Jump to content

நாங்களும் அரசியல் அலசுவோமல்ல


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

உலக ஒழுங்கு என்று வரும் பொழுது இன்றும் பழைய வலது/இடது அணி தான் அச்சாணி யாக இருக்கிறது ..

 

அணிசேரா நாடுகள் என்ற அமைப்பும் இருந்தது ஆனால் அந்த அணி நாடுகள் உடைந்து போனது அல்லது வலது/இடது

கூட்டணிகளுடன் கூட்டு சேர்ந்து கொண்டது

 

 

 

எனது பார்வையில்...

ஆசிய பிராந்தியத்தில் இரண்டாம் உலக போரின் பின்பு இரு பெரும் இடதுசாரி (??)நாடுகள்(சோவியத் சீனா)ஆசிய பிராந்தியத்தில்  ஆதிக்கம் செலுத்துவதை உலக போரை முடிவுக்கு கொண்டு வந்த தரப்பு விரும்பவில்லை.

வலது நாடுகளின்(வநா) கூட்டு

தங்களது வசதிக்கும் தங்களது செல்வாக்கை செலுத்துவற்குமாக சில தீவுகளை நாடுகளாக உருவாக்கி அல்லது குத்தகைக்கு எடுத்து தங்களது 

வலது/ஜனநாயக/பல்கலாச்சார கொள்கைகளை வகுத்து சென்றன.....மதங்களை மையப்படுத்தி நாடுகளின்எல்லைகளையும் வகுத்து சென்றனர்.

பிரித்தானியா தனது காலனித்துவத்திலிருந்த நாடுகளை ஒரு அணியின் கீழ் பொதுநலவாய நாடுகள் என

உருவாக்கினர் இந்த பொதுநலவாய நாடுகள் தங்களது செல்ல பிள்ளைகளாக தங்களால் அறிமுகம் செய்யப்பட்ட பல் கலாச்சார,மற்றும் ஜனநாயக மரபுகளை மதித்து நடப்பார்கள் என நினைத்தார்கள்.அத்துடன் தங்களது மொழி,மற்றும் மத பண்பாடு (கிறிஸ்தவம)தெரிந்தவர்கள் அறிந்தவர்கள்  என நம்பினார்கள் . அரசியல் லாபங்களுக்கும் பொருளாதார வளர்ச்சிக்கும் இந்த நாடுகளை உபயோகிக்கலாம் என்ற தூர நோக்கு சிந்தனை யுடன் உடன் செயல் பட்டார்கள்.

அப்படி உருவான நாடு தான் சிலோன்..... பல பொதுநலவாய நாடுகள் பிரித்தானியாவை சுழிச்சு விளையாட தொடங்கின ,அதில் ஒன்று சிலோன்.

இதை அறிந்த வ/நா கூட்டு ஆசியா பிராந்திய நாடாகிய ஜப்பான் ஊடாக பல நிதியுதவிகளை செய்து தம் பக்கம் வைத்து கொள்ள முடிவு செய்தது. ஜப்பானும் சிறிலங்காவும் பாரம்பரிய நட்பு நாடுகளாக மாறியது. .

அதே சமயம் சிலோன் தனது நாட்டை(இறையாண்மை) பாதுகாத்து கொள்ளவும்,அரசியல் வாதிகள் தங்களது அரசியல் /பணம் பலத்தை பெருக்குவதற்கு பல உத்திகளை பயன்படுத்தினார்கள்.

சிலோன் முழுவதும் ஒரே இனம் ,ஒரே மொழி, ஒரேமதம் பேசும் மக்கள் வாழ வேண்டும் .உலகில் சிங்கள பெளத்தம்  இந்த நாட்டில் மட்டும் உள்ள காரணத்தால் இதை பாதுகாக்க நினைத்தசிங்கள பெளத்த தேரர்கள் இனவாத்தை கையில் எடுத்தார்கள் .கிறிஸ்தவ சிங்கள அரசியல்வாதிகளும் இதைபயன்படுத்தி பெளத்தர்களாக மாறி அரசியல் செய்ய தொடங்கினார்கள்.

அரசியல் யாப்புக்களை மாற்றுவதும் இனவாதம் பேசுவதுமாக நாட்டை நடத்த தொடங்கினார்கள்.

வாக்குரிமை பறிக்கப்பட்டமை,சிங்களம் மட்டும் சட்டம்,பாத யாத்திரைகள் ,ஒப்பந்த்ங்கள் கிழித்தெறிதல் என்பன உள் நாட்டில் நடந்து கொண்டிருக்க மறுபக்கத்தில் சர்வதேச மட்டத்தில்

சிலோன் என்ற பெயரை சிறிலங்கா குடியரசு என மாற்ற அரசியல் யாப்பை மாற்றினார்கள் .

ஜெ.வி.பி (சேகுவார புரட்சி)இடது சாரி கொள்கையை புரட்சி மூலம் உருவாக்க போராடினார்கள். இந்த போராட்டம் இந்தியா இராணுவத்தின் உதவியுடன் சிலோன் இராணுவத்தினரால் முறியடிக்கப்பட்டது.

(தற்பொழுது சீனா பணத்தை காட்டி நேரடியாக ஆட்சியை தமது கட்டுப்பாட்டில் கொண்டுவருகின்றனர்,முன்பு போல மாவோ யிஸ்ட்க்களை  உருவாக்க வேண்டிய தேவையில்லை.)

சிறிலங்காவில் ஆட்சிக்கு வருபவர்கள் யாவரும் தங்களது கட்சி தொடர்ந்து நிலைத்திருப்பதற்கு அரசியல் யாப்பில் மாற்றத்தை கொண்டு வந்திருக்கின்றனர் .

ஜெ.ஆர் ஆட்சிக்கு வந்தார் சிறிலங்கா குடியரசு என்ற பெயரை சிறிலங்கா சோசலிச ஜனநாயக குடியரசு என மாற்றி அரசியல் யாப்பையும் மாற்றினார் தனது கட்சி தொடர்ந்து 17 ஆண்டுகள் ஆட்சி அமைக்க கூடியதாக இருந்தது.

தமிழ்மக்களின் ஆயுத போராட்டம்  சிங்கள ஆட்சியாளர்களின் அரசியல் ஆசைக்கும் விருப்புக்கும் நன்றாக தீனி போட்டது.திறமையாக கையான்டார்கள் சிங்கள ஆட்சியாளர்கள் நாட்டில் அக்கறை கொள்வதை விட அதிகாரத்தை அலங்கரிப்பதிலயே கவனம் செலுத்தினர்

சந்திரிக்கா ஆட்சி அமைத்தார் அவரும் அரசியல் யாப்பை மாற்றுவதாக சொல்லித்தான் ஆட்சி ஏறினார் ...

ஐக்கிய தேசிய கட்சி ஆளுமை குறைய தொடங்க சிறிலங்கா சுதந்திரக‌ட்சி ஆட்சியமைக்கும் சந்தர்ப்பம் கிடைக்கின்றது .சந்திரிக்காவின் பதவிக்காலம் முடிய ராஜபக்சா ஆட்டம் தொடங்குகிறது .இதுவரை காலமும் மேற்குலகு, சீனா, இந்தியா போன்ற நாடுகளுடன் சுளிச்சு ஓடிய ஒட்டம் ஒரு முட்டுக்கட்டை நிலைக்கு வந்து பகிரங்கமாக சீனாவுடன் உறவாட வேண்டிய நிலைக்கு சிறிலங்கா வந்து நிற்கின்றது .புதிய கட்சி  நீண்ட நாள் ஆட்சி செய்ய வேண்டும் அத்துடன் இது குடும்ப கட்சியாகவும் நீண்டநாட்கள் பயணம் செய்ய‌ வேண்டியுள்ளது.இந்த குடும்ப கட்சியில் ஒரு சிக்கல் உண்டு சகோதரர்கள் அவர்களின் பிள்ளைகள் எல்லோரும்  ஜனாதிபதி ,பிரமதர் ஆக வரும் தகுதியுடையவர்கள்.

மீண்டும் சிறிலங்கா யாப்பு மாற்றப்படுவதன் மூலம் அதன் பெயர் சிங்கலெ ஆக மாறும் .சீனா சகல அபிவிருத்தியையும் செய்யும்  நாட்டின் பெரும் பகுதி சீனாவுக்கு சொந்தமாகும்.....சிங்கள மக்கள் சிங்கலெ என்ற பெயர் கிடைத்தது மற்றும் தமிழர்கள்,இஸ்லாமியர்கள் நாட்டின் சொத்தை அபகரிக்கவில்லை என பெரும் மூச்சு விடுவார்கள் ஆனால் ட்ரகன் விழுங்கிய சிங்கத்தை மறந்துவிடுவார்கள்

வலதுசாரி பின்னனி கொண்ட கூட்டு ஐ.நா சபையில் மனித உரிமை மீறல் என்ற குற்றசாட்டை போட்டு சிறிலங்காவை சீனா பக்கம் சாயாமல் தடுக்க முயற்சி செய்து பார்கின்றது ஆனால் வலது சாரிகளின் நன்கொடையை விட சீனாவின் நன்கொடை பல மடங்கு அதிகம் அதனால் அரசியல்வாதிகளின் பணப்பையும் பெரிதாகும்...

 

 நீண்ட நாட்கள் அரசியல் எழுதவில்லை அதுதான் இந்த சின்ன கிறுக்கல்

 

  • Like 7
  • Thanks 1
  • Haha 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இலங்கை செய்யும் அரசியலில் எந்தவிதமான தூர நோக்குகள் எதுவுமில்லை....! 

ஒரு அழகிய இயற்கை வளம் கொழிக்கும் ஒரு தேசம், வெறும் மதம், மொழி என்ற ஒரு கோட்பாட்டுக்குள் தன்னை அடக்கிக் கொண்டு, மனித வளத்தையும்.....இயற்கை வளத்தையும் வீணே அழித்துக் கொண்டிருக்கின்றது! ஒரு காலத்தில்...சிங்கப்பூர் இலங்கையை அண்ணார்ந்து பார்த்த காலமொன்றிருந்தது! இன்று மிகவும் வேகமாக இந்தியா போன்ற ஒரு நிலைக்கு இலங்கை என்னும் தேசம் சென்று கொண்டிருக்கின்றது! இலவசக் கல்வி, இலவச மருத்துவம் என்று எல்லாமே நன்றாகத் தானிருந்தது!

பௌத்தம் இலங்கையைத் தின்று விட்டது! பௌத்தமதத்தை உலகுக்கு அளித்தவன்...காசியில்..இரந்து சாப்பிட்ட விஷ உணவால் இறந்து போனான்! எனினும் இலங்கையில் பௌத்த மதத்தை வளர்ப்பதாகக் கூறுபவர்களைப் பார்த்தால்...பிச்சை எடுப்பவர்களாகத் தெரியவில்லை!

கொழுப்பேறிய உடம்புகளுடன் தான் திரிகின்றார்கள்! பௌத்தம் வளருதோ இல்லையோ, நிச்சயமாக அவர்களும்...அவர்களுக்குத் தினவேத்தும் அரசியல் வாதிகளும் மட்டும் வளர்ந்து வருகின்றார்கள்..!கொழுத்துப் போன உடல்களில் உண்மையான பௌத்தம் ஒரு நாளும் வளரப் போவதில்லை! நல்ல சிந்தனைகளும் வளரப் போவதில்லை! இது தான் வரலாறு கற்பிக்கும் பாடம்!

ஒரு விபச்சாரியின் நிலையில்.. சிங்கள தேசம் இப்போது இருக்கின்றது! எவர் அதிக விலை கொடுக்கின்றார்களோ...அவர்கள் சிங்களத்தை வாங்க முடியும்! 

ஒய்யாரக் கொண்டையாம்... தாழம் பூவாம்...உள்ளே இருப்பது, ஈரும் பேனும்...!  இது தான் இலங்கையின் உண்மையான நிலை..!

 

  • Like 4
  • Thanks 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பெரும்பான்மையின மக்களை திருப்திப்படுத்துவதற்காக சிறுபான்மையின மக்களை அழித்துக் கொண்டே தங்களை வளர்த்துக் கொள்கிறார்கள்..ஆதங்கத்தைத் தரும் விசயமுள்ள கிறுக்கல் புத்ஸ் ........!   😎

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

புத்தா சிங்கள ஆட்சியாளர்களை வர்ணித்தது நன்றாக இருக்கிறது.

தமிழ்கட்சிகளையும் கொஞ்சம் வர்ணித்திருக்கலாமே?

நல்ல காலம் புத்தன் என்ற பெயரில் எழுதினது.சொந்தப் பெயரில் எழுதியிருந்தால் சகல பத்திரிகைகாரர்களும்  ஐயா ஒவ்வொரு கிழமையும் எங்கள் பத்திரிகைக்கு நீங்க தான் கட்டுரை எழுத வேண்டும் என்று வரிசையில் நின்று அடம்பிடித்திருப்பார்கள்.

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சிங்களத்தின் நாட்டு பற்றிற்கும் தமிழரின் நாட்டு பற்றிற்கும் அல்லது அவர்கள் கனவு காணும் தேசத்துக்குமான கோடுகள் வேறு வேறானவை

அவை எப்போதும் ஒட்டாதவை 

நன்றி புத்தர் கிறுக்கல்கள் தொடரட்டும்

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நன்றி புத்தன் அரசியல் ஆய்விற்கு.👌

On 7/4/2021 at 15:31, புங்கையூரன் said:

 

ஒரு விபச்சாரியின் நிலையில்.. சிங்கள தேசம் இப்போது இருக்கின்றது! எவர் அதிக விலை கொடுக்கின்றார்களோ...அவர்கள் சிங்களத்தை வாங்க முடியும்! 

ஒய்யாரக் கொண்டையாம்... தாழம் பூவாம்...உள்ளே இருப்பது, ஈரும் பேனும்...!  இது தான் இலங்கையின் உண்மையான நிலை..!

 

அவர்களின் அரசியல் நகர்வு மலையாளிகளுடன் ஒத்து போகின்றது

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 7/4/2021 at 07:50, putthan said:

மீண்டும் சிறிலங்கா யாப்பு மாற்றப்படுவதன் மூலம் அதன் பெயர் சிங்கலெ ஆக மாறும் .சீனா சகல அபிவிருத்தியையும் செய்யும்  நாட்டின் பெரும் பகுதி சீனாவுக்கு சொந்தமாகும்.....சிங்கள மக்கள் சிங்கலெ என்ற பெயர் கிடைத்தது மற்றும் தமிழர்கள்,இஸ்லாமியர்கள் நாட்டின் சொத்தை அபகரிக்கவில்லை என பெரும் மூச்சு விடுவார்கள் ஆனால் ட்ரகன் விழுங்கிய சிங்கத்தை மறந்துவிடுவார்கள்

சிங்கலெ என்று பெயர் மாறுகின்றதோ இல்லையோ, சிங்களவர்கள் முழுத்தீவையும் சிங்கள மயமாக்கும் திட்டத்தை வேகமாக முன்நகர்த்துவார்கள். சிங்கள மக்கள் காலைச்சாப்பாடாக பாணையும், சம்பலையும் உண்ண வழியில்லாத போதும், அவர்களை எஞ்சி இருக்கும் தமிழர்களையும், முஸ்லிம்களையும் காட்டி பயம்காட்டி தங்கள் அதிகாரத்தை நிலை நிறுத்திக்கொள்வார்கள் ராஜபக்‌ஷக்கள். 

சிங்களவர்களின் பொருளாதாரம் மிகவும் மோசமாக மாற சீனாவும், மேற்கும், மேற்கின் கூட்டான இந்தியாவும் விடாது. மாறி மாறி உதவி வழங்கி தங்கள் பக்கம் இழுக்கப் பார்ப்பார்கள்.

தமிழர்கள், முஸ்லிம்கள் தமது நிலப்பரப்பு சுருங்கினாலும் பார்வையாளர்களாக இருப்பார்கள்.. 

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 7/4/2021 at 09:31, புங்கையூரன் said:

பௌத்தம் இலங்கையைத் தின்று விட்டது! பௌத்தமதத்தை உலகுக்கு அளித்தவன்...காசியில்..இரந்து சாப்பிட்ட விஷ உணவால் இறந்து போனான்! எனினும் இலங்கையில் பௌத்த மதத்தை வளர்ப்பதாகக் கூறுபவர்களைப் பார்த்தால்...பிச்சை எடுப்பவர்களாகத் தெரியவில்லை!

புங்கையூரான்...  புத்தர், விஷம் வைத்து கொல்லப் பட்டாரா?
அல்லது... அவர் இரந்து சாப்பிட்ட உணவில், விஷம் தற்செயலாக இருந்ததா?
இதனைப் பற்றி... முன்பு நான் அறியவில்லை. 
கொஞ்சம் விரிவாக சொல்லுங்களேன்.  

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, தமிழ் சிறி said:

புங்கையூரான்...  புத்தர், விஷம் வைத்து கொல்லப் பட்டாரா?
அல்லது... அவர் இரந்து சாப்பிட்ட உணவில், விஷம் தற்செயலாக இருந்ததா?

ஆஆஆ
என்னது புத்தன் போட்டாரா?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 7/4/2021 at 23:29, suvy said:

பெரும்பான்மையின மக்களை திருப்திப்படுத்துவதற்காக சிறுபான்மையின மக்களை அழித்துக் கொண்டே தங்களை வளர்த்துக் கொள்கிறார்கள்..ஆதங்கத்தைத் தரும் விசயமுள்ள கிறுக்கல் புத்ஸ் ........!   😎

நன்றி சுவி ....வருகைக்கும் கருத்து பகிர்வுக்கும் ...

On 7/4/2021 at 17:31, புங்கையூரன் said:

இலங்கை செய்யும் அரசியலில் எந்தவிதமான தூர நோக்குகள் எதுவுமில்லை....! 

ஒரு அழகிய இயற்கை வளம் கொழிக்கும் ஒரு தேசம், வெறும் மதம், மொழி என்ற ஒரு கோட்பாட்டுக்குள் தன்னை அடக்கிக் கொண்டு, மனித வளத்தையும்.....இயற்கை வளத்தையும் வீணே அழித்துக் கொண்டிருக்கின்றது! ஒரு காலத்தில்...சிங்கப்பூர் இலங்கையை அண்ணார்ந்து பார்த்த காலமொன்றிருந்தது! இன்று மிகவும் வேகமாக இந்தியா போன்ற ஒரு நிலைக்கு இலங்கை என்னும் தேசம் சென்று கொண்டிருக்கின்றது! இலவசக் கல்வி, இலவச மருத்துவம் என்று எல்லாமே நன்றாகத் தானிருந்தது!

பௌத்தம் இலங்கையைத் தின்று விட்டது! பௌத்தமதத்தை உலகுக்கு அளித்தவன்...காசியில்..இரந்து சாப்பிட்ட விஷ உணவால் இறந்து போனான்! எனினும் இலங்கையில் பௌத்த மதத்தை வளர்ப்பதாகக் கூறுபவர்களைப் பார்த்தால்...பிச்சை எடுப்பவர்களாகத் தெரியவில்லை!

கொழுப்பேறிய உடம்புகளுடன் தான் திரிகின்றார்கள்! பௌத்தம் வளருதோ இல்லையோ, நிச்சயமாக அவர்களும்...அவர்களுக்குத் தினவேத்தும் அரசியல் வாதிகளும் மட்டும் வளர்ந்து வருகின்றார்கள்..!கொழுத்துப் போன உடல்களில் உண்மையான பௌத்தம் ஒரு நாளும் வளரப் போவதில்லை! நல்ல சிந்தனைகளும் வளரப் போவதில்லை! இது தான் வரலாறு கற்பிக்கும் பாடம்!

ஒரு விபச்சாரியின் நிலையில்.. சிங்கள தேசம் இப்போது இருக்கின்றது! எவர் அதிக விலை கொடுக்கின்றார்களோ...அவர்கள் சிங்களத்தை வாங்க முடியும்! 

ஒய்யாரக் கொண்டையாம்... தாழம் பூவாம்...உள்ளே இருப்பது, ஈரும் பேனும்...!  இது தான் இலங்கையின் உண்மையான நிலை..!

 

 

On 7/4/2021 at 17:31, புங்கையூரன் said:

இலங்கை செய்யும் அரசியலில் எந்தவிதமான தூர நோக்குகள் எதுவுமில்லை....! 

ஒரு அழகிய இயற்கை வளம் கொழிக்கும் ஒரு தேசம், வெறும் மதம், மொழி என்ற ஒரு கோட்பாட்டுக்குள் தன்னை அடக்கிக் கொண்டு, மனித வளத்தையும்.....இயற்கை வளத்தையும் வீணே அழித்துக் கொண்டிருக்கின்றது! ஒரு காலத்தில்...சிங்கப்பூர் இலங்கையை அண்ணார்ந்து பார்த்த காலமொன்றிருந்தது! இன்று மிகவும் வேகமாக இந்தியா போன்ற ஒரு நிலைக்கு இலங்கை என்னும் தேசம் சென்று கொண்டிருக்கின்றது! இலவசக் கல்வி, இலவச மருத்துவம் என்று எல்லாமே நன்றாகத் தானிருந்தது!

பௌத்தம் இலங்கையைத் தின்று விட்டது! பௌத்தமதத்தை உலகுக்கு அளித்தவன்...காசியில்..இரந்து சாப்பிட்ட விஷ உணவால் இறந்து போனான்! எனினும் இலங்கையில் பௌத்த மதத்தை வளர்ப்பதாகக் கூறுபவர்களைப் பார்த்தால்...பிச்சை எடுப்பவர்களாகத் தெரியவில்லை!

கொழுப்பேறிய உடம்புகளுடன் தான் திரிகின்றார்கள்! பௌத்தம் வளருதோ இல்லையோ, நிச்சயமாக அவர்களும்...அவர்களுக்குத் தினவேத்தும் அரசியல் வாதிகளும் மட்டும் வளர்ந்து வருகின்றார்கள்..!கொழுத்துப் போன உடல்களில் உண்மையான பௌத்தம் ஒரு நாளும் வளரப் போவதில்லை! நல்ல சிந்தனைகளும் வளரப் போவதில்லை! இது தான் வரலாறு கற்பிக்கும் பாடம்!

ஒரு விபச்சாரியின் நிலையில்.. சிங்கள தேசம் இப்போது இருக்கின்றது! எவர் அதிக விலை கொடுக்கின்றார்களோ...அவர்கள் சிங்களத்தை வாங்க முடியும்! 

ஒய்யாரக் கொண்டையாம்... தாழம் பூவாம்...உள்ளே இருப்பது, ஈரும் பேனும்...!  இது தான் இலங்கையின் உண்மையான நிலை..!

 

நன்றி அண்ணா நீண்ட அரசியல் கருத்துக்கு ...தங்களது மதங்களை தேவைக்கு ஏற்ற வகையில் மாற்றும் சிங்கள அரசியல் வாதிகள்...மல்கம் ரஞ்சித்தும் காவி கட்டி பெளத்தனாக மாறி அரசியல் செய்தாலும் செய்வார்..

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 7/4/2021 at 23:43, ஈழப்பிரியன் said:

புத்தா சிங்கள ஆட்சியாளர்களை வர்ணித்தது நன்றாக இருக்கிறது.

தமிழ்கட்சிகளையும் கொஞ்சம் வர்ணித்திருக்கலாமே?

நல்ல காலம் புத்தன் என்ற பெயரில் எழுதினது.சொந்தப் பெயரில் எழுதியிருந்தால் சகல பத்திரிகைகாரர்களும்  ஐயா ஒவ்வொரு கிழமையும் எங்கள் பத்திரிகைக்கு நீங்க தான் கட்டுரை எழுத வேண்டும் என்று வரிசையில் நின்று அடம்பிடித்திருப்பார்கள்.

உண்மையிலயே உந்த தமிழ்கட்சிகள் என்னத்தை செய்ய முடியும்...அவர்களால் தந்தியடிப்பது,கடிதம் போடுவது ,அறிக்கைவிடுவது,பாராளுமன்றத்தில் அலறுவது...இதை தவிர என்னதான் செய்ய முடியும் ...பாவப்பட்ட ஜென்மஙகள் ...

பை த வே.... பி பி சி ,சி என் என்,அல் ஜசிரா போன்ற பிரபல  நிறுவனங்கள் ஆய்வு செய்ய அழைத்தார்கள் ...பாதுகாப்பு காரணங்களுக்காக நான் செல்ல வில்லை 😀

8 hours ago, விசுகு said:

சிங்களத்தின் நாட்டு பற்றிற்கும் தமிழரின் நாட்டு பற்றிற்கும் அல்லது அவர்கள் கனவு காணும் தேசத்துக்குமான கோடுகள் வேறு வேறானவை

அவை எப்போதும் ஒட்டாதவை 

நன்றி புத்தர் கிறுக்கல்கள் தொடரட்டும்

நன்றி விசு...எமது கனவு சிறியது அதை நிறைவேற்ற அவர்கள் விடமாட்டார்கள்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
8 hours ago, உடையார் said:

நன்றி புத்தன் அரசியல் ஆய்விற்கு.👌

அவர்களின் அரசியல் நகர்வு மலையாளிகளுடன் ஒத்து போகின்றது

நன்றி உடையார் வருகைக்கும் கருத்து பகிர்வுக்கும்...போர்த்துகீசர் காலத்திலிருந்து அவர்கள் அப்படித்தான்(விபச்சாரிகள்) ...
சோலம‌ன் ,ரிச்சேர்ட் களின் வாரிசுகள் எல்லாம் புத்தரின் கொள்கை பரப்பிறன் என்று நாட்டை குட்டிசுவராக மாற்றிந்து தான் மிச்சம்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
8 hours ago, கிருபன் said:

சிங்கலெ என்று பெயர் மாறுகின்றதோ இல்லையோ, சிங்களவர்கள் முழுத்தீவையும் சிங்கள மயமாக்கும் திட்டத்தை வேகமாக முன்நகர்த்துவார்கள். சிங்கள மக்கள் காலைச்சாப்பாடாக பாணையும், சம்பலையும் உண்ண வழியில்லாத போதும், அவர்களை எஞ்சி இருக்கும் தமிழர்களையும், முஸ்லிம்களையும் காட்டி பயம்காட்டி தங்கள் அதிகாரத்தை நிலை நிறுத்திக்கொள்வார்கள் ராஜபக்‌ஷக்கள். 

சிங்களவர்களின் பொருளாதாரம் மிகவும் மோசமாக மாற சீனாவும், மேற்கும், மேற்கின் கூட்டான இந்தியாவும் விடாது. மாறி மாறி உதவி வழங்கி தங்கள் பக்கம் இழுக்கப் பார்ப்பார்கள்.

தமிழர்கள், முஸ்லிம்கள் தமது நிலப்பரப்பு சுருங்கினாலும் பார்வையாளர்களாக இருப்பார்கள்.. 

நன்றி கிருபன் நீங்கள் கூறுவது உண்மை....தமிழர்களின் நிலங்கள் சுருங்குவதை தடுக்க சில போராட்டங்களை செய்கிறார்கள் ஆனால் அவர்களால் வெற்றியடைய முடியாது...

சிங்களவரின் பயணம் தொடரும் , இயற்கையும் தன‌து பயணத்தை தொடரும்....
 

1 hour ago, ஈழப்பிரியன் said:

ஆஆஆ
என்னது புத்தன் போட்டாரா?

😀உதுக்குதான் டபிள் அக்டிங் கூடாது என்று சொல்லுறவையள் 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 7/4/2021 at 08:50, putthan said:

வலதுசாரி பின்னனி கொண்ட கூட்டு ஐ.நா சபையில் மனித உரிமை மீறல் என்ற குற்றசாட்டை போட்டு சிறிலங்காவை சீனா பக்கம் சாயாமல் தடுக்க முயற்சி செய்து பார்கின்றது ஆனால் வலது சாரிகளின் நன்கொடையை விட சீனாவின் நன்கொடை பல மடங்கு அதிகம் அதனால் அரசியல்வாதிகளின் பணப்பையும் பெரிதாகும்...

புத்தனின் அலசல் உண்மையிலேயே ஒரு பாமர மனிதனுக்கும் விளங்கும் நடையில் இருப்பதே இங்கு சிறப்பானது
இறுதியில் சீவினாவிடம் எல்லாவற்றையும் இழக்கும் இலங்கையை காப்பாற்றப்போவது........
நாம் தமிழர் தான்

  • Like 1
  • Thanks 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
33 minutes ago, வாத்தியார் said:


இறுதியில் சீவினாவிடம் எல்லாவற்றையும் இழக்கும் இலங்கையை காப்பாற்றப்போவது........
நாம் தமிழர் தான்

அது என்ன மாயமோ தெரியவில்லை

எமது நிலம் சுருங்கும்

சிங்களம் எமது மண்ணை முழுமையாக ஆக்கிரமிக்கும்

என்பதை இயற்கையின் படைப்பாக அங்கீகரித்து விலகி செல்கிறார்கள்

நாம் தமிழர் என்றால் அது இனவாதம் பேசாதீர்கள் என்கிறார்கள்

உருப்பட வழி இல்லை இவ்வினம்??

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 9/4/2021 at 04:16, தமிழ் சிறி said:

புங்கையூரான்...  புத்தர், விஷம் வைத்து கொல்லப் பட்டாரா?
அல்லது... அவர் இரந்து சாப்பிட்ட உணவில், விஷம் தற்செயலாக இருந்ததா?
இதனைப் பற்றி... முன்பு நான் அறியவில்லை. 
கொஞ்சம் விரிவாக சொல்லுங்களேன்.  

வணக்கம், தானா சீனா!

புத்தரினது மரணமானது 'குஷினகர்" என்னும் இடத்தில் நிகழ்ந்தது! மரணிக்கும் போது அவரது வயது எண்பது எனக் கூறப்படுகின்றது!

மகாயானம், தேரவாதம் ஆகிய பிரிவுகளின் கருத்துப் படி, இரு விதமான கருத்துக்கள் பகிரப்படுகின்றன!

மகாயானத்தினரின் கருத்துப் படி, புத்தர் நஞ்சாகிய காளானை உண்டதால் மரணித்தார் என்று கூறப்படுகின்றது!

தேர வாதத்தினரின் கருத்துப்படி...புத்தர் நஞ்சாகிப் போன பன்றி இறைச்சியை உண்டதால் மரணித்தார் என்று கூறுகின்றார்கள்!

அதே போல தேர வாதத்தினரின் கருத்துப் படி...புத்தர் விசாகப் பௌர்ணமியில் மரணித்தார் என்று கூறுகின்றார்கள்..!

எனினும் புத்தர் புரட்டாதி, ஐப்பசி போன்ற மாரி காலத்திலேயே இறந்ததாகக் கூறப்படுகின்றது!

எவ்வாறு இருப்பினும் மரணத் தெய்வமான 'மாரா' புத்தருக்கு இன்விற்றேசன் அனுப்பியதாகவும், புத்தர் அதனை ஏற்றுக்கொள்ளவில்லை என்றும் கூறப்படுகின்றது! இதிலிருந்து புத்தர் அந்தக் கால கட்டத்தில், மரணத்தை எதிர் பார்த்திருக்கவில்லை என்று அறியப் படுகின்றது!

புத்தருக்கு நிறைய எதிரிகள் இருந்தார்கள்..! முக்கியமாகப் புத்தரது கருத்துக்கள் வருணாச்சிர தர்மத்தை தூக்கிப் பிடிப்பவர்களுக்கு எதிராகவேயிருந்தன என்பது குறிப்பிடத் தக்கது! உயிருள்ள மிருகங்களை வேள்வித் தீயில் போட்டு..அந்த ஊணவை, வேதாந்திகள் உண்டார்கள். அப்போது கொல்லாமையைப் போதித்த புத்தர் அவர்களிடம்...எதற்காக மிருகங்களைப் பலியிடுகிறீர்கள் எனக் கேட்டார்! அப்போது வேதாந்திகள், நாங்கள் அவற்றைக் கொல்லவில்லை...அவற்றை மோட்சத்துக்கு அனுப்பிகின்றோம் என்று பதில் கூறினார்கள்!

அவர்களை நோக்கிய புத்தர் அப்ப்டியானால், நீங்கள் எதற்காகப் பூசை புனஸ்காரம் என்று மினக்கடுகிறீர்கள்? மிருகங்களைப் போலவே, நீங்களும் வேள்வித் தீயில் விழலாமே என்று கூறவும்....மிருகங்கள் மட்டும் தான் அவ்வாறு செய்ய முடியும் என்று வேதாந்திகள் வாதிட்டார்கள்!

இறுதியில் புத்த மதம் இந்தியாவில் வேரூன்றாதவாறு பார்த்துக் கொண்டார்கள்! இருப்பினும், புத்தரின் சில திரிபிடகங்கள் இலங்கைக்குக் களவாகக் கொண்டு வரப்பட்டு, அவை தப்பிப்பிழைத்தன! இலங்கையிலிருந்து தான் சீன யாத்திரிகர் மூலம் புத்தம், ஆசியாவின் மற்றைய பகுதிகளுக்குப் பரவியது! அதனால் தான் புத்த மதம் தப்பிப் பிழைத்ததில்..இலங்கைக்கு மிகவும் முக்கியமான பங்கு உள்ளதாகக் கூறுகின்றார்கள்!

  • Like 2
  • Thanks 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
10 minutes ago, புங்கையூரன் said:

வணக்கம், தானா சீனா!

புத்தரினது மரணமானது 'குஷினகர்" என்னும் இடத்தில் நிகழ்ந்தது! மரணிக்கும் போது அவரது வயது எண்பது எனக் கூறப்படுகின்றது!

மகாயானம், தேரவாதம் ஆகிய பிரிவுகளின் கருத்துப் படி, இரு விதமான கருத்துக்கள் பகிரப்படுகின்றன!

மகாயானத்தினரின் கருத்துப் படி, புத்தர் நஞ்சாகிய காளானை உண்டதால் மரணித்தார் என்று கூறப்படுகின்றது!

தேர வாதத்தினரின் கருத்துப்படி...புத்தர் நஞ்சாகிப் போன பன்றி இறைச்சியை உண்டதால் மரணித்தார் என்று கூறுகின்றார்கள்!

அதே போல தேர வாதத்தினரின் கருத்துப் படி...புத்தர் விசாகப் பௌர்ணமியில் மரணித்தார் என்று கூறுகின்றார்கள்..!

எனினும் புத்தர் புரட்டாதி, ஐப்பசி போன்ற மாரி காலத்திலேயே இறந்ததாகக் கூறப்படுகின்றது!

எவ்வாறு இருப்பினும் மரணத் தெய்வமான 'மாரா' புத்தருக்கு இன்விற்றேசன் அனுப்பியதாகவும், புத்தர் அதனை ஏற்றுக்கொள்ளவில்லை என்றும் கூறப்படுகின்றது! இதிலிருந்து புத்தர் அந்தக் கால கட்டத்தில், மரணத்தை எதிர் பார்த்திருக்கவில்லை என்று அறியப் படுகின்றது!

புத்தருக்கு நிறைய எதிரிகள் இருந்தார்கள்..! முக்கியமாகப் புத்தரது கருத்துக்கள் வருணாச்சிர தர்மத்தை தூக்கிப் பிடிப்பவர்களுக்கு எதிராகவேயிருந்தன என்பது குறிப்பிடத் தக்கது! உயிருள்ள மிருகங்களை வேள்வித் தீயில் போட்டு..அந்த ஊணவை, வேதாந்திகள் உண்டார்கள். அப்போது கொல்லாமையைப் போதித்த புத்தர் அவர்களிடம்...எதற்காக மிருகங்களைப் பலியிடுகிறீர்கள் எனக் கேட்டார்! அப்போது வேதாந்திகள், நாங்கள் அவற்றைக் கொல்லவில்லை...அவற்றை மோட்சத்துக்கு அனுப்பிகின்றோம் என்று பதில் கூறினார்கள்!

அவர்களை நோக்கிய புத்தர் அப்ப்டியானால், நீங்கள் எதற்காகப் பூசை புனஸ்காரம் என்று மினக்கடுகிறீர்கள்? மிருகங்களைப் போலவே, நீங்களும் வேள்வித் தீயில் விழலாமே என்று கூறவும்....மிருகங்கள் மட்டும் தான் அவ்வாறு செய்ய முடியும் என்று வேதாந்திகள் வாதிட்டார்கள்!

இறுதியில் புத்த மதம் இந்தியாவில் வேரூன்றாதவாறு பார்த்துக் கொண்டார்கள்! இருப்பினும், புத்தரின் சில திரிபிடகங்கள் இலங்கைக்குக் களவாகக் கொண்டு வரப்பட்டு, அவை தப்பிப்பிழைத்தன! இலங்கையிலிருந்து தான் சீன யாத்திரிகர் மூலம் புத்தம், ஆசியாவின் மற்றைய பகுதிகளுக்குப் பரவியது! அதனால் தான் புத்த மதம் தப்பிப் பிழைத்ததில்..இலங்கைக்கு மிகவும் முக்கியமான பங்கு உள்ளதாகக் கூறுகின்றார்கள்!

புங்கையூரான்... அறியாத பல விடயங்களை, தொகுத்து தந்தமைக்கு நன்றி. 🙏

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 7/4/2021 at 09:31, புங்கையூரன் said:

பௌத்தம் இலங்கையைத் தின்று விட்டது! பௌத்தமதத்தை உலகுக்கு அளித்தவன்...காசியில்..இரந்து சாப்பிட்ட விஷ உணவால் இறந்து போனான்! எனினும் இலங்கையில் பௌத்த மதத்தை வளர்ப்பதாகக் கூறுபவர்களைப் பார்த்தால்...பிச்சை எடுப்பவர்களாகத் தெரியவில்லை!

புத்தரின் மரணத்தைச் சூழ இவ்வளவு சிக்கல் இருக்கிறதா? நிச்சயமாக அது  ஓவர் டோஸ் கேசாக தான் இருக்கும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, புங்கையூரன் said:

வணக்கம், தானா சீனா!

புத்தரினது மரணமானது 'குஷினகர்" என்னும் இடத்தில் நிகழ்ந்தது! மரணிக்கும் போது அவரது வயது எண்பது எனக் கூறப்படுகின்றது!

மகாயானம், தேரவாதம் ஆகிய பிரிவுகளின் கருத்துப் படி, இரு விதமான கருத்துக்கள் பகிரப்படுகின்றன!

மகாயானத்தினரின் கருத்துப் படி, புத்தர் நஞ்சாகிய காளானை உண்டதால் மரணித்தார் என்று கூறப்படுகின்றது!

தேர வாதத்தினரின் கருத்துப்படி...புத்தர் நஞ்சாகிப் போன பன்றி இறைச்சியை உண்டதால் மரணித்தார் என்று கூறுகின்றார்கள்!

அதே போல தேர வாதத்தினரின் கருத்துப் படி...புத்தர் விசாகப் பௌர்ணமியில் மரணித்தார் என்று கூறுகின்றார்கள்..!

எனினும் புத்தர் புரட்டாதி, ஐப்பசி போன்ற மாரி காலத்திலேயே இறந்ததாகக் கூறப்படுகின்றது!

எவ்வாறு இருப்பினும் மரணத் தெய்வமான 'மாரா' புத்தருக்கு இன்விற்றேசன் அனுப்பியதாகவும், புத்தர் அதனை ஏற்றுக்கொள்ளவில்லை என்றும் கூறப்படுகின்றது! இதிலிருந்து புத்தர் அந்தக் கால கட்டத்தில், மரணத்தை எதிர் பார்த்திருக்கவில்லை என்று அறியப் படுகின்றது!

புத்தருக்கு நிறைய எதிரிகள் இருந்தார்கள்..! முக்கியமாகப் புத்தரது கருத்துக்கள் வருணாச்சிர தர்மத்தை தூக்கிப் பிடிப்பவர்களுக்கு எதிராகவேயிருந்தன என்பது குறிப்பிடத் தக்கது! உயிருள்ள மிருகங்களை வேள்வித் தீயில் போட்டு..அந்த ஊணவை, வேதாந்திகள் உண்டார்கள். அப்போது கொல்லாமையைப் போதித்த புத்தர் அவர்களிடம்...எதற்காக மிருகங்களைப் பலியிடுகிறீர்கள் எனக் கேட்டார்! அப்போது வேதாந்திகள், நாங்கள் அவற்றைக் கொல்லவில்லை...அவற்றை மோட்சத்துக்கு அனுப்பிகின்றோம் என்று பதில் கூறினார்கள்!

அவர்களை நோக்கிய புத்தர் அப்ப்டியானால், நீங்கள் எதற்காகப் பூசை புனஸ்காரம் என்று மினக்கடுகிறீர்கள்? மிருகங்களைப் போலவே, நீங்களும் வேள்வித் தீயில் விழலாமே என்று கூறவும்....மிருகங்கள் மட்டும் தான் அவ்வாறு செய்ய முடியும் என்று வேதாந்திகள் வாதிட்டார்கள்!

இறுதியில் புத்த மதம் இந்தியாவில் வேரூன்றாதவாறு பார்த்துக் கொண்டார்கள்! இருப்பினும், புத்தரின் சில திரிபிடகங்கள் இலங்கைக்குக் களவாகக் கொண்டு வரப்பட்டு, அவை தப்பிப்பிழைத்தன! இலங்கையிலிருந்து தான் சீன யாத்திரிகர் மூலம் புத்தம், ஆசியாவின் மற்றைய பகுதிகளுக்குப் பரவியது! அதனால் தான் புத்த மதம் தப்பிப் பிழைத்ததில்..இலங்கைக்கு மிகவும் முக்கியமான பங்கு உள்ளதாகக் கூறுகின்றார்கள்!

அசோகன் காலத்தில் தமிழ்நாட்டில் பௌத்தம் வளர்ச்சி பெற்றதை குறிப்பிடவில்லை. சைவ மறுமலர்ச்சியின் போது தமிழ் பௌத்தம் வழக்கொழிந்ததாக வாசித்த நினைவு.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, ஏராளன் said:

அசோகன் காலத்தில் தமிழ்நாட்டில் பௌத்தம் வளர்ச்சி பெற்றதை குறிப்பிடவில்லை. சைவ மறுமலர்ச்சியின் போது தமிழ் பௌத்தம் வழக்கொழிந்ததாக வாசித்த நினைவு.

ஏராளன்,அசோகனின் மவுரிய பேரரசு வட இந்தியாவில் இருந்தது

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, வாதவூரான் said:

ஏராளன்,அசோகனின் மவுரிய பேரரசு வட இந்தியாவில் இருந்தது

அசோகன் காலத்தில தான் பௌத்தம் பெரு வளர்ச்சி பெற்றதாக வாசித்துள்ளேன். இலங்கை தமிழ்நாடு.

Link to comment
Share on other sites



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.