. அண்டை மாநிலங்களிலும் இதையொத்த ஒரு செயல்முறையை இருந்தது. ஆனால் கல்வியின் முக்கியத்துவம் அதிகரித்த காரணத்தின் அடிப்படையில் தனியார் பள்ளிகளுக்கான ஒரு திறந்த சந்தையை உருவாக்கி விட்டது. 
சம காலத்தில் நடந்த அரசியல் மாற்றங்களும், போட்டிகளும்  E. V. Ramasamy Naicker -  (தமிழ்நாட்டின் பெரியார்) தமிழ்மொழி எதிர்ப்பும் அதாவது காட்டுமிராண்டி மொழி என உருவகித்து ஆங்கில மோகம கல்விமுறையை மேம்படுத்தி தனியார் பள்ளிக் கூடங்களை அவரது சமூகம் சார்ந்து இயங்க  ஒரு வடிவத்தை உருவாக்கிக் கொடுத்தது. அதன் பலன் அரசியலும், வரலாறும் இல்லாமல் போயிற்று தமிழரின் தனித்துவம் இருட்டடிப்பு செய்யப்பட்டு விட்டது. பின்னாளில் வரலாறு அவர்களின் பாடத்திட்டத்தில் சேர்க்கப்பட்டது. ஒரு சமூகத்தில் ஒரு காலகட்டத்தில் வாழ்ந்த கல்விமான்கள் அரசியலும் வரலாறும் புரியாத ஒரு படித்த படித்த முட்டாள்கள் ஆகினர். இந்த காலத்தில் சாதிய கட்டமைப்பு கடும்  வளர்ச்சியை கண்டது. திராவிட தத்துவமும் துளிர்விட்டு ஆட்சியில் அமர்ந்தது. தமிழ் தெரியாத, வரலாறு தெரியாத சமூக கட்டமைப்புகள் புரியாத ஒரு தலைமைகளை படிப்படியே உருவாக்கிக் கொடுத்தது. அதன் பலன் தமிழ்மொழிக்கல்வி தூக்கி கிடப்பில் வீசப்பட்டது.ஆங்கிலக் கல்வி முறையை ஒரு மேன்மையான கல்விமுறை என்ற ஒரு மாயையை உருவாக்கி விட்டார்கள். அதன் பலனை இன்று வரை தமிழ்நாடு அனுபவிக்கின்றது.

ஆனால் திராவிட சித்தாந்தம் தங்களால் ஆளப்பட்ட தமிழ்நாட்டு தலைமைகள் கல்வி என்பதும் புரிதல் என்பது தனியே பள்ளிக்கூடத்தில் வருவதாக நினைத்தார்கள். கல்வியும், மொழியறிவோம் சிந்தனை ஆற்றலும் தனியே பள்ளிக்கூடத்தில் மட்டும் வரையறை செய்யப்படவில்லை. அது அவர்கள் வாழும் இடம், சொந்தங்கள் மூதாதையர்களின் வாய் வழியே வரும் சொற்களும், பழக்கவழக்கங்களும் தொடர்ந்து அவர்களுக்கு தெரியாமல் அவர்கள் யார் என்பதை உணர்த்திய தெளிவுபடுத்தி வந்துள்ளது. அதன் விளைவு தமிழ் இன்றும் செழிப்புடன் தமிழ்நாட்டில் ஓங்கி ஒலிக்கின்றது. இங்கே ஒரு இடைவெளி இருக்கின்றது அதாவது வரலாறு சம்பந்தப்பட்ட, அரசியல் சம்மந்தப்பட்ட ஒரு தெளிவான பார்வை இல்லை. 
சீமானின் உழைப்பு அல்லது கோட்பாடு படிப்பவர்களின் தேவைகள் இலகுவாக பூர்த்தி செய்யப்பட வேண்டும். விடுபட்ட விடயங்கள் அவர்களுக்கு புது புகுத்தப்பட வேண்டும் அதனை அடைவதற்கு ,அவர்கள் எடுத்துக் கொண்ட முறை நூலகங்கள் அமைக்கப்பட வேண்டும் என்ற நோக்கம்.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.