Jump to content

லண்டனில் உள்ள பிரித்தானியாவுக்கான மியன்மார் தூதர் வெளியேற்றம்!


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

லண்டனில் உள்ள பிரித்தானியாவுக்கான மியன்மார் தூதர் வெளியேற்றம்!

லண்டனில் உள்ள பிரித்தானியாவுக்கான மியன்மார் தூதர் வெளியேற்றம்!

லண்டனின் மேஃபர் பகுதியில் உள்ள மியன்மார் நாட்டு தூதரகத்தின் தூதர் க்யாவ் ஸ்வார் மின், வெளியேற்றப்பட்டுள்ளார்.

மியன்மார் தூதரகத்தின் இராணுவ அதிகாரி (Military Attache) மற்ற தூதரக அதிகாரிகளை வெளியேறுமாறு கூறியுள்ளார்.

மியன்மார் தூதர் க்யாவ் ஸ்வார் மின், சிறை பிடிக்கப்பட்டுள்ள ஆங் சான் சூகியின் விடுதலைக்கு ஆதரவாக குரல் கொடுத்ததன் பின்னணியில் அவர் வெளியேற்றபட்டுள்ளார்.

தூதர் க்யாவ் ஸ்வார் மின், தூதரகக் கட்டடத்தின் முன், லண்டனின் மெட்ரோபொலிடன் பொலிஸாரோடு பேசிக் கொண்டிருப்பது போன்ற படங்கள் சமூக வலைதளங்களில் வெளியாகியுள்ளன.

இதுகுறித்து தூதர் க்யாவ் ஸ்வார் மின் கூறுகையில், ‘நான் வெளியேற்றப்பட்டு இருக்கிறேன். இது லண்டனில் நடக்கும் ஒரு வகையான ஆட்சிக் கவிழ்ப்பு’ என கூறினார்.

க்யாவ் ஸ்வார் வெளியேற்றப்பட்ட பின், துணைத் தூதர் சிட் வின் பிரித்தானியாவுக்கான தூதராக பொறுப்பேற்றுள்ளார்.

க்யாவ் ஸ்வாரே, மியன்மார் இராணுவத்தில் கர்னலாக உயர் பதவியில் இருந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

https://athavannews.com/2021/1208506

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இதை செய்வினம்.. தமிழனின் தலையை வெட்டுவன் என்றவனுக்கு நீதிமன்றில்.. பாவ மன்னிப்பு அளிப்பினம்.

பிரித்தானிய நீதித்துறை அரசின்.. அரசியல் முடிவுகளுக்கு அடிமையாகிறதா..??!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, nedukkalapoovan said:

இதை செய்வினம்.. தமிழனின் தலையை வெட்டுவன் என்றவனுக்கு நீதிமன்றில்.. பாவ மன்னிப்பு அளிப்பினம்.

பிரித்தானிய நீதித்துறை அரசின்.. அரசியல் முடிவுகளுக்கு அடிமையாகிறதா..??!

மியான்மருக்கு பின்னால் சைனா வும் ரஸ்யாவும் நேரிடையாகவே தினமும் ஆயுத வழங்கல்  நடைபெறுகின்றது பில்லியன்கணக்கான உதவிகளை மேற்கிடம்  பெற்றுவிட்டு தற்போது ராணுவ ஆட்சி என்ற ஸ்கிரீனை தூக்கி பிடித்தால் இவையல் சும்மா  இருக்க மாட்டினம் தானே .

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, பெருமாள் said:

மியான்மருக்கு பின்னால் சைனா வும் ரஸ்யாவும் நேரிடையாகவே தினமும் ஆயுத வழங்கல்  நடைபெறுகின்றது பில்லியன்கணக்கான உதவிகளை மேற்கிடம்  பெற்றுவிட்டு தற்போது ராணுவ ஆட்சி என்ற ஸ்கிரீனை தூக்கி பிடித்தால் இவையல் சும்மா  இருக்க மாட்டினம் தானே .

ஆன் சான் சுகியின்ரை புருசன் பிரிட்டிஷ்காரர் எண்டு கேள்விப்பட்டன் உண்மையோ?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
35 minutes ago, குமாரசாமி said:

ஆன் சான் சுகியின்ரை புருசன் பிரிட்டிஷ்காரர் எண்டு கேள்விப்பட்டன் உண்மையோ?

ஆள் ஏதோ  ஒரு புற்று நோய் தாக்கி 2000களில் ஆள் மார்க்கயா மியான்மர் என்பது பழைய பர்மா 10 லட்சத்துக்கு மேல் தமிழ் சனம் இன்னும் இருக்கினம் யாழில் இருந்து நிறைய சனம் பர்மாவில் இருக்கினம் அவர்களின் காணிகள் தானமாக வழங்கப்பட்டு  வடக்கு  கோயில்களின் பராமரிப்பில் இருந்தவை இப்போ அவற்றுக்கு  என்ன நடக்குதோ யார் அறிவார் ?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, பெருமாள் said:

ஆள் ஏதோ  ஒரு புற்று நோய் தாக்கி 2000களில் ஆள் மார்க்கயா மியான்மர் என்பது பழைய பர்மா 10 லட்சத்துக்கு மேல் தமிழ் சனம் இன்னும் இருக்கினம் யாழில் இருந்து நிறைய சனம் பர்மாவில் இருக்கினம் அவர்களின் காணிகள் தானமாக வழங்கப்பட்டு  வடக்கு  கோயில்களின் பராமரிப்பில் இருந்தவை இப்போ அவற்றுக்கு  என்ன நடக்குதோ யார் அறிவார் ?

ஓமோம் சிங்கப்பூர் பெஞ்சனியர் மாதிரி பர்மா,மலாயன் பெஞ்சனியர் எண்டு அங்கை ஊர்க்கு ஊர் இருந்தவையள்.
என்ன ஒண்டு அவையள் லேடீஸ் விசயத்திலை அப்பிடி இப்பிடி இருப்பினம்.😎

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Popular Now

  • Topics

  • Posts

    • அப்படியாயின் மாற்று ஆட்சி ஒன்று வரட்டும். அது பாஜகாவை விட நாம் தமிழர் கட்சியாக இப்போதைக்கு இருக்கட்டும். அதை தமிழ்நாட்டு மக்கள்பரீட்சித்து பார்க்கட்டும். சரி இல்லையேல் அடுத்த நான்கு வருடத்தில் ஆட்சியை மாற்றட்டும். சந்ததி சந்ததியாக மற்ற கட்சிகளின் குறைபாடுகளை எதிர்வு கூறியே மீண்டும் மீண்டும் விட்ட தொட்ட பிழைகளை தொடராமல்....
    • எழுதுங்கள்…எதோ நான் பானுமதி, விஜி, பாத்திமாவோடு டீலில் இருந்தமாரி போகுது கதை🤣. நான் எப்போதும் சீமானை என்ன சொல்வேன்? சின்ன கருணாநிதி….. சின்ன கருணாநிதியே இவ்வளவு கேலவலமானவர் என எழுதும் எனக்கு பெரிய கருணாநிதி, எம்ஜிஆர், ஸ்டாலின், ஜெ., சசி, உதய் எல்லாரும் அதை ஒத்த கள்ளர்கள் என்பது தெரியாமலா இருக்கும். உங்களையும் சகாக்களையும் போல சீமான் மட்டும் தங்கம், ஏனையோர் பித்தளை என பசப்புபவன் நான் இல்லை. இவர்கள் எல்லாரும் ஒரே குட்டையில் நாறிய மட்டைகள் என்பது நான் 1ம் நாளில் இருந்து எழுதி வருவதே. பிகு நல்ல சுவாரசியமாக படத்தோடு எழுதுங்கள். சும்மா “சரோஜா தேவி” பலான கதைகள் போல தெறிக்க விடுங்கள்🤣.  ஆவலோடு காத்திருக்கிறேன்🤣 ஆருக்கு தெரியும். ஆம் என்கிறனர் விஜி. இல்லை என்கிறார் அண்ணன். 
    • சீமான் விஜலட்சுமியின் சட்டப்படியான கணவரா?
    • என்ன அண்ணை இது…..ஏதோ என்ர தனிப்பட்ட விசயம் போல என்னை கேட்டு கொண்டு நிக்கிறியள் 🤣… நான் ஒரு நேர்மையான திராவிட கொள்கையை நடைமுறை செய்த ஆட்சி எப்படி இருக்கும் என்ற உங்கள் கேள்விக்கு அண்ணா ஆட்சி போல இருக்கும் என கூறினேன். அவருக்கும் நடிகைக்கும் தொடர்பு என்றீர்கள். அதுக்கும் ஆட்சி செய்யும் விதத்துக்கும் என்ன தொடர்பு? எதுவுமில்லை. இருப்பினும் அவர் பானுமதியை பாலியல் இம்சை செய்ததாயோ, அல்லது நம்ப வைத்து கைவிட்டதாயோ நான் அறியவில்லை. பானுமதி கடைசிவரை அண்ணா மீது அப்படி ஏதும் சொல்லவில்லை. நான் அறிந்த வரை தீராகாதலிலேயே இருந்தார். ஆனால் சீமான் பற்றி விஜி அண்ணி சொல்வது நாம் அறிந்ததே. முடிவாக உண்மையான திராவிட கொள்கை உள்ள ஆட்சி இப்போதைய ஆட்சியா? என்ற உங்கள் கேள்விக்கு பதில் இல்லை. இது கொள்ளையர் ஆட்சி. உண்மையான திராவிட கொள்கை ஆட்சி அப்பாவி ஆட்சி போல இருக்கும் என்பதே என் பதில். இதில் நீங்கள் கனிமொழியை பற்றி என்ன, யாரை பற்றியும், படம், நீலப்படம் எதுவும் போடலாம் - என்னிடம் அனுமதி பெற வேண்டிய அவசியமே இல்லை🤣. 
    • அங்கு தேசிய கட்சிகளுக்கு எப்போதும்ஓரளவு ஆதரவு இருக்கிறது. காங்கிரஸ் விஜய் வசந்துக்கும் பொன் ராதாகிருஷ்ணாவுக்கும்தான் சரியான போட்டி
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
        • Like
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
        • Like
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.