Jump to content

பிரித்தானிய இளவரசர் பிலிப் தனது 99 வயதில் காலமானார்!


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

பிரித்தானிய இளவரசர் பிலிப் தனது 99 வயதில் காலமானார்!

spacer.png

இரண்டாம் எலிசபெத் மகாராணியின் கணவரும் இளவரசருமான பிலிப், தனது 99 வயதில் காலமானதாக பக்கிங்ஹாம் அரண்மனை அறிவித்துள்ளது.

65 ஆண்டுகாலங்கள் சேவையாற்றிய இளவரசர் பிலிப் இன்று (வெள்ளிக்கிழமை) காலை விண்ட்சர் கோட்டையில் காலமானதாக பக்கிங்ஹாம் அரண்மனை வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எடின்பர்க் டியூக் இளவரசர் பிலிப், 2017ஆம் ஆண்டு அரச கடமைகளில் இருந்து ஓய்வு பெற்றார். பின்னர் பெரும்பாலும் பார்வையில் இருந்து விலகியே இருந்தார்.

சமீபத்திய ஆண்டுகளில் உடல்நிலை சரியில்லாமல் இருந்த இளவரசர் பிலிப், அண்மையில் இரண்டு முறை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு பின்னர், ஆரோக்கியத்துடன் மருத்துவமனையிலிருந்து வெளியேறியிருந்தார்.

பிரித்தானிய வரலாற்றில் மிக நீண்ட காலம் பணியாற்றிய இளவரசராக இளவரசர் பிலிப் உள்ளார்.

இந்த தம்பதியருக்கு நான்கு பிள்ளைகள், எட்டு பேரக்குழந்தைகள் மற்றும் 10 பூட்டக் குழந்தைகள் உள்ளனர்.

இளவரசரின் இறுதிச் சடங்கு குறித்து அதிகாரப்பூர்வ விபரங்கள் எதுவும் இதுவரை வெளியிடப்படவில்லை. ஆனால் அவரது விருப்பத்திற்கு ஏற்ப அவருக்கு ஒரு மாநில இறுதி சடங்காக இல்லாமல் அரச சடங்காக இறுதி சடங்கு நடைபெறும் என்பது புரிந்து கொள்ளப்படுகிறது.

ராணி இறுதி நாட்களில் இறுதி திட்டங்களில் கையெழுத்திடுவார்.

கிரேக்க மற்றும் டென்மார்க்கின் இளவரசர் பிலிப் 1921ஆம் ஆண்டு ஜூன் 10ஆம் திகதி கோர்பு தீவில் பிறந்தார்.

18 வயதில் இளவரசர் ரோயல் கடற்படையில் சேர்ந்தார். அவர் இரண்டாம் உலகப் போரின்போது இந்தியப் பெருங்கடல் மற்றும் மத்திய தரைக்கடலில் பணியாற்றினார்.

1947ஆம் ஆண்டில் அவர் தனது கிரேக்க மற்றும் டேனிஷ் அரச பட்டங்களை கைவிட்டார்.

இரண்டாம் எலிசபெத் மகாராணி-  இளவரசர்  திருமணம் இரண்டாம் உலகப் போர் முடிந்த பின்னர் நடந்த முதல் பெரிய அரச சந்தர்ப்பமாகும். திருமணம் நவம்பர் 20ஆம் திகதி நடைபெற்றது. ராணி ஆவதற்கு ஐந்து ஆண்டுகளுக்கு முன்பே இளவரசர் ராணியை மணந்தார்.

https://athavannews.com/2021/1208864

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இளவரசர் ஃபிலிப் காலமானார், பக்கிங்காம் அரண்மனை அறிவிப்பு

 
1-25-1.jpg
 24 Views

பிரித்தானியா அரசி இரண்டாம் எலிசபெத்தின் கணவரும் இளவரசருமான ஃபிலிப், தனது 99 வயதில் காலமானார். இந்த தகவலை பக்கிங்காம் அரண்மனை அறிவித்துள்ளது.

1947ஆம் ஆண்டில் இளவரசி எலிசபெத் அரசியாவதற்கு ஐந்து ஆண்டுகளுக்கு முன்பாக அவரை இளவரசர் திருமணம் செய்து கொண்டார். பிரித்தானியா அரச குடும்ப வரலாற்றில் நீண்ட காலம் சேவையாற்றியவர் அவர்.

அவரது மறைவு தொடர்பாக பக்கிங்காம் அரண்மனை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், “தனது நேசத்துக்குரிய கணவர், எடின்பரோ கோமகன் இளவரசர் ஃபிலிப் இறந்து விட்டார் என்ற தகவலை மாட்சிமை பொருந்திய அரசி ஆழ்ந்த வருத்தத்துடன் வெளியிட்டுள்ளார்,” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேமுலும்”மேதகு இளவரசரின் உயிர் இன்று காலை வின்சர் கோட்டையில் அமைதியான முறையில் பிரிந்தது,” என்றும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பாவம் செஞ்சுரி அடிக்க முதல் போட்டார்.. ஆழ்ந்த அனுதாபங்கள் 🙏

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நதிமூலம் ரிஷிமூலம் பாத்தால் இவர் ஒரு ஜேர்மன்காரர்

 அதுசரி பேரன்ரை செத்தவீட்டுக்கு ஹரியை வர விடுவினமோ?

அஞ்சலிகள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, நிழலி said:

சாகிற வயசா இது. 

மகராசாவுக்கு அஞ்சலி!

மேல் உலகுக்கு ராசாவுக்கு ராணிக்கும் போக விருப்பம் இல்லாமல் இருந்ததாம் ஏன் என்றால் அங்கு மருமகள் டயானா இருப்பதால் .🥱

1 hour ago, குமாரசாமி said:

நதிமூலம் ரிஷிமூலம் பாத்தால் இவர் ஒரு ஜேர்மன்காரர்

 அதுசரி பேரன்ரை செத்தவீட்டுக்கு ஹரியை வர விடுவினமோ?

அஞ்சலிகள்.

புத்திசாலிகள் என்றால் அதுகள் வ்ராதுகள் வந்தால் தான பேத தர்ம தண்டம் .

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, குமாரசாமி said:

நதிமூலம் ரிஷிமூலம் பாத்தால் இவர் ஒரு ஜேர்மன்காரர்

இவர், கிரேக்க, டேனிஷ் ரத்தம் ஓடுற அரச வம்சத்துக்காரர்.

இவரது மனிசி தான் ஜெர்மன்காரி.

ஆனாலும், நல்ல வடிவான பொம்பிளைய பிடிச்சவர் எல்லோ... 

32 Photos of Queen Elizabeth and Princess Margaret Being PYTs | Young queen  elizabeth, Young queen victoria, Queen elizabeth

Young Queen Elizabeth II, 1944 [2494x3484] : HistoryPorn

Queen Elizabeth II Through the Years - Photos of Queen Elizabeth II

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஆழ்ந்த இரங்கல்கள்........! 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
18 hours ago, Nathamuni said:

இவர், கிரேக்க, டேனிஷ் ரத்தம் ஓடுற அரச வம்சத்துக்காரர்.

இவரது மனிசி தான் ஜெர்மன்காரி.

ஆனாலும், நல்ல வடிவான பொம்பிளைய பிடிச்சவர் எல்லோ... 

ஆழ்ந்த இரங்கல்கள்........! 

காதல் திருமணமா... இல்லாட்டி,  பெரிசுகள் பேசிச்  செய்த திருமணமா..

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
20 hours ago, Nathamuni said:

இவர், கிரேக்க, டேனிஷ் ரத்தம் ஓடுற அரச வம்சத்துக்காரர்.

இவரது மனிசி தான் ஜெர்மன்காரி.

ஆனாலும், நல்ல வடிவான பொம்பிளைய பிடிச்சவர் எல்லோ... 

32 Photos of Queen Elizabeth and Princess Margaret Being PYTs | Young queen  elizabeth, Young queen victoria, Queen elizabeth

Young Queen Elizabeth II, 1944 [2494x3484] : HistoryPorn

Queen Elizabeth II Through the Years - Photos of Queen Elizabeth II

ஆழ்ந்த  இரங்கல்கள் ஜேரமன்காரிகள் வடிவான பெண்கள் தான்😜😜😜😜😜

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
19 minutes ago, Kandiah57 said:

ஜேரமன்காரிகள் வடிவான பெண்கள் தான்😜😜😜😜😜

அதுவும் வெய்யில் காலத்திலை எண்டால் இன்னும் வடிவு. 😎

 

2 hours ago, தமிழ் சிறி said:

ஆழ்ந்த இரங்கல்கள்........! 

காதல் திருமணமா... இல்லாட்டி,  பெரிசுகள் பேசிச்  செய்த திருமணமா..

எப்பிடியும் பொருத்தம் பாத்துத்தான் செய்திருப்பினம்.😷

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஆழ்ந்த இரங்கல்கள்..!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

 

73 வருடகால பந்தம் ! இளவரசர் பிலிப்பின் பின்னணி !

கிரேக்க தீவான கோர்ஃபுவில் 1921 ஆம் ஆண்டு பிறந்த இளவரசர் பிலிப், 1947 ஆம் ஆண்டு இங்கிலாந்து இளவரசி இரண்டாம் எலிசபெத்தை திருமணம் செய்துகொண்டார்.

13.jpg

4 குழந்தைகளைப் பெற்ற இவர்கள் 8 பேரக்குழந்தைகளும் உள்ளனர். அவர்களின் மூலம் 10 கொள்ளுப் பேரக்குழந்தைகளையும் பார்த்துள்ளனர்.

14.jpg

இங்கிலாந்து வரலாற்றிலேயே மிக நீண்டகாலம் ஆட்சிப்பணியில் இருந்த அரச தம்பதிகள் என்ற பெருமை இவர்கள் இருவரையே சேரும். இளவரசர் பிலிப்பின் மறைவுக்கு பல்வேறு உலகத் தலைவர்களும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

_98828456_pa-33715649.jpg

1921 ஆம் ஆண்டு ஜூன் மாதம் 10 திகதி கிரீஸ் மற்றும் டென்மார்க் இளவரசர் அன்ட்றூவுக்கு மகனாக கிரீஸ் நாட்டில் பிறந்தார். (அப்போது கிரீஸ் நாடு ஜூலியன் காலண்டரை பயன்படுத்தியது. 1923 ஆண்டுக்கு பின் கிரகேரியன் காலண்டரை ஏற்றுக்கொண்டது).

1922 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் கிரீஸ் மன்னர் கொன்ஸ்டன்டைன் உத்தரவின் படி, இவரது குடும்பம் பிரான்ஸின் பாரிசுக்கு இடம் பெயர்ந்தது.

1.jpg

1928 ஆம் ஆண்டளவில் ஜேர்மன், பிரிட்டனில் கல்வி பயின்றார் பிலிப்.

1934 ஆம் ஆண்டு காலப்பகுதியில் பாடசாலை கிரிக்கெட், ஹொக்கி அணியில் அணித் தலைவராக  இருந்தார்.

1934 ஆம் ஆண்டு காலத்தில் வெஸ்ட்மினிஸ்டர் அபே சேர்ச்சில் நடந்த பிலிப் உறவினர் திருமணத்தில், எலிசபெத்தை முதன்முதலாக சந்தித்தார்.

4.jpg

1939 ஆம் ஆண்டில் பிரிட்டன் கப்பல்படையில் பிலிப் பயிற்சி பெற்றார்.

1939 ஆம் ஆண்டு ஜூலை மாதம் கல்லுாரியில் படித்த எலிசபெத், அவரது தங்கை மார்க்ரெட் பாதுகாப்புக்கு உடன் சென்ற பிலிப் மீது எலிசபெத்துக்கு காதல் மலர்ந்தது.

1940 ஆம் ஆண்டு இந்திய பெருங்கடல் பகுதியில் ஆறு மாதம் கப்பல்படையில் பணியாற்றினார்.

1943 ஆம் ஆண்டு இவரது புகைப்படத்தை தனது டிரஸ்சிங் டேபிள் மீது எலிசபெத் வைத்திருந்தார்.

15.jpg

1944 ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் இரண்டாம் உலகப்போரின் போது இந்திய பெருங்கடல் பகுதியில் 'எச்.எம்.எஸ்., வெல்ப்' போர்க்கப்பலின் கேப்டனாக பணியாற்றினார்.

1945 ஆம் ஆண்டு செப்டெம்பர் மாதம் 2 ஆம் திகதி ஜப்பான் சரணடையும் போது, டோக்கியோ கடல் பகுதியில் பணியில் இருந்தார்.

1946 ஆம் ஆண்டு பிரிட்டன் திரும்பினார் பிலிப். எலிசபெத்தை திருமணம் செய்து வைக்க மன்னர் ஆறாம் ஜோர்ஜிடம் கோரிக்கை விடுத்தார்.

1947 ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் 29 ஆம் திகதி டென்மார்க் , கிரீஸ் இளவரசர் பட்டத்தை விட்டுக்கொடுத்து, பிரிட்டன் குடியுரிமை பெற்றார்.

1947 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 20 ஆம் திகதி பிலிப் - எலிசபெத் திருமணம் வெஸ்ட்மினிஸ்டர் அபே சேர்ச்சில் நடைபெற்றது.

1953 ஆம் ஆண்டு ஜூன் மாதம் 2 ஆம் திகதி மன்னர் ஆறாம் சார்லஸ் மறைவுக்குப்பின் அவரது மகள் எலிசபெத் பிரிட்டன் ராணி ஆனார்.

1956 ஆம் ஆண்டு ஹெலிகாப்டர் இயக்குவதற்கான அனுமதிப்பத்திரத்தை ( லைசென்ஸ் ) பெற்றார்.

1961: இந்திய பயணத்தின் போது ஜெய்ப்பூரில் துப்பாக்கியால் புலியை சுட்டுக் கொன்றார். இது சர்ச்சையானது.

2009 ஆம் ஆண்டு பிரிட்டன் அரச குடும்ப வரலாற்றில் நீண்டகால இளவரசரானர்.

9.jpg

2011 ஆம் ஆண்டு இருதய அறுவை சிகிச்சை செய்து கொண்டார்.

2017 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 2 ஆம் திகதி பொது வாழ்க்கையில் இருந்து விலகினார்.

2020 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 20 ஆம் திகதி பிலிப் - எலிசபெத் தங்களது 73 ஆவது திருமண நாளை கொண்டாடினர்.

2021 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 10 ஆம் திகதி பிலிப், எலிசபெத் இருவரும் கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொண்டனர்.

2021 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 9 ஆம் திகதி உடல்நலக்குறைவால் இளவரசர் பிலிப் காலமானார்.

 

https://www.virakesari.lk/article/103616

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பிரித்தானியாவில் இளவரசர் பிலிப் மறைவுக்கு 8 நாட்கள் துக்க தினம்: 17ஆம் திகதி இறுதி நிகழ்வு!

பிரித்தானியாவில் இளவரசர் பிலிப் மறைவுக்கு 8 நாட்கள் துக்க தினம்: 17ஆம் திகதி இறுதி நிகழ்வு!

பிரித்தானிய இளவரசரும் இரண்டாம் எலிசபெத் மகாராணியின் கணவருமான பிலிப் மறைவையடுத்து எதிர்வரும் 17ஆம் திகதி வரை துக்கதினம் அறிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன், எதிர்வரும் 17ஆம் திகதி சனிக்கிழமை வின்சர் கோட்டையில் உள்ள ஃப்ரொக்மோர் (frogmore) தோட்டத்தில் அவரது உடல் அடக்கம் செய்யப்படவுள்ளது. அத்துடன் கொரோனா வைரஸ் நெருக்கடி நிலைமை காரணமாக இறுதி நிகழ்வு குறித்த முழு விபரம் பின்னர் அறிவிக்கப்படவுள்ளது.

இதேவேளை, அத்துடன், இரண்டாம் உலகப் போரின்போது கடற்படை அதிகாரியாகப் பணியாற்றிய மற்றும் உயர் அட்மிரல் பிரபு பதவியில் இருந்த பிலிப்பின் நினைவாக கடலில் றோயல் கடற்படைக் கப்பல்களில் அவருக்கு துப்பாக்கி வேட்டுக்களால் வணக்கம் செலுத்தப்படவுள்ளது.

மேலும், பிலிப்பின் மறைவுக்கு உலக நாடுகளின் தலைவர்கள் மற்றும் அரச குடும்பத்தினர்கள் தமது அனுதாபங்களைத் தெரிவித்து வருகின்றனர்.

இதனைவிட, அவுஸ்ரேலியாவில், கான்பெராவில் உள்ள நாடாளுமன்ற வளாகத்திற்கு வெளியில், இளவரசர் பிலிப் இறந்ததைக் குறிக்கும் வகையில் 41 துப்பாக்கி வேட்டுக்கள் தீர்க்கப்பட்டு வணக்கம் செலுத்தப்பட்டுள்ளது.

Flags-flew-at-half-mast-across-Australia-where-a-gun-salute-was-fired-600x337.jpg

அத்துடன், நியூசிலாந்து இராணுவம் நாளை ஞாயிற்றுக்கிழமை வெலிங்டனில் உள்ள பொயின்ற் ஜெர்னிங்ஹாமில் துப்பாக்கி வேட்டுக்கள் மூலம் மரியாதை செலுத்தவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

https://athavannews.com/2021/1209014

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஆழ்ந்த இரங்கல்கள்.

 

சில ஆண்களுக்கு மனைவிமார்தான் கவசம் போன்றவர்கள்.

இன்னரின் கணவர் என்றால்தான் தெரியும். இந்த ஆண்களின் பண்புகள் பெண்ணின் ஆளுமையில் மறைந்து விடும்.

 

இந்திராகந்தியின் கணவர் பெரோஸ் கானும் இவ்வாறே. 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, colomban said:

இன்னரின் கணவர் என்றால்தான் தெரியும். இந்த ஆண்களின் பண்புகள் பெண்ணின் ஆளுமையில் மறைந்து விடும்.

 

இந்திராகந்தியின் கணவர் பெரோஸ் கானும் இவ்வாறே. 

நான் அடிச்சு சொல்லுறன்  இவருக்கு எங்கடை சனங்களோடை பழக்கம் இல்லையெண்டு...😎

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, குமாரசாமி said:

நான் அடிச்சு சொல்லுறன்  இவருக்கு எங்கடை சனங்களோடை பழக்கம் இல்லையெண்டு...😎

யாருக்கு?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
18 minutes ago, Kandiah57 said:

யாருக்கு?

பிலிப் கடைசி வரை 'மன்னர்' என அழைக்கப்பாடாதது ஏன்? - www.pathivu.com

இவருக்குத் தான். :grin:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பிரித்தானியா இளவரசர் பிலிப் இறுதி நிகழ்வு சனிக்கிழமை – முப்பது பேரே பங்குபற்றுகின்றனர்

 
Capture.JPG-2-1.jpg
 56 Views

மறைந்த இளவரசர் பிலிப்பின் இறுதிச் சடங்குகளை நாட்டில் அமுலில் உள்ள கொரோனா சுகாதார விதிமுறைகளை அனுசரித்து முப்பது பேருடன் எதிர்வரும் சனிக்கிழமை இடம்பெறும் என தெரிவிக்கப்படுகின்றது.

எதிர்வரும் சனிக்கிழமை பிற்பகல் மூன்று மணிக்கு St George’s Chapel இல் நடைபெறவுள்ள இறுதி நிகழ்வில் இளவரசர் ஹரி உட்பட நெருங்கிய குடும்ப உறுப்பினர்கள் முப்பது பேர் மட்டுமே பிரசன்னமாகுவர் என்று தெரிவித்து அவர்களது பெயர் விவரங்களை பக்கிங்காம் அரண்மனை வெளியிட்டுள்ளது.
 
முப்பது பேரில் ஒருவராக பிரதமர் பொறிஸ் ஜோன்சனின் பெயரும் அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் அவர் இறுதி நிகழ்வில் கலந்து கொள்ளமாட்டார் என்று அவரது டவுனிங் வீதி அலுவலகம் தெரிவித்துள்ளது. அரச குடும்பத்தில் நெருக்கமான வேறு ஒருவருக்கு இடமளிக்கும் பொருட்டே பிரதமர் இறுதி நிகழ்வைத் தவிர்க்கிறார் என்று விளக்கமளிக்கப்பட்டுள்ளது.
 

பிரித்தானியா மகாராணி இரண்டாவது எலிசபதின் கணவரும் எடின்பரோ பகுதியின் இளவரசருமான பிலிப் மவுன்பட்டன் (99) கடந்த வெள்ளிக்கிழமை (09) வின்சர் அரண்மனையில் காலமானதாக பக்கிங்கம் அரண்மனை தெரிவித்திருந்தது.

1947 ஆம் ஆண்டு பிரித்தானியாவின் இளவரசியை அவர் மணமுடித்த பின்னர், ஐந்து வருடங்களில் எலிசபத் மகாராணியாக முடிசூடப்பட்டிருந்தார். அவர்களுக்கு நான்கு பிள்ளைகளும், 8 பேரப்பிள்ளைகளும் உண்டு.’

18 மாத குழந்தையாக இருந்த போது கிறீஸ் நாட்டில் இருந்து தோடம்பழ பெட்டிக்குள் மறைந்து இருந்து பிரான்ஸ்இற்கு அகதியாக குடும்பத்துடன் வந்த பிலிப், தனது முயற்சியால் மீண்டும் உயர்ந்து பிரித்தானியாவின் அரச குடும்பத்தில் இணைந்து கொண்டது, நம்பிக்கை உடைய எவரும் வீழ்வதில்லை என்பதை காட்டியுள்ளது.

அவரின் தந்தையார் டென்மார்க்கை சேர்ந்தபோதும், தாய் ரஸ்யா நாட்டை சேர்ந்தவர் என்பதுடன் இரண்டாம் உலகப்போரின்போது ஜேர்மனியில் இருந்த தனது உடன்பிறப்புக்களுக்கு எதிராகவும் அவர் போரிட்டிருந்தார்.

சனிக்கிழமை பிற்பகல் மூன்று மணிக்கு இறுதி நிகழ்வு ஆரம்பிக்க முன்னர் நாடு
முழுவதும் ஒரு நிமிடம் மௌன அஞ்சலி செலுத்தப்படும். பிலிப்பின் உடல் வைக்கப்பட்ட பேழையைப் பொதுமக்கள் எவரும் நேரில் பார்வையிட அனுமதி வழங்கப்பட மாட்டாது.
 
பிலிப்பின் உடல் விசேடமாக வடிவமைக் கப்பட்ட ‘லான்ட் ரோவர்’ (Land Rover) வாகனத்தில் இராணுவ மரியாதையுடன் எடுத்துச் செல்லப்படும். தனது உடலைச் சுமந்து செல்லும் இறுதி ஊர்வல வண்டியை வடிவமைப்பதில் இளவரசர் பிலிப்பும் பங்கு கொண்டார் என்ற தகவல் தற்போது வெளியாகி உள்ளது.
 
கொரோனா வைரஸ் விதிகள் காரணமாக இரங்கல் செய்தி எழுதும் புத்தகங்கள் பொது இடங்களில் வைக்கப்பட மாட்டாது. அவை இணையத்தில் மட்டுமே திறக்கப்பட்டுள்ளன.
 
 
 
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 10/4/2021 at 04:18, தமிழ் சிறி said:

ஆழ்ந்த இரங்கல்கள்........! 

காதல் திருமணமா... இல்லாட்டி,  பெரிசுகள் பேசிச்  செய்த திருமணமா..

 

On 10/4/2021 at 04:18, தமிழ் சிறி said:

ஆழ்ந்த இரங்கல்கள்........! 

காதல் திருமணமா... இல்லாட்டி,  பெரிசுகள் பேசிச்  செய்த திருமணமா..

காதல் திருமணம்தான் ... காதல் என்றாலும் காதல் அப்படியொரு காதல் 
லண்டனில் இருந்தால் சும்மா அரச வேஷம் போட்டுகொண்டு பம்மாத்து காட்டிக்கொண்டு 
இருக்கவேண்டும் என்று எலிசபெத் இளவயதிலேயே காதல்வயப்பட்ட பிலிப்சுடன் தென் ஆப்ரிக்கா ஓடிவிட்டார் 
அவர் அங்கு இருக்கும்போது .. அவரது தந்தை திடீரென மாரடைப்பால் இறந்துபோனார் 
தென்னாபிரிக்காவில் இருந்தே ராணியாகி இங்கிலாந்து வந்தார். 

மிகுந்த கெட்டிகாரி எலிசபெத் 
மார்கிரெட் தச்சருக்கு செக் வைத்து அவரை கட்டுப்பாடில் வைத்திருந்த அறிவுச்சுடர் 
இல்லாவிட்டார் மார்கிரெட் இன்னமும் ஆடியிருப்பார்
அதுமட்டுமல்ல பல அரசியலை வெட்டியாடியவர்  
தந்தை இறந்த பின்பு மிகுந்த அர்ப்பணிப்புடன் அரச குடும்பத்து குத்துவிளக்கை 
அணையாமல் பார்த்துக்கொண்ட பெருமை ராணியையே சாரும் 
மற்றவர்கள் எல்லோரும் சும்மா பித்தலாட்டம்தான் பிலிப்சுக்கும் சில கள்ள தொடர்புகள் உண்டு 
எல்லாவற்றையும் சகித்துக்கொண்டு  இங்கிலாந்து பத்திரிக்கை துறையை கிசு கிசுக்களை 
வெட்டியாடியவர் அவரது தங்கை மார்க்ரெட் குடும்ப மானத்தை அப்ப அப்ப கப்பல் ஏத்தியவர் 
குடி செக்ஸ் கள்ள தொடர்பு என்று திரிந்தவர் 

ராணி எலிசபெத் இறந்ததும் இவர்கள் வம்சமும் கொஞ்சம் ஊடல் ஆடும் என்றே எண்ணுகிறேன் 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, Maruthankerny said:

 

காதல் திருமணம்தான் ... காதல் என்றாலும் காதல் அப்படியொரு காதல் 
லண்டனில் இருந்தால் சும்மா அரச வேஷம் போட்டுகொண்டு பம்மாத்து காட்டிக்கொண்டு 
இருக்கவேண்டும் என்று எலிசபெத் இளவயதிலேயே காதல்வயப்பட்ட பிலிப்சுடன் தென் ஆப்ரிக்கா ஓடிவிட்டார் 
அவர் அங்கு இருக்கும்போது .. அவரது தந்தை திடீரென மாரடைப்பால் இறந்துபோனார் 
தென்னாபிரிக்காவில் இருந்தே ராணியாகி இங்கிலாந்து வந்தார். 

மிகுந்த கெட்டிகாரி எலிசபெத் 
மார்கிரெட் தச்சருக்கு செக் வைத்து அவரை கட்டுப்பாடில் வைத்திருந்த அறிவுச்சுடர் 
இல்லாவிட்டார் மார்கிரெட் இன்னமும் ஆடியிருப்பார்
அதுமட்டுமல்ல பல அரசியலை வெட்டியாடியவர்  
தந்தை இறந்த பின்பு மிகுந்த அர்ப்பணிப்புடன் அரச குடும்பத்து குத்துவிளக்கை 
அணையாமல் பார்த்துக்கொண்ட பெருமை ராணியையே சாரும் 
மற்றவர்கள் எல்லோரும் சும்மா பித்தலாட்டம்தான் பிலிப்சுக்கும் சில கள்ள தொடர்புகள் உண்டு 
எல்லாவற்றையும் சகித்துக்கொண்டு  இங்கிலாந்து பத்திரிக்கை துறையை கிசு கிசுக்களை 
வெட்டியாடியவர் அவரது தங்கை மார்க்ரெட் குடும்ப மானத்தை அப்ப அப்ப கப்பல் ஏத்தியவர் 
குடி செக்ஸ் கள்ள தொடர்பு என்று திரிந்தவர் 

ராணி எலிசபெத் இறந்ததும் இவர்கள் வம்சமும் கொஞ்சம் ஊடல் ஆடும் என்றே எண்ணுகிறேன் 

மருதங்கேணி... பல அரிய தகவல்களை, உங்கள் பதிவின் மூலம் அறிந்து கொண்டேன்.
நீங்கள் கடைசியாக கூறிய வசனம்.. நூற்றுக்கு நூறு  வீதம், உண்மையாக நடக்கும்.
மகாராணி  எலிசெபத்திற்கு  பிறகு.. அரச வம்சத்தை, 
யாரும் கணக்கெடுக்க மாட்டார்கள், என்றே நானும்  நினைக்கின்றேன். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
11 hours ago, உடையார் said:

18 மாத குழந்தையாக இருந்த போது கிறீஸ் நாட்டில் இருந்து தோடம்பழ பெட்டிக்குள் மறைந்து இருந்து பிரான்ஸ்இற்கு அகதியாக குடும்பத்துடன் வந்த பிலிப், தனது முயற்சியால் மீண்டும் உயர்ந்து பிரித்தானியாவின் அரச குடும்பத்தில் இணைந்து கொண்டது, நம்பிக்கை உடைய எவரும் வீழ்வதில்லை என்பதை காட்டியுள்ளது.

Truck Shipping Sticker by Hapag-Lloyd AG for iOS & Android | GIPHY

அட... பக்கிங்காம் மாளிகையிலும், ஒரு அகதி... 
நெஞ்சை நிமித்தி, கெத்தாக வாழ்ந்து இருக்கின்றார்.  :grin:

இதிலிருந்து நாம் அறிவது என்னவென்றால்....
பிரித்தானியாவுக்கு 1920´ம்  ஆண்டுகளிலேயே...
அகதிகள், தோடம்பழ  பெட்டிக்குள் இருந்து வந்திருக்கிறார்கள்.
இப்ப...  "லொறி கொன்ரெய்னர்களில்" வருகிறார்கள். :)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மறைந்த இளவரசர் ஃபிலிப்பின் இறுதிச் சடங்கு தொடர்பான அறிவிப்பு வெளியானது!

மறைந்த இளவரசர் ஃபிலிப்பின் இறுதிச் சடங்கு தொடர்பான அறிவிப்பு வெளியானது!

எடின்பரோவின் கோமகன் மற்றும் அரசி எலிசபெத்தின் கணவர் ஃபிலிப்பின், இறுதிச் சடங்கு வின்சர் கோட்டையில் உள்ள புனித ஜோர்ஜ் தேவாலயத்தில், எதிர்வரும் ஏப்ரல் 17ஆம் திகதி சனிக்கிழமை, பிரித்தானிய நேரப்படி மாலை 3 மணியளவில் நடைபெறவுள்ளது.

ஆடம்பரமற்ற எளிமையான இறுதி நிகழ்ச்சிகளை மேற்கொள்ளுமாறு இளவரசர் ஃபிலிப் கேட்டுக் கொண்டதற்கு இனங்க இறுதி நிகழ்ச்சி அரசு முறை நிகழ்வாக இல்லாமல், சடங்குகளாக இருக்கும்.

அத்தோடு அவரது உடல் இருக்கும் சவப் பெட்டியை, பொது வெளியில் மக்கள் அனைவரும் பார்க்கும் வகையில் வைக்கப்படப் போவதில்லை. அதற்கு பதிலாக, இளவரசர் ஃபிலிப்பின் உடல் நல்லடக்கம் செய்யப்படும் வரை, வின்சர் கோட்டையில் இருக்கும் தனி தேவாலயத்தில் வைக்கப்படவிருக்கிறது.

பொதுமக்கள், பூங்கொத்துகளை வைப்பதற்கு பதிலாக, கோமகனின் நினைவாக அறக்கட்டளை பணிகளுக்கு நன்கொடை அளிக்குமாறு அரச குடும்பம் கேட்டுக் கொண்டுள்ளது.

மேலும், பொதுமக்கள் இரங்கல் தெரிவிக்க வசதியாக, அரச குடும்பத்து இணையதள பக்கத்தில் இரங்கல் பதிவிடும் வகையில் இணைய பக்கம் தொடங்கப்பட்டுள்ளது.

இறுதி நிகழ்வுக்காக, யார் எல்லாம் அழைக்கப்பட்டிருக்கிறார்கள் அல்லது யார் எல்லாம் இறுதி நிகழ்வில் பங்கெடுக்கவிருக்கிறார்கள் என்கிற விபரம் இதுவரை அறிவிக்கப்படவில்லை.

https://athavannews.com/2021/1209410

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, Maruthankerny said:

 

காதல் திருமணம்தான் ... காதல் என்றாலும் காதல் அப்படியொரு காதல் 
லண்டனில் இருந்தால் சும்மா அரச வேஷம் போட்டுகொண்டு பம்மாத்து காட்டிக்கொண்டு 
இருக்கவேண்டும் என்று எலிசபெத் இளவயதிலேயே காதல்வயப்பட்ட பிலிப்சுடன் தென் ஆப்ரிக்கா ஓடிவிட்டார் 
அவர் அங்கு இருக்கும்போது .. அவரது தந்தை திடீரென மாரடைப்பால் இறந்துபோனார் 
தென்னாபிரிக்காவில் இருந்தே ராணியாகி இங்கிலாந்து வந்தார். 

மிகுந்த கெட்டிகாரி எலிசபெத் 
மார்கிரெட் தச்சருக்கு செக் வைத்து அவரை கட்டுப்பாடில் வைத்திருந்த அறிவுச்சுடர் 
இல்லாவிட்டார் மார்கிரெட் இன்னமும் ஆடியிருப்பார்
அதுமட்டுமல்ல பல அரசியலை வெட்டியாடியவர்  
தந்தை இறந்த பின்பு மிகுந்த அர்ப்பணிப்புடன் அரச குடும்பத்து குத்துவிளக்கை 
அணையாமல் பார்த்துக்கொண்ட பெருமை ராணியையே சாரும் 
மற்றவர்கள் எல்லோரும் சும்மா பித்தலாட்டம்தான் பிலிப்சுக்கும் சில கள்ள தொடர்புகள் உண்டு 
எல்லாவற்றையும் சகித்துக்கொண்டு  இங்கிலாந்து பத்திரிக்கை துறையை கிசு கிசுக்களை 
வெட்டியாடியவர் அவரது தங்கை மார்க்ரெட் குடும்ப மானத்தை அப்ப அப்ப கப்பல் ஏத்தியவர் 
குடி செக்ஸ் கள்ள தொடர்பு என்று திரிந்தவர் 

ராணி எலிசபெத் இறந்ததும் இவர்கள் வம்சமும் கொஞ்சம் ஊடல் ஆடும் என்றே எண்ணுகிறேன் 

மார்கிரெட் தச்சருக்கு செக் வைக்குமளவு அரச குடும்பத்தில் யாருக்குமே அதிகாரம் கிடையாது. அரசகுடும்பம் என்ன என்ன செய்ய வேண்டும் என்பதைத் தீர்மானிக்கும் குழுவுக்குத்தான் அங்கு அதிக அதிகாரம். இதை இளவரசர் கரியே ஒரு பேட்டியில கூறியிருக்கிறார்.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • ஜனாதிபதித் தேர்தல் களம் தெற்கைவிட இம்முறை தமிழர் தாயகப் பிரதேசத்திலும் சூடுபிடிக்கத் தொடங்கியிருக்கின்றது. போரின் பின்னரான அனைத்து ஜனாதிபதித் தேர்தல்களிலும் தென்னிலங்கை வேட்பாளர்களை ஆதரித்த தமிழ் மக்கள் இம்முறை அத்தகைய நிலைப்பாட்டை எடுப்பதற்குத் தயங்குவதும், தமிழ்ப் பொது வேட்பாளரை நோக்கி தமிழர்கள் அணிதிரட்டப்படுவதாலும் ஜனாதிபதித் தேர்தல் விவகாரம் பேசுபொருளாகியிருக்கின்றது. ஜனாதிபதித் தேர்தலில் தமிழ்ப்பொது வேட்பாளர் களமிறக்கப்படுவது தென்னிலங்கை கட்சிகளைப்போன்று தமிழ்த்தேசியக் கட்சியைச் சேர்ந்த சிலருக்கும் கலக்கத்தை ஏற்படுத்தியிருக்கின்றது. அதே நேரம் இந்தப் பொதுவேட்பாளர் விவகாரத்தை குழப்பியடிப்பதற்கான சதி முயற்சியும் முன்னெடுக்கப்படுவதாக குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்படுகின்றன. தமிழ் மக்கள் கூட்டணியின் நாடாளுமன்ற உறுப்பினர் சி.வி.விக்னேஸ்வரனின் செயற்பாடுகள் தொடர்பில் பலத்த சந்தேகங்கள் எழுப்பப்படுகின்றன. கொள்கைத் தளம்பலான ஒருவர் இந்த விடயங்களை முன்னின்று செயற்படுத்துவதாகச் சொல்லிக்கொள்ளும் போது சந்தேகங்கள் எழுவது இயல்பானதே. பொதுவேட்பாளர் விவகாரத்தை ஆதரிப்பதாகக் காட்டிக்கொண்டு அதைக் குழப்பியடிப்பது தான் அவரது இலக்கா என்ற கேள்வியும் எழுகின்றது. ஏனெனில் அவரின் நடவடிக்கைகள் அப்படியானவையாகத்தான் அமைந்திருக்கின்றன. ஜனநாயக தமிழ்த் தேசியக் கூட்டணியே, ஜனாதிபதித் தேர்தலில் பொதுவேட்பாளரைக் களமிறக்கும் யோசனையை முன்வைத்தது. அது தொடர்பில் பல தரப்புகளையும் சந்தித்துக் கலந்துரையாடியிருந்தது. இதேகாலப் பகுதியில் விக்னேஸ்வரன், ‘ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க நாட்டுக்கு நல்லது செய்கிறார். அவரைத்தான் ஆதரிப்பேன்' என்று அறிக்கைவிட்டார். பின்னர் ரணில் ஏமாற்றிவிட்டார் என்று சொன்னார். திடீரென பொதுவேட்பாளர் விவகாரம் தொடர்பில் கூட்டத்தை ஒழுங்குபடுத்தினார். அது தொடர்பில் அறிக்கைகள் விடுத்தார். இந்த விவகாரத்தை முன்னெடுத்த தரப்புகளுடன் எந்தவொரு சந்திப்பையும் நடத்தாமல் தான்தோன்றித்தனமாக விக்னேஸ்வரன் விடயங்களைக் கையாள்கின்றார். இது தமிழ்ப்பொதுவேட்பாளர் விவகாரத்தை எதிர்க்கும் தரப்புகளுக்கு வாய்ப்பாக அமைந்திருக்கின்றது. ஜனாதிபதித் தேர்தலுக்கான வேட்புமனு கோரப்பட்ட பின்னர் தமிழ்ப்பொதுவேட்பாளர் யார் என்பதைப் பகிரங்கப்படுத்தலாம். விக்னேஸ்வரன் பொறுமை காக்கவேண்டும். இலங்கையிலுள்ள தமிழ்மொழி பேசும் அனைவரும் ஆதரிக்கக்கூடிய ஜனரஞ்சகமான தலைவர் ஒருவராக இருக்கவேண்டும். அப்படிப்பட்டண்டும். ஒருவரையே தமிழ்ப்பொதுவேட்பாளராக களமிறக்க வேண்டும். தமிழ்ப்பொதுவேட்பாளர் என்பது ஒரு அரசியல் தீர்மானம். எப்படி வட்டுக்கோட்டைத் தீர்மானம் காலம் கடந்தும் நிலைத்து நிற்கின்றதோ அதே போன்று தமிழ்ப்பொதுவேட்பாளர் விவகாரமும் அமையவேண்டும். நாடு முழுவதிலிருந்தும் ஆகக் குறைந்தது 15 லட்சம் வாக்குகளையாவது அவர் திரட்டிக்கொள்ளக் கூடியவராக இருக்கவேண்டும். முஸ்லிம் மற்றும் மலையக சமூகங்களின் அரசியல் தலைவர்கள் தென்னிலங்கை தரப்புகளுடன் ஒட்டிக் கொண்டிருந்து அமைச்சுப் பதவியை பெறுபவர்கள். அவர்கள் எந்தளவு தூரம் பொதுவேட்பாளர் விவகாரத்துடன் ஒத்துழைத்துச் செயற்படுவார்கள் என்பது கேள்விக்குறியானது. இவ்வாறான சூழலில் அனைத்துத் தரப்புகளுடனும் அவதானமாகவும் - நிதானமாகவும் கலந்துரையாடல் நடத்தவேண்டும். அதைவிடுத்து விக்னேஸ்வரன் போல, மின்னஞ்சலில் போதிய அவகாச மின்றி அழைப்பு அனுப்பிவிட்டு கலந்துரையாடல் நடத்த கூடாது. விக்னேஸ்வரன் தலைமை தாங்கிய எந்தவொரு விடயமும் நேர்சீராக நடைபெறவில்லை. மாகாண சபையாக இருக்கலாம் அல்லது தமிழ்மக்கள் பேரவை என்ற சிவில் அமைப்பாக இருக்கலாம் அல்லது அவரது கட்சியாக இருக்கலாம். எங்குமே அவர் ஒரே கொள்கையோடு இயங்காமையால் கடைசியில் அவையெல்லாமே குழப்பத்துக்குள் சிக்கி, செயற்றிறனை இழந்ததைக் கண்முன்னே பார்த்தோம். அப்படிப்பட்ட ஒருவர் தனது அவசரத்தனமான நடவடிக்கைகளால் தீர்க்கமான அரசியல் முடிவை குழப்பியடித்துவிடக்கூடாது என்பதே மக்களின் ஆதங்கம். (16. 04.2024-உதயன் பத்திரிகை)   https://newuthayan.com/article/அவசரத்தனங்களும்_குழப்பங்களும்...
    • இலங்கையில் தமிழர்களுக்கு மாத்திரமல்லாமல் முஸ்லிம்களுக்கும் தாய்மொழி தமிழ்தான். இதனாலேயே தமிழர்களையும் முஸ்லிம்களையும் ஒன்றிணைக்கும் முயற்சியில் தந்தை செல்வா ஈடுபட்டார். இதனால் 'தமிழ்பேசும் மக்கள்' என்ற சொல்லை தந்தை செல்வா பாவிக்கத்தொடங்கினார். இலங்கை சுதந்திரமடைந்த காலம் தொட்டு இரு தரப்பு அரசியல்வாதிகளும் தமிழ் முஸ்லிம் ஒற்றுமை பற்றிப் பேசி வருகின்றனர். தமிழ்த் தேசிய அரசியல்வாதிகளும் பல விட்டுக்கொடுப்புகளைச் செய்து தமிழ் முஸ்லிம் ஒற்றுமையை கட்டியெழுப்ப அன்றிலிருந்து இன்று வரை பாடுபட்டு வருகின்றனர். ஆனால் முஸ்லிம்களோ மொழிரீதியான பிணைப்பைக் கணக்கிலேயே எடுப்பதில்லை. அவர்கள் எப்போதுமே தம்மைத் தனியான இனமாக முன்னிறுத்துவதிலும், தமது நலன்களைப் பெற்றுக்கொள்வதிலுமே கண்ணும் கருத்துமாக இருக்கின்றனர். ஒரு சிறுபான்மை இனம் என்ற அடிப்படையில், முஸ்லிம்கள் தமது நலன்களை முன்னுரிமைப்படுத்திச் செயற்படுவதில் எவ்விதத் தவறுமில்லை என்று தமிழர்கள் கடந்துசென்றுவிடலாம். ஆனால், ஒரே மொழியைப்பேசிக்கொண்டு, சகோதர இனம் என்று சொல்லிக்கொண்டு, தமிழர்களை ஒடுக்கும் செயற்பாடுகளை முஸ்லிம்கள் மேற்கொள்வதைத்தான் ஜீரணிக்க முடியாமல் இருக்கின்றது. குறிப்பாக கிழக்கு மாகாணத்தில் கல் முனையில் முஸ்லிம்கள் தமிழர்களின் இருப்பை கேள்விக்குறியாக்கும் செயற்பாடுகளை காலாதிகாலமாக மேற்கொண்டு வருகின்றனர். இதனால் கல்முனைத் தமிழர்கள் சாட்சிக்காரனின் காலில் வீழ்வதை விட சண்டைக்காரனின் காலில் வீழ்வதே மேல் என்ற நிலைப்பாட்டுக்குத் தள்ளப்பட்டுள்ளனர். இலங்கைத்தீவை நிர்வகிப்பதற்கு 256 பிரதேச செயலர் பிரிவுகள் உருவாக்கப்பட்டுள்ளன. இந்த 256 பிரதேச செயலகங்களின் ஊடாக அந்தந்தப் பிரதேசத்துக்குரிய மக்கள் தமது தேவைகளை பூர்த்தி செய்து வருகின்றனர். இப்படிப்பட்டநிலையில், கல்முனைப் பிரதேச செயலர் பிரிவில் முஸ்லிம் பிரதேச செயலர்களே தொடர்ச்சியாக நியமிக்கப்பட்டு வந்தனர், வருகின்றனர். இவர்கள் முஸ்லிம்களுக்குச் சார்பாக நடந்து கொள்வதாக தமிழர்கள் தொடர்ச்சியாகக் குற்றஞ்சாட்டி வந்தனர். இதனால் கல்முனை பிரதேச செயலர் பிரிவு 1989 ஆம் ஆண்டு முஸ்லிம் பிரிவு, தமிழ்ப் பிரிவு என இரண்டாகப் பிரிக்கப்பட்டது. இவ்வாறு கல்முனைப் பிரதேச செயலர் பிரிவு இரண்டாகப் பிரிக்கப்பட்டபோது முஸ்லிம் பிரதேச செயலர் பிரிவு முழு அதிகாரத்துடன் செயற்படத் தொடங்கியது. தமிழ்ப் பிரிவுக்கு முழுமையான அதிகாரங்களை வழங்க விடாமல் முஸ்லிம் அரசியல்வாதிகள் ஆட்சியாளர்களுக்கு சிங்களவர்கள் அழுத்தம்கொடுத்தனர், இப்போதும் அதே அழுத்தத்தைக் கொடுத்து வருகின்றனர். கல்முனை தமிழ்ப் பிரிவு பிரதேச செயலகம் 'உதவி அரசாங்க அதிபர் பிரிவு' என்றே இன்றுவரை அழைக்கப்பட்டு வருகிறது. இதன்மூலம் அதன் அதிகாரங்கள் மட்டுப்படுத்தப்பட்டுள்ளமையை உள்ளார்ந்தமாக உணரலாம். தமிழ்ப் பிரிவுக்குரிய காணி, நிதி போன்ற விடயங்கள் முஸ்லிம் பிரிவின் கீழேயே உள்ளன. இலங்கை அரசியலில் பௌத்த பிக்குகள் தான் தீர்மானிக்கும் சக்தியாக விளங்குகின்றனர். அப்படியிருந்தும் ஞானசார தேரராலோ, சுமணரத்ன தேரராலோ கல்முனை தமிழ் பிரதேச செயலர் பிரிவை தரமுயர்த்த முடியவில்லை.சுமணரத்ன தேரர், ஞானசாரதேரர் ஆகியோரை விட முஸ்லிம் அரசியல்வாதிகளின் செல்வாக்கு கொழும்பு அரசியலில் கூடுதலான தாக்கம் செலுத்துகிறது என்பதே யதார்த்தம். கல்முனைப் பிரதேச செயலக தமிழ்ப் பிரிவை பூரண அதிகாரமுள்ள பிரதேச செயலகமாக தரமுயர்த்தக்கோரி கடந்த 35 வருடங்களாக கல்முனைத் தமிழர்கள் பல்வேறு சாத்வீகப் போராட்டங்களை முன்னெடுத்திருந்தனர். எனினும் இன்றுவரை கல்முனை தமிழர்களுக்கு நீதி கிட்டவில்லை. இந்த வருடமும் தமிழ்ப் புத்தாண்டை கல்முனைத் தமிழர்கள் கரிநாளாக அனுஷ்டித்தனர். இந்த நிமிடம் வரை கொட்டும் மழைக்கு மத்தியிலும் கல்முனைத் தமிழர்கள் தொடர் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இறுதியாக நடைபெற்ற மாகாணசபைத் தேர்தலிலும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கிழக்கு மாகாணத்தில் கூடுதலான ஆசனங்களைப் பெற்றிருந்தும், கிழக்கு மாகாண முதலமைச்சர் பதவியை முஸ்லிம் காங்கிரஸுக்கு தாரைவார்த்துக்கொடுத்தது. கிழக்கு மாகாண சபை கலைக்கப்பட்டதும் முதலமைச்சர் அஹமட் நஷீர் ‘வடக்கையும் கிழக்கையும் இணைப்பதற்கு தான் ஒருபோதும் அனுமதிக்கமாட்டேன்' என்று அறிக்கைவிட்டு, தமிழர்களின் அடிப்படைக்கோரிக்கையையே நிராகரித்தார் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பால் பதவிக்கு வந்த முதலமைச்சரான நஷீர் யுத்தம் நடைபெற்ற காலத்திலும் யுத்தம் முடிந்த பின்னரும் தமிழர்களுக்கு கிடைக்கவேண்டிய வேலை வாய்ப்புகள், உயர்கல்வி வசதிகள் போன்றவற்றை தமிழ்மொழியை பேசுகின்ற காரணத்தால் முஸ்லிம்கள் தட்டிப்பறித்து வருகின்றனர் என்றொரு குற்றச்சாட்டு பொதுவாக உண்டு. ஆனால், ஒரு பிரதேச செயலகத்தைக் கூட தரமுயர்த்த அனுமதிக்காமல், இன்னொரு சிறுபான்மையினரின் அடிப்படை உரிமைகளைக் கூடவா தட்டிப்பறிப்பார்கள்? தமிழ் அரசியல்வாதிகள் தீர்க்கமான ஒரு முடிவெடுக்கவேண்டிய தருணம் வந்து விட்டது. தமிழ் - முஸ்லிம் ஒற்றுமை என்றைக்கும் இருக்கத்தான் வேண்டும். ஆனால் அதைச் சொல்லிச் சொல்லியே முஸ்லிம்கள் எல் லாவற்றையும் பறித்தெடுக்க, நாம் மட்டும் இலவு காத்த கிளிகளாக ஏமாந்து கொண்டே இருக்கிறோம். இனியும் அவ்வாறான விட்டுக்கொடுப்புகளுக்கு இடமளிக்காமல், முதலில் தமிழர் நலன் அதன்பின்னரே தமிழ்-முஸ்லிம் ஒற்றுமை என்ற நிலைப்பாட்டுக்கு தமிழ்மக்களும், தமிழ் அரசியல்வாதிகளும் வரவேண்டும். அப்போதுதான் எஞ்சியவற்றையாவது இழக்காமல் காக்க முடியும். (17. 04.2024-உதயன் பத்திரிகை)   https://newuthayan.com/article/இனநலனா!_ஒற்றுமையா!!!
    • முடிவாய் ரணிலையும் விடுறதாக இல்லை , அவர் பணக்கார வீட்டு  பிள்ளை , சந்து பொந்தெல்லாம் போகாமலா  இருந்திருப்பார் . பழம் இருக்கிறவன் அதன் சுவையை ருசிக்கிறான் ....அம்புட்டுதான் 
    • என்ன இது எங்க போனாலும் கொழுவி இழுக்க பார்க்கிறிங்க.  சுமா வை பற்றி தெரியும் என்றால் ஏன் கோத்திரத்தை அப்படி என்று எடுக்கிறீர்கள்.  என்ன பொறுத்தவரை உயர்ந்த குலமா அப்படியா இல்லையா என்பதல்ல ஏன் ஆதங்கம். பொறுக்கித்தனம் செய்பவனை பொறுக்கி என்பதுபோல தான் இது.  தப்பான பழக்கங்களை செய்கின்ற ஆள் தப்பான குலம் அவ்வளவு தான். 
    • பிரிதலும் புனிதமானது : சிவபாலன் இளங்கோவன் மார்ச் 2024 - சிவபாலன் இளங்கோவன் · உளவியல்   சஞ்சய்குமாருக்கு அவனது அத்தைப்பெண்ணான மீராவுடன் சிறு வயதிலிருந்தே காதல். சிறுவயதென்றால் பத்தாவது, பதினொன்றாவது படிக்கும் வயதிலிருந்தே. மீரா சென்னையில் இருந்து சஞ்சயின் கிராமத்து வீட்டிற்கு வரும்போதெல்லாம் சஞ்சய் ஏகாந்த மனநிலையில் இருப்பான்.  மீராவின் அப்பா சென்னையில் வங்கி மேலாளராக இருக்கிறார். சஞ்சய்க்கு அத்தனை வசதியில்லை. மீராவிற்குச் சிறு வயதில் சஞ்சயைப் பார்க்கபோவது மகிழ்ச்சியானதாகவே இருந்தது. இருவரும் கல்லூரி செல்லும் வரை அது ஓர் இளம் பிராயத்துக் காதலாகவே தொடந்து வந்தது. மீரா கல்லூரிப் படிப்பிற்காக டெல்லி சென்றாள். அதன் பிறகு கொஞ்சம் கொஞ்சமாகச் சஞ்சயைத் தவிர்த்து வந்தாள். சஞ்சயால் இதை ஏற்றுக்கொள்ள முடியவில்லை. அடிக்கடி அவளிடம் சண்டை போட்டான். முதலில் பொறுமையாக விளக்கம் கொடுத்துக்கொண்டிருந்தவள் அதன் பிறகு அவன் ஏதாவது பேச ஆரம்பிக்கும்போதே தொடர்பைத் துண்டித்துவிடச் செய்தாள். அதன் பிறகு எத்தனை முறை அவன் கால் செய்தாலும் அழைப்பை ஏற்க மாட்டாள், இன்னொரு பொழுது அவன் அழைத்தால் எதுவும் நடந்த மாதிரியே காட்டிக்கொள்ளாமல் பட்டும் படாமல் பேசுவாள். இப்படியே மூன்று வருடங்கள் சென்றது. டெல்லியில் அவள் படிப்பை முடித்து வந்தபோது சஞ்சய் ஒரு சாதாரண கம்பெனியில் வேலைக்குச் சேர்ந்திருந்தான். அவள் வந்தவுடன் அவளிடம் திருமணம் செய்துகொள்ளலாம் எனப் பேசினான். அவள் அலட்சியமாகச் சிரித்தாள். “உனக்கு என்ன பைத்தியமா? எனக்கு 22 வயதுதான் ஆகுது, அதுக்குள்ள உன்ன கல்யாணம் பண்ணி குழந்தை பெத்துக்கணுமா?” எனக் கோபமாகக் கேட்டாள் “உனக்கு என்ன பிடிக்கல, என்கிட்ட இருந்து விலகிப் போகணும்னு நினைக்கிற, அதான் ஏதேதோ காரணம் சொல்ற” என அவனும் கோபப்பட்டான் அவள் அவனிடம் எந்த வாக்குவாதமும் செய்யவில்லை. “உன்கிட்டலாம் பேசிப் புரிய வைக்க முடியாது”  என எழுந்து சென்றாள். சஞ்சய் அவன் பெற்றோர்களைக் கட்டாயப்படுத்தி மீரா வீட்டில் பெண் கேட்க சொன்னான். மீரா அவர்களிடம் பக்குவமாகச் சொல்லி நிராகரித்தாள். “எங்க வீட்ல உன்ன கல்யாணம் பண்ண ஒத்துக்க மாட்டாங்க, முதல்ல எனக்கே இப்ப கல்யாணம் பண்ண இஷ்டம் இல்ல, நான் வெளி நாடு போய் மாஸ்டர்ஸ் படிக்கப் போறேன், எனக்கு நிறைய கனவுகள் இருக்கு” என்று அவனிடம் சொன்னாள் “யாரோ நல்ல வசதியான ஒருத்தன புடிச்சிட்ட அதான் என்ன கழட்டிவிடற” என அவளை நடுரோட்டில் எல்லார் முன்பாகவும் கத்தி அசிங்க அசிங்கமான வார்த்தைகளால் அவமானப்படுத்தி அனுப்பினான். மீரா அழுதுகொண்டே வீட்டிற்கு வந்தாள். ஆண்-பெண் உறவில் சேர்தலைப் போலவே பிரிதலையும் நாம் இயல்பானதாகக் கருத வேண்டும். சேர்தலைப் போலவே பிரிதலின் முடிவையும் மதிக்கும் பண்பை அந்தக் காதலின் நிமித்தமே வளர்த்துக்கொள்ள வேண்டும்.   ஓர் உறவில் இருந்து வெளியே போவதற்கான கதவு எப்போதும் திறந்தே இருக்கிறது என்னும் நிலையில் இருக்கும் உறவுகளே மிகவும் பக்குவப்பட்ட உறவுகளாக, பரஸ்பர அன்பை ஆத்மார்த்தமாகக் கொண்ட உறவாக இருக்கும் என்பது எனது எண்ணம். அத்தனை கதவுகளையும் பூட்டிவிட்டு எங்களது உறவு ஆத்மார்த்தமானது என்று சொல்வது நிச்சயம் அபத்தமானது. ஒரு காதல் ஏற்படுதற்கு இருவருக்கும் இருக்கும் பக்குவம், பொறுப்புகள், முதிர்ச்சி, அக மற்றும் புறச் சூழல்கள் எனப் பல்வேறு காரணங்கள் இருக்கும். இந்தக் காரணங்கள் எல்லாம் மாறக்கூடியவை. ஒருவருக்கு இருக்கும் பக்குவமும், முதிர்ச்சியும் அவரின் வயதைப் பொறுத்து மாறிக்கொண்டிருக்கும் அதே போலவே ஒருவரின் அக, புறச் சூழல்கள் தொடர்ச்சியாக மாறிக்கொண்டிருப்பவை. ஒரு காதல் தொடங்கிய தருணத்தில் இருந்த இந்தக் காரணிகள் எல்லாம் அதற்குப் பிறகு மெல்ல மெல்ல மாறிக்கொண்டிருப்பவை. காதலுக்கான காரணங்கள் நீர்த்துப்போகும்போது அங்குக் காதலும் முடிந்து போகிறது. அதை நீட்டிக்க வேண்டிய தேவை இல்லாமல் போய்விடுகிறது, அப்போது அங்குக் காதல் முடிவுக்கு வருகிறது, முடிவுக்கு வரும் காதலை ஏற்றுக்கொள்ளாமல் அதற்கான அத்தனை கதவுகளையும் அடைத்துக் கட்டாயப்படுத்தும்போது அதுவரை இருந்த காதலே கேள்விக்குறியாகிறது, பழகிய கணங்களின் மீது ஓர் ஒவ்வாமை ஏற்படுகிறது, அந்த மூர்க்கத்தனத்தைக் காதலையே மலினப்படுத்தும், சிறுமைப்படுத்தும் செயலாகவே பார்க்க முடியும். சஞ்சய்க்கும் மீராவிற்கும் இருந்தது ஓர் இளம் பிராயத்துக் காதல். சிறு வயதிலேயே துளிர் விட்ட காதல். ஒரு வகையிலான இனக்கவர்ச்சி. ஒருவர் மீதான மோகமே அந்தக் காதலுக்கு அடிப்படை. அந்த வயதில் எந்தப் பொறுப்புகளும் இல்லை, பக்குவமும் இல்லை, இலக்குகளும் இல்லை. ஒருவர் மீது ஒருவர் ஈர்ப்பாக இருப்பது மட்டுமே அந்தப் பருவத்தில் போதுமானது, அதுவும் எப்போதாவது சந்திக்கிற சில நாள்களில் மட்டும் அந்த ஈர்ப்பு இருந்தால் போதுமானது, அதுவே பரஸ்பரக் காதல் என அவர்கள் உணர்ந்து கொண்டார்கள். ஆனால் இருவரும் வளரும் போது இருவருக்கான தனிப்பட்ட அடையாளங்கள் ஆளுமைப் பண்புகள் உருவாகின்றன. எதிர்காலம் குறித்த கனவுகளும், லட்சியங்களும் உருவாகின்றன. இந்தச் சூழலில் காதலென்பது வெறும் ஈர்ப்பு மட்டுமே அல்ல, பரஸ்பரமாக ஒருவரை ஒருவர் புரிந்து கொள்வது, அவர்களின் ஆளுமைப் பண்புகளை ஏற்றுக்கொள்வது, அவர்களின் கனவுகளையும், லட்சியங்களையும் மதிப்பது. இதில் போதாமைகள் ஏற்படும்போது ஒருவர் மீதான ஒருவரின் காதல் தன்னை மறுபரிசீலனை செய்து கொள்கிறது. அந்த காதலை நீட்டிப்பதற்கான தேவைக் குறித்து கேள்வி எழுகிறது. ஒரு பிராயத்தில் ஒருவருடன் பழகிய காரணங்களுக்காகவே இந்த எதிர்பார்ப்புகளை எல்லாம் புறம் தள்ள முடியாது. மீராவின் லட்சியங்களும், கனவுகளும் சஞ்சயைப் பொறுத்த வரை தேவையில்லாதவை. மீராவிற்கு அவன் மட்டுமே பிரதானமாக இருக்க வேண்டும், மீதி அத்தனையையும் அவள் நிராகரிக்க வேண்டும் என எதிர்பார்க்கிறான். ஆனால், மீராவோ தனது விருப்பங்களுக்கும் கனவுகளுக்கும் அவன் துணை நிற்க வேண்டும், அவளின் இந்த முடிவுகளை அவன் மதிக்க வேண்டும் என நினைக்கிறாள். அப்படி அவன் இருக்கும்போதே அவனின் மீது காதலுடன் இருக்க முடியும் என அவள் உணர்கிறாள். அப்படி அவன் இல்லை மாறாக அவன் அவளை எப்போதும் கட்டுப்படுத்த நினைக்கிறான், அவன் சொல்வதற்கு மாறாக அவள் நடந்து கொள்ளக்கூடாது என நினைக்கிறான் என்பது அவளுக்கு ஏமாற்றமாக இருக்கிறது. ஏன் இந்தக் காதலைத் தொடர வேண்டும் என அவள் நினைப்பதற்கு அவனின் இந்தப் போதாமைகள் முக்கியமான காரணம். ஆனால், சஞ்சயை பொறுத்தவரை அவளின் இந்த எதிர்பார்ப்புகளைச் சிறுமைப் படுத்துகிறான். அவளுக்கு வேறு யார் கூடவோ பழக்கம் இருக்கிறது அதனாலே தன்னை நிராகரிக்கிறாள், அவளின் படிப்பிற்கும், வசதிக்கும் தன்னைத் தகுதியானவன் இல்லை என அவள் நினைகிறாள் என அவளை மலினப்படுத்துகிறான். ஒருபோதும் அவன் தனது நடவடிக்கைகள் குறித்து உணரவே இல்லை, அவளின் மீதே அத்தனை குற்றசாட்டுகளையும் சுமத்துகிறான். இது மீராவிற்கு மூச்சு முட்டவைக்கிறது, அதை அவனிடம் சொல்ல முற்படும்போது அவன் அவளைத் திருமணம் செய்து கொள்ளலாம் எனக் கட்டாயப்படுத்துகிறான். ஒரு போதும் அவன் மாறப்போவதேயில்லை என உணர்ந்து கொண்ட மீரா அவனிடம் இருந்து நிரந்தரமாகப் பிரிந்து விடும் முடிவை எடுக்கிறாள். அந்த முடிவைச் சஞ்சய் எப்படி எதிர்கொள்கிறான்? மிகவும் உணர்ச்சிவசப்பட்டு மூர்க்கமாக எதிர்கொள்கிறான். அவளின் அத்தனை வருடக் காதலைக் கொச்சைபடுத்துகிறான், அவளை மோசமாகச் சித்தரிக்கிறான் அவனது குற்றசாட்டுகளில் அவன் இத்தனை நாள்கள் அவள் மீது துளியும் காதல் கொண்டிருக்கவில்லை என்பதுதான் தெரிகிறது. இந்தப் பிரிவை எதிர்கொள்ள அவன் இன்னும் பக்குவப்பட வேண்டும். பக்குவமற்று, உணர்ச்சிவசப்பட்ட நிலையில் பிரிதலை அணுகும் போக்கு இரண்டு பாலினரிடையுமே இருக்கிறது. நவீன காதலில் பிரிதலை அணுகும் பக்குவம் கொஞ்சம் ஏற்பட்டிருக்கிறது என நினைக்கிறேன். ஆனால் சினிமாக்களும், ஊடகங்களும் காதலில் பெண்களை எதிர்மறையாகச் சித்தரிக்கும் போக்கு தொடர்ந்து கொண்டுதான் இருக்கிறது. இதன் பாதிப்பில் வளரும் இளைஞர்கள் பெண்களின் மீதான பொத்தாம்பொதுவான சில பொதுப்பார்வைகளுடன் இருக்கின்றனர் அதனால் பிரிதலை, பிரிவதற்கான முடிவைப் பெண்களுக்கான ஒன்றாகவே, பெண்களின் குணாதிசயம் என்றளவிலே புரிந்து கொள்கிறார்கள், இது பிரிதலுக்கான காரணங்களை முழுமையாக உணர்ந்து கொள்வதிலிருந்து அவர்களைத் தடுக்கிறது. ‘அந்தப் பெண் என்னை வேண்டாம் என்று சொன்னதற்கு நானும் ஒரு காரணம்’ என்பதை ஏற்றுக்கொள்வதிலிருந்து தப்பித்துக்கொள்ளலாம் என்பதால் பெண்களின் மீதான இந்தச் சித்தரிப்பைப் பெரும்பாலான ஆண்களும் மனமுவந்து ஏற்றுக்கொள்கிறார்கள். பிரிதலைப் பக்குவமாக ஏற்றுக்கொள்ளும் ஒருவரால்தான் அதற்கான காரணங்களை விருப்பு, வெறுப்புகளின்றி, முன்முடிவுகளின்றி ஏற்றுக்கொள்ளும் ஒருவரால்தான் அதுவரையிலான அந்தக் காதலில் உண்மையாக இருந்திருக்க முடியும். அப்படி இல்லாதவர்களால் அதுவரை இருந்த காதலே அர்த்தமற்றுப் போகிறது. எப்படிப் பிரிவது? “எனக்கு நல்லாவே தெரியுது, இந்த ரிலேஷன்சிப்னாலதான் நான் இவ்வளவு கஷ்டப்படுறேன், இதனால நான் நிறைய அவமானங்களைச் சந்திக்கிறேன், என்னைப் பற்றி நானே குற்றவுணர்ச்சி கொள்ற அளவுக்கு அவதிப்படறேன், இதுல இருந்து வெளிய போகணும்னு நினைக்கிறேன் ஆனால் போக முடியல, எப்படியாவது இதுல இருந்து நான் வெளிய போறதுக்கான வழிய சொல்லுங்க” தினமும் இப்படிப்பட்ட சிலரையாவது நான் எனது கிளினிக்கில் பார்த்து விடுகிறேன். எப்படிப் பிரிவது? என்பதுதான் அவர்களின் தவிப்பு. நீண்ட நாள் காதலன் தன்னை நிராகரிக்கிறான் என்பது தெளிவாகத் தெரிந்த பின்னரும் அவனை விட்டு நீங்க முடியாமல் இருப்பது, திருமணத்தைத் தாண்டிய ஓர் உறவு தவறு என்று தெரிந்த பின்னரும்கூட அதை விட்டு வெளியே போக முடியாமல் வருந்துவது, திருமணம் தரும் வலிகளில் இருந்து, வன்முறைகளில் இருந்து நிரந்தரமாகச் செல்ல முடிவு செய்து அதை ஏற்றுக்கொள்ள முடியாமல் தவிப்பது எனச் சேர்வது எப்படி என்று வருவோரைவிட, பிரிவது எப்படி என்னிடம் வருபவர்களின் எண்ணிக்கை சில நேரங்களில் அதிகமாகவே இருக்கிறது. அதுவும் நவீன காதல்களில் லிவிங்கில் இருக்கும் நிறைய இணையர்களில், தங்கள் உறவு முடிவுக்கு வருவதை ஏற்றுக்கொள்ள முடியாமல் தவிப்பவர்கள் ஏராளமானவர்கள். ஒரு பால் உறவிலும்கூடப் பிரிவை தாங்கிக்கொள்ள, ஏற்றுக்கொள்ளாமல் துயரத்தில் உழல்பவர்கள் நிறையப் பேர். இவர்கள் அனைவரின் பிரச்சினையும் ஒன்றே ஒன்று தான், பிரிவு தரும் வலியைத் தாங்க முடியாமல் இருப்பதே! ஓர் ஆத்மார்த்தமான உறவு என்பது எப்போதும் நம்மைப் பற்றியான நமது மதிப்பீட்டை உயர்வாகத்தான் கொண்டிருக்கும், எத்தனையோ முரண்பாடுகள் இருந்தாலும் ஒருவர் மீதான மதிப்பு என்பது மாறாமல் இருக்கும், பிறரின் முன்னிலையில் தனது இணையைப் பெருமிதமாகவே காட்டிக்கொள்ள விளைவார்கள். தனது இணை அவமானப்படுவதையோ அல்லது குற்றவுணர்ச்சி கொள்வதையோ ஒர் ஆத்மார்த்த காதலில் உள்ளவர்கள் நிச்சயம் விரும்ப மாட்டார்கள். ஓர் உறவின் விளைவாக நான் தாழ்வு மனப்பான்மை கொண்டாலோ, அவமானப்பட்டாலோ, குற்றவுணர்ச்சி கொண்டாலோ அந்த உறவு ஆத்மார்த்தமானதாக இல்லையென்று பொருள். அப்படிப்பட்ட உறவு இருவரையும் எப்போதும் காயப்படுத்திக்கொண்டேதான் இருக்கும், அப்படிப்பட்ட உறவை முடிவுக்குக் கொண்டு வருவதன் வழியாகவே அந்த உறவையும், அதில் உள்ளவர்களையும் காப்பாற்ற முடியும்.  அப்படிப்பட்ட உறவில் இருந்து பிரிய வேண்டும் என்ற முடிவு எடுக்கும்போது முதலில் அந்த முடிவில் உறுதியாக இருக்க வேண்டும். பிரிவதற்கான படிநிலைகள்: பிரிவதற்கான காரணங்களை உணர்வது பிரிவதற்கான முடிவைப் பரஸ்பரமாக எடுப்பது முடிவை ஏற்றுக்கொள்வது பிரிவின் வலியைக் கடந்து வருவது பிரிவில் இருந்து முழுமையாக வருவது பிரிய வேண்டும் என முடிவுசெய்துவிட்டால் அதற்கான காரணங்களை இருவரும் நிதானமாக, பரஸ்பரக் குற்றசாட்டுகள் இன்றி நிதானமாக உரையாட வேண்டும். ஏன் இதைத் தொடர வேண்டாம் என்பதை அத்தனை முதிர்ச்சியாக இருவரும் விவாதித்து முடிவெடுக்க வேண்டும். நிறைய நேரங்களில் பிரிய வேண்டும் என ஒருவர் மட்டுமே முடிவு செய்து விட்டு அதை இன்னொருவரிடம் தெரிவிக்காமல் அவரே புரிந்து கொள்ளட்டும் என அவரை அலட்சியம் செய்யும் போதுதான் நிறைய பிரச்சினைகள் வருகின்றன அது இந்தப் பிரிதலை இன்னும் சிக்கலாக்குகிறது. ஓர் உறவில் நாம் இருக்கும் போது அதை தொடர வேண்டாம் என நினைத்தால் அதற்கான காரணங்களைத் தெரிந்து கொள்ளக்கூடிய உரிமை இன்னொருவருக்கு இருக்கிறது, அதனால் அந்த முடிவைத் தெளிவாக இணையருக்கு தெரிவிக்கவேண்டிய கடமை அந்த முடிவை எடுத்தவருக்கு இருக்கிறது. அவர் அந்தக் காரணங்களை ஏற்றுக்கொள்கிறாரோ இல்லையோ அதைச் சொல்ல வேண்டியது ஒருவரின் பொறுப்பு. அதே போல நிறைய நேரங்களில், பிரியலாம் என்ற முடிவை எடுத்த பின்பும் அதை ஏற்றுக்கொள்வதில் இருக்கும் தயக்கம் அந்தப் பிரிவைச் சிக்கலாக்கும். பல்வேறு காரணங்களால் பிரிய வேண்டும் என்ற முடிவை எடுத்த பின், அதை இன்னொருவரிடம் தெளிவாகத் தெரிவித்த பிறகு அந்த முடிவை ஏற்றுக்கொள்ள வேண்டும். “இல்லை நான் இன்னும் முழுமையாகப் பிரியவில்லை, நாளைக்கேகூட அவர் திரும்ப என்னிடம் பேசுவதற்கு வாய்ப்பிருக்கிறது, அப்படிப் பேசினால் திரும்பவும் அத்தனையும் தொடரும்” எனச் சாத்தியமற்ற எதிர்பார்ப்புகளை மீண்டும் மீண்டும் கொண்டிருப்பதால் அந்தப் பிரிவைச் சார்ந்த துயரம் இன்னும் பலமடங்காகும். ஓர் இழப்பை, அது இழப்பென்று ஏற்றுக்கொண்டால் மட்டுமே அந்த இழப்பில் இருந்து நம்மால் வெளியே வர முடியும். இல்லை நான் இழக்கவில்லை என நமக்கு நாமே சமாதானம் செய்து கொண்டிருந்தால் அந்த இழப்பில் இருந்து வெளியே வரும் காலமும் அதிகமாகும், காயமும் அதிகமாகும். பிரிதல் என்பது நினைவுகளாலானது. ஒருவரை விட்டு ஒருவர் நீங்கும்போது அவரைச் சார்ந்த நினைவுகளும், அவருடன் இருந்த கணங்களின் நல்லுணர்வுகளும் ஒருவரை ஆழ்ந்த துயரத்தில் ஆழ்த்தும். அந்தத் துயரத்தை தவிர்க்க முடியாது. அந்தத் துயரமே அத்தனை காலக் காதலின் அடையாளம். அதை ஒருவர் கடந்துதான் வரவேண்டும். “என்னால அவளோட நினைவுகளை தாங்கிக்க முடியல,ரொம்ப கஷ்டமா இருக்கு, ஏதாவது மாத்திரை இருந்தா கொடுங்க, அவள மறக்கற மாதிரியான மாத்திரை” என நிறையப் பேர் கேட்பார்கள். ஒருவரை மறப்பதற்கான மாத்திரை என்பது உலகத்தில் இதுவரையிலும் கண்டுபிடிக்கவில்லை, அப்படி ஒரு மாத்திரை இருந்தால் உலகத்திலேயே அதிக விலையுள்ள மாத்திரை அதுவாகத்தான் இருக்கும். பிரிவு என்பது துயரமானதே. அந்தத் துயரத்தைக் கடந்து வருவதே ஒரு பிரிவின் உண்மையான சவால். கடந்து வர எவ்வளவு நாள் ஆகும் என்பது உங்கள் காதலை, உங்கள் முதிர்ச்சியை, பிரிவை ஏற்றுக்கொண்ட பக்குவத்தை அடிப்படையாக்க் கொண்டது. முழுமையாகப் பிரிவதுதான் பிரிவை இன்னும் இலகுவாக்கும். “நான் கொஞ்சமாக அவனிடம் இருந்து வெளியே வந்துவிடலாம் என இருக்கிறேன், திடீரென நான் பேசுவதை நிறுத்திக்கொண்டால் அவன் தாங்க மாட்டான், அதுவே நான் அவனிடம் இருந்து சிறிது சிறிதாக விலகினால் அவன் புரிந்துகொள்வான்” என்று ஒரு பெண் என்னிடம் சொன்னாள். நிறையப் பேருக்கும் பிரிதலையொட்டி இந்த நிலைப்பாடே இருக்கும். மதுவை எப்படிக் கொஞ்சம் கொஞ்சமாக விட முடியாதோ அதே போலவே ஒரு காதலையும் கொஞ்சம் கொஞ்சமாக விட முடியாது.  தொடர வேண்டாம் என முடிவு செய்து விட்டால் அதில் முழுமையாக இருந்தால் வெளியே வர முடியும். இடையிடையே பேசிக்கொண்டு, பார்த்துக்கொண்டு, ஒருவரை ஒருவர் கண்காணித்துக்கொண்டு இருந்தால் பிரிவு சிக்கலானதாக நிறையக் காயப்படுத்துவதாக, மனவுளைச்சல் கொடுக்கக்கூடியதாக இருக்கும். “நான் அவ கூட ரொம்ப இண்டிமேட்டா இருந்துட்டேன், செக்ஸ் கூட வச்சிகிட்டோம், ஆனால் இனி அப்படி இல்லாம வெறும் ஃபிரண்ட்ஸா மட்டும் இருக்கலாம்னு இருக்கேன்” என அந்த இளைஞன் சொன்ன போது. அப்படி இருப்பதற்கான வாய்ப்புகள் குறைவு எனச் சொன்னேன். ஓர் உறவு ஒரு கட்டத்தை அடைந்துவிட்டால் அதற்கு பிறகு அதன் முந்தைய நிலைக்குக் கொண்டு வந்து அதை நிறுத்துவது கடினம். தினமும் காலையில் இருந்து மது அருந்தும் ஒருவன் திடீரென ஒரு நாள் வந்து இனி நான் வாரத்திற்கு ஒருமுறை மட்டுமே மது அருந்துவேன் எனச் சொல்லும் போது அது எப்படிச் சாத்தியமில்லையோ அதே போலவே ஓர் உறவை அதன் முந்தைய நிலைகளுக்கு ஒருபோதும் எடுத்து வர முடியாது. பிரியவேண்டும் என முடிவெடுத்தால் அதில் உறுதியாகவும், முழுமையாகவும் இருந்தால் மட்டுமே பிரிய முடியும். ஓர் உன்னதமான உறவு என்பது எத்தனைக் காலம் அது நீடித்தது என்பதில் மட்டும் இல்லை, ஒருவேளை அது ஒரு முடிவுக்கு வந்தால் அந்தப் பிரிவின் முடிவை எத்தனை காதலுடன் அதை அணுகியது என்பதில்தான் இருக்கிறது. பிரிதலின் வழியாகவே நாம் அதிலிருந்த காதலை முழுமையாக உணர முடியும்.   https://uyirmmai.com/article/uyirmmai-magazine-march-2024-article-05/
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.