Jump to content

யாழில் பொது இடங்களில் குப்பை கொட்டினால் 5000, வெற்றிலை துப்பினால் 2000!


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

#யாழில் பொது இடங்களில் குப்பை கொட்டினால் 5000, வெற்றிலை துப்பினால் 2000! #யாழ்ப்பாணம் மாநகர முதல்வர் அறிவிப்பு. இன்று முதல் மாநகர காவல் படை மூலமாக பணிகள் ஆரம்பம்.

Bild

Bild

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

யாழ்.மாநகர காவல் படை, தனது பணிகளை ஆரம்பித்துள்ளது

 
168243129_145119737541120_68138312307250
 31 Views

யாழ் .மாநகர முதல்வர் விஸ்வலிங்கம் மணிவண்ணனால் உருவாக்கப்பட்ட யாழ் மாநகர காவல் படை முதல் முறையாக இன்று காலை தமது பணிகளை ஆரம்பித்துள்ளது.

யாழ்ப்பாணம் மாநகரில் சுகாதார நடைமுறைகளை கண்காணித்தல், கழிவகற்றல் பொறிமுறையை கண்காணித்தல், மற்றும் மாநகரின் ஒழுங்கு உள்ளிட்டவற்றை கண்காணிப்பதற்காக குறித்த மாநகர பாதுகாப்பு படை உருவாக்கப்பட்டுள்ளது.

குறித்த மாநகர பாதுகாப்பு படை நாளை அங்குரார்ப்பணம் செய்துவைக்கப்படவுள்ளது.

168019606_145575107494460_25217898653008

இதையடுத்து இன்று காலை பரீட்சார்த்தமாக நல்லூர் சுற்றாடலில் வாகன ஒயில் ஊற்றப்பட்ட நிலையில் விபத்துக்களை தவிர்க்க முன்னாயத்த நடவடிக்கைகளை குறித்த மாநகர பாதுகாப்பு படை கண்காணித்தது.ஷ

யாழ் மாநகர சுகாதார பணிமனைகளில் பணியாற்றிய உத்தியோகத்தர்கள் 5 பேரை புதிய சீருடை ஒன்றை அறிமுகம் செய்து மாநகர காவல் படை என்ற பெயரில் யாழ் மாநகரசபை உருவாக்கியுள்ளது.

 

https://www.ilakku.org/?p=46756

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 minutes ago, உடையார் said:

யாழ்.மாநகர காவல் படை, தனது பணிகளை ஆரம்பித்துள்ளது

நல்லதொரு ஆரம்பம். சட்டங்கள் வலிமையாக்கப்பட வேண்டும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நாசமாறுவார்..... வாய் சிவக்க வெத்திலை போட்டு, துப்பவும் விடுகிறாங்களில்லை. 🥸 😡

- ஊர்க் கிழவி & கிழவன். -

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மிகவும் நல்ல செயற்பாடு .......!  👍

3 minutes ago, தமிழ் சிறி said:

நாசமாறுவார்..... வாய் சிவக்க வெத்திலை போட்டு, துப்பவும் விடுகிறாங்களில்லை. 🥸 😡

- ஊர்க் கிழவி & கிழவன். -

எங்காவது வேலிக்கதியாலுக்க துப்புறதுக்கும் முடியாது....... எல்லா இடமும் மதிலாய் கிடக்கு......!   😂

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நல்ல விடயம்..👌

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, தமிழ் சிறி said:

நாசமாறுவார்..... வாய் சிவக்க வெத்திலை போட்டு, துப்பவும் விடுகிறாங்களில்லை. 🥸 😡

- ஊர்க் கிழவி & கிழவன். -

ஆட்டோ பிடிச்சு, வெளியாலை, தின்னவேலி, கொக்குவில் பக்கமா போய், துப்பிவிட்டு வரலாம் தானே. 😜

இந்த யூனிபோர்ம்.... எங்கையோ பார்த்த மாதிரி கிடக்குதே.... 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
10 minutes ago, Nathamuni said:

இந்த யூனிபோர்ம்.... எங்கையோ பார்த்த மாதிரி கிடக்குதே.... 

 

👏👏👏

அதுக்கும் ஆப்பு வைச்சிடுவாங்க நம்ம ஆட்கள்

Enforcement  Team  

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
49 minutes ago, Nathamuni said:

இந்த யூனிபோர்ம்.... எங்கையோ பார்த்த மாதிரி கிடக்குதே.... 

உஸ்.... மூச்சுக் காட்டாதீர்கள், போட்டுக் கொடுத்து விடுவார்கள். 🤫

Link to comment
Share on other sites


எதிர் பார்த்ததை விட மணிவண்ணன் நன்றாக செய்கின்றார். இருக்கின்ற சட்டங்களையும், வளங்களையும் வைத்து சிறப்பாக செயற்படவேண்டும்  

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எப்பபோவோ செய்யவேண்டிய விடயம் இப்பவாவது செய்ய நினைக்கிறார்கள் ...அது சரி பழக்க தோஷம் விடாது கண் டியளோ  ?

 "தம்பி பஸ்சை நிப்பாட்டு  துப்பி போட்டு வாறன்"  😀
 
அண்மையில் நான் பார்த்த வீடியோக்களில் எல்லாருடைய  வாயும் வெத்திலைக் காவி படிந்த படி ....வேறேதும் வைத்து மெல்லு ( சப்பு ) வார்களோ ? 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 minutes ago, நிலாமதி said:

எப்பபோவோ செய்யவேண்டிய விடயம் இப்பவாவது செய்ய நினைக்கிறார்கள் ...அது சரி பழக்க தோஷம் விடாது கண் டியளோ  ?

 "தம்பி பஸ்சை நிப்பாட்டு  துப்பி போட்டு வாறன்"  😀
 
அண்மையில் நான் பார்த்த வீடியோக்களில் எல்லாருடைய  வாயும் வெத்திலைக் காவி படிந்த படி ....வேறேதும் வைத்து மெல்லு ( சப்பு ) வார்களோ ? 

பீற்றூட்கறி சாப்பிட்டாலும், வாய் சிவக்கும். 😃

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, குமாரசாமி said:

#யாழில் பொது இடங்களில் குப்பை கொட்டினால் 5000, வெற்றிலை துப்பினால் 2000! #யாழ்ப்பாணம் மாநகர முதல்வர் அறிவிப்பு. இன்று முதல் மாநகர காவல் படை மூலமாக பணிகள் ஆரம்பம்.

Bild

Bild

 

ஆஆஆஆ
மாநகரசபைக்கு இப்படியும் அதிகாரங்கள் இருக்கிறதா?

ததேமுன்னணியுடன் இருந்த போது போட்ட நல்ல திட்டங்களை தீட்டி வைத்திருந்தார்கள்.

யார் செய்தாலும் நல்லதே.

சிங்கள அரசுகள் குழம்பாமல் இருந்தால் சரி.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நல்ல விடயம்

ஆனால் தமிழர்களிடையே இவ்வாறான விடயங்களை செயற்படுத்துவது அவ்வளவு எளிதல்ல.

புலிகள் கூட தோற்ற விடயம் இது.

இது மணிவண்ணனுக்கு நற்பெயருக்கு பதிலாக எதிரானவர்களையே வளர்த்து விடும். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

 

யாழ். மாநகர சபையால் முதன்முறையாக காவல் படை உருவாக்கம்!

யாழ். மாநகர சபையால் முதன்முறையாக காவல் படை ஒன்று உருவாக்கப்பட்டுள்ளது.

குறித்த மாநகரப் பாதுகாப்புப் படை நாளை அங்குரார்ப்பணம் செய்யப்படவுள்ள நிலையில், இன்று (புதன்கிழமை) பரீட்சார்த்தப் பணியை குறித்த காவல்படை முன்னெடுத்துள்ளது.

இதன்படி, நல்லூர் சுற்றாடலில் வாகன ஒயில் ஊற்றப்பட்டுள்ள நிலையில், விபத்துக்களைத் தவிர்க்கும் முகமான முன்னாயத்த நடவடிக்கைகளை இந்த மாநகர காவல் படை கண்காணித்தது.

யாழ். மாநகரில் சுகாதார நடைமுறைகளைக் கண்காணிப்பதற்கும் கழிவகற்றல் பொறிமுறையைக் கண்காணிப்பதற்கும் மற்றும் மாநகரின் ஒழுங்குமுறை உள்ளிட்டவற்றைக் கண்காணிப்பதற்கும் என குறித்த மாநகர காவல் படை உருவாக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து, புதிய காவல் படையில் பணிபுரியும் ஒருவர் தெரிவிக்கையில், “யாழ். மாநகர சபையின் காவல் படையின் பணி இன்று முதல் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

நல்லூர் வீதியில் இந்தப் பணியை ஆரம்பித்தோம். வாகனம் ஒன்றிலிருந்து கழிவு எண்ணெய் வீதியில் ஊற்றப்பட்டிருந்த நிலையில் பெண்ணொருவர் வழுக்கி விழுந்து காயமடைந்துள்ளார்.

இந்நிலையில், குறித்த பகுதியில் விபத்துக்கள் ஏற்படாவண்ணம் நாம் பாதுகாப்பு நடவடிக்கையை மேற்கொண்டுள்ளோம். எமது பணி சிறப்பாக உள்ளது” என்று குறிப்பிட்டுள்ளார்.

City-Security-Forces-For-The-First-Time-By-The-Jaffna-Municipal-Council-3.jpg

City-Security-Forces-For-The-First-Time-By-The-Jaffna-Municipal-Council.jpg

City-Security-Forces-For-The-First-Time-By-The-Jaffna-Municipal-Council-4.jpg

https://athavannews.com/2021/1208291

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 minutes ago, தமிழ் சிறி said:

யாழ். மாநகர சபையால் முதன்முறையாக காவல் படை உருவாக்கம்!

பாடசாலை தொடங்கும் முடியும் நேரங்களில் இவர்களை பணியில் ஈடுபடுத்த வேண்டும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எந்த ஆரோக்கிய பயனும் இல்லை என்றால் 
வெற்றிலையை தடை செய்து விடலாம் .... சாப்பிடுபவர்கள் எங்காவது துப்ப தானே செய்வார்கள்?
மக்கள் குப்பைகளை கொட்டுவதும் உரிய முறைமைகளை முதலில் உருவாக்க வேண்டும். 

யாழ் மாநகர சபை அள்ளும் குப்பைகளை என்ன செய்கிறார்கள்?
யாருக்காவது தெரியுமா? 

சீமான் இனவாதம் பேசுவதால்தான் மக்கள் இவ்வாறு குப்பை கொட்டுகிறார்கள் 
தெரிந்தோ தெரியாமலோ புலிகளின் காலத்தில் வாழ்ந்தவர்கள் எப்படியும் 
குப்பைகளை கொட்டிக்கொண்டுதான் திரிவார்கள். கோத்த பையாவின் இது போன்ற சேவை 
மக்களுக்கு தேவை. 

(வாசித்துக்கொண்டு வரும்போது இது யாழ் களத்தில் இருப்பதுபோல  தெரியவில்லை. உண்மையிலேயே சந்தேகம் வந்துவிட்டது ... இப்போதான் யாழ் களத்தில் இருக்கும் திரிபோல இருக்கு வாசிப்பவர்களுக்கு என்னைப்போல எங்கு வாசித்துக்கொண்டு இருக்கிறோம் என்ற சந்தேகமும் வாராது) 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
21 minutes ago, Maruthankerny said:

எந்த ஆரோக்கிய பயனும் இல்லை என்றால் 
வெற்றிலையை தடை செய்து விடலாம் .... சாப்பிடுபவர்கள் எங்காவது துப்ப தானே செய்வார்கள்?
மக்கள் குப்பைகளை கொட்டுவதும் உரிய முறைமைகளை முதலில் உருவாக்க வேண்டும். 

யாழ் மாநகர சபை அள்ளும் குப்பைகளை என்ன செய்கிறார்கள்?
யாருக்காவது தெரியுமா? 

குப்பைகளை recycling & landfill என்று பிரித்தாலே குப்பைகளின் அளவு குறைந்துவிடும்.

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, தமிழ் சிறி said:

 

இப்படியான நடைமுறைகள் தொடர்ந்தால் சந்தோசம்.
ஆனால் தொடர விட மாட்டார்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, தமிழ் சிறி said:

யாழ். மாநகர சபையால் முதன்முறையாக காவல் படை உருவாக்கம்!

கொஞ்சம் பொறுங்கோ

யாரைக் கேட்டு இதெல்லாம் தொடங்கினீர்கள் என்று மணிவண்ணனிடம் 3 மணிநேர விசாரணை.

கோத்தாவா கொக்கா.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, ஈழப்பிரியன் said:

ஆஆஆஆ
மாநகரசபைக்கு இப்படியும் அதிகாரங்கள் இருக்கிறதா?

ததேமுன்னணியுடன் இருந்த போது போட்ட நல்ல திட்டங்களை தீட்டி வைத்திருந்தார்கள்.

யார் செய்தாலும் நல்லதே.

சிங்கள அரசுகள் குழம்பாமல் இருந்தால் சரி.

மணிவண்ணன் ஒரு துடிப்பான இளம் அரசியல்வாதி என்பதில் எல்லோருக்கும் ஒரு நல்ல அபிப்பிராயம் இருந்தது
முன்னணியில் இருந்து கொண்டே  இவ்வாறான செயல்களில் ஈடுபட்டிருந்தால் சிறிதளவாவது
முன்னேற்றம் கிடைத்திருக்கும்
சில விடையங்களைக் கையாள்வதில் அவருக்கு அனுபவம் காணாது
எங்களை போன்ற பழுத்த அரசியல்வாதிகளிடம்😄
அவர் இன்னும் பல கல்லெறிகளை வாங்குவார் என்பதில் சந்தேகம் இல்லை

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
19 minutes ago, வாத்தியார் said:

மணிவண்ணன் ஒரு துடிப்பான இளம் அரசியல்வாதி என்பதில் எல்லோருக்கும் ஒரு நல்ல அபிப்பிராயம் இருந்தது
முன்னணியில் இருந்து கொண்டே  இவ்வாறான செயல்களில் ஈடுபட்டிருந்தால் சிறிதளவாவது
முன்னேற்றம் கிடைத்திருக்கும்
சில விடையங்களைக் கையாள்வதில் அவருக்கு அனுபவம் காணாது
எங்களை போன்ற பழுத்த அரசியல்வாதிகளிடம்😄
அவர் இன்னும் பல கல்லெறிகளை வாங்குவார் என்பதில் சந்தேகம் இல்லை

 

அவருக்கு கலாச்சாரத்தை சிதைப்பவர்களுடன் நிறைய தொடர்பிருப்பதாக சொல்கிறார்கள்.

உண்மையானால் அதிலிருந்து வெளியே வர வேண்டும்.

காவல்படை உருவாக்கத்தையும் தடுப்பார்கள் போல இருக்கிறது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

யாழ்ப்பாணம் மாநகர சபையால் அமைக்கப்பட்ட காவல் படை குறித்து விசாரணை

யாழ்ப்பாணம் மாநகர சபையால் அமைக்கப்பட்ட காவல் படை குறித்து விசாரணை

யாழ்ப்பாணம் மாநகர சபையால் அமைக்கப்பட்ட காவல் படை தொடர்பில் மாநகர ஆணையாளரிடம் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

இந்த விடயம் தொடர்பாக அவரிடம் நேற்று (புதன்கிழமை) மாலை சுமார் 3 மணிநேரத்துக்கு மேலாக பொலிஸார் வாக்குமூலத்தினை பதிவு செய்திருந்தனர்.

காவலாளி சேவையை நடத்துவதற்கே பாதுகாப்பு அமைச்சின் அனுமதி பெற்றிருக்க வேண்டும் என்ற நிலையில், காவல்படை என்ற பெயரில் அரச துறையில் ஐவரை கடமைக்கு அமர்த்தியமை தொடர்பிலேயே இந்த விசாரணை முன்னெடுக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

அத்துடன் தமிழீழ விடுதலைப் புலிகளின் காவல்துறையின் சீருடையை ஒத்த சீருடைய அணிந்தமை தொடர்பாக கடமைக்கு அமர்த்தப்பட்ட ஐவரையும் வாக்குமூலம் வழங்க பொலிஸ் நிலையத்திற்கு வருமாறு பொலிஸாரால் கோரப்பட்டுள்ளது.

யாழ்ப்பாணம் மாநகரின் பொது இடங்களில் குப்பை கொட்டினால் 5 ஆயிரம் ரூபாயும் வெற்றிலை துப்பினால் 2 ஆயிரம் ரூபாயும் தண்டப் பணம் அறவிடப்படவுள்ளதாக மாநகர முதல்வர் சட்டத்தரணி விஸ்வலிங்கம் மணிவண்ணன்அறிவித்துள்ளார்.

இந்த நடைமுறையைக் கையாள்வதற்காக யாழ்ப்பாணம் மாநகர காவல் படை உருவாக்கட்டுள்ளதாக தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

jaffna-1-1140x570.jpg

https://athavannews.com/2021/1208386

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இனி அடாவடி பிக்குகள் சும்மா இருக்குங்கள் என்கிறீர்கள்? ஒரு கதகளி ஆடாமல் ஓயாதுகள். 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • உற‌வே ஏன் சீமான் மீது இம்புட்டு வ‌ன்ம‌ம்..........2009 முள்ளிவாய்க்கால் இன‌ அழிப்புக்கு துணை போனாரா அல்ல‌து த‌லைவ‌ருக்கு எங்க‌ட‌ போராட்ட‌த்துக்கு வைக்கோ ராம‌தாஸ் திருமாள‌வ‌ன் போன்ற‌வ‌ர்க‌ள் போல் துரோக‌ம் செய்தாரா...............எல்லாம் அழிந்த‌ நிலையில் த‌மிழீழ‌ம் என்ற‌ பெய‌ரை உயிர்ப்போடு வைத்து இருப்ப‌து 30ல‌ச்ச‌த்துக்கு மேல் ப‌ட்ட‌  எம் தொப்பில் கொடி உற‌வுக‌ள்...........பிர‌பாக‌ர‌ன் என்றாலே தீவிர‌வாதி என்று இருந்த‌ த‌மிழ் நாட்டில் பிர‌பாக‌ர‌ன் எம் இன‌த்தின் த‌லைவ‌ர் என்று கோடான‌ கோடி ம‌க்க‌ள் கேட்டுக்கும் ப‌டி சொன்ன‌துக்கா சீமான் மீது இம்ம‌ட்டு வெறுப்பா சீ சீ 2009க்கு முத‌ல் ஈழ‌ம் ஈழ‌ம் என்று க‌த்தின‌ கூட்ட‌ம் இப்ப‌ சிங்க‌ள‌வ‌னுக்கு விள‌ம்ப‌ர‌ம் செய்துக‌ள் இதை விட‌ கேவ‌ல‌ம் என்ன‌ இருக்கு...............அந்த‌ க‌ரும‌த்தை நான் தொட்டு என்ர‌ ந‌ட்ப்பு வ‌ட்டார‌ம் தொட்டு ஒருத‌ரும் கேடு கெட்ட‌ செய‌ல் செய்த‌து இல்லை................சீமான் மீது விம‌ர்ச‌ன‌ம் வைக்க‌லாம் ஆனால் அவ‌ர் கொண்ட‌ கொள்கையோடு உறுதியாய் நிக்கிறார் த‌னித்து நிக்கிறார்...........சீமான் காசு மீது பேர் ஆசை பிடித்த‌வ‌ர் என்றால் இந்த‌ தேர்த‌லில் ஆதிமுக்கா கூட‌ கூட்ட‌னி வைச்சு 500 கோடியும் 8 தொகுதியும் ஜா ப‌ழ‌னிசாமி கொடுத்து இருப்பார்................ த‌மிழ‌க‌ அர‌சிய‌ல் வாதிக‌ளை பார்த்தால் கூடுத‌லான‌ ஆட்க‌ள்  பெண்க‌ளுட‌ல் க‌ள்ள‌ உற‌வு வைத்து இருந்த‌வை அந்த‌ வ‌கையில் அண்ண‌ன் சீமான் வாழ்த்துக்க‌ள் ப‌ட‌ம் எடுத்த‌ போது விஜ‌ய‌ல‌ட்சுமி கூட‌ காத‌லோ அல்ல‌து ஏதோ ஒரு உற‌வு இருந்து இருக்கு.............நெற்றிக்கண் திறப்பினும் குற்றம் குற்றமே...........ஆனால் அண்ண‌ன் சீமான் அவ‌ரின் திரும‌ண‌த்தை வெளிப்ப‌டையாய் தான் செய்தார் அப்போது ஒரு பிர‌ச்ச‌னையும் வ‌ர‌ வில்லை அர‌சிய‌லில் வ‌ள‌ந்து வ‌ரும் போது அந்த‌ பெண்ண‌ திராவிட‌ கும்ப‌ல் ஊட‌க‌ம் முன்னாள் பேச‌ விடுவ‌து ம‌னித‌ குல‌த்துக்கு அழ‌கில்லை................. சீமான் த‌வ‌று செய்தால் அதை நான் ப‌ல‌ இட‌த்தில் சுட்டி காட்டி இருக்கிறேன்.............எங்க‌ட‌ த‌மிழீழ‌ தேசிய‌ த‌லைவ‌ர் எப்ப‌டி ப‌ட்ட‌வ‌ர் என்று எம‌க்கு ந‌ன்றாக‌வே தெரியுன் அண்ண‌ன் சீமான் ஒரு ப‌டி மேல‌ போய் அள‌வுக்கு அதிக‌மாய் த‌லைவ‌ரை புக‌ழ் பாட‌ தொட‌ங்கி விட்டார்.............ஆர‌ம்ப‌ கால‌த்தில் அதிக‌ம் பேசினார் அப்போது எம‌க்கே தெரிந்த‌து அது உண்மை இல்லை என்று............இப்போது சீமானின் பேச்சில் ப‌ல‌ மாற்ற‌ம் தெரியுது.................நிஜ‌த்தில் ந‌ல்ல‌வ‌ர் அன்பான‌வ‌ர் ஆனால் அவ‌ரை சுற்றி ப‌ல‌ துரோகிய‌ல் இருக்கின‌ம் அவ‌ருட‌ன் க‌தைப்ப‌தை ரெக்கோட் ப‌ண்ணி  விஜேப்பியின் ஆட்க‌ளுக்கு போட்டு காட்டின‌து அப்ப‌டி க‌ட்சிக்குள் இருந்த‌வையே  ப‌ல‌ துரோக‌ங்க‌ள் செய்த‌வை உற‌வே 2009க்கு முத‌ல் த‌மிழீழ‌த்தில் ஒரு மாத்தையா ஒரு க‌ருணா.............த‌மிழ் நாட்டில் ப‌ல‌ நூறு க‌ருணா ப‌ல‌ நூறு மாத்தையா இதை எல்லாம் தாண்டி க‌ன‌த்த‌ வ‌லியோடு தான் க‌ட்சியை கொண்டு ந‌ட‌த்துகிறார் த‌ன‌து ம‌னைவிக்கு இந்த‌ தேர்த‌லில் சீட் த‌ர‌வில்லை என்று க‌ட்சியை விட்டு போன‌ ந‌ப‌ரும் இருக்கின‌ம்............... உங்க‌ட‌ பாதுகாப்புக்கு சொல்லுறேன் உற‌வே த‌மிழ் நாட்டுக்கு போகும் நிலை வ‌ந்தால் நாம் த‌மிழ‌ர் க‌ட்சியில் ப‌ய‌ணிக்கும் இள‌ம் பெடிய‌ங்க‌ள் கூட‌ அண்ண‌ன் சீமானை ப‌ற்றி யாழில் எழுதுவ‌து போல் நேரில் த‌ப்பா க‌தைச்சு போடாதைங்கோ.............நீயார‌ட‌ எங்க‌ள் அண்ண‌ன‌ விம‌ர்சிக்க‌ என்று ச‌ண்டைக்கும் வ‌ந்து விடுவின‌ம்.............இப்ப‌டி ப‌ல‌ ச‌ம்ப‌வ‌ங்க‌ள் இருக்கு சொல்ல‌.............இது யாழ்க‌ள் ஆனால் இதே முக‌ நூல் என்றால் நாம் த‌மிழ‌ர் க‌ட்சி ஜ‌ரிம் சீமான சீண்டி பாப்ப‌வ‌ர்க‌ளுக்கு அவேன்ட‌ பானியில் ப‌தில் அளிப்பார்க‌ள்...............6வ‌ருட‌த்துக்கு முத‌ல் என‌க்கும் திமுக்கா சொம்புக்கும் வாத‌ம் ஏற்ப‌ட்டு க‌ட‌சியில் எப்ப‌டி போய் முடிந்த‌து என்று என‌க்கு ம‌ட்டும் தான் தெரியும்............யாழில் இருக்கும் மூத்த‌வையின் சொல்லை கேட்டு யாழில் நான் இப்ப‌ யார் கூட‌வும் முர‌ன் ப‌டுவ‌தில்லை..........இது தான் கால‌ நீர் ஓட்ட‌த்தில் பெரிய‌வ‌ர்க‌ள் சொல்ல‌  என்னை நானே மாற்றி கொண்டேன்.............. வெற்றியோ தோல்வியே த‌னித்து போட்டி யார் கூட‌வும் கூட்ட‌னி இல்லை அதுக்காக‌ தான் பெரும்பாலான‌ த‌மிழ‌க‌ இளைஞ்ர்க‌ள் வ‌ய‌தான‌வ‌ர்க‌ள் அண்ண‌ன் சீமானை தொட‌ர்ந்து ஆத‌ரிக்கின‌ம்🙏🥰.................
    • மக்கள் ஏமாற்றப்படுக்கின்றார்கள் தான் ஆனால் நூறுவீதம் இல்லை.. அதே நேரம் தமிழ் அரசியல்வாதிகளும் சரியானவர்கள் இல்லை. இருப்பினும் புலம்பெயர்ந்த பலரும் அங்கிருப்பவர்களும் தமிழர் உரிமைகள் பற்றி விவாதிக்கொண்டிருக்கும் வேளையில்...... தமிழர் பகுதிகளில் ஆடம்பர உல்லாச விடுதிகளும், புலம்பெயர் மக்களின் கோடிக்கணக்கான செலவுடன் மாட மாளிகைகளும் திறந்த வெளி  அட்டகாச நிகழ்வுகளும் புலம்பெயர் மக்களின் கோடை கால கொண்டாட்ட சுற்றுலாக்களும்..... தமிழர்களுக்கு பிரச்சனை ஏதுமில்லை என்பதை சொல்லி நிற்கின்றது.   போர் மூலம் வந்த  வறுமையால் வாடுபவர்களை இனப்பிரச்சனை அட்டவணைக்குள் சேர்க்க உடன்படுமா அந்த சிங்கள இனவாத அரசுகள்? புலம்பெயர் தமிழர்களே ஊரில் வீடுகட்டிக்கொண்டு  பிற்காலத்தில்  நிம்மதியாக வாழலாம் எனும் போது.....?!  
    • சீமானுக்காக எதையும் தாங்குவார்கள் புலன்பெயர்ந்த ஈழதமிழர்கள். தேர்தலில் சீமான் வெற்றிபெறவில்லை என்றால் மெசின் மோசடி , சீமான் ஆங்கில மோகத்தால் மகனுக்கு தமிழ்நாட்டிலேயே ஆங்கில வழிக் கல்வி கற்ப்பிப்பது தமிழ் பள்ளிகள் சரியில்லை. தமிழ் தமிழ் என்று முழங்குவது அவரது அரசியல் பிழைப்பு.  இவர்  தமிழ்நாட்டு முதல் அமைச்சராக வந்தால் அரசுபாடசாலைகளிலும் தமிழை தூக்கி எறிந்துவிட்டு ஆங்கிலம் மூலம் கல்வி கற்பிப்பார் தமிழ் செய்த அதிஷ்டம் அவர் முதல் அமைச்சராகும் வாய்ப்பே  இல்லை
    • அங்கு ஒரு வீட்டில் கஞ்சா புகைத்திருக்கின்றனர். பின்னர், முதலாவதாக, உடனிருந்து புகைத்த நண்பரே குத்திக் கொல்லப்பட்டிருக்கின்றார். குற்றவாளி என்று கைது செய்யப்பட்டவர் கஞ்சாவில் ஒரு வலுவான போதைப் பொருளை தன் நண்பர் கலந்து விட்டதாக இப்பொழுது சொல்லுகின்றார். எதைக் கலந்தாலும், எதைப் புகைத்தாலும், ஓட ஓட சக மனிதர்களை கத்தியால் குத்தும் அளவிற்கு நிலை தடுமாறுமா.....😢 Following his arrest in the frenzied attack, the suspect, Christian Soto, waived his Miranda rights to remain silent and told investigators he was high on marijuana he claimed was given to him by one of the slaying victims that he believed was laced with a strong narcotic, Winnebago County State's Attorney J. Hanley said at a news conference Thursday. https://abcnews.go.com/US/deadly-rockford-illinois-stabbing-spree/story?id=108605783    
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.