Jump to content

ரணில் - சஜித் இணைவு தீவிரமடைந்த பேச்சுக்கள்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

நமது அரசியல் நிருபர்

 

நாட்டின் தற்­போ­தைய அர­சியல் சூழ்­நி­லையை வைத்து பார்க்­கும்­போது ஐக்­கிய தேசியக் கட்­சியும் ஐக்­கிய மக்கள் சக்­தியும் அடுத்த மாகா­ண­சபை தேர்­த­லுக்கு முன்­ப­தாக இணைந்து பய­ணிப்­ப­தற்­கான சாத்­தியம் அதி­க­ரித்­தி­ருக்­கின்­றது.

முக்­கி­ய­மாக இரண்டு தரப்­பி­னரும் இணைந்து பய­ணிப்­பது தொடர்­பாக ரணில் விக்­கி­ர­ம­சிங்­கவும் சஜித் பிரே­ம­தா­சவும் விருப்­பத்­துடன் இருப்­ப­தா­கவும் அதற்­கான பேச்­சுக்கள் தீவி­ர­ம­டைந்­துள்­ள­தா­கவும் எனினும் எந்த முறையில் இணைந்து கொள்­வது என்­பது தொடர்­பான ஒரு பொறி­மு­றையை உரு­வாக்க முடி­யா­மையே தாம­தத்­துக்கு கார­ண­மாக இருப்­ப­தா­கவும் தெரி­விக்­கப்­ப­டு­கி­றது.

ஐக்­கிய மக்கள் சக்­தியின் பெரும்­பா­லான உறுப்­பி­னர்­களும் ஐக்­கிய தேசிய கட்­சி­யுடன் இணைந்து பய­ணிப்­பது மூலமே வெற்­றியை ருசிக்க முடியும் என்­பதை வலி­யு­றுத்­து­கின்­றனர்.

அதே­போன்று ஐக்­கிய தேசிய கட்­சியின் பெரும்­பா­லான உறுப்­பி­னர்­களும் ஐக்­கிய மக்கள் சக்­தி­யுடன் இணைந்து பய­ணிப்­பதே சம­யோ­சி­த­மாக அமையும் என்­பதை தொடர்ச்­சி­யாக வலி­யு­றுத்தி வரு­கின்­றனர்.

எனவே இணைந்து பய­ணிக்­க­வேண் டும் என்­பதே இரண்டு தரப்­பி­ன­ரதும் பெரும்­பா­லான உறுப்­பி­னர்­களின் எதிர் ­பார்ப்­பாக இருக்­கின்­றது. ஆனால் எந்த முறையில் எவ்­வாறு இணைந்து கொள் ­வது என்­பது தொடர்­பான ஒரு சிக்கல் தொடர்ந்து நிலவி வரு­வதை காண­மு­டி­கி­றது.

 

கடு­மை­யான விரக்­தியில் 16 பேர் கொண்ட குழு

 

கடந்த 2018 ஆம் ஆண்டு முன்னாள் பிர­தமர் ரணில் விக்­ர­ம­சிங்­க­விற்கு எதி­ராக நம்­பிக்­கை­யில்லா பிரே­ரணை கொண்டு வரப்­பட்­ட­போது சுதந்­திரக் கட்­சியில் இருந்த 16 பேர் நம்­பிக்­கை­யில்லா பிரே­ர­ணைக்கு ஆத­ரவு வழங்­கி­ய­துடன் மஹிந்த ராஜ­பக்ஷ தலை­மை­யி­லான கூட்டு எதி­ர­ணி­யுடன் இணைந்து கொண்­டனர். அப்­போது 54 உறுப்­பி­னர்­க­ளாக இருந்த கூட்டு எதி­ர­ணியின் எண்­ணிக்கை 69 ஆக மாற்­ற­ம­டைந்­தது.

தற்­போது ஜனா­தி­பதி கோட்­டா­ப­யவின் அர­சாங்கம் அமைக்­கப்­பட்­டுள்ள போதி­லும்­கூட இந்த 16 பேர் குழுவில் ஒரு­வரை தவிர எவ­ருக்கும் எந்த பத­வியும் வழங்­கப்­ப­ட­வில்லை. அதில் ஒரு­வ­ரான சுசில் பிரே­ம­ஜ­யந்­த­வுக்கு மட்டும் ஒரு ராஜாங்க அமைச்சு பதவி கிடைத்து இருக்­கி­றது. அதுவும் விஜ­ய­தாச ராஜ­பக் ஷ ராஜாங்க அமைச்சுப் பத­வியை ஏற்றுக் கொள்ள மறுத்­ததன் கார­ண­மாக அந்த பதவி சுசில் பிரே­ம­ஜ­யந்­த­வுக்கு வழங்­கப்­பட்­டுள்­ளது. இந்­நி­லையில் இந்த தரப்­பினர் பாரிய விரக்­தியில் இருக்­கின்­றனர்.

அவர்கள் அர­சாங்கம் தற்­போது மக்­க ளின் நம்­பிக்­கையை இழந்து வரு­வ­தாக கருத்­துக்­களை வெளி­யிட்டு வரு­கின்­றனர்.

இது தொடர்பில் கருத்து வெளி­யிட்­டுள்ள 16 பேர் குழுவில் ஒருவர் “நாம் இந்த அர­சாங்­கத்தை மிகவும் நம்­பிக்­கை­யுடன் உரு­வாக்­கினோம். ஜனா­தி­பதி அதி­கா­ரத்தை பெற உழைத்தோம்.

எமக்கு பொறுப்­புகள் வழங்­காமை கவ­லை­ய­ளிக்­கி­றது. இன்று எம் மீது கட்­சியின் தலை­மைத்­துவம் நம்­பிக்கை வைக்­காத நிலைமை காணப்­ப­டு­கி­றது. ஆனால் நாம் அர­சாங்­கத்­திற்­காக மக்­க­ளுக்­காக செயற்­ப­டு வோம். மக்­களின் எம் மீது நம்­பிக்கை வைத்­தி­ருக்­கின்­றனர். அந்த நம்­பிக்­கையை நாங்கள் காப்­பாற்­றுவோம்' என்று குறிப்­பிட்­டுள்ளார்.

 

ரணிலின் தயக்கம்

 

எதிர்­வரும் புத்­தாண்­டுக்கு பின்னர் ரணில் விக்­கி­ர­ம­சிங்க தேசி­யப்­பட்­டியல் ஊடாக ஐக்­கிய தேசிய கட்­சியின் சார்பில் பாரா­ளு­மன்­றத்­துக்கு செல்லும் சாத்­தியம் அதி­க­மாக காணப்­ப­டு­கி­றது. ரணில் விக்­கி­ர­ம­சிங்க தேசி­யப்­பட்­டியல் உறுப்­பி­ன­ராக பாரா­ளு­மன்­றத்­துக்கு செல்ல வேண்டும் என்­பதில் கட்­சியின் முக்­கிய உறுப்­பி­னர்கள் தொடர்ந்து உறு­தி­யாக இருக்­கின்­றனர். அதனை தொடர்ச்­சி­யாக வலி­யு­றுத்தி வரு­கின்­றனர்.

அதனை கொள்கை அளவில் ரணில் விக்­கி­ர­ம­சிங்­கவும் ஏற்­றுள்ளார். எனினும் உட­ன­டி­யாக தேசியப் பட்­டி­யலில் பாரா­ளு­மன்ற உறுப்­பு­ரி­மையை பெற்­றுக்­கொண்டு பாரா­ளு­மன்றம் செல்­வதில் ரணில் விக்­கி­ர­ம­சிங்க தயக்கம் காட்டி வரு­கின்றார். அது­மட்­டு­மன்றி ரணில் விக்­கி­ர­ம­சிங்­கவின் தேவை பாரா­ளு­மன்­றத்­திற்கு அதிக அளவில் உண­ரப்­பட்ட பின்­னரே தான் பாரா­ளு­மன்றம் செல்வேன் என்­பதில் அவர் உறு­தி­யாக இருப்­ப­தா­கவும் தெரி­விக்­கப்­ப­டு­கின்­றது.

தற்­போது பல்­வேறு சவால்கள் நாட்டில் காணப்­ப­டு­கின்ற நிலையில் எதிர்க்­கட்சி அதனை எவ்­வாறு பாரா­ளு­மன்­றத்தில் சமா­ளிக்கப் போகி­றது என்­பதை ரணில் விக்­கி­ர­ம­சிங்க பார்த்துக் கொண்­டி­ருப்­ப­தா­கவும் தேவை­யான முக்­கி­ய­மான கட்­டத்தில் தான் பாரா­ளு­மன்­றத்­திற்குள் பிர­வே­சிப்­பது குறித்து தீர்­மா­னிக்­க­வுள்­ள­தா­கவும் அவர் தரப்பின் மூலம் தெரி­ய­வ­ரு­கின்­றது.

நமது அரசியல் நிருபர்

 

நாட்டின் தற்­போ­தைய அர­சியல் சூழ்­நி­லையை வைத்து பார்க்­கும்­போது ஐக்­கிய தேசியக் கட்­சியும் ஐக்­கிய மக்கள் சக்­தியும் அடுத்த மாகா­ண­சபை தேர்­த­லுக்கு முன்­ப­தாக இணைந்து பய­ணிப்­ப­தற்­கான சாத்­தியம் அதி­க­ரித்­தி­ருக்­கின்­றது.

முக்­கி­ய­மாக இரண்டு தரப்­பி­னரும் இணைந்து பய­ணிப்­பது தொடர்­பாக ரணில் விக்­கி­ர­ம­சிங்­கவும் சஜித் பிரே­ம­தா­சவும் விருப்­பத்­துடன் இருப்­ப­தா­கவும் அதற்­கான பேச்­சுக்கள் தீவி­ர­ம­டைந்­துள்­ள­தா­கவும் எனினும் எந்த முறையில் இணைந்து கொள்­வது என்­பது தொடர்­பான ஒரு பொறி­மு­றையை உரு­வாக்க முடி­யா­மையே தாம­தத்­துக்கு கார­ண­மாக இருப்­ப­தா­கவும் தெரி­விக்­கப்­ப­டு­கி­றது.

ஐக்­கிய மக்கள் சக்­தியின் பெரும்­பா­லான உறுப்­பி­னர்­களும் ஐக்­கிய தேசிய கட்­சி­யுடன் இணைந்து பய­ணிப்­பது மூலமே வெற்­றியை ருசிக்க முடியும் என்­பதை வலி­யு­றுத்­து­கின்­றனர்.

அதே­போன்று ஐக்­கிய தேசிய கட்­சியின் பெரும்­பா­லான உறுப்­பி­னர்­களும் ஐக்­கிய மக்கள் சக்­தி­யுடன் இணைந்து பய­ணிப்­பதே சம­யோ­சி­த­மாக அமையும் என்­பதை தொடர்ச்­சி­யாக வலி­யு­றுத்தி வரு­கின்­றனர்.

எனவே இணைந்து பய­ணிக்­க­வேண் டும் என்­பதே இரண்டு தரப்­பி­ன­ரதும் பெரும்­பா­லான உறுப்­பி­னர்­களின் எதிர் ­பார்ப்­பாக இருக்­கின்­றது. ஆனால் எந்த முறையில் எவ்­வாறு இணைந்து கொள் ­வது என்­பது தொடர்­பான ஒரு சிக்கல் தொடர்ந்து நிலவி வரு­வதை காண­மு­டி­கி­றது.

 

கடு­மை­யான விரக்­தியில் 16 பேர் கொண்ட குழு

 

கடந்த 2018 ஆம் ஆண்டு முன்னாள் பிர­தமர் ரணில் விக்­ர­ம­சிங்­க­விற்கு எதி­ராக நம்­பிக்­கை­யில்லா பிரே­ரணை கொண்டு வரப்­பட்­ட­போது சுதந்­திரக் கட்­சியில் இருந்த 16 பேர் நம்­பிக்­கை­யில்லா பிரே­ர­ணைக்கு ஆத­ரவு வழங்­கி­ய­துடன் மஹிந்த ராஜ­பக்ஷ தலை­மை­யி­லான கூட்டு எதி­ர­ணி­யுடன் இணைந்து கொண்­டனர். அப்­போது 54 உறுப்­பி­னர்­க­ளாக இருந்த கூட்டு எதி­ர­ணியின் எண்­ணிக்கை 69 ஆக மாற்­ற­ம­டைந்­தது.

தற்­போது ஜனா­தி­பதி கோட்­டா­ப­யவின் அர­சாங்கம் அமைக்­கப்­பட்­டுள்ள போதி­லும்­கூட இந்த 16 பேர் குழுவில் ஒரு­வரை தவிர எவ­ருக்கும் எந்த பத­வியும் வழங்­கப்­ப­ட­வில்லை. அதில் ஒரு­வ­ரான சுசில் பிரே­ம­ஜ­யந்­த­வுக்கு மட்டும் ஒரு ராஜாங்க அமைச்சு பதவி கிடைத்து இருக்­கி­றது. அதுவும் விஜ­ய­தாச ராஜ­பக் ஷ ராஜாங்க அமைச்சுப் பத­வியை ஏற்றுக் கொள்ள மறுத்­ததன் கார­ண­மாக அந்த பதவி சுசில் பிரே­ம­ஜ­யந்­த­வுக்கு வழங்­கப்­பட்­டுள்­ளது. இந்­நி­லையில் இந்த தரப்­பினர் பாரிய விரக்­தியில் இருக்­கின்­றனர்.

அவர்கள் அர­சாங்கம் தற்­போது மக்­க ளின் நம்­பிக்­கையை இழந்து வரு­வ­தாக கருத்­துக்­களை வெளி­யிட்டு வரு­கின்­றனர்.

இது தொடர்பில் கருத்து வெளி­யிட்­டுள்ள 16 பேர் குழுவில் ஒருவர் “நாம் இந்த அர­சாங்­கத்தை மிகவும் நம்­பிக்­கை­யுடன் உரு­வாக்­கினோம். ஜனா­தி­பதி அதி­கா­ரத்தை பெற உழைத்தோம்.

எமக்கு பொறுப்­புகள் வழங்­காமை கவ­லை­ய­ளிக்­கி­றது. இன்று எம் மீது கட்­சியின் தலை­மைத்­துவம் நம்­பிக்கை வைக்­காத நிலைமை காணப்­ப­டு­கி­றது. ஆனால் நாம் அர­சாங்­கத்­திற்­காக மக்­க­ளுக்­காக செயற்­ப­டு வோம். மக்­களின் எம் மீது நம்­பிக்கை வைத்­தி­ருக்­கின்­றனர். அந்த நம்­பிக்­கையை நாங்கள் காப்­பாற்­றுவோம்' என்று குறிப்­பிட்­டுள்ளார்.

 

ரணிலின் தயக்கம்

 

எதிர்­வரும் புத்­தாண்­டுக்கு பின்னர் ரணில் விக்­கி­ர­ம­சிங்க தேசி­யப்­பட்­டியல் ஊடாக ஐக்­கிய தேசிய கட்­சியின் சார்பில் பாரா­ளு­மன்­றத்­துக்கு செல்லும் சாத்­தியம் அதி­க­மாக காணப்­ப­டு­கி­றது. ரணில் விக்­கி­ர­ம­சிங்க தேசி­யப்­பட்­டியல் உறுப்­பி­ன­ராக பாரா­ளு­மன்­றத்­துக்கு செல்ல வேண்டும் என்­பதில் கட்­சியின் முக்­கிய உறுப்­பி­னர்கள் தொடர்ந்து உறு­தி­யாக இருக்­கின்­றனர். அதனை தொடர்ச்­சி­யாக வலி­யு­றுத்தி வரு­கின்­றனர்.

அதனை கொள்கை அளவில் ரணில் விக்­கி­ர­ம­சிங்­கவும் ஏற்­றுள்ளார். எனினும் உட­ன­டி­யாக தேசியப் பட்­டி­யலில் பாரா­ளு­மன்ற உறுப்­பு­ரி­மையை பெற்­றுக்­கொண்டு பாரா­ளு­மன்றம் செல்­வதில் ரணில் விக்­கி­ர­ம­சிங்க தயக்கம் காட்டி வரு­கின்றார். அது­மட்­டு­மன்றி ரணில் விக்­கி­ர­ம­சிங்­கவின் தேவை பாரா­ளு­மன்­றத்­திற்கு அதிக அளவில் உண­ரப்­பட்ட பின்­னரே தான் பாரா­ளு­மன்றம் செல்வேன் என்­பதில் அவர் உறு­தி­யாக இருப்­ப­தா­கவும் தெரி­விக்­கப்­ப­டு­கின்­றது.

தற்­போது பல்­வேறு சவால்கள் நாட்டில் காணப்­ப­டு­கின்ற நிலையில் எதிர்க்­கட்சி அதனை எவ்­வாறு பாரா­ளு­மன்­றத்தில் சமா­ளிக்கப் போகி­றது என்­பதை ரணில் விக்­கி­ர­ம­சிங்க பார்த்துக் கொண்­டி­ருப்­ப­தா­கவும் தேவை­யான முக்­கி­ய­மான கட்­டத்தில் தான் பாரா­ளு­மன்­றத்­திற்குள் பிர­வே­சிப்­பது குறித்து தீர்­மா­னிக்­க­வுள்­ள­தா­கவும் அவர் தரப்பின் மூலம் தெரி­ய­வ­ரு­கின்­றது.

 

இந்த கட்டுரையை மேலும் வாசிக்க https://epaper.virakesari.lk/newspaper/Weekly/weekly-main/2021-04-04#page-30

 

இதைத் தவிர மேலும் செய்திகள் மற்றும் கட்டுரைகளை வாசிக்க https://bookshelf.encl.lk/.

ரணில் - சஜித் இணைவு தீவிரமடைந்த பேச்சுக்கள் ! | Virakesari.lk

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ரணில் - சஜித் இணைவதால்.. தமிழர்களுக்கு என்ன நன்மை...??! இவர்கள் இணைந்திருந்த போது.. தமிழர்களுக்கு தீர்வை தேடினவையோ..??!

ரணில் - சஜித் இணைவு.. சிங்களவர்களை தான் பலப்படுத்துமே தவிர.. தமிழர்களுக்கு இலங்கைத் தீவுக்குள்ளிருந்து.. ஒரு உருப்படியான தீர்வும் வரப்போவதில்லை. எந்த சிங்களத் தலைமையும் அதற்கு தாயார் இல்லை. புலிகள் இல்லாத வெற்றிடத்தில்.. சிங்களத்தை தமிழர்களின் எதுவுமே தீர்வுக்காக நிர்ப்பந்திக்காது.

பிராந்தியப் போட்டிக்குள் சர்வதேசத்தை தமிழரின் சார்ப்பாக நகர்த்தி வருவதற்கான நகர்வு ஒன்றைத் தவிர.. தமிழர்களுக்கு வேறு வழியில்.. சிங்களத்தை அசைக்க முடியாது. சிங்களத்தை புலி அழிப்பு மூலம் எம்மவர்களே இமாலய அளவுக்கு பலப்படுத்தி விட்டுள்ளனர்.

அதிலும் சம் சும் கும்பலின் கோமாளித்தன அரசியலால்.. சிங்களம் இன்று அசுர பலம் பெற்று நிற்கிறது. அது மகிந்த அணி ஆகட்டும். ரணில் அணி ஆகட்டும். சஜித் அணி ஆகட்டும். எதுவுமே தமிழர்களுக்காக எனி ஒரு ஆணியும் புடுங்காது. 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
8 hours ago, nedukkalapoovan said:

ரணில் அணி ஆகட்டும். சஜித் அணி ஆகட்டும்

ஒன்று மட்டும் நடக்கும் இந்த இரண்டு நசுக்கலும் சேர்ந்து கூத்தாடி கூத்தாடி  நாமல் ரஜதுமா ஆயுள் பூரா இலங்கையை ஆளுவதற்கு ரோட் போட்டு கொடுத்துவிட்டு அப்பச்சியிடம் பெட்டியை வாங்கிக்கொண்டு  போவினம்  

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சிங்களம் எதிர்கொள்ளவுள்ள ஆபத்தை முன்கூட்டியே உணர்ந்து அதற்கெதிராக ஒன்றுசேரத் தொடங்கிவிட்டது.. ☹️

தமிழர் நாம் எப்போதும்போலவே ஆளை ஆள் குற்றம் சாட்டியபடி அழிந்து போவோம்.

😏

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • யாராவது தினமுரசில் அற்புதன் எழுதிய இந்த தொடரை வாசிக்காமல் விட்டிருந்தால் இந.த தொடரை நிச்சயமாக பார்க்க வேண்டும்.ஏனெனில் புலிகளுக்கு நேர் எதிரான அணியிலிருந்த ஒருவரால்த் தான் இது எழுதப்பட்டது. நான் இந்த பத்திரிகையை தொடர்ந்து வாங்கிய போது பலரும் மறைமுகமாக ஈபிடிபிக்கு ஆதரவளிப்பதாக கூறினார்கள். நிறைய பேருக்கு ஆரம்பகாலத்தில் போராட்டத்துக்கு வித்துப் போட்டவர்களையும் வித்துடலானவர்களையும் இன்னமும் தெரியாமல் இருக்கிறார்கள்.
    • தென்னாபிரிக்காவில் பேருந்து ஆற்றுக்குள் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 45 பேர் உயிரிழந்துள்ளனர். அதிவேகமாக சென்ற அந்த பேருந்து செல்லும் வழியில் மாமட்லகலா என்ற இடத்தில் வேகத்தக் கட்டுப்படுத்த முடியாமல் அங்குள்ள பாலத்தில் மோதி தடுப்புச் சுவரை உடைத்துக் கொண்டு இருந்து 165 அடி பள்ளத்தில் விழுந்தது. அங்குள்ள பாறையில் விழுந்த வேகத்தில் பேருந்து தீப்பிடித்து எரிந்துள்ளது. இதில் பேருந்தில் பயணித்த 45 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர். அதிலிருந்தவர்களில் நல்வாய்ப்பாக 8 வயது சிறுமி மட்டும் படுகாயங்களுடன் உயிருடன் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். விபத்தில் பேருந்து முற்றிலும் எரிந்து நாசமானதில், அதில் இருந்த பலரது உடல்கள் அடையாளம் காண முடியாத அளவிற்கு கருகிப்போனதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பலரது உடல்கள் பேருந்தின் அடிப்புறத்தில் சிக்கியுள்ளன. அவற்றை மீட்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. தென்னாபிரிக்காவை உலுக்கியுள்ள இந்த விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு அந்நாட்டின் ஜனாதிபதி சிரில் ரமபோசா இரங்கல் தெரிவித்துள்ளார். https://thinakkural.lk/article/297513
    • மிகவும் மேலோட்டமாக விடயங்களை விளங்கிக் கொண்டு இங்கே பகிர்கிறீர்கள். மேற்கு வங்கம் பங்களாதேஸ் பிரச்சினையில் அக்கறையாக இருந்தது உண்மை தான், ஆனால் அந்த மாநிலம் சொல்லித் தான் இந்திரா பங்களாதேசைப் பாகிஸ்தானில் இருந்து பிரித்தார் என்பது தவறு. இந்திரா, பாகிஸ்தானுடன் போர் நடந்த காலப் பகுதியில், பாகிஸ்தானைப் பலவீனப் படுத்த எடுத்துக் கொண்ட முன்னரே திட்டமிட்ட ஒரு நடவடிக்கை இது. இலட்சக் கணக்கான பங்களாதேச அகதிகள் மேற்கு வங்கத்தினுள் குவிந்ததும் ஒரு சிறு பங்குக் காரணம். இந்தியாவை அமெரிக்காவின் US Trade Representative (USTR) என்ற அமைப்பு வளரும் நாடுகள் பட்டியலில் இருந்து அகற்றியிருப்பது உண்மை. ஆனால், இது IMF போன்ற உலக அமைப்புகளின் முடிவல்ல. இந்தியாவின் ஏற்றுமதி வர்த்தகம் அதிகரிக்கும் போது, அமெரிக்காவின் USTR அமைப்பு இந்தியாவின் உற்பத்திப் பொருட்களைப் பற்றி விசாரிக்கவும், சட்டங்கள் இயற்றவும் கூடியவாறு இருக்க வேண்டும். இப்படிச் செய்ய வேண்டுமானால் இந்தியாவை இந்தப் பட்டியலில் இருந்து அகற்றினால் தான் முடியும், எனவே அகற்றியிருக்கிறார்கள். இதன் அர்த்தம் இந்தியா உலக வர்த்தகத்தில் அதிக பங்கைச் செலுத்த ஆரம்பித்திருக்கிறது என்பது தான், எனவே இந்தியா வர்த்தக ரீதியில் வளர்கிறது என்பது தான் அர்த்தம். ஆனால், மனித அபிவிருத்திச் சுட்டெண்ணைப் (HDI) பொறுத்த வரை இந்தியா இன்னும் வளர்ந்து வரும் நாடு தான். இந்தியாவை விடப் பணக்கார நாடான கட்டாரும் வளர்ந்து வரும் நாடு தான்.   
    • ஓம். உணர்வு இல்லவே இல்லை என சொல்லவில்லை.  ஆனால் சதவீதம் வீழ்ந்துள்ளது என நினைக்கிறேன். மிக தெளிவான பார்வை. ஊருக்கு போகா விடிலும் உங்களுக்கு யதார்த்தம் அழகாக புரிகிறது. ஓம். ஆனால் இது அரசியலால் இல்லை. நன்றி உணர்வு. பாசம். நினைவுகூரல். சில மாவீரர் குடும்பங்களிடம் உரையாடிய அனுபவத்தில் சொல்கிறேன்.
    • வருகை, கருத்துக்கு நன்றி நெடுக்ஸ். இப்போ ஊபரும் வந்துள்ளது. ஆனால் கார் மட்டும்தான். ஆட்டோ என்றால் பிக் மிதான். கொழும்பில் பிக் மி யில் மோட்டார் சைகிளிலும் ஏறி போகலாம். அந்த பகுதி ஒரு இராணுவ கண்டோன்மெண்ட் போல இருக்கிறது என சொல்லி உள்ளேனே? நேவி வியாபாரம் செய்வதையும் சொல்லி உள்ளேன். நான் போன சமயம் சுத்தமாக இருந்தது. சிலவேளை முதல் நாள் துப்பரவு செய்தனரோ தெரியவில்லை🤣. கொழும்பில் இது முன்பே வழமை. யாழில் இந்த போக்கு புதிது. நாம் இருக்கும் போது சேவை என இருந்த்ஃ துறை இப்போ சேர்விஸ் என ஆகி வருகிறது. ஆனால் நாடெங்கும் இதுவே நிலை என எழுதியுள்ளேன்.
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.