Jump to content

ஜனநாயகம் மதச்சார்பின்மை பன்மைத்துவம்-பா.உதயன்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

பெரியாரிசமும்,அண்ணாயிசமும்,அம்பேத்காரிசமும் கற்றுத் தந்ததெல்லாம் சுதந்திரம், சமத்துவம், சகோதரத்துவமே.(Liberty, Equality, and fraternity). எப்போதும் இது தோற்கடிக்கக் கூடாது என்பது போல் எல்லா சாதிகளும் என் சாதியே என்று ரவீந்திரநாத் தாகூர் கூறியது போல் இவை சமூக நீதியோடு என்றும் இருக்க வேண்டும் என்பதே பலரின் எதிர்பார்ப்பு. யாதும் ஊரே யாவரும் கேளீர் என்பது போல் எல்லா மதமும் இனமும் சமமே இவைகளே ஜனநாயகத்துக்குமான பண்புகள். மானிட மேம்பாடின் அடிப்படை அம்சங்களான (Democracy secularism and pluralism) ஜனநாயகம், மதச்சார்பின்மை மற்றும் பன்மைத்துவம் பாதுகாக்கப் பட்டு சொல்லில் மாத்திரம் இன்றி செயலிலும் இருக்க வேண்டும். இதுவே எதிர்கால இந்தியாவின் வளர்ச்சிக்கு உதவும்.

இன்னும் தமிழ் நாட்டில் பெரிதாக ஊழல், குடும்ப ஆதிக்க அரசியல் இப்படி ஜனநாயக விழுமியங்களுக்கு எதிரான சமூக விரோத கொள்கைகளில் மாற்றம் ஏற்படவில்லை. உலகிலேயே மிகச் சிறந்த ஜனநாயக விழுமியங்களைக் கொண்ட நாடாக இந்தியாவை பார்த்தாலும் மக்கள் எந்தத் தடையும் இல்லாமல் சுயாதீனமாக வாக்களிப்பார்களா என்பது சந்தேகமே. கோடி கணக்கில் பணம் கொடுத்து வாக்காளர்களை வாங்கும் ஊழலும் ஜனநாயக விரோத நடவடிக்கைகளினாலும் இந்திய ஜனநாயகம் திறம்பட இயங்குகிறதா என்ற கோள்வியும் எழாமல் இல்லை. 

பொருளாதார ரீதியாக முன்னேற்றம்  ஏற்பட்டாலும் அங்கு அடிப்படை ஜனநாயக உரிமைகள் மீறப்படும் போது அங்கு அரசியல் ஸ்திரத்தன்மையின்மை தான் காணப்படும். ஐரோப்பிய தேசங்களில் தலைவர்கள் தப்பு செய்தாலோ அல்லது சிறு இலஞ்சம் வாங்கினாலோ அந்த தலைவர்கள் எல்லாம் அரசியலில் இருந்து காணாமல் போவது மாத்திரம் இன்றி நீதி விசாரணைகளோடு தண்டனைக்கும் உட்படுத்த படுவார்கள்.ஆனால் மூன்றாம் உலக நாடுகளில் ஜனநாயக மறுப்பு,மனித உரிமை மீறல் இப்படி சமூக விரோத செயல்பாடுகள் அதிகரித்தே காணப்படுகின்றன.இவற்றுக்கு மத்தியில் பண அரசியலுக்கு கூட குறை இல்லாமல் தமிழ் நாட்டுத் தேர்தல் திராவிடமா, தேசியமா, இந்துத்துவாவ என்ற பெருத்த எதிர் பார்புகளுக்கு மத்தியில் நடை பெற இருக்கிறது.

சில மாற்று அரசியலையும் தமிழ் நாட்டு மக்கள் விரும்புகிறார்கள் என்பதையும் நிராகரிக்க முடியாது. பெரிய திராவிட கட்சிகளே வெல்ல வேண்டும் என்ற கருத்தையும் பலர் முன் வைக்கிறார்கள்.எதிர் காலம் தான் இவைகளுக்கு எல்லாம் பதில் சொல்ல வேண்டும். மாற்றுக் கட்சிகள் எல்லாம் எதிர் காலத்தில் மாற்றத்தை கொண்டு வருமா எப்படி அமையப் போகின்றன என்பதை தமிழ் நாட்டு மக்கள் தீர்ப்பு சொல்லக் காத்திருக்கிறார்கள். சீமான் மற்றும் கமலை பொறுத்த வரையில் குறுகிய காலத்தில் சில வளர்ச்சி கண்டாலும் இவர்களை பொறுத்த வரையில் இன்னும் கடினமாக உழைக்க வேண்டும். அதே வேளை இவர்களது கொள்கைகள் திட்டங்கள் இவர்கள் கூட்டு சேரும் கட்சிகளை வைத்தே இவர்கள் எதிர் கால வளர்ச்சியும் தங்கியுள்ளது. மாற்று கட்சிகள் வருவதற்கு இன்னும் காலம் எடுக்கலாம்.

அரை நூற்றாண்டு  மேலான திராவிட சிந்தனை கொண்ட ஆளும் திராவிட கட்சிகளை அவ்வளவு இலகுவாக யாரும் பின் தள்ள முடியாது .அண்மைகாலங்களில் ஐரோப்பிய அமெரிக்க பூகோள ரீதியாக (Brexit) பிரெக்ஸிட் அலை போல தேசியவாத சிந்தனைகள் கொண்ட சித்தார்ந்த பார்வை  போல சிறிய கட்சிகளிடையே வளர்ச்சி விகுதத்தை அதிகரிக்குமா என்பதும் முக்கிய கேள்வியாக அரசியல் அவதானிகள் மட்டத்தில் பார்க்கப் படுகின்றது.

இவை தவிர கொரோன தாக்கத்துக்கு பின் ஏற்பட்ட பொருளாதார மாற்றங்களோடு விலை வாசி உயர்வு , வேலை இல்லாப் பிரச்சினை, இவற்றுக்கு மத்தியில் நடுத்த தர வர்க்கம் மிகுந்த துன்பத்தை எதிர் கொண்டு வருகின்றது. இவை கூட இத் தேர்தலில் மாற்றத்தை ஏற்படுத்தும் முக்கிய காரணிகளில் ஒன்றாக அமையலாம்.கோவிட் தொற்றுக்கு பின் ஏற்படக் கூடிய பொருளாதார சரிவுகளை சரி செய்யக் கூடிய சரியான தலைமையை  தமிழகம் தெரிவு செய்ய வேண்டிய தேவையும் உண்டு.எது எப்படி இருப்பினும் எமது  ஈழத்து தமிழர் நலனும் இதில் தங்கியிருக்கிறது என்பதையும் நாம் மறந்து விட முடியாது. மக்கள் தீர்ப்பை சில வாரம் பொறுத்திருந்து பார்ப்போம்.

பா.உதயன் ✍️

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
16 hours ago, uthayakumar said:

பெரியாரிசமும்,அண்ணாயிசமும்,அம்பேத்காரிசமும் கற்றுத் தந்ததெல்லாம் சுதந்திரம், சமத்துவம், சகோதரத்துவமே.(Liberty, Equality, and fraternity). எப்போதும் இது தோற்கடிக்கக் கூடாது என்பது போல் எல்லா சாதிகளும் என் சாதியே என்று ரவீந்திரநாத் தாகூர் கூறியது போல் இவை சமூக நீதியோடு என்றும் இருக்க வேண்டும் என்பதே பலரின் எதிர்பார்ப்பு. யாதும் ஊரே யாவரும் கேளீர் என்பது போல் எல்லா மதமும் இனமும் சமமே இவைகளே ஜனநாயகத்துக்குமான பண்புகள். மானிட மேம்பாடின் அடிப்படை அம்சங்களான (Democracy secularism and pluralism) ஜனநாயகம், மதச்சார்பின்மை மற்றும் பன்மைத்துவம் பாதுகாக்கப் பட்டு சொல்லில் மாத்திரம் இன்றி செயலிலும் இருக்க வேண்டும். இதுவே எதிர்கால இந்தியாவின் வளர்ச்சிக்கு உதவும்.

இன்னும் தமிழ் நாட்டில் பெரிதாக ஊழல், குடும்ப ஆதிக்க அரசியல் இப்படி ஜனநாயக விழுமியங்களுக்கு எதிரான சமூக விரோத கொள்கைகளில் மாற்றம் ஏற்படவில்லை. உலகிலேயே மிகச் சிறந்த ஜனநாயக விழுமியங்களைக் கொண்ட நாடாக இந்தியாவை பார்த்தாலும் மக்கள் எந்தத் தடையும் இல்லாமல் சுயாதீனமாக வாக்களிப்பார்களா என்பது சந்தேகமே. கோடி கணக்கில் பணம் கொடுத்து வாக்காளர்களை வாங்கும் ஊழலும் ஜனநாயக விரோத நடவடிக்கைகளினாலும் இந்திய ஜனநாயகம் திறம்பட இயங்குகிறதா என்ற கோள்வியும் எழாமல் இல்லை. 

பொருளாதார ரீதியாக முன்னேற்றம்  ஏற்பட்டாலும் அங்கு அடிப்படை ஜனநாயக உரிமைகள் மீறப்படும் போது அங்கு அரசியல் ஸ்திரத்தன்மையின்மை தான் காணப்படும். ஐரோப்பிய தேசங்களில் தலைவர்கள் தப்பு செய்தாலோ அல்லது சிறு இலஞ்சம் வாங்கினாலோ அந்த தலைவர்கள் எல்லாம் அரசியலில் இருந்து காணாமல் போவது மாத்திரம் இன்றி நீதி விசாரணைகளோடு தண்டனைக்கும் உட்படுத்த படுவார்கள்.ஆனால் மூன்றாம் உலக நாடுகளில் ஜனநாயக மறுப்பு,மனித உரிமை மீறல் இப்படி சமூக விரோத செயல்பாடுகள் அதிகரித்தே காணப்படுகின்றன.இவற்றுக்கு மத்தியில் பண அரசியலுக்கு கூட குறை இல்லாமல் தமிழ் நாட்டுத் தேர்தல் திராவிடமா, தேசியமா, இந்துத்துவாவ என்ற பெருத்த எதிர் பார்புகளுக்கு மத்தியில் நடை பெற இருக்கிறது.

சில மாற்று அரசியலையும் தமிழ் நாட்டு மக்கள் விரும்புகிறார்கள் என்பதையும் நிராகரிக்க முடியாது. பெரிய திராவிட கட்சிகளே வெல்ல வேண்டும் என்ற கருத்தையும் பலர் முன் வைக்கிறார்கள்.எதிர் காலம் தான் இவைகளுக்கு எல்லாம் பதில் சொல்ல வேண்டும். மாற்றுக் கட்சிகள் எல்லாம் எதிர் காலத்தில் மாற்றத்தை கொண்டு வருமா எப்படி அமையப் போகின்றன என்பதை தமிழ் நாட்டு மக்கள் தீர்ப்பு சொல்லக் காத்திருக்கிறார்கள். சீமான் மற்றும் கமலை பொறுத்த வரையில் குறுகிய காலத்தில் சில வளர்ச்சி கண்டாலும் இவர்களை பொறுத்த வரையில் இன்னும் கடினமாக உழைக்க வேண்டும். அதே வேளை இவர்களது கொள்கைகள் திட்டங்கள் இவர்கள் கூட்டு சேரும் கட்சிகளை வைத்தே இவர்கள் எதிர் கால வளர்ச்சியும் தங்கியுள்ளது. மாற்று கட்சிகள் வருவதற்கு இன்னும் காலம் எடுக்கலாம்.

அரை நூற்றாண்டு  மேலான திராவிட சிந்தனை கொண்ட ஆளும் திராவிட கட்சிகளை அவ்வளவு இலகுவாக யாரும் பின் தள்ள முடியாது .அண்மைகாலங்களில் ஐரோப்பிய அமெரிக்க பூகோள ரீதியாக (Brexit) பிரெக்ஸிட் அலை போல தேசியவாத சிந்தனைகள் கொண்ட சித்தார்ந்த பார்வை  போல சிறிய கட்சிகளிடையே வளர்ச்சி விகுதத்தை அதிகரிக்குமா என்பதும் முக்கிய கேள்வியாக அரசியல் அவதானிகள் மட்டத்தில் பார்க்கப் படுகின்றது.

இவை தவிர கொரோன தாக்கத்துக்கு பின் ஏற்பட்ட பொருளாதார மாற்றங்களோடு விலை வாசி உயர்வு , வேலை இல்லாப் பிரச்சினை, இவற்றுக்கு மத்தியில் நடுத்த தர வர்க்கம் மிகுந்த துன்பத்தை எதிர் கொண்டு வருகின்றது. இவை கூட இத் தேர்தலில் மாற்றத்தை ஏற்படுத்தும் முக்கிய காரணிகளில் ஒன்றாக அமையலாம்.கோவிட் தொற்றுக்கு பின் ஏற்படக் கூடிய பொருளாதார சரிவுகளை சரி செய்யக் கூடிய சரியான தலைமையை  தமிழகம் தெரிவு செய்ய வேண்டிய தேவையும் உண்டு.எது எப்படி இருப்பினும் எமது  ஈழத்து தமிழர் நலனும் இதில் தங்கியிருக்கிறது என்பதையும் நாம் மறந்து விட முடியாது. மக்கள் தீர்ப்பை சில வாரம் பொறுத்திருந்து பார்ப்போம்.

பா.உதயன் ✍️

நல்லதொரு பகிர்விற்கு நன்றிகள் தோழர்..👌

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சுதந்திரம் சமத்துவம் சகோதரத்துவம் எப்போதும் தோற்கடிக்கக் கூடாது. ஜனநாயகம் மதச்சார்பின்மை பன்மைத்துவம் இந்தியாவில் பாதுகாக்கபட வேண்டும் நல்ல கருத்துக்கள் கொண்ட கட்டுரை 👍

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
14 hours ago, புரட்சிகர தமிழ்தேசியன் said:

நல்லதொரு பகிர்விற்கு நன்றிகள் தோழர்..👌

 

11 hours ago, விளங்க நினைப்பவன் said:

சுதந்திரம் சமத்துவம் சகோதரத்துவம் எப்போதும் தோற்கடிக்கக் கூடாது. ஜனநாயகம் மதச்சார்பின்மை பன்மைத்துவம் இந்தியாவில் பாதுகாக்கபட வேண்டும் நல்ல கருத்துக்கள் கொண்ட கட்டுரை 👍

கருத்துக்கு நன்றிகள் புரட்சிக்கர தமிழுக்கும் விளங்கநினைப்பவனுக்கும்.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • பாவம் சிரித்திரன் சுந்தர்.  கல்லறைக்குள் இருந்து நெளிவார் என நினைக்கிறேன். 
    • இதென்ன பிரமாதம்…. நான் ஒரு முடா குடியன் எண்டும்…லண்டனில் ஹரோ பகுதி பப் ஒன்றில் வெறியில் அரசியல் கதைக்கும் ஆள் நான் தான் என்று சத்தியம் செய்ததோடு… அந்த நபரோடு டெலிபோன் தொடர்பை ஏற்படுத்தி…அவரும் ஓம் நான் கோஷாந்தான் என சொல்லி…. இவரை ஒரு சில மாதம் ஓட்டு…ஓட்டு எண்டு ஓட்டி🤣. இன்னும் அந்த மனுசன் இவரை உசுபேத்தி கொண்டு இருக்கோ தெரியாது🤣.   கேட்டா எண்ட சாதகம் மோகனிடம் இருக்கு, நிழலிட்ட இருக்கு என்பார். அந்த தகவலை அவர்கள் தந்தாலும்…அதை வச்சு நான் என்ன செய்யலாம்? கலியாணம் பேசவோ🤣
    • 28 MAR, 2024 | 11:04 AM   நியூமோனியாவினால் பாதிக்கப்பட்டு உயிரிழந்த 59 வயதுடைய நபரொருவரின் சடலத்தில் மேற்கொள்ளப்பட்ட பிரேத பரிசோதனையின் போது அவரது நுரையீரலில் காணப்பட்ட பல் ஒன்று பலாங்கொடை ஆதார வைத்தியசாலையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. உயிரிழந்தவர் பல வருட காலமாக நியூமோனியா மற்றும் சிறுநீரக நோயினால் பாதிக்கப்பட்டிருந்ததாக வைத்தியர்கள் தெரிவித்தனர். பலாங்கொடை ஆதார வைத்தியசாலையின் சட்ட வைத்திய அதிகாரியினால் மேற்கொள்ளப்பட்ட பிரேத பரிசோதனையின்போதே இந்த பல் கண்டுபிடிக்கப்பட்டதாக பலாங்கொடை ஆதார வைத்தியசாலையின் திடீர் மரண விசாரணை அதிகாரி பத்மேந்திர விஜேதிலக தெரிவித்தார். பலாங்கொடை - பின்னவலை பிரதேசத்தை சேர்ந்த எஸ் . கருணாரத்ன என்பவரின் நுரையீரலில் இருந்தே இவ்வாறு பல் கண்டுப்பிடிகக்ப்பட்டுள்ளது. இவர் மதுபானத்துக்கு அடியானவர் என்பதுடன் நியூமோனியா நோயினால் பாதிக்கப்பட்டு உயிரிழந்துள்ளதாக வைத்தியர்கள் தெரிவித்தனர். சில வருடங்களுக்கு முன்னர் இவரது பல் ஒன்று உடைந்துள்ள நிலையில், அந்த பல் நுரையீரலில் சிக்கியிருக்கலாம் என வைத்தியர்கள் சந்தேகிக்கின்றனர். https://www.virakesari.lk/article/179883
    • உற‌வே அவ‌ர் சொல்ல‌ வ‌ருவ‌து நாம் த‌மிழ‌ர் க‌ட்சி...........திமுக்கா ஆதிமுக்கா வீஜேப்பி இவ‌ர்க‌ளுக்கு அடுத்து 4வ‌து இட‌த்துக்கு தான் நாம் த‌மிழ‌ர் க‌ட்சி வ‌ரும் என்று எழுதி இருக்கிறார் சில‌ தொகுதிக‌ளில் மூன்றாவ‌து இட‌ம் நாம் த‌மிழ‌ர் க‌ட்சி வ‌ர‌லாம் இது அதான் க‌ந்த‌ப்பு அண்ணாவின் தேர்த‌ல் க‌ணிப்பு.................
    • Published By: SETHU    28 MAR, 2024 | 02:08 PM   சுவீடனில் புனித குர்ஆனை எரித்து சர்ச்சை ஏற்படுத்திய நபர், ஈராக்குக்கு நாடு கடத்தப்படவுள்ள நிலையில் நோர்வேயில் புகலிடம் கோருவதற்கு முயற்சிக்கிறார். ஈராக்கியரான சல்வான் மோமிகா எனும் இந்நபர், 2021 ஆம் ஆண்டில் சுவீடனில் வதிவிட உரிமை பெற்றவர்.  கடந்த பல வருடங்களில் அவர் பல தடவைகள் குர்ஆனை எரித்து சர்ச்சை ஏற்படுத்தினார்.  இச்சம்பவங்களுக்கு எதிராக பல நாடுகளில் ஆர்ப்பாட்டங்களும் வன்முறைகளும் இடம்பெற்றன.  கடந்த ஒக்டோபர் மாதம் அவரின் வதிவிட அனுமதி இரத்துச் செய்யப்பட்டது. வதிவிட அனுமதி கோரிக்கைக்கான விண்ணப்பத்தில் தவறான தகவல்களை அளித்திருந்தமை இதற்கு காரணம் என சுவீடன் அதிகாரிகள் தெரிவித்திருந்தனர்.  அவரை ஈராக்குக்கு நாடு கடத்த சுவீடன் நீதிமன்றம் அனுமதி அளித்தது. எனினும், ஈராக்கில் தனது உயிருக்கு ஆபத்துள்ளதாக மோமிகா தெரிவித்ததையடுத்து நாடு கடத்தல் தற்காலிகமாக ஒத்திவைக்கப்பட்டது. அவருக்கு வழங்கப்பட்டிருந்த புதிய தற்காலிக அனுமதிப்பத்திரம் எதிர்வரும் ஏப்ரல் 16 ஆம் திகதியுடன் காலவாதியாகிறது. இந்நிலையில், தான் நோர்வேயில் புகலிடம் கோரவுள்ளதாக சுவீடன் ஊடகமொன்றுக்கு அளித்த செவ்வியில் மோமிகா தெரிவித்துள்ளார். இது குறித்து நோர்வே அதிகாரிகள் கருத்து எதுவும் தெரிவிக்கவில்லை. https://www.virakesari.lk/article/179895
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.