Jump to content

அமேசான் காட்டில் 36 நாட்கள் தனிமையில் தவித்த விமானியின் திகில் கதை


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

பிரேசிலின் தொலைதூரப் பகுதியில் உள்ள அமேசான் காட்டின் அடர்ந்த பகுதிகளுக்குள் விமானி ஆண்டோனியோ சேனா தன்னந்தனியாக மாட்டிக்கொண்டபோது, அவரைச் சுற்றி கருஞ்சிறுத்தைகளும், பெரு முதலைகளும், அனகோண்டா பாம்புகளும் உள்ளன என்பதை அறிந்து கொண்டார்.

அமேசான் காட்டுக்குள் ஏற்பட்ட விமான விபத்துக்கு பின் தம்மைச் சுற்றியுள்ள உயிர்க்கொல்லி விலங்குகள் குறித்து மட்டுமல்ல, நீர், உணவு, உறைவிடம் ஆகியவை குறித்தும் அந்த 36 வயது விமானி கவலைப்பட வேண்டியிருந்தது.

தாம் மீட்கப்பட பல நாட்கள் ஆகும் என்று ஆண்டோனியோ அச்சப்பட்டது அப்படியே நடந்தது. விமானம் விபத்துக்குள்ளான பின் ஒரு மாத காலத்துக்கும் மேல் தாம் தனிமையில் உயிர் வாழப் போராட வேண்டியிருக்கும் என்று அப்போது அவர் எதிர்பார்க்கவில்லை.

விபத்துக்குள்ளான விமானம் - என்ன நடந்தது?

''மே டே... மே டே... மே டே... பாப்பா.. டேங்கோ.. இந்தியா.. ரோமியோ.. ஜூலியட் இஸ் ஃபாலிங்.." இப்படித்தான் ஆண்டோனியோ சேனா, கீழே விழும் முன் கடைசியாகப் பதிவு செய்த செய்தி தொடங்கியது

2021 ஜனவரி மாதம் இந்த விபத்து நடந்தது. விமானம் கீழே விழுந்த சமயத்தில் ஆண்டோனியோ சேனா மட்டும் தனியாக அந்த விமானத்தில் தனியாக பயணம் செய்து கொண்டிருந்தார்.

தொலைதூர பகுதிகளில் உள்ள சுரங்கத்துக்கு தேவையான அத்தியாவசியப் பொருட்களை வழங்குவதற்காக அவர் பயணித்துக் கொண்டிருந்தார்.

"900 மீட்டர் உயரத்தில் பறந்து கொண்டிருந்த பொழுது விமானத்தின் இன்ஜின் திடீரென நின்று விட்டது. காட்டின் நடுவே நான் வேறு வழியில்லாமல் தரை இறங்க வேண்டியதாயிற்று," என்று பிபிசி உலக சேவையிடம் பேசிய ஆண்டோனியோ தெரிவித்தார்.

அமேசான் ஆற்றின் வடக்குப் பகுதியில் உள்ள, ஏதோ ஒரு காட்டுப் பகுதியில் அடர்ந்த கிளைகளுக்கு நடுவே வேகமாக உரசிக்கொண்டு அந்த செஸ்னா சிறிய ரக விமானம் தரையிறங்கியபோது அவர் மரணத்திலிருந்து தப்பித்து விட்டார். ஆனால் அவருடைய பிரச்னைகள் அப்போதுதான் தொடங்கின.

"விமானத்தின் சிதைந்த பாகங்கள் முழுவதும் எரிபொருள் சிந்தியிருந்தது. நான் உடனடியாக அந்த விமானத்தில் இருந்து வெளியேற வேண்டும் என்பது மட்டும் எனக்கு நிச்சயமாகத் தெரிந்தது. ஏனென்றால் நான் அப்போது மிகவும் ஆபத்தான சூழ்நிலையில் இருந்தேன்," என்று அவர் கூறுகிறார்.

அந்த விமானம் முழுவதும் எரிபொருள் சிந்திக் கிடந்ததால் அதை அவரால் உறைவிடமாக பயன்படுத்த முடியவில்லை. தாம் கடைசியாக அனுப்பிய செய்தி தொடர்புடையவர்களைச் சென்று சேர்ந்திருக்கும், அவர்கள் தம்மை மீட்க வருவார்கள் என்ற நம்பிக்கையுடன் அவர் விமானத்தின் அருகிலேயே அந்தக் காட்டுக்குள் தங்கியிருந்தார்.

"நான் அந்தக் காட்டுக்குள் சில நாட்கள் உயிர் வாழ என்னவெல்லாம் தேவைப்படுமோ, அவை அனைத்தையும் சேகரித்துக் கொண்டேன். அந்த நேரத்தில் அந்த மழைக் காட்டுக்குள் நான் 5 முதல் 8 நாட்கள் வரை காத்திருக்க வேண்டும் என்று கருதினேன். தேடுதல் மற்றும் மீட்புக் குழுவினர் வந்து சேர்வதற்கு வழக்கமாக ஆகும் காலம் இதுதான்," என்று அவர் பிபிசி உலக சேவையிடம் கூறினார்.

An anaconda snake wrapped round a branch in Brazil

பட மூலாதாரம்,GETTY IMAGES

 
படக்குறிப்பு,

அமேசான் காட்டின் மூன்று பெரிய உயிர்கொல்லி விலங்குகளில் அனகோண்டா பாம்புகளும் அடக்கம்

யாரும் தேடி வரவில்லை... அடுத்து நடந்தது என்ன?

ஒரு வார காலத்துக்கும் மேலாகியும் அவரைத் தேடி யாரும் வரவில்லை. அப்போதுதான் ஆண்டோனியோ ஒரு முடிவுக்கு வந்தார். தாம் நேசிப்பவர்களையும் தன்னை நேசிப்பவர்களையும் அவர் மீண்டும் சந்திக்க வேண்டுமென்றால் அந்த இடத்திலேயே முடங்கிக் கிடக்காமல் பாதுகாப்பான இடத்தை நோக்கி நடக்க வேண்டும் என்பதுதான் அந்த முடிவு.

விமானம் விபத்துக்குள்ளான இடத்திலேயே தங்கி இருக்காமல், நகர வேண்டும் என்று அவர் முடிவு செய்தார்.

"என் குடும்பத்தை நான் மீண்டும் சந்திக்க அந்த இடத்தில் இருந்து வெளியேற ஒரு வழியைக் கண்டுபிடிக்க வேண்டியிருந்தது."

அவர் அந்த முடிவை செய்த அடுத்த நாளே விடியலுக்கு பின் தமது பயணத்தை தொடங்கினார்.

ஆண்டோனியோ சேனா தாம் இருக்கும் இடத்திலிருந்து மிகவும் அருகில் இருக்கும் மனித குடியிருப்பு பகுதி ஒன்றை கண்டறிவதற்கான தேடலைத் தொடங்கினார்.

"நான் கிழக்கு நோக்கி நடக்கத் தொடங்கினேன். சூரியன் இருக்கும் திசையைப் பார்த்து நான் நடந்தேன். தினமும் காலையில் இரண்டு முதல் நான்கு மணி நேரம் நடந்தேன். அதற்குப் பின்பு இரவில் நான் பாதுகாப்பு பாதுகாப்பாக இருப்பதற்காக திட்டமிட வேண்டியிருந்தது. நெருப்பு மற்றும் உறைவிடத்தை தயார் செய்வதற்காக நான் அந்த நேரத்தை பயன்படுத்தினேன்," என்று அவர் கூறுகிறார்.

அமேசான் மக்கள் மூலம் கிடைத்த அறிவு

போக்குவரத்து மற்றும் தகவல் தொடர்பு வசதி எதுவும் இல்லாத அமேசான் காட்டுப் பகுதிக்குள் தனியாக இருப்பது மிகமிக ஆபத்தானது.

ஆனால் தாம் உயிர் பிழைப்பதற்கான சில திறன்களை ஆண்டோனியோ சேனா முன்னரே கற்றுக்கொண்டவர்.

"நான் விமானப் போக்குவரத்து துறையில் இருப்பதால் காட்டுக்குள் தனிமையில் எவ்வாறு உயிர் பிழைப்பது என்பதற்கான பயிற்சி ஏற்கனவே எனக்குக் கிடைத்து இருந்தது. நான் இந்த அமேசான் வனப்பகுதியில் தான் பிறந்து வளர்ந்த இருந்தேன்," என்று அந்த விமானி கூறுகிறார்.

இதற்கு முன்பு பல முறை அமேசான் மழைக்காட்டின் தொலைதூரப் பகுதிகளில் வாழும் மக்களிடம் அவர் பேசியிருந்தார்.

அந்த உரையாடல்கள் மூலம் அவருக்கு கிடைத்த அறிவுதான் தற்போது அவரது வாழ்வையும் சாவையும் வேறுபடுத்திக் காட்டுகிறது.

"எப்போதெல்லாம் எனக்கு வாய்ப்பு கிடைத்தது அப்போதெல்லாம் அந்த மக்களிடம் நான் பேசினேன். அவர்களிடம் கற்றுக் கொள்ள ஏராளமானவை உள்ளன," என்கிறார் ஆண்டோனியோ சேனா.

காட்டுக்குள் உணவு கிடைத்தது எப்படி?

ஆண்டோனியோ முதலில் தேட வேண்டியிருந்தது உணவைத்தான். அவரைச் சுற்றி இருக்கும் விலங்குகளை அவர் உன்னிப்பாக கவனித்தார்.

"இதற்கு முன்பு நான் வாழ்க்கையில் கண்டிருக்கவே செய்யாத பழம் ஒன்று அந்தக் காட்டுக்குள் இருந்தது. அங்கே இருக்கும் குரங்குகள் அவற்றை உண்பதை நான் பார்த்தேன். குரங்குகள் அந்தப் பழத்தை உண்டு உயிர்வாழ முடியும் என்றால் நானும் அதை உண்டு உயிர் வாழலாம் என்பதை உணர்ந்தேன்," என்று அவர் கூறுகிறார்.

A crocodile with its mouth open

பட மூலாதாரம்,GETTY IMAGES

 
படக்குறிப்பு,

காட்டுக்குள் முதலைகளை நினைத்துத்தான் தாம் அதிகம் அஞ்சியதாகக் கூறுகிறார் ஆண்டோனியோ சேனா

கொக்கோ செடிகளையும் சில முறை அந்த காட்டுக்குள் அவர் கண்டார். ஆனால் பழங்களை மட்டுமே நம்பி அவர் தொடர்ந்து உயிர்வாழ முடியாது. அப்படியானால் அவர் வேறு என்ன செய்தார் தெரியுமா?

'நண்டு தின்னி' பறவை முட்டைகள். 'நன்டு' என்பது அமேசான் காட்டுக்குள் மிகவும் இயல்பாக காணப்படும் பறவை இனங்களில் ஒன்று.

ஈமு கோழி போன்ற உருவமுடைய, பறக்க முடியாத இந்தப் பறவை 'நீல நிறத்தில் பெரிய முட்டை' இடும் என்று அவர் கூறுகிறார்.

அவ்வப்போது அந்த முட்டைகளை ஆண்டோனியோவால் கண்டுபிடிக்க முடிந்தது.

"முட்டைகள் எல்லாமே ஒன்றுதான். அவை புரதச் சத்து மிகுந்தவை. அப்போது எனக்கு அவை மிகவும் அவசியமானதாக இருந்தன. அதனால் நான் அப்படியே பச்சையாக அந்த முட்டைகளை உண்டு வாழ்ந்தேன்."

ஆபத்தான விலங்குகளிடம் இருந்து தப்பித்தது எப்படி?

எப்போதாவது கிடைக்கும் உணவுகள் மூலம் அவரால் தமது உயிரைக் காத்துக் கொள்ள முடிந்தது.

ஆனால் உயிரோடு இருக்க உணவு மட்டும் போதுமானதல்ல. அங்கிருக்கும் மிகவும் ஆபத்தான விலங்குகளிடம் இருந்து தப்பி இருப்பது மிகவும் முக்கியம்.

"எப்போதெல்லாம் நான் உறைவிடத்தை எனக்காக தயார் செய்தாலும், நான் உயரமான இடங்களையே தேர்வு செய்தேன்," என்கிறார் அவர்.

"ஏனென்றால் அங்கு கருஞ்சிறுத்தைகள், பெரும் முதலைகள், அனகோண்டா பாம்புகள் அனைத்தும் அமேசான் காட்டில் நீர் இருக்கும் பகுதிகளில் வாழ்பவை. அதனால் நீர் நிலைகளின் அருகில் நான் தங்கவில்லை."

காட்டுக்குள் நடந்து செல்லும்பொழுது ஆண்டோனியோ அதிகமாக ஒலி எழுப்பிக் கொண்டே சென்றார். இவர் விலங்குகளைப் பார்ப்பதற்கு முன்பு இவர் வருவதை அங்கு இருக்கும் விலங்குகள் முன்கூட்டியே அறிய வேண்டும் என்பதால் இந்த உத்தி.

நீங்கள் கண்டறியும் விலங்குகளை விட உங்களைக் கண்டறியும் விலங்குகள் தாக்குவதற்கான வாய்ப்பு குறைவு என்பதை அவர் உணர்ந்திருந்தார்.

இறுதி நம்பிக்கை - இன்னலின் முடிவு

ஆண்டோனியோவின் உயிர் பிழைப்பதற்கான உத்திகள் பலனளித்துக் கொண்டிருந்தன. ஆனால் அவரது உடல் எடை மிகவும் கணிசமாகக் குறைந்திருந்தது.

Antonio with the people who rescued him

பட மூலாதாரம்,ANTONIO SENA

 
படக்குறிப்பு,

தம்மை மீட்ட விவசாயிகள் குழுவுடன் விமானி ஆண்டோனியோ சேனா

விமானத்தின் சிதிலமடைந்த பாகங்களிலிருந்து அவர் நடக்கத் தொடங்கி சில வாரங்கள் கடந்து விட்டன.

விபத்து நடந்து 36 நாட்கள் கழித்து அங்கே ஒரு சிறு மக்கள் கூட்டத்தை அவரால் பார்க்க முடிந்தது.

"இவ்வளவு தூரம் நடந்தும், மலைகளை ஏறியும் இறங்கியும் நதிகளைக் கடந்தும் வந்தபின்பு, நாட்டில் இருந்து துண்டிக்கப்பட்ட ஒரு பகுதியில் கொட்டைகளை சேகரிக்கும் ஒரு சிறு குழுவினரை நான் கண்டறிந்தேன்," என்று ஆண்டோனியோ கூறுகிறார்.

எடுத்த எடுப்பிலேயே இவரால் அவர்களைக் கண்டறிய முடியவில்லை. அவர்கள் எழுப்பிய ஒலிதான் இவரை முதலில் அடைந்தது. அந்த இடத்தை நோக்கி நடக்கத் தொடங்கினார்.

அப்பொழுதுதான் அவரது நீண்ட இன்னலில் முடிவு தொடங்கியது.

"என்னுடைய குடும்பத்தை நான் மீண்டும் பார்க்க போகிறேன் என்பதுதான் இப்படி அனைத்தையும் மீறி எனக்கு வலிமையும் உத்வேகத்தையும் கொடுத்தது. காட்டில் இருந்து வெளியே வந்து ஒரு வழியாக விமான நிலையத்தில் எனது குடும்பத்தினரை சந்தித்ததுதான் என் வாழ்க்கையிலேயே மிகவும் சிறந்த தருணம்," என்று நெகிழ்ச்சியுடன் அவர் கூறுகிறார்.

ஆண்டோனியோ காணாமல் போன பின்பு அவரைத் தேடி விமானங்களும் ஹெலிகாப்டர்களும் அனுப்பப்பட்டன. ஆனால் அவர் காட்டை விட்டு வெளியேறுவதற்கு சில வாரங்களுக்கு முன்பு அந்தத் தேடுதல் பணிகள் நிறுத்தப்பட்டன.

ஒருவேளை அவர் அந்த இடத்திலிருந்து நடக்கத் தொடங்காமல் இருந்திருந்தால் அவர் தமது குடும்பத்தை மீண்டும் சந்தித்து இருக்கவே மாட்டார்.

"நான் இவை அனைத்தையும் என் குடும்பத்தினருக்காகத்தான் செய்தேன். அவர்களை நினைத்துக் கொண்டுதான் செய்தேன். கடைசியாக என்னால் அவர்களைக் கட்டியணைக்க முடிந்தது. நான் அவர்களை எவ்வளவு நேசிக்கிறேன் என்பதையும் கூற முடிந்தது."

அமேசான் காட்டில் 36 நாட்கள் தனிமையில் தவித்த விமானியின் திகில் கதை - BBC News தமிழ்

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • நாமெல்லாம் இதற்குள் வரமாட்டோம் ராசாக்கள்.........ஏதோ கடையில் கோப்பி குடிக்கும்போது ஒரு ஈரோ டிக்கட் வாங்கி சுரண்டிபோட்டு அங்கேயே வீசிப்போட்டு போறதுதான் அதிகம்......!  😂
    • ஆடுஜீவிதம் Review: எளிய மனிதனின் வாழ்வியல் போராட்டம் தரும் தாக்கம் என்ன?     கர்ப்பிணியான தனது மனைவி சைனு (அமலாபால்) மற்றும் தாயுடன் கேரளாவில் மகிழ்ச்சியுடன் எளிமமையாக வாழ்ந்து வருகிறார் நஜீப் (பிருத்விராஜ்). ஆற்றுமணல் அள்ளும் வேலை செய்து வாழ்க்கையை ஓட்டிவரும் அவர் குடும்ப கஷ்டத்துக்காக, வாழ்வதற்கு ஒரு நல்ல வீடு, மழை பெய்தால் ஒழுகாத சமையல்கட்டு, பிள்ளைகள் படிக்க நல்ல ஸ்கூல் என்ற சாதாரணமா கனவுகளை நிஜமாக்கும் முனைப்போடு வெளிநாடு செல்ல முடிவெடுக்கிறார். வீட்டை அடமானம் வைத்து ஏஜென்ட் மூலம் வளைகுடா நாட்டுக்குச் செல்கிறார். அங்கு என்ன நடந்தது? அங்கு அவருக்கு வேலை கிடைத்ததா? தகுந்த சம்பளம் கிடைத்ததா? அவருடைய வாழ்க்கை என்னவாக மாறுகிறது? அதிலிருந்து அவர் மீண்டாரா? இல்லையா? - இதுதான் ‘ஆடுஜீவிதம்' படத்தின் திரைக்கதை. மலையாள எழுத்தாளர் பென்யாமின் எழுதிய நாவலைத் தழுவி இயக்குநர் ப்ளஸ்ஸி இயக்கத்தில் வெளிவந்திருக்கும் திரைப்படம் 'ஆடுஜீவிதம்'. மலையாளம், தமிழ் உள்ளிட்ட பல்வேறு மொழிகளில் இந்தத் திரைப்படம் வெளியாகி உள்ளது. குடும்பக் கஷ்டத்தின் காரணமாக வளைகுடா நாடு சென்று ஏமாற்றப்பட்ட மனிதனின் கதையை சமரசம் எதுவுமின்றி வெள்ளித்திரையில் கொண்டு வந்ததற்காக இயக்குநரைப் பாராட்டலாம். குறிப்பாக, கேரளாவில் இருந்து அதிகமான எண்ணிக்கையில், வளைகுடா நாடுகளுக்குச் செல்லும் உடலுழைப்புத் தொழிலாளர்களின் குடும்பங்களுக்கு இந்தப் படம் நிச்சயம் ஆறுதலாக இருக்கும். நாவலை படம் ஆக்குவதில் உள்ள சிரமங்கள் தென்பட்டாலும், இதுவரை நமக்கு அறிமுகம் இல்லாத நிலப்பரப்பை இந்த சர்வைவல் டிராமா கண்முன் கொண்டு வந்திருக்கிறது. “எப்படியாவது கஷ்டப்பட்டு நான் கேட்ட காசைக் கொடு, அங்க போய் மூணே மாசத்துல சம்பாதித்துவிடலாம்" - போலி ஏஜென்ட்டுகளின் இந்த ஒற்றைப் பொய்தான், உலகம் முழுவதும் நஜீப்களை மீண்டும் மீண்டும் உருவாக்கிக் கொண்டே இருக்கிறது என்பதை இப்படம் நிறுவியிருக்கிறது. போலி ஏஜென்ட் ஸ்ரீகுமார் உலகின் எந்த மூலையில் இருந்தாலும், பக்தி பரவசத்துடன் ஊர் திருவிழாவுக்கு வந்துவிடும் நபர் எனக் காட்டியிருப்பது இயக்குநர் ப்ளஸ்ஸி டச். படத்தில் அந்த கேரக்டருக்கு ஒரு காட்சிதான். வேறு காட்சிகளே கிடையாது. படத்தின் முதல் பாதியை ப்ளஸ்ஸி காட்சிப்படுத்தியிருக்கும் விதம் அழகு. பாலைவனத்தில் நடக்கும் காட்சிகளையும், கேரளத்தின் காட்சிகளையும் இணைத்து கதை சொல்லிய விதம், சுட்டெரிக்கும் வெயிலில் பெய்யும் பனிக்கட்டி மழைபோல் குளிரூட்டுகிறது. இரண்டாம் பாதியில் வெகு நேரமாக பாலைவனத்தைப் பார்த்துக் கொண்டிருப்பதுதான் அயற்சியைத் தருகிறது. "பெரியோனே ரஹ்மானே" பாடல் முழுமையாக இல்லாதிருப்பது குறையாகத் தோன்றுகிறது. உலகம் முழுவதும் வேலைக்காக புலம்பெயரும் எவரும் தங்களது வாழ்க்கையுடன் சுலபமாக ஒப்பிட்டுக் கொள்ள இந்தப் படம் உதவும். அந்தவகையில், இயக்குநரின் இந்த முயற்சி நிச்சயம் பாராட்டுக்குரியது. இயக்குநரின் இந்த மெனக்கெடல்களுக்கு பெரிய ஒத்துழைப்பு வழங்கியிருக்கிறது, இந்தப்படத்தின் தொழில்நுட்பக் குழு. ஒளிப்பதிவு, பின்னணி இசை, ஒப்பனை, ஆடைகள், ஒலிப்பதிவு என படத்தில் வரும் அத்தனை தொழில்நுட்பக் கலைஞர்களின் உழைப்பும் பாராட்டுக்குரியது. படத்தின் தொடக்கம் முதலே கே.எஸ்.சுனிலின் கேமரா பார்வையாளர்களின் கண்களை அகல விரயச் செய்கிறது. பரந்து கிடக்கும் பாலைவனம், வெயில், கானல்நீர், ஒட்டகம், ஆடுகள், மலைக்குன்று என அனைத்து இடங்களிலும் கேமிரா ஜீவித்துக்கிடக்கிறது. இருளை விழுங்கிய நடுராத்திரி, கசராவில் (ஆட்டுப்பட்டி) ஆடுகளுக்கு வைக்கப்பட்டிருக்கும் தண்ணீரை தாகம் தணிக்க குடித்துவிட்டு கேமிரா இருக்கும் திசை நோக்கி பிருத்விராஜ் பார்க்கும் காட்சி, ஒட்டகம் ஒன்றின் கண்ணுக்குள் பிருத்விராஜ் தெரியும்படி காட்சிப்படுத்தியிருக்கும் காட்சியும் அருமை. இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மானுக்கு இது மூன்றாவது மலையாளப் படம். படத்தின் டைட்டில் தொடங்கும்போது, ரஹ்மானின் புல்லாங்குழல் பாலைவன மணல்வெளியில் நம் மனங்களை இலகுவாக இழுத்துச் செல்கிறது. முதல் பாதியில் வரும் பாடல் அட்டகாசம். படம் முழுக்க அவ்வப்போது சின்ன சின்ன வரும் பாடல்கள் அதிகாலை நேரத்தில் தூரத்தில் கேட்கும் பங்கோசைக்கு இணையாக இருக்கிறது. ஆக்‌ஷன் காட்சிகள் எதுவும் இல்லாதபோதும், தப்பித்துச் செல்ல முயற்சிக்கும் காட்சிகளில் ஏ.ஆர்.ரஹ்மானின் பின்னணி இசைதான் வலு சேர்த்திருக்கிறது. ஸ்ரீகர் பிரசாத்தின் கட்ஸ் முதல் பாதியை கணகச்சிதமாக கத்தரித்திருக்கிறது. பிருத்விராஜ் கேரியரில் இந்தப் படம் மிகமுக்கிய திரைப்படமாக இருக்கும். படத்தில் அவரது கதாப்பாத்திரத்துக்கு நிறைய சேஞ்ச் ஓவர் வருகிறது. அப்படி வரும் எல்லா இடங்களிலும் பிருத்விராஜ் ஸ்கோர் செய்திருக்கிறார். குடிக்கவும், கழுவவும் தண்ணீர் இல்லாத கணங்களில் அவரது நடிப்பு கலங்கடித்து விடுகிறது. உயிர்வாழ வேண்டும் என்றால், கண்ணுக்கு எட்டிய தூரம் வரை விரிந்துக் கிடக்கும் பாலைவனத்தை நடந்து கடக்க வேண்டிய காட்சிகளில் பிருத்விராஜின் உடல்மொழி வியக்க வைக்கிறது. பிருத்விராஜ் உடன் வளைகுடா நாடு செல்லும் ஹக்கிம் (கே.ஆர்.கோகுல்) மற்றும் இப்ராஹிம் காத்ரியாக (ஜிம்மி ஜீன் லூயிஸ்) வருபவரும் தங்களது கதாப்பாத்திரங்களை சிறப்பாக செய்துள்ளனர். ஒட்டகமும், மயிலும் தனது அழகை நீண்ட கழுத்தில் ஒளித்து வைத்துக்கொள்ளும். அமலாபாலும் அப்படித்தான், தனது அழகு முழுவதையும் நடிப்பில் ஒளித்து வைத்திருக்கிறார். கேரளத்தின் பொலிவும், அழகும் மயக்கும். இந்தப் படத்தில் பிருத்விராஜ் அமலாபால் வரும் காட்சிகளும் அப்படித்தான், பார்வையாளர்களின் மனதில் பாசிப்போல படர்கிறது. பாலைவன சுடுமணலின் தகிப்பைக் குறைத்து ஆழமான ஆற்றுக்குள் மூழ்கி அள்ளி எடுத்துவரப்பட்ட மணலின் ஈரத்தையும், குளிர்ச்சியைக் கொண்டு வருகிறார் அமலாபால். எப்போதெல்லாம் தன்னுடைய ஞாபகம் வருகிறதோ, அப்போதெல்லாம் நிலாவைப் பார்த்துக் கொள்ளும் சொல்லும் காட்சி கவிதையாக தைக்கப்பட்டிருக்கிறது. விமான நிலையங்களின் பார்வையாளர் காத்திருப்பு வெளிகள் எப்போதும் கண்ணீரைச் சுமந்து நிற்பவை. வெளிநாடுகளுக்கு பிரிந்து செல்லும் உறவுகளை வழியனுப்ப வந்தவர்களின் கண்ணீர் அப்பகுதி முழுக்க நிரம்பியிருக்கும் காற்று முழுவதிலும் கரித்துக் கிடக்கும். அம்மாவும், அப்பாவும், கணவனும், மனைவியும், குழந்தைகளும் வெளிநாடு செல்லும் நபருக்கு தங்களது அன்பு முழுவதையும் ஒரு பெட்டிக்குள் அடைத்துக் கொடுத்துவிட்டு கனத்த மவுனத்துடன் வீடு திரும்பும் காட்சிகளைக் கடந்திருப்போம். அந்த வகையில், சென்ட் பாட்டிலும், கலர் டிவியும், கை நிறைய பணமும் இல்லாமல், வெளிநாட்டிலிருந்து உயிர் பிழைத்தால் போதும் என்று ஆயுள் உடன் திரும்பி வந்த ஒரு எளிய மனிதனின் வாழ்க்கைப் போராட்டத்தின் வலிகளின்தான் இந்த 'ஆடுஜீவிதம்'! ஆடுஜீவிதம் Review: எளிய மனிதனின் வாழ்வியல் போராட்டம் தரும் தாக்கம் என்ன? | aadujeevitham movie review - hindutamil.in
    • Simrith   / 2024 மார்ச் 28 , மு.ப. 10:49 - 0      - 67 அமெரிக்க துரித உணவு நிறுவனமான மக்டொனால்டின் உள்ளூர் உரிமை இனி தமது குடையின் கீழ் இல்லை என்று அபான்ஸ் தனியார் நிறுவனம் இன்று தெரிவித்துள்ளது. இன்று கொழும்பு பங்குச் சந்தைக்கு (CSE) அறிக்கையளித்த அபான்ஸ் பிஎல்சி, மெக்டொனால்டின் உள்ளூர் உரிமையானது, 2007 ஆம் ஆண்டின் கம்பனிகள் சட்டம் இல.7 இன் கீழ் இணைக்கப்பட்ட சர்வதேச உணவக அமைப்புகள் (பிரைவேட்) லிமிடெட் அடிப்பமையிலானது என்று சுட்டிக்காட்டியுள்ளது. அந்த நிறுவனத்தின் 98.73% பங்குகளை வைத்திருக்கும் ருசி பெஸ்டோன்ஜி, அபான்ஸ் பிஎல்சியின் நிர்வாக இயக்குனராகவும் உள்ளவர். “இன்டர்நேஷனல் ரெஸ்டாரன்ட் சிஸ்டம்ஸ் (பிரைவேட்) லிமிடெட், அபான்ஸ் பிஎல்சி அல்லது அதன் தாய் நிறுவனமான அபான்ஸ் ரீடெய்ல் ஹோல்டிங்ஸ் (பிரைவேட்) லிமிடெட் ஆகியவற்றின் துணை நிறுவனமோ அல்லது இணை நிறுவனமோ அல்ல. கூறப்பட்ட காரணத்தினால், இன்டர்நேஷனல் ரெஸ்டாரன்ட் சிஸ்டம்ஸ் (பிரைவேட்) லிமிடெட்டின் நிதிகள் அபான்ஸ் பிஎல்சியின் நிதிகளுடன் ஒருங்கிணைக்கப்படவில்லை,” என்று அபான்ஸ் தெளிவுபடுத்தியது. கொழும்பு பங்குச் சந்தையின் பட்டியலிடுதல் விதிகளின் 8வது பிரிவின் அடிப்படையில் மற்றும் நல்லாட்சிக்கான நோக்கங்களுக்காக இந்தத் தகவலை வழங்குவதாக Abans PLC தெரிவித்துள்ளது. Tamilmirror Online || McDonald’s எமது குடையின் கீழ் இல்லை: அபான்ஸ்
    • கொடுமையிலும் கொடுமை பாண்டவர் அணியில் தருமருக்கு (விஜயகாந்துக்கு) தம்பியாக (அருச்சுனனாக) அவதாரம் எடுத்தது 😂
    • 28 MAR, 2024 | 12:07 PM சிறுவர்களின் ஆபாசக் காணொளிகள் மற்றும் நிர்வாண புகைப்படங்களை இணையத்தில் பதிவேற்றுவது தொடர்பான முறைப்பாடுகளைப் வழங்குவதற்கு  புதிய முறைமையொன்றை  இன்று வியாழக்கிழமை (28) அறிமுகப்படுத்தவுள்ளதாகத்  தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபை தெரிவித்துள்ளது.  தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபையின் இணையத்தளத்தினூடாக இன்று முதல் இது தொடர்பான முறைப்பாடுகளைப் பதிவு செய்ய  சந்தர்ப்பம் வழங்கப்படும் என அதன் தலைவர் சிரேஷ்ட விரிவுரையாளர் உதயகுமார அமரசிங்க தெரிவித்துள்ளார்.   இதன் மூலம் பெறப்படும்  முறைப்பாடுகள்  நேரடியாக இங்கிலாந்தில் உள்ள "Internet Watch Foundation" க்பகு தெரிவிக்கப்படுவதுடன் அதனுடன் தொடர்புடைய ஆபாசமான காணொளிகள் மற்றும் நிர்வாண புகைப்படங்களை அகற்றுவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என குறிப்பிட்டுள்ளது.    மேலும், இந்த முறைப்பாடுகள் தொடர்பில் சம்பந்தப்பட்ட தரப்பினர் யார் என்பதைக் கண்டறிந்து, சர்வதேச  பொலிஸார் மூலமாகவும் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.    கடந்த காலங்களில் சிறுவர்களின் ஆபாசமான காணொளிகள் மற்றும் நிர்வாண புகைப்படங்கள் இணையத்தில் வெளியானமை தொடர்பில் பல முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது .   ஆபாசப் படங்கள், நிர்வாணப் படங்கள் தொடர்பில் முறைப்பாடு வழங்க புதிய வழிமுறை | Virakesari.lk
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.