Jump to content

தமிழரால் தமிழருக்கு ....... !


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

தமிழரால் தமிழருக்கு ....... !
====================

தமிழ் மக்கள் தமது தாயகப் பிரதேசங்களில் தமது இருப்பைத் தக்க வைக்கவும், தமக்கு எதிராக பேரினவாத அரசு மேற்கொண்ட மனித உரிமை மீறல்கள், ஒடுக்குமுறைகளுக்கு எதிராக நியாயம் வேண்டியும் ஜனநாயக முறையில் போராடும் வேளையில் தமிழ் மக்களின் முக்கியமான  பொதுப் பிரச்சினைகள் குறித்த சிந்தனைகளை நீர்த்துப் போகச் செய்யும் கருத்துக்களை தொடர்ச்சியாக காவிச் செல்லும் சக்திகள் யார்? திட்டமிடப்பட்ட பின்புலங்களின் செயல்பாடுகளே இவர்கள் மூலம் தொடர்ந்தும் காட்சிப்படுத்தப்படுகின்றன என்றே ஊகிக்க முடிகிறது.     

இத்தகைய பின்புலத்தில் பல கொடுமுடிகள் அணிவகுத்து நிற்பதும் அவர்கள் தமிழ்ச்சமூகத்தை தொடர்ந்தும் புறவயச் சூழலுக்குள் தள்ளிவிட முனைவதையும் நாம் காணமுடியும். அந்தவகையில் சமூக ஊடகங்களில், சமூகங்களில் தமிழ் மக்கள் மத்தியில் அகக் குழப்பத்தை தோற்றுவிக்கும்  வகையில்  கேள்விகள் தொடுக்கப்படுகின்றன. இவை  நன்கு திட்டமிடப்பட்ட வகையில் உருவாக்கப்படுகின்ற கேள்விகளாக இருப்பதையும் காணமுடிகிறது.

பொதுவாக ஒரு உள்நாட்டுப் புரட்சி நடைபெறும் நாட்டில் மக்கள் புரட்சி முறியடிப்பில்  சமூகத்தை குழப்ப நிலையில் வைத்திருப்பதே இராணுவ/அரசியல்  மூலோபாயங்களில் முதன்மையானதாகக் காணப்படுகிறது. 2000 களின் முற்பகுதியில் இலங்கையின் இராணுவ மூலோபாயம் போரியல் மூலோபாயமாகவே கட்டி எழுப்பப்பட்டிருந்தது. இதில் மேற்குலக மூலோபாயங்களில் அதிகம் இலங்கை தங்கியிருந்தது. 

பாதுகாப்பு நெறி  கற்கைகளில்  இலங்கை கூடுதலாக பிரிட்டன், அமெரிக்கா, பாகிஸ்தான் , இந்தியா போன்ற நாடுகளில் இருந்து பெற்றுக் கொண்டது. இருப்பினும் 2000 களின் பின்தான் இலங்கை இந்தியாவிடம் இருந்து  மிக நேர்த்தியான புலனாய்வு மூலோபாயங்களை புரட்சி முறியடிப்பில் பயன்படுத்துவது குறித்த ஒத்துழைப்பையும், கற்கை நெறிகளையும் பெற்றுக் கொள்ளுவதில் தீவிரமாக இருந்தது.

2000 இன் ஆரம்பத்திலிருந்தே மக்களை உளவியல்ரீதியாக கையாள ஆரம்பித்திருந்தாலும் 2009 ன் பின்னர் ஆயுதப்போராட்டம் முடிவுறுத்தப்பட்ட பின்னர். இலங்கை மிக உயர் வினைத்திறனும், தொழில்திறனுமிக்க  புலனாய்வை கட்டமைப்பை பேணுகிறது.  அக்கட்டமைப்புகளே மக்களின் எழுச்சிகளை இலகுவாக கையாளும் கட்டமைப்பாக தொழிற்படுகிறது. 

ஒடுக்கு முறைக்கு எதிராக போராடும் சிந்தனைகளை மக்கள் மத்தியில்  முனைமழுங்கச் செய்தல், மக்களின் கவனத்தைத் திசைதிருப்புதல், ஒடுக்கப்படும் மக்கள் மத்தியில் இயல்பாகவே இருக்கும் பிளவுகளை மேலும் ஆழப்படுத்தல்,  புதிய புதிய பிளவுகளை தூண்டுதல் என்பவற்றை இலங்கை அரசு செய்து வருகிறது. 
 
அந்த வகையில் 2009 களின் பின்னர் தமிழ் மக்கள் மத்தியில் வகை தொகையற்ற பிளவுகள் தொடர்ச்சியாக உருவாக்கப்பட்டு அல்லது தூண்டப்பட்டு தமிழ் பேசும் மக்கள் கூட்டம் இன்று  உளச்சிதைவுக்கு  உள்ளாக்கப்பட்ட இனமாக உருமாறி நிற்கிறது. 

தமிழ் மக்கள் மத்தியில் பிளவுவாதங்கள் அனைத்து அசைவியக்கத்திலும் மிகை நிரம்பி போயுள்ளன. அந்தவகையில் பிளவுகளை, குழப்பங்களை  தூண்டும் வகையில் பின்வரும் வகையிலான பல்வேறு கருத்தாடல்கள் தொடர்ச்சியாக எம்மத்தியில் வீசப்படுகின்றன.  

1.  2009 இன் பின்னர் “TNA அமைப்பு தமிழ் மக்களின் குரல் இல்லை” என்பதை தொடர்விவாதப் பொருளாக்கி இன்று பெரிதும் சிறிதுமாக 12 குழுக்களாக சிதறுண்ட போகுமளவுக்கு பொறுப்பற்ற  வாதப் பிரதி வாதங்களுக்குள் தமிழ் மக்கள் சிக்குண்டு இருக்கின்ற அளவு சூழலமைவு உருவாக்கப்பட்டமை.

 2. தமிழர்களிடைய இருக்கும் மத வேறுபாடுகளை தூண்டிவிடும் வகையில் தன்னை சைவசமயக் காவலனாக காட்டிக்கொள்ளும் ஒருவர் கடந்த தேர்தல் காலத்தில் தமிழ் கட்சிகள் சைவ சமயத்தவரையே வேட்பாளராக்க வேண்டும் என்று பகிரங்க அறிக்கை விட்டமை.

3. யாழ் பல்கலைக் காலத்தில் இருந்த முள்ளிவாய்க்கால் நினைவுத்தூபியை உடைக்க வைத்து, எய்தவன் இருக்க அம்பையே (அதுவும் கடந்த காலங்களில் தமிழ் உணர்வாளராகவும் சாதனையாளராகவும் அறியப்பட்டவரை) தமிழ் மக்களைக் கொண்டே தமிழினத் துரோகியென வசைபாட வைத்தமை.

4. மன்னார் ஆண்டகையின் பல நற்காரியங்களைப் புறம்தள்ளி, திருக்கேதீஸ்வர வளைவு துவம்சம் செய்யப்பட்டு நந்திக்கொடி காலால் மிதித்து அவமதிக்கப்பட்டபோது மன்னார் ஆண்டகை தன் எதிர்ப்பை பதிவு செய்தாரா? மௌனமாக வழி மொழிந்தாரா?என்ற கருத்துரையை பொதுவெளியில் பரப்பியமை.

5. அண்மையில் முத்துசாமி என்பவரின் தலைமையில் யாழ்ப்பாணத்தில் வைத்து அறிவித்தல் செய்யப்பட்ட இலங்கை பா.ஜ.க. தொடர்பாக உத்தியோகபூர்வ அறிவித்தல் செய்யப்பட்டமை.

6. தமிழக அரசியல் தலைவர்களை எமது நட்பு சக்திகளாக மட்டுமே கருதிய காலம் போய் திராவிடம், தமிழ் தேசியம் என அவர்களை வேறாக்கி இருவேறு கோணங்களில் அணுகும் மனநிலை ஈழத்தமிழர்கள் மத்தியில் ஏற்படுத்தப்பட்டமை.

7. தமிழக அரசியல் தலைவர்கள் ஈழத்தமிழர் குறித்து கதைப்பதால் ஈழத்தில் உள்ள தமிழ் மக்கள் சிங்கள அரசால் அதிக ஆபத்தையும் நெருக்கடிகளையும் சந்திப்பதாக ஈழத்தமிழர்களை வைத்தே தமிழக அரசியல்வாதிகளை வாய் மூடவைத்தமை. (அதேநேரம் சில தமிழகத் தலைவர்கள் மிகைப்படுத்தலாக பேசுவது தவிர்க்கப்படவேண்டும் என்பதை இந்த இடத்தில் குறிப்பிட விரும்புகிறோம்).

8. போலிப்பட்டங்களுக்கு எதிராக செயற்பாடுகள் என்ற தலைப்பின்கீழ் பல தனியார் பல்கலைக்கழகங்களையும் போலியானவை என்ற விவாதத்தைத் தொடர்ந்து முன்னெடுத்தல். இதன்மூலம் தமிழ் மக்கள் மத்தியில், அரச பல்கலைப் கழகங்களில் உயர்கல்வி வாய்ப்பை பெறமுடியாத மாணவர்களும் பெற்றோர்களும் பெரும் குழப்பத்திற்கு ஆளாகி உளவியல் பாதிப்புக்கு உட்படுகின்றனர். அதே நேரம் இலங்கையில் உள்ள அரச பல்கலைக்கழகங்கள் மூலம் வெளிவரும் மாணவர்களையும் தனியார் கல்லூரி மாணவர்களையும் இரு துருவங்களாக மோதவிடும் சூழ்நிலையே இதனால் தூண்டப்படுகிறது.  இந்த விடயத்தை தமிழ் மாணவர்கள் மத்தியில் பாரிய விவாதப் பொருளாக்கியமை கூட ஒரு புலனாய்வு உத்தியின் வெளிப்பாடு தானோ எண்ணுவதில் எவ்வித தவறும் இருப்பதாக தெரியவில்லை.

அதே போன்று தான் P2P , கந்தன் கருணைப் படுகொலை நினைவு கூரல், கிறீஸ்தவ, சைவ சமங்களுக்கு எதிரான கருத்துரைப்புகள், இஸ்லாமியர்களுக்கு எதிரான கருத்தாக்கப் புதுப்பித்தல் கிழக்கு மாகாண வடக்கு மாகாண பிளவுவாத கருத்துரைப்புகள் என இன்னும் பல நூறு கருத்தியல் பிளவுகள், பிற்போக்குவாதங்களை தூண்டுதல் என்பன மிக கனகச்சிதமாக தூண்டப்படுவதும் திட்டமிட்ட செயற்பாடுகளாகவே எண்ணத் தோன்றுகிறது.

இந்த இடைவெளிகளில் தமிழர் பாரம்பரியமாக வாழ்ந்த நிலங்கள் உருமாற்றம்  செய்யப்படுகிறது; தொல்பொருள் பாதுகாப்பு, புத்தரின் அடிமுடி தேடல், வனப் பாதுகாப்பு, மீள்குடியேற்றம் என்ற பல்வேறு காரணங்கள் சொல்லி காடுகளும் நன்செய் நிலங்களும் கபளீகரம் செய்யப்படுகிறது. , அன்பையே போதித்த புத்த பெருமானும் அங்கிங்கெனாதபடி எங்கும் வியாபித்துக் கொண்டிருக்கிறார். தனது எழுபதாண்டு கால நிகழ்ச்சிநிரலின்படி ஒடுக்கு முறை இயந்திரமான சிங்கள பௌத்த பேரினவாதம் அகல கால்விரித்து இன அழிப்பை துரிதப்படுத்திச் செல்கிறது. இந்நிலை நீடிப்பின் இன்னுமொரு சந்ததிக் காலத்தில் இலங்கையில் சிறுபான்மை இனமொன்று வாழ்ந்ததற்கான சுவடே இன்றி அழிக்கப்பட்டுவிடும்.

-RG-
 

 

https://www.facebook.com/101881847986243/posts/303230081184751/?d=n

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இதில் 1 ஆவதற்கு முழுக்க முழுக்க த.தே.கூட்டமைப்பே அல்லது தமிழரசுக் கட்சியே பொறுப்பு.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Popular Now

  • Topics

  • Posts

    • சீமான் உட்பட எவருமே தங்கம் இல்லை. ஆகவே இவரும் மாற்று இல்லை. ஒரு கள்ளனை இன்னொரு கள்ளனால் பிரதியிடுவது அல்ல மாற்று. ஓம். ஏன் எண்டால் அவர் சின்ன கருணாநிதி என நான் எப்போதோ அடையாளம் கண்டு கொண்டதால்.
    • இராக்கில் உள்ள ஈரானிய புரொக்சி படைகள் மீதும் விமானத்தாக்குதலாம். அமெரிக்கன் சென்ரல் கொம்மாண்ட் தாம் இல்லை என மறுப்பு. இஸ்ரேல் லெப்ட் சிக்க்னல் போட்டு ரைட் கட் பண்ணி இருக்குமோ? விமானங்கள் ஜோர்தான் பக்கம் இருந்தே வந்தனவாம்.
    • ஆழ்ந்த அஞ்சலிகள். மத்திய கல்லூரியில் என் அப்பாவுக்கு சீனியர். எதிர் என ஆரம்பித்து இவரை பற்றி ஒரு அசகாய சூரனை போல கதைத்து கொண்டே இருப்பார் அப்பா. அதே போலத்தான் கந்தப்பு சொன்ன அதிபர் ஸ்மித்தை பற்றியும்.   
    • யார் சொன்னார் சீமான் மட்டும் தங்கம் என? சீமான் இன்னும் ஆட்சி செய்யவில்லையே? அவரவர் தாம் விரும்பும் தமிழ்நாட்டு அரசியல்வாதிகளை விரும்புகின்றனர். விஜய் கட்சி ஆரம்பிக்க முதலே நீங்கள் சீமான் எதிர்ப்பாளர் தானே? அது சரி விஜய் அரசியல் கட்சியின் கொள்கை என்ன? 🤣
    • ஓம் கருணாநிதி கூட ஒரு முறை சொன்னார் “நெல்லை எனக்கு எல்லை, குமரி எனக்குத் தொல்லை” என. எப்போதும் ஏனைய தமிழ் நாட்டு தொகுதி முடிவுக்கு மாறாக போக அதிக வாய்ப்பு உள்ள தொகுதி கன்யாகுமரி. தவிர பொன்னாருக்கு தனிப்பட்ட செல்வாக்கும் உண்டு. ஆனால் வாலி சொல்லும் காரணங்களும் பலமானவையே. கடும் போட்டி இருக்கும் என நினைக்கிறேன். மாற்று உண்மையான மாற்றாக இருக்க வேண்டும்.  உங்களை போலவே மேலே உள்ள காரணங்களுக்காக நான் விஜையின் அரசியல் வரவை வரவேற்கிறேன்.
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.