Jump to content

யாழில் பொது இடங்களில் குப்பை கொட்டினால் 5000, வெற்றிலை துப்பினால் 2000!


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

#யாழில் பொது இடங்களில் குப்பை கொட்டினால் 5000, வெற்றிலை துப்பினால் 2000! #யாழ்ப்பாணம் மாநகர முதல்வர் அறிவிப்பு. இன்று முதல் மாநகர காவல் படை மூலமாக பணிகள் ஆரம்பம்.

Bild

Bild

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

யாழ்.மாநகர காவல் படை, தனது பணிகளை ஆரம்பித்துள்ளது

 
168243129_145119737541120_68138312307250
 31 Views

யாழ் .மாநகர முதல்வர் விஸ்வலிங்கம் மணிவண்ணனால் உருவாக்கப்பட்ட யாழ் மாநகர காவல் படை முதல் முறையாக இன்று காலை தமது பணிகளை ஆரம்பித்துள்ளது.

யாழ்ப்பாணம் மாநகரில் சுகாதார நடைமுறைகளை கண்காணித்தல், கழிவகற்றல் பொறிமுறையை கண்காணித்தல், மற்றும் மாநகரின் ஒழுங்கு உள்ளிட்டவற்றை கண்காணிப்பதற்காக குறித்த மாநகர பாதுகாப்பு படை உருவாக்கப்பட்டுள்ளது.

குறித்த மாநகர பாதுகாப்பு படை நாளை அங்குரார்ப்பணம் செய்துவைக்கப்படவுள்ளது.

168019606_145575107494460_25217898653008

இதையடுத்து இன்று காலை பரீட்சார்த்தமாக நல்லூர் சுற்றாடலில் வாகன ஒயில் ஊற்றப்பட்ட நிலையில் விபத்துக்களை தவிர்க்க முன்னாயத்த நடவடிக்கைகளை குறித்த மாநகர பாதுகாப்பு படை கண்காணித்தது.ஷ

யாழ் மாநகர சுகாதார பணிமனைகளில் பணியாற்றிய உத்தியோகத்தர்கள் 5 பேரை புதிய சீருடை ஒன்றை அறிமுகம் செய்து மாநகர காவல் படை என்ற பெயரில் யாழ் மாநகரசபை உருவாக்கியுள்ளது.

 

https://www.ilakku.org/?p=46756

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 minutes ago, உடையார் said:

யாழ்.மாநகர காவல் படை, தனது பணிகளை ஆரம்பித்துள்ளது

நல்லதொரு ஆரம்பம். சட்டங்கள் வலிமையாக்கப்பட வேண்டும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நாசமாறுவார்..... வாய் சிவக்க வெத்திலை போட்டு, துப்பவும் விடுகிறாங்களில்லை. 🥸 😡

- ஊர்க் கிழவி & கிழவன். -

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மிகவும் நல்ல செயற்பாடு .......!  👍

3 minutes ago, தமிழ் சிறி said:

நாசமாறுவார்..... வாய் சிவக்க வெத்திலை போட்டு, துப்பவும் விடுகிறாங்களில்லை. 🥸 😡

- ஊர்க் கிழவி & கிழவன். -

எங்காவது வேலிக்கதியாலுக்க துப்புறதுக்கும் முடியாது....... எல்லா இடமும் மதிலாய் கிடக்கு......!   😂

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நல்ல விடயம்..👌

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, தமிழ் சிறி said:

நாசமாறுவார்..... வாய் சிவக்க வெத்திலை போட்டு, துப்பவும் விடுகிறாங்களில்லை. 🥸 😡

- ஊர்க் கிழவி & கிழவன். -

ஆட்டோ பிடிச்சு, வெளியாலை, தின்னவேலி, கொக்குவில் பக்கமா போய், துப்பிவிட்டு வரலாம் தானே. 😜

இந்த யூனிபோர்ம்.... எங்கையோ பார்த்த மாதிரி கிடக்குதே.... 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
10 minutes ago, Nathamuni said:

இந்த யூனிபோர்ம்.... எங்கையோ பார்த்த மாதிரி கிடக்குதே.... 

 

👏👏👏

அதுக்கும் ஆப்பு வைச்சிடுவாங்க நம்ம ஆட்கள்

Enforcement  Team  

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
49 minutes ago, Nathamuni said:

இந்த யூனிபோர்ம்.... எங்கையோ பார்த்த மாதிரி கிடக்குதே.... 

உஸ்.... மூச்சுக் காட்டாதீர்கள், போட்டுக் கொடுத்து விடுவார்கள். 🤫

Link to comment
Share on other sites


எதிர் பார்த்ததை விட மணிவண்ணன் நன்றாக செய்கின்றார். இருக்கின்ற சட்டங்களையும், வளங்களையும் வைத்து சிறப்பாக செயற்படவேண்டும்  

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எப்பபோவோ செய்யவேண்டிய விடயம் இப்பவாவது செய்ய நினைக்கிறார்கள் ...அது சரி பழக்க தோஷம் விடாது கண் டியளோ  ?

 "தம்பி பஸ்சை நிப்பாட்டு  துப்பி போட்டு வாறன்"  😀
 
அண்மையில் நான் பார்த்த வீடியோக்களில் எல்லாருடைய  வாயும் வெத்திலைக் காவி படிந்த படி ....வேறேதும் வைத்து மெல்லு ( சப்பு ) வார்களோ ? 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 minutes ago, நிலாமதி said:

எப்பபோவோ செய்யவேண்டிய விடயம் இப்பவாவது செய்ய நினைக்கிறார்கள் ...அது சரி பழக்க தோஷம் விடாது கண் டியளோ  ?

 "தம்பி பஸ்சை நிப்பாட்டு  துப்பி போட்டு வாறன்"  😀
 
அண்மையில் நான் பார்த்த வீடியோக்களில் எல்லாருடைய  வாயும் வெத்திலைக் காவி படிந்த படி ....வேறேதும் வைத்து மெல்லு ( சப்பு ) வார்களோ ? 

பீற்றூட்கறி சாப்பிட்டாலும், வாய் சிவக்கும். 😃

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, குமாரசாமி said:

#யாழில் பொது இடங்களில் குப்பை கொட்டினால் 5000, வெற்றிலை துப்பினால் 2000! #யாழ்ப்பாணம் மாநகர முதல்வர் அறிவிப்பு. இன்று முதல் மாநகர காவல் படை மூலமாக பணிகள் ஆரம்பம்.

Bild

Bild

 

ஆஆஆஆ
மாநகரசபைக்கு இப்படியும் அதிகாரங்கள் இருக்கிறதா?

ததேமுன்னணியுடன் இருந்த போது போட்ட நல்ல திட்டங்களை தீட்டி வைத்திருந்தார்கள்.

யார் செய்தாலும் நல்லதே.

சிங்கள அரசுகள் குழம்பாமல் இருந்தால் சரி.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நல்ல விடயம்

ஆனால் தமிழர்களிடையே இவ்வாறான விடயங்களை செயற்படுத்துவது அவ்வளவு எளிதல்ல.

புலிகள் கூட தோற்ற விடயம் இது.

இது மணிவண்ணனுக்கு நற்பெயருக்கு பதிலாக எதிரானவர்களையே வளர்த்து விடும். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

 

யாழ். மாநகர சபையால் முதன்முறையாக காவல் படை உருவாக்கம்!

யாழ். மாநகர சபையால் முதன்முறையாக காவல் படை ஒன்று உருவாக்கப்பட்டுள்ளது.

குறித்த மாநகரப் பாதுகாப்புப் படை நாளை அங்குரார்ப்பணம் செய்யப்படவுள்ள நிலையில், இன்று (புதன்கிழமை) பரீட்சார்த்தப் பணியை குறித்த காவல்படை முன்னெடுத்துள்ளது.

இதன்படி, நல்லூர் சுற்றாடலில் வாகன ஒயில் ஊற்றப்பட்டுள்ள நிலையில், விபத்துக்களைத் தவிர்க்கும் முகமான முன்னாயத்த நடவடிக்கைகளை இந்த மாநகர காவல் படை கண்காணித்தது.

யாழ். மாநகரில் சுகாதார நடைமுறைகளைக் கண்காணிப்பதற்கும் கழிவகற்றல் பொறிமுறையைக் கண்காணிப்பதற்கும் மற்றும் மாநகரின் ஒழுங்குமுறை உள்ளிட்டவற்றைக் கண்காணிப்பதற்கும் என குறித்த மாநகர காவல் படை உருவாக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து, புதிய காவல் படையில் பணிபுரியும் ஒருவர் தெரிவிக்கையில், “யாழ். மாநகர சபையின் காவல் படையின் பணி இன்று முதல் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

நல்லூர் வீதியில் இந்தப் பணியை ஆரம்பித்தோம். வாகனம் ஒன்றிலிருந்து கழிவு எண்ணெய் வீதியில் ஊற்றப்பட்டிருந்த நிலையில் பெண்ணொருவர் வழுக்கி விழுந்து காயமடைந்துள்ளார்.

இந்நிலையில், குறித்த பகுதியில் விபத்துக்கள் ஏற்படாவண்ணம் நாம் பாதுகாப்பு நடவடிக்கையை மேற்கொண்டுள்ளோம். எமது பணி சிறப்பாக உள்ளது” என்று குறிப்பிட்டுள்ளார்.

City-Security-Forces-For-The-First-Time-By-The-Jaffna-Municipal-Council-3.jpg

City-Security-Forces-For-The-First-Time-By-The-Jaffna-Municipal-Council.jpg

City-Security-Forces-For-The-First-Time-By-The-Jaffna-Municipal-Council-4.jpg

https://athavannews.com/2021/1208291

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 minutes ago, தமிழ் சிறி said:

யாழ். மாநகர சபையால் முதன்முறையாக காவல் படை உருவாக்கம்!

பாடசாலை தொடங்கும் முடியும் நேரங்களில் இவர்களை பணியில் ஈடுபடுத்த வேண்டும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எந்த ஆரோக்கிய பயனும் இல்லை என்றால் 
வெற்றிலையை தடை செய்து விடலாம் .... சாப்பிடுபவர்கள் எங்காவது துப்ப தானே செய்வார்கள்?
மக்கள் குப்பைகளை கொட்டுவதும் உரிய முறைமைகளை முதலில் உருவாக்க வேண்டும். 

யாழ் மாநகர சபை அள்ளும் குப்பைகளை என்ன செய்கிறார்கள்?
யாருக்காவது தெரியுமா? 

சீமான் இனவாதம் பேசுவதால்தான் மக்கள் இவ்வாறு குப்பை கொட்டுகிறார்கள் 
தெரிந்தோ தெரியாமலோ புலிகளின் காலத்தில் வாழ்ந்தவர்கள் எப்படியும் 
குப்பைகளை கொட்டிக்கொண்டுதான் திரிவார்கள். கோத்த பையாவின் இது போன்ற சேவை 
மக்களுக்கு தேவை. 

(வாசித்துக்கொண்டு வரும்போது இது யாழ் களத்தில் இருப்பதுபோல  தெரியவில்லை. உண்மையிலேயே சந்தேகம் வந்துவிட்டது ... இப்போதான் யாழ் களத்தில் இருக்கும் திரிபோல இருக்கு வாசிப்பவர்களுக்கு என்னைப்போல எங்கு வாசித்துக்கொண்டு இருக்கிறோம் என்ற சந்தேகமும் வாராது) 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
21 minutes ago, Maruthankerny said:

எந்த ஆரோக்கிய பயனும் இல்லை என்றால் 
வெற்றிலையை தடை செய்து விடலாம் .... சாப்பிடுபவர்கள் எங்காவது துப்ப தானே செய்வார்கள்?
மக்கள் குப்பைகளை கொட்டுவதும் உரிய முறைமைகளை முதலில் உருவாக்க வேண்டும். 

யாழ் மாநகர சபை அள்ளும் குப்பைகளை என்ன செய்கிறார்கள்?
யாருக்காவது தெரியுமா? 

குப்பைகளை recycling & landfill என்று பிரித்தாலே குப்பைகளின் அளவு குறைந்துவிடும்.

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, தமிழ் சிறி said:

 

இப்படியான நடைமுறைகள் தொடர்ந்தால் சந்தோசம்.
ஆனால் தொடர விட மாட்டார்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, தமிழ் சிறி said:

யாழ். மாநகர சபையால் முதன்முறையாக காவல் படை உருவாக்கம்!

கொஞ்சம் பொறுங்கோ

யாரைக் கேட்டு இதெல்லாம் தொடங்கினீர்கள் என்று மணிவண்ணனிடம் 3 மணிநேர விசாரணை.

கோத்தாவா கொக்கா.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, ஈழப்பிரியன் said:

ஆஆஆஆ
மாநகரசபைக்கு இப்படியும் அதிகாரங்கள் இருக்கிறதா?

ததேமுன்னணியுடன் இருந்த போது போட்ட நல்ல திட்டங்களை தீட்டி வைத்திருந்தார்கள்.

யார் செய்தாலும் நல்லதே.

சிங்கள அரசுகள் குழம்பாமல் இருந்தால் சரி.

மணிவண்ணன் ஒரு துடிப்பான இளம் அரசியல்வாதி என்பதில் எல்லோருக்கும் ஒரு நல்ல அபிப்பிராயம் இருந்தது
முன்னணியில் இருந்து கொண்டே  இவ்வாறான செயல்களில் ஈடுபட்டிருந்தால் சிறிதளவாவது
முன்னேற்றம் கிடைத்திருக்கும்
சில விடையங்களைக் கையாள்வதில் அவருக்கு அனுபவம் காணாது
எங்களை போன்ற பழுத்த அரசியல்வாதிகளிடம்😄
அவர் இன்னும் பல கல்லெறிகளை வாங்குவார் என்பதில் சந்தேகம் இல்லை

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
19 minutes ago, வாத்தியார் said:

மணிவண்ணன் ஒரு துடிப்பான இளம் அரசியல்வாதி என்பதில் எல்லோருக்கும் ஒரு நல்ல அபிப்பிராயம் இருந்தது
முன்னணியில் இருந்து கொண்டே  இவ்வாறான செயல்களில் ஈடுபட்டிருந்தால் சிறிதளவாவது
முன்னேற்றம் கிடைத்திருக்கும்
சில விடையங்களைக் கையாள்வதில் அவருக்கு அனுபவம் காணாது
எங்களை போன்ற பழுத்த அரசியல்வாதிகளிடம்😄
அவர் இன்னும் பல கல்லெறிகளை வாங்குவார் என்பதில் சந்தேகம் இல்லை

 

அவருக்கு கலாச்சாரத்தை சிதைப்பவர்களுடன் நிறைய தொடர்பிருப்பதாக சொல்கிறார்கள்.

உண்மையானால் அதிலிருந்து வெளியே வர வேண்டும்.

காவல்படை உருவாக்கத்தையும் தடுப்பார்கள் போல இருக்கிறது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

யாழ்ப்பாணம் மாநகர சபையால் அமைக்கப்பட்ட காவல் படை குறித்து விசாரணை

யாழ்ப்பாணம் மாநகர சபையால் அமைக்கப்பட்ட காவல் படை குறித்து விசாரணை

யாழ்ப்பாணம் மாநகர சபையால் அமைக்கப்பட்ட காவல் படை தொடர்பில் மாநகர ஆணையாளரிடம் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

இந்த விடயம் தொடர்பாக அவரிடம் நேற்று (புதன்கிழமை) மாலை சுமார் 3 மணிநேரத்துக்கு மேலாக பொலிஸார் வாக்குமூலத்தினை பதிவு செய்திருந்தனர்.

காவலாளி சேவையை நடத்துவதற்கே பாதுகாப்பு அமைச்சின் அனுமதி பெற்றிருக்க வேண்டும் என்ற நிலையில், காவல்படை என்ற பெயரில் அரச துறையில் ஐவரை கடமைக்கு அமர்த்தியமை தொடர்பிலேயே இந்த விசாரணை முன்னெடுக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

அத்துடன் தமிழீழ விடுதலைப் புலிகளின் காவல்துறையின் சீருடையை ஒத்த சீருடைய அணிந்தமை தொடர்பாக கடமைக்கு அமர்த்தப்பட்ட ஐவரையும் வாக்குமூலம் வழங்க பொலிஸ் நிலையத்திற்கு வருமாறு பொலிஸாரால் கோரப்பட்டுள்ளது.

யாழ்ப்பாணம் மாநகரின் பொது இடங்களில் குப்பை கொட்டினால் 5 ஆயிரம் ரூபாயும் வெற்றிலை துப்பினால் 2 ஆயிரம் ரூபாயும் தண்டப் பணம் அறவிடப்படவுள்ளதாக மாநகர முதல்வர் சட்டத்தரணி விஸ்வலிங்கம் மணிவண்ணன்அறிவித்துள்ளார்.

இந்த நடைமுறையைக் கையாள்வதற்காக யாழ்ப்பாணம் மாநகர காவல் படை உருவாக்கட்டுள்ளதாக தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

jaffna-1-1140x570.jpg

https://athavannews.com/2021/1208386

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இனி அடாவடி பிக்குகள் சும்மா இருக்குங்கள் என்கிறீர்கள்? ஒரு கதகளி ஆடாமல் ஓயாதுகள். 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • போட்டியில் இணைந்துகொண்ட @கறுப்பிக்கும் @Eppothum Thamizhan க்கும் வெற்றிக்கனியைப் பறிக்க வாழ்த்துக்கள்! @கறுப்பி 17 கேள்விக்கு பதிலைத் தாருங்கள்
    • வேடிக்கையை விட, இதில் யதார்தத்தை குறும்பாக சொல்வதுதான் தொனிக்கிறது. என்னதான் வெளி உலகில் கணவன் ஆண்டான் மனைவி அடிமை என அன்றைய சமூகம் கட்டமைத்து வைத்திருந்தாலும், நிஜ வாழ்வில், வீட்டுள், இந்த இறுக்கங்கள் இருப்பதில்லை என்ற முரண்நகையை கேலியாக சொல்கிறதென நான் நினைக்கிறேன். டெல்லிக்கு ராஜா, வீட்ல வேலைக்காரன் என்பதை போல.
    • சிறிய வயது பெட்டைகள் இந்தா பார் செய்து காட்டுகிறேன் என்று சவால் விட்டுட்டுப் போயிருப்பார்கள். மூட்டை மூட்டையாக தூக்கிக் கொண்டு போறதை பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். இவர்களை மட்டும் மடக்கி பிடித்திருக்கிறார்கள். கட்டாருடன் கதைத்து 7 பேரை விடுதலை செய்த மாதிரி ஜெய்சங்கர் வந்து கதைத்து இவர்களையும் விடுவிக்க வேண்டும்.
    • வெற்றி பெற‌ வாழ்த்துக்க‌ள் ந‌ண்பா🙏🥰............................................
    • 1)    ஆரம்பச் சுற்றுப் போட்டிகளில் முன்னணியில் வரும் நான்கு அணிகள் எவை? சரியான பதில் ஒவ்வொன்றுக்கும் தலா 2 புள்ளிகள் வீதம் வழங்கப்படும். தவறான பதில் ஒவ்வொன்றுக்கும் தலா 2 புள்ளிகள் குறைக்கப்படும்.    CSK, KKR, RR,SRH 2)    முதல் நான்கு அணிகளையும் சரியான வரிசையில் பட்டியல் இடுக.       #1 - ? (சரியான பதில்: +4 புள்ளிகள், தவறான பதில்: -4  புள்ளிகள் ) RR     #2 - ?  (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -3 புள்ளிகள் ) CSK     #3 - ?  (சரியான பதில்: +2 புள்ளிகள், தவறான பதில்: -2  புள்ளிகள்) KKR     #4 - ?  (சரியான பதில்: +1 புள்ளி, தவறான பதில்: -1 புள்ளி ) SRH 3)    ஆரம்பச் சுற்றுப் போட்டிகளில் இறுதியாக வரும் அணி எது? (சரியான பதில்: +2 புள்ளிகள், தவறான பதில்: -2  புள்ளிகள்) RCB 4)   மே 21, வெள்ளி 19:30 அஹமதாபாத்  Qualifier 1 போட்டியில் வெற்றி பெறும் அணி எது? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -3  புள்ளிகள்) Qualifier 1: 1st placed team v 2nd placed team CSK 5)    மே 22, புதன் 19:30 அஹமதாபாத் Eliminator போட்டியில் வெற்றி பெறும் அணி எது? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -3  புள்ளிகள்) Eliminator: 3rd placed team v 4th placed team SRH 6)   மே 24 வெள்ளி 19:30  சென்னை Qualifier 2 போட்டியில் வெற்றி பெறும் அணி எது? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -3  புள்ளிகள்) Qualifier 2: Loser of Qualifier 1 v Winner of Eliminator RR 7)    மே 26, ஞாயிறு இறுதிப் போட்டியில் வெற்றி பெறும் அணி எது? (சரியான பதில்: +5 புள்ளிகள், தவறான பதில்: -5  புள்ளிகள்) Final: Winner of Qualifier 1 v Winner of Qualifier 2 RR 8 ) இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் அதிக ஓட்டங்களை பெறும் அணி எது? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -1  புள்ளி) SRH 9)    இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் குறைந்த ஓட்டங்களை பெறும் அணி எது? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -1  புள்ளி) GT 10)    இந்த தொடரில் அதிக ஒட்டங்கள் (Orange cap) பெறும் வீரர் யார்? ( சரியான பெயரைக் குறிப்பிடுபவருக்கு +4 புள்ளிகள், தவறான பெயருக்கு -2 புள்ளிகள் Jos Buttler 11)    இந்த தொடரில் அதிக ஒட்டங்கள் பெறுபவர் (Orange cap) எந்த அணியை சேர்ந்தவர்? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -1  புள்ளி, கேள்வி 10 க்கான வீரர் இந்தப் பதிலுக்கான அணியில் இருக்கவேண்டிய அவசியமில்லை! ) RR 12)    இந்த தொடரில் அதிக விக்கற்றுகள் (Purple cap) பெறும் வீரர் யார்? (சரியான பெயரைக் குறிப்பிடுபவருக்கு +4 புள்ளிகள், தவறான பெயருக்கு -2 புள்ளிகள்) Yusvendra Chahal 13)    இந்த தொடரில் அதிக விக்கற்றுகள் (Purple cap) பெறுபவர் எந்த அணியை சேர்ந்தவர்? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -1  புள்ளி,  கேள்வி 12 க்கான வீரர் இந்தப் பதிலுக்கான அணியில் இருக்கவேண்டிய அவசியமில்லை! ) RR 14)    இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் அதிக ஒட்டங்கள் பெறும் வீரர் யார்? (சரியான பெயரைக் குறிப்பிடுபவருக்கு +4 புள்ளிகள், தவறான பெயருக்கு -2 புள்ளிகள் ) Virat Kholi 15)    இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் அதிக ஒட்டங்கள் பெறுபவர் எந்த அணியை சேர்ந்தவர்? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -1  புள்ளி,  கேள்வி 14 க்கான வீரர் இந்தப் பதிலுக்கான அணியில் இருக்கவேண்டிய அவசியமில்லை! ) SRH 16)    இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் அதிக விக்கெட் எடுக்கும் பந்து வீச்சாளர் யார்? (சரியான பெயரைக் குறிப்பிடுபவருக்கு +4 புள்ளிகள், தவறான பெயருக்கு -2 புள்ளிகள்) Jasprit Bumrah 17)    இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் அதிக விக்கெட் எடுக்கும் பந்து வீச்சாளர் எந்த அணியை சேர்ந்தவர்? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -1  புள்ளி,  கேள்வி 16 க்கான வீரர் இந்தப் பதிலுக்கான அணியில் இருக்கவேண்டிய அவசியமில்லை! ) MI 18)    இந்த தொடரில் சிறந்த் ஆட்டக்காரர் (Player of the Series) யார்? (சரியான பெயரைக் குறிப்பிடுபவருக்கு +4 புள்ளிகள், தவறான பெயருக்கு -2 புள்ளிகள்) Jos Buttler 19)    இந்த தொடரில் சிறந்த் ஆட்டக்காரர் (Player of the season) எந்த அணியை சேர்ந்தவர்? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -1  புள்ளி,  கேள்வி 18 க்கான வீரர் இந்தப் பதிலுக்கான அணியில் இருக்கவேண்டிய அவசியமில்லை! ) CSK 20)    இந்த தொடரில் Fair Play Award யை பெறும் அணி எது? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -1  புள்ளி) SRH
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.