Jump to content

கடலில் மிதந்து வந்த... போத்தலில் இருந்த திரவத்தை, அருந்தியவர் உயிரிழப்பு!


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

கடலில் மிதந்து வந்த போத்தலில் இருந்த திரவத்தை அருந்தியவர் உயிரிழப்பு!

கடலில் மிதந்து வந்த... போத்தலில் இருந்த திரவத்தை, அருந்தியவர் உயிரிழப்பு!

யாழ். வடமராட்சி பகுதில் உள்ள கடலில் மிதந்து வந்த போத்தல் ஒன்றில் இருந்த திரவத்தை அருந்தியவர் உயிரிழந்துள்ளார்.

வடமராட்சி கிழக்கு நாகர் கோவில் மேற்கு பகுதியை சேர்ந்த கந்தையா சிறிக்குமார் (வயது 47) என்பவரே உயிரிழந்துள்ளார்.

கடலில் மிதந்து வந்த போத்தல் ஒன்றினை குறித்த நபர் எடுத்து திறந்து பார்த்துள்ளார். அதனுள் திரவம் இருந்துள்ளது. அதனை மதுபானம் என நினைத்து அருந்தியுள்ளார்.

அதனை அருந்தி சில நிமிடங்களில் மயக்கமடைந்துள்ளார். அதனை அங்கிருந்தவர்கள் அவதானித்து அம்பன் வைத்திய சாலைக்கு கொண்டு சென்றுள்ளனர். அங்கிருந்து மேலதிக சிகிச்சைக்காக மந்திகை வைத்திய சாலைக்கு கொண்டு செல்லப்பட்ட வேளை அவர் உயிரிழந்துள்ளார்.

சடலம் பிரேத பரிசோதனைக்காக மந்திகை வைத்திய சாலையில் வைக்கப்பட்டுள்ளது. அதேவேளை பருத்தித்துறை பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

https://athavannews.com/2021/1208948

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வெளிநாட்டு மதுபானம் கடலில் மிதந்து வருகின்றது என நினைத்து குடித்திருப்பாரோ....

என்ன இருந்தாலும்.... கண்டதையும் வாயில் ஊற்றலாமா?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நல்லகாலம் அவர் தனியாக குடித்திருக்கின்றார்.....நாலுபேரை கூட்டுசேர்த்துக்கொண்டு குடித்திருந்தால் என்ன ஆகும்.........ஆனாலும் ஆழ்ந்த இரங்கல்கள்......!  

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
8 hours ago, suvy said:

நல்லகாலம் அவர் தனியாக குடித்திருக்கின்றார்.....நாலுபேரை கூட்டுசேர்த்துக்கொண்டு குடித்திருந்தால் என்ன ஆகும்.........ஆனாலும் ஆழ்ந்த இரங்கல்கள்......!  

மேலும் ஒருவர் பலி ஆகியிருப்பதாக தகவல் சொல்கிறது 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.