Jump to content

சீமான் எனும் தமிழ் சாவர்க்கர் - ஆர். அபிலாஷ்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
13 hours ago, Nathamuni said:

நன்றி முல்லை நிலவன்

இதுக்கு பதில் வராது. காரணம் அது, பதிந்தவரின் சொந்த ஆக்கம் இல்லை.

சொந்தமாக, பதிய கூடிய திறமை இருப்பினும், ஏனோ, வெட்டி, ஒட்டும் வேலைகள் செய்வதும், தான் வாசித்தவை அபத்தமோ, இல்லையோ, அடுத்தவர்களும் வாசிக்கவேண்டும் என்னும் எண்ணம்.

தயவு செய்து, உங்கள் கருத்துக்களை சொந்தமாக, எழுதி பதியுங்கள். நாமும் ஆரோக்கியமாக விவாதிக்கலாம்.

Thanks

Link to comment
Share on other sites

  • Replies 145
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்
On 5/4/2021 at 16:02, tulpen said:

சீமானின் போலித்தனத்தை தர்க்ககரீதியில் சுட்டிக்காட்டும் சிறப்பான பதிவு. இணைப்புக்கு நன்றி கிருபன். 

இதே போலவே அண்மைய செந்தில் வேலின் தமிழ் கேள்வி நேர காணலும் அமைந்திருந்தது.  சீமான் மீது எந்த வசை மாரியும்  பொழியாமல் ஆதாரங்களுடன் சீமானின் இரட்டை வேடங்களை சுட்டிக் காட்டுகிறார். விரிவான மிக சிறந்த அரசியல் நேர் காணல். இதற்கு சீமான் தரப்பில் இருந்து தகுந்த பதிலை வழங்க முடியாது.  வழமை போல் செந்தில்வேல் ஒரு வந்தேறி என்றோ துரோகி திட்ட மட்டுமே முடியும். 

 பா.ஜ. க போல சீமானின் இனவெறி தேசியவாதமும் அழிக்கப்படவேண்டிய ஒன்றே.

  

 அண்ண‌ன் சாட்டை துரைமுருக‌ன் செந்தில் வேலின் திராவிட‌ முட்டுகொடுப்பை ப‌ற்றி ந‌ல்ல‌ விள‌க்க‌மாய் சொல்லி இருக்கிறார் இதையும் கொஞ்ச‌ம் பாருங்கோ  ?
 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 6/4/2021 at 20:15, Nathamuni said:

எதை எதையோ பேசி இன்னும் சொதப்ப வேண்டாமே. நகர்வோம். 🤦‍♂️

 

2 hours ago, நிழலி said:

நீங்கள் எழுதும் மொழியும் பாங்கும் நன்றாகவும் ஆரோக்கியமான உரையாடலுக்குரியதாகவும் உள்ளது.

யாழுக்கு உங்கள் வரவு நல்வரவாகுக!

🙏

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
44 minutes ago, MullaiNilavan said:

 

🙏

புதிதாக வந்துளீர்கள். எனது கருத்து உங்களுக்கானது அல்ல.

இணைத்திருங்கள். நல்ல கருத்துக்களை இணைத்திருங்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
31 minutes ago, Nathamuni said:

புதிதாக வந்துளீர்கள். எனது கருத்து உங்களுக்கானது அல்ல.

இணைத்திருங்கள். நல்ல கருத்துக்களை இணைத்திருங்கள்.

நிறுத்தல் குறியையும் முற்று புள்ளியையும் கவனியுங்கள் பழைய ஆள்தான் 😀

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
49 minutes ago, பெருமாள் said:

நிறுத்தல் குறியையும் முற்று புள்ளியையும் கவனியுங்கள் பழைய ஆள்தான் 😀

அட, இது வேறயா...😁

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கருத்தியல் விவாதங்கள் என்றால் தலை தெறிக்க ஓடுகிறார்கள். தனிமனித தாக்குதல்கள் என்றால் ஓடி வருகிறார்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
17 minutes ago, Maruthankerny said:

கருத்தியல் விவாதங்கள் என்றால் தலை தெறிக்க ஓடுகிறார்கள். தனிமனித தாக்குதல்கள் என்றால் ஓடி வருகிறார்கள்.

எப்பொழுதும் தெருச்சண்டை கண்ணுக்கு குளிர்ச்சி........

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
19 hours ago, Maruthankerny said:

சீமான் எல்லோரும் விவசாயம் செய்யவேண்டும் என்று சொல்கிறாரா?
விவசாயிகளும் விவசாயமும் பாதுக்காக்க பட வேண்டும் என்று சொல்கிறாரா?  

பொருளாதார திட்டத்தில் விவசாயம் தவிர்ந்த திட்டங்கள் சொல்லியிருக்கின்றாரா? கார் தயாரிக்கும் தொழிற்சாலை, கப்பல் கட்டும் தொழிற்சாலை இப்படி பாரிய திட்டங்கள் எதுவுமில்லை. அத்தோடு திட்டங்கள் போட்டால் மட்டும் போதாது. அவற்றை நிறைவேற்ற பட்ஜெற் தேவையல்லவா. பணம் எப்படி வரும் என்று சொல்லாத திட்டங்கள் பேப்பரில்தான் இருக்கும். பலாப்பழம் விற்ற காசும், பால் விற்ற காசும் பத்தாது.

கிராமப் பொருளாதாரத்தை முன்னேற்ற பொல்பொட் அமுல்படுத்திய கட்டாய உழைப்புக்கும் சீமானின் பொருளாதார சிந்தனைக்கும் வித்தியாசம் இருப்பதாக தெரியவில்லை. அப்படி இருந்தால் சொல்லுங்கள். அப்படியே ‘’தன்னலமற்ற அன்பான சர்வாதிகார, ஊழலற்ற ஆட்சியை’’ தமிழ் நாட்டில் ஸ்தாபிக்கப்போவதாக சீமான் கூறி வருகின்றார். அது என்ன அன்பான சர்வாதிகாரம்?

 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நம்ம பயல்கள் திராவிட வேலுக்கு பதில் சொல்ல தொடங்கிவிட்டினம், திராவிட வேல் எறிந்த குப்பைகளை பார்த்து , நெக்குருகி போன சார்வாள்கள் எல்லாம் இனி ஓட வேண்டியது தான். 

அன்பான சர்வாதிகாரம் என்பது சிங்கப்பூரில் லீ குவான் யூ செய்தது லிஸ்ட்டு ரொம்ப பெருசா இருக்கும்

 

 

 

https://www.facebook.com/100002407389959/posts/4012899868800220/

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, கிருபன் said:

கிராமப் பொருளாதாரத்தை முன்னேற்ற பொல்பொட் அமுல்படுத்திய கட்டாய உழைப்புக்கும் சீமானின் பொருளாதார சிந்தனைக்கும் வித்தியாசம் இருப்பதாக தெரியவில்லை. அப்படி இருந்தால் சொல்லுங்கள். அப்படியே ‘’தன்னலமற்ற அன்பான சர்வாதிகார, ஊழலற்ற ஆட்சியை’’ தமிழ் நாட்டில் ஸ்தாபிக்கப்போவதாக சீமான் கூறி வருகின்றார்.

அப்போ டென்மார்க் ஆட்சி, லண்டன் ஆட்சி  ஜனநாயக ஆட்சிகள் எல்லாம்  தரமாட்டார் 😂  தமிழக மக்கள் கெட்டிகாரர்கள் அவரை தேர்ந்து எடுக்க போவதில்லை. ஊழலற்ற ஆட்சி டென்மார்க் ஆட்சி  சர்வாதிகார ஆட்சி அது இது என்று அள்ளி அள்ளி  இறைக்க வேண்டியது தானே.

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
20 hours ago, பெருமாள் said:

நிறுத்தல் குறியையும் முற்று புள்ளியையும் கவனியுங்கள் பழைய ஆள்தான் 😀

பெருமாள் கண்டுபிடித்துவிட்டார். பெருமாள் சிறி, அண்ணாவுடன் அட்மிசன் எடுத்தவர் இவர் . இது யாழ்கள பொறுப்பாளர் நிழலிக்கு தெரியவில்லை 🤦‍♂️ புதியவரே வருக என்று வரவேற்கிறார்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, கிருபன் said:

பொருளாதார திட்டத்தில் விவசாயம் தவிர்ந்த திட்டங்கள் சொல்லியிருக்கின்றாரா? கார் தயாரிக்கும் தொழிற்சாலை, கப்பல் கட்டும் தொழிற்சாலை இப்படி பாரிய திட்டங்கள் எதுவுமில்லை. அத்தோடு திட்டங்கள் போட்டால் மட்டும் போதாது. அவற்றை நிறைவேற்ற பட்ஜெற் தேவையல்லவா. பணம் எப்படி வரும் என்று சொல்லாத திட்டங்கள் பேப்பரில்தான் இருக்கும். பலாப்பழம் விற்ற காசும், பால் விற்ற காசும் பத்தாது.

கிராமப் பொருளாதாரத்தை முன்னேற்ற பொல்பொட் அமுல்படுத்திய கட்டாய உழைப்புக்கும் சீமானின் பொருளாதார சிந்தனைக்கும் வித்தியாசம் இருப்பதாக தெரியவில்லை. அப்படி இருந்தால் சொல்லுங்கள். அப்படியே ‘’தன்னலமற்ற அன்பான சர்வாதிகார, ஊழலற்ற ஆட்சியை’’ தமிழ் நாட்டில் ஸ்தாபிக்கப்போவதாக சீமான் கூறி வருகின்றார். அது என்ன அன்பான சர்வாதிகாரம்?

 

 

சீமான் இப்போது ஆரம்ப படிகளில் தான் நிற்கின்றார்.  அவர் அரசவைக்கு வந்த பின்னர் உங்கள் கருத்துக்களை தாராளமாக வைக்கலாம்,வெளுக்கலாம். கார் உற்பத்தியின் பின் உள்ள விக்கனங்களை பல மேடைகளில் சொல்லி விளங்கப்படுத்தியுள்ளார்.

ஜேர்மன் செய்திகளின் தரவின் படி இஸ்ரேல் தோடம்பழ ஏற்றுமதியை நிற்பாட்டி விட்டது அல்லது குறைத்துக்கொண்டது. காரணம் அதிகளவு தண்ணீர் தேவைதான் முக்கிய காரணம்.

ஜேர்மனியில் டெல்சா கார்  உற்பத்தி தொழிற்சாலை அமைப்பதற்கு எதிராக பெரிய போராட்டங்கள் நடந்தன. அதற்கு முக்கிய காரணம் தண்ணீர்தான். உங்களுக்கு பல மொழிகள் தெரிந்திருக்கும் என நம்புகின்றேன். ஒரு கார் உற்பத்திக்கும் ஒரு இயந்திர உற்பத்துக்கும்  எத்தனைல  இலட்சம் லீட்டர் நீர் தேவையென வலைத்தளங்களில் தேடிப்பாருங்கள். அந்த நீரை விவசாயத்திற்கு/குடி நீருக்கு பயன் படுத்தினால்??????

முதலில்  ஒரு மனிதனுக்கு மூன்று வேளையும் உணவு உண்ண விவசாயம் வேண்டும். சகல உயிரினங்களுக்கும் குடிக்க நீர் வேண்டும்.அதில் தன்னிறைவு அடைந்த பின்  காரில் பறப்பதை பற்றி கதைக்கலாம்.😁

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, அக்னியஷ்த்ரா said:

நம்ம பயல்கள் திராவிட வேலுக்கு பதில் சொல்ல தொடங்கிவிட்டினம், திராவிட வேல் எறிந்த குப்பைகளை பார்த்து , நெக்குருகி போன சார்வாள்கள் எல்லாம் இனி ஓட வேண்டியது தான். 

அன்பான சர்வாதிகாரம் என்பது சிங்கப்பூரில் லீ குவான் யூ செய்தது லிஸ்ட்டு ரொம்ப பெருசா இருக்கும்

 

 

 

https://www.facebook.com/100002407389959/posts/4012899868800220/

 

அது சிங்கப்பூரில் செய்யலாம்..  அடிமை மாநிலம். தமிழ்நாட்டில் மிக. மிக கஸ்டம். முதலில் தமிழ் நாடு தனிநாடு ஆகவேண்டும் அல்லது. கூடுதல்  அதிகாரம் தேவை.  முக்கியாமாக. மத்தியரசு  நினைத்தவுடன். கலைக்கும் சட்டம். அகற்றப்படவேண்டும். ஆட்சிக்காலம் முடியும்வரை. தெரிவுசெய்யப்பட்ட அரசு பதவியில்இருக்கவேண்டும்😎😎😎

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, கிருபன் said:

பொருளாதார திட்டத்தில் விவசாயம் தவிர்ந்த திட்டங்கள் சொல்லியிருக்கின்றாரா? கார் தயாரிக்கும் தொழிற்சாலை, கப்பல் கட்டும் தொழிற்சாலை இப்படி பாரிய திட்டங்கள் எதுவுமில்லை. அத்தோடு திட்டங்கள் போட்டால் மட்டும் போதாது. அவற்றை நிறைவேற்ற பட்ஜெற் தேவையல்லவா. பணம் எப்படி வரும் என்று சொல்லாத திட்டங்கள் பேப்பரில்தான் இருக்கும். பலாப்பழம் விற்ற காசும், பால் விற்ற காசும் பத்தாது.

கிராமப் பொருளாதாரத்தை முன்னேற்ற பொல்பொட் அமுல்படுத்திய கட்டாய உழைப்புக்கும் சீமானின் பொருளாதார சிந்தனைக்கும் வித்தியாசம் இருப்பதாக தெரியவில்லை. அப்படி இருந்தால் சொல்லுங்கள். அப்படியே ‘’தன்னலமற்ற அன்பான சர்வாதிகார, ஊழலற்ற ஆட்சியை’’ தமிழ் நாட்டில் ஸ்தாபிக்கப்போவதாக சீமான் கூறி வருகின்றார். அது என்ன அன்பான சர்வாதிகாரம்?

 

 

ஐயா,

தமிழ்நாடு ஒப்பீட்டளவில் அதிக கிராமங்களையும், சிற்றூர்களையும், சொற்ப நகரங்களையும் கொன்ற ஒரு மாநிலம்.

கிராமங்களையும், சிற்றூர்களையும்- ஏழைகள் 82-86%

நகரங்கள்-பணக்காரர்கள் 14-18%.

தமிழ்நாட்டின் மொத்த சனத்தொகை- 8.50 கோடி.

சீமானின் அன்பான சர்வா சர்வாதிகார அரசு அமைப்பு என்பது, சிங்கப்பூரை ஒத்த தமிழ்நாட்டுக்கு பிரத்தியேகமான நிர்வாக சீர்திருத்த சட்டங்கள். அவர்களுடைய ஆட்சி கால சீர்திருத்தம் எவ்வாறு இருக்கும் என்ற ஒரு மாதிரியை நான் விளங்கிய வரையில் உங்களுக்கு இதில் குறிப்பிட விரும்புகிறேன்.

1. கிராமங்கள், சிற்றூர்களில் வறுமை ஒழிப்பை ஊக்குவிக்க தூண்டுதல்.

2. தேசிய அளவிலும், உள்ளூர் மட்டத்தில் ஏழைகள் சார்ந்த திட்டமிடல் மற்றும் தேவையான நிதி ஒதுக்கீடுகளை ஊக்குவித்தலும், மத்திய ஆட்சியாளர்களுடன் தேவைகள் பற்றிய புரிந்துணர்வை ஏற்படுத்துதல்.

3. அடிப்படைத் தேவைகள் இன் நிவர்த்தி செய்யப்படுகின்றது என்பதை கண்காணித்தல் மற்றும் வாழ்வாதாரங்கள் மேம்படுத்துவதற்கான முன்னோடி நடவடிக்கைகளை, உற்பத்தி நடவடிக்கைகள் மக்கள் ஈடுபடுவதற்கான ஒரு காரணியாகவும், சேவைகளை ஒழுங்குபடுத்தி மேம்படுத்தி சென்றடைய வைத்தல்.

4. நன்மைகளும் பெறுபவர்களும், சலுகைகளும் சமூக பாதுகாப்பு திட்டங்கள் பேதமின்றி பாதிக்கப்படக்கூடிய குடும்பங்கள்; குறிப்பாக வயதானவர்கள், மாற்றுத்திறனாளிகள், வேலை இல்லாதோர் கண்டறிதல்.

5. கிராமப்புற சமூகங்களில் காணப்படுகின்ற நூலகத்தைப் மூலதனத்தை பெருக்கக் கூடிய கட்டமைப்புகளை உருவாக்குதல்.

6. கண்டறியப்பட்ட சமூக கட்டமைப்புகளுக்கு ,சமமான பாதுகாப்பான சட்ட கட்டமைப்புகளை உருவாக்கி கொடுத்தல்; நிலங்களை பாதுகாத்தலும் பெண்கள் மற்றும் சிறு அளவிலான விவசாயிகளை மற்றும் பழங்குடியினரை அதிகாரத்தை நோக்கிய ஒரு பயணத்தை உருவாக்கிக் கொடுத்தல்.

7. பெண்கள் பழங்குடி மக்கள் மற்றும் சிவ பாதிக்கப்படக்கூடிய குழுக்கள் ஆகியோருக்கு நிலம், நீர், நிதி ஆதாரங்கள் மற்றும் தேவையான தொழில்நுட்பங்களும் சமமான அளவில் கிடைக்க ஒரு அணுகு முறையை உருவாக்கிக் கொடுத்தல் அல்லது ஊக்குவித்தல்.

8. கிராமப்புறங்களில் காணப்படுகின்ற பாரம்பரிய அறிவியலுடன், நிலையான நவீன தொழில்நுட்பங்களை சேர்ப்பது ஒத்திசைந்து ஆதரித்து ஊக்குவித்தல்.

9. உற்பத்திகளின் விலை, வானிலை, சந்தைப் போக்கு, கடன் அடிப்படையில் ஆதாரங்களையும் விழிப்புணர்வையும் ஏற்படுத்துதல்.

10. இயற்கை பேரழிவுகளை சந்திப்பதற்கு பழக்கப்படுத்தி, அதுவே நிவர்த்தி செய்வதற்கான உடனடி வேலைத் திட்டங்களை தயார் நிலையில் வைத்திருத்தல்.

11. மாநில அரசு சார்ந்து காலநிலை மாற்றத்தின் தரவுகளை துல்லியமாக பெற்றுக்கொள்ள கட்டமைப்புகளை உருவாக்கி விடுதல்.

12. கிராமப்புற தலைமைகளே உருவாக்கி, நிர்வாகத் திறனை ஊக்குவித்தல்.

13. பாதுகாப்பான நீர், புதிய வடிகால் அமைப்புகள் சீர் செய்தல்.

14.நிலையான எரிபொருள் வசதிகளை, மின்மயமாக்கல் வசதிகளை செய்து கொடுத்தல், தகவல் தொடர்பு வலையமைப்புகளை உருவாக்கிக் கொடுத்தது கொடுத்தல்.

15. நகர, கிராமங்களுக்கு இடையேயான சுகாதார கட்டமைப்புகளை விஸ்தரித்து சமமான முறையில் நிர்வகித்தல்.

16.கிராமப்புற முதலீடுகளை ஊக்குவித்தல்.

17.கல்வி, போக்குவரத்து, சுகாதாரம் போன்றவற்றில் நகர் ,கிராம ஒரே அளவில் கிடைப்பதற்கு உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ளுதல் அல்லது கட்டாயப்படுத்தியது.


 


 

இன்னம் சில கூறுகள் இதில் உள்ளடக்கலாம், ஆனால் நேர பளு காரணமாக நான் இத்துடன் முடித்துக் கொள்கிறேன்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, விளங்க நினைப்பவன் said:

அப்போ டென்மார்க் ஆட்சி, லண்டன் ஆட்சி  ஜனநாயக ஆட்சிகள் எல்லாம்  தரமாட்டார் 😂  தமிழக மக்கள் கெட்டிகாரர்கள் அவரை தேர்ந்து எடுக்க போவதில்லை. ஊழலற்ற ஆட்சி டென்மார்க் ஆட்சி  சர்வாதிகார ஆட்சி அது இது என்று அள்ளி அள்ளி  இறைக்க வேண்டியது தானே.

 

உண்மை தமிழக மக்கள் அவரை தேர்ந்தெடுக்க மாட்டார்கள்.

காரணங்கள்,

1. இப்போ இருக்கின்ற தலைமுறைகள்; கூட வாழுகின்ற அல்லது அயல் மாநிலங்களில் வாழுகின்ற இனக்குழுக்களின் எந்தவிதமான பெரிய அடக்குமுறைகளையும், உயிர்ச் சேதங்களையும் உணர்ந்தவர்களாக இல்லை. ஒரு இளம் பராயத்தினர் அதை உணரத் தொடங்கிவிட்டார்கள். ஆனால் எங்களுக்கு அது நன்றாகவே புரியும் நாங்கள் காயப்பட்டு அடிபட்டு அழிந்துபோன தமிழ் குடிகள் இலங்கையில்.

2. தமிழகத்தில் உள்ளவர்கள் அயல் இனங்களில் உருவாகின்ற ஆக்கிரமிப்புகளை உணர தெரியாமல் இருக்கின்றார்கள். அத்தோடு அதனைச் சார்ந்து எழுதுபவர்களை அல்லது கொடுப்பவர்களை ஒரு வித்தியாசமான கண்ணோட்டத்தில் பார்க்கச் செய்து விடுவார்கள்.

3. கிட்டத்தட்ட ஒரு 20 ஆண்டுகளுக்கு முன்பாக தான் அவர்களுக்கு வரலாறு குறிப்பாக தமிழக வரலாறு பாடத்திட்டத்தில் புகுத்தப்பட்டது அதுவும் தமிழக வரலாறு அடங்கவில்லை.

4. தமிழக வரலாறு, ஆட்சி முறைகள் வெளிய உள்ளவர்களினால் பிரசுரிக்கப்பட்டது. அது எல்லோரையும் சென்றடையவும் இல்லை.

5. ஆங்கில மோகமும், தமிழ் மொழிமூல கற்களும் அவசியமற்ற போனதால் அவர்களுடைய கல்வி மேம்படும் வேலைகளும் வேலைகளும் வேலைவாய்ப்புகளும் ஒரு சமூக இடைவெளியை ஏற்படுத்திவிட்டது.

6. தமிழகத்தில் சுதந்திரத்துக்கு பின்னான ஆட்சியில் வந்தவர்கள் கிட்டத்தட்ட காமராஜர் கல்விக்கு, தமிழுக்கு முன்னுரிமை கொடுத்தார்.

7.அதன் பின்னால் வந்த கருணாநிதியின் ஆரம்பகால கல்வி தெலுங்கிலேயே இருந்தது அவரின் ஆரம்ப காலம் முற்றுமுழுதாக தெலுங்கு சார்ந்த ஒரு கட்டமைப்புக்குள் வளர்ந்த கிட்டத்தட்ட 20 வயதுகளில் அவர் தமிழ் சார்ந்தது சிந்திக்கத் தொடங்கினர்.

8. எம்ஜிஆர் படித்தது மூன்றாம் வகுப்பு வரை என்று ஆய்வுகள் கூறுகின்றது அதனால் அவர் கேள்வி கல்வி அறிவு வீதத்தை அதிகரிப்பதற்கான பொறிமுறையை கொண்டிருக்கவில்லை.

9. ஜெயலலிதா தமிழ் தெரிந்த வாசிக்கத் தெரியாது ஒரு கன்னடத்து முதலமைச்சர்.

இவர்களுடைய அந்தப் பொன்னான ஆட்சிக்காலத்தில் இவ்வாறு தமிழம் தழைத்தோங்கி இருக்கும். ஆனால் பொருளாதாரத்துக்கான ஒரு கல்வி முறையை உருவாக்கிக் கொடுத்து விட்டார்கள். அது சுவையற்ற ஒரு உணவு பதார்த்தம் ஆக இருப்பதற்கு ஒப்பானது. அதுமட்டுமன்றி சினிமா சார்ந்த ஒரு அரசியல் போக்கை உருவாக்கி கேளிக்கைகளும், பெண் மோகத்தையும் கிடைக்கச் செய்தனர்.

குறிப்பாக பார்த்தீர்கள் ஆனால் அவர்களின் சினிமாக்கள் காதலை மையப்படுத்தி, பெண்களை மையப்படுத்தி இருக்கும். அது கிட்டத்தட்ட ஒரு ஐம்பது ஆண்டுகளாக தொடர்ந்து நடைபெற்றுக் கொண்டே இருக்கின்றது. சமீப காலத்தில் சில மாறுதல்களை அவர்களுடைய திரைப்படங்கள் காட்டுகிறது.

இப்படிப்பட்ட ஒரு தமிழ் சமூகத்தில் ஒரு அரசியல் விழிப்புணர்வு, ஒரு எழுச்சி விஞ்ஞானத்தின் தேவை எப்படி உருவாக்குவீர்கள். ஆகவே அவர்கள் சீமானை தேர்ந்தெடுக்க மாட்டார்கள்.

இவர்கள் எங்கள் நாட்டிலும் தமிழர்களை அழித்தொழிக்க துணை போனவர் ஆகின்றனர்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, MullaiNilavan said:

உண்மை தமிழக மக்கள் அவரை தேர்ந்தெடுக்க மாட்டார்கள்.

காரணங்கள்,

1. இப்போ இருக்கின்ற தலைமுறைகள்; கூட வாழுகின்ற அல்லது அயல் மாநிலங்களில் வாழுகின்ற இனக்குழுக்களின் எந்தவிதமான பெரிய அடக்குமுறைகளையும், உயிர்ச் சேதங்களையும் உணர்ந்தவர்களாக இல்லை. ஒரு இளம் பராயத்தினர் அதை உணரத் தொடங்கிவிட்டார்கள். ஆனால் எங்களுக்கு அது நன்றாகவே புரியும் நாங்கள் காயப்பட்டு அடிபட்டு அழிந்துபோன தமிழ் குடிகள் இலங்கையில்.

2. தமிழகத்தில் உள்ளவர்கள் அயல் இனங்களில் உருவாகின்ற ஆக்கிரமிப்புகளை உணர தெரியாமல் இருக்கின்றார்கள். அத்தோடு அதனைச் சார்ந்து எழுதுபவர்களை அல்லது கொடுப்பவர்களை ஒரு வித்தியாசமான கண்ணோட்டத்தில் பார்க்கச் செய்து விடுவார்கள்.

3. கிட்டத்தட்ட ஒரு 20 ஆண்டுகளுக்கு முன்பாக தான் அவர்களுக்கு வரலாறு குறிப்பாக தமிழக வரலாறு பாடத்திட்டத்தில் புகுத்தப்பட்டது அதுவும் தமிழக வரலாறு அடங்கவில்லை.

4. தமிழக வரலாறு, ஆட்சி முறைகள் வெளிய உள்ளவர்களினால் பிரசுரிக்கப்பட்டது. அது எல்லோரையும் சென்றடையவும் இல்லை.

5. ஆங்கில மோகமும், தமிழ் மொழிமூல கற்களும் அவசியமற்ற போனதால் அவர்களுடைய கல்வி மேம்படும் வேலைகளும் வேலைகளும் வேலைவாய்ப்புகளும் ஒரு சமூக இடைவெளியை ஏற்படுத்திவிட்டது.

6. தமிழகத்தில் சுதந்திரத்துக்கு பின்னான ஆட்சியில் வந்தவர்கள் கிட்டத்தட்ட காமராஜர் கல்விக்கு, தமிழுக்கு முன்னுரிமை கொடுத்தார்.

7.அதன் பின்னால் வந்த கருணாநிதியின் ஆரம்பகால கல்வி தெலுங்கிலேயே இருந்தது அவரின் ஆரம்ப காலம் முற்றுமுழுதாக தெலுங்கு சார்ந்த ஒரு கட்டமைப்புக்குள் வளர்ந்த கிட்டத்தட்ட 20 வயதுகளில் அவர் தமிழ் சார்ந்தது சிந்திக்கத் தொடங்கினர்.

8. எம்ஜிஆர் படித்தது மூன்றாம் வகுப்பு வரை என்று ஆய்வுகள் கூறுகின்றது அதனால் அவர் கேள்வி கல்வி அறிவு வீதத்தை அதிகரிப்பதற்கான பொறிமுறையை கொண்டிருக்கவில்லை.

9. ஜெயலலிதா தமிழ் தெரிந்த வாசிக்கத் தெரியாது ஒரு கன்னடத்து முதலமைச்சர்.

இவர்களுடைய அந்தப் பொன்னான ஆட்சிக்காலத்தில் இவ்வாறு தமிழம் தழைத்தோங்கி இருக்கும். ஆனால் பொருளாதாரத்துக்கான ஒரு கல்வி முறையை உருவாக்கிக் கொடுத்து விட்டார்கள். அது சுவையற்ற ஒரு உணவு பதார்த்தம் ஆக இருப்பதற்கு ஒப்பானது. அதுமட்டுமன்றி சினிமா சார்ந்த ஒரு அரசியல் போக்கை உருவாக்கி கேளிக்கைகளும், பெண் மோகத்தையும் கிடைக்கச் செய்தனர்.

குறிப்பாக பார்த்தீர்கள் ஆனால் அவர்களின் சினிமாக்கள் காதலை மையப்படுத்தி, பெண்களை மையப்படுத்தி இருக்கும். அது கிட்டத்தட்ட ஒரு ஐம்பது ஆண்டுகளாக தொடர்ந்து நடைபெற்றுக் கொண்டே இருக்கின்றது. சமீப காலத்தில் சில மாறுதல்களை அவர்களுடைய திரைப்படங்கள் காட்டுகிறது.

இப்படிப்பட்ட ஒரு தமிழ் சமூகத்தில் ஒரு அரசியல் விழிப்புணர்வு, ஒரு எழுச்சி விஞ்ஞானத்தின் தேவை எப்படி உருவாக்குவீர்கள். ஆகவே அவர்கள் சீமானை தேர்ந்தெடுக்க மாட்டார்கள்.

இவர்கள் எங்கள் நாட்டிலும் தமிழர்களை அழித்தொழிக்க துணை போனவர் ஆகின்றனர்.

அருமையான கருத்து... முல்லை நிலவன். 👍🏼

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, Kandiah57 said:

அது சிங்கப்பூரில் செய்யலாம்..  அடிமை மாநிலம். தமிழ்நாட்டில் மிக. மிக கஸ்டம். முதலில் தமிழ் நாடு தனிநாடு ஆகவேண்டும் அல்லது. கூடுதல்  அதிகாரம் தேவை.  முக்கியாமாக. மத்தியரசு  நினைத்தவுடன். கலைக்கும் சட்டம். அகற்றப்படவேண்டும். ஆட்சிக்காலம் முடியும்வரை. தெரிவுசெய்யப்பட்ட அரசு பதவியில்இருக்கவேண்டும்

ஒருவேளை ஜெகன் மோகன் ரெட்டி சிங்கப்பூரிலிருந்து கொண்டு  சீமான் சொல்வதையெல்லாம் கொப்பியடிக்கிறாரோ 😁😁😁

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
8 hours ago, MullaiNilavan said:

ஐயா,

தமிழ்நாடு ஒப்பீட்டளவில் அதிக கிராமங்களையும், சிற்றூர்களையும், சொற்ப நகரங்களையும் கொன்ற ஒரு மாநிலம்.

கிராமங்களையும், சிற்றூர்களையும்- ஏழைகள் 82-86%

நகரங்கள்-பணக்காரர்கள் 14-18%.

தமிழ்நாட்டின் மொத்த சனத்தொகை- 8.50 கோடி.

சீமானின் அன்பான சர்வா சர்வாதிகார அரசு அமைப்பு என்பது, சிங்கப்பூரை ஒத்த தமிழ்நாட்டுக்கு பிரத்தியேகமான நிர்வாக சீர்திருத்த சட்டங்கள். அவர்களுடைய ஆட்சி கால சீர்திருத்தம் எவ்வாறு இருக்கும் என்ற ஒரு மாதிரியை நான் விளங்கிய வரையில் உங்களுக்கு இதில் குறிப்பிட விரும்புகிறேன்.

1. கிராமங்கள், சிற்றூர்களில் வறுமை ஒழிப்பை ஊக்குவிக்க தூண்டுதல்.

2. தேசிய அளவிலும், உள்ளூர் மட்டத்தில் ஏழைகள் சார்ந்த திட்டமிடல் மற்றும் தேவையான நிதி ஒதுக்கீடுகளை ஊக்குவித்தலும், மத்திய ஆட்சியாளர்களுடன் தேவைகள் பற்றிய புரிந்துணர்வை ஏற்படுத்துதல்.

3. அடிப்படைத் தேவைகள் இன் நிவர்த்தி செய்யப்படுகின்றது என்பதை கண்காணித்தல் மற்றும் வாழ்வாதாரங்கள் மேம்படுத்துவதற்கான முன்னோடி நடவடிக்கைகளை, உற்பத்தி நடவடிக்கைகள் மக்கள் ஈடுபடுவதற்கான ஒரு காரணியாகவும், சேவைகளை ஒழுங்குபடுத்தி மேம்படுத்தி சென்றடைய வைத்தல்.

4. நன்மைகளும் பெறுபவர்களும், சலுகைகளும் சமூக பாதுகாப்பு திட்டங்கள் பேதமின்றி பாதிக்கப்படக்கூடிய குடும்பங்கள்; குறிப்பாக வயதானவர்கள், மாற்றுத்திறனாளிகள், வேலை இல்லாதோர் கண்டறிதல்.

5. கிராமப்புற சமூகங்களில் காணப்படுகின்ற நூலகத்தைப் மூலதனத்தை பெருக்கக் கூடிய கட்டமைப்புகளை உருவாக்குதல்.

6. கண்டறியப்பட்ட சமூக கட்டமைப்புகளுக்கு ,சமமான பாதுகாப்பான சட்ட கட்டமைப்புகளை உருவாக்கி கொடுத்தல்; நிலங்களை பாதுகாத்தலும் பெண்கள் மற்றும் சிறு அளவிலான விவசாயிகளை மற்றும் பழங்குடியினரை அதிகாரத்தை நோக்கிய ஒரு பயணத்தை உருவாக்கிக் கொடுத்தல்.

7. பெண்கள் பழங்குடி மக்கள் மற்றும் சிவ பாதிக்கப்படக்கூடிய குழுக்கள் ஆகியோருக்கு நிலம், நீர், நிதி ஆதாரங்கள் மற்றும் தேவையான தொழில்நுட்பங்களும் சமமான அளவில் கிடைக்க ஒரு அணுகு முறையை உருவாக்கிக் கொடுத்தல் அல்லது ஊக்குவித்தல்.

8. கிராமப்புறங்களில் காணப்படுகின்ற பாரம்பரிய அறிவியலுடன், நிலையான நவீன தொழில்நுட்பங்களை சேர்ப்பது ஒத்திசைந்து ஆதரித்து ஊக்குவித்தல்.

9. உற்பத்திகளின் விலை, வானிலை, சந்தைப் போக்கு, கடன் அடிப்படையில் ஆதாரங்களையும் விழிப்புணர்வையும் ஏற்படுத்துதல்.

10. இயற்கை பேரழிவுகளை சந்திப்பதற்கு பழக்கப்படுத்தி, அதுவே நிவர்த்தி செய்வதற்கான உடனடி வேலைத் திட்டங்களை தயார் நிலையில் வைத்திருத்தல்.

11. மாநில அரசு சார்ந்து காலநிலை மாற்றத்தின் தரவுகளை துல்லியமாக பெற்றுக்கொள்ள கட்டமைப்புகளை உருவாக்கி விடுதல்.

12. கிராமப்புற தலைமைகளே உருவாக்கி, நிர்வாகத் திறனை ஊக்குவித்தல்.

13. பாதுகாப்பான நீர், புதிய வடிகால் அமைப்புகள் சீர் செய்தல்.

14.நிலையான எரிபொருள் வசதிகளை, மின்மயமாக்கல் வசதிகளை செய்து கொடுத்தல், தகவல் தொடர்பு வலையமைப்புகளை உருவாக்கிக் கொடுத்தது கொடுத்தல்.

15. நகர, கிராமங்களுக்கு இடையேயான சுகாதார கட்டமைப்புகளை விஸ்தரித்து சமமான முறையில் நிர்வகித்தல்.

16.கிராமப்புற முதலீடுகளை ஊக்குவித்தல்.

17.கல்வி, போக்குவரத்து, சுகாதாரம் போன்றவற்றில் நகர் ,கிராம ஒரே அளவில் கிடைப்பதற்கு உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ளுதல் அல்லது கட்டாயப்படுத்தியது.


 


 

இன்னம் சில கூறுகள் இதில் உள்ளடக்கலாம், ஆனால் நேர பளு காரணமாக நான் இத்துடன் முடித்துக் கொள்கிறேன்.

கிராமங்கள் பொருளாதார ரீதியில் முன்னேற்றப்படவேண்டும். கிராம மக்கள் தொழில்வாய்ப்புக்களுக்காக நகரங்களை நோக்கி படையெடுப்பதை குறைக்கவேண்டும் என்பதில் மாற்றுக் கருத்தில்லை.

ஆனால் பொருளாதாரத் திட்டங்களில் radical மாற்றங்களைச் செய்யமுடியாத நிலை இருக்கின்றது. அது சீமானுக்கும் தெரியும், ஆனால் வெளியே சொல்லமாட்டார்.

Make in India என்ற பெயரில் மோடி சொல்லும் “தற்சார்பு” பொருளாதாரத்திற்கும், சீமானின் “தற்சார்பு” பொருளாதாரத்திற்கும் எந்த விதமான வித்தியாசமும் இல்லை. ஆனால் இவர்கள் சொல்லாமல் மறைப்பது என்னவென்றால் சர்வதேச நாணய நிதியம், உலக வங்கி போன்ற அமைப்புக்களிடம் இருந்து வாங்கிய கடன்களால் அவர்களின் நிபந்தனைகளை மீறி ஒன்றும் செய்யமுடியாது என்பதுதான். மத்திய அரசு மட்டுமல்ல, தமிழ்நாடு மாநில அரசும் கடன் வாங்கி வருகின்றது. அந்த நிபந்தனைகளின் அடிப்படையில் பொருளாதாரத்தை தாராளமயப்படுத்த வேண்டும், சந்தையை நூறு சதவீத அந்நிய முதலீடுக்கு திறந்து விட வேண்டும். மேற்கு நாடுகளின் மீது சாய்ந்து கொண்டிருக்கும் இந்தியாவும், மேற்கு நாடுகளின் சந்தைகளில் கால்பதிக்க முனையும் தமிழக முதலாளிகளும், மேற்கு நாடுகளின் சுயலாபக் கொள்கைகளை மீறி எதுவும் செய்யமுடியாது.

மேற்கு நாடுகளின் சந்தைப் பொருட்களை வாங்கினால்தான், மேற்குநாடுகளின் சந்தைகளில் ஓரளவாவது காலூன்றலாம்.. உலக வங்கி, சர்வதேச நாணய நிதியம் போன்றவற்றை மீறி உள்ளூரில் கடன் கொடுப்பதும், மானியங்கள் கொடுப்பதும் சரிவராது. சுருக்கமாகச் சொன்னால், தற்போதைய திறந்த தாராளமயப்படுத்தப்பட்ட பொருளாதாரத்தையும், நுகர்வோர் கலாச்சாரத்தையும் தக்கவைக்கும் பொருளாதாரத் திட்டங்களில் இருந்து அதிகம் விலகிச் செல்லமுடியாத தளைகள் உள்ளன. எனவே நாம் தமிழரின் “தற்சார்பு” பொருளாதாரமும் எழ முதலே தடுக்கிவிழும் அல்லது விழுத்தப்படும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
9 hours ago, MullaiNilavan said:

எம்ஜிஆர் படித்தது மூன்றாம் வகுப்பு வரை என்று ஆய்வுகள் கூறுகின்றது அதனால் அவர் கேள்வி கல்வி அறிவு வீதத்தை அதிகரிப்பதற்கான பொறிமுறையை கொண்டிருக்கவில்லை.

படித்தவர்கள்  எல்லாம் சிறந்த நிர்வாகிகலில்லை சிறந்த நிர்வாகிகள் எல்லாம். படித்தவர்களைமல்ல. எம்ஜிஆர் அடிமட்டத்திலிருந்து வந்தவர் சிறந்த அனுபவசாலி ..சிறந்த நிரவாகியும் கூட..பல முறை. முதலமைச்சாராயிருந்து இருக்கிறார்.இந்திரா அமமையார் சட்டமன்றத்தைக்கலைததபோதும். மீண்டும் தமிழகமக்கள். அவரையே தெரிவு செய்தார்கள். இன்றும் கூட  அவர் உயிருடனிருந்து  தேர்தலில் நிற்பாராயின்..தமிழகமக்கள் மிகப்பெரும்பான்மையுடன் அவரை. முதலமைச்சராக. தெரிவுசெய்வார்கள்.இந்தப் படககாதவனைப் படித்தவர்களும் வாக்குப்போட்டு தெரவுசெய்துள்ளார்கள். சீமான் எனனும் படித்தவனுக்கு படிககதவனும் வாக்குபபோடப்போவதிலலை. படிப்பில்லை என்ற ஒரே காரணத்துக்காக எம்ஜிஆரை மட்டாமாக எழுதுவது எற்புடையதில்லை.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
9 hours ago, MullaiNilavan said:

தமிழகத்தில் உள்ளவர்கள் அயல் இனங்களில் உருவாகின்ற ஆக்கிரமிப்புகளை உணர தெரியாமல் இருக்கின்றார்கள். அத்தோடு அதனைச் சார்ந்து எழுதுபவர்களை அல்லது கொடுப்பவர்களை ஒரு வித்தியாசமான கண்ணோட்டத்தில் பார்க்கச் செய்து விடுவார்கள்.

தமிழகம் இந்தியாவின் ஒர் பகுதி...இந்தியாவின் ஒர் பகுதியில் ..எந்த இந்தியானும் வந்து  குடியிருக்கமுடியும்..அந்தப்பகுதியிலிருப்பவனே  கேள்வி கேட்கமுடியாது  ..நீங்கள். எப்படி கேட்க முடியும்?🤓🤓

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
9 hours ago, MullaiNilavan said:

இப்படிப்பட்ட ஒரு தமிழ் சமூகத்தில் ஒரு அரசியல் விழிப்புணர்வு, ஒரு எழுச்சி விஞ்ஞானத்தின் தேவை எப்படி உருவாக்குவீர்கள். ஆகவே அவர்கள் சீமானை தேர்ந்தெடுக்க மாட்டார்கள்.

என்ன சொல்லவருகிறிர்கள்? மக்கள் தகுதியற்றாவர்கள்..சீமான் தகுதியான வேட்பாளர்..அப்படியா? பிறகு  எப்படி  காமராஐர்...அண்ணத்தரை....எம்ஜிஆர்...தெர்வு செய்தார்கள்?இன்றும் தமிழகமக்கள். இந்த முதலமைச்சர்மாரை  புகழ்கிறார்கள்.தகுதியான வேட்பாளர் போட்டியிடவிடில். மக்கள்  எப்படி. நல்ல முதலமைச்சரைத்தெரிவு  செய்ய முடியும்..?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, Kandiah57 said:

என்ன சொல்லவருகிறிர்கள்? மக்கள் தகுதியற்றாவர்கள்..சீமான் தகுதியான வேட்பாளர்..அப்படியா? பிறகு  எப்படி  காமராஐர்...அண்ணத்தரை....எம்ஜிஆர்...தெர்வு செய்தார்கள்?இன்றும் தமிழகமக்கள். இந்த முதலமைச்சர்மாரை  புகழ்கிறார்கள்.தகுதியான வேட்பாளர் போட்டியிடவிடில். மக்கள்  எப்படி. நல்ல முதலமைச்சரைத்தெரிவு  செய்ய முடியும்..?

வெரி சிம்பிள்! போட்டியிடுவோரில் தகுதியானவரை தேர்ந்தெடுக்கவேண்டும்!!

தகுதியானவர் போட்டியிடவில்லை என்று யாரை சொல்லவருகிறீர்கள்? நம்ம சூப்பர் ஸ்டார் ரஜினியையா ??

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, Kandiah57 said:

படித்தவர்கள்  எல்லாம் சிறந்த நிர்வாகிகலில்லை சிறந்த நிர்வாகிகள் எல்லாம். படித்தவர்களைமல்ல. எம்ஜிஆர் அடிமட்டத்திலிருந்து வந்தவர் சிறந்த அனுபவசாலி ..சிறந்த நிரவாகியும் கூட..பல முறை. முதலமைச்சாராயிருந்து இருக்கிறார்.இந்திரா அமமையார் சட்டமன்றத்தைக்கலைததபோதும். மீண்டும் தமிழகமக்கள். அவரையே தெரிவு செய்தார்கள். இன்றும் கூட  அவர் உயிருடனிருந்து  தேர்தலில் நிற்பாராயின்..தமிழகமக்கள் மிகப்பெரும்பான்மையுடன் அவரை. முதலமைச்சராக. தெரிவுசெய்வார்கள்.இந்தப் படககாதவனைப் படித்தவர்களும் வாக்குப்போட்டு தெரவுசெய்துள்ளார்கள். சீமான் எனனும் படித்தவனுக்கு படிககதவனும் வாக்குபபோடப்போவதிலலை. படிப்பில்லை என்ற ஒரே காரணத்துக்காக எம்ஜிஆரை மட்டாமாக எழுதுவது எற்புடையதில்லை.

வணக்கம் ஐயா,


நிர்வாகம் என்பது ஒரு வரையறைகளை கொண்டது. அது பல படிமுறைகள் கொண்ட ஒரு வலுவான, செயல்முறை அடுக்குகளை கொண்டு, தொடர்ந்து இயங்கும்.


எனது கருத்து எம்ஜிஆர் சிறந்த நிர்வாகி அல்ல என்பதை சுட்டிக்காட்டுவது அல்ல.


அரசு நிர்வாகம் என்பது சாதாரண நிர்வாக முறைகளை விட ஒரு வலுவான எதிர்கால சிந்தனையுடன் திட்டங்களை உருவாக்கி, அதனை அடைவதற்கான தந்திரோபாயங்கள் சிக்கல்களை ஆராய்ந்து முதன்மையான வெற்றியை நிலைப்படுத்தி, அதனைத் தொடர்ந்து செய்வதற்கான ஒரு விதிமுறைகளை அல்லது  ஒரு கட்டமைப்புகளை உருவாக்கி விடும். 


இங்கே சிக்கல் எம்ஜிஆரின் தூர நோக்கு, கல்வி முறை மாற்றம் ஒன்றை புகுத்த முடியவில்லை என்பதே. இதில்தான் தலைமைத்துவத்தின் ஆளுமையும், சிறந்த பார்வையும் வெளிப்படும்.


உதாரணமாக ஒரு குடும்பத்தில், தாய் அல்லது தகப்பனார் தங்களது பிள்ளைகள் மீதான அக்கறை எதை நோக்கியதாக இருக்கவேண்டும் என்பதை அவர்களே தீர்மானிக்கிறார்கள்.  நான் உங்கள சிந்தனைக்காக அதை விட்டு விடுகிறேன். நீங்களே  உங்களைச் சுற்றி நடந்த குடும்பங்களின் வளர்ச்சி அல்லது தாழ்வு யாரை மையப்படுத்தி இருந்தது என்பதை ஒரு முறை சிந்தியுங்கள். அதில் சில விடைகள் உங்களுக்கு புரியும். அதுவே ஒரு மக்கள் கூட்டத்திற்கு ஒத்து போகும்.


சமூக கட்டமைப்பு அதுவும் குறிப்பாக தமிழர்களுடைய சமூக கட்டமைப்பு, மிக மிக வலிமையான  உணர்வுகளின் உணர்வுகளின் அடிப்படையில் அமையப்பெற்றது. குடும்பம், உறவு, உறவுகளின் பினைப்பு, பரம்பரை ,ஊர்,  கிராமம் நகரம் அதுவே பின்பு நாடாகி இறுக்கமான ஒரு கட்டமைப்பை உருவாக்கி உள்ளார்கள். ஒரு குடும்பத்தில் எடுக்கின்ற முடிவுகள் எவ்வாறு  ஒரு பரம்பரை ஆளுகின்றது என்பதை நீங்கள் கண்கூடாக உணர்வீர்கள்.

இது தான் கிட்ட தட்ட 2000 ஆண்டுகள் முன்பு ஒரு இறுக்கமான ஒரு சமூக கட்டமைப்பை வைத்திருந்தார்கள் அது பின்னாளில் மெதுவாக கலையத் தொடங்கி இவ்வளவு சீர்கேடுகளுக்கு ஆளாகி உள்ளோம்.

இங்கே குறைபாடு எம்ஜிஆர் வெளிப்படுத்தியநிர்வாகப் சம்பந்தப்பட்டதல்ல, எனது தனிப்பட்ட கருத்து எம்ஜிஆர் என்ன தேவை என்பதை தூர நோக்கோடு, கடந்து வந்த அதாவது வரலாறை புரிந்துகொள்ளாமல் விட்டதே. அது  சார்ந்து தனது திட்டங்களை விடவில்லை என்பதே. தனது குடிவாழ் மக்களுக்கு என்ன தேவை என்பதை அவர் உணரவில்லை, உணர்த்த இல்லை.

நீங்கள் குறிப்பிட்டது போல தமிழக மக்கள் அவர் இருந்திருந்தால் மீண்டும் மீண்டும் அவருக்கு வாக்கு செலுத்தி அவரை முதல்வராக்கி இருப்பார்கள். இதனையே அவரது நுணுக்கமான அவருக்குத் தெரியாத "கட்டுப்படுத்தல்" என்கின்ற ஒரு சொல்லாடலில் ஒருபொருள் முறையில் வருகிறது.
 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, Eppothum Thamizhan said:

வெரி சிம்பிள்! போட்டியிடுவோரில் தகுதியானவரை தேர்ந்தெடுக்கவேண்டும்!!

தகுதியானவர் போட்டியிடவில்லை என்று யாரை சொல்லவருகிறீர்கள்? நம்ம சூப்பர் ஸ்டார் ரஜினியையா ??

உங்களுக்கு அது மிகவும் இலகுவாகயிருக்கிறது.  ஆனாலும். நீங்கள். சென்னமாதிரித்தான் செய்யவேண்டும் ...அப்படித்தெரிவுசெய்யும் முதலமைச்சர்  எப்படி நல்ல முதலமைச்சராக முடியும்?. உங்கள் நட்சத்திர நடிகர். ரஜினி வாக்குப்போடவே. தகுதியற்றவர்...உந்த வயதில் ஜேர்மனியில். அரசியலிருந்து ஓய்வு பெறுகிறார்கள்.😍😍😎😎

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • ஆமாம் நானும் விரும்புகிறேன்   நடக்குமா??  நடக்காது ஓருபோதும்.  நடக்கப்போவதில்லை,....காரணம் தமிழ்நாட்டு மக்கள் விரும்பவில்லை    சீமானை முதல்வர் ஆக்க தமிழ்நாட்டு மக்கள் விரும்பவில்லை   6.23 கோடி வாக்குகளில். குறைந்தது 3.5 கோடி வாக்குகள். பெற்றால் தான்   முதல்வர் ஆக முடியும் அது தனி கட்சி அல்லது பல கட்சிகளின் கூட்டமைப்பு      தனியா போட்டி இடும் சீமான் 0.3 கோடி வாக்குகளைப் பெற்று எப்படி  முதல்வர் ஆகலாம்??   சீமான் தலைமையில் எந்தவொரு கட்சியும். கூட்டணி அமைக்காது   சீமான் தான்  மற்ற கட்சிகளின் தலைமையில் கூட்டணி அமைக்கலாம்   அப்படி அமையும் கூட்டணியில். சீமானுக்கு முதல்வர் பதவி கிடைக்காது  சீமான் வென்றால் தேர்தல் ஆணையம் நல்லது,....வாக்கு எண்ணும் மெசினும். நல்லது    சீமான் தோற்கும்போது இவை இரண்டுமே கூடாது      மேலும் என்னை சீமான் எதிர்ப்பாளர். என்று ஏன் முத்திரை குற்ற வேண்டும்  ...?? ஒருவர் வெல்லும் வாய்ப்புகள் இல்லை என்று கருத்து எழுதும் போது   அவரின் எதிர்ப்பாளர். என்பது சரியான கருத்தா?? இல்லையே?? 
    • கொழும்பான் கூட்டுனா அது கொத்து, கனடால அடிச்ச அது தமிழன் கெத்து  இதுக்கு யாழில குத்தி முறிந்து கொடுக்கிறோம் பாரு சூ... (சப்பாத்து)
    • "பழைய சில பகிடிகள்"    1. Which is the longest word in the English dictionary? / ஆங்கில அகராதியில் மிக நீளமான சொல் எது? Smile -  Because after 'S' there is a 'mile'. 2.”மழைமேகம் [மழை may come] க்கு எதிர்சொல் என்ன?  மறுமொழி : மழை  may not come. 3.சாப்பிட  எதுவும்  சூடாக  கிடைக்காத  ஹோட்டல்  எது ?  மறுமொழி : ஆறிய  பாவன்   4. Which is the coolest alphabet in English? / ஆங்கிலத்தில் குளிரான  எழுத்து எது? மறுமொழி : ‘B’. ஏன்னா  அது  ‘A”C’ க்கு நடுவிலே  இருக்கு . 5. What is common to robbers and tennis players ? / கொள்ளையர்களுக்கும் டென்னிஸ் வீரர்களுக்கும் பொதுவானது என்ன? Ans: They both involve rackets(racquets) and courts! 6. கிண்ணத்துல  கல்லை  போட்டால்  ஏன்   மூழ்கிறது ?  மறுமொழி: அதுக்கு  நீச்சல்  தெரியாது  7. In a grocery store, a Sardarji was starring at an orange juice for couple of hours. You know why ? / ஒரு மளிகைக் கடையில், ஒரு சர்தார்ஜி இரண்டு மணி நேரம் ஆரஞ்சு ஜூஷை உற்றுப் பார்த்துக்கொண்டே  கொண்டிருந்தார். ஏன் தெரியுமா? Ans: Because it said CONCENTRATE. 8. What is the difference between a fly and a mosquito?  Ans: A MOSQUITO can FLY but a FLY cannot MOSQUITO!! 9. ஒரு  அறையிலே  ஒரு  மூலையில்  ஒரு  பூனை  இருக்கு . வலது மூலையில் ஒரு  எலி . இடது மூலையில்  ஒரு கிண்ணத்தில் பால். கேள்வி  : பூனையின்  கண்  இதில்  இருக்கும்  ?  மறுமொழி: பூனையின்  கண்  அதோட  முகத்தில்தான்  இருக்கும்   10. Which runs faster, Hot or Cold? / எது வேகமாக ஓடுகிறது? Hot or Cold?? ANS: Hot, because anyone can catch a cold
    • வீரப்பன் பையன்26 என்பதன் அர்த்தம் நீங்கள் வீரப்பனின் மகன் எனும் அர்த்தம் ஆகாதா? உங்கள் விருப்பம். 
    • "ஓடம்"   "கற்பகம் என்ற புகழ் பனையின் வளங்கள் - உந்தன்  காலடியில் களஞ்சியமாய்க் கண்ட பலன்கள்  பொற்பதியில் பஞ்சம் பசி பட்டினி தீர்க்கும் - தீராப் போரினிலும் அஞ்சேலென மக்களைக் காக்கும்!"  "கல்வி நிலையங்கள் கோயில் குளங்கள் - குதிரை  காற்றாய்ப் பறந்து செல்லும் நீண்ட வெளிகள் தொல்லை துயரம் தீர்க்கும் மருந்து மூலிகைகள் - உனைத்  தொட்டுக் கண்ணிலே ஒற்றித் தோயும் அலைகள்!"  "தென்னைமர உச்சியிலே திங்கள் தடவும் - கடல்  திசைகளெல்லாம் மணிகளை அள்ளி எறியும் வெள்ளை மணல் துறைகளை அலைகள் மெழுகும் - எங்கள் உள்ளம் அதிலே பளிங்கு மண்டபம் காணும்!" வித்துவான் எஸ் அடைக்கலமுத்து நெடுந்தீவை வர்ணித்தவாறு, நீலப் பச்சை வண்ணம் கொண்ட இரத்தினக் கல் போன்ற  நீர் இலங்கையின் கரையை முத்தமிடும் இந்தியப் பெருங்கடலின் மையத்தில், இலங்கையின் நெடுந்தீவு என்று அழைக்கப்படும் டெல்ஃப்ட் தீவு உள்ளது. இங்கே, கடல் மற்றும் கரடுமுரடான நிலப் பரப்புகளின் காலத்தால் அழியாத அழகுக்கு மத்தியில், நெடுந்தீவு மகா வித்தியாலயத்தில் இளம் கணித ஆசிரியராக, கூர்மையான பார்வை, முறுக்கு மீசை, வாட்டசாட்டமான உடல்வாகு, வெளிப்படையான பேச்சு என கிராமத்து மனிதர்களின் அத்தனை சாயல்களையும் ஒருங்கே பெற்ற வெண்மதியன் கடமையாற்றிக் கொண்டு இருந்தான். இவர் நெடுந்தீவையே பிறப்பிடமாகவும் கொண்டவர் ஆவார்.  அதுமட்டும் அல்ல, கடல் வாழ்வுடன் நெருங்கிய தொடர்பு கொண்ட வரும் ஆவார். அதனால் தனக்கென ஒரு ஓடம் கூட வைத்திருந்தான். போர் சூழலால் வடமாகாணம் அல்லல்பட்டுக் கொண்டு இருந்த தருணம் அது. மகா வித்தியாலயத்தில் ஓர் சில முக்கிய பாடங்களை கற்பிக்கும் ஆசிரியர்கள் தினம் யாழ்ப்பாணத்தில் உள்ள குறிக்கடுவான் ஜெட்டியில் இருந்து தான் வந்து போனார்கள். என்றாலும் படகு சேவை, பல காரணங்களால் ஒழுங்காக இருப்பதில்லை. தான் படித்த பாடசாலை இதனால் படிப்பில் பின்வாங்கக் கூடாது என்ற நல்ல எண்ணத்துடன் தன் ஓடத்திலேயே, வசதிகளை அமைத்து காலையும் மாலையும் இலவச சேவையை, தேவையான நேரங்களில் மட்டும், அவர்களுக்காக, பாடசாலைக்காக தனது ஆசிரியர் தொழிலுடன், இதையும் செய்யத் தொடங்கினான். இதனால் வெண்மதியனை 'ஓடக்கார ஆசிரியர்' என்று கூட சிலவேளை சிலர் அழைப்பார்கள். விஞ்ஞானம் கற்பிப்பதில் ஆர்வம் கொண்ட உற்சாகமான இளம் பெண் எழிற்குழலி, தனது பட்டப் படிப்பை முடித்து, முதல் முதல் ஆசிரியர் தொழிலை யாழ் / நெடுந்தீவு மகா வித்தியாலயத்தில் பதவியேற் பதற்காக, அன்று குறிக்கடுவான் படகுத்துறைக்கு, மிகவும் நேர்த்தியாக சேலை உடுத்திக் கொண்டு வந்தார். உடையே ஒரு மொழி. அது ஒரு காலாசாரம் மட்டுமல்லாது சமூக உருவாக்கமுமாகும். உடை உடுத்துபரை மட்டுமின்றி பார்ப்பவரின் புரிதல்களையும் பாதிக்க வல்லது. அது மனிதர்களிடையே வேறுபாடுகளை ஏற்படுத்தவும் செய்கிறது. மனிதன் உடுத்தும் உடை அவன் மீது அவனுடன் உறவாடும் மற்ற மனிதர்களின் உள்மனத் தீர்ப்புகளைத் தீர்மானிக்கிறது என்பது கட்டாயம் அவளுக்கு தெரிந்து இருக்கும். அதனால்த் தான், தன் வேலைக்கான முதல்  பயணத்தில், தன்னை இயன்றவரை அழகாக வைத்திருக்க முயன்றால் போலும்!  அன்று வழமையான படகு சேவை சில காரணங்களால் நடை பெறவில்லை. என்றாலும் பாடசாலை ஏற்கனவே அவளுக்கு, தங்கள் பாடசாலை கணித ஆசிரியர், இப்படியான சந்தர்ப்பங்களில், தனது ஓடம் மூலம் உங்களுக்கு பயண ஒழுங்கு செய்வாரென அறிவுறுத்தப் பட்டு இருந்ததால், அவள் கவலையடையவில்லை.  அன்று வழமையாக வரும் மூன்று ஆசிரியர்கள் கூட வரவில்லை. அவள் அந்த கணித ஆசிரியர் ஒரு முதிர்ந்த அல்லது நடுத்தர ஆசிரியராக இருக்கலாம் என்று முடிவுகட்டி, அங்கு அப்படியான யாரும் ஓடத்துடன் நிற்கிறார்களா என தன் பார்வைக்கு எட்டிய தூரம் வரை பார்த்தாள். அவள் கண்ணுக்கு அப்படி யாரும் தெரியவில்லை. அந்த நேரம் ஜெட்டிக்கு ஒரு இளம் வாலிபன் ஓடத்தை செலுத்திக் கொண்டு வந்து, அவளுக்கு அண்மையில் அதை கரையில் உள்ள ஒரு கட்டைத்தூணுடன் [bollard] கட்டி நிறுத்தினான்.  எழிற்குழலி, இது ஒருவேளை கணித ஆசிரியாரோவென, தனது அழகிய புருவங்களை உயர்த்தி, ஒரு ஆராச்சி பார்வை பார்த்துக் கொண்டு இருந்தாள். வெண்மதியன் ஒரு சிறிய புன்னகையுடன், எந்த தயக்கமும் இன்றி, அவள் அருகில் வந்து, நீங்கள் விஞ்ஞான ஆசிரியை எழிற்குழலி தானே என்று கேட்டான். கல் தோன்றி மண் தோன்றாக் காலத்தே முன் தோன்றியது நம் தமிழ் மட்டும் அல்ல, காதல் உணர்வுகளும் தான் என்பதை அவர்கள் இருவரும் அந்த தருணம் உணரவில்லை. அவளுக்கு இது முதல் உத்தியோகம், தான் திறமையாக படிப்பித்து பெயர், புகழ் வாங்க வேண்டும் என்பதிலேயே மூழ்கி இருந்தாள். அவனோ எந்த நேரம், என்ன நடக்கும் என்ற பரபரப்பில், கெதியாக பாதுகாப்பான நெடுந்தீவு போய்விட வேண்டும் என்பதிலேயே குறியாக இருந்தான்.  அவர்கள் இருவரும் ஓடத்தில் ஏறினார்கள், வெண்மதியன், எழிற்குழலியை பாதுகாப்பாக இருத்தி விட்டு ஓடத்தை ஜெட்டியில் இருந்து நகர்த்தினான். இது ஒரு சாதாரண பயணம் அல்ல, இருவரின் வாழ்க்கையை என்றென்றும் மாற்றும் ஒரு பயணத்தைத் ஓடத்தில் தொடங்குகிறார்கள் என்பதை அவர்கள் கண்கள், ஒருவரை ஒருவராவர் மௌனத்தில் மேய்ந்து கொண்டு இருந்தது, உண்மையில் சற்று உறக்கச் அவர்களின் இதயத்துக்கு சொல்லிக்கொண்டு இருந்தது. ஆனால் அவர்கள் இருவரும், அதை கவனிக்கும் கேட்கும் நிலையில் இருக்கவில்லை.   “நிலவைப் பிடித்துச் சிறுகறைகள் துடைத்துக் - குறு முறுவல் பதித்த முகம், நினைவைப் பதித்து - மன அலைகள் நிறைத்துச் - சிறு நளினம் தெளித்த விழி .” இந்த அழகுதான் அவனையும் கொஞ்சம் தடுமாற வைத்துக் கொண்டு இருந்தது. அவர்கள் இருவரும், தம்மை சுற்றிய சூழல் மறந்து, ஒவ்வொருவரின் இரண்டு விழிகளும் மௌனமாக பேசின. எத்தனை முறை பார்த்தாலும் விழிகளுக்கு ஏன் தாகம் தணிவதில்லை?  ஆர்பாரிக்கும் பேரலை ஒருபக்கம், அந்த இரைச்சலுக் குள்ளும் அவர்கள் தங்களை தங்களை அறிமுகம் செய்தார்கள். அனுமதியின்றி சிறுக சிறுக சிதறின இருவரினதும் உறுதியான உள்ளம். அவர்களின் உள்ளுணர்வு மிகவும் வித்தியாசமாய் இன்று இருந்தது. அவளின் கண்ணசைவுக்கு பதில் கூறிக் கொண்டிருந்த வெண்மதியன், ஏனோ அவளின் உதட்டசைவிற்கு செவிசாய்க்க முடியாமல் தவித்துக் கொண்டு இருந்தான். “ஹலோ” என்று மீண்டும் அவளின் குரல் கேட்க, தன் எண்ணங்களை சட்டென்று விண்ணிலிருந்து கடலிற்கு கொண்டு வந்தான்! " இன்னும் எவ்வளவு நேரம் இருக்கு ?", பொதுவாக ஒரு பயணம் 45 நிமிடம் எடுக்கும். இன்று சற்று கூட எடுத்து விட்டது. 15 நிமிடம் என்றான். அதன் பின்பு அவர்கள் இருவரும் மௌனமாக நெடுந்தீவு அடைந்தனர். என்றாலும் அவர்களின் எண்ணங்கள் அவர்களின் ஓடத்தை உலுக்கிய மென்மையான அலைகளைப் போல பின்னிப் பிணைந்தன. அவர்கள் அன்றில் இருந்து ஓடத்தில் பயணம் செய்த போது எல்லாம், எழிற்குழலியும் வெண்மதியனும் ஒன்றாக எதிர்காலத்தை உருவாக்குவதற்கான கனவுகளைப் பகிர்ந்து கொண்டனர். அவர்களின் உரையாடல்கள் சிரிப்பாலும், அபிலாஷைகளாலும் நிரம்பியிருந்தன, அவர்களின் இதயங்கள் கடலின் தாளத்துடன் ஒத்திசைந்து துடித்தன. என்றாலும் இன்னும் அவர்கள் வெளிப்படையாகத் தங்கள் ஆசைகளை ஒருவருக் கொருவர் சொல்ல வில்லை. எது எப்படியாகினும் அவர்களின் சொல்லாத காதலுக்கு ஓடமே சாட்சியாக இருந்தது? அவர்கள் இருவரும் ஒருவருக் கொருவர் தெரியாமல் ஓடத்துக்கு நன்றி தெரிவித்தனர்.  ஓடம் ஒவ்வொரு முறையும், இந்தியப் பெருங்கடலில் ஒரு ரத்தினமாக விவரிக்கப் படும் நெடுந்தீவுக்கு போகும் பொழுது அல்லது அங்கிருந்து திரும்பும் பொழுது, அதன் அழகு அலைகளுக்கு மத்தியில் மின்னும் விலைமதிப் பற்ற கல்லின் அழகு போல அவர்களுக்கு இப்ப இருந்தது. ஓடத்தில் இருந்து, நெடுந்தீவின் கரடு முரடான நிலப்பரப்புகள், காற்று வீசும் சமவெளிகள், நெடுந்தீவுக்கே உரித்தான கட்டைக் குதிரைகள் மற்றும் பெருக்கு மரம் எனப்படும் பாவோபாப் மரம் போன்றவற்றை, பயணித்துக் கொண்டு, அவை மறையும் மட்டும் அல்லது தெரியும் மட்டும் பார்ப்பதில் இருவரும் மகிழ்வு அடைந்தனர். அப்படியான தருணங்களில் இருவரின் நெருக்கமும் எந்த அச்சமும் வெட்கமும் இன்றித், இருவருக்கும் இடையில் உள்ள இடைவெளியை குறைத்துக் கொண்டு வந்தன. "ஓடத்தான் வந்தான் அன்று-விழி ஓரத்தால் பார்த்தான் நின்று சூடத்தான் பூவைத் தந்தான்-பூவை வாடத்தான் நோவைத் தந்தான்!" 'ஓடத்தைக் கைகள் தள்ளும்-கயல் ஓடிப்போய் நீரில் துள்ளும் நாடத்தாம் கண்கள் துள்ளும்-பெண்மை நாணத்தால் பின்னே தள்ளும்!" "வேகத்தால் ஓடஞ் செல்லும்-புனல் வேகத்தைப் பாய்ந்தே வெல்லும் வேகத்தான் வைத்தான் நெஞ்சம்-அந்த வீரத்தான் வரவோ பஞ்சம்!" கவியரசர் முடியரசனின் கவிதை அவளுக்கு ஞாபகம் அடிக்கடி வந்து, தன் வாய்க்குள் மெல்ல மெல்ல முணுமுணுப்பாள். ஒருமுறை எழிற்குழலி, தன் மாணவர்களுக்கு பிரத்தியேக வகுப்பு எடுக்க வேண்டி இருந்தது. மற்ற மூன்று ஆசிரியர்களும் வழமையான படகு சேவையில் திரும்பி விட்டனர். மறையும் சூரியனின் தங்க நிறங்கள் ஓடத்தின் நிழலை கடல் அலையில் பிரதிபலிக்க, எழிற்குழலியும் வெண்மதியனும் ஓடத்தில் கைகோர்த்து அமர்ந்து இருந்தனர். ஓடத்தில் மோதிய அலைகளின் சத்தம் அவர்களின் அந்தரங்க தருணத்திற்கு ஒரு இனிமையான பின்னணியை வழங்கியது. எழிற்குழலி, வெண்மதியன் மார்பில் சாய்ந்தாள், அவனின் கையை வருடி முத்தமிட்டாள். அவளுடைய கண்கள் வானத்தின் எண்ணற்ற வண்ணங்களைப் பிரதிபலித்தன. "இந்த இடம் முற்றிலும் மூச்சடைக்கக் கூடியது அல்லவா?" அவள் முணுமுணுத்தாள், அவள் குரல் ஒரு கிசுகிசுவுக்கு மேல் தாண்டவில்லை. வெண்மதியன் ஓடத்தை கவனமாக பார்த்து செலுத்திக் கொண்டு, மெல்ல தலையசைத்தான், அவனது பார்வை அவளது கதிரியக்க புன்னகையில் கூடிக் குலாவியது. "இந்த தருணத்தின் அழகை ரசிக்க,  காலமே ஓடாமல் நின்று விட்டது போல் இருக்கிறது" என்று அவன் பதிலளித்தான், அவனது குரலில் ஒரு மயக்கம் நிறைந்து இருந்தது.  அவர்களின் விரல்கள் பின்னிப் பிணைந்தன, அவர்கள் நீலக்கடலின் அழகில் உலாவினர். என்றாலும் அவ்வப் போது அடிவானத்தில் சூரியன் கீழே இறங்குவதைப் பார்த்தார்கள். ஒவ்வொரு நொடியும், அவர்களின் இதயங்கள் ஒருமனதாக துடித்தன, ஒவ்வொரு கணத்திலும் அவர்களின் இணைப்பு மேலும் மேலும் வலுவடைந்தது. ஒரு வார இறுதியில், இருவரும் நெடுந்தீவில் சந்தித்தனர். அங்கே அவர்கள் ஒரு ஒதுக்குப்புற இடத்தை அடைந்ததும், வெண்மதியன் எழிற்குழலியைத் தன் கைகளுக்குள் இழுத்துக் கொண்டான், கடலின் மென்மையான தாளத்தை ரசித்தபடி, அவர்கள் ஒரு மென்மையான இதழுடன் இதழ் முத்தத்தைப் முதல் முதல் பகிர்ந்து கொண்டனர், அதன் பின், நட்சத்திரங்கள் நிரம்பிய வானத்தின் விதானத்தின் [கூரையின்] கீழ், எழிற்குழலியும் வெண்மதியனும், யாழ்பாணத்தை நோக்கி அமைதியான நீரில், நிலவொளியில் ஓடத்தில் பயணம் செய்தனர். இருள் சூழ்ந்திருந்த பரந்து விரிந்திருந்த நிலவின் மென் பிரகாசம், அவர்களின் முகங்களில் ஒளி வீசியது. ஒருவரையொருவர் அணைத்துக் கொண்டு, அருகருகே அமர்ந்து, தண்ணீரில் உள்ள நிலவின் மின்னும் பிரதிபலிப்பைப் பார்த்தபடி விரல்கள் பின்னிப் பிணைந்தன. அவர்களுக்கிடையேயான அமைதி, அவர்களின் காதல், சொல்லப்படாத மொழியால் நிரம்பியிருந்தது. "என் வாழ்க்கையில் உன்னைப் பெற்றதற்கு நான் எவ்வளவு உண்மையிலேயே பாக்கியவான் என்பதை இது போன்ற தருணங்கள் எனக்கு உணர்த்துகின்றன," என்று வெண்மதியன் கிசுகிசுத்தான், அவனது குரல் அலைகளின் மென்மையான தாளத்திற்கு மேலே கேட்கவில்லை. எழிற்குழலி தன் தலையை அவன் தோளில் சாய்த்துக் கொண்டாள், அவள் இதயம் உணர்ச்சியால் பொங்கி வழிந்தது. "மற்றும் நான், நீ," அவள் பதிலளித்தாள், அவளுடைய குரல் நேர்மையுடன் மென்மையாக இருந்தது. "இரவின் அழகால் சூழப்பட்ட உங்களுடன் இங்கே இருப்பது ஒரு கனவா? நனவா ?." என்றாள்.  அவர்களின் ஓடம் அலைகளின் குறுக்கே சிரமமின்றி சென்றது, இரவின் இதயத்திற்கு அது அவர்களை மேலும் கொண்டு சென்றது. கடந்து செல்லும் ஒவ்வொரு தருணத்திலும், அவர்களின் காதல் ஆழமடைந்தது, நேரத்தையும் இடத்தையும் தாண்டிய ஒரு பிணைப்பில் அவர்களை ஒன்றாக 'ஓடம்' இணைந்தது!  நன்றி  [கந்தையா தில்லைவிநாயகலிங்கம் அத்தியடி, யாழ்ப்பாணம்]      
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.