Jump to content

ஏ40 - "ஏபோர்ட்டி" என்ற கார்.


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

May be an image of car and outdoors

May be an image of car

ஏ40 - "ஏபோர்ட்டி" என்ற கார். 

 

கார் என்றால் ஏபோர்ட்டி என்ற காரைத் தவிர எதையும் அறிந்திராத காலமது.
காரைநகரில் இருந்து கணபதிப்பிள்ளை அண்ணையின் கறுத்த நிற கார் வந்து எங்கள் ஒழுங்கை முகரியில் நின்று... அதிலிருந்து பலர் இறங்கினால்
நல்ல செய்தி சொல்லி அழைக்க வருகிறார்கள் என்று அர்த்தம்.
அவர் தனியே வந்தால் துக்க செய்தி ஒன்றை அறிவிக்க வருகின்றார் என்று அர்த்தம்.
 
பாடசாலைக்கு ஆண்களின் வாசனை படாது பக்குவமாக பெண் பிள்ளைகளை கூட்டிச் செல்லவும்... கூட்டி வரவும்....
சந்தையில் இருந்து ஒவ்வோர் வியாபாரிகளும் தங்கள் தங்கள் ஊர்களுக்கு சாமான்களை ஏற்றிச் செல்லவும்....
குடும்பமாக எப்போதாவது இரவுக் காட்சிப் படத்திற்கு செல்லுவதற்கு.... அல்லது பகல் நேர விசேடங்களுக்கு செல்லுவதற்கு...
குறிப்பாக புகையிரதத்திற்கு கூட்டிச் செல்லவும் கூட்டி வரவும்...
மேலாக இரவு வேளைகளில் ஒருவருக்கு நோய் கண்டு விட்டால் அல்லது அடிவயிற்றில் நோவு கண்டு விட்டால் ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்ல....
மீன் சந்தைகளுக்கு கடற்கரைகளில் இருந்து மீனைக் காவி வர...
எல்லாவற்றிற்கும் இந்த ஏபோர்ட்டிக் கார் தான்.
 
கறள் பிடித்த ஏபோர்ட்டிக் காரை நான் கண்டதேயில்லை.
ஊருக்கு 2-3 ஏபோர்ட்டிக் கார்கள் நிற்கும்.
அவர்களை வாடகைக் குஅமர்த்திய காசு கொடுக்கவே 2-3 மாதங்கள் செல்லும் - ஆட்டு இறைச்சிப் பங்கின் காசு கொடுக்க தாமதமாவது போல...
டக்ஸி என்பது அறிமுகம் செய்யப்பட்ட போதும் இந்த ஏபோர்ட்டிக் கார்கள் தான்.
 
பின்பு கொஞ்சம் பெரிதான சோமசெற் கார் வந்தாலும் இந்த ஏபோர்ட்டியின் வலு அதில் இருக்கவில்லை என அறிந்தோர் அறிவோர்.
சில மேள செற்காரர்களும்... வக்கீல்களும் இந்த சோமசெற் காரை வைத்திருந்ததாக ஞாபகம்.
 
May be an image of car
 
அதன் பின்பே Volkswagen என்று பொதுவாக அழைக்கப்பட்ட ஓஸ்ரின் கார் வந்தது நினைக்கின்றேன். ஆமைக்குட்டிக் கார் என்பார்கள்.
கட்டையான உருண்டையான எனது பௌதிக ஆசிரியர் திரு. தனபாலசிங்கம் இந்தக் காரை வந்திருந்தார். அவரின் தோற்றத்திற்கு பொருத்தமானது என நாம் கிசுகிசுத்துக் கொள்வோம்.
 
காலங்கள் மாறி... புலம் பெயர்ந்து கார் என்பது போக்குவரத்துச் சாதனம் என்ற நிலை மாறி கௌரவச் சின்னமாக மாறி பென்ஸ் என்றும அவ்டி என்றும் இலட்சக் கணக்கான காசை மொத்தமாக செலுத்தி வாங்கியிருந்தாலும் சரி... கட்டுக்காசுக்கு மாதாமாதம் செலுத்தி வாங்கியிருந்தாலும் சரி... ஏபோர்ட்டிக் காருக்குள் கிழங்கு அடுக்கிய மாதிரி நெருக்குப்பட்டு பயணப்பட்ட அனுபவங்கள் என்றும் இனிமையானவை.
நெஞ்சில் இட்ட கோலம் எல்லாம் அழிவதில்லை.
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இன்று கோயிலுக்கு போவதற்கு திரும்புவதற்கு சமிக்ஞை சந்தியில் நின்ற போது பின்னுக்கு 6,7 கார்கள். "என்னப்பா *****  இவையும் பென்ஸ் வாங்கீட்டினம் போல"  என்றவர் திருமதி.   

"பிள்ளையாரை மட்டும் இப்ப நினையுமப்பா"  என்றது அடியேன் ....

Link to comment
Share on other sites

  A40 Devon,  A40 somerset இரண்டுமே Austin கார் நிறுவனத்தின் தயாரிப்புகள் தான்.  இலங்கையில் A 40 என்ற பெயரால் Devon கார் மட்டுமே மக்களால்  அழைக்கப்பட்டாலும் உண்மையில் somerset காரும் A40 வகை தொடர்ச்சி  கார் தான்.   அதன் பின்னர் வந்த Cambridge காரும் A40 வகையை சேர்ந்த கார் தான்.  

Volkswagen ஒஸ்ரின்  கார் அல்ல . Austin நிறுவனம் இங்கிலாந்தை சேர்ந்தது. Volkswagen ஜேர்மன் நிறுவனம். 

Link to comment
Share on other sites

இப்போதெல்லாம் Detroit பிக் 3 (GM, Ford, Chrysler) ஆலைகள் ஒன்ராறியோவைச் சேர்ந்த தமிழ் பொறியாளர்களால் நிரம்பியுள்ளன. இந்த தமிழ் பொறியாளர்களில் பெரும்பாலோர் கனேடிய பல்கலைக்கழகங்களின் பட்டதாரிகள். எனவே அமெரிக்க வாகனத் தொழிலின் எதிர்காலம் அழிந்துவிட்டது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

83 க்குப் பின் வெளிநாடு வேண்டாம் உள்ளூரிலேயே உழுவோம் என்று எ40 வான் வாங்கி வியாபாரம் செய்தேன்.பெற்றோல் தட்டுப்பாடு.ஒரு கலனில் முன்னுக்கு வைத்திருந்தே பாவித்தோம்.
நிறையவே அனுபவம்.
பதிவுக்கு நன்றி சிறி.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சோமர்செட், ஆஸ்டின், மோரிஸ் மைனர், A 40 போன்றவை பிரித்தானிய கார்கள். தமது காலணிகள் முழுவதும் வித்து விட்டிருந்தார்கள்.

நான் அறிந்த மட்டில், நல்லூர் முருகன் ஆலய முதலியார் ஒரு ஒஸ்க்போர்ட கார் வைத்து இருக்கிறார்.

பிரிட்டனில், இந்த பழைய வகை கார் கம்பெனிகளில் மிச்சி இருந்தது ரோவர் மட்டுமே. அதனை சீனாக்காரன் வாங்கி, அப்படியே ஒரு நட்டு விடாமல் கழட்டி சீனா கொண்டு போய் சேர்த்து விட்டான்.

இப்போது இருக்கும் கொம்பனிகளில், ஜாக்குவார், லேண்ட் ரோவர் கொம்பனிகள் தான் உலக புகழ் மிக்கவை. ரோவர் கொம்பனியின், வெற்றி கரமான லேண்ட் ரோவர் பகுதியை, ரோவர் கம்பனியை சீனாவுக்கு விக்க முதலே, போர்ட் கம்பெனி வாங்கி இருந்தது. பின்னர்தான் இந்திய டாடா வாங்கியது. இது வாங்கிய பின்னர் தான், இந்திய சந்தையில் இன்னும் பிரபலமானது. இயக்குனர் சங்கர், நடிகர் விஜய், நடிகர் சந்தானம் என்று பலர் இதனை வாங்கினர். 

Range Rover - Wikipedia

பிரிட்டனின் ரோல்ஸ் ரொயிஸ் கார்களும் புகழ் மிக்கவை. அந்த நிறுவனம் செய்யும் ஜெட் என்ஜின்கள், போயிங், ஏர்பஸ் பயன்படுத்துகின்றன.

****

லலித் அத்துலத் முதலியார், ஏ 40 கார் வைத்திருந்த வல்வெட்டி ஆள் குறித்த ஒரு கதை ஒன்றினை பாராளுமன்றில் முன்னர் சொல்லி இருந்தார்.

ஆள் கஞ்சா கடத்தல் பார்ட்டி. இந்தியாவில் இருந்து கொண்டுவந்து கொழும்புக்கு அனுப்புவது வேலை.

அதனால் ஆனையிறவு செக் போயிண்டில் கடுமையான சோதனை. கொழும்புக்கு சரக்கு போகவில்லை.

கொழும்பு வால்கெர் நிறுவனத்தில், ஏ 40 லீசுக்கு எடுத்து இருந்தார், வல்வெட்டி ஆள்.

காரை ஊருக்கு கொண்டு போய் விட்டார். இரண்டு மாதத்துக்கு பிறகு காசு கட்டவில்லை.

தலைமை அலுவலகத்தில் இருந்து வெள்ளை அதிகாரி, ஆட்களுடன் வந்து, காரை கைப்பற்றி கொண்டு போறார். வெள்ளை எண்டபடியால் நோ செக்கிங். கார் கொழும்புக்கு கிட்டத்தில் வரும் போது, காரை வழிமறித்தார், வல்வெட்டிக்காரர்.

அய்யா, உங்களை தேடி, நான் இங்கை வர, நீங்கள் அங்கை போட்டியள்.... வெயிலில வேற கறுத்து போட்டியள்.

இந்தாருங்கோ, காசு... பிடியுங்கோ.... அய்யா எண்டு கட்டவேண்டிய காசையும், அடுத்த ரெண்டு, மூன்று மாத காசையும் கட்டி காரை வாங்கிக் கொண்டு போட்டார்.

இப்படியாக.... கஞ்சா, விக்கினம் இன்றி கொழும்பு வந்து சேர்ந்தது.   

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எங்கட ஊரிலயும் ஒருவர் வைத்திருந்தார் அவரிடம் கார் கயர் பண்னினால் அவரது தாயார் அவருக்கு தெரியாமல் காசை வாங்கிப் போயிடவார.சில நேரம் இரன்டு பேருக்கும் காசு கொடுத்த சம்பவமும் உண்டு.😜பழசை ஞாபகப் புடுதியமைக்கு நன்றி சிறியர்.🙂

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

***

வெயில் நேரத்தில், இந்த காரின் லெதர் இருக்கைகளில் இருந்து வரும் மணம், மழை பெய்தால் வரும், புழுதி மணம் எல்லாமே மனதில் பதிந்து விட்ட மண்வாசனைகள்.  

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • ஏன் ராசா ஏன்??  ஆனால் கேள்விக்கு பதில் சொல்லாமல் போவது நன்றன்று. இல்லை இல்லை இல்லை 🤣
    • டுபாய் தன்னைப் பற்றி கட்டி வைத்திருந்த பிம்பம் உடைந்து போய்விட்டது இதனால். கடும் புயலும், மழையும் அதனால் வெள்ளமும் வரும் என்பதை ஏற்கனவே வானிலை எதிர்கூறல்கள் எச்சரித்து இருந்தும், அருகே இருக்கும் ஓமானில் இதே நிலை ஏற்பட்டதை கண்டும், எந்தவொரு முன்னேற்பாட்டையும் செய்து இருக்கவில்லை, முக்கியமாக டுபாய் விமான நிலைய நிர்வாகம். ஆயிரக்கணக்கானவர்கள் 30 மணித்தியாலங்களுக்கு மேல் விமான இன்றி தவித்து கிடந்த போதும், தண்ணீர் கூட அவர்களுக்கு விமான நிலைய ஊழியர்களால் வழங்கப்படவில்லை. குழந்தைகளுடன் பயணித்தவர்களுக்கு பால்மா, nappies கூட கொடுக்கப்படவில்லை என்று ஊடகங்கள் கூறுகின்றன. சிலர் 24 மணி நேரத்தும் மேலாக சாப்பாடு இல்லாமல் இருந்துள்ளனர். விமான நிலையத்தில் இருந்த அனைத்து உணவு விடுதிகளும் பூட்டப்பட்டுள்ளதாம். அதே போன்று செக் இன் கவுண்டரிலும் (check in counters), விமான சேவை கவுண்டர்களிலும் ஒரு ஊழியரும் இல்லாமையால், அடுத்தது என்ன என்று தெரியாமல் பலர் பிள்ளைகளுடன், குழந்தைகளுடன் தவித்து போய் விட்டனர்.  பல Mall களில் புயல் வரும் முன் மக்களை உள்ளே அனுமதித்து விட்டு, புயல் தொடங்கிய பின் கடைகளை இழுத்து மூடி, வந்தவர்களை தவிக்க விட்டுள்ளனர். Mall களில் இருந்து தம் தங்குமிடத்திற்கு செல்ல முடியாமல் பல நூறு உல்லாசப் பயணிகள் அல்லாடியிருகின்றனர். இதற்கு எல்லாம் மேலாக, Cloud seeding இனால் தான் இந்த புயல் வந்தது என்று அங்குள்ள சமூக வலைத்தளங்களில் முட்டாள் தனமாக ஒரு கூட்டம் வதந்தியை பரப்பிக் கொண்டு இருக்கு. Cloud seeding இனால், சாதரணமாக சிறு தூறல்களையும், சிறு மழையையும் தான் தருவிக்க முடியும். ஆனால் புயலை அல்ல,
    • ரணில் "தனது  மினி"யை... வழமைபோல் வீட்டின்  பின்பக்கம் தான் பார்க் பண்ணுவார். 😂 🤣
    • முடிவுரை: நாங்கள் நின்றது ஸ்பெயின் நாட்டின் ஒரு தீவு. Majorque (Mallorca) 3600 சதுர கிலோமீட்டர் பரப்பளவு  தனித்தீவு என்பதால் எப்பொழுதும் மாறி மாறி (ரோமேனியர் போர்த்துகல் அராபியர்கள்....) ஆக்கிரமிப்பு ஆட்சியாளர்களின் பட்டியல் நீளமானது. கிட்லரால் தம்மை பிடிக்க முடியவில்லை காரணம் தங்கள் நாட்டில் பாதுகாப்பு உத்தரவாதம் தரும் மலைகள் என்கிறார்கள் அங்குள்ள மக்கள். இந்த Majorque என்பதே அராபியர்கள் வைத்த பெயர் தான். அருகே சிறிய தீவுக்கு Minorque என்று பெயர் வைத்தனர்.  மலையும் கடலும் உள்ள தீவு என்பதால் ஆதி மனிதர்கள் கற்களை கொண்டே குடிசைகளை அமைத்து வாழ்ந்துள்ளனர். அங்கொன்றும் இங்கொன்றுமாக வாழ்ந்த மக்கள் முதன் முதலாக கற்களால் அரணமைக்கு வாழ்ந்த இடத்தையும் பார்வையிட்டோம். அந்த இடத்தை ஒரு காட்சியகமாக வைத்து இருக்கிறார்கள். அந்த அரணின் நுளைவாயிலில் 8 தொன் கல் ஒன்றை இரண்டு மீற்றர் உயரத்தில் வைத்து இருப்பதை எங்களுக்கு வழிகாட்டியாக வந்தவர் பெருமையுடன் சொன்னார். நான் அவருக்கு தஞ்சாவூரை காட்டினேன். அதிசயித்தார்.  Majorque இன் சனத்தொகை கிட்டத்தட்ட 1 மில்லியன் ஆனால் அங்கு எப்பொழுதும் சனத்தொகையாக 3 மில்லியன் மக்கள் இருப்பார்கள். அதாவது 2 மில்லியன் மக்கள் சுற்றுலா வந்து போவார்கள்.  இதனுடைய விமான நிலையம் Palma. ஒரு நிமிடத்திற்கு ஒரு விமானம் ஏற ஒன்று இறங்கியபடி இருக்கும். இதன் வரலாற்றை பார்த்தால் மிகவும் வறண்ட பிரதேசம். குடிநீர் வசதி இல்லை. ஆனால் இன்று பச்சை பசேல் என்று இருக்கிறது. அநேகமாக அந்த மக்களுக்கு தேவையான மரக்கறி வகைகள் பழங்கள் இறைச்சி மீன் என்பன அங்கேயே கிடைக்கின்றன. ஸ்பெயின் நாட்டின் அதி கூடிய வசதியும் வருவாயும் வேலை வாய்ப்பும் பணச்செழிப்பும் கொண்ட பிரதேசமாக இத்தீவு இன்றுள்ளது. இது எம் போன்ற பலருக்கும் ஒரு நல்ல உதாரணமாகும். எனக்கு எங்கே போனாலும் என் நாடு என் ஊர் என்று தான் மண்டைக்குள் ஓடும். இங்கும் அப்படி தான். நானும் இவ்வாறான ஒரு வரட்சியான காலநிலை மற்றும் கடலால் சூழப்பட்ட ஒரு தீவை பிறப்பிடமாகக் கொண்டவன் தான். ஆனால் என் தீவின் இன்றைய நிலைமை மற்றும் அங்குள்ள மக்களின் வாழ்வியலை பார்க்கும்போது இத்தீவு என்னை மிகவும் பாதித்தது. ஆனால் நாங்கள் முக்கியமாக நான் அதற்கான முயற்சிகளை எடுக்காமல் இல்லை. எனது இனத்தின் சாபமோ என்னவோ நான்கு பேர் மட்டும் தான் எல்லாவற்றையும் செய்யட்டும் என்று தூங்கி விடுகிறது. நாங்கள் நின்ற இடம்: camp de mar நின்ற கோட்டல்:  alua camp de mar  நன்றி. 
    • ரணிலுக்கு... அழகிகளில் நாட்டம் இல்லை என்று கேள்விப் பட்டோம். 🤣 நீங்கள் இப்பிடி சொல்கிறீர்கள். வேணுமென்றால்... @விசுகுவிடம் கேட்டுப் பாருங்கள். 😂
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.