Jump to content

விடுதலைப் புலிகளை ஆதரித்து முகநூல் பதிவிடுபவர்கள் கைது செய்யப்படுவர் – அஜித் ரோஹண


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

விடுதலைப் புலிகளை ஆதரித்து முகநூல் பதிவிடுபவர்கள் கைது செய்யப்படுவர் – அஜித் ரோஹண

 
625.500.560.350.160.300.053.800.900.160.
 83 Views

தமிழீழ விடுதலைப் புலிகள் உள்ளிட்ட பயங்கரவாத நடவடிக்கைகளில் ஈடுபடுவோரைப் புகழ்ந்தும், நினைவுகூர்ந்தும் பகிரங்கமாக கருத்துத் தெரிவிப்பவர்கள் தகுதி தராதரம் பாராது கைது செய்யப்படுவார்கள் என்று பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.

அத்துடன் ஊடகங்களிலும், முகநூல் போன்ற சமூக ஊடகங்களிலும் பயங்கரவாத நடவடிக்கைகளில் ஈடுபட்டவர்களைப் போற்றியும், அவர்களை நினைவுகூர்ந்தும் கருத்துக்களை பதிவிடுபவர்களும் கைது செய்யப்படுவார்கள் என்றும் அவர் மேலும் குறிப்பிட்டார்.

அவர் மேலும் கருத்துத் தெரிவிக்கையில், நாட்டில் மீண்டும் பயங்கரவாதம் தலைதூக்க இடமளியோம். அதைத் தடை செய்யும் நடவடிக்கையை காவல்துறையினரும், படையினரும் இணைந்து மேற்கொண்டுள்ளனர்.

கருத்துச் சுதந்திரம் என்ற பெயரில் பயங்கரவாத நடவடிக்கைகளில் ஈடுபட்டவர்களைப் புகழ்ந்தும், நினைவுகூர்ந்தும் சிலர் கருத்துக்களைத் தெரிவித்து வருகின்றனர்.

நாட்டில் பயங்கரவாத தடைச்சட்டம் நடைமுறையில் இருக்கின்ற போது இதுபோன்ற நடவடிக்கைகளில் ஈடுபடுவோர் இனிமேல் கைது செய்யப்படுவார்கள் என்றும் தெரிவித்தார்.

 

https://www.ilakku.org/?p=46794

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மூன்றாம் வகுப்பில் வரைதல்  பாடம் கசந்த மாதிரி  எதுவும் இல்லை . வரைதல்  வாத்தியார் சிம்ம சொப்பனம். 
வருவார்  “ கொப்பியை மூடு ;  இன்றைக்கு மண்சட்டி எப்படி வரைவது என்று பார்ப்போம். எல்லோரும் கண்ணை மூடி யோசியுங்கள்”  என்பார்.
உடனடியாக கொப்பிகள் மூடப்பப்டும் ;மாணவர்கள் கண் மூடி யோசிப்பார்கள் .
வகுப்பு மொனிடருக்கு ஒரு பையனில் பழைய  கறள் ஒன்று இருந்தது.
 அவன் எழுந்து நின்று “ சேர்  இவன் கண்ணை மூடி சட்டியைப் பற்றி யோசிக்கவில்லை”  என்று சொல்ல சன்னதம் கொண்ட வாத்தியார் அந்த பையனை இழுத்தெடுத்து ருத்ர தாண்டவம் ஆடியதை இப்போது நினைத்தாலும் மயிர்கூச்செறியும். 


என்னிலிருந்து இன்னுமொரு  பிக்காஸோவின் தோற்றத்தை தடுத்த அந்த நிகழ்வு ஞாபகத்திற்கு வரும் அதே வேளை….
 உந்த பாதுகாப்பு ஆசாமி (அஜித் ரோஹண) என்னுடைய பழைய வரைதல் வாத்தியார் பாத்திரம் எடுக்கவும்இ  ஊரெல்லாம் மானிட்டர் மார் ஆங்காங்கே முளைத்தெழும்பவும் கனாக்  கண்டேன் தோழி ……..
 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
9 hours ago, உடையார் said:

அவர் மேலும் கருத்துத் தெரிவிக்கையில், நாட்டில் மீண்டும் பயங்கரவாதம் தலைதூக்க இடமளியோம். அதைத் தடை செய்யும் நடவடிக்கையை காவல்துறையினரும், படையினரும் இணைந்து மேற்கொண்டுள்ளனர்.

நாடு அதல பாதாளத்திற்கு செல்வதை மக்கள் உணராமல்  தடுக்கும் யுக்தி. எத்தனை நாளைக்கு இந்த திகில் படம் ஓடும்?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பேசாமல்.. நந்தசேன பேஸ்புக்கை சொந்தமாக வாங்கலாமே. புலிகள் பதிவுகளை இல்லாமல் செய்ய.

மொக்கன் கூட்டம். சீனாவின் சீரழிஞ்ச பாதையில் போக நினைக்கினம்.. நெடுநாளைக்கு தாங்காது. 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
14 hours ago, nedukkalapoovan said:

.

மொக்கன் கூட்டம். சீனாவின் சீரழிஞ்ச பாதையில் போக நினைக்கினம்.. நெடுநாளைக்கு தாங்காது. 

சீனாவின் புரட்சிகர பாதை ,மாவோயிஸ்களின் தெளிவான பாதை,மக்கள் படை,செம்படை😀

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

போகிற போக்கைப் பார்த்தால், நாளடைவில் இவங்களே விடுதலைப்புலிகளை ஆதரிக்க தொடங்கிவிடுவானுகள் போலிருக்கே!

Link to comment
Share on other sites

On 8/4/2021 at 23:19, nedukkalapoovan said:

சீனாவின் சீரழிஞ்ச பாதையில் போக நினைக்கினம்.. நெடுநாளைக்கு தாங்காது. 

சீனாவின் பாதை சீனாவை உலகின் முதலாவது செல்வந்த நாடாகவும் உலகின் அதிசக்திவாய்ந்த வல்லரசாகவும் மாற்றி வருகிறது. சீன தொழில்நுட்பம் பற்றியும் சீன வளர்ச்சி பற்றியும் சீனாவில் தடை செய்யப்பட்டுள்ள அமெரிக்காவின் யூ ரியுபில் பாருங்கள் - வியந்து போவீர்கள். நான் சீனாவில் இவர்களின் வளர்ச்சியை நேரடியாகவே பார்த்து வருகிறேன்.

20 hours ago, putthan said:

சீனாவின் புரட்சிகர பாதை ,மாவோயிஸ்களின் தெளிவான பாதை,மக்கள் படை,செம்படை😀

சீனா மோவோவின் காலத்தை இருண்ட காலம் என்று மாணவர்களுக்கு கற்று கொடுக்க ஆரம்பித்து அரை நூற்றாண்டு கடந்துவிட்டது. மாவோவை வரலாற்று நினைவாகவே வைத்திருக்கிறார்கள்.

Link to comment
Share on other sites

ஏன் பல சீன குடிமக்கள் மேற்கு நோக்கி குடியேறுகிறார்கள்?
அமெரிக்காவில் ஒவ்வொரு நகரத்திலும் கிராமங்களிலும் சீன உணவகங்கள் உள்ளன.
சீன உணவகங்கள் அமெரிக்காவின் மிகப்பெரிய உணவக சங்கிலி.
அனைத்து அமெரிக்க பல்கலைக்கழகங்களும் சீன மாணவர்களால் நிரம்பியுள்ளன, 
கிட்டத்தட்ட அனைவருமே பச்சை அட்டைக்கு விண்ணப்பிக்கிறார்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
23 hours ago, satan said:

போகிற போக்கைப் பார்த்தால், நாளடைவில் இவங்களே விடுதலைப்புலிகளை ஆதரிக்க தொடங்கிவிடுவானுகள் போலிருக்கே!

சிலருக்கு வாய் நிறைய சோறு வேணுமெண்டால் பூனையையும் புலியாக்கி  பிழைத்துக்கொள்வார்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, கற்பகதரு said:

 

சீனா மோவோவின் காலத்தை இருண்ட காலம் என்று மாணவர்களுக்கு கற்று கொடுக்க ஆரம்பித்து அரை நூற்றாண்டு கடந்துவிட்டது. மாவோவை வரலாற்று நினைவாகவே வைத்திருக்கிறார்கள்.

சீனாவில் மாவோவின் சிந்தனையை   மறைக்கலாம் ஆனால் சிறிலங்காவில் அவரின்ட சிந்தனையை பின்பற்றும் பல புரட்சிவாதிகள் உண்டு....மாவோ வின் கார்பன் கொப்பி தான் தற்பொழுது உள்ள சீனா அதிபர்....அபிவிருத்தி என்ற போர்வையில் ஆக்கிரமிப்பு செய்பவர்கள்...சொந்த இனத்தை,நாட்டுமக்களை இரும்பு கரம் கொண்டு அடக்குபவர்கள்....தொடர்ந்து ஆட்சி அதிகாரத்தில் இருக்க வேண்டும் என்ற சர்வாதிகார கொள்கை கொண்டவர்...

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
13 hours ago, Sean said:

ஏன் பல சீன குடிமக்கள் மேற்கு நோக்கி குடியேறுகிறார்கள்?
அமெரிக்காவில் ஒவ்வொரு நகரத்திலும் கிராமங்களிலும் சீன உணவகங்கள் உள்ளன.
சீன உணவகங்கள் அமெரிக்காவின் மிகப்பெரிய உணவக சங்கிலி.
அனைத்து அமெரிக்க பல்கலைக்கழகங்களும் சீன மாணவர்களால் நிரம்பியுள்ளன, 
கிட்டத்தட்ட அனைவருமே பச்சை அட்டைக்கு விண்ணப்பிக்கிறார்கள்.

ஆசிய ஆபிரிக்க நாட்டின் மத்திய தர வர்க்கத்தினருக்கு மேற்கு நாடுகளில் பொருளாதார ரீதியில் ஒப்பீட்டளவில் மேன்மையான சந்தர்ப்பங்கள் இருக்கின்றன ... 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • அபிவிருத்தி லொத்தர் சபை அதன் 40 வருட வரலாற்றில் 2023 இல் அதிகூடிய இலாபத்தை பதிவு செய்துள்ளது. இதன்படி, அபிவிருத்தி லொத்தர் சபையானது 2022-2023 ஆம் ஆண்டில் 32% இலாபமீட்டி புதிய சாதனையை படைத்துள்ளது, இது 2022 இல் பெற்ற இலாபத்தின் இருமடங்காகும். இதன்டபடி, ஜனாதிபதி நிதியத்திற்கு அபிவிருத்தி லொத்தர் சபையினால் வழங்கப்பட்ட பங்களிப்பு கடந்த வருடத்துடன் ஒப்பிடும் போது 13 வீதத்தால் அதிகரிக்கப்பட்டுள்ளது. 3,622,506,725 ரூபா 03 பில்லியன் இலக்கை கடந்துள்ளது. அதே சமயம், அரசாங்கத்திற்கான பங்களிப்பை 6% உயர்த்தி 5,193,833,721 ரூபாவினை வழங்கியுள்ளது. அவிருத்தி லொத்தர் சபையின் தலைவரும் பிரதம நிறைவேற்று அதிகாரியுமான அஜித் குணரத்ன நாரங்கல இது குறித்து கருத்து தெரிவிக்கையில், சவாலான காலப்பகுதியில் நாட்டின் பொருளாதாரத்தின் எதிர்மறையான விளைவுகளை குறைக்க அபிவிருத்தி லொத்தர் சபை கையாண்ட உத்திகளால் மிகக் குறுகிய காலத்தில் வருமான அதிகரிக்க வழி செய்துள்ளது. வழமையான லொத்தர் சீட்டுகள் மற்றும் புதிதாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ள விசேட சீட்டுகளுக்கு வழங்கப்படும் பரிசுத் தொகையை அதிகரிக்க அபிவிருத்தி லொத்தர் சபை நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும், இந்நாட்டு பயனாளிகளுக்கு புதிய அனுபவத்தை வழங்கும் வகையில் டிஜிட்டல் தொழில்நுட்பத்தின் ஊடாக லொத்தர் சீட்டுகளை அறிமுகப்படுத்தும் நடவடிக்கையும் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தலைவர் தெரிவித்தார். அபிவிருத்தி லொத்தர் சபையின் வருமானத்தில் 50% இந்த நாட்டில் கல்வி மற்றும் சுகாதாரத்திற்காக ஒதுக்கப்படுவதாகவும் அவர் அவர் மேலும் குறிப்பிட்டார். https://thinakkural.lk/article/297543
    • Published By: DIGITAL DESK 3   29 MAR, 2024 | 12:09 PM பிரபல வர்த்தக நாமங்கள் மற்றும் அவர்களின் வர்த்தக முத்திரைகளை பயன்படுத்தி பரிசுகள் வழங்கப்படும் எனக் கூறி  சமூக ஊடகங்களில் பகிரப்படும் இணைப்புகளை கிளிக் செய்ய வேண்டாம் என இலங்கை கணினி அவசரநிலை தயார்நிலைக் குழு (SLCERT) மக்களைக் கேட்டுக் கொண்டுள்ளது. இது குறித்து இலங்கை கணினி அவசர நடவடிக்கை பிரிவின் சிரேஷ்ட தகவல் பாதுகாப்பு பொறியியலாளர் சாருக தமுனுபொல  தெரிவித்துள்ளதாவது, குறித்த இணைப்புகள் குறுஞ்செய்தி, வட்ஸ்அப், எக்ஸ் (ட்விட்டர்) மற்றும் பேஸ்புக் மற்றும் கையடக்க தொலைபேசியில் பெறப்பட்ட அழைப்பு ஆகியவற்றினூடாக பகிரப்படுகிறது. எனவே இவ்வாறான இணைப்புகள் வந்தால்  கிளிக் செய்யவதற்கு முன்பு அவற்றின் நம்பகத்தன்மையை முதலில் உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள். இதுபோன்ற இணைப்புகளை உங்கள் நண்பர்கள் வட்டாரத்தில் இருந்து உங்களுக்கு வரலாம். சில சமூக ஊடகங்களில் பகிரப்படும் இவ்வாறான இணைப்புகளை கிளிக் செய்வதால் தனிப்பட்ட தரவுகளை திருடப்படலாம். மேலும், உங்களின் தேசிய அடையாள அட்டை இலக்கம் (NIC), சாரதி அனுமதி பத்திரம், வங்கிக் கணக்கு விவரங்கள், ஒரு முறை பயன்படுத்தப்படும் கடவுச்சொல் (OTP), வேலை செய்யும் விவரங்கள் போன்ற தனிபட்ட விவரங்களை பெற்றுகொள்வார்கள். சில நேரங்களில் மூன்றாம் தரப்பு கையடக்க தொலைபேசியில் இணைப்புகள் பதிவிறக்கம் செய்யப்பட்டு, குறித்த கையடக்க தொலைபேசியில்  சேமித்து வைக்கப்பட்டுள்ள தனிபட்ட விவரங்களை திருடலாம். எனவே அவர்களும் பாதிக்கப்படலாம் என்பதால், அந்த இணைப்புகளை மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்ள வேண்டாம் என தெரிவித்துள்ளார். https://www.virakesari.lk/article/179956
    • உண்மைதான் இது ஒரு மதத்திற்கெதிரான பிரச்சார படமாக காட்டப்பட்டிருந்தாலும் இந்த படத்தினை அனைவரும் பார்க்கவேண்டிய படமக உணர்கிறேன். ஆனால் இதனை ஒத்த இன்னொரு மதமும் கேரளாவிலும் அதனை அண்டிய தமிழ்நாட்டுப்பகுதியிலும் இதனை விட அதிகளவில் மதமாற்றம் செய்துவருகிறார்கள். விளங்கநினைப்பவன், புத்தன் இந்த திரைப்படம் தொடர்பான உங்கள் கருத்துகளையும் பதிவிடுங்கள்.
    • புதிய மின்சார சட்டமூலம் வர்த்தமானியில் வெளியிடப்படும் மின்சார சபையை மறுசீரமைப்பதற்கான ஏற்பாடுகளை உள்ளடக்கிய புதிய மின்சார சட்டமூலம் அடுத்த இரண்டு வாரங்களில் வர்த்தமானியில் வெளியிடப்பட்டு, ஏப்ரல் இறுதி வாரத்தில் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும் என மின்சக்தி, எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்தார். மின்சார சபையின் மறுசீரமைப்பு தொடர்பிலான முன்னேற்றத்தை ஆராயும் மீளாய்வுக் கூட்டத்தின் போது இது தொடர்பில் கலந்துரையாடியதாக அமைச்சர் X வலைத்தளத்தில் பதிவிட்டுள்ளார். சட்டமூலத்தை மீளாய்வு செய்த பின்னர், அதனை நடைமுறைப்படுத்துவதற்கான உறுதிப்பாடு கடந்த திங்கட்கிழமை சட்டமா அதிபரால் வழங்கப்பட்டது. அதனடிப்படையில், வர்த்தமானி பிரசுரிக்கப்பட்டதன் பின்னர் எந்தவொரு நபருக்கும் மீளாய்வு செய்வதற்கு குறைந்தபட்சம் இரண்டு வாரங்கள் அவகாசம் வழங்கப்படும் என  தெரிவிக்கப்பட்டுள்ளது.   https://thinakkural.lk/article/297573
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.