Jump to content

மூடு விழா காணும் எல்.ஜி போன்களின் சகாப்தம் - ஏன் இந்த முடிவு?


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

தங்களது நிறுவனத்துக்கு தொடர்ந்து இழப்பை கொடுத்து வரும் திறன்பேசி தயாரிப்பு தொழிலில் இருந்து விலகுவதாக எல்.ஜி எலக்ட்ரானிக்ஸ் இன்று (ஏப்ரல் 5, திங்கட்கிழமை) அறிவித்துள்ளது.

கடந்த ஆறாண்டுகளில் மட்டும் சுமார் 450 கோடி டாலர்கள் இழப்பை சந்தித்துள்ள திறன்பேசி தயாரிப்பு தொழிலை அடுத்து என்ன செய்வதென்று ஆராய்ந்து வருவதாக தென் கொரியாவை சேர்ந்த மின்னணு பொருட்கள் தயாரிப்பு நிறுவனமான எல்.ஜி கடந்த ஜனவரி மாதம் அறிவித்திருந்தது.

திறன்பேசியில் அல்ட்ரா-வைட் ஆங்கிள் கேமராக்கள் உட்பட பல கண்டுபிடிப்புகளைச் செய்துள்ள எல்.ஜி நிறுவனம், 2013ஆம் உலகின் மூன்றாவது பெரிய ஸ்மார்ட்போன் தயாரிப்பாளராக உயர்ந்தது.

ஆனால், காலப்போக்கில் அலைபேசி சந்தை "நம்பமுடியாத அளவிற்கு போட்டி மிகுந்ததாக" மாறிவிட்டதாக அந்த நிறுவனம் கூறுகிறது.

திறன்பேசி தயாரிப்பு சந்தையில் உலகின் மிகப் பெரிய நிறுவனங்களாக சாம்சங் மற்றும் ஆப்பிள் ஆகியவை விளங்கும் நிலையில், எல்.ஜி தனது வன்பொருள் மற்றும் வன்பொருள் சார்ந்த பிரச்னைகளால் சவாலை சந்தித்து வந்தது.

எல்.ஜி வருவாய் இழப்புகளுடன் போராடியதால், வணிகத்தின் ஒரு பகுதியை விற்க பேச்சுவார்த்தை நடத்தியது. ஆனால் அது பலனளிக்கவில்லை.

வட அமெரிக்க சந்தையில் மூன்றாவது மிகப் பெரிய திறன்பேசி நிறுவனமாக எல்.ஜி தொடர்ந்து வந்தாலும், அது உலகின் மற்ற பிராந்தியங்களில் தனது வணிகத்தை இழந்துவிட்டது. அதேபோன்று, எல்.ஜி உள்நாட்டு சந்தையான தென் கொரியாவில் தொடர்ந்து கோலூச்சி வருகிறது.

"நம்பமுடியாத அளவிற்கு போட்டி மிகுந்த அலைபேசி துறையிலிருந்து வெளியேறும் எல்.ஜியின் முடிவு, மின்சார வாகனம் சார்ந்த பொருட்கள், தானியங்கி சாதனங்கள், ஸ்மார்ட் ஹோம்ஸ், ரோபாட்டிக்ஸ், செயற்கை நுண்ணறிவு மற்றும் வணிகத் தீர்வுகள் உள்ளிட்ட வளர்ந்து வரும் விடயங்களில் நிறுவனத்தின் வளங்களை பயன்படுத்த உதவும்" என்று அந்த நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையொன்றில் குறிப்பிடப்பட்டுள்ளது.

கடந்த ஆண்டு எல்.ஜி நிறுவனம் 2.8 கோடி அலைபேசிகளை தயாரித்து சந்தைக்கு அனுப்பிய நிலையில், அதே காலகட்டத்தில் சாம்சங் நிறுவனம் 25.6 கோடி அலைபேசிகளை தயாரித்ததாக கவுன்டர்பாய்ன்ட் என்ற சந்தை ஆய்வு நிறுவனம் தரவு வெளியிட்டுள்ளது.

அலைபேசி தயாரிப்பு தொழிலில் இருந்து விலகுவதாக எல்.ஜி அறிவிப்பு

பட மூலாதாரம்,LG

ஐந்து தொழில் பிரிவுகளை கொண்டுள்ள எல்.ஜி நிறுவனத்தில் திறன்பேசி தயாரிப்பு தொழிலே 7.4 சதவீதத்துடன் மிகவும் குறைந்த வருமானம் கொடுக்கும் பிரிவாக இருந்து வருகிறது. தற்போதைய உலக அலைபேசி தயாரிப்பு சந்தையின் வருவாயுடன் ஒப்பிடுகையில் இது வெறும் இரண்டு சதவீதம் மட்டுமே.

திறன்பேசி சந்தையில் ஆதிக்கம் செலுத்தி வரும் முன்னணி நிறுவனங்களுடன் போட்டியிடுவதற்காக எல்.ஜி நிறுவனம் தொடர்ந்து திறன்பேசிகளில் புதிய சிறப்பம்சங்களையும் தொழில்நுட்ப கண்டுபிடிப்புகளையும் சேர்த்து வந்தது. உதாரணமாக, கடந்த 2020ஆம் ஆண்டு T வடிவம் கொண்ட ஒன்றோடொன்று பிணைந்த இரண்டு திறன்பேசிகளை கொண்ட புதுவித தயாரிப்பான எல்.ஜி விங்கை வெளியிட்டிருந்தது.

ஆனாலும், அந்த நிறுவனத்தால் எதிர்பார்த்த அளவுக்கு சந்தையில் தாக்கத்தை செலுத்த முடியவில்லை.

மின்சார கார்கள் மற்றும் தொலைக்காட்சிப் பெட்டி

அலைபேசி தயாரிப்பு தொழிலில் இருந்து விலகுவதாக எல்.ஜி அறிவிப்பு

பட மூலாதாரம்,LG

வீட்டு உபகரணங்கள் மற்றும் தொலைக்காட்சிப் பெட்டிகளுடன் நுகர்வோர் மின்சாதனப் பொருட்கள் வணிகத்தில், எல்.ஜி நிறுவனம் இன்னமும் வலுவான பங்களிப்பை கொண்டுள்ளது. சாம்சங்கிற்குப் பிறகு உலகின் இரண்டாவது மிகப் பெரிய தொலைக்காட்சிப் பெட்டி தயாரிப்பு நிறுவனமாக எல்.ஜி விளங்குகிறது.

மேக்னா இன்டர்நேஷனல் என்ற நிறுவனத்துடன் இணைந்து வாகன உதிரிப் பாகங்கள் மற்றும் சாதனங்கள் தயாரிப்பில் ஈடுபடப்போவதாக கடந்த டிசம்பர் மாதம் எல்.ஜி நிறுவனம் அறிவித்திருந்தது.

எல்.ஜியின் திறன்பேசி தயாரிப்பு தொழிலை விற்கும் முடிவு தொடருவதாகவும், எனினும் ஏற்கனவே விற்பனையான திறன்பேசிகளுக்கான வாடிக்கையாளர் சேவைகளும், புதிய மென்பொருள் பதிப்புகளும் தடையின்றி கிடைக்கும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

"எல்.ஜி அலைபேசி தயாரிப்பில் உள்ள நிபுணத்துவத்தை தொடர்ந்து மேம்படுத்துவதோடு, 6ஜி போன்ற திறன்பேசி சார்ந்த தொழில்நுட்பங்களை மேம்படுத்துவதில் கவனம் செலுத்துவது, மற்ற வணிகங்களில் போட்டியை மேலும் வலுப்படுத்த உதவும்" என்று அந்த நிறுனத்தின் செய்தித் தொடர்பாளர் மேலும் தெரிவித்தார்.

எல்.ஜியின் இந்த அறிவிப்பால் அதன் தென் கொரிய போட்டியாளரான சாம்சங் மற்றும் சீன நிறுவனங்களான ஒப்போ, விவோ மற்றும் ஜியோமி போன்றவை அதிக பலன் பெற வாய்ப்புள்ளது என்று ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.

மூடு விழா காணும் எல்.ஜி போன்களின் சகாப்தம் - ஏன் இந்த முடிவு? - BBC News தமிழ்

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • கூடா ந‌ட்ப்பு கேடா முடியும் என்று கலைஞர் சொன்னது 2011 நடுப்பகுதியில். திகார் சிறைச்சாலையில் அவரது மகள் கனிமொழி இருந்தினாலும் 2011  சட்டசபை தேர்தலில் படுதோல்வி அடைந்ததுக்கும் காரணதத்தினால்தான். 
    • ஒரு கொள்கை பற்றுள்ள தலைவன் தானும் தன் குடும்பமும் அந்த கொள்கை வழி நிண்டு காட்டல் வேண்டும். சகாயம், இஸ்ரோ விஞ்ஞானிகள், அப்துல் கலாம்….ஏன் சீமான் கூட, தமிழ் நாட்டில் தமிழ் மொழி மூலம் கல்வி கற்று வாழ்வில் நல்ல நிலையை அடைந்தோர் பலர் உள்ளனர். ஆகவே தமிழ் நாட்டில், தமிழ் வழி கல்வி அப்படி மோசமான ஒன்றல்ல. அப்படி இருந்தும் சீமான் ஆங்கில கல்வியை நாடியது அவரின் ஆங்கில மோகம், சுய நலத்தையே காட்டுகிறது.  தமிழ் மந்திர உச்சரிப்புக்கு போராடி விட்டு, மகனின் காது குத்தில் ஐயரை வைத்து சமஸ்கிருதத்தில் ஓதியது.  குடும்ப அரசியலை எதிர்த்து கொண்டே, மச்சானுக்கு சீட், மனைவிக்கு கட்சியில் பதவியில்லா அதிகாரம் வழங்கியது. அந்த வகையில் சீமானின் இன்னொரு தகிடு தத்தம்தான் இதுவும். கருணாநிதியை போலவே சீமானின் சொல்லுக்கும் செயலுக்கும் வெகுதூரம். தன் சுய நலத்துக்கு எதையும் மாற்றுவார். அவரை போலவே இவருக்கும் என்ன செய்தாலும் முட்டு கொடுக்கவும் சில கொத்தடிமைகள் இருக்கிறார்கள். #சின்ன கருணாநிதி இருக்கு. பெரிய கருணாநிதி பச்சை கள்ளன் என்பதே விடை. பொருந்தும். அச்சொட்டாக. ஏன் இல்லாமல்? தமிழ் தமிழ் என எல்லாரையும் ஏமாற்றிய கருணாநிதி குடும்ப பிள்ளைகள் ஆங்கில கல்வி கற்றதை நானும் பலரும் சிலாகித்து எழுதியுள்ளோமே. ஆகவே இந்த விடயத்தில் பெரிய கருணாநிதி கள்ளன் என்பதில் மாற்று கருத்தே இல்லை. இப்போ நான் கேட்கும் கேள்வி…. கருணாநிதி செய்ததை அப்படியே கொப்பி அடிக்கும் சீமான் கள்ளன் இல்லையா? # சின்ன கருணாநிதி
    • அடுத்த‌ பாராள‌ம‌ன்ற‌ தேர்த‌லில் ஸ்டாலின் தான் பிர‌த‌மரா போட்டி போடுவார் என்று அமெரிக்கா க‌னடா தொட்டு ப‌ல‌ நாட்டில்  க‌தை அடி ப‌டுது.....................துண்டறிக்கை பார்த்தே த‌மிழ‌ ஒழுங்காய் வாசிக்க‌ தெரியாது............ பிரத‌மர் ஆகினால் ஒட்டு மொத்த‌ உல‌க‌மே அதிரும் ஸ்டாலின் ஜயாவின் பேச்சை கேட்டு  😁😜................ வீட்டில் சீமான் பிள்ளைக‌ளுக்கு க‌ண்டிப்பாய் தூய‌ த‌மிழ் சொல்லிக் கொடுப்பார் அதில் எந்த ச‌ந்தேக‌மும் இல்லை யுவ‌ர் ஆன‌ர்.............ஆட்சிக்கு வ‌ராத‌ ஒருத‌ர‌ 68கேள்வி கேட்ப‌து எந்த‌ வித‌த்தில் ஞாய‌ம்...........ஒரு முறை ஆட்சி சீமான் கைக்கு போன‌ பிற‌க்கு அவ‌ர் த‌மிழை தமிழை வளர்க்கிறாரா அல்ல‌து திராவிட‌த்தை போல் தமிழை அழிக்கிறாரா என்று பின்னைய‌ காலங்களில் விவாதிக்க‌லாம்............இப்ப‌ அவ‌ர் எடுக்கும் அர‌சிய‌லை ப‌ற்றி விவ‌திப்ப‌து வ‌ர‌வேற்க்க‌ த‌க்க‌து...................
    • நோர்வே அனுமதித்தால் அங்கும் குரானை எரிக்கலாம்.
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.