Jump to content

மண்டேலா - யோகி பாபுவின் `மண்டேலா'... இந்தப் படத்தை ஏன் கொண்டாடவேண்டும்?


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
மண்டேலா
 
மண்டேலா

'ஆண்டவன் கட்டளை' படத்துக்குப் பிறகு அழுத்தமான ஒரு பாத்திரம் யோகிபாபுவுக்கு. காமெடியனாகத் திரிந்தவர், கதைக்கான நடிகனாக ஒரு படி மேலேறி முத்திரைப் பதித்திருக்கிறார். எதுவும் அறிந்திராத அப்பாவியாகச் சாதிய தீக்கு இரையாகி அப்பாவி முகம் காட்டும்போது பரிதாபத்தை ஏற்படுத்துபவர், பின்னர் அரசியல்வாதிகளை பெண்டெடுக்கும்போது நம்மையும் நிமிர்ந்து உட்கார வைக்கிறார். வெறும் ஹீரோவாக நடிப்பதற்கும் கதையின் நாயகனாக நடிப்பதற்கும் உள்ள வேறுபாடுகளை இந்தப் படம் உணர்த்துகிறது. அந்த வகையில் யோகி பாபுவுக்கு ஸ்பெஷல் ஹார்ட்டின்!

 

ஊர் போஸ்ட் மாஸ்டர் தேன்மொழியாக ஷீலா ராஜ்குமார். யோகி பாபுவுக்கு 'மண்டேலா' பெயர்க் காரணம் தொடங்கி, அடையாள அட்டை, சேமிப்புக் கணக்கு, இந்திய ஜனநாயகத்தில் ஒரு வாக்கின் அருமை பெருமையை உணர்த்துவது என எதையும் போரடிக்கும் மெசேஜாகப் பதிவு செய்யாமல் கதையின் போக்கிலேயே புரியவைக்கும் பாத்திரம். படம் நெடுக யோகிபாபுவுடன் உலாவரும் அந்த கிர்தா 'கான்' சிறுவன், ஊர் பெரியவராகப் பெரியாரின் சீடனாகச் சங்கிலி முருகன், வேட்பாளர்களாக ஜி.எம்.சுந்தர், கண்ணா ரவி என எல்லோரும் தங்களின் பாத்திரங்களுக்குச் சரியாகப் பொருந்திப் போயிருக்கின்றனர். எந்தச் சண்டையென்றாலும் செருப்பைக் கழற்றிவிட்டுவிட்டு கோதாவுக்குள் குதிப்பவர், யார் என்ன செய்தாலும் வேண்டுமென்றே குறை சொல்லும் பக்கத்து ஊர்க்காரர், காசைக் கொடுக்காமல் ஓசியிலேயே எல்லாவற்றையும் சாதித்துக்கொள்ளும் திருடன் இசக்கி, தேர்தல் அதிகாரி ஜார்ஜ் மரியன், சாதியை விடாமல் தூக்கிப்பிடிக்கும் மனிதர்கள் என அச்சு அசலாக யதார்த்தமான மனிதர்களைப் படம் நெடுக வெவ்வேறு தன்மையுடன் உலாவவிட்டிருக்கிறார் இயக்குநர். இது படத்துக்குப் பெரும்பலம் சேர்த்திருக்கிறது.

மண்டேலா
 
மண்டேலா

இந்தியாவில் ஓர் ஓட்டுக்கு இருக்கும் பலம், ஒரு வாக்காளர் அடையாள அட்டை நினைத்தால் என்னவெல்லாம் செய்யும், அதன் பவர் என்ன என்பதை உணர்த்த நினைத்திருக்கிறார் இயக்குநர். அதில் வெற்றியும் பெற்றிருக்கிறார். சாதி பாகுபாட்டைக் களைந்து அனைவரையும் ஒரே தராசில் நிறுத்தும் ஒருவரின் தேர்தல் வாக்கின் சக்தி, அதுவரை கீழாக நடத்தப்பட்ட 'மண்டேலா'வைக் கொண்டாட வைக்கிறது. வாக்கரசியலுக்காக எதையும் செய்வார்கள் அரசியல்வாதிகள் என்பதை வெளிப்படையாகப் போட்டு உடைக்கிறது. அதேபோல், ஒரு பேருந்தில் அருகருகே உட்கார்ந்துகூடப் பயணிக்காதவர்கள், மது அருந்தும்போது மட்டும் காசில்லாததால் வேறு வழியின்றி ஒன்றுகூடி கொண்டாடும் காட்சி சமகால சமூகத்தின் நுண் பகடி!

 

விது அய்யன்னாவின் ஒளிப்பதிவு பொட்டல் கிராமத்தின் மண்ணை அள்ளி வந்திருக்கிறது. ஊறுகா பேண்டு பரத் ஷங்கரின் இசையில், யுகபாரதியின் வரிகளில் ஒலிக்கும் 'ஒரு நீதி ஒன்பது சாதி' பாடல் படத்தின் மையக்கருத்தை அற்புதமாகப் பிரதிபலித்திருக்கிறது. இப்படியொரு படத்தைத் துணிந்து தயாரித்த YNOT ஸ்டுடியோஸ் சசிகாந்த், ரிலையன்ஸ் என்டர்டெயின்மென்ட் மற்றும் இயக்குநர் பாலாஜி மோகனுக்குப் பாராட்டுகள்.

மண்டேலா
 
மண்டேலா

அதே சமயம், சாதிய அரசியல், வாக்கரசியல், தேர்தல் கலாட்டா என எல்லாவற்றையும் கச்சிதமாக ஒரு தெளிவுடன் அணுகிய இயக்குநர் ஒரு சில இடங்களில் சறுக்கவும் செய்திருக்கிறார். யோகி பாபு தன் வாக்குக்கு லஞ்சமாகப் பெறும் பொருள்கள், தேர்தலுக்கு முன் ஊர் மக்களுக்குத் தரப்படும் பணம், அன்பளிப்பு போன்றவற்றைச் சட்டத்துக்குப் புறம்பான ஒரு விஷயமாக மட்டுமே பார்க்கவேண்டும். ஆனால், அதை அரசின் சார்பாக மக்களுக்கு வழங்கப்படும் விலையில்லா பொருள்கள் மற்றும் திட்டங்களுடன் ஒப்பிட்டுக் காட்டியிருப்பது சற்றே நெருடல். விலையில்லா பொருள்களும் அத்தகைய திட்டங்களும் மக்களின் வாழ்வாதாரத்தை உயர்த்தும் கருவிகள். அவர்களின் வரிப்பணத்திலிருந்தே அரசின் சார்பாக மக்களுக்கு அளிக்கப்படும் உரிமைகள் என்ற புரிதல் இங்கே அனைத்து கலைஞர்களுக்கும் இருப்பது அவசியம். அதை வாக்குக்குக் கொடுக்கும் பணத்துடன் ஒப்பிடுவது ஆபத்தான அரசியல்.

ஊர் பெரியவர் பாத்திரம் அந்த ஊரிலிருக்கும் சாதியப் பிரச்னைகளை முடிக்காமல் இருதரப்புக்கும் மையமாக நின்று சமரசம் பேசுவதாய் காட்டப்படுவது உறுத்தல். இரண்டு சாதிகளும் ஆபத்துதான், இங்கே இரண்டுமே தேவையில்லை என்ற தெளிவே அவசியமானது. ஆனால், அவர் இரண்டு சாதிகளுக்கும் பொதுவான ஆள் என்று சொல்வதற்காக இரண்டு சாதியிலும் ஒவ்வொரு பெண்ணைத் திருமணம் செய்திருப்பதாய் காட்டுவது பெண்களை வெறும் பொருளாக மட்டுமே பார்க்கும் அபத்தத்தின் உச்சம்!

யோகி பாபுவின் `மண்டேலா'... இந்தப் படத்தை ஏன் கொண்டாடவேண்டும்?! ப்ளஸ், மைனஸ் ரிப்போர்ட்! | Yogi Babu Mandela Movie Plus Minus Report (vikatan.com)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மண்டேலா - யோகிபாபு படத்தின் சினிமா விமர்சனம்

  • முரளிதரன் காசி விஸ்வநாதன்
  • பிபிசி தமிழ்

நடிகர்கள்: யோகிபாபு, ஷீலா ராஜ்குமார், சங்கிலி மருகன், ஜி.எம். சுந்தர்; இசை: பரத் சங்கர்; இயக்கம்: மடோன்னே அஸ்வின்.

தமிழில் அரசியல் தொடர்பான திரைப்படங்கள், அரசியலைச் சொல்லும் திரைப்படங்கள் மிகவும் குறைவாக இருக்கும் நிலையில், தேர்தல் அரசியலை மையமாக வைத்து வெளியாகியிருக்கிறது 'மண்டேலா'.

சூரங்குடி என்ற கிராமத்தில் நடக்கவிருக்கும் உள்ளாட்சித் தேர்தலில், பதவியைப் பிடிப்பதற்காக இரண்டு ஜாதியினர் மோதிக்கொள்கிறார்கள். வாக்குகள் இரு தரப்புக்கும் இடையில் சரிசமமாகப் பிரியும் நிலையில், வெற்றிபெறுவதற்கு ஒரு ஓட்டு தேவைப்படுகிறது.

ஆகவே, அந்த ஊரில் உள்ள முடிதிருத்துபவரான மண்டேலாவின் (யோகிபாபு) வாக்கு மிக முக்கியமானதாக உருவெடுக்கிறது. அவரது வாக்கைப் பெற, இரு தரப்பும் இலவசங்களை அள்ளிக்கொடுக்கிறார்கள். மண்டேலா யாருக்கு வாக்களித்தார் என்பது மீதிக் கதை.

படத்தின் இயக்குநர் மடான்னே அஸ்வின் ஏற்கனவே தனது குறும்படங்கள் மூலம் பெரும் கவனத்தைப் பெற்றவர். அவரது முதல் முழு நீளப் படம் இது. தனது குறும்பட அனுபவத்தை இந்தப் படத்தில் மிகச் சிறப்பாக பயன்படுத்தியிருக்கிறார் அஸ்வின்.

கதை, திரைக்கதை, காட்சியமைப்பு, ஒளிப்பதிவு, பின்னணி இசை என ஒரு திரைப்படத்திற்கான அனைத்து அம்சங்களும் இந்தப் படத்தில் சிறப்பாக அமைந்திருக்கின்றன. படத்தின் வரும் எல்லா காட்சிகளுமே சரியான இடத்தில் ஆரம்பித்து, சரியாக முடிகின்றன. ஒரு காட்சிகூட தேவையில்லாத நீளத்தில் இல்லை.

படத்தின் முதல் காட்சியில் ஆரம்பிக்கும் சுவாரஸ்யம், இறுதிவரை டெம்போ குறையாமல் இருப்பது படத்தின் இன்னுமொரு பலம். பல காட்சிகளை, கண்ணீர் சிந்தவைக்கும் உருக்கமான காட்சிகளாக மாற்றக்கூடிய சாத்தியம் இருந்தும்கூட, அந்த நிலைக்கு படத்தை எடுத்துச்செல்லாமல் தான் சொல்லவந்த களத்திற்குள், மெல்லிய நகைச்சுவையுடன் படத்தை எடுத்துச் சென்று, முடித்திருக்கிறார் மடான்னே அஸ்வின்.

படத்தின் நாயகன் யோகிபாபு. இதற்கு முன்பாக பல படங்களில் அவர் கதாநாயகனாக நடித்திருந்தாலும் அந்தப் படங்களில் அவரது முழுத் திறன் வெளிப்பட்டதில்லை. அவரது நகைச்சுவை கதாபாத்திரங்களின் நீட்சியாகவே இந்தப் பாத்திரங்கள் அமைந்திருந்தன. ஆனால், இந்தப் படத்தில் நகைச்சுவையை முதன்மையாகக் கொள்ளாமல், இயல்பான ஒரு மனிதராக நடிப்பதற்கான வாய்ப்பு அவருக்குக் கிடைத்திருக்கிறது. கிடைத்த வாய்ப்பில் பின்னியெடுத்திருக்கிறார் யோகிபாபு.

மண்டேலா - யோகிபாபு படத்தின் சினிமா விமர்சனம்

இவருக்கு அடுத்தபடியாக, அஞ்சல்துறை பணியாளராக வரும் ஷீலா, ஊர்ப் பெரியவராக வரும் சங்கிலி முருகன், அவரது மகன்களாக நடித்திருப்பவர்கள், மண்டேலாவின் உதவியாளராக வரும் சிறுவன் ஆகியோர் தங்கள் பாத்திரத்தை உணர்ந்து, சின்ன பிழைகூட இல்லாமல் நடித்திருக்கிறார்கள். ஷீலா இதற்கு முன்பாக பல படங்களில் நடித்திருந்தாலும், இந்தப் படம் அவரை சிறந்த கோணத்தில், சிறந்த நடிகையாகக் காட்டுகிறது.

முக்கியப் பாத்திரங்கள் மட்டுமல்லாமல் சின்னச்சின்ன ரோல்களில் நடித்திருப்பவர்கள்கூட சிறப்பாக நடித்திருக்கிறார்கள். இதுபோன்ற படங்களில், திரைக்கதை நன்றாக இருந்தாலும்கூட, நடிப்பவர்கள் தங்களது சொதப்பலான நடிப்பால் படத்தை கைவிட்டுவிடுவார்கள். ஆனால், இந்தப் படத்தில் அந்தப் பிரச்சனையே இல்லை.

ஆனால், படம் என்ன சொல்லவருகிறது என்பதில் சிலருக்கு கருத்து வேறுபாடுகள் இருக்கலாம். அடிப்படையில் இந்தப் படம், வாக்காளர்கள் இலவசங்களுக்காக மனம் மயங்கிவிடாமல், உண்மையான பிரச்னைகளை மனதில் வைத்து வாக்களிக்க வேண்டும் என்கிறது. சமூகத்தின் கீழ் மட்டத்தில் இருப்பவர்களுக்கு உணவே பிரச்னையாக இருக்கும் இடத்தில், அந்த உணவை இலவசமாகக் கொடுப்பதையும் பெறுவதையும் தவறு என்பதைப்போலக் காட்டுகிறது படம்.

தவிர, படத்தில் வரும் ஊர் பெரியவர் பெரியார் மீது பற்றுகொண்டவர். இரண்டு மனைவிகளுடன் வாழ்கிறார். அவரது இரண்டு மகன்கள், அவரது வாரிசு யார் என்பதற்காக அடித்துக்கொள்கிறார்கள். இதுவும் ஒரு குறியீடா எனத் தெரியவில்லை.

படம் தற்காலத்தில் நடக்கிறது. ஆனால், படத்தில் காட்டப்படும் கிராமம் 50 ஆண்டுகளுக்கு முற்பட்ட கிராமத்தைப்போல காட்டப்படுகிறது. இடிந்து விழுந்துகிடக்கும் பள்ளிக்கூடங்கள், அம்பாசிடர் கார்கள் என தற்காலத்தில் இல்லாத பல விஷயங்களைப் படம் காட்டுகிறது.

குறிப்பாக, தமிழ்நாட்டில் போலியோ முழுமையாக ஒழிக்கப்பட்டுவிட்ட நிலையில் அந்நோயால் பாதிக்கப்பட்டதாக ஒரு குழந்தை படத்தில் வருகிறது. கதையில் எந்த அம்சத்தையும் கூடுதலாகச் சேர்க்காத இந்த அம்சங்கள் படத்தில் எதற்காக வருகின்றன எனத் தெரியவில்லை.

ஆனால், மேலே சொன்ன விஷயங்களைவிட்டுவிட்டு வெறும் சினிமா என்ற வகையில் பார்த்தால் ரசிக்கக்கூடிய சினிமாதான் இது. திரையரங்கில் வெளியாகியிருந்தால் மிகச் சிறப்பான வரவேற்பைப் பெற்றிருக்கக்கூடிய படம். ஆனால், தற்போது நெட்ஃப்ளிக்ஸில் வெளியாகியிருக்கிறது.

மண்டேலா - யோகிபாபு படத்தின் சினிமா விமர்சனம் - BBC News தமிழ்

Link to comment
Share on other sites

போன ஞாயிறு, யோகிபாபு கதாநாயகனாக நடித்த படம் நல்லா இருக்குமா என்ற சந்தேகத்துடன் மண்டேலா படத்தை பார்க்கத் தொடங்கினேன். ஆரம்ப காட்சியிலேயே புதுசா கட்டின ஒரு கக்கூஸ்சை காட்டியவுடன் "இதென்ன கக்கா படம்... ஞாயிறு பின்னேரம் இதை ஏன் பார்ப்பான் " என்று பாட்டுகள் பார்க்க தொடங்கி விட்டேன். ஆனால் மண்டேலா பற்றிய விமர்சனங்கள் நல்லா வந்து கொண்டு இருந்ததால் நேற்று இரவு பார்த்தேன்.

படம் சூப்பர்...! ஒரு வாக்கு சீட்டை வைத்துக் கொண்டு தமிழக / இந்திய அரசியலை வைத்து நகைச்சுவையாக, அதே நேரம் யதார்த்தமாக எடுத்துள்ளனர்.

யோகி பாபு...! இவரைத் தவிர இந்த படத்துக்கு யாரும் இந்தளவுக்கு பொருந்த மாட்டார்கள்.

தவறவிடக் கூடாத பொழுது போக்கான அதே நேரம் யதார்த்தமான ஒரு படம்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, நிழலி said:

போன ஞாயிறு, யோகிபாபு கதாநாயகனாக நடித்த படம் நல்லா இருக்குமா என்ற சந்தேகத்துடன் மண்டேலா படத்தை பார்க்கத் தொடங்கினேன். ஆரம்ப காட்சியிலேயே புதுசா கட்டின ஒரு கக்கூஸ்சை காட்டியவுடன் "இதென்ன கக்கா படம்... ஞாயிறு பின்னேரம் இதை ஏன் பார்ப்பான் " என்று பாட்டுகள் பார்க்க தொடங்கி விட்டேன். ஆனால் மண்டேலா பற்றிய விமர்சனங்கள் நல்லா வந்து கொண்டு இருந்ததால் நேற்று இரவு பார்த்தேன்.

படம் சூப்பர்...! ஒரு வாக்கு சீட்டை வைத்துக் கொண்டு தமிழக / இந்திய அரசியலை வைத்து நகைச்சுவையாக, அதே நேரம் யதார்த்தமாக எடுத்துள்ளனர்.

யோகி பாபு...! இவரைத் தவிர இந்த படத்துக்கு யாரும் இந்தளவுக்கு பொருந்த மாட்டார்கள்.

தவறவிடக் கூடாத பொழுது போக்கான அதே நேரம் யதார்த்தமான ஒரு படம்

எங்கு பார்த்தீர்கள்?
நான் இந்திய இணைய தளங்களில் பார்ப்பது இல்லை 
(பெரிதாக சினிமா படம் பார்ப்பதும் இல்லை)
இந்த விமர்சனங்களை வாசித்தால் பார்க்க ஆவல் 
ஓ மை கடவுளே படமும் ஓரிடமும் கிடைக்கவில்லை 

யாரவது தெரிந்தால் அறியத்தாருங்கள் நன்றி 

Link to comment
Share on other sites

18 minutes ago, Maruthankerny said:

எங்கு பார்த்தீர்கள்?
நான் இந்திய இணைய தளங்களில் பார்ப்பது இல்லை 
(பெரிதாக சினிமா படம் பார்ப்பதும் இல்லை)
இந்த விமர்சனங்களை வாசித்தால் பார்க்க ஆவல் 
ஓ மை கடவுளே படமும் ஓரிடமும் கிடைக்கவில்லை 

யாரவது தெரிந்தால் அறியத்தாருங்கள் நன்றி 

மண்டேலா Netflix இல் உள்ளது மருது. நல்ல படம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 minutes ago, நிழலி said:

மண்டேலா Netflix இல் உள்ளது மருது. நல்ல படம்.

ஓகே நன்றி 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஓ மை கடவுளே படம் YouTube இல் உள்ளது. (Simply south print)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
8 minutes ago, Eppothum Thamizhan said:

ஓ மை கடவுளே படம் YouTube இல் உள்ளது. (Simply south print)

இரு மாதம் முன்பு தேடினேன் இருக்கவில்லை 
யூடூபில் இப்போ படம் பார்க்கவும் முடியாது ஒரே விளம்பரம் 
 

Link to comment
Share on other sites

12 hours ago, Maruthankerny said:

எங்கு பார்த்தீர்கள்?
நான் இந்திய இணைய தளங்களில் பார்ப்பது இல்லை 
(பெரிதாக சினிமா படம் பார்ப்பதும் இல்லை)
இந்த விமர்சனங்களை வாசித்தால் பார்க்க ஆவல் 
ஓ மை கடவுளே படமும் ஓரிடமும் கிடைக்கவில்லை 

யாரவது தெரிந்தால் அறியத்தாருங்கள் நன்றி 

ஒ மை கடவுளே Tentkotta தளத்தில் உள்ளது. ஆனால் சந்தா கட்டவேண்டும். அதை  விட  you tube ல் முழுப் படமும் உள்ளது. பார்தது மகிழலாம். எனக்கு பிடித்த சிறந்த படம். 

ஆனால் படம் பார்தது முடிந்த பின்னர் அட கடவுளே! இப்படி எனக்கும் ஒரு சான்ஸ் தரக்கூடாதா,  என்று அந்த கற்பனையை நினைத்து ஏங்கக் கூடாது. 😂

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மண்டேலா சாதியத்தையும் இந்திய தேர்தலையும் தோலுரித்து காட்டி இருக்கும் படம் யோகி பாபு  கதாபாத்திரத்தில் கலக்கி இருக்கிறார் என்றே சொல்லலாம் 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 7/4/2021 at 14:08, பிழம்பு said:

இரண்டு சாதியிலும் ஒவ்வொரு பெண்ணைத் திருமணம் செய்திருப்பதாய் காட்டுவது பெண்களை வெறும் பொருளாக மட்டுமே பார்க்கும் அபத்தத்தின் உச்சம்!

இதைத்தானே கருணாநிதி செய்தார் படத்தில் அபத்தத்தின் உச்சம் என்கிறார்கள் வாய்ஜால  கருணாநிதி செய்தால் தலீவார் .😄

On 7/4/2021 at 20:11, Maruthankerny said:

எங்கு பார்த்தீர்கள்?
நான் இந்திய இணைய தளங்களில் பார்ப்பது இல்லை 
(பெரிதாக சினிமா படம் பார்ப்பதும் இல்லை)
இந்த விமர்சனங்களை வாசித்தால் பார்க்க ஆவல் 
ஓ மை கடவுளே படமும் ஓரிடமும் கிடைக்கவில்லை 

யாரவது தெரிந்தால் அறியத்தாருங்கள் நன்றி 

உங்கள் பிரைவேட் மெயிலை பாருங்கள் .

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 7/4/2021 at 14:30, நிழலி said:

மண்டேலா Netflix இல் உள்ளது மருது. நல்ல படம்.

மீண்டும் நன்றி 
தரமான திரைக்கதை இந்த திரைக்கதைக்கு விருதுகொடுக்கலாம் 
காதல் படம் பார்த்த போது வந்த அதே பிரமை எனக்கு இந்த படத்திலும் வந்தது 
ஊரிலேயே எந்த முக்கியத்துவமும் இல்லாத கடைநிலை கதாபாத்திரத்தை கொண்டு 
சலிப்பில்லாமல் கதையை நகர்த்திய விதம் அருமை 

நான் பெரிதாக படங்கள் பார்ப்பதில்லை விஜய் சேதுபதி  விஜய் இருவரும் இணைந்து 
நடித்து இருந்ததால் ஏதும் இருக்கும் என்ற ஆவலுடன் மாஸ்டர் படம் பார்த்து ஏமாந்து போனேன்  
உண்மையில் மண்டேலாவை விட .. மாஸ்டர் கதையின் கரு நல்லது 
ஆனால் அதை திரையில் வைத்து சிதைத்து விட்டிருந்தார்கள் 

மண்டேலா காதாபாத்திரங்களின்  வடிவமைப்பு காடசிக்கு காட்சி கதை நகர்த்திய விதம் எல்லாமே அருமை. 

9 hours ago, பெருமாள் said:

.உங்கள் பிரைவேட் மெயிலை பாருங்கள் .

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நான் சிறுவயதில் ஒரு சினிமா பைத்தியம். அதனால் பலவற்றை இழந்தும் இருக்கின்றேன்.ஊர் தொடக்கம் புலம்பெய்ர்ந்த பின்னரும் தமிழ்படங்கள் தொடர்ந்து பார்த்து மகிழ்ந்தவன். என்று பிரமாண்டம் அது இது என கதையும் இல்ல்லாமல் ஒரு வரி கதையை வைத்தும் பாடலை மட்டும் வைத்து படம் எடுத்தார்களோ அன்றிலிருந்து தமிழ் படங்கள் பார்ப்பதில்லை.
பாலச்சந்தர் பாரதிராஜா மகேந்திரன் என நல்ல இயக்குனர்களின் படங்கள் இல்லாமல் போனதுடன் தமிழ் சினிமாவில் கதை தொய்வும் எற்பட்டு விட்டது. அது தவிர எல்லா படங்களிலும் பிராமணியம் புகுந்து விடும். வெள்ளை நிறத்துக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டது.

இன்று வரும் படங்கள் அப்படி தெரியவில்லை. பிரமாண்டம் இல்லை. வெள்ளை நிறத்திற்கு முக்கியத்துவம் கொடுக்கப்படவில்லை. முகவெட்டு அவசியமில்லை. கதை அதற்கேற்ற கதாபாத்திரம். இன்று வரும் கதாபாத்திரங்களுக்கு நடிப்பு  தேவையில்லை. வாழ்க்கையை வாழ்ந்து காட்டினாலே போதும்.சண்டை கூட நிஜமாகவே எடுக்கின்றார்கள்.

ஒரு மனிதனின் அடிமட்ட வாழ்க்கையை விவரணப்படம் போல் எடுக்கின்றார்கள். மிக அழகாக கதையை சொல்கின்றார்கள். இசையும் கிராமத்து இசைக்கருவிகளை முன்னிலை படுத்துகின்றது.

அன்று பாரதிராஜா போன்றவர்கள் ஒரு பெரிய கோட்டை தாண்டினார்கள். அவர்களின் பாணியில் இன்றைய இயக்குனர்கள் இன்னொரு பெரிய கோட்டை தாண்டி விட்டார்கள்.

அன்று கமலகாசனின் கோவணம் பெரிசாக பேசப்பட்டது.
இன்று கோவணம் கட்டுபவனே கதாபாத்திரமாகிவிட்டான்.
அவர்களின் நடிப்பு இயற்கையாகவே இருக்கின்றது.

நீண்ட காலத்தின் பின் நல்ல படம் பார்த்த திருப்தி.
 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 8/4/2021 at 08:55, tulpen said:

ஒ மை கடவுளே Tentkotta தளத்தில் உள்ளது. ஆனால் சந்தா கட்டவேண்டும். அதை  விட  you tube ல் முழுப் படமும் உள்ளது. பார்தது மகிழலாம். எனக்கு பிடித்த சிறந்த படம். 

ஆனால் படம் பார்தது முடிந்த பின்னர் அட கடவுளே! இப்படி எனக்கும் ஒரு சான்ஸ் தரக்கூடாதா,  என்று அந்த கற்பனையை நினைத்து ஏங்கக் கூடாது. 😂

 

கடவுளே! இப்படி எனக்கும் ஒரு சான்ஸ் தரக்கூடாதா என்று கேட்டு, அவோட கலியாணத்தோடை, நொந்துபோன ஒரு திரி ஒண்டு, பட்டி , தொட்டி எல்லாம் ஓடியதே... 😍 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, குமாரசாமி said:

நான் சிறுவயதில் ஒரு சினிமா பைத்தியம். அதனால் பலவற்றை இழந்தும் இருக்கின்றேன்.ஊர் தொடக்கம் புலம்பெய்ர்ந்த பின்னரும் தமிழ்படங்கள் தொடர்ந்து பார்த்து மகிழ்ந்தவன். என்று பிரமாண்டம் அது இது என கதையும் இல்ல்லாமல் ஒரு வரி கதையை வைத்தும் பாடலை மட்டும் வைத்து படம் எடுத்தார்களோ அன்றிலிருந்து தமிழ் படங்கள் பார்ப்பதில்லை.
பாலச்சந்தர் பாரதிராஜா மகேந்திரன் என நல்ல இயக்குனர்களின் படங்கள் இல்லாமல் போனதுடன் தமிழ் சினிமாவில் கதை தொய்வும் எற்பட்டு விட்டது. அது தவிர எல்லா படங்களிலும் பிராமணியம் புகுந்து விடும். வெள்ளை நிறத்துக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டது.

இன்று வரும் படங்கள் அப்படி தெரியவில்லை. பிரமாண்டம் இல்லை. வெள்ளை நிறத்திற்கு முக்கியத்துவம் கொடுக்கப்படவில்லை. முகவெட்டு அவசியமில்லை. கதை அதற்கேற்ற கதாபாத்திரம். இன்று வரும் கதாபாத்திரங்களுக்கு நடிப்பு  தேவையில்லை. வாழ்க்கையை வாழ்ந்து காட்டினாலே போதும்.சண்டை கூட நிஜமாகவே எடுக்கின்றார்கள்.

ஒரு மனிதனின் அடிமட்ட வாழ்க்கையை விவரணப்படம் போல் எடுக்கின்றார்கள். மிக அழகாக கதையை சொல்கின்றார்கள். இசையும் கிராமத்து இசைக்கருவிகளை முன்னிலை படுத்துகின்றது.

அன்று பாரதிராஜா போன்றவர்கள் ஒரு பெரிய கோட்டை தாண்டினார்கள். அவர்களின் பாணியில் இன்றைய இயக்குனர்கள் இன்னொரு பெரிய கோட்டை தாண்டி விட்டார்கள்.

அன்று கமலகாசனின் கோவணம் பெரிசாக பேசப்பட்டது.
இன்று கோவணம் கட்டுபவனே கதாபாத்திரமாகிவிட்டான்.
அவர்களின் நடிப்பு இயற்கையாகவே இருக்கின்றது.

நீண்ட காலத்தின் பின் நல்ல படம் பார்த்த திருப்தி.
 

கடைசி வரை என்ன படமென்று சொல்லவேயில்லை.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
17 hours ago, ஈழப்பிரியன் said:

கடைசி வரை என்ன படமென்று சொல்லவேயில்லை.

அவரே மறந்துட்டார்  படத்தின்ற பெயர😍

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
23 hours ago, ஈழப்பிரியன் said:

கடைசி வரை என்ன படமென்று சொல்லவேயில்லை.

5 hours ago, தனிக்காட்டு ராஜா said:

அவரே மறந்துட்டார்  படத்தின்ற பெயர😍

நாங்கள் இப்ப எங்கை நிக்கிறம்? 😁

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
30 minutes ago, குமாரசாமி said:
23 hours ago, ஈழப்பிரியன் said:

கடைசி வரை என்ன படமென்று சொல்லவேயில்லை.

5 hours ago, தனிக்காட்டு ராஜா said:

அவரே மறந்துட்டார்  படத்தின்ற பெயர😍

நாங்கள் இப்ப எங்கை நிக்கிறம்

சுப்பற்ரை கொல்லைக்க.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 8/4/2021 at 08:55, tulpen said:

ஒ மை கடவுளே Tentkotta தளத்தில் உள்ளது. ஆனால் சந்தா கட்டவேண்டும். அதை  விட  you tube ல் முழுப் படமும் உள்ளது. பார்தது மகிழலாம். எனக்கு பிடித்த சிறந்த படம். 

ஆனால் படம் பார்தது முடிந்த பின்னர் அட கடவுளே! இப்படி எனக்கும் ஒரு சான்ஸ் தரக்கூடாதா,  என்று அந்த கற்பனையை நினைத்து ஏங்கக் கூடாது. 😂

ஊருக்குத்தான் உபதேசம் தனக்கில்லை மற்றவர்களுக்கு மட்டும் மனிதவுரிமை நீதி நியாயம் தான்  பார்ப்பது திருட்டு தளம்களில் திருடிய படங்கள் .😄

இதைவிட திருட்டு விசிடி பார்க்கிறம் என்று  உண்மையை சொல்லி வாழ்வது எவ்வளவோ மேல் .

Link to comment
Share on other sites

20 minutes ago, பெருமாள் said:

ஊருக்குத்தான் உபதேசம் தனக்கில்லை மற்றவர்களுக்கு மட்டும் மனிதவுரிமை நீதி நியாயம் தான்  பார்ப்பது திருட்டு தளம்களில் திருடிய படங்கள் .😄

இதைவிட திருட்டு விசிடி பார்க்கிறம் என்று  உண்மையை சொல்லி வாழ்வது எவ்வளவோ மேல் .

YouTube இல் படங்கள் பார்ப்பது திருட்டுத்தனமா? எப்ப இருந்து?

ஏனெனில் YouTube இல் நானும் நிறையப் படங்கள் பார்கின்றனான். அத்துடன் ஓ மை கடவுளே படமும், இந்த திரியை வாசித்த பின் மீண்டும் ஒரு தடவை YouTube  இல் தான் பார்த்தேன்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, நிழலி said:

YouTube இல் படங்கள் பார்ப்பது திருட்டுத்தனமா? எப்ப இருந்து?

ஏனெனில் YouTube இல் நானும் நிறையப் படங்கள் பார்கின்றனான். அத்துடன் ஓ மை கடவுளே படமும், இந்த திரியை வாசித்த பின் மீண்டும் ஒரு தடவை YouTube  இல் தான் பார்த்தேன்.

அவர் இணைத்ததை   இப்போ போய்  PLAY  பண்ணி பாருங்க விளங்கும் .

படம் வெளியிடுபவர்களின்  அனுமதி இன்றி இந்த காளான் இணையங்கள் செய்யும் தகிடுதத்தம் .

Link to comment
Share on other sites

1 minute ago, பெருமாள் said:

அவர் இணைத்ததை   இப்போ போய்  PLAY  பண்ணி பாருங்க விளங்கும் .

படம் வெளியிடுபவர்களின்  அனுமதி இன்றி இந்த காளான் இணையங்கள் செய்யும் தகிடுதத்தம் .

இப்பதான் கவனித்தேன். கட்டணம் கட்டி பார்க்கும் வண்ணம் மாற்றியுள்ளார்கள்.

 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, நிழலி said:

இப்பதான் கவனித்தேன். கட்டணம் கட்டி பார்க்கும் வண்ணம் மாற்றியுள்ளார்கள்.

இல்லை சரியாக கவனியுங்கள் .

Video unavailable

This video is no longer available due to a copyright claim by Aiplex Software Private Limited.

Link to comment
Share on other sites

காளான் இணையத்தளங்கள் மட்டுமல்ல, படத் தயாரிப்பு நிறுவனங்கள் கூட பல நூறு தமிழ் படங்களை இங்கு பகிர்ந்துள்ளார்கள். முக்கியமாக நல்ல பழைய படங்களை பார்க்க வேண்டும் என்றால் YouTube இல் பார்க்க முடியும். முன்னர் பல ஈரானிய திரைப்படங்களும் இருந்தன.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கொப்பி  ரைட்ஸ் சிங்கன் இணைத்த அன்றே கவனித்ததில் தெரியும் தனிப்பட்ட விளம்பர வருவாய்க்கு இணைத்துள்ளார்கள் என்று .

அதாவது களவு தளம் என்று யூடுப் தளம்  வெளியிடுவது வேறு இது வேறு .

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • Published By: VISHNU   19 APR, 2024 | 02:01 AM (எம்.ஆர்.எம்.வசீம்) இலங்கைக்கு சொந்தமான கச்சதீவை பெற்றுக்கொள்ள இந்தியா சர்வதேச நீதிமன்றத்தை நாடுவதாக இந்திய பிரதமர் தெரிவித்திருக்கிறார். அவ்வாறானதொரு நிலை ஏற்பட்டால் அதற்கு முகம்கொடுப்பதற்கு நாங்களும் தயார். கச்சதீவு இலங்கைக்கு சொந்தமானது என்பதற்கு போதுமான ஆதாரங்கள் எம்மிடமிருக்கின்றன என இலங்கை மனித நேய கட்சியின் தலைவியும் பேராசிரியருமான சந்திமா விஜேகுணவர்த்தன தெரிவித்தார். இலங்கை மனிதநேய கட்சி தலைமையகத்தில் வியாழக்கிழமை (18) இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே இவ்வாறு தெரிவித்தார். இதுதொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில், இந்தியாவில் தேர்தல் சூடுபிடித்துள்ள நிலையில், தமிழ் நாட்டு மீனவர்களின் வாக்குகளை பெற்றுக்கொள்ளும் நோக்கில் அங்குள்ள அரசியல்வாதிகள் கச்சதீவு விவகாரத்தை கையில் எடுத்துக்கொண்டு பல்வேறு கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர். தேர்தல் காலம் வரும்போது இந்தியாவை பாெறுத்தவரை இது வழமையான விடயமாகும். இந்திய பிரதமரும் கச்சதீவு விடயமாக மிகவும் தீவிரமாக தேர்தல் மேடையில் உரையாற்றி இருக்கிறார். குறிப்பாக கச்சதீவு இந்தியாவுக்கு சொந்தமானது. அதனை இலங்கைக்கு வழங்கியது வரலாற்று தவறு. அதனால் கச்சதீவை இந்தியாவுக்கு மீண்டும் பெற்றுக்கொள்ள நடவடிக்கை எடுப்போம். முடியாவிட்டால் நெதர்லாந்தில் இருக்கும் சர்வதேச நீதிமன்றத்தை நாடுவோம் எனவும் இந்திய பிரதமர் தெரிவித்திருக்கிறார். 285 ஏக்கர் பரப்பளவைக்கொண்ட  கச்சதீவு இலங்கை,, இந்திய மீனவர்கள் கடற்றொழில் செய்வதற்கு அப்பால், இந்த பூமிக்குள் பல பெருமதிவாந்த வேறு விடயங்கள் இருக்கின்றன. அதனால்தான் இந்திய அரசியல்வாதிகள் கச்சதீவை எப்படியாவது தங்களுக்கு சொந்தமாக்கிக்கொள்ள முயற்சித்து வருகின்றனர். கச்சதீவு இலங்கைக்கு சொந்தமானது என்பதற்கு  தேவையான வரலாற்று ஆதாரங்கள் எம்மிடம் இருக்கின்றன.  அதனால் கச்சதீவை பெற்றுக்கொள்ள இந்தியா சர்வதேச நீதிமன்ற்ததை நாடுமாக இருந்தால், அதற்கு முகம்கொடுக்க நாங்களும் தயாராக வேண்டும். கச்சதீவு இலங்கைக்கு சொந்தமானது என்பதற்கான ஆதாரங்களை சர்வதேச நீதிமன்றத்துக்கு சமர்ப்பிக்க நடவடிக்கை எடுப்போம். கச்சதீவு விவகாரத்தால் இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இருந்துவரும் உறவில் பாதிப்பு ஏற்படக்கூடாது.இந்த விடயத்தில் இந்தியாவுடன் முரண்பட்டுக்கொள்ள நாங்கள் தயார் இல்லை. இந்தியா அயல் நாடாக இருந்துகொண்டு எமக்கு பாரிய உதவிகளை செய்துவருகிறது. குறிப்பாக கொவிட் காலத்தில் இந்திய அரசாங்கத்தின் உதவிகளை எங்களால் ஒருபோதும் மறந்துவிட முடியாது. அந்த நன்றி எப்போதும் எங்களிடம் இருக்கிறது. இருந்தாலும் கச்சதீவு விவகாரம் என்பது எமது உரிமை சார்ந்த விடயம். அதனை எங்களால் விட்டுக்கொடுக்க முடியாது. இந்திய அரசியல்வாதிகள் தங்களின் தேர்தல் பிரசாரத்திற்கே இந்த விடயத்தை கையில் எடுத்துக்கொள்கின்றனர். தேர்தல் முடிவடைந்த பின்னர் அந்த விடயத்தை மறந்துவிடுவார்கள் என்றார். https://www.virakesari.lk/article/181410
    • பட மூலாதாரம்,GETTY IMAGES 2 மணி நேரங்களுக்கு முன்னர் உலக அளவில் 840 மில்லியன் மக்கள் நாள்பட்ட சிறுநீரக கோளாறுகளால் பாதிக்கப்பட்டுள்ளதாக சமீபத்திய ஆய்வுகள் தெரிவிக்கின்றன என இந்தியன் சொசைட்டி ஆப் நெஃப்ராலஜி வெளியிட்டுள்ள இதழில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் அர்த்தம் 10இல் ஒருவருக்கு சிறுநீரக நோய்கள் இருக்கின்றன. மேலும் சமீப காலங்களில் உயிர்களை கொள்ளும் 10 முக்கிய நோய்களில் 7வது இடத்தை பிடித்துள்ளது நாள்பட்ட சிறுநீரக நோய். இந்தியாவில் மட்டும் ஆண்டொன்றுக்கு 2 - 2.5 லட்சம் மக்கள் புதிதாக சிறுநீரக நோய்களால் பாதிக்கப்படுவதாக இந்தியன் சொசைட்டி ஆப் நெஃப்ராலஜி வெளியிட்டுள்ள இதழில் குறிப்பிடப்பட்டுள்ளது. அதேபோல் இந்தியாவில் உள்ள வயது வந்தோர் மக்கள்தொகையில் 8-10% பேர் நாள்பட்ட சிறுநீரக நோய்களால் பாதிக்கப்பட்டுள்ளதாக அந்த அமைப்பு கூறுகிறது. இதற்கு மிக முக்கிய காரணம் சிறுநீரகம் சார்நத நோய்களை ஆரம்ப கட்டத்தில் கண்டுபிடிக்க முடியாமல் போவதும், இவை அமைதியாக இருந்து தீவிர பிரச்னை ஏற்படும்போதே வெளியே தெரியவரும் என்பதுமே ஆகும் என்று கூறுகிறார் எம்ஜிஎம் ஹெல்த்கேர் மருத்துவமனையின் மூத்த சிறுநீரகவியல் மருத்துவர் மில்லி மேத்யூ.   பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,பொதுவாகவே சிறுநீரகம் சார்ந்த பிரச்னைகளில் ஆரம்ப கட்டத்தில் அறிகுறிகள் தெரியாது என்கிறார் மருத்துவர் மில்லி மேத்யூ. சிறுநீரகத்தின் செயல்பாடு என்னென்ன? உடலின் மிக முக்கியமான உறுப்புகளில் வயிற்றுப்பகுதியில் அமைந்திருக்கும் சிறுநீரகமும் ஒன்று. சிறுநீரின் வழியாக கழிவுகளை வெளியேற்றுவதே இதன் பிரதான பணி. ரத்தத்தில் காணப்படும் கழிவுப்பொருட்கள், உடலுக்கு தேவையற்ற அளவுக்கு அதிகமான தாதுக்களை சிறுநீரின் வழியாக வெளியேற்றி தூய ரத்தத்தை உடல் முழுவதும் பரவ செய்கிறது சிறுநீரகம். ஆனால், நமது வாழ்க்கை முறை, உணவுமுறை, பழக்கவழக்கங்கள், மரபுவழி பிரச்னைகள், தேவையற்ற மாத்திரைகளை உட்கொள்வது, இதர உடல்நல கோளாறுகள் உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் இந்த உறுப்பு செயல்படுவதில் தடை ஏற்படுகிறது. அப்படி சிறுநீரகத்தின் பணியில் இடையூறு ஏற்பட்டு அதன் வழக்கமான கழிவகற்றல் பணியை சரியாக செய்யமுடியாமல் போகும்போதுதான் பல்வேறு சிறுநீரக கோளாறுகள் ஏற்படுகின்றன. இதில் மேலுமொரு அபாயம் என்னவெனில் இந்த கோளாறுகள் ஆரம்ப கட்டத்தில் எந்த விதமான அறிகுறியும் காட்டாமல் உங்களுக்குள் வந்து விடும். நாளாக நாளாக அதன் வீரியம் அதிகரிக்கும்போதே உங்களுக்கு அறிகுறிகள் தெரிய தொடங்கி, அதிலிருந்து மருத்துவ பரிசோதனைகள் மூலம், நீங்கள் எந்தளவுக்கு, எந்த விதமான நோயால் பாதிக்கப்பட்டுள்ளீர்கள் என்பதை கண்டறிய முடியும் என்று கூறுகிறார் மருத்துவர் மில்லி மேத்யூ. அப்படி என்ன மாதிரியான சிறுநீரகம் சார்ந்த நோய்கள் உங்களுக்கு ஏற்படலாம்? அதில் என்ன மாதிரியான அறிகுறிகள் தென்பட வாய்ப்புள்ளது? என்பதை அறிந்துக் கொள்ளலாம்.   பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,நாள்பட்ட சிறுநீரக நோய்களை குணப்படுத்த முடியாவிட்டாலும், அவை தீவிரமடையாமல் தடுக்க முடியும். நாள்பட்ட சிறுநீரக நோய் (Chronic Kidney Disease) நாள்பட்ட சிறுநீரக நோய் என்பது நீண்ட நாட்களாக தொடர்ந்து வரும் சிறுநீரக கோளாறு ஆகும். இது அதிகம் சர்க்கரை நோய் மற்றும் உயர்ரத்த அழுத்தம் உள்ளவர்களுக்கே ஏற்படும். இதன் ஆரம்ப கட்டங்களில் எந்த விதமான அறிகுறிகளும் இருக்காது. இந்த வகை சிறுநீரக கோளாறுகள் சரி செய்ய முடியாதவை. முறையான மருத்துவ சிகிச்சை மூலம் இவை தீவிரமடையாமல் பார்த்துக் கொள்ள முடியும். அறிகுறிகள் குமட்டல் மற்றும் வாந்தி பசியின்மை கால் மற்றும் கணுக்கால் வீக்கம் மூச்சுத்திணறல் தூங்குவதில் சிரமம் அதிகமாக அல்லது குறைவாக சிறுநீர் கழித்தல்   பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,சிறுநீரக கல் ஒன்றிரண்டு இருக்கும்போது அதன் அறிகுறிகள் வெளியே தெரியாது. சிறுநீரகத்தில் கல் சிறுநீரகத்தில் தேங்கும் உப்பு அல்லது தாதுக்களின் படிகங்களே சிறுநீரக கல் என்று அழைக்கப்படுகிறது. பொதுவாக ஓரிரண்டு கற்கள் உருவாகும்போது அறிகுறியோ அல்லது தீவிர பிரச்னையோ ஏற்படாது என்று குறிப்பிடும் மருத்துவர், அது தீவிரமடையவும் வாய்ப்புகள் உள்ளது என்று கூறுகிறார். தண்ணீர் குறைவாக குடித்தால், உடல் பருமன், மோசமான வாழ்க்கை முறை, உணவுமுறை உள்ளிட்டவற்றால் இந்த பிரச்னை ஏற்படுகிறது. அறிகுறிகள் சிறுநீர் கழிக்கும் போது வலி சிறுநீரில் ரத்தம் வெளியேறுதல் சிறுநீர் பாதையில் அடைப்பு ஏற்படுதல் கல் உள்ள இடத்தில் வலி   நீரிழிவு சிறுநீரக நோய் (Diabetes Nephropathy) பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,உலகில் மூன்றில் ஒரு சர்க்கரை நோயாளிகள் சிறுநீரக கோளாறால் பாதிக்கப்படுகின்றனர். ஆய்வுத்தரவுகளின் படி சர்க்கரை நோய் உள்ள 3 பேரில் ஒருவருக்கு சிறுநீரக கோளாறு ஏற்படுகிறது. உலக அளவில் சிறுநீரக நோய்க்கான காரணிகளில் சர்க்கரை நோய் முதன்மையானதாக இருக்கிறது. அப்படி சர்க்கரை நோய் கட்டுப்பாட்டிற்குள் இல்லாதவர்களுக்கு இந்த நீரிழிவு சிறுநீரக நோய் ஏற்படுகிறது. அறிகுறிகள் கால்கள் வீக்கம் நுரையுடன் சிறுநீர் வெளியேறுதல் உடல் சோர்வு எடை குறைதல் உடல் அரிப்பு குமட்டல் மற்றும் வாந்தி   ஹைப்பர்டென்சிவ் நெஃப்ரோஸ்க்ளிரோசிஸ் (Hypertensive Nephrosclerosis) பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,உயர் ரத்த அழுத்தம் உள்ளவர்களுக்கு சிறுநீரகம் பாதிக்கும் அபாயம் அதிகம் சர்க்கரை நோய்க்கு இணையாக சிறுநீரகத்தை பாதிக்கும் மற்றுமொரு பிரச்னை உயர் ரத்த அழுத்தம். உயர் ரத்த அழுத்தம் சிறுநீரகத்தில் உள்ள ரத்த குழாய்களை சேதமடைய செய்வதால் சிறுநீரகத்தின் செயல்பாடு பாதிக்கப்படுகிறது. இதனால் ரத்தத்தில் உள்ள தேவையற்ற கழிவுகளை வெளியேற்றுதல் மற்றும் கூடுதல் தாதுக்களை வெளியேற்றுதல் ஆகியவை பாதிப்படைகிறது. இதில் முக்கியமான விஷயம் என்னவென்றால் சிறுநீரகத்தின் செயல் பாதித்து தேவையற்ற திரவங்கள் ரத்த குழாய்களில் படிவதால், ரத்த அழுத்தம் மேலும் உயர்கிறது. அறிகுறிகள் குமட்டல் மற்றும் வாந்தி தலை சுற்றல் உடல் மந்தம் தலை வலி கழுத்து வலி   சிறுநீர் பாதைத் தொற்று பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,சிறுநீர் பாதையில் ஏற்படும் தோற்று சிறுநீரகத்தையும் பாதிக்கும் அபாயம் உள்ளது. சிறுநீர் பாதைத் தொற்று என்பது சிறுநீரக கோளாறு இல்லை என்றாலும் கூட, அது சிறுநீரகத்தை பாதிக்கவும் வாய்ப்புள்ளது. சிறுநீர் பாதைத் தொற்று என்பது சிறுநீர் பாதையில் ஒட்டிக்கொள்ளும் நுண்ணுயிரிகள் பெருகி பாதிப்பை ஏற்படுத்துவது. இது கீழ்நிலையில் உள்ள சிறுநீர் பாதையிலேயே தங்கி விட்டால் சிறுநீரகத்திற்கு பாதிப்பு ஏற்பட வாய்ப்பு குறைவு. ஆனால், பெருகி மேல்நிலை பகுதிக்கு வந்துவிட்டால் சிறுநீரகத்திற்கு பாதிப்பு ஏற்படலாம். அறிகுறிகள் முதுகுப் பக்கத்தில் வலி காய்ச்சல் சிறுநீர் கழிக்கும்போது வலி அடிவயிற்றில் வலி சிறுநீரில் ரத்தம் குமட்டல் மற்றும் வாந்தி   பாலிசிஸ்டிக் சிறுநீரக நோய் பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,சிறுநீரகத்தில் அதிகரிக்கும் நீர்க்கட்டிகள் அதை செயலிழக்க செய்யுமளவு ஆபத்தானது. பாலிசிஸ்டிக் சிறுநீரக நோய் என்பது உங்களது சிறுநீரகத்தில் ஏற்படும் நீர்க்கட்டிகளை குறிப்பது. நாளடைவில் இவை வளர்ந்து உங்களது சிறுநீரகத்தை செயலிழக்கும் நிலைக்கும் கொண்டு செல்லலாம். இவை பெரும்பாலும் மரபணு ரீதியாக ஏற்படக்கூடிய சிறுநீரக கோளாறாகும். அறிகுறிகள் மேல்வயிற்றில் வலி அடிவயிற்றின் பக்கவாட்டில் வலி முதுகில் வலி சிறுநீரில் ரத்தம் வெளியேறுதல் சிறுநீர் பாதையில் அடிக்கடி தொற்று ஏற்படுதல்   ஐஜிஏ நெஃப்ரோபதி (IgA Nephropathy) பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,இந்த சிறுநீரக பிரச்சனையில் சிறுநீரில் ரத்தம் வெளியேறுவது நமக்கே தெரியாது. ஐஜிஏ நெஃப்ரோபதி என்பது பெரும்பாலும் சிறுவயதில் இளம்பருவத்தில் வரக்கூடிய ஒரு சிறுநீரக கோளாறு என்று கூறுகிறார் மருத்துவர் மில்லி மேத்யூ. இதில் சிறுநீர் வெளியேறும்போது ரத்தமும் இணைந்து வெளியாகும். இதை நாம் நேரடியாக பார்த்தால் கண்டறிவது கடினம். ஆனால், பரிசோதனையில் இதை கண்டறிய முடியும்.   பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,சிறுநீரகத்தின் செயல்பாடு 100இலிருந்து 10% என்ற நிலைக்கு வரும்போது தான் சிறுநீரக செயலிழப்பின் அறிகுறிகள் தெரியும் சிறுநீரக செயலிழப்பு சிறுநீரக செயலிழப்பு ஏற்படுபவர்களுக்கு அதன் முற்றிய நிலையில் மட்டுமே அறிகுறிகள் தெரியும். குறிப்பாக அதில் 5 நிலைகள் உள்ளது. இதில் நான்காவது நிலை வரையிலும் கூட அறிகுறிகள் தென்படாமல் ஒருவர் நன்றாக இருப்பார். சிறுநீரகத்தின் செயல்பாடு 100இலிருந்து 10% என்ற நிலைக்கு வரும்போது தான் அறிகுறிகள் தெரியும். அந்த நிலையில் ஒரு சில பொதுவான அறிகுறிகள் தென்படும். அறிகுறிகள் பசியின்மை வாந்தி கடுமையான உடல் சோர்வு உடல் வீக்கம் தூக்கமின்மை உப்பசம் https://www.bbc.com/tamil/articles/c2e01gql070o
    • Published By: VISHNU   19 APR, 2024 | 02:19 AM (நா.தனுஜா) டயலொக் அக்ஸியாட்டா மற்றும் பார்டி எயார்டெல் லிமிடெட் ஆகிய நிறுவனங்கள் இலங்கையில் அவற்றின் செயற்பாடுகளை இணைந்து முன்னெடுப்பதற்கான ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்டுள்ளன.  இவ்வொப்பந்தத்தின் பிரகாரம் எயார்டெல் லங்காவின் 100 சதவீத பங்குகளை டயலொக் கொள்வனவு செய்யும் அதேவேளை, அதற்குப் பதிலாக இதுவரையில் மொத்தமாக விநியோகிக்கப்பட்ட பங்குகளில் 10.355 சதவீத பெறுமதியுடைய சாதாரண வாக்குரிமை பங்குகளை எயார்டெலுக்கு வழங்கும்.  இதுகுறித்து தெளிவுபடுத்தி நேற்றைய தினம் ஊடக அறிக்கையொன்றை வெளியிட்டிருக்கும் டயலொக் நிறுவனம், நாடளாவிய ரீதியில் தொலைத்தொடர்பு சேவையை மேம்படுத்துவதை இலக்காகக்கொண்டு முன்னெடுக்கப்படும் இந்த இணைப்புக்கு இலங்கை தொலைத்தொடர்பு ஒழுங்குபடுத்தல் ஆணைக்குழு அனுமதியளித்திருப்பதாகத் தெரிவித்துள்ளது.  அதுமாத்திரமன்றி இந்நடவடிக்கையானது போலியான தொலைத்தொடர்பு உட்கட்டமைப்பு செயன்முறைகளைக் கட்டுப்படுத்துவதற்கும், தொழில்நுட்பத்துறையில் ஒத்துழைப்பை வலுப்படுத்துவதற்கும், வேகமான வலையமைப்பு இணைப்பை விரிவுபடுத்துவதற்கும், செலவினங்களைக் குறைப்பதற்கும், செயற்பாட்டு வினைத்திறனை அதிகரிப்பதற்கும் உதவும் எனவும் டயலொக் நிறுவனம் நம்பிக்கை வெளியிட்டுள்ளது. https://www.virakesari.lk/article/181412
    • Published By: VISHNU    18 APR, 2024 | 10:24 PM வலிப்பு ஏற்பட்ட நிலையில் கிணற்றில் விழுந்த இளம் குடும்பப் பெண் ஒருவர் புதன்கிழமை (17) உயிரிழந்துள்ளார். இதன்போது மாதகல் - சகாயபுரம் பகுதியைச் சேர்ந்த பிரதீபன் நித்தியா (வயது 37) என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில், குறித்த பெண்ணுக்கு வலிப்பு நோய் உள்ளது. இந்நிலையில் புதன்கிழமை (17) பிற்பகல் 6.30 மணியளவில் வீட்டு கிணற்றில் இருந்து சடலமாக மீட்கப்பட்டார். பின்னர் சடலம் தெல்லிப்பழை வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டு, அங்கிருந்து யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டது. சடலம் மீதான மரண விசாரணைகளை திடீர் மரண விசாரணை அதிகாரி ஆ.ஜெயபாலசிங்கம் மேற்கொண்டார். உடற்கூற்று பரிசோதனைகளின் பின்னர் சடலம் வியாழக்கிழமை (18) உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. இரண்டு பிள்ளைகளின் தாயான இவர் வலி.தென்மேற்கு பிரதேச சபையின் பண்டத்தரிப்பு உப அலுவலகத்தில் அபிவிருத்தி உத்தியோகத்தராக கடமை புரிந்து வந்தமை குறிப்பிடத்தக்கது. https://www.virakesari.lk/article/181408
    • ஷஷாங்க், அஷுட்டோஷ் அதிரடியால் திகிலடைந்த மும்பை கடைசியில் கட்டுப்பாடான ஓவர்களினால் வெற்றிபெற்றது Published By: VISHNU    19 APR, 2024 | 06:04 AM (நெவில் அன்தனி) மொஹாலி, மல்லன்பூர் மகாராஜா யாதவேந்த்ர சிங் சர்வதேச விளையாட்டரங்கில் வியாழக்கிழமை (18) நடைபெற்ற 17ஆவது இண்டியன் பிறீமியர் லீக் அத்தியாயத்தின் 33ஆவது போட்டியில் பஞ்சாப் கிங்ஸை 9 ஓட்டங்களால் மும்பை இண்டியன்ஸ் வெற்றிகொண்டது. போட்டியின் ஒரு கட்டத்தில் மும்பை இண்டியன்ஸ் இலகுவாக வெற்றிபெறும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், ஷஷாங் சிங், அஷுட்டோஷ் ஷர்மா ஆகிய இருவரும் ஆக்ரோஷத்துடன் துடுப்பெடுத்தாடி ஆட்டத்தில் பரபரப்பை ஏற்படுத்தியதால் மும்பை இண்டியன்ஸ் சற்று திகிலடைந்தது. எவ்வாறாயினும் கடைசிக்கு முந்தைய 3 ஓவர்களை ஜஸ்ப்ரிட் பும்ரா, ஜெரால்ட் கோட்ஸீ, ஹார்திக் பாண்டியா ஆகியோர் கட்டுப்பாட்டுடன் வீசியதால் மும்பை இண்டியன்ஸ் வெற்றியை உறுதிசெய்துகொண்டது. அப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய மும்பை இண்டியன்ஸ் சிறு சவாலுக்கு மத்தியில் 20 ஓவர்களில் 7 விக்கெட்களை இழந்து 192 ஓட்டங்களைப் பெற்றது. இந்த வருட இண்டியன் பிறீமியர் லீக் கிரிக்கெட் போட்டியில் துடுப்பாட்டத்தில் எதிர்பார்த்தளவு பிரகாசிக்கத் தவறிவரும் இஷான் கிஷான் இ ந்தப்  போட்டியிலும் 3ஆவது ஓவரில் 8 ஓட்டங்களுடன் ஆட்டம் இழந்தார். எனினும் ரோஹித் ஷர்மாவும் சூரியகுமார் யாதவ்வும் 2ஆவது விக்கெட்டில் 81 ஓட்டங்களைப் பகிர்ந்து சரிவை சீர் செய்தனர். ரோஹித் ஷர்மா 36 ஓட்டங்களுக்கு ஆட்டம் இழந்த பின்னர் சூரியகுமார் யாதவ்வுடன் இணைந்த திலக் வர்மா 3ஆவது விக்கெட்டில் 49 ஓட்டங்களைப் பகிர்ந்தார். மறு பக்கத்தில் திறமையாகத் துடுப்பெடுத்தாடிய சூரியகுமார் யாதவ் 53 பந்துகளில் 7 பவுண்டறிகள், 3 சிக்ஸ்களுடன் 78 ஓட்டங்களைப் பெற்று ஆட்டம் இழந்தார். தொடர்ந்து அணித் தலைவர் ஹார்திக் பாண்டியா (20), டிம் டேவிட் (14) ஆகிய இருவரும் குறைந்த ஓட்டங்களுடன் வெளியேறினர். கடைசிப் பந்தில் மொஹமத் நபி ஓட்டம் பெறாமல் ரன் அவுட் ஆனார். திலக் வர்மா 18 பந்துகளில் 34 ஓட்டங்களுடன் ஆட்டம் இழக்காமல் இருந்தார். கடைசி ஓவரில் 3 விக்கெட்களைக் கைப்பற்றிய ஹர்ஷால் பட்டேலின் 4 ஓவர்களில் 42 ஓட்டங்கள் பெறப்பட்டது. அவரை விட சாம் கரன் 41 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களைக் கைப்பற்றினார். 193 ஓட்டங்களை வெற்றி இலக்காகக் கொண்டு பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய பஞ்சாப் கிங்ஸ் 19.1 ஓவர்களில் சகல விக்கெட்களையும் இழந்து 183 ஓட்டங்களைப் பெற்று தோல்வி அடைந்தது. பஞ்சாப் கிங்ஸின் ஆரம்பம் மிக மோசமாக இருந்தது. முதல் 3 ஓவர்களுக்குள் ப்ரப்சிம்ரன் சிய் (0), ரைலீ ரூசோவ் (1), பதில் அணித் தலைவர் சாம் கரன் (6), லியாம் லிவிங்ஸ்டோன் (1) ஆகிய நால்வரும் 4 ஓட்டங்கள் வித்தியாசத்தில் ஆட்டம் இழந்தனர். (14 - 4 விக்.) எனினும் ஹார்ப்ரீட் சிங் பாட்டியா, ஷஷாங்க் சிங் ஆகிய இருவரும் 5ஆவது விக்கெட்டில் 35 ஓட்டங்களைப் பகிர்ந்து அணிக்கு சிறு உற்சாகத்தைக் கொடுத்தனர். ஆனால் ஹார்ப்ரீட் சிங் பாட்டியா 13 ஓட்டங்களுடனும் அவரைத் தொடர்ந்து ஜிட்டேஷ் சிங் 9 ஓட்டங்களுடனும் ஆட்டம் இழந்தனர். (77 - 6 விக்.) இதன் காரணமாக பஞ்சாப் கிங்ஸ் 100 ஓட்டங்களை எட்டுமா என்ற சந்தேகம் நிலவியது. ஆனால், ஷஷாங்க் சிங், அஷுட்டோஷ் சிங் ஆகிய இருவரும் 7ஆவது விக்கெட்டில் 34 ஓட்டங்களைப் பகிர்ந்து அணியின் மொத்த எண்ணிக்கை 110 ஓட்டங்களைக் கடக்க உதவினர். வழமையான அதிரடியில் இறங்கிய ஷஷாங்க் சிங் 25 பந்துகளில் 3 சிக்ஸ்கள், 2 பவுண்டறிகளுடன் 41 ஓட்டங்களைப் பெற்றார். அதன் பின்னர் அஷுட்டோஷ் ஷர்மா அதிரடியாகத் துடுப்பெடுத்தாடி 28 பந்துகளில் 7 சிக்ஸ்கள், 2 பவுண்டறிகளுடன் 61 ஓட்டங்களைப் பெற்று அணியை கௌரவமான நிலையில் இட்டு ஆட்டம் இழந்தார். அஷுட்டோஷ் ஷர்மாவும் ஹார்ப்ரீட் ப்ராரும் 8ஆவது விக்கெட்டில் 30 பந்துகளில் பகிர்ந்த 57 ஓட்டங்களே இன்னிங்ஸில் அதி சிறந்த இணைப்பாட்டமாக அமைந்தது. (168 - 8 விக்.) மொத்த எண்ணிக்கை 174 ஓட்டங்களாக இருந்தபோது ஹார்ப்ரீட் ப்ரார் 21 ஓட்டங்களுடன் ஆட்டம் இழந்தார். எனினும் கடைநிலை ஆட்டக்காரர் கெகிசோ ரபாடா தான் எதிர்கொண்ட முதல் பந்தில் சிக்ஸையும் அடுத்த பந்தில் ஒற்றையையும் பெற்று கடைசி ஓவரில் வெற்றி இலக்கை 12 ஓட்டங்களாக குறைத்தார். எனினும் கடைசி ஓவரில் இல்லாத ஒரு ஓட்டத்தை நோக்கி ஓடிய ரபாடா 8 ஓட்டங்களுடன் ஆட்டம் இழக்க, மும்பை இண்டியன்ஸ் மிகவும் அவசியமான வெற்றியை ஈட்டியது. பந்துவீச்சில் ஜஸ்ப்ரிட் பும்ரா 21 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்களையும் ஜெரால்ட் கோட்ஸீ 32 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்களையும் கைப்பற்றினர். https://www.virakesari.lk/article/181411
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.