Jump to content

பெரியாரியச் சிந்தனையாளர் வே.ஆனைமுத்து மறைந்தார்!


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

பெரியாரியச் சிந்தனையாளர் வே.ஆனைமுத்து மறைந்தார்!

spacer.png

மார்க்சிய - பெரியாரிய பொதுவுடைமை இயக்கத்தின் நிறுவனர் வே.ஆனைமுத்து முதுமை காரணமாக தனது 96 வயதில் இன்று (ஏப்ரல் 6) காலமானார்.

அவரது மறைவுக்கு பல்வேறு தரப்பினரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

பேராசிரியர் ராஜன் குறை கிருஷ்ணன் தனது முகநூல் பக்கத்தில், “

‘என் வாழ்வை திசைமாற்றியவர் மறைந்தார்’

நான் பயணிக்க வேண்டிய திசை என்ன என்று புரியாமல் இருந்த 1992-ஆம் ஆண்டு நிறப்பிரிகை பத்திரிகை சார்ந்த நடவடிக்கைகளில் நண்பர்களாக ஆன கிராமியன், துப்பாக்கி தொழிற்சாலை அழகேசன் ஆகியோரை ஒரு நாள் மாலை திருச்சி கோட்டை ஸ்டேஷனில் சந்தித்தேன். ஏதெனும் ஒரு வாசிப்புக் குழு (reading group) உருவாக்க திட்டம்.

அப்போது நண்பர் கோ.ராஜாராம் நீங்களெல்லாம் ஃபிரெஞ்சு, ஐரோப்பிய அறிஞர்களைத்தான் படிப்பீர்கள்; பெரியாரையெல்லாம் படிக்க மாட்டீர்களா என்று கேட்டு எனக்கு கடிதம் எழுதியிருந்ததைக் கூறினேன். அதனைத் தொடர்ந்து பெரியாரை வாசிக்கலாம் என நினைத்தோம். எப்படி வாசிப்பது, எதை வாசிப்பது என்ற கேள்வி எழுந்தபோதுதான் கிராமியன் சொன்னார், ஆனைமுத்து தொகுத்த பெரியார் சிந்தனைகள் மூன்று வால்யூம் இருக்கிறது. அவற்றை வாசிக்கலாம் என்றார். அவரே அந்த வால்யூம்களை நண்பர்களிடம் கடனாகப் பெற உதவி செய்தார். சேர்ந்து படிக்க ஒரு நண்பரின் அறையையும் ஏற்பாடு செய்தார்.

முப்பத்திரண்டு வயதில் என் வாழ்க்கையை திசைமாற்றிய அந்த சம்பவம் நிகழ்ந்தது. அந்த மூன்று தொகுப்புகளும் ஒரு புதிய ராஜன் குறையை உருவாக்கின. அ.மார்க்ஸ் கொடுத்த உற்சாகம்/ அழுத்தத்தால் பெரியாரியம் குறித்து நான் எழுதிய கட்டுரை நிறப்பிரிகையில் வெளியானது. என்னை ஆய்வாளனாக, எழுத்தாளனாக அடையாளம் காட்டியது.

ஐயா ஆனைமுத்து இந்த வரலாற்று சிறப்புமிக்க தேர்தல் தினத்தன்று மறைந்துவிட்டார். அவருக்கு என் மனமார்ந்த அஞ்சலிகளை கண்ணீர் மல்க தெரிவித்துக்கொள்கிறேன்.

எஞ்சியுள்ள வாழ்நாளிலும் அவருக்கும், அவருடைய பெரியார் சிந்தனைகள் தொகுப்பிற்கும் கடன் பட்டுள்ளேன்” என்று பதிவிட்டுள்ளார்.
 

 

https://minnambalam.com/politics/2021/04/06/40/periyar-fallower-v-anaimuthu-has-passed-away

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மூத்த தலைவர் ஆனைமுத்து ஐயா மறைவு பேரிழப்பாகும் - பெ. மணியரசன் இரங்கல்!

 

மார்க்சியப் பெரியாரியப் பொதுவுடைமைக் கட்சித் தலைவரும், பெரியாரிய சிந்தனை அறிஞருமான ஐயா வே. ஆனைமுத்து அவர்கள், புதுவை மருத்துவமனையில் இன்று (06.04.2021) முற்பகல் 11.45 மணியளவில் காலமான செய்தி, பெரும் துயரம் அளிக்கிறது! 

ஐயா அவர்கள் உடல் நலிவுற்று சென்னை மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று, பின்னர் தாம்பரத்தில் தமது தலைமகன் இல்லத்தில் ஓய்வுபெற்று வந்த காலத்தில், அவரைப் போய் பார்த்து உடல்நலம் விசாரித்து வந்தேன். நலிவுற்றுப் படுக்கையில் இருந்த நிலையிலும், அடையாளம் கண்டு என்னுடன் பேசினார்கள். 

ஆனைமுத்து ஐயா அவர்கள், எடுத்துக்காட்டான இலட்சிய வாழ்வு வாழ்ந்தவர். சமூகப் பணியில் பணம் – பதவி – விளம்பரம் மூன்றுக்கும் ஆசைப்படாமல் தொண்டாற்றுவது என்பதே மிகவும் அரிதான செயலாகிவிட்ட இக்காலத்தில், ஐயா அவர்கள் இம்மூன்றுக்கும் இச்சைப் படாமல் செம்மாந்து இலட்சிய வாழ்வு வாழ்ந்து பணியாற்றியவர். இளையோருக்கு அவரது அர்ப்பணிப்பு வாழ்வு முன்னோடிச் செயலாகும்! 

பெரியார் அவர்களின் சிந்தனைகளை முதன் முதலில் தொகுத்து, மூன்று தொகுதிகளாக வழங்கி அவற்றை நிரந்தரமாகப் பதிவு செய்த பெருமை, ஐயா ஆனைமுத்து அவர்களையே சேரும். பெரியார் வழியில் நின்று, வர்ணாசிரமம் – ஆரியத்துவா ஆதிக்கம் ஆகியவற்றை விடாப்பிடியாக எதிர்த்து வந்தார். 

இந்தியா முழுவதுமுள்ள பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு நடுவண் அரசுப் பணிகளில் மற்றும் கல்வியில் இட ஒதுக்கீடு வேண்டுமென்று பெரும்பாடுபட்டவர் ஐயா ஆனைமுத்து அவர்கள். வடமாநிலங்களில் பல கிராமங்களுக்கும், நகரங்களுக்கும் சென்று பிற்படுத்தப்பட்டோர் இட ஒதுக்கீட்டுக்காகப் பரப்புரை செய்தவர். அம்மாநிலங்களில் உள்ள பிற்படுத்தப்பட்டோர் உரிமைச் சிந்தனையாளர்கள், ஐயா அவர்களை அழைத்து இப்பணிகளை மேற்கொண்டனர். குறிப்பாக, மண்டல் குழு அமைத்திட ஐயா ஆனைமுத்து அவர்களும், அவர்களுடைய வடநாட்டுத் தோழர்களும் ஆற்றிய பணிகள் மகத்தானவை. பின்னர், மண்டல் குழுவின் பரிந்துரைகள் இந்திய ஆட்சியாளர்களால் கிடப்பில் போடப்பட்ட நிலையில், அவற்றை செயல்படுத்துவதற்கு ஆனைமுத்து ஐயா அவர்கள் கடும் முயற்சி எடுத்துக் கொண்டார்கள். 

மார்க்சிய லெனினியம் நன்கு கற்றவர். சமூக வளர்ச்சியின் இயங்கியல் விதிகளை அறிந்தவர். தமிழ்த்தேசிய இனம் குறித்த சரியான புரிதல் உள்ளவர். தமிழ்வழிக் கல்விக்கு முன்னுரிமை கொடுத்து, போராட்டங்கள் நடத்தியவர். ஐயா அவர்களோடு, நாங்களும் இணைந்து தமிழ்வழிக் கல்விக்கானப் போராட்டங்களில் தளைப்பட்டுள்ளோம். தமிழ்த்தேசிய இனத்திற்கு இறை யாண்மை வேண்டும் என்பதில், உறுதியானவர். இவ்வாறான தமிழ்த்தேசியக் கொள்கைகளை “சிந்தனையாளன்” இதழிலும், பொது வெளியிலும் வலியுறுத்தி வந்தார்கள். 

மொழி – இன – பகுத்தறிவு உணர்வோடு செயல்பட்டு வந்த மூத்த தலைவர் ஐயா ஆனைமுத்து அவர்கள் மறைவு என்பது, தமிழ் மக்களுக்குப் பேரிழப்பாகும்! ஐயா அவர்களுடைய சிந்தனைகளும், கொள்கைகளும் இளம் தலைமுறைக்கு என்றும் வழிகாட்டும்! ஆனைமுத்து ஐயா அவர்களுக்கு தமிழ்த்தேசியப் பேரியக்கம் சார்பில் வீரவணக்கத்தையும், அவரை இழந்து வாடும் அவர்தம் குடும்பத்தினருக்கும், தோழர்களுக்கும் ஆழ்ந்த இரங்கலையும் தெரிவித்துக் கொள்கிறேன். 

 

-தமிழ்த்தேசியப் பேரியக்கம்
 

https://www.thaarakam.com/news/2fc5c815-4da3-49f9-857d-c93847c2c1b5

 

 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.