Jump to content

மண்டேலா - யோகி பாபுவின் `மண்டேலா'... இந்தப் படத்தை ஏன் கொண்டாடவேண்டும்?


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
மண்டேலா
 
மண்டேலா

'ஆண்டவன் கட்டளை' படத்துக்குப் பிறகு அழுத்தமான ஒரு பாத்திரம் யோகிபாபுவுக்கு. காமெடியனாகத் திரிந்தவர், கதைக்கான நடிகனாக ஒரு படி மேலேறி முத்திரைப் பதித்திருக்கிறார். எதுவும் அறிந்திராத அப்பாவியாகச் சாதிய தீக்கு இரையாகி அப்பாவி முகம் காட்டும்போது பரிதாபத்தை ஏற்படுத்துபவர், பின்னர் அரசியல்வாதிகளை பெண்டெடுக்கும்போது நம்மையும் நிமிர்ந்து உட்கார வைக்கிறார். வெறும் ஹீரோவாக நடிப்பதற்கும் கதையின் நாயகனாக நடிப்பதற்கும் உள்ள வேறுபாடுகளை இந்தப் படம் உணர்த்துகிறது. அந்த வகையில் யோகி பாபுவுக்கு ஸ்பெஷல் ஹார்ட்டின்!

 

ஊர் போஸ்ட் மாஸ்டர் தேன்மொழியாக ஷீலா ராஜ்குமார். யோகி பாபுவுக்கு 'மண்டேலா' பெயர்க் காரணம் தொடங்கி, அடையாள அட்டை, சேமிப்புக் கணக்கு, இந்திய ஜனநாயகத்தில் ஒரு வாக்கின் அருமை பெருமையை உணர்த்துவது என எதையும் போரடிக்கும் மெசேஜாகப் பதிவு செய்யாமல் கதையின் போக்கிலேயே புரியவைக்கும் பாத்திரம். படம் நெடுக யோகிபாபுவுடன் உலாவரும் அந்த கிர்தா 'கான்' சிறுவன், ஊர் பெரியவராகப் பெரியாரின் சீடனாகச் சங்கிலி முருகன், வேட்பாளர்களாக ஜி.எம்.சுந்தர், கண்ணா ரவி என எல்லோரும் தங்களின் பாத்திரங்களுக்குச் சரியாகப் பொருந்திப் போயிருக்கின்றனர். எந்தச் சண்டையென்றாலும் செருப்பைக் கழற்றிவிட்டுவிட்டு கோதாவுக்குள் குதிப்பவர், யார் என்ன செய்தாலும் வேண்டுமென்றே குறை சொல்லும் பக்கத்து ஊர்க்காரர், காசைக் கொடுக்காமல் ஓசியிலேயே எல்லாவற்றையும் சாதித்துக்கொள்ளும் திருடன் இசக்கி, தேர்தல் அதிகாரி ஜார்ஜ் மரியன், சாதியை விடாமல் தூக்கிப்பிடிக்கும் மனிதர்கள் என அச்சு அசலாக யதார்த்தமான மனிதர்களைப் படம் நெடுக வெவ்வேறு தன்மையுடன் உலாவவிட்டிருக்கிறார் இயக்குநர். இது படத்துக்குப் பெரும்பலம் சேர்த்திருக்கிறது.

மண்டேலா
 
மண்டேலா

இந்தியாவில் ஓர் ஓட்டுக்கு இருக்கும் பலம், ஒரு வாக்காளர் அடையாள அட்டை நினைத்தால் என்னவெல்லாம் செய்யும், அதன் பவர் என்ன என்பதை உணர்த்த நினைத்திருக்கிறார் இயக்குநர். அதில் வெற்றியும் பெற்றிருக்கிறார். சாதி பாகுபாட்டைக் களைந்து அனைவரையும் ஒரே தராசில் நிறுத்தும் ஒருவரின் தேர்தல் வாக்கின் சக்தி, அதுவரை கீழாக நடத்தப்பட்ட 'மண்டேலா'வைக் கொண்டாட வைக்கிறது. வாக்கரசியலுக்காக எதையும் செய்வார்கள் அரசியல்வாதிகள் என்பதை வெளிப்படையாகப் போட்டு உடைக்கிறது. அதேபோல், ஒரு பேருந்தில் அருகருகே உட்கார்ந்துகூடப் பயணிக்காதவர்கள், மது அருந்தும்போது மட்டும் காசில்லாததால் வேறு வழியின்றி ஒன்றுகூடி கொண்டாடும் காட்சி சமகால சமூகத்தின் நுண் பகடி!

 

விது அய்யன்னாவின் ஒளிப்பதிவு பொட்டல் கிராமத்தின் மண்ணை அள்ளி வந்திருக்கிறது. ஊறுகா பேண்டு பரத் ஷங்கரின் இசையில், யுகபாரதியின் வரிகளில் ஒலிக்கும் 'ஒரு நீதி ஒன்பது சாதி' பாடல் படத்தின் மையக்கருத்தை அற்புதமாகப் பிரதிபலித்திருக்கிறது. இப்படியொரு படத்தைத் துணிந்து தயாரித்த YNOT ஸ்டுடியோஸ் சசிகாந்த், ரிலையன்ஸ் என்டர்டெயின்மென்ட் மற்றும் இயக்குநர் பாலாஜி மோகனுக்குப் பாராட்டுகள்.

மண்டேலா
 
மண்டேலா

அதே சமயம், சாதிய அரசியல், வாக்கரசியல், தேர்தல் கலாட்டா என எல்லாவற்றையும் கச்சிதமாக ஒரு தெளிவுடன் அணுகிய இயக்குநர் ஒரு சில இடங்களில் சறுக்கவும் செய்திருக்கிறார். யோகி பாபு தன் வாக்குக்கு லஞ்சமாகப் பெறும் பொருள்கள், தேர்தலுக்கு முன் ஊர் மக்களுக்குத் தரப்படும் பணம், அன்பளிப்பு போன்றவற்றைச் சட்டத்துக்குப் புறம்பான ஒரு விஷயமாக மட்டுமே பார்க்கவேண்டும். ஆனால், அதை அரசின் சார்பாக மக்களுக்கு வழங்கப்படும் விலையில்லா பொருள்கள் மற்றும் திட்டங்களுடன் ஒப்பிட்டுக் காட்டியிருப்பது சற்றே நெருடல். விலையில்லா பொருள்களும் அத்தகைய திட்டங்களும் மக்களின் வாழ்வாதாரத்தை உயர்த்தும் கருவிகள். அவர்களின் வரிப்பணத்திலிருந்தே அரசின் சார்பாக மக்களுக்கு அளிக்கப்படும் உரிமைகள் என்ற புரிதல் இங்கே அனைத்து கலைஞர்களுக்கும் இருப்பது அவசியம். அதை வாக்குக்குக் கொடுக்கும் பணத்துடன் ஒப்பிடுவது ஆபத்தான அரசியல்.

ஊர் பெரியவர் பாத்திரம் அந்த ஊரிலிருக்கும் சாதியப் பிரச்னைகளை முடிக்காமல் இருதரப்புக்கும் மையமாக நின்று சமரசம் பேசுவதாய் காட்டப்படுவது உறுத்தல். இரண்டு சாதிகளும் ஆபத்துதான், இங்கே இரண்டுமே தேவையில்லை என்ற தெளிவே அவசியமானது. ஆனால், அவர் இரண்டு சாதிகளுக்கும் பொதுவான ஆள் என்று சொல்வதற்காக இரண்டு சாதியிலும் ஒவ்வொரு பெண்ணைத் திருமணம் செய்திருப்பதாய் காட்டுவது பெண்களை வெறும் பொருளாக மட்டுமே பார்க்கும் அபத்தத்தின் உச்சம்!

யோகி பாபுவின் `மண்டேலா'... இந்தப் படத்தை ஏன் கொண்டாடவேண்டும்?! ப்ளஸ், மைனஸ் ரிப்போர்ட்! | Yogi Babu Mandela Movie Plus Minus Report (vikatan.com)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மண்டேலா - யோகிபாபு படத்தின் சினிமா விமர்சனம்

  • முரளிதரன் காசி விஸ்வநாதன்
  • பிபிசி தமிழ்

நடிகர்கள்: யோகிபாபு, ஷீலா ராஜ்குமார், சங்கிலி மருகன், ஜி.எம். சுந்தர்; இசை: பரத் சங்கர்; இயக்கம்: மடோன்னே அஸ்வின்.

தமிழில் அரசியல் தொடர்பான திரைப்படங்கள், அரசியலைச் சொல்லும் திரைப்படங்கள் மிகவும் குறைவாக இருக்கும் நிலையில், தேர்தல் அரசியலை மையமாக வைத்து வெளியாகியிருக்கிறது 'மண்டேலா'.

சூரங்குடி என்ற கிராமத்தில் நடக்கவிருக்கும் உள்ளாட்சித் தேர்தலில், பதவியைப் பிடிப்பதற்காக இரண்டு ஜாதியினர் மோதிக்கொள்கிறார்கள். வாக்குகள் இரு தரப்புக்கும் இடையில் சரிசமமாகப் பிரியும் நிலையில், வெற்றிபெறுவதற்கு ஒரு ஓட்டு தேவைப்படுகிறது.

ஆகவே, அந்த ஊரில் உள்ள முடிதிருத்துபவரான மண்டேலாவின் (யோகிபாபு) வாக்கு மிக முக்கியமானதாக உருவெடுக்கிறது. அவரது வாக்கைப் பெற, இரு தரப்பும் இலவசங்களை அள்ளிக்கொடுக்கிறார்கள். மண்டேலா யாருக்கு வாக்களித்தார் என்பது மீதிக் கதை.

படத்தின் இயக்குநர் மடான்னே அஸ்வின் ஏற்கனவே தனது குறும்படங்கள் மூலம் பெரும் கவனத்தைப் பெற்றவர். அவரது முதல் முழு நீளப் படம் இது. தனது குறும்பட அனுபவத்தை இந்தப் படத்தில் மிகச் சிறப்பாக பயன்படுத்தியிருக்கிறார் அஸ்வின்.

கதை, திரைக்கதை, காட்சியமைப்பு, ஒளிப்பதிவு, பின்னணி இசை என ஒரு திரைப்படத்திற்கான அனைத்து அம்சங்களும் இந்தப் படத்தில் சிறப்பாக அமைந்திருக்கின்றன. படத்தின் வரும் எல்லா காட்சிகளுமே சரியான இடத்தில் ஆரம்பித்து, சரியாக முடிகின்றன. ஒரு காட்சிகூட தேவையில்லாத நீளத்தில் இல்லை.

படத்தின் முதல் காட்சியில் ஆரம்பிக்கும் சுவாரஸ்யம், இறுதிவரை டெம்போ குறையாமல் இருப்பது படத்தின் இன்னுமொரு பலம். பல காட்சிகளை, கண்ணீர் சிந்தவைக்கும் உருக்கமான காட்சிகளாக மாற்றக்கூடிய சாத்தியம் இருந்தும்கூட, அந்த நிலைக்கு படத்தை எடுத்துச்செல்லாமல் தான் சொல்லவந்த களத்திற்குள், மெல்லிய நகைச்சுவையுடன் படத்தை எடுத்துச் சென்று, முடித்திருக்கிறார் மடான்னே அஸ்வின்.

படத்தின் நாயகன் யோகிபாபு. இதற்கு முன்பாக பல படங்களில் அவர் கதாநாயகனாக நடித்திருந்தாலும் அந்தப் படங்களில் அவரது முழுத் திறன் வெளிப்பட்டதில்லை. அவரது நகைச்சுவை கதாபாத்திரங்களின் நீட்சியாகவே இந்தப் பாத்திரங்கள் அமைந்திருந்தன. ஆனால், இந்தப் படத்தில் நகைச்சுவையை முதன்மையாகக் கொள்ளாமல், இயல்பான ஒரு மனிதராக நடிப்பதற்கான வாய்ப்பு அவருக்குக் கிடைத்திருக்கிறது. கிடைத்த வாய்ப்பில் பின்னியெடுத்திருக்கிறார் யோகிபாபு.

மண்டேலா - யோகிபாபு படத்தின் சினிமா விமர்சனம்

இவருக்கு அடுத்தபடியாக, அஞ்சல்துறை பணியாளராக வரும் ஷீலா, ஊர்ப் பெரியவராக வரும் சங்கிலி முருகன், அவரது மகன்களாக நடித்திருப்பவர்கள், மண்டேலாவின் உதவியாளராக வரும் சிறுவன் ஆகியோர் தங்கள் பாத்திரத்தை உணர்ந்து, சின்ன பிழைகூட இல்லாமல் நடித்திருக்கிறார்கள். ஷீலா இதற்கு முன்பாக பல படங்களில் நடித்திருந்தாலும், இந்தப் படம் அவரை சிறந்த கோணத்தில், சிறந்த நடிகையாகக் காட்டுகிறது.

முக்கியப் பாத்திரங்கள் மட்டுமல்லாமல் சின்னச்சின்ன ரோல்களில் நடித்திருப்பவர்கள்கூட சிறப்பாக நடித்திருக்கிறார்கள். இதுபோன்ற படங்களில், திரைக்கதை நன்றாக இருந்தாலும்கூட, நடிப்பவர்கள் தங்களது சொதப்பலான நடிப்பால் படத்தை கைவிட்டுவிடுவார்கள். ஆனால், இந்தப் படத்தில் அந்தப் பிரச்சனையே இல்லை.

ஆனால், படம் என்ன சொல்லவருகிறது என்பதில் சிலருக்கு கருத்து வேறுபாடுகள் இருக்கலாம். அடிப்படையில் இந்தப் படம், வாக்காளர்கள் இலவசங்களுக்காக மனம் மயங்கிவிடாமல், உண்மையான பிரச்னைகளை மனதில் வைத்து வாக்களிக்க வேண்டும் என்கிறது. சமூகத்தின் கீழ் மட்டத்தில் இருப்பவர்களுக்கு உணவே பிரச்னையாக இருக்கும் இடத்தில், அந்த உணவை இலவசமாகக் கொடுப்பதையும் பெறுவதையும் தவறு என்பதைப்போலக் காட்டுகிறது படம்.

தவிர, படத்தில் வரும் ஊர் பெரியவர் பெரியார் மீது பற்றுகொண்டவர். இரண்டு மனைவிகளுடன் வாழ்கிறார். அவரது இரண்டு மகன்கள், அவரது வாரிசு யார் என்பதற்காக அடித்துக்கொள்கிறார்கள். இதுவும் ஒரு குறியீடா எனத் தெரியவில்லை.

படம் தற்காலத்தில் நடக்கிறது. ஆனால், படத்தில் காட்டப்படும் கிராமம் 50 ஆண்டுகளுக்கு முற்பட்ட கிராமத்தைப்போல காட்டப்படுகிறது. இடிந்து விழுந்துகிடக்கும் பள்ளிக்கூடங்கள், அம்பாசிடர் கார்கள் என தற்காலத்தில் இல்லாத பல விஷயங்களைப் படம் காட்டுகிறது.

குறிப்பாக, தமிழ்நாட்டில் போலியோ முழுமையாக ஒழிக்கப்பட்டுவிட்ட நிலையில் அந்நோயால் பாதிக்கப்பட்டதாக ஒரு குழந்தை படத்தில் வருகிறது. கதையில் எந்த அம்சத்தையும் கூடுதலாகச் சேர்க்காத இந்த அம்சங்கள் படத்தில் எதற்காக வருகின்றன எனத் தெரியவில்லை.

ஆனால், மேலே சொன்ன விஷயங்களைவிட்டுவிட்டு வெறும் சினிமா என்ற வகையில் பார்த்தால் ரசிக்கக்கூடிய சினிமாதான் இது. திரையரங்கில் வெளியாகியிருந்தால் மிகச் சிறப்பான வரவேற்பைப் பெற்றிருக்கக்கூடிய படம். ஆனால், தற்போது நெட்ஃப்ளிக்ஸில் வெளியாகியிருக்கிறது.

மண்டேலா - யோகிபாபு படத்தின் சினிமா விமர்சனம் - BBC News தமிழ்

Link to comment
Share on other sites

போன ஞாயிறு, யோகிபாபு கதாநாயகனாக நடித்த படம் நல்லா இருக்குமா என்ற சந்தேகத்துடன் மண்டேலா படத்தை பார்க்கத் தொடங்கினேன். ஆரம்ப காட்சியிலேயே புதுசா கட்டின ஒரு கக்கூஸ்சை காட்டியவுடன் "இதென்ன கக்கா படம்... ஞாயிறு பின்னேரம் இதை ஏன் பார்ப்பான் " என்று பாட்டுகள் பார்க்க தொடங்கி விட்டேன். ஆனால் மண்டேலா பற்றிய விமர்சனங்கள் நல்லா வந்து கொண்டு இருந்ததால் நேற்று இரவு பார்த்தேன்.

படம் சூப்பர்...! ஒரு வாக்கு சீட்டை வைத்துக் கொண்டு தமிழக / இந்திய அரசியலை வைத்து நகைச்சுவையாக, அதே நேரம் யதார்த்தமாக எடுத்துள்ளனர்.

யோகி பாபு...! இவரைத் தவிர இந்த படத்துக்கு யாரும் இந்தளவுக்கு பொருந்த மாட்டார்கள்.

தவறவிடக் கூடாத பொழுது போக்கான அதே நேரம் யதார்த்தமான ஒரு படம்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, நிழலி said:

போன ஞாயிறு, யோகிபாபு கதாநாயகனாக நடித்த படம் நல்லா இருக்குமா என்ற சந்தேகத்துடன் மண்டேலா படத்தை பார்க்கத் தொடங்கினேன். ஆரம்ப காட்சியிலேயே புதுசா கட்டின ஒரு கக்கூஸ்சை காட்டியவுடன் "இதென்ன கக்கா படம்... ஞாயிறு பின்னேரம் இதை ஏன் பார்ப்பான் " என்று பாட்டுகள் பார்க்க தொடங்கி விட்டேன். ஆனால் மண்டேலா பற்றிய விமர்சனங்கள் நல்லா வந்து கொண்டு இருந்ததால் நேற்று இரவு பார்த்தேன்.

படம் சூப்பர்...! ஒரு வாக்கு சீட்டை வைத்துக் கொண்டு தமிழக / இந்திய அரசியலை வைத்து நகைச்சுவையாக, அதே நேரம் யதார்த்தமாக எடுத்துள்ளனர்.

யோகி பாபு...! இவரைத் தவிர இந்த படத்துக்கு யாரும் இந்தளவுக்கு பொருந்த மாட்டார்கள்.

தவறவிடக் கூடாத பொழுது போக்கான அதே நேரம் யதார்த்தமான ஒரு படம்

எங்கு பார்த்தீர்கள்?
நான் இந்திய இணைய தளங்களில் பார்ப்பது இல்லை 
(பெரிதாக சினிமா படம் பார்ப்பதும் இல்லை)
இந்த விமர்சனங்களை வாசித்தால் பார்க்க ஆவல் 
ஓ மை கடவுளே படமும் ஓரிடமும் கிடைக்கவில்லை 

யாரவது தெரிந்தால் அறியத்தாருங்கள் நன்றி 

Link to comment
Share on other sites

18 minutes ago, Maruthankerny said:

எங்கு பார்த்தீர்கள்?
நான் இந்திய இணைய தளங்களில் பார்ப்பது இல்லை 
(பெரிதாக சினிமா படம் பார்ப்பதும் இல்லை)
இந்த விமர்சனங்களை வாசித்தால் பார்க்க ஆவல் 
ஓ மை கடவுளே படமும் ஓரிடமும் கிடைக்கவில்லை 

யாரவது தெரிந்தால் அறியத்தாருங்கள் நன்றி 

மண்டேலா Netflix இல் உள்ளது மருது. நல்ல படம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 minutes ago, நிழலி said:

மண்டேலா Netflix இல் உள்ளது மருது. நல்ல படம்.

ஓகே நன்றி 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஓ மை கடவுளே படம் YouTube இல் உள்ளது. (Simply south print)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
8 minutes ago, Eppothum Thamizhan said:

ஓ மை கடவுளே படம் YouTube இல் உள்ளது. (Simply south print)

இரு மாதம் முன்பு தேடினேன் இருக்கவில்லை 
யூடூபில் இப்போ படம் பார்க்கவும் முடியாது ஒரே விளம்பரம் 
 

Link to comment
Share on other sites

12 hours ago, Maruthankerny said:

எங்கு பார்த்தீர்கள்?
நான் இந்திய இணைய தளங்களில் பார்ப்பது இல்லை 
(பெரிதாக சினிமா படம் பார்ப்பதும் இல்லை)
இந்த விமர்சனங்களை வாசித்தால் பார்க்க ஆவல் 
ஓ மை கடவுளே படமும் ஓரிடமும் கிடைக்கவில்லை 

யாரவது தெரிந்தால் அறியத்தாருங்கள் நன்றி 

ஒ மை கடவுளே Tentkotta தளத்தில் உள்ளது. ஆனால் சந்தா கட்டவேண்டும். அதை  விட  you tube ல் முழுப் படமும் உள்ளது. பார்தது மகிழலாம். எனக்கு பிடித்த சிறந்த படம். 

ஆனால் படம் பார்தது முடிந்த பின்னர் அட கடவுளே! இப்படி எனக்கும் ஒரு சான்ஸ் தரக்கூடாதா,  என்று அந்த கற்பனையை நினைத்து ஏங்கக் கூடாது. 😂

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மண்டேலா சாதியத்தையும் இந்திய தேர்தலையும் தோலுரித்து காட்டி இருக்கும் படம் யோகி பாபு  கதாபாத்திரத்தில் கலக்கி இருக்கிறார் என்றே சொல்லலாம் 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 7/4/2021 at 14:08, பிழம்பு said:

இரண்டு சாதியிலும் ஒவ்வொரு பெண்ணைத் திருமணம் செய்திருப்பதாய் காட்டுவது பெண்களை வெறும் பொருளாக மட்டுமே பார்க்கும் அபத்தத்தின் உச்சம்!

இதைத்தானே கருணாநிதி செய்தார் படத்தில் அபத்தத்தின் உச்சம் என்கிறார்கள் வாய்ஜால  கருணாநிதி செய்தால் தலீவார் .😄

On 7/4/2021 at 20:11, Maruthankerny said:

எங்கு பார்த்தீர்கள்?
நான் இந்திய இணைய தளங்களில் பார்ப்பது இல்லை 
(பெரிதாக சினிமா படம் பார்ப்பதும் இல்லை)
இந்த விமர்சனங்களை வாசித்தால் பார்க்க ஆவல் 
ஓ மை கடவுளே படமும் ஓரிடமும் கிடைக்கவில்லை 

யாரவது தெரிந்தால் அறியத்தாருங்கள் நன்றி 

உங்கள் பிரைவேட் மெயிலை பாருங்கள் .

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 7/4/2021 at 14:30, நிழலி said:

மண்டேலா Netflix இல் உள்ளது மருது. நல்ல படம்.

மீண்டும் நன்றி 
தரமான திரைக்கதை இந்த திரைக்கதைக்கு விருதுகொடுக்கலாம் 
காதல் படம் பார்த்த போது வந்த அதே பிரமை எனக்கு இந்த படத்திலும் வந்தது 
ஊரிலேயே எந்த முக்கியத்துவமும் இல்லாத கடைநிலை கதாபாத்திரத்தை கொண்டு 
சலிப்பில்லாமல் கதையை நகர்த்திய விதம் அருமை 

நான் பெரிதாக படங்கள் பார்ப்பதில்லை விஜய் சேதுபதி  விஜய் இருவரும் இணைந்து 
நடித்து இருந்ததால் ஏதும் இருக்கும் என்ற ஆவலுடன் மாஸ்டர் படம் பார்த்து ஏமாந்து போனேன்  
உண்மையில் மண்டேலாவை விட .. மாஸ்டர் கதையின் கரு நல்லது 
ஆனால் அதை திரையில் வைத்து சிதைத்து விட்டிருந்தார்கள் 

மண்டேலா காதாபாத்திரங்களின்  வடிவமைப்பு காடசிக்கு காட்சி கதை நகர்த்திய விதம் எல்லாமே அருமை. 

9 hours ago, பெருமாள் said:

.உங்கள் பிரைவேட் மெயிலை பாருங்கள் .

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நான் சிறுவயதில் ஒரு சினிமா பைத்தியம். அதனால் பலவற்றை இழந்தும் இருக்கின்றேன்.ஊர் தொடக்கம் புலம்பெய்ர்ந்த பின்னரும் தமிழ்படங்கள் தொடர்ந்து பார்த்து மகிழ்ந்தவன். என்று பிரமாண்டம் அது இது என கதையும் இல்ல்லாமல் ஒரு வரி கதையை வைத்தும் பாடலை மட்டும் வைத்து படம் எடுத்தார்களோ அன்றிலிருந்து தமிழ் படங்கள் பார்ப்பதில்லை.
பாலச்சந்தர் பாரதிராஜா மகேந்திரன் என நல்ல இயக்குனர்களின் படங்கள் இல்லாமல் போனதுடன் தமிழ் சினிமாவில் கதை தொய்வும் எற்பட்டு விட்டது. அது தவிர எல்லா படங்களிலும் பிராமணியம் புகுந்து விடும். வெள்ளை நிறத்துக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டது.

இன்று வரும் படங்கள் அப்படி தெரியவில்லை. பிரமாண்டம் இல்லை. வெள்ளை நிறத்திற்கு முக்கியத்துவம் கொடுக்கப்படவில்லை. முகவெட்டு அவசியமில்லை. கதை அதற்கேற்ற கதாபாத்திரம். இன்று வரும் கதாபாத்திரங்களுக்கு நடிப்பு  தேவையில்லை. வாழ்க்கையை வாழ்ந்து காட்டினாலே போதும்.சண்டை கூட நிஜமாகவே எடுக்கின்றார்கள்.

ஒரு மனிதனின் அடிமட்ட வாழ்க்கையை விவரணப்படம் போல் எடுக்கின்றார்கள். மிக அழகாக கதையை சொல்கின்றார்கள். இசையும் கிராமத்து இசைக்கருவிகளை முன்னிலை படுத்துகின்றது.

அன்று பாரதிராஜா போன்றவர்கள் ஒரு பெரிய கோட்டை தாண்டினார்கள். அவர்களின் பாணியில் இன்றைய இயக்குனர்கள் இன்னொரு பெரிய கோட்டை தாண்டி விட்டார்கள்.

அன்று கமலகாசனின் கோவணம் பெரிசாக பேசப்பட்டது.
இன்று கோவணம் கட்டுபவனே கதாபாத்திரமாகிவிட்டான்.
அவர்களின் நடிப்பு இயற்கையாகவே இருக்கின்றது.

நீண்ட காலத்தின் பின் நல்ல படம் பார்த்த திருப்தி.
 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 8/4/2021 at 08:55, tulpen said:

ஒ மை கடவுளே Tentkotta தளத்தில் உள்ளது. ஆனால் சந்தா கட்டவேண்டும். அதை  விட  you tube ல் முழுப் படமும் உள்ளது. பார்தது மகிழலாம். எனக்கு பிடித்த சிறந்த படம். 

ஆனால் படம் பார்தது முடிந்த பின்னர் அட கடவுளே! இப்படி எனக்கும் ஒரு சான்ஸ் தரக்கூடாதா,  என்று அந்த கற்பனையை நினைத்து ஏங்கக் கூடாது. 😂

 

கடவுளே! இப்படி எனக்கும் ஒரு சான்ஸ் தரக்கூடாதா என்று கேட்டு, அவோட கலியாணத்தோடை, நொந்துபோன ஒரு திரி ஒண்டு, பட்டி , தொட்டி எல்லாம் ஓடியதே... 😍 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, குமாரசாமி said:

நான் சிறுவயதில் ஒரு சினிமா பைத்தியம். அதனால் பலவற்றை இழந்தும் இருக்கின்றேன்.ஊர் தொடக்கம் புலம்பெய்ர்ந்த பின்னரும் தமிழ்படங்கள் தொடர்ந்து பார்த்து மகிழ்ந்தவன். என்று பிரமாண்டம் அது இது என கதையும் இல்ல்லாமல் ஒரு வரி கதையை வைத்தும் பாடலை மட்டும் வைத்து படம் எடுத்தார்களோ அன்றிலிருந்து தமிழ் படங்கள் பார்ப்பதில்லை.
பாலச்சந்தர் பாரதிராஜா மகேந்திரன் என நல்ல இயக்குனர்களின் படங்கள் இல்லாமல் போனதுடன் தமிழ் சினிமாவில் கதை தொய்வும் எற்பட்டு விட்டது. அது தவிர எல்லா படங்களிலும் பிராமணியம் புகுந்து விடும். வெள்ளை நிறத்துக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டது.

இன்று வரும் படங்கள் அப்படி தெரியவில்லை. பிரமாண்டம் இல்லை. வெள்ளை நிறத்திற்கு முக்கியத்துவம் கொடுக்கப்படவில்லை. முகவெட்டு அவசியமில்லை. கதை அதற்கேற்ற கதாபாத்திரம். இன்று வரும் கதாபாத்திரங்களுக்கு நடிப்பு  தேவையில்லை. வாழ்க்கையை வாழ்ந்து காட்டினாலே போதும்.சண்டை கூட நிஜமாகவே எடுக்கின்றார்கள்.

ஒரு மனிதனின் அடிமட்ட வாழ்க்கையை விவரணப்படம் போல் எடுக்கின்றார்கள். மிக அழகாக கதையை சொல்கின்றார்கள். இசையும் கிராமத்து இசைக்கருவிகளை முன்னிலை படுத்துகின்றது.

அன்று பாரதிராஜா போன்றவர்கள் ஒரு பெரிய கோட்டை தாண்டினார்கள். அவர்களின் பாணியில் இன்றைய இயக்குனர்கள் இன்னொரு பெரிய கோட்டை தாண்டி விட்டார்கள்.

அன்று கமலகாசனின் கோவணம் பெரிசாக பேசப்பட்டது.
இன்று கோவணம் கட்டுபவனே கதாபாத்திரமாகிவிட்டான்.
அவர்களின் நடிப்பு இயற்கையாகவே இருக்கின்றது.

நீண்ட காலத்தின் பின் நல்ல படம் பார்த்த திருப்தி.
 

கடைசி வரை என்ன படமென்று சொல்லவேயில்லை.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
17 hours ago, ஈழப்பிரியன் said:

கடைசி வரை என்ன படமென்று சொல்லவேயில்லை.

அவரே மறந்துட்டார்  படத்தின்ற பெயர😍

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
23 hours ago, ஈழப்பிரியன் said:

கடைசி வரை என்ன படமென்று சொல்லவேயில்லை.

5 hours ago, தனிக்காட்டு ராஜா said:

அவரே மறந்துட்டார்  படத்தின்ற பெயர😍

நாங்கள் இப்ப எங்கை நிக்கிறம்? 😁

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
30 minutes ago, குமாரசாமி said:
23 hours ago, ஈழப்பிரியன் said:

கடைசி வரை என்ன படமென்று சொல்லவேயில்லை.

5 hours ago, தனிக்காட்டு ராஜா said:

அவரே மறந்துட்டார்  படத்தின்ற பெயர😍

நாங்கள் இப்ப எங்கை நிக்கிறம்

சுப்பற்ரை கொல்லைக்க.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 8/4/2021 at 08:55, tulpen said:

ஒ மை கடவுளே Tentkotta தளத்தில் உள்ளது. ஆனால் சந்தா கட்டவேண்டும். அதை  விட  you tube ல் முழுப் படமும் உள்ளது. பார்தது மகிழலாம். எனக்கு பிடித்த சிறந்த படம். 

ஆனால் படம் பார்தது முடிந்த பின்னர் அட கடவுளே! இப்படி எனக்கும் ஒரு சான்ஸ் தரக்கூடாதா,  என்று அந்த கற்பனையை நினைத்து ஏங்கக் கூடாது. 😂

ஊருக்குத்தான் உபதேசம் தனக்கில்லை மற்றவர்களுக்கு மட்டும் மனிதவுரிமை நீதி நியாயம் தான்  பார்ப்பது திருட்டு தளம்களில் திருடிய படங்கள் .😄

இதைவிட திருட்டு விசிடி பார்க்கிறம் என்று  உண்மையை சொல்லி வாழ்வது எவ்வளவோ மேல் .

Link to comment
Share on other sites

20 minutes ago, பெருமாள் said:

ஊருக்குத்தான் உபதேசம் தனக்கில்லை மற்றவர்களுக்கு மட்டும் மனிதவுரிமை நீதி நியாயம் தான்  பார்ப்பது திருட்டு தளம்களில் திருடிய படங்கள் .😄

இதைவிட திருட்டு விசிடி பார்க்கிறம் என்று  உண்மையை சொல்லி வாழ்வது எவ்வளவோ மேல் .

YouTube இல் படங்கள் பார்ப்பது திருட்டுத்தனமா? எப்ப இருந்து?

ஏனெனில் YouTube இல் நானும் நிறையப் படங்கள் பார்கின்றனான். அத்துடன் ஓ மை கடவுளே படமும், இந்த திரியை வாசித்த பின் மீண்டும் ஒரு தடவை YouTube  இல் தான் பார்த்தேன்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, நிழலி said:

YouTube இல் படங்கள் பார்ப்பது திருட்டுத்தனமா? எப்ப இருந்து?

ஏனெனில் YouTube இல் நானும் நிறையப் படங்கள் பார்கின்றனான். அத்துடன் ஓ மை கடவுளே படமும், இந்த திரியை வாசித்த பின் மீண்டும் ஒரு தடவை YouTube  இல் தான் பார்த்தேன்.

அவர் இணைத்ததை   இப்போ போய்  PLAY  பண்ணி பாருங்க விளங்கும் .

படம் வெளியிடுபவர்களின்  அனுமதி இன்றி இந்த காளான் இணையங்கள் செய்யும் தகிடுதத்தம் .

Link to comment
Share on other sites

1 minute ago, பெருமாள் said:

அவர் இணைத்ததை   இப்போ போய்  PLAY  பண்ணி பாருங்க விளங்கும் .

படம் வெளியிடுபவர்களின்  அனுமதி இன்றி இந்த காளான் இணையங்கள் செய்யும் தகிடுதத்தம் .

இப்பதான் கவனித்தேன். கட்டணம் கட்டி பார்க்கும் வண்ணம் மாற்றியுள்ளார்கள்.

 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, நிழலி said:

இப்பதான் கவனித்தேன். கட்டணம் கட்டி பார்க்கும் வண்ணம் மாற்றியுள்ளார்கள்.

இல்லை சரியாக கவனியுங்கள் .

Video unavailable

This video is no longer available due to a copyright claim by Aiplex Software Private Limited.

Link to comment
Share on other sites

காளான் இணையத்தளங்கள் மட்டுமல்ல, படத் தயாரிப்பு நிறுவனங்கள் கூட பல நூறு தமிழ் படங்களை இங்கு பகிர்ந்துள்ளார்கள். முக்கியமாக நல்ல பழைய படங்களை பார்க்க வேண்டும் என்றால் YouTube இல் பார்க்க முடியும். முன்னர் பல ஈரானிய திரைப்படங்களும் இருந்தன.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கொப்பி  ரைட்ஸ் சிங்கன் இணைத்த அன்றே கவனித்ததில் தெரியும் தனிப்பட்ட விளம்பர வருவாய்க்கு இணைத்துள்ளார்கள் என்று .

அதாவது களவு தளம் என்று யூடுப் தளம்  வெளியிடுவது வேறு இது வேறு .

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • கணேசமூர்த்தியின் இந்த விபரீத முடிவுக்கு வைகோ தான் காரணம்..!  
    • ஓயாத நிழல் யுத்தங்கள்-5 வியட்நாம் கதை இரண்டாம் உலகப் போரின் பின்னர், இரு துருவங்களாகப் பிரிந்து நின்ற உலக நாடுகளில், இரு அணுவாயுத வல்லரசுகளின் நிழல் யுத்தம் பனிப்போராகத் தொடர்ந்தது. அந்தப் பனிப்போரின் மையம், அண்டார்டிக் கண்டம் தவிர்ந்த உலகின் எல்லாக் கண்டங்களிலும் இருந்தது. தென்கிழக்கு ஆசியாவில், உலக வல்லரசுகளின் பனிப்போரின் தீவிர வடிவமாகத் திகழ்ந்த வியட்நாம் போர் பற்றிப் பார்ப்போம். வியட்நாம் மக்களின் வரலாற்றுப் பெருமை பொதுவாகவே ஆசியக் கலாச்சாரங்களில் பெருமையுணர்வு (pride) ஒரு கலாச்சாரப் பண்பாகக் காணப்படுகிறது. வியட்நாமின் வரலாற்றிலும் கலாச்சாரத் தனித்துவம், தேசிய அடையாளம் என்பன காரணமாக ஆயிரம் ஆண்டுகளாக அதன் அயல் நாடுகளோடு போராடி வாழ வேண்டிய நிலை இருந்திருக்கிறது. பிரதானமாக, வடக்கேயிருந்த சீனாவின் செல்வாக்கிற்கு உட்படாமல் வியட்நாமியர்கள் தனித்துவம் பேணிக் கொண்டிருந்தனர். ஆனால், வியட்நாம் என்பது ஒரு தேசிய அடையாளமாக திரளாதவாறு, மத, பிரதேச வாதங்களும் அவர்களுக்குள் நிலவியது. கன்பூசியஸ் நம்பிக்கைகளைப் பின்பற்றிய வட வியட்நாமிற்கும், சிறு பான்மைக் கிறிஸ்தவர்களைக் கொண்ட தென் வியட்நாமிற்குமிடையே கலாச்சார வேறு பாடுகள் இருந்தன. இந்த இரு தரப்பில் இருந்தும் வேறு பட்ட மலைவாழ் வியட்நாமிய மக்கள் மூன்றாவது ஒரு தரப்பாக இருந்திருக்கின்றனர். 19 ஆம் நூற்றாண்டில், ஐரோப்பிய காலனித்துவம் இந்தோ சீனப் பகுதியில் கால் பதித்த போது, வியட்நாம், லாவோஸ், கம்போடியா ஆகிய பகுதிகள் பிரெஞ்சு ஆதிக்கத்தின் கீழ் வந்தன. காலனித்துவத்தை எதிர்ப்பதிலும் கூட, வியட்நாமின் வடக்கிற்கும், தெற்கிற்குமிடையே வேறுபாடு இருந்திருக்கிறது. எனினும், பிரெஞ்சு ஆதிக்கத்தை வியட்நாமியர் தொடர்ந்து எதிர்த்து வந்தனர். இரண்டாம் உலகப் போரின் போது, 1945 இல் ஜப்பான் பிரான்சிடமிருந்து இந்தோ சீனப் பிராந்தியத்தை பொறுப்பெடுத்த போது, பிரெஞ்சு ஆட்சியில் கூட நிகழாத வன்முறைகள் அந்தப் பிராந்திய மக்கள் மீது நிகழ்த்தப் பட்டன.   அதே ஆண்டின் ஆகஸ்டில், ஜப்பான் தோல்வியடைந்து சரணடைந்த போது, உள்ளூர் தேசியத் தலைமையாக இருந்த வியற் மின் (Viet Minh) என அழைக்கப் பட்ட கூட்டணியிடம் ஆட்சியை ஒப்படைத்து வெளியேறியது. இதெல்லாம் நடந்து கொண்டிருந்த காலப் பகுதியில், உலக கம்யூனிச இயக்கத்தினால் ஈர்க்கப் பட்டிருந்த ஹோ சி மின் நாடு திரும்பி வட வியற்நாமில் கம்யூனிச ஆட்சியை பிரகடனம் செய்கிறார். இந்தக் காலப் பகுதி, உலகம் இரு துருவங்களாகப் பிரிவதற்கான ஆரம்பப் புள்ளிகள் இடப் பட்ட ஒரு காலப் பகுதி. முடிந்து போன உலகப் போரில் பங்காளிகளாக இருந்த ஸ்ராலினின் சோவியத் ஒன்றியமும், மேற்கு நாடுகளும் உலக மேலாண்மைக்காகப் போட்டி போட ஆரம்பித்த காலம் இந்த 1940 கள் - சீனாவின் மாவோ இன்னும் அரங்கிற்கே வரவில்லை என்பதைக் கவனிக்க வேண்டும். மீண்டும் ஆக்கிரமித்த பிரான்ஸ் கம்யூனிச விரிவாக்கத்திற்கு ஹோ சி மின் ஆட்சி வழி வகுக்கலாமெனக் கருதிய பிரிட்டன், ஒரு படை நடவடிக்கை மூலம் தென் வியட்நாமைக் கைப்பற்றி, தென் வியட்நாமை மீளவும் பிரெஞ்சு காலனித்துவ வாதிகளிடம் கையளித்தது. ஒரு கட்டத்தில், வியட்நாமை பிரெஞ்சு ஆட்சியின் கீழ் இருக்கும் ஒரு சுதந்திர தேசமாக அங்கீகரிக்கும் ஒப்பந்தம் கூட பிரான்சுக்கும், வியற் மின் அமைப்பிற்குமிடையே கைச்சாத்தானது. ஆனால், இந்த ஒப்பந்தத்தின் ஆயுட்காலம் வெறும் 2 மாதம் தான். பிரெஞ்சுப் படைகள் வடக்கை நோக்கி முன்னேற, வியற் மின் பின்வாங்க பிரெஞ்சு வியட்நாம் போர் ஆரம்பித்தது. இந்தப் போரில், முழு வியட்நாமும் பிரெஞ்சு ஆதிக்கத்தை எதிர்க்கவில்லையென்பதையும் கவனிக்க வேண்டும். வியட்நாமின் அரச வாரிசாக இருந்த பாவோ டாய் (Bao Dai), பிரெஞ்சு ஆதிக்கத்தின் கீழ் ஒரு தனி தேசமாக வியட்நாம் தொடர்வதை இறுதி வரை ஆதரித்து வந்தார். தொடர்ந்த யுத்தம் 1954 இல் ஒரு சமாதான ஒப்பந்தத்துடன் முடிவுக்கு வந்த போது, லாவோஸ், கம்போடியா ஆகிய நாடுகள் பிரான்சிடமிருந்து சுதந்திரமடைந்தன. புதிதாக வியட்நாம் தலைவராக நியமிக்கப் பட்ட டியெம், தென் வியட்நாமைத் தனி நாடாகப் பிரகடனம் செய்ததோடு, வடக்கில் இருந்த வியற் மின் தரப்பிற்கும், தென் வியட்நாமிற்கும் போர் மீண்டும் மூண்டது. அமெரிக்காவின் வியட்நாம் பிரவேசம் அமெரிக்கா, உலகப் போரில் பாரிய ஆளணி, பொருளாதார இழப்பின் பின்னர் தன் படைகளை இந்தோ சீன அரங்கில் இருந்து வெகுவாகக் குறைத்துக் கொண்டு, ஐரோப்பிய அரங்கில் கவனம் செலுத்தத் தீர்மானித்திருந்தது (இதனால், 50 களில் வட கொரியா தென் கொரியா மீது தாக்குதல் தொடுத்த போது கூட உடனடியாக சுதாரிக்க இயலாமல் அமெரிக்கப் படைகளின் பசுபிக் தலைமை தடுமாறியது). அமெரிக்கா ஏற்கனவே பிரிட்டனின் காலனித்துவத்தில் இருந்து விடுபட்ட ஒரு நாடு என்ற வகையில், அந்தக் காலப் பகுதியில் ஒரு காலனித்துவ எதிர்ப்பு மனப் பாங்கைக் கொண்டிருந்தமையால், பிரெஞ்சு, பிரிட்டன் அணிகளின் வியட்நாம் மீதான தலையீட்டில் பங்கு கொள்ளாமல் விலகியிருந்தது. இத்தகைய காலனித்துவ எதிர்ப்பின் விளைவாக, உலகில் கம்யூனிச மேலாதிக்கம் உருவாகும் போது எதிர் நடவடிக்கையின்றி இருக்க வேண்டிய சங்கடமான நிலை அமெரிக்காவிற்கு. இப்படியொரு நிலை உருவாகும் என்பதை ஏற்கனவே உணர்ந்திருந்த அமெரிக்க வெளியுறவுத் துறையின் அதிகாரியான ஜோர்ஜ் கெனன், 1947 இலேயே Policy of Containment என்ற ஒரு வெளியுறவுக் கொள்கை ஆவணத்தை தயாரித்து வெளியிட்டிருந்தார். ட்ரூமன் கொள்கை (Truman Doctrine) என்றும் அழைக்கப் படும் இந்த ஆவணத்தின் அடி நாதம்: “உலகின் எந்தப் பகுதியிலும் மக்கள், பிரதேசங்கள் சுதந்திரம், ஜனநாயகம் என்பவற்றை நாடிப் போராடினால், அமெரிக்காவின் ஆதரவு அவர்களுக்குக் கிடைக்கும்” என்பதாக இருந்தது. மறைமுகமாக, "தனி மனித அடக்கு முறையை மையமாகக் கொண்ட கம்யூனிசம் பரவாமல் தடுக்க அமெரிக்கா உலகின் எந்த மூலையிலும் செயல்படும்" என்பதே ட்ரூமன் கொள்கை.   இந்த ட்ரூமன் கொள்கையின் முதல் பரீட்சார்த்தக் களமாக தென் வியட்நாம் இருந்தது எனலாம். 1956 இல், டியேம் தென் வியட்நாமை சுதந்திர நாடாக பிரகடனம் செய்த சில மாதங்களில், அமெரிக்காவின் இராணுவ ஆலோசனையும், பயிற்சியும் தென் வியட்நாமின் படைகளுக்கு வழங்க அமெரிக்கா ஏற்பாடுகளைச் செய்தது. தொடர்ந்து, 1961 இல், சோவியத் ஒன்றியத்திடமிருந்து கடும் சவால்களை எதிர் கொண்ட அமெரிக்க அதிபர் கெனடி, அமெரிக்காவின் விசேட படைகளை தென் வியட்நாமிற்கு அனுப்பி வைக்கிறார். விரைவாகவே, பகிரங்கமாக தென் வியட்நாமில் ஒரு அமெரிக்கப் படைத் தலைமயகப் பிரிவு வியட்நாமின் (US Military Assistance Command Vietnam- MACV) நடவடிக்கைகளுக்காகத் திறக்கப் படுகிறது. கெனடியின் கொலையைத் தொடர்ந்து அமெரிக்க அதிபரான லிண்டன் ஜோன்சன், நேரடியான அமெரிக்கப் படை நடவடிக்கைகளை வியட்நாமில் ஆரம்பிக்க அனுமதி அளித்தது 1965 பெப்ரவரியில். இந்த நடவடிக்கைக்கு அமெரிக்க காங்கிரஸ் அனுமதி அளித்திருந்தது குறிப்பிடத் தக்கது. Operation Rolling Thunder என்ற பெயருடன், வட வியட்நாம் மீது தொடர் குண்டு வீச்சு நடத்துவது தான் அமெரிக்காவின் முதல் நடவடிக்கை.  வடக்கும் தெற்கும் 1954 இன் ஜெனீவா ஒப்பந்தம், வியட்நாமை வடக்கு தெற்காக 17 பாகை அகலாங்குக் கோட்டின் படி இரு நாடுகளாகப் பிரித்து விட்டிருந்தது. 10 மாதங்களுக்குள் இரு பாதிகளிலும் இருக்கும் வியட்நாமிய மக்கள் தாங்கள் விரும்பும் பாதிக்கு நகர்ந்து விடுமாறும் கோரப் பட்டிருந்தது. வடக்கிலும் தெற்கிலும் இருந்து பழி வாங்கல்களுக்கு அஞ்சி மக்கள் குடிபெயர்ந்த போது குடும்பங்கள், உறவுகள் பிரிந்தன. ஹோ சி மின்னின் கம்யூனிச வழியை ஆதரித்த மக்கள், வடக்கு நோக்கி நகர்ந்தனர், இவர்களில் பலர் வியற் கொங் என அழைக்கப் பட்ட கம்யூனிச ஆயுதப் படையில் சேர்ந்தனர். தென் வியட்நாமில், கம்யூனிச வடக்கை ஆதரித்த பலர் தங்கவில்லையாயினும், நடு நிலையாக நிற்க முனைந்தவர்களே நிம்மதியாக வசிக்க இயலாத கெடு பிடிகளும், கைதுகளும் தொடர்ந்தன. இந்த நிலையில், வடக்கின் கம்யூனிச ஆயுதப் பிரிவான வியற் கொங், வியட்நாமின் அடர்ந்த காடுகளூடாக Ho Chi Minh trail எனப்படும் ஒரு இரகசிய வினியோக வழியை உருவாக்கி, தென் வியட்நாமை உள்ளிருந்தே ஆக்கிரமிக்கும் வழிகளைத் தேடியது.  இந்த இரகசிய காட்டுப் பாதை வட வியட்நாமில் இருந்து 500 கிலோமீற்றர்கள் வரை தெற்கு நோக்கி லாவோஸ் மற்றும் கம்போடியா நாடுகளினூடாக நகர்ந்து தென் வியட்நாமில் 3 - 4 இடங்களில் எல்லையூடாக ஊடறுத்து உட் புகும் வழியை வியற் கொங் போராளிகளுக்கு வழங்கியது. இந்த வினியோக வழியை முறியடிக்கும் இரகசிய யுத்தமொன்றை, அமெரிக்க விசேட படைகள் லாவோஸ் காடுகளில் வியட்நாம் ஆக்கிரமிக்கப் படும் முன்னர் இருந்தே முன்னெடுத்து வந்தன. சின்னாபின்னமான வியட்நாம் மக்கள் பனிப்போர் காலத்தில் அமெரிக்கா நடத்திய யுத்தங்களுள், மிக உயர்வான பொது மக்கள் அழிவை உருவாக்கியது வியட்நாம் போர் தான். 1965 முதல் 1975 வரையான வியட்நாம் யுத்தத்தில் கொல்லப் பட்ட மக்கள் தொகை 2 மில்லியன்கள்: வியட்நாமியர், கம்போடியர், லாவோஸ் நாட்டவர் இந்த 2 மில்லியன் பலிகளில் அடங்குகின்றனர். இதை விட 5.5 மில்லியன் பொது மக்கள் காயமடைந்தனர். வாழ்விடங்கள், பயிர்செய்கை நிலங்கள் அழிக்கப் பட்டன. இந்த 10 வருட யுத்தத்தில், அமெரிக்காவின் நேரடிப் பிரசன்னம் 1972 வரை நீடித்த அமெரிக்க வியட்நாம் யுத்தம். இந்தக் காலப் பகுதியில், அமெரிக்கப் படைகள் மட்டுமன்றி, பசுபிக்கில் அமெரிக்காவின் நேச அணியைச் சேர்ந்த தென் கொரியா, அவுஸ்திரேலியா, நியூசிலாந்து ஆகிய நாடுகளின் படைகளும் பெருமளவில் யுத்தத்தில் பங்கு பற்றின. இந்தப் படைகளும், அமெரிக்கப் படைகளுடன் சேர்ந்து வியட்நாம் மக்களுக்கெதிரான கொடூர வன்முறைகளை நிகழ்த்தினாலும், குறிப்பிடத் தக்க பாரிய வன்முறைகளை அமெரிக்கப் படைகளே செய்தன. இந்த வன்முறைகள் பற்றி ஏராளமான சாட்சியங்களும், அவற்றின் அடிப்படையிலான நூல்களும் வெளிவந்திருக்கின்றன. வியட்நாம் போரில், அமெரிக்கப் படைகள் பொது மக்களை நடத்திய விதத்திற்கு மிகச் சிறந்த உதாரணமான சம்பவம் மை லாய் (My Lai) படுகொலைச் சம்பவம். 1968 இல், ஒரு மார்ச் மாதம் காலையில் மை லாய் கிராமத்தில் நூற்றுக் கணக்கான வியட்நாமிய பொது மக்களைச் சுற்றி வளைத்த அமெரிக்கப் படைப்பிரிவின் அணியொன்று, மிகக் குறுகிய நேர விசாரிப்பின் பின்னர் அவர்களைச் சரமாரியாகச் சுட்டுக் கொன்றது. கொல்லப் பட்ட மக்கள் ஒரு 500 பேர் வரை இருப்பர், அனைவரும் நிராயுத பாணிகள், பெரும்பாலானோர் பெண்களும் குழந்தைகளுமாக இருந்தனர். இந்தப் படுகொலை பாரிய இரகசியமாக அல்லாமல், நூற்றுக் கணக்கான அமெரிக்கப் படையினரின் முன்னிலையில் நடந்தது. அந்த நடவடிக்கைப் பகுதியில், உலங்கு வானூர்தி விமானியாக சுற்றித் திரிந்த ஹியூ தொம்சன் என்ற ஒருவரைத் தவிர யாரும் இதைத் தடுக்க முயலவில்லை. தொம்சன், தன்னுடைய உலங்கு வானூர்தியை அமெரிக்கப் படைகளுக்கும் கொல்லப் படவிருந்த மக்கள் கூட்டத்திற்குமிடையில் தரையிறக்கி ஒரு சிறு தொகையான சிவிலியன்களைக் காப்பாற்றினார். காயமடைந்த சிலரை உலங்கு வானூர்தி மூலம் அகற்றிய பின்னர், மேலதிகாரிகளுக்கும் மை லாய் படுகொலை பற்றித் தெரிவித்தார் தொம்சன். மிகுந்த தயக்கத்துடன் விசாரித்த அமெரிக்க படைத்துறை, படு கொலை பற்றிச் சாட்சி சொன்னவர்களைத் தண்டனை கொடுத்து விலக்கி வைத்தது. படு கொலைக்குத் தலைமை தாங்கிய படை அதிகாரி வில்லியம் கலி, 3 வருடங்கள் கழித்து இராணுவ நீதி மன்றில் சிறைத் தண்டனை விதிக்கப் பட்டாலும், 3 நாட்கள் மட்டுமே சிறையில் கழித்த பின்னர் மேன்முறையீடு, பிணை என இன்று வரை சுதந்திரமாக உயிரோடிருக்கிறார். இந்தப் படுகொலையில் சரியாக நடந்து கொண்ட விமானி தொம்சனையும் இன்னும் இருவரையும் 1998 இல் - 30 ஆண்டுகள் கழித்து- அமெரிக்க இராணுவம் விருது கொடுத்துக் கௌரவித்தது. இத்தகைய சம்பவங்கள் மட்டுமன்றி, ஒட்டு மொத்தமாக வியட்நாம் மக்களை வகை தொகையின்றிக் கொன்ற நேபாம் குண்டுகள் (Napalm - இது ஒரு பெற்றோலியம் ஜெல்லினால் செய்யப் பட்ட குண்டு), ஏஜென்ற் ஒறேஞ் எனப்படும் இரசாயன ஆயுதத் தாக்குதல் என்பனவும் அமெரிக்காவின் கொலை ஆயுதங்களாக விளங்கின. 1972 இல், அமெரிக்காவில் உள்ளூரில் வியட்நாம் போருக்கெதிராக எழுந்த எதிர்ப்புகளால், அமெரிக்கா தன் தாக்குதல் படைகளை முற்றாக விலக்கிக் கொண்ட போது 58,000 அமெரிக்கப் படையினர் இறந்திருந்தனர். இதை விட இலட்சக் கணக்கான உயிர் தப்பிய அமெரிக்கப் படையினருக்கு, PTSD என்ற மனவடு நோய் காரணமாக, அவர்களால் சாதாரண வாழ்க்கைக்குத் திரும்ப இயலாத நிலை ஏற்பட்டது. வியட்நாம் போரின் முடிவு அமெரிக்காவின் படை விலகலுக்குப் பின்னர், படிப்படியாக அமெரிக்காவின் தென் வியட்நாமிற்கான நிதி, ஆயுதம், பயிற்சி என்பன குறைக்கப் பட்டன. 1975 ஏப்ரலில், வடக்கு வியட்நாமின் படைகள் மிக இலகுவாக தெற்கு வியட்நாமின் சாய்கன் நகரை நோக்கி நெருங்கி வந்த போது, அமெரிக்காவின் ஆதரவாளர்கள், அமெரிக்கப் பிரஜைகள் ஆகியோரை Operation Frequent Wind  என்ற நடவடிக்கை மூலம் அவசர அவசரமாக வெளியேற்றினார்கள். தெற்கு வியட்நாமை ஆக்கிரமித்த வடக்கு வியட்நாம், மேலும் முன்னேறி, கம்போடியாவையும் ஒரு கட்டத்தில் ஆக்கிரமித்து, இந்தோ சீனப் பிரதேசத்தை ஒரு தொடர் கொலைக் களமாக வைத்திருந்தது. இந்தப் பிரதேசங்களில் இருந்து கடல் வழியே தப்பியோடிய மக்கள் “படகு மக்கள்” என அழைக்கப் பட்டனர். இன்று றொஹிங்கியாக்களுக்கு நிகழும் அத்தனை அனியாயங்களும் அவர்களுக்கும் நிகழ்ந்தன. -          தொடரும்
    • தமிழ்நாட்டில் நடக்கும் அநிஞாயங்கள் பாலியல் வல்லுறவுகள் கூட்டு பாலியல் கொலை கொள்ளை என்று திராவிட கும்பல்களால் தினமும் செய்திகள் வருகின்றன. எவருமே அதைப்பற்றி அக்கறை கொள்வதில்லை. ஆனால் சீமானைப்பற்றி ஏதாவது நல்ல செய்தி வந்தால் உடனே கூட்டமாக சேர்ந்து தாக்குதல் நடக்குது. என்ன கூட்டமோ?
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.