Jump to content

11 இஸ்லாமிய அமைப்புக்களுக்கு தடை - அமைப்புக்களின் விபரம் இதோ!


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

அடிப்படைவாத செயற்பாடுகளுடன் தொடர்புடைய 11 இஸ்லாமிய அமைப்புக்களுக்கு தடைவிதிக்குமாறு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

குறித்த அமைப்புகளை தடைபெற்றுமாறு சட்டமா அதிபர் தப்புல டி லிவேரா அனுமதியளித்துள்ளதாக சட்டமா அதிபர் திணைக்களம் தெரிவித்துள்ளது.

 

banned.jpg

 

இவ்வாறு தடைசெய்யப்பட்டுள்ள 11 இஸ்லாமிய அமைப்புகள் வருமாறு,

 

1. யுனைடெட் தௌஹீத்  ஜமாஅத் - United Thowheed Jamaath (UTJ)

2. சிலோன் தௌஹீத் ஜமாஅத் - Ceylon Thowheed Jamaath (CTJ)

3. இலங்கை தௌஹீத்  ஜமாஅத் - Sri Lanka Thowheed Jamaath (SLTJ)

4. அனைத்து இலங்கை தௌஹீத் ஜமாஅத் - All Ceylon Thowheed Jamaath (ACTJ)

5. ஜமியத்துல் அன்சாரி சுன்னத்துல் மொஹமதியா - Jamiyyathul Ansaari Sunnaththul Mohomadiya (JASM)

6. தாருல் ஆதார் @ ஜமியுல் ஆதர் - Dharul Adhar @ Jamiul Adhar

7. இலங்கை இஸ்லாமிய மாணவர் இயக்கம் - Sri Lanka Islamic Student Movement (SLISM)

8. இஸ்லாமிய அரசு ஈராக் & சிரியா (ஐ.எஸ்.ஐ.எஸ்) - Islamic State of Iraq & Syria (ISIS)

9. அல்கொய்தா - Al-Qaeda

10. சேவ் த பேர்ள்ஸ்  Save the Pearls

11. சூப்பர் முஸ்லீம் - Super Muslim

 

11 இஸ்லாமிய அமைப்புக்களுக்கு தடை - அமைப்புக்களின் விபரம் இதோ! | Virakesari.lk

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மல்வத்தை, அஸ்கிரிய பீடங்களை எப்ப தடை பண்ணுவீங்க ஆபிசர் :grin:

Link to comment
Share on other sites

1 hour ago, பிழம்பு said:

அடிப்படைவாத செயற்பாடுகளுடன் தொடர்புடைய 11 இஸ்லாமிய அமைப்புக்களுக்கு தடைவிதிக்குமாறு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

குறித்த அமைப்புகளை தடைபெற்றுமாறு சட்டமா அதிபர் தப்புல டி லிவேரா அனுமதியளித்துள்ளதாக சட்டமா அதிபர் திணைக்களம் தெரிவித்துள்ளது.

 

banned.jpg

 

இவ்வாறு தடைசெய்யப்பட்டுள்ள 11 இஸ்லாமிய அமைப்புகள் வருமாறு,

 

1. யுனைடெட் தௌஹீத்  ஜமாஅத் - United Thowheed Jamaath (UTJ)

2. சிலோன் தௌஹீத் ஜமாஅத் - Ceylon Thowheed Jamaath (CTJ)

3. இலங்கை தௌஹீத்  ஜமாஅத் - Sri Lanka Thowheed Jamaath (SLTJ)

4. அனைத்து இலங்கை தௌஹீத் ஜமாஅத் - All Ceylon Thowheed Jamaath (ACTJ)

 

இந்த பெயர்கள் எல்லாம் ஒரே மாதிரி இருக்கு. பெயர் வைக்க ஷரியா சட்டத்தில் தட்டுப்பாடு போல...

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

11 இஸ்லாமியவாத அமைப்புகளுக்கு தடை விதிக்க அனுமதி: 'இனவாத சிங்கள அமைப்புகளுக்கு தடை இல்லை'

இனவாத செயற்பாடுகளுடன் தொடர்புடைய 11 இஸ்லாமியவாத அமைப்புகளுக்கு தடை விதிக்க இலங்கையில் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

சட்ட மாஅதிபர் தப்புல டி லிவேரா இதற்கான அனுமதியை வழங்கியதாக சட்ட மாஅதிபர் திணைக்களத்தின் இணைப்பு அதிகாரி, அரச சட்டத்தரணி நிஷார ஜயரத்ன தெரிவித்துள்ளார்.

ஈஸ்டர் தாக்குதல் தொடர்பான ஜனாதிபதி ஆணைக்குழுவின் அறிக்கையிலுள்ள பரிந்துரைகளுக்கு அமையவே இந்தத் தடை செய்யப்பட்டிருந்தாலும், அந்தப் பட்டியலில் இடம்பெற்றுள்ள இனவாதமாக செயற்படும் சிங்கள அமைப்புகள் ஏன் தடை செய்யப்படவில்லை என்ற கேள்வியும் எழுந்துள்ளது.

ஐக்கிய தவ்ஹீத் ஜமாத், சிலோன் தவ்ஹீத் ஜமாத், ஸ்ரீலங்கா தவ்ஹீத் ஜமாத், அனைத்து இலங்கை தவ்ஹீத் ஜமாத், ஜம்யதுல் அன்சாரி சுன்னதுல் மொஹொமதியா, தாருல் அதர் எட் ஜம் உப் ஆதர், ஸ்ரீலங்கா இஸ்லாமிய மாணவ சங்கம், ஐ.எஸ்.ஐ.எஸ், அல்-கைடா, சேவ் த பர்ல்ஸ் மற்றும் சுபர் முஸ்லிம் ஆகிய அமைப்புக்களுக்கே தடை விதிக்க சட்ட மாஅதிபர் அனுமதி வழங்கியுள்ளார்.

பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கை என்ற பெயரில் ஜனநாயக ரீதியான தங்கள் அமைப்பும் தடைக்கு உள்ளாகியுள்ளதாக இந்தப் பட்டியலில் உள்ள ஓர் அமைப்பு கூறியுள்ளது. தடைக்கு எதிராக நீதிமன்றத்தை நாடப் போவதாகவும் அந்தத் அமைப்பு கூறுகிறது.

இலங்கையில் 2019ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 21ம் தேதி நடத்தப்பட்ட ஈஸ்டர் தாக்குதலின் பின்னரான காலப் பகுதியில் இஸ்லாமியவாத அமைப்புகளுக்கு தடை விதிக்க வேண்டும் என்ற கோரிக்கை வலுப் பெற்றது.

கடந்த காலங்களிலும் முகத்தை முழுமையாக மூடும் வகையிலான ஆடைகளை அணிவதற்கு தடை விதிக்க நடவடிக்கை எடுத்து வருவதாக பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் சரத் வீரசேகர தெரிவித்திருந்தார்.

SARATH WEERASEKARA

பட மூலாதாரம்,SARATH WEERASEKARA'S FACEBOOK

 
படக்குறிப்பு,

சரத் வீரசேகர

அதேபோன்று, இனவாத கொள்கைகளுடன் செயற்படும் மத்ரஸா பாடசாலைகளுக்கும் தடை விதிக்க நடவடிக்கை எடுப்பதாக அவர் கூறியிருந்தார்.

இந்த விடயம் உள்நாட்டில் மாத்திரமன்றி, சர்வதேச ரீதியிலும் அதிகளவில் பேசப்பட்டது.

இவ்வாறான நிலையில், இலங்கைக்குள் மாத்திரமன்றி, வெளிநாடுகளிலும் செயற்படும் இஸ்லாமியவாத அமைப்புகளுக்கு தடை விதிக்க இன்று அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

இதேவேளை, ஈஸ்டர் தாக்குதலின் பிரதான சூத்திரதாரிகள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் சரத் வீரசேகர தெரிவித்துள்ளார்.

நவுபர் மௌலவி மற்றும் ஹஜ்ஜீல் அக்பர் ஆகியோரே, ஈஸ்டர் தாக்குதலின் பிரதான சூத்திரதாரிகள் எனவும் அவர் கூறுகிறார்.

பிரதான சூத்திரதாரியான நவுபர் மௌலவி தற்போது கைது செய்யப்பட்டு, விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிடுகிறார்.

குறித்த நபர் 2014ம் ஆண்டு ஐ.எஸ்.ஐ.எஸ் கொள்கைகளை இலங்கைக்குள் கொண்டு வந்து, அதனை நடைமுறைப்படுத்தியுள்ளதாகவும் அவர் தெரிவிக்கிறார்.

சஹ்ரான் ஹாஷிம்
 
படக்குறிப்பு,

சஹ்ரான் ஹாஷிம்

2019ம் ஆண்டு ஈஸ்டர் தினத்தில் தற்கொலை செய்துக்கொண்ட சஹ்ரான் ஹாஷிம், 2016ம் ஆண்டு, நவுபர் மௌலவியின் இனவாத கொள்கைகளுடன் இணைந்து செயற்பட்டுள்ளதாகவும், நவுபர் மௌலவியே, சஹ்ரானுக்கு ஒத்துழைப்புக்களை வழங்கியுள்ளதாகவும் அமைச்சர் சரத் வீரசேகர கூறுகிறார்.

இதேவேளை, ஈஸ்டர் தாக்குதலுடன் தொடர்புடைய 32 பேருக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்ய நடவடிக்கை எடுத்துள்ளதாக தெரிவித்த அமைச்சர், 211 பேர் தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டார்.

இதேவேளை, 75 பேர் தொடர்ந்தும் தடுப்பு காவலில் வைத்து விசாரிக்கப்பட்டு வருவதாக பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் சரத் வீரசேகர தெரிவிக்கிறார்.

தடை செய்யப்பட்ட அமைப்புகளின் எதிர்வினை

பயங்கரவாதத்திற்கு எதிராகவும், தீவிரவாதத்தை அடியோடு இல்லாது செய்ய வேண்டும் என்ற நோக்கத்திலும் செயற்படும் ஜனநாயக ரீதியான தமது அமைப்பை தடை செய்வதானது ஏற்றுக்கொள்ள முடியாத ஒன்று என சிலோன் தவ்ஹீத் ஜமாத் அமைப்பு தெரிவிக்கிறது.

சிலோன் தவ்ஹீத் ஜமாத் அமைப்பு, வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமது அமைப்பு உள்ளிட்ட 6 தவ்ஹீத் அமைப்புகளுக்கு தடை விதிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் அந்த அமைப்பு கூறுகிறது.

சிலோன் தவ்ஹீத் ஜமாத் அமைப்பானது, 2019ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 21ம் தேதி பயங்கரவாதத் தாக்குதல் நடத்தப்படுவதற்கு முன்னரே, பாதுகாப்பு துறைக்கு சஹரான் ஹஷிமின் பயங்கரவாத செயற்பாடுகள் தொடர்பில் தகவல்களை வழங்கியதாகவும் அந்த அமைப்பு குறிப்பிடுகின்றது.

ஈஸ்டர் தாக்குதலின் பின்னரான காலத்தில் அரசாங்கத்தினால் நியமிக்கப்பட்ட நாடாளுமன்றத் தெரிவுக்குழு மற்றும் ஜனாதிபதி ஆணைக்குழு ஆகியவற்றின் விசாரணைகளுக்கு தமது அமைப்பு பூரண ஒத்துழைப்புக்களை வழங்கியதாகவும் சிலோன் தவ்ஹீத் ஜமாத் அமைப்பு தெரிவிக்கின்றது.

இந்த விசாரணைகளில் தமது அமைப்பின் கொள்கைகள், செயற்பாடுகள், சமூக பணிகள் உள்ளிட்டவற்றை, ஆதாரங்களுடன் தாம் முன்வைத்திருந்ததாகவும் அந்த அமைப்பு குறிப்பிடுகின்றது.

இவ்வாறு தமது முழுமையான கொள்கைகளை வெளிப்படுத்தியுள்ள போதிலும், சட்ட மாஅதிபர் இவ்வாறான தீர்மானத்தை எட்டியுள்ளமை, அடிப்படையற்றது என அந்த அமைப்பு, விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ பயங்கரவாத செயற்பாடுகளுடன் தொடர்புடைய அமைப்புகளை தடை செய்வதற்கு தாம் ஆட்சேபனை கிடையாது எனவும் சிலோன் தவ்ஹீத் ஜமாத் அமைப்பு கூறுகின்றது.

எனினும், பயங்கரவாதத்திற்கு எதிராக செயற்படும் ஓர் அமைப்பை தடை செய்வதானது, ஜனநாயகத்திற்கு விரோதமானது என அந்த அமைப்பு குறிப்பிடுகின்றது.

எவ்வாறாயினும், அரசாங்கத்தின் இந்த தீர்மானத்திற்கு எதிராக தாம் நீதிமன்றத்தை நாடி, நியாயத்தை பெற்றுக்கொள்ளவுள்ளதாக சிலோன் தவ்ஹீத் ஜமாத் அமைப்பு தெரிவிக்கின்றது.

இனவாதமாக செயற்படும் சிங்கள அமைப்புகள் தடை செய்யப்படவில்லை?

ஈஸ்டர் தாக்குதல் தொடர்பில் விசாரணை நடத்திய ஜனாதிபதி ஆணைக்குழுவின் அறிக்கையிலுள்ள பரிந்துரைகளுக்கு அமையவே, அரசாங்கம் இந்த தீர்மானத்தை எட்டியுள்ளதாக பிரதான எதிர்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தியின் கொழும்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் முஜுபூர் ரஹுமான் பிபிசி தமிழுக்கு தெரிவிக்கின்றார்.

நாடாளுமன்ற உறுப்பினர் முஜுபூர் ரஹுமான் (கோப்புப்படம்)

பட மூலாதாரம்,MUJUBUR RAHMAN'S FACEBOOK PAGE

 
படக்குறிப்பு,

நாடாளுமன்ற உறுப்பினர் முஜுபூர் ரஹுமான் (கோப்புப்படம்)

எனினும், இனவாத கொள்கைகளை கொண்ட பெரும்பான்மை சிங்கள அமைப்புக்களும் இந்த பட்டியலில் காணப்பட்ட போதிலும், அந்த இனவாத அமைப்புகளை தடை செய்யாது, இஸ்லாமிய அமைப்புகளை மாத்திரம் தடை செய்வதானது ஏற்றுக்கொள்ள முடியாது என அவர் கூறுகின்றார்.

இந்த நடவடிக்கையின் ஊடாக, சட்டத்தில் பிரச்னை உள்ளமை தெளிவாகின்றது என அவர் குறிப்பிடுகின்றார்.

இந்த நாட்டிலுள்ள சட்டம் சிறுபான்மை சமூகத்திற்கு ஒரு விதமாகவும், பெரும்பான்மை மக்களுக்கு வேறொரு விதமாகவும் செயற்படுகின்றது என்பது இதனூடாக உறுதிப்படுத்தப்படுகின்றது என அவர் கூறுகின்றார்.

இந்த நடவடிக்கையானது, அநீதியான நடவடிக்கை என்பதுடன், எதிர்காலத்தில் இதனூடாக பிரச்சினைகள் அதிகரிக்கக்கூடும் எனவும் அவர் தெரிவிக்கின்றார்.

இதேவேளை, விசாரணைகளை நடத்திய ஜனாதிபதி ஆணைக்குழுவில் சிறுபான்மை சமூகத்தின் பிரசன்னம் கிடையாது என கூறிய அவர், அதனால், ஆணைக்குழுவின் பரிந்துரைகள் எந்தளவிற்கு நியாயமானது என்ற கேள்வி எழுவதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

பெரும்பான்மை சமூகத்தை வைத்து கொண்டு, அமைக்கப்பட்ட ஆணைக்குழுவின் ஊடாக, சிறுபான்மை மக்களின் பிரச்சினைகளை பேசுவதாகவும் முஜுபூர் ரஹுமான் தெரிவிக்கின்றார்.

இந்த பெரும்பான்மை சிங்கள அதிகாரிகளுக்கு, இஸ்லாமிய கொள்கைகள் எவ்வாறு தெரியும் என அவர் கேள்வி எழுப்பினார்.

வெள்ளைகாரர்கள், இலங்கை தொடர்பில் தீர்மானங்களை எடுத்ததை போன்றே, தற்போதைய அரசாங்கம் சிறுபான்மை சமூகத்திற்கு எதிராக தீர்மானங்களை எடுத்து வருவதாகவும் நாடாளுமன்ற உறுப்பினர் முஜுபூர் ரஹுமான் குறிப்பிடுகின்றார்.

இலங்கையில் 11 இஸ்லாமியவாத அமைப்புகளுக்கு தடை விதிக்க அனுமதி: 'இனவாத சிங்கள அமைப்புகளுக்கு தடை இல்லை' - BBC News தமிழ்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
11 hours ago, நிழலி said:

இந்த பெயர்கள் எல்லாம் ஒரே மாதிரி இருக்கு. பெயர் வைக்க ஷரியா சட்டத்தில் தட்டுப்பாடு போல...

adaderanaenglish.s3.amazonaws.com/1558079079-Ta...

TNTJ NORTH CHENNAI (@tntjncnews) | Twitter

 

Tamil Nadu Thowheed Jamath Koothanallur - Home | Facebook

 

Thoothukudi thowheed jamath - Home | Facebook

 

United States Thowheed Jamath - USTJ - Home | Facebook

Gravitas: Is National Thowheed Jamath responsible for Sri Lanka bomb blasts  - YouTube

Activists Sri Lankas Thowheed Jamaath organization shout Editorial Stock  Photo - Stock Image | Shutterstock

 

Sri Lanka Thowheed Jamath denies involvement in blasts – NewsIn.Asia

 

எல்லோரும் ஒரே ஆட்கள் போலத்தான் எனக்கு இருக்கிறது 
ஒரே கொடிதான் வேறு வேறு இடங்கள் நபர்கள் மூலம் 
ஒரே கொள்கை முன்னெடுக்க படுகிறது என்று எண்ணுகிறேன் 
அதனால்தான் ஒரே மாதிரியான பெயரும் 
 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சுன்னத்து அமைப்பொன்றும் இருக்கு,  என்ன செய்வார்கள் அவர்கள்.... 😧

Link to comment
Share on other sites

38 minutes ago, Maruthankerny said:

adaderanaenglish.s3.amazonaws.com/1558079079-Ta...

TNTJ NORTH CHENNAI (@tntjncnews) | Twitter

 

Tamil Nadu Thowheed Jamath Koothanallur - Home | Facebook

 

Thoothukudi thowheed jamath - Home | Facebook

 

United States Thowheed Jamath - USTJ - Home | Facebook

Gravitas: Is National Thowheed Jamath responsible for Sri Lanka bomb blasts  - YouTube

Activists Sri Lankas Thowheed Jamaath organization shout Editorial Stock  Photo - Stock Image | Shutterstock

 

Sri Lanka Thowheed Jamath denies involvement in blasts – NewsIn.Asia

 

எல்லோரும் ஒரே ஆட்கள் போலத்தான் எனக்கு இருக்கிறது 
ஒரே கொடிதான் வேறு வேறு இடங்கள் நபர்கள் மூலம் 
ஒரே கொள்கை முன்னெடுக்க படுகிறது என்று எண்ணுகிறேன் 
அதனால்தான் ஒரே மாதிரியான பெயரும் 
 

 

அங்கேயுமா?

லூசுக் கூட்டத்துக்கு எல்லா இடங்களிலும் ஒரே மாதிரி பெயர்கள் போல. 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
14 hours ago, பிழம்பு said:

இவ்வாறு தடைசெய்யப்பட்டுள்ள 11 இஸ்லாமிய அமைப்புகள் வருமாறு,

1. யுனைடெட் தௌஹீத்  ஜமாஅத் - United Thowheed Jamaath (UTJ)

2. சிலோன் தௌஹீத் ஜமாஅத் - Ceylon Thowheed Jamaath (CTJ)

3. இலங்கை தௌஹீத்  ஜமாஅத் - Sri Lanka Thowheed Jamaath (SLTJ)

4. அனைத்து இலங்கை தௌஹீத் ஜமாஅத் - All Ceylon Thowheed Jamaath (ACTJ)

5. ஜமியத்துல் அன்சாரி சுன்னத்துல் மொஹமதியா - Jamiyyathul Ansaari Sunnaththul Mohomadiya (JASM)

6. தாருல் ஆதார் @ ஜமியுல் ஆதர் - Dharul Adhar @ Jamiul Adhar

7. இலங்கை இஸ்லாமிய மாணவர் இயக்கம் - Sri Lanka Islamic Student Movement (SLISM)

8. இஸ்லாமிய அரசு ஈராக் & சிரியா (ஐ.எஸ்.ஐ.எஸ்) - Islamic State of Iraq & Syria (ISIS)

9. அல்கொய்தா - Al-Qaeda

10. சேவ் த பேர்ள்ஸ்  Save the Pearls

11. சூப்பர் முஸ்லீம் - Super Muslim

 

11 இஸ்லாமிய அமைப்புக்களுக்கு தடை - அமைப்புக்களின் விபரம் இதோ! | Virakesari.lk

f.s.h5.jpg

உலமா கட்சி  என்று... கோத்தாவுக்கு செம்பு தூக்கிக் கொண்டு,
தமிழரை இழிவு படுத்தி... அறிக்கை விடும்,  
உல‌மா க‌ட்சி தலைவர்  மௌலவி முபாறக் அப்துல் மஜீத் அவர்களின் கட்சியை  தடை செய்ய வில்லையா?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

க‌டித்த‌ நுள‌ம்பு எது என‌ தெரியாத‌ போது, அனைத்து நுள‌ம்புகளும் அடி வாங்க‌த்தான் செய்யும்.

625.500.560.350.160.300.053.800.900.160.90.jpg

இல‌ங்கையில் ப‌ல‌ ஜ‌மாஅத்துக்க‌ள் அமைப்புக்க‌ள் உள்ள‌ன‌. இவ‌ற்றின் முக்கிய‌ நோக்க‌ம் என்ப‌து முஸ்லிம்க‌ளுக்கு

ந‌ல்ல‌தை சொல்வ‌தும் அவ‌ர்க‌ளின் தேவைக‌ளை தீர்க்கும் முக‌மாக‌ ந‌ல‌ன்புரி சேவைக‌ளை செய்வ‌துமாகும்.

 

 

இவ்வாறு ந‌ல‌ன்புரியை நோக்காக‌ கொண்ட‌ அமைப்புக்க‌ள் ஊர் ஊராக‌ கிளைக‌ளை ஆர‌ம்பிப்ப‌தால் இவை ப‌ற்றிய‌ ச‌ந்தேக‌ங்க‌ள் எழுகின்ற‌ன‌.

 

அண்மைக்கால‌மாக‌ இஸ்லாத்தைப்பேசும் ஜ‌மாஅத்துக்க‌ளை ப‌ற்றிய‌ ச‌ந்தேக‌ம் உல‌க‌ளாவிய‌ ரீதியில் பேச‌ப்ப‌டுகிற‌து. என்னைப்பொறுத்த‌ வ‌ரை இது பூனைக‌ளை புலியாக‌ காட்டுவ‌தாக‌வே தெரிகிற‌து. ஸ‌ஹ்ரான் என்ப‌வ‌ன் த‌வ்ஹீத் ஜ‌மாஅத் என்ப‌த‌ற்காக‌ அனைத்து த‌வ்ஹீத் அமைப்புக்க‌ளும் ச‌ந்தேக‌ம் கொண்டு பார்க்க‌ப்ப‌டுகிற‌து. அர‌சாங்க‌ம் பெரும்பாலும் சிங்க‌ள‌ ம‌க்க‌ளை கொண்ட‌து என்ப‌தால் அவ‌ர்க‌ள் ப‌க்க‌மும் நியாய‌ம் உண்டு. 

க‌டித்த‌ நுள‌ம்பு எது என‌ தெரியாத‌ போது அனைத்து நுள‌ம்பும் அடி வாங்க‌த்தான் செய்யும்.

 

விடுத‌லைப்புலிக‌ள் ப‌ய‌ங்க‌ர‌வாத‌ இய‌க்க‌ம் என‌ த‌டைசெய்ய‌ப்ப‌டுமுன் அவ‌ர்க‌ள் த‌ம‌து இய‌க்க‌த்தை அர‌சிய‌ல் க‌ட்சியாக‌ ப‌திவு செய்திருந்த‌ன‌ர். பின்ன‌ர் புலி இய‌க்க‌ம் த‌டை செய்ய‌ப்ப‌ட்ட‌ போதும் புலிக‌ளின் க‌ட்சி த‌டை செய்ய‌ப்ப‌ட‌வில்லை.

 

அதே போல் புலிக‌ள் என்ற‌ பெய‌ரில் அர‌சிய‌ல் க‌ட்சி ப‌திய‌ப்ப‌டுவ‌தும் த‌டை செய்ய‌ப்ப‌டவில்லை. ப‌ய‌ங்க‌ர‌வாதியாக‌ இருந்து ஜ‌ன‌நாய‌க‌த்துக்கு வ‌ந்து த‌மிழ் ம‌க்க‌ள் விடுத‌லைப்புலிக‌ள் க‌ட்சியை உருவாக்கி இன்று பாராளும‌ன்றில் இருக்கும் பிள்ளையானைப்பார்த்து முஸ்லிம் இய‌க்க‌ங்க‌ள் ப‌டிப்பினை பெற‌ வேண்டும். இத‌னை ப‌ல‌ வ‌ருட‌ங்க‌ளாக‌ நான் சொல்லிவ‌ருகிறேன்.

 

ஒரு ந‌ல‌ன்புரி அமைப்பால் என்ன‌தான் சேவை செய்ய‌ முடியும்?

வெளிநாட்டு ப‌ண‌ம் பெற்று சில‌ வீடுக‌ள், கிண‌றுக‌ள், ப‌ள்ளிக‌ள், அனாதைக‌ளுக்கு உத‌வுத‌ல் போன்ற‌வ‌ற்றைத்தான் செய்ய‌ முடியும். இதை ம‌க்க‌ள் ஆணை பெற்ற‌, இறைவ‌னுக்கு ப‌ய‌ந்த‌ இஸ்லாமிய‌வாதிக‌ளைக்கொண்ட‌, ஊழ‌ல் செய்ய‌ விரும்பாத‌  ஜ‌ன‌நாய‌க‌ அர‌சிய‌ல் க‌ட்சியால் செய்ய‌ முடியும். 

 

ஒரு ந‌ல‌ன்புரி அமைப்புக்கு வெளிநாட்டில் இருந்து ப‌ண‌ம் வ‌ந்தால் ஏன் எத‌ற்கு என்ற‌ கேள்விக‌ள் இருக்கும். பாராளும‌ன்ற‌ ப‌ல‌ம் வாய்ந்த‌ அர‌சிய‌ல் க‌ட்சியாயின் அர‌சின் உத‌வியுட‌ன் இவ‌ற்றை செய்ய‌ முடியும்.

 

முன்னாள் அமைச்ச‌ர் பேரிய‌ல் அஷ்ர‌ப் க‌ல்முனையில் ப‌ல‌ வீட‌மைப்புத்திட்ட‌ங்க‌ளை அர‌சின் அணுச‌ர‌ணையுட‌ன் செய்தார். அத‌ற்குரிய‌ க‌ண‌க்குக‌ள் அர‌சாங்க‌த்திட‌மே உள்ள‌தால் அது ப‌ற்றி யாரும் பிர‌ச்சினை ப‌ட‌ முடியாது.

வெளிநாட்டு உத‌வியுட‌ன் க‌ட்ட‌ப்ப‌ட்ட‌ வீடுக‌ள் இன்ன‌மும் பிர‌ச்சினையில் உள்ள‌ன‌.

 

ஆக‌வே இந்த‌ நாட்டில் துப்பாக்கி தூக்கிய‌ ஜேவிபி, புலிக‌ள் போன்றோர் அர‌சிய‌ல் செய்து சாதிக்கும் போது துப்பாக்கி தூக்காத‌ இஸ்லாமிய‌வாதிக‌ள் வெறும‌னே ச‌மூக‌த்துள் க‌ருத்துக்க‌ளை விதைத்து குழ‌ப்ப‌ங்க‌ளை ஏற்ப‌டுத்தி, ச‌மூக‌த்தில் பிள‌வுக‌ளை உண்டாக்காம‌ல் அனைவ‌ரும் இந்த‌ நாட்டின் ஜ‌ன‌நாய‌க‌ அர‌சிய‌லை ஏற்று உண்மை, நேர்மை, வாய்மை கொண்ட‌ அர‌சிய‌ல் க‌ட்சியாக‌ பிர‌க‌ட‌ன‌ப்ப‌டுத்த‌ப்ப‌ட்டு ச‌மூக‌த்தை ஒற்றுமைப்ப‌டுத்த‌ முன் வ‌ர‌வேண்டும்.

 

ச‌ண்டித்த‌ன‌ம், ஆயுத‌ங்க‌ளால் எதையும் இங்கு சாதிக்க‌ முடியாது. ம‌க்க‌ள் த‌ரும் அர‌சிய‌ல் ப‌ல‌த்தால் நிச்ச‌ய‌ம் சாதிக்க‌ முடியும்.

இன்று ந‌ம் நாட்டில் பாராளும‌ன்றில் உள்ள‌  அர‌சிய‌ல் க‌ட்சிக‌ள் ஊழ‌ல், மோச‌டி, ஏமாற்று, பாட்டு, கூத்து, ம‌து, மாது, சூது என‌ ஆகிவிட்ட‌ன‌. இந்த‌ நிலையில் இவற்றை விரும்பாத‌ இஸ்லாமிய‌ த‌லைவ‌ர்க‌ள் எம‌து க‌ருத்தை ஏற்று நேர‌டி அர‌சிய‌லுக்கு வ‌ர‌ வேண்டும் என‌  ஐக்கிய‌ காங்கிர‌ஸ் க‌ட்சி ( உல‌மா க‌ட்சி) அன்பான‌ அழைப்பை விடுக்கிற‌து.

 

- முபாற‌க் அப்துல் ம‌ஜீத்

7.4.2021

https://www.madawalaenews.com/2021/04/blog-post_869.html

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
18 hours ago, பிழம்பு said:

யுனைடெட் தௌஹீத்  ஜமாஅத் - United Thowheed Jamaath (UTJ)

2. சிலோன் தௌஹீத் ஜமாஅத் - Ceylon Thowheed Jamaath (CTJ)

3. இலங்கை தௌஹீத்  ஜமாஅத் - Sri Lanka Thowheed Jamaath (SLTJ)

4. அனைத்து இலங்கை தௌஹீத் ஜமாஅத் - All Ceylon Thowheed Jamaath (ACTJ)

பல பெயரில் ஒருவர் (நடமாடுகிறார்)தலைமை தாங்கி நடத்துகிறார் போலும்.

 

3 hours ago, தமிழ் சிறி said:

f.s.h5.jpg

உலமா கட்சி  என்று... கோத்தாவுக்கு செம்பு தூக்கிக் கொண்டு,
தமிழரை இழிவு படுத்தி... அறிக்கை விடும்,  
உல‌மா க‌ட்சி தலைவர்  மௌலவி முபாறக் அப்துல் மஜீத் அவர்களின் கட்சியை  தடை செய்ய வில்லையா?

தன்னைக் காப்பாற்றிக்கொள்ள மீண்டும் முஸ்லீம்களை சாடி, தன்னை புனிதனாக காட்ட முயற்சிக்கிறார். இதுவும் ஒரு பிறவி.....? 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இலங்கையில் 11 இஸ்லாமிய அமைப்புகளுக்கு தடை விதிப்பு: அரசு அதிகாரபூர்வமாக அறிவிப்பு

4 மணி நேரங்களுக்கு முன்னர்
கோப்புப்படம்

பட மூலாதாரம், GETTY IMAGES

 
படக்குறிப்பு, கோப்புப்படம்

இலங்கை அரசு 11 இஸ்லாமிய அமைப்புகளை தடைசெய்வதாக தெரிவித்து, வர்த்தமானி அறிவித்தல் ஒன்றினை நேற்று (புதன்கிழமை, ஏப்ரல் 13) நள்ளிரவு வெளியிட்டுள்ளது.

குறித்த அமைப்புகளை தடைசெய்வதற்கான அனுமதியினை சட்ட மா அதிபர் கடந்த வாரம் வழங்கியிருந்த நிலையிலேயே, தற்போது அந்த அமைப்புகளை தடைசெய்யும் அதி விசேட வர்த்தமானி அறிவித்தல் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் கையொப்பத்துடன் வெளியாகியுள்ளது.

1979ஆம் ஆண்டின் 48ஆம் இலக்க பயங்கரவாதத் தடுப்பு (தற்காலிக ஏற்பாடுகள்) சட்டத்தின் கீழ், 11 அமைப்புகளும் தடைசெய்யப்படுவதாக, அந்த வர்த்தமானி அறிவித்தலில் குறிப்பிடப்பட்டுள்ளது.

தடை விதிக்கப்பட்டுள்ள அமைப்புகள்

1. ஐக்கிய தௌஹீத் (தௌஹீத்) ஜமாஅத் (UTJ)

2. சிலோன் தௌஹீத் (தௌஹீத்) ஜமாஅத் (CTJ)

3. சிறீலங்கா தௌஹீத் (தௌஹீத்) ஜமாஅத் (SLTJ)

4. அகில இலங்கை தௌஹீத் (தௌஹீத்) ஜமாஅத் (ACTJ)

கோட்டாபய ராஜபக்ஷ

பட மூலாதாரம், GETTY IMAGES

 
படக்குறிப்பு, கோட்டாபய ராஜபக்ஷ

5. ஜம்மியதுல் அன்ஸாரி சுன்னதுல் மொஹமதியா (JASM) மறுபெயர் ஜம்மாஅத் அன்ஸாரிஸ் சுன்னதில் மொஹமதியா ஒழுங்கமைப்பு மறுபெயர் அகில இலங்கை ஜம் - ஈ - அது அன்ஸாரிஸ் சுன்னதில் மொஹம்மதியா மறுபெயர் அன்ஸாரிஸ் சுன்னதில் மொஹம்மதியா கழகம் மறுபெயர் ஜமாஅத் அன்ஸாரிஸ் சுன்னதில் மொஹம்மதியா

6. தாறுல் அதர் மறுபெயர் ஜாமிஉல் அதர் பள்ளிவாசல் மறுபெயர் தாறுல் அதர் குரான் மத்ரச மறுபெயர் தாறுல் அதர் அத்தபாவிய்யா

7. சிறீலங்கா இஸ்லாமிய மாணவர் இயக்கம் (SLISM) மறுபெயர் ஜம்இய்யா

8. இராக் மற்றும் சிரியா இஸ்லாமிய அரசு (ISIS) மறுபெயர் அல் - தௌலா அல் - இஸ்லாமியா தௌலா இஸ்லாமியா

9. அல்கய்தா அமைப்பு

10. சேவ் த பேர்ள்ஸ் அமைப்பு மறுபெயர் சேவ் த பேர்ள் சங்கம்

11. சுப்பர் முஸ்லிம் அமைப்பு

ஆகியவை நேற்று நள்ளிரவு வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவித்தல் மூலம் தடைசெய்யப்பட்டுள்ளன.

நாட்டின் சமாதானத்தைத் தொடர்வதை உறுதிப்படுத்தும் பொருட்டு நன்நோக்குடனும் தேசிய பாதுகாப்பு, பொதுமக்கள் ஒழுங்கு மற்றும் சட்டவாட்சி என்பவற்றின் நலனிலும் மேற்கொள்ளப்பட்ட இலங்கை அரசாங்கத்தின் முயற்சிகளை முன்னெடுப்பதில், மேற்படி அமைப்புகள் தடைசெய்யப்படுவதாக அந்த வர்த்தமானி அறிவித்தலில் குறிப்பிடப்பட்டுள்ளது.

2019 ஈஸ்டர் தாக்குதலுக்கு பின் இஸ்லாமியவாத அமைப்புகளை தடை செய்ய வேண்டும் என்ற கோரிக்கை வலுப்பெற்றது

பட மூலாதாரம், GETTY IMAGES

 
படக்குறிப்பு, 2019 ஈஸ்டர் தாக்குதலுக்கு பின் இஸ்லாமியவாத அமைப்புகளை தடை செய்ய வேண்டும் என்ற கோரிக்கை வலுப்பெற்றது

செய்யக் கூடாதவை

தடைவிதிக்கப்பட்டுள்ள அமைப்புகளின் அல்லது அமைப்புகளைப் பிரதிநிதிப்படுத்துகின்ற அல்லது அதன் சார்பில் செயலாற்றுகின்ற வேறேதேனும் அமைப்பின்,

(அ) உறுப்பினரொருவராக அல்லது அங்கத்தவரொருவராக இருத்தலாகாது.

(ஆ) அதற்குத் தலைமைத்துவம் அளித்தலாகாது.

(இ) சீருடையை, உடையை, சின்னத்தை, தனிக்குறியை அல்லது கொடியை அணிதலோ, வெளிக்காட்டுதலோ, ஏந்துதலோஅல்லது உடைமையில் வைத்திருத்தலோ ஆகாது,

(ஈ) கூட்டமொன்றை அழைத்தலோ, கூட்டுதலோ, நடாத்துதலோ அல்லது அதில் பங்குபற்றுதலோ ஆகாது.

(உ) உறுப்பாண்மையைப் பெறுதலோ அல்லது அதைச் சேருதலோ ஆகாது.

(ஊ) ஓர் உறுப்பினருக்கு, அங்கத்தவருக்கு அல்லது வேறெவரேனும் இணையாளருக்குப் புகலிடமளித்தலோ, அவரை மறைத்துவைத்தலோ அல்லது அவருக்கு உதவுதலோ ஆகாது.

(எ) மேம்பாட்டுக்கு உதவுதலோ, அதனை ஊக்குவித்தலோ, அதற்கு ஆதரவளித்தலோ, மதியுரையளித்தலோ, உதவுதலோ அல்லது அதன் சார்பில் செயலாற்றுதலோ ஆகாது.

(ஏ) ஏதேனும் செயற்பாட்டை அல்லது நிகழ்வை ஒழுங்குபடுத்தலோ அல்லது அதில் பங்குபற்றுதலோ ஆகாது.

(ஐ) பணத்தை அல்லது பொருட்களை நன்கொடையளித்தலோ அல்லது உதவுதொகையளித்தலோ ஆகாது.

(ஒ) அதற்காக அல்லது அதன் பொருட்களைப் பெறுதலோ, களஞ்சியப்படுத்தலோ, இடம்பெயர்த்தலோ, உடைமையில்வைத்திருத்தலோ அல்லது விநியோகித்தலோ ஆகாது,

(ஓ) நோக்கத்தை ஊக்குவித்தலோ அல்லது பிரதிநிதித்துவப்படுத்தலோ ஆகாது.

(ஒள) அதனோடு ஏதேனும் கொடுக்கல் வாங்கலில் ஈடுபடுதலாகாது, அல்லது

(ஃ) அதன் சார்பில் தகவலைப் பரப்புவித்தலாகாது.

எனவும் மேற்படி வர்த்தமானி அறிவித்தலில் குறிப்பிடப்பட்டுள்ளது.

எதிர்வினைகள்

கோப்புப்படம்

பட மூலாதாரம், GETTY IMAGES

 
படக்குறிப்பு, கோப்புப்படம்

இது இவ்வாறிருக்க, தடைசெய்யப்பட்டுள்ள அமைப்புகளான சிலோன் தௌஹீத் ஜமாஅத் மற்றும் சிறீலங்கா இஸ்லாமிய மாணவர் இயக்கம் ஆகியவை, தாம் தடைசெய்யப்பட்டால் அதற்கு எதிராக சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப் போவதாக கடந்த வாரம் அறிவித்திருந்தன.

எவ்வாறாயினும் சிறீலங்கா இஸ்லாமிய மாணவர் இயக்கம் தடைசெய்யப்பட்டால், நீதிமன்றம் தீர்மானிக்கும் வரை தமது சகல செயற்பாடுகளையும் நிறுத்துவதற்குத் தீர்மானித்துள்ளதாகவும் அந்த இயக்கம் கடந்த வாரம் வெளியிட்டிருந்த ஊடக அறிக்கையொன்றில் தெரிவித்திருந்தது. 

மேலும் ஈஸ்டர் தினத் தாக்குதலை விசாரித்த ஜனாதிபதி ஆணைக்குழு, எவ்வித நியாயமான ஆதாரங்களுமின்றி தமது இயக்கத்தை ஒரு தீவிரவாத இயக்கமென அடையாளப்படுத்தி இருப்பதையிட்டு தாம் விசனமடைவதாகவும், தம்மீது சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுகளுக்கு பதிலளிக்க தாம் ஒரு தடவையேனும் அழைக்கப்படவில்லை என்றும், இது உலகெங்கும் ஏற்றுக்கொள்ளப்பட்ட இயற்கை நீதியின் நியமங்களுக்கு முரணானதாகும் எனவும் சிறீலங்கா இஸ்லாமிய மாணவர் இயக்கம் குறிப்பிட்டிருந்தது.

அதேவேளை தம்மீதான தடையை, இலங்கை முஸ்லிம் சிவில் சமூகத்துக்கு எதிரான நடவடிக்கையாகவே தாம் கருதுவதாகவும் சிறீலங்கா இஸ்லாமிய மாணவர் இயக்கம் வெளியிட்டிருந்த ஊடக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

 

https://www.bbc.com/tamil/sri-lanka-56741831

 

Link to comment
Share on other sites

இலங்கையில் 11 இஸ்லாமிய அமைப்புகளுக்கு தடை – வர்த்தமானி அறிவிப்பு வெளியானது

 

ஐ.எஸ். மற்றும் அல்கொய்தா உட்பட பதினொரு இஸ்லாமிய அமைப்புகளை தடை செய்யும் வர்த்தமானி அறிவித்தல் ஒன்றினை நேற்று (புதன்கிழமை, அரசாங்கம் வெளியிட்டுள்ளது.

குறித்த அமைப்புகளை தடைசெய்வதற்கான அனுமதியினை சட்ட மா அதிபர் கடந்த சில வழங்கியிருந்தார்.

இந்நிலையில் தற்போது அந்த அமைப்புகளை தடைசெய்யும் அதி விசேட வர்த்தமானி அறிவித்தல் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் கையொழுத்துடன் வெளியாகியுள்ளது.

1979 ஆம் ஆண்டின் 48ஆம் இலக்க பயங்கரவாதத் தடுப்பு (தற்காலிக ஏற்பாடுகள்) சட்டத்தின் கீழ், 11 அமைப்புகளும் தடை செய்யப்படுவதாக, குறித்த வர்த்தமானி அறிவித்தலில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி, யுனைடெட் தௌஹீத் ஜமாத், சிலோன் தௌஹீத் ஜமாத், இலங்கை தௌஹீத் ஜமாத், அனைத்து இலங்கை தௌஹீத் ஜமாத், ஜமியத்துல் அன்சாரி சுன்னத்துல் மொஹமதியா போன்ற அமைப்புக்கள் தடை செய்யப்பட்டுள்ளன.

அத்தோடு தாருல் ஆதார் @ ஜமியுல் ஆதர், இலங்கை இஸ்லாமிய மாணவர் இயக்கம், ஈராக் மற்றும் சிரியா ஐ.எஸ்.ஐ.எஸ். அமைப்பு, அல்கொய்தா, சேவ் த பேர்லஸ் மற்றும் சூப்பர் முஸ்லீம் போன்ற அமைப்புக்கள் தடை செய்யப்பட்டுள்ளன.

 

இலங்கையில் 11 இஸ்லாமிய அமைப்புகளுக்கு தடை – வர்த்தமானி அறிவிப்பு வெளியானது – Athavan News

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இலங்கையில் 11 இஸ்லாமிய அமைப்புகளுக்கு தடை விதிப்பு: அரசு அதிகாரபூர்வமாக அறிவிப்பு

 
Banned-696x365.jpg
 20 Views

இலங்கை அரசு 11 இஸ்லாமிய அமைப்புகளை தடைசெய்வதாக தெரிவித்து, வர்த்தமானி அறிவித்தல் ஒன்றினை நேற்று புதன்கிழமை, ஏப்ரல் 13 நள்ளிரவு வெளியிட்டுள்ளது.

குறித்த அமைப்புகளை தடைசெய்வதற்கான அனுமதியினை சட்ட மா அதிபர் கடந்த வாரம் வழங்கியிருந்த நிலையிலேயே, தற்போது அந்த அமைப்புகளை தடைசெய்யும் அதி விசேட வர்த்தமானி அறிவித்தல் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் கையொப்பத்துடன் வெளியாகியுள்ளது.

1979ஆம் ஆண்டின் 48ஆம் இலக்க பயங்கரவாதத் தடுப்பு (தற்காலிக ஏற்பாடுகள்) சட்டத்தின் கீழ், 11 அமைப்புகளும் தடைசெய்யப்படுவதாக, அந்த வர்த்தமானி அறிவித்தலில் குறிப்பிடப்பட்டுள்ளது.

தடை விதிக்கப்பட்டுள்ள அமைப்புகள்

1. ஐக்கிய தௌஹீத் (தௌஹீத்) ஜமாஅத் (UTJ)

2. சிலோன் தௌஹீத் (தௌஹீத்) ஜமாஅத் (CTJ)

3. சிறீலங்கா தௌஹீத் (தௌஹீத்) ஜமாஅத் (SLTJ)

4. அகில இலங்கை தௌஹீத் (தௌஹீத்) ஜமாஅத் (ACTJ)

5. ஜம்மியதுல் அன்ஸாரி சுன்னதுல் மொஹமதியா (JASM) மறுபெயர் ஜம்மாஅத் அன்ஸாரிஸ் சுன்னதில் மொஹமதியா ஒழுங்கமைப்பு மறுபெயர் அகில இலங்கை ஜம் – ஈ – அது அன்ஸாரிஸ் சுன்னதில் மொஹம்மதியா மறுபெயர் அன்ஸாரிஸ் சுன்னதில் மொஹம்மதியா கழகம் மறுபெயர் ஜமாஅத் அன்ஸாரிஸ் சுன்னதில் மொஹம்மதியா

6. தாறுல் அதர் மறுபெயர் ஜாமிஉல் அதர் பள்ளிவாசல் மறுபெயர் தாறுல் அதர் குரான் மத்ரச மறுபெயர் தாறுல் அதர் அத்தபாவிய்யா

7. சிறீலங்கா இஸ்லாமிய மாணவர் இயக்கம் (SLISM) மறுபெயர் ஜம்இய்யா

8. இராக் மற்றும் சிரியா இஸ்லாமிய அரசு (ISIS) மறுபெயர் அல் – தௌலா அல் – இஸ்லாமியா தௌலா இஸ்லாமியா

9. அல்கய்தா அமைப்பு

10. சேவ் த பேர்ள்ஸ் அமைப்பு மறுபெயர் சேவ் த பேர்ள் சங்கம்

11. சுப்பர் முஸ்லிம் அமைப்பு

ஆகியவை நேற்று நள்ளிரவு வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவித்தல் மூலம் தடைசெய்யப்பட்டுள்ளன.

நாட்டின் சமாதானத்தைத் தொடர்வதை உறுதிப்படுத்தும் பொருட்டு நன்நோக்குடனும் தேசிய பாதுகாப்பு, பொதுமக்கள் ஒழுங்கு மற்றும் சட்டவாட்சி என்பவற்றின் நலனிலும் மேற்கொள்ளப்பட்ட இலங்கை அரசாங்கத்தின் முயற்சிகளை முன்னெடுப்பதில், மேற்படி அமைப்புகள் தடைசெய்யப்படுவதாக அந்த வர்த்தமானி அறிவித்தலில் குறிப்பிடப்பட்டுள்ளது.

2019 ஈஸ்டர் தாக்குதலுக்கு பின் இஸ்லாமியவாத அமைப்புகளை தடை செய்ய வேண்டும் என்ற கோரிக்கை வலுப்பெற்றது.

 

https://www.ilakku.org/?p=47290

 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • பிடிச்ச பொலிஸ்காரர் நிஷான் துரையப்பாவாம்! மெய்யே?
    • பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,சித்தரிப்புப் படம் கட்டுரை தகவல் எழுதியவர், அலெசியா பிராங்கோ மற்றும் டேவிட் ராப்சன் பதவி, ஃபீச்சர்ஸ் செய்தியாளர் 4 மணி நேரங்களுக்கு முன்னர் புதன் கோள், அதன் "பொருத்தமில்லாத" மையப்பகுதியில் தொடங்கி அதன் மேற்பரப்பின் குழப்பமான ரசாயன கலவை வரை, ஆச்சரியங்கள் நிறைந்தது. இந்தக் கோளின் தோற்றம் குறித்த பின்னணியிலும் ஆச்சரியத்திற்குக் குறைவு இல்லை. ஆனால், சைப்ரஸில் காணப்படும் பாறைகளில் அதற்கான சில பதில்கள் கிடைக்கக்கூடும். அறிவார்வம் பல ஆய்வாளர்களைப் பலி வாங்கியுள்ளது. அந்த வரிசையில் தாம் அடுத்தாக இருக்கக்கூடும் என்று நிக்கோலா மாரி அஞ்சினார். சைப்ரஸின் தொலைதூர மலைகளைச் சுற்றி வாகனம் ஓட்டும்போது மாரி வழிகாட்டலுக்கு தனது செல்போனை நம்பியிருந்தார். ஆனால் பகல்பொழுது சாய்ந்தபோது அவரது போனின் பேட்டரியும் குறைந்தது. தனது தங்குமிடத்திற்குத் திரும்பிச் செல்ல வழி தெரியாமல் அவர் தவித்தார். ”நான் 50 கி.மீ.க்கும் அதிகமாக (31 மைல்கள்) பயணித்தேன். அதன்போது நான் ஒரு வாகனத்தைக்கூட பார்க்கவில்லை," என்று அவர் கூறுகிறார். அவர் தனது வயிறு, இயந்திரம் மற்றும் தொலைபேசி பேட்டரிகளை நிரப்பக்கூடிய உணவு விடுதிக்குச் செல்லும் வழி தனக்கு நினைவில் இருப்பதாக நினைத்தார். ஆனால் அவர் அங்கு சென்றபோது அது வெறிச்சோடியிருப்பதைக் கண்டார். ஒரு திருப்பம் இறுதியில் அவரை மற்றொரு ஸ்தாபனத்திற்கு அழைத்துச் சென்றது, ஆனால் அந்த தனிமையான மலைச் சாலைகளில் தனது உயிருக்குப் பயந்ததாக அவர் ஒப்புக்கொள்கிறார். "நான் சில மோசமான கணிப்புகளைச் செய்தேன்," என்று அவர் கூறுகிறார். அதிர்ஷ்டவசமாக அவரது பயணம் வீண் போகவில்லை. மாரி இத்தாலியில் உள்ள பாவியா பல்கலைக்கழகத்தில் கோள் புவியியலாளராக உள்ளார். அவர் சூரிய குடும்பத்தில் நமது அண்டை கோள்களின் உருவாக்கம் மற்றும் பரிணாம வளர்ச்சியை ஆய்வு செய்கிறார். அவர் தனது முனைவர் பட்டத்திற்காக செவ்வாய் கோளின் எரிமலை குழம்பு ஓட்டங்களை ஆய்வு செய்தார். இந்த நேரத்தில் அவர் சைப்ரஸ் வழியாக புதன் மீது தனது பார்வையைச் செலுத்துகிறார். புதனில் காணப்படும் பாறைகளுடன் வினோதமான ஒற்றுமையைக் கொண்டிருப்பதாக நம்பப்படும் "போனினைட்" என்று பெயரிடப்பட்ட ஒரு குறிப்பிட்ட வகை பாறையைக் கண்டுபிடிப்பதே அவரின் நோக்கமாக இருந்தது. அவர் நினைப்பது சரியாக இருந்தால் அந்தக் கோளின் தனித்துவமான தோற்றம் தொடர்பான ஒரு துப்பு கிடைக்கலாம்.   சூரியனில் இருந்து முதல் பாறை பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,சித்தரிப்புப் படம் புதன் கோளில் அனைத்துமே உச்ச அளவில் உள்ளது. சந்திரனைவிட சற்றே அதிக கன அளவு கொண்ட புதன், சூரிய குடும்பத்தின் மிகச் சிறிய கோள். அது சூரியனுக்கு மிக அருகில் உள்ளது. அதில் வெப்பத்தைத் தக்கவைக்க வளிமண்டலம் இல்லை. அதாவது மேற்பரப்பில் வெப்பநிலை பகலில் 400 டிகிரி செல்ஷியஸ் முதல் இரவில் -170 டிகிரி செல்ஷியஸ் (750F முதல் -275F) வரை மாறுபடும். இது சூரிய குடும்பத்தில் மிகச் சிறிய சுற்றுப்பாதையைக் கொண்டுள்ளது; அதன் ஒவ்வோர் ஆண்டும் 88 புவி நாட்கள் மட்டுமே உள்ளன. ”இன்று நாம் காணும் புதன் ஒரு காலத்தில் இருந்த மொத்த கோளின் உட்கருவைத் தவிர வேறில்லை” என்கிறார் நிக்கோலா மாரி. புதன் இருக்கும் இடமானது விஞ்ஞானிகளின் ஆய்வை மிகவும் கடினமாக்கியுள்ளது. இதற்கு வெப்பமும் ஒரு காரணம். சூரியனுக்கு மிக அருகில் சுற்றும் இந்தக் கோளை நெருங்கும் விண்கலங்கள் வெப்பத்தைத் தாங்கும் திறன் கொண்டவையாக இருக்க வேண்டும். இரண்டாவது ஈர்ப்பு விசை. சூரியனை நெருங்க நெருங்க அதன் இழுவை சக்தி வலுவடையும். இது விண்கலத்தை விரைவுபடுத்தும். மிக வேகமாகப் பயணிப்பதைத் தவிர்க்க விண்கலம் ஒரு சிக்கலான பாதையில் செல்ல வேண்டும். இது மற்ற கிரகங்களைச் சுற்றி நிறைய மாற்றுப் பாதைகளை உள்ளடக்கியதாக இருக்கும். இது அதன் வேகத்தைக் கட்டுப்படுத்த உதவும். ஆனால் விண்கலம் தன் வேகத்தைக் குறைத்து, கட்டுப்பாட்டை மீண்டும் பெற அதிக எரிபொருள் தேவைப்படுகிறது.   பட மூலாதாரம்,NICOLA MARI படக்குறிப்பு,இந்த பண்டைய ‘சால்ட் லேக்’ போன்ற சைப்ரஸின் சில பகுதிகளில் காணப்படும் தரிசு நிலப்பரப்புகள், புதன் கோளின் தோற்றம் பற்றிய தடயங்களைக் கொண்டிருக்கலாம். "சுற்றுப்பாதை கண்ணோட்டத்தில் பார்த்தால் வியாழனைவிட புதன் கோளை அடைவது கடினம்,” என்று கூறுகிறார் ஐரோப்பிய விண்வெளி ஆய்வு மையத்தின் ’பெபிகொலம்போ’ என்று அழைக்கப்படும் புதன் கோளுக்கான பயணத் திட்டத்தின் விண்கல இயக்க மேலாளர் இக்னாசியோ கிளெரிகோ. மாரி சைப்ரஸில் செய்துகொண்டிருக்கும் பணி இந்தத் திட்டத்தில் பங்கு வகிக்கிறது. இந்த சிரமங்கள் காரணமாக நமது மற்ற அண்டை கோள்களைவிட புதன் குறைவாகவே ஆய்வு செய்யப்பட்டுள்ளது. இரண்டு முந்தைய பயணங்கள் - மரைனர் 10 மற்றும் மெசஞ்சர் - அதன் மேற்பரப்பை வரைபடமாக்கும் அளவுக்கு நெருக்கமாகப் பறந்தன. புதன் பள்ளங்களால் நிரம்பியுள்ளதையும், அதன் கட்டமைப்பு பற்றிய சில முக்கிய ஆச்சரியங்களையும் அது வெளிப்படுத்தியது. புதன் கோளின் மையப்பகுதி ஆச்சரியங்கள் நிறைந்தது. மற்ற பாறை அடிப்படையிலான கிரகங்கள் - வெள்ளி, பூமி மற்றும் செவ்வாய் அனைத்தும் ஒப்பீட்டளவில் சிறிய மையப்பகுதியைக் கொண்டுள்ளன. அவை தீக்குழம்பால் செய்யப்பட்ட தடிமனான மேலோடு மற்றும் கடினமான மேற்பரப்பால் சூழப்பட்டுள்ளன. இருப்பினும் புதனின் மேலோடு வியக்கத்தக்க வகையில் மெல்லியதாகத் தோன்றுகிறது. அதே நேரம் அதன் மையமானது எதிர்பாராதவிதமாக மேற்பரப்பைவிட மிகப் பெரியதாக உள்ளது. "இது பொருத்தமில்லாதது," என்று மாரி கூறுகிறார். மேலும் புதன் ஒரு காந்தப்புலத்தால் சூழப்பட்டிருப்பதை இந்தப் பயணங்கள் வெளிப்படுத்தின. அதன் அடர்த்தியுடன் இணைந்து, இது ஒரு இரும்பு மையத்தைக் கொண்டிருப்பதைக் குறிக்கிறது. மேலும் பூமியைப் போலவே அதன் மையப் பகுதியும் ஓரளவு உருகிய தீக்குழம்புகள் அடங்கியதாகக் இருக்கக்கூடும். புதனின் மேற்பரப்பில் உள்ள ரசாயனங்களின் விகிதம் மிகவும் அசாதாரணமானது. தொலைவில் இருந்து கிரகத்தின் வேதியியல் கலவையைப் பகுப்பாய்வு செய்ய "ஸ்பெக்ட்ரோமெட்ரி" என்ற நுட்பத்தைப் பயன்படுத்துவதன் மூலம் விஞ்ஞானிகள், புதன் கோள் தனது அண்டை கோள்களைக் காட்டிலும் தோரியத்தின் அதிக செறிவுகளைக் கொண்டிருப்பதைக் கண்டுபிடித்துள்ளனர். ஆரம்பக்கால சூரிய குடும்பத்தின் தீவிர வெப்பத்தில் தோரியம் ஆவியாகியிருக்க வேண்டும். அதற்குப் பதிலாக அதன் தோரியம் அளவு மூன்று கோள்கள் தொலைவில் உள்ள செவ்வாய் கிரகத்திற்கு ஒத்ததாக உள்ளது. சூரியனில் இருந்து அதன் தூரம் காரணமாக செவ்வாய் கிரகத்தில் குளிர்ந்த வெப்பநிலையில் தோரியம் உருவாகியிருக்கும்.   பட மூலாதாரம்,NICOLA MARI படக்குறிப்பு,"ஆலிவின்ஸ்" என்று அழைக்கப்படும் பல பச்சை படிகங்களைக் கொண்ட போனினைட்டின் மாதிரி இத்தகைய முரண்பாடுகள், சூரியனில் இருந்து வெகு தொலைவில் செவ்வாய் கோளுக்கு அருகில் புதன் உருவாகியிருக்கக்கூடும் என்று சில கோள் விஞ்ஞானிகள் ஊகிக்க வழிவகுத்தது. அதன் பெரிய மையப்பகுதிக்கு ஏற்ற, பூமியின் அளவை ஒத்த நிலைத்தன்மையுடன் அது முதலில் உருவாகியிருக்க வேண்டும். அதன் வரலாற்றின் ஒரு கட்டத்தில், புதன் மற்றொரு கோளின் மேற்பரப்புடன் மோதியதாகவும், இந்த மோதல் சூரியனை நோக்கி அதை சுழலச் செய்ததாகவும் அனுமானிக்கப்படுகிறது. அத்தகைய மோதல் அதன் மேலோடு மற்றும் அதன் மேற்பரப்பின் பெரும்பகுதியைத் தகர்த்து அதைப் பறக்கச் செய்திருக்கும். அந்த நேரத்தில் ஒரு பெரிய திரவ மையம் உருவாகியிருக்கும். "இன்று நாம் காணும் புதன் ஒரு காலத்தில் இருந்த கிரகத்தின் உட்கருவைத் தவிர வேறொன்றுமில்லை," என்று மாரி கூறுகிறார். வேற்றுகிரக பாறைகள் இந்தக் கோட்பாட்டை சோதிப்பதற்கான சிறந்த வழி, புதனின் மேற்பரப்பில் இருந்து பாறைகளின் மாதிரிகளைப் பகுப்பாய்வு செய்வது அல்லது அதன் மேற்பரப்பில் துளையிடுவது. ஆனால் எந்த ஆய்வும் மேற்பரப்பில் தரையிறங்க முடியவில்லை. இதனால் விஞ்ஞானிகள் மற்ற தகவல்களைத் தேடுகிறார்கள். சில தடயங்கள் ஆபிரைட்டுகள் எனப்படும் விண்கற்களில் இருந்து வரலாம், அவை முதலில் கண்டுபிடிக்கப்பட்ட பிரான்ஸ் கம்யூன் ஆப்ரெஸின் பெயரால் அறியப்படுகிறது. இந்தப் பாறைகளின் ரசாயன கலவை புதன் கோளைப் போலவே உள்ளது. புதனை அதன் தற்போதைய நிலைக்குக் கொண்டுவந்த, கோள்களுக்கு இடையே நிகழ்ந்த மோதலின் விளைவாகச் சிதறிய பாறைத் துண்டுகளாக அவை இருக்கக்கூடும் என்றுகூட சில விஞ்ஞானிகள் கருதுகின்றனர். இது ஒரு நம்பக்கூடிய கருதுகோள்தான். ஆனால் மாரிக்கு இதில் சந்தேகம் உள்ளது. புதன் உருவான அதே சூரிய நெபுலா பகுதியில் உருவான சிறுகோள்களில் இருந்து ஆபிரைட்டுகள் வந்ததாக இதுவரை கிடைத்த சான்றுகள் தெரிவிக்கின்றன. ஆனால் அவை ஒருபோதும் கிரகத்தின் பகுதியாக இல்லை. "புவி வேதியியல் ஒப்புமைகள்" என்பதில் இருந்து ஒரு மாற்று ஆதாரம் வரலாம். அதாவது பூமியில் உருவாகும் பாறைகள் மற்ற கிரகங்களில் காணப்படும் அமைப்புகளை ஒத்திருக்கும். பூமிக்கு அருகில் புவியியல் செயல்முறைகள் பற்றிய சிறந்த அறிவை நாம் பெற்றுள்ளோம். மேலும் இந்தப் புரிதலைப் பயன்படுத்தி இதை ஒத்த தோற்றத்துடன் இருக்கும் பிற கோள்களின் உருவாக்கம் பற்றிய கோட்பாடுகளை நாம் உருவாக்கலாம்.   பட மூலாதாரம்,NICOLA MARI படக்குறிப்பு,டெதிஸ் பெருங்கடலின் அடிப்பகுதியில் வெடித்த பழங்கால எரிமலையின் தடயங்களை சைப்ரஸில் உள்ள ஒரு வெளிப்பகுதி காட்டுகிறது. சைப்ரஸுக்கான மாரி செய்துவரும் பணியின் நோக்கம் இதுதான். அவர் தேடும் குறிப்பிட்ட கட்டமைப்பை அது கொண்டிருக்கலாம் என்று கிடைக்கப் பெறும் புவியியல் தரவுகள் கூறுகின்றன. இந்த ஆளரவமற்ற மலைகள் வழியாகத் தனது தேடலைத் தொடங்கும்போது அவர் தன்னை ஒரு "நவீன இந்தியானா ஜோன்ஸ்" போல் உணர்ந்ததாகக் குறிப்பிடுகிறார். சைப்ரஸ் என்பது 90 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு டெதிஸ் பெருங்கடலுக்கு அடியில் உருவான பூமியின் மேலோடு. மோதிய கண்டத்தட்டுகள் (tectonic plates) இறுதியில் அதை மேற்பரப்பை நோக்கித் தள்ளியது. இன்று நாம் அறியும் தீவாக அது மாறியது. தாதுக்கள் நிறைந்த பச்சைப் பாறைகளுடன் அந்த நிலப்பரப்பு வேறு ஒரு உலகத்தின் உணர்வைக் கொண்டுள்ளது என்கிறார் மாரி. "சைப்ரஸ் மலைகளின் சில பகுதிகளில் நடக்கும்போது நீங்கள் இன்னும் ஒரு பண்டைய கடல் படுகையில் நடப்பது போல் உணர்கிறீர்கள்," என்று அவர் கூறுகிறார். இறுதியில் அவர் தான் தேடும் போனினைட்ஸ் எனப்படும் எரிமலைக் குழம்புகளின் குறிப்பிட்ட துண்டுகளைக் கண்டுபிடித்தார். மாரி வீடு திரும்பினார். நாசா மற்றும் இத்தாலியில் உள்ள கோள் அறிவியல் அருங்காட்சியகத்தில் சக ஊழியர்களுடன் பணிபுரிந்து, பாறைகளின் கலவையைப் பகுப்பாய்வு செய்து, புதனிலிருந்து எடுக்கப்பட்ட அளவீடுகளுடன் ஒப்பிட்டார். முடிவுகள் வந்தபோது அவர் ஆச்சரியப்பட்டார். "அவை ஒன்று போல் இருக்கவில்லை. ஒன்றாகவே இருந்தன." மெக்னீசியம், அலுமினியம், இரும்பு போன்ற தனிமங்களின் கலவையானது, ராட்சத மையத்துடன் இருக்கும் ஒரு மர்மமான கோளில் காணப்படுவது போலவே இருந்தது. ஒரே வித்தியாசம் என்னவென்றால், சைப்ரஸின் பாறைகள் ஆக்ஸிஜனேற்றப்பட்டன. இது பூமியின் ஆக்ஸிஜன் நிறைந்த வளிமண்டலத்தில் தவிர்க்க முடியாதது. இது புதன் கோளின் முதல் உண்மையான நிலப்பரப்பு அனலாக் என்று மாரி கூறுகிறார். கிரகத்தைப் பற்றிய நமது புரிதலுக்கு மதிப்புமிக்க கூடுதல் தரவை இது வழங்குகிறது. இந்த பாறைகள் பற்றிய கூடுதல் ஆய்வு, புதனின் கடந்த கால புவியியல் செயல்பாடு பற்றிய சில தடயங்களைக் கண்டறிய உதவும். எல்லாவற்றுக்கும் மேலாக சைப்ரஸ் போனினைட்டுகள் பூமியின் மேலோட்டத்தில் ஓர் ஆழமற்ற புள்ளியில் இருந்து வெடித்த எரிமலைக் குழம்பில் இருந்து உருவானவை என்பதை நாம் அறிவோம். புதன் கோளில் உள்ள பாறைகளுடனான அவற்றின் முழுமையான ஒற்றுமை, அங்குள்ள மேலோட்டம் வழக்கத்திற்கு மாறாக மேற்பரப்புக்கு அருகில் உள்ளது என்பதைக் காட்டுகிறது. இது கிரகத்தின் அசல் மைய மேலோடு வெடித்ததால் ஏற்பட்ட தோற்றத்துடன் ஒத்துப் போகிறது.   எதிர்கால பயணங்கள் பட மூலாதாரம்,GETTY IMAGES மாரியின் கண்டுபிடிப்புகள் மிகப் பெரிய புதிரின் ஒரு பகுதி. மேலும் பல நுண்ணறிவுகள் பெபிகொலம்போ பணியிலிருந்து வரக்கூடும். இது ஐரோப்பிய விண்வெளி ஆய்வு மையம் மற்றும் ஜப்பானுக்கு இடையிலான ஒத்துழைப்பு ஆகும். இது அக்டோபர் 2018இல் தொடங்கப்பட்டது. இதற்கு கணிதவியலாளரும் பொறியியலாளருமான கியூசெப்பே (பெபி) கொலம்போவின் பெயர் சூட்டப்பட்டது. மரைன் 10 விண்கலத்தின் சிக்கலான பாதையைத் திட்டமிட அவர் உதவினார். விண்கலத்தின் சுற்றி வளைந்து செல்லும் பாதையின் ஒரு பகுதியாக புதனுக்கு அருகில் இருந்து மூன்று முறை செல்லும் பாதைகளை பெபி கொலம்போ உருவாக்கியுள்ளார். விண்கலத்தின் வேகத்தைக் குறைப்பதே இதன் நோக்கம். விண்கலம் 2025இல் கிரகத்திற்கு அதன் இறுதி அணுகலைச் செய்யும். அங்கு அது இரண்டு சுற்றுக் கலங்களாக பிரியும். ஒன்று காந்தப்புலத்தை அளவிடும். மற்றொன்று மேற்பரப்பு மற்றும் உட்புற அமைப்பை ஆய்வு செய்யும். புவி வேதியியல் ஒப்புமைகள் குறித்த மாரியின் ஆராய்ச்சி இங்கே பொருத்தமானதாக இருக்கலாம். ஏனெனில் அவை இந்த அளவீடுகளில் சிலவற்றுக்கான வரையறைகளாகப் பயன்படுத்தப்படலாம் என்று அவர் கூறுகிறார். "புதன் போன்ற ஒப்புமைகளின் ஆய்வக அளவீடுகள் எங்கள் அகச்சிவப்பு (வெப்ப அகச்சிவப்பு) ஸ்பெக்ட்ரோமீட்டர்கள் மற்றும் சில வகையான எக்ஸ்-ரே ஸ்பெக்ட்ரோமீட்டர்கள் மூலம் பெறப்பட்ட அளவீடுகளின் முடிவுகளைச் சிறப்பாக விளக்க உதவுகிறது," என்று பெபிகொலம்போவின் திட்ட விஞ்ஞானி ஜோஹன்னஸ் பென்காஃப் விளக்குகிறார். அதன் பிறகான ஆண்டில் இந்தக் கலங்கள் புதனின் கனிம கலவை, அதன் நிலப்பரப்பு மற்றும் அதன் உட்புற அமைப்பு ஆகியவற்றின் துல்லியமான அளவீடுகளைச் செய்யும். முந்தைய பயணங்களின் தரவுகளுடன் இந்தத் தரவை ஒப்பிடுவதன் மூலம், கிரகம் இன்னும் புவியியல் ரீதியாக "உயிருடன்" உள்ளதா என்பதை விஞ்ஞானிகள் தீர்மானிக்க முடியும். புதனின் உள்ளே இருந்து பொருள் ஆவியாவதால் உருவானதாகத் தோன்றும் ’வெற்று இடைவெளிகள்’ மேற்பரப்பில் உள்ளன. ஆனால் இந்தச் செயல்முறை இன்னும் நடக்கிறதா என்பது தெளிவாக இல்லை. இந்த அளவீடுகள் இறுதியாக புதனின் மர்மமான தோற்றத்தின் வேர்வரை செல்ல அனுமதிக்கலாம். மேலும் அதை நீட்டிப்பதன் மூலம் பிரபஞ்சத்தில் நமது இடம் பற்றியும் அதிகம் சொல்ல முடியும். "புதன் ஏன் மிகவும் அடர்த்தியாக உள்ளது, அதன் மையப்பகுதி ஏன் மிகவும் பெரிதாக உள்ளது என்ற கேள்விகள் நமது சூரிய மண்டலத்தின் உருவாக்கம் மற்றும் வரலாற்றைப் புரிந்துகொள்வதற்கு மிகவும் முக்கியமானது" என்று பென்காஃப் கூறினார். ”விண்கலத்தில் மிகவும் பரந்த அளவிலான உபகரணங்கள் மற்றும் கருவிகள் உள்ளன. அவை உண்மையில் நமது அறிவியல் அறிவை மேம்படுத்தும் என்று நாங்கள் நம்புகிறோம்." சூரியனுக்கு அருகில் இருக்கும் முதல் கிரகத்தை நாம் பார்க்கும் விதம் ஏற்கெனவே நிறைய மாறிவிட்டது. "பதினைந்து ஆண்டுகளுக்கு முன்பு, புதன் ஒரு ஆர்வத்தைத் தூண்டாத கிரகமாகக் கருதப்பட்டது," என்கிறார் பென்காஃப். "ஆனால் நான் இன்னும் பல ஆச்சரியங்களை எதிர்பார்க்கிறேன்,"என்று அவர் குறிப்பிட்டார். மாரிக்கு புதன் கோள் ஆரம்பம் மட்டுமே. "வட அட்லாண்டிக் பெருங்கடலில் உள்ள ஒரு தீவான லான்சரோட்டில் செவ்வாய் கிரகத்தின் மேற்பரப்பில் உள்ளது போன்ற எரிமலைக்குழம்பு கிடைத்தது. மேலும் வெள்ளி கோளின் தடயங்களைக் கண்டறிய, சிசிலி, ஹவாய், இந்தோனீசியா மற்றும் ரஷ்யாவில் உள்ள கம்சட்காவை ஆய்வு செய்து வருகிறோம்," என்றார் அவர். பெபி கொலம்போவின் முழு அறிவியல் செயல்பாடுகள் 2026இல் தொடங்க இருக்கும் நிலையில் பூமியில் உள்ள இந்தப் பாறைகள் சூரியக் குடும்பத்தில் உள்ள நமது மற்ற அண்டை கோள்களைப் பற்றி எவ்வளவு சொல்ல முடியும் என்பதை விரைவில் நாம் தெரிந்துகொள்ள முடியும். https://www.bbc.com/tamil/articles/c89z8v501p9o
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
        • Like
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
        • Like
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.