Jump to content

தமிழ்சிறி... சுட்ட, முறுக்கு. (தொடரும்... சிறு கதை)


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, ஏராளன் said:

முதலாவது பகுதி எங்கையண்ணை?

 

On 9/4/2021 at 21:04, தமிழ் சிறி said:

முறுக்கு என்றாலே... மொறுக்கு, மொறுக்கு.. என்று சாப்பிட வேணும் போல் இருக்கும்.
"பத்து நிமிசத்தில் முறுக்கு, தயாரிக்கலாம்" என்று, சொன்னதை நம்பி...
7´மணித்தியாலம்  எடுத்து, நொந்து, நூடில்சாக  வந்தவனின்  சோகக்  கதை. 

tenor.gif

May be an image of 1 person and text that says 'R ΠσΟ வேண்டாம்..... அப்படி எல்லாம் சொல்லக்கூடாது...'

ஏராளன்... வேண்டாம். அப்பிடி எல்லாம்,  கேட்கக்  கூடாது.  :grin:  🤣

Link to comment
Share on other sites

  • Replies 66
  • Created
  • Last Reply

Top Posters In This Topic

Top Posters In This Topic

Popular Posts

தமிழ் சிறி

முறுக்கு என்றாலே... மொறுக்கு, மொறுக்கு.. என்று சாப்பிட வேணும் போல் இருக்கும். "பத்து நிமிசத்தில் முறுக்கு, தயாரிக்கலாம்" என்று, சொன்னதை நம்பி... 7´மணித்தியாலம்  எடுத்து, நொந்து, நூடில்சாக  வந்தவனி

தமிழ் சிறி

ஓகே.... பிரண்ட்ஸ், நாங்கள்  தொடர்ந்து  முறுக்கு, சுடுவோம்.  ஆறு மாதத்திற்கு முன்பு,  ஆசைப் பட்டு வாங்கின  "கடலை மா..."  அதன், ஆயுட்கலாம்...  முடிய, இன்னும்  இரண்டு கிழமைகள் உள்ளது. நான்...  எ

தமிழ் சிறி

இப்போ...எங்கள், முறுக்கு சுடும் கோஸ்டி...  சாப்பாட்டு மேசையில் இருந்து, போட்ட  "பிளான்" படி...   முறுக்கு சுட்ட இறுமாப்பில்,   குசினிக்குள்.... நெஞ்சை நிமிர்த்தி  நகர்ந்து... ஒரு கிலோ, கடலை மாவை

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, தமிழ் சிறி said:

 

tenor.gif

May be an image of 1 person and text that says 'R ΠσΟ வேண்டாம்..... அப்படி எல்லாம் சொல்லக்கூடாது...'

ஏராளன்... வேண்டாம். அப்பிடி எல்லாம்,  கேட்கக்  கூடாது.  :grin:  🤣

இது அறிமுகம் எல்லோ, தொடருங்கள் அண்ணை.
முறுக்கு எப்பிடி வந்தது? மொறுமொறு என்று இருந்ததா? இல்லை புழுக்கொடியல் போல இருந்ததா?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஓகே.... பிரண்ட்ஸ், நாங்கள்  தொடர்ந்து  முறுக்கு, சுடுவோம். :grin:

ஆறு மாதத்திற்கு முன்பு,  ஆசைப் பட்டு வாங்கின  "கடலை மா..." 
அதன், ஆயுட்கலாம்...  முடிய, இன்னும்  இரண்டு கிழமைகள் உள்ளது.
நான்...  எப்போதும்  உணவுப் பொருட்களை, வீண் செய்யாத மனப்பான்மை உள்ளவன்.

இப்போ... 11 நாள் விடுமுறை.  நல்ல, சந்தர்ப்பம் கிடைத்துள்ளது என்று....
நிகேயின்... "பத்தே  நிமிடத்தில்... செய்யும், கடலை மா முறுக்கு" செய்வோம் என்று...
மனைவியிடம்.... "அம்மாச்சி" இண்டைக்கு, கடலை மா முறுக்கு செய்வோம் என்று,
பன்மையில் கேட்டேன்.  
(பன்மையில்... கேட்பது, எப்பவும் நல்லது. 
ஏனென்றால்... முறுக்கு  சரி வராவிட்டால், நான் தப்பித்துக் கொள்ளலாம்) 

அதனை... திடீரென்று, கேட்ட  போது... 
அவளுக்கு, பயங்கர  "கொதி" வந்து,
உங்களுக்கு என்ன விசரோ... என்று பேசினாள்.    
நான்... வீட்டில் இல்லாத நேரம், அவள் பார்க்கும்  "தொலைக்காட்சி" நாடகங்கள்,
தவறிப் போய் விடுமே... என்ற கவலை, அவளுக்கு.
ஒரு... மாதிரி, சமாளித்து அவளை என்  வழிக்கு கொண்டு வந்து...
முறுக்குக்கு   "மா" குழைக்க  ஆரம்பித்தோம்.

அந்த இடைவெளியில்...  மனைவி, 
கனடாவில் உள்ள சகோதரிக்கும், சுவிஸில் உள்ள மகளுக்கும்....
நாங்கள்.... "முறுக்கு,  சுடப் போகின்றோம்" என்று.. குறுஞ் செய்தியை அனுப்பி விட்டார்.
அவர்கள்.....  அத்தான், அப்பா...  "குட் லக்" என்ற செய்தி வந்து சேர்ந்து விட்டது.  

இடையில்... நிகேயின், சமையல்  குறிப்பின் படி, என்ன செய்ய வேண்டும் என்பதனை.....
திரும்ப, திரும்ப, திரும்ப... மனப் பாடமாக்கி....
எனக்குத் தெரிந்த, கணித முறைப்படி... 
ஒரு  அட்டவணை தயாரித்து...

எம்மிடம் இருப்பது....  ஒரு கிலோ  கடலை மா.
அதுக்கு... எவ்வளவு,  அவித்த கோதுமை மா.... 
மஞ்சள், எள்ளு, உப்பு, மிளாகாய்த் தூள், எண்ணை....
சுடு தண்ணி... என்ன பதம்...... என்றெல்லாம்  கணக்குப்  பார்த்து,
முடிக்க.... ஒரு மணித்தியாலம் போய்... விட்டது.  :)

Edited by தமிழ் சிறி
  • Like 9
  • Haha 3
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

May be a cartoon of text that says 'தொயரத்த....'

நாங்கள் முறுக்கு சுடும், விசயத்தை.... திண்ணையில் போட்டு, 
சனத்துக்கு... பீலா, விட்டுக்  கொண்டிருந்ததை பார்த்த நிழலிக்கும்.....
"கடுப்பு" வந்திருக்க வேணும் போலை...

உடனே.. அவர், இதனை.... சுய ஆக்கங்கள் பகுதியில் படத்துடன் பதியச் சொல்லி..
திண்ணையில் எழுத,  எனக்கும் ஆசை... என்று சொல்லி,
கிருபன்ஜீ டம்  அந்த முறைகளை பெற்று வைத்துள்ளேன்.
தொடர்... முடிய முதல், அந்தப் படங்களை, மனைவியின் அனுமதியுடன் இணைப்பேன். :grin:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, தமிழ் சிறி said:

Laughing GIFs - Get the best GIF on GIPHY  Pin on Ultimate Food Guide  Victoria Monét - Jaguar | Page 8 | The Popjustice Forum

சிரிக்க வைத்தும், கழுவி ஊத்தியும் ... கருத்துக்களைப் பகிர்ந்தும் ஊக்கம் தந்த,
அன்பு உறவுகளான....  கந்தையா அண்ணை, யாயினி, சுவி, ஈழப் பிரியன், வாத்தியார், 
புத்தன், நிகே, ஜெகதா துரை, சபேஷ், நிலாமதி அக்கா,  பாஞ்ச்  அண்ணை, 
குமாரசாமி அண்ணை, பசுவூர் கோபி, கிருபன் ஜீ, நுணாவிலான், சுவைப் பிரியன்,  
நந்தன், உடையார், புங்கையூரன், ஏராளன்... ஆகியோருக்கு,
இதய பூர்வமான நன்றிகள்.  🙏

இப்ப... இரண்டாவது பகுதி எழுத ஆரம்பித்துள்ளேன்.  ✍️
ப்ளீஸ்... தொடர்ந்து, கழுவி ஊத்தவும்.  🤣

Bye👋

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இப்போ...எங்கள், முறுக்கு சுடும் கோஸ்டி... 
சாப்பாட்டு மேசையில் இருந்து, போட்ட  "பிளான்" படி...  
முறுக்கு சுட்ட இறுமாப்பில்,   குசினிக்குள்.... நெஞ்சை நிமிர்த்தி  நகர்ந்து...
ஒரு கிலோ, கடலை மாவையும்... பெரிய பிளாஸ்ரிக் பாத்திரத்தில் கவிட்டு கொட்டியது.  
எடுத்த கணக்கின் படி.... கோதுமை மா, வறுத்த எள்ளு, மிளகாய்த் தூள், 
உப்பு எல்லாவற்றையும் போட்டு விட்டு... மனிசியை நிமிர்ந்து பார்த்தேன்.
அவளின் முகத்தில்... எல்லாம், திருப்தி என்ற மாதிரி... தலை ஆட்டினாள்.

இஞ்சையப்பா...  இதுக்குள்ளை, கொஞ்ச... 
சின்னச் சீரகம் போடுவமோ... என்று கேட்ட  போது,
(எனது மனைவி,  சில வேளை...   அப்பா...  என்று கூப்பிடுவார். ஆசையாக இருக்கும்.)
"நோ" என்று சொல்லி, அவளின் ஆசையை, நிராகரித்து விட்டேன்.
ஏனென்றால்... முறுக்கு, பிழியும் போது... அது, வேறை அடைத்து விடும் என்ற பயம்.  

எல்லாம்.... போட்டாச்சு, நீங்கள் மெல்லமாக தண்ணியை ஊத்துங்கோ...
நான்,  குழைக்கின்றேன்  என்று சொல்ல,
சுடு தண்ணியை... கொண்டு வந்து ஊத்திய போது,
திரும்பவும்... நிகேயின்... "பத்து நிமிட காணொளியை" பார்த்து,
அது...  "இளம் சூடான சுடு  தண்ணீர் என்று, உணர..."
காலம், கடந்து விட்டது.     

மாவை.... குழைத்தால், கழி  மாதிரி இருக்கு.
அடுப்பில் எண்ணை....  சூடாக, கொதித்துக் கொண்டிருக்கின்றது.
என்னுடைய... கை, "பசை"  ஒட்டின மாதிரி இருக்கு.  

  • Like 2
  • Thanks 1
  • Haha 4
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

என்னையா முறுக்கை கண்ணிலும் காட்ட மாட்டீர்கள் போல.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
51 minutes ago, ஈழப்பிரியன் said:

என்னையா முறுக்கை கண்ணிலும் காட்ட மாட்டீர்கள் போல.

ஈழப் பிரியன்,  முறுக்கை மட்டுமல்ல... முறுக்கு உரலையும்  காட்ட முயற்சி செய்து கொண்டிருக்கின்றேன். 
படம் பெரிதாக உள்ளதென்று,  யாழ். களம்  ஏற்க  மறுக்குது,
எப்படியும்...  வேறு முறைகளிலாவது.... படத்தை இன்று,  இணைப்பேன். :)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஹாய்யா... என்ரை, முறுக்கு படமும், முறுக்கு உரலும்... யாழ். களத்திலை  வந்துட்டுது. 🥰

  • Like 6
  • Haha 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தமிழசிறியர் உங்களின் ஆர்வத்துக்கு முயற்சிக்கும் பாராட்டுக்கள்......முறுக்கு முறுக்காக வந்திருக்கு.....இனி நீங்கள் மீசையை முறுக்கி விட்டுக் கொள்ளலாம் மீசை இருந்தால்......!   👏

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
12 minutes ago, suvy said:

தமிழசிறியர் உங்களின் ஆர்வத்துக்கு முயற்சிக்கும் பாராட்டுக்கள்......முறுக்கு முறுக்காக வந்திருக்கு.....இனி நீங்கள் மீசையை முறுக்கி விட்டுக் கொள்ளலாம் மீசை இருந்தால்......!   👏

சுவியர்... மிக வித்தியாசமான, ஆனந்த உணர்வுடன் உள்ளேன். :grin:
முறுக்கு... சுட்ட கஸ்ரம் ஒரு பக்கம், இருக்க...    
படங்கள்... இணைக்கும், கஸ்ரம்...  மூளைக்கு  அதிக வேலை கொடுத்து விட்டது.
கிருபன் ஜீ...  இயலுமானவரை அவசர  உதவி செய்தார்.  அதனை... என்றும் மறக்க முடியாது.

யாழ். களம்  படங்களை இணைப்பதில், பயங்கர கட்டுப்பாடுகளை  வைத்துள்ளது போல் தோன்றுகின்றது. அது... அவர்களின் நிர்வாகம் சம்பந்தப் பட்ட விடயம் என்றாலும், என்னை... உலுக்கி எடுத்துப்  போட்டுது.  

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
8 minutes ago, தமிழ் சிறி said:

சுவியர்... மிக வித்தியாசமான, ஆனந்த உணர்வுடன் உள்ளேன். :grin:
முறுக்கு... சுட்ட கஸ்ரம் ஒரு பக்கம், இருக்க...    
படங்கள்... இணைக்கும், கஸ்ரம்...  மூளைக்கு  அதிக வேலை கொடுத்து விட்டது.
கிருபன் ஜீ...  இயலுமானவரை அவசர  உதவி செய்தார்.  அதனை... என்றும் மறக்க முடியாது.

யாழ். களம்  படங்களை இணைப்பதில், பயங்கர கட்டுப்பாடுகளை  வைத்துள்ளது போல் தோன்றுகின்றது. அது... அவர்களின் நிர்வாகம் சம்பந்தப் பட்ட விடயம் என்றாலும், என்னை... உலுக்கி எடுத்துப்  போட்டுது.  

யாழ்கள உறவுகளின் நகர்வுகள் மிக வினோதமானது........எதிரெதிராக கருத்து மோதல்களில் மோதினாலும் உதவி என்று கேட்டால் ஓடிவந்து உதவுகிறார்கள்.....!  👍

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, suvy said:

யாழ்கள உறவுகளின் நகர்வுகள் மிக வினோதமானது........எதிரெதிராக கருத்து மோதல்களில் மோதினாலும் உதவி என்று கேட்டால் ஓடிவந்து உதவுகிறார்கள்.....!  👍

ஓம்... சுவியர், அந்த ஒரு மன ஆறுதலுக்காக....
கருத்து... எழுதுபவர்கள் குறைவு என்றாலும்,
குமாரசாமி அண்ணை  போன்றவர்களின்.... ஊர் பாசையை கேட்க...
யாழ். களத்திற்கு... தினமும் மூன்று  ஆயிரம் ஆட்களாவாது வருவார்கள்.
அது... ஈழம் மட்டுமல்ல... தமிழகம் சார்ந்து,  விரிந்த பேச்சு மொழி.

நாம்... அதனை, குறுகிய குடத்துக்குள் அடக்கி வைப்பது சரியல்ல. 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, தமிழ் சிறி said:

ஹாய்யா... என்ரை, முறுக்கு படமும், முறுக்கு உரலும்... யாழ். களத்திலை  வந்துட்டுது. 🥰

படங்கள் அந்த மாதிரி இருக்கு😀

முறுக்கு மொறுக்குமொறுக்கு என்று இருக்கு!

spacer.png

 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
6 minutes ago, கிருபன் said:

படங்கள் அந்த மாதிரி இருக்கு😀

முறுக்கு மொறுக்குமொறுக்கு என்று இருக்கு!

spacer.png

 

 

உண்மையாகவா...   நன்றி, கிருபன் ஜீ...  ❤️
அந்த முறுக்கு உரலுக்கு... 30 வயது.
அதில் உள்ள... பிளாஸ்ரிக் கோப்பைக்கு,  24  வயசு.
எழுத வெளிக்கிட்டால்...  ஒவ்வொன்றும்,  ஒரு கதை சொல்லும். :) 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சபாஷ்   சிறீ யர் இனி நம்புவோம். பிழிஞ்ச கைக்கு ஒரு மோதிரமும் அடுப்பில நின்ற கைக்கு ஒரு சோடி காப்பும் யாழ்கள உறவுகள்,  பரிசளிக்க, விரும்பினார்கள் கொரோனாவால்   பிளேன் ஓடாததால் சாத்திய படாது ..   கொஞ்சம் வடடம் வடடமாக சுற்றி இருக்கலாமே   ?

Just now, நிலாமதி said:

சபாஷ்   சிறீ யர் இனி நம்புவோம். பிழிஞ்ச கைக்கு ஒரு மோதிரமும் அடுப்பில நின்ற கைக்கு ஒரு சோடி காப்பும் யாழ்கள உறவுகள்,  பரிசளிக்க, விரும்பினார்கள் கொரோனாவால்   பிளேன் ஓடாததால் சாத்திய படாது ..  😀 கொஞ்சம் வடடம் வடடமாக சுற்றி இருக்கலாமே   ?

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
24 minutes ago, நிலாமதி said:

சபாஷ்   சிறீ யர் இனி நம்புவோம். பிழிஞ்ச கைக்கு ஒரு மோதிரமும் அடுப்பில நின்ற கைக்கு ஒரு சோடி காப்பும் யாழ்கள உறவுகள்,  பரிசளிக்க, விரும்பினார்கள் கொரோனாவால்   பிளேன் ஓடாததால் சாத்திய படாது ..   கொஞ்சம் வடடம் வடடமாக சுற்றி இருக்கலாமே   ?

நிலாமதி அக்கா...  
முறுக்கு மா,  சரியாய்  இறுகிப் போய்.... எங்களுக்குள்,
கொஞ்ச... மனப் பதட்டம்  வந்து விட்டது.  
அதனால்... வட்டமாக சுடாமல், வந்த போக்கிலை....
எப்படியும், நாங்கள் தானே, 
சப்பி....  சாப்பிடப் போகிறோம் என்ற துணிவில்...
மனம் போன மாதிரி... பிழிந்து விட்டோம். :grin:

டிஸ்கி:  கோழி.... குருடாக, இருந்தாலும்... குழம்பு ருசியாக இருக்க வேணும் கண்டியளோ....  🤣

Edited by தமிழ் சிறி
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, தமிழ் சிறி said:

ஹாய்யா... என்ரை, முறுக்கு படமும், முறுக்கு உரலும்... யாழ். களத்திலை  வந்துட்டுது. 🥰

உதென்ன சிறித்தம்பி? உலாஞ்சி உலாஞ்சி நிண்டு  முறுக்கு புழிஞ்ச மாதிரி கிடக்கு? என்ன பிரச்சனை நடந்ததெண்டு இப்ப சொல்லுறியளோ? 😁
இல்லாட்டி எங்கடை சிஐடி பாஞ்ச் ஐயாவை ஏவி விடட்டோ? 😎

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

 முறுக்கு புழிஞ்சது..... எங்கை தொடங்கி எங்கை முடிஞ்சிருக்கு எண்டு தேடி தேடி பாக்கிறன்...... ஆரம்பமும் தெரியேல்லை. முடிவும் தெரியேல்லை. ஒரு சில இடத்திலை குறுக்காலை முறுக்கு பின்னுப்பட்டு போகுது.எப்பிடி உந்த ரெக்னிக்???????😂

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
12 minutes ago, குமாரசாமி said:

உதென்ன சிறித்தம்பி? உலாஞ்சி உலாஞ்சி நிண்டு  முறுக்கு புழிஞ்ச மாதிரி கிடக்கு? என்ன பிரச்சனை நடந்ததெண்டு இப்ப சொல்லுறியளோ? 😁
இல்லாட்டி எங்கடை சிஐடி பாஞ்ச் ஐயாவை ஏவி விடட்டோ? 😎

அடி...  ஆத்தீய்...  அந்தாள் வந்தால்,
தனக்கு, முறுக்கு... தரவில்லை என்று, சன்னதம் ஆடி விடும். 😂

டிஸ்கி: பரவாயில்லை  சொல்லி விடுங்கோ... குமாரசாமி அண்ணை. :grin:
என்ன..  செய்யிறார் எண்டு பாப்பம். ஹா... ஹா... ஹா....  Funny 😜

Edited by தமிழ் சிறி
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, தமிழ் சிறி said:

உண்மையாகவா...   நன்றி, கிருபன் ஜீ...  ❤️
அந்த முறுக்கு உரலுக்கு... 30 வயது.
அதில் உள்ள... பிளாஸ்ரிக் கோப்பைக்கு,  24  வயசு.
எழுத வெளிக்கிட்டால்...  ஒவ்வொன்றும்,  ஒரு கதை சொல்லும். :) 

இத்தனை வருஷமாக பெளத்திரமாக வைச்சிருக்கிறியள் எண்டால் இப்பத்தான் பாவனைக்கு இறங்குப்பெட்டிக்குள்ளால எடுத்திருக்கிறியளாக்கும்😁

எனக்கு முறுக்கு, பருத்துறை வடை, பயித்தம்பணியாரம் எல்லாம் எவ்வளவு சாப்பிட்டாலும் “கெலி” அடங்காது! முறுக்கு சுட உரல் இல்லை என்பதால் கடையில்தான் வாங்குவது. அது வெறும் மாவாக இருக்கும். ஆனால் சில வீடுகளில் நல்ல தரமாக சுட்டு விற்கிறவர்கள்.  சின்ன ஓர்டர் என்றால் செய்ய பின்னடிப்பார்கள். அதனால் இடைக்கிடை அவர்களிடம் வாங்குவதுண்டு.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, தமிழ் சிறி said:


அந்த முறுக்கு உரலுக்கு... 30 வயது.
அதில் உள்ள... பிளாஸ்ரிக் கோப்பைக்கு,  24  வயசு.
எழுத வெளிக்கிட்டால்...  ஒவ்வொன்றும்,  ஒரு கதை சொல்லும். :) 

அது சரி சிறி அண்ணை
 முறுக்கும்  இருக்கு. உரலும் இருக்கு.

முறுக்குச்  செய்யக் குழைத்த மா எங்கே ?😂

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
5 minutes ago, கிருபன் said:

இத்தனை வருஷமாக பெளத்திரமாக வைச்சிருக்கிறியள் எண்டால் இப்பத்தான் பாவனைக்கு இறங்குப்பெட்டிக்குள்ளால எடுத்திருக்கிறியளாக்கும்😁

எனக்கு முறுக்கு, பருத்துறை வடை, பயித்தம்பணியாரம் எல்லாம் எவ்வளவு சாப்பிட்டாலும் “கெலி” அடங்காது! முறுக்கு சுட உரல் இல்லை என்பதால் கடையில்தான் வாங்குவது. அது வெறும் மாவாக இருக்கும். ஆனால் சில வீடுகளில் நல்ல தரமாக சுட்டு விற்கிறவர்கள்.  சின்ன ஓர்டர் என்றால் செய்ய பின்னடிப்பார்கள். அதனால் இடைக்கிடை அவர்களிடம் வாங்குவதுண்டு.

எங்களிடம் ஒரு...  இட்டலி சட்டி ஒன்று உண்டு. ❤️
அதுக்கு.... பெரிய கதை உள்ளது.

மனைவியின் தாலிக்கொடி செய்ய....  வடக்கு ஜெர்மனியில்,  உள்ள... 
"டோட்முண்ட்"  நகருக்கு, செல்லும் போது....
அந்த மனிதர், அன்பளிப்பாக தந்த பொருட்களில்...
சாமிப் படம், இட்டலி  சட்டி என்று... 
பல பொருட்களை தந்தார்...  🙏

அவரை... எனக்கு, முன் பின் தெரியாது....
இங்கு... வந்து... எத்தனையோ... வீடு மாறிய பின்பும்,
அவை... என்னுடன் தொடர்ந்து வந்து கொண்டிருந்த... பொருட்கள்.
அவற்றை... இனி, நான் இழக்கத் தயாரில்லை. :)

எப்படி இருந்தாலும், இரண்டு மூன்று  மாதத்துக்கு ஒரு முறை இட்டலி  அவிப்போம்.
இப்பவும்... அது,  புதுசாக இருக்கும். 💕

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
26 minutes ago, தமிழ் சிறி said:

அடி...  ஆத்தீய்...  அந்தாள் வந்தால்,
தனக்கு, முறுக்கு... தரவில்லை என்று, சன்னதம் ஆடி விடும். 😂

டிஸ்கி: பரவாயில்லை  சொல்லி விடுங்கோ... குமாரசாமி அண்ணை. :grin:
என்ன..  செய்யிறார் எண்டு பாப்பம். ஹா... ஹா... ஹா....  Funny 😜

நீங்கள் செய்த முறுக்கு சாப்பிட்ட ஆக்கள் எல்லாரும் ஓகேயா? 😁
ஏனெண்டால் பிறகு பாவம் அந்த ஐயா?😂

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
24 minutes ago, வாத்தியார் said:

அது சரி சிறி அண்ணை
 முறுக்கும்  இருக்கு. உரலும் இருக்கு.

முறுக்குச்  செய்யக் குழைத்த மா எங்கே ?😂

வாத்தியார்.... எனக்கு, ஒரு துரும்பு கிடைத்தால்...
ஈயை... பெருமாள், ஆக்கும் சக்தியை... யாழ். களம்  கற்றுத்  தந்தது. 
முறுக்கு தொடர்... இன்னும், முடியவில்லை.
சுவராசியமான  பகுதிகள்.... இன்னும் உள்ளது.
"அப் வாட்டன்"....  😂
  
டிஸ்கி:  "அப் வாட்டன்"....  _____    வெயிட் &  சீ....  🤣

Link to comment
Share on other sites




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • மாவீரர்களுக்கு வீரவணக்கங்கள். . .
    • Published By: VISHNU   19 APR, 2024 | 02:01 AM (எம்.ஆர்.எம்.வசீம்) இலங்கைக்கு சொந்தமான கச்சதீவை பெற்றுக்கொள்ள இந்தியா சர்வதேச நீதிமன்றத்தை நாடுவதாக இந்திய பிரதமர் தெரிவித்திருக்கிறார். அவ்வாறானதொரு நிலை ஏற்பட்டால் அதற்கு முகம்கொடுப்பதற்கு நாங்களும் தயார். கச்சதீவு இலங்கைக்கு சொந்தமானது என்பதற்கு போதுமான ஆதாரங்கள் எம்மிடமிருக்கின்றன என இலங்கை மனித நேய கட்சியின் தலைவியும் பேராசிரியருமான சந்திமா விஜேகுணவர்த்தன தெரிவித்தார். இலங்கை மனிதநேய கட்சி தலைமையகத்தில் வியாழக்கிழமை (18) இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே இவ்வாறு தெரிவித்தார். இதுதொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில், இந்தியாவில் தேர்தல் சூடுபிடித்துள்ள நிலையில், தமிழ் நாட்டு மீனவர்களின் வாக்குகளை பெற்றுக்கொள்ளும் நோக்கில் அங்குள்ள அரசியல்வாதிகள் கச்சதீவு விவகாரத்தை கையில் எடுத்துக்கொண்டு பல்வேறு கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர். தேர்தல் காலம் வரும்போது இந்தியாவை பாெறுத்தவரை இது வழமையான விடயமாகும். இந்திய பிரதமரும் கச்சதீவு விடயமாக மிகவும் தீவிரமாக தேர்தல் மேடையில் உரையாற்றி இருக்கிறார். குறிப்பாக கச்சதீவு இந்தியாவுக்கு சொந்தமானது. அதனை இலங்கைக்கு வழங்கியது வரலாற்று தவறு. அதனால் கச்சதீவை இந்தியாவுக்கு மீண்டும் பெற்றுக்கொள்ள நடவடிக்கை எடுப்போம். முடியாவிட்டால் நெதர்லாந்தில் இருக்கும் சர்வதேச நீதிமன்றத்தை நாடுவோம் எனவும் இந்திய பிரதமர் தெரிவித்திருக்கிறார். 285 ஏக்கர் பரப்பளவைக்கொண்ட  கச்சதீவு இலங்கை,, இந்திய மீனவர்கள் கடற்றொழில் செய்வதற்கு அப்பால், இந்த பூமிக்குள் பல பெருமதிவாந்த வேறு விடயங்கள் இருக்கின்றன. அதனால்தான் இந்திய அரசியல்வாதிகள் கச்சதீவை எப்படியாவது தங்களுக்கு சொந்தமாக்கிக்கொள்ள முயற்சித்து வருகின்றனர். கச்சதீவு இலங்கைக்கு சொந்தமானது என்பதற்கு  தேவையான வரலாற்று ஆதாரங்கள் எம்மிடம் இருக்கின்றன.  அதனால் கச்சதீவை பெற்றுக்கொள்ள இந்தியா சர்வதேச நீதிமன்ற்ததை நாடுமாக இருந்தால், அதற்கு முகம்கொடுக்க நாங்களும் தயாராக வேண்டும். கச்சதீவு இலங்கைக்கு சொந்தமானது என்பதற்கான ஆதாரங்களை சர்வதேச நீதிமன்றத்துக்கு சமர்ப்பிக்க நடவடிக்கை எடுப்போம். கச்சதீவு விவகாரத்தால் இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இருந்துவரும் உறவில் பாதிப்பு ஏற்படக்கூடாது.இந்த விடயத்தில் இந்தியாவுடன் முரண்பட்டுக்கொள்ள நாங்கள் தயார் இல்லை. இந்தியா அயல் நாடாக இருந்துகொண்டு எமக்கு பாரிய உதவிகளை செய்துவருகிறது. குறிப்பாக கொவிட் காலத்தில் இந்திய அரசாங்கத்தின் உதவிகளை எங்களால் ஒருபோதும் மறந்துவிட முடியாது. அந்த நன்றி எப்போதும் எங்களிடம் இருக்கிறது. இருந்தாலும் கச்சதீவு விவகாரம் என்பது எமது உரிமை சார்ந்த விடயம். அதனை எங்களால் விட்டுக்கொடுக்க முடியாது. இந்திய அரசியல்வாதிகள் தங்களின் தேர்தல் பிரசாரத்திற்கே இந்த விடயத்தை கையில் எடுத்துக்கொள்கின்றனர். தேர்தல் முடிவடைந்த பின்னர் அந்த விடயத்தை மறந்துவிடுவார்கள் என்றார். https://www.virakesari.lk/article/181410
    • பட மூலாதாரம்,GETTY IMAGES 2 மணி நேரங்களுக்கு முன்னர் உலக அளவில் 840 மில்லியன் மக்கள் நாள்பட்ட சிறுநீரக கோளாறுகளால் பாதிக்கப்பட்டுள்ளதாக சமீபத்திய ஆய்வுகள் தெரிவிக்கின்றன என இந்தியன் சொசைட்டி ஆப் நெஃப்ராலஜி வெளியிட்டுள்ள இதழில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் அர்த்தம் 10இல் ஒருவருக்கு சிறுநீரக நோய்கள் இருக்கின்றன. மேலும் சமீப காலங்களில் உயிர்களை கொள்ளும் 10 முக்கிய நோய்களில் 7வது இடத்தை பிடித்துள்ளது நாள்பட்ட சிறுநீரக நோய். இந்தியாவில் மட்டும் ஆண்டொன்றுக்கு 2 - 2.5 லட்சம் மக்கள் புதிதாக சிறுநீரக நோய்களால் பாதிக்கப்படுவதாக இந்தியன் சொசைட்டி ஆப் நெஃப்ராலஜி வெளியிட்டுள்ள இதழில் குறிப்பிடப்பட்டுள்ளது. அதேபோல் இந்தியாவில் உள்ள வயது வந்தோர் மக்கள்தொகையில் 8-10% பேர் நாள்பட்ட சிறுநீரக நோய்களால் பாதிக்கப்பட்டுள்ளதாக அந்த அமைப்பு கூறுகிறது. இதற்கு மிக முக்கிய காரணம் சிறுநீரகம் சார்நத நோய்களை ஆரம்ப கட்டத்தில் கண்டுபிடிக்க முடியாமல் போவதும், இவை அமைதியாக இருந்து தீவிர பிரச்னை ஏற்படும்போதே வெளியே தெரியவரும் என்பதுமே ஆகும் என்று கூறுகிறார் எம்ஜிஎம் ஹெல்த்கேர் மருத்துவமனையின் மூத்த சிறுநீரகவியல் மருத்துவர் மில்லி மேத்யூ.   பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,பொதுவாகவே சிறுநீரகம் சார்ந்த பிரச்னைகளில் ஆரம்ப கட்டத்தில் அறிகுறிகள் தெரியாது என்கிறார் மருத்துவர் மில்லி மேத்யூ. சிறுநீரகத்தின் செயல்பாடு என்னென்ன? உடலின் மிக முக்கியமான உறுப்புகளில் வயிற்றுப்பகுதியில் அமைந்திருக்கும் சிறுநீரகமும் ஒன்று. சிறுநீரின் வழியாக கழிவுகளை வெளியேற்றுவதே இதன் பிரதான பணி. ரத்தத்தில் காணப்படும் கழிவுப்பொருட்கள், உடலுக்கு தேவையற்ற அளவுக்கு அதிகமான தாதுக்களை சிறுநீரின் வழியாக வெளியேற்றி தூய ரத்தத்தை உடல் முழுவதும் பரவ செய்கிறது சிறுநீரகம். ஆனால், நமது வாழ்க்கை முறை, உணவுமுறை, பழக்கவழக்கங்கள், மரபுவழி பிரச்னைகள், தேவையற்ற மாத்திரைகளை உட்கொள்வது, இதர உடல்நல கோளாறுகள் உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் இந்த உறுப்பு செயல்படுவதில் தடை ஏற்படுகிறது. அப்படி சிறுநீரகத்தின் பணியில் இடையூறு ஏற்பட்டு அதன் வழக்கமான கழிவகற்றல் பணியை சரியாக செய்யமுடியாமல் போகும்போதுதான் பல்வேறு சிறுநீரக கோளாறுகள் ஏற்படுகின்றன. இதில் மேலுமொரு அபாயம் என்னவெனில் இந்த கோளாறுகள் ஆரம்ப கட்டத்தில் எந்த விதமான அறிகுறியும் காட்டாமல் உங்களுக்குள் வந்து விடும். நாளாக நாளாக அதன் வீரியம் அதிகரிக்கும்போதே உங்களுக்கு அறிகுறிகள் தெரிய தொடங்கி, அதிலிருந்து மருத்துவ பரிசோதனைகள் மூலம், நீங்கள் எந்தளவுக்கு, எந்த விதமான நோயால் பாதிக்கப்பட்டுள்ளீர்கள் என்பதை கண்டறிய முடியும் என்று கூறுகிறார் மருத்துவர் மில்லி மேத்யூ. அப்படி என்ன மாதிரியான சிறுநீரகம் சார்ந்த நோய்கள் உங்களுக்கு ஏற்படலாம்? அதில் என்ன மாதிரியான அறிகுறிகள் தென்பட வாய்ப்புள்ளது? என்பதை அறிந்துக் கொள்ளலாம்.   பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,நாள்பட்ட சிறுநீரக நோய்களை குணப்படுத்த முடியாவிட்டாலும், அவை தீவிரமடையாமல் தடுக்க முடியும். நாள்பட்ட சிறுநீரக நோய் (Chronic Kidney Disease) நாள்பட்ட சிறுநீரக நோய் என்பது நீண்ட நாட்களாக தொடர்ந்து வரும் சிறுநீரக கோளாறு ஆகும். இது அதிகம் சர்க்கரை நோய் மற்றும் உயர்ரத்த அழுத்தம் உள்ளவர்களுக்கே ஏற்படும். இதன் ஆரம்ப கட்டங்களில் எந்த விதமான அறிகுறிகளும் இருக்காது. இந்த வகை சிறுநீரக கோளாறுகள் சரி செய்ய முடியாதவை. முறையான மருத்துவ சிகிச்சை மூலம் இவை தீவிரமடையாமல் பார்த்துக் கொள்ள முடியும். அறிகுறிகள் குமட்டல் மற்றும் வாந்தி பசியின்மை கால் மற்றும் கணுக்கால் வீக்கம் மூச்சுத்திணறல் தூங்குவதில் சிரமம் அதிகமாக அல்லது குறைவாக சிறுநீர் கழித்தல்   பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,சிறுநீரக கல் ஒன்றிரண்டு இருக்கும்போது அதன் அறிகுறிகள் வெளியே தெரியாது. சிறுநீரகத்தில் கல் சிறுநீரகத்தில் தேங்கும் உப்பு அல்லது தாதுக்களின் படிகங்களே சிறுநீரக கல் என்று அழைக்கப்படுகிறது. பொதுவாக ஓரிரண்டு கற்கள் உருவாகும்போது அறிகுறியோ அல்லது தீவிர பிரச்னையோ ஏற்படாது என்று குறிப்பிடும் மருத்துவர், அது தீவிரமடையவும் வாய்ப்புகள் உள்ளது என்று கூறுகிறார். தண்ணீர் குறைவாக குடித்தால், உடல் பருமன், மோசமான வாழ்க்கை முறை, உணவுமுறை உள்ளிட்டவற்றால் இந்த பிரச்னை ஏற்படுகிறது. அறிகுறிகள் சிறுநீர் கழிக்கும் போது வலி சிறுநீரில் ரத்தம் வெளியேறுதல் சிறுநீர் பாதையில் அடைப்பு ஏற்படுதல் கல் உள்ள இடத்தில் வலி   நீரிழிவு சிறுநீரக நோய் (Diabetes Nephropathy) பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,உலகில் மூன்றில் ஒரு சர்க்கரை நோயாளிகள் சிறுநீரக கோளாறால் பாதிக்கப்படுகின்றனர். ஆய்வுத்தரவுகளின் படி சர்க்கரை நோய் உள்ள 3 பேரில் ஒருவருக்கு சிறுநீரக கோளாறு ஏற்படுகிறது. உலக அளவில் சிறுநீரக நோய்க்கான காரணிகளில் சர்க்கரை நோய் முதன்மையானதாக இருக்கிறது. அப்படி சர்க்கரை நோய் கட்டுப்பாட்டிற்குள் இல்லாதவர்களுக்கு இந்த நீரிழிவு சிறுநீரக நோய் ஏற்படுகிறது. அறிகுறிகள் கால்கள் வீக்கம் நுரையுடன் சிறுநீர் வெளியேறுதல் உடல் சோர்வு எடை குறைதல் உடல் அரிப்பு குமட்டல் மற்றும் வாந்தி   ஹைப்பர்டென்சிவ் நெஃப்ரோஸ்க்ளிரோசிஸ் (Hypertensive Nephrosclerosis) பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,உயர் ரத்த அழுத்தம் உள்ளவர்களுக்கு சிறுநீரகம் பாதிக்கும் அபாயம் அதிகம் சர்க்கரை நோய்க்கு இணையாக சிறுநீரகத்தை பாதிக்கும் மற்றுமொரு பிரச்னை உயர் ரத்த அழுத்தம். உயர் ரத்த அழுத்தம் சிறுநீரகத்தில் உள்ள ரத்த குழாய்களை சேதமடைய செய்வதால் சிறுநீரகத்தின் செயல்பாடு பாதிக்கப்படுகிறது. இதனால் ரத்தத்தில் உள்ள தேவையற்ற கழிவுகளை வெளியேற்றுதல் மற்றும் கூடுதல் தாதுக்களை வெளியேற்றுதல் ஆகியவை பாதிப்படைகிறது. இதில் முக்கியமான விஷயம் என்னவென்றால் சிறுநீரகத்தின் செயல் பாதித்து தேவையற்ற திரவங்கள் ரத்த குழாய்களில் படிவதால், ரத்த அழுத்தம் மேலும் உயர்கிறது. அறிகுறிகள் குமட்டல் மற்றும் வாந்தி தலை சுற்றல் உடல் மந்தம் தலை வலி கழுத்து வலி   சிறுநீர் பாதைத் தொற்று பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,சிறுநீர் பாதையில் ஏற்படும் தோற்று சிறுநீரகத்தையும் பாதிக்கும் அபாயம் உள்ளது. சிறுநீர் பாதைத் தொற்று என்பது சிறுநீரக கோளாறு இல்லை என்றாலும் கூட, அது சிறுநீரகத்தை பாதிக்கவும் வாய்ப்புள்ளது. சிறுநீர் பாதைத் தொற்று என்பது சிறுநீர் பாதையில் ஒட்டிக்கொள்ளும் நுண்ணுயிரிகள் பெருகி பாதிப்பை ஏற்படுத்துவது. இது கீழ்நிலையில் உள்ள சிறுநீர் பாதையிலேயே தங்கி விட்டால் சிறுநீரகத்திற்கு பாதிப்பு ஏற்பட வாய்ப்பு குறைவு. ஆனால், பெருகி மேல்நிலை பகுதிக்கு வந்துவிட்டால் சிறுநீரகத்திற்கு பாதிப்பு ஏற்படலாம். அறிகுறிகள் முதுகுப் பக்கத்தில் வலி காய்ச்சல் சிறுநீர் கழிக்கும்போது வலி அடிவயிற்றில் வலி சிறுநீரில் ரத்தம் குமட்டல் மற்றும் வாந்தி   பாலிசிஸ்டிக் சிறுநீரக நோய் பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,சிறுநீரகத்தில் அதிகரிக்கும் நீர்க்கட்டிகள் அதை செயலிழக்க செய்யுமளவு ஆபத்தானது. பாலிசிஸ்டிக் சிறுநீரக நோய் என்பது உங்களது சிறுநீரகத்தில் ஏற்படும் நீர்க்கட்டிகளை குறிப்பது. நாளடைவில் இவை வளர்ந்து உங்களது சிறுநீரகத்தை செயலிழக்கும் நிலைக்கும் கொண்டு செல்லலாம். இவை பெரும்பாலும் மரபணு ரீதியாக ஏற்படக்கூடிய சிறுநீரக கோளாறாகும். அறிகுறிகள் மேல்வயிற்றில் வலி அடிவயிற்றின் பக்கவாட்டில் வலி முதுகில் வலி சிறுநீரில் ரத்தம் வெளியேறுதல் சிறுநீர் பாதையில் அடிக்கடி தொற்று ஏற்படுதல்   ஐஜிஏ நெஃப்ரோபதி (IgA Nephropathy) பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,இந்த சிறுநீரக பிரச்சனையில் சிறுநீரில் ரத்தம் வெளியேறுவது நமக்கே தெரியாது. ஐஜிஏ நெஃப்ரோபதி என்பது பெரும்பாலும் சிறுவயதில் இளம்பருவத்தில் வரக்கூடிய ஒரு சிறுநீரக கோளாறு என்று கூறுகிறார் மருத்துவர் மில்லி மேத்யூ. இதில் சிறுநீர் வெளியேறும்போது ரத்தமும் இணைந்து வெளியாகும். இதை நாம் நேரடியாக பார்த்தால் கண்டறிவது கடினம். ஆனால், பரிசோதனையில் இதை கண்டறிய முடியும்.   பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,சிறுநீரகத்தின் செயல்பாடு 100இலிருந்து 10% என்ற நிலைக்கு வரும்போது தான் சிறுநீரக செயலிழப்பின் அறிகுறிகள் தெரியும் சிறுநீரக செயலிழப்பு சிறுநீரக செயலிழப்பு ஏற்படுபவர்களுக்கு அதன் முற்றிய நிலையில் மட்டுமே அறிகுறிகள் தெரியும். குறிப்பாக அதில் 5 நிலைகள் உள்ளது. இதில் நான்காவது நிலை வரையிலும் கூட அறிகுறிகள் தென்படாமல் ஒருவர் நன்றாக இருப்பார். சிறுநீரகத்தின் செயல்பாடு 100இலிருந்து 10% என்ற நிலைக்கு வரும்போது தான் அறிகுறிகள் தெரியும். அந்த நிலையில் ஒரு சில பொதுவான அறிகுறிகள் தென்படும். அறிகுறிகள் பசியின்மை வாந்தி கடுமையான உடல் சோர்வு உடல் வீக்கம் தூக்கமின்மை உப்பசம் https://www.bbc.com/tamil/articles/c2e01gql070o
    • Published By: VISHNU   19 APR, 2024 | 02:19 AM (நா.தனுஜா) டயலொக் அக்ஸியாட்டா மற்றும் பார்டி எயார்டெல் லிமிடெட் ஆகிய நிறுவனங்கள் இலங்கையில் அவற்றின் செயற்பாடுகளை இணைந்து முன்னெடுப்பதற்கான ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்டுள்ளன.  இவ்வொப்பந்தத்தின் பிரகாரம் எயார்டெல் லங்காவின் 100 சதவீத பங்குகளை டயலொக் கொள்வனவு செய்யும் அதேவேளை, அதற்குப் பதிலாக இதுவரையில் மொத்தமாக விநியோகிக்கப்பட்ட பங்குகளில் 10.355 சதவீத பெறுமதியுடைய சாதாரண வாக்குரிமை பங்குகளை எயார்டெலுக்கு வழங்கும்.  இதுகுறித்து தெளிவுபடுத்தி நேற்றைய தினம் ஊடக அறிக்கையொன்றை வெளியிட்டிருக்கும் டயலொக் நிறுவனம், நாடளாவிய ரீதியில் தொலைத்தொடர்பு சேவையை மேம்படுத்துவதை இலக்காகக்கொண்டு முன்னெடுக்கப்படும் இந்த இணைப்புக்கு இலங்கை தொலைத்தொடர்பு ஒழுங்குபடுத்தல் ஆணைக்குழு அனுமதியளித்திருப்பதாகத் தெரிவித்துள்ளது.  அதுமாத்திரமன்றி இந்நடவடிக்கையானது போலியான தொலைத்தொடர்பு உட்கட்டமைப்பு செயன்முறைகளைக் கட்டுப்படுத்துவதற்கும், தொழில்நுட்பத்துறையில் ஒத்துழைப்பை வலுப்படுத்துவதற்கும், வேகமான வலையமைப்பு இணைப்பை விரிவுபடுத்துவதற்கும், செலவினங்களைக் குறைப்பதற்கும், செயற்பாட்டு வினைத்திறனை அதிகரிப்பதற்கும் உதவும் எனவும் டயலொக் நிறுவனம் நம்பிக்கை வெளியிட்டுள்ளது. https://www.virakesari.lk/article/181412
    • Published By: VISHNU    18 APR, 2024 | 10:24 PM வலிப்பு ஏற்பட்ட நிலையில் கிணற்றில் விழுந்த இளம் குடும்பப் பெண் ஒருவர் புதன்கிழமை (17) உயிரிழந்துள்ளார். இதன்போது மாதகல் - சகாயபுரம் பகுதியைச் சேர்ந்த பிரதீபன் நித்தியா (வயது 37) என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில், குறித்த பெண்ணுக்கு வலிப்பு நோய் உள்ளது. இந்நிலையில் புதன்கிழமை (17) பிற்பகல் 6.30 மணியளவில் வீட்டு கிணற்றில் இருந்து சடலமாக மீட்கப்பட்டார். பின்னர் சடலம் தெல்லிப்பழை வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டு, அங்கிருந்து யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டது. சடலம் மீதான மரண விசாரணைகளை திடீர் மரண விசாரணை அதிகாரி ஆ.ஜெயபாலசிங்கம் மேற்கொண்டார். உடற்கூற்று பரிசோதனைகளின் பின்னர் சடலம் வியாழக்கிழமை (18) உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. இரண்டு பிள்ளைகளின் தாயான இவர் வலி.தென்மேற்கு பிரதேச சபையின் பண்டத்தரிப்பு உப அலுவலகத்தில் அபிவிருத்தி உத்தியோகத்தராக கடமை புரிந்து வந்தமை குறிப்பிடத்தக்கது. https://www.virakesari.lk/article/181408
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.