Jump to content

வேட்பாளர் பலி: தேர்தல் களம் கண்டவர்களை மிரட்டும் கொரோனா


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

வேட்பாளர் பலி: தேர்தல் களம் கண்டவர்களை மிரட்டும் கொரோனா

spacer.png

சட்டமன்றத் தேர்தல் ஏப்ரல் 6 ஆம் தேதி முடிந்து, வாக்கு எண்ணிக்கை நடைபெறும் மே 2 ஆம் தேதிக்காக அனைவரும் காத்திருந்த நிலையில்... விருதுநகர் மாவட்டம் ஶ்ரீவில்லிபுத்தூர் காங்கிரஸ் வேட்பாளரான மாதவராவ் கொரோனா வைரஸ் தாக்கத்தால் இன்று (ஏப்ரல் 11) காலமானார். அரசியல் வட்டாரங்களில் இது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

1987 முதல் காங்கிரஸில் தீவிரமாக இருந்தவர் ஸ்ரீவில்லிபுத்தூர் தொகுதி வத்திராயிருப்பு பகுதியைச் சேர்ந்த செல்லையா. இவர் முன்னாள் மத்திய அமைச்சர் அருணாசலத்தின் தீவிர ஆதரவாளராக செயல்பட்டார். அவரோடு சென்னை, டெல்லி என்று அரசியலில் பயணித்து பலரை சந்தித்த நிலையில் தனது செல்லையா என்ற பெயரை மாதவராவ் என்று மாற்றிக் கொண்டார். மத்திய அமைச்சர் அருணாசலத்தின் ஆதரவில் சமையல் எரிவாயு ஏஜென்சி எடுத்து நடத்தத் தொடங்கினார். பின் அதையே தொழிலாக செய்தார்.

காங்கிரஸ் தலைவர் பீட்டர் அல்போன்ஸின் நெருங்கிய நண்பரான மாதவராவ், கடந்த மாதம் பீட்டர் அல்போன்ஸ் கொரோனாவால் பாதிக்கப்பட்டிருந்த நிலையிலும் மருத்துவமனைக்கு அடிக்கடி சென்று, சிகிச்சை பெறும் அறைக்கு வெளியே நின்று பீட்டரோடு போனில் பேசி ஆலோசனைகள் செய்து வந்தார். அப்போதே நண்பர்கள் பலரும், ‘அண்ணே அடிக்கடி ஆஸ்பத்திரி வராதீங்க. தடுப்பூசி போட்டுக்கங்க’என்று அவரிடம் தெரிவித்தனர்.

. நீண்ட கால காங்கிரஸ் காரரான மாதவராவுக்கு கடந்த சட்டமன்றத் தேர்தலில்தான் காங்கிரஸ் கட்சி போட்டியிட வாய்ப்பு வழங்கியது. வேட்பாளராக அறிவிக்கப்பட்டதும் விருதுநகர் திமுக மாவட்டச் செயலாளர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன் உள்ளிட்ட கூட்டணிக் கட்சித் தலைவர்களையும், காங்கிரஸ் நிர்வாகிகளையும் சந்தித்தார் பின் மார்ச் 17ஆம் தேதி வேட்பு மனு தாக்கல் செய்தார்.

வேட்பு மனு தாக்கல் செய்த மறுநாளே மாதவராவுக்கு லேசான காய்ச்சல் வர, தனது மருத்துவர் நண்பரின் ஆலோசனைப்படி . மதுரை அப்பல்லோவில் அட்மிட் ஆனார். அதேநேரம் அவருக்கு ஏற்கனவே இதயம் சம்பந்தப்பட்ட பிரச்சினைகளும் இருந்ததால்,தீவிரமாக மருத்துவர்கள் கண்காணித்தனர். சில நாட்களில் அவருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டது.

தேர்தல் பிரச்சாரத்துக்கு அவரால் செல்ல முடியாததால் அவரது மகளும், அவரது டம்மி வேட்பாளருமான திவ்யாதான் பிரச்சாரம் செய்தார், ஒரு கட்டத்தில் ஸ்ரீவில்லிபுத்தூர் காங்கிரஸ் வேட்பாளராக திவ்யாவே போட்டியிட இருக்கிறார் என்று தகவல் பரவ, அதை மறுத்து விளக்கமும் அளித்தார் மாதவராவ்.

இந்த நிலையில் வேட்பு மனு தாக்கல் செய்த கையோடு மருத்துவமனைக்கு சென்ற மாதவராவ் பிரச்சாரக் களத்துக்கே வர முடியவில்லை. தேர்தலுக்கு சில நாட்கள் முன்னதாக அவர் உடல் நிலை மோசமானதாக சொல்லப்பட்டது. இந்நிலையில் இன்று (ஏப்ரல் 11) காலை அவர் காலமாகிவிட்டார்.

மே 2 ஆம் தேதி நடைபெறும் வாக்கு எண்ணிக்கையில் ஸ்ரீவில்லிபுத்தூர் தொகுதியில் மாதவராவ் ஒரு வேளை வெற்றிபெற்றால், தொகுதிக்கு இடைத்தேர்தல் வர வாய்ப்புள்ளது. மாறாக அவர் வெற்றி பெறவில்லை எனில் மாற்றம் எதுவும் இருக்காது என்கிறார்கள் அரசியல் வட்டாரத்தில்.

தேர்தல் களத்தில் இருந்த வேட்பாளர்கள், பிரச்சாரம் செய்த தலைவர்கள் பலருக்கும் தற்போது கொரோனா தொற்று உறுதியாகிவருகிறது. ஆயிரம் விளக்கு தொகுதியில் பாஜக வேட்பாளரான தனது மனைவி குஷ்புவுக்காக பிரச்சாரம் செய்த இயக்குனர் சுந்தர்.சி. கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளார். அரவக்குறிச்சி பாஜக வேட்பாளர் அண்ணாமலைக்கும் கொரோனா தொற்று பாதிப்பு ஏற்பட்டிருப்பதாக தெரியவந்துள்ளது. டெல்லியில் தேர்தல் பிரச்சாரக் களத்தில் செயல்பட்ட இளம் பத்திரிகையாளர் ஒருவர் கொரோனாவால் பலியாகிவிட்டார்.

இப்படி தேர்தல் களத்தில் ஈடுபட்ட அரசியல் தலைவர்கள், வேட்பாளர்கள், பத்திரிகையாளர்கள் என பலதரப்பட்டவர்களும் தற்போது கொரோனாவால் தாக்கப்பட்டு வருகிறார்கள்.

இதனால், "தேர்தல் களத்தில் மைக் செட் பணியில் இருந்து, பிரச்சாரக் கூட்டங்களில் கலந்துகொண்ட கட்சித் தொண்டர்கள் , மக்கள் என பலருக்கும் கொரோனா தொற்று பற்றிய எச்சரிக்கை உணர்வோடு இருக்க வேண்டும்.. ஒவ்வொருவரும் கொரோனா சோதனை செய்துகொள்ளவேண்டும்" என்கிறார்கள் சுகாதாரத்துறையினரும், மருத்துவர்களும்.


 

https://minnambalam.com/politics/2021/04/11/22/congress-candidate-madhavarao-passed-away-corona-election-field-sundarc-annamalai-positive

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

May be an image of 3 people and text that says 'JUST IN Polimer NEWS பாஜக மாநில துணை தலைவரும் அரவக்குறிச்சி பாஜக வேட்பாளருமான அண்ணாமலைக்கு கொரோனா தொற்று உறுதி எல்லாரும் கொரொனா தொற்று கிருமிய பாத்து பயந்துகிட்டு இருக்கோம். ஆனா, இன்னைக்கு அந்த கொரொனா தொற்று கிருமியே பயந்து போய் கிடக்கு. இவர் உடம்புல நாம ஏன்டா போனோம்ன்னு. *** RIP Covid1g Virus'

பா.ஜ.க. வேட்பாளர்   அண்ணாமலைக்கும் கொரோனா.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • கொத்து என்றால்.... தகரத்தில் அடிக்கும் கொத்துதான் கெத்து. 😂 அந்தச் சத்தமே.... வாயில் இருந்து உணவுக் குழாய் வரை குதூகலிக்கும் சத்தம் அது. தாச்சியில்... அதுகும்  இலங்கையில்  கொத்து செய்வதை இப்போதான் கேள்விப்படுகின்றேன்.
    • 🤣 இந்த நுளம்பு கூட்டத்தை அவர்கள் பாணியில் சில ஒபாமாக்கள், விஜி களை ஏவி எதிர்கொள்ளுவதுதான் புத்திசாலித்தனம். அல்லது நீர்யோக நகரம், கொஸ்டரீக்கா போன்றனவற்றையும் கையில் எடுக்கலாம். சீரியசாக எடுத்தால் எமக்கு மண்டை காய்ந்து விடும். ————— உண்மையில் ஓரளவுக்கு சாத்தியமான எடுகோள், பலூசிஸ்தான் போலான் கணவாய் வழி மேற்கே இருந்து ஈயுரேசியர், பேர்சியன்ஸும், வடக்கே கைபர் கணவாய் வழி வந்த மத்திய ஆசியர், மங்கோலியர், பிராமணரும் (வேதங்களை நம்பியோர்)….. சிந்து சமவெளியில் இருந்த திராவிட/தொன் தமிழ் நாகரீகத்தை பிரதியீடு செய்ய, திராவிட/தொல் தமிழர் விந்திய மலைக்கு தெற்கே ஒதுங்கினர். இங்கே திராவிடம் எனப்படுவது தொல் தமிழையே.  இன்று தென்னிந்தியாவில் காணப்படும் மக்களின், மொழிகளின், பண்பாடுகளின் தோற்றுவாய். அலர்ஜி உபாதைகள் இருப்போர் திராவிட என்பதற்கு பதில் தொந்தமிழ் என்றோ அல்லது X நாகரீகம் எனவோ அழைத்துக்கொள்ளலாம். ஆனால் X பெர்சியாவில் இருந்து வந்தது என்பது - சந்தேகமே இல்லாமல் - product of Costa Rica தான்🤣.
    • உலகின் முதன் முதல் வந்த நகைச்சுவை...  எம்பெருமான் முருகன், ஔவையார் பாட்டியிடம், சுட்ட பழம் வேண்டுமா? சுடாத பழம் வேண்டுமா?  என்று கேட்டது தான். 😂 காலத்ததால் முந்தியதும்.... இன்றும் சிரிக்கவும், சிந்திக்கவும் வைக்கும் நகைச்சுவை இதுதான் என்று அடித்து சொல்வேன். 😁 🤣
    • ஏன் செய்தார்களெனத் தெரியவில்லை. ஹோபோகன் நகரம்  அனேகமாக நியூயோர்க்கில் வேலை செய்வோர் ஹட்சன் நதிக்கு இக்கரையில் வாழும் செல்வந்தமான நகரம். இவர்கள் அங்கேயே வசிப்பவர்களாக இருந்தால் பலசரக்குக் கடையில் களவெடுக்கும் அளவுக்கு வறுமையில் இருக்கும் வாய்ப்பில்லை. அல்லது, காசு கட்டிப் படிக்க வந்து, பணத்தட்டுப் பாட்டில் செய்து விட்டார்களோ தெரியவில்லை. இப்படியான இளையோர் நியூ ஜேர்சியில் இருக்கிறார்கள் என அறிந்திருக்கிறேன். இந்த குறிப்பிட்ட ஷொப்றைற் கடையின் self checkout மூலம் பலர் திருடியிருக்கிறார்கள். இதனாலேயே வீடியோ மூலம் கண்காணிப்பை அதிகரித்து இவர்கள் மாட்டிக் கொண்டிருக்கிறார்கள். 
    • இஸ்ரேல்- ஈரான், இவங்கட நொட்டல்கள் பழகி விட்டது, தாங்கிக் கொண்டு சாதாரணமாக வாழலாம். ஆனால், இந்த "கேப்பில்" புகுந்து "திராவிடர் பேர்சியாவின் பக்கமிருந்து மாடு மேய்த்த படியே வந்த ஊடுருவிகள்" என்று "போலி விஞ்ஞானக் கடா" வெட்டும் பேர்வழிகளின் நுளம்புக் கடி தாங்கவே முடியாமல் எரிச்சல் தருகிறது😅. யோசிக்கிறேன்: இவ்வளவு வெள்ளையும் சொள்ளையுமான பேர்சியனில் இருந்து கன்னங் கரேல் திராவிடன் எப்படி உருவாகியிருப்பார்கள்? சூரியக் குளியல்? 
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.