Jump to content

ஐபிஎல் T20 2021 - செய்திகள்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, nunavilan said:

அத்துடன் அந்தப் போட்டிக்காக ஐசிசி வரிச்சலுகை கோருவது தொடா்பாக மத்திய அரசிடம் பேசவும் பிசிசிஐ தயாராகியுள்ளது. வரி விலக்கு கிடைக்காத பட்சத்தில் பிசிசிஐக்கு 900 கோடி நஷ்டமாகும்.

சாமியே சைக்கிளில் போறாரு..

Screenshot-2021-05-31-20-38-17-733-org-m

பூசாரிக்கு புல்லட்டு கேட்குதாம் ..

Link to comment
Share on other sites

  • 1 month later...
  • Replies 89
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

2021 ஐ.பி.எல்; எஞ்சிய போட்டிகளுக்கான அட்டவணை வெளியானது!

‍ஐக்கிய அரபு எமிரேட்ஸில் நடைபெறவுள்ள 2021 ஐ.பி.எல். எஞ்சிய போட்டிகளுக்கான கால அட்டவணையினை இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் நேற்று அறிவித்துள்ளது.

IPL_0_1200x768.jpeg?7yZ24NTovITIA.YLCi5V

இதில் 27 நாட்களில் மொத்தமாக 31 போட்டிகள் நடைபெறும்.

கொவிட்-19 தொற்று நோயைத் தொடர்ந்து கடந்த மே மாதம் ஒத்திவைக்கப்பட்ட 14 ஆவது இந்தியன் பிரீமியர் லீக் தொடரின்  எஞ்சிய போட்டிகள், சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் இடையேயான பிளாக்பஸ்டர் மோதலுடன் செப்டம்பர் 19 ஆம் திகதி துபாயில் மீண்டும் தொடங்கும்.

எஞ்சிய 31 போட்டிகளில் 13 ஆட்டங்கள் துபாயிலும், 10 ஆட்டங்கள் சார்ஜாவிலும், 08 ஆட்டங்கள் அபுதாபியிலும் நடைபெறும்.

சூப்பர் லீக் சுற்றின் இறுதி ஆட்டம் ஒக்டோபர் 30 ஆம் திகதி ரோயல் செலஞ்சர்ஸ் பெங்களூரு மற்றும் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிகளுக்கிடையே துபாயில் நடைபெறும்.

அதேநேரம் தொடரின் இறுதிப் போட்டி ஒக்டோபர் 15 துபாயில் இடம்பெறவுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

VIVO-IPL-2021-Match-Schedule-__0-1200x33

 

 

https://www.virakesari.lk/article/110064

Link to comment
Share on other sites

  • 1 month later...
  • கருத்துக்கள உறவுகள்

14 ஆவது ஐ.பி.எல். சீசன் இன்று மீண்டும் ஆரம்பம் ; சென்னை - மும்பை இன்று மோதல்

2021 இந்திய பிரீமியர் லீக் தொடரின் இரண்டாம் பதிப்பு துபாய் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் இன்று ஆரம்பமாகவுள்ளது.

முதல் ஆட்டத்தில் நடப்புசாம்பியனான மும்பை இந்தியன்ஸும் தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் மோதவுள்ளன.

PAN_4563.jpg?width=2000&height=1333

இந்த ஆட்டம் இன்றிரவு 7.30 மணிக்கு ஆரம்பமாகும்.

ஐ.பி.எல். டி-20 கிரிக்கெட் தொடரின் 14 ஆவது சீசன் போட்டிகள் கடந்த ஏப்ரல் மாதம் இந்தியாவில் நடைபெற்றது. 

29 ஆட்டங்கள் முடிவடைந்த நிலையில் மே மாத தொடக்கத்தில் சில வீரர்களுக்கு கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டதை தொடர்ந்து போட்டிகள் நிறுத்தப்பட்டன. 

இந்நிலையில் இடையில் நிறுத்தப்பட்ட இந்த தொடர், ஐக்கிய அரபு அமீரகத்தில் இன்று தொடங்குகிறது. 

இரண்டாம் கட்ட ஆட்டங்கள் இன்று தொடங்கி எதிர்வரும் ஒக்டோபர் 15 ஆம் திகதி வரை ஐக்கிய அரபு அமிரகத்தில் நடக்கிறது.

எஞ்சிய 27 லீக் ஆட்டங்கள் மற்றும் 4 பிளே ஆப் போட்டிகள் ஆக மொத்தம் 31 ஆட்டங்கள் துபாய், ஷார்ஜா, அபுதாபி ஆகிய இடங்களில் நடைபெறும்.

அதன்படி துபாயில் 13 , சார்ஜா 10, அபுதாபியில் 8 ஆட்டங்களும் நடைபெறும்.

இந்த சீசனில் நடைபெற்ற போட்டிகளின் முடிவுகள் அடிப்படையில் டெல்லி 12 புள்ளிகளுடன் முதல் இடத்திலும், சென்னை 10 புள்ளிகளுடன் இரண்டாம் இடத்திலும், பெங்களூரு 10 புள்ளிகளுடன் மூன்றாம் இடத்திலும், மும்பை 8 புள்ளிகளுடன் நான்காம் இடத்திலும், ராஜஸ்தான் 6 புள்ளிகளுடன் ஐந்தாம் இடத்திலும், பஞ்சாப் 6 புள்ளிகளுடன் ஆறாம் இடத்திலும், கொல்கத்தா 4 புள்ளிகளுடன் ஏழாம் இடத்திலும் மற்றும் ஹைதராபாத் 2 புள்ளிகளுடன் எட்டாம் இடத்திலும் உள்ளன.

 

https://www.virakesari.lk/article/113591

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஐபிஎல் 2021 சென்னை சூப்பர் கிங்ஸ் vs மும்பை இந்தியன்ஸ் - ருதுராஜ் கெய்க்வாட் 'நம்பமுடியாத' ஆட்டத்தால் கிடைத்த வெற்றி

4 மணி நேரங்களுக்கு முன்னர்
கோப்பு

பட மூலாதாரம்,GETTY IMAGES

 
படக்குறிப்பு,

கோப்புப் படம்

ஒரு அணியில் ஒரேயொருவர் சிறப்பாக ஆடி ரன்களைக் குவித்துவிட்டால் எதிரணிக்கு மோசமான பாதிப்பை ஏற்படுத்தி விட முடியும் என்றார் மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டனாகச் செயல்பட்ட பொல்லார்ட். அவர் குறிப்பிட்டது சென்னை சூப்பர் கிங்க் அணியின் ருதுராஜ் கெய்க்வாட் பற்றி.

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் மகேந்திர சிங் தோனியும் இதே கருத்தைக் கூறினார்.

ஒரு நீண்ட இடைவெளிக்குப் பிறகு துபாயில் தொடரும் ஐபிஎல் போட்டிகளின் முதல் ஆட்டத்தின் பெரும்பகுதியை ருதுராஜ் கெய்க்வாட் ஆக்கிரமித்துக் கொண்டார். 58 பந்துகளில் அவர் அடித்த 88 ரன்கள் மூலம் 20 ரன்கள் வித்தியாசத்தில் மும்பை இந்தியன்ஸ் அணியை சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வீழ்த்தியது.

தொடக்க ஓவர்களிலேயே அடுத்தடுத்து விக்கெட்டுகளைப் பறிகொடுத்து பரிதாப நிலையில் இருந்த சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை தனியொருவராக நின்று மரியாதையான எண்ணிக்கையை எட்ட உதவினார் கெய்க்வாட்.

டாஸ் வென்ற தோனி முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது தவறாகிப் போய்விடுமோ என்று எண்ணும் அளவுக்கு மும்பையின் பந்துவீச்சு இருந்தது. கடந்த பல போட்டிகளாக அதிக விக்கெட் எடுக்காத போல்ட், இந்தப் போட்டியில் தொடக்கத்திலேயே விக்கெட்டுகளைச் சாய்த்தார்.

ஒரு கட்டத்தில் சென்னை அணி 4 விக்கெட்டுகளை இழந்து வெறும் 24 ரன்களை மட்டுமே எடுத்திருந்தது. அத்துடன் அம்பதி ராயுடு காயமடைந்து வெளியேறி இருந்தார். இப்படி ஒரு நிலைக்குப் பிறகு வெற்றி பெறும் வாய்ப்பு மிக மிகக் குறைவு என்று புள்ளி விவரங்கள் சொல்கின்றன.

ஏனென்றால் ஒட்டுமொத்த ஐபிஎல் போட்டிகளிலும் 24 ரன்களுக்குள் 4 விக்கெட்டுகளை இழந்த அணி இதற்கு முன் ஒரேயொருமுறைதான் வெற்றி பெற்றிருக்கிறது. இப்போது சென்னை சூப்பர் கிங்க்ஸ் அணி அந்தப் பட்டியலில் இரண்டாவதாக இடம்பிடித்திருக்கிறது.

டூ பிளெஸ்ஸிஸ், மொயின் அலி, சுரேஷ் ரெய்னா, தோனி என அடுத்தடுத்து முக்கிய விக்கெட்டுகள் வீழ்ந்த போதும் கெய்க்வாட் நங்கூரம் பாய்ச்சிபடி மறுமுனையில் விளாசிக் கொண்டிருந்தார். அவருக்கு நல்வாய்ப்பு ஒன்றும் அமைந்தது.

19 ரன்கள் எடுத்திருந்த நிலையில், அவர் கொடுத்த கேட்சை விக்கெட் கீப்பர் குயின்ட்டன் டி காக் தவறவிட்டார். போட்டி முடிந்த பிறது அது குறித்து அவர் நிறையவே வருத்தப்பட்டிருப்பார். ஏனென்றால் அதன் பிறகுதான் கெய்க்வாட் பட்டாசாக வெடித்தார்.

Twitter பதிவை கடந்து செல்ல, 1

Twitter பதிவின் முடிவு, 1

அற்புதமான பவுண்டரிகள், நம்ப முடியாத சிக்கர்கள் என மும்பை இந்தியன்ஸ் அணியின் பந்துவீச்சை சிதறடித்தார் கெய்க்வார்ட். பிரேவாவும் கெய்க்வாடுடன் சேர்ந்து கடைசி ஓவர்களில் நாலாபுறமும் பந்தை அடித்து மும்பை இந்தியன்ஸ் அணியின் இதயத்துடிப்பை எகிற வைத்தார்.

போல்ட் வீசிய 19-ஆவது ஓவரில் 24 ரன்கள் எடுக்கப்பட்டன. அதில் பிராவோ இரண்டு சிக்சர்களும் கெய்க்வாட் ஒரு சிக்சரும் அடித்தனர். உலகின் முன்னணி பந்துவீச்சாளர்களில் ஒருவரான போல்ட் டி-20 ஆட்டம் ஒன்றில் அதிக ரன்களைக் கொடுத்தது இந்த ஓவரில்தான்.

உலகின் மற்றொரு முன்னிலை பந்துவீச்சாளரான பும்ராவையும் கெய்க்வாட் விட்டுவைக்கவில்லை. ஆட்டத்தின் கடைசிப் பந்தை முட்டிபோட்டி லெக் திசையில் சிக்சருக்கு தூக்கினார். வர்ணணையாளர்கள் இதை நம்பமுடியாத சிக்சர் என்றார்கள்.

பின்னர் 157 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆடிய மும்பை இந்தியன்ஸ் அணியால் 20 ரன்கள் குறைவாகவே எடுக்க முடிந்தது. சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தனது முதல் பாதியை எப்படி ஆடியதோ அதேபோலவே மும்பை இந்தியன்ஸ் அணியின் ஆட்டமும் இருந்தது. ஆனால் இரண்டாவது பாதியிலும் தடுமாறியதால் அந்த அணியால் தோல்வியைத் தவிர்க்க முடியவில்லை.

தோனி

பட மூலாதாரம்,GETTY IMAGES

கெய்க்வாட் ஆடிய ஆட்டங்களிலேயே இது சிறப்பானது. மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிராக சென்னை சூப்பர் கிங்ஸ் வீரர் ஒருவர் எடுத்த அதிகபட்ச ரன்னும் இதுவே. ஆட்ட நாயகன் விருதும் அவருக்குக் கிடைத்தது.

அணி தடுமாறிக் கொண்டிருக்கும்போது நிதானமாக ஆடுவதே வீரர்களின் வழக்கம். ஆனால் கெய்க்வாட், "வாய்ப்புக்காகக் காத்துக் கொண்டிருந்தேன்" என்று கூறினார்.

விக்கெட்டுகள் சரிந்த நிலையில் ஏற்பட்ட அழுத்தத்தை எப்படி எதிர்கொண்டீர்கள் என்று கேட்டபோது, தோனி பின்னால் இருக்கிறார் என்பதால் அதைப் பற்றி கவலைப்படத் தேவையில்லை என்று நம்பிக்கையாகக் கூறினார் கெய்க்வாட்.

அவர் கூறியது உண்மைதான் என்று நிரூபிக்கும் வகையிலேயே ஆட்டத்தின் போக்கை மாற்றுவதில் தோனியின் பங்கும் இருந்தது. மூன்றாவது ஓவரில் மும்பை இந்தியன்ஸ் அணியின் தொடக்க வீரரான டி காக் சாஹர் வீசிய பந்தை காலில் வாங்கினார்.

பெரிய அளவில் முறையிட்ட போதும் நடுவர் அதற்கு அவுட் தரவில்லை. உடனடியாக தோனி ரிவ்யூ கேட்டார். அதில் பந்து ஸ்டம்புகளை நோக்கிச் செல்வது தெரிந்தது. அதனால் டி காக் அவுட் என அறிவிக்கப்பட்டார். தோனியின் இந்த முடிவு மும்பையின் அஸ்திவாரத்தை அசைத்ததில் முக்கியப் பங்கு வகித்தது.

https://www.bbc.com/tamil/sport-58620751

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அது Pollard இன் மோட்டு captaincy ஆல் CSK க்கு கிடைத்த வெற்றி.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஐபிஎல் 2021 RCBvsKKR: விராட் கோலியின் 200-ஆவது போட்டி பெருமைப்பட ஏதுமில்லாமல் முடிந்தது

3 மணி நேரங்களுக்கு முன்னர்
விராட்

பட மூலாதாரம்,GETTY IMAGES

கொல்கத்தா அணியுடனான ஆட்டத்தில் பங்கேற்றதன் மூலம் 200 ஐபிஎல் போட்டிகளில் ஆடிய முதல் வீரர் என்ற பெருமையைப் பெற்றார் இந்திய அணித் தலைவர் விராட் கோலி. ஆனால் ஆட்டத்தின் போக்கோ, முடிவோ அவர் பெருமைப்படத் தக்கதாக இல்லை. 200-ஆவது ஆட்டத்தை நினைவில் வைத்துக் கொள்ளவும் அவர் விரும்ப மாட்டார்.

அந்த அளவுக்கு கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியுடன் மிக மோசமாகத் தோற்றுப் போயிருக்கிறது கோலி தலைமையிலான பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணி. வெறும் 92 ரன்களை எடுத்த பெங்களூர் அணியை பத்தே ஓவர்களில் கொல்கத்தா அணி வீழ்த்திவிட்டது.

இந்தப் போட்டியில் விராட் கோலி முதல் அணியின் கடைசி ஆட்டக்காரர் வரை வந்தார்கள், சிறிது நேரம் நின்றார்கள், பெவிலியனுக்குத் திரும்பினார்கள் என்றுதான் கூற வேண்டும். அந்த அளவுக்கு யாரும் நிலைத்து நின்று ஆடவில்லை.

ஒரு இலக்கை நிர்ணயித்துக் கொண்டு அதற்கு உண்மையாகவும் நேர்மையாகவும் தீவிரமாகச் செயல்பட்டு வந்தால் நாம் யாருக்கும் பதில் சொல்ல வேண்டிய அவசியம் இருக்காது என்று ஒரு பேட்டியில் விராட் கோலி கூறியிருப்பார். ஆனால் இப்போது சூழல் வேறு மாதிரியாக மாறியிருக்கிறது என்பதையே அவரது சமீபத்திய முடிவுகள் காட்டியிருக்கின்றன.

இந்திய டி20 அணியின் தலைவர் பதவியில் இருந்து ராஜிநாமா, பெங்களூர் ராயல் சேலஞ்சர்ஸ் அணியின் தலைவர் பதவியில் இருந்து விலகல் என பெரிய முடிவுகளை எடுத்த பிறகு ஏற்பட்டிருக்கும் கடுமையான நெருக்கடிக்கு மத்தியிலேயே விராட் கோலி இந்த ஆட்டத்தில் பங்கேற்றார்.

தனக்கேயுரிய அற்புதமான கவர் ட்ரைவ் மூலமாக ஆட்டத்தைத் தொடங்கினார். அவரது கவர் ட்ரைவின் அழகை பல கோணங்களில் ரசிகர்கள் பார்த்து ரசித்தார்கள். ஆனால் பிரசித் கிருஷ்ணாவின் அடுத்த பந்திலேயே எல்பிடபுள்யூ முறையில் அவுட் ஆனார். அந்த முடிவை எதிர்த்து ரிவ்யூ கேட்டு, அந்த வாய்ப்பையும் பறிகொடுத்தார்.

விராட் கோலியின் ரசிகர்கள் பலர் அந்தக் கணத்திலேயே தொலைக்காட்சியை அணைத்துவிட்டுப் போயிருப்பார்கள் என்றே கூற வேண்டும்.

விராட் கோலி வீழ்ந்த பிறகு, மேக்ஸ்வெல், டி வில்லியர்ஸ், படிக்கல் என நட்சத்திர வீரர்கள் யாரும் பெரிய அளவில் ரன் குவிக்காததால், வெறும் 92 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது பெங்களூரு அணி.

Twitter பதிவை கடந்து செல்ல, 1

Twitter பதிவின் முடிவு, 1

இந்தப் போட்டியில் டாஸ் வென்றவர் கோலிதான். முதலில் பேட் செய்து நல்ல ஸ்கோரை எட்ட வேண்டும் என்றும் அவர் கணித்திருக்கக் கூடும். நேரம் ஆக ஆக பிட்ச் மெதுவாக மாறும் என்று அவர் நினைத்ததால், அவர் தேர்வு செய்திருக்கலாம். ஆனால் அது அவருக்கு நேர் எதிராக முடிந்துபோனது. புதிதாக வந்தவர்களும், அனுபவ வீரர்களும் சோபிக்கவில்லை.

போட்டி முடிந்த பிறகு சுழற் பந்து வீச்சாளர் வருண் சக்கரவர்த்தியை வெகுவாகப் பாராட்டினார் கோலி. அவரைப் போன்றவர்கள் இந்திய அணிக்கு ஆதாரமாக இருப்பார்கள் என்று புகழ்ந்தார். அதற்கும் காரணம் உண்டு. தனது லெக் ஸ்பின் மூலம் ஒரு போல்ட், ஒர கேட்ச், ஒரு எல்பிடபூள்யூ என மூன்று பெங்களூரு விக்கெட்டுகளை வீழ்த்திய வருண் சக்கரவர்த்தி, நான்கு ஓவர்களில் 13 ரன்களை மட்டுமே விட்டுக் கொடுத்திருந்தார்.

Twitter பதிவை கடந்து செல்ல, 2

Twitter பதிவின் முடிவு, 2

92 ரன்களுக்குள் கொல்கத்தா அணியைச் சுருட்ட வேண்டுமானால் ஏதாவது மாயஜாலம் நடந்திருக்க வேண்டும். ஆனால் அப்படி எதுவும் நடக்க வில்லை. பெங்களூர் அணியின் பந்துவீச்சை சர்வசாதாரணமாக பவுண்டரிகளுக்கு விரட்டி இலக்கை எட்டியது கொல்கத்தா அணி. சுப்மன் கில் ஆறு பவுண்டரி ஒரு சிக்சருடன் 48 ரன்களும், வெங்கடேஷ் அய்யர் 7 பவுண்டரி ஒரு சிக்சருடன் 41 ரன்களும் குவித்திருந்தனர். ஒரேயொரு விக்கெட்டை மட்டுமே கொல்கத்தா இழந்திருந்தது.

இந்தத் தோல்வியால் பெங்களூரு அணிக்கு எல்லாம் முடிந்து போய்விடவில்லை. முதற்கட்டப் போட்டிகளில் பெற்ற தொடர் வெற்றிகள் மூலமாக புள்ளிப் பட்டியலில் இன்னும் மூன்றாவது இடத்தில்தான் இருக்கிறது. ஆனால் அடுத்தடுத்த போட்டிகள் அந்த அணிக்கும் தனிப்பட்ட முறையில் விராட் கோலிக்கும் கூடுதலான நெருக்கடியாகவே இருக்கும்.

https://www.bbc.com/tamil/sport-58634209

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஆனால் RCBஇன் NRR படு பாதாளத்திலயெல்லோ போய் நிக்கிது??

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

PBKS vs RR: 18 பந்துகளில் 18 ரன்கள் எடுத்தால் வெற்றி, கையில் 8 விக்கெட்டுகள் இருந்தும் படுதோல்வி அடைந்த பஞ்சாப்

3 மணி நேரங்களுக்கு முன்னர்
கே எல் ராகுல், பஞ்சாப் கிங்ஸ் தலைவர்

பட மூலாதாரம்,GETTY IMAGES

 
படக்குறிப்பு,

கே எல் ராகுல், பஞ்சாப் கிங்ஸ் தலைவர்

ஐபிஎல் 2021 சீசனின் 32ஆவது போட்டியாக, பஞ்சாப் கிங்ஸ் அணிக்கும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்குமிடையில் நேற்று (செப்டம்பர் 21) இரவு துபாய் மைதானத்தில் நடைபெற்றது.

டாஸ் வென்ற பஞ்சாப் அணி, பந்து வீச தீர்மானித்தது.ராஜஸ்தான் ராயல்ஸ் அணி சார்பாக எவின் லெவிஸ் மற்றும் யஷஸ்வி ஜெய்ஸ்வால் களமிறங்கி நிதானமாக ரன்களைக் குவித்தனர்.

20 ஒவர் முடிவில் 10 விக்கெட் இழப்புக்கு 185 ரன்களைக் குவித்தது ராஜஸ்தான். யஷஸ்வி 49 ரன்களும், மஹிபால் லோம்ரோர் 43 ரன்களும் விளாசி ராஜஸ்தானை நல்ல நிலையில் வைத்தனர். ராஜஸ்தானின் விக்கேட்டுகள் சரிந்தாலும் யஷஸ்வி விட்டுச் சென்ற இடத்தை மஹிபால் சிறப்பாகவே நிரப்பினார். 17 பந்தில் அவர் அடித்த 43 ரன்கள் ராஜஸ்தான் ரசிகர்களுக்கு நல்ல விருந்து எனலாம்.

பஞ்சாப் அணியின் பந்துவீச்சாளர்களின் பந்துவீச்சையும் கட்டாயம் குறிப்பிட வேண்டும். அர்ஷ்தீப் சிங் 4 ஓவர்களில் 32 ரன்களைக் கொடுத்து 5 விக்கெட்டுகளை வீழ்த்தி பார்வையாளர்களை அட போட வைத்தார். எவின் லெவிஸ், லியம் லிவிங்ஸ்டன், மஹிபால் ஆகிய முக்கிய விக்கெட்டுகள் இதில் அடக்கம். அவரைத் தொடர்ந்து மொஹம்மத் ஷமி 4 ஓவர்கள் வீசி 21 ரன்கள்மட்டுமே கொடுத்து 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

தீபக் ஹூடா மற்றும் அதில் ரஷீத்தின் பந்துகளில் ராஜஸ்தான் வீரர்கள் தங்கள் ரன் ரேட்டை உயர்த்திக் கொண்டனர்.

20 ஓவரில் 186 ரன்களை எடுத்தால் வெற்றி என்கிற இலக்கோடு களமிறங்கிய பஞ்சாபின் தொடக்க ஆட்டக்காரர்களான பஞ்சாப் அணித் தலைவர் கே எல் ராகுல் மற்றும் மயங்க் அகர்வால் வெகு சிறப்பாகவே ஆட்டத்தைத் தொடங்கினர். 11.5 ஓவரில் 120 ரன்கள் குவித்த பிறகு தான் ரஜாஸ்தானால் முதல் விக்கெட்டையே வீழ்த்த முடிந்தது என்றால் பார்த்துக் கொள்ளுங்களேன்.

Twitter பதிவை கடந்து செல்ல, 1

Twitter பதிவின் முடிவு, 1

17ஆவது ஓவர் முடிவில் 18 பந்துகளுக்கு 18 ரன்கள் எடுத்தால் வெற்றி என களத்தில் நிகோலஸ் பூரன் மற்றும் மக்ரம் இருந்தனர். அப்போது பஞ்சாப் 168 ரன்களுக்கு 2 விக்கெட்டுகளை மட்டுமே இழந்திருந்தது. 17.1ஆவது பந்தில் கூட மக்ரம் ஒரு சிக்ஸர் அடித்து பஞ்சாப் அணியை வெற்றியை நோக்கி நகர்த்திக் கொண்டிருந்தார்.

அதுவரை ஆட்டம் பஞ்சாபின் வசம் இருந்ததாகத் தான் தோன்றியது.

18ஆவது ஓவர் முடிவில் கூட 178 ரன்களுக்கு 2 விக்கெட் இழப்பு என, 12 பந்துகளில் 8 ரன்கள் எடுத்தால் வெற்றி என களத்தில் இருந்தனர். அதன் பிறகு என்ன ஆனதோ, ஏதானதோ தெரியவில்லை. பஞ்சாப் பேட்ஸ்மென்களின் அதிரடி ஆட்டம் மங்கத் தொடங்கியது.

எட்டு விக்கெட்டுகள் கைவசம் இருக்கும் போது கூட இத்தனை நிதானமாக ஆட வேண்டுமா என்கிற கேள்வியும் ரசிகர்கள் மத்தியில் எழுந்தது. ராகுல் - மயங்க் இணைக்குப் பிறகு வெற்றிகரமான இணை போலத் தெரிந்த மக்ரம் - பூரன் ஜோடி கடைசி இரு ஓவர்களில் தடுமாறியதை வெளிப்படையாக பார்க்க முடிந்தது.

கார்த்திக் தியாகி வீசிய 19.3ஆவது பந்தில் பூரன் தன் விக்கெட்டை பறிகொடுத்தார், அடுத்து களமிறங்கிய அதிரடி ஆட்டக்காரர் தீபக் ஹூடா 19.5ஆவது பந்தில் தன் விக்கெட்டை இழந்து பெவிலியன் திரும்பினார்.

Twitter பதிவை கடந்து செல்ல, 2

Twitter பதிவின் முடிவு, 2

கார்த்திக் தியாகி வீசிய கடைசி ஓவரை பாராட்டி ஜஸ்ப்ரீத் பும்ரா ட்விட்டரில் வாழ்த்தி இருந்ததும் இங்கு குறிப்பிடத்தக்கது.

இரண்டு ரன்கள் வித்தியாசத்தில் சஞ்சு சாம்சன் தலைமையிலான ராஜஸ்தான் ராயல்ஸ் அணி, பஞ்சாபை வென்று புள்ளிப் பட்டியலில் ஐந்தாவது இடத்தைப் பிடித்திருக்கிறது.

தற்போது மும்பை இந்தியன்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் ஆகிய இரு அணிகளும் 8 போட்டிகளில் 4-ல் வென்று முறையே நான்காவது மற்றும் ஐந்தாவது இடத்தில் இருக்கின்றன.

இப்போட்டியில் தோல்வியுற்ற பஞ்சாப் அணி 9 போட்டிகளில் 3-ல் மட்டுமே வெற்றி என புள்ளிப் பட்டியலில் 7ஆவது இடத்துக்கு தள்ளப்பட்டுள்ளது. இத்தோல்வி பஞ்சாப் அணியின் ப்ளேஆஃப் வாய்ப்பையே கடுமையாக பாதித்திருக்கிறது.

தொடக்கத்தில் பிரகாசமாக இருந்த பஞ்சாபின் வெற்றி வாய்ப்பு, கடைசி மூன்று ஓவர்களில் மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன்களால் தவறவிடப்பட்டிருக்கிறது.

இன்று இரவு 7.30 மணிக்கு, துபாய் மைதானத்தில் டெல்லி கேப்பிட்டல்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபத் அணிகள் மோதவிருக்கின்றன.

https://www.bbc.com/tamil/sport-58647136

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பஞ்சப் எப்பவும் பினிசிங்கில் சொதப்புவார்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

DC vs SRH: சொதப்பிய டாப் ஆர்டர் பேட்ஸ்மென்கள், தடுமாறிய பந்துவீச்சாளர்கள் - அசால்டாக வென்ற டெல்லி

ஒரு மணி நேரத்துக்கு முன்னர்
சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியினர்

பட மூலாதாரம்,GETTY IMAGES

 
படக்குறிப்பு,

சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியினர்

ஐபிஎல் 2021 சீசனின் 33ஆவது போட்டி துபாய் மைதானத்தில் நேற்று (செப் 22, புதன்கிழமை) நடந்தது. அதில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியை, டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி அனாயாசமாக வென்றது.

ஹைதராபாத் அணியின் டாப் ஆர்டர் பேட்ஸ்மென்கள் சொதப்பியதோடு, அவ்வணியின் பந்துவீச்சாளர்கள் டெல்லி பேட்ஸ்மென்களை வீழ்த்த முடியாமல் திணறியது டெல்லியின் வெற்றியை எளிதாக்கியது.

கொரோனா காரணமாக தமிழகத்தின் நடராஜன் இப்போட்டியில் பங்கேற்கவில்லை. ஒருவேளை பங்கேற்றிருந்தால் இடது கை சீமரைப் பயன்படுத்தி ஹைதராபாத் அணி, டெல்லியோடு இன்னும் சிறப்பாக மோதிப் பார்த்திருக்கலாம்.

135 மட்டுமே இலக்கு

டாஸ் வென்ற ஹைதராபாத் அணி முதலில் பேட் செய்ய தீர்மானித்தது. ஹைதராபாத் அணியின் முன்னாள் கேப்டன் டேவிட் வார்னர் ரன்கள் ஏதும் எடுக்காமல் தன் விக்கெட்டை பறிகொடுத்தார். விரித்திமான் சாஹா 18 ரன்களுக்கும், அணியின் புதிய தலைவர் கேன் வில்லியம்சன் 18 ரன்களுக்கும் ஆட்டமிழந்தனர். டாப் ஆர்டர் பேட்ஸ்மென்களின் இந்த விக்கெட் சரிவு ஹைதராபாத்துக்கு பெரும் பின்னனைவை ஏற்படுத்தியது.

20 ஓவர் முடிவு வரை தொடர்ந்து ஒரு வலுவான பேட்டிங் இணையை அமைக்க முடியாமல் தடுமாறியது ஹைதராபாத் அணி. ஹைதராபாத் தரப்பில் வில்லியம்சன் மற்றும் மணீஷ் பாண்டே ஜோடி மட்டுமே 30 பந்துகளில் 31 ரன்களை குவித்தது. மற்ற எல்லா இணைகளும் காலூன்றி நிற்பதற்குள் விக்கெட்டைப் பறிகொடுத்து வெளியேறினர்.

இந்த போட்டியில் அப்துல் சமத் அடித்த 28 ரன்கள் தான் ஹைதராபத் அணி வீரர்களிலேயே குவிக்கப்பட்ட அதிகபட்ச ரன்கள். அவரைத் தொடர்ந்து பந்துவீச்சாளர் ரஷீத் கான் அடித்த 22 ரன்கள் தான் இரண்டாவது அதிகபட்ச ரன்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

19.5ஆவது பந்தில் ரிஷப் பந்த் புவனேஷ்வர் குமார் - சந்தீப் ஷர்மா ஜோடியை ரன் அவுட் செய்ய முயன்றார், ஆனால் ரிஷப்பின் இலக்கு தவறியதால் விக்கெட் தப்பியது. ஆனால், அடுத்த பந்தையும் அதே போல வீசி 19.6ஆவது பந்திலும் சந்தீப் ஷர்மாவை ரன் அவுட் செய்து, 10ஆவது விக்கெட்டை வீழ்த்தினார் டெல்லி அணித் தலைவர் ரிஷப் பந்த்.

அன்ரிச் நார்ட்ஜ், ககிஸோ ரபாடா, அக்ஸர் படேல், அவேஷ் கான், அஸ்வின் என அனைத்து டெல்லி பந்துவீச்சாளர்களும் சிறப்பாக பந்துவீசினர்.

ரபாடா விரித்திமான் சாஹா, அடித்து விளையாடிய அப்துல் சமத் உட்பட 3 விக்கெட்டுகளையும், நார்ட்ஜ் டேவிட் வார்னர் உட்பட 2 விக்கெட்டுகளையும், அக்ஸர் படேல் கேன் வில்லியம்சன் உட்பட இரு விக்கெட்களையும் வீழ்த்தினர்.

அவேஸ் கான் மற்றும் அஸ்வின் விக்கெட்டுகளை வீழ்த்தவில்லை என்றாலும் ஹைதராபாத்தின் ரன்ரேட் அதிகரிக்காமல் பார்த்துக் கொண்டனர்.

13 பந்துகளுக்கு முன்பே ஆட்டத்தை முடித்த டெல்லி

டெல்லி கேப்பிட்டல்ஸ் தலைவர் ரிஷப் பந்த்

பட மூலாதாரம்,BCCI/IPL

 
படக்குறிப்பு,

டெல்லி கேப்பிட்டல்ஸ் தலைவர் ரிஷப் பந்த்

புள்ளிப் பட்டியலில் முதலிடத்தில் இருந்த டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி, 135 ரன்கள் எடுத்தால் வெற்றி என களமிறங்கியது.

தொடக்க ஆட்டக்காரரான ப்ரித்வி ஷா 11 ரன்களில் வில்லியம்சன்னிடம் கேட்ச் கொடுத்த விக்கெட்டை பறிகொடுத்தார். ஷிகர் தவான் 42 ரன்களில் வீழ்ந்தாலும், ஸ்ரேயாஸ் ஐயர் (47 ரன்கள்) மற்றும் டெல்லி அணித் தலைவர் ரிஷப் பந்த் (35 ரன்கள்) குவித்து அணியை வெற்றி பெறச் செய்தனர்.

ஹைதராபாத் பந்துவீச்சாளர்களில் இடது கை யார்க்கர் நடராஜன் இல்லாத குறை இருந்தது. ஹைதராபாத்தால் தேவையான நேரத்தில் விக்கெட்டுகளை வீழ்த்த முடியாததன் விளைவாக டெல்லி அனாயாசமாக 17.5ஆவது பந்திலேயே, எட்டு விக்கெட் கையிருப்போடு 139 ரன்களை எடுத்து வெற்றிக்கனியைப் பறித்தது.

ஷிகர் தவான் முதலிடம்

ஆரஞ்ச் கேப் உடன் ஷிகர் தவான்

பட மூலாதாரம்,BCCI/IPL

 
படக்குறிப்பு,

ஆரஞ்ச் கேப் உடன் ஷிகர் தவான்

ஐபிஎல் 2021 சீசனில் அதிக ரன்கள் அடித்த பேட்ஸ்மென்கள் பட்டியலில் 422 ரன்களோடு முதலிடத்தில் இருக்கிறார் ஷிகர் தவான்.

டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி இந்த வெற்றியின் மூலம் மீண்டும் தன் முதலிடத்தை தக்க வைத்துக் கொண்டு தன் ப்ளே ஆஃப் வாய்ப்பை வலுப்படுத்தியுள்ளது. சன்ரைசர்ஸ் ஹைதராபாத் தொடர் தோல்விகளால் கடைசி இடத்தில் இருக்கிறது.

இன்று இரவு 7.30 மணிக்கு மும்பை இந்தியன்ஸ் (4ஆவது இடத்தில் இருக்கிறது) மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் (6ஆவது இடத்தில் இருக்கிறது) அணிகளுக்கு இடையில், அபுதாபி மைதானத்தில் பலப்பரிட்சை நடக்கவிருக்கிறது. இரு அணிகளுமே ப்ளே ஆஃப்க்கு முன்னேற இது முக்கியமான போட்டி என்பதால் ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு இருப்பது குறிப்பிடத்தக்கது.

https://www.bbc.com/tamil/sport-58660534

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஐபிஎல் 2021 - MI Vs KKR: ரஜினி 'பக்தரின்' அதிரடி; ரோஹித் படைத்த வரலாறு

9 மணி நேரங்களுக்கு முன்னர்
ரோஹித்

பட மூலாதாரம்,GETTY IMAGES

கொல்கத்தா அணியின் ராகுல் திரிபாதியும், வெங்கடேஷ் அய்யரும் ஆடிய அதிரடி ஆட்டத்தால் வியாழக்கிழமை நடந்த ஐபிஎல் லீக் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணிக்கு வெற்றிபெற எந்த வாய்ப்பும் இல்லாமல் போனது.

அண்மையில் பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணியை மிக எளிதாக வென்ற உற்சாகத்தில் இருந்த கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி, மும்பை அணியை 155 ரன்களுக்குள் முடக்கியது. 156 ரன்கள் என்ற இலக்கை வெறும் 15.1 ஓவரில் எட்டி வெற்றியையும் வசமாக்கியது.

கொல்கத்தா அணியின் ராகுல் திரிபாதி 42 பந்துகளில் 74 ரன்களைக் குவித்து இறுதி வரை களத்தில் நின்றார். அவர்கள் இருவரும் சேர்ந்து 52 பந்துகளில் 88 ரன்களை எடுத்தனர்.

இந்த வெற்றி மூலம் புள்ளிகள் பட்டியலில் கொல்கத்தா அணி நான்காவது இடத்துக்கு முன்னேறியது. மும்பை அணி ஆறாவது இடத்துக்கு சறுக்கியது.

ரோஹித் படைத்த வரலாறு

இந்தப் போட்டியில் ஒரு குறிப்பிட்ட அணிக்கு எதிராக ஐபிஎல் போட்டிகளில் ஆயிரம் ரன்களை எடுத்த முதல் வீரர் என்ற பெருமையைப் பெற்றார் மும்பை இந்தியன்ஸ் அணியின் தலைவர் ரோஹித் சர்மா.

விராட் கோலி டேவிட் வார்னர் போன்றோரெல்லாம் இந்தச் சாதனையில் இவருக்கு அடுத்தபடியாகத்தான் இருக்கிறார்கள். ஆனால் இது அவரது அணியின் வெற்றிக்கு உதவவில்லை.

சுனில் நரைனின் பந்துவீச்சில் விக்கெட்டைப் பறிகொடுக்கும் வழக்கமும் மாறிவிடவில்லை. ஐபிஎல் போட்டிகளில் ஏழாவது முறையாக சுனில் நரைன் ரோஹித் சர்மாவின் விக்கெட்டை எடுத்தார். இந்த முறை ரோஹித் சர்மாவின் ஸ்வீப் ஷாட் நேரந் தவறியதால் லாங் ஆனில் கேட்சாக மாறிவிட்டது.

முதலில் பேட் செய்த மும்பை இந்தியன்ஸ் அணியின் தொடக்கம் அதிரடியாகவும் அதே நேரத்தில் வலுவாகவும் இருந்தது. குயின்டன் டி காக்கும் ரோஹித் சர்மாவும் சேர்ந்து கொல்கத்தா அணியின் பந்து வீச்சாளர்களைப் பதற வைத்தார்கள்.

எல்லா பந்துகளையும் பவுண்டரிக்கு விரட்டும் முயற்சியில் ஈடுபட்டனர். ஃபெர்குசன், பிரசித் கிருஷ்ணா, ரஸ்ஸல் என முன்னணி பந்துவீச்சாளர்கள் அனைவரின் பந்துவீச்சையும் சிக்சர்களும், பவுண்டரிகளுமாகப் பறக்க விட்டார்கள்.

Twitter பதிவை கடந்து செல்ல, 1

Twitter பதிவின் முடிவு, 1

தொடக்க பவர் பிளே ஓவர்களில் விக்கெட்டைப் பறி கொடுக்காமல் 56 ரன்களை மும்பை அணி எடுத்திருந்தது. சுனில் நரேன் பந்துவீச்சைத் தொடங்கிய போது ஆட்டத்தின் போக்கே மாறிப் போனது. அவரது பந்தில் ரோஹித் சர்மா வெளியேறிவிட மும்பையின் ரன் குவிப்பு வேகமும் குறைந்து போனது.

பத்தாவது ஓவருக்கு மேல் மும்பை வீரர்கள் நத்தை வேகத்தில் ரன்களை எடுத்தார்கள் என்றுதான் சொல்ல வேண்டும். இறுதியாக பொலார்டின் கடைசி நேர அதிரடியால் மும்பை அணி 155 ரன்களை எடுத்தது.

அய்யர், திரிபாதியின் அதிரடி

மும்பையின் 156 என்ற வெற்றி இலக்கு கொல்கத்தா அணிக்கு எதுவுமில்லை என்பது போல தொடக்கத்தில் இருந்தே ஆட்டம் அமைந்திருந்தது. உலகின் முன்னணி பந்துவீச்சாளர்களான ட்ரென்ட் போல்ட்டும், பும்ராவும் ரன்களை வாரிக் கொடுக்க வேண்டியிருந்தது.

சுப்மன் கில், வெங்கடேஷ் அய்யர், அடுத்து வந்த ராகுல் திரிபாதி ஆகியோரின் அதிரடியால் மும்பை அணி நிலைகுலைந்து போய்விட்டது. மும்பை அணிக்கு எந்தவொரு தருணத்திலும் வெற்றிக்கான நம்பிக்கையை அவர்கள் தந்துவிடவில்லை.

ஆட்டத்தின் தொடக்கத்தில் இருந்து அதிரடி காட்டிய வெங்கடேஷ் அய்யர் ரஜினி பக்தர் என்று தன்னைக் கூறிக் கொள்பவர். படையப்பா திரைப்படத்தின் "என் வழி... தனிவழி..." என்பது தனக்குரிய வசனமும்கூட என்று கூறுபவர்.

ஐபிஎல்லில் களமிறங்கிய முதல் போட்டியிலேயே சிறப்பாக ஆடி 41 ரன்களை எடுத்து வெற்றிக்கு உதவிய அவர், இரண்டாவது போட்டியில் அரைச் சதம் அடித்து நம்பிக்கை அளித்திருக்கிறார். அவரை இன்னொரு யுவராஜ் சிங் என்று புகழ்ந்திருக்கிறார் முன்னாள் வீரரான பார்த்திவ் படேல்.

https://www.bbc.com/tamil/sport-58673939

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

RCB vs CSK: ப்ராவோ உடைத்த பெங்களூரு அரண், அனாயாசமாக பெங்களூரை பந்தாடிய சென்னை - பிரகாசமான ப்ளே ஆஃப் வாய்ப்பு

4 மணி நேரங்களுக்கு முன்னர்
விராட் கோலி

பட மூலாதாரம்,BCCI/IPL

 
படக்குறிப்பு,

விராட் கோலி

ஐபிஎல் 2021ஆம் ஆண்டுக்கான 35ஆவது போட்டி, நேற்று (செப் 24, வெள்ளிக்கிழமை) ஷார்ஜா மைதானத்தில் நடைபெற்றது. இதில் விராட் கோலியின் பெங்களூரு அணியும், மகேந்திர சிங் தோனியின் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் மோதின.

பெங்களூரு 156 ரன்கள் மட்டுமே குவித்தது. அதை சென்னை 11 பந்துகளுக்கு முன்பே அடித்து போட்டியை வென்றது. வழக்கம் போல தோனியின் பாணி இந்த போட்டியிலும் கை கொடுத்தது என இணையமே புகழ்ந்து தள்ளிக் கொண்டிருக்கிறது. ப்ராவோ பந்துவீச்சு பெங்களூருவின் ரன்ரேட்டுக்கு மிகப்பெரிய வேகத்தடையாக அமைந்தது, சென்னை அனாயாசமாக வெற்றி பெற வழிவகுத்தது.

கோலி - படிக்கல் அரண்

டாஸ் வென்ற சென்னை, பெங்களூரை பேட்டிங் செய்ய அழைத்தது. பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணியின் தொடக்க ஆட்டக்காரர்களான அவ்வணியின் தலைவர் விராட் கோலி மற்றும் தேவ்தத் படிக்கல் அருமையான ஆட்டத்தை வெளிப்படுத்தினர்.

13.2 ஓவர் வரை இருவரும் தங்கள் விக்கெட்டுகளை பறிகொடுக்காமல் 111 ரன்கள் வரை குவித்தனர். இருவருமே அரை சதம் விளாசியதும் பாராட்டுக்குரியது. பெங்களூருக்கு இந்த இரு பேட்ஸ்மென்களும் இரும்பு அரண் போல நின்று ரன்களைக் குவித்துக் கொண்டிருந்த போது, சென்னை விக்கெட்டை வீழ்த்த முடியாமல் திணறியது போலத் தெரிந்தது.

ஹேசல்வுட், ஜடேஜா, ப்ராவோ, ஷர்துல் தாகூர், தீபக் சாஹர் என சென்னையின் அனைத்து பந்து வீச்சாளர்களும் ஒரு சுற்று வந்துவிட்டனர். அப்போதும் பெங்களூரின் முதல் விக்கெட்டை வீழ்த்த முடியாமல் சிரமப்பட்டுக் கொண்டிருந்த போது, ப்ராவோவின் 13.2ஆவது பந்தில், விராட் கோலி அடித்த பந்து ஜடேஜாவிடம் தஞ்சமடைந்தது. பெங்களூரின் பேட்டிங் அரண் தகர்ந்தது.

பெங்களூரு ஒப்பனர்கள்

பட மூலாதாரம்,BCCI/IPL

 
படக்குறிப்பு,

பெங்களூரு ஒப்பனர்கள்

வலுவான பேட்டிங் லைன் அப்பைக் கொண்டிருக்கும் பெங்களூரு அணி, அடுத்தடுத்து சிறப்பாக அடித்து ஆடும் என்று எதிர்பார்த்துக் கொண்டிருந்த போது, ஏ பி டிவில்லியர்ஸ், தேவ் தத் படிக்கல், டிம் டேவிட், க்ளென் மேக்ஸ்வெல் என எல்லா முன்னணி பேட்ஸ்மென்களும் சீட்டு கட்டு போல சரிந்தது சோகத்திலும் சோகம். கோலி, படிக்கல் தவிர எந்த ஒரு பெங்களூரு பேட்ஸ்மென்னும் 15 ரன்களைக் கூட தொடவில்லை.

13 ஓவர் முடிவில் 111 ரன்களுக்கு விக்கெட் எதுவும் பறிகொடுக்காமல் ஆடி வந்த பெங்களூரு, அடுத்த 7 ஓவர்களில் ஆறு விக்கெட்டுகளைப் பரிகொடுத்து 45 ரன்களை மட்டுமே குவித்தது.

பெங்களூரின் பேட்டிங் அரணைத் தகர்த்த ப்ராவோ, 4 ஓவர்களுக்கு 24 ரன்களை விட்டுக் கொடுத்து, கோலி, மேக்ஸ்வெல் உட்பட 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

அவரைத் தொடர்ந்து 4 ஓவர்களை வீசிய ஷர்துல் தாகூர் 29 ரன்களைக் கொடுத்து ஏ பி டிவில்லியர்ஸ் மற்றும் தேவ்தத் படிக்கல்லின் விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

14ஆவது ஓவர் முதல் ஆட்டம் சென்னையின் கட்டுப்பாட்டில் வந்துவிட்டது. அதன் பிறகு ஆட்டம் நிறைவடையும் வரை அவர்களே ஆதிக்கம் செலுத்தி வென்றனர்.

பெங்களூரின் ஆட்டத்துக்குப் பிறகு, ஷார்ஜா போன்ற மைதானத்தில் சென்னை போன்ற அணிக்கு எதிராக 156 ரன்கள் மட்டுமே குவித்திருப்பது போதாது என கூறப்பட்டது.

எளிய இலக்கு

ஃபாஃப் டூப்ளசி

பட மூலாதாரம்,BCCI/IPL

 
படக்குறிப்பு,

ஃபாஃப் டூப்ளசி

157 ரன்கள் அடித்தால் வெற்றி என்கிற இலக்கோடு களமிறங்கிய சென்னை சூப்பர் கிங்ஸின் ரிதுராஜ் கெய்க்வாட் மற்றும் ஃபாப் டூப்ளசி ஜோடி சிறப்பாகத் தொடங்கினர்.

8.2ஆவது ஓவரில் 38 ரன்களோடு ரிதுராஜும், 9.1ஆவது ஓவரில் 31 ரன்களோடு ஃபாஃப் டூப்ளசியும் தங்கள் விக்கெட்டைப் பறிகொடுத்தனர். இருப்பினும் சென்னையின் பேட்டிங் லைன் அப் வலுவானது என்பதால், அடுத்தடுத்து வந்த மொயின் அலி, அம்பதி ராயுடு ஆகியோரும் அடித்து விளையாடினர்.

கடைசியில் சுரேஷ் ரெய்னா, தோனி இணை நிதானமாக ரன்களைக் குவித்து வெற்றி பெற்றனர். இந்த ஜோடி இணைந்து ஐபிஎல் போட்டிகளை நிறைவு செய்வது இது நான்காவது முறை.

போட்டி நிறைவடைந்த பிறகு எங்களால் 175 ரன்களைக் குவித்திருக்க முடியும், அப்படி ஒரு இலக்கை வைத்திருந்தால் வெற்றி பெற்றிருக்கலாம் என்று கூறினார் விராட் கோலி.

ஏப்ரல் மாதம் ஐபிஎல் 2021 சீசன் தொடங்கிய போது பெங்களுரு ராயல் சேலஞ்சர்ஸ் அணி, தொடர்ந்து நான்கு போட்டிகளில் மும்பை இந்தியன்ஸ், சன்ரைசர்ஸ் ஹைதராபாத், கொல்கத்தா நைட் ரைடர்ஸ், ராஜஸ்தான் ராயல்ஸ் போன்ற அணிகளை வெற்றி கொண்டனர்.

மகேந்திர சிங் தோனி

பட மூலாதாரம்,BCCI/IPL

 
படக்குறிப்பு,

மகேந்திர சிங் தோனி

2021 ஏப்ரல் 25 அன்று நடந்த போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் உடனான முதல் போட்டியில், தோல்வி கண்டது பெங்களூரு. அப்போது முதல் அவ்வணியின் சறுக்கல் தொடர்ந்து வருகிறது. அதன் பிறகு டெல்லி கேப்பிட்டல்ஸ் உடனான போட்டியில் மட்டுமே வென்றது பெங்களூரு.

இதுவரை விளையாடிய 9 போட்டிகளில் 7-ல் வென்று 14 புள்ளிகளோடு சென்னை சூப்பர் கிங்ஸ் முதலிடத்திலும், பெங்களூரு அணி 9 போட்டியில் 5-ல் வென்று மூன்றாவது இடத்திலும் இருக்கின்றன.

இன்று (செப் 25, சனிக்கிழமை) மாலை 3.30 மணிக்கு டெல்லி கேப்பிட்டல்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும், இரவு 7.30 மணிக்கு சன்ரைசர்ஸ் ஹைதராபாத் மற்று பஞ்சாப் கிங்ஸ் அணிகளும் மோதவிருக்கின்றன.

https://www.bbc.com/tamil/sport-58688343

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

DC vs RR: தனியொருவனாக போராடிய சஞ்சு சாம்சன் - ஒற்றை இலக்கத்தில் வெளியேறிய ராஜஸ்தான் பேட்ஸ்மென்கள்

3 மணி நேரங்களுக்கு முன்னர்
டெல்லி ஒப்பனர்கள்

பட மூலாதாரம்,BCCI/IPL

 
படக்குறிப்பு,

டெல்லி ஒப்பனர்கள்

ஐபிஎல் 2021 சீசனின் 36ஆவது போட்டி நேற்று (செப்டம்பர் 25, சனிக்கிழமை) மாலை 3.30 மணிக்கு அபுதாபி மைதானத்தில் நடைபெற்றது. டெல்லி கேப்பிட்டல்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் மோதின.

155 ரன்கள் அடித்தால் வெற்றி என இலக்கு வைத்த டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி, ராஜஸ்தான் ராயல்ஸை 121 ரன்களில் சுருட்டியது.

நல்ல தொடக்கம்

டாஸ் வென்ற ராஜஸ்தான் ராயல்ஸ் அணி முதலில் டெல்லியை பேட் செய்ய அழைத்தது. 3.1ஆவது பந்தில் வெறும் 8 ரன்களோடு ஷிகர் தவானை வீழ்த்தியது, 4.1 ஓவரில் 10 ரன்களில் ப்ரித்வி ஷாவை வீழ்த்தி, சிறப்பாகத் தொடங்கியது ராஜஸ்தான்.

ஆனால் அடுத்தடுத்து வந்த ஷ்ரேயாஸ் ஐயர், ரிஷப் பந்த், ஷிம்ரான் ஹெட்மேயர் டெல்லியை கெளரவமான ஸ்கோரை நோக்கி நகர்த்தினர். இதில் ஸ்ரேயாஸ் 32 பந்துகளில் 43 ரன்களைக் குவித்தது குறிப்பிடத்தக்கது.

டெல்லி அணியிலேயே ஷ்ரேயாஸ் - ரிஷப் ஜோடி தான் அதிகபட்சமாக 45 பந்துகளில் 62 ரன்களைக் குவித்தது. அதன் பிறகு அப்படியொரு நல்ல இணை உருவாகவிடாமல் ராஜஸ்தான் பந்துவீச்சாளர்கள் பார்த்துக் கொண்டனர்.

டெல்லி அணியினர்

பட மூலாதாரம்,BCCI/IPL

 
படக்குறிப்பு,

டெல்லி அணியினர்

ராஜஸ்தானின் முஸ்தஃபிசூர் ரஹ்மான் 4 ஓவர்களில் 22 ரன்களைக் கொடுத்து ரிஷப் பந்த் உட்பட 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார். சேதன் சகாரியா 4 ஒவர்களில் 33 ரன்களைக் கொடுத்து ப்ரித்வி ஷா உட்பட 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார். ராகுல் தீவாட்டியா 3 ஓவர்களுக்கு 17 ரன்களை கொடுத்து அதிரடியாக ஆடிக் கொண்டிருந்த ஷ்ரேயாஸின் விக்கெட்டை வீழ்த்தி டெல்லியின் ரன் ரேட்டை மட்டுப்படுத்தினார்.

சில தினங்களுக்கு முன் பஞ்சாபுக்கு எதிராக கடைசி ஓவரில் இரு விக்கெட்டுகளை வீழ்த்தி அணியை வெற்றி பெறச் செய்த கார்த்திக் தியாகி, இந்த போட்டியில் 4 ஓவர்களில் 40 ரன்களைக் கொடுத்து ஷிகர் தவானின் விக்கெட்டை மட்டுமே வீழ்த்தினார்.

20 ஒவர் முடிவில் 154 ரன்களுக்கு 6 விக்கெட்டை இழந்திருந்தது டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி. 155 அடித்தால் வெற்றி என களமிறங்கியது ராஜஸ்தான் ராயல்ஸ்.

ஒற்றை இலக்கத்தில் வீழ்ந்த பேட்ஸ்மேன்கள்

சஞ்சு சாம்சன்

பட மூலாதாரம்,BCCI/IPL

 
படக்குறிப்பு,

சஞ்சு சாம்சன்

லியாம் லிவிங்ஸ்டன், யஷஸ்வி ஜெய்ஸ்வால் என ராஜஸ்தானின் இரு தொடக்க வீரர்களும் முறையே 1 மற்றும் 5 ரன்களில் முதல் இரு ஓவர்களில் வீழ்ந்தனர். தத்தளித்துக் கொண்டிருந்த அணியைக் காப்பாற்ற அவ்வணியின் தலைவர் சஞ்சு சாம்சன் களமிறங்கினார்.

டெல்லி அணியில் முதல் 10 ஓவர்களில் அமைந்த ஷ்ரேயாஸ் - ரிஷப் போன்ற ஒரு வெற்றிகரமான இணையை, ராஜஸ்தான் பேட்ஸ்மென்களால் அமைக்க முடியவில்லை. 11.5ஆவது ஓவருக்குப் பிறகு தான் ராகுல் தீவாட்டியா - சஞ்சு சாம்சன் ஜோடி 33 பந்துகளுக்கு 44 ரன்களைக் குவித்தது.

ஆட்டத்தின் இரண்டாவது ஓவரில் டெல்லி அணியின் பந்துவீச்சாளர்கள் ஆதிக்கம் செலுத்தத் தொடங்கினர். கடைசி ராஜஸ்தான் பேட்ஸ்மென்கள் மீதான அவர்களின் பிடி இறுகிக் கொண்டே போனதால், வெற்றி இலக்கை நோக்கி ரன்களைக் குவிக்க முடியாமல் திணறினர்.

ராஜஸ்தான் அணியில் சஞ்சு சாம்சன் (53 பந்துகளுக்கு 70 ரன்கள்) மற்றும் மஹிபால் லாம்ரோர் (24 பந்துகளுக்கு 19 ரன்கள்) தவிர வேறு எந்த பேட்ஸ்மெனும் 10 ரன்களைத் தாண்டவில்லை. ராஜஸ்தான் பேட்டிங் லைன் அப் அத்தனை பலவீனமாக இருந்தது.

சஞ்சு சாம்சன் & டேவிட் மில்லர்

பட மூலாதாரம்,BCCI/IPL

 
படக்குறிப்பு,

சஞ்சு சாம்சன் & டேவிட் மில்லர்

இதில் மற்றொரு சுவாரஸ்ய செய்தி என்னவென்றால், டெல்லி அணி சார்பில் பந்து வீசியவர்கள் அனைவருமே விக்கெட்டை வீழ்த்தியுள்ளனர். அன்ரிக் நார்ட்ஜ் 4 ஓவர்களில் 18 ரன்களைக் கொடுத்து 2 விக்கெட்டுகளையும், அவேஸ் கான் 4 ஓவர்களுக்கு 29 ரன்களைக் கொடுத்து 1 விக்கெட்டையும், அஸ்வின் 4 ஓவருக்கு 20 ரன்களை கொடுத்து 1 விக்கெட்டையும், ககிசோ ரபாடா 4 ஓவருக்கு 26 ரன்களை கொடுத்து 1 விக்கெட்டையும், அக்ஸர் படேல் 4 ஓவருக்கு 27 ரன்களை கொடுத்து 1 விக்கெட்டையும் வீழ்த்தினர்.

டெல்லி பந்துவீச்சாளர்களிலேயே அதிகபட்சமாக 29 ரன்கள் கொடுத்தது அவேஸ் கான் தான் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த வெற்றியால் டெல்லி 10 போட்டிகளில் 8-ல் வென்று முதலிடத்தை தக்கவைத்துக் கொண்டுள்ளது. ராஜஸ்தான் அணி 9 போட்டியில் 4-ல் வென்று 7ஆவது இடத்தில் உள்ளது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

PBKS vs SRH: பஞ்சாபை இரக்கமின்றி பந்தாடிய ஜேசன் ஹோல்டர் - இருப்பினும் தோல்வி கண்ட ஹைதராபாத்

ஒரு மணி நேரத்துக்கு முன்னர்
பஞ்சாப் ஓப்பனர்கள்

பட மூலாதாரம்,BCCI/IPL

 
படக்குறிப்பு,

பஞ்சாப் ஓப்பனர்கள்

ஐபிஎல் 2021 சீசனுக்கான 37ஆவது போட்டி நேற்று (செப் 25, சனிக்கிழமை) இரவு 7.30 மணிக்கு ஷார்ஜா மைதானத்தில் நடைபெற்றது. இதில் பஞ்சாப் கிங்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகள் மோதின.

இப்போட்டி சான்ரைசர்ஸ் ஹைதராபாத் மற்றும் பஞ்சாப் கிங்ஸுக்கு எதிரான போட்டி என்பதை விட ஜேசன் ஹோல்டர் மற்றும் பஞ்சாபுக்கு எதிரான போட்டி எனலாம். அந்த அளவுக்கு பந்துவீச்சிலும், பேட்டிங்கிலும் பிரமாதப்படுத்தினார் ஹோல்டர். இருப்பினும் ஹைதராபாத் அணியால் போட்டியை வெல்ல முடியவில்லை என்பது தான் வருத்தமான செய்தி.

பஞ்சாப் பேட்டிங் - சரிந்த விக்கெட்டுகள்

டாஸ் வென்ற ஹைதராபாத் அணி, முதலில் பந்து வீச தீர்மானித்தது. கே எல் ராகுல் மற்றும் மயங்க் அகர்வால் என இரு முக்கிய பேட்ஸ்மென்களையும் தன் 4ஆவது ஓவரில் வீழித்தி பெவிலியன் அனுப்பினார் ஜேசன் ஹோல்டர்.

அடுத்து வந்த க்ரிஸ் கெயிலை ரஷீத் கானும், கொஞ்சம் பஞ்சாப் அணியின் விக்கெட் வீழ்ச்சியைத் தடுத்துக் கொண்டிருந்த ஏய்டன் மக்ரமை அப்துல் சமத்தும் வீழ்த்தினர்.

பஞ்சாப் அணியின் மிடில் ஆர்டர் பேட்ஸ்மென்களான நிகோலஸ் பூரன், தீபக் ஹூடா ஆகியோரையும் ஹைதராபாத் பந்துவீச்சாளர்கள் நிலை பெறவிடாமல் வீழ்த்தினர். 20 ஓவர் முடிவில் 7 விக்கெட் இழப்புக்கு 125 ரன்களை மட்டுமே குவித்திருந்தது பஞ்சாப்.

ஹைதராபாத்தின் பந்துவீச்சாளர்களில் ஜேசன் ஹோல்டர் 4 ஓவர்களுக்கு 19 ரன்களை மட்டும் கொடுத்து கே எல் ராகுல், மயங்க் அகர்வால், தீபக் ஹூடா என 3 முக்கிய விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

சந்தீப் ஷர்மா, புவனேஷ்வர் குமார், ரஷீத் கான், அப்துல் சமத் ஆகியோர் தலா ஒரு விக்கெட்டை வீழ்த்தினர்.

சொதப்பிய பேட்ஸ்மென்கள் - சிக்ஸர் மழை பொழிந்த ஜேசன்

கேன் வில்லியம்சன்

பட மூலாதாரம்,BCCI/IPL

 
படக்குறிப்பு,

கேன் வில்லியம்சன்

126 ரன்களைக் குவித்தால் வெற்றி என்கிற எளிய இலக்கோடு களமிறங்கிய ஹைதராபாத்தின் டாப் ஆர்டர் பேட்ஸ்மென்களான டேவிட் வார்னர் (2 ரன்கள்), கேன் வில்லியம்சன் (1 ரன்), ஆகியோர் சொற்ப ரன்களில் வீழ்ந்தனர்.

கடந்த முறை டெல்லிக்கு எதிரான போட்டியிலும் டேவிட் வார்னர் வெகு சொற்ப ரன்களில் விக்கெட்டை இழந்தார் என்பது நினைவுகூரத்தக்கது. விரித்திமான் சாஹா மட்டுமே 37 பந்துக்கு 31 ரன்களை அடித்து ஹைதராபாத் அணியை நிலை பெறச் செய்தார்.

மணீஷ் பாண்டே (13 ரன்கள்) , கேதர் ஜாதவ் (12 ரன்கள்), அப்துல் சமத் (1 ரன்) ஆகிய மிடில் ஆர்டர் பேட்ஸ்மென்களும் நிலைபெற்று ரன் குவிப்பில் இறங்கவில்லை.

ஜேசன் ஹோல்டர்

பட மூலாதாரம்,BCCI/IPL

 
படக்குறிப்பு,

ஜேசன் ஹோல்டர்

14ஆவது ஓவரில் களமிறங்கிய ஜேசன் ஹோல்டர் தான் ஹைதராபாத்தின் ரன் ரேட்டை அதிகரிக்கத் தொடங்கினார். 29 பந்துகளில் 47 ரன்களைக் குவித்தார். இதில் 5 சிக்ஸர்கள் அடக்கம். கடைசி வரை தன் விக்கெட்டையும் பறிகொடுக்காமல் விளையாடி ஹைதராபாத்தை ஒரு கெளரவமான ஸ்கோருக்கு நகர்த்தினார் ஜேசன் ஹோல்டர்.

ஹைதராபாத்தின் பேட்ஸ்மென்கள் தங்கள் விக்கெட்டை பறிகொடுத்ததோடு மட்டுமல்லாமல் நிறைய பந்துகளையும் வீணடித்தனர். இந்த போட்டியில் ஜேசன் ஹோல்டர், கேதர் ஜாதவ் தவிர ஹைதராபாத் அணியில் யாருடைய ஸ்ட்ரைக் ரேட்டும் 85 சதவீதத்துக்கு மேல் இல்லை.

20 ஓவர் முடிவில் 7 விக்கெட் இழப்புக்கு ஹைதராபாத்தால் 120 ரன்களை மட்டுமே குவிக்க முடிந்தது.

மொஹம்மத் ஷமி

பட மூலாதாரம்,BCCI/IPL

 
படக்குறிப்பு,

மொஹம்மத் ஷமி

பஞ்சாபின் அனுபவமிக்க பந்துவீச்சாளரான மொஹம்மத் ஷமி, டேவிட் வார்னர் மற்றும் கேன் வில்லியம்சனின் விக்கெட்டுகளை வீழ்த்தி டாப் ஆர்டர் பேட்ஸ்மென்களை பெவிலியன் அனுப்பினார்.

மணீஷ் பாண்டே, கேதர் ஜதவ், அப்துல் சமத் என ஹைதராபாத்தின் மிடில் ஆர்டர் பேட்ஸ்மென்களை பிட்சிலிருந்து வெளியேற்றினார் ரவி பிஷ்னோய்.

ராஜஸ்தான் உடனான போட்டியில் 5 விக்கேடுகளை வீழ்த்திய அர்ஷ்தீப், இப்போட்டியில் விரித்திமான் சாஹாவின் விக்கெட்டை வீழ்த்தி பஞ்சாபின் வெற்றி வாய்ப்பை அதிகரித்தார்.

125 என்கிற குறைந்த ஸ்கோரை மட்டுமே அடித்திருந்தாலும், அதை திறம்பட டிஃபெண்ட் செய்ததில் பஞ்சாபின் இந்த மூன்று பந்துவீச்சாளர்களின் பங்களிப்பு குறிப்பிடத்தக்கது.

இந்த வெற்றி மூலம் பஞ்சாப் அணி புள்ளிகள் பட்டியலில் 5ஆவது இடத்தை பிடித்திருக்கிறது. ஹைதராபாத் அணி கடைசி இடத்திலேயே தொடர்கிறது.

https://www.bbc.com/tamil/sport-58695821

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஹர்ஷல் படேல் ஹெட்ரிக் ; 56 ஓட்டங்களினால் மும்பையை வீழ்த்திய பெங்களூரு

ஹர்ஷல் படேலின் ஹெட்ரிக் சாதனையுடன் மும்பை அணிக்கு எதிரான போட்டியில் 54 ஓட்டங்களினால் பெங்களூரு வெற்றி பெற்றுள்ளது.

_AI_1163.JPG?width=2000&height=1333

2021 ஐ.பி.எல். தொடரில் நேற்றிரவு டுபாயில் நடைபெற்ற 39 ஆவது லீக் ஆட்டத்தில், விராட் கோஹ்லி தலைமையிலான ரோயல் செலஞ்சர்ஸ் பெங்களூருவும், ரோகித் சர்மா தலைமையிலான மும்பை இந்தியன்ஸும் மோதின.

போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற மும்பை அணி முதலில் துடுப்பெடுத்தாடும் வாய்ப்பினை பெங்களூருவுக்கு வழங்கியது.

முதலில் துடுப்பெடுத்தாட ஆரம்பித்த பெங்களூரு, இரண்டாவது ஓவரின் நான்காவது பந்து வீச்சிலேயே தனது முதல் விக்கெட்டை பறிகொடுத்தது

அதன்படி தேவ்தூத் படிக்கல் எதுவித ஓட்டமின்றி பும்ராவின் பந்து வீச்சில் விக்கெட் காப்பாளரான டிகொக்கிடம் பிடிகொடுத்து வெளியேறினார்.

இரண்டாவது விக்கெட்டுக்காக கைகோர்த்த விராட் கோஹ்லி - ஸ்ரீகர் பாரத் ஆகியோரின் இணைப்பாட்டம் அணியின் ஓட்ட எண்ணிக்கையை வேகமாக அதிகரிக்கச் செய்தது.

RON_4300.jpg?width=2000&height=1333

அதனால் 8 ஓவர்களின் நிறைவில் ஒரு விக்கெட் இழப்புக்கு 63 ஓட்டங்களை குவித்தது பெங்களூரு.

பின்னர் 8.5 ஆவது ஒவரில் ஸ்ரீகர் பாரத் 32 (24) ஒட்டங்களுடன், ராகுல் சஹாரின் பந்து வீச்சில் சூர்யகுமார் யாதவிடம் பிடிகொடுத்துச் சென்றார்.

தொடர்ந்து களமிறங்கிய மெக்ஸ்வெல்லுடன் கைகோர்த்த விராட் கோஹ்லி 14.1 ஆவது ஓவரில் அரைசதம் கடந்தார். 

எனினும் அவர 15.5 ஆவது ஓவரில் மொததமாக 42 பந்துகளை எதிர்கொண்டு 3 சிக்ஸர்கள், 3 பவுண்டரிகள் அடங்கலாக 51 ஓட்டங்களுடன் ஆட்டமிழந்தார்.

ஒரு கட்டத்தில் பெங்களூரு அணி 16 ஓவர்களுக்கு 3 விக்கெட்டுகளை இழந்து, 126 ஓட்டங்களை பெற்றிருந்தது.

எனினும் 17 மற்றும் 18 ஆவது ஓவர்களை மெக்ஸ்வெல் மற்றும் டிவில்லியர்ஸ் ஜோடியினர் எதிர்கொண்டபோது அதிரடியான அனல் பறந்த ஆட்டங்களை வெளிப்படுத்தினர்.

அந்த இரு ஓவர்களில் மாத்திரம் 30 ஓட்டங்கள் பெறப்பட, அணியின் ஓட்ட எண்ணிக்கையும் 18 ஓவர்கள் நிறைவில் 156 ஆக உயர்ந்தது.

இந் நிலையில் 19 ஆவது ஓவருக்காக பந்துப் பரிமாற்றம் மேற்கொண்ட பும்ரா மெக்ஸ்வெல்லையும், டிவில்லியர்ஸையும் அடுத்தடுத்து ஆட்டமிழக்கச் செய்து வெளியேற்றினார்.

மெக்ஸ்வெல் 37 பந்துகளில் 3 சிக்ஸர்கள், 6 பவுண்டரிகள் அடங்கலாக 56 ஓட்டங்களுடனும், டிவில்லியர்ஸ் 6 பந்துகளில் ஒரு சிக்ஸர், ஒரு பவுண்டரி அடங்கலாக 11 ஓட்டங்களை பெற்று ஆட்டமிந்தனர்.

இதனால் பெங்களூரு அணியின் வேகம் குறைவடைந்தது.

இறுதியாக 20 ஓவர்கள் நிறைவில் 6 விக்கெட் இழப்புக்கு 165 ஓட்டங்களை பெற்றது பெங்களூரு.

166 ஓட்டம் என்ற வெற்றியிலக்கை நோக்கி பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய மும்பை அணியின் ஆரம்ப வீரர்களான ரோகித் சர்மாவும், டிகொக்கும் அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தினர்.

இதனால் பவர் - பிளேயின் முதல் ஆறு ஓவர்கள் நிறைவில் விக்கெட் இழப்பின்றி 56 ஓட்டங்களை பெற்றது மும்பை.

_AI_0822.JPG?width=2000&height=1333

அதன் பின்னர் 6.4 ஆவது ஓவரில் டிகொக் 24 ஓட்டங்களில் ஆட்டமிழக்க, 79.2 ஆவது ஒவரில் ரோகித் சர்மா 43 ஓட்டங்களுடன் ஆட்டமிழந்தார்.

இவர்களின் வெளியேற்றங்களை அடுத்து மும்பை அணியின் விக்கெட்டுகள் அடுத்தடுத்து தகர்த்து எறியப்பட்டன.

குறிப்பாக 17 ஆவது ஓவருக்காக பந்துப் பரிமாற்றம் மேற்கொண்ட ஹர்ஷல் படேல் ஹர்த்திக் பாண்டியா, பொல்லார்ட் மற்றும் ராகுல் சஹார் ஆகியோரை தொடர்ச்சியாக ஆட்டமிழக்கச் செய்து ஹெட்ரிக் சாதனை படைத்தார்.

Singh67_1546.jpg?width=2000&height=1333

இறுதியாக மும்பை அணி 18.1 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 111 ஓட்டங்களை மாத்திரம் பெற்று, 56 ஓட்டங்களினால் தோல்வியை சந்தித்தது.

பந்து வீச்சில் பெங்களூரு அணி சார்பில் ஹர்சல் படேல் 4 விக்கெட்டுகளையும், சாஹல் 3 விக்கெட்டுகளையும், மெக்ஸ்வெல் 2 விக்கெட்டுகளையும், மொஹமட் சிராஜ் ஒரு விக்கெட்டினையும் வீழ்த்தினர்.

இதேவ‍ேளை அபுதாபயில் நேற்று மாலை இடம்பெற்ற 38 ஆவது லீக் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் இறுதிப் பந்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியை வீழ்த்தியது.

முதலில் துடுப்பெடுத்தாடிய கொல்கத்தா 20 ஓவர்கள் நிறைவுக்கு 171 ஓட்டங்களை குவித்தது. பின்னர் பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய சென்னை அணி 20 ஓவர்கள் நிறைவில் 8 விக்கெட்டுகளை இழந்து 172 ஓட்டங்களை பெற்று வெற்றிபெற்றது.

19 ஆவது ஓவரை எதிர்கொண்ட ரவீந்திர ஜடேஜாவின் வெறியாட்டம் சென்னையின் வெற்றிக்கு முக்கிய காரணமாக அமைந்தது. அந்த ஓவரில் அவர் 2 சிக்ஸர்களையும், 2 பவுண்டரிகளையும் அடுத்தடுத்து விளாசித் தள்ளினார்.

SNDY4486.JPG?width=2000&height=1333

இது இவ்வாறிருக்க இன்றிரவு டுபாயில் நடைபெறவுள்ள 40 ஆவது லீக் ஆட்டத்தில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியும், ராஜஸ்தான் ரோயல்ஸ் அணியும் மோதவுள்ளன.

Photo Credit ; IPL

 

https://www.virakesari.lk/article/114115

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

CSK vs KKR ஐபிஎல் 2021 கிரிக்கெட்: சென்னை சூப்பர் கிங்ஸ் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியை வீழ்த்தியது

27 செப்டெம்பர் 2021, 01:47 GMT
CSK vs KKR ஐபிஎல் 2021 கிரிக்கெட்

பட மூலாதாரம்,BCCI/IPL

அபுதாபியில் நேற்று நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு எதிராக வெற்றி பெற்றதன் மூலம் ஐபிஎல் 2021 புள்ளிப் பட்டியலில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி மீண்டும் முதல் இடத்திற்கு சென்றுள்ளது.

கடைசி ஓவரின் கடைசி பந்து வரை பரபரப்பையும் எதிர்பார்ப்பையும் உண்டாக்கிய சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ஆட்டத்தில் மட்டுமல்லாது அதன் ரசிகர்கள் மனதையும் வென்றுள்ளது.

நேற்றைய ஆட்டத்தில் டாஸ் வென்ற கொல்கத்தா அணி முதலில் பேட் செய்யத் தீர்மானித்தது.

கொல்கத்தா அணிக்காக அதிகபட்சமாக ராகுல் த்ரிபாதி 45 ரன்களும், நிதிஷ் ரானா ஆட்டமிழக்காமல் 37 ரன்களும் தினேஷ் கார்த்திக் 26 ரன்களும் எடுத்தனர்.

பந்துவீச்சாளர்களை பொருத்தவரை சென்னை அணியின் ஜோஷ் ஹேசல்வுட் மற்றும் ஷர்துல் தாக்கூர் ஆகியோர் தலா இரண்டு விக்கெட்டுகளைக் கைப்பற்றினர்.

நான்கு ஓவர்கள் வீசிய தாக்கூர் வெறும் 20 ரன்கள் மட்டுமே கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு விட்டுக் கொடுத்தார். அதில் ஒரு ஓவர் மெய்டன் ஓவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

172 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய சென்னை அணிக்கு தொடக்கம் நன்றாகவே இருந்தது.

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் தொடக்க வீரர்கள் ரிதுராஜ் கெய்க்வாட் 28 பந்துகளில் 40 ரன்களும், பஃப் டூப்ளெசீஸ் 30 பந்துகளில் 43 ரன்களும் எடுத்தனர்.

கொல்கத்தா அணியின் தினேஷ் கார்த்திக்

பட மூலாதாரம்,BCCI / IPL

 
படக்குறிப்பு,

கொல்கத்தா அணியின் தினேஷ் கார்த்திக்

அடுத்து களமிறங்கிய மொயீன் அலி 28 பந்துகளில் 32 ரன்கள் எடுத்தார். ஆனால் சென்னை அணியின் மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் பெரிதாக ஜொலிக்கவில்லை.

16-வது ஓவரில் 3 விக்கெட்டுகளை மட்டுமே இழந்திருந்த சென்னை சூப்பர் கிங்ஸ் அணி அதன்பின்பு மளமளவென விக்கெட்டுகளை இழக்கத் தொடங்கியது.

மகேந்திர சிங் தோனி 4 பந்துகளில் ஒரு ரன் மட்டுமே எடுத்து வருண் சக்ரவர்த்தியின் பந்தில் பவுல்டு-அவுட் ஆனார்.

ஆட்டத்தின் இறுதி கட்டம் நெருங்க நெருங்க பரபரப்பும் அதிகரித்தது .18-வது ஓவரில் சுரேஷ் ரெய்னா மற்றும் எம்.எஸ். தோனி ஆகிய இருவருமே ஆட்டமிழந்தனர். 15 பந்துகளில் 30 ரன்கள் எடுக்க வேண்டிய கட்டாயத்திற்கு சென்னை அணி தள்ளப்பட்டது.

கடைசி ஓவரின் போது சென்னை அணியின் வெற்றிக்கு நான்கு ரன்கள் தேவைப்பட்டன. ஆனால் அந்த ஓவரின் முதல் பந்திலேயே சாம் கரன் ஆட்டமிழந்தார்.

இரண்டு பந்துகளில் ஒரு ரன் மட்டும் எடுத்தால் வெற்றி என்ற நிலையில் இருந்த பொழுது கடைசி ஓவரின் 5வது பந்தில் 22 ரன்கள் எடுத்திருந்த ரவீந்திர ஜடேஜா வெளியேற்றப்பட்டார்.

சென்னை வெல்லுமா, சூப்பர் ஓவர் தேவை வருமா என்ற எதிர்பார்ப்பு எழுந்தது. ஆனால், சூப்பர் ஓவர் வீச வேண்டிய தேவை ஏற்படவில்லை.

ரவீந்திர ஜடேஜா ஆட்டமிழந்த பின்பு அவருக்கு அடுத்ததாக களமிறங்கிய தீபக் சஹார், சுனில் நரைன் பந்து வீச்சில் கடைசி ஓவரின் கடைசி பந்தில் அந்த ஒற்றை ரன்னை எடுத்து சென்னை அணியின் வெற்றிக்கு வழிவகுத்தார்.

புள்ளிப்பட்டியலில் சென்னை முதலிடம்

Twitter பதிவை கடந்து செல்ல, 1

Twitter பதிவின் முடிவு, 1

இந்த சீசனில் இதுவரை தாம் விளையாடியுள்ள 10 ஐபிஎல் போட்டிகளில் 8 போட்டிகளில் வென்ற சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 16 புள்ளிகளுடன் முதலிடத்தில் உள்ளது.

இதே போல பத்துக்கு எட்டு போட்டிகளில் வென்ற டெல்லி கேப்பிடல்ஸ் அணியும் 16 புள்ளிகளை பெற்றிருந்தாலும், நெட் ரன் ரேட் அடிப்படையில் சென்னை அணியை விட பின்தங்கி இருப்பதால் தற்போது அந்த அணி இரண்டாம் இடத்தில் உள்ளது.

இதுவரை விளையாடியுள்ள ஒன்பது போட்டிகளில் ஒரு போட்டியில் மட்டுமே வென்றுள்ள சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி கடைசி இடத்திலும், பத்தில் நான்கு போட்டிகளில் மட்டுமே வென்றது மும்பை இந்தியன்ஸ் அணி கடைசி இடத்திற்கு முந்தைய இடம் அதாவது 7-வது இடத்திலும் உள்ளன.

https://www.bbc.com/tamil/sport-58702541

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

SRH vs RR ஐபிஎல் 2021 கிரிக்கெட்: ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை வென்ற சன்ரைசர்ஸ் ஹைதராபாத்

3 மணி நேரங்களுக்கு முன்னர்
ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்காக 82 ரன்கள் எடுத்திருந்தார் கேப்டன் சஞ்சு சாம்சன்.

பட மூலாதாரம்,BCCI / IPL

 
படக்குறிப்பு,

ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்காக 82 ரன்கள் எடுத்திருந்தார் கேப்டன் சஞ்சு சாம்சன்.

சன்ரைசர்ஸ் ஹைதராபாத் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகளுக்கு இடையே நேற்று துபாயில் நடந்த ஐபிஎல் போட்டியில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி ஏழு விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

முன்னதாக டாஸ் வென்ற ராஜஸ்தான் அணி முதலில் பேட் செய்யத் தீர்மானித்தது. டாஸ் வென்ற இந்த அணியால் ஆட்டத்தை வெல்ல முடியவில்லை.

ராஜஸ்தான் ராயல்ஸ் அணி பேட்டிங் செய்தபோது தொடக்க வீரர் எவின் லெவிஸ் 4 பந்துகளில் 6 ரன்கள் மட்டுமே எடுத்து ஆட்டமிழந்தார். இன்னொரு தொடக்க ஆட்டக்காரரான யாஷஸ்வி ஜெய்ஸ்வல் 23 பந்துகளில் 36 ரன்கள் எடுத்தார்.

ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் கேப்டன் சஞ்சு சாம்சன் 57 பந்துகளில் ஏழு பவுண்டரிகள் மூன்று சிக்சர்களுடன் 82 ரன்கள் எடுத்து அசத்தினார்.

ஆனால் இவரது இந்த ஆட்டம் சிறப்பாக இருந்தும் ராஜஸ்தான் அணியால் பெரும் அளவில் ஸ்கோர் எடுக்க முடியவில்லை. அதற்குக் காரணம் இவரைத் தவிர பிற ஆட்டக்காரர்கள் யாரும் அதிரடியாக ஆடவில்லை.

கடைசிவரை நிலைத்து நின்று ஆடிய சஞ்சு சாம்சன் ஆட்டம் முடிய 4 பந்துகளில் இருந்த நிலையில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத்தின் சித்தார்த் கௌலின் பந்துவீச்சில் ஜேசன் ஹோல்டருக்கு கேட்ச் கொடுத்து அவுட்டானார்.

20 ஓவர்களின் முடிவில் 5 விக்கெட்டுகளை இழந்திருந்த ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 164 ரன்களை எடுத்திருந்தது.

ராஜஸ்தான் ராயல்ஸ் இழந்து 5 விக்கட்டுக்களில் சன்ரைசர்ஸ் ஹைத்ராபாத் அணியின் சித்தார்த் கௌல் இரண்டு விக்கெட்டுகளை கைப்பற்றி இருந்தார்.

சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு ஆரம்பமே அமர்க்களம்

ஜேசன் ராய்

பட மூலாதாரம்,BBCI/IPL

 
படக்குறிப்பு,

ஜேசன் ராய்

165 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆடிய ஹைதராபாத் அணிக்கு சேசிங் ஒன்றும் அவ்வளவு கடினமானதாக இல்லை.

சன்ரைசர்ஸ் தொடக்க வீரர் ஜேசன் ராய் 42 பந்துகளில் 60 ரன்கள் எடுத்தார். இன்னொரு தொடக்க வீரர் வ்ருத்திமான் சஹா 16 பந்துகளில் 18 ரன்கள் எடுத்தார்.

அடுத்ததாக வந்த அணியின் கேப்டன் கேன் வில்லியம்சன் இறுதி வரை ஆட்டமிழக்காமல் 47 பந்துகளில் 51 ரன்கள் எடுத்தார்.

சன்ரைசர்ஸ் ஹைதராபாத் பேட்ஸ்மேன் பிரியம் கர்க் ரன் எதுவும் எடுக்காமல் முதல் பந்திலேயே டக் அவுட் ஆனாலும் இது அந்த அணிக்கு ஒன்றும் பெரிய பாதிப்பாக இருக்கவில்லை.

13வது ஓவரின் கடைசி பந்தில் அவர் ஆட்டமிழந்த பொழுது சன்ரைசர்ஸ் அணி ஏற்கனவே 119 ரன்களை எடுத்திருந்தது.

இறுதியாக ஆட்டம் முடிய 9 பந்துகள் எஞ்சியிருந்த நிலையில் மூன்று விக்கெட்டுகளை மட்டுமே இழந்து 167 ரன்கள் எடுத்தது ஹைதராபாத். இதன் மூலம் ஏழு விக்கெட்டுகள் வித்தியாசத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை வென்றது சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி.

Twitter பதிவை கடந்து செல்ல, 1

Twitter பதிவின் முடிவு, 1

நடப்பு ஐபிஎல் தொடரில் இதுவரை 10 போட்டிகளில் விளையாடி உள்ளது ஹைதராபாத் அணி. ஆனால் நேற்றைய வெற்றிதான் இந்த அணிக்கு 2வது வெற்றி.

மீதமுள்ள எட்டு போட்டிகளிலும் இந்த அணி தோல்வியையே இதுவரை சந்தித்துள்ளது வெறும் நான்கு புள்ளிகளுடன் தற்போதைய புள்ளிப் பட்டியலிலும் ஹைதராபாத் அணி கடைசி இடத்திலேயே இருக்கிறது. சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தொடர்ந்து முதலிடத்தில் நீடிக்கிறது.

https://www.bbc.com/tamil/sport-58715763

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஐபிஎல் 2021 - DC vs KKR : டெல்லியைத் தடுமாற வைத்த கொல்கத்தா பந்துவீச்சாளர்கள்

28 செப்டெம்பர் 2021
நரைன்

பட மூலாதாரம்,GETTY IMAGES

பேட்ஸ்மேன்களை அச்சுறுத்தும் சார்ஜா ஆடுகளத்தில் நடந்த ஐபிஎல் போட்டியில் டெல்லி அணியை ரன் குவிக்க விடாமல் அழுத்தம் கொடுத்த சுனில் நரைன் கொல்கத்தா அணிக்கு மிக முக்கியமான வெற்றியைப் பெற்றுத் தந்திருக்கிறார்.

மூன்று விக்கெட் வித்தியாசத்தில் டெல்லி அணியை வீழ்த்தியதன் மூலம் புள்ளிப் பட்டியலில் கொல்கத்தா அணி நான்காவது இடத்தை வலுவாகப் பிடித்திருக்கிறது. தோல்வியடைந்திருந்தாலும் டெல்லி அணி தொடர்ந்து இரண்டாவது இடத்தில் நீடிக்கிறது.

முதலில் பேட் செய்த டெல்லி அணி 20 ஓவர்களில் 127 ரன்களை மட்டுமே எடுத்தது. நான்கு ஓவர்களை வீசிய கொல்கத்தா அணியின் சுனில் நரைன் வெறும் 18 ரன்கள் மட்டுமே கொடுத்து இரண்டு விக்கெட்டுகளையும் வீழ்த்தினார்.

தொடக்கத்தில் டெல்லி அணி சிறப்பான அடித்தளத்தை அமைத்திருந்தாலும், அடுத்தடுத்து விக்கெட்டுகள் வீழ்ந்தன.

வருண் சக்கரவர்த்தி, வெங்கடேஷ் அய்யர், ஃபெர்குசன் என கொல்கத்தா அணியின் பந்து வீச்சாளர்கள் டெல்லி அணியை ரன் குவிக்க விடாமல் கட்டுப்படுத்தினர்.

ஒருபுறம் ரிஷப் பண்ட் ரன் எடுத்துக் கொண்டிருந்த நிலையில், மறு முனையில் விக்கெட்டுகள் விழுந்து கொண்டே இருந்தன.

ஸ்டீவன் ஸ்மித், ரிஷப் பண்ட், ஷிகர் தவான் ஆகியோரைத் தவிர மற்றவர்கள் யாரும் களத்துக்குள் நீடித்து நிற்கவில்லை, கணிசமாக ரன் எடுக்கவும் இல்லை. இறுதியில் 9 விக்கெட்டுகளை இழந்து 127 ரன்களை மட்டுமே டெல்லி அணி எடுத்தது.

அச்சுறுத்திய சார்ஜா ஆடுகளம்

கொல்கத்தாவின் பேட்டிங்கும் சிறப்பாக அமைந்துவிடவில்லை. டெல்லி அணியின் பந்துவீச்சு கொல்கத்தாவையும் தடுமாற வைத்தது. 14-ஆவது ஓவரில் 4 விக்கெட்டுகளை இழந்து 76 ரன்களை மட்டுமே எடுத்திருந்தது அந்த அணி. சற்று சறுக்கினாலும் தோல்வியடையும் நிலை இருந்தது.

Twitter பதிவை கடந்து செல்ல, 1

Twitter பதிவின் முடிவு, 1

எனினும் நிதிஷ் ராணா சிறப்பாக ஆடி 36 ரன்களை எடுத்திருந்தார். கடந்த சில போட்டிகளில் ஒற்றை இலக்கத்தைத் தாண்டாத சுனில் நரைன் இந்தப் போட்டியில் பந்துவீச்சைப் போலவே பேட்டிங்கிலும் அசத்தினார். கொல்கத்தா அணி தடுமாறிக் கொண்டிருந்தபோது, பத்தே பந்துகளில் 21 ரன்களை எடுத்து வெற்றிக்கு அருகில் அணியைக் கொண்டு வந்தார் நரைன்.

கடைசியில் 10 பந்துகள் மீதமிருந்த நிலையில், ஒரு பவுண்டரியை அடித்து டெல்லி அணிக்கு வெற்றிபெற வைத்தார் ராணா.

பேட்டிங்கிலும் பந்துவீச்சிலும் சிறப்பாகச் செயல்பட்ட சுனில் நரைன் ஆட்ட நாயகனாகத் தேர்வு செய்யப்பட்டார்.

சார்ஜா மைதானத்தின் மிக மெதுவான ஆடுகளமே இரு அணிகளும் ரன் எடுக்கத் தடுமாறியதற்கு முக்கியக் காரணம். அதிரடி ஆட்டம் பெரும்பாலும் எடுபடவில்லை. இந்த நிலைமையை கொல்கத்தா அணியின் சுழல் பந்துவீச்சாளர்கள் தங்களுக்குச் சாதமாக்கிக் கொண்டார்கள்.

கொல்கத்தாவில் ஆண்ட்ரே ரஸல் இல்லாத நிலையிலும் அந்த இடத்தை வெங்கடேஷ் அய்யர் நிரப்பினார்.

பழிதீர்த்த அஸ்வின்

முதலில் டெல்லி அணி பேட்டிங் செய்யும்போது கடைசி ஓவரில் அஸ்வின் அவுட் ஆனார். அப்போது கொல்கத்தா அணியின் கேப்டன் இயான் மார்கனுக்கும் அவருக்கும் இடையே கடும் வாக்குவாதம் நடந்தது. தினேஷ் கார்த்திக் குறுக்கே வந்து அவர்களைத் தடுத்தார். இதற்குப் பதிலடியாக கொல்கத்தா பேட்டிங் செய்யும்போது, இயான் மார்கனை இரண்டாவது பந்திலேயே ரன் எதுவும் எடுக்காத நிலையில் அஸ்வின் வெளியேற்றினார். அப்போது மார்கனை நோக்கி குரல் எழுப்பியபடி ஓடிவந்து பழிதீர்த்துக் கொண்டார்.

https://www.bbc.com/tamil/sport-58726042

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

MI vs PBKS ஐபிஎல் 2021 கிரிக்கெட்: பஞ்சாப் கிங்ஸை வென்று ப்ளே-ஆஃப் கனவை தக்க வைத்துள்ள மும்பை இந்தியன்ஸ்

3 மணி நேரங்களுக்கு முன்னர்
MI vs PBKS ஐபிஎல் 2021 கிரிக்கெட்

பட மூலாதாரம்,BCCI / IPL

நடப்பு ஐபிஎல் தொடரில் தொடர்ந்து மூன்று தோல்விகளுக்கு பிறகு ஒருவழியாக வெற்றியை ருசித்துள்ளது மும்பை இந்தியன்ஸ் அணி.

நேற்று அபுதாபியில் நடந்த போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு எதிராக 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது மும்பை இந்தியன்ஸ்.

இதற்கு முன்பு அந்த அணி விளையாடிய சென்னை சூப்பர் கிங்ஸ், கொல்கத்தா நைட் ரைடர்ஸ், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் ஆகிய அணிகளுக்கு எதிரான போட்டிகளில் தோல்வியையே சந்தித்திருந்தது.

நேற்றைய போட்டியிலும் தோல்வியடைந்திருந்தால் மும்பை அணி ப்ளே-ஆஃப் சுற்றுக்கு செல்வதற்கான வாய்ப்புகள் மிகவும் மங்கி இருக்கும்.

ஆனால் நேற்றைய வெற்றியின் மூலம் ப்ளே-ஆஃப் சுற்றுக்குச் செல்வதற்கான நம்பிக்கையை தங்கள் ரசிகர்கள் இழக்க வேண்டாம் என்று உணர்த்தியுள்ளனர் மும்பை இந்தியன்ஸ் அணியினர்.

நேற்று நடந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற மும்பை இந்தியன்ஸ் அணி முதலில் பவுலிங் செய்யத் தீர்மானித்தது.

பஞ்சாப் கிங்ஸ் அணியின் தொடக்கம் ஒன்றும் சொல்லிக் கொள்ளும்படியாக இல்லை.

தொடக்க ஆட்டக்காரர்களாகக் களம் இறங்கிய அந்த அணியின் கேப்டன் கே.எல். ராகுல் மற்றும் மன்தீப் சிங் ஆகியோர் முறையே 21 மற்றும் 15 ரன்களை எடுத்தனர்.

அடுத்ததாக வந்த கிறிஸ் கெயில் 4 பந்துகளில் ஒரு ரன் மட்டுமே எடுத்து ஆட்டமிழந்தார்.

MI vs PBKS ஐபிஎல் 2021 கிரிக்கெட்

பட மூலாதாரம்,BBCI / IPL

பஞ்சாப் கிங்ஸ் அணியில் அதிகபட்சமாக ஸ்கோர் எடுத்தவர் 42 ரன்கள் எடுத்த எய்டன் மார்க்ரம்.

இறுதியாக 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட்டுகளை இழந்து இருந்த பஞ்சாப் கிங்ஸ் அணி 135 ரன்கள் எடுத்திருந்தது.

மும்பை அணிக்காக பும்ரா மற்றும் பொல்லார்டு ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை கைப்பற்றினர்.

136 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய மும்பை அணிக்கு மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் உதவிகரமாக இருந்தனர்.

சௌரப் திவாரி 37 பந்துகளில் 45 ரன்களும், ஹர்திக் பாண்ட்யா ஆட்டமிழக்காமல் 30 பந்துகளில் 40 ரன்களும் எடுத்து இருந்தனர்.

19வது ஓவரின் இறுதியில் 4 விக்கெட்டுகளை மட்டுமே இழந்து 137 ரன்களை எட்டியது மும்பை இந்தியன்ஸ். இதன் மூலம் 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் பஞ்சாப் கிங்ஸ் அணியை வென்றுள்ளது.

நேற்றைய வெற்றி மும்பை இந்தியன்ஸ் அணி புள்ளிப் பட்டியலில் மேலே செல்வதற்கு உதவியுள்ளது.

Twitter பதிவை கடந்து செல்ல, 1

Twitter பதிவின் முடிவு, 1

தற்போதைய நிலவரப்படி தான் விளையாடிய 11 ஆட்டங்களில் ஐந்தில் வெற்றியும் ஆறில் தோல்வியும் அடைந்துள்ள மும்பை இந்தியன்ஸ் அணி 10 புள்ளிகளுடன் ஐந்தாம் இடத்தில் உள்ளது.

நான்காம் இடத்தில் உள்ள கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும் 10 புள்ளிகளைப் பெற்றிருந்தாலும், நெட் ரன் ரேட் அடிப்படையில் மும்பை இந்தியன்ஸ் அணியை விட அதிகமாக உள்ளது.

எனவே மும்பை அணி ப்ளே-ஆஃப் சுற்றுக்குள் தனது இடத்தை உறுதி செய்ய வேண்டுமானால் இனிவரும் போட்டிகளில் வெற்றி பெறுவதில் மட்டுமல்லாது, அதிக ரன்கள் எடுத்து வெல்ல வேண்டும் என்பதிலும் கவனம் செலுத்த வேண்டும்.

டெல்லி கேபிட்டல்ஸ், ராஜஸ்தான் அணிகளுக்கு எதிராக தொடர்ந்து இரு தோல்விகளைச் சந்தித்த பஞ்சாப் அணி, நேற்றைய போட்டிக்கு முன்பு விளையாடிய ஆட்டத்தில் சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணியை வென்றது. நேற்று மும்பைக்கு எதிரராக மீண்டும் தோற்றுள்ளது பஞ்சாப் கிங்ஸ்.

இப்போது அந்த அணி 11 போட்டிகளில் நான்கில் மட்டுமே வென்று புள்ளிப்பட்டியலில் ஆறாம் இடத்தில் உள்ளது.

https://www.bbc.com/tamil/sport-58729805

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

RR vs RCB: வெற்றி நடைபோடும் பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் - காரணம் என்ன?

3 மணி நேரங்களுக்கு முன்னர்
ரியான் பராக் கோப்புப் படம்

பட மூலாதாரம்,BCCI/IPL

 
படக்குறிப்பு,

ரியான் பராக் கோப்புப் படம்

ஐபிஎல் 2021 சீசனின் 43ஆவது போட்டி துபாய் மைதானத்தில் நேற்று (செப் 29, புதன்கிழமை) நடைபெற்றது. இதில் பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் மோதின.

இதில் பெங்களூரு வெற்றி என்கிற ஒற்றை இலக்கோடு, ஓரணியாக மோதி ராஜஸ்தானை வென்றது.

டாஸ் வென்ற பெங்களூரு, முதலில் பந்துவீச தீர்மானித்தது. ராஜஸ்தானின் தொடக்க ஆட்டக்காரர்களான எவின் லெவிஸ் மற்றும் யஷஸ்வி ஜெய்ஸ்வால் நல்ல தொடக்கம் கொடுத்தனர்.

சரியான நேரத்தில் 31 ரன்களோடு யஷஸ்வியின் விக்கெட்டை வீழ்த்தி இந்த இணைக்கு முற்றுப்புள்ளி வைத்தார் டேன் க்றிஸ்டின்.

5 பவுண்டரியுடன் மூன்று சிக்ஸர்களை விளாசி அதிரடி காட்டிக் கொண்டிருந்த எவின் லெவிஸின் விக்கெட்டை வீழ்த்தி ராஜஸ்தானின் அதிவேக ரன் குவிப்புக்கு முற்றுப் புள்ளி வைத்தார் ஜார்ஜ் கார்டன். அப்போது ராஜஸ்தான் 11.1 ஓவர் முடிவில் 100 ரன்களுக்கு இரு விக்கெட்டை இழந்திருந்தது.

அதன் பிறகு வந்த அணித் தலைவர் சஞ்சு சாம்சன் உட்பட எந்த ஒரு பேட்டரும் நிலைத்து நின்று ரன்களைக் குவிக்கவில்லை. சஞ்சு சாம்சன் 19 ரன்கள் மற்றும் க்றிஸ் மோரிஸ் 14 ரன்களைக் குவித்ததே அதிகபட்ச ரன்கள் என்றால் பார்த்துக் கொள்ளுங்களேன்.

சஞ்சு சாம்சன் கோப்புப் படம்

பட மூலாதாரம்,BCCI/IPL

 
படக்குறிப்பு,

சஞ்சு சாம்சன் கோப்புப் படம்

ராஜஸ்தானின் மிடிஸ் ஆர்டர் பேட்டர்களான மஹிபால் லோம்ரார், லியாம் லிவிங்ஸ்டன், ராகுல் தீவாட்டியா, ரியான் பராக் என அனைவரும் ஒற்றை இலக்க ரன்களில் வீழ்ந்தனர்.

20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட்டு இழப்புக்கு 149 ரன்களை குவித்திருந்தது ராஜஸ்தான்.

முதல் இரு விக்கெட்டுகளை வீழ்த்தியது எந்த அளவுக்கு முக்கியம் என விளையாடியதோ, அதே வேகத்தோடு அடுத்தடுத்த விக்கெட்டுகளை வீழ்த்தியது பெங்களூரு.

மும்பை இந்தியன்ஸுக்கு எதிரான போட்டியில் பொல்லார்ட், ஹர்திக் பாண்டியா போன்ற ஆபத்தான பேட்டர்களின் விக்கெட்டை ஒரே ஓவரில் வீழ்த்தி, பெங்களூரின் வெற்றி வாய்ப்பை பிரகாசப்படுத்திய ஹர்ஷல் படேல், இந்த முறையும் க்றிஸ் மோரிஸ் உட்பட 3 விக்கெட்டுகளை வீழ்த்தி ராஜஸ்தானை கட்டுக்குள் வைத்தார்.

யுவேந்திர சாஹல், ஷபாஸ் அஹ்மத் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர். இந்த போட்டியில் பெங்களூரு அணி ஏழு பந்துவீச்சாளர்களைப் பயன்படுத்தியது குறிப்பிடத்தக்கது.

150 எடுத்தால் வெற்றி

பெங்களூரு ஓப்பனர்கள் - கோப்புப் படம்

பட மூலாதாரம்,BCCI/IPL

 
படக்குறிப்பு,

பெங்களூரு ஓப்பனர்கள் - கோப்புப் படம்

பெங்களூரு தரப்பில் களமிறங்கிய விராட் கோலி 25 ரன்களோடும், தேவ்தத் படிக்கல் 22 ரன்களோடும் பெவிலியம் திரும்பினர்.

சென்னைக்கு எதிரான போட்டியில் ஓப்பனர்கள் இருவரும் 110 ரன்களுக்கு மேல் அடித்துக் கொடுத்த பிறகு கூட, எந்த ஒரு பேட்டரும் நிலைத்து நிற்காமல் சீட்டு கட்டு போல சரிந்ததை பார்த்திருக்கிறோம்.

அப்படி இந்த முறையும் நடந்துவிடுமோ என பெங்களூரு ரசிகர்கள் அச்சத்தில் இருந்த போது, ஸ்ரீகர் பரத் மற்றும் க்ளென் மேக்ஸ்வெல் கைகொடுத்தனர்.

அந்த ஜோடி, நிதானமாக ரன்களைக் குவித்து அணியை வெற்றி இலக்கை நோக்கி நகர்த்தினர். மேக்ஸ்வெல் 30 பந்துகளுக்கு 50 ரன்களைக் குவித்தார். இதில் 6 பவுண்டரிகள் மற்றும் 1 சிக்ஸரும் அடக்கம்.

பெங்களூரு அணி 17 பந்துகளுக்கு முன்பே தன் வெற்றி இலக்கை அனாயாசமாக அடைந்தது.

ராஜஸ்தான் அணியும் ஏழு பந்துவீச்சாளர்களைப் பயன்படுத்தி இருந்தது. ஆனால் அது பெங்களூருவின் ரன் குவிப்பை தடுக்கவோ, விக்கெட்டுகளை வீழ்த்தவோ உதவவில்லை.

முஸ்தஃபிசுர் ரஹ்மான் மட்டுமே 3 ஓவர்களுக்கு 20 ரன்களைக் குவித்து 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

க்றிஸ் மோரிஸ்ஸின் 4 ஓவர்களில் 50 ரன்கள் போனது. தொடக்க வீரர்களை வீழ்த்திய வேகத்தில் அடுத்தடுத்த விக்கெட்டுகளை ராஜஸ்தான் வீழ்த்தவில்லை. க்ளென் மேக்ஸ்வெல் மற்றும் பரத் இணை வலுவாக நிலைபெற்று ரன்களை அடிக்கவிட்டது ராஜஸ்தான் அணியின் தோல்விக்கு மிக முக்கிய காரணமானது.

திரும்பி வந்த பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ்

பெங்களூரு அணி கோப்புப் படம்

பட மூலாதாரம்,BCCI/IPL

 
படக்குறிப்பு,

பெங்களூரு அணி கோப்புப் படம்

ஏப்ரல் 2020-ல் இந்த ஐபிஎல் சீசன் தொடங்கிய போது பெங்களூரு அணி, ஹைதராபாத், கொல்கத்தா, ராஜஸ்தான் என தொடர் வெற்றிகளைக் குவித்தது.

செப்டம்பர் மாதம் மீண்டும் போட்டிகள் தொடங்கிய போது கொல்கத்தாவிடம் தோல்வி, சென்னையிடம் தோல்வி என துவண்டிருந்த அணி, மும்பை இந்தியன்ஸை 54 ரன்கள் வித்தியாசத்தின் வீழ்த்தி தன்னை போட்டியில் நிலைநாட்டிக் கொண்டது.

நேற்று ராஜஸ்தானை வீழ்த்தி ஒரு அணியாக தன் ப்ளே ஆஃப் வாய்ப்பை உயிர்ப்போடு வைத்திருக்கிறது பெங்களூரு.

ஒரு சில பேட்டர்கள் மட்டுமே ரன்களைக் குவிப்பது, டாப் ஆர்டர் பேட்டர்கள் வீழ்ந்தால் மொத்த அணியும் சடசடவென சரிவது போன்ற பிரச்சனைகளை எல்லாம் சரி செய்து, டீம் ஸ்பிரிட்டோடு விளையாடத் தொடங்கியுள்ளனர்.

பிரத்யேகமாக மிடில் ஆர்டர் பேட்டர்கள் பொறுப்பை உணர்ந்து பேட்டை சுழற்றத் தொடங்கியுள்ளனர். வரும் அக்டோபர் 3ஆம் தேதி பஞ்சாபையும், 6ஆம் தேதி ஹைதராபாத்தையும், 8ஆம் தேதி டெல்லியையும் எதிர்கொள்ளவிருக்கிறது பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ்.

கடந்த இரு போட்டிகளைப் போல வரும் போட்டிகளிலும் ஜொலிக்குமா என்பதை பொருத்திருந்து பார்ப்போம்.

சீசனின் மத்தியில் தடுமாறிக் கொண்டிருந்த பெங்களூரு தற்பொது 11 போட்டிகளில் 7-ல் வென்று புள்ளிகள் பட்டியலில் 3ஆம் இடத்தை பிடித்திருகிறது. கொல்கத்தா மற்றும் மும்பை அணிகள் 11 போட்டிகளில் 5-ல் வென்று 4 மற்றும் 5ஆவது இடத்தில் உள்ளன.

https://www.bbc.com/tamil/sport-58744219

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

SRH vs CSK: சென்னையை அலறவிட்ட ஜேசன் ஹோல்டர், ஹெலிகாப்டர் ஷாட்டில் கரை சேர்த்த தோனி

3 மணி நேரங்களுக்கு முன்னர்
ஹைதராபாத் - சென்னை போடி

பட மூலாதாரம்,BCCI/IPL

 
படக்குறிப்பு,

ஹைதராபாத் - சென்னை போடி - கோப்புப் படம்

ஐபிஎல் 2021 சீசனின் 44ஆவது போட்டி செப்டம்பர் 30ஆம் தேதி வியாழக்கிழமை ஷார்ஜா மைதானத்தில் நடந்தது. சன்ரைசர்ஸ் ஹைதராபாத் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் மோதின.

சென்னை போன்ற வலுவான அணிக்கு எளிய இலக்கு இருந்த போதிலும் திடீரென விக்கெட்டுகள் வீழ்ந்ததால் ஆட்டம் கடைசி ஓவர் வரை சென்றது. சென்னை அணித் தலைவர் மகேந்திர சிங் தோனி, தன் அக்மார்க் சிக்ஸர் அடித்து சூப்பர் கிங்ஸை கரை சேர்த்தார்.

டாஸ் வென்ற சென்னை அணி முதலில் பந்துவீச தீர்மானித்தது. ஜேசன் ராய் 2 ரன்களோடு வெளியேறினார். மறு புறம் விரித்திமான் சாஹா நிதானம் காட்டி ரன்களைக் குவித்தாலும், மறு பக்கம் கேன் வில்லியம்சன் 11 ரன்களோடும், ப்ரியம் கார்க் 7 ரன்களோடும் பெவிலியன் திரும்பினர். விரித்திமான் சாஹாவுக்கு ஈடு கொடுத்து நின்று விளையாட ஆள் இல்லாமல் தடுமாறினார்.

12.3ஆவது ஓவரில் விரித்திமான் சாஹாவும் வீழ்ந்தார். அப்போதே ஹைதராபாத் 4 விக்கெட் இழந்து 74 ரன்களை மட்டுமே அடித்திருந்தது.

அவருக்குப் பின் களமிறங்கிய அபிஷேக் ஷர்மா, அப்துல் சமத் ஜேசன் ஹோல்டர் ஆகியோர் முறையே 18, 18, 5 ரன்களுக்கு தங்கள் விக்கெட்டுகளை இழந்தனர்.

சொல்லப் போனால் சன்ரைசர்ஸ் அணியிலேயே அபிஷேக் மற்றும் அப்துல் ஜோடி தான் அதிகபட்சமாக 35 ரன்களைக் குவித்தனர். கடைசி சில ஓவர்களில் களமிறங்கிய ரஷீத் கான் 17 ரன்களை அடித்தார்.

இதெல்லாம் போக சென்னை அணிகூடுதலாக 10 ரன்களைக் கொடுத்திருந்தது. 20 ஓவர் முடிவில் 134 ரன்களுக்கு 7 விக்கெட் இழந்திருந்தது ஹைதராபாத்.

சென்னையின் ஜோஷ் ஹேசில்வுட் 4 ஓவர்களுக்கு 24 ரன்களைக் கொடுத்து ஜேசன் ராய் உட்பட 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார். ட்வெயின் ப்ராவோ 4 ஓவர்களை வீசி 17 ரன்களை மட்டுமே கொடுத்து கேன் வில்லியம்சன் உட்பட 2 விக்கெட்டுகளை வீழ்த்தி, ஹைதராபாத்தின் ரன் ரேட்டுக்கு பெருந்தடை ஏற்படுத்தினார்.

ஷர்துல் தாகூர் 4 ஓவர்களில் 37 ரன்களை கொடுத்து ஜேசன் ஹோல்டரின் விக்கெட்டையும், ரவீந்திர ஜடேஜா 3 ஓவர்களில் 14 ரன்களை கொடுத்து விரித்திமான் சாஹா விக்கெட்டையும் வீழ்த்தினர்.

135 இலக்கு... இருப்பினும் தடுமாறிய சென்னை

ஜேசன் ஹோல்டர்

பட மூலாதாரம்,BCCI/IPL

 
படக்குறிப்பு,

ஜேசன் ஹோல்டர், கோப்புப் படம்

எளிய இலக்கோடு களமிறங்கிய ரிதுராஜ் கெய்க்வாட் மற்றும் ஃபாஃப் டூப்ளசி நல்ல தொடக்கத்தைக் கொடுத்தனர். 10.1ஆவது பந்தில் ரிதுராஜ் 45 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். மறுமுனையில் நல்ல ரன்களோடு டூப்ளசி ஆடிக் கொண்டிருந்தார்.

ஆனால் அடுத்தடுத்த வந்த மொயின் அலி 17 ரன்களோடும், சுரேஷ் ரெய்னா 2 ரன்களோடும் சடசடவென சரிந்தனர். அவர்களைத் தொடர்ந்து டூப்ளசியும் வெளியேற்றப்பட்டார்.

10.1 ஓவரில் 75 ரன்களுக்கு ஒரு விக்கெட் என்றிருந்த நிலை, 15.5 ஓவரில் திடீரென 108 ரன்களுக்கு 4 விக்கெட் என சென்னையை கதிகலங்கச் செய்தது.

இதற்கு ஒற்றை காரணம் ஜேசன் ஹோல்டர். ஆம், அந்த ஒற்றை மனிதர் தான் ரிதுராஜ், ரெய்னா, டூப்ளசி என சென்னையின் முக்கிய பேட்டர்களை வெளியேற்றி ஆட்டத்தை கடைசி ஓவர் வரை கொண்டு சென்றார்.

4 விக்கெட் வீழ்ச்சிக்குப் பிறகு மகேந்திர சிங் தோனி மற்றும் அம்பதி ராயுடு இணை களத்தில் நிதானம் காட்டி அணியை வெற்றி பெறச் செய்தது.

குறிப்பாக தோனி அடித்த அந்த சிக்ஸரை இணையவாசிகள், தோனி ரசிகர்கள் மற்றும் சென்னை விசிறிகள் கொண்டாடிக் கொண்டிருக்கின்றனர்.

மகேந்திர சிங் தோனி

பட மூலாதாரம்,BCCI/IPL

 
படக்குறிப்பு,

மகேந்திர சிங் தோனி, கோப்புப் படம்

இப்போட்டியின் வெற்றி மூலம் சென்னை முதல் அணியாக தன் ப்ளேஆஃப் வாய்ப்பை உறுதிப்படுத்தியுள்ளது. ஐபிஎல் தொடங்கியதிலிருந்து சென்னை அணி 2020ஆம் ஆண்டு தவிர மற்ற எல்லா சீசனிலும் ப்ளே ஆஃப் சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது. ஹைதராபாத் அணி இந்த ஐபிஎல் சீசனில் அதிகாரபூர்வமாக தன் ப்ளே ஆஃப் வாய்ப்பை இழந்தது.

செப்டம்பர் மாதம் ஐபிஎல் போட்டிகள் மீண்டும் தொடங்கியதிலிருந்து நடைபெற்ற நான்கு (அனைத்து) போட்டிகளிலும் சென்னை வெற்றி பெற்றுள்ளது.

டெல்லி கேப்பிட்டல்ஸ், பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ், கொல்கத்தா நைட் ரைடர்ஸ், மும்பை இந்தியன்ஸ் ஆகிய அணிகள் ப்ளே ஆஃப் சுற்றுக்குள் நுழைய கடும் போட்டி நிலவும் நிலையில் இன்று கொல்கத்தா மற்றும் பஞ்சாப் அணிகள் பலப்பரிட்சை நடத்தவிருக்கின்றன. நாளை டெல்லியும், மும்பையும் மோத உள்ளன.

https://www.bbc.com/tamil/sport-58757679

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

2021 ஐ.பி.எல். தொடரிலிருந்து கிறிஸ் கெய்ல் விலகல்

2021 இந்தியன் பிரீமியர் லீக் தொடரிலிருந்து விலகுவதாக கரீபியன் புயல் கிறிஸ் கெய்ல் திடீரென அறிவித்துள்ளார்.

Virender Sehwag, Kings XI Punjab have saved IPL 2018 by picking me: Chris  Gayle | Cricket - Hindustan Times

பஞ்சாப் கிங்ஸ் அணியும் இந்த தகவலை வியாழக்கிழமை பிற்பகுதியில் உறுதிபடுத்தியுள்ளது.

எதிர்வரும் டி-20 உலகக் கிண்ணத் தொடருக்காக மேற்கிந்தியத்தீவுகள் அணியில் ஆட தன்னை புத்துணர்வாக வைத்துக் கொள்ள ஐ.பி.எல். பயோபபுள் சூழலிலிருந்து விடுபடுவதாக கிறிஸ் கெய்ல் அறிவித்துள்ளார்.

டி-20 உலகக் கிண்ணத்துக்காக மேற்கிந்திய தீவுகள் அணியுடன் இணையும் வரை அவர் டுபாயில் தங்கியிருப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
 

https://www.virakesari.lk/article/114402

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

KKR vs PBKS: கே எல் ராகுல் அதிரடி, கோட்டைவிட்ட கேட்ச்களால் மூழ்கிய கொல்கத்தா கப்பல் - சிக்கலாகும் ப்ளே ஆஃப் கணக்குகள்

2 மணி நேரங்களுக்கு முன்னர்
பஞ்சாப் vs கொல்கத்தா

பட மூலாதாரம்,BCCI/IPL

 
படக்குறிப்பு,

பஞ்சாப் vs கொல்கத்தா

கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் பஞ்சாப் கிங்ஸ் அணிகள் நேற்று (அக்டோபர் 01, வெள்ளிக்கிழமை) துபாய் மைதானத்தில் மோதின.

பஞ்சாப் அணி சார்பாக க்றிஸ் கெயில், மந்தீப் சிங், ஹர்ப்ரீத் ப்ரார் ஆகியோர் விளையாடவில்லை. ஃபேபியன் ஆலன், மயங்க் அகர்வால், ஷாரூ கான் ஆகியோர் களம் கண்டனர். இந்த மாற்றம் பஞ்சாபுக்கு சாதகமாகவே அமைந்தது.

டெல்லி கேப்பிட்டல்ஸை பந்தாடிய கொல்கத்தாவின் வெற்றி அணியில் இருந்த லோகி ஃபெர்குசன் மற்றும் சந்தீப் வாரியருக்கு பதிலாக சிவம் மவி மற்றும் டிம் சைஃபர்ட் களமிறங்கினர்.

டாஸ் வென்ற பஞ்சாப் முதலில் கொல்கத்தாவை பேட் செய்ய அழைத்தது.

சுப்மன் கில் மற்றும் வெங்கடேஷ் ஐயர் இணை நிலைபெறத் தொடங்குவதற்குள் 2.2ஆவது பந்தில் அர்ஷ்தீப் சுப்மனை பெவிலியனுக்கு அனுப்பினார். அடுத்து வந்த ராகுல் திரிபாதி 34 ரன்களுக்கு ரவி பிஷ்னோயால் வெளியேற்றப்பட்டார்.

கொல்கத்தா தரப்பில் ராகுல் திரிபாதி - வெங்கடேஷ் ஜோடி 55 பந்துகளுக்கு 72 ரன்களைக் குவித்தனர். அவரைத் டொடர்ந்து வெங்கடேஷும் ரவியால் வெளியேற்றப்பட்டார். அப்போது கொல்கத்த ஆணில் 14.4 ஓவரில் 120 ரன்களுக்கு 3 விக்கெட்டுகளை இழந்திருந்தது.

இயான் மார்கன்

பட மூலாதாரம்,BCCI/IPL

 
படக்குறிப்பு,

இயான் மார்கன்

அடுத்து வந்த நிதிஷ் ரானா 31 ரன்களைக் குவித்தார், அவரைத் தொடர்ந்து வந்த பேட்டர்களை பஞ்சாபின் பந்துவீச்சுப் படை அதிரடியாக வெளியேற்றி ரன்ரேட்டை கட்டுக்குள் வைத்தது.

கடந்த சில முக்கிய போட்டிகளில் அதகளப்படுத்தி வரும் அர்ஷ்தீப் சிங் இந்த போட்டியிலும் 4 ஓவர்களில் 32 ரன்கள் கொடுத்து சுப்மன் கில், நிதிஷ் ரானா உட்பட 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

ரவி பிஷ்னோய் 4 ஓவர்களில் 22 ரன்களை கொடுத்து வெங்கடேஷ் மற்றும் ராகுல் திரிபாதியின் விக்கெட்டுகளை வீழ்த்தி அதிரடி காட்டினார்.

அனுபவமிக்க பந்துவீச்சாளரான மொஹம்மத் ஷமி 4 ஓவர்களில் 23 ரன்களை கொடுத்து இயான் மார்கனின் விக்கெட்டை வீழ்த்தினார்.

20 ஓவர் முடிவில் 165 ரன்களுக்கு 7 விக்கெட்டுகளை இழந்தது கொல்கத்தா. 166 ரன்களைக் குவித்தால் வெற்றி என களமிறங்கியது பஞ்சாப்.

பொறுப்போடு ஆடிய ராகுல்

கே எல் ராகுல் மற்றும் மயங்க் அகர்வால் இணை பஞ்சாப் அணிக்கு பிரமாதமான தொடக்கத்தைக் கொடுத்தது.

முதல் ஓவரிலேயே மயங்க் அகர்வால் கொடுத்த கேட்சை இயான் மார்கன் தவறவிட்டார்.

27 பந்தில் 40 ரன்களைக் குவித்திருந்த அதிரடி வீரர் மயங்க் அகர்வாலை ஒருவழியாக வீழ்த்தியது கொல்கத்தா.

அடுத்து வந்த நிகோலஸ் பூரன் 12 ரன்களில் வெளியேற, ஏய்டன் மக்ரம் கே எல் ராகுலுக்கு ஜோடியாக களமிறங்கினார். அவரும் 18 ரன்களில் வெளியேற தீபக் ஹூடா 3 ரன்களில் வெளியேறினார்.

16.4ஆவது ஓவரில் ஷாரூ கான் களமிறங்கி ராகுலுக்கு பக்க பலமாக நின்றார். ஒரு பக்கம் பேட்டர்கள் நிலைபெறாத போதும் கே எல் ராகுல் தலைவராக தன் விக்கெட்டை இழக்காமல் ரன்களை குவித்துக் கொண்டிருந்தார்.

18 பந்துகளில் 24 ரன்கள் அடிக்க வேண்டும் என்கிற சூழலில் ஆட்டம் சூடு பிடிக்கத் தொடங்கியது. இரு பேட்டர்களும் லாவகமாக பேட்டைச் சுழற்றத் தொடங்கினர்.

18.3ஆவது ஓவரில் ராகுல் திரிபாதி பிடித்த ஒரு கேட்ச், மூன்றாம் நடுவரால் மறுக்கப்பட, ஆட்டம் பஞ்சாபின் பக்கம் சாய்ந்தது.

கடைசி ஓவரை வெங்கடேஷ் வீச, 19.2ஆவது பந்தில் கே எல் ராகுலின் விக்கெட் வீழ்ந்தது, ஆனால் ஷாரூ கான் அடுத்த பந்திலேயே சிக்ஸர் அடித்து பஞ்சாபின் ப்ளே ஆஃப் வாய்ப்பை உயிர்ப்போடு வைத்தார்.

சொதப்பிய கொல்கத்தா

மயங்க் அகர்வால்

பட மூலாதாரம்,BCCI/IPL

 
படக்குறிப்பு,

மயங்க் அகர்வால்

தொடக்கத்தில், பஞ்சாபை கட்டுப்படுத்தி வந்த கொல்கத்தா கடைசி ஐந்து ஓவர்களில் கோட்டை விட்டது. 30 பந்தில் 45 ரன்கள் எடுக்க வேண்டும் என்கிற நிலையில் இருந்த போட்டி சுனில் நரேன் வீசிய 16ஆவது ஓவரில் இருந்து மாறத் தொடங்கியது

ஏகப்பட்ட முக்கிய கேட்ச்களை கொல்கத்தா கொட்டை விட்டது, போட்டி பஞ்சாபுக்கு சாதகமானதற்கு முக்கிய காரணம்.

"தொடக்கத்திலேயே நாங்கள் சரியாக ஃபீல்டிங் செய்யவில்லை. பல கேட்ச்களை கோட்டைவிடோம். நான் கூட கேட்சை தவறவிட்டேன். அது எங்களுக்கு பேரிழப்பாகிவிட்டது" என போட்டி நிறைவடைந்த பிறகு கொல்கத்தாவின் கேப்டன் மார்கன் கூறியது குறிப்பிடத்தக்கது.

ப்ளே ஆஃப் கணக்கு

கே எல் ராகுல்

பட மூலாதாரம்,BCCI/IPL

 
படக்குறிப்பு,

கே எல் ராகுல்

இந்த வெற்றியால், பஞ்சாப் அணி புள்ளிகள் பட்டியலில் 10 புள்ளிகளோடு ஐந்தாவது இடத்துக்கு முன்னேறியுள்ளது. கொல்கத்தாவும் 10 புள்ளிகளோடு ரன் ரேட் அடிப்படையில் 4ஆவது இடத்தில் உள்ளது.

பஞ்சாப் நாளை பெங்களூரு உடனும், அக்டோபர் 7ஆம் தேதி சென்னையோடும் மோதவிருக்கிறது. கொல்கத்தா அணிக்கு நாளை ஹைதராபாத்தோடும், அக்டோபர் 7ஆம் தேதி ராஜஸ்தானோடும் விளையாட உள்ளது.

இன்று சென்னை மற்றும் ராஜஸ்தான் அணிகள் மோத உள்ளன. இப்போட்டியில் ராஜஸ்தான் வென்றால், புள்ளிகள் பட்டியலில் நான்கு அணிகள் 10 புள்ளிகளோடு இருக்கும் என்பதால் இனி ஒவ்வொரு அணியின் வெற்றியும், தோல்வியும் மற்ற அணிகளின் ப்ளே ஆஃப் வாய்ப்பை தீர்மானிக்கக் கூடியதாக இருக்கும் என எதிர்பார்க்கலாம்.

https://www.bbc.com/tamil/sport-58771190

Link to comment
Share on other sites

சென்னை அணியை அடுத்து 2 வது அணியும் Play Off சுற்றுக்கு தகுதி -முழுமையான விபரம்..!

 
Polish_20211002_010851252-696x522.jpg

பிளே-ஆப் சுற்றுக்கு தகுதி பெற்றது டெல்லி; புள்ளிகள் பட்டியல் – முழு விவரம்

நடப்பு ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் இரண்டாவது அணியாக டெல்லி பிளே-ஆப் சுற்றுக்கு தகுதி பெற்றது.

ஐபிஎல் கிரிக்கெட்டில் லீக் சுற்றுகள் முக்கிய கட்டத்தை எட்டியுள்ளது.

அணிகள் புள்ளிகள் பட்டியல் விவரம்:-

சென்னை சூப்பர் கிங்ஸ் – 11 போட்டிகளில் விளையாடியுள்ள சென்னை சூப்பர் கிங்ஸ் 9 வெற்றி, 2 தோல்விகளுடன் 18 புள்ளிகள் பெற்று பட்டியலில் முதல் இடத்தில் உள்ளது. சென்னை சூப்பர் கிங்ஸ் பிளே-ஆப் சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளது.

டெல்லி கேப்பிட்டல்ஸ் – 11 போட்டிகளில் விளையாடியுள்ள டெல்லி 8 வெற்றி, 3 தோல்விகளுடன் 16 புள்ளிகள் பெற்று பட்டியலில் 2-வது இடத்தில் உள்ளது. இன்று நடைபெற்ற பஞ்சாப்-கொல்கத்தா இடையேயான போட்டியில் பஞ்சாப் வெற்றிபெற்றதை தொடர்ந்து புள்ளிகள் அடிப்படையில் டெல்லி அணி பிளே ஆப் சுற்றுக்கு தகுதி பெற்றது.

FB_IMG_1632579756605.jpg

ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு – 11 போட்டிகளில் விளையாடியுள்ள பெங்களூரு 7 வெற்றி, 4 தோல்விகளுடன் 14 புள்ளிகள் பெற்று பட்டியலில் 3-வது இடத்தில் உள்ளது.

கொல்கத்தா நைட் ரைடர்ஸ் – 12 போட்டிகளில் விளையாடியுள்ள கொல்கத்தா 5 வெற்றி, 7 தோல்விகளுடன் 10 புள்ளிகள் பெற்று பட்டியலில் 4-வது இடத்தில் உள்ளது.

FB_IMG_1633111330565.jpg

பஞ்சாப் கிங்ஸ் – 12 போட்டிகளில் விளையாடியுள்ள பஞ்சாப் 5 வெற்றி, 7 தோல்விகளுடன் 10 புள்ளிகள் பெற்று பட்டியலில் 5-வது இடத்தில் உள்ளது.

மும்பை இந்தியன்ஸ் – 11 போட்டிகளில் விளையாடியுள்ள மும்பை 5 வெற்றி, 6 தோல்விகளுடன் 10 புள்ளிகள் பெற்று பட்டியலில் 6-வது இடத்தில் உள்ளது.

ராஜஸ்தான் ராயல்ஸ் – 11 போட்டிகளில் விளையாடியுள்ள ராஜஸ்தான் 4 வெற்றி, 7 தோல்விகளுடன் 8 புள்ளிகள் பெற்று பட்டியலில் 7-வது இடத்தில் உள்ளது.

சன்ரைசர்ஸ் ஐதராபாத் – 11 போட்டிகளில் விளையாடியுள்ள ஐதராபாத் 2 வெற்றி, 9 தோல்விகளுடன் 4 புள்ளிகள் பெற்ற பட்டியலில் 8-வது இடத்தில் உள்ளது.

https://vilaiyaddu.com/சென்னை-அணியை-அடுத்து-2-வது/

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சிஎஸ்கே - ராஜஸ்தான் ரோயல்ஸ்  ஆட்டத்தில் கெய்க்வாட்டின் ஆட்டம் அதிரடி சரவெடி.

எதிர்கால இந்திய அணியின் சேவாக்காக வருவாரோ தெரியவில்லை. 

முன்பு எல்லாம் தோனி அவுட்டாகாமல் இருந்தால் ஒரு போட்டியின் முடிவு என்ன வேண்டுமாகவும் இருக்கலாம் என்று இருக்கும், இப்போ ஜடேஜா அவுட்டாகாமல் இருந்தால் என்ன வேண்டுமென்றாலும் நடக்கலாம் என்பதை தொடர்ச்சியாக நிரூபித்து வருகிறார்,

சத்தமில்லாமலே ஜடேஜா ஒரு சாதனை புரிந்து வருகிறார்,

சச்சினுக்கு அப்புறம் இந்திய அணியில் மிக நீண்டகாலம் அனைத்து விதமான போட்டிகளிலும் அசுரதனமான ஆற்றல் கொண்டவராக மிக நீண்டகாலம் ஆடி வருகிறார்.

ஏறத்தாழ 12 வருஷம்.

 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • ஜனாதிபதித் தேர்தல் களம் தெற்கைவிட இம்முறை தமிழர் தாயகப் பிரதேசத்திலும் சூடுபிடிக்கத் தொடங்கியிருக்கின்றது. போரின் பின்னரான அனைத்து ஜனாதிபதித் தேர்தல்களிலும் தென்னிலங்கை வேட்பாளர்களை ஆதரித்த தமிழ் மக்கள் இம்முறை அத்தகைய நிலைப்பாட்டை எடுப்பதற்குத் தயங்குவதும், தமிழ்ப் பொது வேட்பாளரை நோக்கி தமிழர்கள் அணிதிரட்டப்படுவதாலும் ஜனாதிபதித் தேர்தல் விவகாரம் பேசுபொருளாகியிருக்கின்றது. ஜனாதிபதித் தேர்தலில் தமிழ்ப்பொது வேட்பாளர் களமிறக்கப்படுவது தென்னிலங்கை கட்சிகளைப்போன்று தமிழ்த்தேசியக் கட்சியைச் சேர்ந்த சிலருக்கும் கலக்கத்தை ஏற்படுத்தியிருக்கின்றது. அதே நேரம் இந்தப் பொதுவேட்பாளர் விவகாரத்தை குழப்பியடிப்பதற்கான சதி முயற்சியும் முன்னெடுக்கப்படுவதாக குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்படுகின்றன. தமிழ் மக்கள் கூட்டணியின் நாடாளுமன்ற உறுப்பினர் சி.வி.விக்னேஸ்வரனின் செயற்பாடுகள் தொடர்பில் பலத்த சந்தேகங்கள் எழுப்பப்படுகின்றன. கொள்கைத் தளம்பலான ஒருவர் இந்த விடயங்களை முன்னின்று செயற்படுத்துவதாகச் சொல்லிக்கொள்ளும் போது சந்தேகங்கள் எழுவது இயல்பானதே. பொதுவேட்பாளர் விவகாரத்தை ஆதரிப்பதாகக் காட்டிக்கொண்டு அதைக் குழப்பியடிப்பது தான் அவரது இலக்கா என்ற கேள்வியும் எழுகின்றது. ஏனெனில் அவரின் நடவடிக்கைகள் அப்படியானவையாகத்தான் அமைந்திருக்கின்றன. ஜனநாயக தமிழ்த் தேசியக் கூட்டணியே, ஜனாதிபதித் தேர்தலில் பொதுவேட்பாளரைக் களமிறக்கும் யோசனையை முன்வைத்தது. அது தொடர்பில் பல தரப்புகளையும் சந்தித்துக் கலந்துரையாடியிருந்தது. இதேகாலப் பகுதியில் விக்னேஸ்வரன், ‘ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க நாட்டுக்கு நல்லது செய்கிறார். அவரைத்தான் ஆதரிப்பேன்' என்று அறிக்கைவிட்டார். பின்னர் ரணில் ஏமாற்றிவிட்டார் என்று சொன்னார். திடீரென பொதுவேட்பாளர் விவகாரம் தொடர்பில் கூட்டத்தை ஒழுங்குபடுத்தினார். அது தொடர்பில் அறிக்கைகள் விடுத்தார். இந்த விவகாரத்தை முன்னெடுத்த தரப்புகளுடன் எந்தவொரு சந்திப்பையும் நடத்தாமல் தான்தோன்றித்தனமாக விக்னேஸ்வரன் விடயங்களைக் கையாள்கின்றார். இது தமிழ்ப்பொதுவேட்பாளர் விவகாரத்தை எதிர்க்கும் தரப்புகளுக்கு வாய்ப்பாக அமைந்திருக்கின்றது. ஜனாதிபதித் தேர்தலுக்கான வேட்புமனு கோரப்பட்ட பின்னர் தமிழ்ப்பொதுவேட்பாளர் யார் என்பதைப் பகிரங்கப்படுத்தலாம். விக்னேஸ்வரன் பொறுமை காக்கவேண்டும். இலங்கையிலுள்ள தமிழ்மொழி பேசும் அனைவரும் ஆதரிக்கக்கூடிய ஜனரஞ்சகமான தலைவர் ஒருவராக இருக்கவேண்டும். அப்படிப்பட்டண்டும். ஒருவரையே தமிழ்ப்பொதுவேட்பாளராக களமிறக்க வேண்டும். தமிழ்ப்பொதுவேட்பாளர் என்பது ஒரு அரசியல் தீர்மானம். எப்படி வட்டுக்கோட்டைத் தீர்மானம் காலம் கடந்தும் நிலைத்து நிற்கின்றதோ அதே போன்று தமிழ்ப்பொதுவேட்பாளர் விவகாரமும் அமையவேண்டும். நாடு முழுவதிலிருந்தும் ஆகக் குறைந்தது 15 லட்சம் வாக்குகளையாவது அவர் திரட்டிக்கொள்ளக் கூடியவராக இருக்கவேண்டும். முஸ்லிம் மற்றும் மலையக சமூகங்களின் அரசியல் தலைவர்கள் தென்னிலங்கை தரப்புகளுடன் ஒட்டிக் கொண்டிருந்து அமைச்சுப் பதவியை பெறுபவர்கள். அவர்கள் எந்தளவு தூரம் பொதுவேட்பாளர் விவகாரத்துடன் ஒத்துழைத்துச் செயற்படுவார்கள் என்பது கேள்விக்குறியானது. இவ்வாறான சூழலில் அனைத்துத் தரப்புகளுடனும் அவதானமாகவும் - நிதானமாகவும் கலந்துரையாடல் நடத்தவேண்டும். அதைவிடுத்து விக்னேஸ்வரன் போல, மின்னஞ்சலில் போதிய அவகாச மின்றி அழைப்பு அனுப்பிவிட்டு கலந்துரையாடல் நடத்த கூடாது. விக்னேஸ்வரன் தலைமை தாங்கிய எந்தவொரு விடயமும் நேர்சீராக நடைபெறவில்லை. மாகாண சபையாக இருக்கலாம் அல்லது தமிழ்மக்கள் பேரவை என்ற சிவில் அமைப்பாக இருக்கலாம் அல்லது அவரது கட்சியாக இருக்கலாம். எங்குமே அவர் ஒரே கொள்கையோடு இயங்காமையால் கடைசியில் அவையெல்லாமே குழப்பத்துக்குள் சிக்கி, செயற்றிறனை இழந்ததைக் கண்முன்னே பார்த்தோம். அப்படிப்பட்ட ஒருவர் தனது அவசரத்தனமான நடவடிக்கைகளால் தீர்க்கமான அரசியல் முடிவை குழப்பியடித்துவிடக்கூடாது என்பதே மக்களின் ஆதங்கம். (16. 04.2024-உதயன் பத்திரிகை)   https://newuthayan.com/article/அவசரத்தனங்களும்_குழப்பங்களும்...
    • இலங்கையில் தமிழர்களுக்கு மாத்திரமல்லாமல் முஸ்லிம்களுக்கும் தாய்மொழி தமிழ்தான். இதனாலேயே தமிழர்களையும் முஸ்லிம்களையும் ஒன்றிணைக்கும் முயற்சியில் தந்தை செல்வா ஈடுபட்டார். இதனால் 'தமிழ்பேசும் மக்கள்' என்ற சொல்லை தந்தை செல்வா பாவிக்கத்தொடங்கினார். இலங்கை சுதந்திரமடைந்த காலம் தொட்டு இரு தரப்பு அரசியல்வாதிகளும் தமிழ் முஸ்லிம் ஒற்றுமை பற்றிப் பேசி வருகின்றனர். தமிழ்த் தேசிய அரசியல்வாதிகளும் பல விட்டுக்கொடுப்புகளைச் செய்து தமிழ் முஸ்லிம் ஒற்றுமையை கட்டியெழுப்ப அன்றிலிருந்து இன்று வரை பாடுபட்டு வருகின்றனர். ஆனால் முஸ்லிம்களோ மொழிரீதியான பிணைப்பைக் கணக்கிலேயே எடுப்பதில்லை. அவர்கள் எப்போதுமே தம்மைத் தனியான இனமாக முன்னிறுத்துவதிலும், தமது நலன்களைப் பெற்றுக்கொள்வதிலுமே கண்ணும் கருத்துமாக இருக்கின்றனர். ஒரு சிறுபான்மை இனம் என்ற அடிப்படையில், முஸ்லிம்கள் தமது நலன்களை முன்னுரிமைப்படுத்திச் செயற்படுவதில் எவ்விதத் தவறுமில்லை என்று தமிழர்கள் கடந்துசென்றுவிடலாம். ஆனால், ஒரே மொழியைப்பேசிக்கொண்டு, சகோதர இனம் என்று சொல்லிக்கொண்டு, தமிழர்களை ஒடுக்கும் செயற்பாடுகளை முஸ்லிம்கள் மேற்கொள்வதைத்தான் ஜீரணிக்க முடியாமல் இருக்கின்றது. குறிப்பாக கிழக்கு மாகாணத்தில் கல் முனையில் முஸ்லிம்கள் தமிழர்களின் இருப்பை கேள்விக்குறியாக்கும் செயற்பாடுகளை காலாதிகாலமாக மேற்கொண்டு வருகின்றனர். இதனால் கல்முனைத் தமிழர்கள் சாட்சிக்காரனின் காலில் வீழ்வதை விட சண்டைக்காரனின் காலில் வீழ்வதே மேல் என்ற நிலைப்பாட்டுக்குத் தள்ளப்பட்டுள்ளனர். இலங்கைத்தீவை நிர்வகிப்பதற்கு 256 பிரதேச செயலர் பிரிவுகள் உருவாக்கப்பட்டுள்ளன. இந்த 256 பிரதேச செயலகங்களின் ஊடாக அந்தந்தப் பிரதேசத்துக்குரிய மக்கள் தமது தேவைகளை பூர்த்தி செய்து வருகின்றனர். இப்படிப்பட்டநிலையில், கல்முனைப் பிரதேச செயலர் பிரிவில் முஸ்லிம் பிரதேச செயலர்களே தொடர்ச்சியாக நியமிக்கப்பட்டு வந்தனர், வருகின்றனர். இவர்கள் முஸ்லிம்களுக்குச் சார்பாக நடந்து கொள்வதாக தமிழர்கள் தொடர்ச்சியாகக் குற்றஞ்சாட்டி வந்தனர். இதனால் கல்முனை பிரதேச செயலர் பிரிவு 1989 ஆம் ஆண்டு முஸ்லிம் பிரிவு, தமிழ்ப் பிரிவு என இரண்டாகப் பிரிக்கப்பட்டது. இவ்வாறு கல்முனைப் பிரதேச செயலர் பிரிவு இரண்டாகப் பிரிக்கப்பட்டபோது முஸ்லிம் பிரதேச செயலர் பிரிவு முழு அதிகாரத்துடன் செயற்படத் தொடங்கியது. தமிழ்ப் பிரிவுக்கு முழுமையான அதிகாரங்களை வழங்க விடாமல் முஸ்லிம் அரசியல்வாதிகள் ஆட்சியாளர்களுக்கு சிங்களவர்கள் அழுத்தம்கொடுத்தனர், இப்போதும் அதே அழுத்தத்தைக் கொடுத்து வருகின்றனர். கல்முனை தமிழ்ப் பிரிவு பிரதேச செயலகம் 'உதவி அரசாங்க அதிபர் பிரிவு' என்றே இன்றுவரை அழைக்கப்பட்டு வருகிறது. இதன்மூலம் அதன் அதிகாரங்கள் மட்டுப்படுத்தப்பட்டுள்ளமையை உள்ளார்ந்தமாக உணரலாம். தமிழ்ப் பிரிவுக்குரிய காணி, நிதி போன்ற விடயங்கள் முஸ்லிம் பிரிவின் கீழேயே உள்ளன. இலங்கை அரசியலில் பௌத்த பிக்குகள் தான் தீர்மானிக்கும் சக்தியாக விளங்குகின்றனர். அப்படியிருந்தும் ஞானசார தேரராலோ, சுமணரத்ன தேரராலோ கல்முனை தமிழ் பிரதேச செயலர் பிரிவை தரமுயர்த்த முடியவில்லை.சுமணரத்ன தேரர், ஞானசாரதேரர் ஆகியோரை விட முஸ்லிம் அரசியல்வாதிகளின் செல்வாக்கு கொழும்பு அரசியலில் கூடுதலான தாக்கம் செலுத்துகிறது என்பதே யதார்த்தம். கல்முனைப் பிரதேச செயலக தமிழ்ப் பிரிவை பூரண அதிகாரமுள்ள பிரதேச செயலகமாக தரமுயர்த்தக்கோரி கடந்த 35 வருடங்களாக கல்முனைத் தமிழர்கள் பல்வேறு சாத்வீகப் போராட்டங்களை முன்னெடுத்திருந்தனர். எனினும் இன்றுவரை கல்முனை தமிழர்களுக்கு நீதி கிட்டவில்லை. இந்த வருடமும் தமிழ்ப் புத்தாண்டை கல்முனைத் தமிழர்கள் கரிநாளாக அனுஷ்டித்தனர். இந்த நிமிடம் வரை கொட்டும் மழைக்கு மத்தியிலும் கல்முனைத் தமிழர்கள் தொடர் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இறுதியாக நடைபெற்ற மாகாணசபைத் தேர்தலிலும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கிழக்கு மாகாணத்தில் கூடுதலான ஆசனங்களைப் பெற்றிருந்தும், கிழக்கு மாகாண முதலமைச்சர் பதவியை முஸ்லிம் காங்கிரஸுக்கு தாரைவார்த்துக்கொடுத்தது. கிழக்கு மாகாண சபை கலைக்கப்பட்டதும் முதலமைச்சர் அஹமட் நஷீர் ‘வடக்கையும் கிழக்கையும் இணைப்பதற்கு தான் ஒருபோதும் அனுமதிக்கமாட்டேன்' என்று அறிக்கைவிட்டு, தமிழர்களின் அடிப்படைக்கோரிக்கையையே நிராகரித்தார் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பால் பதவிக்கு வந்த முதலமைச்சரான நஷீர் யுத்தம் நடைபெற்ற காலத்திலும் யுத்தம் முடிந்த பின்னரும் தமிழர்களுக்கு கிடைக்கவேண்டிய வேலை வாய்ப்புகள், உயர்கல்வி வசதிகள் போன்றவற்றை தமிழ்மொழியை பேசுகின்ற காரணத்தால் முஸ்லிம்கள் தட்டிப்பறித்து வருகின்றனர் என்றொரு குற்றச்சாட்டு பொதுவாக உண்டு. ஆனால், ஒரு பிரதேச செயலகத்தைக் கூட தரமுயர்த்த அனுமதிக்காமல், இன்னொரு சிறுபான்மையினரின் அடிப்படை உரிமைகளைக் கூடவா தட்டிப்பறிப்பார்கள்? தமிழ் அரசியல்வாதிகள் தீர்க்கமான ஒரு முடிவெடுக்கவேண்டிய தருணம் வந்து விட்டது. தமிழ் - முஸ்லிம் ஒற்றுமை என்றைக்கும் இருக்கத்தான் வேண்டும். ஆனால் அதைச் சொல்லிச் சொல்லியே முஸ்லிம்கள் எல் லாவற்றையும் பறித்தெடுக்க, நாம் மட்டும் இலவு காத்த கிளிகளாக ஏமாந்து கொண்டே இருக்கிறோம். இனியும் அவ்வாறான விட்டுக்கொடுப்புகளுக்கு இடமளிக்காமல், முதலில் தமிழர் நலன் அதன்பின்னரே தமிழ்-முஸ்லிம் ஒற்றுமை என்ற நிலைப்பாட்டுக்கு தமிழ்மக்களும், தமிழ் அரசியல்வாதிகளும் வரவேண்டும். அப்போதுதான் எஞ்சியவற்றையாவது இழக்காமல் காக்க முடியும். (17. 04.2024-உதயன் பத்திரிகை)   https://newuthayan.com/article/இனநலனா!_ஒற்றுமையா!!!
    • முடிவாய் ரணிலையும் விடுறதாக இல்லை , அவர் பணக்கார வீட்டு  பிள்ளை , சந்து பொந்தெல்லாம் போகாமலா  இருந்திருப்பார் . பழம் இருக்கிறவன் அதன் சுவையை ருசிக்கிறான் ....அம்புட்டுதான் 
    • என்ன இது எங்க போனாலும் கொழுவி இழுக்க பார்க்கிறிங்க.  சுமா வை பற்றி தெரியும் என்றால் ஏன் கோத்திரத்தை அப்படி என்று எடுக்கிறீர்கள்.  என்ன பொறுத்தவரை உயர்ந்த குலமா அப்படியா இல்லையா என்பதல்ல ஏன் ஆதங்கம். பொறுக்கித்தனம் செய்பவனை பொறுக்கி என்பதுபோல தான் இது.  தப்பான பழக்கங்களை செய்கின்ற ஆள் தப்பான குலம் அவ்வளவு தான். 
    • பிரிதலும் புனிதமானது : சிவபாலன் இளங்கோவன் மார்ச் 2024 - சிவபாலன் இளங்கோவன் · உளவியல்   சஞ்சய்குமாருக்கு அவனது அத்தைப்பெண்ணான மீராவுடன் சிறு வயதிலிருந்தே காதல். சிறுவயதென்றால் பத்தாவது, பதினொன்றாவது படிக்கும் வயதிலிருந்தே. மீரா சென்னையில் இருந்து சஞ்சயின் கிராமத்து வீட்டிற்கு வரும்போதெல்லாம் சஞ்சய் ஏகாந்த மனநிலையில் இருப்பான்.  மீராவின் அப்பா சென்னையில் வங்கி மேலாளராக இருக்கிறார். சஞ்சய்க்கு அத்தனை வசதியில்லை. மீராவிற்குச் சிறு வயதில் சஞ்சயைப் பார்க்கபோவது மகிழ்ச்சியானதாகவே இருந்தது. இருவரும் கல்லூரி செல்லும் வரை அது ஓர் இளம் பிராயத்துக் காதலாகவே தொடந்து வந்தது. மீரா கல்லூரிப் படிப்பிற்காக டெல்லி சென்றாள். அதன் பிறகு கொஞ்சம் கொஞ்சமாகச் சஞ்சயைத் தவிர்த்து வந்தாள். சஞ்சயால் இதை ஏற்றுக்கொள்ள முடியவில்லை. அடிக்கடி அவளிடம் சண்டை போட்டான். முதலில் பொறுமையாக விளக்கம் கொடுத்துக்கொண்டிருந்தவள் அதன் பிறகு அவன் ஏதாவது பேச ஆரம்பிக்கும்போதே தொடர்பைத் துண்டித்துவிடச் செய்தாள். அதன் பிறகு எத்தனை முறை அவன் கால் செய்தாலும் அழைப்பை ஏற்க மாட்டாள், இன்னொரு பொழுது அவன் அழைத்தால் எதுவும் நடந்த மாதிரியே காட்டிக்கொள்ளாமல் பட்டும் படாமல் பேசுவாள். இப்படியே மூன்று வருடங்கள் சென்றது. டெல்லியில் அவள் படிப்பை முடித்து வந்தபோது சஞ்சய் ஒரு சாதாரண கம்பெனியில் வேலைக்குச் சேர்ந்திருந்தான். அவள் வந்தவுடன் அவளிடம் திருமணம் செய்துகொள்ளலாம் எனப் பேசினான். அவள் அலட்சியமாகச் சிரித்தாள். “உனக்கு என்ன பைத்தியமா? எனக்கு 22 வயதுதான் ஆகுது, அதுக்குள்ள உன்ன கல்யாணம் பண்ணி குழந்தை பெத்துக்கணுமா?” எனக் கோபமாகக் கேட்டாள் “உனக்கு என்ன பிடிக்கல, என்கிட்ட இருந்து விலகிப் போகணும்னு நினைக்கிற, அதான் ஏதேதோ காரணம் சொல்ற” என அவனும் கோபப்பட்டான் அவள் அவனிடம் எந்த வாக்குவாதமும் செய்யவில்லை. “உன்கிட்டலாம் பேசிப் புரிய வைக்க முடியாது”  என எழுந்து சென்றாள். சஞ்சய் அவன் பெற்றோர்களைக் கட்டாயப்படுத்தி மீரா வீட்டில் பெண் கேட்க சொன்னான். மீரா அவர்களிடம் பக்குவமாகச் சொல்லி நிராகரித்தாள். “எங்க வீட்ல உன்ன கல்யாணம் பண்ண ஒத்துக்க மாட்டாங்க, முதல்ல எனக்கே இப்ப கல்யாணம் பண்ண இஷ்டம் இல்ல, நான் வெளி நாடு போய் மாஸ்டர்ஸ் படிக்கப் போறேன், எனக்கு நிறைய கனவுகள் இருக்கு” என்று அவனிடம் சொன்னாள் “யாரோ நல்ல வசதியான ஒருத்தன புடிச்சிட்ட அதான் என்ன கழட்டிவிடற” என அவளை நடுரோட்டில் எல்லார் முன்பாகவும் கத்தி அசிங்க அசிங்கமான வார்த்தைகளால் அவமானப்படுத்தி அனுப்பினான். மீரா அழுதுகொண்டே வீட்டிற்கு வந்தாள். ஆண்-பெண் உறவில் சேர்தலைப் போலவே பிரிதலையும் நாம் இயல்பானதாகக் கருத வேண்டும். சேர்தலைப் போலவே பிரிதலின் முடிவையும் மதிக்கும் பண்பை அந்தக் காதலின் நிமித்தமே வளர்த்துக்கொள்ள வேண்டும்.   ஓர் உறவில் இருந்து வெளியே போவதற்கான கதவு எப்போதும் திறந்தே இருக்கிறது என்னும் நிலையில் இருக்கும் உறவுகளே மிகவும் பக்குவப்பட்ட உறவுகளாக, பரஸ்பர அன்பை ஆத்மார்த்தமாகக் கொண்ட உறவாக இருக்கும் என்பது எனது எண்ணம். அத்தனை கதவுகளையும் பூட்டிவிட்டு எங்களது உறவு ஆத்மார்த்தமானது என்று சொல்வது நிச்சயம் அபத்தமானது. ஒரு காதல் ஏற்படுதற்கு இருவருக்கும் இருக்கும் பக்குவம், பொறுப்புகள், முதிர்ச்சி, அக மற்றும் புறச் சூழல்கள் எனப் பல்வேறு காரணங்கள் இருக்கும். இந்தக் காரணங்கள் எல்லாம் மாறக்கூடியவை. ஒருவருக்கு இருக்கும் பக்குவமும், முதிர்ச்சியும் அவரின் வயதைப் பொறுத்து மாறிக்கொண்டிருக்கும் அதே போலவே ஒருவரின் அக, புறச் சூழல்கள் தொடர்ச்சியாக மாறிக்கொண்டிருப்பவை. ஒரு காதல் தொடங்கிய தருணத்தில் இருந்த இந்தக் காரணிகள் எல்லாம் அதற்குப் பிறகு மெல்ல மெல்ல மாறிக்கொண்டிருப்பவை. காதலுக்கான காரணங்கள் நீர்த்துப்போகும்போது அங்குக் காதலும் முடிந்து போகிறது. அதை நீட்டிக்க வேண்டிய தேவை இல்லாமல் போய்விடுகிறது, அப்போது அங்குக் காதல் முடிவுக்கு வருகிறது, முடிவுக்கு வரும் காதலை ஏற்றுக்கொள்ளாமல் அதற்கான அத்தனை கதவுகளையும் அடைத்துக் கட்டாயப்படுத்தும்போது அதுவரை இருந்த காதலே கேள்விக்குறியாகிறது, பழகிய கணங்களின் மீது ஓர் ஒவ்வாமை ஏற்படுகிறது, அந்த மூர்க்கத்தனத்தைக் காதலையே மலினப்படுத்தும், சிறுமைப்படுத்தும் செயலாகவே பார்க்க முடியும். சஞ்சய்க்கும் மீராவிற்கும் இருந்தது ஓர் இளம் பிராயத்துக் காதல். சிறு வயதிலேயே துளிர் விட்ட காதல். ஒரு வகையிலான இனக்கவர்ச்சி. ஒருவர் மீதான மோகமே அந்தக் காதலுக்கு அடிப்படை. அந்த வயதில் எந்தப் பொறுப்புகளும் இல்லை, பக்குவமும் இல்லை, இலக்குகளும் இல்லை. ஒருவர் மீது ஒருவர் ஈர்ப்பாக இருப்பது மட்டுமே அந்தப் பருவத்தில் போதுமானது, அதுவும் எப்போதாவது சந்திக்கிற சில நாள்களில் மட்டும் அந்த ஈர்ப்பு இருந்தால் போதுமானது, அதுவே பரஸ்பரக் காதல் என அவர்கள் உணர்ந்து கொண்டார்கள். ஆனால் இருவரும் வளரும் போது இருவருக்கான தனிப்பட்ட அடையாளங்கள் ஆளுமைப் பண்புகள் உருவாகின்றன. எதிர்காலம் குறித்த கனவுகளும், லட்சியங்களும் உருவாகின்றன. இந்தச் சூழலில் காதலென்பது வெறும் ஈர்ப்பு மட்டுமே அல்ல, பரஸ்பரமாக ஒருவரை ஒருவர் புரிந்து கொள்வது, அவர்களின் ஆளுமைப் பண்புகளை ஏற்றுக்கொள்வது, அவர்களின் கனவுகளையும், லட்சியங்களையும் மதிப்பது. இதில் போதாமைகள் ஏற்படும்போது ஒருவர் மீதான ஒருவரின் காதல் தன்னை மறுபரிசீலனை செய்து கொள்கிறது. அந்த காதலை நீட்டிப்பதற்கான தேவைக் குறித்து கேள்வி எழுகிறது. ஒரு பிராயத்தில் ஒருவருடன் பழகிய காரணங்களுக்காகவே இந்த எதிர்பார்ப்புகளை எல்லாம் புறம் தள்ள முடியாது. மீராவின் லட்சியங்களும், கனவுகளும் சஞ்சயைப் பொறுத்த வரை தேவையில்லாதவை. மீராவிற்கு அவன் மட்டுமே பிரதானமாக இருக்க வேண்டும், மீதி அத்தனையையும் அவள் நிராகரிக்க வேண்டும் என எதிர்பார்க்கிறான். ஆனால், மீராவோ தனது விருப்பங்களுக்கும் கனவுகளுக்கும் அவன் துணை நிற்க வேண்டும், அவளின் இந்த முடிவுகளை அவன் மதிக்க வேண்டும் என நினைக்கிறாள். அப்படி அவன் இருக்கும்போதே அவனின் மீது காதலுடன் இருக்க முடியும் என அவள் உணர்கிறாள். அப்படி அவன் இல்லை மாறாக அவன் அவளை எப்போதும் கட்டுப்படுத்த நினைக்கிறான், அவன் சொல்வதற்கு மாறாக அவள் நடந்து கொள்ளக்கூடாது என நினைக்கிறான் என்பது அவளுக்கு ஏமாற்றமாக இருக்கிறது. ஏன் இந்தக் காதலைத் தொடர வேண்டும் என அவள் நினைப்பதற்கு அவனின் இந்தப் போதாமைகள் முக்கியமான காரணம். ஆனால், சஞ்சயை பொறுத்தவரை அவளின் இந்த எதிர்பார்ப்புகளைச் சிறுமைப் படுத்துகிறான். அவளுக்கு வேறு யார் கூடவோ பழக்கம் இருக்கிறது அதனாலே தன்னை நிராகரிக்கிறாள், அவளின் படிப்பிற்கும், வசதிக்கும் தன்னைத் தகுதியானவன் இல்லை என அவள் நினைகிறாள் என அவளை மலினப்படுத்துகிறான். ஒருபோதும் அவன் தனது நடவடிக்கைகள் குறித்து உணரவே இல்லை, அவளின் மீதே அத்தனை குற்றசாட்டுகளையும் சுமத்துகிறான். இது மீராவிற்கு மூச்சு முட்டவைக்கிறது, அதை அவனிடம் சொல்ல முற்படும்போது அவன் அவளைத் திருமணம் செய்து கொள்ளலாம் எனக் கட்டாயப்படுத்துகிறான். ஒரு போதும் அவன் மாறப்போவதேயில்லை என உணர்ந்து கொண்ட மீரா அவனிடம் இருந்து நிரந்தரமாகப் பிரிந்து விடும் முடிவை எடுக்கிறாள். அந்த முடிவைச் சஞ்சய் எப்படி எதிர்கொள்கிறான்? மிகவும் உணர்ச்சிவசப்பட்டு மூர்க்கமாக எதிர்கொள்கிறான். அவளின் அத்தனை வருடக் காதலைக் கொச்சைபடுத்துகிறான், அவளை மோசமாகச் சித்தரிக்கிறான் அவனது குற்றசாட்டுகளில் அவன் இத்தனை நாள்கள் அவள் மீது துளியும் காதல் கொண்டிருக்கவில்லை என்பதுதான் தெரிகிறது. இந்தப் பிரிவை எதிர்கொள்ள அவன் இன்னும் பக்குவப்பட வேண்டும். பக்குவமற்று, உணர்ச்சிவசப்பட்ட நிலையில் பிரிதலை அணுகும் போக்கு இரண்டு பாலினரிடையுமே இருக்கிறது. நவீன காதலில் பிரிதலை அணுகும் பக்குவம் கொஞ்சம் ஏற்பட்டிருக்கிறது என நினைக்கிறேன். ஆனால் சினிமாக்களும், ஊடகங்களும் காதலில் பெண்களை எதிர்மறையாகச் சித்தரிக்கும் போக்கு தொடர்ந்து கொண்டுதான் இருக்கிறது. இதன் பாதிப்பில் வளரும் இளைஞர்கள் பெண்களின் மீதான பொத்தாம்பொதுவான சில பொதுப்பார்வைகளுடன் இருக்கின்றனர் அதனால் பிரிதலை, பிரிவதற்கான முடிவைப் பெண்களுக்கான ஒன்றாகவே, பெண்களின் குணாதிசயம் என்றளவிலே புரிந்து கொள்கிறார்கள், இது பிரிதலுக்கான காரணங்களை முழுமையாக உணர்ந்து கொள்வதிலிருந்து அவர்களைத் தடுக்கிறது. ‘அந்தப் பெண் என்னை வேண்டாம் என்று சொன்னதற்கு நானும் ஒரு காரணம்’ என்பதை ஏற்றுக்கொள்வதிலிருந்து தப்பித்துக்கொள்ளலாம் என்பதால் பெண்களின் மீதான இந்தச் சித்தரிப்பைப் பெரும்பாலான ஆண்களும் மனமுவந்து ஏற்றுக்கொள்கிறார்கள். பிரிதலைப் பக்குவமாக ஏற்றுக்கொள்ளும் ஒருவரால்தான் அதற்கான காரணங்களை விருப்பு, வெறுப்புகளின்றி, முன்முடிவுகளின்றி ஏற்றுக்கொள்ளும் ஒருவரால்தான் அதுவரையிலான அந்தக் காதலில் உண்மையாக இருந்திருக்க முடியும். அப்படி இல்லாதவர்களால் அதுவரை இருந்த காதலே அர்த்தமற்றுப் போகிறது. எப்படிப் பிரிவது? “எனக்கு நல்லாவே தெரியுது, இந்த ரிலேஷன்சிப்னாலதான் நான் இவ்வளவு கஷ்டப்படுறேன், இதனால நான் நிறைய அவமானங்களைச் சந்திக்கிறேன், என்னைப் பற்றி நானே குற்றவுணர்ச்சி கொள்ற அளவுக்கு அவதிப்படறேன், இதுல இருந்து வெளிய போகணும்னு நினைக்கிறேன் ஆனால் போக முடியல, எப்படியாவது இதுல இருந்து நான் வெளிய போறதுக்கான வழிய சொல்லுங்க” தினமும் இப்படிப்பட்ட சிலரையாவது நான் எனது கிளினிக்கில் பார்த்து விடுகிறேன். எப்படிப் பிரிவது? என்பதுதான் அவர்களின் தவிப்பு. நீண்ட நாள் காதலன் தன்னை நிராகரிக்கிறான் என்பது தெளிவாகத் தெரிந்த பின்னரும் அவனை விட்டு நீங்க முடியாமல் இருப்பது, திருமணத்தைத் தாண்டிய ஓர் உறவு தவறு என்று தெரிந்த பின்னரும்கூட அதை விட்டு வெளியே போக முடியாமல் வருந்துவது, திருமணம் தரும் வலிகளில் இருந்து, வன்முறைகளில் இருந்து நிரந்தரமாகச் செல்ல முடிவு செய்து அதை ஏற்றுக்கொள்ள முடியாமல் தவிப்பது எனச் சேர்வது எப்படி என்று வருவோரைவிட, பிரிவது எப்படி என்னிடம் வருபவர்களின் எண்ணிக்கை சில நேரங்களில் அதிகமாகவே இருக்கிறது. அதுவும் நவீன காதல்களில் லிவிங்கில் இருக்கும் நிறைய இணையர்களில், தங்கள் உறவு முடிவுக்கு வருவதை ஏற்றுக்கொள்ள முடியாமல் தவிப்பவர்கள் ஏராளமானவர்கள். ஒரு பால் உறவிலும்கூடப் பிரிவை தாங்கிக்கொள்ள, ஏற்றுக்கொள்ளாமல் துயரத்தில் உழல்பவர்கள் நிறையப் பேர். இவர்கள் அனைவரின் பிரச்சினையும் ஒன்றே ஒன்று தான், பிரிவு தரும் வலியைத் தாங்க முடியாமல் இருப்பதே! ஓர் ஆத்மார்த்தமான உறவு என்பது எப்போதும் நம்மைப் பற்றியான நமது மதிப்பீட்டை உயர்வாகத்தான் கொண்டிருக்கும், எத்தனையோ முரண்பாடுகள் இருந்தாலும் ஒருவர் மீதான மதிப்பு என்பது மாறாமல் இருக்கும், பிறரின் முன்னிலையில் தனது இணையைப் பெருமிதமாகவே காட்டிக்கொள்ள விளைவார்கள். தனது இணை அவமானப்படுவதையோ அல்லது குற்றவுணர்ச்சி கொள்வதையோ ஒர் ஆத்மார்த்த காதலில் உள்ளவர்கள் நிச்சயம் விரும்ப மாட்டார்கள். ஓர் உறவின் விளைவாக நான் தாழ்வு மனப்பான்மை கொண்டாலோ, அவமானப்பட்டாலோ, குற்றவுணர்ச்சி கொண்டாலோ அந்த உறவு ஆத்மார்த்தமானதாக இல்லையென்று பொருள். அப்படிப்பட்ட உறவு இருவரையும் எப்போதும் காயப்படுத்திக்கொண்டேதான் இருக்கும், அப்படிப்பட்ட உறவை முடிவுக்குக் கொண்டு வருவதன் வழியாகவே அந்த உறவையும், அதில் உள்ளவர்களையும் காப்பாற்ற முடியும்.  அப்படிப்பட்ட உறவில் இருந்து பிரிய வேண்டும் என்ற முடிவு எடுக்கும்போது முதலில் அந்த முடிவில் உறுதியாக இருக்க வேண்டும். பிரிவதற்கான படிநிலைகள்: பிரிவதற்கான காரணங்களை உணர்வது பிரிவதற்கான முடிவைப் பரஸ்பரமாக எடுப்பது முடிவை ஏற்றுக்கொள்வது பிரிவின் வலியைக் கடந்து வருவது பிரிவில் இருந்து முழுமையாக வருவது பிரிய வேண்டும் என முடிவுசெய்துவிட்டால் அதற்கான காரணங்களை இருவரும் நிதானமாக, பரஸ்பரக் குற்றசாட்டுகள் இன்றி நிதானமாக உரையாட வேண்டும். ஏன் இதைத் தொடர வேண்டாம் என்பதை அத்தனை முதிர்ச்சியாக இருவரும் விவாதித்து முடிவெடுக்க வேண்டும். நிறைய நேரங்களில் பிரிய வேண்டும் என ஒருவர் மட்டுமே முடிவு செய்து விட்டு அதை இன்னொருவரிடம் தெரிவிக்காமல் அவரே புரிந்து கொள்ளட்டும் என அவரை அலட்சியம் செய்யும் போதுதான் நிறைய பிரச்சினைகள் வருகின்றன அது இந்தப் பிரிதலை இன்னும் சிக்கலாக்குகிறது. ஓர் உறவில் நாம் இருக்கும் போது அதை தொடர வேண்டாம் என நினைத்தால் அதற்கான காரணங்களைத் தெரிந்து கொள்ளக்கூடிய உரிமை இன்னொருவருக்கு இருக்கிறது, அதனால் அந்த முடிவைத் தெளிவாக இணையருக்கு தெரிவிக்கவேண்டிய கடமை அந்த முடிவை எடுத்தவருக்கு இருக்கிறது. அவர் அந்தக் காரணங்களை ஏற்றுக்கொள்கிறாரோ இல்லையோ அதைச் சொல்ல வேண்டியது ஒருவரின் பொறுப்பு. அதே போல நிறைய நேரங்களில், பிரியலாம் என்ற முடிவை எடுத்த பின்பும் அதை ஏற்றுக்கொள்வதில் இருக்கும் தயக்கம் அந்தப் பிரிவைச் சிக்கலாக்கும். பல்வேறு காரணங்களால் பிரிய வேண்டும் என்ற முடிவை எடுத்த பின், அதை இன்னொருவரிடம் தெளிவாகத் தெரிவித்த பிறகு அந்த முடிவை ஏற்றுக்கொள்ள வேண்டும். “இல்லை நான் இன்னும் முழுமையாகப் பிரியவில்லை, நாளைக்கேகூட அவர் திரும்ப என்னிடம் பேசுவதற்கு வாய்ப்பிருக்கிறது, அப்படிப் பேசினால் திரும்பவும் அத்தனையும் தொடரும்” எனச் சாத்தியமற்ற எதிர்பார்ப்புகளை மீண்டும் மீண்டும் கொண்டிருப்பதால் அந்தப் பிரிவைச் சார்ந்த துயரம் இன்னும் பலமடங்காகும். ஓர் இழப்பை, அது இழப்பென்று ஏற்றுக்கொண்டால் மட்டுமே அந்த இழப்பில் இருந்து நம்மால் வெளியே வர முடியும். இல்லை நான் இழக்கவில்லை என நமக்கு நாமே சமாதானம் செய்து கொண்டிருந்தால் அந்த இழப்பில் இருந்து வெளியே வரும் காலமும் அதிகமாகும், காயமும் அதிகமாகும். பிரிதல் என்பது நினைவுகளாலானது. ஒருவரை விட்டு ஒருவர் நீங்கும்போது அவரைச் சார்ந்த நினைவுகளும், அவருடன் இருந்த கணங்களின் நல்லுணர்வுகளும் ஒருவரை ஆழ்ந்த துயரத்தில் ஆழ்த்தும். அந்தத் துயரத்தை தவிர்க்க முடியாது. அந்தத் துயரமே அத்தனை காலக் காதலின் அடையாளம். அதை ஒருவர் கடந்துதான் வரவேண்டும். “என்னால அவளோட நினைவுகளை தாங்கிக்க முடியல,ரொம்ப கஷ்டமா இருக்கு, ஏதாவது மாத்திரை இருந்தா கொடுங்க, அவள மறக்கற மாதிரியான மாத்திரை” என நிறையப் பேர் கேட்பார்கள். ஒருவரை மறப்பதற்கான மாத்திரை என்பது உலகத்தில் இதுவரையிலும் கண்டுபிடிக்கவில்லை, அப்படி ஒரு மாத்திரை இருந்தால் உலகத்திலேயே அதிக விலையுள்ள மாத்திரை அதுவாகத்தான் இருக்கும். பிரிவு என்பது துயரமானதே. அந்தத் துயரத்தைக் கடந்து வருவதே ஒரு பிரிவின் உண்மையான சவால். கடந்து வர எவ்வளவு நாள் ஆகும் என்பது உங்கள் காதலை, உங்கள் முதிர்ச்சியை, பிரிவை ஏற்றுக்கொண்ட பக்குவத்தை அடிப்படையாக்க் கொண்டது. முழுமையாகப் பிரிவதுதான் பிரிவை இன்னும் இலகுவாக்கும். “நான் கொஞ்சமாக அவனிடம் இருந்து வெளியே வந்துவிடலாம் என இருக்கிறேன், திடீரென நான் பேசுவதை நிறுத்திக்கொண்டால் அவன் தாங்க மாட்டான், அதுவே நான் அவனிடம் இருந்து சிறிது சிறிதாக விலகினால் அவன் புரிந்துகொள்வான்” என்று ஒரு பெண் என்னிடம் சொன்னாள். நிறையப் பேருக்கும் பிரிதலையொட்டி இந்த நிலைப்பாடே இருக்கும். மதுவை எப்படிக் கொஞ்சம் கொஞ்சமாக விட முடியாதோ அதே போலவே ஒரு காதலையும் கொஞ்சம் கொஞ்சமாக விட முடியாது.  தொடர வேண்டாம் என முடிவு செய்து விட்டால் அதில் முழுமையாக இருந்தால் வெளியே வர முடியும். இடையிடையே பேசிக்கொண்டு, பார்த்துக்கொண்டு, ஒருவரை ஒருவர் கண்காணித்துக்கொண்டு இருந்தால் பிரிவு சிக்கலானதாக நிறையக் காயப்படுத்துவதாக, மனவுளைச்சல் கொடுக்கக்கூடியதாக இருக்கும். “நான் அவ கூட ரொம்ப இண்டிமேட்டா இருந்துட்டேன், செக்ஸ் கூட வச்சிகிட்டோம், ஆனால் இனி அப்படி இல்லாம வெறும் ஃபிரண்ட்ஸா மட்டும் இருக்கலாம்னு இருக்கேன்” என அந்த இளைஞன் சொன்ன போது. அப்படி இருப்பதற்கான வாய்ப்புகள் குறைவு எனச் சொன்னேன். ஓர் உறவு ஒரு கட்டத்தை அடைந்துவிட்டால் அதற்கு பிறகு அதன் முந்தைய நிலைக்குக் கொண்டு வந்து அதை நிறுத்துவது கடினம். தினமும் காலையில் இருந்து மது அருந்தும் ஒருவன் திடீரென ஒரு நாள் வந்து இனி நான் வாரத்திற்கு ஒருமுறை மட்டுமே மது அருந்துவேன் எனச் சொல்லும் போது அது எப்படிச் சாத்தியமில்லையோ அதே போலவே ஓர் உறவை அதன் முந்தைய நிலைகளுக்கு ஒருபோதும் எடுத்து வர முடியாது. பிரியவேண்டும் என முடிவெடுத்தால் அதில் உறுதியாகவும், முழுமையாகவும் இருந்தால் மட்டுமே பிரிய முடியும். ஓர் உன்னதமான உறவு என்பது எத்தனைக் காலம் அது நீடித்தது என்பதில் மட்டும் இல்லை, ஒருவேளை அது ஒரு முடிவுக்கு வந்தால் அந்தப் பிரிவின் முடிவை எத்தனை காதலுடன் அதை அணுகியது என்பதில்தான் இருக்கிறது. பிரிதலின் வழியாகவே நாம் அதிலிருந்த காதலை முழுமையாக உணர முடியும்.   https://uyirmmai.com/article/uyirmmai-magazine-march-2024-article-05/
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.