Jump to content

விடுதலைப் புலிகளை ஆதரித்து முகநூல் பதிவிடுபவர்கள் கைது செய்யப்படுவர் – அஜித் ரோஹண


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

விடுதலைப் புலிகளை ஆதரித்து முகநூல் பதிவிடுபவர்கள் கைது செய்யப்படுவர் – அஜித் ரோஹண

 
625.500.560.350.160.300.053.800.900.160.
 83 Views

தமிழீழ விடுதலைப் புலிகள் உள்ளிட்ட பயங்கரவாத நடவடிக்கைகளில் ஈடுபடுவோரைப் புகழ்ந்தும், நினைவுகூர்ந்தும் பகிரங்கமாக கருத்துத் தெரிவிப்பவர்கள் தகுதி தராதரம் பாராது கைது செய்யப்படுவார்கள் என்று பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.

அத்துடன் ஊடகங்களிலும், முகநூல் போன்ற சமூக ஊடகங்களிலும் பயங்கரவாத நடவடிக்கைகளில் ஈடுபட்டவர்களைப் போற்றியும், அவர்களை நினைவுகூர்ந்தும் கருத்துக்களை பதிவிடுபவர்களும் கைது செய்யப்படுவார்கள் என்றும் அவர் மேலும் குறிப்பிட்டார்.

அவர் மேலும் கருத்துத் தெரிவிக்கையில், நாட்டில் மீண்டும் பயங்கரவாதம் தலைதூக்க இடமளியோம். அதைத் தடை செய்யும் நடவடிக்கையை காவல்துறையினரும், படையினரும் இணைந்து மேற்கொண்டுள்ளனர்.

கருத்துச் சுதந்திரம் என்ற பெயரில் பயங்கரவாத நடவடிக்கைகளில் ஈடுபட்டவர்களைப் புகழ்ந்தும், நினைவுகூர்ந்தும் சிலர் கருத்துக்களைத் தெரிவித்து வருகின்றனர்.

நாட்டில் பயங்கரவாத தடைச்சட்டம் நடைமுறையில் இருக்கின்ற போது இதுபோன்ற நடவடிக்கைகளில் ஈடுபடுவோர் இனிமேல் கைது செய்யப்படுவார்கள் என்றும் தெரிவித்தார்.

 

https://www.ilakku.org/?p=46794

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மூன்றாம் வகுப்பில் வரைதல்  பாடம் கசந்த மாதிரி  எதுவும் இல்லை . வரைதல்  வாத்தியார் சிம்ம சொப்பனம். 
வருவார்  “ கொப்பியை மூடு ;  இன்றைக்கு மண்சட்டி எப்படி வரைவது என்று பார்ப்போம். எல்லோரும் கண்ணை மூடி யோசியுங்கள்”  என்பார்.
உடனடியாக கொப்பிகள் மூடப்பப்டும் ;மாணவர்கள் கண் மூடி யோசிப்பார்கள் .
வகுப்பு மொனிடருக்கு ஒரு பையனில் பழைய  கறள் ஒன்று இருந்தது.
 அவன் எழுந்து நின்று “ சேர்  இவன் கண்ணை மூடி சட்டியைப் பற்றி யோசிக்கவில்லை”  என்று சொல்ல சன்னதம் கொண்ட வாத்தியார் அந்த பையனை இழுத்தெடுத்து ருத்ர தாண்டவம் ஆடியதை இப்போது நினைத்தாலும் மயிர்கூச்செறியும். 


என்னிலிருந்து இன்னுமொரு  பிக்காஸோவின் தோற்றத்தை தடுத்த அந்த நிகழ்வு ஞாபகத்திற்கு வரும் அதே வேளை….
 உந்த பாதுகாப்பு ஆசாமி (அஜித் ரோஹண) என்னுடைய பழைய வரைதல் வாத்தியார் பாத்திரம் எடுக்கவும்இ  ஊரெல்லாம் மானிட்டர் மார் ஆங்காங்கே முளைத்தெழும்பவும் கனாக்  கண்டேன் தோழி ……..
 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
9 hours ago, உடையார் said:

அவர் மேலும் கருத்துத் தெரிவிக்கையில், நாட்டில் மீண்டும் பயங்கரவாதம் தலைதூக்க இடமளியோம். அதைத் தடை செய்யும் நடவடிக்கையை காவல்துறையினரும், படையினரும் இணைந்து மேற்கொண்டுள்ளனர்.

நாடு அதல பாதாளத்திற்கு செல்வதை மக்கள் உணராமல்  தடுக்கும் யுக்தி. எத்தனை நாளைக்கு இந்த திகில் படம் ஓடும்?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பேசாமல்.. நந்தசேன பேஸ்புக்கை சொந்தமாக வாங்கலாமே. புலிகள் பதிவுகளை இல்லாமல் செய்ய.

மொக்கன் கூட்டம். சீனாவின் சீரழிஞ்ச பாதையில் போக நினைக்கினம்.. நெடுநாளைக்கு தாங்காது. 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
14 hours ago, nedukkalapoovan said:

.

மொக்கன் கூட்டம். சீனாவின் சீரழிஞ்ச பாதையில் போக நினைக்கினம்.. நெடுநாளைக்கு தாங்காது. 

சீனாவின் புரட்சிகர பாதை ,மாவோயிஸ்களின் தெளிவான பாதை,மக்கள் படை,செம்படை😀

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

போகிற போக்கைப் பார்த்தால், நாளடைவில் இவங்களே விடுதலைப்புலிகளை ஆதரிக்க தொடங்கிவிடுவானுகள் போலிருக்கே!

Link to comment
Share on other sites

On 8/4/2021 at 23:19, nedukkalapoovan said:

சீனாவின் சீரழிஞ்ச பாதையில் போக நினைக்கினம்.. நெடுநாளைக்கு தாங்காது. 

சீனாவின் பாதை சீனாவை உலகின் முதலாவது செல்வந்த நாடாகவும் உலகின் அதிசக்திவாய்ந்த வல்லரசாகவும் மாற்றி வருகிறது. சீன தொழில்நுட்பம் பற்றியும் சீன வளர்ச்சி பற்றியும் சீனாவில் தடை செய்யப்பட்டுள்ள அமெரிக்காவின் யூ ரியுபில் பாருங்கள் - வியந்து போவீர்கள். நான் சீனாவில் இவர்களின் வளர்ச்சியை நேரடியாகவே பார்த்து வருகிறேன்.

20 hours ago, putthan said:

சீனாவின் புரட்சிகர பாதை ,மாவோயிஸ்களின் தெளிவான பாதை,மக்கள் படை,செம்படை😀

சீனா மோவோவின் காலத்தை இருண்ட காலம் என்று மாணவர்களுக்கு கற்று கொடுக்க ஆரம்பித்து அரை நூற்றாண்டு கடந்துவிட்டது. மாவோவை வரலாற்று நினைவாகவே வைத்திருக்கிறார்கள்.

Link to comment
Share on other sites

ஏன் பல சீன குடிமக்கள் மேற்கு நோக்கி குடியேறுகிறார்கள்?
அமெரிக்காவில் ஒவ்வொரு நகரத்திலும் கிராமங்களிலும் சீன உணவகங்கள் உள்ளன.
சீன உணவகங்கள் அமெரிக்காவின் மிகப்பெரிய உணவக சங்கிலி.
அனைத்து அமெரிக்க பல்கலைக்கழகங்களும் சீன மாணவர்களால் நிரம்பியுள்ளன, 
கிட்டத்தட்ட அனைவருமே பச்சை அட்டைக்கு விண்ணப்பிக்கிறார்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
23 hours ago, satan said:

போகிற போக்கைப் பார்த்தால், நாளடைவில் இவங்களே விடுதலைப்புலிகளை ஆதரிக்க தொடங்கிவிடுவானுகள் போலிருக்கே!

சிலருக்கு வாய் நிறைய சோறு வேணுமெண்டால் பூனையையும் புலியாக்கி  பிழைத்துக்கொள்வார்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, கற்பகதரு said:

 

சீனா மோவோவின் காலத்தை இருண்ட காலம் என்று மாணவர்களுக்கு கற்று கொடுக்க ஆரம்பித்து அரை நூற்றாண்டு கடந்துவிட்டது. மாவோவை வரலாற்று நினைவாகவே வைத்திருக்கிறார்கள்.

சீனாவில் மாவோவின் சிந்தனையை   மறைக்கலாம் ஆனால் சிறிலங்காவில் அவரின்ட சிந்தனையை பின்பற்றும் பல புரட்சிவாதிகள் உண்டு....மாவோ வின் கார்பன் கொப்பி தான் தற்பொழுது உள்ள சீனா அதிபர்....அபிவிருத்தி என்ற போர்வையில் ஆக்கிரமிப்பு செய்பவர்கள்...சொந்த இனத்தை,நாட்டுமக்களை இரும்பு கரம் கொண்டு அடக்குபவர்கள்....தொடர்ந்து ஆட்சி அதிகாரத்தில் இருக்க வேண்டும் என்ற சர்வாதிகார கொள்கை கொண்டவர்...

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
13 hours ago, Sean said:

ஏன் பல சீன குடிமக்கள் மேற்கு நோக்கி குடியேறுகிறார்கள்?
அமெரிக்காவில் ஒவ்வொரு நகரத்திலும் கிராமங்களிலும் சீன உணவகங்கள் உள்ளன.
சீன உணவகங்கள் அமெரிக்காவின் மிகப்பெரிய உணவக சங்கிலி.
அனைத்து அமெரிக்க பல்கலைக்கழகங்களும் சீன மாணவர்களால் நிரம்பியுள்ளன, 
கிட்டத்தட்ட அனைவருமே பச்சை அட்டைக்கு விண்ணப்பிக்கிறார்கள்.

ஆசிய ஆபிரிக்க நாட்டின் மத்திய தர வர்க்கத்தினருக்கு மேற்கு நாடுகளில் பொருளாதார ரீதியில் ஒப்பீட்டளவில் மேன்மையான சந்தர்ப்பங்கள் இருக்கின்றன ... 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Popular Now

  • Topics

  • Posts

    • ஒவ்வொரு பொது த‌ள‌ங்க‌ளிலும் காணொளி பார்த்து முடிந்தது வாசிப்ப‌து உண்டு..................... சீமானுக்கு ஆத‌ர‌வாக‌ 180க்கு மேலான‌ யூடுப் ச‌ண‌ல் இருக்கு......................... புதிய‌த‌லைமுறை ம‌ற்றும் வேறு ஊட‌க‌ங்க‌ளில் ம‌க்க‌ளின் ம‌ன‌ நிலை என்று கீழ‌ வாசிப்ப‌துண்டு நீங்க‌ள் மேல‌ ஈழ‌ப்பிரிய‌ன் அண்ணாவுக்கு எழுதின‌தில் என‌க்கு உட‌ன் பாடு இல்லை ஈழ‌ப்பிரிய‌ன் அண்ணா யாழில் யார் கூட‌வும் வ‌ர‌ம்பு மீறி எழுதும் ந‌ப‌ர் கிடையாது நீங்க‌ள் சீமானில் ஒரு குறை க‌ண்டு பிடிச்சால் க‌ருணாநிதி குடும்ப‌த்தில் ப‌ல‌ நூறு குறைக‌ள் என்னால் க‌ண்டு பிடிக்க‌ முடியும் அதில் பாதி தான் நேற்று உங்க‌ளுக்கு எழுதின‌து ஆனால் நீங்க‌ள் ப‌தில் அளிக்க‌ முடியாம‌ ந‌க‌ர்ந்து விட்டீங்க‌ள்...................................
    • தே. ஆணையம் ஒரு கட்சி அல்ல. அதற்கு ஆதரவாக யூடியூப்பில் எழுத யாரும் இல்லை. ஆனால் - பிஜேபி உட்பட அதை எல்லா கட்சி ஆட்களும் விமர்சிகிறனர். எனவே கட்சி சார்பான காணொளிகளில் தே.ஆ விமர்சிக்கபடுவதை வைத்து த.நா மக்களின் கருத்து அதுவே என சொல்ல முடியாது.  
    • இவரின் செவ்வி பாடப் புத்தகமாக்கப்பட வேண்டும்.    
    • ஆண்ட‌ருக்கு தான் வெளிச்ச‌ம்.............................. யாழை விட்டு பொது யூடுப் த‌ள‌த்தில் காணொளிக்கு கீழ‌ போய் வாசியுங்கோ த‌மிழ் நாட்டு ம‌க்க‌ளின் ம‌ன‌ங்க‌ளில் தேர்த‌ல் ஆணைய‌ம் எப்ப‌டி இருக்கின‌ம் என்று.....................நீங்க‌ள் யாழில் சீமானை ப‌ற்றி தேவை இல்லா அவ‌தூற‌ ப‌ர‌ப்புவ‌தை நிறுத்தினால் ந‌ல்ல‌ம்   உத‌ய‌நிதிக்கு தூச‌ன‌ம் கெட்ட‌ சொல்ட்க‌ள் தெரியாது தானே ந‌ல்ல‌ வ‌ளப்பு......................................................    
    • இப்படி எல்லாம் செய்து 39 தொகுதியில் எத்தனையில் பிஜேபி வெல்வதாக அறிவிப்பார்கள் என நினைக்கிறீர்கள்? ——————————————————— வாக்கு பதிவு சதவீதம் பற்றிய இரு வேறுபட்ட தலவல்கள் வந்ததன் பிண்ணனி. 👇 ———————————— 24 மணி நேரம் கழித்து.. வெளியான தமிழக வாக்குப்பதிவு சதவிகிதம்.. இந்தளவுக்கு தாமதம் ஆக என்ன காரணம் VigneshkumarPublished: Saturday, April 20, 2024, 20:16 [IST]   சென்னை: தமிழ்நாட்டில் நேற்று லோக்சபா தேர்தல் நடந்த நிலையில், சுமார் 24 மணி நேரத் தாமதத்திற்குப் பிறகு இன்று மாலை தான் இறுதி வாக்கு சதவிகிதம் வெளியிடப்பட்டுள்ளது. இந்தளவுக்குத் தாமதம் ஏற்பட என்ன காரணம் என்பதைப் பார்க்கலாம். வாக்குப்பதிவு: அமைதியான முறையிலேயே வாக்குப்பதிவு நடந்து முடிந்த நிலையில், நேற்று தமிழகத்தில் பதிவான வாக்குகள் எத்தனை என்பதில் குழப்பமே நிலவி வந்தது. நேற்று மாலை முதலில் தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு மாநிலத்தில் 72.09% வாக்குகள் பதிவானதாக அறிவித்தார். ஆனால், நள்ளிரவில் வெளியான மற்றொரு டேட்டாவில் வாக்கு சதவிகிதம் 69.46% என்று கூறப்பட்டு இருந்தது. இதுவே பலருக்கும் குழப்பத்தை ஏற்படுத்தியது. இருப்பினும், இறுதி வாக்குப்பதிவு சதவிகிதம் இன்று காலை அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும் என்று கூறப்பட்டது. இருப்பினும், இரண்டு முறை இது குறித்த செய்தியாளர் சந்திப்பு தள்ளிப்போனது. 12, 3 இரண்டு முறை தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு தனது செய்தியாளர் சந்திப்பை ரத்து செய்தார். இது பல வித கேள்விகளை எழுப்பியது. தாமதம்: எப்போதும் தேர்தல் முடிந்து மறுநாள் காலையே இறுதி நம்பர் வந்துவிடும். ஆனால், இந்த முறை வாக்குப்பதிவு முடிந்து 24 மணி நேரம் கழித்து இன்று மாலை தான் இறுதி டேட்டா வந்தது. அதன்படி தமிழ்நாட்டில் 69.45% வாக்குகள் பதிவாகி இருக்கிறது. அதிகபட்சமாகத் தருமபுரியில்81.48% வாக்குப்பதிவும், குறைந்தபட்சமாக மத்திய சென்னை தொகுதியில் 53.91% வாக்குகள் பதிவாகி உள்ளது. இந்தளவுக்குத் தாமதம் ஏன் என்று பலருக்கும் கேள்வி எழுந்தது. மாவட்ட ரீதியான தகவல்களைப் பெறுவதில் தாமதம் ஆனதே இதற்குக் காரணம் எனச் சொல்லப்படுகிறது. கடந்த தேர்தல்களில் நள்ளிரவில் ஒரு டேட்டா வரும். தொடர்ந்து காலை இறுதி நம்பர் வரும். தொலைதூர கிராமங்கள் மற்றும் மலைப் பிரதேசங்களில் உள்ள கிராமங்களில் இருந்து இறுதி டேட்டா வர தாமதம் ஆகும். அதுவே இறுதி வாக்கு சதவிகிதம் மறுநாள் வரக் காரணமாக இருக்கும். அதுவும் கூட ஓரிரு சதவிகிதம் மட்டும் மாறுபடும்.. அதுவும் இறுதி நம்பர் அதிகரிக்கவே செய்யும். ஆனால், இந்த முறை குறைந்துள்ளது. என்ன காரணம்: இந்த இறுதி நம்பர் என்பது நள்ளிரவில் வெளியான டேட்டாவுடன் கிட்டதட்ட ஒத்துப் போய் தான் இருந்தது. ஆனால், மாலை வெளியான டேட்டா உடன் ஒப்பிடும் போது தான் பெரியளவில் முரண்பாடு இருந்தது. காரணம் projecton எனப்படும் அனுமானத்தை வைத்து மாலையில் இறுதி நம்பரை கொடுத்ததே இதற்குக் காரணம் எனச் சொல்லப்படுகிறது. தாமதம் ஏன்: வாக்குப்பதிவுக்கு புதிய செயலியை அவர்கள் பயன்படுத்திய நிலையில், அதில் இருந்த டேட்டாவை வைத்து புரோஜக்ஷன் அடிப்படையில் வாக்கு சதவிகிதத்தைக் கொடுத்ததே டேட்டா தவறாகக் காரணமாக இருந்துள்ளது. ஏற்கனவே இப்படி ஒரு முறை தவறு நடந்துவிட்டதால்.. மீண்டும் தவறு நடக்கக்கூடாது என்பதற்காகவே மாவட்ட வாரியாக பெற்ற தகவல்களை ஒரு முறைக்கு இரண்டு முறை உறுதி செய்துவிட்டு இறுதி செய்துவிட்டு வாக்குப்பதிவு சதவிகிதத்தை வெளியிட்டுள்ளனர். இதுவே தாமதத்திற்குக் காரணம் எனச் சொல்லப்படுகிறது. https://tamil.oneindia.com/news/chennai/what-is-the-reason-behind-delay-in-final-polling-percentage-number-in-tamilnadu-599947.html
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.