Jump to content

சரத்குமார் மற்றும் ராதிகாவுக்கு ஓராண்டு சிறை!


Recommended Posts

சரத்குமார் மற்றும் ராதிகாவுக்கு ஓராண்டு சிறை!

சரத்குமார் மற்றும் ராதிகாவுக்கு ஓராண்டு சிறை!

 

நடிகர் சரத்குமார் மற்றும் அவரது மனைவி நடிகை ராதிகா ஆகியோருக்கு ஓராண்டு சிறைத்தண்டனை விதித்து சென்னை சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

காசோலை மோசடி வழக்கில் அவர்கள் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டதை தொடர்ந்து இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

சென்னையில் எம்.பி., எம்.எல்.ஏக்கள் தொடர்பான வழக்கை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது.

இது என்ன மாயம் என்ற திரைப்படத்தை தயாரிப்பதற்காக ரேடியண்ட் நிறுவனத்திடம் பணம் பெற்ற விவகாரத்தில், பணத்தை திரும்ப அளிக்காததால், ரேடியண்ட் நிறுவனம் சார்பில் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ப்பட்டது.

2014-ம் ஆண்டு ரூ.1.50 கோடி ரேடியன்ஸ் நிறுவனத்திடம் மேஜிக் ப்ரேம்ஸ் நிறுவனம் சார்பில் கடனாக பெற்றுள்ளார். கடனைத் திருப்பி அளிப்பதில் மேஜிக் ப்ரேம்ஸ் நிறுவனம் மோசடியில் ஈடுபட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

சரத்குமார் மீது 7 வழக்குகளும், ராதிகா மீது இரண்டு வழக்குகளும் தொடரப்பட்டது. இது தொடர்பான விசாரணை மேற்கொண்ட எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் வழக்குகளை விசாரிக்கும் நீதிமன்றம், இருவருக்கும் தலா ஓராண்டு சிறை தண்டனை விதித்து உத்தரவிட்டுள்ளது. மேலும் மேஜிக் ப்ரேம் நிறுவன பங்குதாரர் லிஸ்டன் ஸ்டீபனுக்கும் நீதிமன்றம் ஒரு வருடமும் சிறை தண்டனை விதித்துள்ளது.
 
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ராதிகா அனுபவிக்கப் போகும்...   அந்த ஒரு ஆண்டு சிறைத் தண்டனை நேரம்,

அவரின் நாடகங்கள் பார்க்க முடியாமல், கன சனம் கஸ்ரப் படப் போகிறார்களே.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
38 minutes ago, தமிழ் சிறி said:

ராதிகா அனுபவிக்கப் போகும்...   அந்த ஒரு ஆண்டு சிறைத் தண்டனை நேரம்,

அவரின் நாடகங்கள் பார்க்க முடியாமல், கன சனம் கஸ்ரப் படப் போகிறார்களே.

இனித்தான்  சனத்துக்கு அறிவு பிறக்கப்போகுது .

முத்தையா முரளிதரன் பிரச்சனையில் தான் ஒரு சிங்களத்தி என்று நிரூபித்தவ .

உங்களுக்கு எல்லாம் வேற வேலையே இல்லையா??... பொன்னான வார்த்தைகளை கக்கியவர் .

Link to comment
Share on other sites

நல்ல தீர்ப்பு, இப்படியே திமுக, அதிமுக, நாதக( வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்தல்) களவாணிகளையும்  உள்ளே போடவேண்டும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஒரு கட்சியின் தலைவர்கள் மக்களுக்கு முன்னோடியாக இருக்க வேண்டியவர்கள் இப்படி குளறுபடி செய்யலாமா?

Link to comment
Share on other sites

1 hour ago, zuma said:

நல்ல தீர்ப்பு, இப்படியே திமுக, அதிமுக, நாதக( வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்தல்) களவாணிகளையும்  உள்ளே போடவேண்டும்.

வாய் சவாலை விட்டு விட்டு ஆதாரமாக ஒன்றாய் போடவும் நாம் அவர்களை புறக்கணிக்குறோம் இல்லை என்றால் (சிவாஜி தாவணி கனவுகள் போல் பொத்தி கொள்ளளவும் )

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

யாராவன், நம்ம நாட்டாமைக்கு தீர்ப்பு சொன்னவன்? 😎

6 minutes ago, appan said:

வாய் சவாலை விட்டு விட்டு ஆதாரமாக ஒன்றாய் போடவும் நாம் அவர்களை புறக்கணிக்குறோம் இல்லை என்றால் (சிவாஜி தாவணி கனவுகள் போல் பொத்தி கொள்ளளவும் )

அவர், ஒரு $1000 அனுப்பி இருக்கிறார். ஆதாரத்தினை இந்தியன் வருமான வரித்துறைக்கு அனுப்பி வைப்பார்.

தல எண்டால் சும்மாவே.... 😜

Link to comment
Share on other sites

24 minutes ago, appan said:

வாய் சவாலை விட்டு விட்டு ஆதாரமாக ஒன்றாய் போடவும் நாம் அவர்களை புறக்கணிக்குறோம் இல்லை என்றால் (சிவாஜி தாவணி கனவுகள் போல் பொத்தி கொள்ளளவும் )

உங்களுக்கு யாருடைய ஆதாரம் வேண்டும், திமுக அல்லது அதிமுக அல்லது நாதக?.
இப்படித்தான் ஒருவர் ஆதாரம் கேட்டு, பின்னர் பிச்சை வேண்டாம் நாயை பிடி என்று ஓடிவிட்டார்.😆

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, zuma said:

உங்களுக்கு யாருடைய ஆதாரம் வேண்டும், திமுக அல்லது அதிமுக அல்லது நாதக?.
இப்படித்தான் ஒருவர் ஆதாரம் கேட்டு, பின்னர் பிச்சை வேண்டாம் நாயை பிடி என்று ஓடிவிட்டார்.😆

ஆதாரம் கேட்டா, சுஜ புராணம் சொல்லி கொலை போரடித்தால், ஓடுவினம் தானே ராஜா....

உங்களது, சொந்த குடும்ப கதை யாருக்கு தேவை? தெரிஞ்சு வைச்சு, ஒரு ஒத்தை டொலராவது உழைக்கலாம் எண்டாலாவது பரவாயில்லை.    😜

Link to comment
Share on other sites

7 minutes ago, zuma said:

உங்களுக்கு யாருடைய ஆதாரம் வேண்டும், திமுக அல்லது அதிமுக அல்லது நாதக?.
இப்படித்தான் ஒருவர் ஆதாரம் கேட்டு, பின்னர் பிச்சை வேண்டாம் நாயை பிடி என்று ஓடிவிட்டார்.😆

பின்னர் பிச்சை வேண்டாம் நாயை பிடி என்று ஓடிவிட்டார்.😆(தெரு நாயிடம் கேட்டிருப்பார் )ntk

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சரத்குமார், ராதிகாவுக்கு காசோலை மோசடி வழக்கில் ஓராண்டு சிறை தண்டனை

காசோலை மோசடி செய்த வழக்கில் சரத்குமார் - ராதிகா தம்பதிக்கு ஓராண்டு சிறை தண்டனை விதித்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதில் சரத்குமாருக்கு அளிக்கப்பட்ட சிறை தண்டனை நிறுத்திவைக்கப்பட்டுள்ளது.

ராதிகா, சரத்குமார் ஆகியோர் பங்குதாரர்களாக உள்ள மேஜிக் ஃப்ரேம்ஸ் என்ற நிறுவனம் 2014ஆம் ஆண்டில் விக்ரம் பிரபு, கீர்த்தி சுரேஷ் ஆகியோரை வைத்து 'இது என்ன மாயம்' என்ற படத்தைத் தயாரித்தது. இந்தப் படத்தைத் தயாரிப்பதற்காக ரேடியண்ட் என்ற நிறுவனத்திடமிருந்து மேஜிக் ஃப்ரேம்ஸ் நிறுவனம் ஒன்றரைக் கோடி ரூபாயை கடனாகப் பெற்றது.

2015ஆம் ஆண்டு மார்ச் மாதத்திற்குள் பணத்தைத் திரும்பத் தந்துவிடுவதாகக் கூறப்பட்டது. ஆனால், பணத்தைத் தரவில்லை. இது தொடர்பாக அளிக்கப்பட்ட காசோலைகளும் பணமில்லாமல் திரும்பின. இது தொடர்பாக ரேடியண்ட் நிறுவனத்தின் சார்பில் வழக்குத் தொடரப்பட்டது.

இது தொடர்பாக சரத்குமார் மீது ஏழு வழக்குகளும் ராதிகா மீது இரண்டு வழக்குகளும் தொடரப்பட்டன. மேஜிக் ஃப்ரேம்ஸ் நிறுவனத்தின் பங்குதாரரான லிஸ்டன் ஸ்டீஃபன் மீது 2 வழக்குகள் தொடரப்பட்டன. முதலில் மாஜிஸ்ட்ரேட் நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்ட இந்த வழக்கு பிறகு எம்.பி., எம்.எல்.ஏக்களை விசாரிப்பதற்கான நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டது.

வழக்கு விசாரணைக்குவந்தபோது, தாங்கள் பணத்தைத் தரக்கூடாது என நினைக்கவில்லையென்றும் வட்டி கூடுதலாக இருந்ததால் பணத்தை உடனே திரும்பத் தரவில்லையென்றும் மேஜிக் ஃப்ரேம்ஸ் சார்பில் கூறப்பட்டது.

இந்த வழக்கில் இன்று தீர்ப்பு அளிக்கப்பட்டது. அதில் சரத்குமார், ராதிகா இருவருக்கும் தலா ஓராண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டது. பங்குதாரர் லிஸ்டன் ஸ்டீஃபனுக்கும் ஓராண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டது.

மூன்றாண்டுகளுக்குக் குறைவான சிறை தண்டனை என்பதால், மேல் முறையீடு செய்யும்வரை சிறை தண்டனையை நிறுத்திவைக்க வேண்டுமென சரத்குமார், லிஸ்டன் ஆகியோர் தரப்பில் நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்யப்பட்டது. இதையடுத்து, மேல் முறையீடு செய்ய 30 நாட்கள் அவகாசமளித்து இருவரது சிறை தண்டனையையும் நீதிமன்றம் நிறுத்திவைத்துள்ளது.

ராதிகா நீதிமன்றத்தில் ஆஜராகவில்லை என்பதால் அவருக்கு பிடி வாரண்ட் பிறப்பிக்கப்பட்டுள்ளது. ஆனால், அவருக்கு கொரோனா பாதிப்பு இருப்பதால், அதிலிருந்து மீண்டவுடன் அவர் நீதிமன்றத்தில் ஆஜராவார் என அவர் தரப்பு வழக்கறிஞர் தெரிவித்திருக்கிறார்.

சரத்குமார், ராதிகாவுக்கு காசோலை மோசடி வழக்கில் ஓராண்டு சிறை தண்டனை - BBC News தமிழ்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இவையள் மோசடி/ஊழல் உறுதிப்படுத்தப்பட்டு சிறைக்கு போய்ட்டு வந்த உடன தியாகி ரேஞ்சில  செங்கம்பள வரவேற்பு குடுக்கவும் ஆக்கள் இருக்கினை தானே!

Link to comment
Share on other sites

36 minutes ago, வாலி said:

இவையள் மோசடி/ஊழல் உறுதிப்படுத்தப்பட்டு சிறைக்கு போய்ட்டு வந்த உடன தியாகி ரேஞ்சில  செங்கம்பள வரவேற்பு குடுக்கவும் ஆக்கள் இருக்கினை தானே!

ஊழலில், மோசடியில் மாட்டுப்பட்டு உள்ளே இருந்து விட்டு வந்த ஆட்களை மரியாதை நிமிர்த்தமாக போய் சந்தித்து வாழ்த்தக் கூட ஆட்கள் இருப்பினம். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
36 minutes ago, நிழலி said:

ஊழலில், மோசடியில் மாட்டுப்பட்டு உள்ளே இருந்து விட்டு வந்த ஆட்களை மரியாதை நிமிர்த்தமாக போய் சந்தித்து வாழ்த்தக் கூட ஆட்கள் இருப்பினம். 

இது அண்ண‌ன் சீமானுக்கு தூர‌த்தில் இருந்து க‌ல் எறிவ‌து தெரியுது ?

அர‌சிய‌ல் வேறு ந‌ட்பு வேறு 😁😀

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
40 minutes ago, நிழலி said:

ஊழலில், மோசடியில் மாட்டுப்பட்டு உள்ளே இருந்து விட்டு வந்த ஆட்களை மரியாதை நிமிர்த்தமாக போய் சந்தித்து வாழ்த்தக் கூட ஆட்கள் இருப்பினம். 

ஊழல் மோசடியில் மாட்டுப்பட்டு உள்ளே இருந்து விட்டு வந்த ஆட்களுக்கு ஓட்டுப் போட்டு அழகு பார்க்க கூட ஆட்கள் இருக்கிறார்கள்.

Link to comment
Share on other sites

8 minutes ago, MEERA said:

ஊழல் மோசடியில் மாட்டுப்பட்டு உள்ளே இருந்து விட்டு வந்த ஆட்களுக்கு ஓட்டுப் போட்டு அழகு பார்க்க கூட ஆட்கள் இருக்கிறார்கள்.

உண்மைதான்! ஆனாலும் கொலைக்குற்றம் செய்து உள்ளே போனவரைக் கூட எம் பி ஆக்கி அழகு பார்க்கும் எம் தாயக மக்களை விட இது பரவாயில்லை என நினைக்கின்றேன்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
58 minutes ago, நிழலி said:

உண்மைதான்! ஆனாலும் கொலைக்குற்றம் செய்து உள்ளே போனவரைக் கூட எம் பி ஆக்கி அழகு பார்க்கும் எம் தாயக மக்களை விட இது பரவாயில்லை என நினைக்கின்றேன்.

இதற்கும் எனக்கும் சம்பந்தமில்லை...🤣

ஏற்கனவே ரதி அக்கா தொடர்பை முறித்துவிட்டார்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஊழல் குற்றங்கள்  செய்த அரசியல்வாதிகளும் கொலைகள் செய்த அரசியல்வாதிகளும் தந்திரோபயமாக தப்பித்து நீதிமன்றங்களிலிருந்தும் சாதிர்யமாக எதுவுமே நடக்காத மாதிரி வெளியே வந்து வெள்ளை வேட்டி அரசியல் செய்தால் அவர்கள் சுத்தவாளிகள் என நம்பும் மகா சனங்கள் இருக்கும் வரைக்கும்  கடவுளாலும் இந்த உலகை காப்பாற்ற முடியாது.

நிஜம் நிதர்தனம் இல்லாத மனிதர்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அப்ப‌டியே க‌ணிமொழி ராசா போன்ற‌ பெரிய‌ திருட‌ர்க‌ளுக்கு ஓட்டு போட்டு அழ‌கு பார்க்க‌வும் எம் இன‌த்தில் ஆட்க‌ள் இருக்கின‌ம் ?

இந்த‌ உல‌கில் யார் தான் சுத்த‌ம் ஹா ஹா 😁😀

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
40 minutes ago, பையன்26 said:

அப்ப‌டியே க‌ணிமொழி ராசா போன்ற‌ பெரிய‌ திருட‌ர்க‌ளுக்கு ஓட்டு போட்டு அழ‌கு பார்க்க‌வும் எம் இன‌த்தில் ஆட்க‌ள் இருக்கின‌ம் ?

இந்த‌ உல‌கில் யார் தான் சுத்த‌ம் ஹா ஹா 😁😀

அந்த கனிமொழி முள்ளிவாய்க்கால் இன அழிப்புக்கு நன்றிக்கடன் சொல்லப்போனது போல் ஒரு நிகழ்வு நடந்தும் எங்கடை சனத்துக்கு ரோசம் மானம் வரேல்லை எண்டால்?

kanimozhi-rajapaksa.jpg

அதிலையும் இந்தியாவிலையே அலைக்கற்றை ஊழல்வழக்கு பெரிய வழக்கு....அதுவே இன்னும் ஒழுங்காய் முடியேல்லை......இந்த தேர்தல் முடிவை பார்த்து மீண்டும் தூசு தட்டுவார்கள்....

2ஜி வழக்கு விசாரணை ஜனவரியில் தனி அமர்வு | Dinamalar Tamil News

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கமல் உள்ளே வந்தால் ராதிகா சரத்குமார் உள்ளே செல்லத் தேவை இருக்காது
இவரது தனிமைப்படுத்தல் முடிவதற்குள்   தேர்தல் முடிவுகள் வந்துவிடும்  

தமிழ் நாடு மட்டுமல்ல ஒட்டுமொத்த இந்திய
அரசியலும் ஊழலிலும் ஏமாற்றுக்களிலும் தான் தொடர்கின்றது

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ராதிகா ஏதாவது புதுசா சீரியல் தயாரிப்பில் இருப்பா.. வழக்கு கணக்கில் நேரம் செலவிட இயலாது தானே..

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, வாலி said:

இவையள் மோசடி/ஊழல் உறுதிப்படுத்தப்பட்டு சிறைக்கு போய்ட்டு வந்த உடன தியாகி ரேஞ்சில  செங்கம்பள வரவேற்பு குடுக்கவும் ஆக்கள் இருக்கினை தானே!

அதில் என்ன சந்தேகம்.  தமிழ்நாட்டில் ஊழல் செய்தவர்களை தண்டிக்க வந்த தலைவர் சசிகலாவையே சந்தித்தவர் இவர்களையும் சந்திப்பார்.

Link to comment
Share on other sites

1 hour ago, விளங்க நினைப்பவன் said:

அதில் என்ன சந்தேகம்.  தமிழ்நாட்டில் ஊழல் செய்தவர்களை தண்டிக்க வந்த தலைவர் சசிகலாவையே சந்தித்தவர் இவர்களையும் சந்திப்பார்.

சந்தித்தது இருக்கட்டும். ஊழலுக்காக உள்ளே இருந்த கூட்டம் திரும்ப முதலமைச்சராவது பற்றி பேச ஒரு மனச்சாட்சி இருக்க வேண்டும். உலக்கை போன இடம் பாராது, ஊசி போன இடம் தேடும் கூட்டம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சரத்குமாருக்கு விதிக்கப்பட்ட சிறைத் தண்டனை நிறுத்திவைப்பு!

சரத்குமாருக்கு விதிக்கப்பட்ட சிறைத் தண்டனை நிறுத்திவைப்பு!

காசோலை மோசடி வழக்கில் நடிகர் சரத்குமார் மற்றும் நடிகை ராதிகா ஆகியோருக்கு இன்று (புதன்கிழமை) விதிக்கப்பட்ட ஒரு வருட சிறைத் தண்டனையில் சரத்குமாருக்கு விதிக்கப்பட்ட தண்டனை நிறுத்திவைக்கப்பட்டுள்ளது.

மூன்று ஆண்டுகளுக்குக் குறைவான சிறைத் தண்டனை என்பதால், மேன்முறையீடு செய்யும்வரை குறித்த சிறைத் தண்டனையை நிறுத்திவைக்க வேண்டுமென வாதிடப்பட்ட நிலையில் நீதிமன்றம் தண்டனையை இடைநிறுத்தியுள்ளது. பங்குதாரரான லிஸ்டன் ஸ்டீபனுக்கும் இதேபோல் தண்டறை நிறுத்திவைக்கப்பட்டுள்ளது.

ராதிகா மற்றும் சரத்குமார் தம்பதியர் பங்குதாரர்களாகவுள்ள மஜிக் ஃப்ரேம்ஸ் நிறுவனம் 2014ஆம் ஆண்டில் ‘இது என்ன மாயம்’ என்ற திரைபடத்தைத் தயாரித்திருந்தது.

இந்நிலையில், படத் தயாரிப்புக்காக ரேடியன்ற் என்ற நிறுவனத்திடமிருந்து மஜிக் ஃப்ரேம்ஸ் நிறுவனம் ஒன்றரை கோடி ரூபாயை கடனாகப் பெற்றிருந்தது. அத்துடன் குறித்த பணத்தை 2015ஆம் ஆண்டு மார்ச்சிற்குள் மீளச்செலுத்துவதாக உறுதியளிக்கப்பட்டது.

எனினும், பணம் மீளச் செலுத்தப்படவில்லை என்பதுடன் இது தொடர்பாக மஜிக் ஃப்ரேம்ஸ் நிறுவனத்தால் வழங்கப்பட்டிருந்த காசோலைகளும் பணமின்றித் திரும்பியதால் ரேடியன்ற் நிறுவனம் வழக்குத் தொடர்ந்தது.

இதன்படி, சரத்குமார் மீது ஏழு வழக்குகள் போடப்பட்டதுடன் ராதிகா மீது இரு வழக்குகளும் மஜிக் ஃப்ரேம்ஸ் நிறுவன பங்குதாரர் லிஸ்டன் ஸ்டீபன் மீது இரு வழக்குகளும் தொடரப்பட்டிருந்தன.

இந்நிலையில், மேன்முறையீட்டு நீதிமன்றில் விசாரணைக்கு வந்த குறித்த வழக்கு பின்னர், பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் சட்டமன்ற உறுப்பினர்களை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டு விசாரணை இடம்பெற்ற நிலையில், தற்போது சிறைத்தண்டனை அளிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, இன்றைய வழக்கு விசாரணைக்கு ராதிகா ஆஜராகாத நிலையில், அவருக்குப் பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. எனினும், கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ள அவர், சிகிச்சை முடிந்ததும் நீதிமன்றில் ஆஜராவார் என அவரது சட்டத்தரணி மன்றுக்கு அறிவித்துள்ளார்.

https://athavannews.com/2021/1208351

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • 1)    ஆரம்பச் சுற்றுப் போட்டிகளில் முன்னணியில் வரும் நான்கு அணிகள் எவை? சரியான பதில் ஒவ்வொன்றுக்கும் தலா 2 புள்ளிகள் வீதம் வழங்கப்படும். தவறான பதில் ஒவ்வொன்றுக்கும் தலா 2 புள்ளிகள் குறைக்கப்படும்.   CSK, RR, KKR, SRH 2)    முதல் நான்கு அணிகளையும் சரியான வரிசையில் பட்டியல் இடுக.      #1 - ? (சரியான பதில்: +4 புள்ளிகள், தவறான பதில்: -4  புள்ளிகள் ) RR     #2 - ?  (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -3 புள்ளிகள் ) KKR     #3 - ?  (சரியான பதில்: +2 புள்ளிகள், தவறான பதில்: -2  புள்ளிகள்) CSK     #4 - ?  (சரியான பதில்: +1 புள்ளி, தவறான பதில்: -1 புள்ளி ) SRH 3)    ஆரம்பச் சுற்றுப் போட்டிகளில் இறுதியாக வரும் அணி எது? (சரியான பதில்: +2 புள்ளிகள், தவறான பதில்: -2  புள்ளிகள்) RCB 4)   மே 21, வெள்ளி 19:30 அஹமதாபாத்  Qualifier 1 போட்டியில் வெற்றி பெறும் அணி எது? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -3  புள்ளிகள்) Qualifier 1: 1st placed team v 2nd placed team KKR 5)    மே 22, புதன் 19:30 அஹமதாபாத் Eliminator போட்டியில் வெற்றி பெறும் அணி எது? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -3  புள்ளிகள்) Eliminator: 3rd placed team v 4th placed team SRH 6)   மே 24 வெள்ளி 19:30  சென்னை Qualifier 2 போட்டியில் வெற்றி பெறும் அணி எது? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -3  புள்ளிகள்) Qualifier 2: Loser of Qualifier 1 v Winner of Eliminator SRH 7)    மே 26, ஞாயிறு இறுதிப் போட்டியில் வெற்றி பெறும் அணி எது? (சரியான பதில்: +5 புள்ளிகள், தவறான பதில்: -5  புள்ளிகள்) Final: Winner of Qualifier 1 v Winner of Qualifier 2 KKR 8 ) இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் அதிக ஓட்டங்களை பெறும் அணி எது? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -1  புள்ளி)   SRH 9)    இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் குறைந்த ஓட்டங்களை பெறும் அணி எது? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -1  புள்ளி) GT 10)    இந்த தொடரில் அதிக ஒட்டங்கள் (Orange cap) பெறும் வீரர் யார்? ( சரியான பெயரைக் குறிப்பிடுபவருக்கு +4 புள்ளிகள், தவறான பெயருக்கு -2 புள்ளிகள்)   RIYAN PARAG   11)    இந்த தொடரில் அதிக ஒட்டங்கள் பெறுபவர் (Orange cap) எந்த அணியை சேர்ந்தவர்? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -1  புள்ளி, கேள்வி 10 க்கான வீரர் இந்தப் பதிலுக்கான அணியில் இருக்கவேண்டிய அவசியமில்லை! ) RR 12)    இந்த தொடரில் அதிக விக்கற்றுகள் (Purple cap) பெறும் வீரர் யார்? (சரியான பெயரைக் குறிப்பிடுபவருக்கு +4 புள்ளிகள், தவறான பெயருக்கு -2 புள்ளிகள்) JASPRIT BUMRAH 13)    இந்த தொடரில் அதிக விக்கற்றுகள் (Purple cap) பெறுபவர் எந்த அணியை சேர்ந்தவர்? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -1  புள்ளி,  கேள்வி 12 க்கான வீரர் இந்தப் பதிலுக்கான அணியில் இருக்கவேண்டிய அவசியமில்லை! ) MI 14)    இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் அதிக ஒட்டங்கள் பெறும் வீரர் யார்? (சரியான பெயரைக் குறிப்பிடுபவருக்கு +4 புள்ளிகள், தவறான பெயருக்கு -2 புள்ளிகள் ) Virat Kohli  15)    இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் அதிக ஒட்டங்கள் பெறுபவர் எந்த அணியை சேர்ந்தவர்? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -1  புள்ளி,  கேள்வி 14 க்கான வீரர் இந்தப் பதிலுக்கான அணியில் இருக்கவேண்டிய அவசியமில்லை! ) RCB 16)    இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் அதிக விக்கெட் எடுக்கும் பந்து வீச்சாளர் யார்? (சரியான பெயரைக் குறிப்பிடுபவருக்கு +4 புள்ளிகள், தவறான பெயருக்கு -2 புள்ளிகள்) Jasprit Bumrah 17)    இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் அதிக விக்கெட் எடுக்கும் பந்து வீச்சாளர் எந்த அணியை சேர்ந்தவர்? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -1  புள்ளி,  கேள்வி 16 க்கான வீரர் இந்தப் பதிலுக்கான அணியில் இருக்கவேண்டிய அவசியமில்லை! ) MI 18)    இந்த தொடரில் சிறந்த் ஆட்டக்காரர் (Player of the Series) யார்? (சரியான பெயரைக் குறிப்பிடுபவருக்கு +4 புள்ளிகள், தவறான பெயருக்கு -2 புள்ளிகள்) Sunil Narine   19)    இந்த தொடரில் சிறந்த் ஆட்டக்காரர் (Player of the season) எந்த அணியை சேர்ந்தவர்? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -1  புள்ளி,  கேள்வி 18 க்கான வீரர் இந்தப் பதிலுக்கான அணியில் இருக்கவேண்டிய அவசியமில்லை! ) KKR 20)    இந்த தொடரில் Fair Play Award யை பெறும் அணி எது? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -1  புள்ளி) SRH
    • ரம்பின் விசாரணை நடக்கும் நீதிமன்றம் அருகில் ஒருவர் திக்குளித்து ஆபத்தான நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். உடல் பற்ற எரிந்த போது அருகில் நின்ற பொலிசாரும் மக்களும் சேர்ந்து தீயை அணைத்துள்ளனர். https://www.cnn.com/politics/live-news/trump-hush-money-trial-04-19-24#h_6e59fcb889c2bb3a38b4b05fffa573ae
    • ஈரானின் தாக்குதல் ஓரிரவில் முடிந்துவிட்டது. ஆனால் அதன் அதிர்வு இப்போதும்  வெள்ளை மாளிகையை குலுக்கிக்கொண்டிருக்கிறதாம்,........பக்கவிழைவாக இருக்குமொ?  😁
    • "Jesus refulsit omnium" ["Jesus, light of all the nations"] என்ற பழைய பாடலின் என் தமிழ் மொழிபெயர்ப்பு  கி பி 340 இல் இருந்து தான் நத்தார் மார்கழி திங்கள் 25 ஆம் நாள் கொண்டாடப் படுகிறது.  உலகின் ஆரம்பகால லத்தீன் பாடல்களில் ஒன்றான இந்தப் பாடலின் [Saint Hilary of Poitiers, around the 4th century (368] ஆங்கில மொழிபெயர்ப்பை [English Translation by Kevin Hawthorne] நான் தமிழில் தருகிறேன்.    "உலக நாடுகளின் அன்பு இரட்சகர் உலர்ந்த தொட்டிலில் பிரகாசித்த கதையை குடும்பம் ஓங்கிட தெம்பை கொடுக்க கேளுங்கள் அதை நம்பிக்கை கொண்டு!"   "வானத்தில் ஒளிர்ந்து மினுங்கும் தாரகை கானத்தில் நிற்பவருக்கும் வழி காட்டிட மூன்று ஞானிகள் அறிகுறி அறிந்து அன்பு தெய்வத்தை தேடி வந்தனர்!"   "காடுமலைகள் தாண்டி மழலையை பார்த்திட மேடுபள்ளம் நடந்து பரிசுடன் வந்தனர் பாலகன் மேலே விண்மீன் நிற்க இலக்கு உணர்ந்து விழுந்து வணங்கினர்!"   "ஆத்மபலம் கொண்ட பரிசு கொண்டுவந்து கந்தல்களில் மறைந்திருந்த பாலகனை காட்டி உண்மை ஆண்டவனுக்கு சாட்சி பகிர்ந்து மண்ணுக்கும் விண்ணுக்கும், அடையாளம் காட்டினர்!"     [தமிழ் மொழி பெயர்ப்பு: கந்தையா தில்லைவிநாயகலிங்கம், அத்தியடி, யாழ்ப்பாணம்]   "Jesus, devoted redeemer of all nations, has shone forth, Let the whole family of the faithful celebrate the stories The shining star, gleaming in the heavens, makes him known at his birth and, going before, has led the Magi to his cradle Falling down, they adore the tiny baby hidden in rags, as they bear witness to the true God by bringing a mystical gift"     [Translation by Kevin Hawthorne, PhD]     
    • 71% சதவீத வாக்குபதிவாம் த. நாட்டில். அதிலும் மூன்று சென்னை தொகுதியிலும் 10% அதிக வாக்குபதிவாம். Advantage BJP? 
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.