Jump to content

ROHYPNOL – Date Drug: உண்மையும் பொய்யும் !!


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

ROHYPNOL – Date Drug: உண்மையும் பொய்யும் !!
===============================

” Rohypnol என்ற மாத்திரை காமத்தை தூண்டும் பேரினவாதத்தின் புதிய ஆயுதம்…! - கண்டிப்பாக பகிரவும்..!” என்ற தலைப்போடு சிலவருடங்களுக்கு முன்னர் சுற்றி விடப்பட்ட ஒரு பதிவு மீண்டும் ஒரு சுற்றுக்குத் தயாராகிறது.

இதன் சாராம்சம் “வடகிழக்கின் போதை வியாபார முகவர்களிடம் வழங்கப்பட்டுள்ள Rohypnol என்ற மாத்திரையின் பின்னால் இளம் சமூகத்தை சீரழிப்பதுடன் தமிழ் சமூகத்தில் குழந்தை பிறக்கும் விகிதத்தை கட்டுப்படுத்த வேண்டும் என்பதே பிரதான நோக்கமாக உள்ளது. இம்மருந்து அளிக்கப்பட்ட பெண் தன் வாழ்க்கையில் தாய்மை அடையவே முடியாது” என்பதுதான்.

தற்போது, இலங்கையில் தமிழ் மக்களின் இனப்பெருக்க வீதம் குறைவடைந்து செல்லும் சந்தர்ப்பத்தில் அது தொடர்பாகப் பலரும் கரிசனம் காட்டும் சூழ்நிலையில் இந்த பதிவு மீண்டும் ஒரு பெரிய சுற்று வந்தாலும் வரக்கூடும்.

உண்மையில் இந்த மாத்திரையைப் பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்தப்படுவது நல்லதே. ஆனால் நாம் குறிப்பிட்ட செய்திக் குறிப்பில் சில உண்மையான விபரங்களுடன் பல கற்பனைகளும் இதில் சேர்க்கப்பட்டுள்ளதால் இந்த விடயத்தைப் பற்றி கதைக்கலாம் என்று நினைத்தோம். 

Flunitrazepam என்ற பொதுப்பெயர் கொண்ட Rohypnol என்ற மருந்து மருத்துவத் துறையில் தூக்கமின்மைக்கு தற்காலிக மருந்தாகவும் சத்திர சிகிச்சையின்போது மயக்கநிலையை ஏற்படுத்தவும் பயன்பட்டது. 

ஆனாலும் தொண்ணூறுகளின் பின்னர் சட்டவிரோதமாக கொக்கெயின் போன்ற போதை மருந்தினால் ஏற்படக்கூடிய மனவழுத்தத்தை குறைக்கப் பயன்படுத்தத் தொடங்கினர். அதேபோல பெண்களை பாலியல் துஸ்பிரயோகம் செய்யவும் இந்த மருந்தை பயன்படுத்தத் தொடங்கினர். இதனாலேயே இது date-rape drug என்று அழைக்கப்படத் தொடங்கியது. பொதுவாக பார்ட்டி நடைபெறும்போது பெண்களை இலக்கு வைத்து இது குடி பானத்தில் கலக்கப்படுவதால் “Club drug” என்றும் இதைச் சொல்வார்கள்.

முதல் கூற்று  - “இந்த மருந்து சுவை, மணம் நிறம் அற்றது, மிக விரைவாக கரைந்துவிடும்  என்பதால் குடிபானத்தில் கலந்திருந்தாலும் இலகுவில் கண்டுபிடிக்கவே முடியாது”. 
இதில் உண்மையுள்ளது. ஆனால்  1997 இன் பின்னர் இந்த மருந்து வில்லை மெதுவாகவே நீரில் கரையும்படி மாற்றியமைக்கப்பட்டது. அதுபோலவே நிறமற்ற திரவத்தில் கலந்தால் நீலநிறமாகவும் மாறிவிடும்படி மாற்றம் செய்யப்பட்டது. கடும் நிறம் கொண்ட பானத்தில் கலந்தால் அதனை மேலும் இருண்ட நிறமாக்கிவிடும். (ஆனால் Rohypnol அல்லாத பொது மருந்து வில்லையாயின் நிறம் மாறாது)
  
இந்த மருந்தை உட்கொண்டவர்கள் சுமார் 30 நிமிடங்களின் பின்னர் அரை மயக்கநிலைக்குப் போய்விடுவார்கள். அவர்கள் உடல்மீது நடாத்தப்படும் எந்த ஒரு தாக்குதலுக்கும் அவர்களால் எதிர்வினை ஆற்ற முடியாது. இந்த நிலை இரண்டிலிருந்து 12 மணிநேரங்கள் கூட நீடிக்கலாம். இந்தக் காலப்பகுதியில் நடைபெறும் விடயங்கள் அவர்களுக்கு நினைவிருக்காது. 

ஆனால் நாம் குறிப்பிட்ட பதிவில் சொன்னதுபோல “இம்மருந்தை ஒரு பெண்ணுக்கு கொடுத்தால் சிறிது நேரத்தில் போதை ஏறி சொல்வதையெல்லாம் கேட்கும் நிலைக்கு வந்து விடுவார், இந்த மருந்து பெண்ணின் காம உணர்வைத் தூண்டும்” என்பதில் உண்மையில்லை. இது தமிழ் சினிமாவில் பார்த்த காட்சிகளின் பாதிப்பால் வந்த கற்பனையே. 

இம்மருந்தை தொடர்ந்து பாவித்து வந்தால் மருந்துக்கு அடிமை ஆகிவிடுவார்கள் என்பதும் அதனால் வேறு பக்கவிளைவுகள் ஏற்படும் என்பதும் உண்மைதான். 

அடுத்த கூற்று “பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தப்பட்டாலும் விந்தணு சோதனையில் எதுவும் கண்டு பிடிக்க முடியாது”. இதுவும் உண்மையில்லை. உடனடியாகவே வைத்திய சாலைக்குச் சென்று மாதிரிகளைக் கொடுத்து பரிசோதிப்பதன் மூலம் குற்றவாளிகளைக் கண்டுபிடிக்க முடியும். 

அதோடு குறித்த பெண்ணை இந்த மருந்து நிரந்தர மலடாக்கிவிடும் என்பதும் இவர்களின் எச்சரிக்கையாக இருக்கிறது. இதைத்தான் தமிழர்களுக்கு எதிரான சதியென்று வதந்தி பரப்புவோர் சொல்கிறார்கள்.

இது போன்ற வதந்திகள் உண்மையில் 2000 ஆண்டிலிருந்தே பரப்பப்படுகின்றன. அந்த வதந்திச் செய்தியில் Rohypnol  உடன் progesterex என்ற இன்னொரு மருந்தும் சேர்த்துக் கொடுக்கப்படுவதாகவும், அந்த மருந்து குறித்த பாலியல் தாக்குதலின்போது கர்ப்பம் தரிக்காது தடுப்பதோடு தாக்குதலுக்கு ஆளான பெண்ணையும் நிரந்தர மலடாக ஆக்கிவிடும் என்று பரப்பப்பட்டு வந்த வதந்தியில் இப்போது progesterex என்ற மருந்தை நீக்கி விட்டு அதே செய்தியை இடத்துக்கு ஏற்றமாதிரிப் பரப்புகிறார்கள் என்று தெரிகிறது. இதில் வேடிக்கை என்னவென்றால் progesterex என்பதே ஒரு கற்பனைப் பெயர்தான்; அப்படி ஒரு மருந்தே இல்லையென்கிறது மருத்துவ உலகம். 
 

இவையெல்லாம் தவறான செய்திகளாக இருந்தாலும், இதன் பின்னால் உள்ள எச்சரிக்கையை பெண்களை புறம் தள்ளிவிடக்கூடாது. ஏனெனில் இவ்வாறு பெண்களை விருந்து மண்டபங்கள், சமூக ஒன்றுகூடல்களின்போது குடிபானத்தில் மருந்தைக் கலந்து பின்னர் துஸ்பிரயோகம் செய்யக்கூடியவர் எமக்குத் தெரியாமலே எம் மத்தியில் இருக்கக்கூடும். 

பலநேரங்களில் நமக்கு நன்கு தெரிந்தவர்களே இவ்வாறு செய்வதற்கு சந்தர்ப்பம் உள்ளது. எனவே வெளியில் குறிப்பாக இரவில் ஒன்றுகூடல்கள், விருந்துபசாரங்களுக்கு தனியே செல்லும் பெண்கள் எச்சரிக்கையாக இருப்பது நல்லது. 

STAY SAFE AND STAY AWAY FROM DRUGS !

குறிப்பு: சமூக அக்கறையோடு பதிவுகளைப் பகிர்பவர்கள் தயவு செய்து அவற்றைப் பகிர்வதற்கு முன்னர் தரவுகள் சரிதானா என்று சரி பார்த்த பின்னர் பகிருங்கள்.
 

 

https://www.facebook.com/101881847986243/posts/299112768263149/?d=n

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • அப்ப‌ இருந்த‌ மேற்கு வங்காள முத‌ல‌மைச்ச‌ர் இந்திரா காந்தி அம்மையார‌ பார்த்து கேட்ட‌து இந்திய‌ ப‌டையை அனுப்புறீங்க‌ளா அல்ல‌து என‌து காவ‌ல்துறைய‌ அனுப்ப‌வா என்று............மேற்கு வங்காள முத‌லைமைச்ச‌ரின் நிப‌ந்த‌னைக்கு இன‌ங்க‌ இந்திய‌ ப‌டையை இந்திரா காந்தி அம்மையார் இந்திய‌ ப‌டையை அனுப்பி வைச்சா...............இந்தியா அடுத்த‌ நாட்டு பிர‌ச்ச‌னையில் த‌லையிடுவ‌து இல்லை என்றால் ஏன் ராஜிவ் காந்தி அமைதி ப‌டை என்ற‌ பெய‌ரில் அட்டூழிய‌ம் செய்யும் ப‌டையை ஈழ‌ ம‌ண்ணுக்கு அனுப்பி வைச்சார்............. உங்க‌ட‌ இஸ்ர‌த்துக்கு பாலும் தேனும் ஓடுவ‌து போல் எழுதி இந்தியா ஏதோ புனித‌ நாடு போல் காட்ட‌ முய‌ல்வ‌தை நிறுத்துங்கோ பெரிய‌வ‌ரே...............இந்தியாவை வ‌ள‌ந்து வ‌ரும் நாட்டு ப‌ட்டிய‌லில் இருந்து தூக்கி விட்டின‌ம்.............இந்தியா 2020வ‌ல்ல‌ர‌சு நாடாக‌ வ‌ந்துடும் என்று சொன்னார்க‌ள் வ‌ல்ல‌ர‌சு ஆக‌ வில்லை நாளுக்கு நாள் பிச்சைக்கார கூட்ட‌ம் தான் அதிக‌ரிக்குது லொல்...........................
    • ரனிலுக்கு ஆதரவளிக்கும் குழுவினர் யார்?
    • சிறப்பான பதிவுகளைத் தேடி எடுத்துத் தருகிறீர்கள் நன்றி பிரியன்..........!  👍
    • ஹிந்தி மொழிக்கு எதிராக‌ போராடி ஆட்சிய‌ பிடித்த‌ திராவிட‌ம் உத‌ய‌நிதியின் ம‌க‌ன் எந்த‌ நாட்டில் ப‌டித்து முடிந்து விட்டு த‌மிழ் நாடு வ‌ந்தார்..................ஏன் உற‌வே புல‌ம்பெய‌ர் நாட்டில் த‌ங்க‌ட‌ பிள்ளைக‌ள் ஆங்கில‌த்தில் க‌தைப்ப‌து பெருமை என்று நினைக்கும் ப‌ல‌ர் இருக்கின‌ம் யாழில் இனி ப‌ழைய‌ திரிக‌ளை தேடி பார்த்தா தெரொயும்...............நான் நினைக்கிறேன் சீமானின் ம‌க‌னுக்கு த‌மிழ் க‌தைக்க‌ தெரியும்.................இப்ப‌ இருக்கும் முத‌ல‌மைச்ச‌ர் ம‌ற்றும் அவ‌ரின் ம‌க‌ன் உத‌ய‌நிதி இவ‌ர்களுக்கு ஒழுங்காய் த‌மிழே வாசிக்க‌ தெரியாது.........ச‌ரி முத‌ல‌மைச்ச‌ர் ஜ‌யாவுக்கு வ‌ய‌தாகி விட்ட‌து ஏதோ த‌டுமாறுகிறார் வாசிக்கும் போது உத‌ய‌நிதி அவ‌ரின் அப்பாவை விட‌ த‌மிழின் ஒழுங்காய் வாசிக்க‌ முடிவ‌தில்லையே உற‌வே...............சீமானின் ம‌க‌ன் மேடை ஏறி த‌மிழில் பேசும் கால‌ம் வ‌ரும் அப்போது விவாதிப்போம் இதை ப‌ற்றி.............என‌து ந‌ண்ப‌ன் கூட‌ அவ‌னின் இர‌ண்டு ம‌க‌ன்க‌ளை காசு க‌ட்டி தான் ப‌டிப்ப‌க்கிறார்............அது சில‌ரின் பெற்றோர் எடுக்கும் முடிவு அதில் நாம் மூக்கை நுழைத்து அவ‌மான‌ ப‌டுவ‌திலும் பார்க்க‌ பேசாம‌ இருக்க‌லாம்............ஒரு முறை த‌மிழ் நாட்டை ஆளும் வாய்ப்பு சீமானுக்கு கிடைச்சா அவ‌ர் சொன்ன‌ எல்லாத்தையும் செய்ய‌ த‌வ‌றினால் விம‌ர்சிக்க‌லாம் ஒரு தொகுதியிலும் இதுவ‌ரை வெல்லாத‌ ஒருவ‌ரை வ‌சை பாடுவ‌து அழ‌க‌ல்ல‌ உற‌வே........................
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.