Jump to content

யாழ்ப்பாணம் மாநகர முதல்வர் பயங்கரவாதத் தடுப்புப் பிரிவினரால் கைது!!


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
9 hours ago, தமிழ் சிறி said:

இந்நிலையில், தமது கட்சியின் ஆதரவுடன் ஆதிகாரத்தைப் பெற்றுக்கொண்டவர்கள், முக்கிய தீர்மானங்களை மேற்கொள்ளும்போது அவை தொடர்பாகத் தம்முடனும் கலந்துரையாட வேண்டியது தார்மீகக் கடமையென அவர் குறிப்பிட்டுள்ளார்.

அவரே ஒப்புக் கொள்கிறார் சட்டங்கள் மீறப்படவில்லை என.

Link to comment
Share on other sites

  • Replies 59
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

யாழ். முதல்வர் மணிவண்ணனிடம் தீவிர விசாரணை தொடர்கிறது !

யாழ் மாநகர மேயர் மணிவண்ணனிடம் பயங்கரவாத தடுப்புப்பிரிவினர் தீவிர விசாரணையினை மேற்கொண்டு வருகின்றனர்.

 

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை அரசியல் அரங்கிலிருந்து அகற்ற வேண்டும் :  சட்டத்தரணி மணிவண்ணன் | Virakesari.lk

 

யாழ்ப்பாணம் மாநகரசபையினால் உருவாக்கப்பட்ட காவல்படை தொடர்பில் மாநகரசபை முதல்வரும், சட்டத்தரணியுமான வி.மணிவண்ணன் பயங்கரவாத தடுப்பு விசாரணைப் பிரிவினரால் இன்று அதிகாலை கைது செய்யப்பட்டு வவுனியாவில் அமைந்துள்ள அலுவலகத்திற்கு அழைத்து வரப்பட்டிருந்தார்.

இந்நிலையில் இன்று மதியம் ஒரு மணியளவில் சட்டவைத்திய பரிசோதனைக்காக வவுனியா பொது வைத்தியசாலைக்கு  அவர் அழைத்துச் செல்லப்பட்டார். 

பரிசோதனைகளின் பின்னர் கண்டி வீதியில் அமைந்துள்ள பயங்கரவாத தடுப்பு மற்றும் விசாரணைப் பிரிவிற்கு மீண்டும் அழைத்துச் செல்லப்பட்டு தீவிர விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு வருகின்றார்.

இதேவேளை அவரை சந்திப்பதற்காக வவுனியாவை சேர்ந்த சட்டத்தரணிகள் சிலர் அவர் தடுத்து வைக்கப்பட்டு விசாரணை செய்யப்படும் அலுவலகத்திற்கு முன்பாக ஒன்று கூடியிருந்தனர்.

அவர்கள் உள்ளே அனுமதிக்கப்படாத நிலையில் மணிவன்ணனின் சகோதரனும் சட்டத்தரணியுமான வி.திருக்குமரன் அவரை சந்திப்பதற்கு அனுமதி வழங்கப்பட்டிருந்தது.

இதேவேளை மணிவண்ணனிடம் தீவிர விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுவரும் நிலையில் அவரது கணனி உட்பட சிலபொருட்களும் விசாரணை பிரிவினரால் பொறுப்பேற்கப்பட்டுள்ளது.

கொழும்பில் இருந்தும் விசாரணைப்பிரிவு அதிகாரிகள் வருகைதந்து விசாரணை செய்யப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

யாழ். முதல்வர் மணிவண்ணனிடம் தீவிர விசாரணை தொடர்கிறது ! | Virakesari.lk

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

யாழ் மேயரின் கைதுக்கு தமிழ் எம்.பி.க்கள் சபையில் போர்க்கொடி

(ஆர்.யசி, எம்.ஆர்.எம்.வசீம்)

யாழ் மாநகர சபை முதல்வர் மணிவண்ணனின் கைது தொடர்பில் பாராளுமன்றத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் தமிழ் உறுப்பினர்கள் சபையில் போர்க்கொடி தூக்கியதுடன், அவரை உடனடியாக விடுதலைசெய்ய அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் வலியுறுத்தினர்.

பாராளுமன்றம் இன்று வெள்ளிக்கிழமை சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தலைமையில் காலை 10.00 மணிக்கு கூடியது. இதனையடுத்து சபாநாயகர் அறிவிப்பு, மனுக்கள் சமர்ப்பணம், வாய் மூல விடைக்கான வினாக்களைத் தொடர்ந்து யாழ் மாநகர சபை முதல்வர் மணிவண்ணனின் கைது தொடர்பில் தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்கள் தொடர்ச்சியாக கேள்விகளை எழுப்ப ஆரம்பித்தனர். இது தொடர்பில் முதலில் ஒழுங்குப்பிரச்சினை எழுப்பிய தமிழ் தேசியக்கூட்டமைப்பின் யாழ் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.ஸ்ரீதரன் கூறுகையில்,

யாழ் மாநகரசபை பகுதிகளை தூய்மைப்படுத்தும் திட்டமொன்றை முன்னெடுத்ததற்காக புலிக்கதை கூறி யாழ் மாநகர சபை முதல்வர் மணிவண்ணன் பயங்கரவாத தடுப்பு பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார். அவர் அமைத்த காவல் படையின் சீருடை புலிகளின் காவல்துறையின் சீருடைக்கு ஒப்பானது என்று கூறியே அவர் கைது செய்யப்பட்டுள்ளார். அந்த சீருடை கொழும்பு மாநகரசபையினால் அறிமுகப்படுத்தப்பட்ட சீருடைக்கு ஒப்பானது. எனவே நாட்டில் ஜனநாயகம் பேணப்பட வேண்டுமானால் மணிவண்ணனை உடனடியாக விடுதலை செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லையேல் இது போன்ற நடவடிக்கைகளினால் நாடு பாரதூரமான விளைவுகளை நோக்கியே நகரும் என்றார்.

இதன் பின்னர் ஒழுங்குப்பிரச்சினை எழுப்பிய தமிழ் தேசிய மக்கள்  முன்னணியின் தலைவரும் யாழ் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் கூறுகையில்,

யாழ் மாநகரசபை  முதல்வர் மணிவண்ணன் எமது கட்சியின் முன்னாள் உறுப்பினராவார். விடுதலைப்புலிகளின் காவல்துறையின் சீருடையை ஒத்த  சீருடைகளை பயன்படுத்திய குற்றச்சாட்டில் அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

இள நீல சீருடை அணிபவர்களையெல்லாம் குற்றவாளிகளாக காட்டவே நீங்கள் முற்படுகின்றீர்கள். மணிவண்ணனின் கைது ஒரு அரசியல் பழிவாங்கல் என்றே தோன்றுகின்றது.

நாங்கள் நினைத்துக் கூட  பார்க்க முடியாதளவுக்கு நாடு இராணுவ ஆட்சியை நோக்கி செல்கின்றது. தமக்கு பிடிக்காதவர்கள் ,எதிரானவர்கள் அடக்கப்படுகின்றனர். எனவே அரசாங்கத்தின் சிரேஷ்ட உறுப்பினர்கள் இது குறித்து கவனம் செலுத்த வேண்டும் என்றார்.

இந்த விடயம் குறித்து சபையில் ஒழுங்குப்பிரச்சினை எழுப்பி கருத்து தெரிவித்த தமிழ் தேசியக்கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரான  இரா.சாணக்கியன் கூறுகையில்,

கொழும்பு மாநகர சபையில் பின்பற்றப்படும் நடைமுறையைத்தான் யாழ் மாநகர சபையிலும் பின்பற்றினார்கள். ஆனால் கொழும்பில் நல்லதாகவுள்ளது யாழ்ப்பாணத்தில் கெட்டதாகப் பார்க்கப்படுகின்றது. இங்கு சீருடையுடன் நின்று செய்வது சரி, யாழ்ப்பாணத்தில் செய்வது பிழையா என்றார். இதன் பின்னர் உரையாற்றிய கோவிந்தன் கருணாகரனும் தனது உரையில் யாழ் மாநகரசபை  முதல்வர் மணிவண்ணனின் கைது குறித்தும் பேசியிருந்தார்.

யாழ் மேயரின் கைதுக்கு தமிழ் எம்.பி.க்கள் சபையில் போர்க்கொடி | Virakesari.lk

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சூதாட்டத்தில் தோற்ற பாண்டவர்கள் தோல்வியை ஒப்புக்கொண்டு 12 வருடங்கள் யார் கண்களிலும் படாமல் காட்டில் மறைந்து வாழ வேண்டும் என்ற துரியோதனது கட்டளையை ஏற்று யார் கண்ணிலும் பாடாமல் 12 வருட வனவாசம் முடித்து திரும்பி வந்து துரியோதனன் வாக்கு அளித்தபடி தங்கள் நாட்டை திருப்பி தரும் படி கேக்கிறார்கள்.சத்திய வாக்கை தவறிய துயோதனன் தர்மமும் அறமும் தவறி நின்று அவர்கள் நாட்டை திருப்பி கொடுக்க மறுக்கிறான்.அதன் பின் அவர்கள் ஐந்து கிராமங்கள் கேட்டார்கள் அதுகும் இல்லை என்றான். ஐந்து வீடுகள் கேட்டார்கள் அதுகும் இல்லை என்று பாண்டவர்களுக்கு ஒரு சிறு ஊசி நுழையக் கூடிய இடமும் தர மாட்டேன் என்றான். இது போல் தான் இன்று இலங்கை ஆட்சியாளர்கள் சொல்லுவது. சூதாட்டத்தில் தோற்று போன தமிழர்களுக்கு நிரந்தர தீர்வு தருவோன் 13 ம் சரத்துக்கு மேல் போய் நில அதிகாரம் போலீஸ் அதிகாரம் எல்லாம் தருவேன் என்றார்கள். இப்போ ஐந்து காவலாளிகளைய் யாழ்ப்பாண மேயர் நியமித்து விட்டார் என்று எல்லோரையும் கைது செய்து சிறையில் அடைத்து விட்டது. ஐந்து காவலாளிகளையே தராதவர்கள் அத்தோடு என்ன உடையை தமிழர்கள் அணிய வேண்டும் அணியக் கூடாதென்று அடிப்படை உரிமைகளை மறுப்பவர்கள் எதை தருவார்கள் என்று நினைக்கிறீர்கள். தமிழர் அடையாளம் அவர்களது தேசிய இனம் சுய நிர்ணய உரிமைக்களை கதைப்பவர்களும் இனி வரும் காலங்களில் வன வாசம் செல்ல நேரிடலாம். இவைகளை கதைக்காதவர்கள் எழுதாதவர்கள்  ஒரே நாடு ஒரே சட்டத்தை பின் பற்றுபவர்கள் மட்டும் வாயையும்  கையையும் கட்டி விட்டு  மரத்தில் படரும் கொடிகளை போல் அடிமையாக இருந்து இங்கு அபிவிருத்தி அரசியலை மட்டும் பார்த்தால் போதுமாம். அறிவுடை சமூகம் ஆழமாக இதை சிந்தித்தால் நலம்.

தர்மத்தின் வாழ்வுதனை சூது கவ்வும் 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

முதல்வராக வர உதவிய டக்ளசு ஒன்றுமே பேசவில்லையா?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
5 minutes ago, ஈழப்பிரியன் said:

முதல்வராக வர உதவிய டக்ளசு ஒன்றுமே பேசவில்லையா?

நான் என்ன, நினைக்கிறேன் எண்டா, மணிவண்ணனை ஒரு தியாகியாக காட்டி, கஜேந்திரகுமாருக்கு, அரசியல் குடைச்சல் குடுக்கிற ஐடியா இருக்குமோ எண்டு.... சொல்ல ஏலாது பாருங்கோ... 🤔

ஒருக்கா சிறைக்கு போட்டு வந்தால், அரசியலில் ஒரு 16 அடி பாயலாம் எல்லோ. 🤗

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மணியின் கைதுக்கு ஐதேக கண்டனம் – அரசை நோக்கி அதிரடி கேள்விகளை கேட்டது!

யாழ்ப்பாணம் முதல்வர் வி.மணிவண்ணன் கைது செய்யப்பட்டமைக்கு ஐக்கிய தேசிய கட்சி அதிகாரபூர்வ அறிக்கையூடாக தமது கண்டனத்தை வெளியிட்டுள்ளது.

அத்துடன்,

தேர்தெடுக்கப்பட்ட ஒரு அதிகாரியை குற்றச்சாட்டு தொடர்பில் பொலிஸ் நடவடிக்கைக்கு உட்படுத்த முன்னர், தொடர்புடைய அமைச்சால் விசாரணை மேற்கொள்ளப்பட வேண்டும் என்று கட்சி நம்புகின்றது எனவும் தெரிவித்துள்ளது.

அத்துடன் கொழும்பு மாநகர தரப்பிட அதிகாரிகளின் சீருடைகளையும் தமிழீழ விடுதலைப் புலிகளுடையதை ஒத்ததாக பார்க்க முடியுமா என்றும் கேள்வியெழுப்பியுள்ளது.

மணியின் கைதுக்கு ஐதேக கண்டனம் – அரசை நோக்கி அதிரடி கேள்விகளை கேட்டது! – உதயன் | UTHAYAN (newuthayan.com)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, uthayakumar said:

சூதாட்டத்தில் தோற்ற பாண்டவர்கள் தோல்வியை ஒப்புக்கொண்டு 12 வருடங்கள் யார் கண்களிலும் படாமல் காட்டில் மறைந்து வாழ வேண்டும் என்ற துரியோதனது கட்டளையை ஏற்று யார் கண்ணிலும் பாடாமல் 12 வருட வனவாசம் முடித்து திரும்பி வந்து துரியோதனன் வாக்கு அளித்தபடி தங்கள் நாட்டை திருப்பி தரும் படி கேக்கிறார்கள்.சத்திய வாக்கை தவறிய துயோதனன் தர்மமும் அறமும் தவறி நின்று அவர்கள் நாட்டை திருப்பி கொடுக்க மறுக்கிறான்.அதன் பின் அவர்கள் ஐந்து கிராமங்கள் கேட்டார்கள் அதுகும் இல்லை என்றான். ஐந்து வீடுகள் கேட்டார்கள் அதுகும் இல்லை என்று பாண்டவர்களுக்கு ஒரு சிறு ஊசி நுழையக் கூடிய இடமும் தர மாட்டேன் என்றான். இது போல் தான் இன்று இலங்கை ஆட்சியாளர்கள் சொல்லுவது. சூதாட்டத்தில் தோற்று போன தமிழர்களுக்கு நிரந்தர தீர்வு தருவோன் 13 ம் சரத்துக்கு மேல் போய் நில அதிகாரம் போலீஸ் அதிகாரம் எல்லாம் தருவேன் என்றார்கள். இப்போ ஐந்து காவலாளிகளைய் யாழ்ப்பாண மேயர் நியமித்து விட்டார் என்று எல்லோரையும் கைது செய்து சிறையில் அடைத்து விட்டது. ஐந்து காவலாளிகளையே தராதவர்கள் அத்தோடு என்ன உடையை தமிழர்கள் அணிய வேண்டும் அணியக் கூடாதென்று அடிப்படை உரிமைகளை மறுப்பவர்கள் எதை தருவார்கள் என்று நினைக்கிறீர்கள். தமிழர் அடையாளம் அவர்களது தேசிய இனம் சுய நிர்ணய உரிமைக்களை கதைப்பவர்களும் இனி வரும் காலங்களில் வன வாசம் செல்ல நேரிடலாம். இவைகளை கதைக்காதவர்கள் எழுதாதவர்கள்  ஒரே நாடு ஒரே சட்டத்தை பின் பற்றுபவர்கள் மட்டும் வாயையும்  கையையும் கட்டி விட்டு  மரத்தில் படரும் கொடிகளை போல் அடிமையாக இருந்து இங்கு அபிவிருத்தி அரசியலை மட்டும் பார்த்தால் போதுமாம். அறிவுடை சமூகம் ஆழமாக இதை சிந்தித்தால் நலம்.

தர்மத்தின் வாழ்வுதனை சூது கவ்வும் 

நன்றி... உதயகுமார்.
இந்தக் காட்சியை... பார்க்க, 
என்னால்  முடியவில்லை... என்றாலும்,
எனது... பிள்ளைகள், பார்த்துக் கொள்வார்கள்.

அதனைத் தான்.... தமிழீழத் தலைவர்  மேதகு  பிரபாகரன் அவர்கள்  சொல்லியுள்ளார். 

இதற்கு.... ஆதாரம் கேட்பவனை,  நான்... செருப்பால் அடிப்பேன்.

எனக்கு... என் இனம் முக்கியம். வருங்கால சந்ததி முக்கியம், நாடு முக்கியம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, Nathamuni said:

நான் என்ன, நினைக்கிறேன் எண்டா, மணிவண்ணனை ஒரு தியாகியாக காட்டி, கஜேந்திரகுமாருக்கு, அரசியல் குடைச்சல் குடுக்கிற ஐடியா இருக்குமோ எண்டு.... சொல்ல ஏலாது பாருங்கோ... 🤔

ஒருக்கா சிறைக்கு போட்டு வந்தால், அரசியலில் ஒரு 16 அடி பாயலாம் எல்லோ. 🤗

எனக்கும் இது தமிழரின் பலத்தை மேலும் மேலும் சிதைக்க எடுக்கப்படும் நரித்தனமாகவே தெரிகிறது

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பிணையில் விடுதலையானார் யாழ்.மாநகர முதல்வர் மணிவண்ணன்

Published on 2021-04-09 21:49:32

 
 

 

இலங்கையில் தடை செய்யப்பட்ட தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பை மீள உருவாக்க முற்பட்டமை தொடர்பில் கைது செய்யப்பட்ட யாழ்ப்பாணம் மாநகர முதல்வர், சட்டத்தரணி விஸ்வலிங்கம் மணிவண்ணன் பிணையில் விடுவிக்கப்பட்டார்.

00__1_.jpg

யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றில் இன்றிரவு அவர் முற்படுத்தப்பட்ட போது, பிணையில் விடுவிக்க உத்தரவிடப்பட்டது.

யாழ்.மாநகர முதல்வர் சட்டத்தரணி வி.மணிவண்ணன் யாழ். நீதவான் நீதிமன்றில் நீதவான் ஏ.பீற்றர் போல் முன்னிலையில் முற்படுத்தப்பட்ட நிலையில்,  2 இலட்ச ரூபாய் ஆள் பிணையில் விடுவிக்கப்பட்டார்.

அத்துடன் குறித்த வழக்கு எதிர்வரும் 6 ஆம் மாதம் 26 ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

 

யாழ்ப்பாணம் மாநகர சபையில் வரி வசூலிப்பாளர்களுக்கு சீருடை வழங்கியமையை அடுத்து சர்ச்சை எழுந்தது. தமிழீழ காவற்றுறையின் சீருடையை ஒத்த சீருடையை வழங்கியதாக பொலிஸாருக்கு முறைப்பாடு வழங்கப்பட்டது.

யாழ்ப்பாணம் மாநகர ஆணையாளர், மாநகர சபை உறுப்பினர் வரதராஜன் பார்த்திபன் ஆகியோர் வழங்கிய வாக்குமூலத்தின் அடிப்படையில் முதல்வர் சட்டத்தரணி வி.மணிவண்ணன் யாழ்ப்பாணம் தலைமையகப் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி பிரதான பொலிஸ் பரிசோதகர் பிரசாத் பெர்னாண்டோவினால் இன்று அதிகாலை 1.40 மணிக்கு கைது செய்யப்பட்டார்.

00__2_.jpg

அதன் பின்னர் முதல்வர் சட்டத்தரணி வி.மணிவண்ணன் வவுனியா பயங்கரவாத விசாரணைப் பிரிவினரிடம் இன்று காலை ஒப்படைக்கப்பட்டார்.

இந்நிலையில் இன்று மதியம் சட்டவைத்திய பரிசோதனைக்காக வவுனியா பொது வைத்தியசாலைக்கு  அவர் அழைத்துச்செல்லப்பட்டார். 

பரிசோதனைகளின் பின்னர் கண்டிவீதியில் அமைந்துள்ள பயங்கரவாரத தடுப்பு மற்றும் விசாரணைப்பிரிவிற்கு மீண்டும் அழைத்துச்செல்லப்பட்டிருந்தார்.

சுமார் 10 மணிநேர விசாரணையின் பின்னர் முதல்வர் வி. மணிவண்ணன் இன்றிரவு 8 மணிக்கு யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றில் முற்படுத்தப்பட்டார்

இந்நிலையில் சற்றுமுன்னர் யாழ். நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட யாழ். முதல்வர் .சற்றுமுன்னர் பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.

பிணையில் விடுதலையானார் யாழ்.மாநகர முதல்வர் மணிவண்ணன் | Virakesari.lk

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சுமந்திரன் தான் மணிவண்ணணுக்காக நேரில் சென்று வாதாடி இருக்கின்றார் என அறிய முடிகின்றது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, விசுகு said:

எனக்கும் இது தமிழரின் பலத்தை மேலும் மேலும் சிதைக்க எடுக்கப்படும் நரித்தனமாகவே தெரிகிறது

மைத்திரி, ரணில் இருக்கும் போது, இப்படி நடக்கவில்லை, நாடு ஒகே ஆக இருந்தது, சர்வதேசமும், அவர்கள் வெட்டி, கிளிப்பார்கள் என்று நினைத்தது.

நான் ஆரம்பத்தில் இருந்து சொல்வது என்னவென்றால், இந்த அரசாங்கமே, எமக்கு வேண்டியதை செய்கிறது.

நீங்கள் ஏற்றுக் கொள்கிறீர்களாளோ இல்லையோ, 2009ல், சர்வதேச ரீதியாக புலிகள், 'பயங்கரவாதிகள்' என தமிழர்களுக்கு சுமையாக இருந்தார்கள்.

இன்று அதே நிலையில், சிங்களவர்கள் இருக்கிறார்கள். 'யுத்த குற்றவாளிகளின் அரசு' ஒன்றினை தெரிவு செய்து அதனையே தமது சுமையாக மாற்றிக்  கொண்டு உள்ளனர்  . இவர்கள் செயல்கள் குறித்து சந்தோசப்படுங்கள்.

டொரண்டோ மேயர் இன்று, இந்த கைதினை கண்டித்து உள்ளார். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
17 hours ago, தமிழ் சிறி said:

மாநகர காவல் படை உருவாக்கம்: யாழ். மாநகர சபை அமர்வைப் புறக்கணித்தது ஈ.பி.டி.பி.

மாநகர காவல் படை உருவாக்கம்: யாழ். மாநகர சபை அமர்வைப் புறக்கணித்தது ஈ.பி.டி.பி.

யாழ். மாநகர சபையின் இன்றைய அமர்வை ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி புறக்கணித்துள்ளது என மாநகர சபை உறுப்பினரும் முன்னாள் முதல்வருமான யோகேஸ்வரி பற்குணராஜா தெரிவித்துள்ளார்.

யாழ். மாநகர சபை முதல்வரினால் புதிதாக உருவாக்கப்பட்டுள்ள மாநகர காவல் படை தொடர்பாக தம்முடன் கலந்துரையாடப்படாமையே இந்தப் புறக்கணிப்பிற்குக் காரணமென அவர் குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன், அரசியலில் ஆர்வம் செலுத்துகின்ற இளைய தலைமுறையினருக்குச் சந்தர்ப்பத்தினை வழங்க வேண்டும் என்றே சட்டத்தரணி மணிவண்ணனுக்கு ஆதரவு வழங்குவதற்கு தமது கட்சித் தலைமை தீர்மானித்திருந்தது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இந்நிலையில், தமது கட்சியின் ஆதரவுடன் ஆதிகாரத்தைப் பெற்றுக்கொண்டவர்கள், முக்கிய தீர்மானங்களை மேற்கொள்ளும்போது அவை தொடர்பாகத் தம்முடனும் கலந்துரையாட வேண்டியது தார்மீகக் கடமையென அவர் குறிப்பிட்டுள்ளார்.

எனவே, மாநகர காவல்படை உருவாக்கம் குறித்து தம்மோடு கலந்துரையாடப்படவில்லை என்பதில் கரிசனையை வெளிப்படுத்தும் விதமாகவே இன்றைய அமர்வுகளைப் புறக்கணித்துள்ளதாக யோகேஸ்வரி பற்குணராஜா தெரிவித்துள்ளார்.

https://athavannews.com/2021/1208635

###############   ###############   ###########

சிங்களவனை விட... இவர்கள் மோசமானவர்கள்.

மாநகர சபை அங்கத்தவர்களுடன் கலந்துரையாடல் செய்யாமல் தான்தோன்றித்தனமாக மேயர் செயற்பட்டது நிச்சயமாக தவறுதான். சீருடை வழங்கல் பரிசோதகர் பணி  அமர்வு இரகசியமாக செய்யப்படவேண்டிய விடயம் இல்லை. எல்லோரையும் பாதிக்கும் சமாச்சாரம் கலந்துரையாடல் செய்யப்படுதல் அவசியம்.

கொழும்பு மேயரோ அல்லது வெளிநாடுகளில் உள்ள நகரஙகளின் மேயர்களோ மாநகர சபையின் அங்கத்தவர்க்களுடன் அபிப்பிராயம் கேட்காது ஒரு தலைப்பட்சமாக செயற்பட்டால் என்ன நடக்கும் என்பது எங்களுக்கு நன்றாகவே தெரியும். ஊடகங்களே துரத்தி, துரத்தி உருட்டி எடுக்கும்.

அரச பணியாற்றும் வளர்ந்து வரும் ஒரு இளைய தலைமுறை சேவையாளருக்கு இப்படியான மனநிலை காணப்படுவது ஆரோக்கியமானது இல்லை.

எதிர்காலத்தில் மேயர் மணிவண்ணன் இந்த விடயத்தில் கவனம் எடுப்பார் என எதிர்பார்ப்போம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, Nathamuni said:

'யுத்த குற்றவாளிகளின் அரசு' ஒன்றினை தெரிவு செய்து அதனையே தமது சுமையாக மாற்றிக்  கொண்டு உள்ளனர்  . இவர்கள் செயல்கள் குறித்து சந்தோசப்படுங்கள்.

டொரண்டோ மேயர் இன்று, இந்த கைதினை கண்டித்து உள்ளார். 

நிதர்சனமும் அதுவே. தெரியாமல் தமிழர்களை பழிவாங்க எடுத்த முடிவு, அவர்களுக்கு எதிராய் மாறிவிட்டது. சாதாரணமாக சொல்கிறார்கள்: நாங்கள் சிங்கள, பவுத்த மக்களால் இந்த காரியங்களுக்காகவே   தெரிவு செய்யபட்டவர்கள். ஆகவே அவர்கள் கொண்டுவந்ததை அவர்களே சுமக்க வேண்டும்.

வேலிக்கு வைச்ச முள்ளு வைத்தவரின் காலையே தைச்ச கதை.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
10 hours ago, உடையார் said:

சுகாதார கண்காணிப்பு குழுவின் சீருடை விடுதலைப்புலிகளின் காவல்துறையின் ஆடையை ஒத்திருப்பதாகக் கூறியே மணிவண்ணனை அதிகாலை வேளையில் பயங்கரவாத தடுப்பு பிரிவு கைது செய்திருக்கின்றது.

கனவிலும் காக்காவுக்கு ** அழையுற எண்ணம்.

10 hours ago, உடையார் said:

கொழும்பு மாநகர சபையும் இள நீல நிற சீருடையுடன் பணியாளர்களை அமர்த்தியுள்ளது

கொழும்பு மாநகர முதல்வரையும் அதன் பணியாளர்களையும் கைது செய்து விசாரிக்கலாமே?

திறமை அற்ற, பழிவாங்கும் அரசு உள்ள  நாடு விரைவாக வீழ்ச்சியுறும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
8 hours ago, Nathamuni said:

நான் என்ன, நினைக்கிறேன் எண்டா, மணிவண்ணனை ஒரு தியாகியாக காட்டி, கஜேந்திரகுமாருக்கு, அரசியல் குடைச்சல் குடுக்கிற ஐடியா இருக்குமோ எண்டு.... சொல்ல ஏலாது பாருங்கோ... 🤔

ஒருக்கா சிறைக்கு போட்டு வந்தால், அரசியலில் ஒரு 16 அடி பாயலாம் எல்லோ. 🤗

 

குணாவின் கருத்துக்களைப் பார்க்க தலை சுற்றுகிறது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
48 minutes ago, நியாயத்தை கதைப்போம் said:

சீருடை வழங்கல் பரிசோதகர் பணி  அமர்வு இரகசியமாக செய்யப்படவேண்டிய விடயம் இல்லை. எல்லோரையும் பாதிக்கும் சமாச்சாரம் கலந்துரையாடல் செய்யப்படுதல் அவசியம்.

நாதமுனி சொன்னது போல் தன்னை சிறை சென்ற தியாகியாக காட்டுவது அரசியல் தலைவராக வருவதற்கு பெரிதும் உதவும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, விசுகு said:

எனக்கும் இது தமிழரின் பலத்தை மேலும் மேலும் சிதைக்க எடுக்கப்படும் நரித்தனமாகவே தெரிகிறது

ஒன்று தமிழ் மக்களின் நன்மதிப்பை பெற்றவர்கள், சமுதாய முன்னேற்றத்திற்காய் உழைக்க கூடியவர்களை ஆரம்பத்திலேயே தன்னோடு சேர்த்து தமிழ் மக்களின் முன்னேற்றத்தை தடுக்கும், அல்லது அவர்களை மிரட்டி சேவையிலிருந்து விரட்டும் சிங்களம்.

9 hours ago, ஈழப்பிரியன் said:

முதல்வராக வர உதவிய டக்ளசு ஒன்றுமே பேசவில்லையா?

 அவர் தனக்கு உதவ வேண்டும் என்பதற்காகவே இவருக்கு உதவினார். இவரோ தன் பாதையில் சென்றது அவருக்கு பிடிக்கவில்லை. அதனால் அவரே போட்டுக்கொடுத்திருப்பார். அவருக்கு இது ஒன்றும் புதிதில்லையே. 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, satan said:

அவர் தனக்கு உதவ வேண்டும் என்பதற்காகவே இவருக்கு உதவினார். இவரோ தன் பாதையில் சென்றது அவருக்கு பிடிக்கவில்லை. அதனால் அவரே போட்டுக்கொடுத்திருப்பார். அவருக்கு இது ஒன்றும் புதிதில்லையே. 

போட்டும் கொடுத்திட்டு
பிணையும் எடுத்திருக்கிறார்.

அவர் சொன்னதாலேயே ஜனாதிபதி விடுவித்துள்ளார்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, ஈழப்பிரியன் said:

அவர் சொன்னதாலேயே ஜனாதிபதி விடுவித்துள்ளார்.

இத்தனை தலைவர்கள் விட்ட கோரிக்கைக்கு மேலாக இவர் சொன்னதால்த்தான் ஜனாதிபதி விடுவித்தார் என்று பிதற்றுவதன் மூலம்: தானும், ஜனாதிபதியும் திட்டமிட்டு நடத்திய நாடகம் இதுவென ஒப்புக்கொண்டுள்ளார். பாதை  விலகிப் போகும் மணிவண்ணனுக்கு கடிவாளம் இரண்டாவது தடவை போடப்பட்டிருக்குது. இவர்களின் சிறிய அசைவையும் உடனடியாக சர்வதேசத்துக்கு கொண்டுபோய் இவர்களின் வெளிவேடத்தை கிழிக்க வேண்டும். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
13 hours ago, பிழம்பு said:

சுமந்திரன் தான் மணிவண்ணணுக்காக நேரில் சென்று வாதாடி இருக்கின்றார் என அறிய முடிகின்றது.

டக்கிளஸ் தான் ஜனாதிபதியுடன் பேசி அவரை விடுதலை செய்தவராம்🤣

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
16 hours ago, Nathamuni said:

நான் என்ன, நினைக்கிறேன் எண்டா, மணிவண்ணனை ஒரு தியாகியாக காட்டி, கஜேந்திரகுமாருக்கு, அரசியல் குடைச்சல் குடுக்கிற ஐடியா இருக்குமோ எண்டு.... சொல்ல ஏலாது பாருங்கோ... 🤔

ஒருக்கா சிறைக்கு போட்டு வந்தால், அரசியலில் ஒரு 16 அடி பாயலாம் எல்லோ. 🤗

உங்கள் கருத்து மிக மிக உண்மையானது நாதமுனி .

காகம் அகத்தியரின் கமண்டலத்தை தெரிந்தே  தட்டி விட்டது அது போல் இங்கும் மலிவான அரசியலை நோக்கி நேற்று முளைத்த காளான்கள்  ஆடுகின்றன .

8 hours ago, ஈழப்பிரியன் said:

 

குணாவின் கருத்துக்களைப் பார்க்க தலை சுற்றுகிறது.

குணா ஒன்றும் தவறாக சொல்லவில்லையே பாஸ் . மலசல கூடங்களை அமைத்து கொடுத்தபின் இப்படியான தண்டனை முறைகளை கொண்டுவருவது நல்லது என்கிறார் .

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஒரே இரவில் உலக  புகழ் தியாகி ஆவது  எப்படி என்று மணிவண்ணனிடம் பாடம் படிக்கணும் சிங்கள நந்தசேன கோத்தபாய அரசு மன்னிப்பு கொடுக்கிறார்கலாம் இதே மகிந்த கோத்த  யாழில் பிரசாரத்துக்கு வந்த போது  தமிழ் அரசியலகைதிகளுக்கு பொது மன்னிப்பு தாங்கள்  வந்தால் கொடுப்பம்  என்றார்கள் இப்ப நடப்பது என்ன என்று நீங்களே பாருங்கள் ?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, பெருமாள் said:

சிங்கள நந்தசேன கோத்தபாய அரசு மன்னிப்பு கொடுக்கிறார்

எப்போதும் ஏற்றுக்கொள்ளாமல், மறுத்திருக்க வேண்டியதே, மணிவண்ணன் செய்து இருக்க வேண்டும்.

சட்டதிற்கு உட்பட்டு செய்யும் பொது, மன்னிப்பு எதற்கு?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மணிவண்ணன் கைது: அமெரிக்க தூதுவர் கவலை.. முன்னாள் நிதி அமைச்சர் கருத்து

மணிவண்ணன் கைது: அமெரிக்க தூதுவர் கவலை.. முன்னாள் நிதி அமைச்சர் கருத்து

யாழ். முதல்வர் சட்டத்தரணி வி.மணிவண்ணன் கைது செய்யப்பட்டமை தொடர்பாக கவலையடைவதாக இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் அலைனா டெப்லிட்ஸ் தெரிவித்துள்ளார்.

யாழ்ப்பாணம் நகர காவல் படை உருவாக்கப்பட்ட விடயம் தொடர்பாக நீண்டநேர விசாரணைகளின் பின்னர் கைது செய்யப்பட்ட அவர் யாழ்ப்பாணம் நீதிமன்றினால் பிணையில் விடுதலை செய்யப்பட்டார்.

இந்த விடயம் தொடர்பாக டுவிட்டரில் பதிவிட்டுள்ள அவர், அனைவரினதும் அடிப்படைச் சுதந்திரத்தைப் பாதுகாக்கும் அதேவேளை சட்டத்தின் வலுவான ஆட்சி பயங்கரவாதத்தை எதிர்த்துப் போராடுவதற்கான சிறந்த வழியாகும் என குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை இந்த விடயம் தொடர்பாக கருத்து வெளியிட்டுள்ள முன்னாள் நிதி அமைச்சர் மங்கள சமரவீர, விடுதலை புலிகள் அமைப்பிற்கு புத்துயிர் அளிக்க முயன்றதாக கொழும்பு முதல்வர் மீது குற்றம் சாட்ட முடியுமா என கேள்வியெழுப்பியுள்ளார்.

இந்த விடயம் தொடர்பாக டுவிட்டரில் பதிவிட்டுள்ள அவர், “நகர சபை காவல் படையின் சீருடை தொடர்பாக பயங்கரவாத தடுப்பு பிரிவின் கீழ் முதல்வர் கைது செய்யப்பட்டுள்ளார்.

இதவேளை கொழும்பு நகராட்சியின் காவல் படையினரும் கிட்டத்தட்ட ஒரே மாதிரியான சீருடைகளை அணிகின்றார்கள்.

இந்நிலையில் கொழும்பு முதல்வர் விடுதலை புலிகள் அமைப்பிற்கு புத்துயிர் அளிக்க முயன்றார் என குற்றம் சாட்டப் போகின்றோமா? என கேள்வியுடன் மங்கள சமரவீர பதிவிட்டுள்ளார்.

https://athavannews.com/2021/1208965

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • படக்குறிப்பு,இந்திய தேர்தலில் வாக்களித்த முதல் இலங்கைத் தமிழர் நளினி கிருபாகரன். கட்டுரை தகவல் எழுதியவர், தங்கதுரை குமாரபாண்டியன் பதவி, பிபிசி தமிழ் 18 ஏப்ரல் 2024 புதுப்பிக்கப்பட்டது 3 மணி நேரங்களுக்கு முன்னர் திருச்சி இலங்கைத் தமிழர் மறுவாழ்வு முகாமில் வசித்து வரும் பெண் ஒருவர், இந்திய அரசின் சட்டத்தை உயர் நீதிமன்றத்தில் சுட்டிக்காட்டி பாஸ்போர்ட், வாக்காளர் அடையாள அட்டை ஆகிய ஆவணங்களைப் பெற்றிருந்தார். இந்நிலையில், வெள்ளிக்கிழமை (ஏப். 19) நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் அப்பெண் முதல் இலங்கைத் தமிழராக வாக்கு செலுத்தியுள்ளார். இலங்கைத் தமிழர் பெண் இந்திய குடியுரிமை பெற்றது எப்படி? இலங்கைத் தமிழர்கள் இந்திய குடியுரிமை பெற முடியுமா? திருச்சி மாவட்டம் கொட்டப்பட்டு இலங்கைத் தமிழர் மறுவாழ்வு முகாமில் வசித்து வருபவர் நளினி, இவருக்கு 38 வயது ஆகிறது. இவரது பெற்றோர்களான கண்ணன், சாந்தி இலங்கையைச் சேர்ந்த தமிழர்கள். அங்கு ஏற்பட்ட போர் பதற்றத்தால் கடல் வழியாக ராமேஸ்வரத்திற்கு 1983ஆம் ஆண்டு வந்தடைந்தனர். ராமேஸ்வரம் அருகே இருக்கும் மண்டபம் இலங்கை மறுவாழ்வு முகாமில் தங்க வைக்கப்பட்டனர். அங்கு 1986ஆம் ஆண்டு நளினி பிறந்தார். அதைத் தொடர்ந்து அங்கிருந்து திருச்சியில் உள்ள இலங்கை மறுவாழ்வு முகாமிற்கு மாற்றப்பட்டு அங்கு கிருபாகரன் என்பவரை நளினி திருமணம் முடித்து இரண்டு மகன்களுடன் வசித்து வருகிறார். இவர் பாஸ்போர்ட் பெற விண்ணப்பித்திருந்தார். அவர் இலங்கை அகதிகள் முகாமில் வசிப்பதால் அவருக்கு பாஸ்போர்ட் வழங்க அதிகாரிகளால் மறுப்பு தெரிவிக்கப்பட்டது. நீதிமன்றத்தில் பாஸ்போர்ட் கேட்டு வழக்கு தனக்கு பாஸ்போர்ட் வழங்கக்கோரி சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் கடந்த 2021ஆம் ஆண்டு ஜூலை மாதம் 2 ஆம் தேதி வழக்கு தொடுத்தார். அதில், இந்திய குடியுரிமைச் சட்டம் 1955 பிரிவு 3iன் படி, 26.1.1956 முதல் 1.7.1986 வரை இந்தியாவில் பிறந்த குழந்தைகள் அனைவரும் இந்தியர்கள்தான் என்ற அடிப்படையில் தனக்கு பாஸ்போர்ட் வழங்க வேண்டும் எனக் கேட்டிருந்தார். இந்த வழக்கு விசாரணை நடைபெற்று 2022ஆம் ஆண்டு ஆகஸ்ட்12இல் நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் தீர்ப்பு வழங்கினார். அதில், "மனுதாரர் நளினி இலங்கையைச் சேர்ந்த பெற்றோருக்குப் பிறந்திருந்தாலும் அவர் இந்திய குடிமகள்தான்” எனத் தீர்ப்பளித்து, அவருக்கு இந்திய பாஸ்போர்ட் வழங்க வேண்டும் என உத்தரவிட்டார். இதையடுத்து, நளினிக்கு பாஸ்போர்ட் வழங்கப்பட்டது. அதைத் தொடர்ந்து, இந்திய குடியுரிமை பெற்று வாக்களிக்க எண்ணிய நளினி வாக்காளர் அடையாள அட்டைக்கு கடந்த ஆண்டு விண்ணப்பித்து அதையும் பெற்றார். நாளை நடைபெறும் மக்களவைத் தேர்தலில் வாக்களிக்கும் முதல் இலங்கை தமிழர் என்ற பெயரை பெற்றிருக்கிறார்.   40 ஆண்டு போராடத்திற்குக் கிடைத்த வெற்றி பட மூலாதாரம்,HIGHCOURT MADURAI BENCH படக்குறிப்பு,நளினிக்கு இந்திய பாஸ்போர்ட் வழங்க வேண்டும் என உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டது. இதுகுறித்து பிபிசி தமிழிடம் பேசிய நளினி கூறுகையில், “கடந்த 40 ஆண்டுகளாக தமிழ்நாட்டில் உள்ள அகதிகள் முகாமில் எனது தாய், தந்தை வசித்து வருகின்றனர். இலங்கைத் தமிழர்களுக்கு குடியுரிமை வழங்க வேண்டும் எனப் போராடி வருகின்றனர். எங்களுக்கு அரசிடமிருந்து சலுகைகள் கிடைத்தாலும் நாங்கள் நாடற்ற அகதிகளாகவே இன்னும் பார்க்கப்பட்டு வருகிறோம். எனவே, எங்களுக்கான அடையாளம் குடியுரிமை மட்டுமே. அதைப் பெற வேண்டும் என்பதற்காகப் போராடி வருகின்றோம். கடந்த 1986ஆம் ஆண்டு பிறந்தவர் என்ற அடிப்படையில் பாஸ்போர்ட்டுக்கு விண்ணப்பித்து அது மறுக்கப்பட்டது. இந்திய குடியுரிமை சட்டத்தை மேற்கோள் காட்டி நீதிமன்றத்தை அணுகியபோது பாஸ்போர்ட் கிடைத்தது. அதைத் தொடர்ந்து, தற்போது முதல் இலங்கைத் தமிழராக வாக்களிப்பதற்கான உரிமையும் பெற்றுள்ளேன்,” என்றார். ‘இலங்கைத் தமிழர்களின் குரலாக முதல் வாக்கு’ நாளை நாடாளுமன்றத் தேர்தலில் வாக்களிக்க இருப்பது மிகவும் மகிழ்ச்சியான நிகழ்வாக இருக்கப் போகிறது எனக் கூறும் அவர், "நாடற்ற பெண்ணாக இருந்தேன். ஆனால் தற்போது இந்திய குடியுரிமை பெற்று இனி ஜனநாயகக் கடமையைச் செய்யப் போகிறேன்," எனத் தெரிவித்தார். தமிழ்நாட்டில் இலங்கை மறுவாழ்வு முகாம்களில் வசிக்கும் ஒட்டுமொத்த மக்களின் குரலாகத் தனது ஒற்றை வாக்கை நாடாளுமன்றத் தேர்தலில் செலுத்த உள்ளதாகவும் நளினி தெரிவித்தார். அதோடு, இந்திய அரசு தமிழ்நாட்டில் உள்ள பிற இலங்கைத் தமிழர்களுக்கும் வாக்களிக்கும் உரிமையை வழங்க வேண்டும் என்பதையும் அவர் வலியுறுத்தினார்.   ‘150 இலங்கைத் தமிழர்கள் வாக்களிக்க வாய்ப்பு’ படக்குறிப்பு,தேர்தல்களில் வாக்களிக்கும் இலங்கைத் தமிழர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும் என வழக்கறிஞர் ரோமியோ ராய் தெரிவித்தார். இந்திய குடியுரிமைச் சட்டத்தை மேற்கோள் காட்டி நளினிக்கு பாஸ்போர்ட் கொடுக்கப்பட்டு இந்திய குடியுரிமை பெற்ற நபராக மாறினார். அதைத் தொடர்ந்து வாக்காளர் அடையாள அட்டைக்கு விண்ணப்பித்து அதையும் பெற்றுள்ளார். இதை அடிப்படையாகக் கொண்டு இலங்கைத் தமிழர் முகாமில் வசிக்கும் மூன்று பேர் பாஸ்போர்ட்டுக்கு விண்ணப்பித்து உள்ளதாகவும் நளினி தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் ரோமியோ ராய் குறிப்பிட்டார். அதேவேளையில், "தமிழ்நாடு அரசு சார்பில் 1986ஆம் ஆண்டு மற்றும் அதற்கு முன்பாகப் பிறந்தவர்களின் கணக்கெடுப்பு நடத்தப்பட்டது. அதில் 150 பேர் இருப்பது தெரிய வந்தது. இவர்களும் இந்திய அரசின் குடியுரிமையைப் பெறுவதற்கான முயற்சிகளை மேற்கொண்டு வருகிறேன். இவர்கள் குடியுரிமை பெறும் பட்சத்தில் எதிர்வரும் தேர்தல்களில் இவர்களும் வாக்கு செலுத்த வாய்ப்பு கிடைக்கும்," என்றார் வழக்கறிஞர் ரோமியோ ராய். தமிழ்நாட்டில் 110 இலங்கைத் தமிழர் மறுவாழ்வு முகாம்கள் உள்ளன. அதில் தோராயமாக 1.10 லட்சம் மக்கள் வசிப்பதாகவும் காவல் நிலையத்தில் அனுமதி பெற்று 80,000க்கும் மேற்பட்டோர் வெளியில் வசித்து வருவதாகவும் கூறுகிறார் வழக்கறிஞர் புகழேந்தி. தமிழர்கள் உரிமைகள் நலனுக்காக இயங்கி வரும் வழக்கறிஞர் புகழேந்தியிடம் பிபிசி தமிழ் பேசியபோது, "அவர்கள் குடியுரிமை வேண்டுமென நீண்டகாலமாகப் போராடி வருவதாகவும்" குறிப்பிட்டார்.   படக்குறிப்பு,"தமிழ்நாட்டில் இலங்கைத் தமிழர்கள் திறந்தவெளி சிறையில் வசிப்பதைப் போன்று வசித்து வருகின்றனர்," என்கிறார் வழக்கறிஞர் புகழேந்தி. தமிழ்நாட்டில் இருக்கக்கூடிய இலங்கைத் தமிழர்களுக்கு ஆதார், குடும்ப அட்டை போன்ற அடையாள ஆவணங்கள் வழங்கப்படுவதாகவும் குடும்பத் தலைவருக்கு ஆயிரம் ரூபாய், மற்ற உறுப்பினர்களுக்கு 750 ரூபாய் என உதவித் தொகையும் கொடுக்கப்படுவதாகவும் கூறுகிறார் புகழேந்தி. அவர்களது நிலை குறித்துப் பேசிய அவர், "இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாமில் வசிக்கும் குழந்தைகளால் படித்து முன்னேறி அரசு வேலைக்குச் செல்ல முடியவில்லை. வெளிநாட்டுக்கு வேலைக்குச் செல்ல முடியாது. இதனால் படித்த இளைஞர்கள் கூலித் தொழிலாளர்களாக கட்டட வேலைகளுக்கு மட்டுமே செல்லும் சூழலுக்குத் தள்ளப்படுகின்றனர் அதிலும் பல சிக்கல்களை அவர்கள் சந்தித்து வருகின்றனர்," என்கிறார். மத்திய அரசு கொண்டு வந்திருக்கும் குடியுரிமை திருத்தச் சட்டத்தில் 2014ஆம் ஆண்டுக்கு முன் ஆப்கனில் இருந்து வந்தவர்களுக்கு இந்திய குடியுரிமை வழங்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்தச் சட்டத்தின்கீழ், "இலங்கைத் தமிழர்களையும் சேர்த்துவிட்டால் இவர்களுக்கும் குடியுரிமை கிடைக்கும். அதைச் செய்ய மத்திய அரசு தயங்குவது ஏனென்று புரியவில்லை," என்றும் கூறுகிறார் புகழேந்தி. இலங்கை நாட்டைச் சேர்ந்தவர்கள் லண்டன், ஆஸ்திரேலியா, பிரான்ஸ் போன்ற நாடுகளுக்குச் சென்று மூன்று ஆண்டுகள் தொடர்ச்சியாக வசித்தால் அவர்களுக்கு கிரீன் கார்டு வழங்கப்படுகிறது. ஐந்து ஆண்டுகளுக்கு மேல் வசித்தால் அவர்களுக்கு குடியுரிமை வழங்கப்படுகிறது. ஆனால், "இங்கே 30 ஆண்டுகள் தாண்டி வசிக்கும் இலங்கைத் தமிழர்களுக்கு குடியுரிமை என்பது மறுக்கப்படுக்கிறது. தமிழ்நாட்டில் இலங்கைத் தமிழர்கள் திறந்தவெளி சிறையில் வசிப்பதைப் போன்று வசித்து வருகின்றனர். இதில் மாற்றம் நிகழ வேண்டும் அதற்கு அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்," எனவும் வலியுறுத்தினார் வழக்கறிஞர் புகழேந்தி. https://www.bbc.com/tamil/articles/cd1w2q1qx2yo
    • "சிந்து வெளி பல் மருத்துவமும் வீட்டு மருத்துவமும்"     50 வருடங்களுக்கு முன்பு வரை, பண்டைய இந்தியா நாகரிகம் சிந்து சம வெளியாக இருந்தது. எமது பண்டையதைப் பற்றிய அறிவு ஹரப்பா, மொஹெஞ்சதாரோ போன்ற பகுதிக்குள் அடங்கி விட்டது. அவையை தனித்துப் பார்க்கும் போது அவையின் முன்னேற்றம் விந்தையாக எமக்கு காட்சி அளித்தது. ஆனால் அன்றில் இருந்து எமது அறிவாற்றலிலும் தொலை நோக்கிலும் பெரும் முன்னேற்றமடைந்தது. 1974 ஆம் ஆண்டு கண்டுபிடிக்கப் பட்ட புதிய கற்காலக் குடியேற்ற பகுதியான, இன்றைய பாகிஸ்தானில் உள்ள சிந்து சமவெளி நகரமான, மெஹெர்கர் [Mehrgarh] இதற்கு வழி வகுத்தது. இது அதி நவீன நாகரிக சிந்து வெளிக்கு முன்பும் அது வரையும் உள்ள முக்கிய தொடர்புகளை கொடுத்தது.   தொல்லியல் ஆய்வு ரீதியாய் பல முக்கியங்களை கொண்டிருந்த இந்த பகுதி, 2001 ஆம் ஆண்டு பல் துளைத்தலுக்கும் பல் அறுவை சிகிச்சைக்குமான முதலாவது சான்றை கொடுத்தது. ஆண்ட்ரியா கசினா [Professor Andrea Cucina ,University of Missouri-Columbia] தலைமையில் தொல்லியல் ஆய்வாளர்கள் அங்கு அகழ்வாராய்ச்சி செய்த போது, இரண்டு சிந்து சமவெளி நாகரிக மனிதனின் சிதை வெச்சங்கள் கிடைத்தன. இந்த மனித மண்டை ஓடுகளை ஆய்வுகளுக்கு உட் படுத்தி, ஒரு மண்டை ஓட்டின் பல்லை துப்பரவு செய்யும் போது ஒரு அதிர்ச்சி யூட்டத்தக்க அல்லது திகைக்கச் செய்கிற ஒரு உண்மை தெரிய வந்தது. அது கி மு 7000 ஆண்டில் இருந்தே இவர்களுக்கு பல் மருத்துவம் தெரிந்து இருந்தது என்பது ஆகும். அதாவது கி மு 7000 ஆண்டில் வசித்த மக்கள் பல் வலிக்கு தீர்வாக சொத்தை விழுந்த [cavity] பற்களை கூர்மையான ஒரு வித கற்களைக் கொண்டு, வில்லினால் சுற்றி [bow drills] துளை யிட்டு அறுவைச் சிகிச்சை செய்து அகற்றியது தெரிய வந்தது.   முதலில் பல்லில் சிறிய துவாரத்தை கண்டு பிடித்த ஆய்வாளர் ஆண்ட்ரியா கசினா, அந்த துவாரங்கள் ஈமச் சடங்கு போல தெரியவில்லை என்றும் மேலும் இந்த பல் இன்னும் அந்த மனிதனின் தாடையில் இருப்பதால் அவை கழுத்து மாலை செய்ய துளைக்கப் படவில்லை என்றும் தெரியப் படுத்தினார். அவரும் அவரின் மற்ற சக தொல்லியல் ஆய்வாளர்களும் அது பல் சிதைவுக்கான சிகிச்சையாக இருக்கக் கூடும் என்றும் மேலும் அங்கு தாவரம் அல்லது வேறு ஒரு பொருள் பாக்டீரியா வள ர்ச்சியைத் தடுக்கும் பொருட்டு அந்த துவாரத்திற்குள் திணிக்கப் பட்டது எனவும் சந்தேகிக்கிறார்கள். இந்த மெஹெர்கர் அகழ் வாராய்ச்சியின் போது ஒன்பது தனிப்பட்டவர்களில் மொத்தம் பதினொன்று துளை யிடப்பட்ட பற்களை அடையாளம் கண்டா ர்கள். இதில் ஒரு தனிப்பட்டவர் மூன்று துளை யிடப்பட்ட பற்களையும் மற்றும் ஒருவர் இரு தரம் துளை யிடப்பட்ட பல்லையும் கொண்டு இருந்தார். இந்த எல்லா தனிப் பட்டவர்களும் முதிர்ந்த வர்களாக, நாலு பெண், இரண்டு ஆண், மற்றும் மூன்று பால் அடையாளம் சரியாக அடையாளம் காணப்படாத தனிப்பட்ட வர்களாக இருந்தனர். இவர்களின் வயது பெரும்பாலும் இருபதில் இருந்து நாற்பதிற்கு மேலாக உள்ளது. மிக நுணுக்கமாக அவையை உற்று நோக்கும் போது, குறைந்தது ஒரு சிகிச்சையில் பல்லு துளைக்கப்பட்டதும் இன்றி அங்கு உண்டாகிய பொந்து அல்லது உட்குழி நேர்த்தியாய் திரும்ப வடிவமைக்கப் பட்டுள்ளது காணக் கூடியதாக உள்ளது.   சிறிய மேற்பரப்பை கொண்ட இந்த பல்லில் துளையிடுவதற்கு மெஹெர்கர் பல் வைத்தியர் அதிகமாக நெருப்பை உண்டாக்க ஆதி காலத்தில் பாவிக்கப்பட்ட பொறி போன்ற ஒன்றை பாவித்து இருக்கலாம். கயிறு இணைக்கப்பட்ட வில் போன்ற கருவி ஒன்றில் தனது முனையில் கூர்மையான ஒரு வித கற்களை கொண்ட மெல்லிய மரத் துண்டு, அந்த கயிற்றுனால் சுற்றப்பட்டு அழுத்தி சுற்றப்ப டுகிறது. அப்பொழுது அந்த கூர்மையான கல் பல்லில் துளையிடுகிறது. மணி ஆபரணங்கள் செய்வதற்கு பண்டைய கைவினைஞர்கள் மணிகளில் துளையிடும் தொழில் நுட்பத்தில் இருந்து இந்த மெஹெர்கர் பல் வைத்தியர்கள் இந்த அறிவை பெற்றிருக்கலாம் என அறிஞர்கள் நம்புகிறார்கள். பற்கள் அடைப்பதற்கான சான்றுகள் ஒன்றும் இதுவரை கிடைக்கப் படவில்லை. என்றாலும், சில பற்கள் ஆழமாக துளைக்கப் பட்டு இருப்பதால், ஏதாவது ஒன்று அதை அடைக்க அதற்குள் செருகி இருக்கலாம் என ஆய்வாளர்கள் நம்புகிறார்கள். ஆனால் எதனால் அடைத்தார்கள் என தெரியவில்லை. இந்த துளைகள் அரை மில்லி மீட்டரில் இருந்து 3.5 மில்லிமீட்டர் வரை இருக்கிறது. இது பல்லின் மிளரியை [எனமல்/ enamel] ஊடுருவி பல்திசுக்களுக்குள் [dentin] செல்ல போதுமானது. எனினும் பல் அடைப்புக்கான சான்றுகளை ஆய்வாளர்கள் இன்னும் காண வில்லை. எப்படியாயினும் தார் போன்ற பொருள் அல்லது இலகுவான தாவர பொருள் ஒன்று பல் குழிக்குள் அடைத்து இருக்கலாம் என நம்புகி றார்கள்.  துளைக்கப் பட்ட பற்களை கொண்ட இந்த தனிப்பட்டவர்கள் எவரும் சிறப்பு கல்லறையில் இருந்து எடுக்கப்படவில்லை. இது அங்கு வாழ்ந்த எல்லோருக்கும் இந்த வாய் சம்பந்தமான சுகாதார சிகிச்சை அல்லது பராமரிப்பு இருந்ததை சுட்டிக்கா ட்டுகிறது.   இந்த பல் சுகாதார பராமரிப்பு மெஹெர்கரில் கிட்டதட்ட 1,500 ஆண்டுகள் தொடர்ந்து இருந்தாலும், இந்த நீண்ட பாரம்பரியம் அதன் பின் அடுத்த நாகரிகத்திற்கு பரவ வில்லை. இவர்களைத் தொடர்ந்து அங்கு இருந்த செம்புக்கால மக்கள் பல் வைத்தியரிடம் எப்பவாவது சென்ற தற்கான அறி குறிகள் அங்கு இல்லை. ஏன் இந்த பராமரிப்பு தொடராமல் நின்றுவிட்டது என தெரிய வில்லை. ஒருவேளை, இது ஏற் படுத்திய வலி இந்த நீண்ட பாரம்பரியத்தின் செல்வாக்கை இல்லாமல் செய்து இருக்கலாம்?   இங்கே  தரப்பட்ட துளையிட்ட  பல்லின் படம் Nature என்ற ஆய்வு இதழில் வெளியிடப் பட்டு உள்ளது. பாக்கிஸ்தானில் உள்ள புதிய கற்கால இடு காட்டில் இருந்து எடுக்கப்பட்ட  துளைக்கப் பட்ட கடைவாய்ப்பல். இங்கு  2.6 மில்லிமீட்டர் அகலமுள்ள துவாரம் ஒன்று துளைக்கப் பட்டு உள்ளது. இந்த துவாரம் வழவழப்பாக உள்ளது. இது அந்த தனிப்பட்ட மனிதன் இறக்கும் முன் துளைக்கப் பட்டதை காட்டுகிறது. பல்லை நன்றாக பரிசோதனை செய்ததில் இந்த துளையிடும் கருவி பழுதடைந்த பல் திசுவை அகற்றுவதில் மிகவும் திறமை வாய்ந்தது என இதை ஆய்வு செய்த குழு கூறுகிறது. ஆகவே நாம் முன்பு நினைத்ததை விட பல் வைத்தியம் மேலும் 4000 ஆண்டு பழமை வாய்ந்தது. அதுமட்டும் அல்ல மயக்க மருந்து கண்டு பிடிப்பதற்கு எத்தனையோ ஆண்டுகளுக்கு முன் இது பழமையானது. . இந்த பூமி கிரகத்தில் மனிதன் தோன்றிய காலம் தொட்டு நோய் அவனுக்கு ஒரு கொடிய விஷமாக இருக்கிறது. மனிதன் பல வித வியாதிகளுடன் வரலாற்றிற்கு முந்திய காலத்தில் இருந்து போராட வேண்டி இருந்தது. இறுதியாக, அவன் உள்நாட்டு மருத்துவம் ஒன்றை உருவாக்கினான். என்றாலும் மேலே கூறிய பல் அறுவைச் சிகிச்சையை விட, இந்த சிந்து வெளி மக்கள் எந்த வித மருந்துகளை அல்லது வீட்டு மருத்துவத்தை கையாண்டார்கள் என அறிய முடியவில்லை. ஆனால், சிந்து வெளி நூலோ அல்லது ஆவணமோ வாசிக்கக் கூடியதாக இதுவரை கண்டுபிடிக்கப் படாததால், இவர்களுடன் வர்த்தக உறவு வைத்திருந்த மற்ற கி மு 3000 ஆண்டு நாகரிக மக்கள் போல ஒரு நாட்டு வைத்தியம் அங்கு நிலவி இருக்கலாம் என எம்மால் ஓரளவு ஊகிக்க முடியும். ஆகவே இது சமயம், சூனியம், அனுபவ ரீதியான சடங்குகள், முறைகள் போன்ற வையாக இருக்கலாம். அவர்கள் தாயத்து போன்றவைகளை தீங்கில் இருந்து தம்மை காப்பாற்ற, ஆகவே நோயில் இருந்து காப்பாற்ற, அணிந்து இருந்தார்கள். மற்ற மக்களை மாதிரி, அவர்களுக்கு மருந்துகளும் வீட்டு வைத்தியமும் நோய்ப் பட்டவர்களை சிகிச்சையளிக்கவும் தெரிந்து இருக்க வேண்டும். இதற்கான சான்றுகளை அனேகமாக ஹரப்பா, மொஹெஞ்சதாரோ போன்ற பகுதிகளில் உள்ள தொல் பொருள் எச்சங்களில் தேடவேண்டும்.   ஹரப்பான் மக்கள் தாவரங்கள், விலங்குகளில் இருந்து எடுத்த பொருள்கள், கனிப்பொருள்கள் போன்றவைகளை பாவித்து இருக்கலாம். மலைகளில் இயற்கையாக உண்டாகும் கருப்பு நிலக்கீலம் [Silajit, Black Asphaltum] என்ற கருத்த கனிப் பொருள் அகழ்வின் போது அங்கு கண்டு பிடிக்கப் பட்டது. Shilajit ஆசியாவில் ஒரு சில தேர்ந்தெடுக்கப் பட்ட மலைத்தொடர்களில் இருந்து பெறப்படுகிறது, குறிப்பாக திபெத்திய இமய மலை, ரஷியன் காகசஸ், மங்கோலியன் அல்தை, மற்றும் பாகிஸ்தான் கில்ஜித் மலைகள் [Tibet mountains, Caucasus mountains Altai Mountains, mountains of Gilgit Baltistan] ஆகும். ஆகவே இது சிந்து சம வெளியில் பாவிக்கப்பட்டு இருக்கவேண்டும் என்பதை எமக்கு எடுத்து காட்டு கிறது. இந்த கருப்பு நிலக்கீலம் பல நன்மைகளை கொண்டது. இந்திய துணைக் கண்டத்தில் உள்ள மிகவும் பிரபலமான மருத்துவ கலவை இதுவாகும். மேலும் ஆசியா முழுவதும் பரவலாக ஆயுர் வேத மற்றும் பாரம்பரிய மருத்துவத்தில் அதிகரித்த ஆற்றல், அதிகரித்த நோய் எதிர்ப்பு சக்தி அதனால் நல்ல தரமான வாழ்க்கை, ஒவ்வாமை தணிப்பு , நீரிழிவு குணப்படுத்தல் [increased energy, improved quality of life allergy relief, diabetes relief,] போன்றவற்றிற்கு இது பயன் படுத்தப்படுகிறது.   அதே போல அங்கு இரைப்பை யழற்சிக்கு [gastritis / இரைப்பையின் உட்புறச் சுவர் பல்வேறு காரணங்களினால் அழற்சி அடைதல். வயிறு எரிச்சலடைதல், வயிற்று வலி ஆகியவை பொது வாகக் காணப்படும் அறி குறிகளாகும்] மருந்தாக பாவிக்கப்படும் கடனுரை [cuttlebone / ஒருவகைக் கடல் மீனின் ஓடு], மற்றும் சில [staghorn,] கண்டு எடுக்கப்பட்டது. இவைகள் இன்றும் இந்தியாவின் ஆயுர்வேத மற்றும் பாரம்பரிய மருத்துவத்தில் பாவிக்கப்படுகின்றன, ஆகவே பெரும்பாலும் இவை அந்த பழங்காலத்திலும் பாவிக்கப்பட்டு இருக்கலாம். மேலே கூறியவாறு நாம் சில அடிப்படைகளில் அல்லது ஒப்பீடுகளில் ஊகிப்பதை தவிர எம்மால் ஒன்றும் செய்ய முடியாத நிலை இருந்தாலும், சிந்து வெளியின் மற்றும் ஒரு அம்சமான, மக்களின் சுகாதாரத்தை முதன்மையாக கொண்ட, அவர்களின் கட்டிடமும் வடிகால் அமைப்பும் எமது இந்த ஊகத்தை மிகவும் ஆணித்தரமாக ஆதரிக்கிறது.   [கந்தையா தில்லைவிநாயகலிங்கம் அத்தியடி, யாழ்ப்பாணம்]           
    • Published By: VISHNU   19 APR, 2024 | 08:36 PM   அண்மையில் வவுனியாவில் உயிரிழந்த சிறுமியின் மரணத்திற்கு நீதி கோரி வெள்ளிக்கிழமை (19) தரணிக்குளம் கிராம மக்களினால் ஈச்சங்குளம் பொலிஸ் நிலையத்தை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். கடந்த 17ம் திகதி தரணிக்குளம் கிராமத்தில் வீட்டில் தூக்கில் தொங்கிய நிலையில் 17 வயதுடைய சிறுமியின் சடலம் மீட்கப்பட்டிருந்தத நிலையில், வெள்ளிக்கிழமை (19) இறுதி கிரியைகள் இடம்பெற இருந்த வேளை சிறுமியின் இறப்பில் சந்தேகம் இருப்பதாக தெரிவித்து சிறுமியின் வீட்டிற்கு முன்பாக கிராம மக்கள் மற்றும் உறவினர்களால் ஆர்ப்பாட்டம் ஒன்றினை முன்னெடுத்தனர். அத்தோடு குறித்த சிறுமியின் மரணத்திற்கு சிறிய தந்தையாரே காரணம் எனவும் தெரிவித்து மாபெரும் போராட்டத்தினை முன்னெடுத்ததுடன் மரணித்த சிறுமியின் வீட்டில் இருந்து பேரணியாக ஈச்சங்குளம் பொலிஸ் நிலையத்திற்கு சென்று பொலிஸ் நிலையத்தையும் முற்றுகையிட்டதுடன் வீதியை மறித்தும் ஆர்ப்பாட்டத்திலும் ஈடுபட்டனர். இதன் போது சிறுமியின் கொலைக்கு நீதி வேண்டும், பெண் பிள்ளைகளுக்கு பாதுகாப்பு வேண்டும், சதுமிதாவின் மரணத்திற்கு நீதி வேண்டும், போன்ற பதாதைகளை தாங்கியவாறும் கசிப்பு மற்றும் போதைவஸ்தை இல்லாமல் செய், நீதி வேண்டும் நீதி வேண்டும் மரணித்த சிறுமியின் மரணத்திற்கு நீதி வேண்டும் என்ற கோசங்களை எழுப்பியவாறு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஒரு மணித்தியாலம் வரை இடம்பெற்ற இவ் ஆர்ப்பாட்டம் காரணமாக தாண்டிக்குளம், இரணைஇலுப்பைக்குள வீதி போக்குவரத்தானது தடைப்பட்ட மையால் அவ்வீதியின் ஊடக பயணம் செய்யும் மக்கள் பாதிப்புக்குள்ளாகினர். இதன்போது கருத்து தெரிவித்த ஆர்ப்பாட்டக்காரர்கள், போதைப்பொருள் பாவனையாலே  இவ்வாறான நிலை ஏற்பட்டுள்ளது. நாங்களும் வேலைக்கு சென்று 6 மணி போல் வரும் போது எங்களிற்கு பாதுகாப்பு இல்லை. தற்போது சதுமிதாவிற்கு நடந்த பிரச்சனைதான் இன்னொரு சிறுமிக்கும் நடைபெறும்.  குறித்த சிறுமியின் மரணத்திற்கு நீதி வேண்டும். 18 வயதிற்குட்பட்ட குறித்த சிறுமியினை துஸ்பிரயோகம் செய்தமையாலே மன ரீதியாக பாதிக்கப்பட்டிருக்கலாம். அத்துடன் குறித்த சிறுமியினை சிறிய தந்தையாரே துஸ்பிரயோகம் செய்துள்ளார் என தெரிவித்த ஆர்ப்பாட்டகாரர்கள்  குறித்த சிறுமியின் மரணத்திற்கு நீதி வேண்டும் என தெரிவித்தார். ஏற்கனவே சந்தேக பேரில் சிறுமியின் சிறியதந்தையினை ஈச்சங்குளம் பொலிஸாரால் கைது செய்யப்பட்டிருந்த நிலையில், கைது செய்யப்பட்ட நபரினை நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்துவதாகவும், இச்சம்பவத்துடன் தொடர்புடைய ஏனையவர்கள் ஐயும் கைது செய்வதாகவும் பொலிஸார் தெரிவித்ததையடுத்து ஆர்ப்பாட்டகாரர்கள் கலைந்த சென்றனர். https://www.virakesari.lk/article/181483
    • சிட்னி வணிகவளாக தாக்குதலில்துணிச்சலாக செயற்பட்டவருக்கு அவுஸ்திரேலியாவின் நிரந்தர விசா 18 APR, 2024 | 05:05 PM   பொன்டியின் வணிகவளாகத்தில் கத்திக்குத்திற்கு இலக்காகிய பாக்கிஸ்தானை சேர்ந்த பாதுகாப்பு உத்தியோகத்தருக்கு நிரந்தர விசாவை வழங்கவுள்ளதாக அவுஸ்திரேலிய பிரதமர் தெரிவித்துள்ளார். பிரான்ஸ் பிரஜைக்கு அவுஸ்திரேலியா அவ்வாறான நிரந்தரவிசாவை வழங்கியுள்ள நிலையிலேயே அன்டனி அல்பெனிஸ்இதனை தெரிவித்துள்ளார். பொன்டி வணிகவளாக தாக்குதலின் போது துணிச்சலை வெளியிட்டவர்கள்அனைவரும் இருளின் மத்தியில் வெளிச்சமாக திகழ்ந்தவர்கள் என தெரிவித்துள்ள அன்டனி அல்பெனிஸ் அவர்கள் அவுஸ்திரேலியாவின் பாராட்டுகளை பெறவேண்டியவர்கள் என தெரிவித்துள்ளார். முகமட் டாஹாவிற்கு நிரந்தர வதிவிடத்தை அல்லது விசா நீடிப்பை வழங்குவது குறித்து  அரசாங்கம் சிந்திக்கும் என பிரதமர் தெரிவித்துள்ளார். https://www.virakesari.lk/article/181371
    • 🤣 ஒரு வேளை @பையன்26 கால இயந்திரத்தில் அடிக்கடி முன்னுக்கும் பின்னுக்கும் போய் வருவதால் கன்பியூஸ் ஆகி விட்டாரோ?
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
        • Like
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.