Jump to content

கொரோனா தொற்றால் பிரேஸிலில் ஒரே நாளில் 4,000 க்கும் மேற்பட்டோர் உயிரிழப்பு


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

கொரோனா தொற்றால் பிரேஸிலில் ஒரே நாளில் 4,000 க்கும் மேற்பட்டோர் உயிரிழப்பு

பிரேசிலில் முதன் முறையாக செவ்வாய்க்கிழமை மாத்திரம் கொரோனா தொற்றினால் 4,000 க்கும் அதிகமான உயிரிழப்புகள் பதிவாகியுள்ளதாக அந் நாட்டு சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.

EyUTTtiWQAYrocj.jpg

கொரோனா வைரஸ் தொற்றுநோயின் மிக மோசமான நாளான நேற்றைய தினம் அங்கு மொத்தம் 4,195 உயிரிழப்புகள் இடம்பெற்றுள்ளன.

அதனால் நாட்டில் கொவிட்-19 காரணமாக ஏற்பட்ட மொத்த உயிரிழப்புகளின் எண்ணிக்கை சுமார் 337,000 ஆக உள்ளதாக பிரேஸில் சுகாதார அமைச்சகம் புதன்கிழமை காலை அறிவித்துள்ளது.

212 மில்லியன் மக்களைக் கொண்ட பிரேஸில் கடந்த வாரத்தில் சராசரியாக ஒரு நாளைக்கு 2,757 கொவிட்-19 தொடர்பான உயிரிழப்புகளை பதிவு செய்துள்ளது.

பிரேசிலின் 27 மாநிலங்களில் 18 மாநிலங்கள் கொரோனா தொற்று காரணமாக மிகவும் அவசரகால நிலையில் உள்ள நிலையில் 13 மில்லியனுக்கும் அதிகமான கொரோனா நோயாளர்கள் அங்கு அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
 

https://www.virakesari.lk/article/103410

 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பிரேசிலை அச்சுறுத்தும் P.1 கொரோனா - ஒரே நாளில் 4,000 மரணங்கள் - என்ன நடக்கிறது

தென்னமெரிக்க நாடான பிரேசிலில் முதல்முறையாக ஒரே நாளில் 4 ஆயிரத்துக்கும் அதிகமானோர் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர்.

மருத்துவமனைகள் நிரம்பிவிட்டன, சிகிச்சைக்காக பல நாள்கள் காத்திருக்க வேண்டியிருக்கிறது. ஒட்டுமொத்தமாக சுகாதாரக் கட்டமைப்பை நிலைகுலைந்து போகும் சூழல் உருவாகி இருக்கிறது.

உலகிலேயே அமெரிக்காவுக்கு அடுத்தபடியாக அதிக உயிர்களைப் பறிகொடுத்திருக்கும் நாடு பிரேசில். இங்கு உயிரிழந்தோரின் எண்ணிக்கை 3,37,000.

ஆனால் அதிபர் பொல்சனோரோ இன்னும் மாறவில்லை. கொரோனா தொற்று தொடங்கிய காலத்தில் பொதுமுடக்கக் கட்டுப்பாடுகள் கூடாது என்று கூறிவந்தார். இன்னும் அந்த வாதங்களை அவர் விட்டுவிடவில்லை. கொரோனா வைரஸால் ஏற்படும் பாதிப்பைவிட, பொதுமுடக்கத்தால் ஏற்படும் பொருளாதாரப் பாதிப்புகள் அதிகம் என்கிறார் போல்சனாரோ. உள்ளூர் நிர்வாகங்கள் எடுக்கும் நடவடிக்கைகளுக்கு எதிராக அவர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடுக்கிறார்.

உடல் பருமனும், மன அழுத்தமும் கோவிட் உயிரிழப்புகளுக்குக் காரணமாக இருப்பதற்கு எந்த ஆதாரமும் இல்லை என்று கடந்த செவ்வாய்க்கிழமையன்று பேசினார். தனிமைப்படுத்தும் நடவடிக்கைகளை கடுமையாக விமர்சித்தார்.

புதன்கிழமை மட்டும் பிரேசிலில் கொரோனாவால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 4,195. மொத்த பாதிப்பு 1.3 கோடியைக் கடந்துவிட்டது.

பிரேசிலின் நிலை, கொரோனாவைக் கட்டுப்படுத்தும் உலக நாடுகளின் முயற்சிகளுக்கு மிகப்பெரிய அச்சுறுத்தலாக இருப்பதாக அந்நாட்டின் நிலையைக் கண்காணித்து வரும் மிகுயேல் நிகோலெலிஸ் பிபிசியிடம் தெரிவித்தார்.

"ஒவ்வொரு நாளும் புதிய வகையில் உருமாற்றம் பெரும் கொரோனா வைரஸ்கள் பரவி வரும் நிலையில், பிரேசில் நிலை மட்டும் கட்டுக்குள் இருந்து விட்டால் பூமியே பாதுகாப்பாக மாறிவிடும்" என்கிறார் அவர்.

பிரேஸில்

அவசர சிகிச்சைப் பிரிவில் 90 சதவிகித படுக்கைகள், கொரோனா பாதித்தவர்களால் நிரம்பியிருக்கிறது. பல மாநிலங்களில் ஆக்சிஸனும், மயக்க மருந்துகளும் போதிய அளவில் இல்லை. நிலை மோசமாக இருந்தாலும் பல மாநிலங்கள் கட்டுப்பாடுகளைத் தளர்த்தத் தொடங்கியிருக்கின்றன.

"உண்மையில் அதிபர் பொல்சனாரோவின் கருத்து வெற்றி பெற்று விட்டது" என்கிறார் பிரேசில் சுகாதார கொள்கைகளுக்கான கல்வி அமைப்பின் மிகுயேல் லேகோ. அதிபர் பொல்சனரோவின் ஆதரவாளர்களும், தொழிலதிபர்களாலும் தங்களுக்குச் சிக்கல் ஏற்படும் என்பதால் மேயர்களும் ஆளுநர்களும் கொரோனா கட்டுப்பாடுகளை வலியுறுத்துவதில்லை என்கிறார் அவர்.

பிரேஸில்

கொரோனா கட்டுப்பாடுகளைப் பற்றி மட்டுமின்றி, தடுப்பூசிகளுக்கு எதிராகவும் பேசுபவர் பொல்சனாரோ. ஆய்வில் உறுதி செய்யப்படாத சிகிச்சை முறைகளை பரிந்துரை செய்பவர் அவர்.

பிரேசில் நாட்டில் 92 கொரோனா திரிபுகள் கண்டறியப்பட்டுள்ளன. இவற்றில் "P.1" எனப்படும் பிரேசில் திரிபு, மிக வேகமாகப் பரவக்கூடியது. கடந்த நவம்பர் மாதம் அமேசானோஸ் மாகாணத்தில் கண்டறியப்பட்ட இந்த வைரஸ், ஜனவரி மாதத்துக்குள்ளாக 73 சதவிகித பாதிப்புகளுக்குக் காரணமாக அமைந்தது. வேறு நாடுகளுக்கும் அது பரவி வருகிறது.

பிரேசிலை அச்சுறுத்தும் P.1 கொரோனா - ஒரே நாளில் 4,000 மரணங்கள் - என்ன நடக்கிறது - BBC News தமிழ்

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.